யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/1/17

பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும் ?

வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி படிப்படியாகத் தளர்த்தும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக நிகழ் நிதியாண்டின் வரி வசூல் தொகை இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு கருப்புப் பணப் பொருளாதாரம் ஒழிக்கப்பட்டு, அவை கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.

பணம் எடுப்பதில் உள்ள சிரமங்கள் குறைந்து வருகின்றன. இந்நிலையில், நாட்டின் நிதிச் சூழலை ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணித்து வருகிறது.
நிலைமையைப் பொருத்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக ரிசர்வ் வங்கி தளர்த்தும்.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மூலம் கடந்த மூன்று மாதங்களில் நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்புகளின் மூலம் வசூலான தொகை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் மேற்கு வங்கத்தில் வரி வசூல் 13 சதவீதம் குறைந்ததாக அந்த மாநில அமைச்சர் அமித் மித்ரா குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரத்தில் ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வரி வசூல் வழக்கத்தைக் காட்டிலும் அதிக அளவில் நடந்துள்ளது.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நல்ல ஆட்சி நிர்வாகம் இருக்கும் இடத்தில் வருவாயும் நன்றாக இருக்கும் என்பது புலனாகிறது.

நிகழ் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வரி வசூல் மூலம் அரசுக்கு ரூ. 16.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தொகையைக் காட்டிலும் கூடுதான வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை மேலோங்கியுள்ளது.
நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மறைமுக வரிவிதிப்பின் மூலம் கிடைத்த வருவாய், அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோன்று நேரடி வரிவிதிப்பு வருவாயும் அதிகரித்துள்ளது. பட்ஜெட் மதிப்பீட்டில் குறிப்பிட்டிருந்த வரி வசூல் அளவில் தற்போது 65 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டு இறுதிக்குள், எதிர்பார்த்த அளவை விட அதிகமான வருவாய் ஈட்டப்படும் என்றார் அருண் ஜேட்லி.

TNTET-ஆசிரியர் தகுதி தேர்வின் மறு பிரதி சான்றிதழ்பெறலாம்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் சான்றிதழ் பெறாதோருக்கு, மறு பிரதி சான்றிதழ் வழங்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 2012, 2013 மற்றும் 2014ல், ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது.
2012 தேர்வில், தேர்ச்சி பெற்றோருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகங்கள் வழியே, தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.பின், 2013, 2014 தேர்வுகளில் பங்கேற்றோருக்கு, டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டது.

அவ்வாறு, பதிவிறக்கம் செய்யாதோருக்கு, சான்றிதழ் மறு பிரதி வழங்கப்பட உள்ளது. ஆசிரியர் தகுதி சான்றிதழின் மறு பிரதி தேவைப்படுவோர், டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சி.இ.ஓ., பரிந்துரைப்படி, டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, மறு பிரதி சான்றிதழ், பதிவு தபாலில் அனுப்பப்படும் என, டி.ஆர்.பி.,யின் உறுப்பினர் செயலர், உமா தெரிவித்துள்ளார்.

PGTRB - முதுநிலை ஆசிரியர் காலி பணியிடம் அதிகரிப்பு: பள்ளி கல்வித்துறை மவுனம்.

அரசு மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 2,700 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படாததால், பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மேல்நிலை பள்ளிகளில், 2013 - 14, 2014 - 15ம் ஆண்டுகளில் உருவான, 1,807 காலியிடங்கள், 2016 மே மாதம் நிரப்பப்பட்டன. பின், 2015 - 16ல் உருவான, 2,125 காலியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறைக்கு, தமிழக அரசு அனுமதி அளித்தது.இதில், 50 சதவீதமான, 1,063 பணியிடங்கள் பதவி உயர்வின்மூலம் நிரப்ப முடிவானது. மீதமுள்ள, 1,062 பணியிடங்கள், போட்டித் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியாகி, ஓர் ஆண்டு நெருங்கியும், இன்னும் பணி நியமன பணிகள் துவங்கவில்லை. அதனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பல பள்ளிகளில் பாடம் நடத்த, ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது: மேல்நிலை பள்ளிகளில், தற்போது வரை, 2,700 இடங்கள் காலியாக உள்ளதால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது. ஆசிரியர் இல்லாத பள்ளிகளில், அனுபவமில்லாத புதிய பட்டதாரிகளை, தற்காலிக அடிப்படையில் நியமித்து, நிலைமையை சமாளித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் உயர்த்தி வழங்கப்படுமா?ஒரீரு நாளில் முறையான அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் கடந்தஆண்டுகளில் A,B ஊழியர்களுக்கு 1000/- C,D ஊழியர்களுக்கு   3000/- வழங்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது பொங்கல் போனஸ் தொகையினை உயர்த்தி வழங்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 
இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரீரு நாளில் முறையான அறிவிப்பு வெளியாகும். சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது ...தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி போனஸ் உச்சவரம்பு தொகை ரூ.3,500-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.தொழிற்சாலை மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்னதாக போனஸ் வழங்கப்படுகிறது.

இதற்கான போனஸ் சட்டம் கடந்த 1965-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.இந்தச் சட்டத்தில் கடந்த 1993-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, போனஸ் உச்சவரம்பு அதிகபட்சமாக 3,500 என்று அறிவிக்கப்பட்டது. மேலும் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பும் 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.அதன்பின், இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவில்லை. போனஸ் தொகை ரூ.3,500 என்றே வழங்கப்பட்டது. கடந்த 12 ஆண்டு களாக போனஸ் தொகை உயர்த்தப் படாததை கண்டித்து மத்திய தொழிற் சங்கங்கள் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டன.

மத்திய அமைச்சர்கள் குழு, தொழிற்சங் கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை யில், போனஸ் தொகையை இரட்டிப்பாக்கவும், போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை உயர்த்தவும் ஒப்புக் கொண்டது.இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று கூடியது. அப்போது பல்வேறு முக்கிய விஷயங்கள்குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும், இந்த ஆண்டு போனஸ் தொகையை ரூ.3,500-இல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தவும், போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை தற்போதுள்ள ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இந்த தொகை 20 ஊழியர்கள் அல்லது அதற்கு மேல் உள்ள எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இந்த போனஸ் உயர்வு ஏப்ரல் 1, 2015 முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக, ‘போனஸ் (திருத்த) மசோதா-2015’, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.போனஸ் சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற அனுமதிக் காக அனுப்பப்பட்டுள்ளது. நாடாளு மன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. எனினும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வரும் 26-ம் தேதி மீண்டும் அமைச்சரவை கூடி முடிவெடுக்க உள்ளது. நவம்பர் மாத இறுதியில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் போது, போனஸ் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

5/1/17

நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது? : தமிழக மாணவர்கள் எதிர்பார்ப்பு

மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு அறிவிப்பு, இன்னும் வெளியிடப்படாததால், தமிழக மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். நாடு முழுவதும், அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும், நுழைவுத் தேர்வு கட்டாயம் என, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற, இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம், 2016ல் அனுமதி அளித்தது.
இதற்கு, தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உட்பட, பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. எதிர்த்த மாநிலங்களில், மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு, கடந்த கல்வி ஆண்டுக்கு மட்டும், நீட் எழுதத் தேவையில்லை என, விலக்கு அளிக்கப்பட்டது. அதேநேரத்தில், தனியார் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு, நீட் கட்டாயம் ஆனது. இந்த ஆண்டு நீட் தேர்வு தொடர்பாக, எந்த மாநிலத்திற்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. மே மாதம் நடக்கவுள்ள நீட் தேர்வுக்கு, வழக்கமாக டிசம்பரில், விண்ணப்ப பதிவு துவங்கும். ஆனால், இந்த ஆண்டு இன்னும் விண்ணப்ப பதிவு துவங்கவில்லை. நீட் தொடர்பான அறிவிப்பு, ஒரு மாதத்திற்கு மேல் தாமதமாகியுள்ளது. இதுகுறித்து, தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'நீட் தேர்வு குறித்து, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றிய பிறகே, அறிவிப்பு வெளியாகும்' என்றனர்.இதற்கிடையில், பல்வேறு மாநிலங்களும், இந்த ஆண்டே, தங்கள் மாநில மொழிகளில், நீட் தேர்வு எழுத அனுமதி பெற்று வருகின்றன. இதுவரை, ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி, குஜராத்தி, மராத்தி, அசாமி, பெங்காலி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், நீட் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க, இரு மாதங்களே உள்ள நிலையில், திடீரென நீட் கட்டாயம் என
அறிவிக்கப்பட்டால், என்ன செய்வது என, தமிழக மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

முதுநிலை ஆசிரியர் காலி பணியிடம் அதிகரிப்பு : பள்ளி கல்வித்துறை மவுனம்

அரசு மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 2,700 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படாததால், பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அரசு மேல்நிலை பள்ளிகளில், 2013 - 14, 2014 - 15ம் ஆண்டுகளில் உருவான, 1,807 காலியிடங்கள், 2016 மே மாதம் நிரப்பப்பட்டன. பின், 2015 - 16ல் உருவான, 2,125 காலியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறைக்கு, தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதில், 50 சதவீதமான, 1,063 பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்ப முடிவானது. மீதமுள்ள, 1,062 பணியிடங்கள், போட்டித் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியாகி, ஓர் ஆண்டு நெருங்கியும், இன்னும் பணி நியமன பணிகள் துவங்கவில்லை. அதனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பல பள்ளிகளில் பாடம் நடத்த, ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது: மேல்நிலை பள்ளிகளில், தற்போது வரை, 2,700 இடங்கள் காலியாக உள்ளதால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது. ஆசிரியர் இல்லாத பள்ளிகளில், அனுபவமில்லாத புதிய பட்டதாரிகளை, தற்காலிக அடிப்படையில் நியமித்து, நிலைமையை சமாளித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

பொங்கல் போனஸ் உயர்த்தி வழங்கப்படுமா அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் கடந்த ஆண்டுகளில் A,B ஊழியர்களுக்கு 1000/- C,D ஊழியர்களுக்கு   3000/- வழங்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது பொங்கல் போனஸ் தொகையினை உயர்த்தி வழங்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரீரு நாளில் முறையான அறிவிப்பு வெளியாகும்.


சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது ...
தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி போனஸ் உச்சவரம்பு தொகை ரூ.3,500-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

தொழிற்சாலை மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்னதாக போனஸ் வழங்கப்படுகிறது. இதற்கான போனஸ் சட்டம் கடந்த 1965-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

இந்தச் சட்டத்தில் கடந்த 1993-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, போனஸ் உச்சவரம்பு அதிகபட்சமாக 3,500 என்று அறிவிக்கப்பட்டது. மேலும் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பும் 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்பின், இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவில்லை. போனஸ் தொகை ரூ.3,500 என்றே வழங்கப்பட்டது. கடந்த 12 ஆண்டு களாக போனஸ் தொகை உயர்த்தப் படாததை கண்டித்து மத்திய தொழிற் சங்கங்கள் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டன. மத்திய அமைச்சர்கள் குழு, தொழிற்சங் கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை யில், போனஸ் தொகையை இரட்டிப்பாக்கவும், போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை உயர்த்தவும் ஒப்புக் கொண்டது.

இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று கூடியது. அப்போது பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும், இந்த ஆண்டு போனஸ் தொகையை ரூ.3,500-இல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தவும், போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை தற்போதுள்ள ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த தொகை 20 ஊழியர்கள் அல்லது அதற்கு மேல் உள்ள எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த போனஸ் உயர்வு ஏப்ரல் 1, 2015 முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக, ‘போனஸ் (திருத்த) மசோதா-2015’, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

போனஸ் சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற அனுமதிக் காக அனுப்பப்பட்டுள்ளது. நாடாளு மன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. எனினும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வரும் 26-ம் தேதி மீண்டும் அமைச்சரவை கூடி முடிவெடுக்க உள்ளது. நவம்பர் மாத இறுதியில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் போது, போனஸ் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

2300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்.

தமிழகம் முழுவதும் துறை முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற 2300 தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க கல்வியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் இளங்கலை பட்டத்துடன் பி.எட்., முடித்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். பணியேற்றதற்கு பின் இவர்கள் முதுகலை, எம்.பில்., அல்லது பி.எச்டி., போன்ற உயர் பட்டப் படிப்புகள் பயில தொடக்க கல்வித்துறையில் முன் அனுமதி பெற வேண்டும்.இதற்காக 2009ம் ஆண்டிற்கு முன் சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்க அலுவலர் அல்லது உதவி தொடக்க கல்வி அலுவலர் அளவிலேயே அனுமதி அளிக்கப்பட்டது. அனுமதி பெறமுடியாதபட்சத்தில் படிப்பு முடித்தவுடன் அவர்களுக்கு 'பின்னேற்பு' அனுமதி அளிக்கப் பட்டது. உயர் படிப்புகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டதால் இதில் பல முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதனால் 2009க்கு பின் உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு 'பின்னேற்பு' அனுமதி பெற வேண்டும் என்றால், துறை செயலர் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.

ஆனாலும் 2009ம் ஆண்டிற்கு பின் மாநில அளவில் 2300 ஆசிரியர்களுக்கு மேல் உயர்கல்வி முடித்து 'பின்னேற்பு' அனுமதிக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு பணப் பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய உத்தரவில், 'முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களிடம் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான உரிய விளக்கம் பெற்று, ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும்,' என உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "மாநில அளவில் உயர்கல்வி பயின்று 2300 பேர் 'பின்னேற்பு' அனுமதிக்குகாத்திருக்கின்றனர். அனுமதி அளிக்க பல்வேறு சங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தின. இந்நிலையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.ஆசிரியர்களின் விளக்கம் ஏற்கப்பட்டால் அவர்களுக்கு பணப்பலன் உட்பட சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்," என்றனர்.

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த தி.மு.க. பொதுக்குழுவில் கோரிக்கை

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த தி.மு.க. பொதுக்குழுவில் கோரிக்கை
1.    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பு
2.         தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட கோடிக் கணக்கான பணம்.
3.         ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்றுக!
4.         தமிழக விவசாயிகளின் தணியாத துயரம்!


5.         மதுரவாயல்  - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம்
6.         """"நீட்"" - நுழைவுத் தேர்வை ரத்து செய்க!
7.         மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை
8.         கச்சத் தீவு புனித அந்தோணியார் கோவில் வழிபாட்டிற்கு அனுமதி
9.         இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும்.
10.        சேலம் இரும்பாலையைத் தனியார்மய மாக்கும் முயற்சியைக் கைவிடுக!
11.         கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை!
12.        வர்தா புயல் நிவாரணம் வழங்குக!
13.        உள்ளாட்சித் தேர்தல்
14.        பொது விநியோகத் திட்டக் குளறுபடிகள்
15.        தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதிக்க வேண்டும்.
16.        ஊழல் செய்வோரைத் தண்டிக்க லோக்பால், லோக் ஆயுக்தா சட்டங்களை நடைமுறைப்படுத்துக.

பள்ளி பாடத்திட்டத்தை மேம்படுத்த தொடர் நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பள்ளி பாடத்திட்டத்தை மேம்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனால் அகில இந்திய அளவிலான போட்டித்தேர்வை தமிழக மாணவர்களால் எதிர்கொள்ள முடியவில்லையென செய்திகள் வெளியானது. இதனடிப்படையில், ஐகோர்ட் மதுரை கிளை பதிவாளர் (நீதி) தாமாக முன் வந்து பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘1 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை முறைபடுத்தி, கல்வி திட்டத்தை மேம்படுத்தவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

 இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

அதில், ‘‘தமிழக பள்ளிகளில் தற்போது முப்பருவ தேர்வு முறை நடைமுறையில் உள்ளது. 2009ல் தான் பாடத்திட்டம் மாற்றப்பட்டது. ஆடியோ மற்றும் வீடியோ சிடி கல்வி முறையால் 15 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். சைகை வழியான கல்வி முறை திண்டுக்கல் மாவட்டத்தில் பரிசோதனை முறையில் அமலாகியுள்ளது. 40 பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 16 வகையான நலத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதற்காக கடந்த 2015-16ல் 3 ஆயிரத்து 45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நிதி அதிகரிக்கப்படுகிறது,’’ என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தரமான மேம்படுத்தப்பட்ட கல்வியை வழங்க அரசுத் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்காலத்திலும் தொடர்ந்து எடுக்க உத்தரவிட்டனர். 

HDFC பேங்க் ஆஃப் இந்தியா வட்டி விகிதம் குறைப்பு !!

 எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல், யூனியன் ஆகிய வங்கிகள் கடன் வட்டித் தொகையை ஏற்கெனவே குறைத்திருந்தன. இந்நிலையில், தற்போது HDFC மற்றும் பேங்க் ஆஃப்

இந்தியா ஆகிய வங்கிகளும் கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. குறிப்பாக,  HDFC வங்கி கடன் விகிதத்தை 0.90 சதவீதம் வரை, குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு முன் சென்னைக்கு புயல் ஆபத்து??

பொங்கலுக்கு முன், சென்னையை புயல் தாக்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை, 2016 அக்., 30ல் துவங்கியது. இதில், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை; வழக்கத்தை விட, 60 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது

. பருவமழை காலத்தில், கியான்ட், நடா மற்றும் வர்தா என, மூன்று புயல்கள் உருவாகின. வர்தா புயல், டிச., 12ல், சென்னையில் பலத்த சூறாவளியுடன் கரையை கடந்தது.

 இதில், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு உடைமைகள், பயிர்கள், அரசு சொத்துகள் சேதம் அடைந்தன. பல ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தன.இதன்பின், மூன்று வாரங்களாக, தமிழகத்தில் பெரிய அளவில் மழை இல்லை. ஏரி, குளங்கள், அணைகள் உட்பட, நீர்நிலைகள் எல்லாம் வறண்டுள்ளன. 'மீண்டும் எப்போது மழை வரும்' என, விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்நிலையில், வங்கக்கடலில், இலங்கைக்கு தெற்கே, பூமத்திய ரேகையை ஒட்டி, காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. 'இது, படிப்படியாக வலுப்பெற்று, வட கிழக்கில் நகர்ந்து, அந்தமான் அருகே வலுப்பெற்று, புயலாக மாற வாய்ப்புள்ளது. புயல் உருவானால், வரும், 11ல், சென்னை அல்லது நெல்லுார் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தனியார் பள்ளிகளை இனம் கண்டு பள்ளிகல்வித் துறை கடிவாளமிட வேண்டும் !!

சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட விஷயத்தில், மதில்மேல் பூனையாக இருக்கும் தனியார் பள்ளிகளை இனம் கண்டு பள்ளிகல்வித் துறை கடிவாளமிட வேண்டும். அகில இந்திய அளவிலான போட்டி தேர்வுகளில், புதுச்சேரி மாணவ, மாணவியர் பின்தங்கியுள்ளனர். எப்போதாவது சிவில் சர்வீஸ் தேர்வில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வெற்றி பெறுகின்றனர்.

எனவே, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டதை புகுந்த புதுச்சேரி அரசு முடிவு செய்தது.

 முதற்கட்டமாக, அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஒவ்வொரு வகுப்பாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2021- -22ம் கல்வி ஆண்டில், புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ் 2 வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்பது, அரசின் இலக்கு. தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகள் நுாறு சதவீத சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்க, தனியார் பள்ளிகளின் நிலையோ மதில்மேல் பூனையாக உள்ளது.

சமச்சீர் பாடத்திட்டமா அல்லது சி.பி.எஸ்.இ., பாடத்திட்டமா என முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகின்றன. விதிமுறை மீறல் புதுச்சேரி மாநிலத்தில் 303 சுயநிதி தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் 26 தனியார் பள்ளிகள் மட்டுமே சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்ற பள்ளி கல்வித் துறையிடம் என்.ஓ.சி., வாங்கியுள்ளன. மீதமுள்ள 227 தனியார் பள்ளிகள் தமிழ்நாடு அரசின் சமச்சீர் பாட புத்தகத்தை பின்பற்றி பாடம் கற்பிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானான தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தையே நடத்தி வருகின்றன. சமச்சீர் பாடத்தை நடத்த வேண்டிய தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாடம் நடத்தி, அதன் மூலம், பெற்றோர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலித்து வருகிறது. தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டுமெனில், முதற்கட்டமாக அந்த மாநில கல்வித் துறையிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும். பின், ஒரு ஆண்டிற்குள் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியத்தை அணுகி இணைப்பு எண் பெற வேண்டும். இந்த இணைப்பு எண் எளிதில் கிடைப்பதில்லை. இடைநிலை கல்வி வாரியத்தின் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே இணைப்பு எண் கிடைக்கும். ஒரு ஏக்கர் நிலப்பரப்பு, விசாலமான விளையாட்டு மைதானம், காற்றோட்டமிக்க கட்டட வசதி, ஆய்வகம், நுாலகம் என, அனைத்தும் இருந்தால் மட்டுமே தனியார் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட உரிமம் வழங்கப்படுகிறது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமான அளவு இடவசதி இல்லாததால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் புதுச்சேரி கல்வித் துறைக்கு டிமிக்கி கொடுத்து வருகின்றன. கல்வித் துறையின் என்.ஓ.சி., பெறாமல், சட்ட விதிகளுக்கு மாறாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடங்களை, பல்வேறு தனியார் பள்ளிகள் நடத்தி வருகின்றன. எனவே, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டன் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகள், சமச்சீர் பாடத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகளின் பட்டியலை, இணையதளத்தில் பள்ளி கல்வித் துறை வெளியிட வேண்டும். மேலும், இது தொடர்பாக ஆய்வு நடத்தி, விதிமீறி செயல்படும் பள்ளிகளை இனம் கண்டு, கடிவாளமிட வேண்டும்.

ரூ.244 கோடி செலவில் 6 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்!!

தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12--ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் 
அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002ஆம் கல்வி ஆண்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங் கப்பட்டது.

பின்பு, 2005-2006ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11--ம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பெரு மளவில் பயனடைந்து வரு கின்றனர்.

புரட்சித்தலைவி அம்மா வின் வழிகாட்டுதலின் படி,  2016- 2017ஆம் கல்வி யாண்டில், 243 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் 11-ஆம் வகுப்பு பயிலும் 2,70,417 மாணவர் மற்றும் 3,48,865 மாணவியர் என மொத்தம் 6,19,282 மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங் கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் 7 மாணாக்கர் களுக்கு மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வி.எம்.ராஜலட்சுமி, எஸ்.வளர்மதி மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்திய நாதன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் கார்த்திக், சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆணையர்  சந்திரசேகரன்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்க அரசு உத்தரவு !!

.புயல், ஜெ.மறைவு ஆகியவற்றால் விடப்பட்ட தொடர் விடுமுறை எதிரொலியாக புதுச்சேரி, காரைக்காலில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்க அரசு உத்தரவிட்டுள்ளது.



நடா புயலின் காரணமாக கடந்த டிசம்பர் 1, 2 தேதிகளிலும், முதல்வர் ஜெயலலிதா மறைவால் 6-ம் தேதியும், வர்தா புயலால் 12-ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

தற்போது அந்நாள்களை ஈடு செய்யும் வகையில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அவ்விடுமுறைகளுக்கு பதிலாக ஜனவரி 21,28, பிப் 4,11 ஆகிய சனிக்கிழமைகளில் அரசு பள்ளிகள் இயங்கும் என இணை இயக்குநர் ஜே.கிருஷ்ணராஜூ அறிவித்துள்ளார்

4/1/17

7-வது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தக் கோரிதலைமைச் செயலகத்தை முற்றுகையிட மாநகராட்சி ஊழியர்கள் முடிவு.

சென்னைமாநகராட்சி அனைத்து துறை ஊழியர்கள்சங்க பொதுச்
செயலர் எஸ்.புருஷோத்தமன் கூறியதாவது:
மத்தியஅரசு அறிவித்த 7-வது ஊதியக் குழுபரிந்துரை மத்திய அரசுத்துறைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப் படவில்லை. வழக்கமாக மத்திய அரசு அறிவிக்கும்பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுஅறிவிக்கும். அதன்பிறகு அதில் உள்ள குறைபாடுகளைபோக்க குழு அமைத்து ஆய்வுசெய்யும். ஆனால் இந்த முறைஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தாமல், தமிழக அரசு குழுஅமைத் துள்ளது. அந்த குழு செயல்படுகிறதா என்றே தெரியவில்லை.அதனால், 7-வது ஊதியக் குழு பரிந்துரையைதமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தைமீண்டும் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜனவரி 10-ம் தேதி காலை11 மணிக்கு தலைமைச் செயலகத்தை முற்றையிடதிட்ட மிட்டிருக்கிறோம். அதனைத் தொடர்ந்து முதல்வர்ஓ.பன்னீர் செல்வத்தைசந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்க இருக்கிறோம்என்றார்.

15 வயது பூர்த்தியானவர்களுக்கு மறு ஆதார் பதிவு கட்டாயம்

சென்னை: 'ஆதார் எண் பெற்றுள்ள, 15 வயதுபூர்த்தியான நபர்கள், தங்களது கைரேகை, கருவிழிபதிவு போன்ற, 'பயோமெட்ரிக்'
தகவல்களை, ஆதார் நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு, நேரில் சென்று அளிக்க வேண்டும்' என, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனர், குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, ஆதார்எண் வழங்க, தமிழகம் முழுவதும், 545 நிரந்தர சேர்க்கை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை, தமிழ்நாடுஅரசு கேபிள் நிறுவனம் மற்றும்தமிழ்நாடு மின்னணு நிறுவனம் நிர்வகித்துவருகின்றன.இம்மையங்களில், அக்., 1 முதல், டிச., 31 வரை, 9.91 லட்சம் பேருக்கு, ஆதார்எண்ணிற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மத்திய அரசுவெளியிட்ட, ஆதார் சேர்க்கை விதிமுறைகளின்படி, ஆதார் எண் பெற்றுள்ள, 15 வயதுபூர்த்தியான நபர்கள், தங்களது பயோமெட்ரிக் தகவல்களை, 15 வயது பூர்த்தியடைந்த நாளில் இருந்து, இருஆண்டுகளுக்குள், மீண்டும் கட்டாயமாக அளிக்க வேண்டும். எனவே, இன்று முதல், நிரந்தர சேர்க்கைமையங்களில், 15 வயது பூர்த்தியான நபர்கள், தங்களுடைய பயோமெட்ரிக் தகவல்களை அளிக்கலாம்; இதற்கு, கட்டணம் எதுவும்கிடையாது.இவ்வாறு குமரகுருபரன் தெரிவித்துஉள்ளார்.

அரசு இ - சேவை மையங்களில் ஏப்ரல் முதல் ரொக்கம் ஏற்கப்படாது

ரொக்கமில்லாபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள, அரசு, 'இ- சேவை' மையங்களில், ஏப்ரல், 1ம் தேதி முதல், 'கிரெடிட்,
டெபிட் கார்டுகள்' மூலம்மட்டுமே, கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், மின் ஆளுமை திட்டத்தில், 10 ஆயிரத்திற்கும்மேற்பட்ட இடங்களில், இ - சேவை மையங்கள்இயங்கி வருகின்றன. சாதாரண மக்களுக்கு, குறைந்தசெலவில் அரசின் சேவைகள் கிடைப்பதற்காக, நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும், இம்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில், இணையதளம் வழியாக வருவாய், மாநகராட்சி, மின் துறை, உள்ளாட்சி துறைஉள்ளிட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட சேவைகள், எளிதில் கிடைக்கின்றன. பொதுமக்கள்அதிகளவில் வரத் துவங்கியதை தொடர்ந்து, ரொக்கமில்லா பரிவர்த்தனையை, ஏப்ரல் முதல் அங்கும்கட்டாயமாக்க, அரசு திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து, இ - சேவை மையங்களைநடத்தி வரும் துறைகளுக்கு, கடிதம்எழுதப்பட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கிக் கணக்கு உள்ளவர்கள், மொபைல் போன் வாயிலாக, பணம்செலுத்தும், 'இ - வாலட்' திட்டம், இ - சேவை மையங்களில், 2016 டிசம்பரில்அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 'ஆதார்' கார்டுதாரர்களுக்கு பயன்படும் வகையில், கைரேகை பதிவு செய்யும், 'பயோமெட்ரிக்' முறையை அறிமுகம் செய்யதிட்டமிட்டுள்ளோம். அதற்கான கருவிகளை, சம்பந்தப்பட்டதுறைகள் வாங்க வேண்டும். மேலும், பிப்ரவரி முதல், டெபிட் மற்றும்கிரெடிட் கார்டுகள் மூலமாகவும், ரொக்கமாகவும், இ - சேவை மையங்களில்கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஏப்ரல் 1ம்தேதி முதல், ரொக்கப்பணம் ஏற்கப்படாது. டெபிட், கிரெடிட் மற்றும் இ - வாலட்மூலமாக மட்டுமே கட்டணம் பெறப்படும். இதற்காக, பி.ஓ.எஸ்., எனப்படும், 'ஸ்வைப் மிஷின்'களை, வங்கிகளுடன் கலந்தாலோசித்த பின், வாங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் தேர்வு எழுதியோருக்கு இன்று அசல் மதிப்பெண் சான்றிதழ்

சென்னை: கடந்த அக்டோபரில், பிளஸ் 2 மற்றும் 10ம்வகுப்பு தேர்வு
எழுதியோருக்கு, இன்று, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:அக்டோபரில், பிளஸ் 2 மற்றும் 10ம்வகுப்பு துணைத்தேர்வு எழுதியோர், நவ., 3 முதல், தற்காலிகமதிப்பெண் சான்றிதழை,

அவர்களே, ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. மார்ச்மற்றும் ஜூனில் நடந்த தேர்வுகளில், தேர்ச்சி பெறாதோர், அக்டோபர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பர். அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழும், மற்றவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழும்வழங்கப்படும். சான்றிதழை, இன்று முதல் தேர்வுமையத்தில் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்லாஸ்' தேர்வு முடிவின்படி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பை, 'ஸ்லாஸ்' தேர்வு முடிவின் படி, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, தமிழகபள்ளி
கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. அனைவருக்கும் கல்விஇயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களின் கீழ், மத்திய அரசு, மாணவர்களுக்காக, பல கோடி ரூபாய்நிதி உதவி செய்கிறது.
பள்ளிகளின்உள்கட்டமைப்பு, ஆய்வகம், நுாலகம், மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள், ஆசிரியர்களுக்குசிறப்பு பயிற்சி ஆகியவற்றுக்கு, இந்நிதிபயன்படுத்தப்படுகிறது. அதற்கேற்ப, மாணவர்களின் கல்வி யில் முன்னேற்றம்ஏற்பட்டுள்ளதா என்பதை, 'ஸ்லாஸ்' தேர்வின் மூலம், பள்ளி கல்வித்துறை முடிவு செய்கிறது. ஒன்பதுமற்றும், 10ம் வகுப்புகளுக்கு, இந்தஆண்டுக்கான, 'ஸ்லாஸ்' தேர்வு, டிசம்பரில்முடிந்து விட்டது. தமிழகம் முழுவதும், 6,200 பள்ளிகளில், தலா, 30 மாணவர்கள் என, 3.72 லட்சம் பேரிடம் இத்தேர்வுநடத்தப்பட்டது. இன்னும் இரு வாரங்களில், இதன் முடிவுகள் வெளியாகின்றன.

இது குறித்து, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர்அறிவொளி கூறியதாவது: சாதனை கணக்கெடுப்பான, 'ஸ்லாஸ்' தேர்வு முடிவுகளின்படி, திறன் படைத்த மாணவர்கள்எந்த பள்ளியில் உள்ளனர்; அவர்களுக்கு, பிரச்னையாக உள்ள பாடப்பகுதி எதுஎன்பதை, அறிய முடியும். அதற்கேற்ப, குறிப்பிட்ட மாணவர்களுக்கு, கூடுதல் பயிற்சி அளிக்கவேண்டும். அதற்கு வசதியாக, சம்பந்தப்பட்டபாட ஆசிரியர்களுக்கும், சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்
Image may contain: text

பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டை அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ளஅறிக்கையில், "தமிழர்
திருநாளாம் பொங்கல்திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன்கொண்டாடும் வகையில், குடும்ப அட்டை அட்டைதாரர்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்குஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் இரண்டு அடிநீளக் கரும்புத் துண்டு ஆகியவை அடங்கியசிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புவழங்கப்படும்.

இந்தப்பொங்கல் பரிசுத் தொகுப்பு, பொங்கல்திருநாளுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்படும். இதன்மூலம் 1 கோடியே 80 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவர். ஏழை, எளிய, சாமானியமக்கள் பொங்கல் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட இது வழிவகுக்கும்" என்று கூறியுள்ளார்.

புதிய போராட்டம் -அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

Image may contain: text

வீட்டில் கழிப்பிறை இல்லை ஆசிரியர் சஸ்பெண்ட்

Image may contain: text

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் ஜன.5-இல் வெளியீடு

தமிழகம் முழுவதும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்வியாழக்கிழமை (ஜன.5) வெளியிடப்படுகிறது. அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இந்த வாக்காளர் பட்டியல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்
.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கான கால அவகாசம் கடந்த செப்டம்பர் 30 -ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, பெயர் சேர்ப்பு -நீக்கலுக்காக அளிக்கப்பட்ட 18 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.

புதிதாக 15 லட்சம் பேர்:

 வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் மொத்தம் 5.92 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், புதிதாக 15 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை மாநகராட்சியில் மண்டல அலுவலகங்களிலும், பிற மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இந்தப் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அவை பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

7-வது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தக் கோரிதலைமைச் செயலகத்தை முற்றுகையிட மாநகராட்சி ஊழியர்கள் முடிவு.

சென்னை மாநகராட்சி அனைத்து துறை ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் எஸ்.புருஷோத்தமன் கூறியதாவது:

மத்திய அரசு அறிவித்த 7-வது ஊதியக் குழு பரிந்துரை மத்திய அரசுத்துறைகளில் அமல் படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத் தில் இதுவரை அமல்படுத்தப் படவில்லை. வழக்கமாக மத்திய அரசு அறிவிக்கும் பரிந்துரையை தமிழக அரசு ஏற்று அறிவிக்கும். அதன்பிறகு அதில் உள்ள குறைபாடுகளை போக்க குழு அமைத்து ஆய்வு செய்யும். ஆனால் இந்த முறை ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத் தாமல், தமிழக அரசு குழு அமைத் துள்ளது. அந்த குழு செயல் படுகிறதா என்றே தெரியவில்லை.அதனால், 7-வது ஊதியக் குழு பரிந்துரையை தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தைமீண்டும் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜனவரி 10-ம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தை முற்றையிட திட்ட மிட்டிருக்கிறோம். அதனைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்க இருக்கிறோம் என்றார்.

பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திறனறித் தேர்வு தமிழில் எழுதிய மாணவர்கள் 20 சதவீதம் தேர்ச்சி.

தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால்(என்.சி.இ.ஆர்.டி) நடத்தப்பட்ட, பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வுமற்றும் திறனறித் தேர்வில் தமிழ் வழியில் படித்து தமிழிலேயே தேர்வு எழுதிய 20 சதவீதம் பேர் தேர்வாகி உள்ளனர். 
6 முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்குவிப்பதற்காக தேசிய அளவில் அறிவியல் விழிப்புணர்வு மற்றும் திறனறித் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதில் முதல் கட்டமாக ஒரு வகுப்புக்கு 20 பேர் வீதம் ஒவ்வொரு மாநிலத்திலும் 120 பேர் தேர்வு செய்யப்படுவர். இதன்படிகடந்த நவம்பர் 20-ம் தேதி நடத்தப்பட்ட முதல் கட்ட தேர்வை இந்திய அளவில் சுமார் 98 ஆயிரம் பேரும் தமிழக அளவில் சுமார் 9,500 பேரும் எழுதினர். தற்போது இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தேர்வாகி இருக்கும் 120 பேரில் 60 பேர் சென்னை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தத் தேர்வை பள்ளிகள் மூலம் அல்லாது தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்து எழுதியவர்கள் 800 பேர். இவர்களில் நாற்பது பேர் தேர்வாகி உள்ளனர். தமிழ் வழியில் கற்று தமிழிலேயே தேர்வை எழுதியவர்களில் 25 பேர் தேர்வாகியுள்ளனர். இது மொத்தத் தேர்ச்சியில் சுமார் 20 சதவீதமாகும் இதில் தேர்வாகி இருக்கும் 120 பேரில் 60 பேர் சென்னை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தேர்வை பள்ளிகள் மூலம் அல்லாது தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்து எழுதியவர்கள் 800 பேர். இவர்களில் நாற்பது பேர் தேர்வாகி உள்ளனர். தமிழ் வழியில் கற்று தமிழிலேயே தேர்வை எழுதியவர்களில் 25 பேர் தேர்வாகியுள்ளனர். இது மொத்தத் தேர்ச்சியில் சுமார் 20 சதவீதமாகும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்தகட்ட செய்முறை தேர்வுகள் ஜனவரி7, 8 தேதிகளில் ஈரோட்டில் நடக்கின்றன.

இதுகுறித்து  பேசிய இந்தத் தேர்வுகளுக்கான தமிழக ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கண்ணபிரான், "செய்முறை தேர்வுகள் 120 மாணவருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டு அவர்களில் இருந்து 18 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்படும். அந்த 18 பேரில் ஒவ்வொரு வகுப்புக்கும் முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த 12 பேரும் அடுத்தகட்டமாக தேசிய அளவில் டெல்லியில் நடத்தப்படும் திறனறி பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவர்'' என்று சொன்னார்.

DA from January 2017 will be 4% or 5% – Dearness Allowance Estimation

DA from January 2017 will be 4% or 5% based on Consumer Price Index (Industrial Workers) from January 2016 to December 2016 – Net increase in DA with effect from January 2017 is estimated to be 2% or 3%
All India Consumer Price Index (Industrial Workers) for the month of November 2016 has been relased by Ministry of Labour few days back.
Click here to read the official press release of Labour Ministry for AICPI (IW) for the month of November 2016.
What do we need for estimating DA from January 2017 ?
After implementation of 7th Pay Commission report, same inflation index i.e Consumer Price Index (Industrial Workers) with base year 2001=100, which was used for 6th Pay Commission Pay, is adopted for determining Dearness Allowance of Central Government Employees and Pensioners.
The only difference in DA calculation as far as DA from January 2016 will be, will be taking the Average of CPI-IW recorded in 2015 in the place of Average of CPI-IW recorded in 2005 which was used in 6th CPC DA calculation

Dearness Allowance payable after implementation of 7th Pay Commission = (Avg of CPI-IW for the past 12 months – Average of CPI-IW recorded in 2015)*100/(Average of CPI-IW recorded in 2015)
In order to determine DA with effect from January 2017, based on the above formula we need Consumer Price Index for the months from January 2016 to December 2016
Now that Consumer Price Index for the months from January 2016 to November 2016 is available, we have made an attempt to estimate Dearness Allowance applicable to Central Government Employees and Pensioners with effect from 1st January 2016, by assuming the possible CPI (IW) for the month of December 2016.
Month Actual AICPI-IW
Jan-2016 269
Feb-2016 267
Mar-2016 268
Apr-2016 271
May-2016 275
Jun-2016 277
Jul-2016 280
Aug-2016 278
Sep-2016 277
Oct-2016 278
Nov-2016 277
Dec-2016 Yet to be released
Estimation of DA from 1st January 2017:
Scenario 1 : No increase in AICPI (IW) in December 2016
AICPI (IW) for November 2016 is 277. If AICPI (IW) for December 2016 remains the same as November 2016, there will be additional 1% increase in DA from January 2017 which would make overall DA as 5%.
DA with effect from 1st January 2017 = [ (269+267+268+271+275+277+280+278+277+278+277+277)/12]-(261.4)X100/261.4

= 5 %

Scenario 2: Decrease in AICPI (IW) in December 2016
Even if All India Consumer Price Index (Industrial Workers) decreases by 31 point and pegged at 246 in the month of December 2016, DA from January 2017 will be 4% . At the same time even for 1 point decrease in the index for December 2016 will result in lesser DA increase from January 2017 compared to Sceanrio 1 in which index is unaltered in Dec 2016.
DA with effect from 1st January 2017 = [ (269+267+268+271+275+277+280+278+277+278+277+246)/12]-(261.4)X100/261.4

= 4 %

DA with effect from 1st January 2017 = [ (269+267+268+271+275+277+280+278+277+278+277+276)/12]-(261.4)X100/261.4

= 4 %
Scenario 3 : Increase in AICPI (IW) in December 2016
It is very interesting to note here that, even for increase in consumer price index in the month of December up to 31 points, i.e Increase in AICPI (IW) for December 2016 to 308 points from 277 points in November 2016, DA from January 2017 will be 5% only.
DA with effect from 1st January 2017 = [ (269+267+268+271+275+277+280+278+277+278+277+308)/12]-(261.4)X100/261.4

= 5 %

The other scenario that increase of more than 31 points in AICPI (IW) in the month of December 2016 for making DA with effect from January 2017 more than 5% is most unlikely.
Hence, it is more logical to conclude that DA from January 2017 will be either 4% or 5%

கணினி ஆசிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு...!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கணினி ஆசிரியர் பணிக்காப் பொதுக் கூட்டம் 8.1.2017ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.அனைவரும் வாரீர்.
இடம்:விஜயா மால்,162 vettavalam road,By pass road corner ,திருவண்ணாமலை .

நேரம்:9.00 காலை மணி.
மதிய உணவு  வழங்கப்படும்.முக்கிய 

குறிப்பு :நேரில் வரும் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுகணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும்எதிர்கால மாணவர் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இலவச  உறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:
இரண்டு புகைப்படம்,பி.எட் சான்றிதழ் நகல்,வேலைவாய்ப்பு அட்டை நகல்,இவற்றுடன் தங்களின்சுயவிபரம்  இணைத்து கொண்டுவரவும்.

பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்:

தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.

தொடர்புக்கு:
9150734191,9176093062,9751894315.

வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச் செயலாளர்,
9626545446.
தமிழ்நாடு  பி.எட்  கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் .
பதிவு எண்:655/2014.

2017-18ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ல் தாக்கல்

2017-18ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்டொடர் ஜனவரி 31-ம் தேதி துவங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 31-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 2-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை 3 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் வரை நடத்தப்படுகிறது.

ஜி.எஸ்.டி. மசோதா தாக்கல் செய்வதற்காக பட்ஜெட் முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் 92 ஆண்டுககளாக ரயில்வேதுறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் பொது பட்ஜெட்டிலேயே ரயில்வே பட்ஜெட்டையும் சேர்த்து தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ராஜ்நாத் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

IGNOU - B.Ed. Entrance Test October, 2016 Results held on 23.10.2016 Published

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அரிசிக்கான குடும்ப அட்டைகள் மற்றும் காவலர் குடும்பஅட்டைகளுக்கும் முகாம்களில் தங்கியுள்ள தமிழர் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அந்தந்த நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 1 கோடியே 80 லட்சம் குடும்பங்கள் பயன் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இணையவழியில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.5 சலுகை.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான (எல்பிஜி) விலையை இணையவழியில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.5 சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ரூ.500, ரூ.1,000 ஆகிய உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. இதையடுத்து, ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல சலுகை அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், பெட்ரோல், டீசல் வாங்கும்போது அதற்கான பணத்தை ரொக்கமில்லா பரிவர்த்தனையின்மூலம் மேற்கொள்வோருக்கு 0.75 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.60-க்கும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.57.82-க்கும் விற்கப்படுகிறது. இதில் இணையவழி உள்ளிட்ட ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் பெட்ரோல் வாங்குவோருக்கு லிட்டருக்கு 53 காசுகளும், டீசல் வாங்குவோருக்கு லிட்டருக்கு 43 காசுகளும் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சலுகையை சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் நீட்டித்துள்ளன. அதாவது, இணையவழியில் சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்து, அதற்கான பணத்தை இணையவழியில் இணையவங்கி வசதி, கடன் அட்டை, பற்று அட்டை (கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு) மூலம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூ.5 சலுகையை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகை தொகை ரூ.5, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான பணம் செலுத்தப்பட்ட நாளில் இருந்து 3 வேலை நாள்களில், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, தில்லியில் தற்போது ரூ.434.71-ஆக உள்ளது. மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.585-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3/1/17

தமிழ்நாடு அரசு   ஊழியர்கள்  மற்றும்  ஆசிரியர்களுக்கு  பொங்கல்  பரிசாக
 ₹ 7000 ( சி   & டி  பிரிவு ஊழியர்களுக்கு ) 

₹  3000 ( எ  & பி  ஊழியர்களுக்கு )  

வழங்க  அரசாணை  தயாராகி  வருகிறது . இரண்டொரு  நாளில்  அறிவிப்பு  வெளிவரும்  என  எதிர் பார்க்கப்படுகிறது 

750 - pp க்காக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனு...

பள்ளிகளில் வகுப்பறை கட்ட மத்திய அரசு ரூ.89 கோடி ஒதுக்கீடு

பத்தாம்வகுப்பு வரை, கட்டாய கல்விவழங்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும்அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம்என, இரு
திட்டங்கள் அமலில்உள்ளன.
இதில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான,


ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், தரம் உயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட, மத்திய அரசுசார்பில், 60 சதவீத நிதி வழங்கப்படுகிறது.அதன்படி, 540 கோடி ரூபாய் கோரி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம்அனுப்பியது. அதை பரிசீலித்த மத்தியஅரசு, முதற்கட்டமாக, 89 கோடி ரூபாய் நிதிஒதுக்கியுள்ளது. அதில், 550 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள்அமைக்கப்பட உள்ளன

EMIS Updation..

 EMIS பதிவேற்றம்- 2017*

முன்னரேபதிவேற்றப்பட்ட அனைத்து வகுப்பு மாணவர்களின்தரவுகளை,

🔹புதுப்பித்துக்கொள்ள (UPDATE)



🔹வெளியேற்ற (TRANSFER)

🔹சேர்த்துக்கொள்ள (ADMIT)

EMIS தளத்தில்தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


ஆனால், *10, 11 & 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே மாணவர்களைப் புதிதாகநேரடிப் பதிவேற்றம் செய்ய இயலும்.*

ஹோட்டல்களில் இனி சேவை வரி கட்டாயமில்லையாம்!

 ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்களில் சாப்பிட செல்லும் மக்கள், தாங்கள் விருப்பப்பட்டால் மட்டும் சேவை வரியை(service tax) செலுத்தலாம்என மத்திய நுகர்வோர் விவகாரத்துறைகூறியுள்ளது. சேவை வரியை
கட்டாயமாக்கவேண்டாம், நுகர்வோரின் விருப்பத்துக்கு ஏற்ப அதை பெறலாம்என இந்திய உணவகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவங்களில் நாம் சாப்பிட்ட உணவின்கட்டணத்தில் சேவை வரியும் கூடுதலாகவசூலிக்கப்படுவது வழக்கம். உணவகங்களின் சேவை திருப்தியளித்தால் மட்டும்வாடிக்கையாளர்கள் சேவை வரி செலுத்தலாம். விருப்பமில்லாதவர்கள் செலுத்த தேவையில்லையாம்.

பேஸ்புக்கில் அரசையோ அரசு அதிகாரிகளின் தவறையோ சுட்டிக்காட்டுவது தவறல்ல...... உச்ச நீதிமன்றம் அதிரடி !!

 2015 (7) SCC 423

(Supreme Court)

Manik Taneja & another - Vs- State of Karnataka & another

Facebook Postings against police - Criticising Police on Police's Official Face book Page - F.I.R
Lodged by Police



HELD - Facebook is a Public Forum - it Facilitates Expression of Public Opinion- Posting of One's Grievance Against Government Machinery Even on Government Facebook Page does not by itself Amount to Criminal Offence- F.I.R. Quashed.

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் ஜன.5-இல் வெளியீடு

தமிழகம் முழுவதும் திருத்தப்பட்டவாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை (ஜன.5) வெளியிடப்படுகிறது. அனைத்துவட்டாட்சியர்
அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இந்தவாக்காளர் பட்டியல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தேர்தல் பிரிவுஅதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கானகால அவகாசம் கடந்த செப்டம்பர்30 -ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, பெயர் சேர்ப்பு -நீக்கலுக்காகஅளிக்கப்பட்ட 18 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.

புதிதாக15 லட்சம் பேர்: வாக்காளர் பட்டியலில்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வாக்காளர் பட்டியல்வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் மொத்தம் 5.92 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், புதிதாக 15 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும்தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னைமாநகராட்சியில் மண்டல அலுவலகங்களிலும், பிறமாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இந்தப் புதிய வாக்காளர்பட்டியல் வெளியிடப்பட்டு, அவை பொது மக்களின்பார்வைக்கு வைக்கப்படும்

29/12/16

பி.டெக்., படித்தால் நேரடி பிஎச்.டி., ஐ.ஐ.டி.,யில் விதிகள் தளர்வு

இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில், முதுநிலை பட்டப்படிப்பு முடித்த பின், பிஎச்.டி., படிக்க வேண்டும். அதற்கு, முதுநிலை படித்த பின், 'நெட்' என்ற தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர்க்கப்படுவர்.ஆனால், ஐ.ஐ.டி.,க்களில், பிஎச்.டி., படிப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

இதை சமாளிக்க, திறமையான மாணவர்களை நேரடியாக, பிஎச்.டி.,யில் சேர்க்க, ஐ.ஐ.டி., நிர்வாகத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக, ஐ.ஐ.டி., கவுன்சில் கூடி, பிஎச்.டி., விதிகளை மாற்றியுள்ளது.இதன்படி, ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., படிக்கும் மாணவர்கள், 8.5 தர மதிப்பெண் பெற்றால் போதும். மாதம், 60 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையுடன், ஐ.ஐ.டி.,யில், பிஎச்.டி., படிப்பில் நேரடியாக சேர்க்க, ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது

TET சிலபசில் மாற்றம் வருமா ? -ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

TET சிலபசில்மாற்றம் வருமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!
ஆசிரியர்தகுதித்தேர்வு சிலபஸ் படி, பாடவாரியாக அளிக்கும், மதிப்பெண் முறைகளில், மாற்றம் கொண்டுவர வேண்டுமென்ற
கோரிக்கை வலுத்துள்ளது.
மத்தியஅரசு உத்தரவுப்படி, கடந்த 2010 ஆகஸ்ட் 23ம் தேதி, ஆசிரியர்தகுதித்தேர்வு (டெட்), கட்டாயமாக்கப்பட்டது.



  இந்த அறிவிப்புக்கு, தமிழகஅரசு,2011 நவ., 11ம் தேதியில்தான், அரசாணை வெளியிட்டது.ஆனால், டெட் தேர்வுக்கான விதிமுறைகள், மத்திய அரசு அறிவித்ததேதியில் இருந்து பின்பற்றப்படும் என, அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு அறிவிப்புபடி, ஒரு ஆண்டில், குறைந்தபட்சம் ஒரு தகுதித்தேர்வாவது நடத்தவேண்டும்.அரசாணை வெளியான பின், ஆசிரியப்பணியில் சேர்ந்தவர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், தேர்ச்சிபெற்றால் மட்டுமே, பணியில் தொடர முடியும்.


 இதனால், 2011 ஆக., 23ம் தேதிக்குமுன்பு, சீனியாரிட்டி அடிப்படையில், காலிப்பணியிடம் நிரப்ப, சான்றிதழ் சரிபார்ப்புநடைமுறைகள் முடித்தவர்களுக்கு, டெட் தேர்வில் இருந்துவிலக்குஅளிக்கப்பட்டது.இதற்கு பின் பணியில்சேர்ந்த, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், டெட் தேர்வு எழுதவேண்டியது அவசியம். ஆனால் தமிழகத்தில், கடந்தமூன்றரை ஆண்டுகளாக,தேர்வு நடக்கவில்லை. இதனால், நிபந்தனை காலம் முடிந்தும், டெட்தேர்வு எழுத முடியாமல், ஆசிரியர்கள்கலக்கத்தில் உள்ளனர்.

இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:டெட்தேர்வு வினாத்தாள் படி, சமூக அறிவியல்பாடத்திற்கு மட்டும் 60 மதிப்பெண்களும், மற்ற பாடவாரியான பகுதிகளுக்கு, 30 மதிப்பெண்கள் மற்றும் உளவியல் பாடத்திற்கு, 30 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன.

இதற்குபதிலாக, ஆசிரியர்கள் தேர்வு செய்யும், முதன்மைபாடத்திற்கு, 60 மதிப்பெண்களும், மற்ற பாடங்களுக்கு 30 மதிப்பெண்களுக்கும், கேள்விகள் இடம்பெறும்படி, வினாத்தாள் திட்ட முறையை, மாற்றியமைக்கவேண்டும். மேலும், டெட் என்பது, தகுதியை நிரூபிக்கும் தேர்வு தான்.

வேறு பள்ளிக்குப் போகச் சொன்னால் நடவடிக்கை - பள்ளிக்கல்வி இயக்குனர்!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், ’ஸ்லோ லேனர்ஸ்’ எனப்படும் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை பொதுதேர்வு எழுத அனுமதிக்காமல், அவர்களை வேறு பள்ளிக்குப் போகச் சொல்லி, கட்டாயப்படுத்தி வருகின்றன பல பள்ளிகள். இந்நிலையில், கல்வித்

தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 10-வது மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ-மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2016-17-ம் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதவுள்ள மாணவ-மாணவிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் சில பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய மாணவ- மாணவியர்களின் பள்ளி மாற்றுச்சான்றிதழை பெற்று வேறு பள்ளிக்கு செல்ல வற்புறுத்துவதாக புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.

எனவே, இக்கல்வி ஆண்டு வருகை பதிவேட்டில் உள்ள அனைத்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளின் பெயர் கட்டாயம் அரசு தேர்வுத்துறை விதிமுறைகளின்படி அரசு தேர்வுகள் துறைக்கு அனுப்பும் பட்டியலில் இடம் பெற வேண்டும் எனவும், எவர் பெயரேனும் விடுபட்டால் அதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சுற்றறிக்கையின் நகலினை தமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அளித்து உரிய ஒப்புதலை பெற்று தமது அலுவலக கோப்பில் வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு ச.கண்ணப்பன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு தள்ளிவைப்பு ஏன்?

அண்மையில் உயர் நீதிமன்றம் டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் 11 பேரின் நியமனத்தை ரத்து செய்தது. அவர்கள் ஆளும்கட்சியின் பிரமுகர்களாக இருப்பதால் அவர்களின் நியமனத்தை ரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த உறுப்பினர்கள் தலைமையில்தான் நேர்முகத் தேர்வு குழுக்கள்

அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நீதிபதி களுக்கான நேர்முக உதவியாளர், பதிவாளர்களுக்கான நேர்முக உதவியாளர் மற்றும் துணைப் பதிவாளர்களுக்கான நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கான நேர்காணல் தள்லீ வைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை உயர் நீதிமன்றப் பணிகளில் அடங்கிய நீதிபதி களுக்கான நேர்முக உதவியா ளர், பதிவாளர்களுக்கான நேர்முக உதவியாளர் மற்றும் துணைப் பதிவாளர்களுக்கான நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 14,15 மற்றும் டிசம்பர் 7, 14, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அப்பதவிகளுக்கான நேர்காணல் தேர்வு ஜனவரி 10 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, நிர்வாகக் காரணங் களுக்காக நேர்காணல் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

22/12/16

வேளாண் கடன் - வட்டி செலுத்த அவகாசம் நீட்டிப்பு!

வேளாண் கடன்களுக்கான வட்டியை செலுத்தும் கால அவகாசத்தை மத்திய அரசு 60 நாட்கள் நீட்டித்துள்ளதோடு, குறுகிய காலத்துக்குள் தொகையை சரியாகச் செலுத்துவோருக்கு, வட்டித் தொகையில் 3 சதவிகிதம் 
தள்ளுபடிச் சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரூ.9 லட்சம் கோடி மதிப்புக்கு வேளாண் கடன் வழங்குவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. அதன்படி, செப்டம்பர் மாதம் வரையில் ரூ.7.56 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த மொத்தப் பணத்தில் 86 சதவிகித நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதால், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியும், வங்கிகளில் வாங்கிய வேளாண் கடனுக்கான வட்டி உள்ளிட்டவற்றை திரும்பச் செலுத்தமுடியாத நிலையிலும் தவித்து வருகின்றனர். எனவே, பழைய ரூ.500 நோட்டுகளைக் கொண்டு அரசின் விதைப் பண்ணைகளில் இருந்து விதைகளை வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. அதேபோல, அவர்களின் கடனைப் பொருத்து உரங்களை வழங்கும்படியும் உர நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் வட்டியைச் செலுத்த அவர்களுக்கு கால அவகாசத்தை மத்திய அரசு 60 நாட்கள் வரை நீட்டித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வேளாண்துறை அமைச்சக கூடுதல் செயலர் ஆஷிஷ் குமார் பூடானி கூறுகையில், ‘விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ரூ.3 லட்சம் ஓராண்டு குறுகியகால கடனுக்கு 7 சதவிகித வட்டி விதிக்கப்படுகிறது. கடனை சரியாகச் செலுத்துவோருக்கு 4 சதவிகிதத்தில் கடன் அளிக்கப்படுகிறது. நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரைக்குள் வேளாண் கடனுக்கான வட்டியைச் செலுத்த விவசாயிகளுக்கு 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் பணியிடங்கள்!

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்

கல்வித்தகுதி: இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கட்டணம்: ரூ.500/- இதனை "இயக்குனர், ஜிப்மர், புதுச்சேரி”

என்ற பெயருக்கு புதுச்சேரி ஜிப்மர் கிளையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்..

விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்து, டாக்டர்.அசோக் பதே, துணை இயக்குனர், ஜிப்மர் அலுவலகம்,புதுச்சேரி-605 006. என்ற முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.01.2017

மேலும், விவரங்களுக்கு www.jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதி நிறுத்தம்!

மாணவர்கள் கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, மடிக்கணினி, சைக்கிள்,பள்ளி சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் 
புத்தகங்கள், புத்தகப் பைகள், கணித உபகரணப் பெட்டி, வரைபடம், மதிய உணவு, காலணிகள் மற்றும் பேருந்து பயண அட்டைகள் போன்றவற்றை தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும், தமிழக அரசு சார்பில், கடந்த 2011-12 கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதி வழங்குவதற்கு, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஆங்கில அகராதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆங்கில அகராதி வழங்கும் திட்டம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில அகராதி மூலம் பாடத்தில் வரும் பல்வேறு புதிய வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தையை அறியமுடியும். மேலும், அதற்கான அர்த்தத்தையும் தமிழில் அறியலாம். பாக்கெட் டிக்‌ஷ்னரியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டதால், பள்ளிக்கு எடுத்து வருவதிலும் எந்த சிரமமும் இல்லை.

தமிழகத்தில், மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. எனவே, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், ஆங்கில பாடத்தில், உரையாடல், கதை விரிவாக்குதல், கட்டுரை எழுதுதல் போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.

பொதுத்தேர்வில், ஆங்கிலம் 2ஆம் தாளில், சுமார், 30 மதிப்பெண்களுக்கு மேலாக, சிந்தித்து எழுதும் வினாக்கள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதிகளில் மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற, அகராதி பெரிதும் உதவியாக இருக்கும். பள்ளி மாணவர்களின், ஆங்கில அறிவை மேம்படுத்த, அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குகிறது. எனவே, நடப்பு கல்வியாண்டில், 9ஆம் வகுப்பு மானவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆங்கில அகராதி வழங்க கல்வித்துறை முன்வர வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு எப்போது?

தமிழகத்தில், மக்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மக்களுக்கு பல மாதங்கள் வரை ரேஷன் கார்டு வழங்கப்படாமல் 
இருக்கிறது. இதனால், தீபாவளி முதல் புதிய ரேஷன் கார்டுகளை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு தெரிவித்திருந்தது. மேலும், ரேஷன் கார்டுக்கு பதிலாக ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆதார் இணைப்பு பணி 47 % மட்டுமே முடிவடைந்துள்ளதால், ரேஷன் கார்டில் அடுத்த 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்டி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு பதிலாக, ’ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்குவதற்கான பணிகள் 320 கோடி ரூபாய் செலவில் நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை 5.43 கோடி பேர் ஆதார் எண்ணை ‘ஸ்மார்ட்’ அட்டை திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 90% பணிகள் முடிந்துள்ளது. சென்னையில் 57.19% பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. எனவே, சென்னையில் இணைப்பு பணியை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கார்டு வடிவமைப்பு இன்னும் முடிவாகவில்லை. அது முடிவானதும், கார்டு அச்சிடும் பணி தொடங்கப்படும். எனவே, அடுத்த 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்டி பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புயல் நிவாரண நிதிக்கு அரசு ஊழியரின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்யலாம்!!!

முதல்வருக்கு ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்.

தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் முதல்வர் தனிப்பிரிவில் அளித்துள்ள கோரிக்கை மனு:


சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களில் ‘வார்தா’ புயல்
பாதிப்பால் ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அரசின் புயல் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு ஒரு சிறிய உதவியாக இருக்கும்.

 எனவே, புயல் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்துகொள்ளலாம். இந்த மாத சம்பளத்திலேயே பிடித் தம் செய்துகொள்ளும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.அகவிலைப்படி உயர்வால் ஒவ் வொரு ஆசிரியருக்கும், அரசு ஊழியருக்கும் குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரம் கூடுதலாக கிடைக்கும். எனவே, ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்துகொள்வதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது.

அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு

மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு "பணிப்பதிவேட்டை. DSR டிஜிட்டல் மயமாக்கும்  திட்டம்" அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை:: 


  1) அனைத்து SR ஐயும் மாவட்டக்  கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு நாட்களில் அவை  ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்.

 2) SR DISTRICT TREASURY யில் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக ஃபோன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்,

3)மிகப்பழமையான/ கிழிந்து போன/ லேமினேட் செய்யப்பட்ட SR உடைய பணியாளர் ஸ்கேன் செய்யும் போது உடனிருக்க வேண்டும்

4)ஸ்கேனிங் முடிந்தவுடன் அது பற்றிய 1 பிரிண்ட் அவுட் ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.அதில் தவறிருந்தால் அதை நாம் கூறியவுடன் , அத்தவறு சரி செய்யப்பட்டு அதற்குரிய வேறொரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும்

5)ஸ்கேன் பண்ணிய SRக்கு DIGITAL SR (DSR) என்று பெயர்

 6)அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றுபவர் பற்றிய DSR அந்தந்த மாவட்டத்தில்  மட்டுமேயிருக்கும்,.வேறு மாவட்டப பதிவில் சென்று தேடினால் இருக்காது..

7) ஒருவர் துறை மாறிதலில் சென்றாலோ/ வேறு மாவட்த்திற்கு பணிமாறுதல் பெற்றுச் சென்றாலோ அது குறித்துத் தகவல் தெரிவித்தால் அந்த மாவட்டத்திற்கு DSR அனுப்பி  வைக்கப்படும்.

 8) RETIREDMENT PENSION PROPOSAL அனுப்பும்போது SR BOOK ஐ அனுப்பக்கூடாது,மாறாக DSR ஐ மட்டும் அனுப்பினால் போதும்

9)ஒருவரிடம் வேறு துறையில் பணியாற்றிய SR/நிதியுதவி பெறும் பள்ளி SR / அரசுப்பள்ளிSR என ஒன்றிற்கு மேற்பட்ட SR இருந்தால் அவை அனைத்தையும் ஒப்படைக்க  வேண்டும்


8) SR SCANE செய்யப்பட்டதற்கு அடையாளமாக கடைசியாக ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தில் மாவட்டக்கருவூல அலுவலரின் கையொப்பம் முத்திரையுடனிருக்கும்,,அதன் பிறகு மேற்கொள்ளப்படும் அனைத்துப் பதிவுகளும் முத்திரைக்குப் பின்னுள்ள பக்கங்களில் இடம் பெற வேண்டும்...

9)SR DETAILS ம்  WEBROLL DETAILSம் ஒன்று போலிருக்க வேண்டும்.,இல்லையேல் WEBROLL REJECT செய்துவிடும்...

10)N.O.C,
ஆதார்எண். சாதனைகள், பெற்றுள்ள விருதுகள் பற்றிய விவரங்கள்DSR ல் இருக்கும்..

11)எதிர்காலத்தில் MANUEL SR MAINTENANCE இருக்காது்

12) DSR ல் NEXT INCREMENT ,
.HRA SLAp அனைத்துமிருக்கும் 

12)SCANE முடிந்த 15 நாள் மட்டுமே அப்பதிவு மாவட்ட கருவூல அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும்..அதற்குள் நாம் பிழை திருத்தம் மேற்கொள்ளலாம்..அதன்பின் தானாகவே அதற்கடுத்த அலுவலருக்கு MOVE ஆகிவிடும்,,அதன்பின் நாம் ஏதேனும் மிழை திருத்தம்  மேற்கொள்ள வேண்டியிருந்தால் ,அவ்வுயர் அலுவலரின் அனுமதிக்குப்பின் அவரே அதைச் செய்வார்.நாம் அவரின் விசாரணைக்கு உட்பட வேண்டியிருக்கும்...

2017-ல் எப்ப எல்லாம் லாங் லீவ் போடலாம்...!

2017-ல் எப்ப எல்லாம் லாங் லீவ் போடலாம் ஒரு ஐடியா காலண்டர்!
ஜனவரி! ஜனவரி மாதத்தில் பொங்கல் வார இறுதி நாட்களில் வந்து ஏமாற்றம் அளித்தலும். லாங் லீவ் போட ஒரு வாய்ப்பு இருக்கிறது. அது ஜனவரி 26 முதல் 29 வரை. ஜனவரி 26 - குடியரசு தின விழா - 
வியாழன்
ஜனவரி 27 - லீவ் போட வேண்டிய நாள் - வெள்ளி ஜனவரி 28 - சனி
ஜனவரி 29 - ஞாயிறு

பிப்ரவரி! பிப்ரவரியிலும் லாங் லீவ் போட ஒரு வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் மூன்று நாள் லாங் லீவ் 24 முதல் 26 வரை கிடைக்கும்.
பிப்ரவரி 24 - மகாசிவராத்திரி - வெள்ளி
பிப்ரவரி 25 - சனி
பிப்ரவரி 26 - ஞாயிறு

மார்ச்! மார்ச் மாதம் இரண்டு முறை லாங் லீவ் போட வாய்ப்புள்ளது. ஆனால், இது இரண்டும் வட இந்தியர்களுக்கு சாதகமானது.
மார்ச் 11 - சனி
மார்ச் 12 - ஞாயிறு
மார்ச் 13 - ஹோலி
மார்ச் 25 - சனி
மார்ச் 26 - ஞாயிறு
மார்ச் 27 - லீவ் போட வேண்டிய நாள் - திங்கள்
மார்ச் 28 - குடீ பாடவா (மராத்திய பண்டிகை) - செவ்வாய்

ஏப்ரல்! இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் மூன்று முறை லாங் லீவ் போட வாய்ப்பு அமைந்துள்ளது.
ஏப்ரல் 1 - சனி,
ஏப்ரல் 2 - ஞாயிறு
ஏப்ரல் 3 - லீவ் எடுக்க வேண்டிய நாள் - திங்கள்
ஏப்ரல் 4 - ராம் நவமி - செவ்வாய்
ஏப்ரல் 13 - வைசாக்கி (பஞ்சாப் திருவிழா) - வியாழன்
ஏப்ரல் 14 - சித்திரை 1, குட் ப்ரைடே (Good Friday) - வெள்ளி ஏப்ரல் 15 - சனி
ஏப்ரல் 16 - ஞாயிறு
ஏப்ரல் 29 - சனி
ஏப்ரல் 30 - ஞாயிறு
மே 1 - மே தினம் - திங்கள்

ஜூன்! பொதுவாகவே ஜூன், ஜூலையில் விடுமுறைகள் கிடைப்பது அரிதிலும், அரிது. இம்முறை மூன்று நாள் லாங் லீவ் வந்துள்ளது.
ஜூன் 24 - சனி
ஜூன் 25 - ஞாயிறு
ஜூன் 26 - ரம்ஜான் - திங்கள்

ஆகஸ்ட்! இந்த வருடம் குடும்பத்துடன், நண்பர்களுடன் எங்கேனும் பெரிய பயணம் செல்ல வேண்டும் என்றால் நீங்கள் ஆகஸ்ட் மாதத்தை தேர்வு செய்துக் கொள்ளலாம்... ஆகஸ்ட் 12 - சனி
ஆகஸ்ட் 13 - ஞாயிறு
ஆகஸ்ட் 14 - கிருஷ்ண ஜெயந்தி - திங்கள்
ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம் - செவ்வாய்
ஆகஸ்ட் 16 - லீவ் போட வேண்டிய நாள் - புதன்
ஆகஸ்ட் 17 - லீவ் போட வேண்டிய நாள் - வியாழன் ஆகஸ்ட் 18 - பாரிஸ் புத்தாண்டு - வெள்ளி
ஆகஸ்ட் 19 - சனி
ஆகஸ்ட் 20 - ஞாயிறு
ஆகஸ்ட் 25 - பிள்ளையார் சதுர்த்தி - வெள்ளி
ஆகஸ்ட் 26 - சனி
ஆகஸ்ட் 27 - ஞாயிறு

அக்டோபர்! ஆகஸ்ட்-க்கு அடுத்ததாக அக்டோபரில் ஒரு பெரிய லாங் லீவ் வாய்ப்பு கிடைக்கிறது...
செப்டம்பர் 30 - சனி
அக்டோபர் 1 - ஞாயிறு அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி - திங்கள்
அக்டோபர் 14 - சனி
அக்டோபர் 15 - ஞாயிறு அக்டோபர் 16 - தீபாவளி முதல் நாள் கொண்டாட்டம் - திங்கள் அக்டோபர் 17 - லீவ் போடவேண்டிய நாள் - செவ்வாய்
அக்டோபர் 18 - தீபாவளி - புதன் அக்டோபர் 19 - லீவ் போடவேண்டிய நாள் - வியாழன்
அக்டோபர் 20 - பாய் தூஜ் (Bhai Dooj) பாய் போட்டா, வட இந்திய பண்டிகை - வெள்ளி
அக்டோபர் 21 - சனி
அக்டோபர் 22 - ஞாயிறு

டிசம்பர்! டிசம்பர் மாதம் இரண்டு முறை லாங் லீவ் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது...
டிசம்பர் 1 - மிலாடி நபி - வெள்ளி டிசம்பர் 2 - சனி
டிசம்பர் 3 - ஞாயிறு
டிசம்பர் 23 - சனி
டிசம்பர் 24 - ஞாயிறு
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் - திங்கள்

டிசம்பர் 30 - சனி
டிசம்பர் 31 - ஞாயிறு

கொத்தடிமைகள் மீட்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் உள்ள கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க மாநில அளவில் ஒரு அதிகாரியை நான்கு வாரத்திற்குள் நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரோஸ்ஆன் ராஜன் என்பவர் பொது மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகம் முழுவதும் உள்ள கொத்தடிமைகளை தொழிலாளர்களை மீட்டு ,அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. கொத்தடிமை தொழிலாளர்களை மீட்பது, அவர்களால் யாரால் கொத்தடிமைகளாக அமர்த்தப்பட்டனர், எப்போது விடுவிக்கப்பட்டார்கள், விசாரணை ,விடுவிப்பு மற்றும் ஆரம்ப கட்ட மறுவாழ்வு தொகை போன்ற ஆவணங்களை அதிகாரிகள் நீதிமன்றங்களில் சமர்ப்பிப்பது இல்லை. இதனால், நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கொத்தடிமைகளாக இருக்கும் தொழிலாளர்களை மீட்டு,அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மாநில அளவில் ஒரு அதிகாரியை நான்கு வாரங்களுக்குள் நியமிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், கொத்தடிமைகளாக பணி அமர்த்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்த திட்ட வரைவை மூன்று மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்?

தமிழக தலைமைச்செயலாளர் ராமமோகன ராவ் வீடு மற்றும் அவரது மகன் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலாளர் பதவியில் இருப்பவர் வீட்டில் வருமான வரிச் சோதனை நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்று 
சொல்லப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்படுவதால் எந்நேரமும் அவர் மாற்றப்படலாம் என்று கருதப்படுகிறது. அப்படி அவர் மாற்றப்படும் பட்சத்தில் அடுத்த புதிய தலைமைச் செயலாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

🖊தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிலேயே பல ஆண்டுகள் அனுபவம் படைத்தவர்கள், மூத்தவருக்குத்தான் தலைமைச் செயலாளர் பதவி தரப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால், ராமமோகன ராவ் விஷயத்தில் இந்த மரபு கடைபிடிக்கப்படவில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி வரிசையில் 19-வது இடத்தில் இருந்த ராமமோகன ராவுக்கு மற்ற 18 பேர்களை புறம் தள்ளி விட்டு தலைமைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

🖊கிரிஜா வைத்தியநாதன்

இப்போது இவருக்கு முன்பு 18 பேரில்  ஒருவருக்கு தலைமைச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 18 பேரில் முதலிடத்தில் இருப்பவர் சக்தி காந்ததாஸ். இவர் இப்போது மத்திய அரசு பணியில் இருக்கிறார். அவருக்கு அடுத்து இருக்கும் கிரிஜா வைத்தியநாதன் நில நிர்வாகத்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர், கமிஷனராக இருக்கிறார். எல்லோரையும் விட தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இப்போதைக்கு இவர்தான். இவர் எந்தவித சர்ச்சைக்கும் ஆளாகாத ஒருவர் என்கிறார்கள். இவர் சென்னையைச் சேர்ந்தவர். 1981 பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரி அவர். இவருக்கு தலைமைச் செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்கின்றனர். இவர் ஓய்வு பெறுவதற்கு 3 ஆண்டுகள் இருக்கிறது.

🖊வி.கே.ஜெயக்கொடி

18 பேரில் தமிழக கேடரில் இருக்கும் 8 அதிகாரிகள் தற்போது டெல்லியில் இருக்கின்றனர். இவர் தவிர தற்போது ஞானதேசிகன் ஏற்கனவே தலைமைசெயலாளர் ஆக இருந்திருக்கிறார். இவர் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். 7வது இடத்தில் இருக்கும் கே.கந்தன் அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனராக இருக்கிறார். இவர் நெல்லையைச் சேர்ந்தவர். 9-வது இடத்தில் அம்புஜ் சர்மா தொழில்துறை இயக்குனர் மற்றும் கமிஷனராக இருக்கிறார். 12-வது இடத்தில் இருக்கும் வி.கே.ஜெயகோடி பவர்பின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். இவருக்கும் தலைமைச் செயலாளர் பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

🖊சண்முகம்

13-வது இடத்தில் இருக்கும் மீனாட்சி ராஜகோபால் கிராமவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிஷனராக இருக்கிறார். 16-வது இடத்தில் இருக்கும் ராஜிவ் ரஞ்சன், நெடுஞ்சாலைத்துறை செயலாளராக இருக்கிறார். இவரும் புதிய தலைமைச் செயலாளர் ஆகும் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இருக்கிறார். 17-வது இடத்தில் இருக்கும் கே.சண்முகம் நிதித்துறை கூடுதல்முதன்மைச் செயலாளர் ஆகவும் இருக்கிறார். இவருக்கும் தலைமைச் செயலாளர் ஆக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். இவர் நிதித்துறையில் அனுபவம் மிக்கவர் என்கிறார்கள். ஆட்சியாளர்களுடன் வளைந்து போகும் திறன் கொண்டவர் என்றும் சொல்கிறார்கள். 18-வது இடத்தில் இருக்கும் சி.சந்திரமவுலி வணிகவரித்துறை கூடுதல் முதன்மை செயலாளர் கமிஷனராக இருக்கிறார்.  இவர்களைத் தவிர ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ்-க்கும் தலைமைச் செயலாளர் ஆகும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

🖊சீனியாரிட்டி முக்கியம்

இது குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயத்திடம் கூறுகையில். "தமிழகத்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் டிசம்பர் 31 உடன் ஓய்வு பெறுகின்றனர். தலைமை செயலாளர் பதவி என்பது பணி மூப்பு அடிப்படையில்தான் வரவேண்டும். தங்களுக்கு யார் ஏற்றவர்களாக இருக்கின்றனர் என்பதைப் பார்த்து ஆட்சியாளர்கள்  நியமிப்பதால் சீனியாரிட்டி பார்ப்பதில்லை. இப்போது மிகவும் மூத்தவர் என்று பார்த்தால் கிரிஜா வைத்திய நாதன் இருக்கிறார். அவருக்கு இன்னும் சில வருடங்கள் பணி இருக்கிறது. அவர் மீது சர்ச்சைகள் ஏதும் இல்லை. விதிமுறைப்படி அவர்தான் நியமிக்கப்பட வேண்டும்" என்றார். ஆனால், தலைமைச் செயலக வட்டாரத்தில் தற்போதைய நிதித்துறை செயலாளர் சண்முகத்துக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.

ஊழியர்களின் சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் வழங்க தீர்மானம் நிறைவேற்றம்!!!

நாடு முழுவதும் ஊழியர்களுக்கான சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் வழங்க வகை செய்யும் தீர்மானத்தை மத்திய அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது.

தில்லியியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான 
முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஊழியர்களுக்கான சம்பள பரிவர்த்தனையில் ஒரு கூடுதல் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ரூபாய் நோட்டுக்கள் மூலமாக நேரடியாக சம்பளம் வழங்கும் முறையும் பின்பற்றப்படும்.

ஊழியர்கள் வங்கி மூலம் வேறு பணப்பரிவர்தனைகளை நிகழ்த்த வசதியாக இந்த வசதி கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இப்போது செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திருத்தம் மூலம் ஊழியர்களின் சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்று கட்டாய ப்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு டெபாசிட் விவகாரம்: ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வாபஸ்!!!

ரூபாய் 5000-க்கு மேல் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்வது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 19-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது._

_கடந்த மாதம் 8-ஆம் தேதி 500 ருபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு 
அறிவித்தது. மேலும் மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது._

_ஆனால் கடந்த 19-ஆம் தேதி அன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில், 'ரூபாய் 5000 அல்லது அதற்கு மேல் வங்கிகளில் டிசம்பர் 30-ஆம் தேதி வரை  ஒரே ஒருமுறை மட்டுமே டெபாசிட் செய்யலாம் என்றும், அவ்வாறு டெபாசிட் செய்பவர்கள் கூட குறைந்த பட்சம் இரண்டு  வங்கி அதிகாரிகள் முன்னிலையில் ஏன் அந்த தொகை தாமதமாக டெபாசிட் செய்யப்படுகிறது என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும்' என்றும் கூறப்பப்பட்டிருந்தது._

_ஆனால் கடந்த திங்கள் அன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 'ருபாய் நோட்டுகளை டெபாசிட் செய்பவர்களிடம் எந்த விதமான விசாரனையும் நடத்தப்படாது என்று அறிவித்தார். இதனால் ஒரு குழப்பமான சூழல் நிலவியது._

_இந்நிலையில் டிசம்பர்-19-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொள்வதாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது._

ரூ.10 நாணயம் செல்லும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

தமிழகத்தில், சில நாட்களாக, '10 ரூபாய் நாணயங்கள் செல்லாது' என, புரளி கிளம்பியதை அடுத்து வணிகர்கள், அரசு பஸ்களில் இந்நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர்.
சுற்றறிக்கை :
இந்நிலையில், ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 10 ரூபாய் நாணயத்தின் வடிவம், எடை, டிசைன், எந்த ஆண்டில், யார் நினைவாக அச்சடிக்கப்பட்டது போன்ற விபரங்களை அளித்து, வங்கிகள், தங்கள் பகுதி வணிக நிறுவனங்களில் விழிப்புணர்வு நோட்டீசாக ஒட்ட உத்தரவிட்டுள்ளது.மேலும், 2010ல் தான், 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது எனவும், அதன்பின், தலைவர்களின் நினைவாக, அடுத்தடுத்த ஆண்டுகளில், நாணயம் அச்சடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.செல்லும் :
கடைசியாக, ஜூன், 22ல், சுவாமி சின்மயானந்தா நுாற்றாண்டு விழா நினைவாக, 10 ரூபாய் நாணயம் அச்சடிக்கப்பட்டு உள்ளது. எனவே, தயக்கமின்றி, 10 ரூபாய் நாணயங்களை வாங்கிக் கொள்ளலாம் என, அறிவித்துள்ளது. மேலும், சில்லரை தட்டுப்பாட்டை போக்க,பாரத ஸ்டேட் வங்கிகளுக்கு, 10 ரூபாய் நாணயங்கள், 15 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 770 அரசுப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் திட்டம் விரைவில் துவக்கம் அமைச்சர் பாண்டிராஜன் தகவல் :

சென்னை, டிச. 19& தமிழகத்தில் உள்ள 770 அரசு உயர்நிலை, மேல்நிலைப் 
பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.     தமிழக சட்டமன்றத்தில்முதல்வர் ஜெயலலிதா ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி விதி எண் 110 ன் கீழ் பள்ளிக்கல்வித்துறையில்770 பள்ளிகளில்மெய்நிகர் வகுப்பறைகள் அமைக்கப்படும் என அறிவித்தார். அப்போது,  தமிழக மாணவர்களுக்குஒரே வகையான தரமான கற்றல் கற்பித்தலைக் கொண்டு சேர்க்கும் வகையில் இன்றையத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு மெய்நிகர் வகுப்பறைகள் (விர்சுவல் கிளாஸ் ரூம்) ஏற்படுத்தப்படும்.
முதற்கட்டமாக770 அரசுப் பள்ளிகளிலும், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் மெய்நிகர் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். மேலும், 11 மைய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலிருந்துநடத்தப்படும் வகுப்பறை செயல்பாடுகளை, இணையத் தொடர்பின் வாயிலாக கிராமப்புறப் பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் பெற்று மாணவர்கள் பயன்பெறுவர். இத்திட்டத்தினை செம்மையாக செயல்படுத்த கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு கட்டடங்கள் மற்றும் தளவாடங்கள், நூலகம் மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் . இதற்கென 33 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என கூறினார்.
அதனைத்தொடர்ந்து மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் சார்பில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 770 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் துவக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 11 மண்டலமாக பிரித்து இதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த  மையத்திலோ அல்லது பள்ளிகளிலோநடைபெறும் பாடத்தினைவகுப்பறையில்விடியோ கான்பரன்சிங் முறையில் பாடம் மாணவர்கள் கற்கலாம். இந்த முறையில் பெரும்பாலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வகுப்புகள் ஆடியோ, வீடியோ, விசுவல் முறையில் நடத்தப்படும்.
இந்தவகுப்பறை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இணையத்தில் இணைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் பாடம் நடைபெறும்போது மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.    இந்த வகுப்பறைஅமைக்க பள்ளியில் கணிப்பொறி, இணையம், யூபிஎஸ், பிராட்பேண்ட் வசதி கட்டாயம் இருக்க வேண்டும். இந்த வகுப்பு நடத்தப்படுவதன் மூலம் இதுவரை பாடங்களை மனப்பாடம் செய்த மாணவர்கள் இனிமேல் நேரடியாகவும்,செயல்முறையுடன் கூடிய பாடங்களை வீடியோ மூலம் பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் கற்றல் அறிவை மாணவர்களிடையே 100 சதவீதம் வளர்க்க முடியும். ஆங்கில அறிவும் எளிதில் கிடைக்கும் என்பதால் இந்த புதிய வகுப்பு முறை தமிழக பள்ளி கல்வித்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கான உபகரணங்கள் தற்பொழுது பள்ளிகளுக்கு அனுப்பபட்டு பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டிராஜன் கூறும்போது, தமிழகக்தில் 10,12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்கள் தேர்வினை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவக்கப்பட உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையிலும், மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு துவக்கப்படும் என தெரிவித்தார். ரயில்வே கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டம்?  பஸ் கட்டணங்கள்அதிகமாக இருப்பதால் சாதாரண நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ஆனால்  கடந்த சிலஆண்டுகளாக குறிப்பாக பாஜ அரசு மத்தியில் பதவியேற்றது முதல் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

SECOND SPELL TEACHERS COUNSELLING NEWS:

Image may contain: text

ஆசிரியர்களுக்கு பணி வரன்முறையில்லை:

Image may contain: text

ஆசிரியர் நியமன தகுதி தேர்வில் பி.எட் கணினி அறிவியல் படித்தவர்கள் புறக்கணிப்பு வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் குற்றச்சாட்டு

பெரம்பலூர்,
ஆசிரியர்நியமன தகுதி தேர்வில் பி.எட் கணினி அறிவியல்படித்தவர்கள்
புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆலோசனைகூட்டம்
பெரம்பலூரில்தமிழ்நாடு பி.எட் கணினிஅறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தாஜ்தீன்தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள்சங்க மாநில தலைவர் அருள்ஜோதிவாழ்த்தி பேசினார். மாநில பொது செயலாளர்குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
ஆசிரியர்நியமன தகுதி தேர்வான டி.இ.டி, டி.ஆர்.பி போன்றதேர்வுகளில் பி.எட் கணினிஅறிவியல் படித்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பிறபாடப்பிரிவுகளுக்கு இணையாக கணினி அறிவியல்பாடம் பிரதான திட்டமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் கணினி அறிவியல் பாடத்திற்கெனகணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
காலிபணியிடம்
இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளி கல்வி இணைஇயக்குனரின் (தொழிற்கல்வி) ஆணைப்படி, அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களிடமும் 1-11-2016 அன்று கணினி அறிவியல்ஆசிரியர் பணி காலியிடம் குறித்துஅறிக்கை கோரப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. எனவேபி.எட் கணினி அறிவியல்தகுதியுள்ள ஆசிரியர்களை அந்த பணியிடத்தில் நியமனம்செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில்மாநில துணை செயலாளர் புகழ், தலைமை ஆலோசகர் கண்ணன் உள்படபலர் கலந்து கொண்டனர். முடிவில்மாவட்ட பொருளாளர் மருது நன்றி கூறினார்.

10TH 12TH PRACTICAL EXAM DATE ANNOUNCED:

10 மற்றும் 12ம் வகுப்பு செய்முறைத்தேர்வு அறிவிப்பு.
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி தொடங்கி 31-ம் தேதியும், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் மார்ச் 8-ல் தொடங்கி 30-ம் தேதி வரையும் நடக்கவுள்ளன.பிளஸ் 2-வில் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர் களுக்கும் (ஒரு பாடத்துக்கு 50 மதிப்பெண்) அதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவி யல் பாடத்துக்கும் (25 மதிப்பெண்) செய்முறைத்தேர்வு உண்டு.

பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், செய்முறைத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற எதிர் பார்ப்பு தேர்வெழுத உள்ள மாணவர் கள் இடையே எழுந்துள்ளது.இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந் தராதேவியிடம் கேட்டபோது, 
“பிளஸ் 2 செய்முறைத்தேர்வை பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி 3-வது வாரத்துக்குள்ளாகவும் அதேபோல், 10-ம் வகுப்பு செய்மு றைத்தேர்வை பிப்ரவரி 3-வது வாரம் முதல் மார்ச் 5-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

10-ம் வகுப்புக்கு மத்திய கல்வி வாரிய தேர்வு கட்டாயம் அரசுக்கு பரிந்துரை.

மத்திய கல்வி வாரிய திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இப்போது வாரிய தேர்வு அல்லது பள்ளிகள் நடத்தும் தேர்வில் ஏதாவதுஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். 2017-18-ம் கல்வி ஆண்டு முதல் மத்திய கல்வி வாரிய தேர்வு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு மத்திய கல்வி வாரியம் பரிந்துரை அனுப்பியுள்ளது. அதேபோல இந்தி, ஆங்கிலம், நவீன இந்திய மொழி என 3 மொழிகளில் கல்வி பயிலும் திட்டம் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. இதில் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.