யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/11/16

7 லட்சம் மாணவர்களை தொழிலதிபர்களாக்க இலக்கு; மத்திய அரசு புதிய திட்டம்!

மத்தியஅரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 7 லட்சம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து, தொழிலதிபர்களாக உருவாக்கும் நோக்கில், ‘பிரதான் மந்திரி யுவயோஜனா’ என்ற புதிய திட்டத்தைஅறிமுகப்படுத்தி
உள்ளது. டில்லியில், நேற்றுமுன்தினம், திறன் மேம்பாடு மற்றும்தொழில் முனைவு துறை அமைச்சர்ராஜீவ் பிரதாப் ரூடி தலைமையில், ‘தரமான ஆற்றல்’ என்ற தலைப்பில், மாநாடு நடைபெற்றது.


பெரும்பான்மைமாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்றஇந்த மாநாட்டில், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோருக்கான தொழில் முனைவோர் பயிற்சித்திட்டத்தை, ராஜீவ் பிரதாப் ரூடிஅறிவித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:

இளைஞர்களுக்குதொழில் முனைவோர் பயிற்சி அளிக்கும் புதியதிட்டத்தின் கீழ், அடுத்த ஐந்துஆண்டுகளில், 7 லட்சம் மாணவர்களுக்கு, தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, 499.94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாநில அரசுகளுடன் இணைந்து, 3,050 கல்வி மையங்களில், இந்தபயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக, என்.ஐ.இ.எஸ்.பி.யு.டி., மற்றும் ஐ.ஐ.இ., பயற்சி மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இவை, 125 நாடுகளைச் சேர்ந்த, 2,600 பேர் உட்பட, 7 லட்சத்திற்கும்அதிகமானோருக்கு, தொழில் முனைவோர் பயிற்சியைவெற்றிகரமாக வழங்கியுள்ளன.

இதையொட்டி, உள்நாட்டில் இளைஞர்களுக்கு, மேலும் அதிக வேலைவாய்ப்புகளைஉருவாக்கும் நோக்கில், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தின்கீழ், 2,200 கல்லுாரிகள், பல்கலைகள், 300 பள்ளிகள், 500 இந்திய தொழிற்கல்வி மையங்கள், 50 தொழில்முனைவோர் மேம்பாட்டு மையங்கள் ஆகியவற்றின் மாணவர்களுக்கு, வலைதளம் வாயிலாக தொழில்முனைவோர் பயிற்சி வழங்கப்படும்.

அத்துடன், தொழில் விபரங்கள், தொழில் முன்னோடிகளின் ஆலோசனைகள்உட்பட, தொழில் துவங்குவதற்கான அனைத்துஉதவிகளையும், இளைஞர்கள் பெறலாம். தேசிய மற்றும் சர்வதேசதரத்திலான தொழில் முனைவோர் கல்விப்பயிற்சி, இளைஞர்களுக்கு வழங்கப்படும்.

அமைச்சகம், 2020க்குள், ஒரு கோடி பேருக்குதிறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க இலக்குநிர்ணயித்துள்ளது. இதற்காக, பிரதமர் திறன் மேம்பாட்டுதிட்ட நிதியில் இருந்து, 3,000 கோடி ரூபாய், மாநிலஅரசுகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, மாநிலங்களில் அமைக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிமையங்கள், ஆய்வுக்கூடங்கள் மற்றும் பயிற்சி சாதனங்களின்தரம் உள்ளிட்டவை தொடர்பான வழி­காட்டு நெறிமுறைகள், தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. மத்திய அரசின்திட்டங்கள், அதகளவில், முதல் தலைமுறை தொழில்முனைவோரை உருவாக்க உதவும். இவ்வாறு அவர்கூறினார்.

முதல் தலைமுறையினர்:

சிறப்பாகசெயல்படும், 30 வயதிற்கு உட்பட்ட, முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு, 2017 ஜன., 16ல், மத்தியஅரசின் தொழில்முனைவோர் விரு­துகள் வழங்கப்படும்என, மத்திய திறன் மேம்பாட்டுஅமைச்சகம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக