யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/9/16

10ம் வகுப்பு தனி தேர்வு 'தத்கல்' விண்ணப்பம்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, 'தத்கல்' திட்டத்தில், நாளை முதல், இரண்டுநாட்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர்வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு, அடுத்த மாதம் நடக்கஉள்ளது. இதற்கு குறித்த நாட்களில்விண்ணப்பிக்க தவறியோர், செப்., 16, 17ம் தேதிகளில், தத்கல்திட்டத்தில்
விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வு சேவைமையங்கள் மூலம், ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.

தத்கலில்விண்ணப்பிக்கும், தனித்தேர்வர்களுக்கு, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, வேலுார், கடலுார் மற்றும் சென்னைஆகிய மண்டல அலுவலகங்களின் தலைமையிடத்தில்மட்டுமே, தேர்வு மையங்கள் அமைக்கப்படும். அரசுத் தேர்வு சேவை மையங்கள்விபரத்தை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக