யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/4/17

TET

170.  எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள்
171.  . எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress
172.  .       எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து
173.  எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்
174.  எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3
175.  எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை,   அகநானூறு,கலித்தொகை
176.  எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்
177.  எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு ,பதிற்றுப்பத்து
178.  எட்டுத்தொகைப்பாடல்களின் -  சிற்றெல்லை – 3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள்
179.  எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை
180.  எதிர் நீச்சல்  நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
181.  எயில் காத்தல் – நொச்சி
182.  எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு
183.  எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர்
184.   என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா
185.  ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள்
186.  ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க
187.  ஏழகம்  - ஆட்டுக்கிடாய்
188.  ஏழைபடும் பாடு  நாவலாசிரியர்  - சுத்தானந்த பாரதியார்
189.  ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் – கலித்தொகை
190.  ஐங். ஆதன்,ஆவினி,குட்டுவன்,கருமான்,கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு
191.  ஐங்.இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை  இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
192.  ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க – ஐங்குறுநூறு
193.  ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர்
194.  ஐங்.நெய்தல் நூறு பாடியவர் – அம்மூவனார்
195.  ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு
196.  ஐங்.பாலை நூறு பாடியவர் – ஓதலாந்தையார்
197.  ஐங்.பேதைப்பருவ மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
198.  ஐங்.மருதம் நூறு பாடியவர் – ஓரம்போகியார்
199.  ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார்
200.  ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6 அடிகள்

201.  ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
202.  ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469
203.  ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
204.  ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
205.  ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
206.  ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6
207.  ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா
208.  ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை
209.  ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்
210.  ஐந்திணை ஐம்பது ஆசிரியர் - மாறன் பொறையனார்
211.  ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்
212.  ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்
213.  ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 .
214.  ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்
215.  ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்
216.  ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா
217.  ஒரு நாள்  என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்
218.  ஒரு புளியமரத்தின் கதை  நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி
219.  ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா
220.  ஒருபிடி சோறு -  சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன்

TET

221.  ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி
222.  ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை
223.  ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் –கல்கி
224.  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்
225.  ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு
226.  ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர்
227.  ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை
228.  ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா
229.  ஓவச் செய்தி ஆசிரியர் - மு.வ
230.  ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி
231.  கங்கை மைந்தன் – தருமன்
232.  கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு
233.  கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்
234.  கடைச் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 449
235.  கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 49
236.  கடைச்சங்கம் இருந்த மொத்த  ஆண்டுகள்  - 1850
237.  கடைச்சங்கமிருந்த இடம் –மதுரை
238.  கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் - முருகு சுந்தரம்
239.  கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா
240.  கண்ணதாசன் இயற்பெயர் - முத்தையா
241.  கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா
242.  கந்த புராண ஆசிரியர் - கச்சியப்ப சிவாச்சாரியார்
243.  கபிலர்-பாரி/ஔவை-அதியன்/பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு கூறும் நூல் – புறநானூறு
244.  கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா
245.  கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் -  இராமவதாரம்
246.  கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார்
247.  கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்பர்
248.  கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர்
249.  கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர்
250.  கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் - மணிமேகலை
251.  கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்
252.  கரந்தை - ஆநிரை மீட்டல்
253.  கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ
254.  கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்
255.  கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்
256.  கருப்பு மலர்கள் ஆசிரியர் -  நா.காமராசன்
257.  கல்கியின் முதல் நாவல் - விமலா
258.  கலம்பக உறுப்புகள்  - 18
259.  கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்
260.  கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்
261.  கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்
262.  கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்
263.  கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்
264.  கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்
265.  கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
266.  கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா
267.  கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்
268.  கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150
269.  கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா
270.  கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்
271.  கலித்தொகையின் அடிவரையறை – சிற்றெல்லை 11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள்
272.  கலித்தொகையின் ஓசை – துள்ளலோசை
273.  கலித்தொகையை நல்லந்துவனார் கலித்தொகை எனப் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை
274.  கலித்தொகையைத் தொகுத்தவர் – நல்லந்துவனார்
275.  கலிப்பாவின் ஓசை – துள்ளலோசை
276.  கலிமுல்லைக்கலி பாடியவர் – சோழன் நல்லுருத்திரன் -17 பாடல்கள்
277.  கவரி வீசிய காவலன் - சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
278.  கவிஞர் துறைவனின் இயற்பெயர் - எஸ்.கந்தசாமி
279.  கவிஞர் மீராவின் இயற்பெயர் - மீ.ராஜேந்திரன்
280.  கவிமணி மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல்  மொழிபெயர்ப்பு – லைட் ----ஆஃப் ஆசியா

TET

  கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் நூல்  மொழிபெயர்ப்பு – உமர்கய்யாம் - ரூபாயாத் –பாரசீக மொழி
282.  கவியின் கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம்
283.  கவிராட்சசன் எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர்
284.  கவிராஜன் கதையாசிரியர்    - வைரமுத்து
285.  கற்றறிந்தார் ஏத்தும் நூல் – கலித்தொகை
286.  கனகாம்பரம் சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் – கு.ப.ராஜகோபாலன்
287.  கனகை எழுதியவர்- கா.அரங்கசாமி                    
288.  கன்னட மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம்
289.  கன்னற்சுவைதரும் தமிழே, நீ ஓர் பூக்காடு,நானோர் தும்பி என்று பாடியவர்– பாரதிதாசன்
290.  கன்னிமாடம் நாவலாசிரியர் – சாண்டில்யன்
291.  காக்கைப் பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம்
292.  காஞ்சி புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர்
293.  காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார்
294.  காந்தியக் கவிஞர்                     -  நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை                     
295.  காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
296.  காரி  (கலுழ்ம்)  – காரிக்குருவி
297.  காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை
298.  காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர்
299.  காளக்கவி எனப்படுபவர் - காளமேகம்                                                     
300.  காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம்
301.  கிரவுஞ்சம் என்பது – பறவை
302.  கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ  1750 
303.  கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி
304.  கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள்
305.  குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
306.  குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல்
307.  குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72
308.  குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி
309.  குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் - குதிரை மறம்
310.  குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்
311.  குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன்
312.  குறிஞ்சிக் கிழவன் - முருகன்                                                                            
313.  குறிஞ்சித் தேன் ஆசிரியர் - நா.பார்த்தசாரதி                                             
314.  குறிஞ்சிப்பாட்டு பாடியவர் - கபிலர்
315.  குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார்
316.  குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர்
317.  குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400
318.  குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது - உரிப்பொருள்
319.  குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309
320.  குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம்  பெறும் புலவர்கள் – 18 பேர்
321.  குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள்
-குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல் நீரார்
322.  குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர்
323.  குறுந்தொகையின் அடிவரையறை – 4 -8 அடிகள்
324.  குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 440
325.  குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ
326.  குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205
327.  கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர்  - அடியார்க்கு நல்லார்
328.  கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல்
329.  கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார்
330.  கைவல்ய நவ நீதம் எழுதியவர்            - தாண்டவராயர்
331.  கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் –  இறையனார்
332.  கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை
333.  கொடிமுல்லை கவிதை நூலாசிரியர் – வாணிதாசன்
334.  கொற்ற வள்ளை - உலக்கைப் பாட்டு
335.  கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள்
336.  கோவூர்கிழார் நூலாசிரியர் - கு.திருமேனி
337.  சகாராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் - நா.காமராசன்
338.  சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர்
339.  சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள்
340.  சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு,எட்டுத்தொகை
341.  சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368
342.  சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.
343.  சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள்
344.  சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல்
345.  சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார்                       

347.  சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் - மதுரை மீனாட்சி  சுந்தரேஸ்வரர்
348.  சங்கப்பாடல்  இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் - 30
349.  சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள்
350.  சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று
351.  சங்கம் ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் – வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார்
352.  சங்கரதாசு சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில் அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம்
353.  சடகோபன் என் அழைக்கப்படும் ஆழ்வார் -  நம்மாழ்வார்          
354.  சதாவதானம் என்றழைக்கப்படும் புலவர் - செய்குத் தம்பிப் பாவலர்
355.  சதுரகராதி ஆசிரியர் -  வீரமாமுனிவர்
356.  சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் - கவிஞர் தமிழழகன்
357.  சந்திரமோகன் நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
358.  சமணர்கள் மதுரையில் நிறுவிய சங்கம் - வச்சிர நந்தி சங்கம்
359.  சமரச சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய ஆண்டு – 1914
360.  சமஸ்கிருதம் எழுதப்படுகின்ற மொழியான காலம் – கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம்
361.  .   சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர்
362.  .   சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் -  மாயூரம் வேத நாயகர்
363.  சவலை வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் – பாப்பாவினம்
364.  சாகுந்தலம் மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள்
365.  சிதம்பரச் செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர்
366.  சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார்
367.  சிலப்பதிகார ஆராய்ச்சி நூலாசிரியர் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார்
368.  சிலம்பு கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி
369.  சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி மன்னர்
370.  சிவஞானமுனிவரின் இயற்பெயர் – முக்காள லிங்கர்
371.  சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் - படிக்காசுப் புலவர்
372.  சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் - தாழை நகர்
373.  சிவப்பு ரிக்‌ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி ராமன்
374.  சிவபெருமான் திருவிளையாடல்கள் எண்ணிக்கை – 64
375.  சிவயோகத்தில் அமர்ந்த யோகி – திருமூலர்
376.  சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல்
377.  சிற்றிலக்கியங்களின் வேறு பெயர் – பிரபந்தங்கள்
378.  சிறிய பெருந்தகையார் – திருஞான சம்பந்தர்
379.  சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
380.  சிறுபஞ்சமூலம் ஆசிரியர் – காரியாசான்
381.  சிறுமுதுக்குறைவி – கண்ணகி
382.  சின்ன சங்கரன் கதையாசிரியர்  - பாரதியார்
383.  சின்னூல் எனப்படுவது  -  நேமி நாதம்
384.  சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு  - 1705
385.  சீகாழிக்கோவை எழுதியவர்  –  அருணாசலக் கவிராயர்
386.  சீதக்காதி என அழைக்கப்படுபவர் - செய்யது காதர் மரைக்காயர்
387.  சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க
388.  சீறாப்புராணம் ஆசிரியர்  -  உமறுப்புலவர்
389.  சீனத்துப் பரணி பாடிய ஆண்டு – 1975
390.  சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர்  –  மு.கதிரேசன் செட்டியார்
391.  சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர்
392.  சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன்
393.  சுமைதாங்கி ஆசிரியர் –  நா.பாண்டுரங்கன்
394.  சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி
395.  சுரதாவின் இயற்பெயர்  -  இராசகோபாலன்
396.  சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர்
397.  சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர்
398.  சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன்
399.  சூடாமணி நிகண்டின் ஆசிரியர்  - மண்டல புருடர்
400.  செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் - மறக்கள வழி- வாகைத்திணை

401.  செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு  - 1903
402.  செந்தாமரை நாவல் ஆசிரியர்  -  மு.வரதராசன்
403.  செம்பியன் தேவி நாவலாசிரியர்    -  கோவி.மணிசேகரன்
404.  செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
405.  செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
406.  சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
407.  சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார்
408.  சேயோன்  - முருகன்
409.  சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
410.  சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
411.  சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
412.  சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
413.  சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
414.  சைவசமயக் குரவர்கள்  - நால்வர்
415.  சைவத் திறவுகோல்  நூலாசிரியர் – திரு.வி.க
416.  சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
417.  சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும                      

   417.  சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
418.  சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
419.  சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுபிள்ள
420.  சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
421.  சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
422.  சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்
423.  சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
424.  சோழ நிலா நாவலாசிரியர் - மு.மேத்தா
425.  ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்
426.  ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
427.  ஞானக் குறள் ஆசிரியர்  -  ஔவையார்
428.  ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
429.  ஞானவெண்பாப் புலிப்பாவலர்  –   அப்துல் காதீர்
430.  டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா
431.  டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை
432.  தக்கயாகப் பரணி ஆசிரியர்  –  ஒட்டக்கூத்தர்
433.  தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர்  -   சோமசுந்தரபாரதியார்
434.  தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப் புலவர்
435.  தண்டி ஆசிரியர்  -  தண்டி
436.  தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை  –  35 அணிகள்
437.  தண்டியலங்கார ஆதார நூல் – காவியரதர்சம்
438.  தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம்
439.  தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
440.  தணிகைபுராணம் பாடியவர் - கச்சியப்ப முனிவர்
441.  தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி
442.  தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்
443.  தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்- நச்சினார்க்கினியர்
444.  தம் மனத்து எழுதிப்  படித்த விரகன் - அந்தக்கவி வீரராகவ முதலியார்
445.  தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி
446.  தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம்
447.  தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய காலம் – பல்லவர் காலம்
448.  தமிழ் நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன்
449.  தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா
450.  தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் - கனக சுந்தரம் பிள்ளை
451.  தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு
452.  தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
453.  தமிழ் மொழியின் உப நிடதம் -  தாயுமானவர் திருப்புகழ் திரட்டு
454.  தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி
455.  தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர்
456.  தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர்
457.  தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு
458.  தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி
459.  தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி
460.  தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு
461.  தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன்
462.  தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை
463.  தமிழ்த்தாத்தா - உ.வே.சா
464.  தமிழ்த்தென்றல் -  திரு.வி.க
465.  தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம்
466.  தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103
467.  தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர்
468.  தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
469.  தமிழ்மொழி - பின்னொட்டு மொழி
470.  தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு
471.  தமிழன் இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர்
472.  தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள்
473.  தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர்
474.  தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா
475.  தமிழில் பாரதம் பாடியவர்  – வில்லிபுத்தூரார்
476.  தமிழில் முதல் சதக இலக்கியம்  –  திருச்சதகம்
477.  தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
478.  தமிழின் முதல் நாவல் -  பிரதாப முதலியார் சரித்திரம் -  மாயூரம் வேத நாயகர்
479.  தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை -  பாரதிதாசன்
480.  தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு
481.  தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் -  புறநானூறு 366
482.  தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு
483.  தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு
484.  தலைமுறைகள் நாவலாசிரியர் –  நீல .பத்மநாபன்
485.  தலைவன் பிரிந்த நாளை  ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை
486.  தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன்                         488.  தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
489.  தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்  - த.நா.குமாரசாமி
490.  தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்
491.  தாமரைத் தடாகம் நூலாசிரியர்  -  கார்டுவெல் ஐயர்
492.  தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
493.  தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர்  -  வள்ளலார்
494.  தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
495.  தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
496.  தானைமறம் – தும்பை
497.  தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர்  –  நா.காமராசன்
498.  தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
499.  திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்
500.  திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் – கணிமேதாவியார்

501.  திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்
502.  திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470
503.  திரமிள சங்கம் தோற்றுவித்தவர்  - வச்சிர நந்தி
504.  திரமிளம்  என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக விவேகம்
505.  திராவிட சாஸ்திரி - சி.வை.தாமோதரம் பிள்ளை
506.  திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு
507.  .   திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள்  -   பாலி,பிராகிருத மொழிகள்,
508.  திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர் கார்டுவெல்
509.  திராவிட வேதம் - திருவாய் மொழி
510.  திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன்
511.  திரிகடுகம்  -  சுக்கு,மிளகு,திப்பிலி
512.  திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார்
513.  திரு.வி.க.நடத்திய இதழ்கள் – தேசபக்தன், நவசக்தி
514.  திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப் புலவர்
515.  திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர் – கல்லாடர்
516.  திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் - ஜெகவீர பாண்டியர்
517.  திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள்
518.  திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
519.  திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
520.  திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர் கிரால் / கிராஸ்
521.  திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
522.  திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை - 400 பாடல்கள்
523.  திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் - சடையன்
524.  திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர் -  திருச்செந்தூர்
525.  திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார் நம்பி
526.  திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர் -  பெ.சுந்தரம் பிள்ளை
527.  திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர் – வைரமுத்து
528.  திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்  -  நம்பியாண்டார் நம்பி
529.  திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி - கோண்டா
530.  திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் - மகேந்திர வர்மன்
531.  திருநாவுக்கரசரின் இயற் பெயர் – மருள்நீக்கியார்
532.  திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம் – தருமசேனர்
533.  திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன்
534.  திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர் -  டாக்டர் கார்டுவெல்
535.  திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர்
536.  திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள் 1720
537.  திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத் தேவர்
538.  திருப்புகழ் பாடியவர்  - அருணகிரி நாதர்
539.  திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு – திருவாலிநாடு
540.  திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன்
541.  திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
542.  திருமழிசைஆழ்வார் இயற்பெயர்      - பக்திசாரர்
543.  திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது - கந்தழி
544.  திருமுருகாற்றுப்படை ஆசிரியர்  – நக்கீரர்
545.  திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர்(1869)
546.  திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன்
547.  திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது
548.  திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்
549.  .திருவாசகப் பாடல் எண்ணிக்கை        - 656
550.  .திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்                        

551.  . திருவாவடுதுறை  ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
552.  .திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய மான்மியம்
553.  .திருவெங்கை உலா ஆசிரியர் -  சிவப்பிரகாச சுவாமிகள்
554.  .திருவேரகம் –  சுவாமிமலை
555.  .திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் - பட்டினத்தார்
556.  .தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு
557.  .தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
558.  .திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் –  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
559.  .தின வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல் பாதிரியார்
560.  .துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்
561.  .தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு
562.  .தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி
563.  .தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி
564.   தென்னவன் பிரமராயனெனும்
565.  தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி
566.  தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876
567.  தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
568.  தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர்
569.  தேரோட்டியின் மகன்   நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா
570.  தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
571.  தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை-அதியமான்
572.  .   தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
573.   தேன் மழைக் கவிதைத்தொகுப்பு       - சுரதா
574.  தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்
575.  தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் -   தமிழி
576.  தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
577.  தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
578.  தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார்
579.  தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27
580.  தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
581.  பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்
582.  தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்-
சி.புன்னைவன நாத முதலியார் – 1922
583.  தொல்காப்பிய மெய்ப்பாடுகள் –  8
584.  தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் - வ.சுப.மாணிக்கனார்
585.  தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள்
586.  தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்
587.  தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை
பொருளதிகாரம்  இறுதி நான்கு இயல்கள்-
588.  தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை-
     அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்
589.  தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை
590.  தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
591.  தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
592.   தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
593.  தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
594.  தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்பு
தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்,எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
595.  தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்--க.வெள்ளைவாரனார்
596.  தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும்  கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது  – கண்கள்
597.  தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
598.  தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
599.  தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
600.  தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்-–கந்தியார்,வெள்ளியார்

TET

1. வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - டிட்ச்னர் (Edward Bradford Titchener)
2. மானிட உளவியல் Humanistic Psychology - கார்ல் ரோஜர்ஸ்,  மாஸ்கோ
3. உளவியல் பரிசோசனைகள் - வெபர் (E.H.Weber)
4. உள இயற்பியல் (PSYCHOPHYSICS) - ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
5. முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt
6. தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்
7. மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்
8. அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget,  புரூணர் Jerome S.Bruner.
9. நுண்ணறிவுச் சோதனைகள் - பினே Alfred Binet,  சைமன் Theodore Simon
10. கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் - ஸ்கின்னர் (B.F.Skinner)
11. மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
12. சமரச அறிவுரைப் பகர்தல் -   F.C. தார்ன் F.C.Thorne
13. முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt.  இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.
14. ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov
15. முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்
16. நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
17. உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்
18. உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்
19. நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே
20. நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு
21. நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு -  ஸிரில் பர்ட் - வெர்னன்
22. நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை - தார்ண்டைக்
23. நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை - எல்.எல்.தார்ஸ்டன்
24. நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை - ஸ்பியர்மென் (Charles Spearman)
25. இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
26. குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley
27. பொதுமைப் படுத்தல் கோட்பாடு - ஜட்
28. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
29. மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus
30. மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்                        

31/3/17

அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு: தமிழக அரசு

பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறைவட்டாரங்கள் தெரிவித்தன.


 பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய் (கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.இருப்புத் தொகையை குறைவாக வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச்சேவை மூலமாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்:-மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு ஊதியம் அதில் போடப்படுகிறது.

எனவே, ஊழியர்கள் குறித்த அடிப்படை விவரங்களை வங்கியில் சமர்ப்பித்து வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெறலாம்.குறிப்பாக, ஊழியரின் பெயர், வங்கிக் கணக்கு எண், வருமானவரிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இவற்றை வங்கியில் சமர்ப்பித்த பிறகு, அவை வங்கியால் ஆய்வு செய்யப்படும்.பின்பு, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வங்கிக் கணக்கில் வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி.. டூவீலர் விலையில் வரலாற்று வீழ்ச்சி.. இச்சலுகை 2 நாட்கள் மட்டுமே!

மும்பை: பாரத் ஸ்டேஜ் -4 (பி.எஸ்.4) விதிமுறைகளை பூர்த்தி செய்யாத வாகனங்களை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்ய முடியாது என்று உச்ச
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அந்த பைக்குகள் விலை கிடுகிடுவென குறைந்துள்ளது.

வழக்கு
நாட்டில் புகை மாசுவை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம், வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை வரையறுத்து விதிமுறைகள் வகுத்து வெளியிட்டு வருகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்து, பாரத் ஸ்டேஜ் (பி.எஸ்) 3 என்ற விதி முறை ஏற்கனவே அமலில் இருந்தது.

தள்ளுபடி
தள்ளுபடி
இதன்பிறகு, கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாகன இன்ஜின் தயாரிக்கும் வகையில் பி.எஸ்-4 விதிமுறை, 2010முதல் நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் உற்பத்தியைதான் அந்த அறிவிப்பு குறிக்கிறது, ஏற்கனவே உற்பத்தி செய்த வாகனங்களை விற்பனை செய்யவோ, ரிஜிஸ்டர் செய்யவோ வலியுறுத்தவில்லை என கருதின மோட்டார் வாகன நிறுவனங்கள்.

வழக்கு
ஆனால், விற்பனைக்கும் தடை என்பதை தாமதமாக புரிந்து கொண்டன. எனவே, தங்களிடம் பிஎஸ் 3 விதிமுறைகளுடன் கூடிய 8 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாகவும் இத்தகைய வாகனங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

அதிரடி உத்தரவு
இரு நாட்கள்தான் கெடு
இரு நாட்கள்தான் கெடு
இந்தமனுவுக்கு சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், 2005 மற்றும் 2010ல் இதேபோல முறையே பி.எஸ்.2 மற்றும் பி.எஸ்.3 என்ற புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஸ்டாக்கில் இருந்த பழைய வாகனங்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டது என கார் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல், 1ம் தேதி முதல் பி.எஸ்.3 வாகனங்களை பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று அதிரடி உத்தரவை நேற்று பிறப்பித்தது.
வாகனநிறுவனங்களுக்கு நஷ்டம் இதையடுத்து பெரும் நஷ்டத்தை நோக்கி வாகன உற்பத்தி நிறுவனங்கள் செல்ல தொடங்கியுள்ளன. 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனங்களை இன்னும் 2 நாட்களில் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் அந்த நிறுவனங்களுக்கு. அதிலும் குறிப்பாக ஹீரோ நிறுவனம் மற்றும் ஹோண்டா நிறுவனம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே அவை தங்கள் டூவீலர் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளன.

தள்ளுபடி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பி.எஸ்.3 வகையில் தயாரான ஸ்கூட்டர்களுக்கு ரூ.12500 டிஸ்கவுண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது. பிரீமியம் வகை பைக்குகளுக்கு ரூ.7500 டிஸ்கவுண்டும், நுழைவு நிலையிலுள்ள மாஸ் மார்க்கெட் பைக்குகளுக்கு ரூ.5000 வரையும் டிஸ்கவுண்ட் தருவதாக அறிவித்துள்ளது.

இருநாட்கள்தான் கெடு ஹோண்டா நிறுவனம் தனது ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை டிஸ்கவுண்ட் அளிப்பதாக அறிவதி்துள்ளது. மார்ச் 31 இரவுக்குள் முடிந்த அளவுக்கு பைக்குகளை விற்பனை செய்து தீர வேண்டிய கட்டாயத்தில் அந்த நிறுவனங்கள் உள்ளன.

2017-18ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில், காலியாக 500 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு; பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்

2017-18ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்பொதுமாறுதல், பதவி
உயர்வு கலந்தாய்வில், காலியாக உள்ள 500 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக பதவி உயர்வு பெற்ற

முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் திரு.மா.வே.இரவிச்சந்திரன் தெரிவித்தார்.

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை 31/3/17 நண்பகல் 12 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது

APRIL DIARY 2017.......

1- குறைதீர் முகாம்(உ.தொ.க.அலுவலகம்)

13- பெரிய வியாழன் வரையறுக்கப்பட்ட விடுப்பு.


14 - தமிழ் வருடப் பிறப்பு &புனித வெள்ளி அரசு விடுமுறை.

22 - சனி பள்ளி வேலை நாள்

24- மூன்றாம் பருவத் தேர்வு தொடக்கம் & ஷபே மிராஜ் வரையறுக்கப்பட்ட விடுப்பு

28-மூன்றாம் பருவத் தேர்வு முடிவு & பள்ளி கடைசி வேலை நாள்

ஏப்ரல் 29 முதல் மே 31 வரை கோடை விடுமுறை

29-TET ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1


30- ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான வங்கிகணக்கினை sgsp கணக்காக மாற்றக் கோரும் விண்ணப்பப்படிவம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வங்கிக்கணக்கினை STATE GOVERNMENT SALARY PACKAGE முறைக்கு மாற்றக்கோரும் SCHOOL WISE விண்ணப்பம்.

2017 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்*

*13.04.2017-வியாழன்-பெரிய வியாழன்*
*14.04.2017-வெள்ளி-அம்பேத்கார் பிறந்த நாள்*
*16.04.2017-ஞாயிறு-ஈஸ்டர்*

*25.04.2017-செவ்வாய்-ஷபே மிராஜ்*
*10.05.2017-புதன்-சித்ரா பவுர்ணமி / புத்தர் ஜெயந்தி*
*12.05.2017 –வெள்ளி-ஷபே பாரத்*
*28.05.217-ஞாயிறு- ரம்ஜான் நோன்பு முதல் நாள்*
*22.06.2017- வியாழன்- ஷபே காதர்*
*03.08.2016-வியாழன்-ஆடிப்பெருக்கு*
*04.08.2017-வெள்ளி-வரலட்சுமி விரதம*்
*07.08.2017-திங்கள்-ரிக் உபகர்மா*
*08.08.2017-செவ்வாய்-காயத்ரி ஜெபம்*
*25.08.217-வெள்ளி-சாம உபகர்மா*
*31-08.2017-வியாழன்-அர்ஃபா*
*04.09.2017-திங்கள்-ஓணம்*
*22.09.2017-வெள்ளி-ஹிஜரி புத்தாண்டு*
*18.10.2017-புதன்-தீபாவளி நோன்பு*
*02.11.2017-வியாழன்-கல்லறைத் திருநாள்*
*04.11.2017-சனி-குருநானக் ஜெயந்தி*

*02.12.2017-சனி-திருக்கார்த்திகை*

TN Lab Assistant Selection " Weightage Calculation Method " | ஆய்வக உதவியாளர் பணிக்கான வெயிட்டேஜ் கணக்கிடும் முறை

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில்
நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
ஆய்வக உதவியாளர் பணியிடங்களை, அந்தந்த மாவட்டங்களில் காலிப் பணியிடங்களுக்கு தகுந்த வகையில், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, எழுத்துத் தேர்வில் தேர்வானவர்கள் குறித்த பட்டியல், ஏப்ரல் 1,2ஆம் தேதிகளில், அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒட்டப்படும். உரியவர்களுக்கு அழைப்புக் கடிதமும் அனுப்பி வைக்கப்படும்.

காலியிடத்துக்கு தகுந்தாற் போல், 1:5 என்ற விகிதத்தில் அழைக்கப்படுவர். இதனையடுத்து, அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஏப்ரல் 9 முதல் 11-ஆம் தேதி வரை இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

Weightage Calculation  Method

1.எழுத்துத் தேர்வு - 150க்கு பெற்ற  மதிப்பெண்

2.வேலைவாய்ப்புப் பதிவு - 10 மதிப்பெண்

3.கூடுதல் கல்வித் தகுதியாக பிளஸ் 2 க்கு - 2 மதிப்பெண்

4.பட்டப்படிப்புக்கு - 3 மதிப்பெண்

5.ஆய்வக உதவியாளர் அனுபவச் சான்று இருந்தால் - 2 மதிப்பெண்

இதனையடுத்து, இனசுழற்சி இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஒரு வாரத்தில் பணி ஆணை வழங்கப்படும்.


இந்தநியமனம் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், வெளியிடப்பட்ட அரசாணைப்படி நேர்மையாக நடைபெறும்.

1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்

தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித்
துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.


 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

600 உடற்கல்வி ஆசிரியர்கள், 300 ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் 100, தையல் ஆசிரியர்கள் 100 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன என்றார்.

சரியான வினாக்கள்தான்: பிளஸ் 2 கணிதத் தேர்வில், பாடத் திட்டத்தில் இல்லாத கடினமான வினாக்கள் கேட்கப்பட்டது குறித்த கேள்விக்கு, பாடத் திட்டத்திலிருந்து தான் சரியாகக் கேட்கப்பட்டுள்ளது என்றார் ச.கண்ணப்பன்.


பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தற்போது நடைமுறையில் இல்லாத திட்டக் குழு தொடர்பான வினா இடம் பெற்றது குறித்த கேள்விக்கு, திட்டக் குழுவின் தலைவர் யார் என்று, பொதுவானதாக சரியாகவே கேட்கப்பட்டுள்ளது. திட்டக் குழுவுக்கு பதிலாக நடைமுறையில் உள்ள நிதிஆயோக்கின் தலைவரும் பிரதமர் தான், அதனால், வினாவில் தவறில்லை என்றார்.

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல் | என்ஜினீயரிங் படிப்புக்கு
ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரி தெரிவித்தார். என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 554 உள்ளன. அரசு கல்லூரிகளில் உள்ள 100 சதவீத இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகள் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு வழங்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அவர்கள் 50 சதவீதம் இடங்களை மட்டும் கொடுத்தால் போதும். தனியார் கல்லூரிகள் வைத்திருக்கும் 35 சதவீத இடங்களை அந்த கல்லூரியே நிரப்பிக் கொள்ளலாம். அந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த வருடம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் சேர்வதற்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. 1 லட்சம் இடங்கள் 1 லட்சம் மாணவ-மாணவிகள் தான் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் கடந்த ஆண்டு சேர்ந்தனர். இந்த வருடமும் என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் இன்றி உள்ளனர். அதற்கு காரணம் வேலைவாய்ப்பு குறைவுதான். சாதாரண கல்லூரிகளில் சேர்ந்து படித்தால் அந்த கல்லூரிகளில் வேலைக்கு ஆள் எடுக்க தனியார் நிறுவனங்கள் வருவதில்லை. அதன் காரணமாக என்ஜினீயரிங் படிப்பை விட கலை அறிவியல் படிப்பில் நிறைய பேர் சேருவார்கள் என்று தெரிகிறது. கலந்தாய்வு மூலம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவது குறித்து அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஏப்ரல் 2-வது வாரம் கலந்தாய்வு முறையில் எந்த வித மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு போலவே கலந்தாய்வு நடைபெறும். ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். அந்த விண்ணப்பத்தில் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ்-2 தேர்வு முடிவு 12-ந் தேதி வெளியாகிறது. அதன்பிறகு அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No TET for those whose certificates verified between May 2010-Feb 2011

EDUCATION
No TET for those whose certificates verified between May
2010-Feb 2011


CHENNAI:Madras high court on Tuesday said candidates aspiring to become teachers and whose certificates were verified between May 2010 and February 2011 need not appear for the mandatory Teachers Eligibility Test (TET).

Delivering the judgement on review petitions filed by 94 teacher trainees, a Division Bench comprising Justices Elipe Dharma Rao and M Vengopal granted relief to them after dismissing their petitions by another Division Bench.

In May 2010, over 32,000 qualified candidates having teacher education diploma were sponsored by various employment exchanges on seniority as well as communal reservation basis for teacher selection process. Their certificates were verified between May 12, 2010 and February 2011.

On August 23, 2010, the Centre notified the Right of Children to Free and Compulsory Education Act (RTE Act), as per which a Teachers’ Eligibility Test was made mandatory for appointment of teachers for Class VI to Class VIII.
Two TET exams were held by the state government, which had seen less than one per cent pass percentage, resulting in teacher training qualified candidates resenting the selection process by a mandatory test, instead of seniority of registration in employment exchanges.

A batch of 94 such candidates had filed a writ petition, which was dismissed on March 1 last year.
Their appeal too was dismissed in July last year. In their present petition, filed by advocates R Sudha and C Uma, they said they were sponsored for selection and their certificate verification too was completed. Hence they should be exempted from writing the TET.

Advocate general A L Somayaji assisted by additional government pleader P Sanjay Gandhi, however, said mere sponsoring of names by employment exchange and calling of candidates for certificate verification, by themselves could not be termed selection. The question of appointment would arise only if a candidate is selected for the post, he said.

The bench pointed out that Clause 5 of the RTE Act notification made it clear that candidates who had taken part in selection process prior to the Aug 23 2010 notification date need not write the TET.


After the AG said no vacancies were available for teachers as on date, the judge said “we direct the authorities to accommodate the review petitioners in future vacancies, without insisting on them to appear for the TET.”

30/3/17

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வங்கிக்கணக்கினை STATE GOVERNMENT SALARY PACKAGE முறைக்கு மாற்றக்கோரும் SCHOOL WISE விண்ணப்பம்.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான வங்கிகணக்கினை sgsp கணக்காக மாற்றக் கோரும் விண்ணப்பப்படிவம்

யாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் ? யார் வரமாட்டார்கள் என்பது சற்று சிக்கலான குழப்பமான விஷயமாக மாறியுள்ளது. கிரிமி லேயர் யார் நான் கிரிமிலேயர் யார் என்று நிர்ணயம் செய்யப் பல அரசாணைகள் உள்ளன.தமிழ்நாடு அரசின் வருவாத்துறை இந்தச் சான்றிதழை வழங்க வேண்டும்.இதற்கு மூன்று சோதனைகள் உள்ளன

1. அரசுவேலை தர நிர்ணயம். ( Class of govt employees)

2. வருமானச் சோதனை. (Income test)

3. செல்வச்சோதனை (wealth test)ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

1. அரசு வேலை தர நிர்ணயச் சோதனை:

ஓபிசி கோரும் நபருடைய பெற்றோர் அரசு வேலையில் இருந்தால்
அவர்களின் குரூப் என்ன என்று சோதிக்கப்படும். மத்திய மாநில அரசு வேலைகள் குரூப் ஏ,பி, சி, டி என வகைப்படுத்தப் பட்டுள்ளன.ரூ. 6600 க்கும் மேல் தர ஊதியம்- கிரேட் பே பெறும் அரசு ஊழியர்கள் குரூப் ஏ பிரிவில் வருவார்கள். அதாவது, மாவட்ட வருவாய் அலுவலர் டிஆர்ஓ, இணை இயக்குநர் - ஜேடி, இணை பதிவாளர் - ஜேஆர், காவல் கூடுதல்கண்காணிப்பாளர்- ஏடிஎஸ்பி,செயற் பொறியாளர் - இ.இ, முதன்மைக் கல்வி அலுவலர் - சிஇஓ, போன்ற மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அலுவலர்கள் குரூப் ஏ என்று வகைப்படுத்தப் படுவர் .இது போன்ற உயர் அலுவர்களின் குழந்தைகள் நல்ல கல்வி வசதியும் நல்வாய்ப்புகளையும் குழந்தைப் பருவத்தில் பெற்றுவிடுவதால் அவர்கள் கிரிமி லேயர் - வசதியான பிரிவினர் என்று வகைப்படுத்தப்பட்டு பொதுப்பிரிவினராக கருதப்படுவர். ஓபிசி இட ஒதுக்கீடு இவர்களுக்கு இல்லை.இதில் அடுத்த நிலை ஒன்று உள்ளது. பதவி உயர்வில் குரூப் ஏ நிலையை அடைந்த பெற்றோர் அதை நாற்பது வயதுக்குள் அடைந்திருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை வசதியான பிரிவு - கிரிமி லேயரில் சேர்க்கத் தேவையில்லை. ஏனெனில் நாற்பது வயதுக்குள்தான் வளரும் இளம்பருவ குழந்தைகள் அவருக்கு இருக்கும். குழந்தைகளின் கல்விகொடுக்கும் காலத்தில் ஒருவர் குரூப் சி, குரூப் பி நிலையில் இருந்துவிட்டு ஓய்வு பெறும் நிலயில் குரூப் ஏ நிலையைஅடைபவரால் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி வசதியை அளித்திருக்க முடியாது என்பது இந்த நாற்பது வயது என்பதற்கான காரணம்.அடுத்து பெற்றோர் இருவர் குரூப் பி நிலையில் நேரடியாக அரசு வேலை பெற்றிருந்தால் அவர்களின் குழந்தைகள் கிரிமி லேயர்- வசதியான பிரிவில் வருவர். இடஒதுக்கீடு கிடையாது.இது தவிர குரூப் பி, குரூப் சி நிலையில் வேலைபார்க்கும் பெற்றோரின் குழந்தைகள் நான் கிரிமி லேயர்- வசதியற்ற பிரிவினர் என்று வகைப்படுத்தப்படுகின்றனர். இந்தப் பெற்றோரின் ஆண்டு வருமானம் பல ஆண்டுகள் வேலை பார்த்த ஊதிய உயர்வின்மூலம் ஆறு இலட்ச ரூபாயை மீறினாலும் அதை. கருத்தில் கொள்ளத்தேவையில்லை. இவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. இவைதான் விதிகள்.

2. வருமானச் சோதனை:

யாரெல்லாம் அரசு வேலையைத் தவிர்த்து பிற வருமானம் பெறுகிறார்களோ அவர்களுக்கு ஆண்டு வருமானச் சோதனை என்று ஒரு சோதனை நடத்தப் பெறும்.அதாவது ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 6 இலட்சங்களுக்கு மேல் வருமானம் வரும் பெற்றோரின் குழந்தைகள் வசதியான பிரிவினர் - கிரிமி லேயர் என்றுகருதப்படுவர். இவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. அதற்கு குறைவாக வருமானம் பெறுபவருக்கு இடஒதுக்கீடு உண்டு.

3. செல்வச் சோதனை :


ஒவ்வொரு மாநிலத்திலும் நில உச்ச வரம்பு சட்டம் உள்ளது. அந்த உச்ச வரம்பில் 85% அளவுகு மேல் நீர்ப்பாசன நிலம் வைத்துள்வர்கள் வசதியான பிரிவினர் வகைபாட்டில் வருவர். தமிழ் நாட்டில் நில உச்ச வரம்பு 15 ஏக்கர். அதில் 85% என்பது 12.75 ஏக்கர் நிலம்.சரி இதெல்லாம் விதிமுறைகள். அனைவருக்கும் தெரியும்.என்ன இப்பொழுது சிக்கல்?இவ்வளவு காலமாக வருவாய்த்துறை இந்த ஆயணைகளைப் பின்பற்றி ஓபிசி சான்று வழங்குகிறது. அதை யூபிஎஸ்சி, டிஓபிடி ஏற்றுவந்தது. இந்த ஆண்டு ஓபிசி சான்றுகளை அறிவுக்கு ஒவ்வாத வகையில் டிஓபிடி கிளர்க்குகள் ஸ்குரூடினி செய்யத் தொடங்கினர்.முதலில் பெற்றோரின் வருமானத்துக்கு வருமான வரிகட்டிய வருமானவரி ரிட்டன் கேட்டனர். வெறும் நாற்பதனாயிரம் வருமானம் வரும் கூலித் தொழிலாளியிடம் வருமான வரி ரிட்டன் கேட்ட பிரகஸ்பதிகளுக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுக்கலாம்.அடுத்ததாக வருமான வரி ரிட்டன் ஃபைல் செய்யாதவர்களுக்கு வருவாய்த்துறையிலிருந்து வருமானச்சான்று கேட்டனர். அந்த வருமானச் சான்றில் வேலைசெய்யும் மகன், மகளது வருமானத்தைச் சேர்க்கத்தேவையில்லை என்று தாசில்தார், ஆர்ஐ, விஏஓக்களுக்கு புரிய வைக்க பகீரத பிரயத்தனம் தேவைப்பட்டது. இந்தச் சான்றுகளும் போதாது என்று ஒரு செல்ஃப் டிக்லரேஷன் கேட்டனர். இதில் ஒரே சான்றினை அனுப்பியபிறகும் வந்து சேரவில்லை என்று மீண்டும் மீண்டும் கேட்டனர். எப்படியோ ஒரு வழியாக அதைச் சமர்ப்பித்தோம்.அடுத்ததாக, மத்திய மாநில அரசுப் பணி தவிர்த்து மின் வாரியம், எல்ஐசி, பிஎஸ்என்எல், என்எல்சி, வங்கிகளில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகளைக் குறி வைத்தனர். தனியார் நிறுவனப் பணியாளர்களும் தப்பவில்லை.இதில் இவர்கள் ஒரே வினாவினை எழுப்பினர். உங்கள் பெற்றோர் குரூப் ஏ அலுவலர் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம். மூன்று நாட்களில் சொல்லுங்கள். இல்லையெனில் நீங்கள் ஓபிசி கிளைம் செய்தது போலி என்று முடிவு செய்து விடுவோம் என்று கடிதம் அனுப்பினர்.இவ்வளவுகாலம் இந்தச்சான்றுகளை ஏற்று வந்தவர்களுக்குஎன்ன திடீர் என்று ஞானம் பிறந்தது என்று தெரியவில்லை. !சில மாணர்கள் தங்களின் பெற்றோர் சாதாரண கிளரிக்கல் நிலையிலும்,குரூப் சி, பி நிலையிலும் வேலை செய்யும் பணியாளர்கள் எனறு கூறி வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து சான்றுகளைப் பெற்று அனுப்பி வைத்தனர்.அதைச் சொல்வதற்கு நீங்கள் ஆள் அல்ல. மத்திய அரசோ மாநில அரசோதான் சொல்ல வேண்டும் என்று இறுதித்தீர்ப்பு எழுதிவிட்டனர்.மத்திய மாநில அரசுகளில் இதுபோன்று வாரியங்களில், பிஎஸ்யூக்களில் வேலை செய்யும் நபர்களையும் அரசுப்பணியாளர்களையும் இணைத்து குரூப் ஏ, பி, சி என்று எந்த வகைபாட்டில் வைப்பது என்பது குறித்து இதுவரை ஒரு அரசாணைகூட வெளியிடப் படவில்லை.எனவே, 6 இலட்சரூபாய்க்கு மேல் ஊதியம் பெறுபவர் அவர் குரூப் டி பதவியில் இருந்தாலும் வசதியானவர் - கிரிமி லேயர் என்று நிர்ணயம் செய்து அனைவரையும் ஓபிசியிலிருந்து தகுதிநீக்கம் செய்துவிட்டனர். ஜெனரல் ரேங்க் பெற்றவர்களுக்கு மட்டும் பணி ஒதுக்கீடு வந்துள்ளது. மற்றவர்களுக்க பணிஏதும் கிடைக்கவில்லை!இதுதான் இப்பொழுது எழுந்துள்ள சிக்கல்.

01.04.2017 முதல் வருமானவரி சட்டத்தின் கீழ் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள்

அரசு ஊழியர்களுக்கு ஸ்டேட் வங்கியில் விதிவிலக்கு: தமிழக அரசு தகவல்

பாரதஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு
கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாரதஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய் (கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இருப்புத் தொகையை குறைவாக வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை மூலமாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்: மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு ஊதியம் அதில் போடப்படுகிறது. எனவே, ஊழியர்கள் குறித்த அடிப்படை விவரங்களை வங்கியில் சமர்ப்பித்து வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெறலாம். குறிப்பாக, ஊழியரின் பெயர், வங்கிக் கணக்கு எண், வருமான வரிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இவற்றை வங்கியில் சமர்ப்பித்த பிறகு, அவை வங்கியால் ஆய்வு செய்யப்படும். பின்பு, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வங்கிக் கணக்கில் வைப்பதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஜியோவின் உறுப்பினர்களை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக 120ஜிபி வரை இலவச டேட்டா வழங்கும் திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ சிம் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், நாட்டில் பல கோடி வாடிகையாளர்கள் அதனை
பயப்படுத்தினர். இந்த மாத இறுதியுடன் அதன் இலவச திட்டம் நிறைவடவதால் வாடிக்கையாளர்களை கவர பல முக்கிய திட்டங்களை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் படி ரூ. 149 திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்தால் 2ஜிபி டேட்டாவும் கூடுதலாக 1ஜிபி இலவச டேட்டாவும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
ரூ. 303 திட்டத்திற்கு 5ஜிபி இலவச டேட்டாவும், ரூ. 499 திட்டத்திற்கு அடிப்படையாக 56 ஜிபி டேட்டாவும் கூடுதலாக 10ஜிபி இலவச டேட்டாவும் வழங்கப்படும். இந்த கூடுதல் இலவச டேட்டா முதல் ஒரு மாதத்திற்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்டுள்ளது.
ரூ. 999 ரீசார்ஜ் செய்தால் முதல் 60 நாட்களுக்கு 20 ஜிபி டேட்டாவும், ரூ.1,999 ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு 30 ஜிபி இலவச டேட்டாவும் அடுத்த மூன்று மாதங்களுக்கு 60 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படும்.
மேலும் ரூ. 9,999 ரூபாய்க்கு ரீட்சார்ஜ் செய்தால் 360 நாட்களுக்கு 120ஜிபி அடிபடை டேட்டாவும் கூடுதலாக 750 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் பிரைம் வாடிக்கையாளர்கள் திட்டத்தின் கீழ் சேருபவர்கள்ளுக்கு மட்டுமே இந்த சலுகைகள் வழங்கபடும் எனவும் ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது

ஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்கப்படும்

தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு 1-ந்தேதி வழங்கப்பட
உள்ளது.

இதுபற்றி உணவு வழங்கல் துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது:-

பழையரே‌ஷன் கார்டுகளுக்கு பதில் ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டுகள் வழங்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 50 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 1-ந்தேதி கொரட்டூரில் தொடங்கி வைக்கிறார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதி காரணமாக சென்னையில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகளை 1-ந்தேதி வழங்க இயலாது. அதனால் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 1-ந்தேதி ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளது.

ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வாங்க பொதுமக்கள் முண்டியடிக்க தேவையில்லை. குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவரும் செல்போன் எண்களை தந்துள்ளதால் ஸ்மார்ட் கார்டு தயாரானதும் அவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கப்படும்.

அதில் ஸ்மார்ட் கார்டை எந்த தேதியில், எங்கு சென்று வாங்க வேண்டும் என்று ‘மெசேஜ்’ வரும். அதன் பிறகு மக்கள் வந்தால் போதும்.

மெசேஜ் வராதவர்களுக்கு இன்னும் கார்டு ‘பிரிண்ட்’ ஆகவில்லை என்று அர்த்தம். ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் அது கிடைக்கும் வரை பழைய ரே‌ஷன் கார்டுகளையும் 2 மாதத்துக்கு பயன்படுத்தி கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கார்டில் திருத்தம் இருந்தால் இ.சேவை மையத்துக்கு சென்று திருத்தம் செய்து கொள்ளலாம். ஸ்மார்ட் போனிலும் ஆப் டவுன்லோடு செய்து ஓ.டி.பி. நம்பர் மூலம் திருத்தம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிலர் போட்டோ கொடுக்காதது உள்பட பல்வேறு காரணத்தால் பிரிண்ட் செய்வதில் காலதாமதம் ஆனது. இப்போது அது நிவர்த்தி செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடைபெறுகிறது.

எனவேகார்டு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் பதட்டப்பட வேண்டாம். கார்டு தயாரானதும் உங்கள் செல்போனுக்கு கண்டிப்பாக மெசேஜ் வரும். அதன் பிறகு ரே‌ஷன் கடைக்கு வந்தால் போதும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெட்' தேர்வுக்கு 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு எழுத, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பின்,
'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 6 முதல், 23 வரை பெறப்பட்டன. மொத்தம், எட்டு லட்சத்து, 47 ஆயிரத்து, 241 பேர் விண்ணப்பம் பெற்றனர்.இவர்களில், முதல் தாள் தேர்வுக்கு, 2.37 லட்சம் பேர், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 5.03 லட்சம் பேர் என, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.விண்ணப்பம் பெற்றும், 1.07 லட்சம் பேர் விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பங்களை, 50 ரூபாய்க்கு விற்றதன் மூலம், டி.ஆர்.பி.,க்கு, 4.24 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

TNTET - 2017:மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறாரா?- அமைச்சர் செங்கோட்டையனுக்கு தங்கம் தென்னரசு பதிலடி.

ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் மாணவர்களை
குழப்பவில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்தான் மாணவர்களை குழப்புகிறார் என்று திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

பணி மாறுதல் தாமதத்தால் பறிபோகும் சீனியாரிட்டி: ஆசிரியர் பயிற்றுனர்கள் வேதனை

PG TRB - எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது. (30.03.2017 நாளிதழ் தகவல்)

சென்னை:

தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 600 அரசு மேல்நிலைப்பள்ளிகள்
உள்ளன. இந்த பள்ளிகளில் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் 3 முறை பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இதையொட்டி 2,100 ஆசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் நியமிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராக இருந்தது.

ஆனால் அதற்குள் ஆசிரியர் தகுதி தேர்வை விரைவில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துதேர்வு அறிவிப்பை நிறுத்தி வைத்து விட்டு, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து டி.பி.ஐ. வளாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறத்தேவை இல்லை.

தற்போது 100 அரசுஉயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. அப்போது 1,000 பணியிடங்கள் கூடுதலாக உருவாகும். இதில் பதவி உயர்வு போக 500 பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நியமிக்கப்படும்.

இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

மாத சம்பளக்காரர்கள் கணக்கு தாக்கல் செய்ய எளிய படிவம் அறிமுகம்

வருமான வரிக்கு உட்பட்ட சம்பளதாரர்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கின்றனர். தற்போது இந்த படிவத்தில் 18
பகுதிகள் உள்ளன. ஆனால், 2017-18 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய படிவம் அறிமுகப்படுத்தப்படுகிறது. கட்டாயம் நிரப்பப்பட வேண்டிய சில பகுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு, பெரும்பாலான பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இபைலிங் செய்பவர்களுக்கு இது மிக எளிமையாக இருக்கும். கணக்கு தாக்கல் படிவம் சிக்கலாக இருப்பதால், வரி வரம்புக்குள் உள்ள 29 கோடி பேரில் 6 கோடி பேர்தான் தாக்கல் செய்கின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க எளிமையான படிவம் கொண்டுவரப்படுவதாக வருமான வரி அதிகாரிகள் கூறினர்.

இறுக்கமான சூழலிலும் இடிபாட்டு மனநிலையில் இறுதித் தேர்வுக்கு தயாராகும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வாழ்க்கை - தமிழக அரசின் கருணைப் பார்வைக்கு காத்திருக்கும் (23/08/2010) அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்

இறுக்கமான சூழலிலும் இடிபாட்டு மனநிலையில் இறுதித் தேர்வுக்கு
தயாராகும்
TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வாழ்க்கை - தமிழக அரசின் கருணைப் பார்வைக்கு
காத்திருக்கும் (23/08/2010) அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்
தமிழக
அரசுஉதவி பெறும் பள்ளிகளில்
பணியில் உள்ள
பட்டதாரி ஆசிரியர்களின் பணியும் , வாழ்க்கையும் கேள்விக்குறியாவதைத் தடுக்க
பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் உதவினாலும்
TNTET கடைசி வாய்ப்பு என
கடந்த வாரம் வந்த கல்வித் துறையின் இயக்குனர் சுற்றறிக்கையால் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள
பட்டதாரி ஆசிரியர்களின் பணியும், வாழ்க்கையும் கேள்விக்குறியாகி மிகுந்த மன
உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக 23/08/2010
ற்குப் பிறகு பணிநியமனம் பெற்றவர்கள் நிலை இது.
மிகமனம் வருந்தும் நிலை இதில் யாதெனில் ஆறு வருடங்களுக்கு மேலாக பணியில்
ஜொலித்த இவர்கள் தகுதியற்ற ஆசிரியர்கள் என முத்திரை குத்தப்பட்டு
கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவார்கள் என்ற அறிவிப்பு எவ்வாறு
செயல்படுத்தப்படும் என்பதே!
23/08/2010 க்குப் பிறகு (தெரிந்தோ தெரியாமலோ முழு தகுதி இருந்தும்) பணியில்
சேர்ந்த ஒரே காரணத்தினால் இவர்கள் தகுதியற்றவர்கள் என எப்படி வரும் காலம்
நிரூபிக்க உள்ளது என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.
இவர்களில்
பணியில் சேர்ந்த நாள்முதல் இன்று வரை மாணாக்கர்களின் படிப்பு,
நலன், அக்கறை, முன்னேற்றம், தேர்ச்சி, ஒழுக்கம், அணுகுமுறை....
போன்றவைகளில் எத்தனை ஆசிரியர்கள் மீது தவறு குற்றம் கண்டறியப்பட்டுள்ளது..?
"அ முதல் ஃ வரை...!
கற்பித்தலுடன் சேர்த்து
அரசுஅவ்வப்போது கொடுக்கும் பணியிடைப் பயிற்சிகள் முலம் மாணாக்கர்களுக்கு
தேவையானவற்றை மிகுந்த உற்சாகத்துடனும் சுணக்கம் இன்றியும் போதிக்கவில்லை" என
நிரூபிக்க யாரால் இயலும்?
கல்வி மற்றும் பள்ளி சார்ந்த அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து தேர்ச்சி
சதவீதமும் உயர்த்தி கடந்த 4 முதல் 6 ஆண்டுகளாக பணியில் உள்ள இந்த ஆசிரியர்கள்
அடுத்த வரும் ஆசிரியர் தகுதித்தேர்வை காரணம் காட்டி தகுதியற்ற ஆசிரியர்கள் என
முத்திரை குத்தி வெளியேற்றிவிட்டால் அவர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும் என
யோசிக்கவும், மன இறுக்க சூழலையும் இன்று வரை காது கொடுத்து கேட்க யாரும் இல்லை.
கடந்த 3 ½ ஆண்டுகளிலா பலசட்ட சிக்கல்கள் விளைவாக ஆசிரியர் தகுதித் தேர்வு
நடைபெறவில்லை.
இனிநடக்கும் TNTETல் முழுவதும் பயின்று வெற்றி பெற சாத்தியமான சூழலும்,
தெளிவான மனநிலையும் மங்கிய நிலைக்கு தற்போதைய கட்டாயத் தேர்ச்சி பெற்றாக
வேண்டும் என்ற சுற்றறிக்கை மேலும் காயப்படுத்தியுள்ளது.
இந்தஆசிரியர்கள் பணிப்பாதுகாப்பு காரணமாக TNTET லிருந்து முழுவதும் விலக்கு
கேட்டு கோரிக்கைகளை அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களின் வாயிலாக வைத்து வந்த
நிலையில் 3/10 வாய்ப்புகள் மட்டுமே கொடுத்து விட்டு தற்போது வரும் TNTET கடைசி
வாய்ப்பு என்ற கட்டாயத்தால் கழுத்தில் கத்தி உள்ளது போல தினம் தினம்
இறுக்கமான சூழலில் மிகவும்வேதனையில் அரசு பொதுத் தேர்வுகள் , விடைத்தாள்
திருத்தம், தேர்தல் பணி இவற்றையும் சேர்த்து பள்ளிக் கல்விப் பணியும்
புரிந்து வருகின்றனர்.
இவர்களின் நிலை பற்றிய செய்திகள் அவ்வப்போது தொலைக்காட்சி, செய்தித்தாள், மின்
ஊடகங்கள் வழியாக வந்தாலும் அதை அரசியல்வாதிகள், கல்வி அதிகாரிகளின் கவனத்தில்
கொண்டு செல்லவும், எவரும் கண்டுகொள்வதும் இல்லை என்பதுடன், ஆறுதல் கூறக் கூட
ஆட்கள் இல்லை என்பது இவர்களின சொல்ல இயலாத துயரம்.
இவ்வளவு காலம் பட்டதாரி ஆசிரியர்களாக சிறப்பாக பணி புரிந்தும் முறையான
அங்கீகாரம் இல்லாதது போல இன்று வரை பயணிக்கும் இந்த ஆசிரியர்கள் பல வழிகளில்
அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொண்டு உதவ பல அரசு உதவி பள்ளி
நிர்வாகங்கள் முன் வருவது இல்லை.
TNTET நிபந்தனை ஆசிரியர்க் குடும்பங்கள் வாழ்வாதாரம், பணிப் பாதுகாப்பு
காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து ஏற்கெனவே சிறுபான்மையினர் பள்ளிகள்
ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்தது போல இவர்களுக்கும் விலக்கு அளித்து, ஒரு
நல்லமுடிவினை தற்போது தமிழக அரசு எடுக்கும் பட்சத்தில் அரசிற்கு முழுவதும்
நன்றிக்கடன் பற்று இருப்பார்கள் என்பது உண்மை.
இந்தபட்டதாரி ஆசிரியர்கள் நிலையை நல்உள்ளத்துடன் பார்க்க முற்பட்டு விரைவில்
தீர்வு கண்டால் இனிவரும் நாட்களிலாவது நிம்மதியுடன் ஆசிரியப் பணியை அறப்பணியாக
மகிழ்ச்சியுடன் செய்வார்கள்.
தமிழக அரசின் கீழ் உள்ள தமிழக TET நிபந்தனை ஆசிரியர்கள் சார்பில் தமிழக

அரசுக்கு மிகவும் நன்றி....!

முக்கிய அரசாணைகள் -


 (1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278)   

                                                       (2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)    

                                           
 (3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)    

                                               (4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)   

              
   (5)- மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண். 2290/93-1,நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)    

                                                        (6)- அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992)   

                                                          (7)- தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)    

                                                        (8)- மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது, நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)        

                                                    (9)-  அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)       
    
 (10)-  பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள் - 14.5.1985)

பள்ளிக்கு செல்லாதோரை பட்டதாரி ஆக்கிய நிலவொளிபள்ளி

பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்களுக்காகவும், பள்ளிக்கே செல்லாதவர்களுக்காகவும் கல்வி கற்க, காஞ்சிபுரத்தில், நிலவொளிப் பள்ளிசெயல்பட்டு வருகிறது. இங்கு படித்த பலர், இன்று மத்திய, மாநில அரசு பணிகளிலும், பல தனியார் நிறுவனங்களிலும் பணி புரிகின்றனர்.
கடந்த, 1997ல், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த வெ.இறையன்பு, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதிக்கு சென்ற போது, பள்ளி செல்லும் சிறுவர்கள், பட்டு நெசவில் ஈடுபட்டிருந்ததை கண்டார். இதையடுத்து, 1997 டிசம்பரில், பிள்ளையார்பாளையத்தில், 188 மாணவ, மாணவியரைக் கொண்டு, தமிழகத்திலேயே, முதன்முறையாக, நிலவொளிப் பள்ளியை துவக்கினார். அதன் பின், 32 பள்ளிகளாக வளர்ச்சி அடைந்தது.இப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவியர், இவர்களது குடும்பத்தில்முதல் பட்டதாரிகளாக உள்ளனர். ஒரு மாணவர், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படித்து வருகிறார். பல மாணவர்கள், பல்வேறு தொழில்நுட்ப படிப்பு மற்றும் பட்டப்படிப்பு பயின்று தேர்ச்சி பெற்றுள்ளனர். உயர்கல்விக்கு பின், டி.என்.பி.எஸ்.சி.,பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்ததோடு, மத்திய, மாநில அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர்.

இப்பள்ளியில் படித்த மாணவர்களில் சிலர், தற்போது, இப்பள்ளியின் ஆசிரியர்களாக பாடம் நடத்தி வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருந்தாலும்,பழையதை மறக்காமல், தங்கள் வாழ்க்கை பாதையை மாற்றி யமைத்து, வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்த, ஐ.ஏ.எஸ்.அதிகாரி வெ.இறையன்புவை, நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை:லோக்சபாவில் தகவல்

நாடு முழுவதும், மத்திய அரசு, மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு, தனிப்பட்டஅடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், லோக்சபாவில் கூறினார்.
இதுகுறித்து, கெலாட் கூறியதாவது:நாடு முழுவதும், 2.68 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கென தனிப்பட்ட அடையாள அட்டை, இதுவரை வழங்கப்படவில்லை. அதனால், அரசின் நலத்திட்ட உதவிகளையும், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறுவதிலும், அவர்கள் சிரமப்படுகின்றனர்.

இதை கருத்தில் வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு, தனிப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதை பயன்படுத்தி, மத்திய, மாநில அரசுகளில், அவர்களுக்கான சலுகைகளை எளிதில் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் - சி.இ.ஓ., மோதல் : பரபரப்பு பின்னணி அம்பலம்

தர்மபுரி: ''என் மகள் தேர்வு எழுதிய போது, அவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்திய கலெக்டர் விவேகானந்தன் மீது, மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்துள்ளேன்,'' என, சி.இ.ஓ., மகேஸ்வரி கூறினார்.
தர்மபுரி மாவட்ட, முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரியின்மகள் சங்கமப்பிரியா, இலக்கியம்பட்டி அரசு மகளிர் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார்; அதே பள்ளியில், 8ம் தேதி பொதுத்தேர்வு எழுதினார். அப்போது, தேர்வு மையத்துக்கு வந்த வருவாய் துறையினர், அவரை புகைப்படம்எடுத்ததாகவும், தொடர்ந்து, 23ம் தேதி தர்மபுரி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வரும்படி, சம்மன் அனுப்பியதாகவும் கூறினார். மேலும், தன் தாய், சி.இ.ஓ., மகேஸ்வரி மீது உள்ள வஞ்சத்தால், தன்னை கலெக்டர் பழி வாங்குவதாகவும், குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து, சி.இ.ஓ., மகேஸ்வரி கூறியதாவது: தர்மபுரி மாவட்ட சி.இ.ஓ.,வான நான், மாவட்ட தேர்வு அதிகாரியாகவும்உள்ளேன். சங்கமப்பிரியா மீது ஏற்பட்டுள்ள சந்தேகம் குறித்து, கலெக்டர் விவேகானந்தன் என்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை. இதை, துறை ரீதியாக அணுக உள்ளேன். சங்கமப்பிரியாவின் பெற்றோர் என்ற முறையில், கலெக்டர் விவேகானந்தன் மீது, மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளேன், என்றார்கல்வி துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கடந்த, 2015- 16ல், மெல்ல கற்கும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த, மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியில், தர்மபுரி மாவட்டத்துக்கு, 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்தாண்டு வழங்கிய நிதியை, கலெக்டர்விவேகானந்தன் இதுவரை வழங்கவில்லை.இந்நிலையில், 2016 - 17ம் ஆண்டுக்கும், 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், இந்த பணியின் செயல்பாடுகள்குறித்து, வீடியோ எடுத்த வகையில், 15 லட்சம் ரூபாயை வீடியோ கிராபருக்கு வழங்க, சி.இ.ஓ., மகேஸ்வரி கையெழுத்திடும்படி, கலெக்டர் விவேகானந்தன் பரிந்துரை செய்துள்ளார்.ஆனால், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை இதுவரை வழங்காததால், மகேஸ்வரி கையெழுத்து இட மறுத்து விட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த கலெக்டர் விவேகானந்தன், சி.இ.ஓ.,வை பழிவாங்க, சங்கமப்பிரியா மீதுநடவடிக்கை எடுத்துள்ளார். இதுதான் மோதலுக்கான காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலெக்டர் விவேகானந்தனை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரது உதவியாளர், 'இது தொடர்பாக, கலெக்டர் நேற்றே நிருபர்களை சந்தித்து விட்டார். தற்போது, மீட்டிங்கில் உள்ளதால், அவரை தொடர்பு கொள்ள முடியாது' என்றார்.

செட்' தேர்வு: 14 பாடங்களை தமிழில் எழுத அனுமதி.

உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வில், மொழி பாடங்கள் உட்பட, 14 பாடங்களுக்கு, தமிழில் தேர்வு நடத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர் பணியில் சேர, முதுநிலை பட்டதாரிகள், மத்திய அரசின், 'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், நெட் தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தப்படும். அதனால், மாநில மொழிகளில் நடத்தப்படும் செட் தேர்வையே, தென் மாநில பட்டதாரிகள் விரும்புகின்றனர்.இந்த ஆண்டுக்கான செட் தேர்வு, ஏப்., 23ல் நடக்கிறது. தேர்வுக்கான பதிவு முடிந்து, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

 தமிழக அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா மகளிர் பல்கலை சார்பில், செட் தேர்வு நடத்தப்படுகிறது.செட் தேர்வு எப்போதும், தமிழ்மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு, மொழி பாடங்கள், அந்தந்த மாநில மொழிகளிலும், மற்றபாடங்கள், ஆங்கிலத்திலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழில் தேர்வு நடத்தக் கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில், வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது, தமிழில் தேர்வு நடத்தப்படும்என, தெரசா பல்கலை உறுதியளித்தது.மொத்தம் உள்ள, 25 பாடங்களில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய, ஐந்து பாடங்களுக்கும், அந்தந்த மொழிகளில் நடக்க உள்ளது. பொது தாள், வணிகவியல், பொருளியல், கல்வியியல், புவியியல், வரலாறு, மனையியல், ஊடகவியல், சட்டம், மேலாண்மை, அரசியல் அறிவியல், மனோதத்துவவியல், சமூகவியல், சமூகப்பணி ஆகிய பாடங்களுக்கு மட்டும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

 வேதி அறிவியல், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், வாழ்க்கை அறிவியல், கணித அறிவியல், உடற்கல்வி அறிவியல், புவி அமைப்பியல், கடல் மற்றும் கோளரங்க அறிவியல் போன்ற பாடங்களுக்கு, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடக்க உள்ளது.

10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் மாணவர்களை குழப்பிய 'ஷில்லாங்'

சமூக அறிவியல் தேர்வில், அதிக மழை பொழியும் இடம் குறித்த கேள்வி, மாணவர்களை குழப்பியது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று சமூக அறிவியல் பாடத் தேர்வு நடந்தது. இதில், 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர். 
இறுதி தேர்வு என்பதால், வினாத்தாள் கடினமாக இருக்கும் என, மாணவர்கள் பதற்றமாக இருந்தனர்; ஆனால், எளிதாக இருந்தது.ஏற்கனவே, முந்தைய தேர்வுகளில் இடம் பெற்ற வினாக்களாக இருந்தன. பல மாணவர்கள், 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளது. சில மாணவர்களுக்கு, ஒரு மதிப்பெண் வினாவால், திடீர் குழப்பம் ஏற்பட்டது.அதாவது, 'பொருத்துக' பகுதியில், அதிக மழை பொழியும் இடம் தொடர்பான கேள்வி இடம் பெற்றது. அதில், 'ஷில்லாங்' என்ற விடை, இடம் மாறி கொடுக்கப்பட்டிருந்தது. புத்தகத்தில்,அதிக மழை பொழியும் இடம், 'மவ்சின்ராம்' என்ற பகுதியாக, மாணவர்கள் படித்துள்ளனர். அந்த மவ்சின்ராம் கிராமம், மேகாலயா மாநிலத்தில், ஷில்லாங் நகரத்திற்கு அருகில் இருப்பதால், வினாத்தாளில், 'ஷில்லாங்' என்ற பெயரே இடம் பெற்றிருந்தது. அதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். நேற்றைய தேர்வில், இரு மாணவர்கள் உட்பட, 18பேர், காப்பியடித்து பிடிபட்டனர்.பழைய திட்ட குழு தவறான கேள்வி : இந்தியாவில், 1950ல், முன்னாள் பிரதமர் நேருவால் திட்டக் குழு ஏற்படுத்தப்பட்டது. குழுவின் தலைவராக, பிரதமர் இருப்பார்.

இந்நிலையில், 2014ல், பா.ஜ., ஆட்சி வந்ததும், திட்டக் குழு கலைக்கப்பட்டு, 'நிதி ஆயோக்' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், 2014க்கு பின், 10ம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. அதனால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, திட்டக் குழு குறித்த பாடம் இன்னும் உள்ளது. எனவே,நேற்றைய தேர்வில், 'திட்டக் குழுவின் தலைவர் யார்' என்றகேள்வி இடம் பெற்றது. மாணவர்களுக்கு, இதில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை.

SSLC பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது: விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 1-ல் ஆரம்பம்.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நேற் றுடன் (செவ்வாய்க்கிழமை) முடி வடைந்தது. இதைத் தொடர்ந்து, விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது.10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் முடி வடைந்த நிலையில், கடைசி தேர் வான சமூக அறிவியல் தேர்வு நேற்று நடந்தது. தேர்வு எளிதாக இருந்த தாக பெரும்பாலான மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். நேற் றுடன் பொதுத்தேர்வு முடிவடைந்து விட்டதால், தேர்வுக் கூடத்தை விட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.இந்த காட்சியை சென்னை நகரில் பல பள்ளிகளில் பார்க்க முடிந்தது. ஒருசில மாணவர்கள் உற்சாக மிகுதியில் பாடப் புத்தகத்தை மேலே தூக்கி வீசியும் அது கீழே விழும்போது ஓடிச்சென்று பிடித்தும் மகிழ்ந்தனர். சக மாணவர்களை கட்டிப்பிடித்தும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

தேர்வு முடிந்துவிட்ட நிலையில், அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்று மாணவர்களிடம் கேட்டபோது, கோடைவிடுமுறையை உற்சாக மாக கழிக்கப்போகிறோம் என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர். இன்னும் சிலர் விடுமுறையில் தட்டச்சு, கணினி போன்ற ஏதேனும் ஒரு பயிற்சியில் சேர விரும்புவதாக கூறினர்.10-ம் வகுப்பு மொழி சிறுபான்மை மாணவர்களுக்கான விருப்ப மொழித்தாள் தேர்வு நாளை (வியா ழக்கிழமை) நடைபெறுகிறது. இது கட்டாய தேர்வு கிடையாது. விருப் பப்பட்ட மாணவர்கள் மட்டும் தேர்வெழுதலாம். எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் 78 மையங்களில் இப்பணி நடைபெற உள்ளது.10-ம் வகுப்பு மொழி சிறுபான்மை மாணவர்களுக்கான விருப்ப மொழித்தாள் தேர்வு நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இது கட்டாய தேர்வு கிடையாது. விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் தேர்வெழுதலாம்.

TET - குழப்பம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு குழப்பம் இல்லை என்றும் தேர்வுக்கு தயாராக போதிய அவகாசரம் தரப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

பள்ளி கல்வித்துறை மவுனம் : 'TET' தேர்வு குழப்பம் நீடிப்பு

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்குவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுக்காததால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 23 வரை பெறப்பட்டு, பரிசீலனை நடக்கிறது.'இந்த தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களாக, 2010 ஆக., 23க்கு பின் நியமனம் பெற்றவர்கள், தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன்எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில், 2011 நவ., 15ல் தான், 'டெட்' தேர்வே அறிமுகமானது.

அப்படியிருக்கையில், அதற்கு முன் பணி நியமனம் பெற்றவர்களுக்கு, 'டெட்' தேர்வு எப்படி கட்டாயமாகும் என, ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு, பல்வேறு சங்கத்தினர் மனு அளித்து உள்ளனர். அதற்கு, கல்வித் துறை அதிகாரிகள், விளக்கமளிக்கவில்லை.

பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: சிறுபான்மை அந்தஸ்து பெற்ற, பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி தேவையில்லை என,உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. அரசாணைக்கு முந்தைய தேதியில், பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, 'டெட்' தேர்ச்சியை கட்டாயம் ஆக்க முடியாது.

அவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி வகுப்பு நடத்தி கொள்ளலாம் என்றே கூறப்பட்டுள்ளது.எனவே, 2010 ஆகஸ்ட்டுக்கு பின், 2011 நவம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படியே ஏப்ரல் இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

சென்னை உயர் நீதிமன்ற உத்தர வின் படிதான் ஏப்ரல் இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்குப் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு அவசர அவசரமாக நடத்தப்படுவதாகவும், தேர்வு நடத்துவதில் குழப்பம் உள்ளதாகவும், கடந்த 3 ஆண்டு களாக தகுதித்தேர்வு நடத்தப்பட வில்லை என்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளி யிட்டுள்ளார். தகுதித் தேர்வு தேர்ச் சிக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் கடந்த 3 ஆண்டுகளாக தகுதித்தேர்வு நடத்த இயல வில்லை.தமிழக அரசு எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. இன்னொரு வழக்கில் சென்னை உயர் நீதி்மன்றம், ஏப்ரல் மாதத்துக்குள் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று ஆணை வழங்கியது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கான அறிவிப்பு கடந்த பிப்வரி 24-ம் தேதி வெளியிடப்பட்டது. ஜுன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் காலி யிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட தேதி களில் தகுதித் தேர்வு நடத்தப்படுகி றது. இத்தேர்வுக்காக 10 லட்சம் இளைஞர்கள் தீவிரமாக படித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை குழப்பும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் இதுபோன்று அறிக்கை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

TNTET - 2017:மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறாரா?- அமைச்சர் செங்கோட்டையனுக்கு தங்கம் தென்னரசு பதிலடி.

ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் மாணவர்களை குழப்பவில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்தான் மாணவர்களை குழப்புகிறார் என்று திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த ஸ்டாலின் வெளியிட்ட விவரங்கள் பொதிந்த அறிக்கைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விரக்தியுடன் பதில் கூறியிருப்பது விந்தையும், வேடிக்கையும் நிறைந்ததாக இருக்கிறது.ஸ்டாலினின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு பல வருடங்களாக ஆசிரியர் பணிக்காக காத்துக் கொண்டிருப்பவர்களின் நலனையும், தேர்வு எழுதுபவர்களுக்கு போதிய கால அவகாசம் அளித்து தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதையும் சார்ந்தவை என்பதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்குப் புரியாமல் போனது ஆச்சர்யமாக இல்லை என்றாலும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோருக்கு உண்மை நிலை தெரிய வேண்டும் என்பதற்காக சில விளக்கங்களை மட்டும் இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான உச்ச நீதிமன்ற வழக்கை மூன்று வருடங்கள் கவனிப்பாரற்று நிலுவையில் போட்டு வைத்தது அதிமுக அரசுதான். அதற்கு முக்கியக் காரணம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்களை 2011ல் இருந்தே அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்த வினோத நிகழ்வுதான் என்பதை கற்றறிந்த கல்வியாளர்கள் முதல் கடைக்கோடியில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விரும்புவோர் வரை அனைவரும் தெளிவாக அறிந்தே வைத்துள்ளார்கள்.ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அமைச்சர் ஆவதற்கான வாய்ப்பே இல்லாமல் அவதிப்பட்ட கே.ஏ. செங்கோட்டையன் திடீர் விபத்து போல் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்திருப்பதால் கல்வி இலாகாவில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் அவர் இன்னும் முழுமையாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதற்கு ஸ்டாலின் நிச்சயம் பொறுப்பேற்க முடியாது.உயர் நீதிமன்ற உத்தரவின்படியே ஏப்ரல் 2017-க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகிறோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஒப்புவித்துள்ளார். நீதிமன்றங்களின் உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றி நீதியரசர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுள்ள கருணாநிதியின் வழி வந்த ஸ்டாலினும் எப்போதும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பு அளிப்பவர் என்பதை அமைச்சர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.அதே நேரத்தில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டும் உதாசீனப்படுத்தியது அதிமுக அரசு; உள்ளாட்சி தேர்தலை 2016 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தும் இன்றுவரை அந்த தேர்தலை நடத்தாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணை வரும் போதெல்லாம் நீதிமன்ற கண்டனத்தை பெற்றுக் கொண்டிருப்பது இந்த பினாமி அரசு.ஆகவே ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டியிடுவோரின் நலன்களையும், உயர் நீதிமன்ற உத்தரவையும் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்து பதில் சொல்லும் முன்பு, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத காத்திருக்கும் ஆசிரியர்களின் எதிர்காலத்தை அமைச்சர் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

 கல்வி இறுதியாண்டு முடிந்தவுடன் தேர்வு என்றுவைக்காமல், கால அவகாசம் கொடுத்து தேர்வை நடத்த வேண்டும் என்பதே ஸ்டாலின் அறிக்கையின் சாரம்சம் என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.'மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறார்' என்று இன்னொரு விதண்டாவாதத்தை எடுத்து வைத்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். நேற்றைய தினம் பத்தாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் 'இந்திய திட்டக்குழுவின் தலைவர் யார்' என்று கேட்கப்பட்ட கேள்வியைப் பார்த்து மாணவர்கள் எல்லாம் திடுக்கிட்டுப்போய் விட்டார்கள். ஏனென்றால் திட்டக்குழு 1.1.2015 அன்றே கலைக்கப்பட்டு அதற்கு பதில் 'நிதி அயோக்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது கூட தெரியாமல் பினாமி அரசின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் துறை தயாரித்த கேள்வித்தாளில் 'திட்டக்குழு தலைவர்' பற்றி கேள்வி கேட்டிருப்பதுதான் மாணவர்களை ஒட்டுமொத்தமாக குழப்பும் செயல்.ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரண்டாவது இடத்திற்காவது வருவோமா என்ற குழப்பம், அந்த தேர்தலுக்குப் பிறகு அமைச்சர் பதவியில் நாம் நீடிப்போமா என்ற குழப்பம், ஆட்சியை போனாலும் கட்சி தலைமையை கைப்பற்ற என்ன முயற்சி எடுக்கலாம் என்பதில் குழப்பம்- இப்படி பல்வேறு குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஸ்டாலினைப் பார்த்து 'மாணவர்களை குழப்புகிறார்' என்பது விரக்தி நிறைந்த அறிக்கையாக இருக்கிறது.ஆகவே ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை நன்கு படித்துப் பார்த்துவிட்டு, , அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல்வேறு குழப்பங்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தீர்வு காண முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக ஆசிரியர் தேர்வுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து, இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை போதிய கால அவகாசம் கொடுத்து நடத்த வேண்டும் என்று மீண்டும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

TNTET - 2017 :ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்கக் கோருவதுமனிதாபிமானமற்ற செயல்: தங்கம் தென்னரசுவுக்கு வைகைச்செல்வன் பதிலடி

ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்க கோருவது மனிதாபிமானற்ற செயல் என்று திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசுவுக்கு பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தேர்ச்சியில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகையை தமிழக அரசு அளித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாகதகுதித்தேர்வு நடத்தப்படாததற்கு இந்த வழக்குதான் காரணம். இந்த வழக்கை எவ்வளவு விரைவுபடுத்த முடியுமோ அவ்வளவு விரைவுபடுத்தி வழக்கை முடிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

தற்போது வேலையில்லாத பட்டதாரிகள் வேலை பெறும் நோக்கில் தமிழக அரசு விரைந்து தகுதித்தேர்வை நடத்த முயற்சி செய்து வரும் நிலையில், தேர்வை தள்ளிவைக்கக் கோருவது மனிதாபிமானற்ற செயல். ஆனால், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தகுதித் தேர்வு வழக்கை தமிழக அரசுதான் நிலுவையில் வைத்திருந்தது என்று அபாண்டமாக குற்றம்சாட்டுகிறார். நீதிமன்றத்தில் நாமாக ஒரு வழக்கை நிலுவையில் வைக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திமுகவினருக்கு ஏன் தெரியவில்லை.தகுதித் தேர்வை ஏப்ரல் மாதத்துக்குப் பதில் ஜூலை அல்லதுஆகஸ்டு மாதம் நடத்த வேண்டும் என்பதும் தேவையற்றது. தனியார் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வை ஏப்ரல் மாதத்தில் எதிர்கொள்வது அவர்களுக்கு வசதியாக இருக்கும். ஏனென்றால் கல்வி ஆண்டு முழுவதும் பயிற்சி அளித்த அந்த ஆசிரியர்கள் தங்கள் பாடங்களில் போதுமான பயிற்சி பெற்றிருப்பார்கள்.

தகுதித் தேர்வு தேர்ச்சியில் வகுப்பு வாரியான மதிப்பெண் குறைப்பு (5 சதவீதம்) என்பது தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. பட்டதாரிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெயலலிதா அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகையை வழங்கி ஆணை பிறப்பித்தார். அந்த ஆணையை எதிர்த்து தொடரப்பட்டே வழக்குதான் தகுதித் தேர்வு நடத்துவதில் ஏற்பட்ட காலதாமதத்துக்கு காரணமே தவிர, தமிழக அரசு காரணம் அல்ல'' என்று வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்..