யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/6/17

சர்வதேச நாடுகள் பிரமிக்கும் வகையில் விண்வெளியில் ஒரு புதிய நாடு !!

சர்வதேச நாடுகள் பிரமிக்கும் வகையில் விண்வெளியில் ஒரு புதிய நாடு உருவாக்கி அதில் லட்சகணக்கானவர்களை குடியேற உள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு அதிரடியாக அறிவித்துள்ளது.
ஜூன் 16, 2017

நாம் வசிக்கும் இந்த பூமியில் 196 நாடுகள் உள்ளன, தற்போது இன்னொரு நாடு உதயமாக உள்ளது.

ஆனால் பூமியில் இல்லை, பூமிக்கு வெளியே விண்வெளியில் இந்த புதிய நாடு உருவாக உள்ளது.


ரஷியாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானியும், ஏரோஸ்பேஷ் இன்டர்நேஷனல் ஆய்வு மைய தலைவருமான டாக்டர் இகோர் அசுர்பெய்லி விண்வெளியில் ஒரு நாட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு ‘அஸ்கார்சியா’ என பெயரிடப்பட்டுள்ளது.

விண்வெளியில் உருவாகும் புதிய நாடு குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி பாரீசில் அறிவித்தார். அதில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து சர்வதேச அளவில் 200 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். அறிவிப்பு வெளியிட்ட 20 நாளில் இவ்வளவு பேர் மனு செய்து இருந்தனர்.
அவர்களில் 2 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிதாக உருவாகும் விண்வெளி காலனியில் குடியேற அனுமதி சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விண்வெளி நாடு உருவாக்க கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான அடிக்கல் அகார்சியா-1 என்ற மைக்ரோ செயற்கை கோள் மூலம் வருகிற செப்டம்பரில் அனுப்பபட உள்ளது. அது ஒரு ரொட்டி போன்ற அமைப்பில் 20 செ.மீ. நீளம் இருக்கும். 2.3 கிலோ எடை இருக்கும்.

தற்போது இந்த புதிய நாடு உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்த புதிய நாடு விண்வெளியில் செலுத்தப்பட்டு பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக