யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/9/16

தமிழகத்தில் நாளை 'பந்த்' போராட்டம் விவசாயிகள் முயற்சிக்கு பெருகும் ஆதரவு-ஆசிரியர் சங்கத்தினர் இன்று முடிவு?-விவசாயிகள் நாளை அறிவித்துள்ள, 'பந்த்' போராட்டத்திற்கு, அரசியல் கட்சிகள், வணிகர் கள் என பல தரப்பிலும், ஆதரவு பெருகி வருகிறது.

காவிரிபிரச்னையில், கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில், தமிழர்கள் தாக்கப்பட்டனர்; அவர்களது உடமைகள் சேதப்படுத்தப்பட்டன.இதற்குகண்டனம் தெரிவித்து, தமிழகத்தில், நாளை,
'பந்த்' போராட்டத்திற்கு, விவசாயிகள் அழைப்பு

விடுத்துள்ளனர்.
இதற்கு, தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்டபிரதான அரசியல் கட்சிகள் பலவும்ஆதரவு அளித்துள் ளன. தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கமும் போராட்டத்தில்பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

இதனால், மாநிலம் முழுவதும் மளிகை கடைகள் உள்ளிட்டவணிக நிறுவனங்கள் நாளை இயங்குவது சந்தேகம். தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள்நல சங்கமும்,போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், பால்விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை,கோயம்பேடு காய்கறி மற்றும் பழங்கள்மொத்த விற்பனை மார்க்கெட் வியாபாரிகளும், 'பந்த்' போராட்டத்தில் பங்கேற்கின்றனர். ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வும், மறைமுகமாக ஆதரவளிக்கும் என்பதால், முழு அள வில்தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடக்கும் என, விவசாய சங்கங்கள்கூறின.

ஆசிரியர்கள்இன்று முடிவு: ஆசிரியர் சங்கத்தினர்இன்று சென்னையில் கூடி, விவசாயிகள் நடத்தும்வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து, முடிவு எடுக்க உள்ளனர்.

புதுச்சேரியிலும்'பந்த்'
தமிழகத்தைப்போலவே, புதுச்சேரியிலும் நாளை, முழு அடைப்புக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'பந்த் நாளில், புதுச்சேரியில்பஸ்கள் ஓடாது; அனைத்து கடைகளும்மூடி இருக்கும்' என, புதுச் சேரிவணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஓரணியில்திரள வேண்டும்!

கர்நாடகஅரசைக் கண்டித்து, தமிழகத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்புநடத்தும் முழு அடைப்பில், கொங்குஜனநாயக கட்சி பங்கேற்கும்.தி.மு.க., 'பந்த்'திற்கு ஆதரவளித் துள்ளநிலையில், அ.தி.மு.க.,வும் பங்கேற்கவேண்டும். அனைத்து தமிழக கட்சிகளும்ஓரணியில் திரள வேண்டும்.

நாகராஜ்நிறுவன தலைவர், கொங்குநாடு ஜனநாயககட்சி
ரயில் மறியல் போராட்டம்!
கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிரான வன் முறைவெறியாட்டத்திற்கு, மத்திய அரசே பொறுப்பு. ஏதோ தமிழகத்திற்கும், கர்நாடகாவிற் கும் இடையிலான தனிப்பட்டபிரச்னைஎன்பதை போல், மத்திய அரசுவேடிக்கை பார்க்கிறது. இந்த மெத்தனப் போக்கைகண்டித்து, நாளை, சென்னை யில்என் தலைமையில் ரயில் மறியல் போராட்டம்நடக்கிறது.தி.மு.க., - அ.தி.மு.க., மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒருமித்தகருத்தோடு காவிரி பிரச்னையை அணுகிஇருக்க வேண்டும். தமிழக முதல்வர், அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டி, பிரதமரு க்குஅழுத்தம் கொடுக்க வேண்டும்.

திருமாவளவன்தலைவர், விடுதலை சிறுத்தைகள்
ஓட்டல்கள்பங்கேற்காது!கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபடுவது, தமிழக அரசின் சட்டரீதியிலான முயற்சிகளை வலுவிழக்கச் செய்து விடும். கடையடைப்புபோராட்டத்தில் ஓட்டல்கள் சங்கம் பங்கேற் காது.
வெங்கடசுப்பு, சீனிவாசன், கே.எல்.குமார்நிர்வாகிகள், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம்

மருந்துகடைகள் திறப்பு
கடையடைப்புபோராட்டத்துக்கு, தமிழக மருந்து வணிகர்கள்சங்கம் ஆதரவு தெரிவிக் கிறது. அதே நேரத்தில், உயிர் காக்கும் மருந்துகளை விற்பனை செய்வதால், நோயாளிகளின்நலன் கருதி, நாளை ஒருநாள் மட்டும் காலை, 11:00 மணிக்குமேல், மருந்து கடைகள் திறக்கப்படும்.

செல்வம்செயலர், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம்

1வது 2வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ நிர்வாகம் சுற்றறிக்கை

சி.பி.எஸ்.இ. 1-வது மற்றும் 2-வது வகுப்பு படிக்கும்மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்றும், புத்தகப்பை கொண்டுவரக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்இ. கல்விவாரியம்
சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில்கூறியிருப்பதாவது:-சுமையினால் வளர்ச்சி பாதிக்கும்

சி.பி.எஸ்.இ. படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பைஅதிக சுமையாக உள்ளது. இதனால்முதுகு வலி, தசை வலி, தோள்பட்டை வலி ஆகியவை அந்தமாணவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் அந்த மாணவர்களின்வளர்ச்சி பாதிக்கிறது. ஆரோக்கியம் கெட்டுப்போகிறது.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் விஷயத்தில் பள்ளிகள்முக்கிய பங்குவகிக்கின்றன.

மாணவர்கள்தினசரி வகுப்புக்கு தேவையான பாடப்புத்தகங்களை மட்டும்கொண்டுவருகிறார்களா? என்று ஆசிரியர்கள் திடீர்என்று மாணவர்களின் பைகளை சோதனை செய்யவேண்டும். தேவை இல்லாத வீட்டுப்பாட நோட்டுகள், தேவை இல்லாத பாடப்புத்தகங்கள் உள்ளிட்டபல பொருட்களை மாணவர்கள் கொண்டுவரலாம். அவ்வாறு மாணவர்களிடம் கொண்டுவரக்கூடாதுஎன்று ஆசிரியர்கள் கூறவேண்டும்.

எடை குறைவான பைகள்
அதிக எடை இன்றி புத்தகப்பைகள்கொண்டு வருகிறார்களா? என்று தினமும் ஆசிரியர்கள்பரிசோதனை செய்யவேண்டும்.
பெற்றோர்கள்தங்கள் குழந்தைகளுக்கு எடை குறைவான புத்தகப்பைகளைவாங்கிக்கொடுக்கவேண்டும். பள்ளிக்கூட மாணவர்களின் புத்தகங்களின் எடையை குறைக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறு துணையாக இருக்கவேண்டும்.
பள்ளிக்கூடங்களில்மாணவர்கள் தினமும் எந்த எந்தபுத்தகங்கள், நோட்டுகள் கொண்டு வரவேண்டும் என்றகால அட்டவணையை முன்கூட்டியே மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும்.
மாணவர்களுக்குபள்ளிக்கூட நேரங்களில் மட்டும் புராஜெக்ட் கொடுக்கவேண்டும். அதை குழுவாக மாணவர்கள் செய்யவேண்டும். அந்த புராஜெக்டை பள்ளிக்கூட நேரம் தவிர வீட்டுக்குகொண்டுசெல்லக்கூடாது.

பெற்றோருக்குவேண்டுகோள்
மாணவர்கள்பள்ளிக்கூடத்திற்கு படிப்பு தொடர்பாக கொண்டுவரும் எந்த ஒரு பொருளும்எடை குறைவாக இருக்கவேண்டும்.
தொடக்கப்பள்ளிவரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர், புத்தகப்பையை தினமும் கண்காணிக்கவேண்டும். தங்கள்குழந்தைகள் கால அட்டவணை படிகொண்டுசெல்கிறார்களா? என்பதை உறுதி செய்யவேண்டும்.புத்தகப்பை, வீட்டுப்பாடம்
குறிப்பாக1-வது மற்றும் 2-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் கட்டாயம் கொடுக்கக்கூடாது. அவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது.

மாணவர்கள்அதிக எடையுடன் குடிநீர் பாட்டில் கொண்டுவருகிறார்கள். இதை தவிர்க்கவேண்டும். எனவேபள்ளிகள் குடிநீரை வைத்திருக்கவேண்டும். அந்த தண்ணீரை பள்ளிக்கூடமுதல்வர் மற்றும் ஆசிரியர்கள் குடிக்கவேண்டும். மாணவர்கள் கூடுதலாக விளையாட்டு காலணிகளை கொண்டு வரக்கூடாது.

இவ்வாறுசி.பி.எஸ்.இ. வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையைஅனுப்பி உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையேநடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டவல்லுநர் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமைநடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் பிற்பகல்3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறுஅரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். கடந்த சட்டப் பேரவைத்தேர்தலின் போது,
அதிமுக சார்பில்வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பழையஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழுஅமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கைபெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமேதொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதியதாககுழு: தமிழக அரசு அமைத்துள்ளகுழுவின் தலைவராக, முதல்வர் அலுவலக சிறப்புப் பணிஅலுவலர் சாந்தா ஷீலா நாயர்நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல்தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சென்னைபொருளாதார பள்ளியின் பேராசிரியர்கள் கே.வி.பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோரும், குழுவின் உறுப்பினர் செயலாளராக திட்டம்-வளர்ச்சி-சிறப்புமுயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணனும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், பேராசிரியர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோர்குழுவில் தாங்கள் தொடர முடியாதுஎன அரசுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை பொருளாதார பள்ளியின்மற்றொரு பேராசிரியரான டாக்டர் பிரிஜேஷ் சி.புரோகித் நியமிக்கப்பட்டார்.
முதல் கூட்டம்: தமிழக அரசின் வல்லுநர்குழு புதிதாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அந்தக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச்செயலகத்தில் வியாழக்கிழமை (செப். 15) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இதுதொடர்பாக, வல்லுநர் குழுவின் உறுப்பினர் செயலாளரும், முதன்மைச் செயலாளருமான எஸ்.கிருஷ்ணன் சார்பில்அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வல்லுநர் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தின்பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இந்தக்கூட்டத்தில் தங்களது கருத்துகளை அரசுஊழியர்கள் சங்கங்கள் தெரிவிக்கலாம். இதற்காக, சங்கத்தின் 3 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும். மேலும், கருத்துக் கேட்புகூட்டத்தின் போது நேரத்தை சிறப்பானமுறையிலும், உரிய வகையிலும் பயன்படுத்தஏதுவாக எழுத்துப்பூர்வமாகவும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தனது கடிதத்தில்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற முடிவு

புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும்பாதிப்பு குறித்து மக்கள் அறிந்து கொள்ளும்வகையில், கையெழுத்து இயக்கம் நடத்த தமிழ்நாடுகல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்புமுடிவு செய்துள்ளது.
இக்கூட்டமைப்பின்மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமைநடைபெற்றது. அமைப்பாளர் செல்வராசன் தலைமை
வகித்தார். மாவட்டநிதிக் காப்பாளர் பழனிவேலு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழக மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்: புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காகமத்திய அரசு வெளியிட்டுள்ள முன்மொழிவுகளின்மீது பொதுமக்கள் கருத்து கூறுவதற்கு டிசம்பர்மாதம் வரை கால அவகாசம்அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள்நாடு முழுவதும் விரிவான அளவில் புதியகல்விக் கொள்கையின் மீது கருத்துக் கேட்புகூட்டங்களை நடத்த வேண்டும்.
கல்வியைமத்திய அரசின் பொதுப் பட்டியலில்இருந்து மாநில அரசுகளின் பட்டியலுக்குமாற்றிடும் வகையில் உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய அரசு தேசியமொத்த உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதம் நிதி ஒதுக்கீடுசெய்ய வேண்டும். தமிழக அரசு மாநிலவரவு, செலவு அறிக்கையில் கல்விக்கு30 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.

புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும்ஆபத்துகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் வரும்18-ஆம் தேதி முதல் 28-ஆம்தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில்50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறும்நோக்கில் கையெழுத்து இயக்கம் நடத்துவது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய மாணவர் சங்கமாவட்டச் செயலர் ஜோதிபாசு நன்றிகூறினார்.

ஆதார்' எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு

ஆதார் எண் இல்லாவிட்டாலும், மாணவர்களுக்குகல்வி உதவித்தொகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாணவர்களுக்குஉதவித்தொகை திட்டங்கள், பல அரசு துறைகள்மூலம் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளிகள் மூலம், கல்வி
உதவித்தொகையும்வழங்கப்பட்டு வருகிறது.


இதில், முறைகேடுகளை தடுக்கவும், போலி ஆவணங்கள் பெயரில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதை தவிர்க்கவும், மாணவர்களின் ஆதார் எண்ணை பதியும்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆதார்எண்ணை பதிந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை கிடைக்கும்என, மத்திய அரசு அறிவித்தது.

அனைத்துமாணவர்களுக்கும், இன்னும் ஆதார் எண்வழங்கப்படாததால், பல லட்சம் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, ஆதார் அட்டை இல்லாவிட்டாலும், கல்விஉதவித்தொகை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கல்லுாரிகளுக்குஅனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'ஆதார்எண் இல்லை என, மாணவர்களுக்கானகல்வி உதவித்தொகையை மறுக்கக்கூடாது.

'ஆதார்எண் இல்லா தோர், முகவரிஅடையாள சான்றுடன், வங்கிக் கணக்கு எண்ணைபதிவு செய்தால், சம்பந்தப்பட்ட துறைகள் உதவித்தொகை வழங்கும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், தங்கள் ஓய்வூதியம் பற்றிய நிலையை அறிந்து கொள்ள புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் எஸ்எம்எஸ் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மத்தியஅரசின் ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக, புதிய இணையதளத்தை, மத்தியநிதியமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில்இன்று தொடங்கி வைத்தார். ‘www.cpao.in’ என்ற முகவரியில் ஓய்வூதியதாரர்கள்தங்கள் ஓய்வூதியம் பற்றிய நிலையை அறிந்துகொள்ளலாம். அத்துடன் குறைகள் தொடர்பான புகார்களில்
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், எஸ்எம்எஸ் மூலம்ஓய்வூதியம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
மொபைல்போன் மூலமாகவே புகார்களை அனுப்பலாம். அதன் மீது உடனடியாகநடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் பதில் தகவலும்அனுப்பப்படும். இதன்மூலம் 11.61 லட்சம் மத்திய அரசுஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், சுதந்திரப்போராட்ட தியாகிகள் பலன் அடைவார்கள் என்றுஅருண் ஜேட்லி கூறினார்.
புதிய இணையதளம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளால்தேவையில்லாமல் ஓய்வூதியதாரர்கள் அலைக்கழிக்கப்படுவது, மனவேதனை அடைவது தடுக்கப்படும். இனிமேல் ஓய்வூதியதாரர்கள் எந்த துன்பமும் படக்கூடாது. ஏனெனில், அவர்கள் நமது நாட்டின்மூத்த குடிமக்கள். அவர்களுக்கு ஓய்வூதியம் மிக முக்கியம். அதைசார்ந்துதான் அவர்கள் இருக்கின்றனர் என்றுஜேட்லி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில்கணக்கு தணிக்கைத் துறை தலைவர் எம்.ஜே.ஜோசப் பேசும்போது, ‘‘இந்த புதிய இணையதளம் ஓய்வூதியதாரர்களின்குறைகளை தீர்த்து வைப்பதில் வெளிப்படை தன்மை மற்றும் நம்பிக்கையைஏற்படுத்துவதாக இருக்கும்’’ என்றார்.

ஜே.இ.இ., தேர்வு முறையில் மாற்றம்

 உயர் கல்வி தொழில்நுட்பநிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை, இந்த ஆண்டு, சென்னை ஐ.ஐ.டி., நடத்தஉள்ளது.

 உயர் கல்வி தொழில்நுட்பநிறுவனமான, என்.ஐ.டி., - ஐ.ஐ.டி., - சி.எப்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, ஜே.இ.இ.,
தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும். ஜே.இ.இ., மெயின், அட்வான்ஸ்ட் என, இரு கட்டங்களாகஇந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதுவரை, ஜே.இ.இ., தேர்வில்பெறும் மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக கணக்கிடப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு முதல், இந்தவெயிட்டேஜ் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வில், 75 சதவீதத்திற்கு மேல், மதிப்பெண் பெற்றால்மட்டுமே, ஜே.இ.இ., தேர்வில் பங்கேற்க முடியும். இந்த தேர்வில் பெறும்மதிப்பெண் அடிப்படையில் தான், மாணவர் சேர்க்கைநடக்கும்; தரவரிசை பட்டியல் தயாரிக்க, பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடப்படாது. புதிய மாற்றத்துடன் கூடிய, ஜே.இ.இ., தேர்வின்முதன்மை தேர்வை, மத்திய இடைநிலைகல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்த உள்ளது. அடுத்தகட்ட, அட்வான்ஸ்ட் தேர்வை, சென்னை ஐ.ஐ.டி., நடத்தஉள்ளது. வினாத்தாள் தயாரிப்பு, விடைத்தாள் திருத்தம், முடிவு வெளியிடுதல் போன்றபணிகளை, சென்னை ஐ.ஐ.டி., மேற்கொள்ளும்.

புதிய வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பில்லை

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம்இல்லாததால், உள்ளாட்சித் தேர்தலில் புதிய வாக்காளர்களை சேர்க்கவாய்ப்பில்லை என, ஊரக வளர்ச்சித்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.


உள்ளாட்சித்தேர்தல் அக்டோபருக்குள் நடத்தி முடிக்க மாநிலதேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. சட்டசபைத்தேர்தல் வாக்காளர்கள்
அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியல்தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் ஓரிருநாட்களில் வெளியிடப்பட உள்ளது. புதிதாக வாக்காளர்களைஇந்திய தேர்தல் ஆணையம் மூலமேசேர்க்க முடியும்.

அவற்றிற்குகால அவகாசம் இல்லாததால் வாக்காளர்பட்டியலில் விடுபட்ட பெயர், திருத்தம், முகவரிமாற்றம் மட்டும் மேற்கொள்ள முடியும்வாய்ப்புள்ளது. ஊரகவளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில்வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப்பணி செப்., 1 முதல் செப்., 30 வரைநடக்கிறது. இதில் பெயர் சேர்க்க2017 ஜன., 1 ல் 18 வயது நிரம்பினால்போதும். உள்ளாட்சித் தேர்தலில், ஏற்கனவே 18 வயது பூர்த்தி அடைந்திருந்தால்மட்டுமே வாக்கு அளிக்க முடியும். இதனால் தற்போது பெறப்படும் விண்ணப்பங்களைவயது அடிப்படையில் பிரித்து சேர்ப்பதில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். மேலும் விண்ணப்பங்களை ஆய்வுசெய்து பெயர் சேர்த்தலுக்கு காலஅவகாசமும்இல்லை. இதனால் சட்டசபைத் தேர்தலில்பெயர் இருந்து உள்ளாட்சி தேர்தல்வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் சரிசெய்ய வாய்ப்பு தரப்படும். அதேபோல் திருத்தம், முகவரிமாற்றம் மேற்கொள்ளலாம். வேட்பாளர்களாக இருந்தால் பெயர் சேர்க்கப்படும், என்றார்.

10ம் வகுப்பு தனி தேர்வு 'தத்கல்' விண்ணப்பம்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, 'தத்கல்' திட்டத்தில், நாளை முதல், இரண்டுநாட்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர்வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு, அடுத்த மாதம் நடக்கஉள்ளது. இதற்கு குறித்த நாட்களில்விண்ணப்பிக்க தவறியோர், செப்., 16, 17ம் தேதிகளில், தத்கல்திட்டத்தில்
விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வு சேவைமையங்கள் மூலம், ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.

தத்கலில்விண்ணப்பிக்கும், தனித்தேர்வர்களுக்கு, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, வேலுார், கடலுார் மற்றும் சென்னைஆகிய மண்டல அலுவலகங்களின் தலைமையிடத்தில்மட்டுமே, தேர்வு மையங்கள் அமைக்கப்படும். அரசுத் தேர்வு சேவை மையங்கள்விபரத்தை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

Flash News-முழு அடைப்பு எதிரொலி:நாளை தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு.

காவிரி நீர் பிரச்னையையொட்டி தமிழகத்தில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக தனியார் பள்ளிகள்  சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும்  உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தனியார் பள்ளி உரிமையாளர் சங்கத் தலைவர் நந்த குமார் இன்று தெரிவித்துள்ளார். நாளைக்கு பதில் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

Election duty Remuneration

14/9/16

பல்கலைகளில் பேராசிரியர் தேர்வு : திடீர் ரத்தால் பட்டதாரிகள் அதிர்ச்சி.

பல்கலைகளில் பேராசிரியர் தேர்வு : திடீர் ரத்தால் பட்டதாரிகள் அதிர்ச்சி.

கோவை பாரதியார், நெல்லை மனோன்மணியம் பல்கலைகளில், நேற்று நடக்க இருந்த பேராசிரியர் நியமன தேர்வு, திடீரென ரத்து செய்யப்பட்டதால், பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நேர்முகத் தேர்வு :
கோவை பாரதியார் பல்கலையில் காலியாக உள்ள, 72 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் இடங்களையும், 20 ஆசிரியர் இல்லாத பணி இடங்களையும் நிரப்ப, ஆக., மாதம் அறிவிப்பு வெளியானது.நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையிலும், 54 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பும் அறிவிப்பும் வெளியானது. இந்த பணிகளுக்கு, 'நெட், செட்' தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற, பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

நேற்று, நேர்முகத் தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆயிரம் பேர், இரண்டு பல்கலைகளுக்கும் விரைந்தனர்; நேர்முகத்தேர்வு நடக்காததால், கடும் அதிருப்தி அடைந்தனர். இரண்டு பல்கலைகளும், 'தவிர்க்க இயலாத காரணங்களால் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது; புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என, விண்ணப்பதார்களுக்கு, நேற்று முன்தினம் இரவு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பின.நெல்லை மனோன்மணியம் பல்கலையில், நேர்முகத் தேர்வு குழுவில் இடம்பெற்ற உறுப்பினர் வர முடியாததாலும்; நேர்முகத் தேர்வுக்கான அரசு தரப்பு உறுப்பினர் நியமிக்காததானாலும், பாரதியார் பல்கலையில், தேர்வு ரத்து செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.

பிரச்னை வராமல் : இந்த பதவிகளுக்கு, இடைத்தரகர்கள் நடத்திய பேரம் காரணமாகவே, நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாக, உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயர் கல்வியில், பல பதவிகள் நியமனத்தில் ஏற்கனவே பிரச்னை உள்ள நிலையில், மீண்டும்பிரச்னை வராமல் இருக்கவே நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழக மின் வாரியத்தில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

தமிழக மின் வாரியத்தில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

தமிழக மின் வாரியத்தில், 'ஹெல்பர், போர்மேன்' உதவிபொறியாளர் என, 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, பொறியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
துாத்துக்குடியில், தமிழக மின் பொறியாளர்கள் குழுமத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார்.செயலாளர் கந்தகுமார் வரவேற்றார். பொருளாளர் அனந்தநாராயணன் அறிக்கை சமர்ப்பித்தார். மாநில பொதுச்செயலாளர் ராஜ்குமார் பேசியதாவது: தமிழகத்தில், சீரான மின் உற்பத்தி, சீரான மின் வினியோகத்திற்கு மின் வாரிய பணியாளர்கள் திறம்படபணியாற்றி வருகின்றனர். அத்தியாவசிய தேவையான மின்சாரம் மக்களுக்கு கிடைக்க அக்கறையுடன் பணியாற்றுகின்றனர். மின் வாரிய பணியாளர்கள் தங்களுக்கான சலுகைகள், உரிமைகளுக்காக கோர்ட்டில் போராடி போராடி பெற வேண்டிய நிலை உள்ளது. தமிழக மின் வாரியத்தில், 'ஹெல்பர், போர்மேன்' உதவி பொறியாளர் உட்பட, 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன.இவற்றை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாநில துணைத்தலைவர்கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.--

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை உலக மொழிகள் மற்றும் இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழுக்காகப் பாடுபடும் அறிஞர்களுக்கும், சான்றோர்களுக்கும் எண்ணற்ற நலத்திட்டங்களையும், உதவிகளையும், சிறப்புகளையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.கடந்த 5 ஆண்டுகளில் தமிழுக்காகப் பாடுபடும் சான்றோர்களுக்கும், அறிஞர்களுக்கும், சிறப்பு செய்யும் வகையில் 55 விருதுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தமிழ் மொழியின் பெருமையை பிற நாட்டவரும் அறியும் வண்ணம், உலகப் பொதுமறையாம் திருக்குறள், சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு என் தலைமையிலான அரசால் வெளியிடப்பட்டுள்ளது.மேலும், திருக்குறள் கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் நிலையில் உள்ளது.அதே போன்று பாரதியார் பாடல்களும், பாரதிதாசன் பாடல்களும், சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

அதிமுகவின்தேர்தல் அறிக்கையில், பண்டை தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும் என்ற வாக்குறுதிஅளிக்கப்பட்டுள்ளது.இதனை செயல்படுத்தும் வகையில், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட நூல்கள், உலக மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மனி மொழிகளிலும், இந்திய மொழிகளான மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படும்.

இப்பணிகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.இதன் மூலம், தமிழ் மொழியின் வளம் பற்றி உலக மக்கள் அறிவதற்கு மேலும் வழிவகை ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்

கால்நடை பல்கலைக்கழகத்தில் நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்

கால்நடை பல்கலைக்கழகத்தில் நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், இளநிலை பட்டப்படிப்பு வகுப்பில் சேருவதற்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நாளை நடைபெறுகிறது.இப்பல்கலையில், இளநிலை முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஜூலையில் நடந்தது; முடிவில், சில இடங்கள் காலியாக இருந்தன.

இப்பல்கலையுடன் இணைக்கப்பட்டகல்லுாரிகளில், இளநிலை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவம், 19; கோழியின உற்பத்தி மேலாண்மை, 10; உணவுத் தொழில்நுட்பம், ஆறு; பால்வள தொழில், ஒன்பது என, 44 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான கவுன்சிலிங், சென்னை, வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவக் கல்லுாரியில், நாளை காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக பி.எஸ்.என்.எல் - வோடபோன் கைகோர்ப்பு.

ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக பி.எஸ்.என்.எல் - வோடபோன் கைகோர்ப்பு.

ரிலையன்ஸ் நிறுவனம் அண்மையில் குறைந்த விலையிலான ஜியோ 4G சேவையை அறிவித்தது. போட்டியை சமாளிக்க சில நிறுவனங்கள் தற்போது கைகோர்த்துள்ளன.

அண்மையில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ 4G சேவையை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு, தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் டேடா, விலையில்லா போன் அழைப்பு, ரோமிங் செலவு இல்லை என பல்வேறு திட்டத்தை அறிமுகம் செய்தார். இதனால் சந்தையில் உள்ள போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா,பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனங்கள் மிகவும் தொய்வை சந்தித்துள்ளது.

தங்களது வாடிக்கையாளர்களை இழக்காமல் இருப்பதற்காக தற்போது பி.எஸ்.என்.எல் - வோடபோன் ஆகிய நிறுவனங்கள் கைக்கோர்த்துள்ளது. இரு நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு நெரிசலுக்கு தீர்வு- சென்னையில் 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு

தீபாவளிக்கு நெரிசலுக்கு தீர்வு- சென்னையில் 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு

சென்னை: தீபாவளி பண்டிகையின்போது சென்னையின் முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வெளியூர் பேருந்துகளை வெவ்வேறு இடங்களில் இருந்து பிரித்து இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்தெந்த இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 29ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி படிக்கும், வேலை செய்யும் லட்சக்கணக்கான மக்கள், பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்கின்றனர். 3 அல்லது 4 தினங்கள் தொடர்ந்து விடுமுறை வந்தாலே இப்போது சொந்த ஊர் செல்வதை ஏராளமானோர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசலில் திணறிப் போகிறது சென்னை மாநகரம்.
கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து வடபழனி வழியாக வந்து தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியைக் கடக்கவே பல மணிநேரங்கள் ஆகிவிடும். எனவே தீபாவளி பண்டிகை தினத்தில் இதுபோன்ற போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, சென்னை மாநகரத்தை மையமாக கொண்டு தெற்கு, வடக்கு, மேற்கு என பிரித்து 3 இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் பகுதியாகவும் கோயம்பேடு உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில் இப்பகுதியில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன.
  
போக்குவரத்து நெரிசல்
கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மாநகரின் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மணிக்கணக்கில் சாலைகளில் காத்திருந்து உடல் சோர்வுடன், மனஉளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு போக்கு வரத்துக் கழகங்கள் சார்பில் தினமும் 1,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்களில் சுமார் 4 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படும்.
  
ஆலோசனைக்கூட்டம்
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்களில் இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிடும். எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளைப் பல்வேறு இடங்களில் இருந்து பிரித்து இயக்குமாறு பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முதல்முறையாக, தீபாவளி பண்டிகைக்குச் சென்னையில் 3 முக்கிய இடங்களில் இருந்து வெளியூருக்குப் பேருந்துகள் இயக்குவதாக அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  
தென்மாவட்ட பேருந்துகள்
தென்மாவட்டங்களுக்குச் செல்லும் 40 சதவீத பேருந்துகளை வண்டலூர் அல்லது கூடுவாஞ்சேரியில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை பகுதி மற்றும் மாதவரத்தில் இருந்தும் பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும்.
  
நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை
பண்டிகை நாட்களின்போது சென்னை, புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வெளியூர் செல்பவர்கள் மட்டுமின்றி, பணி முடிந்து வீடு திரும்புபவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். வரும் தீபாவளி பண்டிகையின் போது, இவ்வாறு நேராமல் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், சென்னை மாநகரத்தை மையமாக கொண்டு தெற்கு, வடக்கு, மேற்கு என பிரித்து 3 இடங்களில் இருந்து பேருந்து களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பித்த 4 நாளில் பாஸ்போர்ட் : சென்னை மண்டல அதிகாரி அறிவிப்பு

மத்தியஅரசு அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின் கீழ்விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று சென்னை மண்டலபாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை
மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியதாவது:
பாஸ்போர்ட்கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான்கார்டு ஆகியவற்றைவிண்ணப்பத்துடன் இணைத்துக் கொடுத்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட்கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைத்ததும் போலீஸ் துறையின் சான்றாய்வுசெய்யப்படும் என்ற திட்டத்தை மத்தியவெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம்செய்துள்ளது. தட்கல் என்னும் துரிதபாஸ்போர்ட் திட்டத்தில் இருந்து இது முற்றிலும்மாறுபட்டது. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்குபோலீசார் விரைவாக சான்றாய்வு பெறவசதியாக மொபைல் ‘போலீஸ்-ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில்3 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகம்செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் அறிமுகம்செய்ய மாநில அரசு ஒப்புதல்வழங்கியுள்ளது. போலீஸ் ஆப் மூலம்போலீஸ் சான்றொப்பம் கிடைப்பதற்கான நேரம் வெகுவாக குறையும். இந்த திட்டத்தை சென்னை, விழுப்புரம், கடலூர்ஆகிய மாவட்டங்களில் ஒரு மாதத்தில் சோதனைஅடிப்படையில் அறிமுகம் செய்ய உள்ளோம். தமிழகத்தில்உள்ள 280 இ-சேவா மையங்களில்இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

கிராமங்களில்வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட்பெற இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறவிரும்புவோர் ரூ.155 செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சென்னை மண்டலபாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம்பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை3 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட்வழங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் கேட்டு வி்ண்ணப்பிக்கும் நபர்களின்சான்றிதழ் சரிபார்ப்புக்கான கால அளவு 19 நாளில்இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் கொடுத்த மறுநாளே அவர்கள்சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு மண்டல அதிகாரிபாலமுருகன் தெரிவித்தார். 

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு -பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம்

கடைகளில் விற்பனை செய்யும் இட்லி தோசை மாவு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!

கடந்த10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவைவிலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டேபோகிறது. இட்லி, தோசை மாவுவிற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின்வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாகமாவு விற்பனை நடைபெறுகிறது.மேலும்சிறிய மளிகைக்கடை முதல் பெரிய
ஷாப்பிங்மால் வரை இட்லி, தோசைமாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.

இந்த மாவு ஒரு உயிர்கொல்லி– ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோபலருக்கும் தெரிவதில்லை.இதன் பின் விளைவுகளைசற்று அலசிப் பார்த்தால் நம்உதிரமும் உறைந்து போகும் அளவிற்குஅதிபயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது!

1. 6 நாட்கள்வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க,நம் உடலில் ஏற்படும்காயத்திற்கும்,புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாடபயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்துவிற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

2. அதாவதுஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்கவேண்டிய கிரைண்டர்கள், 12- 18 மணி நேரம் தொடர்ந்துஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம்கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. இதனால் சிறு நீரகத்தில் கல்உண்டாகும் அபாயம் இருக்கின்றது.

3. என்னதான்நல்ல அரிசி உளுந்து போட்டாலும்நல்ல தண்ணீரை ஊற்றி தான்மாவு அரைக்க வேண்டும். ஆனால்பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர்மற்றும் உப்பு தண்ணிரே பயன்படுத்தப்படுகின்றது.

4. நம்முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒருகை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம்ஒரு இயற்கையான நோய் நிவாரணி( ஆண்டிபயாடிக்) இது, உடம்பு உஷ்னம், வாய் நாற்றம், குடல் புண்(அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.கடைமாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை!
மேலும், பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது,( – 24 )மைனஸ் 24 டிகிரிக்குகீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும்அவ்வகை பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன்ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்குஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக்கொல்லும் அபாயமும் உள்ளது.
எனவே தாம் சென்னை மாநகராட்சிகடைகள்,மற்றும் மாவுஅரைக்கும் இடங்களில்பரவலாக சோதனை (ரெய்டு) நடத்திதரம் குன்றிய மாவுகளைக் கைப்பற்றி,அபராதமும் விதித்து வருகின்றது.

எனவே,நமக்கு நன்கு தெரிந்தகலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்துவிற்பனை செய்யும் இட்லி,தோசை மாவுகளைமட்டும் வாங்குவதோடு,முன்,பின் தெரியாதவர்கள்தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பதுநலம்!