யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/11/16

பணியில் உள்ள ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு கேட்டு மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சரைச் சந்தித்து மனு.

23/08/2010  க்குப் பிறகு அரசுமற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளிகளில்முறையான கல்வித் தகுதிகளுடன் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் கட்டாயக்கல்வி உரிமை சட்ட
அடிப்படையில்TET நிபந்தனைகளை கூறி பணியை தொடரஅனுமதிக்கப்பட்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒருசில பணப் பயன் மறுக்கப்பட்டநிலையில்  பணியில்உள்ள இந்த ஆசிரியர்கள் பணிநிபந்தனை காலம் வரும் நவம்பர்15 ஆம்  தேதியுடன்முடிகின்றது.

ஆசிரியர்தகுதித் தேர்வில் இவர்களுக்கு முழுவதும் விலக்கு கொடுக்கும் பட்சத்தில்  சுமார்மூவாயிரம் ஆசிரியக் குடும்பங்களின் வாழ்வாதாரம் தமிழக அரசால் பாதுகாக்கப்படும்.


இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று மதுரையில் மாண்புமிகுதமிழக கல்வித்துறை அமைச்சரை TET நிபந்தனைகளுடன் பணி புரியும் ஆசிரியர்களின்மாநிலம் தழுவிய பிரதிநிதிகள் சந்தித்துமனு கொடுத்து  உள்ளனர்.


இந்த சந்திப்பின் போது தமிழக தொழிற்கல்விஆசிரியர்கள் சங்க ஆசிரியர்களும் அவர்களின்ஊதிய முரண்பாடு தொடர்பான மனுவைக் கொடுத்தனர்


மிகவும்பொறுமையாக இவர்களில் பிரச்சினைகளைக் கேட்டு மனுவை பெற்றுக்கொண்டதாகவும் அவ்வாசிரியர்கள் கூறினர்.


மாண்புமிகுதமிழக முதல்வர் அம்மாவின் கவனத்தில் இந்த மனு கொண்டுசெல்லப் பட்டு விரைவில் பணியில்உள்ள ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதும் விலக்கு என்ற நல்லதீர்வு கிடைக்கும் என இந்த பாதிக்கப்பட்டஆசிரியர்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக