யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/9/16

ஜே.இ.இ., தேர்வு முறையில் மாற்றம்

 உயர் கல்வி தொழில்நுட்பநிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை, இந்த ஆண்டு, சென்னை ஐ.ஐ.டி., நடத்தஉள்ளது.

 உயர் கல்வி தொழில்நுட்பநிறுவனமான, என்.ஐ.டி., - ஐ.ஐ.டி., - சி.எப்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, ஜே.இ.இ.,
தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும். ஜே.இ.இ., மெயின், அட்வான்ஸ்ட் என, இரு கட்டங்களாகஇந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதுவரை, ஜே.இ.இ., தேர்வில்பெறும் மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக கணக்கிடப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு முதல், இந்தவெயிட்டேஜ் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வில், 75 சதவீதத்திற்கு மேல், மதிப்பெண் பெற்றால்மட்டுமே, ஜே.இ.இ., தேர்வில் பங்கேற்க முடியும். இந்த தேர்வில் பெறும்மதிப்பெண் அடிப்படையில் தான், மாணவர் சேர்க்கைநடக்கும்; தரவரிசை பட்டியல் தயாரிக்க, பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடப்படாது. புதிய மாற்றத்துடன் கூடிய, ஜே.இ.இ., தேர்வின்முதன்மை தேர்வை, மத்திய இடைநிலைகல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்த உள்ளது. அடுத்தகட்ட, அட்வான்ஸ்ட் தேர்வை, சென்னை ஐ.ஐ.டி., நடத்தஉள்ளது. வினாத்தாள் தயாரிப்பு, விடைத்தாள் திருத்தம், முடிவு வெளியிடுதல் போன்றபணிகளை, சென்னை ஐ.ஐ.டி., மேற்கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக