யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/1/16

தேர்தல் முறைகேட்டை அனுப்ப 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வசதி

'சட்டசபை தேர்தல் முறைகேடு புகார்களை, படங்களுடன் அனுப்ப, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வசதி செய்யப்பட்டுஉள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். கண்ணியமான தேர்தலுக்கான அமைப்பின் சார்பில், 'கண்ணியமான தேர்தல்' என்ற தலைப்பில், வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம், துவங்கியது. சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லுாரியின், மனித உரிமைகள் துறையுடன் இணைந்து, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம் உள்ளிட்டோர் முக்கிய விருந்தினராக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ராஜேஷ் லக்கானி பேசியதாவது: நேர்மையான தேர்தல் நடத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. முறைகேடு புகார்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கவும், படங்கள் எடுத்து அனுப்பவும், 'பேஸ் புக், வாட்ஸ் ஆப்' வசதி அறிமுகம் செய்யப்படும். மாணவர்கள், என் அலைபேசி எண்ணுக்கே, 'வாட்ஸ் ஆப்'பில் புகார்அனுப்பலாம். ஆனால், தவறான தகவல் தர வேண்டாம்.

தேர்தல் நாளில் வீட்டிலிருந்து, 'டிவி' பார்த்து கொண்டிருக்காமல், முதலில் ஓட்டை பதிவு செய்யுங்கள். மாணவியர், இளைஞர்கள் அனைவரும், தேர்தல் துறையின் துாதராக, தலைமை தேர்தல் அதிகாரியாக நினைத்து, நேர்மையான தேர்தல், ஓட்டு போடுவதன் அவசியத்தை, குடும்பத்தில், அக்கம் பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

'ஊழல் கரங்களுக்கு ஓட்டு வேண்டாம்':

நிகழ்ச்சியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசியதாவது:நான், 2011 தேர்தலில் மதுரை கலெக்டராக இருந்த போது, 'பணநாயகம்வீழ்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் அதிகாரிகள் கூறினர். அதை மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு செய்து, பகலில் வாக்காளர்களுக்கு போதனையும், இரவில் வாகன சோதனையும் மேற்கொண்டோம். நேர்மையான தேர்தலை நடத்தினோம்.அதேபோல், இந்த தேர்தலும் கண்ணியமாக நடக்கும் என நம்புகிறேன். ஊழல் கரங்களுக்கு ஓட்டு போட வேண்டாம்.நீங்கள் பொறுப்பாக ஓட்டு போட்டால் நாட்டில் புரட்சி நடக்கும். பணத்தை வாங்கி ஓட்டு போடாதீர்கள்.மாணவர்கள் மூலம், பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்கலாம். நீங்கள் நேர்மையாக இருக்க, உங்கள் குடும்பம் நேர்மையாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். உங்கள் கண்ணியமான ஓட்டின் மூலம், வேலையில்லா திண்டாட்டம் ஒழியும்; 

விவசாயி தற்கொலை செய்ய மாட்டார்கள்; மன்னர்களை மண்டியிட வைக்கும் ஜனநாயக கடமை உங்களிடம் உள்ளது. நீங்கள் இந்த தேசத்தை நேசிப்பதை உறுதிப்படுத்த, ஊழலற்றவர்களுக்கு ஓட்டு போடுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

10ம் வகுப்பு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

அரசு தேர்வுத்துறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வை அறிவித்துஉள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பு வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது. ஏற்கனவே, மழை, வெள்ளத்தால் தள்ளி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு, ஜன., 11ல் துவங்கும் நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பு வராமல் மாணவர்கள் தவித்தனர்.
செய்முறை தேர்வு தேதி தெரிந்தால் தான், 'ரிவிஷன்' தேர்வுகளை திட்டமிட முடியும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.இந்நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பை, அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. அதில், 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு, ஜன., 22 முதல் பிப்., 3க்குள் நடத்தி முடித்து, மதிப்பெண் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளிகளில், ஜன., 11 முதல், 27க்குள், இரண்டாம் பருவ தேர்வை நடத்தி முடிக்க, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தேர்தல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம்: சென்னையில் நாளை துவக்கம்

சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு, பயிற்சி அளிக்க உள்ள பயிற்சியாளர்களுக்கான முகாம், சென்னையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு, நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, மாவட்டத்திற்கு ஆறு பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு கடந்த மாதத்தில் இருந்து, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.டிச., 30 மற்றும் 31ம் தேதி, தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கு சேலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று சென்னையில், ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த, செய்தி மக்கள் தொடர்பு 
அலுவலர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்தலின்போது, சமூக வலைதளங்களில், ஓட்டுப்போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரம் செய்வது, மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ள இவர்களுக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரிகள், நேரடியாக நடத்தும் பயிற்சி வகுப்பு சென்னை மற்றும் பவானிசாகரில், இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.
சென்னையில், நாளை முதல், 13ம் தேதி வரை, பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில், 21 மாவட்டங்களில் இருந்து, மாவட்டத்திற்கு, ஆறு 
பயிற்சியாளர்கள் வீதம் கலந்து கொள்ள உள்ளனர்.பவானிசாகரில், 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை, பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில், 11 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

அரசு கல்லூரி போராசிரியர் மீது தாக்குதல் TNPTF கண்டனம்.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் தலைவர் திரு.பி.சிவராமன் அவர்கள் மீது சிலர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் மோசஸ், மாநிலப் பொதுச் செயலாளர் பாலச்சந்தர், மாநிலப் பொருளாளர் ஜீவானந்தம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த சில காலங்களாகவே ஆசிரியர் சமுதாயம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வருகிறது. வகுப்பறைக்குள்ளே ஆசிரியர்கள் கொலை செய்யபடுவதிலிருந்து பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். கல்வி வணிக பொருளாக்கப்பட்டு கல்வியின் மகத்துவத்தை சின்னபின்னமாக்கிய  அரசுகளே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இலாப வேட்கை கொண்ட கார்ப்பரேட்டுகள் கல்வி நிறுவனங்களை தங்களின் மூலதனம் பெருகுவதை இலக்காக கொண்டதன் விளைவு, இந்த நாட்டின் எதிர்காலமாக திகழ வேண்டிய மாணவர் சமுதாயம் மாயை உலகின் பின்னால் சென்று சீரழிந்து வருகிறார்கள். இதன் காரணமாக ஆசிரியர் சமுதாயம் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக திருவாரூரில் பேராசியர் சிவராமன் கல்லூரி வளாகத்திற்கு வெளியில் சில சமூக விரோதிகளால் கண் மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் மீது நடந்த கொலைவெறி தாக்குதலை தமிழ்நாடு காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்ட ரீதியான தண்டனை பெற்றுத் தர வேண்டுமென எங்கள் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் ஆசிரியர் சமுதாயம் அச்ச உணர்வின்றி பாதுகாப்பாக பணியாற்ற உரிய சட்ட பாதுகாப்பினை வழங்க வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

16549 பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் உதவிட புதிய அரசாணை வெளியிட கோரி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு

துணைவேந்தர் தேர்வு குழு அமைப்பு

சென்னை பல்கலைக் கழக துணைவேந்தரை தேர்வு செய்ய, மூன்று பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், ஓய்வுபெற்ற ஊழல் ஒழிப்பு மற்றும் வளர்ச்சி கமிஷனர் வேத நாராயணன், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக, அறிவியல் மற்றும் மனித நேய துறை இயக்குனர் பாலசுப்ரமணியன், சென்னை பல்கலைக் கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் சுரேந்திர பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு, துணைவேந்தர் பதவிக்கு தகுதியான, மூன்று பேரை தேர்வு செய்து, அவர்கள் குறித்த விபரங்களை, கவர்னருக்கு பரிந்துரை செய்யும்; அதில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.

ஆசிரியர் கல்வி; டிப்ளமோ தேர்வு முடிவு வெளியீடு

ஆசிரியர் கல்வி டிப்ளமோ மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. தமிழகத்தில், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள் உள்ளன. இதில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்டு, டிப்ளமோ வழங்கப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்கள், அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிய வாய்ப்புள்ளது. இதில், 2015-16 கல்வியாண்டுக்கான தேர்வு, கடந்த மே மாதத்தில் நடந்தது. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. 

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் விஜயகுமார் கூறியதாவது: ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படித்து தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு நாளை (இன்று) வெளியிடப்படுகிறது. இவற்றை அந்தந்த பயிற்சி பள்ளிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம். பிரைவேட் மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அகஇ - இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் மற்றும் பொது மக்களிடத்திலும் மற்றும் தனி திறன்களை மேம்படுத்தவும் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட முறையே 100, 150க்கு அதிகமாக உள்ள மாணவர்கள் எண்ணிக்கை தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5000/-ம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.6000/-ம் ஒதுக்கீடு செய்து இயக்குனர் உத்தரவு






8/1/16

மத்திய அரசு முடிவு: ஜூன் மாதத்துக்கு பின்னர் 7வது ஊதியக்குழு சம்பளம்

வரும் ஜூன் மாதத்துக்கு பின்னர்தான் 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்கப்படும். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதிக்காலத்தில் 7வது ஊதியக்குழு கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி தனது அறிக்கையை கடந்த டிசம்பரில் அரசிடம் தாக்கல் செய்தது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 14 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும் என கூறப்பட்டது. 


இந்த சம்பள உயர்வு ஜனவரி 2016 முதல் அமல்படுத்தப்படும். தாமதமாக அமல்படுத்தப்பட்டால் அதிக நிலுவை தொகை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இது மத்திய அரசுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். இதனால் வெகுவிரைவில் 7வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஊதியக் கமிஷன் பரிந்துரை குறித்த தனது ஒப்புதலை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பிப்ரவரி மாதம்தான் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இடையே, தமிழகம், புதுவை, கேரளா உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடுவில் வருகிறது. இந்த காரணங்களால் ஜூனுக்கு முன்னதாக 7வது ஊதியக் கமிஷன் பரிந்துரைப்படி புதிய சம்பளம் கிடைக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

திறனற்றவர்கள்’ என்று யாருமில்லை!

நாம் யாருமே திறமை குறைந்தவர்கள் இல்லை. ஒவ்வொருவரிடத்திலும் திறமை உள்ளது. அத்திறமை முழுமையாக வெளிப்படுத்துவதில் தான் வேறுபாடு உள்ளது. ஆகவே, ‘திறமையை முழுமையாக வெளிப்படுத்துபவர்கள்’, ‘முழுமையாக வெளிப்படுத்தாதவர்கள்’ என்று தான் பிரித்துக்கூற வேண்டுமே தவிர, ‘திறன் உள்ளவர்கள்’, ‘திறனற்றவர்கள்’ என்றல்ல!


நமது முழு திறமையையும் வெளிப்படுத்தும் பட்சத்தில் மட்டுமே, வெற்றியாளராக பரிணமிக்க முடியும்! வெளிப்படுத்துவதில் தான் சாதனையும் அடங்கி உள்ளது!

சாதனையாளர்களின் வாழ்க்கையை உற்று கவனியுங்கள். அனைவரும் தனது திறமையை முழுமையாக பயன்படுத்தியவர்கள். எந்த ஒரு செயலையும் பாதியில் அப்படியே விட்டுவிட்டு கடந்து வந்தவர்கள் அல்ல. நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை தனது முதுமையிலும் தினமும் நாதஸ்வரம் பயிற்சி எடுத்து கொண்டவர்.

அதுகுறித்து அவரிடம் கேட்ட போது, “ஒருநாள் பயிற்சி செய்யாமல் கச்சேரிக்கு போனால் வாசிக்கும் சிறுசிறு குறைகள் கூட தனக்கே தெரியும்.  இருநாட்கள் பயிற்சி எடுக்காமல் போனால் என்னை போன்ற வித்துவான்களுக்கு குறைகள் தெரியும். மூன்று நாட்களுக்கு பயிற்சி எடுக்காமல் போனால் விஷயம் தெரிந்த ரசிகர்களுக்கு குறை தானாக தெரிந்துவிடும். எனவே, தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்”, என்றார்.

மாநிலத்தின் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களிடம் கேட்டுபாருங்கள், அவர்கள் தினமும் படிப்பதுடன் , தொடர்ந்து வினாவுக்கான விடையை எழுதிப்பார்த்ததாக கூறுவார்கள். தொடர்ந்து பல தேர்வுகளை எழுதி பிழை திருத்திப்பார்த்தே அனைத்து பாடங்களிலும் 100 சதவீதம் பெற்றோம் என்பார்கள்.  மருத்துவராக வேண்டும், ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும், ஐ.ஐ.டி.,யில் சேர வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது; தினமும் படிக்க வேண்டும்; தினமும் எழுதிபார்க்க வேண்டும்!

ஒட்ட பந்தயத்தில் முதலாவதாக வர வேண்டுமென்று நினைப்பவன் நன்றாக ஓடினால் பயனில்லை. முழு திறமையும் வெளிப்படுத்தி ஓடினால் மட்டுமே வெற்றி கோட்டையை முதலில் தொட முடியும். ‘நன்றாக ஒடுவேன், நான் கிட்டதட்ட ஜெயித்து விடுவேன்’ என்ற நினைப்புடன் ஒடினால், எப்போதும் போல் தான் ஓட முடியும், அது வெற்றியை பெற்று தந்துவிடாது.

நம் மனது எதை முடிவெடுக்கின்றதோ அதுவே நமக்கு கிடைக்கும். நாம் வைத்திருக்கும் பாத்திரத்தின் அளவு மட்டுமே மழை நீரை சேகரிக்க முடியும். மனதை முழு ஈடுப்பாட்டுடன் இணைத்து முழுதிறனும் வெளிப்படும்படி செயல்படுங்கள்... வெற்றியாளராக உருவாகுங்கள். முழுதிறனுடன் ஈடுபடுதல் என்பது நம்மை வெற்றியாளராக மட்டும் அல்ல; விரைவில் சாதனையாளராகவும் மாற்றிவிடும்!

-க.சரவணன், மதுரை.

ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க உத்தரவு!

போலிச்சான்றிதழ் விவகாரத்தால், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், தங்கள் சான்றிதழ்களை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவற்றை சரிபார்க்க, தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு ஆசிரியர் பணியிடங்களில், போலிச்சான்றிதழ் கொடுத்து பலரும் சேர்ந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, தர்மபுரி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், போலிச்சான்றிதழ் தயாரித்து கொடுத்த கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்தனர். இவரிடம் பலரும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து போலிச்சான்றிதழ் பெற்று, பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவிபெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் சான்றிதழ்களையும் சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கென ஒன்றியம் வாரியாக சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்பித்து, சரிபார்த்த பின், நகல் சான்றுகளை சுய சான்றொப்பம் இட்டு ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூன்று நாளில் இப்பணியை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதில் சான்றிதழ்களை ஒப்படைக்காத ஆசிரியர்களின் பட்டியலையும் தயாரித்து, அதன் உண்மை தன்மை குறித்த நிலவரத்தையும், அதற்கான அறிக்கையையும் ஒரு வார காலத்துக்குள் சமர்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வுத்தரவுகளை, சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி பிறப்பித்துள்ளார்.

10ம் வகுப்பு தேர்வுக்கட்டணம் ஜன., 20க்குள் செலுத்த உத்தரவு

பத்தாம் வகுப்பு தேர்வுக்கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து, ஜன., 20ம் தேதிக்குள் வசூலித்து செலுத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் மாதத்தில் தொடங்குகிறது. இதற்கான மாணவர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டது. இவர்களுக்கு தேர்வுக்கட்டணமாக, 115 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படிப்பவர்கள், பிறமொழி எடுத்து படிப்பவர்களில், எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., ஆகியோருக்கும், பிற்படுத்தப்பட்டோரில் ஆண்டு வருமானம், 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கும் தேர்வுக்கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மற்ற மாணவர்களிடமிருந்து தேர்வுக்கட்டணத்தை, ஜன., 20ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. ஜன., 21ம் தேதிக்குள், கட்டண விலக்கு பெற்ற மாணவர்களின் பட்டியல், கட்டணம் செலுத்திய மாணவர்களின் பட்டியல் உள்ளிட்ட விபரங்களை கல்வித்துறை அலுவலகத்தில் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை பணி நியமனத்திற்கு தடை!

அண்ணா பல்கலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தலாம். பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது, என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மண்டல அண்ணா பல்கலை விரிவுரையாளர் பிரபாகர் தாக்கல் செய்த மனு:அண்ணா பல்கலையின் 13 உறுப்புக் கல்லுாரிகள், 3 மண்டல கல்லுாரிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப, பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டார். இதில் இனசுழற்சி முறை சரியாக பின்பற்றப்படவில்லை. இட ஒதுக்கீடு முறையில் உள்ள வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. எங்களைப் போல் பணியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். பதிவாளர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, பிரபாகர் மனு செய்திருந்தார்.


திருநெல்வேலி மண்டல அண்ணா பல்கலை உதவிப் பேராசிரியர் ராஜ்குமார், அண்ணா பல்கலை பதிவாளர் 102 பேராசிரியர், 178 இணை பேராசிரியர் பணியிடங்களை விதிகளுக்குப் புறம்பாக, நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டார். அதை ரத்து செய்து 75 சதவீதம் பதவி உயர்வு, 25 சதவீதம் நேரடியாக நியமிக்க உத்தரவிட வேண்டும், என மனு செய்திருந்தார்.

நீதிபதி டி.ஹரிபரந்தாமன், நேர்காணல் நடத்தலாம். ஆனால், பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. பின்னடைவு பணியிடங்கள் எவ்வளவு என்பதை ஜன.,18 ல் பல்கலை தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும், என்றார். உயர்கல்வித்துறை செயலர், பல்கலை பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மனுதாரர் வழக்கறிஞர்கள் லஜபதிராய், அருள்வடிவேல், பல்கலை வழக்கறிஞர் ராஜராஜன் ஆஜராயினர்.

சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தீவிரம் 100க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள் ஓட்டம்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் போலி சான்றிதழ்களை கொடுத்து அரசு பள்ளிகளில் பலர் ஆசிரியர் பணியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. கடந்த 1991க்கு பின்னர் பணியில் சேர்ந்த பலரது சான்றிதழ்களை சரிவர ஆய்வு செய்யாததே இதற்கு காரணம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர் மாவட்டங்களில் மேலும் பல போலி ஆசிரியர்கள் இருப்பது தெரியவந்தது.


கடந்த 4ம் தேதி இந்த 5 மாவட்டங்களில் 40 ஆசிரியர்கள் திடீரென விடுப்பு எடுத்தனர். நேற்று முன் தினமும் 100க்கும் மேற்பட்டோர் பல இடங்களில் பணிக்கு வரவில்லை. இந்த விவகாரம் கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகியுள்ளனர். பலர் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு சட்டரீதியாக தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், கடந்த 15-20 ஆண்டுகளில் பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவர் தவிர, போச்சம்பள்ளி அருள்சுந்தரம் என்பவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை  இருந்து வரும் தகவல் அடிப்படையில் போலி ஆசிரியர்களை பிடிக்க கூடுதல் தனிப்படைகள் அமைக்கவும் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுவது குறித்தும் போலீசார் ஆலோசிக்கின்றனர்.

வேலை வழங்கக்கோரி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஊர்வலம். 

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்கக்கோரி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து லஸ் கார்டன் வரை ஊர்வலமாக சென்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். 

ஊர்வலத்தின் போது, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வேலை கொடுங் கள், எதிர்கால பயம் எங்களை வாட்டி வதைக்கிறது என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும், தகுதித்தேர்வில் ஒவ்வொருவரும் எடுத்த மதிப்பெண்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலத்தில் பங்கு பெற்றனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் மு.ஜெயகவிதா பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2013-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை கிடைக்காமல் போய்விட்டது. கடந்த 2 வருடங்களாக தவித்து வரும் எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைத்தால் இது கண்டிப்பாக நடக்கும். அவரை சந்திக்க எங்களுக்கு ஒரு நிமிடம் வாய்ப்பு தர வேண்டும். எங்கள் பயம் கலந்த வாழ்வை மீட்டெடுக்க, எங்களுக்கு நம்பிக்கையும், எங்கள் தலைமுறை சிறக்க நியாயமும் வழங்க வேண்டும்.

டி.ஆர்.பி.,அறிவிப்பு-ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்

வெள்ளத்தில் சேதமான சான்றிதழ்களுக்கு பதில், புதிய ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., அறிவித்துஉள்ளது.வெள்ளம் பாதித்த பகுதிகளில், மாற்று சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்களை இழந்தோருக்கு டி.ஆர்.பி., புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, வெள்ளத்தில் சான்றிதழ் இழந்தோர், டி.ஆர்.பி.,யின், http:/trb.tn.nic.in/ இணையதளத்தில், பிப்.,5ம் தேதி வரை, சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் பயிற்சிகளால், ஆசிரியர்கள் தவிப்பு!

தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வும், 11ம் தேதி துவங்குகிறது.இதனால், மழை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையால், கிடப்புக்குப் போன பாடங்களை விரைந்து முடிக்க, ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். 

அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, ஆசிரியர்களுக்கான பாடம் எடுக்கும் பயிற்சியை, ஆர்.எம்.எஸ்.ஏ., என்ற, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதாவது, 10ம் வகுப்பு பாடம் எடுக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கு, நேற்று முதல், 9ம் தேதி வரை, மூன்று நாட்கள், மாவட்ட ரீதியாக சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மூன்று நாட்களும், பள்ளி வேலை நாட்கள் என்பதால், ஆசிரியர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்

சத்துணவு ஊழியர் போராட்ட அறிவிப்பு 11 பேரின் ஊதிய உயர்வு நிறுத்தம் ரத்து

சத்துணவு ஊழியர்களின் தொடர் போராட்ட அறிவிப்பால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 பேரின் ஊதிய உயர்வு நிறுத்தத்தை நிர்வாகம் ரத்து செய்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 மாதங்களில் 23 சத்துணவு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதன்பின் சிலரது 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டு இடமாறுதல் செய்யப்பட்டனர். சிலருக்கு ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டது. இதை கண்டித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட ஊழியர்கள் டிச., 14 ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

பின் நிர்வாகிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில், சத்துணவு ஊழியர்கள் மீதான நடவடிக்கை டிச., 28 க்குள் ரத்து செய்யப்படும் என, மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது. காலக்கெடு முடிந்தும் நடவடிக்கை இல்லை. ஜன., 8 ல் திருப்பூரில் நடக்கும் மாநில மாநாட்டிற்குள் நடவடிக்கை இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவது நிறுத்தப்படும் என, சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்தது.

இதையடுத்து முதற்கட்டமாக 11 பேரின் ஊதிய உயர்வு நிறுத்தத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது.சத்துணவு ஊழியர் சங்க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஏ.முருகேசன் கூறியதாவது: ஊதிய உயர்வு நிறுத்தம் ரத்து செய்ததை வரவேற்கிறோம். ஜன., 8 க்குள் 4 பேரின் 'சஸ்பெண்ட்' உத்தரவும், 17 பேரின் இடமாறுதலும் ரத்து செய்யப்படும் என, நிர்வாகம் உறுதியளித்துள்ளது. நிறைவேற்றாவிட்டால் அறிவித்தப்படி போராட்டம் நடத்தப்படும், என்றார்.

11 ஆயிரம் அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்!'

கோரிக்கைகளை வலியுறுத்தி, 11 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள், நேற்று, ஒரு நாள், ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டன; மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.தமிழக அரசின் வருவாய்த்துறை அலுவலர்கள், நான்கு ஆண்டுகளாக, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்களை நடத்தினர். அரசுடன் பலமுறை பேச்சு நடத்தியும், ஏற்கப்பட்ட கோரிக்கைகள் செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த வருவாய்த்துறை அலுவலர்கள், நேற்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தை நடத்தினர்.

'தமிழகம் முழுவதும், 13 ஆயிரம் பேர் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் பங்கேற்பர்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களின் வெள்ள நிவாரண பணிகள் காரணமாக, வருவாய் ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டனர்.பிற மாவட்டங்களில், வருவாய்த்துறை பணிகள் முடங்கின. கலெக்டர், தாசில்தார் அலுவலகங்களுக்கு வந்த மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கோரிக்கைகள்
* காலியாக உள்ள, 7,000 பணி இடங்களை நிரப்ப வேண்டும்
* தாசில்தார்களுக்கு ஏற்கனவே வழங்கபட்ட தனி ஊதியமான, 1,000 ரூபாயை மீண்டும் வழங்க வேண்டும்
* தாசில்தார் அலுவலகங்களில், இரவு நேர காவலரை நியமிக்க வேண்டும்
* அலுவலக உதவியாளர், 'ரிக்கார்டு' கிளார்க்குகளுக்கு, 400 ரூபாய் தர ஊதியம் வேண்டும்
* தேர்தல் பிரிவு தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
போராட்ட பாதிப்புகள்
* வாக்காளர் பட்டியல் மறு ஆய்வுப்பணி முடக்கம்
* தேர்தல் தொடர்பாக பொறுப்பு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் ரத்து
* பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் பணி முடக்கம்
* சான்றிதழ்கள் வழங்கும் பணி முடக்கம்
* இ - சேவை மையங்களில் பணிகள் பாதிப்பு.

ஜிலேபி, சிப்ஸ்' சாப்பிட மாணவர்களுக்கு தடை!: பாயசம், அல்வாவுக்கு அனுமதி

பள்ளி கேன்டீன்களில், 'ஜிலேபி, சிப்ஸ்' போன்ற உணவு பண்டங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது; பாயசம், அல்வாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மத்திய மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம் சார்பில், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில், கேன்டீன் உணவுப் பொருட்கள் மற்றும் மாணவர் உடல்நலன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பள்ளி கேன்டீன்களில், மாணவர் உடல்நலனுக்கு தீங்கான உணவுப் பொருட்கள் விற்கப்படுவதும், வீடுகளிலும் அதே போன்ற பொருட்களை, பெற்றோர் வாங்கித் தருவதும் ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பள்ளிகளுக்கும், பெற்றோருக்கும், உணவுப் பொருள் குறித்த பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதன் விவரம்:

தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள்சிப்ஸ், உருளை கிழங்கு சிப்ஸ் போன்ற வறுத்த தின்பண்டங்கள், ரசகுல்லா, பேடா, குலாப் ஜாமூன், கலாகந்த், நுாடுல்ஸ், பிட்சா, பர்கர், டிக்கா அனைத்து வகை சூயிங்கம் மற்றும் 'கேன்டீஸ்' எனப்படும் இனிப்பு மிட்டாய்கள்.

சர்க்கரை, 30 சதவீதத்துக்கு மேல் சேர்க்கப்படும் ஜிலேபி, பூந்தி, இமார்தி, சாக்லேட் மற்றும் கருப்பு சாக்லேட், 'பேக்' செய்யப்பட்ட அனைத்து வகை மிட்டாய், குளிர்பானங்கள், கேக், பிஸ்கட், பன், பதப்படுத்திய ஜாம் மற்றும் ஜெல்லி வகைகளை பயன்படுத்தக் கூடாது.

பரிந்துரைக்கப்பட்டவை: காய்கறி சேர்த்த கோதுமை பரோட்டா, ரொட்டி, அரிசி சாதம், புலாவ், பருப்பு வகை, கோதுமை அல்வா, கறுப்பு பட்டாணி கடலை, கோதுமை உப்புமா, காய்கறி வகை கிச்சடி, பருப்பு சாதம், சாம்பார், இட்லி, வடை, கீர், பிர்னி, பாயசம் மற்றும் பால் வகை பானங்கள், காய்கறி உப்புமா, காய்கறி, 'சாண்ட்விச்' புளி சாதம் மற்றும் கூட்டு வகைகள்.

பக்கோடா, சமோசா, வடை போன்ற சத்தான வகையில் சுத்தமாக தயாரித்து, வாரம், ஒருநாள் மட்டும் பள்ளி கேன்டீனில் வழங்கலாம். மீன், கொழுப்பு குறைந்த இறைச்சி, முட்டை, தானிய உணவு வகைகள்; மேலும் சுத்தமான பழ ரசம் மாணவர்களுக்கு தரலாம். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

எப்படி தயாரிக்க வேண்டும்: மாணவர்களுக்கான உணவை, கொழுப்பற்ற சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெயில், அவ்வப்போது மாற்றி மாற்றி சமைக்க வேண்டும். ஒரே எண்ணெயில் சமைக்கக் கூடாது. நெய் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்வது மாணவர் உடல்நலனுக்கு நல்லது.

உடற்பயிற்சி அவசியம்:மாணவர்களை, முடிந்தவரை அவ்வப்போது நடக்க வைக்க வேண்டும். நீச்சல், கால்பந்து போன்ற விளையாட்டு, உடற்பயிற்சி, யோகா பயிற்சிகளில் ஈடுபட உற்சாகப்படுத்த வேண்டும். மாணவர்கள் சைக்கிள் ஓட்டவும், பள்ளிக்கு சைக்கிளில் வருவதற்கான பயிற்சி தரலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

வேலூரில் கணினி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்

10.1.2016 காலை 10.06 மணிக்கு, கலெக்டர் அலுவலகம் முன்பு.
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி  ஆர்ப்பாட்டம்

*தமிழக அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடத்தை, 1ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாய பாடமாக கொண்டு வரவேண்டும்.

* சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை, நடப்பு கல்வி ஆண்டில் நடைமுறை படுத்த வேண்டும்.

* பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்பன உட்பட கோரிக்கைள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது..

 ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிள்
உறுப்பினர்கள் அனைவரும் வாரீர்....

 ஆசிரியர் சங்கங்கள் ,ஆசிரியர்கள் பொது மக்கள்,நண்பர்கள் அனைவரும் ஆதரவு தாரீர்...

CELL:
9500921987.

9585740001

மாநில துணை ஒருகிணைப்பாளர்
9940924923

நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?

நாடு முழுவதும், ஆறு முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, பள்ளிகளில் ஒரே விதமான பாடத்திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஏற்றத் தாழ்வுகள்: சுப்ரீம் கோர்ட்டில், வழக்கறிஞர் அஸ்வின் உபாத்யாயா என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனு விவரம்: நம் நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள, பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், பலவேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. குழந்தைகளின், சமூக,பொருளாதார நிலைக்கு ஏற்ப கல்வியும் மாறுபடுகிறது.
நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்? நம் நாட்டை, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக நாடு என கூறுவதற்கு, இப்போதுள்ள பள்ளி கல்வி பாட திட்ட முறை நிச்சயம் உதவாது.சமூகம், பொருளாதாரம், மதம், கலாசாரம் என, எந்தவகையிலும், குழந்தைகளிடம் வேறுபாடு இருக்கக் கூடாது என,அரசியல் சட்டத்தின், 21வது பிரிவில் கூறப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் கல்வி உரிமை சட்டமானது, குழந்தைகளுக்குஇலவசமாக கல்வி வழங்க வேண்டும் என்பதை மட்டுமின்றி, ஆறுமுதல், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, நாடு முழுவதும், ஒரேமாதிரியான பாட திட்டத்துடன் கூடிய கல்வியை வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. சமூக, பொருளாதார பாகுபாடு நீங்க வேண்டும் என்றால், ஒரேவிதமான பாடத் திட்டம் உடைய கல்வியை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். பின்லாந்து, டென்மார்க், நியூசிலாந்து, நார்வே, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளில், ஒரே மாதிரியான கல்வி முறை தான் அமலில் உள்ளது. உத்தரவிட வேண்டும்: அதுபோல, நம்நாட்டிலும், பள்ளிகளில் ஒரே மாதிரியானபாடத்திட்டத்தை அமல்படுத்தும்படி, மத்திய,மாநில அரசுகளுக்குஉத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.குளிர்கால விடுமுறை முடிந்து, சுப்ரீம் கோர்ட் மீண்டும் இந்தவாரத்தில் செயல்படத் துவங்கும். அப்போது, இந்த மனுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஜனவரி 18ல் துவக்கம்

மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த, தமிழகத்தில் ஜன.,18 முதல் பிப்.,5க்குள் 2வது முறையாக ஆசிரியர்கள் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வீடுகள் தோறும் சென்று வீட்டில் உள்ள தலைவர், தலைவி பெயர், குழந்தைகள், அசையும், அசையா சொத்துக்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற 42 விதமான விபரங்களை சேகரித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தனர்.

இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் மக்கள் தொகை விபரங்களை உறுதிப்படுத்தும்விதமாக, 2ம் கட்டமாக ஆசிரியர்களை கொண்டு வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.2011ல் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்திய அதே ஆசிரியர்களே இப்பணிகளில் ஈடுபட வேண்டும். இப்பணியை ஜனவரி 18ல் துவக்கி பிப்ரவரி 5க்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கணக்கெடுப்பு எப்படி: 2011ல் எடுத்த கணக்கெடுப்பு விபரத்துடன் கூடிய விண்ணப்பம் ஆசிரியர்களுக்கு 'பிரிண்ட் அவுட்' செய்து வழங்கப்படும். அந்த விண்ணப்பத்தையே வீடுகள் தோறும் எடுத்துச் சென்று, வீட்டில் உள்ள குடும்ப தலைவர், தலைவி பெயர் சரியாக உள்ளதா, குழந்தைகள் மற்றும் இதர விபரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இதில் கூடுதலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும். 2011க்கு பின் பிறந்த குழந்தை இருந்தால், அவர்களது விபரம், மாறுதலாகி சென்ற குடும்பத்தினர், புதியதாக திருமணம் முடித்தோர் விபரங்களை கூடுதலாக சேகரிக்குமாறு, ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குனர் ஒருவர் கூறுகையில், “வீடுகள் தோறும் வரும் ஆசிரியர்களுக்கு குடும்ப தலைவர்கள் முழு விபரம் வழங்கி, ஒத்துழைப்பு தர வேண்டும். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை ஆசிரியர்களிடம் கண்டிப்பாக வழங்க வேண்டும். ஆதார் அட்டை இல்லாதோர் மக்கள்தொகை பதிவேடு (இ.ஐ.டி.,எண்) எண்ணை காண்பிக்கலாம். இக்கணக்கெடுப்பு படி தான், ரேஷன் கார்டுக்கு 'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் திட்டம் உள்ளது.எனவே மக்கள் உண்மையான தகவலை தரவேண்டும்,” என்றார்.

100க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள் - சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் போலி சான்றிதழ்களை கொடுத்து அரசு பள்ளிகளில் பலர் ஆசிரியர் பணியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. கடந்த 1991க்கு பின்னர் பணியில் சேர்ந்த பலரது சான்றிதழ்களை சரிவர ஆய்வு செய்யாததே இதற்கு காரணம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர் மாவட்டங்களில் மேலும் பல போலி ஆசிரியர்கள் இருப்பது தெரியவந்தது.

கடந்த 4ம் தேதி இந்த 5 மாவட்டங்களில் 40 ஆசிரியர்கள் திடீரென விடுப்பு எடுத்தனர். நேற்று முன் தினமும் 100க்கும் மேற்பட்டோர் பல இடங்களில் பணிக்கு வரவில்லை. இந்த விவகாரம் கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகியுள்ளனர்.பலர் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு சட்டரீதியாக தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், கடந்த 15-20 ஆண்டுகளில் பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவர் தவிர, போச்சம்பள்ளி அருள்சுந்தரம் என்பவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து வரும் தகவல் அடிப்படையில் போலி ஆசிரியர்களை பிடிக்க கூடுதல் தனிப்படைகள் அமைக்கவும் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுவது குறித்தும் போலீசார் ஆலோசிக்கின்றனர்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே யாமிருக்க பயமேன்! உளவியல் பயிற்சியளிக்கும் கல்வித்துறை

திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட அரசுப்பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வை பயமின்றி எதிர்கொள்ள கல்வித்துறை சார்பில், உளவியல் ரீதியான ஆலோசனை பயிற்சிகள் துவங்கியுள்ளன. பள்ளி மாணவர்கள், தங்களை சுற்றி நடக்கும் பல வன்முறை சம்பவங்களால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.


இதன் விளைவாகவே, அச்சம்பவங்களை தங்கள் வாழ்விலும் செயல்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர். மனதளவில் பாதிக்கப்படும் மாணவர்கள், தங்களின் கோபத்தை வெளிப்படுத்த இடமின்றி பள்ளிகளில் சக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் வெளிப்படுத்துகின்றனர். வேறு சில மாணவர்கள், மனதளவில் பாதிக்கப்பட்டு, எதிலும் ஈடுபாடில்லாமல் இருப்பது, தேர்வில் தோல்வி, தோல்வியால் தற்கொலை முயற்சி என மாணவர்களே அவர்களின் தவறான வழியில் கொண்டு செல்கின்றனர்.நடமாடும் ஆலோசனை மையத்திட்டம்: இத்தகைய மனபோக்கை மாற்றுவதற்கும், மாணவர்களிடம் நற்பண்புகளை வளர்ப்பதுடன், பல்வேறு சூழல்களால் மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கவும் நடமாடும் ஆலோசனை மையத்திட்டம் கொண்டுவரப்பட்டது.இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களை ஒன்றிணைத்து ஒரு மண்டலமாக அமைத்து, அதற்கு ஒரு உளவியல் நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர், நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தை உள்ளடக்கியது கோவை மண்டலம்.வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு, வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், மனதில் புதிய சிந்தனைகள் குறித்து, ஒவ்வொரு பள்ளிகளிலும் உளவியல் நிபுணர் மூலம் ஆலோசனை வகுப்புகள் சுழற்சி முறையில் நடக்கிறது.கடந்தாண்டு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ், 2 மாணவர்களுக்கு தேர்வு பயத்தை நீக்குவதற்கான சிறப்பு ஆலோசனை பயிற்சிகள் நடந்தன. இதனால், தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நடப்பாண்டிலும் இப்பயிற்சி, இம்மாதம் முதல் துவங்கியுள்ளது. கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் சுழற்சி முறையில் நடமாடும் ஆலோசனை மையம் செயல்படுகிறது.

'மனநிலையை அறிந்து ஆலோசனை'

உளவியல் நிபுணர் அருள்வடிவு கூறியதாவது: பாடங்களை நன்றாக படித்தாலும், தேர்வின் போது படித்த பாடங்களும் புதிதாக உள்ளது. திரும்ப திரும்ப படித்தாலும் மறந்து விடுகிறது என மாணவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு மாணவர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப ஆலோசனை வழங்கப்படுகிறது. சில மாணவர்கள் நீண்ட காலமாக பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்து, தற்போது வர துவங்கியுள்ளனர். அம்மாணவர்களுக்கு தனியாக ஆலோசனை வழங்கப்படுகிறது. நினைவாற்றலை அதிகரிப்பது, தேர்வின் போது ஏற்படும் பயத்தை நீக்குவது உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுத்தேர்வு தேதி வந்தாச்சு! செய்முறை தேர்வு எப்போது?

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், 4ல் பிளஸ் 2 வுக்கும், மார்ச், 15ல், 10ம் வகுப்புக்கும் தேர்வு துவங்க உள்ளது. வெள்ளம் பாதித்த, நான்கு மாவட்டங்களுக்காக, தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

ஜன., 11ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரையாண்டு தேர்வு துவங்கி, 27ல் முடிகிறது. இதையடுத்து, செய்முறை தேர்வை நடத்த வேண்டும். அதற்கு கணினி அறிவியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் விலங்கியல் மாணவர்களுக்கு, 10 நாட்கள் தேவைப்படும். பின், பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மூன்று திருப்புதல் - ரிவிஷன் - தேர்வுகள் நடத்த வேண்டும்.எனவே, பொதுத் தேர்வை, 10 நாள் தள்ளிவைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அரசு தேர்வுத் துறை, வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்வு துவங்கும் படி செய்துள்ளது.இந்நிலையில், இந்த மாதம் முழுவதும், அரையாண்டு தேர்வு நடக்கும் நிலையில், செய்முறை தேர்வு எப்போது என, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, பிப்ரவரி 5 - 25க்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.செய்முறை தேர்வு எப்போது என, தாமதமின்றி அறிவித்தால் மட்டுமே, அதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்த முடியும். பிப்ரவரி முதல் வாரத்திலேயே செய்முறை தேர்வை நடத்தி முடித்தால் தான், அடுத்தடுத்து, திருப்புதல் தேர்வுகள் நடத்தி, பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த முடியும்.

பள்ளித் தேர்வு அறிவிப்பு: ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணிவழங்குவதை தவிர்க்க வலியுறுத்தல்

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு, பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தீபாவளிப் பண்டிகை விடுமுறையை தொடர்ந்து, தமிழகத்தில் பெய்த பலத்த மழையால் பள்ளிகளுக்கு அதிக நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. மழைக்குப் பிறகு,பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மீலாதுநபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என 9நாள்கள் மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டன. 

தற்போது இந்த விடுமுறை நாள்கள்முடிந்து, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், வருகிற 11-ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. மேலும், பிளஸ்-2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ்-2 தேர்வு மார்ச் 4-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 15-ஆம் தேதியும் தொடங்குகின்றன.இந்நிலையில், பத்தாம் வகுப்பு தமிழாசிரியர்களுக்கு இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், மாணவர்களின் கற்றல் மேம்பாடு குறித்த 3 நாள் பயிற்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இந்த பயிற்சி வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் (ஜன.7,8,9) பாப்பாகோயில் தனியார் கல்லூரி, மயிலாடுதுறையில் என 2 இடங்களில் நடைபெறுகிறது.

நிகழ் கல்வியாண்டை பொருத்தவரை மாணவர்கள் இயற்கை இடர்பாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட சிரமங்களுக்கிடையே தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது. இதுபோன்ற நேரங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி, மாற்றுப் பணி போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜனவரி மாத SSA பயிற்சி தேதிகள் - கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் செயல்முறைகள்

1 to 8th std:llnd Term ExaminationTime Table- January-2016-DEO-Trichy

மத்திய அரசு பணிகளில் ஓபிசி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் 11 சதவீத இடங்களே நிரப்பப்பட்டுள்ளன: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிச்சம்


மத்திய அரசு பணிகளில் ஒபிசி வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் 11 சதவீத இடங்களே நிரப்பப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.மண்டல் கமிஷன் பரிந்துரை யின் அடிப்படையில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீதஇடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. 


இந்த இடஒதுக்கீடு மத்திய அரசு பணியில் கடந்த 1993-ல் இருந்தும் ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறு வனங்களில் 2008-ல் இருந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், மத்திய அரசு பணிகளில் ஓபிசி வகுப்பினர் மற்றும் எஸ்சி, எஸ்டிவகுப்பின ரின் பிரதிநிதித்துவம் தொடர்பான தகவல்களை அளிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த பொறியி யல் பேராசிரியர் இ.முரளிதரன் என்பவர் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த அக்டோபர் மாதம் விண் ணப்பித்திருந்தார். (மத்திய அரசு பணிகளில் எஸ்சி வகுப்பினருக்கு 15 சதவீதமும், எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீதமும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது)அதன் அடிப்படையில், மத்திய அரசின் 9 அமைச்சகங்கள், 9 துறை களில் 1.1.2015-ன் படி குருப்-ஏ, குரூப்-பி, குரூப்-சி, குரூப்-டி பணிகளில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி, ஓசி வகுப்பினரின் பிரதிநிதித்துவம் தொடர்பானதகவல்களை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அவருக்கு அளித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

ஓபிசி வகுப்பினர் குரூப்-ஏ பணிகளில் 12 சதவீதம் குரூப்-பி பணிகளில் 7சதவீதம் குரூப்-சி பணிகளில் 17 சதவீதம் குரூப்-டி பணிகளில் 16 சதவீதம் என ஒட்டு மொத்தமாக 11 சதவீதம் பேர் இருக் கிறார்கள். எஸ்சி வகுப்பினரை பொருத்தவரையில், குரூப்-ஏ பணிகளில் 13 சதவீதமும் குரூப்-பிபணிகளில் 15 சதவீதமும் குரூப்-சி பணிகளில் 20 சதவீதமும் குரூப்-டி பணிகளில் 29 சதவீதமும் ஒட்டு மொத்தமாக 17 சதவீதமும் உள்ளனர்.எஸ்டி வகுப்பினர் குரூப்-ஏ பணிகளில் 6 சதவீதமும் குரூப்-பி பணிகளில் 6சதவீதமும் குரூப்-சி பணிகளில் 6 சதவீதமும் குரூப்-டி பணிகளில் 11 சதவீதமும் ஒட்டு மொத்தமாக 6 சதவீதமும் இருக் கிறார்கள். பொதுப்பிரிவினர் (ஓசி) குரூப்-ஏ பணிகளில் 69 சதவீதமும் குரூப்-பி பணிகளில் 71 சதவீதமும் குரூப்-சி பணிகளில் 57 சதவீதமும் குரூப்-டி பணிகளில் 44 சதவீதமும் ஒட்டுமொத்தமாக 65 சதவீதமும் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் அடிக்கடி பயிற்சிக்கு செல்வதால் மாணவர்களின் படிப்பு பாதிப்பு: ஜாக்டா ஆசிரியர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டா) ஒருங்கிணைப்பாளர் பி.கே.இள மாறன், முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களின் நலன் கருதி, இந்த மாவட்டங்களில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் கையேடு வழங்கியது வரவேற்கத்தக்கது.ஆர்எம்எஸ்ஏ எனப்படும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ், 9, 10-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு துறை வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வரவேற்கக்கூடியதுதான் என்றாலும், மழை வெள்ளப் பாதிப்பு காரணமாக கடந்த 33 நாட்களாக பள்ளிகள் இயங்காததால் பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

ஆர்எம்எஸ்ஏ பயிற்சிக்காக ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 2 முதல் 5 ஆசிரியர்கள் சென்றுவிட்டால் அரையாண்டுத் தேர்வு 11-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவர்.ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகள், மாணவர்களின் நலனைப் பாதிக்கும் என்பதால் இத்தகைய பயிற்சிகளை ரத்து செய்துவிட்டு கல்வி ஆண்டின்தொடக்கத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாக்டா சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

வங்கிகள் 3 நாட்கள் இயங்காது: வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் அறிவிப்பு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 3.5 லட்சம் வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (ஜன.8) ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஜனவரி 8, ஜனவரி 9 (இரண்டாவது சனிக்கிழமை), ஜனவரி 10 (ஞாயிறு) ஆகிய மூன்று நாள்கள் தொடர்ந்து வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

காரணம் என்ன?

வங்கி ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வு, பணிச் சலுகை ஆகியவை தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகளின் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளை கைவிடக் கோரி நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சி.ஹெச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.

சட்டத்துக்கு முரணாக...:

கடந்த ஆண்டு மே மாதத்தில் அனைத்து வங்கிகளுக்கும் புதிய ஊதிய உயர்வு, பணிச்சலுகை தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டது.ஆனால் ஒப்பந்த ஷரத்துகளை மீறி பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளான,"ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்', "ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத்',"ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர்', "ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்', "ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா' ஆகிய 5 வங்கிகளின் நிர்வாகங்கள் புதிய பணி முறைகளை வாபஸ் பெறக் கோரி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது என்று வெங்கடாசலம் தெரிவித்தார்.

நவோதயா பள்ளி சேர்க்கை வரும் 9ம் தேதி தேர்வு

புதுவை ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பு சேர்க்கைக்கான தேர்வு, வரும் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் வினையத்தான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பு சேர்வதற்கான தெரிவுநிலை தேர்வு, திட்டமிட்டபடி வரும் 9ம் தேதி சனிக்கிழமை காலை 11.30 மணிக்குநடைபெறும். தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் தங்களுக்குரிய தேர்வு மையத்திற்கு காலை 10:00 மணிக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Annamalai University Apply Convocation -Last Date Posted: 07 Jan 2016 07:39 AM PST 81st Annual Convocation 2016 forDegree/Diploma ll b held on 26.02.16 >Fees-Rs.750/- >Last date for of filled in applications-20.01.16 www.annamalaiuniversity.ac.in Bonus Request for Part Time Teachers - CM cell request Posted: 07 Jan 2016 07:34 AM PST உங்களது மொபைலில் இலவசமாக டேட்டா,பணம்,ரீசார்ச் தரும் புதிய Mobile Application. Posted: 06 Jan 2016 11:50 PM PST இன்று நம்முடைய மொபைலில் டேட்டா ரீசார்ச் செய்வது என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. டேட்டாக்களுக்கான கட்டணமும் பல மடங்கு உயர்ந்து விட்டது.இன்நிலையில் இலவசமாக நமது மொபைல் எண்ணிக்கு டேட்டாவும்,கையில் பணமும் கிடைத்தால் எப்படி இருக்கும்? அருமை! அப்படி ஒரு அருமையான Application தான் நாம் இன்றைய பதிவில் பார்க்க இருப்பது. எவ்வாறு Download செய்து பயன்படுத்த வேண்டும்? முதலில் கீழ் காணும் Download Linkஐ click செய்யவும். Download TaskBuck Application click here ... Open browse ல் Google Chrome என்பதை தேர்வு செய்யவும். அதில் Play store என்பதை clik செய்து instal செய்யவும். பின்பு Application ஐ Open. செய்யவும். -->என்று மூன்று முறை கடந்த பிறகு Start now என்பதை தேர்வு செய்யவும். அதில் உங்களது Mobile number, Email id, Referral code: SZW1SGPI ஆகியவற்றை பதிவு செய்யவும்.அவ்வளவுதான் உங்களது Application தயார். எவ்வாறெல்லாம் பணம் பெறலாம்? *Application ல் வரும் Offer என்பதை Click செய்துஅதில் வரும் Application ஐ Download செய்யலாம்.(Download செய்து விட்டு நமது கணக்கில் பணம் ஏறியவுடன் நமக்கு தேவையில்லாத Application ஐ Uninstall செய்து விடலாம்.) *Story என்பதை Click செய்து மற்ற நண்பர்களுக்கு அனுப்பலாம். *Share என்பதை Click செய்து உங்களது நண்பர்கள் இணைவதன் மூலமும் பணம் பெற முடியும். எவ்வாறெல்லாம் பணத்தை பயன்படுத்தலாம்? *நமது கணக்கில் உள்ள பணத்தை ரீசார்ச் செய்து கொள்ளலாம். *Paytm மூலமாக நமது வங்கி கணக்கில் பணமாக பெறலாம். *நமது கணக்கில் உள்ள டேட்டாவை ரீசார்ச் செய்து கொள்ளலாம். நன்றி... IGNOU B. Ed. Entrance Test - September, 2015 Results Published Posted: 07 Jan 2016 06:16 AM PST *.CLICK HERE - IGNOU B.ED ENTRANCE 2015 -RESULTS... அதேஇ - NMMS தேர்விற்கான வினாக்கள் 7-ம் வகுப்பு மூன்று பருவ புத்தகத்திலிருந்தும் இருந்தும், 8வகுப்பு முதல் இரண்டு பருவ புத்தகத்திலிருந்தும் கேட்கப்படும் - இயக்குனர் செயல்முறைகள். Posted: 07 Jan 2016 05:27 AM PST ஜுன் மாதத்திற்கு பின்னர் 7-வது ஊதிய குழு சம்பளம்- மத்திய அரசு தகவல் Posted: 07 Jan 2016 01:22 AM PST 10ம் வகுப்பு தேர்வுக்கட்டணம் ஜன., 20க்குள் செலுத்த உத்தரவு

பத்தாம் வகுப்பு தேர்வுக் கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து, ஜன., 20ம் தேதிக்குள் வசூலித்து செலுத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் மாதத்தில் தொடங்குகிறது. இதற்கான மாணவர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டது. இவர்களுக்கு தேர்வுக்கட்டணமாக, 115 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் வழியில் படிப்பவர்கள், பிறமொழி எடுத்து படிப்பவர்களில், எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., ஆகியோருக்கும், பிற்படுத்தப்பட்டோரில் ஆண்டு வருமானம்,2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கும் தேர்வுக்கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.மற்ற மாணவர்களிடமிருந்து தேர்வுக்கட்டணத்தை, ஜன., 20ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. ஜன., 21ம் தேதிக்குள், கட்டண விலக்கு பெற்ற மாணவர்களின் பட்டியல், கட்டணம் செலுத்திய மாணவர்களின் பட்டியல் உள்ளிட்ட விபரங்களை கல்வித்துறை அலுவலகத்தில் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜுன் மாதத்திற்கு பின்னர் 7-வது ஊதிய குழு சம்பளம்- மத்திய அரசு தகவல்

7/1/16

உதவி பொறியாளர் நேர்காணல் அறிவிப்பு

அரசு துறையில் காலியாக உள்ள, 213 உதவி பொறியாளர் (சிவில்) பணியிடங்களுக்கான தேர்வில் தகுதி பெற்ற, 400 பேருக்கு, நேர்காணல் தேர்வும், 23 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பும், 11 முதல், 14 வரை நடக்க உள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில், 24 காலியிடங்களுக்கு நடந்த தேர்வில் தகுதி பெற்ற, 57 பேருக்கு, 27ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கஉள்ளது. இது குறித்த விவரங்கள் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுஉள்ளன.

சிறப்பு பொங்கல் பரிசு அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.அரிசி, சர்க்கரை, கரும்புடன், 100 ரூபாய் ரொக்கமும் வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை:'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசு பை வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு பையில், அரிசி, சர்க்கரை, கரும்புடன், 100 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும். இதனால் அரசுக்கு, 318 கோடி ரூபாய் செலவு ஏற்படும்; 1.91 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.

முந்தைய தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பண்டிகையின் போது, அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, பாசிப்பருப்பு ஆகியவை வழங்கப்பட்டன. அடுத்து, 2011ல், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 100 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.கடந்த, 2015ல், ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இல்லாததால், பொங்கல் பரிசு வழங்கவில்லை. இந்த ஆண்டு, சட்டசபை தேர்தல் வர உள்ளதால், பொங்கல் பரிசு வழங்கப்படும் என, பொதுமக்கள் எதிர்பார்த்தனர். அதன்படி, நேற்று சிறப்பு பொங்கல் பரிசு அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
அவரது அறிக்கை:பொங்கல் திருநாளை கொண்டாட, அரிசிக்கான ரேஷன் கார்டு உடையவர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள குடும்பங்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 100 ரூபாய் ரொக்கம் அடங்கிய, சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.இப்பரிசுதொகுப்பு, பொங்கல் பண்டிகைக்கு முன், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு, 318 கோடி ரூபாய் செலவு ஏற்படும்; 1.91 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

2 அடி கரும்பு: ஏகப்பட்ட குழப்பம்:
இதுவரை வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பு இடம் பெற்றதில்லை; அரிசி, சர்க்கரை போன்றவை தான் இடம்பெற்றிருந்தன. இம்முறை, முதன் முறையாக, 'பொங்கல் பரிசு தொகுப்புடன், 2 அடி நீள கரும்பு துண்டு வழங்கப்படும்' என, முதல்வர் அறிவித்துள்ளார்; இது, பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
எத்தகைய குழப்பம்:
* ஒரு குடும்பத்துக்கு ஒரு கரும்பு வழங்குவது, ஓரளவு எளிதாக இருந்திருக்கும். ஆனால், 2 அடி நீள கரும்பு துண்டு என கூறியிருப்பதால், ஒரு கரும்பை எத்தனைதுண்டாக்குவது?* கரும்பு துண்டுகளாக்கப்பட்டு ரேஷன் கடைக்கு வழங்கப்படுமா?* முழு கரும்பை வழங்கி, வெட்டி கொடுக்க உத்தரவிடுவரா?* 'நுனிக்கரும்பு வேண்டாம்; அடிக்கரும்பு வேண்டும்' என கேட்டால் என்ன செய்வது?என்பன போன்ற குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

பொதுத் தேர்வு: இன்று முதல் 104ல் உளவியல் ஆலோசனை

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 104 தொலைபேசி சேவை மூலம் வியாழக்கிழமை முதல் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

மூன்று கட்டங்களாக இந்த சேவை வழங்கப்படவுள்ளது. தேர்வுக்கு முன்பு தேவைப்படும் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், உணவு முறைகள் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். 

தேர்வு சமயத்தின்போது ஏற்படும் மனஅழுத்தம், தோல்வி குறித்த பயம் உள்ளிட்டவற்றுக்கு ஆலோசனைகளைப் பெறலாம். தேர்வு முடிவு வெளிவரும்போது, அதை எதிர்கொள்வது, தோல்விகளைக் கையாள்வது, விரக்தி நிலையில் இருந்து மீட்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். மாணவர்கள் மட்டுமன்றி, தேர்வு சமயத்தை கையாள்வது குறித்து மாணவர்களின் பெற்றோர்களும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளலாம்.
 மேலும், அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், தேர்வு குறித்த குழப்பங்கள், மனஅழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கும் இதன் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும். 
 இந்த சேவைகளுக்காக உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட சிறப்புக் குழு 24 மணி நேரமும் செயல்படும். தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தொடர்ந்து இந்தச் சேவையை மாணவர்கள், பெற்றோர்கள் பெற முடியும்.

"புதிய கல்விக் கொள்கை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவை கலைக்க வேண்டும்"

தேசிய அளவில் புதிய கல்விக் கொள்கை தயாரிப்பதற்காக மத்திய அரசு அமைத்துள்ள குழுவை கலைக்க வேண்டும் என கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். தேசிய புதிய கல்விக் கொள்கை உருவாக்கம் தொடர்பாக கோவை ராமநாதபுரம் மறைமாவட்ட கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் அமைத்துள்ள குழுவின் கருத்தரங்கு கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குழுவின் ஒருங்கிணைப்பாளரும் ராமநாதபுரம் ஆயருமான மார்ட் பவுல் ஆல்பர்ட் தலைமை வகித்தார். கல்வியாளர் ஸ்டீபன் பிரகாசம், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பாதிரியார் எஸ்.எம்.ஜான் கென்னடி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கருத்தரங்கைத் தொடர்ந்து, பிரின்ஸ் கஜேந்திர பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள கல்விக் குழுவில் கல்வியாளர்களே இடம் பெறாமல் இருப்பது இதுவே முதல் முறை. இந்தியா கூட்டாட்சி நாடு என்பதால் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த கல்வியாளர்களையும் கல்விக் குழுவில் இணைத்திருக்க வேண்டும்.

பின்னர் அந்தக் குழுவினர் மக்களிடம் நேரடியாக பொது விசாரணை நடத்தி, அதன் பிறகு கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

பள்ளித் தேர்வு அறிவிப்பு: ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதை தவிர்க்க வலியுறுத்தல்

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு, பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தீபாவளிப் பண்டிகை விடுமுறையை தொடர்ந்து, தமிழகத்தில் பெய்த பலத்த மழையால் பள்ளிகளுக்கு அதிக நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன.

மழைக்குப் பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மீலாதுநபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என 9 நாள்கள் மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டன.

தற்போது இந்த விடுமுறை நாள்கள் முடிந்து, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வருகிற 11-ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. மேலும், பிளஸ்-2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பிளஸ்-2 தேர்வு மார்ச் 4-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 15-ஆம் தேதியும் தொடங்குகின்றன.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு தமிழாசிரியர்களுக்கு இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், மாணவர்களின் கற்றல் மேம்பாடு குறித்த 3 நாள் பயிற்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இந்த பயிற்சி வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் (ஜன.7,8,9) பாப்பாகோயில் தனியார் கல்லூரி, மயிலாடுதுறையில் என 2 இடங்களில் நடைபெறுகிறது.

நிகழ் கல்வியாண்டை பொருத்தவரை மாணவர்கள் இயற்கை இடர்பாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட சிரமங்களுக்கிடையே தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது.

இதுபோன்ற நேரங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி, மாற்றுப் பணி போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசு அலுவலர்களை இடமாற்றம் செய்வதால் தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படும்"

அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்படுவதால் தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படும் என்று, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநிலச் செயலர் மங்களபாண்டியன் தெரிவித்துள்ளார்.

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 7இல் நடக்கவுள்ள ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தின் பிரசாரப் பயணமாக, செவ்வாய்க்கிழமை சிவகங்கை வந்திருந்த இவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஊதிய முரண்பாடுகள் நீக்கப்படவேண்டும், கடந்த சட்டபேரவைத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்திருந்த வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 7 ஆம் தேதி மாநிலம் முழுவதும் தற்செயல் விடுப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.


அதன்பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில், பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும். தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களை இடமாற்றம் செய்வது தேவையற்றது. நாங்கள் அரசு வேலை மட்டுமே செய்கிறோம். எந்தக் கட்சிக்கும் சாத கமாகச் செயல்படவில்லை. தற்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலமே வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

  தேர்தல் நடத்தும் நேரடி உயர் அலுவலர்களை இடமாற்றம் செய்வதில் பிரச்னை இல்லை. ஆனால், அடுத்த நிலைகளில் உள்ள அலுவலர்களை இடமாற்றம் செய்வதால், புதிதாக வருபவர்களுக்கு சம்பந்தப்பட்ட இடம், சூழ்நிலைகள் தெரியாது. எனவே, தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படுமே தவிர, நன்மை கிடைக்காது என்றார்.

  பேட்டியின்போது, மாவட்டத் தலைவர் தமிழரசன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழில் 'இனிஷியல்!' ஆசிரியர்களுக்கு உத்தரவு

அரசாணைகள், உத்தரவுகள் அனைத்தும், தமிழிலேயே வெளியிட வேண்டும்' என, ஐந்தாண்டுகளுக்கு முன், தமிழக அரசு உத்தரவிட்டது. அதேபோல், 'கல்வி அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை, தமிழில் கையெழுத்து போட வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'பள்ளி கல்வித் துறையில் ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், தமிழில் கையெழுத்து போடுகின்றனர்; ஆனால், ஆங்கிலத்தில் தங்களின் இனிஷியலை எழுதுகின்றனர்' என, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குணமால் என்பவர், பள்ளி கல்வி முதன்மைச் செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதை பரிசீலித்த செயலகம், அனைத்து ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், தமிழில் கையெழுத்து போடவும், இனிஷியலாக இருந்தாலும், அதையும் தமிழில் எழுதவும் உத்தரவிட்டுள்ளது. 
இது தொடர்பான சுற்றறிக்கையை, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளார். இனிஷியல் என்பது, தந்தை அல்லது கணவர் பெயரின் முதல் ஆங்கில எழுத்தாக பெரும்பாலும் கருதப்படுகிறது.

தமிழகத்தில் மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஜனவரி 18ல் துவக்கம்

மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த, தமிழகத்தில் ஜன.,18 முதல் பிப்.,5க்குள் 2வது முறையாக ஆசிரியர்கள் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வீடுகள் தோறும் சென்று வீட்டில் உள்ள தலைவர், தலைவி பெயர், குழந்தைகள், அசையும், அசையா சொத்துக்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற 42 விதமான விபரங்களை சேகரித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தனர்.


இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் மக்கள் தொகை விபரங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 2ம் கட்டமாக ஆசிரியர்களை கொண்டு வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2011ல் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்திய அதே ஆசிரியர்களே இப்பணிகளில் ஈடுபட வேண்டும். இப்பணியை ஜனவரி 18ல் துவக்கி பிப்ரவரி 5க்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு எப்படி: 2011ல் எடுத்த கணக்கெடுப்பு விபரத்துடன் கூடிய விண்ணப்பம் ஆசிரியர்களுக்கு 'பிரிண்ட் அவுட்' செய்து வழங்கப்படும். அந்த விண்ணப்பத்தையே வீடுகள் தோறும் எடுத்துச் சென்று, வீட்டில் உள்ள குடும்ப தலைவர், தலைவி பெயர் சரியாக உள்ளதா, குழந்தைகள் மற்றும் இதர விபரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இதில் கூடுதலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும். 2011க்கு பின் பிறந்த குழந்தை இருந்தால், அவர்களது விபரம், மாறுதலாகி சென்ற குடும்பத்தினர், புதியதாக திருமணம் முடித்தோர் விபரங்களை கூடுதலாக சேகரிக்குமாறு, ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குனர் ஒருவர் கூறுகையில்,“வீடுகள் தோறும் வரும் ஆசிரியர்களுக்கு குடும்ப தலைவர்கள் முழு விபரம் வழங்கி, ஒத்துழைப்பு தர வேண்டும். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை ஆசிரியர்களிடம் கண்டிப்பாக வழங்க வேண்டும். ஆதார் அட்டை இல்லாதோர் மக்கள்தொகை பதிவேடு (இ.ஐ.டி.,எண்) எண்ணை காண்பிக்கலாம். இக்கணக்கெடுப்பு படி தான், ரேஷன் கார்டுக்கு 'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் திட்டம் உள்ளது. எனவே மக்கள் உண்மையான தகவலை தரவேண்டும்,” என்றார்.

பொதுத்தேர்வு தேதி வந்தாச்சு! செய்முறை தேர்வு எப்போது?

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், 4ல் பிளஸ் 2 வுக்கும், மார்ச், 15ல், 10ம் வகுப்புக்கும் தேர்வு துவங்க உள்ளது. வெள்ளம் பாதித்த, நான்கு மாவட்டங்களுக்காக, தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. ஜன., 11ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரையாண்டு தேர்வு துவங்கி, 27ல் முடிகிறது. இதையடுத்து, செய்முறை தேர்வை நடத்த வேண்டும். அதற்கு கணினி அறிவியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் விலங்கியல் மாணவர்களுக்கு, 10 நாட்கள் தேவைப்படும். பின், பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மூன்று திருப்புதல் - ரிவிஷன் - தேர்வுகள் நடத்த வேண்டும். 

எனவே, பொதுத் தேர்வை, 10 நாள் தள்ளிவைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அரசு தேர்வுத் துறை, வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்வு துவங்கும் படி செய்துள்ளது.இந்நிலையில், இந்த மாதம் முழுவதும், அரையாண்டு தேர்வு நடக்கும் நிலையில், செய்முறை தேர்வு எப்போது என, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். 
இதற்கிடையே, பிப்ரவரி 5 - 25க்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்முறை தேர்வு எப்போது என, தாமதமின்றி அறிவித்தால் மட்டுமே, அதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்த முடியும். பிப்ரவரி முதல் வாரத்திலேயே செய்முறை தேர்வை நடத்தி முடித்தால் தான், அடுத்தடுத்து, திருப்புதல் தேர்வுகள் நடத்தி, பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த முடியும் என்றார் பேட்ரிக் ரைமண்ட், பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர். 

6/1/16

பி.எட்., கல்லூரி துவங்க தடையில்லா சான்று

பி.எட்., கல்லுாரிகள் துவங்க, தடையில்லா சான்று கோரி, மூன்று கல்வி அறக்கட்டளைகள் அளித்த மனுக்கள் மீது நான்கு வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்திற்கு, கெடு விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி கவுன்சில்:வேலுார், மதுரை மற்றும் பிற நகரங்களில் இயங்கும் கல்வி அமைப்புகள் சார்பில், பி.எட்., கல்லுாரிகள் துவங்க அனுமதி கோரி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.ஆனால், ஆசிரியர் கல்வி பல்கலை மற்றும் ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில்களிடம் இருந்து பெறப்பட்ட, தடையில்லா சான்று இணைக்கப்படவில்லை.


இதனால், விண்ணப்பங்களை நிராகரிப்பது தொடர்பாக, மூன்று கல்வி அறக்கட்டளைகளுக்கு, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் தென் மண்டல இயக்குனரகம், 'நோட்டீஸ்' அனுப்பியது. இதை எதிர்த்து, மூன்று கல்வி அறக்கட்டளைகள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பிறப்பித்த உத்தரவு:

விதிமுறைகளில்...:தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் விதிமுறைகளில், 'பி.எட்., கல்லுாரிகள் துவங்க விண்ணப்பத்துடன், தமிழக ஆசிரியர் கல்வி பல்கலை மற்றும்
தமிழக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி கவுன்சிலின் தடையில்லா சான்றை கட்டாயம் இணைக்க வேண்டும்; இல்லாவிட்டால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் கல்வி அறக்கட்டளைகள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் நோட்டீசுக்கு பதில் அளிக்காமல், நீதிமன்றத்தை நாடியுள்ளன; இந்த விஷயத்தில் தலையிட முடியாது; மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலின் நோட்டீசுக்கு பதிலளிக்க, மனுதாரர் கல்வி அறக்கட்டளைகளுக்கு, இரண்டு வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது. தடையில்லா சான்று கோரி மனுதாரர்கள் அளித்த விண்ணப்பங்கள், 2015 ஜூன் முதல் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்கள் மீது நான்கு வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தமிழக ஆசிரியர் கல்வி பல்கலைக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த புதிதாக 4 வகை இன்சுலின் மருந்து

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு புதிதாக 4 வகை இன்சுலின் மருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. சர்க்கரை நோய், அதற்கான நவீன கிசிச்சைக்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான கருத்தரங்கம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை தொடங்கியது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் எம்.வைரமுத்துராஜன் கருத்தரங்கைத் தொடக்கிவைத்து பேசியதாவது: 

இந்தியாவில் சுமார் 15 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்து மாத்திரைகள் மூலம் 30 சதவீதம் மட்டுமே சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். உணவு, உடல்பயிற்சி, மன அமைதி ஆகியவற்றினால் 70 சதவீத நோயைக் குணப்படுத்த முடியும் என்றார். 


ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி டீன் வடிவேல் முருகன், கரூர் டீன் ரேவதி கயிலைநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். அப்போது, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு இன்சுலின் ஊசிக்கு பதிலாக மாத்திரைகளை பரிந்துரை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாள்தோறும் இன்சுலின் ஊசி போடுவதற்கு பதிலாக, வாரத்துக்கு ஒரு முறை டெக்லியூடெக் என்ற மருந்து பயன்படுத்துவது குறித்து நடைபெற்று வரும் ஆய்வுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

புதிதாக கண்டறியப்பட்டுள்ள 4 வகை இன்சுலின் மருந்து குறித்தும், அதைப் பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கான பாதுகாப்பு குறித்தும் மதுரை சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் வி.குமரவேல் விளக்கம் அளித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 320 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு அறிவிப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் 1ல் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, சி.பி.எஸ்.இ., வாரியம், நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 1ல் தேர்வு துவங்கி, 28ல் முடிகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 1 முதல் ஏப்., 22 வரை தேர்வு நடக்கும்.
* பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 'டைனமிக் ரீடெய்ல்' மற்றும் இந்திய சுற்றுலா, பாதுகாப்பு உள்ளிட்ட, 10 விருப்ப பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. முக்கிய தேர்வு, மார்ச் 2ல் துவங்க உள்ளது
* மார்ச் 2 - அறிவியல், 8 - தமிழ், இந்தி, 10 - சமூக அறிவியல், மார்ச் 15 - ஆங்கில பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது
* பிளஸ் 2 தேர்வு - மார்ச் 1ல் ஆங்கிலம், 5 - இயற்பியல், 8 - வரலாறு, 9 - வேதியியல், 11 - ஹிந்தி, தமிழ், 14 - கணிதம், ஹெல்த் கேர், 17 - கணித பதிவியல், 18 - அரசியல் அறிவியல், நிதி கணக்கியல், 19ல் வேளாண்மை, வங்கியியல்.
மார்ச் 26ல் கணினி அறிவியல், மார்ச் 31 - பொருளியல், ஏப்., 1 - சட்டப் படிப்பு, ஏப்., 4 - சமூகவியல் என, முக்கிய பாடங்களுக்கும் தேர்வு நடக்க உள்ளது.

இந்த ஆண்டு, 14 லட்சம் மாணவர்கள், சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வை எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தில் ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தில் ஆலோசகர் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி:Consultant-Enterprise Development

சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000

தகுதி: Business Administration,Management, Economics, Social Work,Agri & Allied பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை பட்டயம் பெற்றிருக்கவேண்டும்.

பணி:Consultant-Value Chain Development (Farm)

சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000

தகுதி:Business Administration, Management, Economics, Social Work, Agri & Allied பாடங்களில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:Consultant-Value Chain Development (Non Farm)

சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000

பணி:Consultant-Banking and Finance

சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000

பணி:Young Professionals

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 50,000

பணி:Consultant-Private Sector Interface (Skills and Livelihoods)

பணி:Consultant-Youth Skill Employment

பணி:State Consultant-Skill Training & Placement

தகுதி:Business Administration/ Management/ Economics/ Finance/Banking அல்லது சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:45க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:www.sids-co.in/tnpvp என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sids-co.in/tnpvp என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இணை பேராசிரியர் பணி

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 37 பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 37
பணி: பேராசிரியர், இணை பேராசிரியர்உயர்கல்வித்துறையின் கடித எண் 2(டி) எண் 58 நாள் 19.4.2002ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஒரு துறையின் ஒவ்வொரு பணிநிலையும் தனித்தனி பிரிவாக கருதியும், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை எண் 206 நாள் 6.11.2008-இன் படியும், இடஒதுக்கீடு மற்றும் இனவாரி சுழற்சி முறை பின்பற்றப்பட்டுள்ளது.தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான அருந்ததியர் பணியிடம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை எண் 65 நாள் 27.5.2009-இன் படி ஒதுக்கீடு ́செய்யப்பட்டுள்ளது. அருந்ததியரில் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில் பிற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இப்பணியிடங்களுக்கு கருதப்படுவர்.விண்ணப்பப் படிவம், PBAS படிவம், கல்வித்தகுதிகள் மற்றும் சிறப்புக் கல்வித்தகுதிகளைப் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து (www.tamiluniversity.ac.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கல்வித்தகுதி மற்றும் அனுபவம் தொடர்பான விவரங்களுக்கு பல்கலைக்கழக நல்கைக்குழு இணைய தளத்தினை (www.ugc.ac.in) பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.500/- க்கான (தாழ்த்தப்பட்ட வகுப்பு எனில் ரூ.300/-) வரைவோலை “பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்” என்ற பெயரில் எடுக்கப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் அதன் இணைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.1.2016. ஏற்கனவே பணியில் உள்ளோர் பணியாற்றும் நிறுவனம் வழி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.கல்விநிலைப் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக ஏற்கெனவே பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் ந.க.எண் அ1/2609/2012 நாள் 12.8.2013 மற்றும் ந.க.எண் அ1/2609/2012 நாள்:19.12.2013 ஆகியனதிரும்ப பெறப்ப ́கிறது. செலுத்தப்பட்ட விண்ணப்பக்கட்டணம் உரியவர்களுக்கு மீள அளிக்கப்படும்.

குறிப்பு:நேர்காணலில் மேற்குறித்த அவ்வவ் பதவிகளுக்கான தகுதி நிலையில் விண்ணப்பதாரர்கள் முழுநிறைவு அளிக்காத நிலையில் அவ்வவ் பதவிகளுக்குக்கீழ்நிலையில் உள்ள பதவிகளுக்கே நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கருதப்படுவார்கள்.மேற்குறிப்பிடப்பட்ட பணியிடங்களை நிரப்புவது அல்லது நிரப்பாமல் இருப்பதற்கான உரிமை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு உள்ளது.ஒரு பதிவிக்கும் கூடுதலாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் தனித்தனியே விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.

மேலும் கல்வித்தகுதி, தேர்வு முறைகள் முழுமையான விவரங்கள் அறிய
 http://www.tamiluniversity.ac.in/tamil/wp-content/uploads/2016/01/application-form.pdf

பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர், துணைநிலை அலுவலர்கள் நேர்முகத் தேர்வு ரத்து: நிதி அமைச்சகம் உத்தரவு

எழுத்தர், துணைநிலை அலுவலர்கள் பணியிட நேர்முகத் தேர்வை ரத்து செய்யும்படி பொதுத் துறை வங்கிகளுக்கு நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், மத்திய அரசுத் துறைகளில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு நிலையிலான பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:மத்திய நிதியமைச்சக செயலர் தலைமையில், செயலர்கள் நிலையிலான கூட்டம் கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது.


இக்கூட்டத்தில், பொதுத்துறை வங்கிகளில் கீழ்நிலை அளவிலான பணியிடங்களுக்கு நடத்தப்படும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.அதன்படி, எழுத்தர், துணை நிலை அலுவலர்கள் நிலையிலான பணியிடங்களுக்கு நடத்தப்படும் நேர்முகத் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி,பொதுத் துறை வங்கிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.அதற்குப் பதிலாக, சைக்கோ மெட்ரிக் தேர்வு உள்ளிட்டவற்றைச் சேர்த்து எழுத்துத்தேர்வை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராயும்படி பொதுத்துறை வங்கிகள் அறிவுறுத்தபடுகின்றன என்று அந்த சுற்றறிக்கையில் மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.


முன்னதாக, மத்தியப் பணியாளர் நலன், பயிற்சித்துறை அண்மையில் வெளியிட்டஅறிவிப்பில், நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்ட போதிலும், திறனறித் தேர்வு அல்லது உடல் தகுதித் தேர்வு தொடர்ந்து நடத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது. குறிப்பிட்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்துவது அவசியம் என்று சம்பந்தப்பட்ட துறை விரும்பும்பட்சத்தில், அதுகுறித்து மத்திய பணியாளர் நலன், பயிற்சித் துறைக்கு விரிவாக அறிக்கை அனுப்பி அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு அட்டவணை தயார்?

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். மழை, வெள்ள பாதிப்பு காரணமாக, பாடம் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும், சட்டசபைக்கு தேர்தல் வருவதால், பொதுத் தேர்வை தாமதப்படுத்த முடியாமல், தேர்வுத் துறை குழப்பம் அடைந்தது.

இந்நிலையில், மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2 தேர்வை துவக்க அனுமதி கேட்டு, தேர்வுத் துறை சார்பில், முதல்வர் அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் ஒப்புதல் கிடைத்து, அதிகாரப்பூர்வமாக தேர்வு தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2, மார்ச், 22ல் பத்தாம் வகுப்புக்கும் தேர்வு துவங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

16,500 ஆசிரியருக்கு போனஸ் இல்லை?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது. இதில், ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள், 12 லட்சம் பேர் பயனடைவர்; அதற்காக, 326 கோடி ரூபாய் செலவாகும் என, அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இந்த பட்டியலில், அரசு பள்ளிகளில் பணி புரியும், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் இடம் பெறவில்லை; இந்த ஆண்டும் சிறப்பாசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.இத்தகவலை, கலை ஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார் கூறியுள்ளார்.

சிமேட்' தேர்வு: இன்று ஹால் டிக்கெட்

மேலாண்மை படிப்புக்கான, 'சிமேட்' தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது.மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளில் சேர, சிமேட் எனப்படும், பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 

இதை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நடத்துகிறது. வரும், 17ம் தேதி, இந்த தேர்வு, நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை உட்பட, 62 இடங்களில் நடக்க உள்ளது; இதற்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறுபான்மையின மாணவர்களும் தமிழை முதல் பாடமாக கொண்டு எழுதவேண்டும்; தமிழக அரசு உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறுபான்மையின மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்களும் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு எழுத வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா சிறுபான்மையின மாணவர்களுக்காக வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-


கற்றல் சட்டம்
தமிழ்மொழி கற்றல் சட்டம் 2006-ல் குறிப்பிட்ட வழிமுறையின்படி அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறுபான்மை மொழிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதி 1-ல் தமிழ் மொழியை தொடக்கப்பள்ளிகளில் 2006-ம் ஆண்டு முதல் 1-வது வகுப்பில் அறிமுகப்படுத்தவேண்டும். 

அதன்படி படித்த அந்தமாணவர்கள் இப்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத உள்ளனர்.

சிறுபான்மை மொழியில் படிக்கலாம்
இது குறித்து அனைத்து ஆய்வு அதிகாரிகளுக்கும் பலதடவை சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பகுதி 2-ல் ஆங்கில பாடத்தையும், பகுதி 3-ல் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை சிறுபான்மை மொழியிலும் படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது 2015-2016 கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் பகுதி 1-ல் தமிழ்ப்பாடம் எழுதுவதில் இருந்து தவிர்ப்பு பெறக்கோரி மாணவர் ஒருவர் மனுகொடுத்துள்ளார். அந்த மனு கவனமுடன் பரிசீலிக்கப்பட்டது.

தமிழ் பாடப்புத்தகம் வினியோகம்
அந்த மாணவர் படிக்கும் சென்னையில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு பகுதி 1-ல் தமிழ்ப்பாடம் கற்பிக்க ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் பாடப்புத்தகம் வினியோகிக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் தமிழ்ப்பாடம் போதிக்க முறையான தமிழ்ப்பாட பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டு தமிழ்ப்பாடம் போதிக்கப்பட்டு வந்துள்ளது. முறையாக தேர்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு குறிப்பிட்ட மாணவருக்கு தேர்ச்சி அறிக்கை பள்ளியில் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கஇயலாது 
எனவே 2015-1016 கல்விஆண்டில் 10-வது வகுப்பு தேர்வில் பகுதி 1-ல் தமிழ்ப்பாடம் எழுதுவதில் இருந்து தவிர்ப்பு வழங்குவது சார்ந்த கோரிக்கையினை ஏற்க இயலாது. 

இவ்வாறு த.சபீதா உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் சிறுபான்மையின மாணவர்களும் தமிழை முதல் பாடமாக வைத்து எழுதவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

3/1/16

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு பொங்கல் பண்டிகையையொட்டி, சி மற்றும் டி பிரிவு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, போனஸ் அறிவி்ததுள்ளார். "ஏ" மற்றும் "பி" பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் - ரூ.1000/- "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் - ரூ.3000/- ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500/- வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.326.85 கோடி செலவாகும் என அரசு அறிவித்துள்ளது.


பேராசிரியர் நியமன விதிமீறல் யு.ஜி.சி., எச்சரிக்கையால் மாணவர்கள் அச்சம்

விதியை மீறிய பேராசிரியர் நியமனத்தை பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., அங்கீகரிக்காது' என, பல்கலைகள் எச்சரிக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கீகாரம் இல்லாத பாடப்பிரிவுகளின் சான்றிதழ் செல்லுபடியாகுமா என, மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஒவ்வொரு பல்கலையிலும், யு.ஜி.சி., மூலம், கல்வி நிறுவனத்துக்கும், பாடப்பிரிவுகள், உள் கட்டமைப்பு மற்றும் பேராசிரியர் நியமனங்களுக்கு ஒப்புதல் பெற வேண்டும். யு.ஜி.சி., விதிகளின் படி, பேராசிரியர்களை நியமிக்க போட்டி தேர்வு வைக்க வேண்டும். அல்லது பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும்.இதன்பின், ஆசிரியர்களின் விவரங்களை யு.ஜி.சி.,க்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். அதன் பிறகே குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், தமிழகத்தில், 10க்கும் மேற்பட்ட பல்கலைகளுக்குட்பட்ட கல்லுாரிகளில் ஆசிரியர் நியமனத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
திருவள்ளுவர் பல்கலையில், பேராசிரியர் நியமனத்தில் நடந்த விதிமீறல் புகார் குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு 
தொடரப்பட்டது. அதற்கு பதில் மனு தாக்கல் செய்த யு.ஜி.சி., 'திருவள்ளுவர் பல்கலையின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லுாரிகளில், மொத்தமுள்ள, 4,240 ஆசிரியர்களில், 1,970 பேருக்கு மட்டுமே, யு.ஜி.சி.,யின் அனுமதி பெறப்பட்டுள்ளது. 
'மற்றவர்களை விதிகளின் படி நியமிக்காத நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுத்து, பல்கலையில் இருந்து அறிக்கை தர வேண்டும்' என, தெரிவித்தது. நீதிமன்றமும் இதே உத்தரவை பிறப்பித்தது.
ஆனால், இதுவரை திருவள்ளுவர் பல்கலை உள்ளிட்ட பல்கலைகள் பேராசிரியர் பட்டியலை, யு.ஜி.சி.,யிடம் அளிக்காமல் இழுத்தடித்து வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. எனவே, மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடப்பிரிவுக்கு யு.ஜி.சி., அனுமதி உள்ளதா என அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, யு.ஜி.சி., தலைவர் தேவராஜ் கூறும் போது, ''பேராசிரியர் நியமனம் தொடர்பாக, யு.ஜி.சி.,யிடம் பல்கலைகள் அனுமதி வாங்குவது கட்டாயம். அதில் சலுகைக்கு இடமில்லை. ''எந்தெந்த கல்லுாரிகளில் விதிகளை மீறி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர் என்ற விவரங்களை, யு.ஜி.சி., சேகரித்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

தனியார் வசம் செல்கிறது பள்ளி கழிப்பறை சுத்தம்

உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் உள்ள, 35 ஆயிரம் அரசு பள்ளிகளின், கழிப்பறை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு, 57 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பின் பராமரிப்பில், 27 ஆயிரத்து, 700 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள்; கல்வித் துறையின் கீழ், 7,247 பள்ளிகள் என மொத்தம், 34 ஆயிரத்து, 947 பள்ளிகள் உள்ளன. 

பற்றாக்குறைஉள்ளாட்சி அமைப்புக்களில் உள்ள துப்புரவு பணியாளர்களே இப்பள்ளிகளின், கழிப்பறைகளை சுத்தம் செய்கின்றனர்.'உள்ளாட்சி அமைப்பில் உள்ள, 24 ஆயிரத்து, 928 முழுநேர துப்புரவு பணியாளர்கள், பிற துப்புரவு பணிகளுக்கு மத்தியில், பள்ளிக் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள முடியாமல்உள்ளனர். எனவே, பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய, தனியாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்' என, திடக்கழிவு மேலாண்மை மற்றும் துாய்மை இந்தியா திட்ட விதிகள் வலியுறுத்துகின்றன.
இதை தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புக்களின் பராமரிப்பில் உள்ள பள்ளிகளுக்கு, துப்புரவு பணியாளர்களை நியமிப்பது குறித்து, தமிழக அரசின், 
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை வெளியிட்டுள்ள உத்தரவு:
பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியை, தனியார் முகமைகளிடம் ஒப்படைக்கலாம். அல்லது, முழுநேரம் மற்றும் பகுதி நேர துப்புரவு பணியாளர்களை உள்ளாட்சி அமைப்புகள் நியமிக்கலாம்.
பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய தேவைப்படும் துப்புரவுப் பணியாளர் எண்ணிக்கையை, உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்யலாம். துப்புரவு பணியாளர் வருகை பதிவேட்டை, பள்ளி தலைமை ஆசிரியர் பராமரிக்க வேண்டும். கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்களை, உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டும்.சுகாதார உத்தரவாதம்இதற்கான செலவை, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள், திடக் கழிவு மேலாண்மை திட்ட நிதியில் இருந்தும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கல்வி வரி மூலமும் ஈடுகட்டலாம். 2015 - 16ல், 
கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கான பொருட்கள் வாங்க, 17 கோடி ரூபாயும், துப்புரவுப் பணியாளர் ஊதியத்துக்காக, 40 கோடி ரூபாயும் என ஒதுக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.இதுகுறித்து, உள்ளாட்சி துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளி கழிப்பறைகளை துாய்மையாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். பல நேரங்களில், பள்ளி கழிப்பறைகளிலிருந்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. உள்ளாட்சி அமைப்பில் போதிய, துப்புரவுப் பணியாளர் இல்லாத நிலையில், துாய்மைப் பணியை தனியாரிடம் அளிக்க அரசு முன் வந்துள்ளது. இத்திட்டம் மூலம், குழந்தைகளின் சுகாதாரம் பாதுகாக்கப்படும். உள்ளூர் துப்புரவுப் பணியாளர்களுக்கும் வேலை கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

சத்துணவு ஊழியர் பிரச்னை தீரவில்லை உணவு வழங்குவதை நிறுத்த முடிவு

ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டத்தில் 23 சத்துணவு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெறாததால், தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 மாதங்களில் 23 சத்துணவு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதன்பின் சிலரது 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டு இடமாறுதல் செய்யப்பட்டனர்.
இதையடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளரை (சத்துணவு) இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட ஊழியர்கள் டிச., 14 ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.பின் நிர்வாகிகளுடன் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சத்துணவு ஊழியர்கள் மீதான நடவடிக்கை டிச., 28 க்குள் ரத்து செய்யப்படும் என, உறுதியளிக்கப்பட்டது. இதுவரை உறுதியளித்தப்படி கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட சத்துணவு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
சத்துணவு ஊழியர் சங்க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஏ.முருகேசன் கூறியதாவது: நான்கு பேருக்கு 'சஸ்பெண்ட்' உத்தரவும், 17 பேரின் இடமாறுதல் உத்தரவும் ரத்து செய்யப்படவில்லை. ஜன., 8 ல் திருப்பூரில் நடக்கும் மாநில மாநாட்டிற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இல்லாவிட்டால் மாநாட்டில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்தும் போராட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படும், என்றார்

சத்துணவு ஊழியர் சங்கம் ஜெ., மீது குற்றச்சாட்டு

தேனி:கடந்த சட்டசபை தேர்தலில் எங்களிடம் ஆதரவு கேட்ட முதல்வர் ஜெ., தற்போது கோரிக்கை தொடர்பாக சங்க பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கிறார்என, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத்துணைத் தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.
தேனியில் அவர் கூறியதாவது: வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் ஓய்வூதிய திட்டம் கோரி போராட வேண்டிய கட்டத்தில் உள்ளோம். எங்களின் கோரிக்கைகளை மாறி,மாறி வரும் இரு அரசுகளும் நிறைவேற்ற மறுக்கின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி,
குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.3, 050 வழங்க வேண்டும். 33 ஆண்டுகளில் சத்துணவு ஊழியர்களில் 40 ஆயிரம்பேர் வரை ஓய்வு பெற்றுள்ளனர். இன்னும் மூன்று ஆண்டுகளில் 60 சதவீதம் பேர் ஓய்வு பெற உள்ளனர். பணியாளர்களுக்கு ஒட்டு மொத்த
ஓய்வூதிய பலனாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரி வருகிறோம்.'2011 சட்டசபை தேர்தலில் மக்கள் பிரச்னை தீர, புதிய ஆட்சி அமைய அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு வழங்குங்கள்,' எனக்கேட்டு எங்கள் சங்கத்திற்கு முதல்வர் ஜெ.,கடிதம் வழங்கினார். ஆனால் எங்களின் கோரிக்கை நிறைவேற்ற சங்க பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கிறார். ஜன., 22ல் அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் முதல்வரை சந்திக்கும் பெருந்திரள் முறையீட்டில் நாங்களும் பங்கேற்போம்,”என்றார்.

சி.பி.எஸ்.இ., தேர்வு தேதிகள் அறிவிப்பு

புதுடில்லி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ., தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு மார்ச்1ம் தேதி துவங்கி மார்ச் 28ம் தேதி முடிவடைகிறது. சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி ஏப்ரல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது

செய்முறை தேர்வை ஒத்தி வைத்தால் தேர்ச்சி அதிகரிக்கும்

பிளஸ் 2 தேர்வு முடிந்த பின், விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு, 15 நாள் வரை ஆசிரியர்களுக்கு இடைவெளி கிடைக்கிறது. அந்த இடைவெளியில், நடப்பு கல்வியாண்டுக்கான செய்முறை தேர்வை ஒத்தி வைக்கும் பட்சத்தில், தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் 
தெரிவித்தனர்.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். அதற்கு முன்னதாக, பிப்ரவரி முதல்வாரத்தில் துவங்கி, நான்காவது வாரம் வரை, செய்முறை தேர்வு நடத்தப்படும்.

நடப்பு கல்வியாண்டில், அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், 'ரிவிஷன்' செய்வதற்கான கால அவகாசம் மாணவர்களுக்கு இல்லை. இதனால், அரசு பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறையும் என ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
நன்மைகள் பிளஸ் 2 வகுப்பின் முதன்மை தேர்வுகள், மார்ச், 23 தேதிக்குள் முடிந்துவிடுகின்றன. அதன் பின், முதுநிலை ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் மதிப்பீட்டு முகாம், ஏப்ரல் மூன்றாம் வாரத்தில்தான் 
நடத்தப்படுகிறது. இந்த இடைவெளியில், பிளஸ் 2 செய்முறை தேர்வுகளை நடத்துவதன் மூலம், மாணவர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதுடன், தேர்ச்சி விகிதமும் 
அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:பதற்றம் பொதுத்தேர்வுக்கு தயராகும் பதற்றத்தில் மாணவன் உள்ள சமயத்தில் செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. இதனால், அவனது கவனம் இரண்டும் கெட்டானாய் அலைபாயும். அதிலும், நடப்பு கல்வியாண்டில், ரிவிஷன் செய்ய நேரம் இல்லாததால், செய்முறை தேர்வின் போது, பதற்றம் அதிகரிக்கும்.
இதை தவிர்க்க, எழுத்துத்தேர்வு முடிந்த பின், மார்ச் 25ம் தேதி முதல், ஏப்ரல், 10ம் தேதி வரை செய்முறை தேர்வு நடத்தலாம். இதன் மூலம், பிப்ரவரி மாதம் முழுவதும் ரிவிஷன் செய்ய முடியும். மேலும் செய்முறை தேர்வு மதிப்பெண் குறைத்துவிடுவர் என்ற பயத்தில், மாணவர்கள், சிறப்பு வகுப்புகளுக்கும், ரிவிஷன் வகுப்புகளுக்கும் தவறாமல் வர வாய்ப்புள்ளது. 
விடைத்தாள் மதிப்பீட்டு முகாமுக்கு, 15 நாள் இடைவெளி உள்ளதால், அப்பணிகளும் செய்முறை தேர்வினை ஒத்தி வைப்பதால் பாதிக்கப்படாது. செய்முறை தேர்வினை, பொதுத்தேர்வுக்கு பின் நடத்துவதால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கண்டிப்பாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். 

முன்அனுமதி பெறாத ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க முடிவு

ராமநாதபுரம்: முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கு தகுந்தாற்போல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர்கள், இளநிலை (பி.ஏ.,- பி.எஸ்சி.,) பட்டத்துடன் பி.எட்., முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும். முதுநிலை பட்டம் (எம்.ஏ.,- எம்.எஸ்.சி.,) முடித்தால் 2 வது ஊக்க உயர்வு வழங்கப்படும்.
அதேபோல் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டம் (எம்.ஏ.,- எம்.எஸ்சி.,) முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்.எட்., முடித்தால் 2 வது ஊக்க உயர்வும் வழங்கப்படும். உயர்க்கல்வி பயில ஆசிரியர்கள் கல்வித்துறையில் முன் அனுமதி பெறவேண்டும். ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமலேயே உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு கேட்டு விண்ணப்பித்தனர்.

முன்அனுமதி இல்லாத தால் ஊக்க ஊதிய உயர்வு வழங்க மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மறுத்தனர். ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முன்அனுமதி பெறாமல் உயர்க்கல்வி முடித்த ஆசிரியர்களின் பட்டியலை தொடக்கக் கல்வித்துறை கோரியுள்ளது. 
இந்த பட்டியலை பெயர் விடுதலின்றி ஜன., 12 க்குள் அனுப்பி வைக்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு கற்றல் கையேடு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தேர்வுக்கு தயாராகும் வகையில் கற்றல் கையேடு வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் ஆர்எம்ஜெயின் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியை மேரி அந்தோணி தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் மோகன சந்திரன், மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சீதாலட்சுமி பங்கேற்று 10, 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பொதுத் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் கற்றல் கையேட்டை வழங்கிப் பேசியதாவது:

தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்கள் தைரியமாக பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் இந்த கற்றல் கையேடு வழங்கப்படுகிறது. மாணவர்கள் இந்தக் கையேட்டை முழுமையாகப் படித்து தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் பள்ளிகளின் துணை ஆய்வாளர் ராமமூர்த்தி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.கே.சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புத்தாண்டு விடுப்பு: ஊதியக் குழு பரிந்துரைத்த பலன் கிடைக்குமா?

புத்தாண்டு அன்று விடுப்பு எடுத்த மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்த பலன்கள் கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அன்று பணிக்கு வருபவர்களுக்கு மட்டுமே அக்குழு அளித்த ஊதிய உயர்வின் பலன்கள் கிடைக்கப்பெறும் என்றும் மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஒருவேளை புத்தாண்டு அன்று பணிக்கு வர ஊழியர்கள் தவறும் பட்சத்தில் அன்றிலிருந்து அவர்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் தள்ளிப்போகலாம்.

முன்னதாக, துணை ராணுவப் படையும் தங்களது அதிகாரிகளிடம், புத்தாண்டு தினத்தில்

விடுப்பு எடுத்தால், மீண்டும் பணியில் சேரும் நாளில் இருந்தே ஊதிய உயர்வின் பலன்கள் கிடைக்கப்பெறும் என்று தெரிவித்திருந்தது

புதிய ஓய்வூதிய திட்டம் கிளம்பும் புது பூதம் - என் சம்பளத்தில் பிடித்தம் செய்த பணம் எங்கே போச்சு?

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் : முதல்வர் அறிவிப்பு

சென்னை : பொங்கல் பண்டிகையையொட்டி, சி மற்றும் டி பிரிவு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, போனஸ் அறிவி்ததுள்ளார்.