யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/11/16

கருப்பு பணத்தை சட்டவிரோதமாக மாற்றுவோருக்கு 7 ஆண்டு சிறை: வருமான வரித்துறை எச்சரிக்கை.

கருப்புப்பணத்தை சட்டவிரோதமாக பிறருடைய வங்கிக் கணக்குகளில் டெபாசிட்செய்தால் 7 ஆண்டு சிறைத் தண்டனைஅளிக்கப்படும் என்று
வருமான வரித்துறைஎச்சரிக்கை செய்துள்ளது.


கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன்ற அறிவிப்பு வெளியான நவம்பர் மாதம்8-ஆம் தேதிக்குப் பிறகு, அனைவரும் தங்களிடமுள்ளஅந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில்செலுத்தி வருகின்றனர்.


மோடியின்அதிரடி அறிவிப்பை தொடர்ந்து மனை வணிக வியாபாரிகள், தங்க வர்த்தகர்கள், ஹவாலா மோசடியில் ஈடுபடுவதாகசந்தேகிக்கப்படுபவர்கள் போன்றோர் கருப்புப் பணத்தை சட்டவிரோதமாக மாற்றிவருவதாக வருமான வரித் துறையினருக்குதொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருந்தன.

இதையடுத்துதீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வரும்வருமான வரித் துறையினர், மிகஅதிகமான தொகையை பழைய 500, 1000 ரூபாய்நோட்டுகளாகச் செலுத்துபவர்கள் குறித்த விவரங்களை வங்கிகளிடமிருந்துபெற்று வருகின்றன. குறிப்பாக ரூ.2.5 லட்சத்துக்கும் மேல்பணம் செலுத்துபவர்கள் குறித்த விவரங்களை வங்கிகள்அளித்து வருகின்றன.

அந்த விவரங்களை ஆய்வு செய்து வரும்துறை அதிகாரிகள், சந்தேகத்துக்குரிய வகையில் அதிக தொகையைச்செலுத்தியவர்களிடம் அந்த வருமானத்துக்கான ஆதாரத்தைக்கேட்டு நோட்டீஸ் அனுப்பத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோருக்குஇந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

வருவாய்ஆதாரத்தைக் காட்டும் உரிய ஆவணங்களுடன் வருமானவரித் துறை அதிகாரிகளைச் சந்திக்கவேண்டியதற்கான தேதி மற்றும் நேரம்அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கணக்கில் வராத கருப்புப் பணத்தைசட்டவிரோதமாக பிறருடைய வங்கிக் கணக்குகளில் டெபாசிட்செய்தால், புதிய பினாமி பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் 7 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்படும் என்று வருமான வரித்துறைஎச்சரிக்கை செய்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்பால்கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் கலக்கத்தில்உள்ளனர்.

இதுகுறித்துவருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், இதுவரை சுமார் ரூ.200 கோடிக்கு மேல் கணக்கில் வராதபணத்தை கண்டுபிடித்துள்ளோம். கடந்த நவம்பர் 8-ம்தேதிக்குப் பின்னர் 50 கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

கணக்கில்வராத கருப்புப் பணத்தை சட்டவிரோதமாக பிறருடையவங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்தால், நவம்பர் 1-ஆம் தேதி முதல்அமலுக்கு வந்துள்ள "பினாமி பணப் பரிவர்த்தனைதிருத்தச் சட்டத்தின்" கீழ் கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும்.

அதாவது, தங்களது கணக்கில் வராத பணத்தை சட்டவிரோதமாகபிறருடைய வங்கிக் கணக்குகளில் டெபாசிட்செய்தால் 7 வருட சிறைத் தண்டனையும்கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.


கருப்புப்பணம் முறைகேடாக வங்கிகளில் செலுத்தப்படுவதைத் தடுப்பதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுஎன்று தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக