யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/9/16

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையேநடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டவல்லுநர் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமைநடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் பிற்பகல்3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறுஅரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். கடந்த சட்டப் பேரவைத்தேர்தலின் போது,
அதிமுக சார்பில்வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பழையஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழுஅமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கைபெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமேதொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதியதாககுழு: தமிழக அரசு அமைத்துள்ளகுழுவின் தலைவராக, முதல்வர் அலுவலக சிறப்புப் பணிஅலுவலர் சாந்தா ஷீலா நாயர்நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல்தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சென்னைபொருளாதார பள்ளியின் பேராசிரியர்கள் கே.வி.பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோரும், குழுவின் உறுப்பினர் செயலாளராக திட்டம்-வளர்ச்சி-சிறப்புமுயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணனும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், பேராசிரியர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோர்குழுவில் தாங்கள் தொடர முடியாதுஎன அரசுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை பொருளாதார பள்ளியின்மற்றொரு பேராசிரியரான டாக்டர் பிரிஜேஷ் சி.புரோகித் நியமிக்கப்பட்டார்.
முதல் கூட்டம்: தமிழக அரசின் வல்லுநர்குழு புதிதாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அந்தக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச்செயலகத்தில் வியாழக்கிழமை (செப். 15) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இதுதொடர்பாக, வல்லுநர் குழுவின் உறுப்பினர் செயலாளரும், முதன்மைச் செயலாளருமான எஸ்.கிருஷ்ணன் சார்பில்அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வல்லுநர் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தின்பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இந்தக்கூட்டத்தில் தங்களது கருத்துகளை அரசுஊழியர்கள் சங்கங்கள் தெரிவிக்கலாம். இதற்காக, சங்கத்தின் 3 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும். மேலும், கருத்துக் கேட்புகூட்டத்தின் போது நேரத்தை சிறப்பானமுறையிலும், உரிய வகையிலும் பயன்படுத்தஏதுவாக எழுத்துப்பூர்வமாகவும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தனது கடிதத்தில்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக