யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/6/17

பி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு !!

பி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு
பி.ஆர்க்., 'அட்மிஷன்' விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியாகின. அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 53 ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகளில், 2,760 பி.ஆர்க்., இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.


இதற்காக, அண்ணா பல்கலை பேராசிரியர், இந்துமதியை உறுப்பினர் செயலராக கொண்ட, மாணவர் சேர்க்கை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி, 'பி.ஆர்க்., இடங்களுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூன், 25ல் துவங்கும்' என, அறிவித்தது. ஆனால், இதற்காக அறிவிக்கப்பட்ட, barch.tnea.ac.in என்ற இணையதளம், முதல் நாளே செயல்படவில்லை. மேலும், அட்மிஷன் குறித்த தகவல், அண்ணா பல்கலை மற்றும் தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி இணைய தளத்திலும் இடம் பெறவில்லை.

எனவே, பி.ஆர்க்., விண்ணப்ப பதிவு அறிவிப்பு, பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலை இணையதளம் மற்றும் இன்ஜி., மாணவர் சேர்க்கை இணையதளத்தில், பி.ஆர்க்., பதிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பி.ஆர்க்., இணையதள தொழில்நுட்ப கோளாறும் சரி செய்யப்பட்டது.

இந்த இணையதளத்தில், மாணவர் சேர்க்கை விதிகள், கல்லுாரிகளின் பெயர் விபரங்கள், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.பி.ஆர்க்., பதிவுக்கு, www.annauniv.edu, barch.tnea.ac.in மற்றும் www.tnea.ac.in என்ற இணையதளங்களிலும், மாணவர்கள் விபரங்களை பெறலாம்.

முதுகலை மருத்துவ மாணவர்கள் தகுதி பட்டியல் ரத்துக்கு எதிரான தமிழக அரசு மேல்முறையீட்டு மனு!!!

முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை ஐகோர்ட்டு ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை 4–ந் தேதி நடைபெறுகிறது.

முதுகலை மருத்துவ படிப்பில் சேரும் அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மாதம் 6–ந் தேதி அரசாணை வெளியிட்டது. இதில், முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 9–ன்படி, தொலைதூர கிராமங்கள், மலை கிராமங்கள் மற்றும் கடினமான பகுதிகளை வரையறை செய்தது.
இந்த பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், முதுகலை மருத்துவ படிப்பில் சேரும்போது அவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறியிருந்தது. மேலும், அரசாணைகளின்படி முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலையும் மறுநாள் வெளியிட்டது.

இதை எதிர்த்து பிரணிதா என்ற டாக்டர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜிவ் ‌ஷக்தேர், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர், முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை ரத்து செய்தும், புதிய தகுதி பட்டியலை 3 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கடந்த 16–ந் தேதி உத்தரவிட்டனர்.
மேலும் தொலைதூர கிராமம், கடினமான பகுதி என்று வரையறை செய்த தமிழக அரசின் அரசாணையையும் ஐகோர்ட்டு ரத்து செய்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு அமல்படுத்தப்பட்டால் ஏற்கனவே மருத்துவ படிப்பில் முதுகலை பட்டப்படிப்புக்கு சேர்க்கை பெற்ற 973 மருத்துவர்கள் பாதிக்கப்படுவார்கள். மருத்துவ மேல்படிப்புக்கான சேர்க்கை ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இந்த இடங்கள் அனைத்தும் நிரப்ப முடியாமல் காலியாக இருக்கும்.

அது இந்த நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பை உருவாக்கும். எனவே, ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.சப்ரே, சஞ்ஜய் கி‌ஷன் கவுல் ஆகியோர் அடங்கிய விடுமுறை அமர்வு முன்பு தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே ஆஜராகி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வருகிற 4–ந் தேதியன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தனர்.

நல திட்டங்களுக்கு 'ஆதார்' கட்டாயம்; தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!!!

மதிய உணவு திட்டம் உட்பட, பல்வேறு சமூகநலத் திட்டங்களின் பலனை பெறுவதற்கு, 'ஆதார்' எண் குறிப்பிடுவதை கட்டாயமாக்கும், மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.
பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு, கல்வி உதவித்தொகை உட்பட, மத்திய அரசின் பல்வேறு சமூகநலத் திட்டப் பலன்களை பெறுவதற்கு, வரும், 30க்குள், ஆதார் எண் குறிப்பிடுவதை 
கட்டாயமாக்கும் வகையில், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள், நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், நவின் சின்ஹா அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன.

அவகாசம்

'ஆதார் இல்லாதவர்கள், அரசின் சமூகநலத் திட்டங்களை பயன்படுத்தமுடியாத நிலை ஏற்படும் என்பதால், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்' என, மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, தன் வாதத்தின் போது, ''ஆதார் இல்லாதவர்கள், அதன் விபரங்களை தாக்கல் செய்வதற்கு, செப்., 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆதார் உள்ளவர்கள், வரும், 30க்குள் பதிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு:வருமான வரி கணக்கு தாக்கல்செய்வதற்கு, 'பான்' கார்டை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். புதிய 'பான் கார்டு' வாங்க, ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்ற வருமான வரி சட்டத்திருத்தத்தை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஒத்திவைப்பு

அந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், 'ஆதார் உள்ளவர்கள், அதை குறிப்பிடுவது கட்டாயம்; அதே நேரத்தில், ஆதார் இல்லாதவர்களை கட்டாயப் படுத்தக் கூடாது' என, கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குக்கும், அது பொருந்தும். அதனால், இந்த வழக்கில் இடைக்கால தடை ஏதும் விதிக்க வேண்டிய அவசியமில்லை. வழக்கின் விசாரணை, ஜூலை, 7க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறி உள்ளது.

நெருக்கடியில் காரைக்குடி நகராட்சி பள்ளி திணறல்:கோப்புகளை கிடப்பில் போட்ட வருவாய்த்துறை!!

காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட ராமனாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால், தமிழ், ஆங்கில வழி பிரிவு மாணவர்கள் ஒரே கட்டடத்துக்குள் நெருக்கடியில் படிக்கும் நிலை தொடர்கிறது.
காரைக்குடி டி.டி.நகர் சர்ச் 7-வது வீதியில் நகராட்சிக்கு உட்பட்ட ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளி மற்றும் தொடக்க பள்ளி செயல்பட்டு 
வருகிறது. நடுநிலை பள்ளியாக இருந்த இப்பள்ளி, கடந்த 2013--14-ம் கல்வி ஆண்டில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்வு பெற்றது.ஒரே பள்ளி இரண்டாக பிரிக்கப்பட்டது. உயர்நிலை பள்ளியில் 2013-ம் கல்வி ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 200 ஆக இருந்தது. 2014--15-ல் 318, 2015--16-ல் 478, 2016--17-ல் 650, இந்த ஆண்டு 954 ஆக உயர்ந்துள்ளது. தமிழ் வழியில் 317 மாணவர்களும், ஆங்கில வழியில் 637 மாணவர்களும் படிக்கின்றனர்.
கட்டட வசதி இல்லாத நிலையில் நகராட்சி சார்பில் ரூ.ஒரு கோடிக்கு கட்டடங்கள் கட்டப்பட்டு ஓரளவு நெருக்கடி சமாளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், நடப்பாண்டில் இட நெருக்கடியால் பல மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய கழிப்பிட, கைகழுவும் வசதி, மைதான வசதி இல்லை.தொடக்க பள்ளியை பொறுத்தவரை கடந்த 2014--15-ல் 217, 2015--16-ல் 350, 2016--17-ல் 460, நடப்பாண்டில் 500 மாணவர்கள் என ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கட்டட வசதி இல்லாததால், மாணவர்கள் வராண்டாவில் அமர்ந்து படிக்கின்றனர்.ஒரு வகுப்பில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.
ஆசிரியர்கள் மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். தொடக்க பள்ளிக்கு கட்டடம் கட்ட தாலுகா அலுவலக பின்புறம் உள்ள 42 சென்ட் இடத்தை தேர்வு செய்து, வருவாய் துறை அமைச்சரின் ஒப்புதலுக்கு நகராட்சி நிர்வாகம் அனுப்பி வைத்தது.அப்போதைய நகராட்சி தலைவர் கற்பகம் இதற்கான அனுமதி பெற முழு முயற்சியை எடுத்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவி காலமும் முடிவடைந்ததால், இதற்கான கோப்பு நில நிர்வாக இயக்குனரகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பெற்றோர் ஒருவர் கூறும்போது: நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்தபோதும், போதிய அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லை. தொடக்க பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டடம் கட்டுவதற்குரிய அனுமதியை காரைக்குடி எம்.எல்.ஏ., ராமசாமி மற்றும் தற்போதைய நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு ஒப்புதல்: ஜெட்லி!!!

7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு ஒப்புதல் உள்ளிட்டபல்வேறு அறிவிப்புகளை மத்திய
அரசு வெளியிட்டது.

மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது:

* 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

* பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்திய நிறுவனம் தனியார்மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அதன் பங்குகள் முழுவதும் விற்கப்படும்.

* உ.பி.,யில் சாக்ரி-அலகாபாத் தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* ஒய்வூதியதாரர்களுக்கான மாதாந்திர மருத்துவ படி இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

* மிக உயர்ந்த பனி பிரதேசமான காஷ்மீரில் உள்ள சியாச்சினில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கான படி ரொக்கமாக வழங்கப்படும். என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை ஜெட்லி தெரிவித்தார்

28/6/17

விரைவில் (WhatsApp) வாட்ஸ்ஆப் செயலியிலும் பணம் அனுப்பும் வசதி !!

தகவல் அனுப்பப் பயன்படும் செயலியான வாட்ஸ்ஆப் பண யூபிஐ மூலமாகப் பணப் பரிமாற்றம் செய்வதற்காக இந்திய வங்கிகளுடன் பேச்சுவார்த்தை
நடத்தி வருகின்றது.

இந்தயூபிஐ சேவையின் மூலமாக மொபைல் இயங்குதளத்தைப் பயன்படுத்தி உடனடியாக இரண்டு வங்கி கணக்கு இடையில் பணப் பரிமாற்ற செய்ய முடியும். எஸ்பிஐ வங்கியுடன் பேச்சுவார்த்தை
அமெரிக்காவைச் சேர்ந்த இந்தத் தகவல் பரிமாற்ற செயலி நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இப்போது இந்தியாவில் பணப் பரிமாற்ற சேவையை அறிமுகப்படுத்துவதற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்திய தேசிய பரிவர்த்தனை கார்ப்ரேஷன் மற்றும் சில நிதி நிறுவனங்களுடன் வாட்ஸ்ஆப் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. எளிதான பணப் பரிமாற்ற சேவை
2016-ம் ஆண்டு முன்னால் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அவர்களால் தேசிய பணப் பரிவர்த்தனை கார்ப்ரேஷன் உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி தான் யூபிஐ. இந்தச் செயலியின் உதவியுடன் எளிதாக இரண்டு வங்கி கணக்குடன் பணப் பரிமாற்ற செய்ய முடியும்.
யூபிஐ செயலியை அனைத்து முக்கிய வங்கிகளும் தங்களது இணையதளச் செயலிகள் மட்டும் இல்லாமல் தனியாக ஒரு செயலியாகவும் வழங்கி வருகின்றன. வாட்ஸ்ஆப் நிறுவனம் வங்கிகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு இந்தச் சேவையைத் தங்களது பயனர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.

இதுஎப்படி வேலை செய்யும்?


எப்படி ஒரு செய்தி இரண்டு மொபைல் எஙளுக்கு இடையில் அனுப்பப்படுகின்றதோ அதே போன்று யூபிஐ செயலி மூலமாக இரண்டு வங்கி கணக்கு இடையில் மொபைல் எண், மின்ஞ்சல் முகவரி போன்ற விர்ச்சுவல் முகவரி பயன்படுத்திப் பணத்தை உடனடியாக அனுப்ப முடியும்.

ட்ரூகாலர்

வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்த முயலும் அதேபோன்ற ஒரு சேவையை ட்ரூகாலர் நிறுவனம் ஏற்கனவே ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து வழங்கி வருகின்றது.

ஹைக்

ஹைக்மெசெஞ்சர் செயலியும் யெஸ் பேங்க் நிறுவனத்துடன் இணைந்து யூபிஐ பணப் பரிமாற்ற சேவையை வழங்கி வருகின்றது  SBI வங்கியின் வால்லெட் உரிமம் மூலமாக இந்தச் சேவை வழங்கப்படுகின்றது.
பாதுகாப்பு குறித்து அச்சம்  மொபைல் மூலமாகத் தகவல் அனுப்பும் செயலிகளும் பணப் பரிமாற்ற செய்யும் சேவையை அளிக்கும் போது பாதுகாப்புப் பிரச்சனைகள் ஏதேனும் எழ வாய்ப்புள்ளது என்று வங்கி நிறுவனங்கள் அச்சப்படுகின்றன.

எவ்வளவு பாதுகாப்பானது இது?

வாட்ஸ்ஆப் போன்ற தகவல் பரிமாற்ற செயலிகள் மூலமாகப் பரிவர்த்தனை செய்யப்படும் போது பேமெண்ட் கேட்வே பொன்றப் பாதுகாப்பு வழிகளின் உதவியுடன் நடைபெறுமா என்று விவாதிக்கப்பட்டு வருகின்றது.

கூடுதல் விவரங்கள் 2016-2017 நிதி ஆண்டில் மட்டும் 17.8 மில்லியன் யூபிஐ பரிமாற்றங்கள் நடந்துள்ளதாகவும், அதன் மதிப்பு 7,000 கோடி ரூபாய் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. வாட்ஸ் ஆப் நிறுவனத்தில் 200 மில்லியன் பயனர்கள் இந்தியாவில் இருக்கும் நிலையில் யூபிஐ பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டால் வேகமாக இதன் வளர்ச்சி இருக்கும்.

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கிடைக்கும் இடங்களின் விபரங்கள்...!

2017-2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்.

2017-2018ஆம் ஆண்டிற்கு தமிழ் நாட்டிலுள்ள அரசு மற்றும் சுயநிதி (தனியார்) மருத்துவம், பல் மருத்துவம் பட்டப்படிப்பிற்கு ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படுகின்றன.

அரசுகல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருத்தல் வேண்டும் என்பது கட்டாயமாகும்.

மருத்துவம் / பல்மருத்துவம் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேடுகள் கீழ்க்ண்ட அனைத்து அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பதாரர்களின் மனுவின் பேரில் 27.06.2017 முதல் 07.07.2017 வரை எல்லா நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை உட்பட) காலை 10..00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 08.07.2017 மாலை 5.00 மணிவரை
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்
விண்ணப்பம் வழங்கப்படும் நாட்கள் - ஜூன் 27 காலை 10 மணி முதல் ஜூலை 7 மாலை 5 மணி வரை வழங்கப்படும்.
விண்ணப்பம் பூர்த்தி செய்து அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி தேதி - 08.07.2017 மாலை 5 மணி வரை
1. சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை - 600003.
2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை - 600001.
3. மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை - 625020.
4. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் - 613004.
5. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை - 600010.
6. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு - 603001.
7. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி - 627011.
8. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் - 641014.
9. அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் - 636030.
10. அரசு கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, திருச்சி - 620001.
11. அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி - 628008.
12. அரசு கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, ஆசாரிபள்ளம், கன்னியாகுமரி மாவட்டம் - 629201.
13. அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி, அடுக்கம்பாறை, வேலூர் - 632011.
14. அரசு தேனி மருத்துவக் கல்லூரி, தேனி - 625531.
15. அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி, தர்மபுரி - 701.
16. அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் - 610004.
17. அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் - 601.
18. அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை - 630561.
19. அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை - 606604.
20. அரசு மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் எஸ்டேட், சென்னை - 600002.
21. அரசு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை
22. தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை - 600003.

விண்ணப்பப்படிவங்கள் தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்கம், கீழ்ப்பாக்கம், சென்னை - 10ல் வழங்கப்படமாட்டாது

தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ? ஐகோர்ட் கேள்வி

அரசுபள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியிலே சேர்க்க வேண்டும் என்பதை ஏன் கட்டயாமாக்கப்படவில்லை என தமிழக அரசுக்கு சென்னை
உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அப்பள்ளி நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் "அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை தொடங்க 2012 தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த பள்ளிகளில் துவங்கப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளை தமிழ் வழி பாடம் நடத்தும் ஆசிரியர்களே நடத்துவதாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடத்தை தொடங்க மறுப்பது பாரப்பட்சமானது" என கூறப்பட்டுள்ளது.

இந்தவழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில்,  "கல்வி மிகப்பெரிய ஆயுதம். அதை கொண்டு உலகையே மாற்றலாம் என நெல்சன் மண்டேலா கூறியதை மேற்கொள் காட்டியுள்ளார். இந்தியா கிராமங்களால் வாழ்கிறது. ஆனால் கல்வியில் கிராமப்புற மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். தமிழ் வழி ஆசிரியர்களே ஆங்கில வழி பாடத்தை நடத்துவதால்,ஆங்கில வழி வகுப்புகளுக்கு அனுமதியளித்ததில் உபயோகம் இல்லை.  கிராமப் புற மாணவர்களை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என கவலை தெரிவித்துள்ளார்.
மேலும்,அரசு பள்ளி ஆசிரியர்கள்  குறித்த நேரத்தில் பள்ளிகளை திறக்காதது, முறையாக வகுப்புகளை நடத்ததாது, ஆசிரியர் பணி அல்லாமல் பகுதி நேர தொழில் செய்வது போன்ற நடவடிக்கைகளில் அரசு பள்ளி ஆசிரிர்கள் ஈடுபடுவது குறித்து நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

அரசுபள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, 2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன, அதில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர் எனவும் கேள்வி எழுப்பினார்? தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ? ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்ச பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா ? அரசு பள்ளியை விடுத்து பெற்றோர்கள் தனியார் பள்ளிகள் நாட காரணம் என்ன ? பள்ளிகளுக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா  ?

ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்ய கூடாது ? ஊரக பகுதிகளில் அரசு பள்ளிகளை  நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க கூடாது ? பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது??

உள்ளிட்ட 20 கேள்விகளை எழுப்பிய நீதிபதி, அரசு இது குறித்து ஜூலை 14-ம் தேதி பதிலளிக்க  உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி


அரசுஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் தனியார்பள்ளிகளில் சேர்க்கின்றனர்அரசு ஆசிரியர்கள்குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்ககட்டாயப்படுத்தாதது ஏன்பெற்றோர் தனியார்பள்ளிகளை நாட காரணம்
என்ன
Image may contain: screen
ஆங்கிலவழி கல்வி தொடங்க அனுமதி மறுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.


2012க்கு பின் எத்தனை ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன? ஆங்கிலவழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? ஆசிரியர்கள் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்கக் கூடாது? குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடைசெய்ய கூடாது? அனைத்து கேள்விகளுக்கும் ஜூலை 14க்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது.

காலம் தவறி வரும் ஆசிரியர்களை கண்காணிக்க CCTV அமைக்காதது ஏன்?உயர்நீதி மன்ற நீதிபதி திரு.கிருபாகரன் சரமாரி கேள்வி அரசு பதில் அளிக்க உத்தரவு.

அரசுஊழியர்களின் குழந்தைகளை அரசுபள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயம் ஆக்கக்கூடாது?
நேரந்தவறி வரும் ஆசிரியர்களை கண்காணிக்காதது ஏன்?

காலம் தவறி வரும் ஆசிரியர்களை கண்காணிக்க CCTV அமைக்காதது ஏன்?
ஆசிரியர் சங்கங்கள் தொடங்க தடைவிதிக்காதது ஏன்

உரியநேரத்திற்கு வராத ஆசிரியர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

தனியார் பள்ளிகளை பெற்றோர் நாடக் காரணம் என்ன?

ஆங்கில வழிக் கல்வி அரசு பள்ளியில் நடக்கிறதா?

தமிழ்வழி ஆசிரியர்களே ஆங்கில வழிக் கல்வியை நடத்துகின்றனரா?

BREAKING NEWS : 6,7,8 வகுப்புகளை கையாளாத மற்றும் பட்டதாரிகளை விட குறைந்த தரநிலை ஊதியம் பெறும் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு தரக்கூடாது - மதுரை உயர்நீதிமன்றம் ஆணை - JUDGEMENT COPY

ஆசிரியர்கள் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்கக் கூடாது?

No automatic alt text available.

NEET - MBBS Reservation 85% G.O



தமிழாசிரியர் தகுதிபெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் B.Ed.,M.A./M.Sc.,ஊக்க ஊதியம் சார்பாக சில விளக்கங்கள்!!



நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு BEd ஊக்க ஊதியம் வழங்குவது குறித்த அனைத்து ஆவணங்களின் தொகுப்பு Posted: 27 Jun 2017 08:30 PM PDT CLICK HERE-INCENTIVE TO MIDDLE SCHOOL H.M - FULL DETAILS. தனியார் பள்ளிக்கு சவால் விடும் அரசு பள்ளி Posted: 27 Jun 2017 08:22 PM PDT பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிகள் மற்றும் விடுமுறை தொடர்பான RTI பதில்கள். Posted: 27 Jun 2017 08:35 PM PDT Epayslip இல் Financial Year 2017-18 in Annual Income Statement, Pay Drawn Particulars. Update செய்யாமல் இருந்தது. அதற்கு CM CELL க்கு மனு அனுப்பி பதில் பெற்ற விவரம் Posted: 27 Jun 2017 08:15 PM PDT பிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்?.. கேள்வித்தாள் குழு தலைவர் அறிவிப்பு Posted: 27 Jun 2017 07:24 PM PDT சென்னை : எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2, வினாத்தாள் குழு அரசால் நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக அரசு தேர்வுத்துறை முன்னாள் இயக்குனர், கு.தேவராஜன் நியமிக்கப்பட்டார். குழுவின் உறுப்பினராக, தேர்வுத்துறை முன்னாள் இணை இயக்குனர் ராமராஜன், பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர்கள் பூபதி, வாசு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சமீன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்தவருடம் புதிதாக 11ம் வகுப்புக்கு அரசு பொதுத் தேர்வு வருகிறது. எனவே முதலில் 11ம் வகுப்புக்கு கேள்விகள் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த குழு உறுப்பினர்கள் 11ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு கேள்விகள் வடிவமைக்க கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பாட நிபுணர்களுடன் பேசி வருகிறார்கள். இந்தகேள்விகள் மாணவர்களின் திறனை பரிசோதிக்கும்படி இருக்கும். மாணவர்கள் புரிந்து படித்திருப்பதை ஆய்வு செய்யும். அதே நேரத்தில் அனைத்து தரப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் கேள்விகள் இருக்கும். இன்னும் ஒரு மாதத்திற்குள் கேள்விகள் வடிவமைப்பு தயாராகி விடும். அதன்பிறகு அரசின் ஒப்புதல் பெறப்படும். காலாண்டு தேர்வு வர இருக்கிறது. வினாத்தாள் வடிவமைத்து கொடுத்து அதன்பிறகுதான் தேர்வுத்துறை அதை அச்சடிக்க கொடுக்கும். அதனால் தான் விரைவில் கேள்விகளை வடிவமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. தமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள் !! Posted: 27 Jun 2017 07:21 PM PDT அரசுபள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில். *தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள். 1)அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் ? 2)2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன ? 3)தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ? 4)ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா ? 5)அரசு பள்ளியை விடுத்து தனியார் பள்ளிகளை,பெற்றோர் நாட காரணம் என்ன ? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். 6)பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ? 7)ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது ? 8)ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளிகளை நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது ? 9)பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ? 10)இதுவரை எத்தனை ஆங்கில வழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ? என்றும் நீதிமன்றம் வினா தொடுத்துள்ளது. 11)ஆங்கில வழி ஆசிரியர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர் ? 12)அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்காணிக்க பறக்கும் படையை தமிழக அரசு அமைத்துள்ளதா ? 13)ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்டறிய ஏன் கை விரல் ரேகையை பதிவிடும் இயந்திரத்தை (Bio metric) பொருத்தக்கூடாது ? 14)ஆசிரியர்களின் வருகையை நாள் முழுவதும் கண்காணிக்க வகுப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வாய்ப்புள்ளதா ? 15)கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் என்ன ? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார். 16)கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன ? 17)கடந்த 10 ஆண்டுகளில் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ? 18)கிராமப்புற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ? 19)மாறி வரும் கல்வி கற்பிக்கும் முறைக்கு ஏற்ப, அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா ? 20)அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் பணிபுரிவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன ? என்றும் நீதிபதி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார். Flash News: கோவை மாவட்ட - வால்பாறை வட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. Posted: 27 Jun 2017 07:18 PM PDT வால்பாறையில் கனமழை - கோவை மாவட்ட வால்பாறை வட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. 'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு : மதிப்பிழக்கிறது பிளஸ் 2 மதிப்பெண் Posted: 27 Jun 2017 07:17 PM PDT 'நீட்' தரவரிசை பட்டியலின்படி மட்டுமே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், 'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு, மவுசு அதிகரித்துள்ளது. 'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துளளது. அதனால், பிளஸ் 2 மதிப்பெண், 'கட் - ஆப்' மதிப்பெண்கள் மட்டுமே, மருத்துவ இடங்களுக்கு உதவாது. 'நீட்' தேர்வு மதிப்பெண் அதிகமாக இருந்தால் மட்டுமே, தர வரிசையில் முன்னிலை பெற்று, அரசு ஒதுக்கீடு பெற முடியும். தமிழக அரசின் புதிய முடிவின்படி, பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கான மவுசு குறைந்து, 'நீட்' மதிப்பெண்ணுக்கான மவுசு அதிகரித்துள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாகத்தினரும், தனியார் பள்ளி மாணவர்களும், பிளஸ் 2 சிறப்பு பயிற்சிகளை குறைத்து, 'நீட்' தேர்வுக்கான பயிற்சிக்கு, முன்னுரிமை அளிக்க துவங்கி உள்ளனர். அதனால், தனியார் பள்ளிகளிலேயே நேரடியாக, 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்புகள் துவங்கி உள்ளன. அதேபோல, 'நீட்' தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களுக்கு, கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது. பல புதிய பயிற்சி மையங்களும், சாதாரண டியூஷன் மையங்களும், 'நீட்' தேர்வு பயிற்சிக்கு தயாராகி உள்ளன. பயிற்சிக்கான கட்டணம், ஓர் ஆண்டுக்கு, 20 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் Posted: 27 Jun 2017 08:13 AM PDT தமிழகத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார்.கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கல்வித் துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்று வதற்காக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளோம். இது வரை47 அறிவிப்புகள் வெளியாகி யுள்ளன. மேலும் பல அறிவிப்புகள் வெளியாக உள்ளன.‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம். மத்திய அரசின் பல்வேறு பொதுத் தேர்வு களிலும் வெற்றிபெறும் வகை யில் தமிழக மாணவர்களின் திறனைமேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு உதவும் வகையில் 54 ஆயிரம் கேள்வி-பதில்கள் மற்றும் வரை படங்கள் அடங்கிய தொகுப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. சிபிஎஸ்சி பாடத் திட்டத்துக்கு சமமான கல்வியை மாநில அரசு கல்வித் திட்டத்திலும் அமல்படுத்த விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அரசுப் பள்ளிகளில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைப்பது தொடர்பான உத்தரவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சில நாட்களில் இதற்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கும்.பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் ரூ.7,700-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் 1-ம் தேதியே பகுதி நேர ஆசிரி யர்கள் சம்பளம் பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பகுதி நேர ஆசிரியர் களின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரையின் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் பள்ளிகளில் வசூலிக் கப்படும் கல்விக் கட்டணம் தொடர்பாக, நீதிமன்றத் தீர்ப்புக் குப் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனினும், மிக அதிக அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட் டுள்ள குழுவிடம் புகார் தெரிவித்து, உரிய தீர்வு காணலாம்.குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக ஒவ்வொருவரும் கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. எனினும், அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்ப வில்லை. மதுரையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர் பங்கேற்பார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார். பணி வரன்முறை , தகுதிகான் பருவம் முடித்திட கல்வித்தகுதி உண்மை தன்மை வேண்டும் என்று நாளது தேதி வரை எவ்வித ஆனையும் வெளியிட வில்லை என்று P&R dept RTI கடிதம் Posted: 27 Jun 2017 08:00 AM PDT தகுதிகாண் பருவம் முடித்த முடித்த அரசு ஊழியர் ஒருவருக்கு அதற்கான ஆணை 6 மாதங்களுக்குள் வழங்கப்படவில்லை எனில் தகுதிகாண பருவம் முடிந்ததாக கருதப்படும்..... த.நா.மாநில மற்றும் சார்நிலை விதி 72(b) & அரசுக்கடிதம் 906271/79-1 பணியாளர் துறை நாள் 8.1.80

பணி வரன்முறை , தகுதிகான் பருவம் முடித்திட கல்வித்தகுதி உண்மை தன்மை வேண்டும் என்று நாளது தேதி வரை எவ்வித ஆனையும் வெளியிட வில்லை என்று P&R dept RTI கடிதம்



பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

'தமிழகத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார்.கோவையில் செய்தியாளர்களிடம் அவர்
நேற்று கூறியதாவது:
 கல்வித் துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்று வதற்காக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளோம். இது வரை47 அறிவிப்புகள் வெளியாகி யுள்ளன. மேலும் பல அறிவிப்புகள் வெளியாக உள்ளன.‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம். மத்திய அரசின் பல்வேறு பொதுத் தேர்வு களிலும் வெற்றிபெறும் வகை யில் தமிழக மாணவர்களின் திறனைமேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு உதவும் வகையில் 54 ஆயிரம் கேள்வி-பதில்கள் மற்றும் வரை படங்கள் அடங்கிய தொகுப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. சிபிஎஸ்சி பாடத் திட்டத்துக்கு சமமான கல்வியை மாநில அரசு கல்வித் திட்டத்திலும் அமல்படுத்த விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அரசுப் பள்ளிகளில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைப்பது தொடர்பான உத்தரவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சில நாட்களில் இதற்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கும்.பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் ரூ.7,700-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் 1-ம் தேதியே பகுதி நேர ஆசிரி யர்கள் சம்பளம் பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பகுதி நேர ஆசிரியர் களின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரையின் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தனியார் பள்ளிகளில் வசூலிக் கப்படும் கல்விக் கட்டணம் தொடர்பாக, நீதிமன்றத் தீர்ப்புக் குப் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனினும், மிக அதிக அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட் டுள்ள குழுவிடம் புகார் தெரிவித்து, உரிய தீர்வு காணலாம்.குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக ஒவ்வொருவரும் கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. எனினும், அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்ப வில்லை. மதுரையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர் பங்கேற்பார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்

நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு : மதிப்பிழக்கிறது பிளஸ் 2 மதிப்பெண்

நீட்' தரவரிசை பட்டியலின்படி மட்டுமே, மருத்துவ மாணவர் சேர்க்கை
நடத்தப்படுவதால், 'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு, மவுசு அதிகரித்துள்ளது. 'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துளளது.

அதனால், பிளஸ் 2 மதிப்பெண், 'கட் - ஆப்' மதிப்பெண்கள் மட்டுமே, மருத்துவ இடங்களுக்கு உதவாது. 'நீட்' தேர்வு மதிப்பெண் அதிகமாக இருந்தால் மட்டுமே, தர வரிசையில் முன்னிலை பெற்று, அரசு ஒதுக்கீடு பெற முடியும். தமிழக அரசின் புதிய முடிவின்படி, பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கான மவுசு குறைந்து, 'நீட்' மதிப்பெண்ணுக்கான மவுசு அதிகரித்துள்ளது.

பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாகத்தினரும், தனியார் பள்ளி மாணவர்களும், பிளஸ் 2 சிறப்பு பயிற்சிகளை குறைத்து, 'நீட்' தேர்வுக்கான பயிற்சிக்கு, முன்னுரிமை அளிக்க துவங்கி உள்ளனர். அதனால், தனியார் பள்ளிகளிலேயே நேரடியாக, 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்புகள் துவங்கி உள்ளன.

அதேபோல, 'நீட்' தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களுக்கு, கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது. பல புதிய பயிற்சி மையங்களும், சாதாரண டியூஷன் மையங்களும், 'நீட்' தேர்வு பயிற்சிக்கு தயாராகி உள்ளன. பயிற்சிக்கான கட்டணம், ஓர் ஆண்டுக்கு, 20 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

தமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள் !!

அரசுபள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்
சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில்.

*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்.
1)அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் ?

2)2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன ?

3)தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ?

4)ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா ?


5)அரசு பள்ளியை விடுத்து தனியார் பள்ளிகளை,பெற்றோர் நாட காரணம் என்ன ? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.


6)பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ?


7)ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது ?


8)ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளிகளை நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது ?


9)பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ?


10)இதுவரை எத்தனை ஆங்கில வழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ? என்றும் நீதிமன்றம் வினா தொடுத்துள்ளது.


11)ஆங்கில வழி ஆசிரியர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர் ?


12)அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்காணிக்க பறக்கும் படையை தமிழக அரசு அமைத்துள்ளதா ?


13)ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்டறிய ஏன் கை விரல் ரேகையை பதிவிடும் இயந்திரத்தை (Bio metric) பொருத்தக்கூடாது ?


14)ஆசிரியர்களின் வருகையை நாள் முழுவதும் கண்காணிக்க வகுப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வாய்ப்புள்ளதா ?


15)கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் என்ன ? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.


16)கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன ?


17)கடந்த 10 ஆண்டுகளில் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?


18)கிராமப்புற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

19)மாறி வரும் கல்வி கற்பிக்கும் முறைக்கு ஏற்ப, அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா ?



20)அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் பணிபுரிவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன ? என்றும் நீதிபதி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

பிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்?.. கேள்வித்தாள் குழு தலைவர் அறிவிப்பு

சென்னை : எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2, வினாத்தாள் குழு அரசால்
நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக அரசு தேர்வுத்துறை முன்னாள் இயக்குனர், கு.தேவராஜன் நியமிக்கப்பட்டார்.
குழுவின் உறுப்பினராக, தேர்வுத்துறை முன்னாள் இணை இயக்குனர் ராமராஜன், பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர்கள் பூபதி, வாசு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சமீன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்தவருடம் புதிதாக 11ம் வகுப்புக்கு அரசு பொதுத் தேர்வு வருகிறது. எனவே முதலில் 11ம் வகுப்புக்கு கேள்விகள் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த குழு உறுப்பினர்கள் 11ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு கேள்விகள் வடிவமைக்க கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பாட நிபுணர்களுடன் பேசி வருகிறார்கள்.
இந்தகேள்விகள் மாணவர்களின் திறனை பரிசோதிக்கும்படி இருக்கும். மாணவர்கள் புரிந்து படித்திருப்பதை ஆய்வு செய்யும். அதே நேரத்தில் அனைத்து தரப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் கேள்விகள் இருக்கும்.

இன்னும் ஒரு மாதத்திற்குள் கேள்விகள் வடிவமைப்பு தயாராகி விடும். அதன்பிறகு அரசின் ஒப்புதல் பெறப்படும். காலாண்டு தேர்வு வர இருக்கிறது. வினாத்தாள் வடிவமைத்து கொடுத்து அதன்பிறகுதான் தேர்வுத்துறை அதை அச்சடிக்க கொடுக்கும். அதனால் தான் விரைவில் கேள்விகளை வடிவமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

Epayslip இல் Financial Year 2017-18 in Annual Income Statement, Pay Drawn Particulars. Update செய்யாமல் இருந்தது. அதற்கு CM CELL க்கு மனு அனுப்பி பதில் பெற்ற விவரம்

27/6/17

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. 'ஜூலை, 7 வரை, அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும் பெற்றுக் கொள்ளலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.


தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சிதம்பரம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரியை சேர்த்து, 3,050 இடங்கள் உள்ளன. இதில், 15 சதவீதமான, 456 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு போக, மீதி, 2,594 இடங்கள் உள்ளன. இதுதவிர, சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 783 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில், 85 சதவீதம் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கும், 15 சதவீதம், பிற பாடத்திட்ட மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட உள்ளது.
'நீட்' தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. நேரில் விண்ணப்பம் பெற, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், 'செயலர், மாணவர் சேர்க்கை கமிட்டி, கீழ்ப்பாக்கம், சென்னை - 10' என்ற பெயரில், ௧௦௦ ரூபாய்க்கு எடுக்கப்பட்ட, 'டிடி'யுடன் மனு கொடுக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற, இணையதளங்களில் இருந்தும் பதிவிறக்கம் செய்து, அதனுடன், 'டிடி' இணைத்து அனுப்பலாம். ஜூலை, 7 வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூலை, 8 மாலை, 5:00 மணிக்குள், தேர்வுக் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக் கல்வி இயக்ககம் 
அறிவித்துள்ளது.

நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு 'சீட்' எப்படி?

பெங்களூரு: மருத்துவம், பல் மருத்துவ சீட்களுக்காக, 'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு, அரசு கோட்டாவில், 'சீட்' கிடைக்குமா, இல்லையா; 'சீட்' பெறுவது எப்படி? என்பது போன்ற பல விதமான கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மத்திய உயர் கல்வி தேர்வாணையம் - சி.பி.எஸ்.இ., மே, 7ம் தேதி நடத்திய தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில், பெங்களூரு, டில்லி பப்ளிக் பள்ளி மாணவர் சங்கீர்த் சதானந்த், 720 மதிப்பெண்ணுக்கு, 692 மதிப்பெண்ணுடன், நான்காவது ரேங்க் பெற்று, சாதனை புரிந்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்த மற்றொரு மாணவியான ரக் ஷிதா ரமேஷ், 677 மதிப்பெண்ணுடன், 41வது இடத்தை பிடித்தார். மருத்துவ படிப்பில், மாநிலத்துக்கான, 'கட் ஆப்' மார்க், மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் மூலம், கர்நாடகா தேர்வாணையம் - கே.இ.ஏ.,வுக்கு வரும்; அதன் பின் கே.இ.ஏ., அறிவிக்கும். சி.பி.எஸ்.இ., வழங்கும், 'கட் ஆப்' மார்க் அடிப்படையில், மாணவர்களுக்கு உத்தரவிடப்படும். அதன் பின் ஆவணங்களை பரிசீலிப்பது, 'சீட்' வழங்கும் செயல்பாடு கே.இ.ஏ., மூலமாக நடக்கும். பொதுப்பிரிவு, எஸ்.சி., - எஸ்.டி., என அந்தந்த பிரிவு வாரியாக பிரிக்கப்படும்.
அரசு கோட்டாவில் மருத்துவம், பல் 
மருத்துவ படிப்புக்கு இருப்புள்ள சீட்டுகள் பற்றி, விரைவில் அறிவிக்கப்படும். தனியார் பல்கலைக்கழகம், தனியார் கல்லுாரிகளில் உள்ள மருத்துவ சீட்டுகள் குறித்து இன்னும் 
தெரியவில்லை.
'நீட்' தேர்வில், நல்ல ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு, நாட்டின் பிரபல மருத்துவ கல்லுாரிகளில், எளிதாக, 'சீட்' கிடைத்து விடும். 
மாணவர்களுக்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக, தகுதி தேர்வை தவிர, மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம், 'சீட்' வழங்குவது, கல்லுாரி நுழைவு, ஆவணங்களை பரிசீலிப்பது என அனைத்தும், மாநில அரசு மூலமாகவே நடத்தப்படும்.
சி.இ.டி., மற்றும், 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களின் ஆவணங்களை பரிசீலிப்பதில், எந்த பிரச்னையும் இல்லை. ரேங்க் அடிப்படையில், கே.இ.ஏ., ஆவணங்களை பரிசீலிக்கும் பணியை துவக்கியுள்ளது.
'நீட்' எழுதிய, சி.இ.டி., எழுதாத மாணவர்கள், கே.இ.ஏ., இணையதள மான, www.kea.kar.nic.in பதிவு செய்து கொள்ளும்படி, கர்நாடக மாநில மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., 'கட் ஆப் மார்க்' 
வழங்கிய பின், பதிவு செய்துள்ள மாணவர்கள், தங்களின் சான்றிதழ்களை, சம்பந்தப்பட்ட மையங்களில் பரிசீலித்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு
உள்ளது.

குழு...! புதிய கல்வி கொள்கையை உருவாக்க... கஸ்தூரிரங்கன் தலைமையில் நியமனம்

நாட்டின் புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்ய, விண்வெளி விஞ்ஞானி, கே.கஸ்துாரிரங்கன் தலைமையில், ஒன்பது உறுப்பினர் உடைய குழுவை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நியமித்துள்ளது.


 புதிய கல்வி கொள்கை, உருவாக்க, குழு


நாட்டின் கல்விக் கொள்கையை மாற்றியமைக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர் திட்டமிட்டுள்ளார். இதற்காக, பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற, ஒன்பது உறுப்பினர்கள் உடைய குழுவை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கி உள்ளது. 


100 சதவீதம்


இந்த குழுவுக்கு, விண்வெளி விஞ்ஞானியும், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவருமான, கஸ்துாரிரங்கன் தலைமை வகிப்பார்.இந்த குழுவில் இடம் பெற்று உள்ள, முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அல்போன்ஸ் கானாம்தனம், கேரளாவின் கோட்டயம்,

எர்ணாகுளம் மாவட்டங்கள், 100 சதவீத கல்வியறிவை எட்ட முக்கிய காரணியாக திகழ்ந்தவர். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் ஒருவரான, ராம்சங்கர் குரீல், ம.பி.,யில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கர் பல்கலை துணைவேந்தர். இவர், விவசாயஅறிவியல் மற்றும் மேலாண்மையில் அனுபவம் வாய்ந்தவர்.


இரண்டாவது முறை


குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள், பல்வேறு பிராந்தியங்களையும், பிரிவுகளையும் சேர்ந்தவர்கள்; பல துறைகளில் ஆழ்ந்த, உலகளாவிய அனுபவம் பெற்றவர்கள். 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்த பின், கல்விக் கொள்கை அமைப்பதற்காக, இரண்டாவது முறையாக குழு அமைக்கப்பட்டுள்ளது. 
மனிதவள மேம்பாட்டு அமைச்சராக, ஸ்மிருதி இரானி இருந்தபோது, புதிய கல்விக் கொள்கை உருவாக்க, 2015ல், முன்னாள் கேபினட் செயலர், டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு, 2016, மே, 7ம் தேதி, தற்போதைய மனிதவள மேம்பாட்டுஅமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம், அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் இடம்பெற்றிருந்த சில பரிந்துரைகள் பிற்போக்கானவை என்ற புகார் எழுந்ததால், பல்வேறு அரசியல் கட்சிகள், கல்வி நிறுவனங்களிடம், ஜாவடேகர் ஆலோசனைகளை கோரினார்.

இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்ய, கஸ்துாரிரங்கன் தலைமையில் தற்போது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில்...


கடந்த, 1968ல், நாட்டின் முதல் கல்விக் கொள்கை, அப்போதைய பிரதமர் இந்திராவால் அமல்படுத்தப்பட்டது. அதன் பின், 1986ல், பிரதமராக பதவி வகித்த ராஜிவ், இரண்டாவது முறையாக, கல்விக் கொள்கையை அமல்படுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, 1992ல், நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசு, கல்விக் கொள்கையில் சில திருத்தங்களை மேற்கொண்டது. 2005ல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, குறைந்தபட்ச பொது கொள்கை அடிப்படையில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய 440 மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய சென்னை காவல்துறை அதிகாரியின் கல்விச் சேவை

சென்னை காவல்துறை அதிகாரி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் படிப்பைப் பாதியில் நிறுத் திய 440 மாணவர்களை அடை யாளம் கண்டு, அவர்களை மீண் டும் பள்ளிக்கு அனுப்பி உள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங் கிய மற்றும் மறு குடியமர்த்தம் செய்யப்பட்ட சென்னை கண்ணகி நகர், எழில் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குழந்தைகளில் பெரும்பாலானோர் பள்ளிக்குச் செல்லாமலும், இன்னும் சிலர் படிப்பைப் பாதியிலும் நிறுத்தி இருந்தனர்.அடிக்கடி மோதல் சம்பவங் களும் அந்தப் பகுதியில் நடந்தன. 15 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் பெரும்பாலான குற்றசெயல்களில் ஈடுபட்டிருந்தனர். இதனால், இந்த பகுதியில் கல்வி நிலை கீழ்நோக்கிச் சென்றதாகக் கூறப்பட்டது.

பெற்றோருக்கு வேலைவாய்ப்பு

இப்படிப்பட்ட நிலையில், கண்ணகி நகர், எழில் நகர் மற்றும்அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத மற்றும் படிப்பை பாதியில் நிறுத்திய 440 குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களை மீண்டும் பள் ளிக்கு அனுப்பி கல்வி வளர்ச் சியை ஏற்படுத்தி உள்ளார் சென்னை அடையார் துணை ஆணையர் பி.சுந்தரவடிவேல். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்கிறார்களா? என்பதைக் கண்காணிக்க போலீஸாரையும் நியமித்துள்ளார். மாணவர்களின் பெற்றோருக்கு வேலை வாய்ப் பையும் ஏற்படுத்தி வருகிறார்.

இதுபற்றி அவர் ‘ கூறியதாவது:சென்னையில் மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் காரணமாக அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட்ட குடும்பத்தினர் பெரும் பாலும் கண்ணகி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒரே இடத்தில் இருந்தாலும் எந்த இடத்தில் முன்புஇருந்தார்களோ அதே இடத்தின் பெயரிலேயே அவர்களுக்குள் அழைத்து வரு கின்றனர்.இவர்களுக்குள் பலமுறை மோதல் ஏற்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக பலர் மீது வழக்கு உள்ளது. இதன் காரண மாக இந்தப் பகுதியில் உள்ளவர் களின் பெயரைச் சொன்னாலே அவர்களின் சமூக அந்தஸ்து குறை யும் வகையில் இருந்தது. எனவே, அவர்களின் பொருளாதார மேம் பாட்டிற்கு ஏதாவது செய்ய வேண் டும் என நினைத்தேன். கல்விமூலம் மட்டுமே சீர்திருத்தங்களையும், வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியும் என நம்பினேன். அதன் அடிப்படையில் கண்ணகி நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத மற்றும் படிப்பைப் பாதியில் விட்டவர்கள் குறித்து கடந்த 6 மாதமாகக் கணக்கெடுத்தோம்.

30 மாணவருக்கு ஒரு போலீஸ்:

அதில், அடையாளம் காணப் பட்ட 440 பேரை அருகில் உள்ள வெவ்வேறு பள்ளிகளில் சேர்த்துள் ளோம். மாணவர்கள் பள்ளிக்கு தினமும் செல்கிறார்களா என்பதைக் கண்காணிக்க 30 மாணவர்களுக்கு ஒரு போலீஸை நியமித்துள்ளோம்.மேலும் மாணவர்கள் படிப்ப தற்கு தனி இடம் ஒதுக்கி கொடுத் துள்ளோம். அவர்களுக்கு டியூசன் எடுக்க தனி ஆட்களை நியமித் துள்ளோம். நோட்டு, புத்தகம், பேக், எழுதுபொருள் உள்ளிட்டவை களையும் வாங்கிக் கொடுத் துள்ளோம். மாணவர்களின் பெற் றோர் பொருளாதாரத்தை உயர்த்த, அவர்களின் படிப்புக்குத் தகுந்த வேலையை வாங்கிக் கொடுத்து வருகிறோம்.தற்போது நடந்து முடிந்த காவல்துறை தேர்வில் கண்ணகி நகர்மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 51 பேருக்கு பயிற்சி கொடுத்துள்ளோம். கல்வி யில் வளர்ச்சி ஏற்படுத்துவதன் மூலமும் குற்றங்களைக் குறைக்க முடியும்என்றார்

5 வருட சட்ட படிப்புக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

5 வருட சட்டகல்விக்கு 620 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு  2 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் தகுதியானவர்களுக்கு தரவரிசை பட்டியல் மற்றும்  அவர்கள் பெற்ற கட்– ஆப் மதிப்பெண் ஆகியவை இன்று  (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு இணையதளத்தில்  (www.tndalu.ac.in) வெளியிடப்படுகிறது. இந்த தகவலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர்  சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அசோக்குமார்  தெரிவித்தார்

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கிடைக்கும் இடங்களின் விபரங்கள்...!

2017-2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்.

2017-2018ஆம் ஆண்டிற்கு தமிழ் நாட்டிலுள்ள அரசு மற்றும் சுயநிதி (தனியார்) மருத்துவம், பல் மருத்துவம் பட்டப்படிப்பிற்கு ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படுகின்றன.

அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருத்தல் வேண்டும் என்பது கட்டாயமாகும்.

மருத்துவம் / பல் மருத்துவம் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேடுகள் கீழ்க்ண்ட அனைத்து அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பதாரர்களின் மனுவின் பேரில் 27.06.2017 முதல் 07.07.2017 வரை எல்லா நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை உட்பட) காலை 10..00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 08.07.2017 மாலை 5.00 மணிவரை
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்
விண்ணப்பம் வழங்கப்படும் நாட்கள் - ஜூன் 27 காலை 10 மணி முதல் ஜூலை 7 மாலை 5 மணி வரை வழங்கப்படும்.
விண்ணப்பம் பூர்த்தி செய்து அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி தேதி - 08.07.2017 மாலை 5 மணி வரை
1. சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை - 600003.
2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை - 600001.
3. மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை - 625020.
4. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் - 613004.
5. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை - 600010.
6. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு - 603001.
7. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி - 627011.
8. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் - 641014.
9. அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் - 636030.
10. அரசு கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, திருச்சி - 620001.
11. அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி - 628008.
12. அரசு கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, ஆசாரிபள்ளம், கன்னியாகுமரி மாவட்டம் - 629201.
13. அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி, அடுக்கம்பாறை, வேலூர் - 632011.
14. அரசு தேனி மருத்துவக் கல்லூரி, தேனி - 625531.
15. அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி, தர்மபுரி - 701.
16. அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் - 610004.
17. அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் - 601.
18. அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை - 630561.
19. அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை - 606604.
20. அரசு மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் எஸ்டேட், சென்னை - 600002.
21. அரசு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை
22. தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை - 600003.
விண்ணப்பப்படிவங்கள் தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்கம், கீழ்ப்பாக்கம், சென்னை - 10ல் வழங்கப்படமாட்டாது.

எம்பிபிஎஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்..ஜுலை 8 கடைசி நாள்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல்  விநியோகிக்கப்படுகின்றன. 22 மருத்துவக் கல்லூரிகளிலும், ஒரு பிடிஎஸ் கல்லூரியிலும் மருத்துவ விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தளியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 3050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அசில இந்திய ஒதுக்கீடான 456 இடங்கள் போக எஞ்சியுள்ள 2594 இடங்கள் தமிழக அரசு ஒதுக்கிட்டின் மூலம் நிரப்பப்படுகிறது.
சுயநிதி கல்லூரிகளில் உள்ள 400 இடங்களில் 200 நிர்வாக இடங்கள் போக 200 இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்டுகிறது. பல் மருத்துவ கல்லூரியைப்  பொறுத்தவரை மொத்தமுள்ள 1910 இடங்களில் 720 நிர்வாக ஒதுக்கீடு போக மீதமுள்ள 1190 இடங்கள் தமிழக அரசு மூலம் நிரப்பப்படவுள்ளன.
இதனிடையே நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் 2,66,221 மாணவர்கள்  , 3,45,313 மாணவிகள்  5 திருநங்கைகள் என மொத்தம் 6,11,539 பேர் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதனையடுத்து மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. ஜூலை 7 வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றும்,  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப ஜூலை 8 கடைசி நாள் நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 17-ல் கலந்தாய்வு தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி செயல்முறைகள்-பி.லிட் மற்றும் DTEd முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக ஆவதற்கு தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள்

TRB PG EXAM | 02.07.2017 - CHIEF- ADL CHIEF - DEPT - ADL - DEPT DUTY ORDER MEETING - 28.07.2017

FLASH NEWS:-குறைந்த மாணவர்கள் உள்ள நடுநிலைப்பள்ளி துவக்கப்பள்ளி ஆக தரம் இறக்கப்பட்டு பட்டதாரிகளை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாற்ற அரசு திட்டம் விரைவில் ..


G.O 233 Date:22/6/17 - Medical Admission - Admission policy for MBBS/BDS course 2017-18.Allocation of seats for Student Studying in State board,CBSE and Other boards

G.O 233 Date:22/6/17 - Medical Admission - Admission policy for MBBS/BDS course 2017-18.Allocation of seats for Student Studying in State board,CBSE and Other boards...



BREAKING NEWS : 6,7,8 வகுப்புகளை கையாளாத மற்றும் பட்டதாரிகளை விட குறைந்த தரநிலை ஊதியம் பெறும் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு தரக்கூடாது - மதுரை உயர்நீதிமன்றம் ஆணை - JUDGEMENT COPY

திரு.த.உதயச்சந்திரன் IAS அவர்கள் RMSA பயிற்சியில் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்த அறிவுரைகள்

ஆசிரியர்கள் தங்களின் பாடங்களை எவ்வாறு மாணவர்களுக்கு நடத்த
வேண்டும்,ஆசிரியர்களின் கடமைகள் என்ன? என்பதை பற்றி-திரு.த உதயச்சந்திரன் IAS அவர்கள் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்த அறிவுரைகள்:

கண்டிப்பாக அனைத்து ஆசிரியர்களும் 01 மணி நேரம் ஒதுக்கி இந்த வீடியோவின் நான்கு பாகங்களையும் நன்றாக பாருங்கள் நிச்சயம் உங்கள் மனதில் மாற்றம் வரும்.மிகவும் அருமையான சமுதாய பற்றுடன் கூடிய பதிவு.
போற்றுதலுக்குரிய பள்ளிக்கல்வி முதன்மை செயலர் திரு. த.உதயசந்திரன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.  நூறு நாட்களில் பள்ளிக்கல்வித் துறையை  தலைநிமிரச்செய்தீர்கள்.அரசாணை எண் 99 மற்றும் 100.ஆகியவற்றை  செதுக்கிய விதம்.அதனை இந்த வீடியோவில் தாங்கள் எடுத்துரைத்த விதம் அருமை.

அதுதமிழக ஆசிரியர்களின்  மனதிலும் கல்வித்துறையிலும் மிகப்பெரிய மாற்றத்தினை உண்டாக்கும் என்பதில் மாற்றம் இல்லை.பள்ளிக்கல்வித் துறையில் நீங்கள் ஏற்படுத்த நினைக்கும் மாற்றங்கள் நிச்சயம் தமிழ் சமுதாய மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை வளர்க்கும்- மேலும் NTSE,NEET,IIT,JEE,IAS,IPS போன்ற போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள தேவையான பாடத்திட்டமும் பயிற்சியும் பள்ளி அளவில் வழங்க நினைக்கும் உங்களின் முயற்சிகள் நிச்சயம் வெற்றிபெறும்.
  • VIDEO PART I  (21:35 MINUTES) CLICK HERE
  • VIDEO PART II  (09:24 MINUTES) CLICK HERE
  • VIDEO PART III  (21:13 MINUTES) CLICK HERE
  • VIDEO PART IV  (14:30 MINUTES) CLICK HERE
  • தமிழை காக்கவேண்டிய பொறுப்பு தமிழகத்தில் ஒரு ஆங்கில ஆசிரியரின் கையில் உள்ளது.ஆங்கில ஆசிரியர்கள் வகுப்பறையில்.ஆங்கிலத்தை முறையாக கற்பித்தால் தமிழகத்தில் தமிழ் வாழும் என தாங்கள் கூறியது ஆச்சரியமே ஆனால் உண்மை. கடைசி மனிதனின் பயனுள்ள கருத்துக்களையும் உள்வாங்கி அவற்றையெல்லாம் தொகுத்து அதனை அடிப்படியாக கொண்டு செயல்திட்டங்களை அமைக்கும் தங்களின் மேலான வழிகாட்டுத்தல் போற்றுதலுக்குரியது. நீங்கள் கல்வித்துறையில் இன்று ஏற்றிய அகல் விளக்கு நிச்சயம் ஒருநாள் என் சமுதாயம் ஒளி பெரும் மிகப்பெரிய மகாதீபமாக மாறும் என்பதில் ஐயம் இல்லை.உங்களின் ஆணைக்காக காத்திருக்கும் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

உங்கள் வங்கி கணக்கு புத்தகங்களில் புதிதாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

நிறைய வங்கிகள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள்
கணக்குகளைக் குறுக்குப் பரிசோதனை செய்யக் கூடிய பணப் பரிவர்த்தனைகளின் போதுமான விவரங்களை வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் / அல்லது வங்கிக் கணக்கு அறிக்கைகளில் வழங்குவதில்லை என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சொல்கிறது.


ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI) வணிக வங்கிகள், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குப் புத்தகங்களின் போதுமான பணப் பரிவர்த்தனை விவரங்களை வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தியிருக்கிறது. 'சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வங்கிக் கணக்குகளில் இடப்படும் உள்ளீடுகள் தொடர்பான குறைந்தபட்ச விவரங்களை வழங்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவிக்கிறது.

இருந்தாலும், இப்போதும் நிறைய வங்கிகள் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளைக் குறுக்குப் பரிசோதனை செய்யக் கூடிய பணப் பரிவர்த்தனைகளின் போதுமான விவரங்களை வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் / அல்லது வங்கிக் கணக்கு அறிக்கைகளில் வழங்குவதில்லை என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சொல்கிறது.

வைப்புநிதி இன்சூரன்ஸ் காப்பீடு
வங்கிகள் 'வைப்புநிதி இன்சூரன்ஸ் காப்பீட்டு' விவரங்களுடன் காப்பீட்டு வரம்பு விவரங்களையும் கணக்குப் புத்தகங்களின் முன்பக்கத்தில் அளிக்க வேண்டும். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் இணையத்தளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, இந்தியாவில் இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும், வெளிநாட்டு வங்கிகளின் கிளைகளுக்கும் சேர்த்து, வைப்புநிதி காப்பீடு மற்றும் கடன் உத்திரவாத நிறுவனத்தினால் (DICGC) காப்புறுதி தரப்படுகிறது. ஒரு வங்கிக்கு நஷ்டம் ஏற்பட்டுத் தோல்வியடைந்தால், DICGC வங்கி வைப்புத் தொகைகளைப் பாதுகாக்கிறது. வங்கியில் வைப்புத்தொகை வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவர்/அவள் வைத்திருக்கும் அசல் மற்றும் வட்டி இரண்டிற்குமான அதே அளவுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை காப்பீடு செய்யப்படுகிறது.

ஆர்பிஐ சுற்றறிக்கை
ஜுன்22 தேதியிடப்பட்ட ஆர்பிஐ சுற்றறிக்கையில், வங்கிகள் கணக்குப் புத்தகத்தில் சேர்க்க வேண்டிய பணப் பரிவர்த்தனைகளின் விவரங்களை அளிக்கிறது. இங்கே சில விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:

மூன்றாம் தரப்பினருக்குப் பணம் செலுத்துதல்:
(i) பணம் பெறுபவரின் பெயர்,

(ii) பணப் பரிவர்த்தனையின் முறைமை, தீர்வாக வங்கி வணிக நடவடிக்கைகள், இடை - கிளை, ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி, ரொக்கம், காசோலை (எண்)

(iii) பணம் செலுத்தல் வங்கித் தீர்வகம்/வங்கியின் இடை கிளை பரிவர்த்தனை/ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி வழியே செய்யப்பட்டிருந்தால், பணப் பரிமாற்றம் செய்தவரின் பெயர்.

வங்கிக் கட்டணங்கள்:
(i) பரிவர்த்தனையின் தன்மை - கட்டணம்/தரகு/அபராதம்/தண்டனைத் தொகை மற்றும் பல.
(ii) கட்டணங்களுக்கான காரணங்கள், விரிவாக - உதாரணமாக. காசோலை திருப்பம் (எண்), வெளியிடப்பட்ட வரைவோலைக்கான தரகு/கட்டணம்/பணம் அனுப்புதல் (எண்), காசோலை சேகரிப்புக்கான வசூல் கட்டணங்கள் (எண்), காசோலை புத்தகம் வழங்கல், குறுஞ்செய்தி எச்சரிக்கை, ஏடிஎம் கட்டணங்கள், கூடுதல் பணத்தைத் திரும்பப் பெறுதல், மற்றும் பல..

தவறாகப் பெறப்பட்ட வரவுத் தொகைகளைத் திரும்பச் செலுத்துதல்:
(i) வரவு நுழைவு திருப்பிச் செலுத்தப்பட்ட தேதி

(ii) திருப்பிச் செலுத்தியதற்கான காரணங்கள், விரிவாக.

கடன்/கடன் மீது வட்டி ஆகியவற்றின் தவணை மீட்பு:

(i) கடன் கணக்கு எண்

(ii) வங்கிக் கடன் கணக்குதாரரின் பெயர்.

நிலையான வைப்புத் தொகை/தொடர்ந்த வைப்புத் தொகை உருவாக்கம்: நிலையான வைப்புத் தொகை/தொடர்ந்த வைப்புத் தொகை வங்கிக் கணக்கு/ரசீது எண்

(ii) நிலையான வைப்புத் தொகை/தொடர்ந்த வைப்புத் தொகை வைத்திருப்பவரின் பெயர்.

POS-ல் பரிவர்த்தனை (விற்பனை புள்ளி):

(i) பரிவர்த்தனை தேதி, நேரம் மற்றும் அடையாள எண்

(ii) POS இன் அமைவிடம்
பண வைப்பு
(i) அது 'பண வைப்பு' என்பதைச் சுட்டிக்காட்டும்

(ii) பண வைப்பீட்டாளரின் பெயர் - தன்னுடைய/மூன்றாம் தரப்பு.

மூன்றாம் தரப்பிலிருந்து ரசீது:
(i) பணம் அனுப்பியவர்/பணம் மாற்றியவர் பெயர்

(ii) பரிவர்த்தனையின் - தன்மை, இடை கிளை, ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி, ரொக்கம், மற்றும் பல.


(iii) பணம் செலுத்தல் வங்கியின் இடை கிளை பரிவர்த்தனை/ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி வழியே பெறப்பட்டிருந்தால், பணப் பரிமாற்றம் செய்தவரின் பெயர்.

Cursive Writing For Beginners | Writing Cursive Alphabets : Capital | Cursive Handwriting Practice

26/6/17

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை முதல் வினியோகம் !!!

எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார்
நிலையில் உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனர் தெரிவித்தார்.

எம்.பி.பி.எஸ்., — பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மே, 7ல், ‘நீட்’ தேர்வு நடந்தது. தமிழகத்தில், 88 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ளன.
மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறியதாவது:

பிளஸ், 2 தேர்வு முடிவுகள், நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில், வழிகாட்டு ஏடு மற்றும் விண்ணப்பங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும், 27ம் தேதி முதல் வினியோகிக்கப்படும். மாநிலத்தில் உள்ள, 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை ஜூலை, 7ம் தேதி மாலை 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 8 மாலை 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்ப படிவங்கள் பெற, ‘செயலாளர், தேர்வு கமிட்டி, கீழ்ப்பாக்கம், சென்னை’ என்ற பெயரில், 500 ரூபாய்க்கான வரைவோலை (டி.டி.,) எடுக்க வேண்டும். சுயநிதி தனியார் கல்லுாரிகளுக்கான விண்ணப்பத்துக்கு, 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு இலவசம்; மாணவர்கள் அதற்கான ஜாதி சான்று நகலை வழங்க வேண்டும்.

அரசுமற்றும் தனியார் கல்லுாரிகளுக்கான விண்ணப்ப விபரங்கள் குறித்து விண்ணப்பத்தின் முகப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும். விண்ணப்பங்கள் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணிவரை வினியோகிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் தட்டுப்பாடு இல்லாமல் படிவங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பங்கள் அனைவருக்கும் வழங்கப்படும். மாணவர்கள் நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை. மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க வேண்டியதில்லை. ஜூலை, 14ம் தேதி தரப்பட்டியல் வெளியிடப்படும். விண்ணப்பங்களுக்கான டி.டி., எடுப்பதற்கு அந்தந்த மருத்துவக் கல்லுாரிகளில் வங்கிகளின், சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

சிறுபான்மை மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு, ஆகஸ்ட், 31 வரை விண்ணப்பிக்கலாம்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது. !!!

சிறுபான்மை மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு,
ஆகஸ்ட், 31 வரை விண்ணப்பிக்கலாம்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்ப பதிவு, ஜூன், 1ல் துவங்கியது; ஆக., 31 வரை விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை பெற, மத்திய, மாநில அரசு நடத்தும் தேர்வுகளில், குறைந்தபட்சம், 50 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். மாணவர்கள், www.scholarships.gov.in என்ற இணையதளத்திலும், www.minorityaffairs.gov.in என்ற இணையதள இணைப்பு மூலமும்விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ விடுப்பு எடுத்தால் அதற்கு இணையாண ஈட்டிய விடுப்பு நாட்களை கழிப்பது பற்றிய விளக்கம்

தொகுப்பூதிய வழக்கு தொடுக்க காரணங்கள், தொகுப்பூதிய கால இழப்புகள் மற்றும் அரசமைப்பு விதிகள்



தொடக்கக்கல்வி செயல்முறைகள் - நாள்:23/6/17-மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்கள் இயக்குனரிடம் தெளிவுரை கேட்டல் என்ற பெயரில் காலம் கடத்தாமல் உடனடி முடிவெடுக்க இயக்குனர் உத்தரவு

தொடக்கக்கல்வி செயல்முறைகள்-பி.லிட் மற்றும் DTEd முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக ஆவதற்கு தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள்

அரசுப் பள்ளியில், தாய் மொழி வழிக் கல்வியில் படியுங்கள்..! - சீன தமிழ் விஞ்ஞானியின் ஆலோசனை

அவன்பெயர் சரவணன். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பக்கம் ஒரு சிறு கிராமம். சிறு கிராமத்தில் வசித்தாலும் நில புலன்கள் ஏராளம். வசதிக்கும் குறைவில்லை. இன்னும் அவர்கள் நிலத்தின் ஒரு பகுதியில், அவர்கள் சொந்த
தேவைக்கென்று இயற்கை விவசாயம் செய்வதால், அந்த இடத்திற்கு பறவைகள் அதிகமாக வரும். அதனால் இயல்பாக அவனுக்கு பறவைகள் மீது ஈர்ப்பு அதிகம். பறவைகளுடன் பேசுவான், விளையாடுவான். மனிதர்களிடமிருந்து எப்போதும் விலகி இருக்கவே விரும்பும் பறவைகளும், அவனுடன் விளையாடும்.'


இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

Why do you bother ? The Plague killing Democracy
பறவைகள் மீது கொண்ட அலாதி காதலால், அவனுக்கு பறவையியல் (Ornithology) படிக்க வேண்டுமென்று விருப்பம் வந்தது. இந்த விருப்பம் வந்த போது, அவன் ஓசூரில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் எட்டாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். இணையத்தில் எப்படியோ தேடி சலீம் அலி மையத்தை பற்றியும் தெரிந்து கொண்டான்.

ஆனால், அவன் பெற்றோர்களுக்கு எப்போதும் பறவைகளை பிடித்ததில்லை. தங்கள் நிலத்தில் விளையும் சோளப் பயிர்களை சிதைக்கும் வில்லன்கள்தான் பறவைகள். இந்த புரிதலுடன் அணுகியதால், அவர்களால் பறவைகளையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை, பறவைகளின் காதலனான சரவணனையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் மருத்துவர் ஆக வேண்டுமென்று அழுத்தம் கொடுத்தார்கள். கல்வி நிலையமும் அவன் பெற்றோருடன் இணைந்து கொண்டது. அவனால் அழுத்தங்களை தாங்க முடியவில்லை. முதலில் வீட்டார்களுடன் பேசுவதை நிறுத்தினான். பின் பள்ளியையும், பெற்றோரையும் பழி வாங்க எண்ணி, பத்தாவது வகுப்பில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்தான்.

சமீபத்தில் அவனை ஒரு பேருந்து பயணத்தில் சந்தித்தேன். இறுக்கமான ஒரு மெளனத்திற்கு பின், அவன் பேசினான். பறவைகளை குறித்து துவங்கிய நிறைய பேசினான். அவன் இறங்க வேண்டிய நிறுத்தம் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்போது அவன், “ உங்களுக்கு மிகவும் பிடித்தவர்களை நீங்க கொல்லுவீங்களா சார்..? " என்றான். “நிச்சயம் முடியாது... என்னால் மட்டுமல்ல எவராலும் முடியாது...” என்றேன். " இல்லை சார்... அதெல்லாம் ச்சும்மா... இங்க எல்லாரும் அவங்களுக்கு மிகவும் பிடிச்சவங்களை தினமும் கொன்னுட்டுதான் இருக்கிறாங்க.... கொல்றதுன்னா ரத்தம் தெறிக்க கொல்றது இல்ல சார்... அவங்க கனவுகளை கொல்றது... என்னை என் பெற்றோர் கொன்ன மாதிரி...” என்றவன், தன் நிறுத்தம் வந்ததும் இறங்கிச் சென்றுவிட்டான்.

ஆம், உண்மைதானே..? ஒருவரின் வாழ்வென்பது அவர்களின் கனவுகளால் கட்டமைக்கப்பட்டது. அந்த கனவுகளைக் கொன்றால், அவர்கள் உயிர் வாழ்வார்கள்தான். ஆனால், அது அவர்கள் வாழ்வாக இருக்காது.

சரிகட்டுரைக்கு வருவோம். இது கல்வி குறித்த ஆளுமைகளுடனான உரையாடலின் மூன்றாவது பகுதி.

விஜய் அசோகன். ஒரு சிறு கிராமத்தில், மத்திய தர குடும்பத்தில் பிறந்தவர். மத்திய தர குடும்பத்திற்கே இருக்கும் அபிலாஷைகளை எதிர் கொண்டவர். கடும் காதலால் (ஆம். முயற்சி என்ற சொல்லை வெறுக்கிறார்) ஆராய்ச்சியாளராக உயர்ந்தவர். நானோ தொழிற் நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். இப்போது சீனாவில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவை மட்டும் அவர் அடையாளங்கள் அல்ல. இவர் தொடர்ந்து அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும், தமிழ் வழிக் கல்விக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.

அவருடனான உரையாடலில் இருந்து...


கல்வி குறித்து, அறிவு தளத்தில் உங்களின் தொடர் செயல்பாடுதான், உங்களை பேட்டி எடுக்க என்னை தூண்டியது. உங்களை போன்ற ஆராய்ச்சியாளர்கள், அரசுப் பள்ளி, தாய்மொழி வழிக் கல்வி போன்ற விஷயங்களில் மெளனம் காக்கின்றபோது, உங்களுக்கு இதில் இயங்க வேண்டும் என எப்படி விருப்பம் வந்தது...?

என்பெற்றோர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரமும்... பின் நான் படித்த தனியார் பள்ளியும்தான் முதன்மையான காரணங்கள்.

என்னதனியார் பள்ளியா...?

ஆம். அங்கு நான் பெற்ற சில கசப்பான அனுபவங்கள்தான். என்னை அரசுப் பள்ளிக்காக குரல் கொடுக்க தூண்டுகிறது என நினைக்கிறேன். ‘பாருங்க... இவனுங்க நல்லா தனியார் பள்ளியில் படிச்சிட்டு நம்மை அரசு பள்ளியில சேருங்கன்னு புத்தி சொல்ல வந்துடுறாங்க...’ என்று எண்ணாதீர்கள். நான் என் பள்ளி வாழ்க்கையை தனியார் பள்ளியில் துவங்கினாலும், நான் அங்கு தொடரவில்லை. அந்தப் பள்ளி என்னிடம் இருக்கும் பிற ஆற்றல்களை பார்க்காமல், கல்வியை திணிப்பதை மட்டுமே தன் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. நான் சுதந்திரமாக சிந்திப்பதை, அப்பள்ளி விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் எனக்கும் பள்ளிக்குமான இடைவெளி மனதளவில் தொலைவாகியாது. நல்லவேளையாக எனது அப்பா என்னை புரிந்துகொண்டார். அங்கிருந்து வெளியேறி என் படிப்பை அரசு பள்ளியில் தொடர்ந்தேன்.

உங்கள் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்...?

எனக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகன் கவின் திலீபனுக்கு ஆறு வயது. இரண்டாவது மகன் கதிர் நிலவனுக்கு நான்கு வயது. இன்னும் இருவரையும் பள்ளியில் சேர்க்கவில்லை. ஆறு வயதில்தான் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். அடுத்த மாதம் நான் சீனாவிலிருந்து வருகிறென். என் மனைவி தன் ஆராய்ச்சி படிப்பில் அடுத்த மாதம் கோவையில் சேர உள்ளதால், அந்த பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசுப் பள்ளியில் நிச்சயம் சேர்த்துவிடுவேன்.

உங்கள் வீட்டில் புரிந்து கொள்கிறார்களா...?

முதலில் என் மனைவிக்கு சில தயக்கங்கள் இருந்தன. ஆனால், எங்களுக்கிடையேயான உரையாடல் அந்த தயக்கத்தை சரி செய்தது. ஆனால், சுற்றத்தாரின் பார்வைதான் மிக மோசமானதாக இருக்கிறது. 'அரசுப் பள்ளியில் சேர்க்கப் போகிறோம்' என்று சொன்னால் மிக பரிதாபமாக பார்க்கிறார்கள். நாங்கள் ஏதோ பணத்தை சேமிப்பதற்காக இது போல் செய்கிறோம் என்றும், வறட்டுப் பிடிவாதம் என்றும் பரிகாசம் செய்கிறார்கள். எங்களிடம் அந்த கிண்டல் பேச்சுகள் வந்தால், அதற்கு நாங்கள் உரிய எதிர்வினையை ஆற்றிவிடுவோம். ஆனால், எங்கள் குழந்தைகளிடம் எடுத்துச் சென்றார்கள் என்றால்...? இந்த பரிகாசங்கள் அவர்களை எவ்வளவு உளவியல் ரீதியாக பாதிக்கும்...? இதுதான் அச்சமாக இருக்கிறது.

உண்மையை சொல்லுங்கள்... தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் நன்றாகவா இருக்கிறது....?

100 சதவீதம் நன்றாக இருக்கிறது என்பது என் வாதம் அல்ல. இங்கு தனியார் பள்ளிகளும் நூறு சதவீதம் தரமாக இருக்கவில்லையே...? அரசு பள்ளிகளில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், அதை புறக்கணிப்பதன் மூலம் சரி செய்து விட முடியாது. அரசுப் பள்ளிகளை நாம் மறுப்பதன் மூலம், கல்வி அளிப்பது அரசின் கடமை என்பதையும் மறுக்கிறோம். அரசுப் பள்ளிகளில் நம் பிள்ளைகளை சேர்த்து, அரசை கேள்வி கேட்பதன் மூலம்தான் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முடியும்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இங்கு தனியார் பள்ளிகள் அனைத்தும் தரமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் இயங்குவதில்லை.பெரும்பாலான தனியார் பள்ளிகள் விளையாட்டு மைதானம் இல்லாமல் தான் இயங்குகின்றன. தீப்பெட்டி போன்ற வகுப்பறைகள்... இவ்வளவு இறுக்கத்தில் குழந்தைகள் படித்தால், அவர்களின் சிந்தனை திறன் எப்படி வளரும்...? தனியார் பள்ளிகளில் 1 சதவீதம்தான் அனைத்து வசதிகளுடன் தரமாக இருக்கின்றன. அது பெரும் பணக்காரர்களுக்கான இடமாக இருக்கிறது. இந்த கணக்குடன் ஒப்பிட்டு பார்த்தால், பெரும்பாலான அரசு பள்ளிகள் தரமானதாக இருப்பதாக தோன்றுகிறது.

மீண்டும் சொல்கிறேன். அரசுப் பள்ளிகளை புறக்கணிப்பதன் மூலம், அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியாது.

ஹூம்... புரிகிறது. நீங்கள் தமிழ் வழிக்கல்வி குறித்தும் தொடர்ந்து எழுதி, பேசி வருகிறீர்கள்தானே...?

தமிழ் வழிக் கல்வியாக சுருக்கி பார்க்காதீர்கள். தாய் மொழி வழிக் கல்வி என்று அதனை பாருங்கள். இயல்பாக தாய்மொழி வழிக் கல்வியில் படித்தால், குழந்தைகளின் சிந்தனை திறன் வளரும். இதனை நான் மேம்போக்காக சொல்கிறேன் என்று எண்ணி விடாதீர்கள். நான் ஐரோப்பாவில் ஏழு ஆண்டு காலம் வசித்திருக்கிறேன். சீனாவில் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறேன். அங்கு குழந்தைகள் தங்கள் தாய் மொழியில்தான் படிக்கிறார்கள். அதனால்தான் விஞ்ஞானத்தில் அவர்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கிறது.

ஆனால், இந்த நவீனச் சூழலில் ஆங்கிலம் இல்லாமல் எப்படி சமாளிக்க முடியும்...?

இதுதான் நம்மிடம் இருக்கும் பிரச்னையே. தாய் மொழி வழிக் கல்வியில் படிப்பதென்பது பிற மொழிகளை புறக்கணிப்பதல்ல. ஆங்கிலம், ஜெர்மானிய மொழி, சீனம் என உங்களுக்கு விருப்பமான மொழிகளை எல்லாம் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் பள்ளிக் கல்வியை, அறிவியலை, உங்கள் தாய் மொழிக் கல்வி ஊடாக படியுங்கள். அப்போதுதான் நம் மண்ணிற்கு தேவையான படைப்புகள் வரும்.

இதைத்தாண்டி அரசுப் பள்ளிகளை ஆதரிப்பதற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா...?

உண்மையாக குழந்தைகள் தம் கனவுகளின் கரம் பிடித்து வளரும் இடமாக அரசுப் பள்ளிகள் மட்டும்தான் இருக்கின்றன. பாடப் புத்தகத்தை தாண்டி அவர்களால் அங்குதான் நிறைய சிந்திக்க முடிகிறது என்பது என் அனுபவத்தின் ஊடாக நான் கண்ட உண்மை. நாம் அனைவரும் கரம் கோர்த்து அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக குரல் கொடுத்தால், நிச்சயம் அங்கு படிக்கும் மாணவர்கள் சமுகத்திற்கு அளப்பெரிய பங்களிப்பை அளிப்பார்கள்.

அதுமட்டுமல்லாமல், அரசு பள்ளியில் படிக்கும் போது, குழந்தைகள் மீதான பொருளாதார அழுத்தங்கள் குறைகின்றன. இதனால் அவர்களால் சுதந்திரமாக இயங்க முடிகிறது. சுதந்திரமான மனநிலையில் இருப்பவர்களால்தான், நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

சரி. எப்படி அரசு பள்ளிகளை மேம்படுத்துவது...?

உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்தால் என்ன செய்வீர்கள்... மாதம் ஒரு முறையாவது ஆசிரியர்களை சந்திப்பீர்கள்தானே...? ஆசிரியர்களிடம் சந்தித்து உரையாடுங்கள். பள்ளியில் ஏதேனும் சிக்கல் இருந்தால், மாவட்டக் கல்வி அலுவலரை சென்று சந்தியுங்கள். அரசியல் இல்லாமல் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டும் கணக்கில் கொண்டு பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தை கட்டமையுங்கள்.

இதையெல்லாம் தாண்டி, ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியம். ஆனால், துரதிருஷ்டமாக ஆசிரியர்களின் பங்களிப்பு கவலை அளிப்பதாக இருக்கிறது. அனைத்து ஆசிரியர்களையும் குறைகூறிவிட முடியாது என்றாலும், பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பை உணரவில்லையோ என்றுதான் தோன்றுகிறது.


அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான போராட்டங்களை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முன்னெடுத்தால், நிச்சயம் மாற்றங்கள் வியக்கத்தக்கதாக இருக்கும்.

அன்புள்ள கணித ஆசிரியருக்கு...

நீங்கள் ஒரு மாணவரின் கல்வியில் மிக முக்கியமான பங்கு வகிப்பவர். கணிதமே வாழ்கைக்கு ஆதாரம். உயர் அறிவியல், கண்டுபிடிப்பு, பொருளாதாரம் என எந்த துறைக்கு சென்றாலும் அங்கே கணக்கு பிணைந்திருக்கும்.

சரி, கடிதத்தின் சாரத்திற்கு வருகிறேன். “நான் ஒரு கணக்கு பைத்தியம்” என்ற சின்ன கணிதத்தொடரினை எழுத ஆரம்பித்தபோது ”ஏன் கணிதம் உங்களுக்கு பிடிக்கின்றது? ஏன் கணிதம் உங்களுக்கு பிடிக்கவில்லை?” என்ற கேள்வியை எழுப்பினேன். இரண்டிலும் முதன்மையானதாக வந்த பதில் “ஆசிரியர்” என்பதே. பிற பதில்களும் வருத்தங்களும் இருந்தாலும் தற்சமயம் அதனை விட்டுவிடுவோம்.

ஏன்சிரமமாகின்றது?
1. *காட்சிப்படுத்துதல்*
படிக்கும் கணிதங்களையும் சூத்திரங்களையும் காட்சி படுத்த முடிவதில்லை. அறிவியலை அவன் எப்படியேனும் காட்சிப்படுத்திவிடுகின்றான், நிஜத்தில் பார்க்கின்றான், உணர்கின்றான் ஆனால் கணிதத்தை அவன்/அவள் காட்சிபடுத்துவதில்லை. பாடங்களில் உதாரணங்களைக் கொண்டு விளக்கினாலும் அவனால் அதனை காட்சிப்படுத்த முடியாமல் திணறுகின்றான்.

2. *தொடர்புபடுத்த முடிவதில்லை*
படிப்பவற்றை அவனால் தொடர்புபடுத்த முடிவதில்லை. ஏன் பயன்படுத்துகின்றோம் எங்கே பயன்படுத்தபடுகின்றது என்ற எந்த ஒரு தெளிவோ குறைந்த அறிவோ கிடைப்பதில்லை.

இவைஇரண்டுமே மிக முக்கியமான காரணங்களாக தங்களை தூர விலக வைக்கின்றன.

வகுப்பறைகளில் என்ன செய்யலாம்?
1. *காட்சிப்படுத்தல் முயற்சி*
இதுஆசிரியரின் கற்பனைக்கு உட்பட்டது. அதனை தொழில்நுட்பம் கொண்டு எளிமையாக காட்சிப்படுத்தலாம் அல்லது வகுப்பறைகளில் அந்த மாயத்தினை நிகழ்த்திக்காட்டலாம்.

2. *பயன்பாட்டு விளக்கம்*
கணிதம் எப்படி தொடர்ச்சியாக பயன்பட்டு வருகின்றது என விளக்கிக்கொண்டே இருக்க வேண்டும். தினசரி வாழ்வில் என்ன கணிதம் இருக்கு என கூற வேண்டும். தினசரிகளில் காணப்படும் கணிதம் என்ன என்று விளக்கலாம். ஒரு பாலத்தினைப்பார்த்தால் ஏன் அது அந்த வடிவில் இருக்கு அதில் இருக்கும் கணிதம் என்ன என்று விளக்கலாம். அளவீடுகளில் அவர்களை நேரடியாக களம் காணச்செய்யலாம். ஒரு லிட்டர் என்றால் எவ்வளவும், ஒரு கி.மீட்டர் என்றால் எவ்வளவு தூரம், ஒரு கிலோ என்றால் எவ்வளவு எடையுள்ளது என தங்கள் உணர்வுகள் மூலம் புரிந்துகொள்ளவேண்டும். இது ஒரு நெருக்கத்தினை எண்கள் மீதும் கணிதம் மீது ஏற்படுத்தும்.

3. *கணக்குகளை உருவாக்கச்சொல்லுங்கள்*
ஒருகணித வகுப்பில் கணக்கிற்கு தீர்வு மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கின்றோம். ஏன் அவர்களை கணக்குகளை உருவாக்க வைக்கக்கூடாது? தினசரி வாழ்வில் இருக்கும் கணக்குகளை அவர்கள் உருவக்க வேண்டும்.
இதுகல்வியை அசைத்துப்பார்க்கும் முயற்சியும் கூட. நம் கல்வி யாரோ ஒருவர் சொல்ல அதற்கு ஏற்ப வேலை செய்யவே திட்டமிடப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட Consumer Education நம் பிரச்சனைகளை நாம் பார்த்து அதற்கான தீர்வுகளை தொழில்நுட்பம் + அறிவியல் அனுபவங்களை பயன்படுத்துவதே இல்லை. ஆகவே பிரச்சனைகளையும் கணக்குகளையும் அவர்களே உருவாக்கட்டும்.

4. வகுப்பறை ஆரம்பிக்கும் முன்னர் ஒரு ஐந்து-பத்து நிமிடம் புத்தகத்தில் இல்லாத கணிதம் பற்றிய உரையாடலை முயற்சி செய்யலாம். புதிர்கள். கணித ஆளுமைகளைப் பற்றிய நிகழ்வுகள். கணித வரலாறு. எண்களின் வரலாறு. உலக அளவில் எப்படி கணிதம் வளர்ச்சி கண்டுள்ளது என பேச ஏராள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

அட ஆறாவது வகுப்பு சதவிகிதம் பற்றி எடுக்க வேண்டும் அவ்வளவு தானே என்ற தொனியில் வகுப்பறைக்குள் சென்றால் அதே எனர்ஜியே வெளிப்படும். ஒவ்வொரு ஆசிரியருக்கு தனக்கான சவாலை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இன்று எப்படி புதிதாக கற்றுத்தரப்போகின்றேன், எதனை புதிதாக கற்கப்போகின்றோம் என்ற ஆவலுடனும் உற்சாகத்துடனும் வகுப்பிற்குள் நுழைய வேண்டும். சொன்னதையே திருப்பித்திருப்பி சொல்வதென்றால் அதற்கு ஒரு வீடியோ போதுமே. இன்னும் சிறப்பாக அது அந்த காரியத்தை செய்து முடிக்கும்.

5. *தொழில்நுட்ப பயன்பாடு*
இணையம், சமூக வலைத்தளங்கள் ஆகிய தொழில்நுட்ப வளர்ச்சியினை சரியாக பயன்படுத்தி தங்களுக்குள் ஒரு இணைப்பினை ஏற்படுத்தி வகுப்பறைகளில் செய்யும் முயற்சிகளை சக ஆசிரியர்களிடம் பகிர்வது, மேலும் முயற்சிகளை பெறுவது, அனுபவம் மூலம் மேலும் மாணவர்களை மகிழ்வூட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபடலாம்.

இன்னும் இன்னும் நிறைய செய்யலாம்.

பேரன்புடன்,

விழியன்

படிச்சா படிங்க...! படிக்காட்டி போங்க...!


திரும்பும் திசையெல்லாம் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் விளம்பர பதாகைகளும், சுவரொட்டிகளும் தான் தென்படுகின்றன.

காசுக்கு கலவி செய்யும் கூட்டமொன்று கல்வியின் தரம் பற்றி காணொளி ஊடக விளம்பரங்களில் நொடிக்கு நொடி அபச்சாரமாய் விபச்சாரம் செய்கின்றன.

எங்கள் பள்ளியில் அது இருக்கு...
எங்கள் கல்லூரியில் இது இருக்கு என்றும், மண்ணைப் பொன்னாக்கி உங்கள் குடிசையை கோபுரமாக்குவோம் என்றும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க அப்பாவிகளை நோக்கி கவர்ச்சித்தூண்டில்கள் வீசப்படுகின்றன.

மூன்று வயது குழந்தையின் மூளைக்குள் ஆறு வயது குழந்தையின் அறிவை, அறுவை சிகிச்சை செய்தாவது திணித்துவிட வேண்டும் என்ற அவசரமும், பேராசையும் கொண்ட பெற்றோர்களும்....

படிக்காமல் பட்டம் பெற்று, உழைக்காமல் உயர்ந்து விடத் துடிக்கும் இளைஞர்களின் கூட்டமும் இந்த கவர்ச்சித் தூண்டில்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிஉலகில் தங்களை கலியுக காமராசர்களாக காட்டிக்கொண்டு உள்ளுக்குள் கல்வியை காசாக்கிவிடத் துடிக்கும் கயவர்களிடம்....

கசாப்புக் கடை முதலாளிகளிடம் காசை வாங்கிக்கொண்டு கறிக்கு சினை ஆட்டைக் கூட விற்கும் மந்தையின் சொந்தக்காரனைப் போல் இந்த கல்வி வியாபாரச் சந்தையில் முதலாளிகளிடம் பெட்டிகளை வாங்கிக்கொண்டு நம் அடுத்த தலைமுறையை விற்றுக்கொண்டிருக்கின்றன பகட்டு விளம்பரங்களால் ஆட்சியை பிடித்த அரசுகள்.

# இதனால் பாதிக்கப்படப் போவது இளைஞர்களின் எதிர்காலம் மட்டுமல்ல...
இளைஞர்களின் எண்ணிக்கையை மட்டுமே பெரும் சக்தியாக நம்பிக் கொண்டிருக்கும் இந்தியாவின் எதிர்காலமும் தான் என்பதை அரசுகளும் நாமும் உணர்ந்து திருந்தாதவரை அழிவுப் பாதையில் நடைபோடும் கல்வியின் கால்களை தடுத்து நிறுத்த வழியேயில்லை....


ச.தாஸ்

இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் இன்னும் ஆயிரம் பிறை கண்டு கொண்டாட என் வாழ்த்துக்கள் !