யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/9/16

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், தங்கள் ஓய்வூதியம் பற்றிய நிலையை அறிந்து கொள்ள புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் எஸ்எம்எஸ் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மத்தியஅரசின் ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக, புதிய இணையதளத்தை, மத்தியநிதியமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில்இன்று தொடங்கி வைத்தார். ‘www.cpao.in’ என்ற முகவரியில் ஓய்வூதியதாரர்கள்தங்கள் ஓய்வூதியம் பற்றிய நிலையை அறிந்துகொள்ளலாம். அத்துடன் குறைகள் தொடர்பான புகார்களில்
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், எஸ்எம்எஸ் மூலம்ஓய்வூதியம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
மொபைல்போன் மூலமாகவே புகார்களை அனுப்பலாம். அதன் மீது உடனடியாகநடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் பதில் தகவலும்அனுப்பப்படும். இதன்மூலம் 11.61 லட்சம் மத்திய அரசுஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், சுதந்திரப்போராட்ட தியாகிகள் பலன் அடைவார்கள் என்றுஅருண் ஜேட்லி கூறினார்.
புதிய இணையதளம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளால்தேவையில்லாமல் ஓய்வூதியதாரர்கள் அலைக்கழிக்கப்படுவது, மனவேதனை அடைவது தடுக்கப்படும். இனிமேல் ஓய்வூதியதாரர்கள் எந்த துன்பமும் படக்கூடாது. ஏனெனில், அவர்கள் நமது நாட்டின்மூத்த குடிமக்கள். அவர்களுக்கு ஓய்வூதியம் மிக முக்கியம். அதைசார்ந்துதான் அவர்கள் இருக்கின்றனர் என்றுஜேட்லி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில்கணக்கு தணிக்கைத் துறை தலைவர் எம்.ஜே.ஜோசப் பேசும்போது, ‘‘இந்த புதிய இணையதளம் ஓய்வூதியதாரர்களின்குறைகளை தீர்த்து வைப்பதில் வெளிப்படை தன்மை மற்றும் நம்பிக்கையைஏற்படுத்துவதாக இருக்கும்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக