யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/3/18

விரைவில் அஞ்சல் துறையுடன் வங்கி சேவை!

தமிழகத்தில் விரைவில் அஞ்சல் துறையுடன் வங்கி சேவை தொடங்கப்படும் என நேற்று (மார்ச் 10) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 1,56,000 ஆயிரம் அஞ்சல் நிலையங்கள் உள்ளன. தமிழகத்தில் 94 தலைமை அஞ்சல் நிலையங்கள் உட்பட மொத்தம் 12,185 தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அஞ்சல் நிலையங்களில் வங்கி சேவைகள், ஏடிஎம் வசதி, பாஸ்போர்ட் பெறும் வசதி போன்றவை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அஞ்சல் துறையில் தனியார் வங்கி போல் சேவை ஒன்று தொடங்கப்படும் எனத் தமிழக தலைமை அஞ்சல் வட்டத்தலைவர் சம்பத் தெரிவித்துள்ளார். சித்தாலப்பாக்கத்தில் 600131 என்ற புதிய பின்கோடுடன் நேற்று துணை அஞ்சலகம் திறப்பு விழா நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன் அஞ்சலகத்தைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு தலைமை அஞ்சல் வட்டத் தலைவர் சம்பத்,“இந்தியாவில் 8,500 பேருக்கு ஒரு அஞ்சலகமும், தமிழகத்தில் 6,000 பேருக்கு ஒரு அஞ்சலகமும் உள்ளது. அஞ்சல் துறையில் வங்கி சேவை போன்று மாநிலம் முழுவதும் 37 இடங்களில் புதிதாக ஒரு சேவை தொடங்கப்படவுள்ளது, இதில் கடன் வசதி தவிர மற்ற அனைத்து சேவைகளும் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பழிப்பைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், 50 ரூபாய் செலுத்தி தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம். அதன்படி, பாஸ் புக், ஏடிஎம், கார்டு பெற்று, பண பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்ளலாம். அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம், கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் தபால் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் சர்வீஸ் சார்ஜ் கிடையாது என்று 2017ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இனி முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை வேறு நபரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்: ரயில்வே அறிவிப்பு :

தவிர்க்க முடியாத காரணத்திற்காக ரயிலில் பயணம் செய்ய முடியாமல் போனால், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை வேறு நபரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகிலேயே 4-வது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்திய ரயில்வேயின் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட நாளில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்யக் கூடிய வசதியும் இந்திய ரயில்வேயில் உள்ளது. 
இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் முன்பதிவு செய்து இருக்கை உறுதியான பின்பும் நம்மால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்றால் அதனை வேறு ஒருவருக்கு மாற்றிக்கொடுக்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்திய ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்டு முக்கிய ரயில் நிலையங்களில் பணியாற்றும் தலைமை முன்பதிவு மேற்பார்வையாளர்கள் மூலம், வேறு ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம்.

முன்பதிவு செய்தவர் பெயரை மாற்றுவதற்கான வழிமுறைகளும் நிபந்தனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியராக இருந்தால் பணியின் காரணமாக செல்லும் போது, 24 மணி நேரம் முன்பாக எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து பெயரை மாற்றிக் கொள்ளலாம். இதே போல் பயணிகளும் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பாக தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தனது பெயரில் பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மாற்றிக் கொள்ள கோரிக்கை விடுக்கலாம்.
மாணவர்கள் பெயரில் பள்ளி, கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளையும் வேறு மாணவர்கள் பெயரில் 48 மணி நேரம் முன்பாக மாற்றிக் கொள்ளலாம். தேசிய மாணவர் படையினருக்கும் இந்த வசதி அளிக்கப்படுகிறது. இதேபோல் திருமண நிகழ்ச்சிக்காக மொத்தமாக ரயில் பயணம் செய்பவர்கள், 24 மணி நேரத்துக்கு முன்பாக கடிதம் எழுதி கொடுத்து இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Teacher Associations at eight Teachers' Participation in Delhi:

கல்விச் சுதந்திரம் கட்டமைப்பை மாற்றுகிறது பள்ளிக்கல்வித்துறை!!!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihd20eFCXlv7f-T55b_rCSO5YbeMOFF3EYdN1RiIKSTLXmSKs0u11hYrNmLhX61cq9mO_Xol5Sj4MYvyFQLzVtjGNGF198PSpMdI5Sdeo2ipaPGUTYXbkj0w3aKgMx2gHWHFI4nsKc2dI/s1600/1520740963379.jpg

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடையும்.

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் வளைகுடா பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:

இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலின் நடுப்பகுதியில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.இது தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை, தமிழகத்தின் தென் கடலோரப் பகுதி இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்து நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது. தமிழகத்துக்கு பாதிப்பு இல்லைவங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதன் காரணமாக தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் இதர பகுதியில் வறண்ட வானிலையே நிலவும். இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து மாலத்தீவை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நகரும்போது கன்னியாகுமரி, மன்னார் வளைகுடா இடையிலான கடல் பகுதியில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். எனவே, அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் அப்பகுதி கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் இருக்கும்.இவ்வாறு இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியம் என்பது சலுகையா? ஓய்வூதியம் பற்றிய ஒரு முழுமையான தகவல் | அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் :

ஓய்வூதியம் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்தில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்தாகும்’ அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 31-ஆவது பிரிவின்படி ஓய்வூதியம் அவரது சொத்துரிமை. ஓய்வூதியம் என்பது ஓய்வு பெற்றவரின் கையில் சென்றுசெர வேண்டும் என ஓய்வூதியச் சட்டம் உறுதிப் படுத்துகிறது. அதை எந்த நீதிமன்றமும்கூடப் பறிமுதல் செய்துவிட முடியாது. உச்சநீதி மன்றம் மன்னர் மான்ய ஒழிப்பு வழக்கில் ‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்துரிமை. அரசியல் சட்டத்தின் 31ஆவது பிரிவு அளித்துள்ள இந்த உரிமையைத் தட்டிப் பறிக்க- இந்த அடிப்படை அம்சத்தை மறுதளிக்க நாடாளுமன்றத்துக்குக்கூட அதிகாரமில்லை’ என்று தீர்ப்பு அளித்துள்ளது.
நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்குவதற்காக பணிக்கொடைச் சட்டம் 1972 (Gratuity Act 1972)நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாட்டில் உள்ள தொழிலாளர் எவரும் பணிக்கொடை இல்லாமல் இருக்கக் கூடாது. எனவே அனைவருக்கும் பணிக்கொடை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பணிக்கொடையைப் பறிக்க அரசுக்கு உரிமை கிடையாது. ஓய்வுபெறும்போது ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெற கம்முட்டேஷன் உரிமையும் ஊழியருக்கு உண்டு.

ஒருவேலையில் சேர்ந்து சுமார் 35 முதல் 40 ஆண்டுகள்வரை தனது உழைப்பை நாட்டுக்குத் தந்து ஓய்வுபெறும் ஒருவர் தனது எஞ்சிய வாழ்நாளை ஓரளவாவது குறைந்தபட்ச வசதிகளோடு வாழவேண்டும் என்ற நோக்கில் அவர் பணியில் இருக்கும்போதே அவரது ஊதியத்தில் ஒருகணிசமான தொகையைப் பிடித்தம் செய்து அத்துடன் அதேஅளவுக்கு அரசின் பங்கையும் சேர்த்து ஓய்வுபெறும் நாளில் அளித்திட உருவானதுதான் வருங்கால வைப்புநிதித் திட்டம்.இதற்காக நிறைவேற்றப்பட்டதுதான் பிராவிடண்ட் ஃபண்ட் சட்டம்

1952 (Employees Provident Fund Act 1952) அனைவருக்கும் பி.எஃப் இருக்கவேண்டும் என்றுசொல்லும் இந்தச்சட்டத்தின்படி எவர் ஒருவருக்கும் இதை மறுப்பது சட்டவிரோதச் செயலாகும்.

இந்தச் சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை பா,ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிதித்துறை அமைச்சகம்22.12.2003ல் பிறப்பித்த புதிய ஓய்வூதிய திட்ட உத்தரவு ஆபத்துக்குள்ளாக்கியது.

♦ஆரம்பத்தில் 1891ல் டென்மார்க்கும், 1898ல் நியூசிலாந்தும் வயதானவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தின.1917க்குப் பிறகு, சோவியத் ஒன்றியம்தான் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் போன்ற உரிமைகளை உலகில் முதன் முதலில் சட்டப்பூர்வமாக அறிவித்து அமல்படுத்தியது.

♦இத்தகைய சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் உலகில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் புதிய உத்வேகத்தை அளித்தன. சர்வதேச சங்கமும், அதன் துணை அமைப்பான தொழிலாளர் ஸ்தாபனமும் உழைப்பாளி மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான வரைமுறைகளை வகுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

♦ஒருவர் வயது முதிர்வின் காரணமாகப் பணி ஓய்வுபெறும்போது எஞ்சிய கால வாழ்வாதாரத்திற்காக வைப்பு நிதி திட்டம் உருவாகியது.இத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள் தனது பங்களிப்பை செலுத்துவதோடு நிர்வாகமும் தனது பங்களிப்பை செலுத்த வேண்டும்.

♦1930 களில் உலகம் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எஸ்.எம். கெய்ன்ஸி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி மக்களின் வாங்கும் சத்தியைப் பெருக்க அரசுத்துறையில் நலத்திட்டங்களை உருவாக்கி வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டங்களை உருவாக்கிய அரசுகள் சேமநல அரசுகள் என அழைக்கப்பட்டன.

♦அந்த அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு பங்களிப்பு வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தின. இத்திட்டத்திற்கு அரசுகள் அளிக்க வேண்டிய பங்குத்தொகை மாதம்தோறும் அளிக்காமல் அந்த நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு மடைமாற்றப்பட்டது.

♦இந்திய நாட்டில் முதலாவது ஊதியக் குழுவின் விளைவாக தளர்த்தப்பட்ட ஓய்வூதிய விதிகள் 1950 ஏப்ரல் 17ம்தேதி அமல்படுத்தப்பட்டன. அதன்படி, பொது வருங்கால சேமிப்பு நிதி உருவாக்கப்பட்டது.

♦ இத்திட்டத்தின் மூலம் மத்திய-மாநில அரசுகள் ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டும் தாங்கள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையை ஓய்வூதியமாக வழங்கத் துவங்கின. பின்னர், ஊழியர்களிடம் எவ்விதமான பங்களிப்பும் பெறாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

♦ஓய்வூதியச் சலுகை வழங்குவதில் முன்னர், பின்னர் என வேறுபடுத்தி பாரபட்சம் காட்டத்துவங்கியது மத்திய அரசு. அதனை எதிர்த்து டி.எஸ்.நகரா மற்றும் இதரர் பதிவு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் 17.12.1982ல் அளித்த தீர்ப்பு நாளையே ஓய்வூதியர்களின் ‘உரிமை’ தினமாக கொண்டாட படுகிறது.

♦ உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு மகா சாசனமாகும். ஓய்வூதியம் என்பது கவுரவமாக வாழும் உரிமையின் உத்தரவாதம் என மனித உரிமை ஆணையமும் தீர்ப்பு வழங்கி யுள்ளது
.
♦பணி ஓய்வு பெற்ற பிறகு கவுரவ மாகவும் சுதந்திரமாகவும் வாழ உத்தர வாதம் அளிக்க வேண்டும். ஒருவர் தனது வாழ்வில் முதுமைத் தளர்ச்சியினையும், வறுமையையும் எதிர்த்திட வழங்கப் படுவதுதான் ஓய்வூதியம்.

♦எனவே, ஓய்வூதியம் என்பது கருணைத் தொகையல்ல. அது சட்டரீதியானது. இது நிர்வாக விருப்பு வெறுப்புகளாலோ அல்லது கருணை கொண்டோ வழங்கப் படுவதில்லை.

♦பென்சன் திட்டமே பென்சன் நிதியிலிருந்து வழங்கப்படுவதில்லை. பென்சன் நிதி என்று ஒன்று இல்லை. ஓய்வூதியம் என்பது ஒரு செலவினம் என நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

♦பென்சன் என்பது மத்திய -மாநில அரசுகள் ஏற்றுக்கொண்ட பொறுப்பாகும். அதை வழங்கவேண்டியது கடமையாகும். மத்திய – மாநில அரசுகள், தங்களுக்கு ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கத்தான் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள் ளன.

♦உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு தமிழகத்தில் 1.4.2003லிருந்தும் 1.1.2004 ல் மத்திய அரசு பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கும் புகுத்தப்பட்டது.

♦இதற்கிடையில், 6வது ஊதியக்குழு ஓய்வூதியம் பற்றி ஆய்வு நடத்த டாக்டர் காயத்திரி குழுவை அமைத்தது. அக்குழு ஓய்வூதியத்தில் 54.75 விழுக்காடு பாதுகாப்பு துறையினருக்கே செலவு செய்யப்படுகி றது எனவும், எதிர்காலத்தில் ஊதியம், ஓய்வூதியத்திற்கான செலவினம் குறையும் எனவும் அறிக்கை அளித்தது.

♦இந்த உண்மைகளை அறிந்த அரசுகள், புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி 30, 35 ஆண்டு காலம் ஊழியர்களின் சேமிப்பையும், அரசின் நிதியையும் பங்குச் சந்தை மூலதனமாக உலக நிதி நிறுவனங் களின் ஆணைகளுக்கேற்ப உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்கு வாரி வழங்குகிறது.அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம், ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது.

♦ அதன்படி அமைக்கப்பட்டுள்ள 7வது ஊதியக்குழு விரைவில் பரிந்துரையை அறிவிக்க உள்ளது. அதற்குள், “ஏழைகளைப் பார், அவர்களது வருவாயை ஒப்பிட்டு பார்த்து பரிந்துரை செய்ய வேண்டும்

♦ஆனால், பெரு முதலாளிகளுக்கு வரிச் சலுகை, வாராக் கடன் தள்ளுபடி செய்யும்போது இந்த ஊடகங்கள் வாய் மூடி மவுனம் காக்கின்றன. போதாக் குறைக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும் வயிற்றெரிச்சலை கொட்டியுள்ளார்.

♦புதிய பொருளாதாரக்கொள்கைகளை அமல்படுத்தும் உலக நாடுகள் அனைத்துமே முதலில் ஓய்வூதியத்தை வெட்டுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளன.

♦ ஆரம்பத்தில் சிலி துவக்கி வைத்தது. அடுத்து அர்ஜெண்டினாவிலும் அமல்படுத்தப்பட்டது. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியபோது அந்நாடுகளில் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட மிகப்பெரும் வேலை நிறுத்தங்கள் நடைபெற்று நாடே ஸ்தம்பித்தன.

♦லத்தீன் அமெரிக்காவில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது.இந்தியா ஜனநாயக நாடு. நாட்டின் வளர்ச்சி மட்டுமல்ல நாட்டின் சமூகப் பாதுகாப்பு எல்லையும் விரிந்துகொண்டே செல்கிறது.

♦நமது அரசு சமதர்ம சோசலிச பாதையில் பீடு நடைபோடும் அரசாகும். சமூக நலக் குடியரசாக பாடுபடுவது இப்படித்தான்

♦. இதைத்தான் இந்திய அரசியல்அமைப்பு சட்டம் பிரகடனப்படுத்தி யுள்ளது. நம் நாட்டில் தொடர்ந்து விலை வாசி உயர்வால் ஏற்படும் தடுமாற்றங்கள். பணவீக்கத்தால் ஏற்படும் ஊதியக் குறைவு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி இவைகளை அறிந்த நம் நாட்டு பொருளாதார நிபுணர்களில் பெரும்பாலோனர் பொருளாதார சமத்துவம் பற்றியோ, வருவாய் சமப் பங்கீடு குறித்தோ இந்திய அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள சமத்துவ நியதியையோ சிந்திப்பதில்லை. மாறாக, ஓய்வூதியம் வழங்குவதால் அரசு திவாலாகும் என முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்

சொத்துரிமைக்கு நிகரான ஓய்வூதியம் – எஸ்.சம்பத்

********************


# இந்திய உச்ச நீதிமன்றம் திரு ட்டி.எஸ்.நகரா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி தொடர்ந்த ஓய்வூதியம் தொடர்பான ஒரு பொது நல வழக்கில் 17/12/1982ல் வரலாற்றுச் சிறப்பு மிக்கதீர்ப்பு வழங்கியது. 

# அதன் காரணமாக டிசம்பர் 17 என்பது இந்திய அளவில் ஓய்வூதியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


# இதில் ஒன்றிணையும் விதமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் துவக்கப்பட்டு 26 ஆண்டுகள் கழித்து செப் 1998ல் ஒப்பந்தம் வழியாக ஏற்கப்பட்ட ஓய்வூதியம் முதன் முதலாக 17/12/2000 அன்றுநடைபெற்ற அரசு விழாவில் அன்றைய தமிழக முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.


# ஓய்வூதிய உரிமை தொடர்பான மேற்சொன்ன பொது நல வழக்கு அன்றைய இந்திய தலைமைநீதியரசர் ஒய்.வி.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வினால்பரிசீலிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப் பட்டது. தீர்ப்பினை தொடங்கும் நீதியரசர் இவ்வாறு துவக்குகிறார். 

“மனுதாரர்களின் கோரிக்கையைபரிசீலிக்கிற போது ஆங்கில நாட்டு அரசின் பிரதம மந்திரியாக பதவி வகித்த ஊல்சியின் இறுதிபிரார்த்தனையான” அரசிடம் எவ்வளவு பய பக்தியுட்ன் சேவை செய்தேனோ, அது போல நான்இறைவனிடம் சேவை செய்திருந்தால் என் வயோதிக காலத்தில், இந்த ஈன வறிய நிலைக்கு நான்அவரால் தள்ளப்பட்டிருக்க மாட்டேன்” என்ற கூக்குரல் போன்றும்,


“நான் இரத்தம் சிந்திய (என் வாழ்நாளில் சேவை செய்த) அதே வாழ்க்கை முட்களில் வீழ்கின்றேன்” என்ற ஷெல்லியின் சோக ராகமாகவும் உள்ளது”.


அந்த தீர்ப்பில் சொல்லப்பட்ட பலஅம்சங்களில் மிகக் குறிப்பாக சொல்லப்படும் 3 அம்சங்கள்

(1) ஓய்வூதியர் அனைவரும் ஒரேதன்மையினர்தான் அவர்களை பணி நிறைவு பெற்ற நாளின் அடிப்படையில் பிரிப்பது சரியன்று,

(2)ஓய்வூதியம் அரசின் விருப்பப்படி வழங்கும் Aகருணைக் கொடையோ அல்லது வெகுமதியோ, அல்லதுபரிசோ கிடையாது அது அவர்களின் சொத்துரிமைக்கு நிகரான உரிமை,

(3) அரசுப் பணியில்உள்ளவர்களுக்கு எப்போதெல்லாம் ஊதியம் உயர்த்தப்படுகிறதோ, அப்போது ஓய்வூதியதாரர்களுக்கும்ஓய்வூதியம் உயர்த்தப்பட வேண்டும் என்பனவையாகும்.


: புதிய பென்சன் திட்டம் என 01.04.2003ற்கு பின்னர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என சொல்லப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதற்கானஓய்வூதியத்திட்டம் தொடர்பாக நிர்வகிக்கும் அதிகார அமைப்பிடமிருந்து கணக்கீடு போன்றவை இதுவரை வெளியிடப்படவில்லை என்பது வேதனையின் உச்ச கட்டம். 

இதன் நடுவில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகள் இத்தகைய புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு தொகை செலுத்தியவர்கள் பணி ஓய்வு / தன்விருப்ப ஓய்வு / இறப்பு / பணிநீக்கம் / ராஜினாமா போன்ற எந்த வகையில் பணி முடிவு பெற்றாலும் அவர்களமிருந்து பிடித்தம் செய்த பங்குத் தொகையை மட்டும் (பென்சன் என்றில்லாமல்) தீா்வு செய்து வருகின்றன என்பது கூடுதலான வேதனைக்குரிய அம்சம்.A

தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி அட்டவனை

தொடக்க நிலை

I st batch 16.03.18 , 19.03.18

II nd batch 20.03.18 , 21.0.18

III rd batch 22.03.18 ,23.03.18

உயர் தொடக்க நிலை

தமிழ் , ஆங்கிலம்
16.03.18 , 19.03.18

கணக்கு
20.03.18 , 21.03.18

அறிவியல்
22.03.18 , 23.03.18

சமூகஅறிவியல்
26.03.18 , 27.03.18A

11/3/18

ஆளப்போகிறோமா?அடிமையாக வாழப்போகிறோமா??



தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கத்தைக் கட்டிக் காக்கும் இயக்கவாதிகளுக்கு, 2002 இல் தொடக்கக்கல்வித் துறைக்குக் கிடைக்க வேண்டிய வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை அன்றைய பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சூழ்ச்சியாக அபகரித்துக் கொண்டு அனைத்தையும் பள்ளிக்கல்வித் துறைக்கே அள்ளிக் கொடுத்தது குறித்தும் தமக்கு நேரிட்ட அநீதிகளைத் தட்டிக் கேட்க வழியின்றி அசட்டையாக இருந்தது போதும்!
16 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே சூது கவ்வும் வேலைகள் தொடங்கிவிட்டன...
இந்த முறையும் கண்ணிருந்தும் குருடர்களாக நாம் இருப்போமேயானால் அறிவாலும் ஆற்றலாலும் தகுதியாலும் திறமையாலும் மாற்றானைவிட பல மடங்கு உயர்ந்து நிற்கும் இக்கால இளைய சமுதாயமும் நாளைய இளைஞர் சக்தியும் தொடக்கக்கல்வி இயக்கங்கள் மீது சபித்துக் கொட்டும்!
ஊதியத்திற்காக மட்டுமல்ல உரிமைகளுக்காகவும் போராடிடும் மாபெரும் இயக்கங்கள் நமது என்பதை உயிரைக் கொடுத்தேனும் நிரூபிக்க வேண்டியது அவசர அவசியக் கடமையாக உள்ளது.

ஆளப் போகிறோமா?
அடிமையாகிச் சாவப் போகிறோமா?

ஓங்கி உரத்துச் சொல்வோம்!
தொடக்கக்கல்வித் துறை
தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கே!

அடிமேல் அடி வாங்கும் ஆசிரியர்கள்!; ‘கக்கூஸ் போவதையும் கணக்கெடுக்கணுமாம்' -புதிய அகராதி சிறப்பு கட்டுரை!!!


  
கம்ப்யூட்டர், டேப்ளட், டிரைமெஸ்டர், தொடர் மதிப்பீட்டு முறை, 

ஆங்கில வழி என அரசு தொடக்கப்பள்ளிகள் ஒருபுறம் நவீனமாகி வந்தாலும், சமூகத்தைக் கட்டமைக்கும் ஆசிரியர்களை அரசாங்கம் கொத்தடிமைகளைப் போல நடத்தும் போக்கு, அவர்களை மனதளவில் சோர்வடையச் செய்துள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருமுறை ஊதிய உயர்வுக்காக போராடும்போதும் அவர்களை கேலி பேசும் பட்டியலில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். அந்த எண்ணத்தில் எனக்கு இப்போதும் பெரிய மாற்றுக்கருத்து இல்லை. உழைக்காமலேயே ஊதியம் பெறும் வர்க்கமாக ஆசிரியர்களை சித்தரித்திருப்பதில் அரசுக்கே பெரும் பங்கு உண்டு என்றுதான் சொல்வேன்.


கைநிறைய சம்பளத்தை அள்ளிக்கொடுத்து விட்டால் போதும். அவர்களை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்கலாம் என்ற மனோபாவத்தில் அரசாங்கம் இருப்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி என்றால் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு திரும்பிய திசையெங்கும் அடிமேல் அடி எனப் புலம்பினார் ஆசிரியர் நண்பர் ஒருவர். அரசுத்துறைகளில் போகிறவர், வருபவர்கள் எல்லாம் பள்ளிக்கூடத்தை எட்டிப்பார்க்கும் அதிகாரத்தை வழங்கியிருப்பது என்ன மாதிரியான வடிவமைப்பு எனத் தெரியவில்லை.

கடந்த 2016-17ம் ஆண்டு நிலவரப்படி தமிழகம் முழுவதும் 35414 அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 29.10 லட்சம் மாணவர்களும், 9708 நடுநிலைப்பள்ளிகளில் 17.42 லட்சம் மாணவர்களும் படிப்பதாக கூறுகிறது அரசின் நிதிநிலை அறிக்கை. தொடக்கக் கல்வித்துறையில் 2.23 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

பாடம் நடத்துவதைத் தவிர ஆசிரியர்களுக்கு வேறு என்ன வேலை இருக்கப் போகிறது? என்பதுதான் மக்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் எண்ணம். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, குழந்தைகளுக்கு சாதி, வருமானம் உள்ளிட்ட மூவகை சான்றிதழ் பெற்றுத்தருவது போன்ற வருவாய்த்துறையினர் செய்ய வேண்டிய வேலைகளையும் ஆசிரியர்கள்தான் செய்ய வேண்டும் என்பது பரவலாக அறிந்திருக்கும் தகவல்தான்.

ஆனால், தொடக்கக் கல்வித்துறையின் அண்மைக்கால போக்கு ஆசிரியர்களை உளவியல் ரீதியான நெருக்கடிக்கு தள்ளிவிட்டிருப்பதாக பலரும் சொல்கின்றனர்.

”தினமும் காலையில் வகுப்பறைக்குள் நுழைந்ததும் ஒவ்வொரு குழந்தையும் காலையில் பொதுக்கழிப்பிடத்தில் ஒண்ணுக்கு, ரெண்டுக்கு போனார்களா? வீட்டில் உள்ள கழிப்பறையை பயன்படுத்தினார்களா? என்று குழந்தைகளிடம் கேள்வி கேட்டு உண்மையைக் கண்டறிய வேண்டும்.


கழிப்பறையை பயன்படுத்தி இருந்தால் பச்சை மையினாலும், பொதுவெளியைப் பயன்படுத்திய மாணவர்களை சிவப்பு மையினாலும், பள்ளிக்கு வராத குழந்தைகளை கருப்பு அல்லது நீல நிற மையினாலும் வருகைப் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.

தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் ஆசிரியர் பயிற்றுநர் வரை யார் வந்தாலும் முதலில் இந்த வருகைப் பதிவேட்டைத்தான் பார்க்கின்றனர். அதனால், அதில் கவனம் செலுத்துவதிலேயே எங்களுக்கு பாடவேளையின் முதல் பதினைந்து நிமிடங்கள் கழிந்து விடுகிறது.

இது இப்படி என்றால், அன்றாடம் எத்தனை குழந்தைகள் சத்துணவு சாப்பிடுகின்றனர்? என்ற விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் சேகரித்து, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு செல்போன் மூலம் காலை 11 மணிக்குள் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

சத்துணவுத் திட்டத்திற்கென ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் தனியாக சத்துணவு அமைப்பாளர், சமையலர்கள் உள்ளனர். அவர்களிடம் கேட்டுப்பெற வேண்டிய தகவலை, தலைமை ஆசிரியர்களை அனுப்புமாறு நிர்ப்பந்திக்கின்றனர்.

இதற்கே எங்களுக்கு முதல் ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது. பிறகு எப்படி நாங்கள் குழந்தைகளுக்கு பாடம் நடத்த முடியும்?” என புலம்பினார் கொங்கணாபுரம் வட்டாரத்தைச் சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர்.

அதிகாரிகள் கேட்ட விவரங்களை சொன்ன நேரத்திற்குள் எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடியுரிமைப் பணிகள் (கட்டுப்பாடு மற்றும் மேல்முறையீடு) விதி 17 (ஏ)-ன் கீழ் குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பப்படும் என்றும் மிரட்டப்படுகின்றனர்.

ஏர்செல் நெட்வொர்க் செயலிழந்ததால் குறித்த நேரத்தில் அதிகாரிகளுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த மாதம் பிப்ரவரி 16ம் தேதி, ஏற்காடு வட்டாரத்தில் 35 தலைமை ஆசிரியர்களுக்கு 17 (ஏ)ன் கீழ் விளக்கம் கோரி குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த குறிப்பாணையை, உரிய விளக்கம் கொடுத்த பிறகும் உடனடியாக ரத்து செய்யப்போவதில்லை. அதை ‘ப’ வைட்டமின் மூலம்தான் ரத்து செய்ய முடியும் என்பதை நான் சொல்லாமலே உங்களுக்குப் புரியும்தானே?

தேர்தலையொட்டி மட்டுமே நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் இப்போதெல்லாம் ஆண்டு முழுவதுமே மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் விவரங்களை சரிபார்க்க தேர்தல் ஆணையம் ஒரு செயலியை வடிவமைத்துள்ளது.

சம்பந்தப்பட்ட வாக்காளரின் முகவரியை அடைந்த பின்னர், ஆசிரியர்கள் அந்த செயலியை திறக்க வேண்டும். அதில் கோரப்படும் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பல நேரங்களில் அந்த செயலி திறப்பதற்கு தாமதம் ஆவதால், கால விரயம் ஆவதாகவும் ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

ஆண்ட்ராய்டு மொபைல் போன் இல்லாத ஆசிரியர்களின் பாடு ரொம்பவே சிரமம்தான். எல்லோரையும் இந்த அரசாங்கம் ஆண்ட்ராய்டு மொபைல் வாங்க மறைமுகமாகக் கட்டாயப்படுத்துகிறது. இதற்காக அவர்களுக்கு மானியமோ, குறுஞ்செய்திகளுக்கென தொகையோ தருவதில்லை.

செயலி டவுன்லோடு ஆவதில் உள்ள நடைமுறைச் சிக்கலை எல்லாம் கருத்தில் கொள்ளாத அதிகாரிகள், தாமதம் ஆனால் ஆட்சியர் அறிவுறுத்தலின்பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மிரட்டலுடனேயே ஆசிரியர்களை பணிக்கின்றனர்.

”பிஎல்ஓ எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 7000 ரூபாய் அரசு வழங்குகிறது. அவர்களைக் கண்காணிக்கும் டிஎல்ஓ அந்தஸ்திலான தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு வெறும் 200 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர்.

நடப்பு மார்ச் மாதத்தில் மட்டும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் இங்கிலீஷ் பயிற்சி முகாம், பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி, கேள்வி ஒரு கலை பயிற்சி, தூய்மை பாரதம் பயிற்சி என நிறைய பயிற்சி முகாம்கள் உள்ளன.

இதுபோன்ற பயிற்சி முகாம்களால் பாடத்திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடிப்பதில் சிக்கல் நிலவுகிறது,” என்கிறார் வீரபாண்டி வட்டாரத்தைச் சேர்ந்த மற்றோர் அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர்.

பள்ளி தகவல் தொகுப்புத் திட்டத்திற்காக (EMIS) ஒரு பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியும் டவுன்லோடு ஆக வெகு நேரம் ஆவதாகச் சொல்லும் ஆசிரியர்கள், குழந்தைகளின் ஆதார் விவரங்களை சேகரித்து அனுப்பும் பணியிலும் பணிக்கப்பட்டு உள்ளதாகக் கூறினர்.



தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் தமிழ் வழியுடன், ஆங்கில வழியிலும் (இங்கிலீஷ் மீடியம்) பயிற்றுவிக்கப்படுகிறது. மொழிப்பாடங்கள் தவிர கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மீடியத்திலும் உள்ளன.

இந்த இரண்டு மீடியத்தையும் ஒரே ஆசிரியர்தான் நடத்த வேண்டும். அப்படி எனில், ஒரே ஆசிரியர் இரண்டு மீடியத்திலும் சேர்த்து 10 பாடங்களை நடத்த வேண்டிய நெருக்கடி உள்ளது. ஆர்டிஇ பரிந்துரையைக் காட்டிலும் இன்றைக்கு அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர் : மாணவர் விகிதம் ரொம்பவே குறைவுதான். எனினும், ஆசிரியர்களின் உழைப்பு ஒன்றுதானே?

ஆங்கில வழியில் நடத்துவதற்கென தனியாக ஆங்கிலத்தில் சரளமாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ் வழியில் உள்ள ஆசிரியர்களைக் கொண்டே நடத்தும்போது ‘Zebra’வை ‘ஜீப்ரா’ என்று குழந்தைகள் உச்சரித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தைச் சேர்ந்த மற்றொரு ஆசிரியர் புதிய கோணத்தில் சொன்னார்.

”இளம் ஆசிரியர்களில் சிலர் பள்ளியை விட்டு வெளியே சுற்றவே ஆசைப்படுகின்றனர். அவர்களுக்கு அரசாங்கமே தாராளமாக வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் எழுத்தர் பணிகளையும் ஆசிரியர்களே செய்து கொள்ள வேண்டும்.

தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட மெமோ.

அதற்கென தனி ஊழியர் இல்லாததால், குழந்தைகளுக்கான சான்றிதழ் பெற்றுத்தருவது, சத்துணவு வேலைகள், கல்வி அலுவலகம் சார்ந்த பணிகளில் ஈடுபடவே ஆசிரியரின் பெரும்பகுதி நேரம் போய் விடுகிறது.

இந்த நெருக்கடிகளுக்கு இடையில்தான் குழந்தைகளுக்கு பாடம் நடத்த வேண்டும். ஆகாயத்தில் இருந்து குதித்து வரும் அதிகாரிகள், திடீரென்று ஒரு நாள் பள்ளியில் ஆய்வு செய்துவிட்டு கற்றல் அடைவுத்திறன் குறைவாக இருப்பதாகக் கூறிவிட்டு, எங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் என்ன தர்மம் இருக்கிறது?,” என வினா எழுப்பினார் அந்த ஆசிரியர்.

இது ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அசோக்குமார் (பொ) சில நாள்களுக்கு முன்பு, வித்தியாசமான ஓர் உத்தரவை பிறப்பித்து இருந்தார். மூன்றாம் பருவ பாடத்திட்டத்தை முடிப்பதற்குள் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடக்கூடாது என்பது அவருடைய உத்தரவு.

மூன்றாம் பருவ பாடத்திட்டம் எப்போது முடியும் என ஆசிரியர் ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ஏப்ரல் மத்தியில். அதன்பிறகு தேர்வு. அந்த மாதத்துடன் கோடை விடுமுறை விடப்பட்டு விடும் என்றார். எனில், எப்போது ஆண்டு விழா கொண்டாடுவது? அதற்காக ஒதுக்கப்படும் நிதியை என்ன செய்வது?

ஆசிரியர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து பின்னர் அந்த அதிகாரி தனது உத்தரவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஓர் ஆசிரியர், வகுப்பறைக்குள் குழந்தைகளிடம் தாயாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் தர்க்க நியாயம் இருக்கிறது. ஆனால், அவரே ஊரக வளர்ச்சித்துறை அலுவலர், வருவாய்த்துறை ஊழியர், தேர்தல் ஆணைய ஊழியர், துப்புரவாளர், பள்ளிக் காப்பாளர் என ‘தசாவதாரம்’கமல்ஹாசனைக் காட்டிலும் பல அவதாரங்களை எடுக்க வைப்பது தகுமா?

ஆசிரியர்களைக் கசக்கிப் பிழிந்தால்தான் கல்வித்தரம் வளரும் என தமிழக அரசாங்கம் கண்களை மூடிக்கொண்டு கணக்குப் போட்டிருக்கிறது.

இந்த துன்புறுத்தலினால் அல்லல்படுவது ஆசிரியர் சமூகம் மட்டுமல்ல; ஏழைக் குழந்தைகளும்தான்.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட அலுவலர்கள் குழு மூலம் பார்வையிடுதல் ....

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட அலுவலர்கள் குழு மூலம் பார்வையிடுதல் மற்றும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் சுற்றறிக்கை அனுப்புதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



EMIS- இணையதள பதிவின்படி பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவம்....

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நாள் நடைபெறும் விவரங்கள்....

24/2/18

இன்னும் 4 நாட்களில் டவர் பிரச்சனை சரியாகிவிடும்; கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் நிறுவனம்!

முடங்கிய  ஏர்செல் சேவை, 4 நாட்களில் சரியாகிவிடும் என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் ஏர்செல் டவர் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

பல்வேறு இடங்களில் டவர்கள் இயங்காததால், சிக்னல் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இதனால் வியாபாரிகளும், அலுவலக ஊழியர்களும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஏர்செல் அலுவலகத்தில் சென்று பொதுமக்கள் முறையிட்டனர்.

ஆனால் அங்கு முறையான விளக்கம் கிடைக்கவில்லை. இதையடுத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் மேற்கு தாம்பரம் பகுதி ஏர்செல் அலுவலகம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் முடங்கியுள்ள ஏர்செல் சேவை 4 நாட்களில் சரியாகிவிடும் என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பேச்சு நடத்தும் வரை மறியல் : 'ஜாக்டோ - ஜியோ' உறுதி

ஜாக்டோ - ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி, இரண்டாவது நாளாக, நேற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், நேற்று முன்தினம், தொடர் மறியல் போராட்டம் துவங்கியது.பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், சென்னைக்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர். நேற்று,
இரண்டாவது நாளாக போராட்டம் நீடித்தது.பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்துவது; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாதத்துக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவது; இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர். அதுவரை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், கைதானவர்கள் முகாமிட்டிருந்தனர்.
போராட்டம் குறித்து, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர், தாஸ் கூறுகையில், ''போராட்டத்திற்கு வரும் ஆசிரியர்கள் வகுப்புகளை, 'கட்' அடிக்கவில்லை. சுழற்சி முறையில் விடுமுறை கேட்டு, போராட்டத்தில் பங்கேற்கின்றனர். அரசு பேச்சு நடத்தும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார்.

2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு

அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 2,336 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என, உயர்கல்வித் துறை செயலர், சுனில்பாலிவால் தெரிவித்தார்.
கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி: பொறியியல், பாலிடெக்னிக்கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்களை சமீபத்தில் நிரப்பியுள்ளோம். அரசு கலைக் கல்லுாரிகளைபொறுத்தவரை, பேராசிரியர்கள் சிலர், கோர்ட்டை அணுகியுள்ளதால், பணிகள் தேங்கியுள்ளன; சிக்கல் தீர்க்கப்பட்டு, முதல்வர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கடந்த இரு ஆண்டுகளில், 370 பேராசிரியர்கள் பணி ஓய்வு பெற்று சென்றுள்ளனர்; 1,966 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இவ்விரண்டையும் சேர்த்து, 2,336 இடங்களுக்கான தகவலை, டி.ஆர்.பி., வசம்ஒப்படைக்க உள்ளோம்.

இதற்கான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பல்கலை, கல்லுாரி பேராசிரியர்களின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதியம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : கட்டண நிர்ணய குழு உத்தரவு'

ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டண நிர்ணயக் குழு, உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழகம் முழுவதும்,மெட்ரிக் இயக்ககம், பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கப் பள்ளி இயக்ககத்தின் அங்கீகாரம் பெற்று, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகள் இயங்குகின்றன.கட்டாய கல்விஉரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சுயநிதி பள்ளிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, கல்வி கட்டண நிர்ணயக் குழு, 2009ல் அமைக்கப்பட்டது.இந்த குழுவின், தற்போதைய தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, மாசிலாமணி பணியாற்றி வருகிறார்.அவரது தலைமையிலான குழுவே, தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கிறது.

நடப்பு கல்வி ஆண்டு மற்றும் அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை, நிர்ணயிக்கும் பணிகள், தற்போது நடக்கின்றன.கட்டண நிர்ணயத்துக்காக வரும் பள்ளிகள், அங்கீகார சான்றிதழ், உட்கட்டமைப்பு வசதிகள், அரசு துறைகளின் பல்வேறு வகை சான்றிதழ்கள் என, பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்; அவற்றை எல்லாம் பரிசீலித்து, கல்வி கட்டணத்தை, குழு நிர்ணயிக்கும்.இந்நிலையில், இந்தாண்டு முதல், அனைத்து தனியார் பள்ளிகளும், தங்களது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, ரொக்கமாக வழங்காமல், இ.சி.எஸ்., எனப்படும், 'எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம்' முறையில், வங்கிகள்வாயிலாக வழங்க வேண்டும்.

கல்வி கட்டண அனுமதி பெறும் பள்ளிகள், இ.சி.எஸ்., முறைக்கு மாற வேண்டியது கட்டாயம்என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.கட்டண நிர்ணயம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் போது, குறைந்தபட்சம், கடைசி மூன்று மாதங்கள், இ.சி.எஸ்., முறையில் ஊதியம் கொடுத்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கல்வி கட்டண நிர்ணயக் குழுஉத்தரவிட்டு உள்ளது.இ.சி.எஸ்.,க்கு மாறாத பள்ளிகளுக்கு, கட்டண நிர்ணய அனுமதி  வழங்கப்படாது என்றும், கூறியுள்ளது.

தேர்வு கட்டணம் உயர்வு : ரயில்வே அமைச்சர் விளக்கம்

புதுடில்லி: விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே, ரயில்வே பணியாளர் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
ரயில்வே துறையில், 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து,ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் அளித்த விளக்கம்: மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால், ரயில்வே பணியாளர் தேர்வை எழுத விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. விண்ணப்பித்த அனைவரும் தேர்வு எழுதுவதில்லை. இதனால், நேரம் மற்றும் பணம் விரயமாகிறது.இதை தடுக்க, தேர்வு எழுதுவதற்கான கட்டணம், கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் விண்ணப்பதாரர்களுக்கு, இதுவரை கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இனி மேல் இவர்களுக்கு, 250 ரூபாய், முன்னெச்சரிக்கை கட்டணமாக வசூலிக்கப்படும். இதர விண்ணப்பதாரர்களுக்கான கட்டணம், 100லிருந்து, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறையும். மையங்களுக்கு வந்து தேர்வு எழுதியவர்களில், இட ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் வருபவர்களுக்கு, 250 ரூபாயும், இட ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு, 400 ரூபாயும் திருப்பி அளிக்கப்படும்.
 இதன் மூலம், தேர்வுக்கு விண்ணப்பித்து, தவறாமல் ஆஜராகி அதை எழுதுவோருக்கு, எந்த கட்டண உயர்வும் இருக்காது. அதே போல், தேர்வின் போது, ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் கையெழுத்திடுவது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளன. கம்ப்யூட்டர் வாயிலாக, 15 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு மைய வருகைப் பதிவில், விண்ணப்பதாரர்கள், தேர்வு எழுதும் மொழியிலேயே கையெழுத்திடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : கட்டண நிர்ணய குழு உத்தரவு!!!

ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும்'
என, தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டண நிர்ணயக் குழு, உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகம் முழுவதும், மெட்ரிக் இயக்ககம், பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கப் பள்ளி இயக்ககத்தின் அங்கீகாரம் பெற்று, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகள் இயங்குகின்றன.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சுயநிதி பள்ளிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, கல்வி கட்டண நிர்ணயக் குழு, 2009ல் அமைக்கப்பட்டது.இந்த குழுவின், தற்போதைய தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, மாசிலாமணி பணியாற்றி வருகிறார். அவரது தலைமையிலான குழுவே, தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கிறது.நடப்பு கல்வி ஆண்டு மற்றும் அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை, நிர்ணயிக்கும் பணிகள், தற்போது நடக்கின்றன.கட்டண நிர்ணயத்துக்காக வரும் பள்ளிகள், அங்கீகார சான்றிதழ், உட்கட்டமைப்பு வசதிகள், அரசு துறைகளின் பல்வேறு வகை சான்றிதழ்கள் என, பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்; அவற்றை எல்லாம் பரிசீலித்து, கல்வி கட்டணத்தை, குழு நிர்ணயிக்கும்.இந்நிலையில், இந்தாண்டு முதல், அனைத்து தனியார் பள்ளிகளும், தங்களது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, ரொக்கமாக வழங்காமல், இ.சி.எஸ்., எனப்படும், 'எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம்' முறையில், வங்கிகள் வாயிலாக வழங்க வேண்டும்.கல்வி கட்டண அனுமதி பெறும் பள்ளிகள், இ.சி.எஸ்., முறைக்கு மாற வேண்டியது கட்டாயம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.கட்டண நிர்ணயம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் போது, குறைந்தபட்சம், கடைசி மூன்று மாதங்கள், இ.சி.எஸ்., முறையில் ஊதியம் கொடுத்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கல்வி கட்டண நிர்ணயக் குழுஉத்தரவிட்டு உள்ளது.இ.சி.எஸ்.,க்கு மாறாத பள்ளிகளுக்கு, கட்டண நிர்ணய அனுமதி வழங்கப்படாது என்றும், கூறியுள்ளது 

சத்துணவு மையங்களுக்கு பப்பாளி, முருங்கை கன்று!!!

அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களுக்கு இலவசமாக
பப்பாளி, முருங்கை மரக்கன்று வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் உதவி பெறும், 40 ஆயிரம் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை படிக்கும், 50 லட்சம் மாணவர்களுக்கு, சத்துணவு திட்டத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும், ஒரு வகை சாதம், பயறு வகைகள் மற்றும் தினமும் முட்டை வழங்கப்படுகிறது.பப்பாளி மற்றும் முருங்கையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு, நீர்சத்து அதிகம் உள்ளது. இதனால், மையத்திற்கு ஒரு பப்பாளி, ஒரு முருங்கை மரக்கன்றை இலவசமாக வழங்க, தோட்டக்கலை துறை ஏற்பாடு செய்து வருகிறது. கன்றுகள் வளர்ந்தபின், மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் முருங்கை கீரை, முருங்கை குழம்பு, பப்பாளி பழம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.சத்துணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளிகளில் மரம் வளர்ப்பது, நிழல் தர மட்டுமின்றி, மாணவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவ வேண்டும். எனவே, பப்பாளி, முருங்கையை உணவோடு சேர்க்க, அரசு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இட வசதியிருந்தால், கூடுதல் மரங்களை நடவு செய்யலாம்' என்றார்.

2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு!!

கோவை: ''அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 2,336 
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என, உயர்கல்வித் துறை செயலர், சுனில் பாலிவால் தெரிவித்தார்.

கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி: பொறியியல், பாலிடெக்னிக்கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்களை சமீபத்தில் நிரப்பியுள்ளோம். அரசு கலைக் கல்லுாரிகளை பொறுத்தவரை, பேராசிரியர்கள் சிலர், கோர்ட்டை அணுகியுள்ளதால், பணிகள் தேங்கியுள்ளன; சிக்கல் தீர்க்கப்பட்டு, முதல்வர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கடந்த இரு ஆண்டுகளில், 370 பேராசிரியர்கள் பணி ஓய்வு பெற்று சென்றுள்ளனர்; 1,966 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இவ்விரண்டையும் சேர்த்து, 2,336 இடங்களுக்கான தகவலை, டி.ஆர்.பி., வசம் ஒப்படைக்க உள்ளோம். இதற்கான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பல்கலை, கல்லுாரி பேராசிரியர்களின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதியம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.