யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/9/16

புதிய வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பில்லை

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம்இல்லாததால், உள்ளாட்சித் தேர்தலில் புதிய வாக்காளர்களை சேர்க்கவாய்ப்பில்லை என, ஊரக வளர்ச்சித்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.


உள்ளாட்சித்தேர்தல் அக்டோபருக்குள் நடத்தி முடிக்க மாநிலதேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. சட்டசபைத்தேர்தல் வாக்காளர்கள்
அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியல்தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் ஓரிருநாட்களில் வெளியிடப்பட உள்ளது. புதிதாக வாக்காளர்களைஇந்திய தேர்தல் ஆணையம் மூலமேசேர்க்க முடியும்.

அவற்றிற்குகால அவகாசம் இல்லாததால் வாக்காளர்பட்டியலில் விடுபட்ட பெயர், திருத்தம், முகவரிமாற்றம் மட்டும் மேற்கொள்ள முடியும்வாய்ப்புள்ளது. ஊரகவளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில்வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப்பணி செப்., 1 முதல் செப்., 30 வரைநடக்கிறது. இதில் பெயர் சேர்க்க2017 ஜன., 1 ல் 18 வயது நிரம்பினால்போதும். உள்ளாட்சித் தேர்தலில், ஏற்கனவே 18 வயது பூர்த்தி அடைந்திருந்தால்மட்டுமே வாக்கு அளிக்க முடியும். இதனால் தற்போது பெறப்படும் விண்ணப்பங்களைவயது அடிப்படையில் பிரித்து சேர்ப்பதில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். மேலும் விண்ணப்பங்களை ஆய்வுசெய்து பெயர் சேர்த்தலுக்கு காலஅவகாசமும்இல்லை. இதனால் சட்டசபைத் தேர்தலில்பெயர் இருந்து உள்ளாட்சி தேர்தல்வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் சரிசெய்ய வாய்ப்பு தரப்படும். அதேபோல் திருத்தம், முகவரிமாற்றம் மேற்கொள்ளலாம். வேட்பாளர்களாக இருந்தால் பெயர் சேர்க்கப்படும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக