யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/6/17

அறிவிக்கப்பட்ட கல்விச்சார்ந்த அறிவிப்புகள் !!

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்; சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.


 *மேல்நிலை பள்ளிகளுக்கு தலா 20கணினிகள் வழங்கப்படும்; உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு அறிவியல் ஆய்வகம் & இதர பணிகள் ரூ.39 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.



 *தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்.


*7 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 பல்கலை உறுப்பு கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும்- முதலமைச்சர்.


*எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் பெயரில் ரூ.33 கோடியில் பள்ளிக் கல்வி இயக்குநரகத்திற்கு புதிய கட்டடம்.


 *268 புதிய பாடப்பிரிவுகள் 2017-2018 ம் ஆண்டு தொடங்கப்படும்; இதற்காக  660 பேராசிரியர் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.


 *நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் நீச்சல் குளம் கட்டப்படும் - முதலமைச்சர்.


 *உயர் கல்வித்துறை அறிவிப்புகள் : 40 கலை & அறிவியல் கல்லூரிகளில் ரூ.210 கோடி செலவில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப் படும்.


 *3090 கிராமப்புற தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் SmartClass ஏற்படுத்தப்படும்.


*தமிழகத்தில் உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


*அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் ரூ.40 கோடி செலவில் விரல் ரேகை அச்சுப்பொறி வழங்கப்படும்.


 *கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் சிறு வணிகக்கடன் உச்சவரம்பு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக