யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/11/16

TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் இனி எப்படி தேர்ந்தெடுக்க போகிறார்கள்?

ஆசிரியர்தகுதித்தேர்வு குறித்த பல சந்தேகங்களும்பலவிதமான கட்டுரைகளும் இணையம் செய்தித்தாள்களில் உலவிவருகின்றன இதனால் ஆசிரியர்கள் பலரும்குழப்பம் அடைந்துள்ளனர். எனவே
தற்போதைய உண்மைநிலை என்ன என்பதை பற்றிஎடுத்துரைக்க இந்த கட்டுரையை நண்பர்களுக்குவெளியிடுகிறோம்.

ஆசிரியர்தகுதித்தேர்வு என்பது இந்திய அரசின்மூலம் இயற்றபட்ட கட்டாய கல்விச்சட்டப்படி இத்தேர்வுஎழுதுவது ஆசிரியர்களுக்கு கட்டாயம்.

இதனை தமிழக அரசு நேரடியாககொண்டுவரவில்லை ஒரு சில மாநிலங்களைதவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் இவைநடைமுறையில் உள்ளது. எனவே NCERT விதிகள்படி ஆசிரியர் தகுத்தேர்வு நடைபெறுகிறது. இருப்பினும் ஒரு சில மாநிலங்கள்வெயிட்டேஜ் மற்றும் மதிப்பெண் தளர்வுபோன்றவற்றை அறிவித்துள்ளது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது என்பதைநீங்கள் ஆந்திரா போன்ற மாநிலங்களுடன்ஒப்பிட்டால் தெரியும்.
தமிழகத்தில்ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர் இனிதேர்ந்தெடுக்கும் முறை தமிழகத்தில்ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்து வந்த பாதைஅனைவரும் அறிந்ததே வெயிட்டேஜ் முறை மற்றும் மதிப்பெண்தளர்வு குறித்த இரு வேறுவழக்கில் மதுரை கிளை மற்றும்சென்னை உயர்நீதிமன்றம் வேறு வேறு திர்ப்பைவழங்கியதால் உச்ச நீதிமன்றத்திற்கு இந்தவழக்கு சென்றது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிந்து தீர்ப்புவெளியிடப்பட்டுள்ளது, அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வில்வெயிட்டேஜ் முறை உண்டு மற்றும்5% மதிப்பெண் தளர்வு உண்டு அதாவது82 மதிப்பெண் மேல் பெற்றவர்கள் தேர்ச்சிபெற்றவர்கள் என்று தமிழக அரசுஅறிவித்த GO Ms. 71 மற்றும் GO Ms. 25 ஆகிய அரசாணைகள் செல்லும்இதன் மூலம் 2013 ல் நடைபெற்ற ஆசிரியர்தகுதித்தேர்வில் 55% மதிப்பெண் பெற்றால் போதும் என்று உச்சநீதிமன்றம்மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது. தமிழகஅரசு எடுக்கும் முடிவே இறுதி எனவும்உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது,
குழப்பம்
தற்போதுவிகடன் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் கடந்த தேர்வில் 60% மதிப்பெண்பெற்றவர்கள் மூலம் ஆசிரியர் தேர்வுசெய்யவுள்ளதாக செய்தி வெளியிட்டது. இந்தபேட்டி அளித்தவரை தொடர்பு கொண்டபோது எனசெய்தி வெளியிட்டுள்ளனர். எனவே இவை ஆசிரியர்தேர்வு வாரியம் அனைத்து பத்திரிக்கைகளுக்கும்அளித்த பேட்டி இல்லை மேலும்இவை அதிகாரபூர்வ தகவல் இல்லை அதாவது55% மதிப்பெண் தளர்வு கொண்ட GO Ms.25 அரசாணைதற்போது நடைமுறையில் உள்ளது வேறு எந்தபுதிய அரசாணையும் இல்லை இது குறித்துஅதிகாரபூர்வ வலைதளத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லைஎனவே குழப்பம் தேவையில்லை 82 மதிப்பெண் மேல் 2013 ல் பெற்றவர்கள் தேர்ச்சிபெற்றவர்களே என்பதில் எந்த சந்தேகமும் குழப்பமும்தேவையில்லை... இனி வரும் தேர்வுக்கும்55% மதிப்பெண் போதும்.
விரைவில்ஆசிரியர் தகுதித்தேர்வு
இன்னும்ஒரு வாரம் அல்லது இந்தமாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து அறிவிப்பு வரும் அதில் 55% (82) மதிப்பெண்பெற்றால் போதும் என்றே அறிவிப்புவரும் என்பதை எதிர்பார்க்கலாம் மேலும்வெயிட்டேஜ் உண்டு இவை நீதிமண்றங்களின்உத்தரவுப்படி வெளியிட்டுள்ளதால் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்த குளறுபடியும் இல்லை. நவம்பர் மாதத்துடன் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் என்பதால் விரைவில் அறிவிக்கபடலாம் கேள்வித்தாள் மிக எளிமையாக அமையவாய்ப்பு உள்ளதால் அதிக மதிப்பெண் பெறமுயற்சிக்கவும். தற்போது இருந்தே படிக்கவும்.
இப்படிக்கு

கார்த்திக்பரமக்குடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக