யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/11/16

அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம்: நிலைமையை சமாளிக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு

அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் நவம்பர் மாதஊதியம் புதன்கிழமை வழங்கப்படவிருப்பதால் கூட்ட நெரிசல்,
பணத்தட்டுப்பாட்டைபோக்கும் வகையில் சுமார் 200 கோடிமதிப்பிலான ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மையங்களில் நிரப்பப்படவுள்ளன.
புழக்கத்தில்இருந்த ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதோடு, புதியரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.
மத்தியஅரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்துவங்கி ஏடிஎம் மையங்களில் இருந்துபணம் எடுக்க அதிகளவில் மக்கள்வருவதால் பெரும்பாலான மையங்கள் பணம் இன்றி மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட புதிய500 ரூபாய் நோட்டுகள் ஒரு சில இடங்களைத்தவிர்த்து, பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் புழக்கத்துக்கு கொண்டுவரப்படவில்லை. வங்கி ஏடிஎம் மையங்களில்குறைவான தொகைதான் பெற முடியும் என்பதோடு, பணமின்றி பெரும்பாலானவை மூடப்பட்டிருப்பதால் மாநிலம் முழுவதிலும் அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு நவம்பர், டிசம்பர் மாத ஊதியத்தை ரொக்கமாகவழங்க வேண்டுமென அரசு ஊழியர் அமைப்புதொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் மட்டும்சுமார் ஒரு லட்சம் அரசுஊழியர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு ஊதியம்வழங்க இன்னும் ஒரு நாள்மட்டுமே உள்ளதால் பணத் தட்டுப்பாடு நிலைமையைவங்கிகள் எப்படி சமாளிக்கப் போகின்றனஎன்ற கேள்வி மக்கள் மத்தியில்நீடித்து வருகிறது.
இதுகுறித்துமாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தாமோதரனிடம்கேட்டதற்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும்ஊதியத்தை வங்கி ஏடிஎம் மையங்களில்எடுக்க அதிகமானோர் வரக் கூடும் என்பதால், அதனை சமாளிக்கும் வகையில் சென்னைக்கு வரப்பெற்றுள்ள500 ரூபாயில் சுமார் 200 கோடி மதிப்பிலான 500 ரூபாய்நோட்டுகள் வேலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கப்படவுள்ளன.
மாவட்டம்முழுவதிலும் உள்ள ஏடிஎம் மையங்களில்வருகிற புதன்கிழமை (நவ.30) 500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில்நிரப்பப்படவுள்ளன. இதன்மூலம் பணத்தட்டுப்பாட்டை குறைப்பதோடு, கூட்ட நெரிசலையும் கட்டுக்குள்கொண்டு வர முடியும்.

அத்தியாவசியத்தேவைகளுக்கு மட்டுமே ஏடிஎம் மையங்களில்இருந்து பணம் பெற்றுக் கொள்வதோடு, வங்கிகள் மூலம் பெரிய வர்த்தகநிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாய்ன்ட் ஆப் சேல்ஸ் மிஷினைப்பயன்படுத்தி மளிகைப் பொருள்கள் போன்றவற்றைவாங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக