யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/3/18

ஆளப்போகிறோமா?அடிமையாக வாழப்போகிறோமா??



தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கத்தைக் கட்டிக் காக்கும் இயக்கவாதிகளுக்கு, 2002 இல் தொடக்கக்கல்வித் துறைக்குக் கிடைக்க வேண்டிய வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை அன்றைய பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சூழ்ச்சியாக அபகரித்துக் கொண்டு அனைத்தையும் பள்ளிக்கல்வித் துறைக்கே அள்ளிக் கொடுத்தது குறித்தும் தமக்கு நேரிட்ட அநீதிகளைத் தட்டிக் கேட்க வழியின்றி அசட்டையாக இருந்தது போதும்!
16 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே சூது கவ்வும் வேலைகள் தொடங்கிவிட்டன...
இந்த முறையும் கண்ணிருந்தும் குருடர்களாக நாம் இருப்போமேயானால் அறிவாலும் ஆற்றலாலும் தகுதியாலும் திறமையாலும் மாற்றானைவிட பல மடங்கு உயர்ந்து நிற்கும் இக்கால இளைய சமுதாயமும் நாளைய இளைஞர் சக்தியும் தொடக்கக்கல்வி இயக்கங்கள் மீது சபித்துக் கொட்டும்!
ஊதியத்திற்காக மட்டுமல்ல உரிமைகளுக்காகவும் போராடிடும் மாபெரும் இயக்கங்கள் நமது என்பதை உயிரைக் கொடுத்தேனும் நிரூபிக்க வேண்டியது அவசர அவசியக் கடமையாக உள்ளது.

ஆளப் போகிறோமா?
அடிமையாகிச் சாவப் போகிறோமா?

ஓங்கி உரத்துச் சொல்வோம்!
தொடக்கக்கல்வித் துறை
தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கே!

அடிமேல் அடி வாங்கும் ஆசிரியர்கள்!; ‘கக்கூஸ் போவதையும் கணக்கெடுக்கணுமாம்' -புதிய அகராதி சிறப்பு கட்டுரை!!!


  
கம்ப்யூட்டர், டேப்ளட், டிரைமெஸ்டர், தொடர் மதிப்பீட்டு முறை, 

ஆங்கில வழி என அரசு தொடக்கப்பள்ளிகள் ஒருபுறம் நவீனமாகி வந்தாலும், சமூகத்தைக் கட்டமைக்கும் ஆசிரியர்களை அரசாங்கம் கொத்தடிமைகளைப் போல நடத்தும் போக்கு, அவர்களை மனதளவில் சோர்வடையச் செய்துள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருமுறை ஊதிய உயர்வுக்காக போராடும்போதும் அவர்களை கேலி பேசும் பட்டியலில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். அந்த எண்ணத்தில் எனக்கு இப்போதும் பெரிய மாற்றுக்கருத்து இல்லை. உழைக்காமலேயே ஊதியம் பெறும் வர்க்கமாக ஆசிரியர்களை சித்தரித்திருப்பதில் அரசுக்கே பெரும் பங்கு உண்டு என்றுதான் சொல்வேன்.


கைநிறைய சம்பளத்தை அள்ளிக்கொடுத்து விட்டால் போதும். அவர்களை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்கலாம் என்ற மனோபாவத்தில் அரசாங்கம் இருப்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி என்றால் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு திரும்பிய திசையெங்கும் அடிமேல் அடி எனப் புலம்பினார் ஆசிரியர் நண்பர் ஒருவர். அரசுத்துறைகளில் போகிறவர், வருபவர்கள் எல்லாம் பள்ளிக்கூடத்தை எட்டிப்பார்க்கும் அதிகாரத்தை வழங்கியிருப்பது என்ன மாதிரியான வடிவமைப்பு எனத் தெரியவில்லை.

கடந்த 2016-17ம் ஆண்டு நிலவரப்படி தமிழகம் முழுவதும் 35414 அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 29.10 லட்சம் மாணவர்களும், 9708 நடுநிலைப்பள்ளிகளில் 17.42 லட்சம் மாணவர்களும் படிப்பதாக கூறுகிறது அரசின் நிதிநிலை அறிக்கை. தொடக்கக் கல்வித்துறையில் 2.23 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

பாடம் நடத்துவதைத் தவிர ஆசிரியர்களுக்கு வேறு என்ன வேலை இருக்கப் போகிறது? என்பதுதான் மக்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் எண்ணம். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, குழந்தைகளுக்கு சாதி, வருமானம் உள்ளிட்ட மூவகை சான்றிதழ் பெற்றுத்தருவது போன்ற வருவாய்த்துறையினர் செய்ய வேண்டிய வேலைகளையும் ஆசிரியர்கள்தான் செய்ய வேண்டும் என்பது பரவலாக அறிந்திருக்கும் தகவல்தான்.

ஆனால், தொடக்கக் கல்வித்துறையின் அண்மைக்கால போக்கு ஆசிரியர்களை உளவியல் ரீதியான நெருக்கடிக்கு தள்ளிவிட்டிருப்பதாக பலரும் சொல்கின்றனர்.

”தினமும் காலையில் வகுப்பறைக்குள் நுழைந்ததும் ஒவ்வொரு குழந்தையும் காலையில் பொதுக்கழிப்பிடத்தில் ஒண்ணுக்கு, ரெண்டுக்கு போனார்களா? வீட்டில் உள்ள கழிப்பறையை பயன்படுத்தினார்களா? என்று குழந்தைகளிடம் கேள்வி கேட்டு உண்மையைக் கண்டறிய வேண்டும்.


கழிப்பறையை பயன்படுத்தி இருந்தால் பச்சை மையினாலும், பொதுவெளியைப் பயன்படுத்திய மாணவர்களை சிவப்பு மையினாலும், பள்ளிக்கு வராத குழந்தைகளை கருப்பு அல்லது நீல நிற மையினாலும் வருகைப் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.

தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் ஆசிரியர் பயிற்றுநர் வரை யார் வந்தாலும் முதலில் இந்த வருகைப் பதிவேட்டைத்தான் பார்க்கின்றனர். அதனால், அதில் கவனம் செலுத்துவதிலேயே எங்களுக்கு பாடவேளையின் முதல் பதினைந்து நிமிடங்கள் கழிந்து விடுகிறது.

இது இப்படி என்றால், அன்றாடம் எத்தனை குழந்தைகள் சத்துணவு சாப்பிடுகின்றனர்? என்ற விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் சேகரித்து, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு செல்போன் மூலம் காலை 11 மணிக்குள் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

சத்துணவுத் திட்டத்திற்கென ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் தனியாக சத்துணவு அமைப்பாளர், சமையலர்கள் உள்ளனர். அவர்களிடம் கேட்டுப்பெற வேண்டிய தகவலை, தலைமை ஆசிரியர்களை அனுப்புமாறு நிர்ப்பந்திக்கின்றனர்.

இதற்கே எங்களுக்கு முதல் ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது. பிறகு எப்படி நாங்கள் குழந்தைகளுக்கு பாடம் நடத்த முடியும்?” என புலம்பினார் கொங்கணாபுரம் வட்டாரத்தைச் சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர்.

அதிகாரிகள் கேட்ட விவரங்களை சொன்ன நேரத்திற்குள் எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடியுரிமைப் பணிகள் (கட்டுப்பாடு மற்றும் மேல்முறையீடு) விதி 17 (ஏ)-ன் கீழ் குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பப்படும் என்றும் மிரட்டப்படுகின்றனர்.

ஏர்செல் நெட்வொர்க் செயலிழந்ததால் குறித்த நேரத்தில் அதிகாரிகளுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த மாதம் பிப்ரவரி 16ம் தேதி, ஏற்காடு வட்டாரத்தில் 35 தலைமை ஆசிரியர்களுக்கு 17 (ஏ)ன் கீழ் விளக்கம் கோரி குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த குறிப்பாணையை, உரிய விளக்கம் கொடுத்த பிறகும் உடனடியாக ரத்து செய்யப்போவதில்லை. அதை ‘ப’ வைட்டமின் மூலம்தான் ரத்து செய்ய முடியும் என்பதை நான் சொல்லாமலே உங்களுக்குப் புரியும்தானே?

தேர்தலையொட்டி மட்டுமே நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் இப்போதெல்லாம் ஆண்டு முழுவதுமே மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் விவரங்களை சரிபார்க்க தேர்தல் ஆணையம் ஒரு செயலியை வடிவமைத்துள்ளது.

சம்பந்தப்பட்ட வாக்காளரின் முகவரியை அடைந்த பின்னர், ஆசிரியர்கள் அந்த செயலியை திறக்க வேண்டும். அதில் கோரப்படும் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பல நேரங்களில் அந்த செயலி திறப்பதற்கு தாமதம் ஆவதால், கால விரயம் ஆவதாகவும் ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

ஆண்ட்ராய்டு மொபைல் போன் இல்லாத ஆசிரியர்களின் பாடு ரொம்பவே சிரமம்தான். எல்லோரையும் இந்த அரசாங்கம் ஆண்ட்ராய்டு மொபைல் வாங்க மறைமுகமாகக் கட்டாயப்படுத்துகிறது. இதற்காக அவர்களுக்கு மானியமோ, குறுஞ்செய்திகளுக்கென தொகையோ தருவதில்லை.

செயலி டவுன்லோடு ஆவதில் உள்ள நடைமுறைச் சிக்கலை எல்லாம் கருத்தில் கொள்ளாத அதிகாரிகள், தாமதம் ஆனால் ஆட்சியர் அறிவுறுத்தலின்பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மிரட்டலுடனேயே ஆசிரியர்களை பணிக்கின்றனர்.

”பிஎல்ஓ எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 7000 ரூபாய் அரசு வழங்குகிறது. அவர்களைக் கண்காணிக்கும் டிஎல்ஓ அந்தஸ்திலான தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு வெறும் 200 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர்.

நடப்பு மார்ச் மாதத்தில் மட்டும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் இங்கிலீஷ் பயிற்சி முகாம், பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி, கேள்வி ஒரு கலை பயிற்சி, தூய்மை பாரதம் பயிற்சி என நிறைய பயிற்சி முகாம்கள் உள்ளன.

இதுபோன்ற பயிற்சி முகாம்களால் பாடத்திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடிப்பதில் சிக்கல் நிலவுகிறது,” என்கிறார் வீரபாண்டி வட்டாரத்தைச் சேர்ந்த மற்றோர் அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர்.

பள்ளி தகவல் தொகுப்புத் திட்டத்திற்காக (EMIS) ஒரு பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியும் டவுன்லோடு ஆக வெகு நேரம் ஆவதாகச் சொல்லும் ஆசிரியர்கள், குழந்தைகளின் ஆதார் விவரங்களை சேகரித்து அனுப்பும் பணியிலும் பணிக்கப்பட்டு உள்ளதாகக் கூறினர்.



தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் தமிழ் வழியுடன், ஆங்கில வழியிலும் (இங்கிலீஷ் மீடியம்) பயிற்றுவிக்கப்படுகிறது. மொழிப்பாடங்கள் தவிர கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மீடியத்திலும் உள்ளன.

இந்த இரண்டு மீடியத்தையும் ஒரே ஆசிரியர்தான் நடத்த வேண்டும். அப்படி எனில், ஒரே ஆசிரியர் இரண்டு மீடியத்திலும் சேர்த்து 10 பாடங்களை நடத்த வேண்டிய நெருக்கடி உள்ளது. ஆர்டிஇ பரிந்துரையைக் காட்டிலும் இன்றைக்கு அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர் : மாணவர் விகிதம் ரொம்பவே குறைவுதான். எனினும், ஆசிரியர்களின் உழைப்பு ஒன்றுதானே?

ஆங்கில வழியில் நடத்துவதற்கென தனியாக ஆங்கிலத்தில் சரளமாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ் வழியில் உள்ள ஆசிரியர்களைக் கொண்டே நடத்தும்போது ‘Zebra’வை ‘ஜீப்ரா’ என்று குழந்தைகள் உச்சரித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தைச் சேர்ந்த மற்றொரு ஆசிரியர் புதிய கோணத்தில் சொன்னார்.

”இளம் ஆசிரியர்களில் சிலர் பள்ளியை விட்டு வெளியே சுற்றவே ஆசைப்படுகின்றனர். அவர்களுக்கு அரசாங்கமே தாராளமாக வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் எழுத்தர் பணிகளையும் ஆசிரியர்களே செய்து கொள்ள வேண்டும்.

தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட மெமோ.

அதற்கென தனி ஊழியர் இல்லாததால், குழந்தைகளுக்கான சான்றிதழ் பெற்றுத்தருவது, சத்துணவு வேலைகள், கல்வி அலுவலகம் சார்ந்த பணிகளில் ஈடுபடவே ஆசிரியரின் பெரும்பகுதி நேரம் போய் விடுகிறது.

இந்த நெருக்கடிகளுக்கு இடையில்தான் குழந்தைகளுக்கு பாடம் நடத்த வேண்டும். ஆகாயத்தில் இருந்து குதித்து வரும் அதிகாரிகள், திடீரென்று ஒரு நாள் பள்ளியில் ஆய்வு செய்துவிட்டு கற்றல் அடைவுத்திறன் குறைவாக இருப்பதாகக் கூறிவிட்டு, எங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் என்ன தர்மம் இருக்கிறது?,” என வினா எழுப்பினார் அந்த ஆசிரியர்.

இது ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அசோக்குமார் (பொ) சில நாள்களுக்கு முன்பு, வித்தியாசமான ஓர் உத்தரவை பிறப்பித்து இருந்தார். மூன்றாம் பருவ பாடத்திட்டத்தை முடிப்பதற்குள் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடக்கூடாது என்பது அவருடைய உத்தரவு.

மூன்றாம் பருவ பாடத்திட்டம் எப்போது முடியும் என ஆசிரியர் ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ஏப்ரல் மத்தியில். அதன்பிறகு தேர்வு. அந்த மாதத்துடன் கோடை விடுமுறை விடப்பட்டு விடும் என்றார். எனில், எப்போது ஆண்டு விழா கொண்டாடுவது? அதற்காக ஒதுக்கப்படும் நிதியை என்ன செய்வது?

ஆசிரியர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து பின்னர் அந்த அதிகாரி தனது உத்தரவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஓர் ஆசிரியர், வகுப்பறைக்குள் குழந்தைகளிடம் தாயாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் தர்க்க நியாயம் இருக்கிறது. ஆனால், அவரே ஊரக வளர்ச்சித்துறை அலுவலர், வருவாய்த்துறை ஊழியர், தேர்தல் ஆணைய ஊழியர், துப்புரவாளர், பள்ளிக் காப்பாளர் என ‘தசாவதாரம்’கமல்ஹாசனைக் காட்டிலும் பல அவதாரங்களை எடுக்க வைப்பது தகுமா?

ஆசிரியர்களைக் கசக்கிப் பிழிந்தால்தான் கல்வித்தரம் வளரும் என தமிழக அரசாங்கம் கண்களை மூடிக்கொண்டு கணக்குப் போட்டிருக்கிறது.

இந்த துன்புறுத்தலினால் அல்லல்படுவது ஆசிரியர் சமூகம் மட்டுமல்ல; ஏழைக் குழந்தைகளும்தான்.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட அலுவலர்கள் குழு மூலம் பார்வையிடுதல் ....

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட அலுவலர்கள் குழு மூலம் பார்வையிடுதல் மற்றும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் சுற்றறிக்கை அனுப்புதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



EMIS- இணையதள பதிவின்படி பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவம்....

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நாள் நடைபெறும் விவரங்கள்....

24/2/18

இன்னும் 4 நாட்களில் டவர் பிரச்சனை சரியாகிவிடும்; கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் நிறுவனம்!

முடங்கிய  ஏர்செல் சேவை, 4 நாட்களில் சரியாகிவிடும் என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் ஏர்செல் டவர் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

பல்வேறு இடங்களில் டவர்கள் இயங்காததால், சிக்னல் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இதனால் வியாபாரிகளும், அலுவலக ஊழியர்களும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஏர்செல் அலுவலகத்தில் சென்று பொதுமக்கள் முறையிட்டனர்.

ஆனால் அங்கு முறையான விளக்கம் கிடைக்கவில்லை. இதையடுத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் மேற்கு தாம்பரம் பகுதி ஏர்செல் அலுவலகம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் முடங்கியுள்ள ஏர்செல் சேவை 4 நாட்களில் சரியாகிவிடும் என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பேச்சு நடத்தும் வரை மறியல் : 'ஜாக்டோ - ஜியோ' உறுதி

ஜாக்டோ - ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி, இரண்டாவது நாளாக, நேற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், நேற்று முன்தினம், தொடர் மறியல் போராட்டம் துவங்கியது.பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், சென்னைக்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர். நேற்று,
இரண்டாவது நாளாக போராட்டம் நீடித்தது.பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்துவது; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாதத்துக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவது; இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர். அதுவரை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், கைதானவர்கள் முகாமிட்டிருந்தனர்.
போராட்டம் குறித்து, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர், தாஸ் கூறுகையில், ''போராட்டத்திற்கு வரும் ஆசிரியர்கள் வகுப்புகளை, 'கட்' அடிக்கவில்லை. சுழற்சி முறையில் விடுமுறை கேட்டு, போராட்டத்தில் பங்கேற்கின்றனர். அரசு பேச்சு நடத்தும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார்.

2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு

அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 2,336 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என, உயர்கல்வித் துறை செயலர், சுனில்பாலிவால் தெரிவித்தார்.
கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி: பொறியியல், பாலிடெக்னிக்கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்களை சமீபத்தில் நிரப்பியுள்ளோம். அரசு கலைக் கல்லுாரிகளைபொறுத்தவரை, பேராசிரியர்கள் சிலர், கோர்ட்டை அணுகியுள்ளதால், பணிகள் தேங்கியுள்ளன; சிக்கல் தீர்க்கப்பட்டு, முதல்வர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கடந்த இரு ஆண்டுகளில், 370 பேராசிரியர்கள் பணி ஓய்வு பெற்று சென்றுள்ளனர்; 1,966 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இவ்விரண்டையும் சேர்த்து, 2,336 இடங்களுக்கான தகவலை, டி.ஆர்.பி., வசம்ஒப்படைக்க உள்ளோம்.

இதற்கான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பல்கலை, கல்லுாரி பேராசிரியர்களின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதியம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : கட்டண நிர்ணய குழு உத்தரவு'

ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டண நிர்ணயக் குழு, உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழகம் முழுவதும்,மெட்ரிக் இயக்ககம், பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கப் பள்ளி இயக்ககத்தின் அங்கீகாரம் பெற்று, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகள் இயங்குகின்றன.கட்டாய கல்விஉரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சுயநிதி பள்ளிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, கல்வி கட்டண நிர்ணயக் குழு, 2009ல் அமைக்கப்பட்டது.இந்த குழுவின், தற்போதைய தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, மாசிலாமணி பணியாற்றி வருகிறார்.அவரது தலைமையிலான குழுவே, தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கிறது.

நடப்பு கல்வி ஆண்டு மற்றும் அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை, நிர்ணயிக்கும் பணிகள், தற்போது நடக்கின்றன.கட்டண நிர்ணயத்துக்காக வரும் பள்ளிகள், அங்கீகார சான்றிதழ், உட்கட்டமைப்பு வசதிகள், அரசு துறைகளின் பல்வேறு வகை சான்றிதழ்கள் என, பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்; அவற்றை எல்லாம் பரிசீலித்து, கல்வி கட்டணத்தை, குழு நிர்ணயிக்கும்.இந்நிலையில், இந்தாண்டு முதல், அனைத்து தனியார் பள்ளிகளும், தங்களது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, ரொக்கமாக வழங்காமல், இ.சி.எஸ்., எனப்படும், 'எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம்' முறையில், வங்கிகள்வாயிலாக வழங்க வேண்டும்.

கல்வி கட்டண அனுமதி பெறும் பள்ளிகள், இ.சி.எஸ்., முறைக்கு மாற வேண்டியது கட்டாயம்என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.கட்டண நிர்ணயம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் போது, குறைந்தபட்சம், கடைசி மூன்று மாதங்கள், இ.சி.எஸ்., முறையில் ஊதியம் கொடுத்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கல்வி கட்டண நிர்ணயக் குழுஉத்தரவிட்டு உள்ளது.இ.சி.எஸ்.,க்கு மாறாத பள்ளிகளுக்கு, கட்டண நிர்ணய அனுமதி  வழங்கப்படாது என்றும், கூறியுள்ளது.

தேர்வு கட்டணம் உயர்வு : ரயில்வே அமைச்சர் விளக்கம்

புதுடில்லி: விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே, ரயில்வே பணியாளர் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
ரயில்வே துறையில், 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து,ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் அளித்த விளக்கம்: மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால், ரயில்வே பணியாளர் தேர்வை எழுத விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. விண்ணப்பித்த அனைவரும் தேர்வு எழுதுவதில்லை. இதனால், நேரம் மற்றும் பணம் விரயமாகிறது.இதை தடுக்க, தேர்வு எழுதுவதற்கான கட்டணம், கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் விண்ணப்பதாரர்களுக்கு, இதுவரை கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இனி மேல் இவர்களுக்கு, 250 ரூபாய், முன்னெச்சரிக்கை கட்டணமாக வசூலிக்கப்படும். இதர விண்ணப்பதாரர்களுக்கான கட்டணம், 100லிருந்து, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறையும். மையங்களுக்கு வந்து தேர்வு எழுதியவர்களில், இட ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் வருபவர்களுக்கு, 250 ரூபாயும், இட ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு, 400 ரூபாயும் திருப்பி அளிக்கப்படும்.
 இதன் மூலம், தேர்வுக்கு விண்ணப்பித்து, தவறாமல் ஆஜராகி அதை எழுதுவோருக்கு, எந்த கட்டண உயர்வும் இருக்காது. அதே போல், தேர்வின் போது, ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் கையெழுத்திடுவது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளன. கம்ப்யூட்டர் வாயிலாக, 15 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு மைய வருகைப் பதிவில், விண்ணப்பதாரர்கள், தேர்வு எழுதும் மொழியிலேயே கையெழுத்திடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : கட்டண நிர்ணய குழு உத்தரவு!!!

ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும்'
என, தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டண நிர்ணயக் குழு, உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகம் முழுவதும், மெட்ரிக் இயக்ககம், பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கப் பள்ளி இயக்ககத்தின் அங்கீகாரம் பெற்று, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகள் இயங்குகின்றன.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சுயநிதி பள்ளிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, கல்வி கட்டண நிர்ணயக் குழு, 2009ல் அமைக்கப்பட்டது.இந்த குழுவின், தற்போதைய தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, மாசிலாமணி பணியாற்றி வருகிறார். அவரது தலைமையிலான குழுவே, தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கிறது.நடப்பு கல்வி ஆண்டு மற்றும் அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை, நிர்ணயிக்கும் பணிகள், தற்போது நடக்கின்றன.கட்டண நிர்ணயத்துக்காக வரும் பள்ளிகள், அங்கீகார சான்றிதழ், உட்கட்டமைப்பு வசதிகள், அரசு துறைகளின் பல்வேறு வகை சான்றிதழ்கள் என, பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்; அவற்றை எல்லாம் பரிசீலித்து, கல்வி கட்டணத்தை, குழு நிர்ணயிக்கும்.இந்நிலையில், இந்தாண்டு முதல், அனைத்து தனியார் பள்ளிகளும், தங்களது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, ரொக்கமாக வழங்காமல், இ.சி.எஸ்., எனப்படும், 'எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம்' முறையில், வங்கிகள் வாயிலாக வழங்க வேண்டும்.கல்வி கட்டண அனுமதி பெறும் பள்ளிகள், இ.சி.எஸ்., முறைக்கு மாற வேண்டியது கட்டாயம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.கட்டண நிர்ணயம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் போது, குறைந்தபட்சம், கடைசி மூன்று மாதங்கள், இ.சி.எஸ்., முறையில் ஊதியம் கொடுத்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கல்வி கட்டண நிர்ணயக் குழுஉத்தரவிட்டு உள்ளது.இ.சி.எஸ்.,க்கு மாறாத பள்ளிகளுக்கு, கட்டண நிர்ணய அனுமதி வழங்கப்படாது என்றும், கூறியுள்ளது 

சத்துணவு மையங்களுக்கு பப்பாளி, முருங்கை கன்று!!!

அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களுக்கு இலவசமாக
பப்பாளி, முருங்கை மரக்கன்று வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் உதவி பெறும், 40 ஆயிரம் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை படிக்கும், 50 லட்சம் மாணவர்களுக்கு, சத்துணவு திட்டத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும், ஒரு வகை சாதம், பயறு வகைகள் மற்றும் தினமும் முட்டை வழங்கப்படுகிறது.பப்பாளி மற்றும் முருங்கையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு, நீர்சத்து அதிகம் உள்ளது. இதனால், மையத்திற்கு ஒரு பப்பாளி, ஒரு முருங்கை மரக்கன்றை இலவசமாக வழங்க, தோட்டக்கலை துறை ஏற்பாடு செய்து வருகிறது. கன்றுகள் வளர்ந்தபின், மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் முருங்கை கீரை, முருங்கை குழம்பு, பப்பாளி பழம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.சத்துணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளிகளில் மரம் வளர்ப்பது, நிழல் தர மட்டுமின்றி, மாணவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவ வேண்டும். எனவே, பப்பாளி, முருங்கையை உணவோடு சேர்க்க, அரசு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இட வசதியிருந்தால், கூடுதல் மரங்களை நடவு செய்யலாம்' என்றார்.

2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு!!

கோவை: ''அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 2,336 
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என, உயர்கல்வித் துறை செயலர், சுனில் பாலிவால் தெரிவித்தார்.

கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி: பொறியியல், பாலிடெக்னிக்கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்களை சமீபத்தில் நிரப்பியுள்ளோம். அரசு கலைக் கல்லுாரிகளை பொறுத்தவரை, பேராசிரியர்கள் சிலர், கோர்ட்டை அணுகியுள்ளதால், பணிகள் தேங்கியுள்ளன; சிக்கல் தீர்க்கப்பட்டு, முதல்வர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கடந்த இரு ஆண்டுகளில், 370 பேராசிரியர்கள் பணி ஓய்வு பெற்று சென்றுள்ளனர்; 1,966 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இவ்விரண்டையும் சேர்த்து, 2,336 இடங்களுக்கான தகவலை, டி.ஆர்.பி., வசம் ஒப்படைக்க உள்ளோம். இதற்கான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பல்கலை, கல்லுாரி பேராசிரியர்களின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதியம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

4,000 இலவச, 'லேப் - டாப்'களை, அதிகாரிகளிடம் ஒப்படைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது!!!

தமிழகம் முழுவதும், மாணவர்களுக்கு வழங்கப்படாத, 4,000 இலவச, 
'லேப் - டாப்'களை, அதிகாரிகளிடம் ஒப்படைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.'லேப் - டாப்' உட்பட, 14 வகையான இலவச பொருட்கள், ஏழு ஆண்டுகளாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக, இவை வழங்கப்படுகின்றன. இதில், பள்ளி படிப்பு முடிந்த பின், உயர் கல்விக்காக இடமாறும் மாணவர்கள், லேப் - டாப்பை வாங்க முன்வருவதில்லை. சிலர், பள்ளிகளில் இருந்து சரியான தகவல் கிடைக்காததால், வாங்காமல் விடுகின்றனர்.இந்த வகையில், விடுபட்ட மாணவர்களுக்கான, லேப் - டாப்களை, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம், தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், சில பள்ளிகளில், அவற்றை ஆசிரியர்கள் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.இது குறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மூன்று ஆண்டுகளில், மாநிலம் முழுவதும், 4,000க்கும் மேற்பட்ட லேப் - டாப்கள், மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது தெரிய வந்து உள்ளது.இதையடுத்து, எத்தனை மாணவர்களுக்கு, லேப் - டாப் வழங்கப்பட்டு உள்ளது என்ற விபரத்தை, ஆதாரத்துடன் அளிக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. அதோடு, வழங்கப்படாத லேப் - டாப்களை, திரும்ப ஒப்படைக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேர்வு கட்டணம் உயர்வு : ரயில்வே அமைச்சர் விளக்கம்!!!

புதுடில்லி: விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே,
ரயில்வே பணியாளர் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.ரயில்வே துறையில், 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் அளித்த விளக்கம்: மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால், ரயில்வே பணியாளர் தேர்வை எழுத விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. விண்ணப்பித்த அனைவரும் தேர்வு எழுதுவதில்லை. இதனால், நேரம் மற்றும் பணம் விரயமாகிறது.இதை தடுக்க, தேர்வு எழுதுவதற்கான கட்டணம், கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் விண்ணப்பதாரர்களுக்கு, இதுவரை கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இனி மேல் இவர்களுக்கு, 250 ரூபாய், முன்னெச்சரிக்கை கட்டணமாக வசூலிக்கப்படும். இதர விண்ணப்பதாரர்களுக்கான கட்டணம், 100லிருந்து, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறையும். மையங்களுக்கு வந்து தேர்வு எழுதியவர்களில், இட ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் வருபவர்களுக்கு, 250 ரூபாயும், இட ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு, 400 ரூபாயும் திருப்பி அளிக்கப்படும். இதன் மூலம், தேர்வுக்கு விண்ணப்பித்து, தவறாமல் ஆஜராகி அதை எழுதுவோருக்கு, எந்த கட்டண உயர்வும் இருக்காது. அதே போல், தேர்வின் போது, ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் கையெழுத்திடுவது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளன. கம்ப்யூட்டர் வாயிலாக, 15 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு மைய வருகைப் பதிவில், விண்ணப்பதாரர்கள், தேர்வு எழுதும் மொழியிலேயே கையெழுத்திடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

கற்களைக் கரைக்கும் காய்கறிகள், பழங்கள்!!!

                               

காய்கறிகளில் பூசணிக்காய், நூக்கல், வெள்ளை
முள்ளங்கி, கோவைக்காய்... பழங்களில் ஆப்பிள், சாத்துக்குடி, அன்னாசி, மாதுளம், ஆரஞ்சு, பேரிக்காய், கொய்யா சாப்பிடலாம். கூடவே கரும்புச்சாறு குடிக்க மறக்க வேண்டாம். இவை சிறுநீரகம், பித்தப்பையில் கற்கள் கரைய சாப்பிட வேண்டிய காய்கறிகள் பழங்கள் ஆகும்.

முளைக்கீரை, சாட்டரணை, யானை நெருஞ்சி, சிறு நெருஞ்சி, கரிசலாங்கண்ணி கீரைகளும், வாழைத்தண்டும் சாப்பிட்டால், சிறுநீரகம், பித்தப்பையில் கற்களை கரைக்கும்.

கீரைகளை வாரம் இருமுறை, தாராளமாகச் சாப்பிடலாம். தினமும் வாழைத்தண்டு சாறு எடுத்து பலர் சாப்பிடுகின்றனர்; அது தவறு. இது, உடலில் உள்ள உயிர் சக்தியை உறிஞ்சிவிடும் என்பதால், 15 நாள்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம்.

கரிசலாங்கண்ணி கீரையை உண்ணும்போது கபநீர் வெளியேறுவதால் சுவாசப்பையும் நுரையீரலும், பித்தநீர் வெளியேறுவதால் கல்லீரலும் பித்தப்பையும், மலம் வெளியேறுவதால் பெருங்குடலும், நீர் பிரிவதால் சிறுநீர்ப்பையும் சுத்தம் அடைகின்றன.

வெள்ளரிக்காய், முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு சாப்பிடுவதால், சிறுநீரகம் நன்றாக இயங்க உதவுவதுடன், நீர் நன்றாக குடித்தால் கற்கள் சேர்ந்தாலும் சிறுநீரில் பிரிந்து வந்துவிடும்.

கரிசலாங்கண்ணி கீரையை பச்சையாகவோ, சமையல் செய்தோ, நாள்தோறும் உட்கொண்டால், பித்தப்பை, சிறுநீரகக் கற்கள் கரைந்து மறைந்தே போய் விடும். இந்த கீரையில் உள்ள பழுப்பு இலைகளை நீக்கி, வாயில் போட்டு மென்று, சாற்றை விழுங்கி, சக்கையைப் பல் தேய்க்கலாம்.

தவிர, வாய் முழுவதும் நாக்கு, உள்நாக்கு உட்பட மேலும் கீழும் விரல்களால் தேய்த்தால், மூக்கு, தொண்டையிலுள்ள கபம் அந்நேரமே வெளியாகும். பித்தப்பையில் கற்கள் இருந்தால், அந்நேரமே பித்தம் வெளியேறும். அதிலுள்ள கற்கள் வாந்தி, மலம் மூலம் வெளியேறும். மேலும், சிறுநீரகம் சுத்தப்படுவதுடன், சிறுநீர்ப் பையில் கற்கள் இருந்தால், அவை சிறுநீரில் கரைந்து வெளியேறும்.

மேலும், சிறுநீரகம், பித்தப்பையின் கழிவுகளை வெளியேற்ற, உடல் தாகமாக தண்ணீர் கேட்கும். ஆனால், நாம் அந்த உடல் மொழியை அலட்சியப்படுத்துகிறோம். இது தவறு. தாகம் எடுக்கும்போது, தண்ணீர் குடித்தால், பித்தப்பை, சிறுநீரகப்பைச் சிறப்பாக இயங்கும்.

அதேபோல், அளவுக்கு அதிகமாக காபி சாப்பிடுபவர்களுக்கு, பித்தப்பையில் நச்சுத்தன்மை உருவாகி, பின் அது கற்களாக மாறும். எனவே, காபி குடிப்பதற்குப் பதில், இஞ்சி டீ குடித்தால், பித்தப்பை சுத்தமாகும்.

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

                                       

திருச்சி, ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த தொழிற்சாலை
உதவியாளர், தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 38

பணியின் தன்மை: மூத்த தொழிற்சாலை உதவியாளர், தொழில்நுட்பவியலாளர்

வயது வரம்பு: 18 - 35 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு

கட்டணம்: ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசித் தேதி: 16.03.2018

மேலும் விவரங்களுக்கு
http://aavinmilk.com/hrtry120218.html என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு!

தமிழக அரசு 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்தும்,
6 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எஸ்பி பதவியில் பணியாற்றிய 12 பேர் டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். டாக்டர் கே.ஏ.செந்தில்வேலன், அவினாஷ் குமார், அஸ்ரா கார்க், ஏ.ஜி.பாபு, செந்தில் குமாரி, துரைகுமார், மகேஸ்வரி, அசியம்மாள், ராதிகா, லலிதா லட்சுமி, ஜெயகௌரி மற்றும் காமினி ஆகியோர் டிஐஜிகளாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

கடலோரக் காவல்படை டிஐஜியாக பவானீஸ்வரி, விழுப்புரம் சரக டிஐஜியாக சந்தோஷ் குமார், கோவை சரக டிஐஜியாக கார்த்திகேயன், திண்டுக்கல் சரக டிஐஜியாக ஜோஷி நிர்மல்குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக அன்பு, சமூகநீதி மற்றும் மனித உரிமை டிஐஜியாக பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

ஏர்செல் சேவை முடக்கம் : அதிகாரி விளக்கம்!

தமிழகத்தில் ஏர்செல் சேவை முடங்கியதற்கான காரணம்
குறித்து அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஏர்செல் சேவை திடீரென முடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கேஸ் இணைப்பு, வணிக வியாபாரம் என அனைத்துமே மொபைல் நெட்வொர்க்கை நம்பியே இருப்பதால் இந்தச் சேவை முடக்கம் மக்களை கொதிப்படைய செய்துள்ளது. இதனையடுத்து ஏர்செல் சேவையில் இருந்து மற்ற செல்போன் நிறுவனங்களில் சேவையை பெறுவதில் வாடிக்கையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் அதுவும் சிக்கலாக உள்ளதால் ஏர்செல் நிறுவனங்கள் முன்பு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் சேவை மூன்று நாட்களில் மீண்டும் சீராகும் என்று அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "செல்போன் சேவை நிறுவனத்தில் கடும் போட்டி இருப்பதால், ஏர்செல் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. எல்லா செல்போன் சேவை நிறுவனங்களைப் போன்று ஏர்செல் நிறுவனமும் டவர்களை மற்றொரு நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு எடுத்து தான் சேவையை வழங்கி வருகிறது. எங்களுக்கும், டவர் கம்பெனிக்கும் இடையே நிலுவை தொகை பாக்கி இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் உள்ள 90 சதவீதம் டவர்களை அந்த கம்பெனி வலுக்கட்டயமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணைத்துள்ளது. அதன்படி 9 ஆயிரம் டவர்களில் 8 ஆயிரம் டவர்கள் இயங்கவில்லை. இது எங்களுக்கும், இன்னொரு கம்பெனிக்கும் உள்ள நிதி மற்றும் சட்ட பிரச்சினை என்றாலும், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் அளவுக்கு சென்றிருப்பது வருத்தம் அளிக்கிறது.

தற்போது ஏர்செல்லுக்கும், டவர் சேவை வழங்கும் நிறுவனத்துக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2 அல்லது 3 நாட்களில் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு டவர்கள் எல்லாம் இயங்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. ஒரு வேளை பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், மற்ற சேவை நிறுவனங்களுடன் இணைந்து அந்த நிறுவனங்களின் சேவையை வாடிக்கையாளர்களுக்குப் பெற்று தரும் முயற்சியில் ஏர்செல் நிர்வாகம் தீவிரமாக ஈடுபடும்.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட மாதம் ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் ‘போர்ட் அவுட்’ முறையில் மற்ற செல்போன் சேவை நிறுவனங்களுக்குச் செல்வார்கள். இப்போது 8 ஆயிரம் டவர்கள் செயல் இழந்துள்ள நிலையில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஒரே சமயத்தில் போர்ட் சர்வரைப் பயன்படுத்த முயற்சி செய்துள்ளனர். இதனால் போர்ட் அவுட் சர்வரில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் அது சரியாகி வரும். அவரவர்களுக்கு போர்ட் அவுட் எண் கிடைக்கும். அதன் பின்னர் அவர்கள் விரும்பும் செல்போன் சேவையை பெற்றுக்கொள்ளலாம். போர்ட் அவுட் முறையைப் பயன்படுத்தி கொள்ள ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

அரசாணைகள் வாட்ஸ்அப்பில் அனுப்பக்கூடாது! : சித்தராமையா

வாட்ஸ்அப், பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற சமூக வலைதள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 
அரசாணைகள் அனுப்பப்படுவது சட்டப்படி செல்லாது என்று அறிவித்துள்ளார் கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா.

அரசுத்துறைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது தற்போது பரவலாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசு அதிகாரிகள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சரில் குழுக்களை ஏற்படுத்திக்கொண்டு, தங்களுக்குள் தகவல் பரிமாறி வருகின்றனர். தங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தகவல்கள் தெரிவிக்க, இதனைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவ்வாறு தகவல்களைப் பரிமாறிக்கொள்வது சட்டப்படி செல்லாது என்று அறிவித்திருக்கிறது கர்நாடகா மாநில அரசு.

கர்நாடகா சட்ட மேலவை உறுப்பினரான கோட்டா சீனிவாச பூஜாரி என்பவர், அரசு அலுவலர்கள் மத்தியில் வாட்ஸ்அப் போன்ற தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, அதன் மூலமாகத் தகவல்கள் பரிமாறிக்கொள்வது பற்றிக் குழப்பம் நிலவி வருவதாகக் குறிப்பிட்டார். அரசு ஆணைகள் மற்றும் சுற்றறிக்கைகளை மெசெஞ்சர்களில் அனுப்புவது சட்டப்பூர்வமானதா என்றும், அரசுத்துறைகளில் குறிப்புகளை பரிமாறவும் அரசாணைகளைத் தெரிவிக்கவும் இவை அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அவர் விளக்கம் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, “இதுவரை இதுபற்றி எந்த புகாரும் அரசுக்கு வரவில்லை. இதுபோன்ற தகவல்தொடர்பு சாதனங்கள் மூலமாக அரசாணைகளையோ, சுற்றறிக்கைகளையோ அனுப்புவதை அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை. அரசு அதிகாரிகளோ, அதிகாரத்தில் உள்ளவர்களோ தங்களுக்குள் குழுக்களை ஏற்படுத்தி, அதன் மூலமாகப் பேசிக்கொள்வது வெறும் தகவல் தொடர்புக்கானது மட்டுமே ஆகும். அது, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதல்ல. இம்மாதிரி அனுப்பப்படும் தகவல்கள், அதிகாரப்பூர்வமான அரசின் ஆணைகளாக ஏற்றுக்கொள்ளப்படாது” என்று விளக்கமளித்தார்.

”பல அரசு அதிகாரிகள் அரசாணைகளை வாட்ஸ் அப்பிலோ, வேறு ஆப்ஸ் மூலமாக அனுப்பி வருகிறார்கள். அதன்படி செயலாற்றுவதா அல்லது வழக்கம்போல அரசாணை வரும் வரை காத்திருப்பதா என்று புரியாமல், ஊழியர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்த விவகாரத்தில் தெளிவினை உண்டாக்கியுள்ளார் சித்தராமையா” என்று குறிப்பிட்டுள்ளார் இந்த விவாதத்தை எழுப்பிய பூஜாரி.