யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/6/17

எங்க பள்ளியை விட்டு அவர் போகக்கூடாது!’ அரசுப் பள்ளி ஆசிரியரை வழியனுப்ப மறுக்கும் கிராமத்தினர்

ஓர்ஆசிரியருக்கு மிகப் பெரிய அங்கீகாரம் என்பதுமாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தருகிறஅன்பும் மரியாதையும்தாம்அப்படியான அங்கீகாரம்
அரசுப் பள்ளி ஆசிரியர் வசந்த் அவர்களுக்குக்கிடைத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்அரசுப்பள்ளி என்றாலே மாணவர்களுக்குத் தேவையானவிஷயங்களில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும்.அதையே காரணமாக கூறிவசந்த் தன் பணியின்கடமையிலிருந்து விலகி விடவில்லைதன் சக்திக்குமீறியும் அந்தப் பள்ளிக்கு அவர் செய்தது ஏராளம்அவரிடம்பேசியபோது,

"ரொம்ப அழகான பள்ளி இதுஅதைஇன்னும் அழகாகவும்கற்பதற்கும் சிறப்பானதாக மாற்ற வேண்டும் எனநினைத்தேன்பள்ளிக்குத் தேவையானவற்றைப்பட்டியலிட்டேன்தமிழ்நாடு அரசின் சிறப்பானதன்னிறைவுத் திட்டத்தில்பள்ளியின் தேவைக்கானதொகையில் மூன்றில் ஒரு பங்கை நாம் செலவிட்டால்மீதத்தை அரசு அளித்துவிடும்எனவே அதற்கானதொகையைச் சேகரிக்கத் தொடங்கினேன்.

அரசுப் பள்ளியில் படித்தவர்கள் இன்றுஉலகம் முழுவதும்பல்வேறு வேலைகளில் இருக்கின்றனர்அவர்களுக்குஇதுபோன்ற பள்ளிகளுக்கு உதவ வேண்டும் எனும்எண்ணம் இருப்பதைத் தெரிந்துகொள்ள என் நண்பனே ஓர்உதாரணம்அவனிடம் பள்ளியைப் பற்றிக்கூறிக்கொண்டிருந்தபோது, 50 ஆயிரம் ரூபாய் தந்துஆச்சர்யப்படுத்தினான்முழுமதி அறக்கட்டளை எனும்அமைப்பு வெளிநாட்டில் இயங்கி வருகிறதுஅதுஒருலெட்சத்துக்கும் அதிகமான தொகையைத் தந்தனர்.இவற்றை வைத்து, 1,69.000 ரூபாயை தமிழக அரசுக்குஅனுப்பினோம்.
எங்களின் இந்த முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைத்தது.தமிழக அரசு ஒதுக்கிய சுமார் 5 லட்சம் நிதியால் 23கம்ப்யூட்டர்களும் அவற்றிற்கு 46 நாற்காலிகளும் எங்கள்பள்ளிக்குக் கிடைத்தனமூன்று இன்வெர்ட்டர்பேட்டரிகளும் வாங்கினோம்இரண்டு வகுப்பறைகளைஏஸியாக்கினோம்தமிழக அளவில் ஒரு நடுநிலைப் பள்ளிஇவ்வளவு வசதிகள் இருக்குமா என்பது சந்தேகம்தான்.இவற்றையெல்லாம் செய்ததற்கு முதல் காரணம்எங்கள்பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வியைக் கற்கவேண்டும் என்பதற்காகத்தான்ஏனெனில்,  பணம்கொடுத்துஇவற்றைக் கற்றுக்கொள்ளும் நிலையில்பொருளாதார நிலையில் அவர்கள் இல்லை." என்று சமூகஅக்கறையோடு பகிர்ந்துகொள்கிறார் வசந்த்.
பள்ளிக்கான பொருள்களின் தேவைகளைப் பூர்த்திசெய்பவராக மட்டும் ஆசிரியர் வசந்த் விளங்கவில்லை.மாணவர்களின் நடத்தையைச் சீர்செய்வதுமெள்ள கற்கும்மாணவர்களிடம் தனிக்கவனம் எடுப்பது என அனைத்துவேலைகளையும் சுயஆர்வத்தின் அடிப்படிப்படையில்செய்தவர்ஏறக்குறைய கீழப்பாலையூர் பள்ளியின்தேவைகளை நிறைவேற்றிய வசந்த் எடுத்த முடிவுபலருக்கும் ஆச்சர்யமானது.

கீழப்பாலையூரிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர்தொலைவிலுள்ள கீரனூர் பள்ளிக்கு பணி மாறுதலில்சென்றுவிட்டார்அதற்கு அவர், "ஒரு பள்ளியின்தேவைகளை நிறைவேற்றியாச்சுஅவற்றைக் கொண்டுஇங்குள்ள ஆசிரியர்கள் சிறப்பாக மாணவர்களுக்குவழிக்காட்டுவார்கள் என்பது தெரியும்அதனால் வேறொருபள்ளிக்குச் சென்று இதேபோல வேலைகளைச் செய்யலாம்என்பதால் இந்த முடிவு எடுத்தேன்என்கிறார் வசந்த்.

பள்ளி

பணிமாறுதல் கிடைத்துகீரனூர் பள்ளியில் வேலைகளைத்தொடங்கியும் விட்டார்பள்ளியின் முன்புறம் குண்டும்குழியுமாக இருந்ததை மணல் அடித்து சமப்படுத்தும் வேலைமும்மரமாக நடந்து வருகிறதுஇந்த நிலையில் வசந்தின்மொபைலுக்கு கீழப்பாலையூரிலிருந்து ஏகப்பட்டஅழைப்புகள்அப்படி அழைத்தவர்களில் ஒருவர்தான்பால்ராஜ்வசந்திடம் படித்துவிட்டுதற்போது டிப்ளமோபடித்திருக்கிறார்.

"வசந்த் சார் எங்க பள்ளியை விட்டுப் போனதே தெரியாது.இந்த வருஷம் ஸ்கூல் திறந்ததும் சார் வரலைனு பசங்கசொன்னாங்கசரிஎதுக்காச்சும் லீவு போட்டிருப்பாங்கனுநினைச்சிட்டிருந்தோம்இப்ப விசாரிச்சப்பதான் அவர் வேறபள்ளிக்கூடத்துக்கு டிரான்ஸ்பர் ஆகியிருக்கிறதுஅவர்எங்க ஊருக்கே திரும்பவும் வரணும் சார்எங்க பள்ளியைவிட்டு அவரை அனுப்ப மாட்டோம்அதுக்காக ஸ்டிரைக்பண்ணக்கூட நாங்க ரெடியாயிட்டோம்." என்று உணர்ச்சிபூர்வமாக கூறுகிறார் பால்ராஜ்.
 
முருகன் என்பவரின் மகன்கள் கீழப்பாலையூரில்படித்தவர்கள்அவர் பேசும்போது, "என்னோட பசங்கஅவர்கிட்ட நல்லா படிச்சாங்கஇப்ப ப்ளஸ் டூ படிக்கிறாங்க.ஒவ்வொரு நாளும் சாரைப் பத்தி சொல்லிகிட்டேஇருப்பாங்கஇப்படி தீடீர்னு எங்க வூரு ஸ்கூலை விட்டுவேற ஊருக்குப் போவாருனு எதிர்பார்க்கலஎன்னசெஞ்சாவது அவரை இந்த ஸ்கூலுக்கே அழைச்சிட்டுவந்துடணும்னு உறுதியாக இருக்கோம்என்றார் முருகன்.

பால்ராஜ்முருகன் மட்டுமல்ல கீழப்பாலையூரின்பொதுமக்கள் அனைவரும் வசந்த் திரும்பவும் தங்கள்ஊருக்கே ஆசிரியராக வர வேண்டும் என்கிற முடிவோடுஇருக்கிறார்கள்இதற்கான வேலைகளை நிச்சயம்செய்வோம் என்கிறார்கள்ஆனந்திடம் இது குறித்துகேட்டபோது,


"என் மேல் இவ்வளவு அன்பு வெச்சிருக்காங்கனு நினைச்சுசந்தோஷப்பட்டாலும்கீரனூர் ஸ்கூலிலும் என்னைஆர்வமா வரவேற்றாங்கதிரும்பவும் கீழப்பாலையூருக்குவர்ற சூழல் வந்தா கீரனூர் பசங்கஏமாற்றமடைஞ்சிடுவாங்கஎனக்கு என்ன செய்யறதுன்னேதெரியலஎன்கிறார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் 37 அறிவிப்புகளால், யார் யாருக்கு என்ன பலன்?

கடந்த இரண்டு மாதங்களாக '41 அறிவிப்புகள் வெளியிடுவேன்' என்றும், 'அந்த அறிவிப்புகளால் நாடே திரும்பிப் பார்க்கும்' என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில்
தெரிவித்துவந்தார். இதனால் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்புகள்குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்துவந்தது. நேற்று பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை விவாதத்தில் 37 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். இவற்றை ஏழு வகைகளாகப் பிரித்திருக்கிறோம். ஒவ்வொரு பிரிவின் கீழ் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகியுள்ளன என்பதைப் பார்ப்போம்.
மாணவர் நலன் சார்ந்த அறிவிப்புகள்:

புதியதாக 30 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் புதுமைகளைப் புகுத்தி சிறப்பாகச் செயல்படும் நான்கு அரசுப் பள்ளிகளைக் கண்டறிந்து `புதுமைப் பள்ளி' விருது 1.92 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலுக்கான அட்டைகளை வாங்க 31.82 கோடி ரூபாய் செலவிடப்படும். 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணினிவழிக் கற்றல் மையங்கள் அமைக்க 6.71 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும், நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் 5,639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 22.56 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். 31,322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 4.83 கோடி ரூபாய் செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

பள்ளிக்கல்வித் துறை

அரசுமற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு 39.25 கோடி ரூபாய் செலவில் கற்றல் துணைக் கருவிகள் வழங்கப்படும் என்றும், திறனறித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு 2.93 கோடி ரூபாய் செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்றும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனித்திறமையோடு விளங்கும் 100 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று கோடி ரூபாய் செலவில் மேலைநாடுகளுக்குக் கல்விப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், கலை, இலக்கியம் நுண்கலை உள்ளிட்ட 150 வகை பிரிவுகளில் பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் ஒரு மாபெரும் மாணவர் கலைத் திருவிழா நான்கு கோடி செலவில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவிடும் வகையில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படும். ஒன்றிய அளவில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். மேற்படிப்பு / வேலைவாய்ப்புக்கான போட்டித்தேர்வுகளுக்கு வழிகாட்டி மையங்கள் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்படும். மேலும், கருத்தரங்குகள் இரண்டு கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஆசிரியர் நலன் சார்ந்த அறிவிப்புகள்:

4,084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாகச் செயல்படும் ஆறு ஆசிரியர்களுக்குக் கனவு ஆசிரியர் விருதும், 10,000 ரூபாய் ரொக்கப் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்க தொடர் நீட்டிப்பு கோரப்படும் 17,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும் என்றும், சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மின்ஆளுமை சார்ந்த அறிவிப்புகள்:

காணொளி பாடங்கள், கணினிவழித் தேர்வுகள், அலைபேசிச் செயலிகள் உள்ளடக்கிய கற்றல் மேலாண்மைத் தளம் இரண்டு கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். அரசுத் தேர்வுகள் இயக்ககச் செயல்பாடுகள் இரண்டு கோடி ரூபாய் செலவில் கணினி மயமாக்கப்படும். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தொடங்க அனுமதி/ அங்கீகாரம்/ தொடர் அங்கீகாரம் வழங்க இணைய வழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நூலகத் துறை சார்ந்த அறிவிப்புகள்:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்பொது நூலகங்களுக்கு 25 கோடி ரூபாய் செலவில் புதிய நூல்களும், அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு ஐந்து கோடி ரூபாய் செலவில் புதிய நூல்கள் வாங்கப்படும். அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மூன்று கோடி ரூபாய் செலவில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும். தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் ஆறு கோடி ரூபாய் செலவில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும். 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் சிந்துசமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த நூலகமும், தஞ்சாவூரில் தமிழிசை, நடனம் மற்றும் நுண்கலைகள் சார்ந்த நூலகமும், மதுரையில் நாட்டுப்புறக் கலைகள் சார்ந்த நூலகமும், திருநெல்வேலியில் தமிழ் மருத்துவம் சார்ந்த நூலகமும், நீலகிரியில் பழங்குடியினர் பண்பாடு சார்ந்த நூலகமும், திருச்சியில் கணிதம், அறிவியல் சார்ந்த நூலகமும், கோயம்புத்தூரில் வானியல், புதுமைக் கண்டுபிடிப்புகள் சார்ந்த நூலகமும், சென்னையில் அச்சுக்கலை சார்ந்த நூலகம் என்று தனித்தன்மை வாய்ந்த எட்டு சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் எட்டு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

மாவட்ட மைய நூலகங்களில் போட்டித்தேர்வுப் பயிற்சி மையங்கள் 72 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். 123 முழுநேரக் கிளை நூலகங்களில் மின்னிதழ் வசதிகளுடன்கூடிய கணினி வசதி 1.84 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். இரண்டு கோடி ரூபாய் செலவில் நவீன மின் நூலகம் அமைக்கப்படும். அரிய வகை நூல்கள் மற்றும் ஆவணங்களைப் பொதுமக்களிடமிருந்து கொடையாகப் பெறும் திட்டம் தொடங்கப்படும். அரியவகை நூல்களைப் பாதுகாத்துவரும் தனியார் அமைப்புகள் நடத்திவரும் நூலகங்களுக்குப் பராமரிப்பு நிதி வழங்கப்படும். நவீன அறிவியல், தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் ஐந்து கோடி ரூபாய் செலவில் மொழிபெயர்க்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் நடமாடும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நிர்வாகம் சார்ந்த அறிவிப்புகள்:

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புதிய பணியிடங்கள் 60 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும். பள்ளிக்கல்வித் துறையின் அலுவலர்களுக்கு 2.89 கோடி ரூபாய் செலவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும்.

முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி சார்ந்த அறிவிப்புகள்:

மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்புக்கு இணையான சமநிலைக் கல்வித் திட்டம் 13.94 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சர்வதேச அளவில் பரவியுள்ள தமிழர் நலன்:

உலகநாடுகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு, தமிழ் கற்பித்தலுக்குத் தேவையான தமிழ்ப் பாடநூல்கள் அனுப்புதல், சிறந்த தமிழாசிரியர்கள் மூலம் பயிற்சி மற்றும் இணைய வழியில் தமிழ் கற்பித்தல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தவும், உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் கொடையாக வழங்கப்படும். இதில் முதற்கட்டமாக, யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கும் மலேயாப் பல்கலைக்கழக நூலகத்துக்கும் ஒரு லட்சம் நூல்கள் கொடை என்று அறிவித்திருக்கிறார்கள்.

இந்தத் திட்டங்கள் குறித்து, கல்வியாளர்கள் சிலரிடம் கருத்துகளைக் கேட்டோம்.

பள்ளிக்கல்வித்துறைதமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சாமி. சத்தியமூர்த்தி கூறியதாவது...

“தொடக்கப் பள்ளிகளில் புத்தகங்கள், வார இதழ்கள், தினசரி பத்திரிகைகள் வாங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் கல்வித் துறை அமைச்சர். இதனால் மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தவிர இதர விஷயங்களையும் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்ல விஷயமே. ஆனால், பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் சரியான முறையில் தினசரி செய்தித்தாள்களையும், இதழ்களையும் வாங்குகிறார்களா என்பது தெரியாது. இதைத் தவிர்க்கும்விதமாக அரசே நேரிடையாகப் பள்ளிகளுக்கு புத்தகங்கள், வார இதழ்கள், தினசரி பத்திரிகைகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் நாப்கின் எரியூட்டுதலுக்கு இயந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதும் சிறப்பு. தற்போது சுகாதாரமான முறையில் நாப்கின் அகற்றப்படாமல் சுகாதார பிரச்னையைச் சந்திக்கும்வகையில் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.

பள்ளிகளைக் கண்காணிக்க, கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாகன வசதி இல்லாமல் இருந்தது. இதனால் கல்வித்துறை அதிகாரிகள் பல பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லாமல் இருந்தார்கள். தற்போது வாகனங்கள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கியிருப்பதன் மூலம் இனி கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு அடிக்கடி ஆய்வுக்குச் செல்ல வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

கணினி வசதியை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இந்த நிதியில் பள்ளிகளில் வைஃபை வசதியையும் இணைய வசதியையும் ஏற்படுத்திட வேண்டும். மேலும், பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கிறார்கள். கணினி ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றமே. இனிவரும் காலங்களில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

பள்ளியில் கழிப்பிட வசதி குறித்து பலரும் பேசிவருகிறார்கள். ஆனால், துப்புரவாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. மேலும், துப்புரவாளர்களுக்கு மாதச் சம்பளமாக 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது மிகவும் குறைந்த தொகை என்பதால், துப்புரவுப் பணிக்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. துப்புரவுப் பணியாளர்களுக்கு மாதச் சம்பளமாக வழங்கப்படும் தொகையை அதிகரிக்க வேண்டும். இனிவரும் அறிவிப்புகளில் இதை வெளியிட்டால் கல்வித் துறை மேம்படும்" என்கிறார் சாமி. சத்தியமூர்த்தி.

`பொதுப்பள்ளிக்கான மாநில மேடை' அமைப்பின் பொதுச் செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவுடன் பேசினோம்.

பள்ளிக்கல்வித்துறை  கல்வியாளர் கஜேந்திர பாபு "பள்ளிகளை மூடுவோம் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்குப் பதிலாக, 30 தொடக்கப் பள்ளிகளை ஆரம்பிப்போம் என்பதும், பள்ளி மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் திட்டம், பள்ளிகளில் தினசரி செய்தித்தாள்கள், வார இதழ்கள், புத்தகங்கள் வாங்க வழி செய்திருப்பது எனப் பல அறிவிப்புகளும் வரவேற்புக்குரியவைதான்.

அரசுப் பள்ளிகள் `அருகாமை பள்ளிகளாக' அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் சார்ந்த வேலையோடு பல்வேறு பணிகளைக் கொடுக்கிறார்கள். இதனால் மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், கற்றல் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட, ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உடற்பயிற்சி ஆசிரியர், இசை ஆசிரியர், ஓவிய ஆசிரியர் பணிகளை நியமித்தல் குறித்த அறிவிப்பும் இல்லை. 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய ஆசிரியர் பணியிடங்கள் மறைந்துவிட்டன. இத்தகைய ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே சமமான கற்றலுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இந்தஅறிவிப்பில் `யோகாவைக் கட்டாயப்படுத்துவோம்' என்பதை எதிர்க்கிறோம். இது, தனிமனிதத் தேவையில் குறுக்கிடுவதுபோல் இருக்கிறது. குழந்தைகளின் மீது குறிப்பிட்ட ஒரு விளையாட்டையோ அல்லது செயல்பாட்டையோ திணிப்பது என்பதை அனுமதிக்கக் கூடாது. ஒரு கலாசாரத்தையோ, முறையோ திணிப்பது என்பது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.


ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தும் வேளையில் வெயிட்டேஜ் முறையைக் கொண்டுவந்தார்கள். இந்த முறை ஆசிரியர் தகுதித்தேர்வைத் தகுதியிழக்கச் செய்கிறது. 120 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்காமல், 92 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்கிறது. குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி என நிர்ணயித்துவிட்டு, அதில் வெயிட்டேஜ் என்று பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணிலிருந்து கணக்கில் எடுத்துக்கொண்டு நிர்ணயிப்பது என்பது சரியான முறை அல்ல. இந்த வெயிட்டேஜ் முறை கைவிடுவதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை. இந்த அறிவிப்புகள் எல்லாம் சேர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" என்கிறார்.

15 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டை யன்

அரசுபள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில்,

15 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டை யன் கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:

 கே.பொன்முடி (திமுக):அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக் குறை நிலவுகிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு செயல் படுத்தப்பட்டுவரும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத் தில் (சிபிஎஸ்) ஊழியர்களிடம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப் படுகிறது. அரசு தன் பங்காக 10 சதவீதம் செலுத்துகிறது. சிபிஎஸ் திட்ட நிதியை, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது பெற முடியாத நிலை உள்ளது.


பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்:அரசு ஊழி யர்களுக்கு தற்போது நடைமுறை யில் இருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. அரசு பள்ளிகளில் ஆசிரி யர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் 15 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படு வார்கள்என்றார்

16/6/17

பெட்ரோல், டீசல் விலை இன்று முதல் தினமும் மாறும்

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை இன்று(ஜூன் 16) முதல் தினமும் மாற்றப்பட உள்ளது. இந்நிலையில், இவற்றின் விலை, நேற்று குறைக்கப்பட்டுள்ளது.


சோதனை:

பெட்ரோல், டீசலின் விலையை, எண்ணெய் நிறுவனங்கள், மாதத்தின், முதல் மற்றும், 16ம் தேதிகளில் மாற்றி அமைத்து வந்தன. சர்வதேச சந்தைக்கு ஏற்ப, இந்த மாற்றங்கள் இருந்தன. சண்டிகர், ஜாம்ஷெட்பூர், புதுச்சேரி, உதய்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில், இவற்றின் விலையை தினமும் மாற்றி அமைக்கும் திட்டம் சோதனை அடிப்படையில், மே, 1ல் அறிமுகம் செய்யப்பட்டது. 


இன்று முதல் அமல்:

இந்நிலையில் இன்று முதல், நாடு முழுவதும், பெட்ரோல், டீசல் விலை, தினமும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும், காலை 6:00 மணிக்கு, இவற்றின் விலை நிர்ணயிக்கப்படும்.


விலை குறைப்பு:

இந்த நிலையில், மாதத்தின் இருமுறை விலையை மாற்றி அமைக்கும் திட்டத்தின் கீழ், பெட்ரோல், டீசல் விலை நேற்று குறைக்கப்பட்டுள்ளது. 'வாட்' வரி இல்லாமல், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 1.12 ரூபாயும், டீசல் விலை, லிட்டருக்கு, 1.24 ரூபாயும் குறைந்துள்ளது; இது, காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

நீட்'டில் 29 வகை வினாத்தாள்: குறிப்பில் தகவல்

மருத்துவ சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவு தேர்வில், 29 வகை வினாத்தாள்களுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
அனைத்து மாநிலங்களிலும், மத்திய, மாநில அரசு ஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், அனைத்து மாநிலங்களிலும், 'நீட்' தேர்வு அறிமுகமாகியுள்ளது. மே, 7ல் நடந்த, 'நீட்' தேர்வில், தேர்வர்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதேபோல், நாடு முழுவதும், ஒரே வகை வினாத்தாள் இல்லை என்றும் புகார் எழுந்தது.
இந்நிலையில், வினாத்தாளுக்கான விடைக்குறிப்பு, நேற்று சி.பி.எஸ்.இ.,யின், http://cbseneet.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில், 29 வகை வினாத்தாள்களுக்கான, விடைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மொத்தம், 180 வினாக்களுக்கு, விடைகள் உள்ளன. இவற்றை தேர்வர்கள் பார்த்து, விடையில் மாற்றம் இருந்தால், உரிய ஆதாரத்துடன், இன்று மாலை, 5:00 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துஉள்ளது.

அண்ணாமலை பல்கலையில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பல்கலை பதிவாளர் ஆறுமுகம் செய்திக்குறிப்பு: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 2017 - 18ம் கல்வியாண்டில், அனைத்து பாடப் பிரிவுகளுக்கும், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய, ஜூன் 14 கடைசி நாள் என நிர்வாகம் அறிவித்திருந்தது.
மாணவர்கள் நலன் கருதி, கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இதில், ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு வகுப்புகள் எம்.ஏ., - எம்.காம்., - எம்.எஸ்.டபிள்யூ., - எம்.எச்.எஸ்.எஸ்., - எம்.ஆர்.எஸ்., - எம்.எஸ்சி., மரைன் சயின்ஸ் - நர்சிங் - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., ஆகிய வகுப்புகள். பி.பிஎட்., - எம்.பிஎட்., எம்.பி.டி., - சர்டிபிகேட் புரோகிராம் இன் டென்டல் மெக்கானிக்ஸ், டிப்ளமா இன் ஜெனரல் நர்சிங் மிட்வைப்ரி, பொறியியல் பிரிவில் பி.இ., - பி.இ., பார்ட் டைம் - எம்.இ., - எம்.டெக்., - எம்.பார்ம்., மற்றும் அனைத்து இசைப் பிரிவு வகுப்புகள்.இந்த வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, வரும், 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

4 மாணவர்களே படிக்கும் அரசு பள்ளி

மேட்டூர்: கொளத்துார் ஒன்றியத்திலுள்ள இரு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில், 13 மாணவர்களே படிக்கின்றனர்.
இரு பள்ளிகளிலும், நான்காம் வகுப்பில் மாணவர்களே கிடையாது. சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா கொளத்துார் ஒன்றியத்தில், 75 அரசு பள்ளிகள் உள்ளன. இதில்,கோல்நாயக்கன்பட்டி பஞ்சாயத்து, ஏரிக்காடு கிராமத்தில் ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், தற்போது, முதல் வகுப்பில், இருவர், இரண்டாம் வகுப்பில், நால்வர், மூன்றாம் வகுப்பில், இருவர், ஐந்தாம் வகுப்பில் ஒருவர் என, ஒன்பது மாணவ, மாணவியரே படிக்கின்றனர். பள்ளியில், நான்காம் வகுப்பில் மாணவர்களே கிடையாது. ஐந்தாம் வகுப்பில், ஒரு மாணவி மட்டுமே படிக்கிறார். அவர் ஒருவருக்கு மட்டுமே, பள்ளி தலைமை ஆசிரியர் பாடம் நடத்துகிறார். இதுபோல, கொளத்துார் அடுத்த செ.செ.,காட்டுவளவு கிராமத்தில் உள்ள ஒன்றிய துவக்க பள்ளியிலும், நான்காம் வகுப்பில் மாணவர்களே கிடையாது. இதர, 1, 2, 3, 5 ஆகிய நான்கு வகுப்புகளிலும் தலா ஒரு மாணவ, மாணவியர் மட்டுமே படிக்கின்றனர்.
இரு பள்ளிகளிலும், தலா ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர் பணிபுரிகின்றனர். இரு பள்ளிகளிலுமே, தலைமை ஆசிரியர், தலா ஒரு மாணவருக்கு மட்டுமே பாடம் நடத்துவது குறிப்பிடத்தக்கது. தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டும் நிலையில், அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதால், இரு பள்ளிகளும், வரும் ஆண்டுகளில் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு இன்ஜி., கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை

சென்னை: ''அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகையாக, மீண்டும், 6,000 ரூபாய் வழங்கப்படும்,'' என, உயர ்கல்வி துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் கூறினார்.

உயர் கல்வித்துறை மானிய கோரிக்கையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* அரசு இன்ஜி., கல்லுாரிகளில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகையாக, மீண்டும், 6,000 ரூபாய் வழங்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு, 8.29 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* அரசின் பலவகை தொழில் நுட்ப கல்லுாரிகளில், கட்டடவியல்; மின்னியல் மற்றும் மின்னணுவியல்; மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்; இயந்திரவியல் மற்றும் கணினி பொறியியல் ஆகிய பிரிவுகளில், மாணவர்கள், டிப்ளமா படிக்கின்றனர். அவர்கள், எங்கும், எதையும் கற்கும் வகையில், அண்ணா பல்கலை மூலம், 36 பாடங்களில், ஒரு பாடத்திற்கு, 20 மின் கற்றல் ஒளித்தொகுதி என்ற, 'இ - லேர்னிங் வீடியோ மாட்யூல்ஸ்' வழங்கப்படும்
* சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், 2.5 கோடி ரூபாயில், சுனாமி, நில அதிர்வு போன்ற பல்வேறு அறிவியல் நிகழ்வுகளை எளிதாக விளக்க, ஆறு அடி விட்டம் உடைய, முப்பரிமான அறிவியல் கோளம் அமைக்கப்படும்.
* வேலுாரில் உள்ள திருவள்ளுவர் பல்கலையின், முதுகலை விரிவு மையம், விழுப்புரத்தில் செயல்படுகிறது. அங்கு, மூன்று கோடி ரூபாயில், புதிய கட்டடம் கட்டப்படும். அழகப்பா பல்கலையில் திறன் வங்கி மையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.

37 அறிவிப்புகள் விளக்கமாக ........


அரசு பள்ளிகளில், உயர் தரமான கல்வியை கற்பிக்கவும், அங்கு பயிலும் மாணவர்களை, நவீன தொழில்நுட்ப மாறுதல்களுக்கு ஏற்ப தயார்படுத்தவும் அதிரடி நடவடிக்கையாக 37 புதிய அறிவிப்புகளை சட்டசபையில் நேற்று, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். அதற்கு, பல்வேறு கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.



சட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். 

அவர், 'ஐந்து ஆண்டுகளில், பள்ளிகளில், கல்வி மற்றும் கல்வி சார்ந்த வசதிகள், உட் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கல்வி வசதியின் பரவல் அனைவரையும் சென்றடைந்த நிலையில், தரமான கல்வியை அளிப்பது அடிநாதமாகியுள்ளது.

கடந்த கால அனுபவங்கள், நிகழ்கால சவால்கள், மாறி வரும் சூழலுக்கேற்ப மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. கல்வியின் பரிணாம வளர்ச்சி கருதி, கல்வித் தரம் மாபெரும் உயரத்தை எட்ட வேண்டும்' என, தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, '17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களின் பணி நிரந்தரம்; பள்ளிகள் தோறும் மாணவர் நாளிதழ் வாங்குதல்; 'ஆன்லைனில்' தேர்வு ஹால் டிக்கெட், போட்டித் தேர்வுக்கு வசதிகள், கணினி வழி கல்வி' என, 37 புதிய அறிவிப்புகளை, அமைச்சர் வெளியிட்டார்.

அதன் விபரம்:

* கிராமம் மற்றும் மலைப் பகுதி உள்ளிட்ட 30 இடங்களில் புதிய துவக்கப் பள்ளிகள் துவங்கப்படும்
* சிறப்பாக செயல்படும் பள்ளிகளை கண்டறிந்து, மாவட்டத்திற்கு ஒரு துவக்கப் பள்ளி, உயர்நிலை, நடுநிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிக்கு 1.92 கோடி ரூபாயில் ஆண்டுதோறும் 'புதுமைப் பள்ளி விருது' வழங்கப்படும்
* புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில், செயல்பாடுகளுடன் கூடிய புதிய கற்றல் 
அட்டைகள், 31.82 கோடி ரூபாயில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளுக்கு வழங்கப்படும்
* 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில், 40 ஆயிரம் மாணவர் பயன் பெறும் வகையில், தலா, மூன்று கணினிகள் உடைய கணினி வழி கற்றல் மையங்கள் 6.71 கோடி ரூபாயில் அமைக்கப்படும்
* 5,639 அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலை 

'நாப்கின்' வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் வழங்கப்படும்
* 31 ஆயிரத்து 322 அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களில் 4.83 கோடி ரூபாயில் நாளிதழ் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும்


ஆசிரியர் நலன்


* நடப்பு கல்வியாண்டில், 3,336 முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் மற்றும், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் என 4,084 காலியிடங்கள் நிரப்பப்படும்
* 17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்படும்
* கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு யிற்றுவிக்கும் ஆசிரியர்கள்; குழந்தைகள் சேர்க்கையில் சிறப்பான ஆசிரியர்களை ஊக்கு விப்பதற்காக மாவட்டத்திற்கு, ஆறு ஆசிரியருக்கு 'கனவு ஆசிரியர் விருது' வழங்கப்படும். அவர்களுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் பாராட்டுத் தொகை வழங்கப்படும்
* அரசுப் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரையிலான, மாணவ - மாணவியர் கற்கும் திறனை அதிகரிப்பதற்காக 39.25 கோடி ரூபா யில் உச்சரிப்பு, எழுத்துக்களை அறிதல் போன்ற வற்றுக்காக, 39.25 கோடி ரூபாயில்,துணை கருவிகள் வழங்கப்படும்
* திறனின்றி தேர்வுகளில் பங்கேற்கும், ஆறு முதல், எட்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக, பள்ளி ஆசிரியர் களுக்கு, சிறப்பு பயிற்சி வழங்கப்படும்
* அறிவியல், கலை, இலக்கியத்தில் சிறந்து விளங்கும், 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, மூன்று கோடி ரூபாயில், வெளிநாடு செல்ல வாய்ப்பு அளிக்கப் படும்
* தமிழர் பாரம்பரிய கலை மற்றும் மரபுகலை வளர்க்க,150 வகை பிரிவுகளில், பள்ளி அளவில் துவங்கி, மாநில அளவிலான கலை திருவிழா, ஆண்டுதோறும்,4 கோடி ரூபாயில் நடத்தப்படும்
* பிளஸ் 2 மாணவர்கள் மேற்படிப்பை தொடரும் வகையில், தேசிய வங்கி மூலமாக, ஆண்டுதோறும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங் களில் கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்படும்
* கிராமப்புற மாணவர்களை தயார் செய்யும் வகையில், ஒன்றியங்கள் தோறும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி பெற, 20 கோடி ரூபாயில் வசதிகள் ஏற்படுத்தப்படும்
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி மையங்கள், அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்படும்


மின் ஆளுமை


* பள்ளிக்கல்வி துறைக்கென தனியாக, கற்றல், கற்பித்தல், மேலாண்மை இணையதளம் உருவாக்கப்படும். இதில், பல்வேறு அலைபேசி செயலிகள் உருவாக்கப்படும்
* பத்து மற்றும் பிளஸ் 2 தேர்வுகளுக்கு, விண்ணப்பித்தல், நுழைவுச்சீட்டு வழங்குதல், மதிப்பெண் பதிவு செய்தல், தேர்வு முடிவுகளை, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்புதல் போன்ற வற்றை மேற்கொள்வதற்காக, அரசு தேர்வுகள் 

துறை, இரண்டு கோடி ரூபாயில் கணினி மயமாக்கப்படும்
* மெட்ரிகுலேஷன் பள்ளிகள் துவங்க, இணைய வழியில் அனுமதி, அங்கீகாரம் வழங்கப்படும்

நுாலகம்
* அரசு பொது நுாலகங்களுக்கு பயனுள்ள, தரமான நுால்கள் வாங்க, 25 கோடியும், சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத் திற்கு,புதிய துறை சார்ந்த மற்றும் பயனுள்ள தொழில்நுட்ப நுால்கள் வாங்க, ஐந்து கோடி ரூபாயும் வழங்கப்படும்
* மதுரையில், உலக தமிழ்ச்சங்க வளாகத்தில், ஆறு கோடி ரூபாய் செலவில், மாபெரும் நுாலகம் அமைக்கப்படும்
* மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க, மாவட்ட தலைநகரங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்படும்
* எட்டு கோடி ரூபாய் செலவில், சிவகங்கை மாவட்டம் - கீழடி, தஞ்சை, நெல்லை, நீலகிரி, திருச்சி, கோவை, மதுரை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில், சிறப்பு நுாலகங்கள் அமைக்கப்படும்
* கோவை, கரூர், நெல்லை, நாமக்கல், கடலுார், வேலுார், திருச்சி, விருதுநகர் ஆகிய நகரங்களில், போட்டித் தேர்வு மையங்கள் செயல்படுகின்றன. மற்ற 24 மாவட்டங்களிலும், அவை துவங்கப்படும்
* தமிழகத்தில் கணினிமயமாகாத 123 முழுநேர கிளை நுாலகங்கள் 1.84 கோடி ரூபாயில் கணினி மயமாக்கப்படும்
* அரிய நுால்கள், ஓலைச்சுவடி உள்ளிட்ட வற்றை மின் மயமாக்கி, நவீன மின் நுாலகம் அமைக்கப்படும்
* அரிய நுால்கள், ஓலைச்சுவடி மற்றும் ஆவணங்களை, பொது மக்கள் மற்றும் தனியாரிடம் இருந்து பெற்று, பாதுகாக்க, புதிய திட்டம் உருவாக்கப்படும்
* அரிய நுால்களை பாதுகாப்பதற்காக, தனியார் அமைப்புகள் நடத்தும் நுாலகங்களுக்கு 
பராமரிப்பு நிதி வழங்கப்படும்
* சிறந்த அறிவியல் தொழில்நுட்ப நுால்கள் மற்றும் உலகின் தலைசிறந்த பிற மொழி இலக்கியங்களையும், தமிழில் மொழி பெயர்த்து வெளியிட, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* பள்ளிகளில், வேலைவாய்ப்பு குறித்த கண்காட்சிகள், நடமாடும் கண்காட்சிகள், 
புத்தக வெளியீட்டாளர்களுடன் இணைந்து நடத்தப்படும்
* மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், புதிய பணியிடங்கள், 60 லட்சம் ரூபாயில் ஏற்படுத்தப்படும்
* மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டை சீர்படுத்துவதற்காக, இரு புதிய ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும்
* பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கு 34 புதிய வாகனங்கள் 2.89 கோடி ரூபாயில் வழங்கப்படும்


வயது வந்தோர் கல்வி


* திருவண்ணாமலை, அரிய லுார், பெரம்பலுார், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய, ஐந்து மாவட்டங்களில், மூன்றாம் வகுப்புக்கு நிகரான சமநிலை கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப் படும். மேலும், ஐந்து மாவட்டங்களில் 14 கோடி ரூபாயில் சமநிலை கல்வி அளிக்கப் படும்
* வெளிநாடுகளில் வாழும் தமிழ் மாணவர் களுக்காக, பாடபுத்தகங்கள் மற்றும் கற்பிப்பதற் கான ஆசிரியர்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்
* இலங்கை, யாழ்ப்பாணம் பொது நுாலகத்திற் கும், மலேஷியா பல்கலைக்கும், பொதுமக்க ளிடம் இருந்து பெற்று, ஒரு லட்சம் அரிய நுால்கள் அனுப்பி வைக்கப்படும் பள்ளி கல்வித் துறையை மேம்படுத்த, அரசு அறிவித்துள்ள, இந்த புதிய அறிவிப்புகளுக்கு, கட்சிகள், கல்வி யாளர்கள் உள்ளிட்ட, பல்வேறு தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

பிளஸ் 1 பொது தேர்வு: தி.மு.க., எதிர்ப்பு

சென்னை: ''பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., பொன்முடி வலியுறுத்தினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - பொன்முடி: மத்திய அரசு, கல்வித்துறைக்கு நிலுவைத் தொகை வழங்காமல் உள்ளது; அதை பெற முயற்சி செய்யுங்கள்.அமைச்சர் ஜெயகுமார்: மத்திய அரசிடம் இருந்து, 17 ஆயிரம் கோடி ரூபாய், நிலுவைத் தொகை வர வேண்டி உள்ளது.
இது தொடர்பாக, பிரதமரை சந்தித்து முதல்வர் வலியுறுத்தி உள்ளார். நிதி அமைச்சரிடமும் பேசி உள்ளோம். கேட்ட நிதி கிடைத்துவிடும் என்ற, நம்பிக்கை உள்ளது.பொன்முடி: புதிதாக பிளஸ் 1 வகுப்பிற்கும,் பொதுத் தேர்வு நடத்தப்படும் என, அறிவித்துள்ளீர்கள். அதை, மறுபரிசீலனை செய்ய வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஓராண்டு இடைவெளி விட வேண்டும். ஏனெனில், மீண்டும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத வேண்டி உள்ளது.அமைச்சர் செங் கோட்டையன்: பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு என்பதை, அனைவரும் வரவேற்றுள்ளனர்; மக்கள் ஏற்றுக் கொண்டனர்.பொன்முடி: மாநில உயர் கல்வி மன்றம், நிர்வாகிகள் இல்லாமல் முடங்கி உள்ளது. துணை வேந்தர் நியமனத்தில், பல்வேறு குளறுபடி நடந்துள்ளது.அமைச்சர் அன்பழகன்: துணை வேந்தர் தேர்வில், குளறுபடி எதுவும் இல்லை.

தேடல் குழு தேர்வு செய்தவர்கள் தான், துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பதவி கிடைக்காதவர்கள், தவறான பிரசாரம் செய்கின்றனர்.பொன்முடி: மேற்கு வங்க கவர்னராக வந்த ராபர்ட் கிளைவ், அங்கு ஆட்சியிலிருந்த, நவாப்புகளிடம் இருந்த ஒற்றுமையின்மையை பயன்படுத்தி, ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட வழி வகுத்தார். அதுபோன்ற நிலை ஏற்படாமல், பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

3-லிருந்து 67 மாணவர்கள்...! அரசுப் பள்ளியைச் சீராக்கிய ஆசிரியை!

மூன்று மாணவர்கள் மட்டுமே இருப்பதால், இந்த அரசுப் பள்ளி மூடப்படும்' என்று அறிவிக்கப்பட்ட அரசு தொடக்கப் பள்ளி ஒன்றை, தனது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பால் மீட்டிருக்கிறார் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை. இன்று அந்தப் பள்ளியில் 67 மாணவர்கள் படிக்கிறார்கள்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது மட்டங்கிப்பட்டி. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊர் கிராமத்தின் அரசு தொடக்கப் பள்ளியில் ஆரம்ப காலத்தில் நிறைய மாணவர்கள் படித்தார்கள். அங்குள்ள இளைஞர்கள், பெண்கள் பலரும் அங்கே படித்தவர்கள்தான். ஆனால், ஆங்கில மோகம் மற்றும் தனியார் பள்ளி ஈர்ப்பு காரணமாகப் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இரண்டு ஆசிரியர்கள் இருக்கும் பள்ளியில் மூன்றே மூன்று மாணவர்கள்தான் என்ற நிலை. இனி, இப்பள்ளி மூடப்பட்டுவிடும் என்ற நிலையில் தீவிரமாகக் களம் இறங்கியிருக்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியை பாரதி மலர்.


''இந்தக் கிராமத்தில் இருக்கிற பிள்ளைங்க பக்கத்து ஊரில் இருக்கிற தனியார் பள்ளிக்குப் போயிட்டாங்க. அதனால், ஸ்கூலை மூடறதா அரசாங்கம் முடிவு பண்ணிடுச்சு. இதைப் பத்தி ஊரில் இருக்கிற ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்திச்சு சொன்னேன். 'ஊரிலிருக்கும் ஒரு பள்ளியை மூடறதால் என்னென்ன விஷயங்களை இழப்பீங்க தெரியுமா?'னு எடுத்துச் சொன்னேன். கொஞ்ச பேர் புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனாலும், நாங்கதான் சரியாப் படிக்கலை. எங்க குழந்தைகளாவது இங்கிலீஷ் மீடியத்துல படிக்கணும்னு ஆசைப்படறோம்னு சொன்னாங்க. தண்ணீர், கழிப்பறை வசதி இல்லைன்னு பலவற்றையும் சொன்னாங்க. அவங்களோட உணர்வைப் புரிஞ்சுக்கிட்டேன். 'இந்த ஸ்கூலிலேயே இங்கிலீஷ் மீடியத்தைக் கொண்டுவரேன். மற்ற வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யறேன்'னு அவங்களுக்கு உறுதி தந்தேன்.
ஊரின் பெரியவங்க சிலரைப் பலமுறை சந்திச்சு அரசுப் பள்ளியின் முக்கியத்துவத்தைச் சொன்னேன். 'சரிம்மா, நாங்க கூட்டம் போட்டு இந்த ஸ்கூலில் பசங்களைச் சேர்க்கணும்னு ஊர்க்கட்டுப்பாடு விதிக்கிறோம்'னு சொன்னாங்க. கூட்டமும் நடந்துச்சு. அங்கே வந்த மக்கள், 'நீங்க கொஞ்ச நாள் இந்த ஸ்கூலில் வேலை செஞ்சுட்டு மாறுதலாகி போயிருவீங்க. அப்புறம் நாங்க என்ன செய்யறது? நீங்க சொல்ற வசதிகள் எங்க பிள்ளைகளுக்குக் கிடைக்கும்னு எப்படி நம்பறது?'னு கேட்டாங்க. நானும் என்னோடு வேலை செய்யும் டீச்சரும் 'இந்தப் பள்ளிக்கான வசதிகள் வர்ற வரைக்கும் நாங்க வேற இடத்துக்கு மாறமாட்டோம்'னு உறுதியா சொன்னோம். ஸ்கூல் முன்னேற்றத்துக்காக ஒரு கமிட்டி உருவாக்கி அதுக்கு இந்த ஊரைச் சேர்ந்த பழனி முருகன் என்பவரை தலைவரா நியமிச்சோம்'' என்கிறார் பாரதி மலர்.

''ஊர்மக்களை சம்மதிக்கவைக்கிறது அவ்வளவு லேசா நடக்கலைங்க'' என்றபடி பேச ஆரம்பித்தார் பழனி முருகன். ''என் பிள்ளைகளையும் பக்கத்து ஊர் தனியார் பள்ளியில்தான் படிக்கவெச்சுட்டு இருந்தேன். ஆனா, நான் படிச்சது இந்த ஸ்கூல்லதான். இந்த ஊரில் இருக்கிற என் தலைமுறை ஆளுங்க எல்லோருமே இங்கேதான் படிச்சோம். அப்படியிருக்கிறப்ப நம்ம பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளியில் சேர்த்துட்டு, ஒரு ஸ்கூலையே மூடவைக்கிறோமேனு நினைச்சு வெட்கப்பட்டேன். இங்கிலீஷ் மீடியம் வரணும். கராத்தே, யோகா கிளாஸ்களைக் கொண்டுவரணும்னு மக்கள் சொன்ன விஷயங்களைச் செய்யறதுனு முடிவுப் பண்ணினோம். இதுக்கெல்லாம் பத்து லட்சம் ரூபாயாவது தேவைப்படும்னு தெரிஞ்சது. எங்க ஊரைச் சேர்ந்தவங்க பலரும் அபுதாபி, துபாய்னு வெளிநாட்டுல வேலைப் பார்க்கிறாங்க. அவங்கக்கிட்ட பேசி நிதி திரட்ட ஆரம்பிச்சோம். 'மட்டங்கிபட்டி வாட்ஸ்அப் குரூப்' என ஒன்றை ஆரம்பிச்சு தொடர்புகொண்டோம். நிறைய பேர் பண உதவி செஞ்சாங்க. எங்க ஊரு எம்எல்ஏ., எட்டு லட்சம் கொடுத்தார்'' என்கிறார்.
''அந்தப் பணத்தைவெச்சு செயலில் இறங்கினோம். பள்ளியின் புது வகுப்பறைகளைக் கட்டும் எல்லா வேலைகளையும் ஊர்மக்களே செஞ்சாங்க. புதிய வகுப்பறைகள், குழந்தைகளுக்கு மினரல் வாட்டர் என எல்லா வசதிகளையும் செஞ்சுட்டோம். பலரும் பிள்ளைகளை இங்கே சேர்த்தாங்க. இதைப் பார்த்து அரசாங்கத்திலிருந்து புதுசா இரண்டு டீச்சர்களை நியமிச்சாங்க. வசதிகளையும் செஞ்சுத் தர முடியாது. குழந்தைகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கத்துத்தர்றதுக்காகப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து நாங்களே ஒரு டீச்சரை நியமிச்சோம். யோகா, கராத்தே வகுப்புகளும் நடத்துறோம். டீச்சர்கள் எல்லோரும் சேர்ந்து ராத்திரி, பகலா கண் முழிச்சு வகுப்பறை சுவர்களில் ஓவியங்களை வரைஞ்சாங்க. அதேமாதிரி அரசு கொடுக்கும் இலவச சீருடை, செருப்புகளில் அளவு குறைவா இருக்கிற பிள்ளைகளுக்கு நாங்களே ஏற்பாடு செஞ்சு கொடுத்தோம். இப்போ, பள்ளிக்குச் சுற்றுச் சுவர் வேணும். அதை அரசாங்கம் செஞ்சு கொடுக்கும்னு எதிர்பாக்கிறோம்'' என்கிறார் தலைமை ஆசிரியை பாரதி மலர்.
மட்டங்கிபட்டியைப் போல ஒவ்வொரு கிராமத்து மக்களும் ஆசிரியர்களும் அக்கறையுடன் ஒன்றிணைந்தால், அரசுப் பள்ளிகள் கம்பீரமாக உயர்ந்து நின்று குழந்தைகளுக்குத் தரமான கல்வியை அளிக்கும்!
படங்கள்: வீ. சதீஷ்குமார்.

நடப்பு கல்வியாண்டில் புதியதாக 4084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்... சட்டசபையில் 'செங்ஸ்'!

சென்னை: நடப்பு கல்வியாண்டில் புதியதாக 4084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் 37 அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்தார்.
அதன்படி சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அறிவியல் கோளம் ரூ.2.50 கோடியில் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மூன்று கோடி ரூபாய் செலவில் 32 மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ.7,500 ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறவிவித்துள்ளது. மேலும்
நடப்பு கல்வியாண்டில் புதியதாக 4084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
அரியவகை நூல்கள், ஆவணங்களுடன் நூலகம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் மெட்ரிக் பள்ளிகள் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 30 கோடி ரூபாய் செலவில் பொது நூலகங்களுக்கு புதிய நூல்கள் வாங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ.2.10 கோடியில் திறன் வங்கி மையம் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பள்ளிகளில் இந்த ஆண்டு 10,000 கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.

பொதுத்தேர்வுகளை சந்திக்கும் மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு தொழில்நுட்ப நூல்கள் வாங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 17,000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

"தமிழகத்தில் புதியதாக 30 தொடக்கப்பள்ளிகள்": அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடியான 37 அறிவிப்புகள்!!!

தமிழகம் முழுவதும் 30 தொடக்கப் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் அறிவித்தார். 

பள்ளி கல்வி துறையில் 37 அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சட்டப்பேரவையில் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் 30 தொடக்கப் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படும என்று அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்க புதுமை பள்ளி விருதுகள் வழங்கப்படு என்றும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்களின் கற்றல், கற்பித்தல் தொடர்பாக துணை கருவிகள் ரூ.31.25 கோடி செலவில் பள்ளிகளுக்கு வழஙகப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
தனித்திறன் கொண்ட மாணவர்களை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்ப ரூ.3 கோடி ஒதுக்கப்படும் என்றும், 32 மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மாணவர்களின் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு, போட்டி தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு நடத்த ரூ.2 கோடியில் மேலாண்மை தளம் அமைக்கப்படும் என்றார்.
கிராமப்புற மாணவர்களுக்கு ஒவ்வொரு ஒன்றியத்திலும் பயிற்சி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார.
அரசு பொது நூலகங்களுக்கு புதிய நூல்கள் வாங்க ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அப்போது அமைச்சர் கூறினார். 5,639 அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு நாப்கின் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் 3,336 முதுநிலை பட்டதாரி அசிரியர்களும் 748 கணினி ஆசிரியர்களும் நியமிக்கப்படுவர் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணிகளாக மாற்றப்படும என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரியவகை நூல்கள் மற்றும் ஆவணங்கள் போன்றவை பொதுமக்களிடமிருந்து பெறப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கீழடியில் சிந்துசமவெளி நாகரிகம் உள்பட பழம்பெரும் நாகரிகம் பற்றி சிறப்பு நூலகம் உள்பட 37 அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.ம்.

DSE PROCEEDINGS-REGULARISATION ORDER FOR BT (HISTORY-TELEGU)

+2 சிறப்பு துணைத் தேர்வு HALL TICKET பெறுதல் தொடர்பாக -தேர்வுத் துறை அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு ஊதியஉயர்வு எப்போது?

PGTRB HALL TICKET DOWNLOAD - 2017

G.O.(Ms) No.33 Dt: March 02, 2017 Examinations - Departmental Examinations - Revision of Syllabus and Scheme of Examinations - Objective / Descriptive and both Objective and Descriptive Pattern of Examinations - Recommendation by the Departmental Examinations Reforms Committee - Implementation - Orders - Issued

அனைத்து தொடக்கப்பள்ளி/நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும், மதிய உணவு உண்ணும் மாணவர்கள் எண்ணிக்கையை நாள்தோறும் குறுஞ்செய்தி அனுப்புதல் அறிவுப்பு

அனைத்து தொடக்கப்பள்ளி/நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும், மதிய உணவு உண்ணும் மாணவர்கள் எண்ணிக்கையை நாள்தோறும் குறுஞ்செய்தி அனுப்புதல் அறிவுப்பு

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் எனில்  உணவு உண்ணும் மாணவர் 32 எனில்


MDM A32 B00 C00
(MDMspaceA32spaceB00spaceC00)
 என்று பதிவிட்டபின்
155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்..

நடுநிலைப்பள்ளியெனில்
1-5. 20 மாணவர்கள்
6-8. 36 மாணவர்கள் என்றால்

MDM A20 B36 C00
(MDMspaceA20spaceB36spaceC00)
என்று பதிவிட்டபின்
155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி
நாள்தோறும் அனுப்புதல் வேண்டும்.
 குறுஞ்செய்தி இலவச

15/6/17

EMIS-Now Site will be kept under maintenance for migration from 2016-17 to 2017-18 academic year

*EMIS* *FLASH NEWS..*

EMIS வெப்சைட் தற்போது *2016-2017* ஆண்டிலிருந்து *2017-2018* ம் ஆண்டிற்கு *ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்பிற்கு* மாற்றுவதற்கு வேலைகள் நடந்து கொண்டு இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

*ஓரிரு நாளில் புதிதாக ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பதிவேற்றம் செய்ய திறக்கப்படும்*.

மற்றமாணவர்களை அடுத்த வகுப்பிற்கு தானாக சென்றுவிடும்.

மற்றபள்ளியிலிருந்து *புதிதாக வந்துள்ள மாணவர்களை EMIS எண்களை
வைத்து STUDENT POOL லிருந்து எடுத்துக்கொள்ளவும்*.


*அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் இதை பயன்படுத்தி EMIS எண் அனைத்து மாணவர்களுக்கும் இருக்கும்படி செய்ய வேண்டும்*

வங்கிக்கே செல்ல வேண்டாம்.. வந்துவிட்டது அனைத்து வசதிகளும் கொண்ட ஏடிஎம் மிஷின்!

டெல்லி: ஏடிஎம் தயாரிப்பாளர் மற்றும் சேவை வழங்குனரான என்.சி.ஆர். கார்ப்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கும்
வகையிலான ஏ.டி.எம். மெஷின்களை வடிவமைத்துள்ளது. இப்போது, உங்கள் ஏடிஎம் அட்டையை வங்கிக்கு போகாமலிருக்கலயே பெற்றுக்கொள்ளவும் முடியும்.

இந்தஇயந்திரம் வங்கிகளில் உள்ள பல வசதிகளை தன்னிடம் கொண்டுள்ளது. இந்த வகை ஏடிஎம்களின் செலவு தலா 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை இருக்கும். இந்த இயந்திரங்கள் SS32, SS22, SS83 மூன்று வகைகளாக இருக்கும். இந்த இயந்திரங்கள் வழக்கமான ஏ.டி.எம். கள் போலவும் செயல்படும் ஆனால் சில கூடுதல் வசதிகள் உள்ளன.
இதில் முக்கிய அம்சம், ஏடிஎம் மூலமே வங்கிக் கணக்கை திறக்கலாம். அல்லது உங்கள் காசோலைகளை கிளியர் செய்ய முடியும். இந்த இயந்திரங்களில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு அம்சத்தின்படி, உடனடி வங்கி கணக்குகள், பற்று அட்டைகள், தானியங்கி கையொப்ப சரிபார்ப்பு, நிதி பரிமாற்ற, பில் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ் ஆகியவற்றை செய்ய முடியும்.

இதுபோன்ற ஏடிஎம் மிஷின்கள் தற்போது 3 இடங்களில் சோதனை முறையில் வைக்கப்பட்டுள்ளதாக என்.சி.ஆர் கார்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது

7th PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு "அலவன்ஸ்" அதிகரிப்பு

அரசுஊழியர்களுக்கு 7ஆவது பே கமிஷனின் பரிந்துரைப்படி அலவன்ஸ்கள் வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என தெரிகிறது. அசோக் லாவசா தலைமையிலான கமிட்டி தனது அறிக்கையை அமைச்சரவைக்கு
சமர்பித்துள்ளது. 

இன்னும் அமைச்சரவையின் ஒப்புதல் வரவில்லை. இந்நிலையில் இந்த பரிந்துரைகள் வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என ஒரு தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கிறது.

இதில் வீட்டு வாடகை அலவன்ஸ் 27% உயர்வு உட்பட பல அலவன்ஸ்களை உயர்த்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் 7ஆவது பே கமிஷன் ஆணையை செயல் படுத்த ரூ 65000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றாமல் போனால் அரசு மேலும் தொகைய உயர்த்த வேண்டி வரும்.
இந்தமுறை 7ஆவது பே கமிஷன் நிறைய அலவன்சுகளை ஒழித்த போதிலும் பல அலவன்ஸ் தொகைகளை அதிகப் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

FA (b) Question

No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.





No automatic alt text available.



No automatic alt text available.









No automatic alt text available.No automatic alt text available.

No automatic alt text available.No automatic alt text available.
No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.

.கார்த்திக்ராஜா,
இடைநிலைஆசிரியர்,
...நி.பள்ளி - கத்தாழை,

கடலூர் மாவட்டம்.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பி.எட் கற்பித்தல் பயிற்சியை அதே பள்ளியில் மேற்கொள்ளலாம் என்பதற்கு *திருவள்ளூர் & திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்



அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு இலக்கு

அரசுபள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில், ஐந்தாண்டுகளுக்கு
முன் இருந்த எண்ணிக்கை குறையாமல் இருக்க வேண்டும் என பள்ளி கல்வி செயலர் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழி கல்வி பயில தனியார் பள்ளிகளில் பல ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி கஷ்டப்பட்டு சேர்த்து வருகின்றனர்.

பெற்றோர்களின் இந்த மோகத்தால் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. பல அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

பள்ளி செயலர் உத்தரவு
இந்தகல்வியாண்டில் கல்வித் துறையின் முன்னேற்ற நடவடிக்கையால் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு பள்ளியும் கவனம் செலுத்தி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதில் கடந்த 2011- -2012ல், 1ம் வகுப்பில் சேர்க்கப்பட்ட எண்ணிக்கை அளவிற்கு நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறைய கூடாது என பள்ளி கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் , பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஐந்தாண்டுக்கு முந்தைய இலக்கு

இதன்படி தேனி மாவட்டத்தில் 2011- -2012ல் 5,188 மாணவர்கள் 1ம் வகுப்பில் சேர்க்கை நடந்துள்ளது. கடந்த ஆண்டில் 4,155 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கல்வியாண்டில் நேற்று வரை 3,865 மாணவர்கள் 1ம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வரும் செப்டம்பர் விஜயதசமி வரை மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர் சேர்க்கைக்காக விழிப்புணர்வு ஊர்வலம், பள்ளி உள் கட்டமைப்பு வசதிகள் போன்ற விபரங்களை பெற்றோரிடம் தெரிவித்து சேர்க்கை அதிகாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தா

இனி பெட்ரோல், டீசல் விலை மாற்றம் தினசரி காலை 6 மணி முதல் அமலில் இருக்கும்!

டெல்லி: நள்ளிரவு 12 மணிக்கு மாற்றப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இனி காலை 6 மணிக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு அமலில்
இருக்கும் என பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை மாற்றியமைத்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாறியமைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்துவருவதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது.

 இந்நிலையில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூன் 16-முதல் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பங்க் உரிமையாளர்கள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தாங்கள் நடத்தவிருந்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளனர். மேலும் நள்ளிரவு 12 மணிக்கு மாற்றப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இனி காலை 6 மணிக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு அமலில் இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் மாத ஊதியமும், ஓய்வூதியமும் பெற முடியாது: ஒழுங்கு முறை ஆணையத் தலைவர்களுக்கு அரசு அறிவிப்பு

அனைத்து நோய்களுக்கான மூல காரணம் - மன அழுத்தம்!

உலகில் மனிதர்களின் மோசமான உடல்நிலை மற்றும் இயலாமைக்கு முக்கியக் காரணமாக மன அழுத்தம் திகழ்கிறது என உலகச் சுகாதார அமைப்பு (WHO)
நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


உலகசுகாதார அமைப்பான ‘கூ’ தெரிவித்துள்ள புள்ளிவரங்கள்படி உலகில் 30 கோடி மக்கள் மனத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

இதற்கு முன் உலக நாடுகளில் சுவாச பிரச்சினைதான் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. ஆனால், தற்போது மனஅழுத்தம் மிகப் பெரிய பிரச்சினை யாக உலக மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘கூ’ தெரிவித்துள்ள புள்ளிவிவரப்படி, 2006ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு களுக்கு இடையிலேயான 10 ஆண்டு கால ஆய்வின்படி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மேலும், மனஅழுத்தத்திற்கு உரிய சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும்,  இந்த மன அழுத்த நோய்  உலகின் பொருளாதாரத்தை பாதிக்கும் சக்தி கொண்டது என்றும் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து WHO இயக்குனர் ஜெனரல் டாக்டர் மார்கரெட் சான்  உலக நாடுகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,

“எல்லா நாடுகளும், மன ஆரோக்கியம் குறித்த,  தங்களது அணுகுமுறைகளை மறு பரிசீலனை செய்து மன அழுத்தம் நோய்க்கு உரிய  அவசரகால நடவடிக்கைகளை எடுக்க இந்தப் புதிய புள்ளி விவரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளது.

WHO வைச் சேர்ந்த டாக்டர் ஸ்கேகர் சக்சேனா, WHO வின் ” வாங்க பேசலாம்”  பிரச்சாரம் அறிமுக நிகழ்ச்சியில்  பேசும்போது, இந்த பிரச்சினை, ஒருவர் மன அழுத்தத்தில் இருப்பதை புரிந்துகொள்ள முடியாததே என்றும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் ஏற்படும் சிரமத்திற்கு காரணம் என்று கூறினார்.

மேலும், ” மன அழுத்தத்தில் இருப்பவர் தமக்கு நம்பிக்கையான ஒரு நபரிடம் மனம் திறந்து பேசுவதே , அவருக்கு மன அழுத்தத்திற்கான சிகிச்சை அளிப்பதற்கான முதல் படி”  என்றும் கூறினார்.

இந்தமனஅழுத்தம் குறித்து ஆராய்ச்சி செய்துவந்த விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உயர் வருமான முள்ள நாடுகளில் கூட மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில்ர 50சதவிகிதத்தினர்கூட  உரிய சிகிச்சை பெறுவதில்லை,  அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளும் பயனற்று போய்விடு கின்றன என்றும் கூறி உள்ளனர்.

மேலும், ஒவ்வொரு நாடும் தனது சுகாதார பட்ஜெட்டில் மன அழுத்த நோய்க்கு  3 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்றும், குறைந்த வருமானமுள்ள நாடுகளில்  இது 1 சதவிகித மாக வும், இங்கிலாந்தின் உட்பட பல உயர் வருமான நாடுகளில் சுமார் 5% ஆக உள்ளது.

இந்தமனஅழுத்த நோய் காரணமாக உடலில் பல்வேறு  வகையான நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும், இதன் காரணமாக நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற ஆபத்தான நோய்களின் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று கூறி உள்ளது.

ஆகவேஸ்டிரெஸ் எனப்படும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட புன்னகை எனப்படும் மகிழ்ச்சியே மிகச்சிறந்த மருந்து.


நாம்சிரிக்கும்போது நமது உடல்களில் உள்ள நரம்புகளில் அதிர்வுகள் ஏற்பட்டு. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஏற்படுவதாக  க்டர் கூப்பர் ஆய்ந்து கூறி உள்ளார்.