யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/2/18

AIL நிறுவனத்தில் 382 காலியிடங்கள் Steel Authority of India Limited (SAIL) நிறுவனத்தில் பணிகள்



பணி: Management Trainee (Technical)

காலியிடங்கள்: 382

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பிரிவுகள்:

Mechanical Engineering (ME)  

Metallurgical Engineering (MT)

Electrical Engineering (EE)

Chemical Engineering (CH)

Instrumentation Engineering (IN)

Mining Engineering (MN)

கல்வித்தகுதி: Mechanical, Metallurgy, Electrical, Chemical, Instrumentation, Mining ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் BE  முடித்திருக்க வேண்டும்.

வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.sailcareers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.2.2018

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் உதவியாளர் பணிகள்


திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் 73 உதவியாளர் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவியாளர் 

காலியிடங்கள் : 73

வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tiruppur.tn.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து  அதனுடன் அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல இணை இயக்குநர்,

4/583, பல்லடம் ரோடு,

வீரபாண்டி பிரிவு,

திருப்பூர் – 641 605

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 9.2.2018

கூடுதல் தகவல்களுக்கு http://tiruppur.tn.nic.in/dept_pdf/ahvs.pdf

லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணி


சென்னையில் இயங்கி வரும் லக்ஷ்மி விலாஸ் வங்கியில் Chief Financial Officer  பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணி: Chief Financial Officer

பணியிடம்: சென்னை

கல்வித்தகுதி: CA தேர்ச்சி பெற்று 15 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டா, புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் secretarial@lvbank.in என்ற இமெயில் முகவரிக்கு அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Lakshmi Vilas Bank Limited Corporate Office,

Secretarial Department,

"LVB House",

No.4, Sardar Patel Road,

Guindy, Chennai - 600 032.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 14.2.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.lvbank.com/UserFiles/Post%20of%20CFO.pdf



டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிகள்


தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 88

பணி மற்றும் காலியிட விபரம்:

(SC/ST பிரிவினர்களுக்கு மட்டும்)

பணி: Asstt Manager/Finance

காலியிடங்கள்: 02

பணி: Asstt Manager/Corporate Communication

காலியிடங்கள்: 1

பணி: Asstt Manager/Legal

காலியிடங்கள்: 01

பணி: Asstt Manager/Safety

காலியிடங்கள்: 01

Section - ‘B’ - Regular-Non-Executive பிரிவு பணிகள்

பணி: Station Controller/ Train Operator (SC/TO)

காலியிடங்கள்: 50

பணி: Maintainer Electronic Mechanic

காலியிடங்கள்: 29

Section - ‘C’ - Non-Executive Category Posts

பணி: Stenographer

காலியிடங்கள்: 02

பணி: Account Assistant

காலியிடங்கள்: 01

பணி: Office Assistant

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்ள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.delhimetrorail.com  என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில்  விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.250.  இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2018

கூடுதல் தகவல்களுக்கு https://www.digialm.com/EForms/pdf/onlineAppForm/form54967/DMRC_Notification2018.pdf 

விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பணிகள் விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


பணி: Management Trainees

சம்பளம்: 20,600 – 46,500

வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: BE/B.Tech முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

GATE 2018 மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.500. SC/ST பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.vizagsteel.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் மற்றும் அனைத்து சான்றுகளையும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.2.2018

கூடுதல் தகவல்களுக்கு www.vizagsteel.com

விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பணிகள்

விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணி: Management Trainees

சம்பளம்: 20,600 – 46,500

வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

GATE 2018 மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.500. SC/ST பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.vizagsteel.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண

+2 தகுதிக்கு Balmer Lawrie நிறுவனத்தில் பணிகள்


Balmer Lawrie  நிறுவனத்தில் 42 Field Executive (Customer Clearance) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advt No : BA/TL/LS/FE(CC)/01

பணி: Field Executive (Customer Clearance)

காலியிடங்கள்: 42

கல்வித்தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: கொல்கத்தா & சென்னை

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.balmerlawrie.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.02.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.balmerlawrie.com/files/uploads/1517214629web_ad__apprentices_field_executive_customs_clearance.pdf




I Would like to share this with you. Here You Can Download This velai vaaippu (வேலை வாய்ப்பு )Application from PlayStorehttps://play.google.com/store/apps/details?id=com.akshayam.velaivaaippu
[7:07 PM, 2/3/2018] Tr.RajendranDindukal: தேசிய நியூட்ரிஷன் மையத்தில் பணிகள்
ஹைதராபாத்தில் உள்ள “National Institute of Nutrition”-ல் பணிகள்

Advt. No.: 58/Projects/2017

பணி: Research Assistant (Nutrition)

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி: Food & Nutrition/ Home Science பாடப்பிரிவில் இளநிலை  பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 31,000

பணி: Research Assistant (Social Work/ Sociology)

காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: Social Work/ Sociology பாடப்பிரிவில் இளநிலை  பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 31,000

பணி: Field Worker

காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் MLT/PMW/Radiology/Radiography பாடப்பிரிவில் 2  வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் DMLT முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 18,000

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 8.2.2018 

பணி: Data Entry Operator (DEO):

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் DOEACC ‘A’ நிலை சான்று பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு மணி நேரத்திற்குள் 8000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 18,000

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 9.2.2018

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு/ஸ்கில்டு தேர்வு/நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது www.icmr.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க  வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

Head of the Department of Social Work,

Gulbarga University,

Gulbarga – 585 106
[7:09 PM, 2/3/2018] Tr.RajendranDindukal: 
தேசிய நியூட்ரிஷன் மையத்தில் பணிகள் ஹைதராபாத்தில் உள்ள “National Institute of Nutrition”-ல் பணிகள்  Advt. No.: 58/Projects/2017  பணி: Research Assistant (Nutrition)  காலியிடங்கள்: 2  கல்வித்தகுதி: Food & Nutrition/ Home Science பாடப்பிரிவில் இளநிலை  பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  சம்பளம்: 31,000  பணி: Research Assistant (Social Work/ Sociology)  காலியிடங்கள்: 02  கல்வித்தகுதி: Social Work/ Sociology பாடப்பிரிவில் இளநிலை  பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  சம்பளம்: 31,000  பணி: Field Worker  காலியிடங்கள்: 02  கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் MLT/PMW/Radiology/Radiography பாடப்பிரிவில் 2  வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் DMLT முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  சம்பளம்: 18,000  நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 8.2.2018   பணி: Data Entry Operator (DEO):  காலியிடங்கள்: 1  கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் DOEACC ‘A’ நிலை சான்று பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு மணி நேரத்திற்குள் 8000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.  வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.  சம்பளம்: 18,000  நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 9.2.2018  தேர்ந்தெடுக்கப்படும் முறை:  எழுத்துத்தேர்வு/ஸ்கில்டு தேர்வு/நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது www.icmr.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க  வேண்டும்.  நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:  Head of the Department of Social Work,  Gulbarga University,  Gulbarga – 585 106

INCOME TAX 2019 - சம்பளதாரர்கள் ரூ.40,000 வரிவிலக்கு பெற ஆவணம், ரசீது தாக்கல் செய்ய தேவையில்லை :

வருமானவரி விதிப்பு முறையில் நிலையான கழிவுத் திட்டம் கடந்த 1974-ம் ஆண்டுஅறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, மருத்துவம் மற்றும் போக்குவரத்துக்காக செலவிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகைக்கு நிலையான கழிவு என்ற அடிப்படையில் சம்பளதாரர்கள் வருமானவரி விலக்கு பெறலாம்.
எனினும், இந்தத் திட்டத்தை 2006-ல் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ரத்து செய்தார். இந்நிலையில் நிலையான கழிவுத் திட்டம் வரும் நிதியாண்டில் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் இதன்கீழ் ரூ.40 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுஷில்சந்திரா நேற்று கூறும்போது, "சம்பளதாரர்கள், ஓய்வூதியம் பெறுவோர் நிலையான கழிவுத் திட்டத்தின் கீழ், போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவை குறிப்பிட்டு ரூ.40 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம். எனினும், இதற்கு ஆதாரமாக எந்தவித ஆவணத்தையோ ரசீதையோ தாக்கல் செய்யத் தேவையில்லை. மேலும் வரி ஏய்ப்பு செய்பவர்களையும் கறுப்பு பணம் பதுக்குபவர்களையும் கண்டறிய போதுமான தொழில்நுட்பம் வருமான வரித்துறையிடம் உள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தொழிற்பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தனியார் தொழிற் பள்ளிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 54 நீண்டகால தொழிற்பிரிவுகள், மற்றும் 35 குறுகிய கால தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.ஏற்கெனவே அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் தொழிற்பள்ளிகளுக்கு அங் கீகார நீட்டிப்பு ஆணை வழங்கவும், ஒவ் வொரு ஆண்டும்ஜனவரி 2-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதிவரை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.2017-18-ம் ஆண்டு முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மண்டல பயிற்சி இணை இயக்குநர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இணையதள முகவரியில் தற்போது 2018-19-ம் ஆண்டு தொழிற்பள்ளிகளுக்கான அங்கீகாரம் நீட்டிப்பு மற்றும் புதிதாக தொழிற் பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 2-ம் தேதி முதல் வரவேற்கப்படுகின்றன.

புதிதாக அங்கீகாரம் கோரும் தொழிற்பள்ளிகள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகாரம் வழங்கும் முறையை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள இணையதளம் வாயிலாகச் செயல்படுத்தப்படுவதால்தொழிற் பள்ளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

Annamalai University - 81st Annual Convocation 2018 - Notification ... ANNAMALAI UNIVERSITY | NOTIFICATION

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு - 2 முக்கிய குற்றவாளிகள் கைது :

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில், ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கணேசன் (வயது 38), சேக் தாவூத் நாசர்(32), ரகுபதி(34), சுரேஷ்பால்(34) ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பரமசிவம் (32), சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த நாதன்(45) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்​

தமிழகத்தில் 'நீட்' தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இது தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிவதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி வந்தார். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- கல்வித்துறையில் வரி உயர்வுஎன்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக கல்வித்துறையை பொறுத்தவரை நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தந்துள்ளது. 'நீட்' தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

 இதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பின்னர் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உரிய முடிவு எடுப்பார்கள். இருப்பினும் 70 ஆயிரத்து 412 மாணவ-மாணவிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து, 412 மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 'நீட்' தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களில் சிறந்த மாணவர்கள் 2 ஆயிரம் பேரை பொதுத்தேர்வுக்கு பின்னர் தேர்வு செய்து 20 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி பெறுவார்கள். அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். தமிழகத்தில் 'நீட்' தேர்வை தடுக்க முடியுமா? என்றால் முடியாது.

 இது தொடர்பாக கடந்த முறை முதல்-அமைச்சர் 3 முறை டெல்லி வந்து பிரதமரை சந்தித்து முயற்சி மேற்கொண்டார். அப்போது கோப்புகள் நகர்ந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உருவானது. தற்போது, 'நீட்' தேர்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக தமிழக அரசு அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் 'பாராமெடிக்கல்' படிப்பு துவக்கம்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்பு வகுப்புகளை, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், நேற்று துவக்கி வைத்தார்.
பின், நிருபர்களிடம் கூறியதாவது: ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்புக்கு, வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு மாத காலத்திற்குள், அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், 1,234 ஆய்வக உதவியாளர் பணியிடம், 353 மருந்தாளுனர் பணியிடம் மற்றும் 450 நர்சுகள் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
இந்தாண்டு, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரிகளில், 38 கோடி ரூபாய் மதிப்பில், 48 பாராமெடிக்கல் பாடப்பிரிவுகள் துவங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் முதன்முறையாக, 13 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், எட்டு கோடி ரூபாய் மதிப்பில், பட்ட மேற்படிப்பு துவங்கப்பட உள்ளது. 

'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு கேட்ட அனைத்து விபரங்களையும், தமிழக அரசு சமர்ப்பித்து விட்டது. தமிழகத்திற்கு, 'எய்ம்ஸ்' அறிவிக்கப்பட்ட ஒன்று. எனவே, இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

ஒன்பதாம் வகுப்பு மாணவியை தன்னுடைய இருக்கையில் அமர வைத்து மாவட்ட ஆட்சி தலைவர் பாராட்டு !!

சுற்றுப்புற தூய்மை பற்றிய அக்கறை கொண்ட வேங்கிக்கால் , பொன்னுசாமி நகரைச் சேரந்த சந்திரவாசன், இளையசுதா என்பவர்களின் மகளான   ச.பூஜா என்ற   ஒன்பதாம் படிக்கும் மாணவியை பெருமை படுத்தும் விதமாக நம் மாவட்ட (திருவண்ணாமலை) ஆட்சித்தலைவர் அம்மாணவியை தம் இருக்கையில் அமர வைத்து பெருமை படுத்தினார்.

மாணவர்களுக்கு சலுகை திட்டங்கள் : கல்வி முறையை மாற்ற அதிரடி முடிவு!!!

புதுடில்லி: சிறப்பான தேர்ச்சி பெற்ற முதல், 1,000 பி.டெக்., மாணவர்கள்,
முனைவர் பட்டப் படிப்பில் சேர, 'பெல்லொஷிப்' திட்டம், 24 புதிய மருத்துவக் கல்லுாரிகள் கட்டுதல் உட்பட, பல்வேறு கல்வித் திட்டங்கள், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.


'ஏகலைவா' பள்ளி : மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், கல்விக்கு, 85,010 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், 35,010 கோடி ரூபாய், உயர் கல்விக்கும், 50 ஆயிரம் கோடி ரூபாய், பள்ளி கல்விக்கும் ஒதுக்கப்பட உள்ளது. வரும், 2022க்குள், கல்வி முறையையும், கல்வி கட்டமைப்பையும் முற்றிலும் மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுஉள்ளதாக, ஜெட்லி கூறினார்.
எஸ்.டி., பிரிவினர், 50 சதவீதத்துக்கு கூடுதலாக வசிக்கும் ஒவ்வொரு பகுதியிலும், குறைந்தபட்சம், 20 ஆயிரம் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலும், நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு நிகராக, 'ஏகலைவா' பள்ளிகள் நிறுவப்படும் என, அவர் தெரிவித்தார்.

சன்மானம் : திட்டம் மற்றும் கட்டடக் கலைக்கென பிரத்யேகமாக இயங்கும், இரு பள்ளிகளை நிறுவப்போவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில் நுட்பக் கழகம், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றின் கீழ், திட்டம் மற்றும் கட்டடக் கலைக்கென, 18 பள்ளிகள் செயல்பட உள்ளன. பிரதமர் பெல்லோஷிப் திட்டத்தின் கீழ், சிறப்பாக தேர்ச்சி பெற்ற, முதல், 1,000 பி.டெக்., பட்ட மாணவர்கள், ஐ.ஐ.டி., மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் மையத்தில், முனைவர் பட்டப் படிப்பை தொடர வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த மாணவர்களுக்கு, பெருந்தொகை சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்க உத்தரவு!!!

தமிழகம் முழுவதும், பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும்படி, 
ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும். இதற்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த, 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க வேண்டும். அதையும் மீறி, சேர்க்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், படிப்பை பாதியில் முடித்தவர்கள் பற்றிய விபரங்களை கணக்கெடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில் இருந்து, இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சேதமடைந்த அரசு பள்ளி கட்டடம் : விபரங்களை அனுப்ப உத்தரவு!!!

தேனி: மாநிலத்தில் சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்கள் குறித்த விபரங்களை
சேகரித்து மார்ச் 5க்குள் அனுப்ப அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 30 மாவட்டங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. 40 ஆண்டிற்கும் மேல் பயன்பாட்டில் உள்ள அரசு பள்ளிக் கட்டடங்கள் விபரம் சேகரிக்கப்பட்டது. அவை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்டது.
இந்நிலையில் 2002 முதல் 2017 டிசம்பர் வரை மாநிலத்தில் இத்திட்டத்தில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள கட்டடங்கள், மிக மோசமான நிலையில் சேதமடைந்த கட்டடங்கள் உள்ளிட்ட முழு விபரங்களை புகைப்படங்களுடன் மார்ச் 5க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என, அனைவருக்கும் கல்விதிட்ட உதவி திட்ட அலுவலர்களை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்பின் தேவைப்படும் நிதி ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம் : முறைகேடின்றி மதிப்பெண் தர உத்தரவு!!!

அரசு பொதுத்தேர்வு துவங்க, ஒரு மாதமே உள்ள நிலையில், பிளஸ் 2வுக்கான
, செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கின. பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
பிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு, மார்ச், 7; 10ம் வகுப்புக்கு, மார்ச், 16லும் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. இந்நிலையில், பிளஸ் 2வுக்கான செய்முறை தேர்வு நேற்று துவங்கியது. கணிதம், அறிவியல், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, பள்ளி ஆய்வகங்களில், இந்த தேர்வுகள் நடக்கின்றன. பல பள்ளிகளில் பெயரளவில், செய்முறை தேர்வு நடத்துவது வழக்கமாக உள்ளது. சில பள்ளிகளின் ஆய்வகங்களில், உபகரணங்கள் பெயரளவில் தான் உள்ளன. இந்த முறை, அனைத்து பள்ளிகளிலும், உபகரணங்களை முறையாக வாங்கி பயன்படுத்த வேண்டும். அவற்றை, மாணவர்களின் பயன்பாட்டுக்கு வழங்கி, செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுஉள்ளது.
இந்த தேர்வில், மாணவர்களுக்கு தோராய மதிப்பெண் வழங்காமல், சரியான மதிப்பெண் வழங்க வேண்டும். தங்களுக்கு பணிவிடை செய்யும் மாணவர்களுக்கு மட்டும், ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் வழங்குவது போன்ற முறைகேடுகள் இருக்கக் கூடாது என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. செய்முறை தேர்வுகளை, வரும், 13ம் தேதிக்குள் முடிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. தனித்தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தனித்தேர்வர்களுக்கும், எந்தவித பாகுபாடுமின்றி, பள்ளி மாணவர்களை போன்றே தேர்வை நடத்தி, அவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் 'பாராமெடிக்கல்' படிப்பு துவக்கம்!!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 
ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்பு வகுப்புகளை, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், நேற்று துவக்கி வைத்தார்.


பின், நிருபர்களிடம் கூறியதாவது: ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்புக்கு, வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு மாத காலத்திற்குள், அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், 1,234 ஆய்வக உதவியாளர் பணியிடம், 353 மருந்தாளுனர் பணியிடம் மற்றும் 450 நர்சுகள் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
இந்தாண்டு, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரிகளில், 38 கோடி ரூபாய் மதிப்பில், 48 பாராமெடிக்கல் பாடப்பிரிவுகள் துவங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் முதன்முறையாக, 13 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், எட்டு கோடி ரூபாய் மதிப்பில், பட்ட மேற்படிப்பு துவங்கப்பட உள்ளது.
'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு கேட்ட அனைத்து விபரங்களையும், தமிழக அரசு சமர்ப்பித்து விட்டது. தமிழகத்திற்கு, 'எய்ம்ஸ்' அறிவிக்கப்பட்ட ஒன்று. எனவே, இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் பொருள்கள்!!!

                                    2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி 20 சதவிகிதமாக அதிகரித்துள்ளதால் மொபைல்போன்
மற்றும் டிவி போன்ற மின்சாதனப் பொருள்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல்போன்களுக்கான சுங்க வரி முந்தைய 15 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். டிவி உதிரிப் பாகங்களுக்கான சுங்க வரியும் முந்தைய 7.5 - 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனால், மொபைல், டிவி மற்றும் ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றின் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனையாகும் மொத்த மொபைல்போன்களில் சுமார் 81 சதவிகித அளவானது உள்நாட்டில் தயாரிக்கப்படுபவையாக உள்ளது. இந்த அளவு 2018ஆம் ஆண்டில் 90 சதவிகிதத்தைக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல்போன்களின் விலையில் உயர்வு இருக்காது. வீடியோ கேம் சாதனங்களின் சுங்க வரி முந்தைய ஆண்டின் 10 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. உணவு பதப்படுத்துதல், மின்னணு சாதனங்கள், கார் பாகங்கள், காலணி மற்றும் மரச்சாமான்கள் போன்ற பொருள்களுக்கான உள்நாட்டு மதிப்புக் கூட்டுதலும் சிறப்பாக உள்ளது.

அதிகக் கட்டணம்: மாணவர்கள் போராட்டம்!

                                            
கும்பகோணத்தில் அதிகக் கட்டணம் கேட்பதாக நிர்வாகத்தின்
மீது குற்றம்சாட்டி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நேற்று (பிப்ரவரி 1) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பகோணம் அருகே உடையாளூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சுமார் 750 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு இறுதியாண்டு மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப்புக்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.2,200 கட்டணமாகச் செலுத்த கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், தேர்வு எழுதாமல் இருந்தாலும், தேர்வு எழுதித் தோல்வியடைந்தாலும் அபராதம் செலுத்த வேண்டும் என்பது போன்ற விதிகள் கல்லூரியில் இருப்பதைக் கண்டித்து வகுப்புகளைப் புறக்கணித்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

முன்னதாக கடந்த ஜனவரி 31 அன்று தமிழகத்தில் பேருந்துக் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரி நிர்வாகத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்குச் சென்றனர்.

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!!!

                                                 
ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள உதவியாளர் 
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 27

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.13,150 - 34,990/-

வயது வரம்பு: 20 -28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் மொழியியல் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.

கடைசித் தேதி: 19.02.2018

மேலும் விவரங்களுக்கு https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTE30012018C4BD15E84BF7477D927549B329231E9B.PDF என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

சம்பளதாரர்களுக்கு ஏமாற்றம்-கழிவு மட்டுமே மிஞ்சியது!!!

நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்​!!!

தமிழகத்தில் 'நீட்' தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இது தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிவதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி வந்தார். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- கல்வித்துறையில் வரி உயர்வுஎன்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக கல்வித்துறையை பொறுத்தவரை நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தந்துள்ளது. 'நீட்' தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

 இதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பின்னர் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உரிய முடிவு எடுப்பார்கள். இருப்பினும் 70 ஆயிரத்து 412 மாணவ-மாணவிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து, 412 மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 'நீட்' தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களில் சிறந்த மாணவர்கள் 2 ஆயிரம் பேரை பொதுத்தேர்வுக்கு பின்னர் தேர்வு செய்து 20 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி பெறுவார்கள். அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். தமிழகத்தில் 'நீட்' தேர்வை தடுக்க முடியுமா? என்றால் முடியாது.

 இது தொடர்பாக கடந்த முறை முதல்-அமைச்சர் 3 முறை டெல்லி வந்து பிரதமரை சந்தித்து முயற்சி மேற்கொண்டார். அப்போது கோப்புகள் நகர்ந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உருவானது. தற்போது, 'நீட்' தேர்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக தமிழக அரசு அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

EMIS-Report as on 02.02.2018 - All Districts

கூடுதலாக வழங்கப்பட்ட(பி.எட்) ஊக்க ஊதியம் திருப்பி செலுத்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கிய ஆணைக்கு தடையாணைக்கு விளக்கம் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!!!

2018 வருமான வரி விண்ணப்பம் தாக்கல் செய்வது தொடர்பாக சார்நிலை கருவூலம் தெளிவுரை!!


CPS NEWS: தமிழக அரசு ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய (PFRDA)த்திடம் செய்து கொண்ட ஒப்பந்த நகலினை RTI சட்டப்படி பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் உத்தரவு!!!

2/2/18

NHIS திட்டத்தில் தொடரும் குளறுபடியும், மருத்துவமனைகளின் பித்தலாட்டமும்
எதிர்த்து களமிறங்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாரம் TNPTF வட்டாரத் தலைவர் திரு.பிரிட்டோ அவர்கள் கடந்த 23.1.2018 அன்று எலும்பு முறிவிற்காக மதுரையில் புகழ் வாய்ந்த மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். சிவகங்கை மாவட்ட பொருளாளர் குமரேசன் அவர்கள் உடன் இருந்து அனைத்து உதவிகளையும் செய்தார். தனக்கு NHIS திட்டத்தில் சிகிச்சையளிக்க கோரியபொழுது முன் பணம் கட்ட வற்புறுத்திய மருத்துமனை நிர்வாகம் 50 ஆயிரம் செலுத்த சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளது. வேற வழியில்லாமல் தன்னிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாயை தோழர் செலுத்தியுள்ளார். இந்நிலையில் காப்பீட்டு நிறுவனம் தங்களுக்கு 23.1.2018 அன்று 32ஆயிரம் ரூபாய்தான் அனுமதித்துள்ளது, மேலும் சிகிச்சையளிக்க வேண்டுமானால் 40 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என  மருத்துமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில் தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறுவதாக 31.1.2018 அன்று மருத்துமனை நிர்வாகம் எழுத்து பூர்வமான கடிதம் கோரியுள்ளது.
 இது குறித்து மாவட்ட மையத்தை தோழர் பிரிட்டோ தொடர்பு கொண்டபொழுது நாம் இத்திட்டத்தினால் எழும் பிரச்சனைகளுக்காக மாநில மையத்தால் நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட பொருளாளர் தோழர் செல்வகனேஷ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இது குறித்து விரிவாக ஆலோசிக்க திருப்பரங்குன்றம் வட்டாரச் செயலாளர் திரு.ஸ்ரீனிவாசகன் மருத்துமனைக்கே நேரடியாக சென்று பிரிட்டோ அவர்களை சந்தித்து சில ஆலோசனைகளை வழங்கினார். அதன் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் அனுமதித்த தொகை சரிதானா என தகவல் சேகரித்தபொழுது 26.1.2018 அன்றே மருத்துமனையில் இருந்து விடுவிப்பு செய்யப்பட்டதாக பதிவு இருந்ததை கண்ட தோழர் பிரிட்டோ அதிர்ச்சிக்குள்ளானார். 26.1.2018 அன்று விடுவிப்பு செய்ததாக பதிவேற்றிவிட்டு 31.1.2018 அன்று சொந்த விருப்பத்தின் பேரிலேயே சிகிச்சை பெறுவதாக கடிதம் கோரிய மருத்துவமனையின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தோழர் பிரிட்டோ மாவட்ட மையம் மற்றும் தோழர் செல்வகனேஷ் அவர்களின் வழிகாட்டுதலின் படி தற்பொழுது மதுரை மாவட்ட சுகாதரத்துறை இணை இயக்குனர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் மருத்துமனையின் உள்நோக்கம் குறித்தும், தனக்கு முழுமையான பணத்தை விடுவிப்பு செய்வதோடு ஏற்கனவே மருத்துமனையில் செலுத்திய 20 ஆயிரத்தையும் மீட்டு தரவேண்டும் என மனு அளித்துள்ளார். மேலும் முழு தொகை விடுவிப்பு செய்யும் வரை மருத்துமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறவும் முடிவாற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட உரிமை மீட்பில் தொடர்ந்து உதவி வரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையத்திற்கும், விருதுநகர் மாவட்டப் பொருளாளர் திரு.செல்வகனேஷ் அவர்களுக்கும் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரச் செயலாளர் திரு.ஸ்ரீனிவாசகன் அவர்களுக்கும் சிவகங்கை மாவட்ட கிளை நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.
'பாதகம் செய்பவரை கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா – அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
என்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மட்டுமல்ல நாங்கள்
'நெஞ்சினை பிறந்தபோதும் நீதி கேட்க அஞ்சிடோம்
நேர்மையற்ற பேர்களின் கால்களை வணங்கிடோம்' என்ற வரிகளை நெஞ்சில் தாங்கும் சமரசமற்ற போராளி இயக்கமான தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அக்னி குஞ்சுகள் என்பதை அதிகார வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து இயக்க பணியில்
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டச் செயலாளர்
சிவகங்கை மாவட்டம்

10ம் வகுப்புக்கு தேசிய கற்றல் அடைவுத்தேர்வு : பிப்., 5ல் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது!!!

நாடு முழுவதும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறனை பரிசோதிக்க, தேசிய 
கற்றல்அடைவுத்தேர்வு, வரும் 5ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் இருந்து, 2,560 பள்ளிகளை
சேர்ந்த மாணவர்கள், இத்தேர்வில் பங்கேற்கின்றனர்
.
மாநில வாரியாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், மாநில வாரியாக, மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்க, அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இத்தேர்வு நடத்தப்படுகிறது. 2015க்கு பின், வரும் 5ம் தேதி, தேசிய கற்றல் அடைவுத்தேர்வு, அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது. மாநில வாரியாக, ஒரு மாவட்டத்துக்கு, தலா, 80 பள்ளிகளில் இருந்து, அதிகபட்சம், 45 மாணவர்கள் மட்டுமே, இத்தேர்வை எழுதுகின்றனர். அனைத்து பாடங்களுக்கும், 'ரேண்டம்' முறையில், மாணவர்களை தேர்ந்தெடுத்து, மூன்று வகையான வினாத்தாள் வினியோகிக்கப்படும். ஒரு பாடத்தில் இருந்து, தலா 60 கேள்விகள் இடம்பெறும்.
குறைவான மதிப்பெண் இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாநிலத்தின் கல்வி குறியீடு தரவரிசைப்படுத்தப்படும். இதில், அந்தந்த மாநில பாடத்திட்டத்தின் படி, ஒவ்வொரு பாடத்தில் இருந்தும், 'அப்ஜெக்டிவ்' முறையில், 60 கேள்விகள் இடம்பெறும். ஓ.எம்.ஆர்., ஷீட்டில், விடைக்குறிப்புகள் அடையாளப்படுத்த வேண்டும். ஒரு மாணவன், ஒரு பாட வினாத்தாளுக்கு மட்டுமே விடையளிக்க முடியும். தமிழகத்தை பொறுத்தமட்டில், 2015ல், மாணவர்கள் சராசரியை விட, குறை வான மதிப்பெண் பெற்று இருந்தது தெரியவந்துள்ளது.
மொழிப்பாடங்களில் சராசரியாக, 500க்கு 225 மதிப்பெண் மட்டுமே, மாணவர்கள் பெற்று இருந்தனர். கணிதத்தில், 226; அறிவியலில், 229 மற்றும் சமூக அறிவியலில், 500க்கு, 215 மதிப்பெண், சராசரியாக பெற்றிருந்தனர்.

எந்த வங்கியிலும் ஆதாரை பதிய வசதி!!!

'வங்கிகளில் செயல்படும், ஆதார் மையங்களில், வேறு வங்கி வாடிக்கையாளர்கள், 
வங்கிக் கணக்கே இல்லாத பொதுமக்களும், ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை செய்யலாம்.

ஆதார் எண்ணை, வங்கிக் கணக்கு, மொபைல் போன், பான் கார்டு போன்றவற்றுடன் இணைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், ஆதார் பதிவு மையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்டத்தை சமாளிப்பதற்காக, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களிலும், ஆதார் பதிவு மையங்களை துவக்க, மத்திய அரசு, நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, வங்கிக் கணக்குடன், ஆதார் இணைப்பது கட்டாயம் ஆகியுள்ளதால், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், தங்களின், 10 கிளைகளுக்கு, ஒரு கிளை வீதம், ஆதார் பதிவு மையங்களை அமைத்துள்ளன. ஆனால், வங்கி வாடிக்கையாளர்களுக்கு, எந்த கிளையில், ஆதார் மையம் செயல்படுகிறது என, தெரியாத நிலை உள்ளது. இதை, மக்கள் எளிதில் கண்டறியும் வசதியை, ஆதார் பதிவை மேற்கொள்ளும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனும், தனித்துவ அடையாள எண் மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது. இதன்படி, //appointments.uidai.gov.in/easearch.aspx என்ற வலைதள முகவரியை, 'டைப்' செய்தால், ஒரு திரை தோன்றும். அதில், எந்த மாநிலம், மாவட்டம், ஊர் போன்ற விபரங்களை குறிப்பிட்டதும், எந்த வங்கிக் கிளையில் ஆதார் மையம் செயல்படுகிறது, யாரை தொடர்பு கொள்வது என்பது உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், பதிவு மையம் அமைந்துள்ள வங்கியில், கணக்கு வைத்திருக்காதவர்களும், வங்கிக் கணக்கே இல்லாதவர்களும் கூட, எந்த வங்கிக் கிளையிலும், ஆதார் விபரங்களை பதிவு செய்யலாம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியரை ஒழுக்க குறைவாக பேசக்கூடாது' : ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை!!!

மாணவ - மாணவியரை ஒழுக்க குறைவாக பேசினால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை 
எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

புகார் :
பள்ளி, கல்லுாரிகளில் குருகுல கல்வி முறை காலம் மாறி, குருவையே மாணவர்கள் மிஞ்சும் அளவுக்கு, கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.பள்ளிகளில் பாடம் நடத்தும் முறை, மாணவர்களிடம் பழகும் தன்மை ஆகியவையும் மாறியுள்ளது. மாணவர்களை பிரம்பால் அடிப்பது, கடுமையான வார்த்தைகளால் பேசுவது போன்றவற்றுக்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது. நண்பர்களாக பழகி, மாணவர்களை நல்வழிப்படுத்துமாறு, கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், அரசு பள்ளிகள் சிலவற்றில், ஆசிரியர்களே, மாணவர்களிடத்தில் கோஷ்டியை உருவாக்கி, தவறாக வழிநடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தங்களுக்கு வேண்டாத பெற்றோரின் பிள்ளைகள், தங்களுக்கு பணிவிடை செய்யாத மாணவ - மாணவியரை, குறிப்பிட்ட மாணவர்களுடன் இணைத்து, ஒழுக்க குறைவாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. சென்னை, கோடம்பாக்கம், பதிப்பகச் செம்மல் கணபதி அரசு மேல்நிலை பள்ளியில், பட்டதாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர், மாணவ - மாணவியர் சிலரை தவறாக பேசி, அடித்துள்ளனர்.

நடவடிக்கை :

தேர்வுகளில், அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கூட, இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். மனதளவில் பாதிக்கப்பட்ட சில மாணவியர், தேர்வு துவங்க உள்ள நிலையில், பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளனர். இதுகுறித்து, பெற்றோர், சில தினங்களுக்கு முன், பள்ளியில் முற்றுகையிட்டு, ஆசிரியர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய ஆசிரியர்கள் சிலர், தரக்குறைவாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது.இதையடுத்து, ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

'மாணவர்கள், இளம் வயதினர் என்பதால், அவர்களை பக்குவமாக கையாண்டு, திருத்த வேண்டும். அதை செய்ய முடியாத ஆசிரியர்கள், பாடம் நடத்தி விட்டு, பெற்றோருக்கோ, தலைமை ஆசிரியரிடமோ, மாணவர்களின் நடத்தை குறித்து தகவல் அளிக்கலாம். 'மாறாக, மாணவ - மாணவியரை கிண்டல் செய்வது, அவர்களின் மனம் புண்படும்படி, தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. 'மீறினால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்துள்ளனர்.

தொழிற்கல்விக்கான உதவி ரூ.50 ஆயிரமாக உயர்வு!!!

தொழிற்கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி
உதவித்தொகை, 25 ஆயிரம்ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசாணை : தொழிற்கல்வி கற்கும்ஏழை மாணவர்கள், தங்கள் படிப்பை தொடர, முதல்வர் பொது நிவாரணநிதியிலிருந்து, நிதியுதவிவழங்கும் திட்டம், 2003ல், துவக்கப்பட்டது. இதன்படி, ஆண்டு தோறும், 100 மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் காலத்தில், ஒரு முறை மட்டும், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. பின், இந்த எண்ணிக்கை, 200 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின், பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு, 2015 - 16ல், 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம்ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி, இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வு : முதல் பட்டதாரி சலுகை பெற்றிருந்தும், தொழிற்கல்வி படிக்க முடியாமல், மிகவும் வறிய நிலையில் உள்ளோரும், தொழிற்கல்வி உதவித்தொகை பெறலாம். இந்த உதவித்தொகை, மாவட்ட கலெக்டரால் பரிந்துரைக்கப்பட்டு, சிறப்பினமாக கருதப்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, வழங்கப்படும்.

இன்ஜி., படிப்புக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங் உறுதி : பெட்டி, படுக்கையுடன் சென்னைக்கு வரவேண்டாம்!!!

இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும்' 
என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இனி, மாணவர்களும், பெற்றோரும், பெட்டி, படுக்கையுடன், சென்னைக்கு வர தேவையில்லை.

அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், தமிழக அரசின் சார்பில், பொது கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஒற்றை சாளர முறையில் நடக்கும் இந்த கவுன்சிலிங்கில், மாணவர்களின் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இதற்காக, சென்னையில் அண்ணா பல்கலை வளாகத்தில், கவுன்சிலிங் மையம் அமைக்கப்பட்டு, மாணவியர், அவர்களின் பெற்றோர் தங்குவதற்கு, இலவச விடுதி வசதி செய்யப்படும். மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் ஒரு நபருக்கு, அரசு பஸ்சில் சென்னைக்கு வர, இலவச கட்டண சலுகை தரப்படும்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஆன்லைனுக்கு மாற்றப்படுகிறது. இதை, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன், நேற்று உறுதி செய்தார். இதற்கான ஏற்பாடுகள், முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அவர் கூறினார்.

அண்ணா பல்கலையின் கணினி அறிவியல் துறை தலைவரும், ராமானுஜன் கணினி மைய இயக்குனருமான, பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ், கவுன்சிலிங் கமிட்டி உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில், கவுன்சிலிங் பணிகள் நடந்து வருகின்றன. ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர்களின் வசதிக்காக, 32 மாவட்டங்களிலும், கவுன்சிலிங் உதவி கணினி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த மையங்களில், கணினியுடன், உயர்தர இணையதள வசதி செய்யப்பட்டிருக்கும். மாணவர்கள் அங்கு சென்று, சேர்க்கையில் பங்கேற்கலாம். மேலும், வீட்டில் இணையதளத்துடன் கூடிய, கணினி வசதியுள்ள மாணவர்கள், வீட்டில் இருந்தவாறே கல்லுாரியையும், பாட பிரிவையும் தேர்வு செய்யலாம்.

கவுன்சிலிங் மையத்தில், தனியார் கல்லுாரி தரகர்கள் முகாமிட்டு, மாணவர்களை தங்கள் கல்லுாரிகளில் சேர வைக்கும் பிரச்னைகளுக்கு, இனி இடம் இருக்காது. கவுன்சிலிங்கிற்காக, அண்ணா பல்கலையில் மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளுக்கான செலவுகளும் குறையும் என, உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கால நீட்டிப்பிலே காலம் தள்ளும் வல்லுநர் குழு போராட தயாராகும் ஊழியர்கள்!!!

போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் கட்!!!

FLASH:2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்

*விவசாயிகளின் வருமானத்தை 2020- ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தும்
வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்னெடுத்து வருகிறது*

*விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டம் மீனவர்கள், கால்நடை வளர்ப்போருக்கும் விரிவாக்கம்*

*விவசாயிகளுக்கான கடன் அட்டைகள் மீனவர்களுக்கும் வழங்கப்படும்*

*மூங்கில் பயிரிடுவோருக்கும் மத்திய அரசின் உதவிகள் நீட்டிக்கப்படும்*

*ஆபரேசன் க்ரீன் என்ற பசுமையாக்கும் திட்டத்துக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு*


*இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை*

*விவசாயிகள் உற்பத்தி செலவில் 1.5 மடங்கு லாபம் ஈட்ட நடவடிக்கை*

*விவசாயிகளின் விளை பொருட்களுக்கான விலையை 150 விழுக்காடு உயர்த்த திட்டம்*

*உணவு பதப்படுத்தல் துறைக்கான முதலீடு 2 மடங்காக்கப்பட்டுள்ளது*

*இந்தியா முழுவதும் 42 ஹைடெக் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்*

*பட்ஜெட் இதுவரை: இதுவரை அருண் ஜேட்லி சமர்பித்த பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம்*

*விவசாயிகள் தங்கள் செலவை விட 1.5 மடங்கு அதிகமாக பணம் ஈட்ட வகை செய்துள்ளோம்*

*விவசாயிகளுக்கு ''அச்சே தின்'' வந்து கொண்டுள்ளது*

*விவசாயத்துறையின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும்*

*உணவு தானிய உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது*

*விவசாயத்துறையின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும்*

*மாநில அரசுகளுடன் இணைந்து கல்வியின் தரம் உயர்த்த நடவடிக்கை*

*விளை பொருட்களுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது*

*2020ல் விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக்குவோம்*

*விவசாயத்துறையின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும்*

*இந்தியாவின் நேரடி வரிவிதிப்பு முறை உலகளவில் பேசப்படுகிறது*

*உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று*

*2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருவாய் 2 மடங்காக உயரும்*

*- அருண் ஜெட்லி*

மாற்றுத்திறனாளி, கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத்திட்டம்: அருண் ஜெட்லி உரை!!!

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் 
அருண் ஜெட்லி, மாற்றுத்திறனாளிகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத்திட்டம் அறிமுகம் செய்யப்படும். வருங்கால வைப்பு நிதிக்கு பணியில் சேர்ந்த முதல் 3 ஆண்டுகளில் பெண்கள் 8% செலுத்தினால் போதும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.*

FLASH NEWS:வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை!!!



தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை; வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 
லட்சமாக தொடரும்-

* கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செஸ் வரி 4% அதிகரிப்பு- நிதியமைச்சர் அருண் ஜெட்லி*

பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 3% ஆக குறைப்பு: அருண் ஜெட்லி

டெல்லி :  இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர்
அருண் ஜெட்லி, பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 8%ல் இருந்து 3% ஆக குறைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும்  புதிய ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில் 12 சதவீதத்தை (பி.எப்) அரசே வழங்கும் என்று கூறினார்.

SSTA BREAKING NEWS: 2018-2019 மத்தியரசு பட்ஜெட்டின் முக்கியம்சங்கள்!!!




பாஜக அரசின் 5-வது முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வாங்கினார். அருண் ஜெட்லி இந்தியில் பேசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சுதந்திர இந்தியாவில் இந்தியில் பேசி பட்ஜெட்டை தாக்கல் செய்வது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் எந்த நிதி அமைச்சரும் இந்தியில் தாக்கல் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:-

* நிர்வாக சீர் திருத்தத்தால் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது.

* கூடுதல் மூலதனத்தால் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் உயர்வு.

*4 வது காலாண்டில் வளர்ச்சி 7.2%-ல் இருந்து 7.4% ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*உலகப்பொருளாதாரத்தில் 7 வது இடத்தில்  இருந்து 5 வது இடத்துக்கு இந்தியா முன்னேறும் என்று அருண் ஜெட்லி கூறினார்.

*2022 ஆண்டுக்குள் விவசாயிகள் வருவாயை 2 மடங்காக உயர்த்த செயல் திட்டம்

* ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும்.

*கிராமங்கள் வேளாண் சந்தைகளை இணைக்கும் சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

*இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* மீனவர்கள், கால்நடை வளர்ப்போருக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும்.

* வேளாண் பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த ரூ.1400 கோடி ஒதுக்கப்படும்.

*கல்வி தரத்தை உயர்த்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை

*பயிர் கடனுக்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கபப்ட்டுள்ளது.

மீன்வள மேம்பாடு கால்நடை பெருக்க திட்டத்துக்கு ரூ.10000 கோடி  ஒதுக்கீடு.

*மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

*8 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

*கிராமப்புறங்களில் கூடுதலாக 2 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்

* தேசிய வாழ்வாதாரத் திட்டத்துக்கு ரூ.5750 கோடி ஒதுக்கீடு.

* குறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டத்துக்கு தனி நிதியம் அமைக்கப்படும்

*இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* இலவச நோய் பரிசோதனை மையம் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு

* மூங்கில் வளர்ப்பு திட்ட விரிவாக்கத்துக்கு ரூ.1200 கோடி ஒதுக்கீடு.

*குடும்பம் ஒன்றிக்கு ரூ.5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை செலவை அரசு ஏற்கும்

*10 கோடி ஏழை குடும்பங்களுக்கு தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

* புதிதாக 24 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்.

* புதிதாக 1.5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்


* டெல்லியில் கற்று மாசை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம்  உருவாக்கப்படும்.

* மாவட்ட மருத்துமனைகள், மருத்துவ கல்லூரிகளாக மேம்படுத்தப்படும்.

* தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்கு ரூ.56 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

*நடுத்தர, சிறு, குறுந்தொழில்களுக்கு தொழில் கடன் வழங்கும் முறை மேம்படுத்தப்படும்.

*சிறு தொழில்கள் செலுத்த வேண்டிய வங்கி கடன்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*4 கோடி ஏழை வீடுகளுக்கு மின்  இணைப்பு வழங்க ரூ.16,000 கோடி செலவிடப்படும்.

*முழுமையான சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.9975 கோடி ஒதுக்கீடு.

*70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* 600 பெரிய ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்

*அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

*அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

* ரயில்வே  துறையில்  பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும்.

* அனைத்து ரயில்களிலும் வைஃபை, கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

* 124 விமான நிலையகங்ளில் கூடுதல் பயணிகளை கையாள திட்டம்.

* ரயிலில் பயணிகள் பாதுக்காப்பு அதிகரிக்கப்படும்.

* ரயில்வே துறையில் ரூ.1,48,528  கோடி முதலீடு செய்யப்படும்.

*4000 கிமீ நீளத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.

*5160 ரயில் பெட்டிகள் வாங்கப்படும்.

*3600 கிமீ இரும்பு பாதை புதுப்பிக்கப்படும்.

*பெரம்பூரில் நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்க புதிய ஆலை தொடங்கப்படும்.

* அதிவேக ரயில்களை இயக்க குஜராத்தில் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

* குடியரசு தலைவரின் ஊதியம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.

* துணை குடியரசுத்தலைவரின் ஊதியம் ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.

*ஆளுநர் ஊதியம் ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்படும்.

* காந்தியின் கொள்கைகளை பிரச்சாரம் செய்ய ரூ.150 கோடி ஒதுக்கீடு.

* பயணிகள் விமானத்தின் சேவைகள் 5 மடங்கு உயர்த்தப்படும்.

* பயன்பாட்டில் இல்லாத 31 ஹெலிபேடுகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்

வருமான வரி விபரம்

2018-2019 மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு!!!



மீண்டும் வந்தது நிலையான கழிவு.. மாத சம்பளம் பெறுவோருக்கு பட்ஜெட்டில் கிடைத்தது இந்த ஒரே சலுகைதான்!

டெல்லி: மாத சம்பளம் பெறுவோருக்கு பெரும் வருமான வரி சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்த 
நிலையில், ஒரே ஒரு சிறு சலுகை மட்டுமே பட்ஜெட் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதுதான் நிலையான கழிவு என்ற திட்டம்.

நிலையான கழிவு (Standard deduction) என்பது புதிய நடைமுறை கிடையாது. ஏற்கனவே அமலில் இருந்த ஒன்றுதான். 2006-07ம் நிதியாண்டு முதல்தான் இந்த நடைமுறை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தால் நீக்கப்பட்டது.

மீண்டும், நிலையான கழிவு திட்டம் மீண்டு(ம்) வந்துள்ளது.

நீக்கப்பட்டது

முந்தைய நடைமுறைப்படி மொத்த வருவாயில் அதிகபட்சம் ரூ.30,000 என்பது நிலையான கழிவாக வழங்கப்பட்டது. அதற்கு வருமான வரி கணக்கு காட்ட வேண்டிய தேவை இல்லை. இன்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டுள்ள அறிவிப்புபடி, ரூ.40,000 நிலையான கழிவாக வழங்கப்பட்டுள்ளது.

ரூ.40,000 கிடைக்கும்

ஒரு தனி நபரின் சம்பளம் உள்ளிட்ட மொத்த வருவாயில் இருந்து இந்த ரூ.40,000 தொகையை கழித்துக்கொண்டு எஞ்சிய தொகைக்கு வரி செலுத்தினால் போதும். இது குறிப்பாக, மாத சம்பளதாரர்களுக்கு நன்மையளிக்க கூடியது. உதாரணத்திற்கு ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.2.80 லட்சம் என்றால், நிலையான கழிவு தொகை ரூ.40,000த்தை கழித்துவிட்டால் அவரது வருமானம் ரூ.2.40 லட்சம் என்ற அளவுக்கு குறைந்துவிடும். அவர் வரியே செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

இன்னொரு உதாரணம். ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.5.30 லட்சம் என்றால், இப்போதுள்ள வரி கட்டமைப்புபடி, அவர் 20 சதவீத வருமான வரி கட்ட வேண்டியுள்ளது. ஆனால், நிலையான கழிவு தொகை ரூ.40,000த்தை தனது மொத்த வருமானத்தில் இருந்து குறைத்துவிட்டால், அவரது ஆண்டு வருமானம் ரூ.4.90 லட்சமாக குறையும். அப்போது அவர் 5 சதவீத வருமான வரி கட்டும் பிரிவுக்குள் வந்துவிடுவார். அதுவும் அவருக்கு லாபம் தரும்.

மெடிக்கல் செலவு ஆதாரம்

2006ம் ஆண்டுவரை, நிலையான கழிவு தொகைக்கு ஆதாரம் (ப்ரூப்) காட்ட வேண்டிய தேவையில்லை. ஆனால் இப்போது மெடிக்கல் செலவீனத்திற்கான ஆதாரம் அல்லது போக்குவரத்து செலவீன ஆதாரம் காட்ட வேண்டும். உதாரணத்திற்கு, ரூ.40,000த்திற்கான மெடிக்கல் பில் தொகையை காண்பித்து இந்த சலுகையை அனுபவித்துக் கொள்ளலாம்.

வரி கட்டமைப்பில் மாற்றம் இல்லை

மத்திய அரசு பட்ஜெட்டில் மாத வருவாய் பிரிவினருக்கு கிடைத்த ஒரே சலுகை இதுதான். மற்றபடி வருமான வரி கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரூ.2.50 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் பிரிவினருக்கு வரி கிடையாது என்பதும், ரூ.2.50 லட்சம் முதல், ரூ.5 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கு 5 சதவீதம் வரி, ரூ.5-10 லட்சம் வரையிலான பிரிவினருக்கு 20 சதவீத வரி, ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட வருவாய் பிரிவினருக்கு 30 சதவீத வரி என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

TAX - RTI : பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை.!!!

பள்ளியில்  பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு வருமான வரி 
கணக்கிட்டு பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என சான்றிதழ் வைத்தால் போதும்.

வருமானவரி கணக்கீட்டுத் தாள் மற்றும் பிடித்தம் செய்ததற்கான சான்றிதழ்கள் ஆகியவை Tax இருந்தால் 3 நகல்கள், Tax இல்லாவிடில் 2 நகல்கள் எல்லாம் வைக்க வேண்டிய தேவையில்லை.

அதில் குறை இதில் குறை என்று கருவூல அலுவலர்கள் குற்றம் கண்டறிவதும் பில் ஆடிட் போடுவது அதை சரிசெய்ய முயற்சிப்பது கவனிப்பது போன்றவற்றிற்கு இவ்வாண்டு முடிவுக்கு வந்துவிட்டது.

தமிழ்நாடு  நிதி விதி தொகுப்பு 86(a) -ன்படி சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர். வருமான வரியைப் பொறுத்தவரை
சென்ற ஆண்டு 80CCD(1B)ல் கூடுதலாக 50000 Cpsல் கழித்துக் கொள்ள தெளிவுரை பெற்றுத் தந்தது.

அதே போல் இவ்வாண்டு  கருவூலத்திற்கு Tax form தேவையில்லை தலைமையாசிரியர் சான்று அளித்தாலே போதும் என்ற தெளிவுரை பெற்றுள்ளது.

1/2/18

பள்ளி கல்வியின் திட்டங்களுக்கு ரூபாய் 4,000 கோடி நிதி பெற முடிவு

பள்ளிக்கல்வி தரத்தை உயர்த்தும் வகையிலான, கவர்ச்சி திட்டங்கள் உள்ளதால், பட்ஜெட்டில் கூடுதலாக, 4,000 கோடி ரூபாய் கேட்டு பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில், பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை, அமைச்சர் செங்கோட்டையன் தீவிரப்படுத்தி உள்ளார். புதிய பாடத்திட்டப்படி, தரமான புத்தகங்கள் தயாரிப்பது, சி.பி.எஸ்.இ.,க்கு இணையான பாடத்திட்ட அம்சங்களை, புத்தகங்களில் இடம் பெற செய்வது போன்ற, பணிகள் நடந்து வருகின்றன.

பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவது; புதிய கல்வி ஆண்டில் அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் என்ன என்பது குறித்தும், நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று, துறையின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி, மெட்ரிக் இயக்குனர், கண்ணப்பன், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், ராமேஸ்வர முருகன் உட்பட, பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆன்லைனில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் முறையை, ஆன்லைனுக்கு மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டத்துக்கு, மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெறுதல், பள்ளிகளில் பயோமெட்ரிக் திட்டத்தை விரிவுபடுத்துவது என, பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

ஏற்கனவே, 26 ஆயிரம் கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிலையில், பாடத்திட்ட மாற்றம் உட்பட, புதிய திட்டங்கள் உள்ளதால், 30 ஆயிரம் கோடி வரை, நிதி ஒதுக்கீட்டை உயர்த்தி கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

100 சதவீத தேர்ச்சி பெற மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பினால் நடவடிக்கை

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிளஸ்-1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தில் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தலைமையில் மாவட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட ஆய்வாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மார்ச் மாதம் தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளை வழக்கம்போல நேர்மையான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கண்காணிக்க வேண்டும்.

மாற்றுச்சான்றிதழ்

சில மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தேர்வில் தோல்வி அடையும் நிலையில் உள்ள சரியாக படிக்காத மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் (டி.சி.) கொடுத்து அனுப்புவது வழக்கமாக உள்ளது. அந்த மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்து விடுவார்கள் அல்லது தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவார்கள்.

அவ்வாறு மாற்றுச்சான்றிதழ் கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும். எந்த பள்ளியிலாவது அப்படி மாற்று சான்றிதழ் கொடுத்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்க முதலில் ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு இயக்குனர் எஸ்.கண்ணப்பன் கூறினார். 

போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் : ஊழியர்கள் கொந்தளிப்பு

ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் 8 நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜனவரி 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலான சம்பளம் பிடித்து போக்குவரத்து கழகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்திருந்த நிலையில் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சம்பள உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 4-ம் மாலை முதல் ஜனவரி 11-ம் தேதி வரை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பு இல்லாமல் தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், உயர்நீதிமன்றம் தலையிட்டு, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. அப்போது, போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்திய 8 நாட்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தில் 8 நாட்களுக்கான ஊதியம் விடுப்பு எடுத்ததாகக் கூறி பிடித்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருப்பது போக்குவரத்து ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிளஸ் 2 ரிசல்ட் தேதி அறிவிப்பு; தேர்தல் பணியால் ஆசிரியர்கள் அதிர்ச்சி

பிளஸ் 2 தேர்வு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணி சுமையாலும், தேர்தலுக்கு அடுத்த நாள் பிளஸ்2 ரிசல்ட் என்பதாலும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடந்தது. பிளஸ் 2 விடைத்தாள்கள் முழுமையாக திருத்தப்பட்டு விட்டது. தனித்தனியே மார்க் போடுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவு பெற்று விட்டன. எந்த நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வி துறை தயாராகவே உள்ளது. 


தேர்வு முடிவுகளை, அ.தி.மு.க., தன் தேர்தல் பிரச்சாரத்துக்கு எடுத்து கொள்ள கூடும். அதிக சதவீத மாணவ, மாணவியர் வெற்றி பெறுதல், அதிக மதிப்பெண் பெறுதல் போன்றவற்றை, தன் அரசின் சாதனைகளாக கூறி பிரச்சாரம் செய்ய வாய்ப்பு உள்ளது. 

எனவே தேர்தலுக்கு பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வி துறையினர் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வரும் 17 ம் தேதி வெளியாகும்; எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள், வரும், 25ம் தேதி வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வரும் 17 ம் தேதி அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பால் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: 

வரும், 16ம் தேதி தான், தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. தான் சார்ந்த தொகுதியில் ஆசிரியர்கள் இருக்க கூடாது என விதிமுறை உள்ளது. எனவே, தேர்தல் அதிகாரிகள் ஆசிரியர்களை வெவ்வேறு பகுதிக்கு, தேர்தல் பணிக்கு அனுப்பி வைத்து விடுவர். தேர்தல் முடிந்த பின், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்களை, சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரிகள், ஓட்டு சாவடி மையங்களுக்கு வந்து பெற்று கொள்ளும் வரை, ஆசிரியர்கள் அந்தந்த மையங்களிலேயே இருக்க வேண்டும். 

அதன் பின்னரே வீட்டுக்கு கிளம்பி செல்ல முடியும். நள்ளிரவு அல்லது அதிகாலையில் தான் ஆசிரியர்கள், வீட்டுக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. தேர்வு முடிவுகளை பெற சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், வகுப்பு மற்றும் பாடப்பிரிவு ஆசிரியர்கள், சி.இ.ஓ. அலுவலகத்துக்கு காலை, 8 மணிக்குள் வர வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும். முதல் நாள், தேர்தல் பணியை விடிய, விடிய மேற்கொண்ட நிலையில், மறுநாள் எவ்வாறு தேர்வு முடிவுகளுக்கான பணியை மேற்கொள்ள முடியும். 

எனவே, பள்ளி கல்வி துறை தேர்வு முடிவுகளுக்கான தேதியை மாற்றி அமைக்க வேண்டும். ஆசிரியர்கள் நிலையை எண்ணி பார்த்து, தேர்வு முடிவு வெளியிடும் தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.

தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நுழைவுதேர்வு கட்டாயம்; சுப்ரீம் கோர்ட்

தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது. அதே நேரத்தில் பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து, மத்திய அரசின் கருத்தை சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே நடத்த வேண்டுமென, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது.

இந்த நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே நடத்த உத்தரவிட வேண்டும் என, தொடரப்பட்ட வழக்கில், மே, 1 மற்றும் ஜூலை, 24ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும், என, சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டது.

இதனிடையில், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள், இந்த ஆண்டு மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகள் மூலமே மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்தன.

தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அந்த முறையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டுமென, தமிழக அரசும் மனு தாக்கல் செய்தது.இந்த மனுக்கள் மீது, நீதிபதிகள், ஏ.ஆர்.தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்று நடந்த விசாரணைக்குப் பின், சுப்ரீம் கோர்ட் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள தாவது: தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மூலமே நடத்தப்படவேண்டும்.

குறிப்பிட்ட சில மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறைகளிலேயே மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்வது குறித்து, மத்திய அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். மே, 1ல், நடந்த முதல்கட்ட தேர்வை எழுதியவர்கள், ஜூலை, 24ல் நடக்கும் இரண்டாம் கட்டத் தேர்வையும் எழுத அனுமதிப்பது குறித்தும் விளக்க வேண்டும். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளது. வழக்கு விசாரணை, 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடரும் குழப்பம்: 

அரசு மருத்துவக் கல்லுாரி களில், 15 சதவீத இடங்களுக்காக, இதுவரை, அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு நடந்து வந்தது.

தமிழகத்தில், பொது நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசை தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு முறை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால், மருத்துவக் கல்லுாரிகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தமிழக மாணவர்கள்தள்ளப்பட்டிருந்தனர்.

தற்போது, இதற்கு விலக்கு அளிக்க சுப்ரீம் கோர்ட் முன்வந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் கல்லுாரிகளில் சேர்வதற்கு, நுழைவுத் தேர்வை எழுதியாக வேண்டிய நிலையில் மாணவர்கள் உள்ளனர். போதிய கால அவகாசம் இல்லாததால், தமிழக மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையின்போது வழக்கறிஞர்களின் வாதம்:

மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான்: தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தினால், 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இல்லை. இது, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார்: மருத்துவ நுழைவுத் தேர்வு பிரச்னை தொடர்பாக, இதில் தொடர்புடைய அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசிக்க, மத்திய அரசு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

சி.பி.எஸ்.இ., சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த்: முதல் கட்ட நுழைவுத் தேர்வை எழுதியவர்கள், இரண்டாம் கட்டத் தேர்வையும் எழுத அனுமதித்தால், 9.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதும் நிலை ஏற்படும்.

அதே நேரத்தில், முதல் கட்டத் தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வு எழுதாத, 40 ஆயிரம் மாணவர்களை மட்டும், இரண்டாம் கட்டத் தேர்வை எழுத அனுமதிக்கலாம். இதனால், நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு போதிய மையங்கள் ஏற்பாடு செய்ய முடியும்.

தேர்வு முடிவில் தாமதம்; ஆசிரியர்கள், பெற்றோர் அதிருப்தி

பிளஸ் 2 தேர்வு முடிவை மே, 17ம் தேதி வெளியிடப்போவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்ச்சி முடிவில் ஏற்பட்ட தாமதத்தால், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிருப்தி நிலவுகிறது. 


தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தலுக்கு பின், மே, 17ம் தேதி வெளியாகும் என, அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் தயார் நிலையில் இருந்தும், தாமதமாக வெளியிட, அரசு எடுத்துள்ள முடிவு, ஆசிரியர்களையும், பெற்றோரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: 

பொதுவாக, மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியானால், அதன் தொடர்ச்சியான பணிகள், ஒரு வாரம் வரை பள்ளிகளில் நீடிக்கும். அவற்றை முடித்துவிட்டு, கோடை விடுமுறையில், குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவது ஆசிரியர்கள் வழக்கம். 

இந்த முறை மே, 16ம் தேதி வரை தேர்தல் பணிகள், 17ம் தேதிக்கு பின் பிளஸ் 2 தேர்வு முடிவு, அதன்பின், 25ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு முடிவு, அதன் தொடர்ச்சியான பணிகள் என பார்த்து முடிப்பதற்குள், அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்கிவிடும். 

மதிப்பீடு அனைத்தும் முடிவடைந்து, தயார் நிலையில் இருந்தும், தேர்வு முடிவு வெளியிட தாமதிப்பது ஏன் என தெரியவில்லை. ஏற்கனவே, இன்ஜினியரிங் மற்றும் கலைக்கல்லூரி விண்ணப்பங்கள் வழங்கப்படும் நிலையில், தேர்வு முடிவு வெளியீடு தாமதம், பெற்றோரையும் ஏமாற்றியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் கவுன்சிலிங் முறையில் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் 2016-2017ம் ஆண்டிற்கான மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கையை கலந்தாய்வு மூலம் நடத்த அனுமதிக்கலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் ஆக்கப்பூர்வமாக அறிவித்துள்ளது.


தேசிய நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், நுழைவுத்தேர்வு இல்லாமல் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்கு மாநில சட்டப்பேரவையில் தனிச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேசிய நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்றும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக மாநில அரசுகள் நிறைவேற்றியுள்ள சட்டத்தின்படி மாணவர் சேர்க்கையை நடத்த இந்த ஆண்டு மட்டும் அனுமதிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு 6-ம் தேதிக்குள் (இன்று) பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை சேர்க்கலாம் என்றும், நடப்பாண்டில் பிற மாநில அரசு கல்லூரிகளுக்கு அந்தந்த மாநிலங்கள் நுழைவுத் தேர்வை நடத்தலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்தது.

மேலும், தனியார் மருத்துவ கல்லூரிகள் தேர்வு நடத்த அனுமதிக்கக்கூடாது. அனைத்து மாணவர்களையும் இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்க முடியாது. மாநில அரசு கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகளும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ கவுன்சில் வழக்கறிஞர் தெரிவித்தார்.

விரைவில் அனைத்து பள்ளிகளிலும் யோகா கட்டாயமாகிறது

அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும், இந்த உத்தரவு வரும் கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வர உள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் ஸ்ரீபத் யாசோ நாயக் தெரிவித்துள்ளார்.


லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நாயக் கூறுகையில், அனைதஅது பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்பட வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. 

வரும் கல்வி ஆண்டு முதலே இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வரலாம். அதே சமயம் யோகா கட்டாயமாக கற்பிக்கப்படாது. மாணவர்கள் விரும்பினால் அதை கற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால், அந்த சமயத்தில் உடற்பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படும்.


போலீசார் அனைவருக்கும் யோகா கட்டாயமாக்கப்பட உள்ளது. பாதுகாப்புத்துறை வீரர்களுக்கும் இது கட்டாயமாக்கப்படுவது குறித்த திட்டம் பரிசீலனையில் உள்ளது. போலீஸ் படையினருக்கு வழங்கப்படும் யோகா பயிற்சிக்கு, போலீஸ் யோகா பயிற்சி என பெயரிடப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 

இந்தியா மட்டுமின்றி 192 நாடுகளிலும் இது கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் 21ம் தேதியன்று 2வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

பள்ளி வாகனங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ்

தாராபுரத்தில் நேற்று நடந்த, பள்ளி வாகனங்களுக்கான சோதனை முகாமில், தகுதியற்ற நிலையில் இருந்த, 21 வாகனங்களின் குறைபாடுகளை சரிசெய்ய, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


தாராபுரம் வட்டார போக்குவரத்து கழகம் மூலமாக, தாராபுரம், மூலனூர் சுற்றுப்பகுதியில் உள்ள, பள்ளி வாகனங்களுக்கான தகுதி தணிக்கை சோதனை முகாம் நேற்று நடந்தது. மகாராஜா கல்லூரி வளாகத்தில் நடந்த இம்முகாமில், வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்ரமணி தலைமையிலான குழுவினர், வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

மொத்தம், 74 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டதில், 21 வாகனங்களில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை சரி செய்ய அறிவுறுத்தி, நோட்டீஸ் வழங்கப்பட்டது. மீதியுள்ள, 53 வாகனங்களுக்கு, தகுதிச்சான்று வழங்கப்பட்டது. பள்ளி வாகன சோதனை பணியை, கலெக்டர் ஜெயந்தி ஆய்வு செய்தார். தேர்தல் பார்வையாளர் நித்யானந்த மண்டல், ஆர்.டி.ஓ., சரவணமூர்த்தி உடனிருந்தனர்.