யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/12/16

TNPSC - VAO பணிக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC COUNSELLING FOR THE POST OF VAO - 2014-2015 | TNPSC  VAO பணிக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
கிராம நிர்வாக அலுவலர் 2014-2015 பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.19/2015, நாள் 12.11.2015 வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 28.02.2016 முற்பகல் அன்று நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 01.07.2016 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 01.08.2016 முதல் 08.08.2016 வரை நடைபெற்றது. இத்தெரிவிற்கான கலந்தாய்வு சென்னை–600003, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 19.12.2016 முதல் 23.12.2016 நடைபெறுகிறது. கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் மற்றும் தரவரிசையின்படி கால அட்டவணைப் பட்டியல் தேர்வாணைய இணையத் தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையத் தளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இவ்விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்புஅளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: செய்திகுறிப்பு

அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 
இதுகுறித்து, முதல்வர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை ஜூலை 1 ஆம் தேதி முதல் உயர்த்தி அளிக்க உத்தரவிட்டுள்ளேன். திருத்திய ஊதியம் பெற்றுள்ள மத்திய அரசு அலுவலர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் 2 சதவீதம் எனவும், திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 7 சதவீதம் எனவும் அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.


யார் யாருக்கு பொருந்தும்? மத்திய அரசைத் தொடர்ந்து, தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி ஜூலை 1 ஆம் தேதி முதல் 7 சதவீதம் உயர்த்தி அளிக்கப்படும். இதன்படி அகவிலைப்படி 125 சதவீதத்தில் இருந்து 132 சதவீதமாக உயரும்.

அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி-சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.

எவ்வளவு கிடைக்கும்? அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.427 முதல் ரூ.5,390 வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள்-குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.214 முதல் ரூ.2,695 வரையில் ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும். ஜூலை 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலத்துக்கான அகவிலைப்படி உயர்வு அவரவர் வங்கிக் கணக்கில் மொத்தமாகச் செலுத்தப்படும். இந்த மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு மாத ஊதியத்துடன் சேர்த்து அளிக்கப்படும்.

18 லட்சம் பேர் பயன்: அகவிலைப்படி உயர்வால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர். அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,833.33 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

15/12/16

திருத்தம் செய்தால் கடும் நடவடிக்கை - வருமான வரி செலுத்துவோருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

வருமான வரி கணக்குதாக்கலில் திருத்தம்செய்தால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும்என்று வருமானவரி செலுத்துவோருக்குஅதிகாரிகள் எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள்செல்லாது என்றுஅறிவிப்பையடுத்து வருமான வரித்துறைக்கு வந்துள்ள படிவங்களில்பல மாற்றங்கள்இருப்பதாகவும், முந்தைய வருமானத்திற்கும், தற்போதைய வருமானத்திற்கும்தொடர்பில்லாமல் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான தொழிலதிபர்கள் வருமானத்தை அதிகரித்துகாட்டியிருப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், இது தொடர்பாகவிளக்கம் அளிக்கவேண்டும் என்றுநோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

வருமான வரி கணக்குதாக்கலில் திருத்தம்போன்ற நடவடிக்கைகள்மேற்கொண்டால், அபராதம் அல்லது சிறை தண்டனைபோன்றவைகளை சந்திக்க நேரிடும் என்று வருமானவரித்துறைஎச்சரிக்கை விடுத்துள்ளது

ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் பெயர் பரிந்துரை

உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்டவீரர் பீலேவின்வாழ்க்கையை சித்தரிக்கும் படம் ‘’பீலே’’. இப்படத்திற்குஇசையமைத்ததற்காக
இசையமைப்பாளர் ஏ.ஆ.ரகுமான்பெயர் ஆஸ்கர்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


ஆஸ்கர் விருது வழங்கும்விழா 2017ம்ஆண்டு ஜனவரி26ம் தேதிநடைபெறும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

AIRCEL வழங்கும் அன்லிமிட்டட் அழைப்புகள், டேட்டா சலுகை!

 தங்கள் வாடிக்கையாளர்கள் எல்லா நெட் ஒர்க்குகளுக்கும் அன்லிமிட்டட் அழைப்புகள் மற்றும் அன்லிமிட்டட்  டேட்டாசலுகைகளை
வழங்குபடியானபுதிய சலுகைஅறிவிப்புகளை  ஏர்செல்வெளியிட்டுள்ளது.
                            

இன்று அந்த நிறுவனம்வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏர்செல் வாடிக்கையாளர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளRC 249 என்ற ரீசார்ஜை பயன்படுத்துவதன் மூலம் எல்லாநெட் ஒர்க்குகளுக்கும்அன்லிமிட்டட் எஸ்டிடி மற்றும் உள்ளூர் அழைப்புகளைமேற்கொள்ளலாம்.  அதேபோல்அன்லிமிட்டட்  2G டேட்டாவைபயன்படுத்தலாம். 4G  வசதி உள்ள அலைபேசியைபயன்படுத்துபவர்களுக்கு மேலும் 1.5 GB  டேட்டா கூடுதலாக கிடைக்கும்.இதற்கான வேலிடிட்டிஒரு மாதம்ஆகும்.

இதனைப் போலவே RC 14 என்றமற்றொரு ரீசார்ஜும்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவதன்மூலம் எல்லாநெட் ஒர்க்குகளுக்கும்அன்லிமிட்டட் எஸ்டிடி மற்றும் உள்ளூர் அழைப்புகளைமேற்கொள்ளலாம். ஆனால் இதற்கான வேலிடிட்டி ஒருநாள்மட்டுமே ஆகும்.


இவ்வாறு அந்த அறிவிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

SLAS - JAN 2016 - முக்கிய படிவங்கள்

SLAS Test என்றால் என்ன?

மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடுஅரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில்,
மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது; இதற்காக, மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, பயணப்படி, சாப்பாடு போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றியுள்ளாரா, அவர் கற்றுக் கொடுத்ததால், மாணவர்கள் மேம்பட்டுள்ளனரா என, ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படும்.


இந்த ஆண்டுக்கான கற்றல் அடைவு திறன் தேர்வு, 3ம் வகுப்பு மற்றும், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜன., 5 முதல் நடக்க உள்ளது.மாவட்டம், வட்டம் மற்றும் பள்ளி வாரியாக சில மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கற்றல் அடைவு திறன் பட்டியல் தயாரிக்கப்படும். இதில், எந்த பகுதியில் மாணவர்கள் பின் தங்கியுள்ளனரோ, அந்த பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம், எஸ்.எஸ்.ஏ., விளக்கம் கேட்கும்.

FLASH NEWS : SLAS DEC - 2016 : மாவட்ட வாரியாக SLAS நடைபெறும் பள்ளிகளின் பட்டியல்

அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அமல் !!

உத்தரப் பிரதேசத்தில்முதல்வர் அகிலேஷ்யாதவ் தலைமையில்
லக்னோவில் நேற்றுஅமைச்சரவை கூட்டம்நடைபெற்றது.
இதில் அரசு ஊழியர்களுக்கு7வது ஊதியக்குழுபரிந்துரைகளை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் ஆங்கிலபுத்தாண்டு போனசாக அரசு
ஊழியர்களுக்கு சம்பள உயர்வுஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர்பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர்அகிலேஷ் யாதவ், “ஜனவரி ஒன்றாம்தேதி முதல்அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 7வது ஊதியக்குழுவின்பரிந்துரைகள் அமல்படுத்தப்படும். இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய்கூடுதல் சுமைஏற்படும். எனினும்இதன் மூலம்லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்” என்றார்.

ஜூன் 10-ல் 'நீட்' தேர்வு: பாடத்திட்ட விவரம் வெளியீடு.

2017-ம் ஆண்டு ஜூன்மாதம் 10-ம்தேதி நடைபெறஉள்ள மருத்துவப்
படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தைமத்திய அரசுவெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டசெய்திக் குறிப்பு:  1956 ஆம்ஆண்டு இந்தியமருத்துவ சபைசட்டம் மற்றும்2016ம் ஆண்டதிருத்தி அமைக்கப்பட்டசட்டம் 10வதுபிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச்சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுதேர்வினை தேசியதேர்வுகள் வாரியம்நடத்த உள்ளது.

பாடத்திட்டம் பல்வேறு நகரங்களில்இந்த தேர்வு2017 ஜூன் மாதம்10-ம் தேதிநடைபெறும். இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலானதேர்வாக நடத்தப்படும். இந்தத் தேர்வில்இந்திய மருத்துவக்கல்லூரிகளில் பின்பற்றப்படும் இந்திய மருத்துவ சபையால்நிர்ணயிக்கப்பட்ட, மத்திய அரசின்சுகாதார குடும்பநலத்துறை அமைச்சகத்தின்முன் அனுமதியைப்பெற்ற எம்.டி / எம்.எஸ் பாடத்திட்டத்திலிருந்து200 பல்விடைத் தேர்வு வினாக்கள் இடம்பெறும். இந்தத்தேர்வு டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகளுக்கானஒற்றைச் சாளரநுழைவுத் தேர்வுஆகும். 2017-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைபருவத்திலிருந்து இந்தத் தேர்வு மட்டுமே இந்தவகுப்புகளுக்கு நடத்தப்படும். 1956 இந்திய மருத்துவ சபைசட்டத்தின்படி மாநில அளவிலும் அல்லது நிறுவனங்கள்அளவிலோ எந்தஒரு பல்கலைக்கழகம்/ மருத்துவக் கல்லூரி / நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வு செல்லுபடிஆகாது. 'நீட்' தேர்வின் முக்கியத்துவம்: NEET-SS 2017 என்பது உயர்நிலை சிறப்புபாடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு ஆகும்.
2017-ம் கல்வி ஆண்டுக்கானஇந்தத் தேர்வில்நாடெங்கும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்ஆகியவற்றில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள், ஆயுதப்படைகள் மருத்துவ சேவைகள் நிறுவனங்களில் உள்ளடி.எம்/ எம்.சிஹெச்/ பி.டி.சி.சி வகுப்புகள் ஆகியவைஅடங்கி இருக்கும். 'நீட்' தேர்வின்கீழ் வராதநிறுவனங்கள் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானநிறுவனம் புதுடெல்லி, சண்டிகர் பட்டமேற்படிப்பு மருத்து கல்வி ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா, பெங்களுரு நிம்ஹான்ஸ், புதுச்சேரிஜிப்மர் ஆகியநிறுவனங்கள் NEET-SS –ன் கீழ்வராது.

தேசிய தேர்வுகள் வாரியம்மத்திய அரசால்1982-ம் ஆண்டுஉருவாக்கப்பட்ட சுய ஆட்சி அமைப்பு ஆகும். அகில இந்தியஅடிப்படையில் பட்ட மேற்படிப்பு தேர்வுகளை நடத்துவதுஅதன் முக்கியநோக்கமாகும். தேசிய தேர்வுகள் வாரியம் 2013, 2017 ஆண்டுகளில் எம்.டி/எம்.எஸ்/ பட்டமேற்படிப்பு பட்டயம் ஆகியவற்றுக்குNEET-PG தேர்வுகளையும் 2017-ம் ஆண்டுNEET-MDS தேர்வுகளையும், 2014 முதல் 2016 வரையானகாலத்தில் அகிலஇந்திய பட்டமேற்படிப்பு மருத்துவ நுழைவுத் தேர்வுகளையும் நடத்திஉள்ளது. இவ்வாறுசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வித்துறைக்கு ஐ.இ.எஸ் ,சேவை உருவாக்கம் யோசனை நிராகரிப்பு !!

ரூபாய் 600 ல் நவீன சிறுநீர் கழிப்பிடம் ,அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல் !!

TNPSC RECRUITMENT 2016 | TNPSC - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - ASST DIRECTOR | NO. OF VACANCIES 12 | LAST DATE 12.01.2017







>> Employment Type
Govt Job
>> Application
Online
>> Website
>> Name of the Post
ASST DIRECTOR
>> கல்வித் தகுதி
DEGREE
>> காலியிடங்கள்
12
>> சம்பளம்
15600-39100+5400
>> தேர்வு செய்யப்படும் முறை
Competitive Exam
>> கடைசித் தேதி
12.01.2017
>> தேர்வு நாள்
08.04.2017

SHAALA SIDDHI KEY DOMAINS - FORMATS

தேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில்தேர்வு நேரத்தில்உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதற்குஎதிர்ப்பு
கிளம்பியுள்ளது.
அரசு மற்றும் உதவிபெறும்உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படி ஒவ்வொருஆண்டும் ஆசிரியர்கள்பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஆண்டுஆக.,1ல்மாணவர்களின் வருகைப்படி உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கைகணக்கிடப்பட்டன.
தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில்மட்டும் உபரிஆசிரியர்களை இடமாற்றம் செய்ய மாவட்ட கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது. கல்வியாண்டின் இடையில்பணி நிரவல்செய்வதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரிஆசிரியர்கழக மாவட்டச்செயலாளர் இளங்கோகூறியதாவது: அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள்மே மாதம்நடக்கும் கவுன்சிலிங்கில்தான் பணிநிரவல்செய்யப்படுவர். அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களைதிடீரென தேர்வுசமயத்தில் பணிநிரவல் செய்யஉள்ளனர். கல்வியாண்டின்இடையில் ஆசிரியர்களைமாற்றுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். அவர்களைதேர்வுகளுக்கு தயார்படுத்த முடியாது, என்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கும் - மசோதா நிறைவேற்றம்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமையை பாதுகாப்பதுமற்றும் தேவையானசலுகைகளை வழங்கவழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு
மாநிலங்களவை ஒப்புதல்அளித்துள்ளது.இம்மசோதாவுக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்துஉறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.
 இதன் மூலம்மசோதா ஒருமனதாகநிறைவேறியது. மாற்றுத்திறனாளிகள் மீது பாகுபாடு காட்டுபவர்களுக்கு5 லட்சம் ரூபாய்வரை அபராதம்மற்றும் 2 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கமசோதா வழிசெய்கிறது.

அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்குஇட ஒதுக்கீட்டை3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கவும் இம்மசோதாவழிவகை செய்கிறது.தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கானவரையறைக்கு ஏழு வகை உடல் குறைபாடுகள்கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்நிலையில் அவற்றை21 ஆக உயர்த்தப்படும்என மசோதாவில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மனநல குறைபாடுகள், ஆட்டிசம், செரிப்ரல்பால்சி, தசைசிதைவு உள்ளிட்டகுறைபாடுகளும் மாற்றுத்திறனாளிகள் வரையறைக்குள்வரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயர் கல்வி நிறுவனங்களில்மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டைமூன்றில் இருந்துஐந்து சதவிகிதமாகஅதிகரிக்கும் இம்மசோதா வழி செய்கிறது, மேலும்மத்திய மற்றும்மாநில அரசுத்துறைகளில் உள்ளமாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர்களுக்கானஅதிகார வரம்பும்அதிகரிக்கப்பட உள்ளது.

14/12/16

மத்திய அரசு அறிவிப்பு: கல்வி வரைவு கொள்கைக்கு மீண்டும் குழு அமைக்கப்படும்

புதிய தேசிய கல்வி வரைவுகொள்கையை டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கமிட்டி சமர்பித்த நிலையில், மீண்டும் புதிய குழு அமைக்கஇருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய கல்வி அமைப்பில்
சீர்திருத்தம்மேற்கொள்வதற்காக, கடந்தாண்டு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான கமிட்டியை மத்திய மனிதவள மேம்பாட்டுஅமைச்சகம் நியமித்தது.
இக்கமிட்டி, பல்வேறு ஆலோசனைக்கு பிறகு, புதிய கல்விவரைவு கொள்கையை கடந்த மே மாதம்சமர்ப்பித்தது. இதில் உள்ள பெரும்பாலானஅம்சங்களுக்கு நாடு முழுவதும் கடும்எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், புதிய கல்வி வரைவுகொள்கையை தயாரிக்க மீண்டும் ஒரு புதிய கமிட்டிஅமைக்க இருப்பதாக மனித வள மேம்பாட்டுதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்றுகூறி உள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘சிறந்தகல்வியாளர்கள் கொண்ட புதிய குழுஇன்னும் 10 நாட்களில் அமைக்கப்படும். இதற்காக சிலரின் பெயர்கள்பரிந்துரைக்கப்பட்டுள்ளன’’ என்றார். சுப்பிரமணியன் கமிட்டியின் வரைவில், ‘‘நமது கல்வி முறையில்அடிப்படையிலேயே சில மாற்றங்கள் செய்யவேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. இவற்றைமேற்கொள்ள அரசு தயங்குவதாக ஏற்கனவேசுப்பிரமணியன் விமர்சித்திருந்தார். இதனால் புதிய குழுஅமைக்கப்பட இருப்பதால் சுப்பிரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளை அரசு ஏற்காதா எனஅமைச்சரிடம் கேட்கப்பட்டதற்கு, ‘‘சுப்பிரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளும் ஏற்கப்படும். மேலும், அந்த கமிட்டியின்வரைவு கொள்கைகளையே இறுதி கொள்கையாக ஏற்கவேண்டுமென்ற கட்டாயமுமில்லை’’ என ஜவடேகர் கூறினார்.

ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்பு

வாஷிங்டன்: ஐ.நா. புதிய பொதுச்செயலாளராகபோர்ச்சுகல் நாட்டின்
முன்னாள் பிரதமர் அந்தோனியோகுத்தேரஸ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தற்போதைய பொதுச்செயலாளர் பான்கீ மூன்பதவி பிரமாணம்செய்து வைத்தார்.

ஐக்கிய நாடுகள் அவையில்தற்போதைய பொதுச்செயலாளராகதென்கொரியாவைச் சேர்ந்த பான் கி மூன்பதவி வகித்துவருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த பொறுப்புவகிக்கும் பான்கி மூனின்பதவிக் காலம்வரும் டிசம்பர்31-ம் தேதியுடன்நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரைதேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறுகட்டங்களாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் 13 வேட்பாளர்கள் பொதுச்செயலாளர்பதவிக்கு போட்டியிட்டனர். அவர்களில் 7 பேர் பெண்கள். இதில் இறுதிகட்டமாக 10 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில்புதிய பொதுச்செயலாளரைதேர்ந்தெடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்கடந்த அக்டோபர்5-ம் தேதிரகசிய வாக்கெடுப்புநடத்தப்பட்டது.

இதில், போர்ச்சுகலின் முன்னாள்பிரதமர் அந்தோனியோகுத்தேரஸ் ஐ.நா. புதியபொதுச்செயரலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ஐ.நா.வின்புதிய பொதுச்செயலாளராகஅந்தோனியோ குத்தேரஸ்நேற்று பதவியேற்றார். 193 உறுப்பினர்கள் முன்னிலையில் ஐ.நா. சாசனத்தின்நகல் அவரிடம்ஒப்படைக்கப்பட்டது. 9-வது பொதுச்செயலாளராக குத்தோரஸிற்கு, பான் -கி-மூன் பதவியேற்புசெய்து வைத்தார்.


ஐக்கிய நாடுகள் அவையின்அகதிகள் முகமையின்தலைவராகப் பதவிவகிக்கும் குத்தேரஸ், ஐ.நா. அவையின் 9ஆவதுபொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்அடுத்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 31-ம்தேதி வரைபதவி வகிப்பார்.

NMMS - SYLLABUS

NMMS தேசிய திறனாய்வு தேர்வுக்கானபாடத்திட்டம்
தேசிய திறனாய்வு தேர்வுக்கானபாடத்திட்டம்

MATHS
1.Number Series
2.Identifying The Wrong Number In The Series

3. Letter Series


  4.Change Of Sign And Number
5. Substitution of Mathematical Symbol
6. Problem Solving Questions
7. Odd - Man-Out Figures
8. Numbers Figures And Their Relationship
9. Similarity
10. Shapes Identifiacation
11.Vendiagram
12. Number Matices
13.Numbers And Symbols
14.Inserted Pictures
15.Time Related Questions
16.Direction Related Questions
17.Relationship Related Questions
18.Puzzles
19.Number Coding
20.Pictures Similarity
21.Mirror Image
22.water reflection
23.Dice Related Sum
NMMS mat question type
SAT Syllables
கணிதம்
VII  I Term, II Term, III Term
VIII I Term, II Term Only
அறிவியல்
VII  I Term, II Term, III Term
VIII I Term, II Term Only
*சமூக அறிவியல்*
VII  I Term, II Term, III Term

VIII I Term, II Term Only

BRC அளவில் மாணவர்களுக்கு நடத்தப்படும் பேச்சுப்போட்டிகளின் தலைப்புக்கு கட்டுரை மாதிரிகள்..