யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/8/18

பலவித நோய்களுக்கு தீர்வு தரும் திராட்சை!

திராட்சை என்றதும் நம் நினைவில் வருவது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். ஆனால் திராட்சையில் பல வகைகள் உள்ளன. அதில் நிறைய சத்துக்கள் உள்ளது. திராட்சை சாறிலிருந்து ஒயின் தயாரிக்கபடுகிறது. ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. 
திராட்சை பழத்திலும், அதன் விதையிலும் உடலுக்கு பயன் தரும் பல நல்ல சத்துக்கள் உள்ளன. எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகம் உண்டு. சரியாக பசி இல்லாமல், வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள், கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரை டம்ளர் சாறு எடுத்து, அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தினால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு, திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதம். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு, கருப்பு திராட்சை சாறு நல்லது. <திராட்சையை அரை டம்ளர் சாறில், சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். >சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.
மார்பகப் புற்று நோய் தாக்கப்பட்ட பெண்களுக்கு, அருமருந்தாக உள்ளது திராட்சைப் பழம்! பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற திராட்சை சிறந்த மருந்தாகும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சப்பிட கூடாது.

கிழிந்த, அழுக்கான ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி?

அனைத்து வங்கிகளும், கிழிந்த, அழுக்கடைந்த மற்றும் பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாகப் புதிய நோட்டுக்களை வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவில் உள்ள எந்த வங்கியிலும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். பயன்படுத்த முடியாத ரூபாய் வங்கியின் மூலமாக ஏதாவது கட்டணம் செலுத்த பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். மாற்ற முடியாத ரூபாய் நோட்டுகள்: மடிந்து நொறுங்கிப் போன ரூபாய் நோட்டுக்கள், எரிந்து சிதைந்து போன ரூபாய் நோட்டுக்கள் போன்றவற்றை வங்கிகள் ஏற்றுக் கொள்ளாது. ஏதேனும் வாசகங்கள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்கள், அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் அல்லது கொள்கைகள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றவோ, டெபாசிட் செய்யவோ முடியாது

குப்பைகளின் மூலம் 3 மாதத்தில் 5 கோடி லாபம் பார்த்தவர்…

குழந்தைகளின் கைகளில் குப்பைகளைப் போல சிக்கியிருக்கும்….
வகையற்றுப் போன அந்த பொருட்களில் இருந்து புறப்பட்ட ஒரு பொறி தான், அந்த இளைஞனை கோடீஸ்வரனாக மாற்றியிருக்கிறது. பெயர் அக்ஷய் ஜெயின், வயது 29. பரீதாபாத்தில் வசித்து வந்த லட்சக்கணக்கான மக்களில், அவன் மட்டும்தான் மின்னணு கழிவுகளால் ஆன குப்பைகளை மூலதனக் கண்களோடு பார்த்தான். சுற்றுச்சூழலுக்கு மாசு உண்டாக்கும் அதனை சுத்திகரிக்க முடிவு செய்தான். எல்லோருக்கும் மூளை மூலையிலேயே இருந்தபோது, அவன் மட்டும்தான் மூளையை முதலீடாக மாற்றினார். இன்று மாதத்துக்கு பலகோடி ரூபாய் சம்பாதிக்கும் தொழிலதிபராக வளர்ந்து கொண்டிருக்கிறான்.
உதயமானது ஆலை 2015 ஆம் ஆண்டில் நமோ ஈவேஸ்ட் மேனேஜ்மெண்ட் என்ற ஆலையைத் தொடங்கி, மின்கழிவுகளை சுத்திகரிக்கத் தொடங்குகிறான். அடுத்த 3 மாதத்தில் 5.5 கோடி ரூபாய் சம்பாதிக்கிறான். அடுத்த 3 ஆண்டுகளில் 25 கோடி ரூபாய் என இலக்கு நிர்ணயிக்கிறான். அதற்கு ஏதுவாக 2017-18 ஆம் நிதி ஆண்டுகளில் 8 கோடி ரூபாயை சம்பாதித்து விட்டான்.
சுத்திகரிக்க திட்டம் பழைய மின்னணு பொருட்கள் எக்சேஞ்சாகவோ, வேர்க்கடலைகாரனிடமோ மாற்றுவது வழக்கம். இல்லையென்றால் தூக்கி எறிவது பழக்கமாக இருக்கிறது. இப்படி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான முறையில் தூக்கி எறியப்படும் கழிவுகளை சுத்திகரிப்பதை கடமையாக ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார் அக்ஷய் .
மின்னணு கழிவுகள் மின்பொருட்களில் செயல்படாதவை அகற்றப்படுகிறது. லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை பழுதுபார்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒயர்கள் மற்றும் மெட்டல் போன்றவை சுத்திகரிக்கப்படுகிறது. இதில் தேவையயில்லாத கழிவுகள் அரசு அங்கீகரித்த குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு 15 டன் மின்கழிவுகள் வீதம் ஆண்டுக்கு 5500 டன் கழிவுகள் சுத்திகரிக்கலாம் என்று அக்ஷய் தெளிவுபடுத்தினார்.
கல்வித் தகுதி டெல்லியில் பாரதீய வித்யா பவனில் பள்ளிப்படிப்பையும், கோஸ்டல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மேனேஜ்மெண்டில் பி டெக் பட்டயப் படிப்பை நிறைவு செய்தார் அக்சய். லண்டன் கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டத்தை முடித்து 2012 ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார்.
மதிப்பெண் உதவாது நான் சாதாரணமான மாணவன் தான். படிப்பாளியும் இல்லை முட்டாளும் இல்லை. பேட்மிண்டன், டேபிள் டென்னிஸில் ஆர்வம் இருந்தது. சும்மா இருக்கும்போது புத்தகம் படிப்பேன். மற்ற நேரங்களில் மனிதர்களின் அனுபவங்களில் இருந்து வாழ்க்கையை கற்றுக் கொண்டேன். மதிப்பெண்ணை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. ஏனென்றால் வெற்றிகரமான மனிதர்களுக்கு பின்னால் ஆர்வம்தான் இருந்திருக்கிறது என்றார் அக் ஷய்
கடனில் தொடங்கிய ஆலை லண்டனில் படிப்பை முடித்து பரீதாபாத் திரும்பியதும் மாருதியில் 38000 ரூபாய் சம்பளத்தில் பணியில் இணைகிறார். லண்டனில் மின்கழிவு மறு சுழற்சி முறையில் பின்பற்றிய நேர்த்தியை பார்த்த அக்ஷய், அப்பாவிடம் 1 கோடி ரூபாய் கடனை வாங்குகிறார். பரீதாபாத்தில் மறுசுழற்சி தொழிற்சாலையைத் தொடங்குகிறார்.
வணிக மந்திரம் முதலீட்டை விட 15 சதவீதத்துக்கு அதிகமாக வருவாய் ஈட்ட வேண்டும் என்ற அப்பாவின் வணிக மந்திரம் கைகொடுப்பதாக கூறும் அக் ஷய், 30 விழுக்காடு கடனை வட்டியுடன் அப்பாவுக்கு செலுத்தி விட்டதாக தெரிவிக்கிறார்.
மின்னணு கழிவு சேகரிப்பு மின்கழிவுகளை வீடுகளில் மட்டும் சேகரிக்காமல் பல்வேறு இடங்களில் அதற்கான தொட்டிகளை வைத்து சேகரித்து வருகிறார்கள். இப்போது 23 மாநிலங்கள் மற்றும் 7 முகமைகள் மூலமாக மின்கழிவுகளை பெறப்பட்டு தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. சாம்சங், கோத்ரெஜ், ஏசர் வோல்டாஸ் மற்றும் புளூ ஸ்டார் ஆகிய நிறுவனங்களிலும் சேதமடைந்த மின்பொருட்களை மொத்தமாக வாங்கி வருவதாக அக்சய் கூறுகிறார்

புதிய பாடங்கள் நடத்தியாச்சு : இன்னும் பயிற்சி இல்லை!!!

காலாண்டு தேர்வு துவங்கவுள்ள நிலையில், பிளஸ் 1 வணிக கணிதம் உட்பட சில புதிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை' என,ஆசிரியர் குற்றம் சாட்டுகின்றனர்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றது முதல், அத்துறையை மேம்படுத்தும் வகையில், பொதுத் தேர்வுகள், முடிவுகள் தேதியை முன்கூட்டியே அறிவிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. புதிய பாடத் திட்டம், 12 ஆண்டுக்கு பின் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1க்கு அறிமுகம் செய்து, மாணவர்களுக்கு, ஜூனில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.கற்பித்தலில் புதுமை ஏற்படுத்தும் வகையில், 'கியூ.ஆர்., கோடு' உட்பட சிறப்பு அம்சங்கள் பாடங்களில் புகுத்தப்பட்டன. இதுபோன்ற நவீன முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு, ஜூலை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
ஆனால், பிளஸ் 1 வணிக கணிதம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட சில பாடங்களுக்கு, இன்னும் பயிற்சி அளிக்கப்படவில்லை. மே மாதம் பயிற்சி துவங்கியிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். காலாண்டு தேர்வை மாணவர்கள் சந்திக்க உள்ள நிலையில் மாதிரி வினா விடை கூட வழங்கப்படவில்லை.
ஆசிரியர்கள் கூறுகையில், 'ஜூனில் பாடப் புத்தகம் வழங்கப்பட்டது. அன்று முதல் பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ஒருமாதம் சென்ற பின், எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்ற பயிற்சியை துவங்கினர். 'பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட சில பாடங்களுக்கு பயிற்சி அளிக்கும் செயல் திட்டம் இல்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது' என்கின்றனர்.

ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு சஸ்பெண்ட் அரசு ஊழியர்களுக்கான பிழைப்பூதிய சட்டத்தில் திருத்தம்

சஸ்பெண்ட் அரசு ஊழியர்களுக்கான
பிழைப்பூதிய சட்டத்தில் திருத்தம் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியவர் அறிவானந்தம். இவரது அலுவலகத்தில் கடந்த 17.10.2017ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவரிடம் இருந்து ரூ.16 ஆயிரத்து 50 பறிமுதல் செய்தனர். உடனடியாக அவரை கள்ளிக்குடிக்கு மாற்றினர். பின்னர் கடந்த ஜூலை 31ல் ஓய்வு பெறுவதற்கு முன்தினம் அவரை சஸ்பெண்ட் செய்தனர். அந்த உத்தரவை ரத்து செய்து, ஓய்வுபெற அனுமதித்து தனக்குரிய பணப்பலன்களை வழங்கக் கோரி அறிவானந்தம் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ''குற்ற வழக்கு நிலுவையில் இருக்கிறது என்ற காரணத்திற்காக ஒழுங்கு நடவடிக்கை மீதான விசாரணையில் பங்ேகற்காமல் இருக்க முடியாது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனுதாரர் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விசாரணையை தினசரி அடிப்படையில் விரைவாக விசாரிக்க வேண்டும். 7 வேலை நாளுக்கு மேல் விசாரணையை ஒத்திவைக்காமல் விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்கும் 1981ம் ஆண்டு சட்டத்தில் சில திருத்தம் செய்யலாம். இதன்படி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு அரசு ஊழியருக்கு முதல் 6 மாதத்திற்கு 75 சதவீத பிழைப்பூதியம் வழங்க வேண்டும். 
6 மாதத்திற்குள் விசாரணை முடியாமல் இருந்தால், சம்பந்தப்பட்டவர் ஏதேனும் நீதிமன்ற உத்தரவு பெறாத நிலையில் 75 சதவீத பிழைப்பூதியத்தை 50 சதவீதமாக குறைக்கலாம். ஓராண்டுக்கும் மேல் விசாரணை இழுத்தடிக்கப்பட்டால் அதிலிருந்து 25 சதவீதத்தை குறைக்கலாம். சஸ்பெண்ட் ஆகி ஓராண்டுக்கும் மேலான நிலையில் அவர் மரணமடைந்தால், விசாரணை தாமதத்திற்கு அவர்தான் காரணம் எனத் தெரிய வந்தால், அவரது வாரிசுதாரர்களுக்கு பிழைப்பூதியம் வழங்க வேண்டியதில்லை," என்று உத்தரவிட்டார்.

பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதன் காரணம் என்ன தெரியுமா...?

                                        
பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும்  அழைக்கப்படுகின்றது.

இறைவனின் தூதரான இப்றாகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் (அரபி மாதம்) துல்ஹஜ் 10-ம் நாள், ‘ஹஜ் பெருநாள்  எனப்படும் பக்ரீத்’ போற்றிக் கொண்டாடப்படுகிறது. பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை பலி  கொடுக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இந்தப் பண்டிகை தியாகப் பெருநாள் எனப் பொருள்படும் அரபிய பதமான, ‘ஈத் அல்-அதா’ என்றே  அழைக்கப்படுகிறது.


பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதன் காரணம்:

இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து  வந்ததார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு  பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். இஸ்மாயீல் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது,  அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி இஸ்மாயீலிடம் கூறிய இப்ராஹிம், அவரின்  அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த  இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டான்.

இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள்  தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

கேரளாவை கலக்கும் தற்காலிக 'பவர் பேங்க்'!

                                       
திருவனந்தபுரம்: இன்ஜினியரிங் மாணவர்கள் உருவாக்கிய, 'எமர்ஜென்சி பவர் பேங்க்' வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.




கேரள மக்களுக்கு தற்போதைய உடனடி தேவையாக, தகவல் தொடர்பு வசதி தான். ஆனால், வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்களின் மொபைல் போன்கள், 'சார்ஜ்' இல்லாமல் செயல் இழந்து விட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் கேரள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


'இன்ஸ்பையர்' குழு

திருவனந்தபுரத்தில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள், 'இன்ஸ்பையர்' என்ற பெயரில் ஒரு குழுவை நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர் 20 சதவீத சார்ஜ் ஏற்றும் எமர்ஜென்சி பவர் பேங்க்குகளை உருவாக்கி உள்ளனர்.

கடந்த சனிக்கிழமை, இந்த பவர் பேங்க்குகளை ஹெலிகாப்டர்களில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் வீசியுள்ளனர். அவற்றை மக்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் இன்ஜி., மாணவர்கள் செய்த உதவியை கேரள மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். முதல்கட்டமாக, 100 பவர் பேங்க்குகளை மாணவர்கள் தயாரித்தனர். மேலும், 200 பவர் பேங்க்குகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

How to calculate new Profession Tax amount

IAS FREE COACHING | குடிமைப்பணி தேர்வுகளுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி செப்டம்பர் 19-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

15/8/18

அனைவருக்கும் சுதந்திர தினம் நல்வாழ்த்துகள்


வட மாநிலங்களுக்கு நகருது கன மழை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை, :வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், வட கிழக்கு மாநிலங்களுக்கு, கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தென் மேற்கு பருவ மழையின் தீவிரத்தால், கர்நாடகா மற்றும் கேரளாவிலும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும், கன மழை கொட்டுகிறது.

வட மாநிலங்களுக்கு நகருது கன மழை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி

கேரளாவில் வெள்ளப் பெருக்கால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், 'இன்னும் இரண்டு நாட்களுக்கு, கேரளா,கர்நாடகாவில் கன மழை தொடரும்; அதன்பின், வட மாநிலங்களை நோக்கி மழை நகரும்' என, வானிலை மையம் கணித்துள்ளது.இதற்கிடையில், வங்கக் கடலின் வட மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வட கிழக்கு மாநிலங்களில் இரண்டு நாட்களுக்கு கன மழை எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச் சந்திரன் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை, நீலகிரி மற்றும் கோவை

மாவட்டங்களில் மட்டும், இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் திடீர் மழை பெய்யலாம்.கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

சாதாரண படுக்கை வசதிகள் ஏசியாக மாற்றம்: தெற்கு ரயில்வே எடுத்திருக்கும் அதிரடி முடிவு!

சாதாரண படுக்கை வசதிகளை
 ஏசி படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளாக மாற்றி வருவாயைக் கூட்ட தெற்கு ரயில்வே அடுத்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன் மூலம் சாதாரண படுக்கை வசதி கொண்ட இருக்கைகளுக்கு கொடுத்து வந்த கட்டணத்தை விட ரூ.500 முதல் ரூ.800 வரை கூடுதல் கட்டணத்தை பொதுமக்கள் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயிலில் இதுவரை இருந்த 864 படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 702 ஆகக் குறைக்கப்படுகிறது. இதுவரை 12 பெட்டிகளுடன் 864 படுக்கை வசதி கொண்ட இருக்கைகளுடன் இயங்கி வந்த பாண்டியன் விரைவு ரயிலில் 9 புதிய பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இஸ்ரோவின் சூப்பர் பிளான்.. மக்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்க 2 டிவி சேனல்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மக்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காகவும், பள்ளி மாணவர்களிடையே அறிவியல் பயிற்சி முகாமைt  நடத்துவதற்காகவும் 2 டிவி சேனல்களை தொடங்க திட்டமிட்டுள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன், "8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக இஸ்ரோ மாணவர்களின் திறன் வளர்க்கும் திட்டங்களை உருவாக்கும்" என்று தெரிவித்தார்

 தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், "விண்வெளி முகமை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 25 முதல் 30 நாட்கள் வரை பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி காலங்களில் மாணவர்கள் தங்களுடைய சிறிய செயற்கைகோள்களைத் தயாரிக்க ஆய்வகங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்" என்றும் தெரிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் சென்றடையும் வகையில் டிவி சேனல் தொடங்க திட்டமிட்டுள்ளது பற்றி கூறுகையில், 
நம்மிடம் அறிவியலுக்காக தனியாக டிவி சேனல் எதுவும் இல்லை. அதனால், இஸ்ரோ தொடங்கும் டிவி மக்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் என்று கூறினார். விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய சிந்தனைகளுடன்t வருபவர்களுக்காக ஒரு காப்பீட்டு மையம் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது பற்றி இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். \
இது குறித்து சிவன் கூறுகையில், "நமக்கு புதிய விண்வெளி சிந்தனையாளர்களுக்கான ஒரு காப்பீட்டு மையம் தேவை. இதில் எங்களுடைய நோக்கம் சிறந்த அறிவு, சிறந்த ஆராய்ச்சி. இதில் ஏற்படும் வளர்ச்சியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் ஈடுபடும் புதிய அறிவியலாளர்கள் எங்களுடன் சேராமலே இஸ்ரோவுக்கு பங்களிப்பு செய்யலாம்" என்று தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப்பில் இதெல்லாம் நடக்குதா? அதிர்ச்சிக்கே அதிர்ச்சி!!

இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு செயலியான வாட்ஸ் அப்பில் ஹேக் செய்ய முடியும் என்ற தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில், குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ்அப் செயலி மூலம் வதந்திகள் பரவி, பல அப்பாவிகள் அடித்தே கொல்லப்பட்டனர். இதனை தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. வாட்ஸ்அப் நிறுவனமும், இதனை தடுக்கும் விதமாக, போலி செய்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில், ஃபார்வேர்டெட் (forwarded) லேபெல் வசதி அறிமுகப்படுத்தியது.
இருப்பினும், வாட்ஸ்அப் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி, பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் மெசேஜ்களை ஹேக்கர்கள் படிப்பதுடன் அவற்றை மாற்றி அமைக்க முடியும் என்று, செக்பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர்.
இதனை அவர்கள் ஒரே ஒரு கிளிக்கில் செய்து முடித்து விடுவார்களாம், அதாவது நாம் அனுப்பும் குறுந்தகவல்களை இடைமறித்து, அவற்றை மாற்றியமைக்க முடியுமாம், மேலும், தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் க்ரூப் சாட் உள்ளிட்டவைக்களிலும், நீங்கள் அனுப்பியதாக ஒருவருக்கு குறுந்தகவல்களை அனுப்ப இயலுமாம்.
என்ன சொல்லி என்ன பண்ண., ''முதலை வாயில் தலையை விட்ட கதை தான் இன்றய இணைய பயன்பாடு'', நாம் நம் இரகசியங்களை நேரில் வைத்துக்கொள்வதோடு நிறுத்திக்கொள்வதே நல்லது என்று சமூக ஆர்வலர்களை கருத்து தெரிவிக்கின்றனர்.

தொலைநிலை படிப்புகளை நடத்த 2 பல்கலைக்கு மட்டும் அங்கீகாரம்

தமிழகத்தில், சென்னை மற்றும்  அண்ணா பல்கலைகள் மட்டும், தொலைநிலை கல்வியில், படிப்புகளை நடத்த, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரத்தில், சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புக்கு அனுமதி தரப்படவில்லை.தொலைநிலை கல்வியில் பல்வேறு மாற்றங்களை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அமல்படுத்தி வருகிறது.

பரிசீலனைஇதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் தொலை நிலை கல்விக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட பல்கலைகளின் பட்டியலை, யு.ஜி.சி., வெளியிட்டு உள்ளது. இதன்படி, சென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலைக்கு மட்டும், அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் அங்கீகார விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது.
அனைத்து பல்கலைகளுக்கும், சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு அனுமதி வழங்கப் படவில்லை.அதேபோல, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,- பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு, தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்றால் மட்டுமே, அனுமதி தரப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலையை பொறுத்த வரை, பி.ஏ., - எம்.ஏ., பொது நிர்வாகம், எம்.ஏ., அரசியல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும், அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு மட்டும், அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.அதிர்ச்சிஅண்ணாமலை பல்கலை, அழகப்பா, பாரதியார், மதுரை காமராஜர், பெரியார், திருவள்ளுவர், பாரதிதாசன், மனோன்மணியம் சுந்தரனார் உட்பட, 10 பல்கலைகளின் பெயர்கள், அங்கீகார பட்டியலில் இல்லை. இதனால், பல்கலை நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன

இனி வினாத்தாள், 'அவுட்' ஆகாது :

இந்தாண்டு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியானதால், சர்ச்சையில் சிக்கிய, சி.பி.எஸ்.இ., வருங்காலத்தில் இதுபோன்ற தவறு நிகழாமல் தடுக்கும் வகையில், 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

வினாத்தாள்,அவுட்,ஆகாது,சி.பி.எஸ்.இ.,மைக்ரோசாப்ட்,உதவி
சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம், இந்தாண்டு நடத்திய, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியானதால் சர்ச்சை எழுந்தது. இதனால், சி.பி.எஸ்.இ.,க்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், வருங்காலத்தில், வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க திட்டமிட்ட, சி.பி.எஸ்.இ., அமெரிக்காவை ச் சேர்ந்த, தகவல் தொடர்பு துறை ஜாம்பவான் நிறுவனம், மைக்ரோசாப்டுடன் கைகோர்த்துள்ளது.
இரு நிறுவனங்களும் செய்துள்ள ஒப்பந்தப்படி, சி.பி.எஸ்.இ.,யின் டிஜிட்டல் கேள்வித்தாள்கள், வெளியாகாத வகையில், அதீத பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த தொழில்நுட்ப தீர்வை, மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும்.
இதுகுறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய பிரிவு மேலாண்மை இயக்குனர், அனில் பன்சாலி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. சி.பி.எஸ்.இ., நடத்தும் தேர்வுகளின்போது, டிஜிட்டல் முறையிலான கேள்வித் தாள்கள், தேர்வு துவங்குவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன் வரை,
பார்க்க முடியாத வகையில், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக உருவாக்கப்படும்.
அதற்கென, பிரத்யேக தொழில் நுட்பத்தை மைக்ரோசாப்ட் உருவாக்கி உள்ளது. புதிய தொழில் நுட்பத்தில் தயாராகும் வினாத்தாள்கள், சிறப்பு குறியீடு உடையவை. எனவே, எந்த சமயத்தில் தவறு நிகழ்ந்தாலும், எளிதில் கண்டுபிடிக்க முடியும். இந்த தொழில் நுட்பம் தொடர்பாக நடந்துள்ள அனைத்து சோதனைகளும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்

பள்ளியிலேயே மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவு: தமிழக அரசு அறிவிப்பு :

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக 2011ம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு இணையதளத்தில்  (https://tnvelaivaaippu.gov.in) பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தற்போது 2018ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் வருகிற 16ம் தேதி வழங்கப்பட உள்ளதை அடுத்து 16.8.2018 முதல் 30.8.2018 வரை 15 நாட்களுக்கு ஒரே  பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி  கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொள்ள உள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த  வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம்.
மேலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு  அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம்.
ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம்

SPD PROCEEDINGS-BRTE COUNSELING ONLINE ENTRY தொடர்பாக தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குனர் கடிதம்

தமிழக ஓய்வூதியர்கள் மற்றும் விரைவில் ஓய்வூதியம் பெற இருப்பவர்கள் மருத்துவ காப்பீடு திட்டம் பெறுவது சார்பான கருவூலத்துறை முதன்மை செயலாளர் கடிதம் !



14/8/18

TRB - சிறப்பாசிரியர் சான்றிதழ் பிரச்னை : இன்று சரிபார்ப்பு நடக்குமா?

சிறப்பு ஆசிரியர் பதவிக் கான தேர்வில், சான்றிதழ் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், இன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடக்குமா என, தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், தையல், மற்றும் இசை பாடப்பிரிவுகளுக்கு, 1,325 சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியமான,டி.ஆர்.பி., வாயிலாக, 2017 செப்., 23ல் போட்டி தேர்வு நடந்தது. இதில், 36 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களுக்கான, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், சிறப்பு ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வைத்திருப்போர், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை, டி.ஆர்.பி.,யிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், சிறப்பு ஆசிரி யர்களுக்கான தேர்வை நடத்தும், தேர்வுத்துறையோ, தமிழ்வழி சான்றிதழ் வழங்குவதில்லை என, அறிவித்துள்ளதால், தேர்வர்கள் தாங்கள் படித்த பள்ளியில், தமிழ் வழி சான்றிதழ் பெற முற்பட்டனர்; அதுவும் முடியவில்லை.மேலும், அரசு தேர்வுத்துறை மட்டுமே, தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சியை நடத்தியது. ஆனால், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் சார்பிலும், இந்த பயிற்சி நடத்தப்பட்டதாக கூறி, சிலர் சான்றிதழ் வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், புகார் எழுந்து உள்ளது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்டோர், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் மற்றும் டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் மனு அளித்துஉள்ளனர். உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அறிவித்தபடி சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நடக்குமா; தள்ளி வைக்கப்படுமா என, தேர்வர்களிடையே குழப்பம் ஏற்பட்டுஉள்ளது.'வழக்கு உள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பை மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்' என, கலை ஆசிரியர் நல சங்கம் கோரிக்கை விடுத்துஉள்ளது

1.38 லட்சம் வரி ஏய்ப்பு வழக்குகள் நிலுவை :

சுப்ரீம் கோர்ட்,ஐகோர்ட் உள்ளிட்ட கோர்ட்டுளில் 1.38 லட்சம் வரி ஏய்ப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 056 வழக்குகளில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் 92 ஆயிரத்து 766 வழக்குகளும், ஐகோர்ட்டுகளில் 39 ஆயிரத்து 66 வழக்குகளும், சுப்ரீம்கோர்ட்டில் 6 ஆயிரத்து224 வழக்குகளும் உள்ளன.

பல்வேறு கோர்ட்டுகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆகும். மேலும் மறை முக வரி ஏய்ப்பு வழக்குகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம்31-ம் தேதி வரையில் 44 ஆயிரத்து 077 ஆக உள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக ஆயிரத்து 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மிக பழமையான மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வரும் வழக்காக1973-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட யமுனாநகர் பல்லார்பூர் இண்டஸ்ட்ரீஸ் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இணையதள பெயர்கள்; விரைவில் அமலுக்கு வருகிறது

பிராந்திய மொழிகளில் இணையதளங்களுக்கு பெயரிடும் வசதி, விரைவில் அமலுக்கு வரவுள்ளது. 
டி.என்.எஸ்., எனப்படும், உலகளாவிய, இணையதள பெயர் சூட்டும் நடைமுறையை, ஐ.சி.ஏ.என்.என்., எனப்படும், பெயரிடல் மற்றும் எண்களுக்கான இணையதள கழகம் என்ற நிறுவனம் பொறுப்பேற்று செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம், இந்தியாவில் உள்ள, தமிழ் உள்ளிட்ட, 22 மொழிகளில் இணையதள பெயர் சூட்டும் நடைமுறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, பெங்காலி, தேவநாகரி, குஜராத்தி, குர்முகி ஆகிய ஒன்பது, இந்திய மொழிகளில், இணையதளங்களுக்கு பெயரிடும் பணிகள் நடக்கின்றன. இதை, ஐ.சி.ஏ.என்.என்., நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர், சமிரான் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், தமிழ் தொடர்பான இணையதளங்களின் பெயர்களை, தமிழிலேயே தட்டச்சு செய்து, பெற முடியும். தற்போதைய நடைமுறையில், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, சம்பந்தப்பட்ட இணையதள முகவரியை பெறும் வசதி மட்டுமே உள்ளது.

உலக மக்கள் தொகையில், 52 சதவீதம் பேர், இணையதளம் பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள, ஆங்கிலம் தெரியாத, 48 சதவீத மக்கள், அவர்களின் சொந்த மொழிகளில் தட்டச்சு செய்து இணையதளத்தை பெறுவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், சமிரான் குப்தா கூறினார்.

வேளாண் கல்லூரிகளில் 358 இடங்கள் காலி

வேளாண் இளங்கலை படிப்புக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு
நிறைவடைந்தது. தனியார் கல்லுாரிகளில், 358 அரசு ஒதுக்கீட்டு
இடங்கள் காலியாக உள்ளன.தமிழ்நாடு வேளாண் பல்கலையின்,
14 உறுப்பு கல்லுாரிகள், 26 இணைப்புக் கல்லுாரிகள் வாயிலாக,
12 இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. 2018 - 19ம்
கல்வியாண்டுக்கு, 3,422 இடங்களுக்கு, 42 ஆயிரத்து, 676 பேர்
விண்ணப்பித்திருந்தனர்.


வேளாண் பல்கலை டீன் மகிமை ராஜா கூறியதாவது:
சிறப்பு ஒதுக்கீடுகள், தொழில் கல்வி,
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் நிறுவனங்கள் உட்பட
பொது பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு, ஜூலை, 7
முதல், 18 வரை நடந்தது. இதில், 2,672 இடங்கள் நிரப்பப்பட்டன.
ஜூலை, 31 முதல் ஆக., 10 வரை நடந்த, இரண்டாம் கட்ட
கலந்தாய்வில், 392 இடங்கள் நிரப்பப்பட்டன; உறுப்பு
கல்லுாரிகளில், அனைத்து இடங்களும் நிரம்பின. இணைப்பு
கல்லுாரிகளில், 65 இடங்கள், பல்கலையால் நிரப்பப்படும்
 நிலையில், 358 இடங்கள் மட்டும் காலியாக உள்ளன.இளநிலை
முதலாமாண்டு மாணவர்களுக்கு, இன்று கல்லுாரி துவங்குகிறது.
ஒதுக்கப்பட்ட கல்லுாரிகளில், மாலை, 5:00 மணிக்குள்
மாணவர்கள், சேர்க்கை பதிவு செய்ய வேண்டும்

போலீஸ் தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில், இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய நடந்த, எழுத்து தேர்வின் முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.தமிழக சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இரண்டாம் நிலை காவலர்களாக, 6,140 பேரை தேர்வு செய்ய, 2017ல், அறிவிப்பு வெளியானது.இதற்கான எழுத்து தேர்வு, இந்த ஆண்டு மார்ச்சில் நடந்தது; 2.88 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.தேர்ச்சி பெற்றோரின் விபரமும், இட ஒதுக்கீடு ரீதியிலான, 'கட் - ஆப்' மதிப்பெண் விபரமும், மாவட்ட வாரியாக, www.tnusrb.com என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வெழுதியோர், தங்களுக்குரிய ரகசிய எண்களை பதிவேற்றம் செய்து, மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சுதந்திர தினத்தில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை Photo எடுத்து Workplace @ Facebook இல் வெளியிட உத்தரவு.

சுதந்திர தினத்தன்று விழா முடிந்ததும், பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி, புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
பள்ளிக்கல்வி துறை சார்பில், இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்
72வது சுதந்திர தினத்தை வரும் 15ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் மிகவும் சிறப்பாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பள்ளிகளில் நமது இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாற்றையும், சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களையும், அவர்கள் பட்ட இன்னல்களையும், மாணவர்களுக்கு எடுத்துரைத்து உணர்வு பூர்வமாக கொண்டாட வேண்டும்
பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்துதல் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது
நடப்பு கல்வி ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர்- ஆசிரியர் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும்
எனவே, ஆண்டுதோறும் இதனடிப்படையில், இந்தியாவின் 72வது சுதந்திர தின நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றவுடன், பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடத்தப்பட வேண்டும்
இக்கூட்டத்தில் மாணவர்களின் வருகை, கற்றல் கற்பித்தல் பணிகள் மற்றும் அடைவு திறன் குறித்தும், பள்ளியின் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகள்(மின்னல் கல்விச் செய்தி) குறித்தும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தேவைகளை கேட்டறிதல் சார்ந்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.நிகழ்ச்சிகள் நிறைவுற்றவுடன், பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்தப்பட்டது தொடர்பான புகைப்படங்களை தலைமையாசிரியர்களது ''லாக் இன்'' மூலம், ''ஒர்க் பிளேஸ்''ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

பிளஸ் 1 ஜூன் 2018 துணைத் தேர்வு முடிவுகள் இன்று அரசு தேர்வுத்துறை இணையதளத்தில்

சிறார்களை தற்கொலைக்கு தூண்டும், 'மோமோ' : பெற்றோர், ஆசிரியர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

சிறுவர்கள் மற்றும் மாணவர்களை தற்கொலைக்கு துாண்டும், 'ப்ளூ வேல்' என்ற, 'ஆன் லைன்' விளையாட்டு போல, தற்போது, 'மோமோ' என்ற, அரக்கன் தலை துாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
'குழந்தைகள் பாதுகாப்பில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.சிறுவர்கள் மற்றும் வாலிபர்களை தற்கொலைக்கு துாண்டும், 'ப்ளூவேல்' என்ற, 'ஆன் லைன்' விளையாட்டு, 2017ல், தமிழகம் உட்பட, உலகம் முழுவதும் உள்ள நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதாவது, மொபைல் போனில், 'ப்ளூவேல்' என்ற, ஆன் லைன் விளையாட்டிற்கான, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்தால் போதும். அவர்களுக்கு, 50 நாட்களுக்கு, 'டாஸ்க்' தரப்படும்.கட்டளைகள் உதாரணமாக, 'உன் கையில் பிளேடால், மூன்று முறை கிழித்துக் கொள்; அதை போட்டோ எடுத்து அனுப்பு. அதிகாலையில் பேய் படம் பார்; 'செல்பி' எடுத்து அனுப்பு. 'நள்ளிரவில், ரயில்வே டிராக்கில் நில்; அந்த, 'வீடியோ' காட்சியை, சமூக வலைதளங்களில் பதிவேற்று. உயரமான கட்டடம் மற்றும் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்' என, அடுக்கடுக்காக, கட்டளைகள் பிறப்பிக்கப்படும். இதை எல்லாம் செய்யமாட்டேன் என்று, சொல்ல முடியாது. ஏனெனில், இந்த ஆன்லைன் விளையாட்டிற்கான, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்யும் போதே, உங்கள் மொபைல் போனில் இருக்கும் அனைத்து தகவல்களும், இந்த விளையாட்டு தொடர்பான, சர்வருக்கு சென்று விடும். 'டாஸ்க்கை செய்யவில்லை என்றால், உங்கள் தகவல்கள் அனைத்தும், பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' என, மிரட்டல் வரும். மொபைல் போன்களை, 'ஹேக்' செய்பவர்களால் நடத்தப்பட்டு வந்த, இந்த விளையாட்டால், பலர் பலியாகினர். தமிழகத்தில், மதுரையை சேர்ந்த, விக்கி, 19 என்ற, தனியார் கல்லுாரி மாணவர், 'ப்ளூவேல்' விளையாட்டில் சிக்கி, தற்கொலை செய்து கொண்டார்.தற்போது, புளூவேலுக்கு நிகராக, ஆன்லைனில் விளையாடக் கூடிய, 'மோமோ' என்ற, அரக்கன் தலை துாக்கி உள்ளான். இந்த விளையாட்டிற்கான இணைய இணைப்பு, 'வாட்ஸ் ஆப்'பில் வேகமாக பரவி வருகிறது.
கண்காணிக்க வேண்டும் : இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:இணையதளம் வழியாக தகவல் திருட்டில் ஈடுபடும், ஹேக்கர்களால், 'ஆன் லைன்' விளையாட்டிற்கான, 'ஆப்'வடிவமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள், ப்ளூவேல், மோமோ என, பல்வேறு பெயர்களில், 'ஆப்'கள் துவங்கி, பலவீனமானவர் களை தற்கொலைக்கு துாண்டி வருகின்றனர். இதுபோன்ற விளையாட்டு களை தடை செய்ய, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.பெற்றோர், தங்கள் குழந்தைகள், நள்ளிரவு மற்றும் அதிகாலையில், கணினி மற்றும் மொபைல் போனில், நேரத்தை அதிகமாக செலவிடுகின்றனரா என, பார்க்க வேண்டும். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில், மாணவர்களின் செயல்பாடுகளை, ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தால், அவர்களுடன் பேசி, சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறப்பாசிரியர் சான்றிதழ் பிரச்னை : இன்று சரிபார்ப்பு நடக்குமா?

சிறப்பு ஆசிரியர் பதவிக் கான தேர்வில், சான்றிதழ் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், இன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடக்குமா என, தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழக அரசு பள்ளிகளில், உடற்கல்வி, 
ஓவியம், தையல், மற்றும் இசை பாடப்பிரிவுகளுக்கு, 1,325 சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வாயிலாக, 2017 செப்., 23ல் போட்டி தேர்வு நடந்தது. இதில், 36 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களுக்கான, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், சிறப்பு ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வைத்திருப்போர், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை, டி.ஆர்.பி.,யிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், சிறப்பு ஆசிரி யர்களுக்கான தேர்வை நடத்தும், தேர்வுத்துறையோ, தமிழ்வழி சான்றிதழ் வழங்குவதில்லை என, அறிவித்துள்ளதால், தேர்வர்கள் தாங்கள் படித்த பள்ளியில், தமிழ் வழி சான்றிதழ் பெற முற்பட்டனர்; அதுவும் முடியவில்லை.மேலும், அரசு தேர்வுத்துறை மட்டுமே, தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சியை நடத்தியது. ஆனால், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் சார்பிலும், இந்த பயிற்சி நடத்தப்பட்டதாக கூறி, சிலர் சான்றிதழ் வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், புகார் எழுந்து உள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்டோர், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் மற்றும் டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் மனு அளித்துஉள்ளனர். உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அறிவித்தபடி சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நடக்குமா; தள்ளி வைக்கப்படுமா என, தேர்வர்களிடையே குழப்பம் ஏற்பட்டுஉள்ளது.'வழக்கு உள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பை மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்' என, கலை ஆசிரியர் நல சங்கம் கோரிக்கை விடுத்துஉள்ளது.

பள்ளியில் இறை வணக்க கூட்டம் மாணவர்களுக்கு இனி கட்டாயம்

பீஹார் மாநிலத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலையில் நடக்கும் இறை வணக்கக் கூட்டத்தின் போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

பீஹார் மாநிலத்தில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இந்த மாநில கல்வித் துறையின் முதன்மை செயலர், ஆர்.கே.மஹாஜன், மாவட்ட கல்வி அதிகாரி களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:மாநிலத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலையில், கண்டிப்பாக, இறை வணக்கக் கூட்டத்தை நடத்த வேண்டும். இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், தவறாது பங்கேற்க வேண்டும்.இதன் மூலம், மாணவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் நேர தவறாமை அதிகரிக்கும். இறை வணக்கக் கூட்டத்தின் போது, ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். ஒலிபெருக்கி இல்லாத பள்ளிகள், பள்ளி மேம்பாட்டு நிதியிலிருந்து வாங்க வேண்டும்.இறை வணக்கக் கூட்டத்தின் போது, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நன்னெறி கதைகளை கூற வேண்டும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளரக் கூடிய அளவில், அறிவுரைகள் வழங்க வேண்டும். மேலும், வகுப்பு அட்டவணையில், கடைசி பாடவேளையை, விளையாட்டுக்காக ஒதுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பள்ளிக் கல்வித் துறை- வருகின்ற ஆகஸ்ட் 15,நவம்பர் 14, ஜனவரி 26 ஆகிய நாட்களில் அனைத்து வகை பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர்கழக கூட்டம் நடத்தி புகைப்படத்துடன் கூடிய அறிக்கை சமர்பிக்க உத்தரவு


கல்வித் துறையில் வாராக் கடன்கள் அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்

கல்வித் துறையில் வாராக் கடன்கள் அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று நிதியாண்டுகளாக கல்வித் துறையில் வாராக் கடன்கள் ஏற்றப் பாதையில் பயணித்து வருகிறது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 
வரையில் கல்வித் துறையிலுள்ள செயல்படா சொத்துகளின் மதிப்பு 9 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்படி, கல்வித் துறையில் வாராக் கடன்கள் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 7.3 விழுக்காடும், பின்னர் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 7.67 விழுக்காடும், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 8.67 விழுக்காடும் அதிகரித்துள்ளது.  2017-18ஆம் ஆண்டில் கல்விக் கடன்களின் மொத்த மதிப்பு ரூ.71,724.65 கோடியாக இருந்துள்ளது. இதில் ரூ.6,434.62 கோடி வாராக் கடன்களாக இருந்துள்ளது. கடந்த நிதியாண்டில் 7.86 லட்சம் மாணவர்களுக்கு ரூ.13,470 கோடி மதிப்பிலான கல்விக் கடன்களை பொதுத் துறை வங்கிகள் வழங்கியுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1.5 லட்சம் மாணவர்கள் கல்விக் கடன் பெற்றுள்ளனர். மேலும், கேரளாவைச் சேர்ந்த 99,314 மாணவர்களும், கர்நாடகாவைச் சேர்ந்த 90,630 மாணவர்களும் கல்விக் கடன் பெற்றுள்ளனர்.

12/8/18

சுதந்திர தினவிழாவில் பள்ளிகளில் மரக் கன்றுகள் நட வேண்டும்!!! -



🍅 தொடக்க கல்வித்துறை இயக்குநர் கருப்பசாமி சுற்றறிக்கை

🌷தமிழகத்தில் அனைத்து தொடக்க, நடுநிலைப்
பள்ளிகளிலும் சுதந்திர தினவிழாவையொட்டி அன்றைய தினம் மரக்கன்றுகள் நடுதல் வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது

🌷இது தொடர்பாக தொடக்க கல்வித்துறை இயக்குநர் கருப்பசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது

🌷 நாட்டுக்கு நல்ல குடிமக்களை உருவாக்குகின்ற உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைத்து வகைப் பள்ளிகளிலும் மிகச் சிறப்பான முறையில் ஆக.15 புதன்கிழமையன்று சுதந்திரதினவிழாவைக் கொண்டாட வேண்டும்

போட்டிகள் நடத்த வேண்டும்

🌷 இதையொட்டி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி அளவிலும், ஒன்றிய அளவிலும் மாணவர்களிடையே நாட்டுப்பற்றையும், பண்பாட்டையும் வளர்க்கும் வகையில் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளை நடத்த வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு சுதந்திர தினவிழாவில் பரிசகூறி வழங்க வேண்டும்

🌷சுதந்திர தின விழா அன்று அனைத்துப் பள்ளிகளிலும் மரக்கன்றுகள் நடுதல் வேண்டும். மரக்கன்று நடுவதற்கு இடங்களைத் தேர்வு செய்து அந்த இடங்களை மரக் கன்றுகளை நட்டு அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்

🌷 பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் வனத் துறையுடன் தொடர்பு கொண்டு மரக்கன்றுகளை இலவசமாகப் பெற்று பள்ளி வளாகத்தில் நடச் செய்ய வேண்டும்

🌷மேலும் பள்ளிகளில் அன்றைய தினம் காலை 9.30 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். 

🌷நாட்டுப் பற்று, பண்பாடு, கலாசாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், அறிவியல் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம் என அதில் கூறியுள்ளார்

NHIS பற்றிய செய்தி துளிகள் - அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,

நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
⚡password :
your date of birth...


⭐பழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு....

⭐நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத் தான்...

⚡1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101
⚡2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102
⚡3 .Coimbatore # 89,Grey Town, Near Nehru Stadium, Gandhipuram, Coimbatore-641018. Mr.Thangarasu 7373703104
⚡4. Cuddalore #No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105
⚡5. Dharmapuri #Collectorate Main Building, Dharmapuri-636705. Mr.Mahendiran 7373703106
⚡6 .Dindigul #Ak Towers,74/5, Siluvathur Raod, Kamaraja Mahal, Opp. Dindigul-624005. Mr.Bharathiraja 7373703107
⚡7 .Erode # Selvanayaki Complex, Room No.Colonyo 84, Lweisammal Street, W.C.C. Jn,Nagercoil, Kanyakumari District – 629001 Mr.Suresh Kumar 7373703110
⚡10 .Karur #District Information Centre,District Collector Office,Karur-639005. Mr. Felix 7373703112
⚡11 .Kriskkal # 14,Ii Nd Floor,Main Campus, Collectorate, Namakkal-637003. Mr.Bakkiaraj 7373703116
⚡15 .Nilgiri (ooty) # 222, J, Sri Ram Nilayam Hospital Road,Udhagamandalam - 643 001 (Nilgiri - Ooty) Mr.Lokesh Kumar 7373703117
⚡16 .Perambalur#  Ground Floor, Collector Office Campus, Perambalur (Dt), Pincode-621212 Mr.Balu 7373703118
⚡17 .Pudukkotai # Shop No-33, Shri Bharathi Complex,East 2Nd Street, Pudukkotai - 622 001 Mr. Parimaleeswaran 7373703119
⚡18 .Ramnathapuram# 1/11 Durai Raja Chattiral Steel, Nks Vappa Complex, Velipattinam Post Ramanathapuram 623504 Rr Sethupathi Nagar, Ramanathapuram. Mr.Usman Ali 7373703123
⚡19 .Salem#  No : 23 / 7 , 1st Floor, Maravaneri 1st Cross, Near Sundar Lodge Auto Stand, Salem – 636 007. Mr.Jameer 7373703124
⚡20 .Sivagangai # District Collectorate, 1st floor District Treasury office, Sivagangai, 630561 Mr.Balaji 7373703125
⚡21 .Thanjavur #Survey No.163/4, Second Floor, Door No.10, Natarajapuram North, Municipal Colony Bus Stop, Medical College Main Road, Thanjavur - 613 004 Mr.Kalaimani 7373703126
⚡22 .Theni # L1/786, Gandhiji Road, Zameendar Complex 1St Floor, Near Theni Bus Stand, Theni-625531 Mr.Sarfraz 7373703127
⚡23 .Thiruvallur # 36/75,Tnhb, Old Collector Office Road,Thiruvallur-602001 Mr.Karthick 7373703128
⚡24 .Thiruvannamalai # No: 16/2 R.V.Complex, Gandhi Nagar Byepass, Tiruvannamalai-606 601 Mr.Fayaz Ahmed 7373703135
⚡25. Thiruvarur # 49, Kamalayam, North Bank, Thiruvarur - 610001 Mr. Vivekanandhan 7373703136
⚡26. Tirunelveli#  4F6/11 Akm Complex, Kailasapuram Middle Street, Tirunelveli – 627001 Mr.Ramasamy 7373703132
⚡27 .Tiruppur # 284,Kumaran Plaza,Kumaran Road Tirupur-641601. Mr.Murugan 7373703133
⚡28 .Trichy # No.22/7, 1St Floor, M.N.S. Complex, Ulaganathapuram, Tvs Tollgate, Trichy - 620 020 Mr. Rajamanickam 7373703180
⚡29 .Tuticorin # 36B,In Complex, Opp Kamaraj College, Nr.Head Post Office,Tiruchendur Road, Tuticorin-628003 Mr.Ukkirapandi 7373703129
⚡30 .Vellore # 297H,1St Floor,Ktj Complex,Rto Road,Sathuvacheri,Vellore-632009. Mr.Vinayagamoorthy 7373703137
⚡31 .Villupuram#  9,2Nd Floor,District Collector Office, Villupuram District-605103. Mr.Raju 7373703138
⚡32 .Virudhunagar # 103/B2, Katcheri Road, 2Nd Floor Bank Of India Upstairs Virudhunagar District – 626001 Mr.Rafik Raja 7373703139

டிஜிட்டல்' மயமாகிறது மக்கள் தொகை பதிவேடு

ஆதார்' விபரங்களுடன் கூடிய, மக்கள் தொகை பதிவேடுகளை, 'டிஜிட்டல்' மயமாக்கும் வகையில், புதிய, 'சாப்ட்வேர்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

நாட்டில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பிறப்பு, இறப்பு, நோய், பொருளாதாரம், மக்கள் தொகை விபரம், சமுதாய வாழ்க்கை உள்ளிட்ட விவரங்களும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கின்றன. இதன் அடிப்படையில், மத்திய, மாநில அரசுகள், திட்டங்களை தயாரிக்கின்றன. கடந்த, 2011 கணக்கெடுப்பின் அடிப்படையில், தமிழக மக்கள் தொகை, 7.21 கோடியாக இருந்தது. ஆதார் விபரம் பதிவு செய்யப்பட்டதால், 2016ல், மக்கள்தொகை கணக்கெடுப்பு திருத்தப்பணி நடந்தது.

மக்கள்தொகை பட்டியலில் உள்ளவர்களின் ஆதார் உள்ளிட்ட விபரங்கள், மீண்டும் பதிவு செய்யப்பட்டன. பணியாளர்கள், வீடு வீடாக சென்று, மக்களின் விபரங்களை கேட்டு, திருத்தம் மேற்கொண்டனர். சட்டசபை தேர்தல் காரணமாக, அப்பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட, மக்கள் தொகை விபரங்களை, திருத்தம் செய்து, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மக்கள் தொகை பதிவேடுகள் தயாரிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட வாரியாக, வருவாய்த் துறை அலுவலர்களுக்கான பயிற்சி துவங்கியுள்ளது. 
வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது: மக்கள் தொகை பதிவேடு விபரங்களை, 'ஆன்லைன்' மூலமாக பதிவு செய்ய, புதிய, 'சாப்ட்வேர்' வழங்கப்பட்டுள்ளது. வரும், 20ம் தேதி, மக்கள்தொகை பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி துவங்கி, 90 நாட்களில் நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியும் நவீனமாகும்.

ஒரு நபர் கமிட்டி பதவி காலம் நீட்டிப்பு

ஊதிய திருத்தங்களில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய நியமிக்கப்பட்ட, ஒரு நபர் கமிட்டியின் பதவிக்காலம், மேலும், மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினத் துறை செயலர், சித்திக் தலைமையில், பிப்ரவரியில், ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.இக்கமிட்டி, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது. கமிட்டி சார்பில், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் இருந்தும், தனிப்பட்ட நபர்களிடம் இருந்தும், மனுக்கள் பெறப்பட்டன.

அவற்றை பரிசீலித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, அவகாசம் தேவைப்படுவதால், மூன்று மாதங்களுக்கு குறையாமல், குழுவின் பதவி காலத்தை நீட்டிக்கும்படி, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று, ஒரு நபர் கமிட்டியின் பதவி காலத்தை, அக்டோபர், 31 வரை நீட்டித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

மன அழுத்தம் மற்றும் பணிச்சுமை குறைக்க ஆசிரியர்களுக்கு புத்துணர்ச்சி பயிற்சி -DEO PROC

வதந்திகளுக்கு வாட்ஸ் அப் விதித்த கட்டுப்பாடு!

வாட்ஸ் அப்பில் பரவும் வதந்திகளைத் தடுக்க அந்நிறுவனம் சில முக்கிய
கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய உள்ளது.


ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு படைப்பான வாட்ஸ் அப்பில் பரவும் வதந்திகளால் இந்தியாவில் ஏற்படும் உயிர் பலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் நடவடிக்கையாக வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த மாதம் மெசேஜ்களை ஃபார்வர்டு செய்வதில் சில கட்டுப்பாடுகளை விதித்து, அதனைச் சோதனை செய்து வருவதாகத் தெரிவித்திருந்தது. தற்போது சோதனை முடிந்து அந்த சேவை அடுத்த வாரம் முதல் அனைத்துப் பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த வாரம் முதல் அனைத்துப் பயனர்களுக்கும் தற்போது அவர்கள் பயன்படுத்தும் வெர்சனிலேயே மெசேஜ் சேவை வரையறுக்கப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளது.


வாட்ஸ் அப்பில் போலிச் செய்திகள் பரவுவதை தடுக்கக் கோரி உலகம் முழுதும் உள்ள அதன் பயனர்கள் அந்நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதன் விளைவாக கடந்த மாதம் வாட்ஸ் அப் நிறுவனம், ஃபார்வர்டு செய்திகளை சுட்டிக்காட்டும் வசதி; ஐந்து முறை மட்டும் குறுஞ்செய்திகளை ஃபார்வர்டு செய்யும் வசதி உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தியது. மேலும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்ய முன்பு இருந்த `குவிக் ஷேர்' ஆப்ஷனையும் அதிரடியாக நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்துப் பள்ளிகளிலும் ஆர்.ஓ. வாட்டர்!-தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், மாணவர்கள் நலன் கருதி ரூ.49 கோடி செலவில் சுத்தமான குடிநீர் வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.



தமிழகத்திலுள்ள 2,448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.48 கோடியே 96 லட்சம் செலவில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என சட்டமன்றக் கூட்டத்தில் கடந்த ஜுன் மாதம் 1ஆம் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார். பள்ளிகளின் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருக்கும் நீரானது, ஆர்.ஓ. எனப்படும் சவ்வூடு பரவல் முறையில் சுத்திகரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு ரூ.2 லட்சம் வீதம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, 48.96 கோடி ரூபாயில் சுத்திகரிப்புக் 


கருவிகள் பொருத்தப்படவுள்ளது. எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ஒரு தொகுதிக்கு ரூ.15 லட்சம் வீதம் 35.10 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதித் தொகையானது தொகுதியின் வரையறுக்கப்படாத நிதியின் கீழ், மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக ஒதுக்கப்படும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாணவர் கூட சேராத 100 எஞ்சினியரிங் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்.!

ஒரு காலத்தில் எஞ்சினியர் சீட் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு மெடிக்கல் சீட்டுக்கு நிகரான டிமாண்ட் இருந்தது.


  ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எஞ்சினியரிங் சீட்டை கல்லூரி நிர்வாகத்தினர் கூவிக்கூவி விற்பனை செய்யும் அளவுக்கு ஆகிவிட்டது. இதனால்பல கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது.

   இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான என்சினியரிங் கவுன்சிலிங் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களின் சேர்க்கை நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட எஞ்சினியரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

  இவை அனைத்தும் தனியார் எஞ்சினியரிங் கல்லூரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

  புற்றீசல் போல் தனியார் எஞ்சினியரிங் கல்லூரி வளர்ந்துவிட்டதும், போதுமான வசதிகள் இல்லாதது மட்டுமின்றி எஞ்சினியரிங் படித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பும் மிகவும் குறைந்துவிட்டதால் எஞ்சினியரிங் மீதான மோகம் மாணவர்களுக்கு இல்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

தாவரவியல்,விலங்கியல் பாடங்களுக்கு தனித்தனி ஆசிரியர்களை நியமனம்:

சிறுபான்மையின மாணவர் கல்வி உதவித்தொகை

சிறுபான்மையின மாணவ - மாணவியர், கல்வி உதவித்தொகை பெற, செப்டம்பர், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மத்திய அரசால், சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள, இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த, மாணவ -- மாணவியருக்கு, ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை படிப்போருக்கு, பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை பெற விரும்புவோர், மத்திய அரசின், www.scolarship.gov.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவ - மாணவியர் பதிவு செய்த, மொபைல் போன் எண், இணையதளத்தால் சரிபார்க்கப்பட்ட பிறகு மட்டுமே, விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்படும்.பதிவு செய்த, மொபைல் எண்ணில் மட்டுமே, சில முக்கிய தகவல், மாணவ - மாணவியருக்கு அனுப்பப்படும். எக்காரணத்தைக் கொண்டும், மொபைல் போன் எண்ணை மாற்றக் கூடாது.

கல்வி நிலையங்கள், ஆன்லைனில் பெறப்பட்ட விண்ணப்பங்களை, உடனுக்குடன் பரிசீலித்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு, செப்., 30க்குள், 'ஆன்லைனில்' அனுப்பி வைக்க வேண்டும்.கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேவையான ஆவணங்கள் மற்றும் நிபந்தனைகள் ,www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இத்திட்டம் தொடர்பாக, மத்திய அரசால் வெளியிடப்பட்ட, வழிகாட்டி நெறிமுறைகள், www.minorityaffairs.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, தொடர்பு கொள்ளலாம்.

11/8/18

95 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாக தரம் உயர்வு

சென்னை:தமிழகத்தில், 95 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை, அரசு வெளியிட்டுள்ளது.


நடப்பு கல்வியாண்டில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக, ஐந்து பள்ளிகளை தரம் உயர்த்த, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மீதமுள்ள, 95 பள்ளிகளையும், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, பள்ளிக் கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ், அரசாணை பிறப்பித்துள்ளார். 

இதை பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.அரசாணைப்படி, அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படும். 

முதற்கட்டமாக, தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், தலா, ஒரு முதுகலை ஆசிரியர் பணியிடம், புதிதாக ஏற்படுத்தப்படும்.இந்த பள்ளிகளில், கலை பாடப்பிரிவு துவங்கப்பட்டு, அதில், ஊரகப் பகுதிகளில் இருந்து, 15 மற்றும் நகர் பகுதிகளில் இருந்து, 30 மாணவர்கள் சேர்க்கப்படுவர். அதில், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியலுக்கு, தலா, ஒரு முதுநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு ஒப்புதல் தரப்படும். 

காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், நீலகிரி, பெரம்பலுார், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தலா, 1; அரியலுார், கடலுார், திண்டுக்கல், துாத்துக்குடி, தலா, 2 தரம் உயர்த்தப்படுகின்றன.திருச்சி, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தலா, 3; தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, தலா, 4 ஆகியவை தரம் உயர்த்தப்படுகின்றன.

திருவள்ளூர், விழுப்புரம், மதுரை, கோவை, தலா, 5; வேலுார், 6; சேலம், 7 என, 30 மாவட்டங்களில், மொத்தம், 95 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
95 நடுநிலை பள்ளிகள் உயர்நிலையாக உயர்வு
தமிழகத்தில் செயல்படும், 95 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. புதிதாக, ஐந்து பெண்கள் உயர் நிலை பள்ளிகளும் அமைகின்றன.

திண்டுக்கல், அரியலுார், கரூர், நீலகிரி, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், தலா, 2; காஞ்சி புரம், நாகப்பட்டினம், திருவாரூர், வேலுார், விருதுநகர் மாவட்டங்களில், தலா, 3; ஈரோடு, தேனி, துாத்துக்குடி, பெரம்பலுார், கடலுார், ராமநாதபுரம் மாவட்டங்களில், தலா ஒரு நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும், திருவள்ளூர், திருவண்ணாமலை, நாமக்கல், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், தலா, 4; தர்மபுரி மற்றும் மதுரையில், தலா, 5; சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களில், தலா, 6 என, 31 மாவட்டங்களில், மொத்தம், 95 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதுதவிர, பெரம்பலுார், பண்ருட்டி, திருப்பூர் - பெருமாநல்லுார், வேலுார் - திருமால்பூர் மற்றும் விழுப்புரம் - ஜீ ஆரியூர் என, ஐந்து இடங்களில், பெண்கள் உயர்நிலை பள்ளிகள் புதிதாக அமைகின்றன. தரம் உயர்த்தப்பட்ட மற்றும் புதிதாக துவக்கப்படும் பள்ளிகளுக்காக, 500 பட்டதாரி பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என, அரசா
...

746 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் நீட்டிப்பு

சென்னை:இடப்பற்றாக்குறை உள்ள, 746 பள்ளிகளுக்கான அங்கீகாரம், அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


பள்ளிகளின் உள்கட்டமைப்பு தொடர்பாக, கல்வியாளர் சிட்டிபாபு குழு, சில பரிந்துரைகளை அளித்தது. அதன்படி, உள்கட்டமைப்பு வசதிகள், நிலம் தொடர்பாக புதிய விதிமுறைகளை நிர்ணயித்து, 2004-ல், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என, ஒவ்வொரு பகுதியிலும், பள்ளிகளுக்கு குறிப்பிட்ட அளவுக்கு நிலம் இருக்க வேண்டும்.ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில், இட நெருக்கடி உள்ளதால், சிட்டிபாபு குழுவின் பரிந்துரைகளை, பல பள்ளிகளால் பின்பற்ற முடியவில்லை. மேலும், 2004ல், சட்டம் வரும் முன்னரே, பல தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த பரப்பை விட குறைந்த பரப்பில், பள்ளிகளை நடத்தி வருகின்றன. இந்த அடிப்படையில், 746 பள்ளிகளுக்கு இட பற்றாக்குறையால், அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

உடன், இப்பள்ளிகள், நீதிமன்றத்தை அணுகின. அதனால், இடப்பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும், தற்காலிக அங்கீகாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 2017 - 18க்கான அங்கீகாரம், இந்த ஆண்டு மே, 31ல் முடிந்தது. இதையடுத்து, அந்த பள்ளிகளுக்கு, 2019 மே வரை, தொடர் தற்காலிக அங்கீகாரம் வழங்கி, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

G.O.NO:-167 Dt: August 07, 2018 -பள்ளிக் கல்வி – தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள், நிதி உதவி பெறும் அனைத்து வகையான பள்ளிகள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் – உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக் கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளின் தற்காலிக தொடர் அங்கீகாரம் 31.05.2019 வரை நீட்டித்து – ஆணை வெளியிடப்படுகிறது_*


சுதந்திர தினம் (15.08.2018) அன்று காலை 9.30 க்கு கொடியேற்ற வேண்டும்



2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் : உயர்நீதிமன்றம்!!!

2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் : உயர்நீதிமன்றம்.2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது
என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார். 

வரும் 17ம் தேதிக்குள் அமல்படுத்த தவறினால் அனைத்து மாநில பள்ளி கல்வி செயலர்கள் ஆஜராக உத்தரவிடப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

நீட் தேர்வில் எந்த மாற்றமும் இல்ல... மத்திய அரசு மறுப்பு

புதுடில்லி: மாற்றவில்லை;... முடிவை மாற்றவில்லை... மத்திய அரசு. நீட் தேர்வு முறையில்.


இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறி இருந்தார். தற்போது தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.


இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அளித்துள்ள பதிலில், 2019 ம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை. 2019 ல் ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தும் எண்ணம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை.


2019 ல் குறைந்தபட்சம் ஆஃப்லைன் (offline) முறையில் நீட் தேர்வு தொடர்வது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்துடன், மனிதவள மேம்பாட்டு துறை ஆலோசித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டு துறைக்கு அளித்த அழுத்தம் காரணம் 2019 ல் பிப்ரவரி மற்றும் மே மாதங்கள் என இருமுறை நீட் தேர்வு நடத்தும் யோசனை மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், பேப்பர் - பேனா முறையிலேயே தேர்வை தொடர வேண்டும் எனவும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஓட்டுநர் உரிமம்: இனி டிஜிட்டல் ஆவனமே போதுமானது: மத்திய அரசு உத்தரவு

டில்லி:

வாகன ஓட்டுநர் உரிமம் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. டிஜி லாக்கர் மற்றும் மொபைல் செயலி இருந்தாலே போதுமானது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

தனி மனிதரின் ஆவனங்களை பாதுகாக்க 'டிஜிலாக்கர்' சிஸ்டத்தை மத்திய அரசு ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் ஒவ்வொரு வரும் தமது ஆதார் அடையாள எண், வங்கி கணக்கு விவரங்கள் போன்ற முக்கிய ஆவனங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்துக் கொள்ள லாம். தேவையான போது இதை திறந்து ஆவனங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சேவைக்கு 'மின்பூட்டு' எனப்படும் (DIGI LOCKER) டிஜிலாக்கர் சிஸ்டத்தை மத்திய அரசு அறிமுகப் படுத்தி உளளது.
அதுபோல சமீபத்தில் வாகன ஓட்டுனர் உரிமம் தொடர்பாக எம்பரிவாகன் (mparivahan app) என்ற மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இதுபோன்ற டிஜிட்டல் செயலிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் ஆவனங்களை வாகன ஓட்டிகள் காவல்துறையிடம் காண்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துஉள்ளது.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல்துறையினரின் சோதனையின்போது, ஓட்டுநர் உரிம அட்டைகளை காண்பிக்க கூறுவது வழக்கம். இதுபோன்ற சமயங்களில் வாகன ஓட்டுனர் உரிமம் தவறுதலாக எடுத்து வர மறந்தவர்கள், அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படு கிறார்கள். டிஜிட்டல் வடிவிலான வாகன ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு ஆவணங்களை போக்கு வரத்து காவல்துறையினர் ஏற்க மறுத்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எழுகிறது.

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டது.அதன் அடிப்படையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் காவல்துறையினரிடம் ஓட்டுநர் உரிமத்தினை மொபைல் செயலி மூலம் காண்பித்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி வாகன ஓட்டிகளிடம் டிஜிட்டல் வடிவிலான ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங் களை ஏற்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அரசின் அதிகரப்பூர்வ மொபைல் செயலிகளான எம்பரிவாகன் (mparivahan app) டிஜி லாக்கர் (DigiLocker) ஆகிய செயலிகளில் காண்பிக்கப்படும் ஆவணங்களை ஏற்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

வரும், 16ல் கூட்டுறவு சங்க தேர்தல்

சென்னை:'பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த, 484 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், வரும், 16ல் நடைபெறும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், முதற் கட்டமாக, நான்கு நிலைகளாக நடந்தது. புகார்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை உட்பட, பல்வேறு காரணங்களால், 484 சங்கங்களுக்கான தேர்தல் நிறுத்தப்பட்டிருந்தது. அவற்றுக்கு தேர்தல் நடத்த, தற்போது உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதன்படி, நாளை, வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். வாபஸ் பெற விரும்புவோர், 13ம் தேதி மாலை, 4:00 மணிக்குள் வாபஸ் பெற வேண்டும்.இறுதி வேட்பாளர் பட்டியல், 13ல் வெளியிடப்படும். ஓட்டுப்பதிவு தேவைப்பட்டால், வரும், 16ல் தேர்தல் நடைபெறும். மறுநாள் ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.
'சங்கத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல், வரும், 21ல் நடைபெறும்' என, கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர், ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

முகநூல் பக்கத்தில் இணைய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் :

பள்ளிக்கல்வித் துறையின் முகநுால் பக்கத்தில் இணையும்படி,
 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள்அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


பள்ளிக்கல்வித் துறையில், பாடத்திட்டம் மாற்றத்தை தொடர்ந்து, நிர்வாக பணிகள், கற்பித்தல் பணிகள் போன்றவற்றையும், டிஜிட்டல் முறைக்கு மாற்ற, பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.முதற்கட்டமாக, அனைத்து மாணவர்களின் 
விபரங்களையும், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் இணைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்களை பயன்படுத்தி, போலி மாணவர் பதிவுகளை நீக்கவும், பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


அதேபோல், பாடத்திட்ட மாற்றத்தின்படி, 'வீடியோ' வழி பாடங்கள் நடத்தவும், 'ஸ்மார்ட்' வகுப்புகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதன் ஒரு கட்டமாக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிெபறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், பள்ளி கல்வியின், 'வொர்க் பிளேஸ்' என்ற, முகநுால் பக்கத்தில் இணைய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்காக ஆசிரியர்கள், 'வொர்க் பிளேஸ்' என்ற, முகநுால் பக்கத்திற்கு சென்று, அதிலுள்ள, குரூப்பில் இணைவதற்கான விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.அதிகாரிகள் அவர்களின் விபரங்களை சரி பார்த்து, குரூப்பில் இணைய அனுமதி அளிப்பர். அதன்பின், அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட குரூப்பில் இணைக்கப்படுவர்.

அதில், ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறை, தனித்திறன் உள்ளிட்டவற்றை பதிவு செய்யலாம். அவற்றை மற்ற ஆசிரியர்களும் பார்த்து, தெரிந்து கொள்வர்.ஆசிரியர்களின் புதிய கற்பித்தல் முறைகள், வழிமுறைகள் நன்றாக இருந்தால், அவற்றை மற்ற பள்ளிகளிலும் செயல்படுத்த, அதிகாரிகள் அறிவுறுத்துவர்.எனவே, ஒரு ஆசிரியரின் திறமை, மற்ற பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் வகையில், இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய பசுமை படை நிதியை,பள்ளிகளுக்கே நேரடியாக வழங்க மத்திய அரசு முடிவு

தமிழகத்தில் கல்வி அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்ட தேசிய பசுமை படை நிதியை, இந்தாண்டு முதல் பள்ளிகளுக்கே நேரடியாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் செயல்படும் தேசிய பசுமை படைகளுக்கு ஆண்டுதோறும் தலா 5 ஆயிரம் ரூபாய் நிதியை மத்திய சுற்றுச்சூழல் துறை ஒதுக்கீடு செய்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 250 பள்ளிகள் இந்நிதியை பெறுகின்றன.


உலக சுற்றுச்சூழல், இயற்கை, ஓசோன் உட்பட உலக அளவில் கடைபிடிக்கப்படும் 16 வகை தினங்கள் மற்றும் மாணவர் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணிகளுக்கு இந்நிதி செலவிடப்படுகிறது.இதுவரை மாநில அளவில் 8500 பள்ளிகளுக்கு அந்தந்த கல்வி மாவட்ட அலுவலங்கள் (டி.இ.ஓ.,) மூலம் இந்நிதி வழங்கப்பட்டது. 
ஆனால் இந்தாண்டு முதல் நேரடியாக பள்ளிகளுக்கு வழங்க மத்திய சுற்றுச்சூழல் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில், ''மாணவர்கள், பள்ளிகள் விவரங்களை கல்வி அதிகாரிகள் மூலம் சுற்றுச்சூழல் துறை பெறும் நடைமுறையில் ஏற்பட்ட தாமதம் உட்பட சில காரணங்களுக்காக இந்தாண்டு முதல் இந்நிதியைபள்ளிக்கே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதுதொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
  

7th Pay Commission - விரைவில் சம்பள உயர்வு வழங்க வாய்ப்பு???

மத்திய அரசு ஊழியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக அடிப்படை சம்பளத்தினை 3.68 மடங்காக உயர்த்திக் குறைந்தபட்ச சம்பளம் 26,000 ரூபாய் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் சென்ற முறை அடிப்படை ஊதியத்தினை2.57 சதவீதம் மட்டுமே உயர்த்தி இருந்தனர். இந்நிலையில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் தங்களது சம்பளம் போதியதாக இல்லை என்றும் வாழ்வாதாரம் .
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அகவிலைப்படியும் போதிய அளவில் வழங்கப்படவில்லை என்றும் மத்திய அரசு ஊழியர்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திடம் தெரிவித்தனர்.
அருண் ஜேட்லி மத்திய அமைச்சராக அருண் ஜேட்லி இருந்த போது மத்திய அரசு ஊழியர்களுக்கு நன்மை அளிக்கும் முடிவை அளிக்கும் என்று தெரிவித்து இருந்த நிலையில் எந்த ஒரு சாதகமான முடிவினை எடுக்கவேயில்லை.
தேர்தல் ஆனால் 2019 ஆண்டுப் பொதுத் தேர்தல் அறிவிப்புகள் விரைவில் வரவிருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் வாக்குகளைக் கவர சம்பள உயர்வினை ஒரு முக்கிய ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்தும் என்றும் நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
எப்போது சம்பள உயர்வு அறிவிப்பு வரும்? மத்திய அரசு ஆகஸ்ட் 15-ம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு குறித்து அறிவிப்பினை வெளியிடும் என்று கூறப்படுகிறது
எவ்வளவு கிடைக்கும்? தற்போது அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயாக உள்ள நிலையில் அது 21,000 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்றும் 3 வருடம் வரை நிலுவை தொகை அளிக்கப்படலாம் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்க்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
பயன் மத்திய அரசின் சம்பள உயர்வு மற்றும் நிலுவை தொகை வழங்கப்பட்டால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்கள் பயன் அடைவார்கள். ஆர்பிஐ ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தினை உயர்த்தியதால் பணவீக்கம் அதிகரிப்பது மற்றும் வீட்டு வாடகை படியையும் அரசு உயர்த்த வாய்ப்புகள் உள்ளது

இரண்டாம் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தேதி மாற்றம்:

தமிழகத்தில் அரசு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்க உள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 10 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கலந்தாய்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பி.இ. கலந்தாய்வு: சேர்க்கையின்றித் தவிக்கும் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகள்: 42 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின

பி.இ. பொதுப் பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கி மூன்று சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை இல்லாமல் தவித்து வருவது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 509 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருந்த 1,76,865 இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வை 5 சுற்றுகளாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. வியாழக்கிழமையுடன் மூன்று சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.
முதல் பிரிவில் பங்கேற்கத் தகுதி பெற்ற 10,734 மாணவர்கள் 6,768 பேரும், இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்ற 18,513 பேரில் 12,206 பேரும், மூன்றாம் சுற்றுக்குத் தகுதி பெற்ற 25,710 பேரில் 17,152 பேர் மட்டுமே இறுதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர்.

1.34 லட்சம் இடங்கள் காலி:
அதன்படி, மூன்று சுற்றுகள் முடிவில் 36,126 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். முன்னதாக நடைபெற்ற சிறப்புப் பிரிவு கலந்தாய்வையும் சேர்த்தால், மொத்தமாக 42,363 இடங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இன்னும் இரண்டு சுற்று கலந்தாய்வு மட்டுமே நடைபெற உள்ள நிலையில், 1,34,502 இடங்கள் காலியாக உள்ளன.
திண்டாடும் கல்லூரிகள்: அண்ணா பல்கலைக்கழகம் வெளிட்டுள்ள பி.இ. காலியிட விவரங்களின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் மூன்று துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பிரபல தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே அனைத்து இடங்களும் நிரப்பியுள்ளன.
இரண்டாம் நிலை சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.
மீதமுள்ள நூற்றுக்கும் அதிகமான கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பதும், சில கல்லூரிகளில் ஒரு இடங்கள்கூட நிரம்பாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
நிகழாண்டில் புதிதாக கலந்தாய்வில் சேர்க்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் (உற்பத்தி) பிரிவில் 117 இடங்களும், இயந்திரவியல் பிரிவில் 88 இடங்களும், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவில் 38 இடங்களும், கணினி அறிவியல் (சிஎஸ்இ) பிரிவில் 92 இடங்களும், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 112 இடங்களும் மாணவர் சேர்க்கையின்றிக் காலியாக உள்ளன.
கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை பொறியியல் கல்லூரிகளில்... கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பிரதான பிரிவுகளான இயந்திரவியல் பிரிவில் 180 இடங்களும், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவில் 181 இடங்களும், கணினி அறிவியல் (சிஎஸ்இ) பிரிவில் 73 இடங்களும் காலியாக உள்ளன. திருப்பூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 105 இடங்களும், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவில் 106 இடங்களும், கணினி அறிவியல் (சிஎஸ்இ) பிரிவில் 105 இடங்களும் காலியாக உள்ளன.
கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 149 இடங்களும், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவில் 71 இடங்களும், கணினி அறிவியல் (சிஎஸ்இ) பிரிவில் 72 இடங்களும் காலியாக உள்ளன.
இதே போன்று அனைத்து மாவட்டங்களிலும் பல கல்லூரிகளில் ஒவ்வொரு பிரிவிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
250 கல்லூரிகளில் 50 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை: இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளன. கலந்தாய்வின் மூன்று சுற்றுகள் முடிவில், 250 பொறியியல் கல்லூரிகளில் அனைத்துப் பிரிவுகளின் கீழ் மொத்தமாக 50 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கல்லூரிகளில் கூட, ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே இடங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. அவற்றின் இரண்டாவது, மூன்றாவது நிலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளது. இந்த கல்லூரிகளில் கட்-ஆஃப் 150 பெற்ற மாணவர்கள் கூட கலந்தாய்வு மூலம் சேர்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் 150 கட்-ஆஃப் பெற்ற மாணவர் நன்கொடை கொடுத்தால் மட்டுமே இடம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்த நிலை இப்போது மாறியிருக்கிறது.
முதல் முறையாக இயந்திரவியல், கட்டடவியல் (சிவில்) பிரிவுகளில் இம்முறை மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதற்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக தகவல்தொழில்நுட்பத் துறையில் இருந்த பின்னடைவால், இந்த இரு பிரிவுகளிலும் இடங்களின் எண்ணிக்கையை இரு மடங்காக கல்லூரிகள் உயர்த்தியதே காரணமாகும். இம்முறை கலந்தாய்வு மூலம் 75 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்ப வாய்ப்புள்ளது. இனி, வரும் ஆண்டுகளிலும் இதே நிலைதான் நீடிக்கும். பாடத் திட்டத்தைத் தாண்டி, தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் முயற்சியில் இறங்கினால் மட்டுமே பொறியியல் கல்லூரிகள் இனி நிலைத்திருக்க முடியும் என்றார் ஜெயப்பிரகாஷ் காந்தி.

10/8/18

பொய் தகவல்களை தடுக்க 'வாட்ஸ் ஆப்'க்கு உத்தரவு

பொய் தகவல்கள் பரப்புவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து,
 'வாட்ஸ் ஆப்' நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது,'' என, மத்திய தகவல் 
தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர், எஸ்.எஸ். அலுவாலியா கூறினார். 
பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான, அலுவாலியா 

கூறியதாவது: சமூக வலைதளங்களில், மக்கள் பதிவிடும் தகவல்களை 
கட்டுப்படுத்த, அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. எனினும், 
வன்முறை, கலவரத்தை துாண்டும் வகையிலும், பயங்கரவாதத்தை 
ஆதரிக்கும் வகையிலும் வெளியிடப்படும் தகவல்கள் மீது, சட்டப்படி 
நடவடிக்கை எடுக்கப்படும். பொய் தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க
 எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் 
கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில், வாட்ஸ் 
ஆப்பில், ஒரு தகவலை, ஐந்து பேருக்கு மேல் அனுப்ப முடியாது என, அந்த 
நிறுவனம், சமீபத்தில் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடு, நேற்று 
முதல் அமலுக்கு வந்துள்ளது.

அரசாணை எண்:166 நாள்:07.08.2018-தமிழகத்தில் 95 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு!

அங்கீகாரம் இல்லாத 5000 தனியார் பள்ளிகளுக்கு ஓராண்டு தற்காலிக அங்கீகாரம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

அங்கீகாரம் இல்லாத 5000 தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
தற்காலிக அங்கீகாரத்தை 31.05.2019-ம் ஆண்டு வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் சம்மந்தப்பட்ட துறைகளில் உரிய அங்கீகாரம் வாங்க வேண்டும். அந்த அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்ளவேண்டும். தொடக்க கல்வித்துறைக்கு கீழே இருக்க கூடிய ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளாக இருந்தால் சம்மந்தப்பட்ட துறைகளில் உரிய அங்கீகாரம் பெறவேண்டும். உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளிகளாக இருந்தால் தனியார் பள்ளி இயக்குநரிடம் அங்கீகாரம் வாங்க வேண்டும். 

ஆனால் தமிழகம் முழுவதும் கட்டிட அங்கீகாரம் வாங்காத 5000 பள்ளிகள் இயங்கி வருகிறது. குறிப்பாக மெட்ரிகுலேஷன் இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 2000 பள்ளிகள், தொடக்க கல்வித்துறைக்கு கீழே உள்ள 2000 பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1000 பள்ளிகள் என 5000 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்கிவருகிறது. இந்த பள்ளிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இலவசம் மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் கீழ் எந்த ஒரு பள்ளியும் அங்கீகாரம் இல்லாமல் இயங்க கூடாது. அங்கீகாரம் இல்லாமல் இயங்குவது சட்டத்திற்கு எதிராது. மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு 5000 பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.

3/8/18

B.LITT B.EDக்கு ஊக்க ஊதிய உயர்வு உண்டு என்கிற உயர்நீதின்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.இதனை அனைத்து த.ஆசிரியர்களும் பயன்படுத்துவோம்.அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த வழக்கறிர்கள் திரு.சங்கரன் திரு.பாலச்சந்தர் ஆகியோருக்கு நன்றி

மாவட்டங்களில் கல்வித்துறை இணை இயக்குனர்கள் அலுவலகம்:

கல்வித்துறையில் மாவட்டங்களை ஒருங்கிணைத்து இணை இயக்குனர், மண்டல இணை இயக்குனர் அலுவலங்கள் அமைக்கப்பட உள்ளது.பள்ளி கல்வித் துறை சார்பில், புதிய கல்வி மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, 20 இணை இயக்குனர்கள், ‘நோடல் ஆபீசர்ஸ்’ ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இணை இயக்குனர்களுக்கு, ஒன்று அல்லது இரண்டு மாவட்டங்களை சேர்த்து பொறுப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.மூன்று மாவட்டங்களை ஒருங்கிணைத்து கல்வித் துறை இணை இயக்குனர் அலுவலகம், இணை இயக்குனர்களை ஒருங்கிணைத்து மண்டல இணை இயக்குனர் அலுவலகம், மாவட்டங்களில்அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று இணை இயக்குனர்களை ஒருங்கிணைத்து மண்டல இணை இயக்குனர்
அலுவலகம் மதுரையில் அமைக்கப்படுகிறது. இணை இயக்குனர்களுக்கான அலுவலகம் தேடும் பணியில், கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதுவரை இணை இயக்குனர்கள் சென்னையில் இருந்து, பணிகளை கவனித்தனர். அரசின் சீர்திருத்த நடவடிக்கையால்,இனி மாவட்டங்களில் அலுவலகம் அமைத்து கவனிப்பார்கள், என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைமுறைகள் மீண்டும் தள்ளிவைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கூட்டுறவு சங்கத் தேர்தல்களுக்கான நடைமுறைகள் மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட முடிவுகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 2) அறிவிக்கப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு சங்கத் தேர்தலில் 5 ஆண்டு பதவிக் காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. தொடக்க சங்கங்கள், மத்திய சங்கங்கள், தலைமைச் சங்கங்கள் என மூன்றடுக்கு முறையில் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மூன்றடுக்கு முறை தேர்தல் ஒவ்வொன்றும் 5 நிலைகளாக நடத்தப்படுமென கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தேர்தல் வழக்கு தொடர்பாக வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை இப்போது விலக்கி தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு நிலுவையிலுள்ள சங்கங்களுக்கு மட்டும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தேர்தல் முடிவுகள்: இரண்டாம் நிலையிலுள்ள சங்கங்களுக்கு தலைவர், துணைத் தலைவர் தேர்தல் முடிவுகளும், மூன்று மற்றும் நான்காவது நிலையில் உள்ள சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகளும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 2) அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது. மேலும், மூன்று மற்றும் நான்காவது நிலையிலுள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தல் வரும் 6-ஆம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முடிவுகள் தள்ளிவைப்பு: தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தேர்தல் முடிவு உள்பட அனைத்து தேர்தல் நடைமுறைகளையும் நிறுத்தி வைப்பதாக கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், சில நிர்வாகக் காரணங்களுக்காக தேர்தல் நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள், நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடைமுறைகளையும் மேற்கொள்வதற்கான புதிய கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்தன.

மதிய உணவுத் திட்டம் தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம்:

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் விதத்தை இணையதளம் வாயிலாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க தவறியதற்காக தமிழகம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று கடந்த 2013ஆம் ஆண்டு மனு தொடுத்திருந்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவுகள் சுத்தமானதாக உள்ளதா என்று கண்காணிப்பதற்கு தேசிய, மாநில அளவில் 2 குழுக்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதேபோல், மதிய உணவு திட்டத்தை இணையதளம் வாயிலாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னார்வ தொண்டு அமைப்பின் வழக்குரைஞர் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை சில மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் செயல்படுத்தவில்லை என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள், தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். பின்னர் அவர்கள் கூறியதாவது:
தமிழகம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் ஆகிய 3 மாநிலங்களும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாதது அதிருப்தி அளிக்கிறது. இதற்காக அந்த மாநிலங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை சிறார் கைதிகள் விவகாரங்களுக்கு பயன்படுத்தும் வகையில், உச்ச நீதிமன்ற சட்ட சேவைகள் அமைப்பிடம் 4 வாரங்களுக்குள் மேற்கண்ட 3 மாநிலங்களும் டெபாசிட் செய்ய வேண்டும்.
இதேபோல், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அருணாசலப் பிரதேச மாநிலம், புதுச்சேரி, தாதர் மற்றும் நாகர்ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களும் செயல்படுத்தவில்லை. எனினும், இவைகளுக்கு அபராதம் விதிக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மேலும் அவசாகம் அளிக்கிறோம். இந்த அவகாசத்துக்குள் அருணாசலப் பிரதேசம், புதுச்சேரி, தாதர் மற்றும் நாகர்ஹவேலி ஆகியவை உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் என எதிர்பார்க்கிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்

எம்.பி.பி.எஸ்.: அகில இந்திய 2 -ஆம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு:

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்தின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் ஆகியவற்றுக்கான கலந்தாய்வை மத்திய சுகாதார இயக்ககம் நடத்துகிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்று, 12,683 பேருக்கு எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஜூலை 10,11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முடிவுகள் ஜூலை 12 -ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முடிவுகள் வெளியீடு: ஆனால் இதுதொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த உத்தரவின்பேரில் அகில இந்திய கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் நிறுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையும் அகில இந்திய கலந்தாய்வுக்கு தடை விதித்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டாம்கட்ட கலந்தாய்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் ஆகஸ்ட் 8 -ஆம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும். ஆகஸ்ட் 8 -ஆம் தேதி மாலை கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள், மாணவர்கள் கைவிட்ட இடங்கள் ஆகியவை அந்தந்த மாநில ஒதுக்கீட்டுக்காகச் சமர்ப்பிக்கப்படும்.
தமிழகத்தில் எப்போது?: தமிழகத்தில் முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்படாததால் இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன் கூறியது:
அகில இந்திய கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் கல்லூரியில் சேருவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த பிறகு, நிரம்பாத இடங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு தமிழகத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்துவது தொடர்பான அட்டவணை வெளியிடப்படும் என்றார்.
மீண்டும் கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 30, 31 தேதிகளில் நடைபெற்றது. கலந்தாய்வில் நிரம்பாத மீதம் உள்ள இடங்களுக்கான நீட்டிப்பு கலந்தாய்வு ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறும்

தற்காலிக பட்டச் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்: சென்னைப் பல்கலை. அறிவிப்பு

பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் தற்காலிக பட்டச் சான்றிதழை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் உடனடியாக கல்விச் சான்றிதழ் கிடைக்காததால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். படிப்பை முடித்து மூன்று மாதங்களுக்குப் பிறகே அவர்களுக்கு புரொவிஷனல் பட்டச் சான்றிதழ் வழங்கப்படும். இதனால், மாணவர்கள் வேலைவாய்ப்புப் பெறுவதிலும் சிரமம் இருந்து வந்தது.

இந்த நிலையை மாற்றும் வகையில், மாணவர்கள் படிப்பை முடித்த உடன் தற்காலிக புரொவிஷனல் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2018 ஏப்ரலில் தேர்வெழுதி பட்டப்படிப்பை முடித்திருக்கும் மாணவர்கள், www.unom.ac.in  என்ற இணையதளத்திலிருந்து தற்காலிக பட்டச் சான்றிதழை புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25,000 மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் CA சிறப்பு பயிச்சி -அமைச்சர் செங்கோட்டையன்!

வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக வணிகவியல் துறையில் ஆடிட்டர் படிப்பிற்காக சிறப்பு பயிச்சி வகுப்பு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஆடிட்டர் படிப்பிற்காக 25,000 மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பயிச்சி நடத்தப்படும் என்று திருப்பூரில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

பள்ளிக்கு சீருடையில் செல்லும் மாணவர்கள் அரசுப் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் - போக்குவரத்து துறை அமைச்சர்


மாணவர்கள் ஆகஸ்ட் 31-குள் எழுத படிக்க தெரியவில்லை எனில் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை - CEO உத்தரவு!

ஆகஸ்ட் 31 - குள் 10 வகுப்பு வரைஅனைத்து மாணவர்களும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் - தவறினால் இப்போது பாடம் எடுக்கும் ஆசிரியர் கடந்த ஆண்டு பயிற்றுவித்த ஆசிரியர் மீதும் நடவடிக்கை - CEO செயல்முறைகள்...


ஆடிப்பெருக்கு விடுமுறை அறிவிப்பு!

ஆடிப்பெருக்கான நாளை திருச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. அதை ஈடுசெய்யும் வகையில் வரும் 18ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும்- ஆட்சியர் கு.ராசாமணி அறிவிப்பு.