யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/12/15

பணியில் இருந்து கொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்பை முடித்த ஆசிரியைக்கு பதவி உயர்வு கிடையாது: உயர் நீதிமன்றம் உத்தரவு - தி இந்து

பணியில் தொடர்ந்தவாறு ஒரே நேரத்தில் பி.எட். மற்றும் முதுநிலை ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பை முடித்த ஆசிரியைக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர், தனக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததால், அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: 

மனுதாரர் இடைநிலை ஆசிரியராக 1986-ல் பணியில் சேர்ந்துள்ளார். 1988-ல் இளங் கலை ஆங்கில இலக்கியம் முடித்துள்ளார். பின்னர் 1989-ல் ஓராண்டு பி.எட். மற்றும் 1990-ல் இரண்டாண்டு முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்துள்ளார். இவ் விரண்டு படிப்புகளையும் அவர் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே படித்துள்ளார். இது எப்படி முடிந்தது என்பது தெரியவில்லை. பொதுவாக பணியில் இருக்கும் ஒருவரால் ஒரு படிப்புக்கே நேரம் ஒதுக்க முடியாது. இவர் இரு படிப்புகளை படித்துள்ளார். அந்த கல்வி தரமானதாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. 

பணியில் இருந்துகொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்புகளை முடித்த காரணத்தால் மனுதாரருக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்து பள்ளிக் கல்வி இயக்குநர் கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து மனுதாரர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிட்டதில் தவறில்லை. மேலும் மனுதாரர் யுஜிசி நிபுணர் குழுவின் தீர்மானத்தையும் மீறியுள்ளார். 

எனவே கூடுதல் கல்வித் தகுதி அடிப்படையில் தனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரிய மனுதாரர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

14/12/15

இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?

இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எப்படி படிக்க வேண்டும்?
-நெல்லை எம்.சண்முகசுந்தரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)
1) முகவுரையை தயாரித்தவர் யார்? முக்கிய ஷரத்துக்கள் எவை? சட்டத்திருத்த மூலம் சேர்ந்த வாக்கியங்கள் எவை?
2) அடிப்படை உரிமைகள், கடமைகள், அரசுக்கொள்கை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் தொடர்பான திருத்தங்கள்- எந்தப் பகுதி? ஷரத்துகளின் எண் என்ன?
3) பார்லிமெண்ட் பற்றிய முழு விவரங்கள், லோக் சபா, ராஜ்ய சபா உறுப்பினர்களின் தகுதிகள், தேர்வுமுறை, எந்த ஷரத்துகளில் இவை சேர்க்கப்பட்டுள்ளன?
4) குடியரசு தலைவர், துணை குடியரசுத் தலைவர், தகுதிகள், சபாநாயகர், துணை சபாநாயகர்-தகுதிகள், தேர்வுமுறை, அதிகாரம், இப்பதவி வகித்தவர்கள் யார் யார்?
5) பார்லிமெண்ட் மூலம் அமைக்கப்படும் கமிட்டிகள், பொதுக்கணக்கு குழு, நிதிக்குழு பற்றிய விவரங்கள்.
6) மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரங்கள், சட்டத்திருத்தங்கள் விவரம்.
7) பிரதமர், மத்திய அமைச்சர்கள் பற்றிய முழு விவரங்கள், துறையின் பெயர்கள்.
8) மாநில கவர்னர், முதல்-அமைச்சர், சட்டசபை, மேல்சபை, தகுதி, அதிகாரம்.
9) உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதிபதிகள் நியமனம், எல்லை வரம்பு, அனைத்துவகை அதிகாரங்கள், பதவியிலிருந்தவர்கள் பெயர், ரிட் மனுக்கள் (ஹேபியஸ் கார்பஸ், மேண்டமாஸ்).
10) சட்டத்திருத்தங்கள் (Amendments), முக்கிய திருத்தங்கள் பற்றிய முழுவிவரங்கள்.
11) 12 இணைப்பு பட்டியல்களில் (Schedules) என்னென்ன பொருள்கள் உள்ளன? புதிய மாநிலங்கள், தோற்றம்.
12) வடகிழக்கு எல்லை மாநிலங்கள் பற்றிய முழுவிவரம்.
13) ஒவ்வொரு மாநிலத்திலும் பேசப்படும் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம், பழங்குடியினர்களின் பெயர்கள்.
14) 7 யூனியன் பிரதேசங்கள் பற்றிய முழு விவரங்கள், லோக் சபா உறுப்பினர்கள், தலைநகரம்.
15) மத்திய-மாநில அரசு பணியாளர் தேர்வாணையங்கள், திட்டக்கமிஷன், இந்திய தேர்தல் ஆணையம்.
16) எந்தெந்த வெளிநாடுகளின் சட்டத்திலிருந்து என்னென்ன ஷரத்துகள் சேர்க்கப்பட்டன? என்ற முழு விவரம்.
17) நெருக்கடி நிலை, பஞ்சாயத்துராஜ், நகர்பாலிகா, ஐம்மு-காஷ்மீர், சிக்கிம் பற்றிய சிறப்பு அம்சங்கள்.
மேற்குறிப்பிட்ட இனங்களில் முழுக்கவனம் செலுத்தி தயாரிப்பு மேற்கொண்டால், இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவிடலாம்.

TNPSC DEPARTMENTAL EXAM TIMETABLE DEC 2015

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 'இ - அட்மிட் கார்டு'

புதுடில்லி : 'சிவில் சர்வீஸ் பிரதான தேர்வு களில் பங்கேற்போர், 'இ - அட்மிட் கார்டு' எனப்படும், இணையவழி அனுமதி அட்டைகளை, பிரின்ட் செய்து, தேர்வின் போது எடுத்து வர வேண்டும்' என, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வுகள், யு.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகள், முதல்நிலை, பிரதானம், நேர்முகம் என, மூன்று பிரிவுகளாக நடத்தப்படும். நாடு முழுவதும், இந்தாண்டு, 4.63 லட்சம் பேர், ஆக., 23ல் முதல்நிலை தேர்வு எழுதினர். இவர்களில், 15 ஆயிரம் பேர் வெற்றி பெற்றதாக, அக்., 12ல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்வர்கள், பிரதானத் தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து, யு.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு விவரம்: பிரதானத் தேர்வுகள், நாடு முழுவதும், 23 மையங்களில், டிச., 18ல் துவங்கி, 23ம் தேதி வரை நடக்கும். இத்தேர்வுகளில் பங்கேற்போருக்கு, காகிதத்திலான அனுமதி அட்டை வழங்கப்படாது. அனைவரின் அனுமதி அட்டைகளும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வில் பங்கேற்போர், தங்களுக்கான அனுமதி அட்டையை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பிரின்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அனுமதி அட்டையை, தேர்வின்போது காண்பிக்க வேண்டும். பதிவிறக்கம் செய்யப்படும் அனுமதி அட்டையில் புகைப்படம் தெளிவாக இல்லாவிடில், தகுந்த அடையாள அட்டையும், புகைப்படமும், உடன் எடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு யு.பி.எஸ்.சி., அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? மாணவர்கள் குழப்பம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதியை அறிவிக்காததால், தேர்வு தாமதமாகுமோ என, மாணவர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், மார்ச்சில் பொதுத் தேர்வு நடக்கும். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில்,ஏப்ரலில் சட்டசபைக்கு தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், பிப்ரவரியில் இருந்து தேர்தல் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. எனவே, பொதுத் தேர்வை விரைவில் முடிக்க வேண்டும்.


இதற்காக, வினாத்தாள்களும் இறுதி செய்யப்பட்டு, விடைத்தாள் அச்சடிப்பு ஆயத்த பணி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, பிப்., 29ல், பிளஸ் 2 தேர்வை துவங்க, தேர்வுத்துறை திட்ட
மிட்டிருந்தது.ஆனால், மழை வெள்ளத்தால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு, வகுப்புகள் நடக்காமல், பாடங்கள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், பிப்ரவரியில் தேர்வு வைப்பதா, அல்லது மார்ச், முதல் வாரத்துக்கு பின் துவங்குவதா என, தேர்வுத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.இதற்காக, பிப்., 29, மார்ச், 2 மற்றும் மார்ச், 7 ஆகிய தேதிகளில், ஏதாவது, ஒரு நாளில், பிளஸ் 2 தேர்வை துவங்கலாம் என திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளிகள் நாளை திறந்ததும், பொதுத் தேர்வு அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, வழக்கமாக, டிசம்பர், முதல் வாரமே பொதுத் தேர்வு அறிவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு இன்னும் அறிவிப்பு வராததால், தேர்வு எப்போது என, மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் பெய்த மழையால், மாணவர்கள் தங்கள் பாட குறிப்புகளையும், புத்தகங்களையும் இழந்து விட்டனர். எனவே, அரையாண்டு தேர்வை ரத்து செய்து விட்டு, மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு முழுமையாக தயாராக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் குடும்பத்தினர் பலர், உடைமைகளை இழந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு, ஒரு மாத ஊதியத்தை, வட்டியில்லா முன் பணமாக வழங்க வேண்டும்.
இளமாறன், ஆசிரியர் சங்க கூட்டுக்குழு,
'ஜாக்டா' ஒருங்கிணைப்பாளர்

வகுப்பறையில் பூச்சி தொல்லை ஆசிரியர்கள் சோதிக்க உத்தரவு

சென்னை:'வகுப்பறையில் பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே, மாணவர்களை அனுமதிக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.


அதன் விவரம்:
*கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, கிணறு, ஆழ்துளை கிணறு போன்றவற்றை 'பிளீச்சிங் பவுடர்' மூலம் சுத்தம் செய்ய வேண்டும். நீரில் கிருமிகளை கொல்லும் குறிப்பிட்ட அளவு, 'குளோரின்' கலந்த பின் குடிக்க தர வேண்டும்
*பள்ளி வளாகங்களில், குப்பை இல்லாமல் அகற்ற வேண்டும். குப்பை தேங்கி கிடந்தால் கொசு மற்றும் ஈக்கள் உற்பத்தியாக வாய்ப்பு ஏற்படும்
*எலுமிச்சை மற்றும் குளோரினை, 4க்கு, 1 என்ற விகிதத்தில் கலந்து, பள்ளி வளாகத்தில் சுத்தம் செய்ய வேண்டும். வகுப்பறைகளை, 'பினாயில்' மூலம் சுத்தம் செய்ய வேண்டும்
*மின் சாதனங்கள், 'ஸ்விட்ச்'களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கட்டடத்தில் எங்காவது விரிசல் போன்ற பாதுகாப்பற்ற தன்மை இருந்தால், அந்தப் பகுதியை பயன்படுத்தக் கூடாது
*வெள்ளம் காரணமாக, ஊர்வன, பறப்பன வகை பூச்சிகள் வகுப்பறைகளில் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, வகுப்பறைகளுக்குள் சென்று, முழுமையாக ஆய்வு செய்து, அதன் பிறகே மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பரிதவிக்கும் மாணவர்கள்: கைகொடுக்கும் நண்பர் குழுவினர்

காரைக்குடி:வெள்ளத்தால் பாடப்புத்தகங்கள், நோட்டுகளை இழந்து நிற்கும் மாணவர்களுக்கு கல்வி பணி செய்து வருகின்றனர், காரைக்குடி பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள், அலுவலர்கள்,நண்பர்கள் குழுவினர்.

சென்னை,கடலுாரை புரட்டிய வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள்,கரம் நீட்டும் முன்பே, கை கொடுத்து வருகின்றனர் காரைக்குடி தன்னார்வலர்கள். ஒவ்வொரு நாளும் லாரியில் எண்ணற்ற புத்தகங்கள், நோட்டுக்கள், துணி, உணவு, இதர பொருட்கள் என தங்களால் முடிந்தவற்றை அனுப்பி வருகின்றனர்.உணவு, உடைக்குரிய தட்டுப்பாடு நீங்கினாலும், பள்ளி திறக்கும் வேளையில், நோட்டு புத்தகங்களின் தேவை அவர்களை வாட்டி வதைக்கிறது. அந்நிலையை மாற்ற, நோட்டு, புத்தகம் தேவைப்படுவோருக்கு, ஒவ்வொரு நாளும் கூரியர் மூலம், காரைக்குடி பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அலுவலர்கள் அனுப்புகின்றனர்.

காரைக்குடி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தர மூர்த்தி. இவரது மகள் சேதுராணி. சென்னையில் நிலத்தடி நீர் பிரிவில் பொறியாளராக உள்ளார். பிரசவத்துக்காக தந்தை வீட்டுக்கு வந்தார். சென்னை வெள்ளத்தை பார்த்து, கடந்த 7-ம் தேதி, தன்னால் இயன்ற உதவியை வழங்கலாம், என, 'வாட்ஸ் ஆப்' மூலம் புத்தகம் தேவைப்படுவோர் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவரது தந்தை எண் 94869 05884, கணவர் சரவணன் 81787 61625, அவரது சகோதரர் சேதுபதி 81486 89993 ஆகியோரின் எண்களை வழங்கியுள்ளார்.அன்று முதல் சென்னை, கடலுாரில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டு புத்தகங்களை கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு கூரியரில் கடந்த 9-ம் தேதி முதல் புத்தகங்களை சுந்தரமூர்த்தி அவரது நண்பர்கள் அனுப்பி வருகின்றனர்.

சுந்தரமூர்த்தி கூறும்போது: எனது மகள் அனுப்பிய வாட்ஸ் ஆப் மூலம், நல்லது செய்ய வேண்டும் என கருதி, மற்றவர்களிடம் இது குறித்து கேட்டேன். உதவி செயற்பொறியாளர்கள் தாசூஸ், பொன்னன், பாண்டி, சங்கர், உதவியாளர் கோடை மலை, உதவி பொறியாளர் நவசக்தி, அஜீத்குமார், எனது மருமகன், மகன் உதவினர்.நடுத்தர, பின்தங்கிய ஏழைகளை தேர்வு செய்து, ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான புத்தகங்களை, அவர்களின் வீட்டு முகவரிக்கு தினந்தோறும் கூரியரில் அனுப்பி வருகிறோம். இதுவரை 200-க்கும் மேற்பட்டோருக்கு அனுப்பியுள்ளோம். மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று புத்தகங்களை சேகரித்து வருகிறோம். .

பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள் கிடைப்பது இல்லை. பள்ளிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளோம். அவர்கள் பழைய மாணவர்களிடமும், தங்களிடம் உள்ள பழைய புத்தகங்களையும் தருவதாக கூறியுள்ளனர்.வித்யாகிரி பள்ளி முதல்வர், அவர் கோடவுனை திறந்து உங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்து கொள்ளுங்கள் எனக் கூறி, ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கினார். கூரியரில் புத்தகங்கள் கொண்ட பார்சலுக்கு ரூ.15 மட்டுமே பெற்று உதவியுள்ளனர். இதுவரை ரூ.1.5 லட்சம் வரையிலான புத்தகங்களை அனுப்பியுள்ளோம், என்றார்.

சென்னை குரோம்பேட்டை அமுதா: என் மகன்களுக்கு கூரியரில் புத்தகம் அனுப்பி வைத்தனர். வாழ்க்கையில் இது மறக்க முடியாது. என்றும் நாங்கள் அவர்களுக்கு கடமை பட்டுள்ளோம், என்றார்.

பாடம் நடத்தாத ஆசிரியர்கள் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்'

வேலுார்:சரிவர பாடம் நடத்தாத ஆசிரியர்கள், ஏழு பேரிடம் விளக்கம் கேட்டு, முதன்மைக் கல்வி அலுவலர், 'நோட்டீஸ்' கொடுத்துள்ளார்.

வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது மொழிக்கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது; 21 ஆசிரியர்கள் உள்ளனர்.கடந்த ஆண்டு பொதுத் தேர்வில், ௧௦ம் வகுப்பில், 76 சதவீதம், பிளஸ் 2வில், 48 சதவீதம் மட்டுமே, மாணவர்களின் தேர்ச்சி இருந்தது; வேலுார் மாவட்டத்திலேயே மிகக் குறைந்த தேர்ச்சி, இந்தப் பள்ளியில் தான்.சமீபத்தில், இந்த பள்ளிக்கு சென்ற முதன்மை கல்வி அலுவலர் பூபதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.


அப்போது, அந்த பள்ளியின், ஏழு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சரிவர பாடங்களை நடத்தாதது தான், தோல்விக்கு காரணம் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறினர். இதையடுத்து, அந்த ஏழு ஆசிரியர்களுக்கும், 'சரி வர பாடம் நடத்தாதது ஏன்?' என கேட்டு, கல்வி அலுவலர், நோட்டீஸ் கொடுத்துள்ளார். பிற ஆசிரியர்களையும் கண்டித்த அலுவலர், 'வரும் பொதுத்தேர்வில், அதிக வெற்றி பெற பாடுபட வேண்டும்' என, அறிவுறுத்தினார்

12 நாட்களுக்கு பின் 13 பக்க ஆங்கில அறிக்கை

சென்னை:செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, அதிக அளவு தண்ணீர் திறந்தது தொடர்பாக,
12 நாட்களுக்கு பின், 13 பக்க ஆங்கில அறிக்கை மூலம், தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் விளக்கம் அளித்துள்ளார்.


தமிழகத்தில், நவ., மாத இறுதி முதல், இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. டிச., 1ம் தேதியும் விடாது மழை கொட்டியது. ஏரிகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டதால், சென்னை வெள்ளக்காடாக மாறியது. அடுக்குமாடிகளில், முதல் தளம் வரை தண்ணீர் சென்றது; உயிர் இழப்புகளும் ஏற்பட்டன.

'பெரும் பாதிப்பு ஏற்பட்டதற்கு, சரியான திட்டமிடல் இன்றி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, டிச., 1ம் தேதி நள்ளிரவு, வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி நீர், திடீரென திறந்து விடப்பட்டதே காரணம்; அரசு முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால், பெரும் வெள்ளப் பாதிப்பை தடுத்திருக்கலாம்' என, நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். பல்வேறு தரப்பிலும் தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், 12 நாட்களுக்கு பின், நேற்று இரவு, 7:00 மணிக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன், 13 பக்கம் கொண்ட, விளக்க அறிக்கை ஒன்றை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.

பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு மாணவர்களுக்கு இலவச புத்தகம் தயார்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 34 நாள் விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாமுக்கும், வெள்ள பாதிப்பிலிருந்து நீங்கி, புத்துணர்ச்சி பெற, 'கவுன்சிலிங்' வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வெள்ளத்தில், மாணவர்கள் சீருடைகளை தொலைத்திருந்தால், சீருடை அணிந்து வர கட்டாயப்படுத்த வேண்டாம் என, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.அரசு கைவிரிப்பு: சென்னையில், வெள்ளத்தால் உருக்குலைந்து போன அசோக் நகர் பள்ளியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி மற்றும் துறையின் முதன்மை செயலர் சபிதா பார்வையிட்டனர். 'வெள்ள சேதம் பற்றி கவலைப்படாமல் இருக்கும் கட்டமைப்பை பயன்படுத்தி பாடங்களை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர்.

34 நாள் விடுமுறைக்கு பின், பள்ளிகள் இன்று திறப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 34 நாள் விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 
வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாமுக்கும், வெள்ளப் பாதிப்பிலிருந்துநீங்கி, புத்துணர்ச்சி பெற, 'கவுன்சிலிங்' வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளத்தில், மாணவர்கள் சீருடைகளை தொலைத்திருந்தால், சீருடை அணிந்து வர கட்டாயப்படுத்த வேண்டாம் என, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.சென்னையில், வெள்ளத்தால் உருக்குலைந்து போன அசோக் நகர் பள்ளியை, பள்ளிக்கல்வித்
துறை அமைச்சர் வீரமணி மற்றும் துறையின் முதன்மை செயலர் சபிதா பார்வையிட்டனர்.

'வெள்ளச் சேதம் :பற்றி கவலைப்படாமல், இருக்கும் கட்டமைப்பை பயன்படுத்தி, பாடங்களை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர்.

NMMS EXAM - 2016

ரயில் டிக்கெட் ரத்து செய்ய '139' எண்ணில் அழைக்கலாம்

ரயில் பயணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன், '139' என்ற எண்ணுக்கு டயல்செய்து, டிக்கெட்டை ரத்து செய்யும் முறை, புத்தாண்டில் அமலுக்கு வருகிறது.ரயில் புறப்படும் முன், முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் எனில், ரயில் நிலையத்துக்கு செல்வது அவசியம். இல்லையெனில், கட்டண தொகையில் பாதி பிடித்தம் செய்யப்படும். 


ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன், டிக்கெட்டை ரத்து செய்வதற்கான கட்டணத்தை, நவ.,12ல் ரயில்வே வாரியம் இருமடங்காக உயர்த்தியது. அனைத்து வகுப்பு டிக்கெட்களுக்கும், இது அமல்படுத்தப்பட்டது. அதாவது, ரயில்புறப்படுவதற்கு, 48 மணிநேரத்துக்கு முன் டிக்கெட்டை ரத்து செய்யும்போது,இரண்டாம் வகுப்பு இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு ரத்து செய்யப்படும் தொகை, 30 இருந்து, 60 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டிகளுக்கான டிக்கெட்டுக்கு, பிடித்தம் செய்யப்படும்தொகை, 90லிருந்து, 180 ஆகவும் உயர்த்தப்பட்டது.இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளுக்கு இந்த தொகை, 60லிருந்து, 120 ரூபாயாகவும், இரண்டடுக்கு, 'ஏசி' பெட்டிகளுக்கு, 100லிருந்து, 200- ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு முதல், ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கு புதிய வசதி அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி, '139' என்ற ரயில்வே, 'ஹெல்ப்லைன்' எண்ணை தொடர்பு கொண்டு, டிக்கெட் பதிவு செய்யும் போது அளித்த மொபைல் போன் எண்ணை கூற வேண்டும். அதன் பின், மொபைல் எண்ணில், அனுப்பப்பட்ட, 'ஒன் டைம் பாஸ்வேர்டை' விசாரணை அதிகாரி அல்லது கணிணிமயமாக்கப்பட்ட விசாரணையில் கூறவேண்டும். இதையடுத்து, டிக்கெட் ரத்தாகும். பின், ரயில் நிலைய கவுன்ட்டருக்கு சென்று டிக்கெட்டை காட்டி, மீதமுள்ள கட்டண தொகையை பெறலாம். இந்த வசதி, 2016, ஜன. 26 முதல் அமலுக்கு வருகிறது.

போலியோ முகாம் 2016க்கு தள்ளிவைப்பு

தமிழகத்தில், மழை வெள்ள பாதிப்பால், டிசம்பர் மாதம் நடத்த வேண்டிய, போலியோ சொட்டு மருந்து முகாம், ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், போலியோ நோயை ஒழிக்கும் வகையில், ஆண்டு தோறும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுவது வழக்கம்.


ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர், ஜனவரி மாதத்தில், இம்முகாம் நடக்கும். தமிழகத்தில், இரண்டு கட்டமாக நடக்கும் முகாம்களில், மாநிலம் முழுவதும் உள்ள, 2.50 கோடி குழந்தைகளுக்கு, 46 ஆயிரம் மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும்.சமீபத்தில், பெய்த தொடர் மழை காரணமாக, பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, இன்னும் ஒரு மாதமாகிவிடும். இந்த சூழ்நிலையில், முகாம் நடத்தினால், அவை வெற்றிகரமாக இருக்காது என்ற தகவல் அரசுக்கு சென்றது.

மத்திய சுகாதாரத்துறையிடம், போலியோ முகாமை, ஒரு மாதம் தள்ளிவைக்குமாறு, தமிழக சுகாதார அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், ஜனவரி, 17ம் தேதியிலும், பிப்ரவரி, 21ம் தேதியிலும், போலியோ முகாம் நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டப்படிப்பு வயது வரம்பு உத்தரவு தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு

சட்டப்படிப்பு படிப்பதற்கான வயது வரம்பை நீக்கும் உத்தரவில் தலையிட முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டப்படிப்பின் தரத்தை உயர்த்த, தேசிய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு, 2002-ல் அறிக்கை அளித்தது. இதையடுத்து, 2008ல் சட்டப் படிப்புக்கான விதிகளை, இந்திய பார் கவுன்சில் வரையறுத்தது. அதில், சட்டப்படிப்புக்கு முதன் முறையாக, நாடுதழுவிய அளவில், வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. 


மறுபரிசீலனை

இந்த வயது வரம்பை எதிர்த்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த மூன்று பேர் குழு, 'சட்டப் படிப்புக்கான வயது வரம்பு விதியைக் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்' என, பரிந்துரை செய்தது.இந்நிலையில், சட்டப் படிப்புக்கான வயது வரம்பு விதியை மறுபரிசீலனை செய்ய, வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் தலைமையில், ஒரு நபர் குழுவை பார் கவுன்சில் அமைத்தது. இக்குழு சட்டப் படிப்புக்கான வயது வரம்பை அறவே நீக்கும்படி, 2013ல் பரிந்துரை செய்தது.இதையடுத்து, சட்டக் கல்விக்கான வயது வரம்பை நீக்கி, இந்திய பார் கவுன்சில்,2013 செப்டம்பரில் உத்தரவிட்டது.

வழக்கு தாக்கல்

இந்நிலையில், தமிழகத்தில், 2015 - 16ம் ஆண்டுக்கான சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை துவங்கியது.இதில், இந்திய பார் கவுன்சில் ஆணைப்படி, மூன்றாண்டு சட்டப் படிப்பில் சேர வயது வரம்பு இல்லை; 5 ஆண்டு சட்டப் படிப்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் வயது வரம்பு இல்லை என்றும், மற்ற இனத்தவருக்கு, 21 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டு, தமிழக அரசு உத்தரவிட்டது.ஆனால், 'இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தின், மூன்று பேர் குழு தாக்கல் செய்த பரிந்துரைக்கு எதிரானது' என, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், பார் கவுன்சிலின் வயது வரம்பு தளர்வு உத்தரவை ரத்து செய்து, ஏற்கனவே இருந்த முறைப்படி, வயது வரம்பு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹார் மற்றும் ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது.

வங்கிகளுக்கு 4 நாள் தொடர் விடுமுறை

மிலாடி நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளை முன்னிட்டு, வங்கிகளுக்கு தொடர்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கி பணிகளை முன் கூட்டியே முடிக்க வேண்டிய நிலை, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.டிச., 23ல், மிலாடி நபி; 25ல், கிறிஸ்துமஸ் பண்டிகைகள் வருகின்றன. 


26ல், நான்காவது சனிக்கிழமை விடுமுறை; 27ல், ஞாயிறு விடுமுறை என, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது. இதற்கிடையே, 23ல் அறிவிக்கப்பட்டமிலாடி நபி, 24க்கு மாற்றுப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படி மாற்றி அறிவித்தால், 24 முதல், 27 வரை, 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.


இதுகுறித்து, கனரா வங்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:'மிலாடி நபி விடுமுறை, டிச., 23' என, வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், இதுவரை மாற்றம் இல்லை. அதனால், 24ல், வங்கிகள் இயங்கும். 25 முதல் 27 வரை விடுமுறை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்பை தொடர்ந்து, தொடர் விடுமுறை ரத்தாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மழை, வெள்ளம் பாதிப்பு காரணமாக விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா?

டிஎன்பிஎஸ்சி கிராம நிர்வாக அலுவலர் பதவியில் காலியாக உள்ள 813 பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த நவம்பர்12ம் தேதி அறிவித்தது. அன்றைய தினம் முதல் டிஎன்பிஎஸ்சியின் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதி என்பதால் போட்டிப் போட்டு லட்சக்கணக்கில் விண்ணப்பித்தனர். 


இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்களின்இயல்பு வாழ்க்கை கடந்த 20 நாட்களுக்கு மேலாக அடியோடு முடங்கியது. இதன் காரணமாக, வி.ஏ.ஓ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவ, மாணவியரின் புத்தகங்கள், கடந்த கால வினா தாட்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தேர்வுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்தையும் மீண்டும் திரட்டி தயாராவது என்பது சாத்தியமானது அல்ல. அதுமட்டுமின்றி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேர்வுக்கு தயாராவதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது. மழை வெள்ளத்தில் மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக அனுபவித்த துயரம் மற்றும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். மேலும், மழை பெய்த நேரத்தில் செல்போன், இன்டர்நெட் உள்ளிட்டவற்றின் சேவையும் அடியோடு துண்டிக்கப்பட்டது. தற்போது வரை இன்டர்நெட் சேவை மிகவும் மெதுவாகவே உள்ளது.

இதனால், தேர்வுக்கு விண்ணப்பிப்போர், தேர்வு எழுதுவோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (14ம் தேதி) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, பிப்ரவரி 14ம் தேதி எழுத்து தேர்வும் நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளதால் சான்றிதழ் உள்ளிட்டவற்றை மழையால் பாதிக்கப்பட்டவர்கள் புதிதாக வாங்குவது என்பது முடியாத காரியம். இதனால் அவர்கள் திண்டாடி வருகின்றனர். எனவே, இத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க ேவண்டும் என்ற ேகாரிக்கை தற்போது எழுந்துள்ளது.

வெள்ள சேதத்தால் தமிழக சட்டசபை தேர்தல் ஒத்தி வைப்பா? வாய்ப்பே இல்லை என்கிறது தேர்தல் கமிஷன்

சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், மழை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்காக, சட்டசபை தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பே இல்லை என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.அ.தி.மு.க., அரசின் பதவி காலம், 2016 மே, 16ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன், சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது.


ஜனவரி, 5ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக இருந்தது. வெள்ளம் காரணமாக, ஜன., 20க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களில், நான்கு மாவட்டங்கள் மட்டுமே, வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு முழு வீச்சில் நிவாரணப் பணிகளை முடித்து, தேர்தலுக்கு தயாராகவே, ஆளுங்கட்சி முயற்சிக்கும்.ஏனெனில், திட்டமிட்டபடி மே, 16ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடித்தாக வேண்டும். இல்லையெனில், கவர்னர் ஆட்சி வந்துவிடும். அதை, ஆளுங்கட்சியினர் விரும்ப மாட்டார்கள். தமிழகத்துடன் மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கும், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள்குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள், நேற்று முன்தினம் மேற்கு வங்கம் சென்று, மாநில அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளனர்.தமிழக வருகை, வெள்ளம் காரணமாக தள்ளி போயுள்ளது. ஒரு வாரத்தில், வெள்ள மீட்பு பணிகள் முடிந்து விடும். அதன்பின் தேர்தல் பணிகள் துவக்கப்படும்.தேர்தலுக்கு முன், பொதுத் தேர்வுகள் முடிந்து விடும் நிலையில், தேர்தல் பணியில், எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. எனவே, தேர்தல் ஒத்திப்போவதற்கான வாய்ப்பு இல்லை; திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும்.காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மிகப்பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. வெள்ள நிவாரண பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காக, சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என, எல்லா கட்சிகளும் விரும்பின.

நிராகரிப்பு:

ஆனால், இந்த கோரிக்கையை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்து விட்டது. தேர்தலையும் குறித்த காலத்தில் நடத்தி முடித்தது. எப்போதும் இல்லாத வகையில், காஷ்மீர் தேர்தலில் ஓட்டுப்பதிவும் மிக அதிகமாக இருந்தது. மாநிலம்முழுவதுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரில் தேர்தல் ஒத்திவைக்கப்படாதநிலையில், நான்கு மாவட்டங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில், தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியமே இல்லை. அதுவும் தேர்தல் அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரம் தான் வெளியாகும். அதற்குள் அரசு, எல்லா நிவாரண பணிகளையும் முடித்து விட முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகளை திறக்க வேண்டியது தலைமை ஆசிரியர்களின் பொறுப்பு'

எந்த நிலையில் இருந்தாலும், பள்ளிகளை நாளை திறந்து இயல்பு நிலையை காட்ட வேண்டும்' என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், சுத்தம் செய்யப்படாத பள்ளிகளில், மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுமோ என, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். நான்கு மாவட்டங்களை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கைதொடர்ந்து, பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட தொடர் விடுமுறை, இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 


எச்சரிக்கை:

'பள்ளிகளை திறந்தால் தான், இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அர்த்தம். எனவே, பள்ளி விடுமுறையை நீட்டித்தால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும். என்னநிலையில் இருந்தாலும், பள்ளிகளை திறக்க வேண்டியது அந்தந்த தலைமை ஆசிரியர்களின் பொறுப்பு' என, அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:'பள்ளியை திறக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்' என்று கூறிவிட்டு, வேலைக்கான ஆட்களையே வழங்கவில்லை. உள்ளூர் காரர்கள், நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் எவ்வளவு தான் வேலை பார்க்க முடியும். சில குறிப்பிட்ட மின் சாதன பராமரிப்பு, கீழ்நிலை தொட்டி மற்றும் மேல்நிலை தண்ணீர் தொட்டி சுத்தம் செய்தல், கல்லுாரி வளாகத்தை பராமரித்தல், கழிப்பறையை சுத்தம் செய்தல், கரையான் பிடித்த தளவாட பொருட்களை அகற்றுதல் என, முக்கிய பணிகளுக்கு கூட ஆட்கள் இல்லை; பொருளுதவியும் இல்லை.

பகுதிவாசிகள்:

பிற மாவட்ட ஊழியர்களை வரவழைத்து பணிகளை முடிக்க, உதவி இருக்க வேண்டும். அதைவிடுத்து, அவ்வப்போது அதிகாரிகள் வந்து, 'விசிட்' அடித்துவிட்டு, 'இன்னும் ரெடியாகலையா?' என கேட்டு, நெருக்கடி தருகின்றனர். பல பள்ளிகளில் அடைக்கலமாகி உள்ள பகுதிவாசிகளை, கட்டாயப்படுத்தி வெளியேற்றுகின்றனர். இயல்புநிலை வந்துள்ளதாக செயற்கையாக காட்ட, கல்வித்துறை இந்த முயற்சி மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

முழுமையாக சுத்தம் செய்யப்படாத பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையில், ஈரமாக இருக்கும் சுவர்கள் மற்றும் குவிக்கப்பட்ட குப்பையால், நோய் பரவும் வாய்ப்புள்ளதாக, பெற்றோர் கவலையடைந்து உள்ளனர்.

வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம் - அனைத்திந்திய ஆசிரியர் பேரவை அறிவிப்பு...

2016-ம் ஆண்டிலும் புதிய ரேஷன் அட்டை இல்லை: 7-வது ஆண்டாக உள்தாள்தான்

தமிழகத்தில் இந்த மாதத்துடன் ரேஷன் அட்டைகள் காலாவதியாக உள்ள நிலையில், புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் 7-வது ஆண்டாக 2016-ம் ஆண்டுக் கும் உள்தாள்தான் இணைக்கப்பட வுள்ளது.தமிழகத்தில் ஏறத்தாழ 2 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. இவற்றில் அரிசி, சர்க்கரை பெறும் அட்டைகள் அதிகம். அரிசி தேவையில்லை என்ற அட்டைகள், எந்த பொருளும் வேண்டாம் என்ற கவுரவ அட்டைகள் மற்றும் காவலர்களுக்கான குடும்ப அட்டைகளும் உள்ளன.தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிதாக ரேஷன் அட் டைகள் அச்சிடப்பட்டு பொதுமக்க ளுக்கு வழங்கும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. 


கடைசியாக 2005-ம் ஆண்டில் புதிய ரேஷன் அட்டைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன. இவை 2009-ம் ஆண்டோடு காலாவதியாகிவிட்டன. இதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஒவ் வொரு ஆண்டுக்கும் உள்தாள் இணைக்கப்பட்டு பழைய கார்டே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகள் வாயி லாக இலவசமாக அரிசி, மானிய விலையில் சர்க்கரை, மண்ணெண் ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் அட்டை களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. போலியான ரேஷன் அட்டைகள் அதிகஅளவில் புழக்கத்தில் இருப் பதால் அத்தியாவசியப் பொருட் கள் முறைகேடாக பயன்படுத்தப் படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின் றன.போலியான ரேஷன் அட்டை களை ஒழிக்கும் வகையிலும், தகுதியானவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் சென்று சேரும் வகையிலும் பழைய ரேஷன் அட்டைகளுக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு பழைய ரேஷன் அட்டை களுக்கு பதிலாக பயோ மெட்ரிக் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என சட்டப்பேரவையிலேயே தெரிவிக் கப்பட்டது. ஆனால், இத்திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகி விட்டன.தமிழகத்தில் தேர்ந்தெடுக் கப்பட்ட சில மாவட்டங்களில் ஒருசில வட்டங்களில் சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடங்கப்பட்டும், அவை இதுவரையில் இறுதிக் கட்டத்தை எட்டி பயன்பாட்டுக்கு வரவில்லை.ரேஷன் அட்டை என்பது அத்தி யாவசிப் பொருட்களை வாங்கு வதற்கு மட்டுமே பயன்படவில்லை. அரசுத்துறைகளில் வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்களுக்கும் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. ஆனால், 10 ஆண்டுகளாக ஒரே அட்டை பயன்படுத்தப்பட்டு வருவதால், அவை மிகவும் சேத மடைந்து, அதிலுள்ள விவரங்களைஅறியகூட முடியாத நிலையில் உள்ளன.இதுகுறித்து உணவுத் துறை வட்டாரங்களில் கேட்டபோது, 2016-ம் ஆண்டுக்கு பழைய அட்டைகளை மாற்றி புதிதாக ரேஷன் அட்டைகளோ அல்லது ஸ்மார்ட் கார்டுகள் வழங்கவோ தற்போது இயலாது. மேலும், தமிழகத்தில் சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழையால் பலத்த சேதங்கள் ஏற்பட்ட நிலையில், அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணி மற்றும் சேத கணக்கெடுப்பு பணிகளில் முழு அளவில் ஈடுபட்டுள்ளதால், இதில் தற்போது கவனம் செலுத்த இயலாதநிலை உள்ளது.மேலும், வெள்ளத்தால் ரேஷன் கார்டுகளை இழந்தவர்களுக்கு புதிதாக கார்டுகள் வழங்க வேண்டிய பணியும் தற்போது கூடுதலாக சேர்ந்துள்ளது.எனவே, 2016-ம் ஆண்டுக்கும் ரேஷன் அட்டைகளில் உள் தாள் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். இதற் கான அறிவிப்பு ஓரிருநாளில் வெளியிடப்படும் என்றனர்.

10ம் வகுப்பு பெயர் பட்டியல்15ம் தேதி வரை அவகாசம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வுப்பட்டியல் தயாரிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை, அதற்கென வழங்கப்பட்ட மென்பொருளில் தயார் செய்து வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது.


அப்பணிகளை நவ., 30 முதல் டிச., 9ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், மழையால் பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால், டிச., 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதற்குள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிழைகள் இன்றி, மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை தயார் நிலையில் வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது

சிவில் சர்வீஸ் தேர்வுகளை ஒத்திவைக்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஆட்சிப்பணி உள்ளிட்ட பதவிகளுக்கு, யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுகளை, இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.இதுதொடர்பாக, பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் பிற மாவட்டங்களில், இயல்பு நிலை திரும்பி வருவதாக கூறியுள்ளார்.


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி, வருகிற 18-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை, சிவில் சர்வீஸ் பிரதான தேர்வை நடத்த உள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்தில், இந்த தேர்வை எழுதும் மாணவர்கள், சென்னையையே பிரதான மையமாக தேர்வு செய்து, சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள விடுதிகள், பயிற்சி மையங்கள், வாடகை வீடுகளில் தங்கி, தேர்விற்காக தயாராகி வருவதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.முழுவீச்சில் தேர்விற்கு தயாராகி வந்த சிவில் சர்வீஸ் மாணவர்கள், கனமழை மற்றும் வெள்ளத்தால், கடந்த சில வாரங்களாக, பாடங்களில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.எனவே, மாணவர்கள் நலனை கருதி, அவர்கள் நல்ல முறையில் தேர்விற்கு தயாராகும் வகையில், சிவிஸ் சர்வீஸ் தேர்வுகளை, குறைந்த பட்சம் 2 மாதங்களுக்காவது ஒத்திவைக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

13/12/15

கணினி அறிவியல் பாடத்திட்ட புத்தகங்கள் முடக்கிவைப்பு

நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுக்காக அச்சிடப்பட்ட, கணினி அறிவியல் பாடத்திட்ட புத்தகங்கள் முடக்கிவைக்கப்பட்டுள்ளதால், அரசு பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பத்தில் பின்தங்கியுள்ளதாக கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


கடந்த, 2011ம் ஆண்டு, தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசின் கல்வித்திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில், சமச்சீர் கல்வியில் 6, 7, 8, 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப் படுத்தப்பட்டு, புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.ஆனால், அக்கல்வியாண்டே காரணங்கள் ஏதுமின்றி, புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டு, கணினி அறிவியல் பாடம் கற்பித்தல் நிறுத்தப்பட்டது. இன்றைய உலகில், தொழில்நுட்ப அறிவு கட்டாயம் என்ற நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அடிப்படை கம்ப்யூட்டர் இயக்கங்கள் கூட அறியாமல் படிப்பை முடித்து செல்கின்றனர்.இதனால், உயர்கல்வி, வேலைவாய்பு பெறுதல் போன்ற போட்டியில், பின்தங்கிவிடுகின்றனர். குறிப்பாக, அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கணினி அறிவியல் பாடங்களை ஆசிரியர்கள் இல்லை என்பது வேதனைக்குரியதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.பிளஸ்1, பிளஸ்2 வகுப்பில் கணினி அறிவியல் பாடத்தை தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள் மட்டுமே, ஓரளவு தொழில்நுட்ப அறிவை பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுசெயலாளர் குமரேசன் கூறுகையில், ''சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது, தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் புரிந்து, கணினி அறிவியல் பாடம், ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.''லட்சக்கணக்கில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. முறையே, வகுப்புகளும் நடந்தது. ''ஆனால், இரண்டு மாதங்களிலேயே எவ்வித அறிவிப்பும்இல்லாமல், கணினி அறிவியல் பாடம் கற்பிப்பதை நிறுத்தி, புத்தகங்களை திரும்ப பெற்றனர். இந்த புத்தகங்களின் நிலை என்ன என்பது குறித்து அரசு தெளிவுபடுத்தவேண்டும்,'' என்றார்.

B.ED துணைத்தேர்வுதேதி மாற்றம்

பி.எட்., கல்லுாரிகளில் துணைத்தேர்வுகள், டிச., 14ம் தேதிக்கு பதில், 21ம் தேதி துவங்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பி.எட்., கல்லுாரிகளில்,


டிசம்பரில் நடக்க வேண்டிய, பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான துணைத்தேர்வுகள், டிச., 14ம் தேதிக்கு பதில், டிச., 21ம் தேதி துவங்கும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

துணைத்தேர்வு சான்றிதழ் பெற அவகாசம்

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்க, அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:


பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழை, டிச., 11ம் தேதிக்குள், தேர்வு மையங்களில் பெற்று கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது;மழையால், மாணவர்கள் சான்றிதழ்களை பெற முடியவில்லை.எனவே, தனித்தேர்வர்கள், டிச., 18ம் தேதி வரை, ஞாயிறு தவிர, பிற நாட்களில், தேர்வு மையங்களில் சான்றிதழ்களை பெறலாம். அதன்பின், தேர்வுத் துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் பெறலாம்.இவ்வாறுஅதில் கூறப்பட்டு உள்ளது.

NMMS உதவித்தொகை தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வுக்கு,24ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.எட்டாம் வகுப்பு மாணவருக்கான இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, மாதம், 500ரூபாய் வீதம், பிளஸ் 2 முடிக்கும் வரை, உதவித்தொகை வழங்கப்படும். 


இதற்கான விண்ணப்பங்களை, 11ம் தேதிக்குள், தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.தற்போது, 24ம் தேதி வரை, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விண்ணப்பங்களை, 14ம் தேதி முதல், 24 வரை, தேர்வுத்துறை இணையதளத்தில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யலாம் என,தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து? தனியார் பள்ளிகள் முடிவு

கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையை ரத்து செய்ய, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில், கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கால், ஒரு மாதமாக பள்ளிகள் இயங்கவில்லை. டிச., 14 முதல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. 


எனினும், டிச., 22க்குள் முடிக்க வேண்டிய, 10ம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டு தேர்வுகள் மற்றும்,1ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான, இரண்டாம் பருவ தேர்வுகளை நடத்துவதா, வேண்டாமா என, பள்ளிக் கல்வித்துறையும், பள்ளி நிர்வாகமும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.

இரண்டாம் பருவ பாடங்களை நடத்தாமல், தேர்வை மட்டும் நடத்த முடியாது என்பதால், டிச., 24 முதல், ஜன., 1 வரையிலான, கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர் விடுமுறை நாட்களை ரத்து செய்ய, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.சென்னை, எழும்பூர் டான் போஸ்கோ பள்ளி, 'டிச., 15 முதல், அரையாண்டு தேர்வுக்கு முந்தைய திருப்புதல் தேர்வு நடக்கும்; டிச., 24 மீலாது நபி, 25ல் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மட்டும்விடுமுறை விடப்படும்; டிச., 26 முதல், வழக்கமான வகுப்புகள் நடக்கும்' என, அறிவித்துள்ளது. மேலும் சில பள்ளிகள், விடுமுறை மற்றும் தேர்வு குறித்து பெற்றோர், மாணவர்களிடம் கருத்து கேட்டு வருகின்றன. இதில், 50 சதவீத பெற்றோர், 'அரையாண்டு தேர்வுக்கு பதில், விடுமுறை நாட்களிலும் வகுப்புகள் நடத்தலாம்' என, தெரிவித்துள்ளனர். மற்றொரு தரப்பினர், டிசம்பர் விடுமுறைக்கு, வெளியூர் செல்ல திட்டமிட்டு, டிக்கெட் முன்பதிவு உட்பட, பல ஏற்பாடுகள் செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், தனியார் பள்ளி நிர்வாகங்கள் குழப்பத்தில் உள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் இளங்கோவன் கூறும்போது, ''தேர்வு மற்றும் விடுமுறை குறித்து, இன்னும் முடிவு எடுக்கவில்லை. முதற்கட்டமாக, பள்ளிகளை திறந்து இயல்பு நிலைக்கு வர வேண்டும். அதன்பின், தேர்வு மற்றும் விடுமுறையை திட்டமிட முடியும். சில தனியார் பள்ளிகள் முடிவு எடுத்தால், அது அவர்களின்நிர்வாகம் தொடர்பானது,'' என்றார்.-

ஜனவரி 1 முதல் 15-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை: அரசு பரிசீலனை

தில்லியில் தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாடு அமல்படுத்தப்படவுள்ள ஜனவரி 1 முதல் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், தலைநகரில் உள்ளபள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தில்லி அரசு பரிசீலித்து வருகிறது.இதுகுறித்து, துணை முதல்வரும், மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை கூறியதாவது:


ஒற்றைப் படை மற்றும் இரட்டைப் படை பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் மீது கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள ஜனவரி 1 முதல் 15ஆம் தேதி வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு எங்களுக்கு பரிந்துரை வந்துள்ளது.அதுகுறித்து பரிசீலித்து வருகிறோம். தேவையேற்பட்டால், அந்த காலகட்டத்தில் தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.அதிரடியாக அதிகரித்துள்ள காற்று மாசு குறித்து, பள்ளி முதல்வர்களும், ஆசிரியர்களுமே மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தில்லியில் சுமார்26 லட்சம் மாணவர்கள் இருப்பதால், காற்று மாசு காரணமாக அவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று மணீஷ் சிசோடியா கூறினார்.இதுகுறித்து அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "தில்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு டிசம்பர் இறுதி வாரம் முதல் ஜனவரிமுதல் வாரம் வரையில் குளிர்கால விடுமுறை அளிக்கப்படும். ஒருவேளை கல்வித்துறை ஜனவரி 1 முதல் 15ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கும் பட்சத்தில், அது மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் இருக்காது' என்றார்.

தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலர்கள் நியமனம்: வாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு

வரும் சட்டப்பேரவை தேர்தலில் சேலம் தெற்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தியாகராஜர் தொழில்நுட்ப கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் நேற்று ஆய்வு செய்தார்தமிழக சட்டப்பேரவை தேர்தலுக் காக தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். 


வாக்கு எண்ணும் மையங் களில் ஆய்வு செய்து உள்கட்ட மைப்பு வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தலை துல்லியமாக நடத்திடும் வகையில், தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத் தும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.இதன்படி ஒவ்வொரு மாவட் டத்திலும் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, துணை ஆட்சியர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர். மேலும், வட்டாட்சியர் கள் உதவி தேர்தல் நடத்தும் அலு வலராகநியமிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்த பட்டியல்கள் ஒவ் வொரு மாவட்டத்தில் இருந்தும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வாக்கு எண்ணிக்கை மையங்களை தேர்வு செய்யும் பணியும் நடைபெற்றது.தற்போது வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆய்வு செய்து அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் பார்வையாளர்கள்,வேட் பாளர்கள் மற்றும் முகவர்கள் அமர்வதற்கான இடவசதிகள், தொலைத் தொடர்பு வசதிகள் மற்றும் மீடியா மையம் அமைப்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.மேலும், வாக்குசாவடிகளில் சர்வேயர்களைக் கொண்டு, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி, வாக்குச் சாவடிகளை கூகுள் வரைபடத்தில் இடம்பெறச் செய்யும் பணியும் முடிக்கப்பட் டுள்ளன.

மேலும், வாக்குச்சாவடிகளில் இருந்தவாறே பணிகளை மேற் கொள்ளும் வகையில்,வாக்குச் சாவடி அதிகாரிகளுக்காக, செல் போனில் பயன்படுத்தும் பிஎல்ஓ நெட் என்ற செயலியும் (ஆப்ஸ்) உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டி லேயே முதன்முறையாக, தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பிஎல்ஏ நெட் செயலி பயன்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத் திலும் உள்ளூர் விடுமுறை அறி விக்கப்படும்கோயில் பண்டிகை கள் குறித்த விவரமும் தயாரிக் கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.பள்ளி பொதுத்தேர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர் தல் தேதியைஅறிவிக்க தீர் மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலுக் கான அடிப்படை பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன.தொடர்ந்து, ஜனவரியில் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடி அதிகாரிகள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை ஒருங்கிணைக் கும் வகையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சி யர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி களான துணை ஆட்சியர்கள் ஆகி யோர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தி னார். இனி வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் இதுபோன்று தேர் தல் ஆய்வுப் பணி தொடர்ந்து நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் மறு தேதி அறிவிப்பு

மழை காரணமாக ஒத்திவைக் கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளின் மறு தேதிகளை சென்னை பல் கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வுகள் பின்வருமாறு வேறு தேதிகளுக்கு மாற்றியமைக் கப்பட்டுள்ளன. முன்னர் அறி வித்த தேர்வு தேதியும், புதிய தேதியும் கீழே கொடுக்கப்பட் டுள்ளது.

2016-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி), 2016-ம் ஆண்டுக்கான தேர்வு தேதிகள் வெளியிட்டுள்ளது.யுபிஎஸ்சி நிறுவனம் பல்வேறு பணிகளில் ஆட்களை நியமிப்பதற்கு போட்டித் தேர்வுகள் நடத்தி வருகின்றது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில், அடுத்த கல்வியாண்டுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 


பாதுகாப்பு சேவை தேர்வு (CDS I) பிப்ரவரி 14-ம் நடத்தப்படுகிறது. வழக்கமாக இந்த தேர்வு ஆண்டின் முதல் மாதம் அதாவது ஜனவரி மாதம் நடத்தப்படும். இந்த ஆண்டு தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.சிவில் (பிரிமினரி) தேர்வு ஆகஸ்ட் 7, 2016-ம், மெயின் தேர்வு டிசம்பர் 3-ம் தேதியும் நடத்தப்படுவதாக யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிடு

அரையாண்டு விடுமுறை உண்டா? ஆசிரியர்களிடையே குழப்பம்.

அரையாண்டு விடுமுறை விடப்படுமா என்ற கேள்விகளுக்கு, பதில் கிடைக்காமல், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.சமீபத்திய மழையால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், ஒரு மாதமாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, அரையாண்டு தேர்வை, தமிழக அரசு ரத்து செய்தது.


மழையால் பாதிக்கப்படாத பல்வேறு மாவட்டங்களில், அரையாண்டு தேர்வுக்கு பதில், முன்மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு முடிந்தவுடன், பள்ளி இயங்கும் அல்லது விடுமுறை விடப்படும் என்ற அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால், விடுமுறை விடுவது குறித்து,ஆசிரியர்களிடையே குழப்பம் நீடிக்கிறது.

ஆசிரியர்கள் கூறியதாவது: 

அரசு, அரையாண்டு தேர்வை ரத்து செய்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு பின் அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையை ரத்து செய்வது குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை. இதனால்,அரையாண்டு விடுமுறையை அனுமதித்தால், தமிழக அரசை எதிர்ப்பதாக கருதப்படுமோ என்ற அச்சம்,கல்வித்துறை அலுவலர்களிடம் உள்ளது. அத்துறை அலுவலர்களுக்கும் தெளிவு இல்லாததால், பதில் கூற தயங்குகின்றனர். இதனால், குழப்பம் நீடிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அண்ணாமலைப் பல்கலையில் டிச.14 முதல் 28 வரை மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் முகாம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற டிச.14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பல்கலைக்கழக ராஜா முத்தையா அனெக்ஸ் அரங்கில் நடைபெறுகிறது.மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் சான்றிதழ் நகல்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. 


அதனடிப்படையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் சிறப்பு முகாமை டிச.14-ந்தேதி முதல் 28-ம் தேதி வரை நடத்துகிறது.மாணவர்கள் தங்களிடம் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றதற்கான சான்றுகளான மாணவர் சேர்க்கை எண் அல்லது சேர்க்கை அடையாள அட்டை அல்லது தேர்வு பதிவு எண் அல்லது தேர்வு அனுமதி சீட்டு போன்ற ஏதேனும் ஒரு அடையாளத்துடன் விண்ணப்பித்து எவ்வித கட்டணமின்றி மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ் நகல்களை பெற்றுக் கொள்ளலாம்.மேலும் சிதம்பரம் தாலுக்கா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என பதிவாளர் (பொறுப்புஃ கே.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

தொடருமா எஸ்.எஸ்.ஏ ., திட்டம் ?

12/12/15

டிசம்பருக்குள் தேர்வுகளை முடிக்க சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு: பிப்ரவரி 3-ஆவது வாரத்தில் தேர்வு முடிவு

மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.மேலும், இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகளை பிப்ரவரி 3-ஆவது வாரத்தில் வெளியிடுவது எனவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.


வெள்ளப் பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயங்கி வரும் இணைப்புக் கல்லூரிகளுக்கு நடத்தப்பட இருந்த பருவத் தேர்வுகளை சென்னைப் பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்வுகளுக்கான மறு தேதியை முடிவு செய்வது, அடுத்த பருவ வகுப்புகளை எப்படி நடத்துவது என்பதை முடிவுசெய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.பல்கலைக்கழக பதிவாளர் டேவிட் ஜவஹர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்து இணைப்புக் கல்லூரி முதல்வர்களும் பங்கேற்றனர்.இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் திருமகன் கூறியதாவது:வெள்ள பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டத் தேர்வுகளை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிப்பது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் தேர்வுக்கான மறு தேதிகள் இறுதி செய்யப்பட்டு, பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 6-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. மேலும், தேர்வுத் தாள் திருத்தும் பணிகளை வேகமாக நிறைவு செய்து பிப்ரவரி 3-ஆவது வாரத்தில் வெளியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்வின்போதே வகுப்புகள்:

தொடர் விடுமுறை காரணமாக அடுத்த பருவத்துக்கான வகுப்புகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் பருவத் தேர்வுகள் நடைபெறும்போதே, தேர்வு இல்லாதவர்களுக்கு வகுப்புகளை நடத்துமாறு கல்லூரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.பொதுவாக, பருவத் தேர்வு நடைபெறும்போது வகுப்புகள் நடத்தப்படாது. ஆனால், இந்த முறை இதற்கு அனுமதித்துள்ளோம். தேவைப்பட்டால் கூடுதல் நேரம் வகுப்புகளை நடத்துமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடைமைகள்: பள்ளி மாணவ,மாணவிகளுக்கு சீருடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுமா?

சென்னை அடையாறு, கூவம் ஆற்றங்கரையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மாணவர்களின் சீருடைகள், புத்தகங்கள், ஷூக்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதனால், பள்ளிகளுக்கு சீருடை அணிந்து செல்வதிலிருந்து மாணவ, மாணவிகளுக்குவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


கோட்டூர்புரம் மேம்பாலம் அருகில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. அண்மையில் பெய்த பலத்த மழையால், இங்கு முதல் தளம் வரை வெள்ளம் சூழ்ந்தது. இந்தப் பகுதியில் உள்ள மக்கள்அனைத்தையும் இழந்து பரிதவிக்கின்றனர். மாணவ, மாணவிகளின் புத்தகங்கள், சீருடைகள், பள்ளி ஷூக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கூறியதாவது:

அசாருதீன்: அண்ணா சாலையில் உள்ள ஆசம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கிறேன். என்னுடைய புத்தகம், சீருடைகள் அனைத்தும் வெள்ளத்தில் போய்விட்டன. பள்ளிக்குச் சீருடையில்தான் செல்ல வேண்டும்.வெள்ளத்தில் சீருடைகள் சென்றுவிட்டதை சில நாள்கள் சொல்லலாம். அதற்குப் பிறகு என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஆசிரியர்கள் அனுமதிக்க மாட்டார்கள். தற்போதையே நிலையில் எல்லா பொருள்களையும் உடனே வாங்குவது என்பது சாத்தியமில்லை என்றார்.

ருசிதா: திருவான்மியூரில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் பிளஸ்-1 படிக்கிறேன். என்னுடைய புத்தகங்களும், சீருடைகளும் வெள்ளத்தில் சென்றுவிட்டன. சிறிது நாள்கள் காரணம் சொல்லலாம். இருப்பினும், புத்தகம் உள்ளிட்ட இழந்த அனைத்தையும் வாங்க வேண்டியது கட்டாயம் என்றார்.தினேஷ்குமார் (12-ஆம் வகுப்பு), ராஜேஷ் (9-ஆம் வகுப்பு) இருவரும் நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் பிறந்த நாளுக்குக்கூட சீருடைதான் அணிந்து செல்ல வேண்டுமாம். புத்தங்களை எப்படியும் பள்ளியில் மீண்டும் தந்துவிடுவர் என்றாலும், சீருடைகளுக்கு என்ன செய்வது என்று இந்த மாணவர்களுக்கு தெரியவில்லை.

தலைமை ஆசிரியர் அறிவுறுத்தல்:

புத்தகங்களைவிட சில மாணவர்களுக்கு நோட்டுகள் அடித்துச் செல்லப்பட்டது மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. ஏனென்றால், இந்த நோட்டுகளில்தான் அவர்கள் கணிதம் உள்ளிட்ட பாடங்களை எழுதிவைத்திருந்தனர். இப்போது என்ன செய்வது எனதெரியவில்லை என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.சென்னை அமைந்தகரை, ஷெனாய் நகர் உள்ளிட்ட இடங்களில் கூவம் ஆற்றின்கரையோரம் வசிக்கும் மாணவர்கள், ஷெனாய் நகர் திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். இப்பள்ளியில் பயிலும் 800 மாணவர்களில், 500-க்கும் மேற்பட்டோர் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் சீருடைகளோ, நோட்டுப் புத்தகங்களோ எதுவுமே இல்லை என அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.ஜான் தெரிவித்தார். எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வந்தாலே போதும் எனவும் அறிவுறுத்தியுள்ளதாக தலைமை ஆசிரியர் ஜான் கூறினார்.இந்த மாணவர்களுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்பாடு செய்வதோடு, பள்ளிக் கல்வித் துறையிடமிருந்து புத்தகங்களும் பெறப்பட்டு வழங்கப்படுகின்றன. மேலும், மாணவர்களிடையே இது தொடர்பான குழப்பத்தைத் தவிர்க்க அனைத்துப் பள்ளிகளுக்கும் பொதுவான அறிவிப்பை வெளியிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

"வற்புறுத்தக் கூடாது'

இதுகுறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:
மிகப்பெரிய அளவில் மழை, வெள்ளம் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைப் பாதித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிதாக சீருடைகள், புத்தகங்கள் வழங்கப்படும் வரை பள்ளிகளில் அவற்றை வற்புறுத்தக் கூடாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதேபோல், தனியார் பள்ளி மாணவர்கள் புதிதாகச் சீருடைகள்வாங்கும் வரை அவர்களிடமும் சீருடைகளை வற்புறுத்தக் கூடாது என அரசு உத்தரவிட வேண்டும் என்றார் அவர்

சேதமடைந்த வகுப்பறையை மூட பள்ளி கல்வித்துறை உத்தரவு

மழையால் சேதமடைந்த வகுப்பறைகளை, பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பிய சுற்றறிக்கை:


மழையால் சில பள்ளிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பள்ளி வளாகம், வகுப்பறைகளை துாய்மைப்படுத்தும் பணியை தலைமை ஆசிரியர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். துப்புரவு பணியாளர்களைதினக்கூலி அடிப்படையில் அமர்த்தி, பணியை முடிக்க வேண்டும்.வகுப்பறைகள், பள்ளி வளாக பகுதிகளில் 'பிளீச்சிங்' பவுடர் துாவ வேண்டும். மின்சார சுவிட்ச்கள் சரியாக உள்ளனவா, மழைநீரில் நனையாதபடி உள்ளனவா என, உறுதிப்படுத்த வேண்டும்.வகுப்பறை மேற்கூரையை ஆய்வு செய்ய வேண்டும்; மழைநீர் தேங்கியிருந்தால், உடனடியாக அகற்ற வேண்டும். பள்ளிகளை சுற்றிலும், பாதுகாப்பான தடுப்பு அமைக்க வேண்டும். விழும் நிலையில் மரங்கள் இருப்பின், உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஆபத்தான நிலையில் உயரழுத்த மின்கம்பங்கள், அறுந்து தொங்கும் நிலையில் மின்கம்பிகள் இருப்பின், அவற்றை அகற்ற வேண்டும்.

மழையால், வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால், பயன் படுத்தாமல், பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும். அந்த அறைக்கு அருகே மாணவ, மாணவியர் செல்லாதபடி கவனித்துக்கொள்ள வேண்டும்.தொடர் மழையால், சுற்றுச்சுவர் அதிக ஈரப்பதத்துடன் பலவீனமாக காணப்படும் என்பதால், அதன் அருகில், 10 அடி துாரம் வரை தடுப்புஏற்படுத்தி, அப்பகுதிக்கு மாணவர்கள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

கட்டட உறுதி, சுகாதார சான்றிதழ் தரதலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

கட்டட உறுதி, பூச்சிக்கொல்லி, கிருமிநாசினி தெளித்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அதிகாரிகளிடம் சான்றிதழ் தர, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பள்ளி வளாகத்தை முறைப்படி சுத்தம்செய்ய வேண்டும். நோய்க்கிருமிகள் பரவாத வண்ணம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.வகுப்பறைகளின் அனைத்து சுவர்களின் உறுதி தன்மையை கண்டறிய வேண்டும்.

பள்ளி கழிவறைகள் மூலம் தொற்று நோயும் பரவாமல் பராமரிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, 'குளோரின்' தெளித்து பாதுகாப்பான குடிநீர் வழங்க உத்தரவிட வேண்டும்.மின் சாதனங்களை பரிசோதனை செய்து நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களை சுத்தம் செய்து, பாத்திரங்களை சுத்தம் செய்த பின் சமையல் செய்ய வேண்டும். இதுபோன்ற நட வடிக்கைகளை மேற்கொண்டு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம், தலைமை ஆசிரியர்கள் சான்றிதழ் தர வேண்டும்.

மேலும்,dirsedu@nic.in, dsetamilnadu@gmail.comஎன்ற இ - மெயில் முகவரியில் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

பருவத் தேர்வு மறு தேதி: சட்டப் பல்கலை. அறிவிப்பு.

மழை, வெள்ள பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.வெள்ள பாதிப்பின் காரணமாக பிற பல்கலைக்கழகங்களைப் போல் சட்டப் பல்கலைக்கழகமும் அதன் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை ஒத்திவைத்தது.


பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் ஆற்றல்சார் சட்டப் பள்ளிக்கான 3 ஆண்டு ஹானர்ஸ், 5 ஆண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புத் தேர்வுகள், இணைப்புக் கல்லூரிகளுக்கான 3 ஆண்டு, 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் என அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.இந்தத் தேர்வுகளுக்கான மறு தேதிகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின்www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் இந்த விவரங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

மழை காரணமாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைகழக B.Ed.தேர்வு ஒத்திவைப்பு - புதிய தேர்வு அட்டவணை வெளியீடு

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளின் மறுதேதிகள் அறிவிப்பு: ஞாயிற்றுக்கிழமையும் தேர்வுகள் நடக்கிறது

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.அதன்படி, ஞாயிற்றுக்கிழமையும் தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி ஜி.வி.உமா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-


வெள்ளப்பாதிப்பு காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படவிருந்த மற்றும் வேறு தேதிக்கு மாற்றப்பட்டிருந்த இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் பின்வருமாறு வேறு தேதிகளுக்கு மாற்றியமைக்கப்படுகின்றன. பழைய தேர்வு தேதியும், மறு தேதியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் டிச.14-இல் திறப்பு

மழை, வெள்ளப் பாதிப்புக்குப் பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் வரும் திங்கள்கிழமை (டிச.14) திறக்கப்பட உள்ளன.இதையடுத்து, இந்த மாவட்டங்களில் பள்ளிகளை நடத்தப்படும் நிலையில் வைப்பதற்கான ஆயத்தப் பணிகளையும், தூய்மைப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அவர் வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:-


பலத்த மழை காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை முடிந்து டிசம்பர் 14-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.அனைத்துப் பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து வகுப்பறை, பள்ளி வளாகம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணி, பிற பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கழிவறைகளை பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தப்படுத்துவதோடு, கொசுமருந்து புகையும் அடிக்கப்பட வேண்டும்.அனைத்து சத்துணவு மையங்களும் பள்ளிகள் திறக்கப்படும் நாளில் செயல்படும் நிலையில் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். 

அந்த மையங்களில் சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன் சுத்தப்படுத்த வேண்டும். சமையலுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட பொருள்களும், குடிநீரும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். குடிநீரில் குளோரின் மாத்திரைகளைக் கலக்க வேண்டும்.பள்ளிகள் டிசம்பர் 14-ஆம் தேதியன்று நடத்தப்படும் நிலையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்துத் தலைமையாசிரியர்களிடமும் உறுதிமொழி கடிதத்தைப் பெற்று பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு டிசம்பர் 13-ஆம் தேதி அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து 18 வரை நீட்டிப்பு.

தமிழக சுங்கச் சாவடிகளில் வருகிற 18 ஆம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த !ரு மாதமாக பெய்த பெரு மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.


சென்னைக்கு குடிநீர் அளிக்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ள நீர் சென்னையை மூழ்கடித்தது. இதனால், தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சென்னைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு வருவதால் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.இந்த கோரிக்கையை ஏற்று இன்றுவரை (டிச.11) கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில், இன்னும் சென்னை பழைய நிலைக்கு திரும்பாததால் மேலும் வருகிற 18 ஆம் தேதி வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

வாகனங்களுடன் வெளிமாநிலத்தில் இருந்து வரும் நிவாரண பொருள்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ பாதிப்பால் தென்னிந்தியாவில் வழக்கத்தைவிட அதிகமான மழை வரும் பிப்ரவரி வரை தொடரும்: ஐ.நா. தகவல்

எல் நினோ பாதிப்பால் தென்னிந்தியாவில் மேலும் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படும் என்று ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 - 2016 ஆண்டுக்கான எல் நினோ பாதிப்பு தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் , மத்திய மற்றும் தென்னிந்திய பகுதிகள் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், கம்போடியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நாடுகள் மழை வெள்ளத்தால் அதிக பாதிப்பை சந்திக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் தொடங்கி வரும் பிப்ரவரி மாதம் வரை தென்னிந்தியா, இலங்கை, மாலத்தீவில் சராசரிக்கும் அதிகமான மழையும் அதனால் ஏற்படும் வெள்ளப்பெருக்கும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பகுதிகளில் அதிக மழை வெள்ளப்பெருக்கு ஏற்படும் வேளையில் பப்புவா நியூ கினியா உள்ளிட்ட பசிபிக் தீவுகளில் கடுமையான வறட்சி ஏற்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இனி எல்லா இலாக்கா தேர்வுகளும் ONLINE இல் மட்டுமே நடத்தப்படும்.

HEREAFTER ALLTHE DEPARTMENTAL EXAMS WILL BE CONDUCTED ON LINE ONLY THROUGH PRIVATE AGENCYமூத்த தோழர்கள் கவனத்திற்கு !"இனி எல்லா இலாக்கா தேர்வுகளும் ONLINE இல் மட்டுமே நடத்தப்படும். அதுவும் அதற்கான தனியார் AGENCY நியமனம்செய்யப்பட்டு அதன் மூலம் நடத்தப்படும் என்று இலாக்கா அதிகாரபூர்வமாக அறிவிப்பு. 


"இனி எப்போதுமே பேனா பென்சில் தேவை இல்லீங்கோ !மூத்த தோழர்கள் கணினியில் எல்லாம் செய்ய பழகுங்கோ !WEB SITE தெரியாது .. EMAIL தெரியாது என்று சொல்லும் மூத்த தோழர்களிடம் இதைப் பார்க்கும் இளைய தோழர்கள் எடுத்துச் சொல்லுங்கோ !ஊதியக் குழு பரிந்துரைப் படி EB CROSSING தேர்வு வச்சா கூட இனி கணினியில் தானுங்கோ !மோடியின் DIGITAL INDIA திட்டம் வந்துவிட்டதுங்கோ!

வானிலை முன்னறிவிப்பு: தென் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தென்கடலோரத்தில் ஒரு சில பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.


கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் 20 நாட்கள் உள்ளன. வழக்கமாக டிசம்பர் மாத மத்தியில், காற்று வீசும் திசையின் காரணமாக மழையின் தன்மை மாறுபடும். அந்த வகையில் தற்போது வடதமிழகத்தில் படிப்படியாக மழை குறைந்து, தென் தமிழகத்தில் தற்போது பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் குமரிக்கடலை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து மறைந்த நிலையில், தற்போது குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடதமிழகத்தில் இரு தினங்களும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.நேற்று , தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, ஸ்ரீ வைகுண்டத்தில் 9, திருச்செந்தூரில் 7, நாகை, நான்குநேரியில் -5, ராதாபுரத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

TNTET -2013:தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்ற அனைத்துஆசிரியர்களின் கவனத்திற்கு...

மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம் 
நாள் : 20.12.2015
இடம் : சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன்பு
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....


அடுத்த இரண்டாம் கட்ட உண்ணா விரத கூட்டம் வருகின்ற டிசம்பர் மாதம் 20 ந்தேதிநடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது…

இது போராட்டம் அல்ல உண்ணாவிரத கூட்டம என்பதை மீண்டும் வலியுறுத்தி தெரிவித்துகொள்கிறோம்… .
நம் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் ஒருமுறை அரசாங்கத்தை அணுக போகிறோம்… .
அன்று தீர்மானங்கள் நிறைவற்றப்படும்… இதுதான் மரபு….மரபை மீறி செய்யும் எந்த ஒரு முயற்சியும் பலன் தராது என்பதை அனைவரும்அறிவோம்…
அனைவரின் வேண்டு கோளிற்கிணங்கவும், அனைவரும் வசதியாக ,தவறாது கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தினாலும் ஞாயிற்று கிழமை பெறப்பட்டுள்ளது.. .
எனவே அனைவரும் தவறாது தன் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்…

நாம் எத்தனை பேர் பாதிக்க பட்டிருக்கிறோம் என்பதை நம் வருகையின் மூலமேஅரசுக்கு உணர்த்த முடியும்… 
நேர்மறையான செயல்பாடுகளால் அரசாங்கத்தை நாடுவோம்…
மிகவும் சிரமப்பட்டு பெற்ற அனுமதி இது...
அதை நாம் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்வோம்…
நமது நிகழ்ச்சிக்கு தகவல் தொடர்பு மிகவும் முக்கிய அம்சமாகும்…
தகவல் தெரியாத நண்பர்களையூம் ஒருங்கிணையுங்கள்…
இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsappமூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்...

இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்…

தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி. பாரதி : 94426 91704
திருமதி. லாவண்யா : 90432 66059
திருமதி. பானு : 98940 35724
திரு.சக்தி : 97512 68580
திரு.ராஜபாண்டி : 99433 73380
திரு. தினேஷ் : 99427 33221

இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

11/12/15

மாத சம்பளம் பெறுபவர்களுக்கு 3 மாத சம்பளம் உடனடி கடன் வழங்குகிறது கனரா வங்கி!

இது தொடர்பாக கனரா வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.கிருஷ்ணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் தேவையான இடங்களில் நடமாடும் ஏ.டி.எம். வசதி கடந்த 4-ம் தேதி முதல் செயல்படுகிறது.எங்கள் வங்கி மற்றும் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துக் கொள்ள வசதியாக 40 பி.ஓ.எஸ். மொபைல் எந்திரங்கள் உள்ளன. சென்னை புறநகர் பகுதிகளில் கையேந்தி சாதனங்கள் மூலம் பணம் வழங்கப்படுகிறது.


மாத சம்பளம் பெறும் நபர்களுக்கு 3 மாத சம்பளம் உடனடி கடனாக வழங்கப்படும்.வீடு, கார் பழுது செய்ய அதன் மதிப்பில் 10 சதவீதம் தொகை கடனாக எந்த பரிசீலனை கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும்.

நவம்பர், டிசம்பர் மாத தவணை தாமதமாக கட்டுபவர்களுக்கு அபராத வட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.சேதமடைந்த, தொலைந்த ஏ.டி.எம். அட்டைதாரர்களுக்கு புதியகார்டுகள் இலவசமாக வழங்கப்படும். நுகர்வு கடன்கள் ரூ.10 ஆயிரம் வரை எந்த பிணையங்களும் இல்லாமல் வழங்கப்படும். அப்பல்லோ முனீச் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இயங்கி வரும் சுகாதார காப்பீட்டுத் தீர்வுகளை துரிதமாக பெற உதவப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

இலவச வாகன பழுது பார்ப்பு முகாம்கள்: இடங்களை அறிவித்தது தமிழக அரசு

தமிழக அரசு அறிவித்துள்ள வாகன பழுது பார்ப்பு இலவச முகாம்கள் நடைபெறும் இடங்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த முகாம் நாளை முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தப் பட்டியலில் மோட்டார் வாகன நிறுவனங்களின் முகவர்களாக உள்ளவர்களின் கடையின் பெயர், முகவரி, எந்த நகரத்தில் உள்ளது, முகவரின் செல்லிடப்பேசி, லேண்ட்லைன் எண் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகனங்களை பழுது பார்ப்புக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னால், பட்டியலில் உள்ள எண்களை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட முகவரிடம் பேசாலம். பழுது பார்க்கும் கடையில் கூட்டம் அதிகமாக இருக்கிறதா, எத்தனை மணிக்கு வரலாம் போன்ற தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். இதனால், வீண் அலைச்சல் தவிர்க்கப்படும்.இந்தப் பட்டியல் தமிழக அரசின் இணையதளத்தில் (http://www.tn.gov.in/sta/service_centres_2wheeler.pdf) வெளியாகியுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

புதுச்சேரி: பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என முதல்வர் ரங்கசாமி பேசினார்.புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை சார்பில் நவம்பர் 14-ம் தேதி நடைபெறுவதாக இருந்த குழந்தைகள் தின விழா தொடர் மழையால் ஒத்தி வைக்கப்பட்டு கம்பன் கலையரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது.கல்வித்துறை இயக்குனர் குமார் வரவேற்றார். அமைச்சர் தியாகராஜன் தலைமை தாங்கினார். கல்வித்துறை செயலாளர் ராகேஷ் சந்திரா முன்னிலை வகித்தார்.குழந்தைகள் தினப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:


பள்ளிகளுக்கு பிள்ளைகளை கட்டாயம் அனுப்ப வேண்டும் என்ற திட்டத்தை கடந்த 2001-ம் ஆண்டு அரசு அறிமுகம் செய்தது. இதனால் இடைநிற்றல் குறைந்துள்ளது.பள்ளிகளில் மாணவர்கள் தவறு செய்யும் போது, ஆசிரியர்கள் கண்டித்தால், பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் அதிக நன்கொடை தந்து படிக்க வைக்கிறார்கள். ஆனால் மக்கள் வரிப்பணத்தில் அரசு இலவசமாக கல்வி தருகிறது.குழந்தைகள் எப்படி படிக்கின்றனர் என ஆசிரியர்களை அணுகி பெற்றோர் கேட்க வேண்டும்.அண்மையில் துவக்க கல்வி ஆசிரியர் பணியிடங்களில் 425 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 80 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களே தேர்வு செய்யப்பட்டனர். விரைவில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இன்றைய மாணவர்கள் அறிவுத்திறனில் படுசுட்டியாக உள்ளனர். ஆனால் திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்றவற்றை படித்தால், சிறந்த மனிதர்களாக உருவாகலாம்.கல்வியோடு நுால்கள் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பெண் சிசுக் கொலை புதுச்சேரியில் இல்லை. இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 1000-க்கு 42 என்ற விகிதத்தில்உள்ளது. புதுச்சேரியில் 1000-க்கு 17 மட்டுமே உள்ளது.அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகள் ஆரோக்கியத்துக்காக சத்தான உணவுகள் தரப்படுகின்றன. காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மர் கிளை மருத்துவக்கல்லுாரி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக 78 ஏக்கர் நிலம் தரப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு மாணவ, மாணவியருக்கு பிற்பட்டோர் நலத்துறை மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முடித்தவர்கள் அண்மையில் முடிந்த மேல்நிலை எழுத்தர் பணியிடங்களுக்கு அதிகம் தேர்ச்சி பெற்றனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில் 2014--15-ம் கல்வி ஆண்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர் களுக்கு முறையே 50 ஆயிரம்,30 ஆயிரம் , 20 ஆயிரம் ரூபாய் என 77 மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது.மாநில சிறந்த படைப்பாளிக் குழந்தைகள் விருதும் 16 பேருக்கு தரப்பட்டது. குழந்தைகள் தின போட்டியில் வென்ற 153 பேருக்கும் பரிசளிக்கப்பட்டது.அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குநர் கிருஷ்ணராஜ், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். இணை இயக்குநர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

டிச.,15ல் திருவள்ளூவர் பல்கலை., தேர்வு

.மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருவள்ளூவர் பல்கலை., தேர்வுகள் டிசம்பர் 15ம் தேதி துவங்கி ஜனவரி 5ம் தேதி வரை நடைபெறும் எனபல்கலை., பதிவாளர் (பொறுப்பு) அமல்தாஸ் தெரிவித்துள்ளார்.தேர்வு அட்டவணையை பல்கலை., இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு பெயர் பட்டியல்; டிச.,15 வரை கால அவகாசம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வுப்பட்டியல் தயாரிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை, அதற்கெனவழங்கப்பட்ட மென்பொருளில் தயார் செய்து வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. 

அப்பணிகளை நவ., 30 முதல் டிச., 9ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், மழையால் பணிகள் முடிக்கப்படவில்லை.இதனால், டிச., 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிழைகள் இன்றி, மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை தயார் நிலையில் வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகளுக்கு மறு தேதி அறிவிப்பு

தொடர் மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல்கல்லூரி பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu என்ற இணையதளத்தில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
மழை, வெள்ள பாதிப்பால் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதன் காரணமாக, இப்போது சனி,ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. பருவத் தேர்வின் முந்தைய தேதிகள், மாற்றியமைக்கப்பட்ட புதிய தேதிகளின் விவரங்கள் அடங்கிய அட்டவணை:
CLICK HERE

சென்னையில் பள்ளிகளை திறப்பது எப்போது?- அரசிடம் நீடிக்கிறது குழப்பம்

சீரமைப்பு மற்றும் சுத்தப்படுத்தும் பணிகள் தொடர்வதால் சென்னையில் வரும் 13-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடியிருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். ஆனால், 13-ம் தேதிக்கு பிறகும்கூட பள்ளிக்கூடம் திறப்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்கிறது பள்ளிக் கல்வித்துறை.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தாவது:


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் பள்ளிகளில்தான் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மறு குடியமர்த்தப்பட வேண்டும். அதன் பின்னர், பள்ளிகள் சுத்தப்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக இருக்கிறதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். பள்ளிக்கூடங்களின் பாதுகாப்பும், சுகாதாரமும் உறுதிபடுத்தப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும்.

பள்ளிக்கூடங்களை சுத்தப்படுத்துமாறு சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இரண்டு நாட்களில் அப்பணி தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.அதுமட்டுமல்லாது, மழை வெள்ளத்தில் பள்ளிச் சான்றிதழ்களை இழந்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெறுவதற்காக டிசம்பர் 14-ம் தேதி தொடங்கி அடுத்த இரண்டு வாரங்களுக்கு பள்ளிக்கூடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.அந்த முகாம்களில் சான்றிதழ்களை தொலைத்தவர்கள் மாற்றுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து பயணடையலாம்.சுத்தப்படுத்தும் பணி துவங்காததாலும், பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாலும் 13-ம் தேதிக்கு பிறகும்கூட பள்ளிக்கூடம் திறப்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்கிறது பள்ளிக் கல்வித்துறை.

பள்ளிக்கல்வி - சான்றிதழ் இழந்தவர்கள் சான்றிதழ் பெற விண்ணப்பம்

MADRAS UNIVERSITY - வெள்ளத்தால் சான்றிதழ் இழந்தவர்கள் புதிய சான்றிதழ்கள் பெற விண்ணப்ப படிவம்

10/12/15

மருத்துவ நுழைவுத்தேர்வுசி.பி.எஸ்.இ., அறிவிப்பு

மருத்துவ நுழைவுத்தேர்வுசி.பி.எஸ்.இ., அறிவிப்பு
எய்ம்ஸ்' உட்பட, மத்திய மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கான மருத்துவ நுழைவுத்தேர்வு, அடுத்த ஆண்டு, மே 1ம் தேதி நடக்கும் என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்து உள்ளது. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

'ஏ.ஐ.பி.எம்.டி., எனப்படும், மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கானபொது நுழைவுத்தேர்வு, வரும் 2016, மே 1ம் தேதி நடக்கும். அதற்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, மூன்றாம் வாரத்தில் வெளியாகும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் செய்முறை பயிற்சி திருத்தியமைப்பு: இயக்குநர் உத்தரவு

நடப்பு கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
நடைமுறையிலுள்ள 10ம் வகுப்பு அறிவியல் பாட நூலின் 2015ம் கல்வியாண்டிற்கான திருத்திய பதிப்பில் பாடநூல் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் ஆலோசனையின்படி பாடநூல் தயாரிப்பு குழு அறிவியல் செய்முறை பயிற்சிகளை திருத்தியமைத்தது.

திருத்தியமைக்கப்பட்ட செய்முறை பயிற்சிக்கான பட்டியல் நடப்பு கல்வியாண்டிற்கான தமிழ் வழி அறிவியல் பாடநூல் செய்முறை பயிற்சிகள் பகுதி-1 மற்றும் 2ல் பக்க எண் 326, 345லும், ஆங்கில வழிக்கான செய்முறை பயிற்சிகள் பகுதி-1 மற்றும் 2ல் பக்க எண் 311, 332லும் இடம்பெற்றுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் திருத்தியமைக்கப்பட்ட செய்முறை பயிற்சிகளின்படி கற்பிக்கவும், இதனை கல்வி அதிகாரிகள் கண்காணிக்கவும் வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரண நிதிக்காக கணக்கெடுப்பு தொடக்கம்: குடும்ப அட்டை-வங்கி கணக்கு புத்தகம் இல்லாவிட்டாலும் கவலை வேண்டாம்

வெள்ள நிவாரண நிதிவழங்குவதற்கான கணக்கெடுப்பு தொடங்கியது. குடும்ப அட்டை-வங்கி சேமிப்புகணக்கு புத்தகம்இல்லாவிட்டாலும்,
இதுகுறித்த தகவலை கணக்கெடுக்கும் அதிகாரியிடம்தெரிவித்தால் போதும் என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது.
மழை-வெள்ளம் பாதிக்கப்பட்டுகுடிசை வீடுகளைஇழந்தோருக்கு ரூ.10 ஆயிரமும், நிலையான வீடுகளில்வசித்து மழை-வெள்ளத்தால் பாதித்தோருக்குரூ.5 ஆயிரம்அளிக்கப்படும் என்றும் அவர்களுக்கு 10 கிலோ அரிசி, விலையில்லா வேட்டி-சேலை வழங்கப்படும் என்றும்முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லிசெவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவல்கள்:
வெள்ள நிவாரண கணக்கெடுப்புகளப் பணியில்21 மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சென்னைமாவட்டத்தின் 10 வட்டங்களில் உள்ள திருமண மண்டபங்களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர். பணிகளை மேற்பார்வையிடஒரு சார்ஆட்சியர், 21 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 21 துணைஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குடும்ப அட்டையை இழந்தோருக்கு...: வீடு வீடாகச்சென்று கணக்கெடுப்புப்பணி மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் போது பொதுமக்கள் தங்களதுகுடும்ப அட்டை, வங்கி கணக்குபுத்தகம் ஆகியவற்றைகாண்பிக்க வேண்டும். இவை சேதம்அடைந்திருந்தாலோ அல்லது அடித்து செல்லப்பட்டிருந்தாலோ தகவலை மட்டும் கணக்கெடுக்கும் அலுவலர்களிடம்தெரிவித்தால் போதும்.

புதிதாக கணக்கு தொடங்கப்படும்: பாதிக்கப்பட்டோருக்கு வங்கி சேமிப்புகணக்கு இல்லாவிட்டால், தனியாக சேமிப்புக்கணக்கு தொடங்கப்படும். வீடுகள் பூட்டப்பட்டுஇருந்தால், கணக்கெடுக்கும் அலுவலர் அந்த வீட்டினைமறுகணக்கீடு என குறிப்பார். பிறகு, மீண்டும்கணக்கீடு செய்யப்படும். சென்னை மாவட்டத்திலுள்ளஅனைத்து பகுதிகளிலும்100 சதவீதம் முழுமையான கணக்கீடு பணி மேற்கொள்ளப்படும். எனவே, வெள்ளநிவாரண கணக்கெடுப்புப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்என்றார்.

பள்ளிகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

பள்ளிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றநடவடிக்கை எடுக்கவேண்டும் எனபள்ளிக் கல்விஇயக்ககம் உத்தரவிட்டுள்ளதுஇதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குபள்ளிக்
கல்விஇயக்ககம் செவ்வாய்க்கிழமைவெளியிட்ட சுற்றறிக்கை:-
மழை, வெள்ளத்தால் அதிகபாதிப்புக்கு ஆளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகள் திறக்கப்படும்நிலையில், வெள்ளநீர் சூழ்ந்துள்ளபள்ளிகளில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அதிகாரிகளுடன்இணைந்து வெள்ளநீரை வெளியேற்றதேவையான நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும்.
அதோடு, பள்ளி வளாகம், வகுப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். வகுப்பறைகளைச்சுற்றி பிளிச்சிங்பவுடரைத் தெளிக்கவேண்டும். பள்ளிகளில்உள்ள பொத்தான்கள்சரியாக உள்ளனவா, மழைநீர் படாமல்உள்ளனவா என்பதைச்சரிபார்க்க வேண்டும்.
மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவாஎன்றும், மின்இணைப்புகள் சரியாக உள்ளனவா என்பதையும் சரிபார்க்கவேண்டும். வெள்ளநிவாரண முகாம்களாகசெயல்படும் பள்ளிகளில் முறையாகக் குப்பைத் தொட்டிகளைவைத்து குப்பைகள்அகற்றப்பட வேண்டும்.
சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் இருப்பதால், மாணவர்களை அதனருகில்செல்ல அனுமதிக்கக்கூடாது உள்ளிட்டஅறிவுரைகளை தலைமையாசிரியர்களுக்கு வழங்கவேண்டும் எனஅந்தச் சுற்றறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் மழை வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு பல்கலைக்கழகஆசிரியர் சங்கம்தங்களது ஒருநாள் ஊதியத்தைமுதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக
அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலர் என்.பசுபதி செவ்வாய்க்கிழமைவெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அண்மையில் பெய்தமழை காரணமாகதலைநகர் சென்னைஉள்ளிட்ட சிலகடலோர மாவட்டங்களில்ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பேரிடரால்அவதிக்குள்ளாகி இருக்கும் நிலையில், மாநில அரசுடன்இணைந்து அவர்களுக்குதுணையாகப் பணியாற்றஎங்களது சங்கம்முடிவு செய்துள்ளது. மேலும், அரசுக்குஉதவும் வகையில்சங்க உறுப்பினர்கள்தங்களது ஒருநாள் ஊதியத்தைமுதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர். அதன்படி, சென்னைப்பல்கலைக்கழகம், பாரதியார், பெரியார், பாரதிதாசன், திருவள்ளுவர்பல்கலைக்கழகங்களில் இணைவு பெற்றுள்ள, அரசு உதவிபெறும் கல்லூரிகளில்பணியாற்றும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்கள் சுமார்ரூ. 1 கோடியைநிவாரண நிதியாகவழங்குகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

தொடக்கக்கல்வி - அனைத்து வகை தொடக்கப் பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வு ஜனவரி மாதம் நடைபெறும் -இயக்குனர் செயல்முறைகள்



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் சீரமைப்புப் பணிகாக, தனி குழு - இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு

பள்ளி வளாகங்கள் மற்றும்வகுப்புகளில், வெள்ளம் புகுந்ததால், 'பெஞ்ச், டெஸ்க்' போன்றவை நாசமாகியுள்ளன. மேலும், மாணவர்களின்பிறப்பு
மற்றும்மாற்று சான்றிதழ்கட்டுகளும் நீரில் மூழ்கி, பாழாகியுள்ளன. வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட பள்ளிகளின் சீரமைப்புப் பணிகளுக்காக, தனிகுழுக்களை அமைத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இணை இயக்குனர்கள்நாகராஜ முருகன், உமா, சுகன்யா, நரேஷ், பழனிச்சாமிஉள்ளிட்டோர், நேற்று பள்ளிகளை ஆய்வு செய்தனர்.அவர்கள் கண்டறிந்ததாவது:

● பள்ளிகளின் மேஜை, நாற்காலி, பெஞ்ச், டெஸ்க்ஊறிப்போய், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன

● மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், ஆசிரியர்களின் வேலை மற்றும் ஊதியம் தொடர்பானஆவணங்களும் சேதம் அடைந்துள்ளன

● வகுப்பறைகளில் நீர் புகுந்ததுமட்டுமின்றி, பாம்பு, பூனை, தேள், ஆமை, எலி, தவளை, பூச்சிகளும் புகுந்துள்ளன. அவற்றின் எச்சங்களும், வகுப்பறைகளில்நிறைந்து காணப்படுகின்றன. அவற்றை சுத்தம்செய்யும் பணிகள்நடக்கின்றன.

அதிக பாதிப்பு
● சென்னையில், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஜாபர்கான் பேட்டை, கிண்டி, சூளைமேடு, சி.எம்.டி.ஏ., காலனி, சாலிகிராமம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகள்
● காஞ்சிபுரம் மாவட்டத்தில், தாம்பரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், இரும்புலியூர், பல்லாவரம் உள்ளிட்டபகுதிகள்

● திருவள்ளூர் மாவட்டத்தில், அயனம்பாக்கம், மணலிபுதுநகர் உள்ளிட்ட பகுதி பள்ளிகளில், 100 சதவீதஇழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்கள்: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

மழை, வெள்ளத்தில் கல்விச்சான்றிதழ்களை இழந்தவர்களுக்காக நடத்தப்படும்சிறப்பு முகாம்களுக்குதனி அலுவலர்களைநியமிக்க
வேண்டும்என மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ளசுற்றறிக்கையின் விவரம்:-
வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்கள்இழந்தவர்களுக்கு டிசம்பர் 14 முதல் சிறப்பு முகாம்கள்நடத்தப்படுகின்றன. கட்டணம் ஏதுமின்றிவிண்ணப்பங்களைப் பெற்று, அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்குஅனுப்ப வேண்டும். சிறப்பு முகாம்அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்குசம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்அறிவுரை வழங்கவேண்டும். இதற்காகபள்ளிகளில் தனி அலுவலர்கள் நியமனம் செய்யவேண்டும்.
ஒவ்வொரு நாளும் பெறப்படும்பூர்த்தி செய்தவிண்ணப்பங்களை தேர்வு வாரியாகத் தொகுத்து, பட்டியலிட்டு, உரிய மாவட்டக்கல்வி அலுவலர்களின்கையெழுத்துடன் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரில்ஒப்படைக்க வேண்டும். அரசுத் தேர்வுகள்இயக்ககத்தைச் சேர்ந்த அலுவலர்கள் விண்ணப்பங்களை ஆய்வுசெய்து, மாற்றுச்சான்றிதழ்களை உரிய முகாம்களில் மாவட்டக் கல்விஅலுவலர்கள் மூலமாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்குவர். இந்தப் பணிகளில் மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்டஆசிரியர் பயிற்சிநிறுவன முதல்வர், அரசுத் தேர்வுகள்மண்டல துணைஇயக்குநர்கள் ஒருங்கிணைந்து தனி கவனம் செலுத்திதொய்வின்றி செயல்படுத்த வேண்டும்.

பத்தாம் வகுப்புக்கு கீழ்உள்ள வகுப்புகளில்மாற்றுச் சான்றிதழ், இதர சான்றிதழ்களுக்குவிண்ணப்பங்களைப் பெற்று, அதனை பள்ளிகளில் உள்ளஆவணங்களுடன் சரிபார்த்து எந்தவிதக் கட்டணமும் இன்றிவழங்க அந்தந்தபள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாதிரிவிண்ணப்பப் படிவங்களும் மாவட்டங்களுக்குஅனுப்பப்பட்டுள்ளன.

அரையாண்டு தேர்வு ரத்தாகுமா: ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், 1 முதல், 9ம்வகுப்பு வரை, அரையாண்டு மற்றும், 2ம் பருவத்தேர்வை, ரத்துசெய்ய வேண்டும்என்ற
கோரிக்கைவலுத்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்மற்றும் கடலுார்மாவட்டங்களில், வரலாறு காணாத வெள்ளத்தால், மக்கள்உடைமைகளை இழந்துதவிக்கின்றனர். இந்நிலையில், 14ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகள்செயல்பட உள்ளன. பள்ளிகள் திறந்ததும், ஒன்பது வேலைநாட்கள் மட்டுமேஉள்ளன. பின், மிலாடி நபி, 25ம் தேதிகிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது.ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 1ம்தேதி வரைபள்ளி, கல்லுாரிகளுக்குவிடுமுறை அளிக்கப்பட்டு, 2ம் தேதிதிறக்கப்படுவது வழக்கம். தற்போதைய நிலையில், 14ம்தேதி பள்ளிதிறந்த பின்மீண்டும், 24ம் தேதி முதல் விடுமுறைவிடப்பட்டு, 2ம் தேதி பள்ளிகள் திறக்கவேண்டும்.

இந்நிலையில், ஜனவரி முதல்வாரத்தில், அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் என, அரசு அறிவித்துள்ளது. சமச்சீர் பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புமுதல், பிளஸ்2 வரை, அரையாண்டுத்தேர்வும்; 1 முதல், 9ம் வகுப்பு வரை, இரண்டாம் பருவத்தேர்வும் நடத்தப்படுகின்றன.இந்த இரண்டுதேர்வுகளையும் ரத்து செய்ய கோரிக்கை எழுந்துஉள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர்களும், பெற்றோரும்கூறியதாவது:வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், காலாண்டுத்தேர்வு முடிந்து, 10 நாட்களே பள்ளிகள் திறக்கப்பட்டு, நான்கில் ஒருபங்கு பாடங்கள்தான் நடத்தப்பட்டுள்ளன. 10 முதல், பிளஸ்2 வகுப்புகளுக்கு மட்டும் பாடங்கள் முடிக்கப்பட்டு உள்ளன.

மற்ற வகுப்புகளுக்கு பாடம்நடத்தாமல், அரையாண்டுத் தேர்வு என்பது வெறும்சம்பிரதாயமாகவே இருக்கும். இக்கட்டான இந்நேரத்தில், மாணவர்களைசோதிப்பது சரியானமுடிவாக இருக்காது. நன்றாக படிக்கும்மாணவர்கள் கூட, வெள்ளப் பாதிப்புமற்றும் குடும்பசூழலால், நல்லமதிப்பெண் பெறமுடியாமல் போகலாம்.இதையும் மீறிதேர்வு நடத்தினால், மதிப்பெண் குறைந்துவிட்டதே என, மாணவர்கள் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டு, இறுதித் தேர்வில்கவனம் செலுத்தமுடியாத அபாயம்ஏற்படும்.இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.


மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் கழகதலைவர் எத்திராஜ்கூறியதாவது:கல்வி உரிமை சட்டப்படி, 9ம்வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' தான் வழங்கப்படுகிறது. எனவே, இரண்டாம்பருவத் தேர்வுரத்தானால், நேரடியாக மூன்றாம் பருவத் தேர்வைசந்திக்க எளிதாகஇருக்கும். இல்லையென்றால், மூன்றாம் பருவத்துக்கும் நாட்கள்பற்றாக்குறை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

5/12/15

தமிழ்நாட்டில் டிசம்பர் 6-ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கும் என்று மத்திய அரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 தமிழகத்தில் மழை வெள்ளம்காரணமாக போக்குவரத்துபாதிப்பு, மின்சாரம்துண்டிப்பு, வங்கிகள் இயக்கம் நிறுத்தம், ஏடிஎம்சேவை
முடக்கம்என பொதுமக்களுக்குபல்வேறு பாதிப்புகள்ஏற்பட்டன.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வங்கிசேவையையோ, ஏடிஎம்சேவையோ பயன்படுத்தமுடியாமல் பொதுமக்கள்தவித்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்காகடிசம்பர் 6 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வங்கிகள் இயங்கும்என்று நிதிஅமைச்சகம் அறிவித்துள்ளது.

வங்கிகளின் அலுவல் நேரத்தைநீட்டிக்கவும், படகுகள் மூலம் நடமாடும் ஏடிஎம்களைசெயல்படுத்தவும் வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.