யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/1/17

பொங்கல் விடுமுறையை நீக்கியது மத்திய அரசு - தமிழகத்துக்கு தொடர்ந்து விழும் அடி !

பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தின் போற்றி பாதுகாத்து வந்த ஜல்லிக்கட்டு என்னும் பாரம்பரிய விளையாட்டை ஒரே அறிவிப்பில் பொசுக்கி விட்டனர் மத்திய அரசும் உச்சநீதிமன்றமும்.
இதனை தொடர்ந்து காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை பாலாறு பிரச்சனை என அனைத்து நதிநீர் பிரச்சனைகளிலும் தமிழகத்துக்கு தொடர்ந்து வஞ்சனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலும் ஒரு அடியாக இந்திய அரசு விடுமுறை நாட்கள் பட்டியலிலிருந்து பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக மக்களை கொந்தளிக்க செய்யும் இந்த அறிவிப்பில் பொங்கல் விடுமுறை என்பது கட்டாயமல்ல என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டாய விடுப்பு பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.
உயரதிகாரி விடுமுறை அளிக்க மறுத்தால் பணிக்கு கட்டாயம் வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழர் பாரம்பரிய விளையாட்டு நசுக்கப்பட்ட நிலையில் ஜாதி மத பேதமின்றி கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கும் ஆப்பு வைக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொண்டிருப்பது தமிழகம் மட்டுமல்ல உலக தமிழர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது..

10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு தேதிகள் அறிவிப்பு !!

2017-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொது தேர்வு தேதிகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.இது தொடர்பாக

இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாவது, 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி துவங்கி, ஏப்ரல் 10-ம் தேதி முடிகிறது. இதில் 16,67,673 பேர் எழுதுகின்றனர். 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி துவங்கி, ஏப்ரல் 29-ம் தேதி முடிகிறது. இதனை 10, 98, 420 பேர் எழுதுகின்றனர்.

தெற்கு ரயில்வே தேர்வாணையத்தில் அப்பரண்டீஸ் பயிற்சி !

தெற்கு ரயில்வே தேர்வாணையத்தில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான 148 அப்பரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த பயிற்சி அளிக்கும் காலியிடங்கள்: 148

பணி இடம்:
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

அ. சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு / பட்டறை / போத்தனூர்:


1. பிட்டர் - 16
2. டர்னர் - 06
3. எந்திர - 06
4. வெல்டர் - 02

ஆ. டீசல் லோகோ பணிமனை/ சேலம் கோட்டத்தின் கீழ் ஈரோடு:


1. பிட்டர் - 10
2. மின்சாரப் - 15
3.

மெக்கானிக் டீசல் - 20
4. வெல்டர் - 05

இ. எலக்ட்ரிக் லோகோ பணிமனை (ரோலிங் பங்கு) / சேலம் கோட்டத்தின் கீழ் ஈரோடு:


1. பிட்டர் - 10
2. மின்சாரப் - 10
3. மின்னணு மெக்கானிக் - 03
4. வெல்டர் - 03
ஈ வண்டி மற்றும் வேகன் டிப்போ / சேலம் கோட்டத்தின் கீழ் ஈரோடு:
1. பிட்டர் - 05
உ. வண்டி மற்றும் வேகன் டிப்போ / பாலக்காடு பிரிவின் கீழ் பாலக்காடு:
1. பிட்டர் - 07
2. வெல்டர் - 02
3. கார்பெண்டர் - 01

ஊ. டீசல் லோகோ பணிமனை / எர்ணாகுளம் திருவனந்தபுரம் கீழ் பிரிவு:


1. பிட்டர் - 03
2. மெக்கானிக் டீசல் - 04
3. மின்சாரப் - 03
4. வெல்டர் - 01

எ. வண்டி மற்றும் வேகன் டிப்போ / TVC திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ்:


1. பிட்டர் -10
2. வெல்டர் - 02

கொடைக்கானல்: இரயில்வே மருத்துவமனை / பாலக்காடு:


1. மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (கதிரியக்கவியல்) - 02
2. மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (நோயியல்) - 02
தகுதி: 10, +2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு:

26.01.2017 தேதியின்படி 15 - 24க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sr.indianrailways.gov.in கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Work Shop Personnel Officer,
Office of the Chief Work Shop Manager,
Signal & Telecommunication Work Shop,
Southern Railway - Podanur, Coimbatore - District
Tamil Nadu - 641 023

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:

25.01.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://govtjobsdrive.in/wp-content/uploads/2017/01/Southern-Railway-Recruitment-2017-148-Apprentice-Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆசிரியர் என்பது ஒரு தகுதி அல்ல. அது ஒரு தன்மை. !

இன்று ஆசிரியர் / அரசு ஆசிரியர் பற்றிய ஒரு வாட்சப் பதிவு படிக்க நேர்ந்தது , அந்த பதிவு பற்றிய வெளிப்பாடுதான் இது ....

ஆசிரியர் யார்? ஆசிரியர் பணி என்பது என்ன?

அன்பை தருவது தாய் , அறிவை தருவது தந்தை என்றால் இந்த இரண்டையும் ஒருசேரத்தரும் தாயுமானவர்.. ஆசிரியர், ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பது நூறு சதவீதம் உண்மை. தாய், தந்தையை விட, ஆசிரியரிடம் தான் ஒரு குழந்தை அதிக நேரம் செலவழிக்கிறது. எனவேதான், ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர் என அழைக்கப்படுகின்றனர்


ஆசிரியர் என்பது பணி அல்ல, ஒரு தொண்டு. மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுகின்றனர் ஆசிரியர்கள். எழுத்தறிவித்தவன் இறைவன், மாணவர்கள் கல் என்றால், ஆசிரியர்கள் சிற்பிகள் போன்ற பொன்மொழிகள் ஆசிரியர்களுக்கு புகழ் சேர்க்கின்றன

6 மணிநேர கால்கடுக்கும் வேலையாள் - வெரிகோஸ் வியாதிவந்தவர்கள்.

சாக் பீஸ் துகள்களால் – ஆஸ்துமாவந்தவர்கள்

வேண்டாம் என்றாலும் ,தேர்தல் ஆணையத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு , அரசியல்வாதிகளால்  துன்பம் அனுபிவித்தவர்கள்,

கோடை காலத்தை பிள்ளைகளுடன் அனுபவிக்கமுடியாமல் ,முழுஆண்டு தேர்வு ,10 -ம் /12 -ம் வகுப்பு தாள் திருத்தும் ஆசிரியர்கள், இன்னும் பல  படும் துன்பம் பற்றி ,

எத்தனை சவால்களை, சிரமங்களை, ஏமாற்றங்களை எதிர்ப்பட்டாலும், போதியளவு மரியாதை கிடைக்காமல் போகலாம் என்பதை அறிந்தும் இவை அனைத்தின் மத்தியிலும் உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான ஆசிரியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த ஆசிரியர் பணியை விட்டு விடாமல் அதில் நிலைத்திருக்கிறார்கள்.

நம்மை மேலே ஏற்றி அழகு பார்க்கும் ஏணி, ஆசிரியர் மட்டுமே!
ஆசிரியர்கள் என்றென்றும் கொண்டாடப்பட வேண்டிய ஏணிகள்

உங்கள் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறீர்களா?
ஒரு மாணவராக அல்லது பெற்றோராக, ஆசிரியர் செலவிட்ட நேரம், முயற்சி, அக்கறை ஆகியவற்றுக்காக அவருக்கு எப்பொழுதாவது நன்றி தெரிவித்திருக்கிறீர்களா? அல்லது நன்றி மடலோ, நன்றி கடிதமோ அனுப்பியிருக்கிறீர்களா?

லட்சங்கள் தனியார் பள்ளிகளுக்கு/ கல்லூரிகளுக்கு கொடுத்து, லட்சியம் இல்லாமல் தனியாருக்கு மாடாய் உழைக்கும்,அதே லட்சங்களை லஞ்சம் மூலம் பெரும் நாம் , பெற்ற அறிவை ஏருக்கேனும் ஒருநாள் ஆசிரியராய் இருந்து புகட்டி இருக்கின்றோமா?

வெட்டியாக  வாட்சப்பில் வந்த  தகவலை வைத்து  ஆசிரியர் பற்றியோ  , அரசு ஆசிரியர் பற்றி விமரிசித்து பேச ஏ சி அறையில் வாழும் நமக்கு என்ன தகுதி இருக்கின்றது??????

ஆசிரியர் என்பது ஒரு தகுதி அல்ல. அது ஒரு தன்மை…..

யோசியுங்கள்
நமக்கு இருக்கின்றதா இந்த தகுதியும் , தன்மையும்

பட்டதாரிகளுக்கு கோல் இந்தியா நிறுவனத்தில் 1319 காலி பணியிடங்கள் !

https://www.yoyojobs.com/coal-india-limited-recruitment-2017-1319-management-trainee-mt-posts-apply-online/

*கல்வி தகுதி:* Degree

*காலியிடங்கள்:* 1319

Mining – 191
Electrical – 198
Mechanical – 196

Civil – 100
Chemical/Mineral – 04
Electronics & Tele – 08
Industrial Egg – 12
Environment – 25
System/IT – 20
Geology – 76
Material Management – 44
Finance & Accounts – 257
Personal & HR – 134
Sales & Marketing – 21
Rajbhasha – 07
Community Deve – 03
Public Relations – 03
Legal – 20

*சம்பளம்:* Rs.20600 - 46500

*தேர்வு செய்யப்படும் முறை:* Written & Interview

*கடைசி தேதி:* 03.02.2017

*More Info:* https://goo.gl/Itl4O3

*Exam Center:* Chennai, Coimbatore, Namakkal, Trichy, Madurai, Nagapattinam, Tiruvannamalai and Pondicherry.

தமிழக பள்ளி கல்வித்துறையில் என்ன நடக்கிறது ?

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி. ' அமைச்சருக்கும் துறையின் உயர் அதிகாரிக்கும் சமீப நாட்களாக முட்டல் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அதன் ஒருபகுதியாகவே, பாண்டியராஜனின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் வளர்மதியின் கைக்கு அதிகாரம் சென்றது '

என்கின்றனர் அதிகாரிகள் வட்டாரத்தில்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சகராக பொறுப்பேற்கின்றவர்களே, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராகவும் பதவி வகித்து வந்தனர். முந்தைய காலங்களில் அரசியல் தலைவர்கள் பலர் இந்தப் பதவியை அலங்கரித்துள்ளனர்.

 அ.தி.மு.கவின் அமைப்பு செயலாளராக இருந்த சுலோசனா சம்பத், பாடநூல் கழகத் தலைவராக பதவி வகித்துள்ளார்.
' அமைச்சர் பதவி ஒருவரிடமும் பாடநூல் கழக தலைவர் வேறு ஒருவரிடமும் இருப்பதால், நிர்வாகரீதியான சிக்கல்கள் ஏற்படுகின்றன' என்பதால், துறை அமைச்சரிடமே இந்தப் பதவி ஒப்படைக்கப்பட்டு வருகிறது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வளர்மதியிடம் பாடநூல் கழகத் தலைவர் பதவி சென்று சேர்ந்துள்ளது.

 " தமிழக அமைச்சர்களில் மாஃபா. பாண்டியராஜனின் செயல் திட்டங்கள் முற்றிலும் மாறுபட்டவை. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டம் உள்பட கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். தன்னுடைய கருத்தை பொதுவெளியில் சொல்வதற்கு யாருடைய அனுமதியையும் அவர் கேட்பதில்லை. அதேபோல், சீனியர் அமைச்சர்களையே பெயர் சொல்லித்தான் அழைக்கிறார். இவையெல்லாம் சேர்ந்து பாடநூல் கழகப் பதவியை பதம் பார்த்துவிட்டன.

பள்ளிக் கல்வித்துறையில் அவர் மேற்கொள்ளும் சீர்திருத்தத்தில் யாருக்கும் உடன்பாடில்லை. அடுத்த மாதம், விலையில்லா பொருட்களான மிதிவண்டி, புத்தகப் பை, புத்தகம், கிரேயான்ஸ், காலணிகள், உல்லன் சுவெட்டர்கள், செயல்வழிக் கற்றல் உபகரணங்கள் என ஆயிரம் கோடி ரூபாய்க்கான பிரமாண்ட திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட உள்ளன. ' இந்த நேரத்தில் பாண்டியராஜன் இருப்பது அவசியமற்றது' என அதிகாரிகள் நினைக்கிறார்கள்" என விவரித்த கல்வி அதிகாரி ஒருவர்,


" பள்ளிக் கல்வித்துறையின் உயர் அதிகாரிக்கும் அமைச்சர் பாண்டியராஜனுக்கும் இடையில் சமீப காலங்களாக உரசல்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.

ஜெயலலிதா மறைவுக்கு முன்பு வரையில், ' ஆன்ட்டியிடம் பேசிக் கொள்கிறேன்' என அமைச்சர்களை அடக்கி வைத்திருந்தார் அந்த அதிகாரி. இதனாலேயே, பள்ளிக் கல்வி அமைச்சர்கள் துறை அதிகாரியிடம் பவ்யத்தோடு வலம் வந்தனர். ஆனால் பாண்டியராஜனோ, ' நான் சொல்வதை செயல்படுத்துங்கள்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார். இதனை துறையின் உயர் அதிகாரி ரசிக்கவில்லை. இதைவிட, மிக முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், ஏழைக் குழந்தைகள் கணிப்பொறி கல்வி கற்பதற்காக ஐ.சி.டி எனப்படும் ஒருங்கிணைந்த கணிப்பொறி பயிற்சி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு 900 கோடி ரூபாயை ஒதுக்கியது. ஐந்தாண்டுகளாக நிதியை செலவிடாமல் தள்ளாட்டத்தில் வைத்திருந்தனர் அதிகாரிகள். இந்தப் பணியை எடுத்துச் செய்வதற்காக வந்த நிறுவனங்கள், அதிகாரியின் அழுத்தத்தால் பின்வாங்கிவிட்டன. ஒருகட்டத்தில், நிதியைத் திருப்பி அனுப்பும் வேலைகள் தொடங்கின.
இதனை அறிந்த அமைச்சர் பாண்டியராஜன், ' ஐ.சி.டி திட்டத்தால் ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்த முடியும்' என மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் பேசி திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வாங்கிவிட்டார். '

கணிப்பொறி தொடர்பான கல்வி என்பதால், எல்காட் வசம் பணிகள் ஒப்படைக்கப்படுவதைவிட, பள்ளிக்கல்வித்துறையே எடுத்துச் செய்தால் நன்றாக இருக்கும்' என அதற்கான பணிகளில் இறங்கினார். மீண்டும் ஐ.சி.டி கொண்டு வரப்படுவதை அதிர்ச்சியோடு கவனித்தார் துறை அதிகாரி. ' ஐ.சி.டியை முன்வைத்து நடந்த விஷயங்கள் தெரிந்துவிடும்' என்பதால், சில ஐ.ஏ.எஸ்கள் துணையோடு கார்டன் வட்டாரத்துக்கு தகவல் அனுப்பினார். ' யாரைக் கொண்டு வருவது' என பல பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன. ' அ.தி.மு.கவில் சீனியராக வளர்மதி இருப்பதால், பாண்டியராஜனால் எதிர்த்துப் பேச முடியாத நிலை ஏற்படும்' என்பதை உணர்ந்தே, அவருக்குப் பதவியைக் கொடுக்க வைத்துள்ளனர்" என்றார் விரிவாக.


" கடந்த ஐந்தாண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை எந்த முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை. அனைவருக்கும் கல்வித் திட்டம், இடைநிலைக் கல்வித் திட்டம் போன்றவற்றில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளன. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு ஆதாரபூர்வமாக தகவல் சென்றாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

லஞ்ச ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அதிகாரிகள் பலரும், ஒரே துறையில் நீண்டகாலம் அமர்ந்து கோலோச்சுகின்றனர். கடகடந்த இரண்டு ஆண்டுகளில் விலையில்லா புத்தகப் பை, காலணி தொடர்பான ஒப்பந்தங்கள் அனைத்தும், மறு டெண்டர் என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் விரயமாக்கினர்.

பாடநூல்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் இடம்பெற்றுவிட்டது என்பதற்காக, மூன்று கோடி ரூபாய் செலவில் மறு அச்சடிப்பு பணிகளைச் செய்தார்கள். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தம் கொடுப்பதற்காகவும் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் டெண்டரை வழிநடத்தும் முடிவில்தான் இதுபோன்று முடிவு எடுத்திருக்கிறார்கள்" என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்.

" அ.தி.மு.க அரசு பதவியேற்றதில் இருந்து வாரியம் உள்பட பல்வேறு பதவிகளுக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. பாடநூல் கழகத்துக்கு புதிதாக ஒருவரை நியமிப்பதன் மூலம், அமைச்சரின் பணி எளிதாக்கப்பட்டுள்ளது. எந்தவித முறைகேட்டுக்கும் இடம் கொடுக்காத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விதிமுறைகளின்படியே டெண்டர்கள் கோரப்படுகின்றன. தகுதியில்லாத நிறுவனங்கள் தேர்வாகும்போதுதான் மறுடெண்டர் கோரப்படுகிறது. மற்றபடி, வளர்மதியின் நியமனத்தை அரசியல் ஆக்குவது அர்த்தமற்றது" என்கிறார் பள்ளிக் கல்வி அதிகாரி ஒருவர்.

- ஆ.விஜயானந்த்..
விகடன் இணையம்...

2009. க்கு பின் நியமனம் பெற்ற இ.ஆ ஊதியம் எவ்வளவு ?? இதனை பெற்றுத்தந்த போராளிகள் கவனத்திற்கு ?

புதிய ஆட்சி அமைந்திருக்கிறது
உங்களோடு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியவர் தான் இன்றைய முதல்வர்.
நிச்சயம் அவருக்கு
Cps ஐ பற்றியும் இடைநிலையாசிரிகளின் ஊதிய முரண் பற்றியும் மிகத்தெளிவாக தெரியும்.ஆதலால் இனியும் தாமதிக்க வேண்டாம்....

இடைநிலையாசிரியர்களின் கஷ்டத்தை புரிந்துக் கொண்டு தொடர்ந்து எங்கள் ஊதிய இழப்புக்காக குரல் கொடுங்கள்
7 ஆண்டுகள் பணிபுரியும் இ.ஆ ஊதியம்
BASIC  & G.P
6300+2800+750=9850
DA = 13002


ஆக
 9850+13002=22852
பிடித்தம்
2285 +220

கைக்கு வருவது
20347


இது போதாதா என்று நீங்கள் கேட்பீர்களானால் உரிமையை மீட்பதில்  உங்களை தவிர இயலாதவர்கள் வேறு யாருமில்லர்..
இன்று போக்குவரத்து ஊழயர்களுக்கான ஊதிய பேச்சு வார்த்தை.அவர்கள் அவர்களின் ஊதியத்திற்காக எள்ளளவும் விட்டுக்கொடுக்காமல் பேச போகிறார்கள்
நீங்கள் எப்போது????

மேல உள்ள வருமானத்தில்
சொஸைட்டி 1000
(உறுப்பினர் சந்தா)
வீட்டு வாடகை 3000
வீட்டுச் செலவு 7000
(மாதம் ஒன்றுக்கு)
பெட்ரோல் மாதம் 2000
மருத்துவ செலவு 3000
(மனைவி,அம்மா,
தங்கை)
பேப்பர்,பால்,இதர
தினசரி செலவுகள் 2000

மீதமிருக்கிற இரண்டாயிரத்தை வைத்து மனைவியை பிள்ளைகளை
உறவினர்களை
நண்பர்களை திருப்த்தி செய்தாக வேண்டும்.
இதனாலயே பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்களுக்கு புதிய உடுப்புகள் கூட கனவு தான்...

ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி அளிக்காவிட்டால் பிரதமருக்கு சம்மன் - பிஏசி!

பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி அளிக்காவிட்டால் பிரதமர் மோடியை விசாரணைக்கு அழைப்போம் என்று பாராளுமன்ற பொது கணக்கு குழுத் தலைவர் கூறினார்.பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட தாக்கம் குறித்து 22 எம்.பி.க்களை கொண்ட பாராளுமன்ற பொது கணக்கு குழு ரிசர்வ் வங்கியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி

இருக்கிறது.அவற்றில் முக்கிய கேள்விகளாக, பண மதிப்பு நீக்கம் குறித்த முடிவை எடுத்ததில் யார் யார், ஈடுபட்டனர்? தற்போது எவ்வளவு பணம் வங்கிக்கு வந்துள்ளது? தங்களது பணத்தை வாடிக்கையாளர்கள் எடுப்பதற்கு தடை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறதா? கருப்பு பண பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதா? ஏழைகள் மற்றும் பொருளாதாரத்தின் மீது ஏற்பட்ட தாக்கம் என்ன? என்று கேட்கப்பட்டு இருந்தது.இது தொடர்பாக வருகிற 20–ந்தேதி பாராளுமன்ற பொது கணக்கு குழுவின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல், நிதித்துறை செயலாளர் அசோக் லாவசா, பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். இதுபற்றி பொது கணக்கு குழுவின் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான கே.வி. தாமஸ் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் அளிக்கும்படி கேட்டு கொண்டிருந்தோம். அதற்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ஜனவரி 20–ந்தேதி கூட்டத்துக்கு சில நாட்கள் முன்பாகவே அவர்கள் பதில் அளிக்கவேண்டும். இந்த பதில்கள் பொது கணக்கு குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்’’ என்றார்.ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி அளிக்காவிட்டால், பொது கணக்கு குழு பிரதமரை அழைத்து விசாரிக்குமா? என்ற கேள்விக்கு தாமஸ் பதில் அளிக்கையில், ‘‘இப்பிரச்சினையில் தொடர்புடைய அத்தனை பேரையும் அழைத்து விசாரிக்க இக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. அதேநேரம் 20–ந்தேதி கூட்டத்தில் எந்த மாதிரியான முடிவுகள் வெளியாகின்றன என்பதை பொறுத்தே இதுபற்றி தீர்மானிக்கப்படும். பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக இக்குழுவின் உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவு செய்தால் பிரதமர் மோடி மற்றும் நிதிமந்திரி அருண்ஜெட்லி இருவரையும் அழைத்து விசாரிப்போம்’’ என்றார். 50 நாட்களில் இயல்பு நிலை திரும்பிவிடும் என்றார் பிரதமர் மோடி. ஆனால் தற்போது நிலைமை அப்படி தெரியவில்லை. எனவேதான் இந்த முடிவை எடுத்த அதிகாரிகளை அழைத்து விசாரிக்க பொதுக் கணக்கு குழு முடிவு செய்தது’’ என்று அவர் குறிப்பிட்டார்.

வங்கிக்கு திரும்பிய 14 லட்சம் கோடி!!

செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளில் ரூ.14 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், இது அரசு எதிர்பார்த்ததைவிட மிகமிக அதிகம் என்றும் அரசு அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணத்தை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி உயர்மதிப்பு நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.1000 ஆகியவற்றை செல்லாதவைகளாக அறிவித்தது. மொத்த ரூபாய் நோட்டுகளில் 86 சதவிகித அளவிலான இந்த மதிப்பிழந்த நோட்டுகள் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி வரையில் வங்கிகளில் செலுத்தப்பட்டன. அரசின் கணிப்புப்படி இந்த ரூ.15.4 லட்சம் கோடி அளவிலான மதிப்பிழந்த நோட்டுகளில் சுமார் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிக்கு வராது என்றும், இந்த நோட்டுகள் கறுப்புப் பணமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதுவரையில் ரூ.14 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. எனவே இன்னும் ரூ.75,000 கோடி மட்டுமே செலுத்தப்படாமல் உள்ளது. இது அரசு கணித்திருந்த தொகையைவிட (கறுப்புப் பணம்) மிகமிகக் குறைவாகும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து மதிப்பிழந்த நோட்டுகளின் டெபாசிட் அளவு குறித்து எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

போலீஸ் திடீர் சோதனை - ஒரே இரவில் 1,513 பேர் கைது!

சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் தினம் தினம் கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. ஜெயலலிதா ஆட்சி நடைபெற்றால், குற்றச் செயல்கள் நடைபெறாமல் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கும் என கருத்து நிலவி வந்தது. ஆனால், அவர் ஆட்சியில் இருந்தபோதும் சென்னை மாநகரில் ஒரேநாளில் பல கொலைகள் மிக சர்வசாதரணமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு நடந்த அதிரடி சோதனையில் சுமார் 1513 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் அதிகரித்துவரும் குற்றச் செயல்களை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இரவு சோதனைக்கு உத்தரவிட்டிருந்தார்.

அவரின் உத்தரவின்படி, போலீஸார் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தங்கும் விடுதிகள்,ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், சந்தேகத்தின் அடிப்படையில்,1463 பேரும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 41 பேரும் பழைய குற்றவாளிகள் 6 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 பேர் என மொத்தம் 1,513 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

இதைத் தவிர்த்து, புத்தாண்டு தினத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டிய 83 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஒருநாளில் நடத்தப்படும் திடீர் சோதனைகள் மூலம் குற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் தொடர் சோதனைகள், காவலர்களுக்கு சோதனை வாகனங்கள் கொடுப்பது உள்ளிட்ட செயல்கள் மூலமே குற்றச்செயலகளைக் கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் காவலர்கள் கூறுகின்றனர்.

5G நெட்வொர்க் முதல் முயற்சி!!

Qualcomm நிறுவனம் ஸ்மார்ட்போன்களுக்கு Processor தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக இயங்கி வருகின்றது. அதன்வரிசையில் இந்தாண்டின் தொடக்கத்திலே தனது Snapdragon Processor சீரிஸில் 835 Processorஐ அறிமுகப்படுத்தியது. இந்த புராசஸரால் 5 நிமிடம் சார்ஜ் செய்தால் ஸ்மார்ட்போன் 5 மணிநேரத்துக்கு சார்ஜ் நிற்க்கும் தன்மையுடன் தயாரித்திருந்தது Qualcomm.

புதுமைகளை கையாண்டு வரும் இந்த நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற எலக்ட்ரானிக் சன்ஸ்யூமர் கண்காட்சியில் 5G தொழில்நுட்பம் குறித்து பேசியது.

இந்த நிகழ்ச்சியில் புது புராசஸரான Snapdragon 835, அறிமுகப்படுத்திப் பேசிக் கொண்டிருந்த செயளாலர் ஸ்டீவ் மெல்லோன், 5G நெட்வொர்க் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கூடிய விரைவிலே வந்துவிடும் என்று கூடினார். அதற்காக மிக அதிகமான பணத்தை இன்வெஸ்ட் செய்ய இருக்கின்றோம். அதற்கான முதல்படி எடுத்து வைத்துவிட்டோம். 5G நெட்வொர்க் மூலம் 1GB-க்கான ஃபைலை வெறும் 3 வினாடிகளில் பதிவிறக்கம் செய்துவிடலாம். மேலும், 4K தொழில்நுட்பம் கொண்ட வீடியோவை 18 வினாடிகளில் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் கூறியிருக்கிறார்.

இண்டெர்நெட் தனது வளர்ச்சியின் அடுத்தக்கட்டத்தை அடந்துகொண்டிருக்கிறது. 2G நெட்வொர்கை ஆச்சரியத்துடன் பார்த்த, 3G 4G என பலகிக் கொண்டனர். மக்களுக்கு வேகமான நெட்வொர்க் தான் தேவைப்படுகின்றது. ஸ்மார்ட்போன்களும் 4G, அதிக சக்தி கொண்ட பேட்டரி, புராசஸர் என தன்னை தான் வருகின்றன. Snapdragon 835 Processor வேகமாக சார்ஜ் ஆகும் தொழில்நுட்பம், ஸ்மார்ட்போன்களுக்கு வேகம் கொடுப்பது என 5G நெட்வொர்க்கின் முதல்படியாக அமைந்திருக்கிறது.

9/1/17

CPS NEWS:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கம்
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து,
ஊதிய குழு அமைத்தல்,
இடைக்காலநிவாரணம் 20%

உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற
வேலைநிறுத்தப் போராட்ட ம் அறிவிப்பு

TNGEA மாநில மாநாடு அறைகூவல் தீர்மானங்கள்:

1. CPS ரத்து

2. 8 வதுஊதியக்குழு அமைக்க

3. இடைக்காலநிவாரணமாக 20% வழங்க

4. சிறப்புகாலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்குவரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க

5. Outsourcing,  daily wages முறை ஒழித்து காலி பணியிடங்களில்நிரப்ப

6. சாலைப்பணியாளர்களின்41 மாத பணிநீக்க காலத்திற்கு ஊதியம் வழங்க

தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.

மேற்கண்டகோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்க்கண்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

02.02.2017 மாவட்டதலைநகரங்களில் உண்ணாவிரதம்

05.03.2017 மாவட்டதலைநகரங்களில் பேரணி


18.03.2017 /25.03.2017 வேலைநிறுத்த ஆயத்த மாநாடு


25.04.2017 காலவரையற்றவேலை நிறுத்தம்

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு வரும் ஜனவரி 23ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

இந்த ஆண்டு முதல் மருத்துவப்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுநடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க www.cbseneet.nic.in என்ற
இணையதளத்தில் ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம். மேலும் வரும் மே7ம் தேதி இந்த தேர்வுநாடெங்கிலும் பல பகுதிகளில் நடைபெறும்.

இதற்கானவிண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.1400ம் பிற்படுத்தப்பட்ட மற்றும்பழங்குடியினருக்கு ரூ.750ம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்தக் கட்டணங்களை செலுத்தபிப்ரவரி 1ம் தேதியே கடைசியாகும்.

இந்த தேர்வு முடிவுகள் வரும்ஜூன் மாதம் முதல் வாரத்தில்வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.

வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள்தங்களின் ‘பான் கார்டு’ எண்ணைவரும் அடுத்த மாதம் பிப்ரவரி28-
ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய வருமான வரித்துறைஉத்தரவிட்டுள்ளது.


கருப்புபணத்தை தடுக்கும் விதமாக, செல்லாத ரூபாய்நோட்டு  அறிவிப்புவெளியான கடந்த ஆண்டு நவம்பர்8ந் தேதிக்கு முந்தைய வங்கி , தபால்நிலையடெபாசிட்களையும் ஆய்வு செய்ய வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது.

அதாவது2016ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியில்இருந்து நவம்பர் 8-ந்தேதிக்கு முன்பு வரை வங்கிகள், தபால் நிலையங்களில் செய்யப்பட்ட டெபாசிட்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

நாட்டில்கருப்பு பணத்தையும், கள்ளநோட்டுகளையும் ஒழிக்க பிரதமர் மோடிகடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதிரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாதுஎன அறிவித்தார். அதைத் தொடர்ந்து கருப்புபணத்தைபிடிக்கும் நடவடிக்கைகளை வருமான வரித்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதில் ரூபாய் நோட்டு தடைஅறிவிப்பு காலத்தில் ஜன்தன் வங்கிக் கணக்குகளில்லட்சக்கணக்கில் திடீரென செய்யப்பட்ட டெபாசிட்கள், சேமிப்பு கணக்குகளில் நவம்பர் 9-ந்தேதிக்கு பின் டிசம்பர் 30ந்தேதிவரை ரூ.2.5 லட்சம் வரைசெய்யப்பட்டடெபாசிட்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கருப்புபணம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி, விரைவுப்படுத்தும் விதமாக  வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்கள் கணக்கில் நவம்பர் 9-ந்தேதிக்கு பின் ரூ.2.5 லட்சம்வரை டெபாசிட் செய்யப்பட்டு இருந்தால் அவர்களின் கணக்கில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் நவம்பர்9 ந்தேதி வரை செய்யப்பட்ட டெபாசிட்குறித்தும்ஆய்வு செய்ய வருமான வரித்துறைதிட்டமிட்டுள்ளது.

இதற்காகவங்கிகள், தபால்நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களின் பான்கார்டுஎண், படிவம் 60 ஆகியவற்றை கேட்டு வருமான வரித்துறைஉத்தரவிட்டுள்ளது. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவரும்வரும் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் தங்களின் பான்கார்டு எண்ணை அளிக்கவும் வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் செல்லாத ரூபாய்நோட்டு அறிவிப்புக்கு பின் ஒருவர் கணக்கில்செய்யப்பட்ட டெபாசிட் குறித்தும், செல்லாத ரூபாய் அறிவிப்புக்குமுன் அவர்கள் கணக்கில் இருப்பில்இருந்த பணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறைமுடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து வங்கிகள் , தபால்நிலையங்களுக்கும்கடந்த 6-ந்தேதி நிதி அமைச்சகத்தின்ேநரடி வரிகள் வாரியம் அதிகாரப்பூர்வஉத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, வங்கி, தபால்நிலையங்களில் பான்கார்டு எண் கொடுக்காதவர்கள் தங்கள்பான்கார்டு எண்களை உடனடியாக கொடுக்கவேண்டும். சில வங்கியில் கணக்குதொடங்கும்போது, பான்கார்டு முறை அறிமுகம் இல்லாதநிலையில் இருந்தாலும், அவர்களும் இப்போது தங்களின்  பான்கார்டு எண்களை உடனடியாக வங்கியில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் பற்றி ஆய்வு.

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள், எந்த பள்ளிகளில்
படிக்கின்றனர்என்பது குறித்த விவரங்களை சேகரிக்ககேரள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


 அரசு சம்பளத்தை வாங்கும், அரசு பள்ளி மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுபள்ளிகளில்தான் படிக்க வைக்கவேண்டும் என்றுஅலகாபாத்உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை பின்பற்றிகேரளாவிலும் நடவடிக்கை மேற்ெகாள்ள மாநில அரசு தீர்மானித்துள்ளது.


இதையடுத்துஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர்என்பது குறித்த விவரங்களை சேகரிக்கமாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாநில கல்வித்துறை இயக்குனர்உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த உத்தரவுக்குகேரளாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குழந்தைகளை இந்த பள்ளியில்தான் படிக்கவைக்கவேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தசட்டத்தில்இடம் இல்லை. தங்கள் குழந்தைகள்எந்த பள்ளியில் படிக்க வைப்பது என்பதுபெற்றோரின் உரிமையாகும் என்று அரசு பள்ளிஆசிரியர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

How To » 1ஜிபி தினசரி வரம்பை மீறி ஜியோ ஹை-ஸ்பீட் தரவு பயன்படுத்துவது எப்படி?

1ஜிபி தினசரி வரம்பை மீறிஜியோ ஹை-ஸ்பீட் தரவுபயன்படுத்துவது எப்படி? ரிலையன்ஸ் ஜியோவின்ஹேப்பி நியூ இயர் சலுகையின்கீழ்
மார்ச் 31 வரை இலவச டேட்டாவைவாடிக்கையாளர்கள் தினசரி பயன்பாடு எல்லையுடன்பெற்று வருகிறார்கள்.


2016- நமக்கெல்லாம்பொதுவாக நடந்த ஒரு நல்லவிடயம் தான் - ரிலையன்ஸ் ஜியோஅறிமுகம். இதுவரை ஜியோ 4ஜிசிம் கார்ட் ஒன்றை கையில்பெறாதவர்கள் தவிர்த்து பிற அனைவருமே ஜியோ2016-ஆம் ஆண்டில் நடந்த ஒருநல்ல விடயம்என்பதை ஒற்றுக்கொள்வார்கள். அதிலும் மிக முக்கியமாகஜியோ வெல்கம் ஆபர் முடிவடையும்நேரத்தில் மேலும் 3 மாதங்களுக்கான அதன் இலவச சலுகைகளைநீட்டிக்கும் (மார்ச் 31, 2017 வரை) வண்ணம் ஹேப்பிநியூ இயர் ஆபர் வழங்கியது.2017-ஆம் ஆண்டிற்க்கும் சேர்த்தேஒரு நல்ல விடயமாக அமைந்ததுஆனால் பயனர்கள் அனைவருக்கும் ஜியோவின் ஹேப்பிநியூ இயர் ஆபரில் ஒருசின்ன வருத்தம் காத்திருந்தது. அதுதான் 1ஜிபி என்ற தினசரிடேட்டா லிமிட் அதாவது ஒருநாளைக்கு இவ்வளவுதான் அதிவேக இண்டர்நெட் என்றதரவு எல்லை. ஆனாலும் கூட1ஜிபி என்று வழங்கப்பட்டுள்ள தினசரிரிலையன்ஸ் ஜியோ 4ஜி வரம்பைமீறி ஜியோ ஹை-ஸ்பீட்தரவு பயன்படுத்த ஒரு வழி இருக்கிறது. அதெப்படி என்பதை பற்றிய தொகுப்பேஇது.

பூஸ்டர்பேக் 1ஜிபி என்ற தரவுஎல்லையை மீறி அதிக வேகத்தில்மீண்டும் உலவ நீங்கள் ரிலையன்ஸ்ஜியோ வழங்கும் பூஸ்டர் பேக்குகளை பயன்படுத்தமுடியும். இதற்கான செலவாக நிறுவனம்6ஜிபி பேக் ரூ.301/- என்றும்மற்றும் 1ஜிபி பேக் ரூ.51/- என்றும் நிர்ணயித்துள்ளது. இதை ஆக்டிவேட் செய்வதும்மிகவும் எளிமையே.!

வழிமுறை#01

உங்கள்மொபைலில், மைஜியோ பயன்பாட்டை திறக்கவும். உள்நுழைந்து லாக்-இன் அல்லதுரிஜிஸ்டர் செய்யவும். உங்கள் ஜியோ தொலைபேசிஎண் தான் உங்கள் பயனர்பெயராகும். இப்போது, நீங்கள் ஜியோ பயன்பாடுகளின்ஒரு பட்டியலை பார்ப்பீர்கள் இப்போது மை ஜியோஎன்பதற்கு அருகிலுள்ள ஓபன் என்பதை டாப்செய்யவும்.

வழிமுறை#02

யூஸேஜ்என்பதை டாப் செய்து - டேட்டாஎன்பதை டாப் செய்யவும். நீங்கள்1ஜிபி என்ற டேட்டா எல்லைகடந்து விட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்த இதைசெய்ய வேண்டும். ஜியோ வேகம் எப்போதுமேநிலையானதாக இருக்காது ஏனெனில் மெதுவான இணைப்பில்இருக்க முடியும். ஆக டேட்டா எல்லையைசோதிப்பது அவசியமாகிறது.

வழிமுறை#03


நீங்கள்வரம்பை கடந்து விட்டீர்கள் என்றால், பேக் ஐகானைடாப் செய்து மீண்டும் மெயின்ஸ்க்ரீனுக்கு திரும்பி போகவும். ரீசார்ஜ் ஐகானை டாப் செய்யவும், பின்னர் பூஸ்டர் ஐகானை டாப்செய்யவும். நீங்கள் விரும்பும் திட்டத்தைதேர்வு செய்து வலது பக்கத்தில்விலை ஆப்ஷனை டாப் செய்யவும். அதன் வழியாக நீங்கள் ஜியோமணிஆப்பிற்குகொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு கிரெடிட், டெடிபிட்அல்லது நெட் பேங்கிங் வழியாககட்டணம் செலுத்த முடியும்.வழக்கமான4ஜி வேகம் அவ்வளவு தான்இப்போது நீங்கள் வழக்கமான 4ஜிவேகத்தில் உலவ முடியும். 6ஜிபிபேக் மூலம்நீங்கள் ரூ.4 சேமிக்க முடியும், அதன் தரவு எல்லை தினமும்மறுகட்டமைக்கப்படும் மற்றும் இந்த பேக்28 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நமக்குத் தேவை புள்ளிவிவரம் மட்டுமே,வகுப்பறை அல்ல!

'நமதுவகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவர வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன. தேர்ச்சி விகிதம் எவ்வளவு, எத்தனைபேர் நூற்றுக்கு
நூறு, ஸ்டேட் ரேங்க்எத்தனை பேர், கடந்த வருடத்தைவிடஎத்தனை சதவிகிதம் அதிகத் தேர்ச்சி... எனஎண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.


இந்தப்புள்ளிவிவரப் பட்டியலில் முந்திச் செல்லும் பள்ளியை நோக்கி பெற்றோர்கள்ஓடுகின்றனர். ஒரு வகுப்பறை என்பது, புள்ளிவிவரங்களின் தொகுப்பு அல்ல; அது ஒருதலைமுறை தன் சிந்தனையை உருவாக்கிக்கொள்ளும்உயரிய இடம்.

அதற்குமனிதம் சார்ந்த வகுப்பறைகளே தேவை. அப்படி ஒரு வகுப்பறை இருந்தால்10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வுமுடிவுகள் வரும்போது இத்தனை வெற்றுக்கூச்சல்கள் கேட்காது.

உலகின்எந்த நாட்டிலும் பள்ளித் தேர்வு முடிவுகளின்போதுஇத்தனை ஆரவாரக் கூச்சல்கள் ஒலிக்காது.

 மாணவர்கள், இந்தப் புள்ளிவிவர வகுப்பறையைஅடியோடு வெறுக்கின்றனர். அதனால்தான் ஆண்டு இறுதித் தேர்வுமுடிந்ததும் புத்தகத்தைக் கிழித்து வீசுகிறார்கள்.

அந்த மனப்பான்மையே, அதன் பிறகு அவர்களிடம்புத்தக வாசிப்புப் பழக்கத்தையே அடியோடு ஒழிக்கிறது. ஆண்டுமுழுவதும் தன் மகிழ்ச்சியை, சுதந்திரத்தை, குழந்தைத்தன்மையைக் காவு வாங்கிய புத்தகத்தைஅவமதிக்கும் அந்தக் கணம், அவன்பழிவாங்கியவனைப்போல் உணர்கிறான்.


 இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டுநமது பாடத்திட்டத்தை, வகுப்பறைச் சூழலை மாற்றி அமைக்கவேண்டும். இல்லையெனில், யாரோ 10 மாணவர்கள் ரேங்க்வாங்கியது கொண்டாடப்படும் சத்தத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் மன அழுத்தம் கண்டுகொள்ளாமல்விடப்படும்!''

RMSA POSTS PAY ORDER FOR 6872 BT & 1590 PG POSTS FOR 3 MONTHS ( FROM JAN'17 TO MARCH'17)

13ம் தேதி வரை கிரெடிட், டெபிட் கார்டு ஏற்கப்படும்: பெட்ரோல் முகவர்கள் சங்கம்!!!

கிரெடிட், டெபிட் கார்டுகள் ஏற்கப்படாதுஎன்ற முடிவை பெட்ரோல்
முகவர்கள்சங்கம் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.

அதன்படி, ஜன., 13 ம் தேதி வரைகிரேடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்திபெட்ரோல், டீசல் பெறலாம்.

1 சதவீதவரி

ரூபாய்நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு பிறகுமத்திய அரசு ரொக்கமில்லா பரிவர்த்தனைஅதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. பெட்ரோல் பங்குகளில் வங்கி கிரெடிட், டெபிட்கார்டுகளை பயன்படுத்தினால் 0.75 சதவீதம் விலை குறைப்புஅளிக்கப்படும் என அறிவித்தது. இதற்கிடையே, ஹச்.டி.எப்.சி., ஆக்சிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்டசில வங்கிகள் பெட்ரோல் பங்குகளின் மின்னணு பரிவர்த்தனைக்கு 1 சதவீதவரியை விதித்தன. மேலும், அவர்களின் வங்கிகணக்கில் பணத்தை தாமாதமாக பரிமாற்றம்செய்தன. இதனால், தங்கள் வருமானம்பாதிக்கப்படுவதாக கூறிய பெட்ரோல் முகவர்கள்சங்கம் இன்று முதல் கிரெடிட், டெபிட் கார்டுகளை வாங்க மாட்டோம் எனஅறிவித்தது. இந்நிலையில், அந்த முடிவு தற்காலிகமாகஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முடிவுஒத்திவைப்பு

இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோலிய முகவர்கள் சங்க தலைவர், கே.பி.முரளி கூறியதாவது:

மின்னணுபரிவர்த்தனைக்கு விதிக்கப்படும் 1 சதவீத வரியால் பெட்ரோல்பங்கு முகவர்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பான, எங்கள்பிரச்னைகளை எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம்தெரிவித்தோம். அவர்கள் மத்திய அமைச்சருடன்பேசினார்கள். பின்னர், ஜன.,13 வரை 1 சதவீதவரி பிடித்தம் செய்யப்படாது என அவர்கள் உறுதிஅளித்துள்ளனர். அதை ஏற்று எங்கள்முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். ஜன.,13ம் தேதிவரை கார்டுகள் ஏற்கப்படும். அதற்குள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவுகாண முயற்சிப்போம். பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாவிட்டால் கிரெடிட், டெபிட் கார்டுகள் வாங்கமாட்டோம்.

இவ்வாறுஅவர் கூறினார்.

SERVICE REGISTER - ல் (SR) விடுபட்ட விபரங்களை பதிவு செய்வது போல் இதுவரை பதியப்பட்ட விபரங்களை சரிபார்பது மிகவும் முக்கியமானது

*பணிப்பதிவேட்டில் விடுபட்ட விபரங்களை பதிவு செய்வது போல் இதுவரை பதியப்பட்ட விபரங்களை சரிபார்பது மிகவும் முக்கியமானது*
பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ள பதிவுகளில் உள்ள
1. ந.க. எண் / தேதி
2. வரிசை எண்
3. பதிவு எண்
4. வழங்கப்பட்ட தேதி
5. தேர்ச்சி பெற்ற தேதி
6.பணியேற்ற தேதி மற்றும் மு.ப/பி.ப
7.விடுவித்த தேதி மற்றும் மு.ப/பி.ப
*மேற்கண்ட அனைத்தையும் உங்களிடம் உள்ள சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பது மிகவும் அவசியம் ஆகும்*
💥 அதே போல் துறை சார் அலுவலரின் கையொப்பம் முத்திரை இல்லாத பதிவுகளை சுட்டிக்காட்டவும்.
💥 வாரிசுதாரர் பெயர்களை பதிவு செய்யும் பொழுது பின்புறம் இரண்டு ஆசிரியர்களிடம் சாட்சிக் கையெழுத்து வாங்கிய பின் தங்களின் கையொப்பத்தையும் செய்யவும்.
💥 ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு பெற்றதற்கான பதிவுகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டுள்ளதா?
💥 பணி நியமனம் பெற்றது முதல் 31.12.2016 வரை பணிப்பதிவேடு சரிபார்த்தல் என்ற பதிவு தொடர்ச்சியாக உள்ளதா...?
💥 ஈட்டிய விடுப்பு கையிருப்பை கணக்கீடு செய்ததில் தவறுகள் ஏதேனும் உள்ளதா..? (365÷21.47=?)
💥 அதே போல் உயர் கல்வி பயின்ற அனைத்து படிப்பிற்கும் பட்டயச்சான்றினை (கான்வகேசன்) பதிவு செய்வது அவசியம் ஆகும்.
📡📡📡📡📡📡📡📡
🔴 *பணிப்பதிவேட்டினை சரிபார்ப்பதற்கான check list -ஐ கொண்டு சரிபார்க்கும் பொழுது*
10th, 12th,
DTEd,
UG degree,
PG degree,
B.Ed,
M.phill/M.Ed,
போன்ற சான்றிதழ்களின் நகல்கள் (அனைத்திற்கும் பட்டயச்சான்று அவசியம்)
*{ இதுவரை பதிவு செய்யாத கல்வித் தகுதியினை பதிவு செய்ய ஒரிஜினல் சான்றிதழையும், பதியப்பட்டதை சரிபார்க்க நகலினையும் கொண்டுசெல்லவும் }*
🔴 துறை தேர்வு தேர்ச்சி பெற்ற ஆணை,
🔴 CPS / TPF எண்,
🔴 துறை முன் அனுமதி /பின் அனுமதி,
🔴 உண்மைத்தன்மை சான்றிதழ்கள்,
🔴 பணியேற்பு ஆணை,
பணிவிடுப்பு ஆணை,

8/1/17

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக பா.வளர்மதி நியமனம்

RTI - CPS-ல் செலுத்திய தொகையினை வரம்பைத்தாண்டி 80CCD(1B)-ல் கூடுதலாகவும் கழிக்கலாம்!

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு தீவிரம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 100க்கும் மேற்பட்ட தலைமைஆசிரியர் பணியிடங்கள், வரும் கல்வி ஆண்டில்காலியாக உள்ளன. இவற்றை
பதவிஉயர்வு மூலம் நிரப்புவதற்கு, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, நேரடி நியமனத்தில் வந்த ஆசிரியர்கள் மற்றும்ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுசெய்யப்பட்ட ஆசிரியர்கள் என, இரண்டு பட்டியல்தயாரிக்கப்படுகிறது. எனவே, விதிகளின்படி பணிமூப்புவிபரங்களை, வரும், 30க்குள், பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்குஅனுப்ப, மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


பட்டியல்தயாரிப்பு பணியில் விதிமீறல்கள், பிழைகள்ஏற்படக் கூடாது எனவும், சி.இ.ஓ.,க்கள்எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டங்களில் இருந்து வரும் பெயர்விபரங்களை, தலைமை அலுவலக ஆவணங்களுடன்ஒப்பிட்டு, பதவி உயர்வுக்கான தோராயபட்டியல், மூன்று மாதங்களில் இறுதிசெய்யப்படும். மார்ச் இறுதியில், இறுதிபட்டியல் தயாராகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதிப்பெண் சான்றிதழில் ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை; இணை இயக்குனர் எச்சரிக்கை!!!

‘பத்தாம்வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்மதிப்பெண் சான்றிதழ்களில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள்மீது நடவடிக்கை
எடுக்கப்படும்,‘ என தேர்வுத் துறைதுணை lஇணை இயக்குனர் அமுதவல்லிஎச்சரித்தார்.

மாவட்டத்தில்அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பொதுத் தேர்வு தொடர்பானஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோஇருதயசாமி தலைமை வகித்தார்.

இதில் அமுதவல்லி பேசியதாவது:

பொதுத்தேர்வில் மாணவர் பட்டியல் (நாமினல்ரோல்) தயாரித்து தேர்வுக்கு முன் அடித்தல், திருத்தல், சேர்த்தல் பணி நடக்கும். இந்தாண்டுமுதல் மாணவர் பெயர்களை தலைமையாசிரியர்தன்னிச்சையாக நீக்க முடியாது. அதற்கான’ஆப்சன்’ ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல்கடைசி வாய்ப்பிற்கு பின் மாணவர்களின் மதிப்பெண்சான்றிதழில் திருத்தம் செய்ய முடியாது. எனவேபெயர், பிறந்த தேதி உட்படஅனைத்து விவரங்களையும் கவனமாக பதிவு செய்யவேண்டும். அதற்கு பின்னரும் தவறுஏற்பட்டால் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும். மாவட்டத்தில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில்மாவட்ட கல்வி அலுவலர்கள் லோகநாதன், ரேணுகா, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் அனந்தராமன், அதிராமசுப்பு மற்றும் 196 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். 

இரண்டு சிலிண்டர் வைத்திருந்தால் ரேஷனில் அரிசி இல்லை : விரைவில் அறிவிக்க தமிழக அரசு திட்டம்

கார், பைக், ஏசி, 2 சிலிண்டர்கள்வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் அரிசியை ரத்துசெய்ய தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இதனால் 1.20
கோடி கார்டுதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள 33, 973 ரேஷன் கடைகள் மூலம்இலவச அரிசி, குறைந்த விலையில்துவரம், உளுந்தம் பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் உணவுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த பொருட்கள்இனி மானிய விலையில் கிடைப்பதுபடிப்படியாக நிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மத்தியஅரசு நாடு முழுவதும் உணவுப்பாதுகாப்புசட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டியது. ஜெயலலிதாமுதல்வராக இருந்தபோது அத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ஜெயலலிதா உயிருடன்இருந்தபோது மக்கள் நலனுக்கு எதிரானமத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்புதெரிவித்தார். அந்த வகையில் உணவுபாதுகாப்பு திட்டமும் ஒன்று.
ஓபிஎஸ்ஆதரவு: ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எந்தெந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தாரோ, அந்த திட்டங்களுக்கு எல்லாம்ஓபிஎஸ் தலைமையிலான அரசு தற்போது மறைமுகமாகஆதரித்து வருகிறது. அந்த வகையில் தற்போதுமத்திய அரசின் உணவுப் பாதுகாப்புதிட்டத்தில் இணைந்துள்ளது. மத்திய அரசின் உணவுப்பாதுகாப்பு திட்டப்படி, குடும்பத்தில் நபர் ஒருவருக்கு தலா5 கிலோ அரிசி வழங்க வேண்டும். இதுவரை ஒரு குடும்பத்தில் எத்தனைபேர் இருந்தாலும் 20 கிலோ அரிசி மட்டுமேவழங்கப்பட்டது. ஆனால் உணவு பாதுகாப்புச்சட்டப்படி ஒரு குடும்பத்தில் 6 பேர்இருந்தால் அவர்களுக்கு 30 கிலோ அரிசி வழங்கவேண்டும். இதனால் வழக்கத்தைவிட கூடுதலானஅரிசி கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம்தமிழக அரசுக்கு ஏற்பட்டது.
மக்களைகடனாளியாக்கும் முடிவு: தமிழகத்தில் வறுமைகோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்அரிசியின் விலையை மத்திய அரசுஉயர்த்தியது. அதன்படி ஒரு கிலோரூ.8.30ல் இருந்து ரூ.21.40 ஆக அதிகரிக்கப்பட்டது. திடீரென இருமடங்கு விலைஉயர்த்தப்பட்டதால் தமிழக அரசுக்கு நிதிச்சுமைமேலும் அதிகரித்தது. தற்போது அரிசிக்காக மட்டும்தமிழக அரசு சுமார் ரூ.2,700 கோடி செலவிடுகிறது. இந்த விலையில், அரிசிவழங்குவதால் ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் தமிழகத்தில் 60 சதவீதகுடும்ப அட்டைத்தாரர்களுக்கு அரிசியை ரத்து செய்யஅரசு முடிவு செய்துள்ளதாக பகீர்தகவல் வெளியாகி உள்ளது.
யார் யாருக்கு அரிசி கிடைக்காது ரேஷன்கடைஊழியர்கள் கூறியதாவது: ஒரு வீட்டில் 2 சிலிண்டர்கள், கார், பைக், ஏசி வைத்திருப்பவர்களுக்குரேஷன் அரிசியை ரத்து செய்யஅரசு முடிவு செய்துள்ளது. இதற்காகஉணவுப்பொருள் வழங்கல்துறை ரகசிய சர்வே நடத்திஉள்ளது. அதில் கிடைத்துள்ள பட்டியலைவைத்து ரேஷன் கார்டை என்பிஎச்எச்(non priority house holder), பிஎச்எச்(poor house holder) என 2 பிரிவுகளாக பிரித்துள்ளனர். சிலிண்டர், ஏசி, பைக், கார்வைத்திருப்பவர்கள் என்எச்எச் பிரிவிலும், எதுவும் இல்லாதவர்கள் பிஎச்எச்பிரிவிலும் சேர்க்கப்படுவார்கள். இதற்காக 3 படிவங்கள் தயாரித்து அதை எங்களிடம் வழங்கிவீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும்படிரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
முதல் படிவத்தில், குடும்பத்தில் உள்ளவர்களில் யார், யாரெல்லாம் ஆதார்கார்டு வாங்கி உள்ளனர் என்றவிவரமும், 2வது படிவத்தில் வீட்டில்ஏசி, கார், பைக், 2 சிலிண்டர்உள்ளதா என்ற விவரமும், 3வதுபடிவத்தில் இதுவரை ஆதார் கார்டுவாங்காத நபர்கள் அவர்களின் முகவரில்வசித்து வருகின்றனரா என்ற விவரமும் பதிவுசெய்யப்படுகிறது. கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் மிகரகசியமாகவும், மறைமுகமாகவும் நடக்கிறது. கணக்கெடுப்பின் இறுதியில் கார், பைக், ஏசி, 2 சிலிண்டர் வைத்திருக்கும் குடும்பத்தினரை NPHல் இணைத்து அவர்களுக்குஅரிசியை ரத்து செய்ய அரசுமுடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள2 கோடி அட்டைத் தாரர்களில் சுமார்1.20 கோடி கார்டுகளுக்கு அரிசியை ரத்து செய்யஅரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
சென்னையில்  12 லட்சம்பேருக்கு அரிசி ‘கட்’

தமிழகத்தில்முதல்கட்டமாக சென்னையில் இப்பணிகள் வேகமாக நடக்கிறது. சென்னையில்உள்ள 20 லட்சம் ரேஷன் கார்டுகளில்60 சதவீதம்(12 லட்சம்) கார்டுகளுக்கு அரிசிரத்தாகும் என தெரிகிறது. அரசின்இந்த நடவடிக்கையால் நடுத்தர மக்கள் கடுமையாகபாதிக்கப்படுவார்கள் என்றனர். 

கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி

தமிழகம்முழுவதும் கிராமப்புற மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்குள் புதைந்து கிடக்கும்
வித்தியாசமான கண்ணோட்டத்தை செயல்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்மூலம் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

இதில் ஒவ்வொரு அரசு பள்ளியில்இருந்தும் 2 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். எளியபொருட்களை வைத்து அறிவியல் உருவாக்கங்களைசெய்து காண்பிக்க வேண்டும். முதல் 3 இடங்களை பெறும்அணிக்கு தலா 1,500, 1,000, 500 பரிசு வழங்கப்படும். ஒவ்வொருமாவட்டத்திலும் இதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு

தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும்சிறுபான்மையினர் விடுதிகள் உள்ளன. இவற்றில்,
தங்கிபடிக்கும், மாணவ, மாணவியர், 10ம்வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 100 மதிப்பெண்கள் எடுத்தால், அவர்களுக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்என, சட்டசபையில் அமைச்சர் அறிவித்தார்.அதன்படி, ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 100 மதிப்பெண்கள் எடுக்கும்மாணவ, மாணவியருக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, அரசு உத்தரவிட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பை மாணவ, மாணவியர், பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

CPS : மீண்டும் போராட்ட களத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் !!

தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தமுடிவு செய்துள்ளனர். இதற்காகவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்சங்கங்களின்
கூட்டு நடவடிக்கை குழுமீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்மாநில மாநாடு இந்த மாதம்6-ம் தேதி முதல் 8-ம்வரை திருவண்ணாமலையில் நடக்கிறது.


மாநாட்டுக்குதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்மாநிலத் தலைவர் தமிழ்செல்வி தலைமைதாங்கினார். மாநாட்டை முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தொடங்கி வைத்தார். தமிழ்நாடுதலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர்கணேசன் முன்னிலை வகித்தார். அகில இந்திய மாநிலஅரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் வாழ்த்துரை வழங்கினார்.
மாநாட்டில்இதுவரை 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வரும்8-ம் தேதி ஒரு லட்சம்அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது.

 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் மோசஸ்,

 வணிகவரித்துறை சங்கத்தின் தலைவர் ஜனார்த்தனன் உள்படபலர் கலந்து கொண்டனர்.


மாநாடுகுறித்து தமிழ்செல்வி கூறுகையில், "அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்ப்பதில்லை. புதியபென்சன் திட்டத்தை அரசு ரத்து செய்யவேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி10-ம் தேதி முதல் 19-ம்தேதி வரை வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டோம்.

 இதற்கிடையில் சட்டசபையில் 110 விதிகளின் கீழ் தொகுதிப்பூதியம், மதிப்பூதியம்ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். பென்சன் திட்டத்துக்கு வல்லுநர்குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார் அப்போதையமுதல்வர் ஜெயலலிதா. அதில் 8 அறிவிப்புக்கு அரசாணைவெளியிடப்பட்டு விட்டது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியப்போக்குகாரணமாக சில அரசாணைகள் நிறைவேற்றப்படவில்லை.

தற்போதுசங்கத்தின் 12-வது மாநில மாநாடுதிருவண்ணாமலையில் நடந்து வருகிறது. இந்தமாநாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குபொங்கல் போனஸ் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்து விட்டு பழைய பென்சன்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதிய ஊதியக்குழுவை அமைக்கவேண்டும். அரசுத் துறைகளில் உள்ளகாலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தைவறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்குரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு(JACTO-GEO) என்ற அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின்தலைவர் கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டத்தில்ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அரசு ஊழியர்கள் வட்டாரங்கள் கூறுகையில், "ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்துஅ.தி.மு.க அரசு இருந்துவருகிறது. அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில்காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், புதிய பென்சன் திட்டம்ரத்து செய்யப்படும், மத்திய அரசு ஊழியர்களுக்குஊதிய மாற்றம் ஏற்படும் போதுதமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதியமாற்றம் ஏற்படுத்தப்படும். சத்துணவு, அங்கன்வாடியில் கடந்த 25 ஆண்டுகளாக தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். கருணை அடிப்படையில் பணியில் சேருபவர்களுக்காக விதிகள்தளர்த்தப்படும். அரசு ஊழியர்கள் சங்கநிர்வாகிகளிடம் அவ்வப்போது கலந்து ஆலோசிக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டபல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால்தான் கடந்த பிப்ரவரியில் அரசுக்குஎதிராக போராட்டத்தில் குதித்தோம். அப்போது நிதியமைச்சராக இருந்தஓ.பன்னீர்செல்வம், சங்கநிர்வாகிகளிடம் 9.2.2016ல் 2 மணி நேரம்சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஜெயலலிதாவிடம்சொல்லி அரசு ஊழியர்களின் கோரிக்கைகள்நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. தற்போதுஓ.பன்னீர்செல்வம் முதல்வராகஇருக்கிறார். இப்போது அவர் யாரிடமும்கேட்க வேண்டிய அவசியமில்லை. புதியபென்சன் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டவல்லுநர் குழு சங்க நிர்வாகிகளிடம்கலந்து ஆலோசித்தப் பிறகும் எந்த அறிவிப்பும்வெளியிடப்படவில்லை. முதல்வரையும், அமைச்சர்களையும் குறைச் சொல்வதைவிட சம்பந்தப்பட்டஅதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர். குறிப்பாக நிதித்துறை, நிர்வாகம், பணியாளர் சீர்திருத்தத்துறையில் உள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால்அறிவிக்கப்பட்ட அரசாணைகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. குறிப்பாக நிதித்துறையைசநிதித்துறையை சாராத பதவி உயர்வு, சீனியாரிட்டி, பணிவரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. இதனால் லட்சக்கணக்கானஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிறைவேற்றவில்லைஎன்றால் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுபோராட்ட காலங்களில் ஏற்படுத்தப்படும். அந்த அமைப்பு இப்போதும்ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

பி.எஃப். பயனாளிகள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயம்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) கீழ் பயன்பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களும், சந்தாதாரர்களும், தங்களுக்கு கிடைக்கும் சேவைகள் தொடர்வதற்கு தங்களது ஆதார் அடையாள எண்ணை இந்த மாத இறுதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று இபிஎஃப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இபிஎஃப்ஓ அமைப்பின் ஆணையர் வி.பி.ஜாய், தில்லியில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இபிஎஃப்ஓ அமைப்பின் சேவைகளைத் தொடர்ந்து பெற வேண்டுமெனில் அனைத்து ஓய்வூதியதாரர்களும், சந்தாதாரர்களும் வரும் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண் அல்லது ஆதார் எண் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள படிவத்தின் நகலை அளிக்க வேண்டும். இந்த மாத இறுதிக்குப் பிறகு சூழலைப் பொறுத்து, கால அவகாசம் நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
நாடு முழுவதும் 50 லட்சம் ஓய்வூதியதாரர்களும், 4 கோடி சந்தாதாரர்களும் உள்ளனர்.
இந்நிலையில், ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது குறித்து நாடு மழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று 120 மண்டல அலுவலகங்களுக்கு இபிஎஃப்ஓ அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

TRB:உதவிப் பேராசிரியர் நேரடி நியமன எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு!

அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்துக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.
இதில் தகுதி பெற்றவர்களுக்கு வருகிற 19,20 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. அரசுப் பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 192 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நியமனம் செய்வதற்கான அறிவிப்பை கடந்த 2014 ஆம் ஆண்டு டிஆர்பிவெளியிட்டது. அந்த அறிவிப்பில், வயது உச்சவரம்பில் எழுந்த சிக்கல் காரணமாக, இந்தப் பணியாளர் தேர்வுப் பணிநிறுத்திவைக்கப்பட்டது.அதன் பிறகு வயது உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டது.

விண்ணப்பதாரருக்கான அதிகபட்ச வயது 57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அறிவிப்பு வெளியிட்டு, கடந்த 22-10-2016 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.மொத்தம் 48,286 பேர் விண்ணப்பித்ததில் 27,635 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.இந்தத் தேர்வுக்கான முடிவு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுதிய அனைவருக்குமான முடிவுகள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதனுடன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதகுதிவாய்ந்தவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.ஒரு இடத்துக்கு இருவர் என்ற அடிப்படையில் தகுதிவாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

சான்றிதழ் சரிபார்ப்பானது செனனை கிழக்கு தாம்பரத்தில் பாரத் மாதா சாலையில் அமைந்துள்ள ஜெய் கோபால் கரோடியா தேசிய உயர்நிலைப் பள்ளியில் வருகிற 19, 20 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.இதற்கான அழைப்புக் கடிதத்தை டிஆர்பி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அழைப்புக் கடிதம் தனியார் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலையில் சும்மா இருக்கும் 1,080 பேர்

அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், அண்ணாமலை பல்கலையில், 1,080 பேராசிரியர்கள் வேலையே இல்லாமல், சம்பளம் பெறுவதாகவும், அதனால், மாதம், 20 கோடி ரூபாய் வீணாவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலை, 2013 முதல், தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கே சம்பளம் வழங்க முடியாமல், நிதி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், அரசின் நிதியில் நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதைய நிலையில், மாதம் தோறும், 50 கோடி ரூபாய் வரை, பேராசிரியர் கள், ஊழியர்கள் சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்கு ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, கூடுதலாக இருந்த பேராசிரியர்கள், 367 பேர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், பல்கலையின் பல்வேறு துறைகளில், 1,080 பேராசிரியர்கள் கூடுதலாக, வேலையின்றி இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல், பல்கலையின் பல்வேறு துறைகள் மற்றும் கல்லுாரிகளில், 4,722 ஊழியர்கள், கூடுதலாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களுக்காக, மாதம் தோறும், 19.52 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக, பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, உயர்கல்வித் துறை செயலர் கார்த்திக் தலைமையிலான குழு, ஆய்வு நடத்தி வருகிறது. விரைவில், சும்மா இருக்கும் பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர், மற்ற கல்லுாரிகளுக்கு மாற்றப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC., உறுப்பின நியமன ரத்து : உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்கள், 11 பேர் நியமனம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. பதவி இழந்த, 11 பேரும், மேல்முறையீடு செய்துள்ளனர்.
இம்மனுக்கள், நாளை, தலைமை நீதிபதி அடங்கிய, 'பெஞ்ச்' முன், விசாரணைக்கு வருகின்றன.

டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக, 11 பேரை நியமித்து, தமிழக அரசு, 2016 ஜனவரியில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., - எம்.பி.,யான இளங்கோவன், சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவை தலைவர், வழக்கறிஞர் கே.பாலு, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' 11 பேரது நியமனங்களையும் ரத்து செய்து, 2016 டிச., 22ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது; 11 பேரும், தனித்தனியாகவும் மேல்முறையீடு செய்துள்ளனர்.


மனு : இம்மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர், நீதிபதிகள் ரமணா, சந்திரசூட் அடங்கிய, 'பெஞ்ச்' முன், நாளை விசாரணைக்கு வருகின்றன. இளங்கோவன் தரப்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகிறார். தமிழக அரசு தரப்பிலும், 11 பேர் சார்பிலும், டில்லி மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்ய, உயர் நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரவரம்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள, இந்த பதவி யில் நியமிக்கப்பட்டவர்களை, ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி தான் நீக்க முடியும் என, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக, சட்டத்தில் எந்த விதிமுறையும் இல்லாத போது, விண்ணப்பங்களை வரவழைத்து தான் நியமிக்க வேண்டும் என்ற நடைமுறை தேவையா; மாவட்ட நீதிபதியாக இருந்தவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது என்பதற்காக, அவர் தகுதியற்றவராக அல்லது வேறு பதவிக்கு பொருத்தமற்ற

வராகி விடுவாரா என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.


'நோட்டீஸ்' : தற்போது, உறுப்பினர்கள் பதவி பெருமளவு காலியாக இருப்பதால், தேர்வாணையத்தின் செயல்பாடு, தேர்வு நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டி, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும் என, கோரப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்படுமா; உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்படுமா என்பது நாளை தெரிய வரும்.

கணினி தமிழ் விருது: காலக்கெடு நீட்டிப்பு

முதல்வர் கணினி தமிழ் விருதுக்கு, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சிக்காக, சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குவோரை ஊக்குவிக்க, 2013 முதல், 'முதல்வர் கணினி தமிழ் விருது' தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்படுகிறது. 
விருது பெறுவோருக்கு, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும். கடந்த ஆண்டுக்கான விருதுக்கு, டிச., 31 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஜன., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தில் காணலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 என்ற, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

CBSE, பிளஸ் 2 தேர்வு தள்ளிவைக்க ஆலோசனை

உத்தர பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், பிப்ரவரி முதல் மார்ச் 8 வரை, பல கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணியில், பள்ளி ஆசிரியர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவர்.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு, வழக்கமாக மார்ச், 1ம் தேதி துவங்கி ஏப்ரலில் முடியும்; தேர்வு முடிவுகள், மே, மூன்றாவது வாரத்தில் வெளியாகும்.

இப்போது, ஐந்து மாநில தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதால், பிளஸ் 2 தேர்வை, 10 நாட்கள் தள்ளி வைக்க, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. தேர்வுகளை, மார்ச் 12 முதல் துவக்கலாம் என ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் ஆசிரியர்கள் கூறுகையில், 'தேர்வை தள்ளி வைப்பதால் எந்த பிரச்னையும் ஏற்படாது. தேர்வு முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை. தேர்வுகளுக்கு இடையே உள்ள விடுமுறை நாட்களை குறைத்தால் போதும்; தாமதத்தை சரி செய்து

விடலாம்' என்றனர். அடுத்த வாரம், தேர்வு தேதியை,

சி.பி.எஸ்.இ., அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

How to know Annual income statement pay slip, pay drawn particulars?

Income Tax Form 2016-17 (தமிழில்)

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு தீவிரம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 100க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள், வரும் கல்வி ஆண்டில் காலியாக உள்ளன. இவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கு, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, நேரடி நியமனத்தில் வந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் என, இரண்டு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே, விதிகளின்படி பணிமூப்பு விபரங்களை, வரும், 30க்குள், பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பட்டியல் தயாரிப்பு பணியில் விதிமீறல்கள், பிழைகள் ஏற்படக் கூடாது எனவும், சி.இ.ஓ.,க்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டங்களில் இருந்து வரும் பெயர் விபரங்களை, தலைமை அலுவலக ஆவணங்களுடன் ஒப்பிட்டு, பதவி உயர்வுக்கான தோராய பட்டியல், மூன்று மாதங்களில் இறுதி செய்யப்படும். மார்ச் இறுதியில், இறுதி பட்டியல் தயாராகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

7/1/17

அனுமதியின்றி உயர் கல்வி; 3,000 ஆசிரியர்களுக்கு சிக்கல்

தமிழக அரசு பணியில் சேர்ந்தோர், உயர் கல்வி படிப்பது, வெளிநாடுகள் செல்வது, சொத்து வாங்குவது என, ஒவ்வொன்றுக்கும், உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். இதன்படி, பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியராக சேருவோர், முதுநிலை பட்டம், ஆராய்ச்சி படிப்பு போன்றவற்றை படிக்க, அரசு அனுமதி பெற வேண்டும். 


தொடக்க கல்வித்துறையில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், உயர் அதிகாரிகளின் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்து விட்டு, தற்போது ஊக்க ஊதியம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. 2009 வரை, அனுமதியின்றி உயர் கல்வி முடித்தோருக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், பின்னேற்பு அனுமதி அளித்தனர். 

அதிகாரத்தை பயன்படுத்தி பல அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்ததால், 2009க்கு பின், இந்த பின்னேற்பு அனுமதி தரும் அதிகாரம், பள்ளிக்கல்வி செயலருக்கு வழங்கப்பட்டது. ஆனால், செயலர் இதுவரை, பின்னேற்பு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவனுக்கு, பள்ளிக்கல்வி செயலர் சபிதா உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

அதில், ’அனுமதி இன்றி உயர் கல்வி படித்தவர்கள் எத்தனை பேர்; அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்து, விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என, தெரிவித்துள்ளார். 

அதனால், அனுமதியின்றி உயர் கல்வி முடித்து, ஊக்க ஊதியத்திற்காக விண்ணப்பித்துள்ள, 3,000 ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள், விளக்கம் கேட்டு, ’நோட்டீஸ்’ அனுப்பி உள்ளனர். விளக்கம் வந்த ஒரு வாரத்தில், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

கற்றல் குறைபாடு; மாணவர்களுக்கு செயல்முறை தேர்வு அறிமுகம்!


கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் பட்டியலை துல்லியமாக கண்டறிய, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு செயல்முறைத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணக்குகளை போடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில், பின்தங்கி இருக்கும் மாணவர்கள், கற்றல் குறைபாடுள்ளவர்களாக பிரிக்கப்படுகின்றனர். 


’டிஸ்லெக்ஷியா’ - வாசித்தல் குறைபாடு, ’டிஸ்கிராபியா’- எழுதுவதில் குறைபாடு, ’டிஸ்கால்குளியா’ - கணக்கு போடுதல் குறைபாடு, ’டிஸ்பிராக்சியா’, ’டிஸ்பேசியா’ என ஐந்து வகையாக, கற்றல் குறைபாடுகள் உள்ளன. 

இவற்றில், வாசித்தல், எழுதுதல், மற்றும் கணக்கு போடுதல் தொடர்பான குறைபாடுகளே பெரும்பான்மையாக பள்ளி மாணவர்களுக்கு உள்ளது. இதனைக் கண்டறிந்து, அதற்கான பயிற்சி அளித்து, மாணவர்களை, மேம்படுத்தவே அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கற்றல் குறைபாடுள்ளவர்கள், மற்ற மாணவர்களை ஒப்பிடுகையில், ஓரளவு மட்டுமே கல்வியில் பின்தங்கி இருப்பவர்களாக துவக்கத்தில் காணப்படுவர். இதனை சரிசெய்யாமல் விடுவதால், அடுத்தடுத்த வகுப்புகளில், அவர்களின் கற்றல் திறன் மட்டுமின்றி சிந்திக்கும் திறனும் பாதிக்கப்படுகிறது. 

கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு, இக்குறைபாடுகளுக்கு போதியளவு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. ’ஆல்பாஸ்’ முறையினால், இவ்வாறு கற்றலில் பின்தங்கும் மாணவர்கள் குறித்தும் பெரிதானதொரு விழிப்புணர்வு இல்லை. இதனால், பொதுத் தேர்வு வகுப்புகளில், மாணவர்களுக்கு அடிப்படை வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன் இல்லாமல், தேர்ச்சி விகிதம் சரிந்தது. 

இக்குறைபாடுகளை துவக்கத்திலேயே கண்டறிந்து, அதற்கு முறையே பயிற்சி அளித்து, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, கல்வித்துறை பல்வேறு தேர்வுகளை, நடத்த துவங்கியது. மாணவர்களின், கல்வித்திறன் மட்டுமின்றி, பல்வேறு இணை செயல்பாடுகள் மூலம், அவர்களின் சிந்திக்கும் ஆற்றல் அளவிடப்படுகிறது. 

இந்த அளவுகளைக் கொண்டு, அம்மாணவர் கற்றல் குறைபாடுள்ளவரா என்பதை ஆசிரியர் பயிற்றுனர்கள் பதிவு செய்தனர்.ஒருங்கிணைந்த கோவை, அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்குட்பட்ட, 22 வட்டாரங்களில் கடந்த 2014-15 கல்வியாண்டில் 40, 2015-16 ல் 39, நடப்பு கல்வியாண்டில், 43 குழந்தைகளும், கற்றலில் பின்தங்கியவர்களாக உள்ளனர். 

மாவட்ட திட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், ”இதுவரை, ஆசிரியர் பயிற்றுனர்கள், மாணவர்களுக்கு அளித்த பயிற்சி அடிப்படையில், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்தனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக இதுவரை, கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் பட்டியல் தயார்படுத்தப்படவில்லை. 

ஒரு மாணவர் நுாறு சதவீதம் கற்றல் குறைபாடுள்ளவரா என்பதை துல்லியமாக கண்டறிய, ’சிறப்பு செயல்திறன் பயிற்சியை, கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் இதன்படி, குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

நடப்பு கல்வியாண்டுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வருமென கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில், மாணவர்களுக்கு எழுத்து தேர்வு, செயல்திறன் என பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகிறது, ” என்றார்.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்; ’இஸ்ரோ’ தகவல்

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஐந்து ஆண்டுகளில் இது நிறைவேறும்,” என, ’இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் முதுநிலை விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.


விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக்கில் தொழில்நுட்ப கண்காட்சியை துவக்கி வைத்த அவர் பேசியதாவது:

வெளிநாடுகளில் உடல் நலம், சுகாதாரம் குறித்து உயிரியல், ’நானோ’ அறிவியல் கண்டுபிடிப்புகள் நடந்து வருகின்றன. மந்தபுத்தி உள்ளவர்களுக்கு ’நியூரான்’ செலுத்தி சோதனை நடக்கிறது. 

அறிவியல் கண்டுபிடிப்புகள் சமூக ரீதியில் மாறி வருகின்றன. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் குச்சியில், ’சென்சார்’ கருவிகள் பொருத்தினால் துணை இல்லாமல் செல்லலாம். இந்த ’சென்சார்’ குறைந்த விலையில் சிங்கப்பூரில் கிடைக்கிறது. 

’இஸ்ரோ விண்வெளி வாரம்’ ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பரில் நடக்கிறது. அப்போது பள்ளி, கல்லுாரிகளில் ராக்கெட் தயாரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். 

இந்தியாவில் இருந்து மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்த 5 ஆண்டுகளில் இது நிறைவேறும், என்றார்.

nata | பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வு முறையில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜன., 2ல் துவங்கியது; பிப்., 2 நள்ளிரவு, 11:59 மணிக்கு முடிகிறது. மார்ச் 26ல், ஹால் டிக்கெட் வெளியிடப்படும். ஜூன் 10ல், தேர்வு முடிவு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


DEE PROCEEDINGS- தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெங்களூரில் RIESI ஆல் 16/1/17 முதல் 14/2/17 வரை பயிற்சி அளித்தல் - கலந்துகொள்ளும் ஆசிரியர் விவரம் கோருதல் சார்பு

DSE PROCEEDINGS- DETAILS CALLED FOR PTA LEADERS LIST - REG

தொடக்கக்கல்வி செயல்முறைகள் நாள்:06/01/2017 - ஆசிரியர்களின் ஊதியம், பணப்பலன்கள், பணிப்பதிவேடு உள்ளிட்ட கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - AEEO களுக்கு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்(பழைய பதிவுகள் ஏதேனும் விடுபட்டு இருப்பின் தற்போது உள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலரே ஆவணங்களை சரிபார்த்து பதிவுகளை மேற்கொள்ளலாம்)



பேச்சு நடத்த அமைச்சரை அழைத்த ஆசிரியர்கள் கைது

Image may contain: text

TRB - அரசுப் பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நேரடி நியமன எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு. (நாள்:06.01.2017)

📝 அரசு பொறியியல்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நேரடிநியமனத்துக்கு
நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளை ஆசிரியர்தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.
📝 இதில் தகுதிபெற்றவர்களுக்கு வருகிற 19,20 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது.

📝 அரசுப் பொறியியல்கல்லூரிகளில் காலியாக இருந்த 192 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு நியமனம் செய்வதற்கான அறிவிப்பைகடந்த 2014 ஆம் ஆண்டு டிஆர்பிவெளியிட்டது.

📝 அந்த அறிவிப்பில், வயது உச்சவரம்பில் எழுந்த சிக்கல் காரணமாக, இந்தப் பணியாளர் தேர்வுப் பணி நிறுத்திவைக்கப்பட்டது.

📝 அதன் பிறகுவயது உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டது.

📝 விண்ணப்பதாரருக்கான அதிகபட்சவயது 57 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

📝 பின்னர் மீண்டும்அறிவிப்பு வெளியிட்டு, கடந்த 22-10-2016 அன்று எழுத்துத் தேர்வுநடத்தப்பட்டது.

📝 மொத்தம் 48,286 பேர்விண்ணப்பித்ததில் 27,635 பேர் பங்கேற்று தேர்வுஎழுதினர்.

📝 இந்தத் தேர்வுக்கானமுடிவு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

📝 தேர்வு எழுதியஅனைவருக்குமான முடிவுகள் டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

📝 அதனுடன் சான்றிதழ்சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள தகுதிவாய்ந்தவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

📝 ஒரு இடத்துக்குஇருவர் என்ற அடிப்படையில் தகுதிவாய்ந்தவர்கள்தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

📝 சான்றிதழ் சரிபார்ப்பானதுசெனனை கிழக்கு தாம்பரத்தில் பாரத்மாதா சாலையில் அமைந்துள்ள ஜெய் கோபால் கரோடியாதேசிய உயர்நிலைப் பள்ளியில் வருகிற 19, 20 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

📝 இதற்கான அழைப்புக்கடிதத்தை டிஆர்பி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்செய்துகொள்ள வேண்டும்.


📝 அழைப்புக் கடிதம்தனியார் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு இ - சேவை மையங்களில், இலவச அடையாள அட்டை !!

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு, அரசு இ - சேவை மையங்களில், இலவச அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக, 15.04 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ஜன., 
25க்கு பின் வழங்கப்படும். தற்போதே அடையாள அட்டை பெற விரும்புவோர், அரசு இ - சேவை மையங்களுக்கு சென்று, 25 ரூபாய் கட்டணம் செலுத்தி, பெற்றுக் கொள்ளலாம். புதிய வாக்காளர்களுக்கு, அடையாள அட்டை வழங்குவதற்காக, புதிய மென்பொருள் தயார் செய்துள்ளோம். இதன்மூலம், புதிய வாக்காளர்களுக்கு, ஜன., 25க்கு பின், அவர்களின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும். அந்த எண்ணை, அரசு இ - சேவை மையங்களில் காண்பித்து, இலவசமாக அடையாள அட்டையை பெறலாம். புதிய அடையாள அட்டை வந்து சேரவில்லை என்ற புகாரை தவிர்க்க, இந்த ஏற்பாட்டை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னை முதலிடம்! : வாக்காளர் எண்ணிக்கையில், சென்னை முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில், 20.07 லட்சம் ஆண்கள்; 20.51 லட்சம் பெண்கள் என, மொத்தம், 40.58 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெற்றுள்ளன.
அரியலுார் மாவட்டத்தில், மிகக்குறைந்த வாக்காளர்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில், 2.49 லட்சம் ஆண்கள்; 2.51 லட்சம் பெண்கள் என, மொத்தம், ஐந்து லட்சம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். 

டி.இ.ஓ., பதவிக்கான நேர்காணல், வரும், 19ல் !!

டி.இ.ஓ., பதவிக்கான நேர்காணல், வரும், 19ல் நடக்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்ட கல்வி அலுவலரான, டி.இ.ஓ., 
பதவிக்கான, 11 காலியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு, 2015 ஆகஸ்டில் நடந்தது; 2,432 பேர் பங்கேற்றனர். மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில், தேர்வான, 30 பேருக்கு நேர்காணல், வரும், 19ல், சென்னை, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கும்.

வேலை இல்லையா ?? மாதம் ரூ.40 ஆயிரம் உதவித்தொகை !

பின்லாந்து நாட்டில், வேலை இல்லாதவர்களுக்கு, மாதந்தோறும், 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென, அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில்ஒன்றான பின்லாந்தில், தனியார் துறையில் பணிபுரி வோர், சராசரியாக மாதந்தோறும், 2.50 லட்சம் ரூபாய் 
சம்பாதிக்கின்றனர். இந்நிலையில், நாட்டில் வறுமையை ஒழிக்கும் வகையில், வேலை இல்லாத, 2,000 பேருக்கு, மாதத்திற்கு, 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென, அந்நாட்டு அரசுஅறிவித்துள்ளது.

’சோதனை முறையில், இரு ஆண்டுகளுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படும். முதற்கட்டமாக, 2,000 பேர், இதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். உதவித்தொகை பெறுவோர், செலவுக்கான ஆதாரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை’என, பின்லாந்து அரசு அறிவித்துள்ளது.

இதே போல், சுவிட்சர்லாந்து நாட்டு அரசு, உதவித்தொகை வழங்குவதாக அறிவித்த போது, ’வேலை கொடுத்தால் போதும்; உதவித்தொகை தேவையில்லை’ என, அந்நாட்டு மக்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.

ஜி.எஸ்.டி. இணையதளத்தில் தமிழக வணிகர்கள் அனைவரும் பெயர் பதிவு செய்ய வேண்டும்; அரசு அறிவிப்பு!!!

ஜி.எஸ்.டி. இணையதளத்தில் தமிழக வணிகர்கள் அனைவரும் பெயர் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக வணிகவரி கமி‌ஷனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;–அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி.



நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விரைவில் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதளம் மற்றும் மென்பொருளை உருவாக்கும் பணியை சரக்கு மற்றும் சேவை கட்டமைப்பு (ஜி.எஸ்.டிஎன்.) நிறுவனம் மேற்கொண்டுள்ளது.இந்த நிறுவனம் ஜி.எஸ்.டி. தொடர்பாக www.gst.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. தமிழ்நாட்டில் வரி செலுத்துவோர் அடையாள எண் (டி.ஐ.என்.) பதிவு பெற்ற அனைத்து வணிகர்களும் இந்த இணைய தளத்தில் பதிவு செய்யவேண்டும். 1.1.2017 முதல் இந்த பதிவை வணிகர்கள் மேற்கொள்ளலாம்.இந்த இணைய தளத்தில் பதிவு செய்ய தற்காலிக ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு, வணிகர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் வணிகவரித்துறை இணையதளம் https://ctd.tn.gov.in மூலமாக வழங்கப்படும்.முகாம்கள் நடக்கும்

தற்காலிக ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு பெற்றவுடன் ஜி.எஸ்.டி. இணையதளத்தை உபயோகப்படுத்தி இந்த பதிவை பூர்த்தி செய்ய வணிகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஜி.எஸ்.டி. பதிவை பூர்த்தி செய்ய https://ctd.tn.gov.in இணையத்தில் உள்ள உதவி கோப்பை (ஹெல்ப் பைல்) பயன்படுத்திக் கொள்ளலாம்.வணிகவரித்துறையின் சார்பில் மாநிலத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட உள்ளது. அனைத்து வணிகர்களும் ஜி.எஸ்.டி. இணைய தளத்தில் பதிவு பெற இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இந்த முகாம்களின் விவரம் வணிகர்களுடைய வரிவிதிப்பு வட்டங்களில் தெரிந்து கொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

6/1/17

110 GROUP-க்கு ADMIN! வாட்ஸ் அப்பில் கலக்கும் ஆசிரியர்.. கவனிக்கும் கல்வி அமைச்சர்!

வாட்ஸ்அப்பில் என்னவெல்லாம் செய்யலாம்? காலை எழுந்தவுடன்குட்மார்னிங், இரவு ஆனவுடன் குட்நைட் மெசேஜ்போட்டுக் ‘கடமை’யாற்றலாம். நமக்குவந்த பழையஃபார்வர்ட் மெசேஜ்களையே நாமும் ஃபார்வர்ட் செய்து, படிப்பவர்களை டரியல் ஆக்கலாம். இன்னும் மீம்ஸ், அதிசயச் செய்திகள், அரசியல் கிண்டல்கள்என அத்தனையும்பகிரலாம். ‘வாட்ஸ்அப் என்பது வெறுமனே பொழுதுபோக்கமட்டுமல்ல; மற்றவர்களுக்கு உதவவும்கூட’ என்பதற்கு சென்னைப்
பெருவெள்ளத்தின்போது நடந்த சேவைகளேசாட்சி.



 ‘வாட்ஸ்அப்’பைஉருப்படியாகவும் பயன்படுத்த முடியும் என்பதற்கு இன்னுமொருஉதாரணம் விழுப்புரம்மாவட்டம் தியாகதுருக்கம்பக்கம் உள்ளஉதயமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் முரளிதரன். அரசுப்பள்ளியில் பணிபுரியும்ஆசிரியரான முரளிதரன்நூற்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குரூப்பின் மூலம்முனைப்பும், ஆர்வமும் உள்ள  ஆசிரியர்களைஇணைத்து அரசுபள்ளி ஆசிரியர்களிடையேபுதிய கற்றலைஅறிமுகப்படுத்தி வருகிறார் .

இவர் ஒன்றாம் வகுப்பில்இருந்து பன்னிரண்டாம்வகுப்பு வரைஉள்ள ஒவ்வொருபாடத்துக்கும் ஒரு வாட்ஸ்அப் குரூப்பையும், மாணவர்களுக்குமருத்துவம் மற்றும் இதர நுழைவுத் தேர்வுகளுக்குதயார் செய்யும்வகையில் போட்டித்தேர்வுகளுக்குஎன்று இரண்டுவாட்ஸ்அப் குரூப்பையும், பள்ளி குழந்தைகளுக்குநீதிக்கதைகளை சொல்லிக் கொடுக்க இரண்டு குரூப்கள், மாணவர்களின் கல்வி செயல்பாட்டுக்கு ஒரு குழு, முதல் உதவிக்குமருத்துவத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு குழு, ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதலுக்கு எட்டு குழுக்கள், ஆசிரியர்களுக்கான அரசாணைகளைத் தெரிவிப்பதற்குஒரு குழு, பொதுவான தகவல்களைப்பதிவு செய்வதற்குஎன்று பதிமூன்றுகுழுக்கள், ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு குழுஎன்று மொத்தம்110 வாட்ஸ்அப் குரூப்புகளை வைத்திருக்கிறார்.  இந்த குரூப்பில் தமிழகபள்ளி கல்விஅமைச்சர் மாபாபாண்டியராஜனும் இணைந்து ஆசிரியர்கள் என்னென்ன விஷயங்கள்விவாதித்து வருகிறார்கள் என்று சத்தம் இல்லாமல்கவனித்து வருகிறார்என்பது தான்சிறப்பு.

அமைச்சரைத் தவிர மாவட்டஅளவிலும், மாநிலஅளவிலும் உள்ளகல்வித் துறைஅதிகாரிகளும் இவரது வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கிறார்கள்.

“தமிழ்நாட்டில் ஏதாவது பள்ளியில்ஒரு ஆசிரியர்  வித்தியாசமானமுறையில் சொல்லிக்கொடுத்தாலும் அந்த விஷயம் அடுத்த நாளேதமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி் ஆசிரியர்களும்போய் விடுகிறது. இதன் மூலம்தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதியகற்பித்தல் முறையும், தொலைநுட்ப பயன்பாடும் அதிகரித்துவருகிறது.

வாட்ஸ்அப் மூலம் ஆசிரியர்களைஇணைத்து புதியகற்றலுக்கு எப்படி உதவி வருகிறேன் என்பதைஅமைச்சர் கலந்துகொண்டகூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் சொன்னார்கள். கற்றலுக்குஉதவும் இந்தமுறை அமைச்சருக்குப்பிடித்துப் போய் ‘சமூக வலைத்தளங்களை இதுபோல்கல்விக்கு நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும்’ என்றுபாராட்டி அடுத்தநாளே எங்களுடையஇரண்டு வாட்ஸ்அப்குழுவில் இணைத்துக்கொண்டார். இது எங்களுக்குகூடுதல் மகிழ்ச்சியும்பொறுப்பையும் கூட்டியது. இவரைத் தவிர கல்வித்துறையில் உயர்அதிகாரிகள் பலரும் எங்களது குழுவில் இணைந்திருக்கிறார்கள்என்பது எங்கள்வாட்ஸ்அப் குழுக்களுக்குப்பலம்" என்கிறார் முரளிதரன்.

 வாட்ஸ்அப்  மூலம் கற்க வைக்கும் ஆசிரியர் முரளிதரன்ஆசிரியர் வேலையைவிட வாட்ஸ்அப்குரூப்பை நிர்வாகிக்கவேஉங்களுக்கு நேரம் சரியாக இருக்குமே? எப்படிசமாளிக்கிறீர்கள்? 

“வகுப்பு நேரத்தில் வாட்ஸ்அப்பைப்பார்ப்பதே இல்லை. பாடம் நடத்தும்போது வாட்ஸ்அப்பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது என்பதற்காகவே காலை9.30 மணி முதல்  மாலை4.30 மணி வரைஎந்தத் தகவலும்பகிர்ந்துக்கொள்ளக்கூடாது என்பதை முக்கியவிதிமுறைகளில் ஒன்றாக வைத்திருக்கிறோம்.

இதைப்போலவே, ஒவ்வொரு பாடத்துக்குஎன்று உள்ளகுரூப்பில் பாடம் சார்ந்த விஷயங்களை மட்டுமேவிவாதிக்க வேண்டும்என்ற தெளிவானநிபந்தனைகளோடு இந்தக் குழுக்கள் செயல்படுகின்றன. ஆகையால்வகுப்பு நேரத்தில்வாட்ஸ்அப்-க்குநோ சொல்லிவிடுகிறோம்.

குரூப்பில் காலை வணக்கம், மாலை வணக்கம்போன்ற பதிவுகளுக்குஇடமில்லை. தங்களுடையதனிப்பட்ட, பொதுக் கருத்துகளை எல்லாம் பதிவுசெய்வதற்கு என்று தனித்தனியே வாட்ஸ்அப் குரூப்புகள்இருக்கின்றன. அதில் பதிவு செய்யலாம் என்றுசொல்லி விடுகிறோம். இதனை எல்லாம்கடைப்பிடிக்காதவர்களைப் பட்டியலில் இருந்துஉடனே வெளியேற்றிவிடுகிறோம். புதியதாகக் குழுவில் இணைந்தவர்களை ஆரம்பத்தில்கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதன் பின்புகுழு இயங்கும்முறையையும் அதன் அடிப்படைக் கட்டுப்பாட்டையும் புரிந்துகொள்கிறார்கள். நானும்பள்ளியில் இருந்துவீட்டுக்கு வந்தவுடன் இரண்டு முதல் மூன்றுமணி நேரம்ஒதுக்கி குரூப்பில்என்னென்ன தகவல்களைப்பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதைக் கவனித்துஅதில் உள்ளதகவல்களை ஃபேஸ்புக்கிலும், இணையத்தளத்திலும் பகிர்ந்துக்கொள்கிறோம். இதன்மூலம் வாட்ஸ்அப்குரூப்புகள் வெற்றிகரமாக இயங்குகின்றன”.

இத்தனை குரூப்கள் மூலம்எதாவது சாதிக்கமுடிகிறதா?

“இந்தக் குழுக்கள் மூலம்தமிழகம் முழுவதும்உள்ள ஆசிரியர்கள்ஒருங்கிணைக்கப்பட்டு, கற்றல், கற்பித்தலில்புதிய உத்திகளையும்பாடப்பகுதிக்கான வினாத்தாள்கள், குறிப்புகள், விளக்கங்களையும் உடனுக்குடன் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த குரூப்பில்பகிரப்பட்ட 1300 கணித ஃபார்முலாக்கள் அடக்கிய தகவல்இன்றைக்கு 90% அரசு பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாட்ஸ்அப் தளத்தில் ஓர்ஆசிரியர் பயன்படுத்தியவித்தியாசமான அணுகுமுறைகளை அனைத்து ஆசிரியர்களும் கடைப்பிடித்துக்கற்றுக்கொடுப்பதை எளிமையாகச் செய்கிறார்கள். வாட்ஸ்அப்பில் நிறையதகவல்கள் பகிர்ந்துகொள்வதால்ஆசிரியர்கள் வீட்டுக்குச் சென்ற பிறகும் கற்றல்கற்பித்தல் செயல் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தகுரூப்பின் மூலம் ஆசிரியர்களும் மாணவர்களும் பெருமளவில்பயனடைகிறார்கள்” என்கிறார். 

தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்திஅரசு பள்ளியில்படிக்கும் மாணவர்களதுமுன்னேற்றத்துக்கு உதவும் ஆசிரியரைவாழ்த்துவோம்.
10 ரூபாய் நாணயம் செல்லுமா.. செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்
Published: January 4 2017, 7:56 [IST]
By: Shankar
மும்பை: 10 ரூபாய் போலி நாணயங்கள் புழக்கத்தில் வந்துவிட்டதால், அவற்றைச் செல்லாது என அறிவிக்கப் போவதாக எழுந்துள்ள வதந்திகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
அதில் 10 ரூபாய் நாணயங்களை ஒழிக்கும் திட்டம் எதுவுமில்லை என்றும், தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களைப் பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1,000 செல்லாது என்று அறிவித்தது. இதை தொடர்ந்து புதிதாக ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் விடப்பட்டது. இதனால் சில்லரை பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து 10 ரூபாய் நாணயங்களை அதிக அளவு புழக்கத்தில் விட்டுள்ளனர்.
10 ரூபாய் நாணயங்களில் தயாரிப்பு ஆண்டுகளாக 2010, 2015 ஆண்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் பணத்தட்டுப்பாடு காரணமாக இந்த 2 விதமான 10 ரூபாய் நாணயங்களும் புழக்கத்திற்கு வந்தன. ரிசர்வ் வங்கியே மூட்டை மூட்டையாக இந்த நாணயங்களை மக்களுக்கு வழங்கியது.
இதில் 2010-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயம் போலியானது என்ற தகவல் பரவ ஆரம்பித்தது. இதனால் பஸ்கள், டீக்கடைகள், வர்த்தக நிறுவனங்களில் இந்த நாணயங்களை பொதுமக்களிடம் இருந்து வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் பொது மக்கள் மேலும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
வதந்தி
இதற்கிடையில் மத்திய அரசு 10 ரூபாய் நாணயத்தையும் விரைவில் செல்லாது என்று அறிவிக்க உள்ளது என்ற வதந்தி பரப்பப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் அதிக குழப்பத்திற்கு ஆளானார்கள்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "10 ரூபாய் போலி நாணயம் புழக்கத்தில் இருப்பதாக எங்களுக்கும் புகார் வந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தினோம். ஆனால் அதில் உண்மை இல்லை. ரிசர்வ் வங்கி சார்பில் 2010-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. தொடர்ந்து 2015-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயத்தில் ரூபாய் சின்னமும் சேர்த்து வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டது.
இந்த இரண்டு வகை நாணயங்களும் செல்லுபடியாகும். புரளியை நம்ப வேண்டாம். போலி நாணயத்துடன் ஒருவர் வங்கி கிளையை அணுகினால் அதனை வங்கி அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும். அதற்கு ஒரு சான்றிதழ் வழங்கிவிட்டு, போலி நாணயத்தை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர் இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தப்படும். மேற்கொண்டு தகவல் தேவைப்படுபவர்கள் ரிசர்வ் வங்கியின் www.rbi.org.in என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்," என்று தெரிவித்துள்ளனர்.
UPCOMING TRAININGS

( 1 )
 IED TRAINING - FOR PRIMARY Trs  - 5 days

( 2 ) Maths TRAINING FOR UPPER PRIMARY MATHS TEACHERS ( 9.1.2017 , 10.1.2017,11.1.2017) - 3 DAYS

*( 3 )*IED TRAINING FOR UPPER PRIMARY TEACHERS - 5 DAYS 

( 4 ). BRITISH ENGLISH TRG FOR PRIMARY TEACHERS - 4 DAYS ( FOR PRIMARY TEACHERS )

BRITISH ENGLISH TRG 2 DAYS FOR UPPER PRIMARY TEACHERS

( 5 ). PRIMARY CRC 

( 6). UPPER PRIMARY CRC .

( 7 ). SMC TRAINING

( 8 ) SMF and PINDICS FORM FILLING