யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/9/16

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற முடிவு

புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும்பாதிப்பு குறித்து மக்கள் அறிந்து கொள்ளும்வகையில், கையெழுத்து இயக்கம் நடத்த தமிழ்நாடுகல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்புமுடிவு செய்துள்ளது.
இக்கூட்டமைப்பின்மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமைநடைபெற்றது. அமைப்பாளர் செல்வராசன் தலைமை
வகித்தார். மாவட்டநிதிக் காப்பாளர் பழனிவேலு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழக மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்: புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காகமத்திய அரசு வெளியிட்டுள்ள முன்மொழிவுகளின்மீது பொதுமக்கள் கருத்து கூறுவதற்கு டிசம்பர்மாதம் வரை கால அவகாசம்அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள்நாடு முழுவதும் விரிவான அளவில் புதியகல்விக் கொள்கையின் மீது கருத்துக் கேட்புகூட்டங்களை நடத்த வேண்டும்.
கல்வியைமத்திய அரசின் பொதுப் பட்டியலில்இருந்து மாநில அரசுகளின் பட்டியலுக்குமாற்றிடும் வகையில் உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய அரசு தேசியமொத்த உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதம் நிதி ஒதுக்கீடுசெய்ய வேண்டும். தமிழக அரசு மாநிலவரவு, செலவு அறிக்கையில் கல்விக்கு30 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.

புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும்ஆபத்துகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் வரும்18-ஆம் தேதி முதல் 28-ஆம்தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில்50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறும்நோக்கில் கையெழுத்து இயக்கம் நடத்துவது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய மாணவர் சங்கமாவட்டச் செயலர் ஜோதிபாசு நன்றிகூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக