யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/9/16

இந்த மாதம் தொழில் வரி !

ஆறுமாத வருமான அடிப்படையில் இந்த தொழில் வரி ஏப்ரல் முதல்  செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல்  மார்ச் வரை மாநில அரசுக்கு செலுத்தப்படுகிறது. இது மத்திய 
அரசுக்கு செலுத்தும் வருமான வரியில் கழித்தம் செய்யப்படும். இவ்வரியினை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் செலுத்த வேண்டியதில்லை ( அரசாணை 2726/(நிதி) நாள் 01.11.1994: தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியிடு நாள் :25.06.1992.).

உண்மைத்தன்மை சான்றிதழுக்கு இழுத்தடிக்கும் காமராஜ் பல்கலை : விரக்தியில் ஆசிரியர்கள்

மதுரை காமராஜ் பல்கலையில், கல்லுாரி ஆசிரியர்கள் பட்டச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை (ஜெனுானஸ்) சான்று வழங்குவதில் இழுத்தடிக்கப்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு கல்லுாரிகளில் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், தங்கள் கல்வித் தகுதிக்கான பட்டச் சான்றுகளை கல்லுரிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இதன்பின், சம்பந்தப்பட்ட பல்கலைக்கு அச்சான்றுகள் அனுப்பி வைக்கப்பட்டு, அவற்றின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்படும்.சான்றிதழ்களை அனுப்பி வைக்கும்போது, சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வர் சார்பில் அதற்கான கட்டணமும் காசோலையாக அனுப்பி வைக்கப்படும். அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் உண்மைத்தன்மைக்கான சான்று சம்பந்தப்பட்ட கல்லுாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் மதுரை காமராஜ் பல்கலையில், இப்பணிகள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என கல்லுாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து சிவகங்கை அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:இக்கல்லுாரியில் பணியாற்றும் 43 பேரின் இளங்கலை, முதுகலை, எம்.பில்., பி.எச்டி., பட்டச் சான்றுகள் உண்மை தன்மைக்காக காமராஜ் பல்கலைக்கு 30.9.2015ல் அனுப்பி வைக்கப்பட்டது. உடன் 64,500 ரூபாய்க்கான காசோலையும் இணைக்கப்பட்டது. ஆனால் இதுவரை யாருக்கும் சான்றிதழ் அனுப்பி வைக்கவில்லை.

ஆனால் இதே கல்லுாரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, பாரதிதாசன் போன்ற பல்கலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடன் அதற்கான உண்மை தன்மை சான்று கிடைத்து விட்டது.ஆனால் காமராஜ் பல்கலையில் மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை. சான்றிதழ் பிரிவில் கேட்டால் 'அதுபோன்ற சான்றிதழ்களே வரவில்லை,' என பதில் கூறுகின்றனர். ஆனால்அரசியல், அதிகாரிகள் சிபாரிசில் சில ஆசிரியர்களுக்கு மட்டும் உண்மை தன்மை சான்று அளிக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம். பல்கலை பதிவாளர் இப்பிரச்னை குறித்து விசாரித்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

TNPSC:குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் ஆறரை லட்சம் பேர் விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்.8 கடைசி நாள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண் ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

5,451 காலியிடங்கள்

தமிழக அரசின் பல்வேறு துறை களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டிருந்தது. இதற்கான ஆன்லைன் விண்ணப் பம் கடந்த ஆகஸ்டு 9-ம் தேதி தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி, 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரி வித்தார்.ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும். இன்னும் 8 நாள்கள் காலஅவகாசம் இருப்பதால் சுமார் 11 லட்சம் பேர் விண்ணப்பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வுக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணச் சலுகை

குரூப்-4 தேர்வுக்கு கட்டணமாக ரூ.75 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிரந்தரப் பதிவுக்கென ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தைப் பொருத்த வரையில், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் தேர்வுக் கட்டணம்ஏதும் செலுத்தத் தேவையில்லை. பிசி, பிசி (முஸ்லிம்) எம்பிசி, டிஎன்சி வகுப்பினர் பட்டதாரியாக இருப்பின் 3 முறை மட்டும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

நவம்பர் 6-ம் தேதி

3 முறை தேர்வுக் கட்டணச் சலுகையை அனுபவித்தவர்கள் அதன்பிறகு கண்டிப்பாக தேர்வுக் கட்டணம் செலுத்தித்தான்தேர் வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 3 முறை என்ற நிபந்தனையைத் தாண்டி தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பித்து ஒருவேளை பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அத்தகைய விண்ணப்பதாரர்கள் பிரச்சி னையை எதிர்கொள்ள நேரிடும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். எனவே, கட்டணச்சலுகை வாய்ப்பு பெற்றிருப்பவர்கள், எத்தனை முறை கட்டணச்சலுகையை பயன் படுத்தியுள்ளோம் என்பதை உறுதி செய்துவிட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.

அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் தொந்தரவு: மாறுதல் கேட்டு ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மனு.

சேலம், ராமிரெட்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தொந்தரவு கொடுப்பதால், தங்களை பணிமாறுதல் செய்யும்படி, அங்கு பணிபுரியும் ஒட்டுமொத்த ஆசிரியர்கள், கோரிக்கை மனு அளித்துள்ளனர்.சேலம், ராமிரெட்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன். 
அந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு பணிபுரியும், ஒன்பது பட்டதாரி ஆசிரியர்கள், தங்களை வேறுபள்ளிக்கு மாறுதல் செய்யும்படி, மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலரை சந்தித்து, புகார் மனு அளித்தனர்.இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: ராமிரெட்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். அவருக்கு பிடிக்கவில்லை எனில், அவர்களை பள்ளியை விட்டு, அனுப்பும் வரை ஓய்வதில்லை. அதற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, மாணவியரிடம்எழுதி வாங்கி வைத்துக்கொண்டு, மிரட்டல் விடுக்கிறார்.

ஊரில் உள்ள, சில அரசியல்வாதிகளையும், பெற்றோர் ஆசிரியர்கழகம் என்ற பெயரில், பள்ளிக்கு வரவழைத்து, ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுக்கிறார். மேலும், 'அடித்து கொன்றுவிடுவோம்' என, மிரட்டல், பாலியல் அச்சுறுத்தல், ஆசிரியர்களை, நாளுக்கு நாள் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. ஏற்கனவே, அவரது மிரட்டலுக்கு பயந்து, வேறு ஊருக்கு, பலர், மாறுதல் பெற்று சென்றுவிட்டனர். இதனால், இந்த பள்ளியில் இருந்து, வேறு பள்ளிக்கு மாறுதல் கேட்டு, ஒன்பது ஆசிரியர்கள் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் 250 அரசுப் பள்ளிகளில் மனித உரிமைமாணவர் மன்றம்: பள்ளிக் கல்வித்துறை புதிய ஏற்பாடு.

மாணவர்கள், குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைத் தெரிந்துகொள்ளும் நோக்கில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உள்ள 250 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மனித உரிமை மாணவர் மன்றங்கள் அமைக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.
குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைக் கலாச் சாரமாக வளர்த்தெடுக்கும் நோக்கில், தமிழக அரசும், மனித உரிமைக் கல்வி நிறுவனமும் இணைந்து கடந்த ஆண்டு 6 மாவட்டங்களில் உள்ள 120 அரசுப் பள்ளிகளில் முதற்கட்டமாக மனித உரிமை மாணவர் மன்றங்களைப் பரிசோதனை முறையில் தொடங்கி இருந்தன.தற்போது 2015-16 கல்வியாண்டில் 15 மாவட்டங்களில் கூடுதலாக 250 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்மனித உரிமைக் கல்வி மற்றும் மனித உரிமை மாணவர் மன்றங்களைத் தொடங்க பள்ளிக்கல்வி இயக்குநர் அனுமதி வழங்கி உள்ளார்.

இதுகுறித்து மனித உரிமைக் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் கூறியதாவது: நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்றால் மனித உரிமை கல்வி அவசியம். வசதியானவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அதனால், தற்போது பரம ஏழைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தரமானவர்கள். அவர்கள் வழங்கும் கல்வியும் தரமானதே. ஏதாவது ஒரு கல்வியாளர், கல்வியில் நிபுணத்துவம் பெற்றவர்கள், தனியார் பள்ளிகள் நடத்துவோர் ஒரு காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள், ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்களாகவே உள்ளனர்.தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சரியான கல்வி கொடுத்து, அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதும், மாணவர்களைத் தக்கவைப்பதும் ஆசிரியர்களுக்குச் சவாலாகவேஇருக்கிறது. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலம், அறிவியல், கணிதம் சார்ந்த கல்விகள், தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மாணவர்கள் ஓய்வில்லாமல் பெற்றோர், ஆசிரியர்கள் ஆசையை நிறைவேற்றும் இயந்திரமாக மாறிவிட்டனர். அதனால், குழந்தைகளின் கனவுகள் நிறைவேறும் இடமாக தற்போது பள்ளிகள் இல்லை. நேசிக்க வேண்டிய ஆசிரியர்களையே மாணவர்கள் எதிரிகளாகப் பார்க்கும் நிலை உள்ளது.

இப்பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து மாணவர்கள்,ஆசிரியர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தி கல்வி, ஒழுக்கத்தில் மாணவர்களைச் சிறந்தவர்களாக் கவும், அவர்களுக்கான மனித உரிமைகளை அறிந்துகொள்ளவும் இந்த மனித உரிமை மாணவர் மன்றம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சமத்துவம், தங்கள் உரிமைகளை அறிதல், மற்றவர்களை அறிதல், ஒற்றுமை, பாலினம் போன்றவற்றை அறியும் வாய்ப்பை பெறுகின்றனர் என்றார்.சமத்துவம், தங்கள் உரிமைகளை அறிதல், மற்றவர்களை அறிதல், ஒற்றுமை, பாலினம் போன்றவற்றை அறியும் வாய்ப்பை பெறுகின்றனர்.

முக்கிய அறிவிப்பு :பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செல்வோர் கவனத்திற்கு...

அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி  பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 04.09.2016 அன்று   மாறுதல் கோரியுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 
விண்ணப்பம் சமர்ப்பித்துள்ள ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவலரிடம் 2 மாறுதல் விண்ணப்பங்களில் 02.09.2016 மாலைக்குள்  கையொப்பம்  பெற்று மாறுதல் கோரியுள்ள மாவட்டத்தில்  04.09.2016 அன்று  கலந்தாய்வில்  கலந்துகொள்ள வேண்டும் .

Directorate of Government Examinations SSLC Supplementary Examinations, September / October 2016 Time Table

மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக உயர்வு- செய்தி அறிக்கை

1/9/16

B.Ed முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: செப்டம்பரில் 2-வது கட்ட கலந்தாய்வு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 1,777 பி.எட். இடங்களை நிரப்பு வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் தொடங் கியது.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என பாடவாரியாக மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான கல்லூரியை தேர்வுசெய்தனர். அவர்களுக்கு உடனடியாக கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.இந்நிலையில் முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முடிவடைந்தது. மொத்தமுள்ள 1,777 இடங்களில் 1,314 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 463 இடங்கள் காலியாகஉள்ளன.

இக்காலியிடங்களை நிரப்புவதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 15, 16-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான கட் ஆப் மதிப்பெண் மற்றும் காலியிட விவரங்கள் செப்டம்பர் 9-ம் தேதி இணையதளத்தில் (www.ladywillingdoniase.com) வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை எம்.எஸ். தில்லை நாயகி தெரிவித்தார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

செய்தியாளர்களிடம் பேசக் கூடாது: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பள்ளி வேலை நேரத்தில் வெளி நபர்கள் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது. 

தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் யாரும் வேலை நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவோ, பேசவோ, துறையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்கவோ கூடாது என்று திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கோ.லலிதா செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.துறையின் அனுமதியைப் பெறாமல் பள்ளி தொடர்பாகவோ, துறை தொடர்பாகவோ யாரேனும் பேட்டி அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த உத்தரவு மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும், இந்த உத்தரவைப் பின்பற்றும்படி சம்பந்தப்பட்ட உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், நீலகிரி மாவட்டம், தும்மனட்டி அரசுப் பள்ளி ஆசிரியருமான ராஜ்குமார் என்பவர் கலை, ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.அவர், ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை ஊடகங்கள் மூலமாக வெளியே கொண்டு வந்ததற்காக அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் எதிரொலியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆசிரியர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.
முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் மும்பையிஸ் நிரப்பப்பட உள்ள 33 சிறப்பு அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CRPD/SCO-IT/2016-17/08
பணி: Vice President - 03
பணி: Product Development Manager - 03
பணி: Senior Manager - 03
பணி: Manager - 04
பணி: Assistant Vice President (Servicing) - 01

பணி: Assistant Vice President (Customer Experience) -03
பணி: Assistant Vice President (B2c Market place Acquisition) - 12
பணி: Assistant Vice President (B2b Fulfillment) - 02
பணி: Assistant Vice President (B2C Fulfillment) - 02

சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,490

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்குரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரு.100. இதனை இணையதள மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:10.09.2016

மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பள்ளி வாகனம் விதிமுறை தளர்வு:தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்

பள்ளி வாகன விதிகளை தளர்த்துவது தொடர்பாக பள்ளிகளின் கருத்து கேட்பு குழுவின் பரிந்துரை மீது முடிவை தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 4 வாரம் அவகாசம் அளித்துள்ளது. 

பள்ளி வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தக்கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

10ம் வகுப்பு துணைத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் செப்டம்பர் 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

வெளியிட்ட செய்தி குறிப்பில்,

தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு (Government Examinations Service Centres) நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.


யார் விண்ணப்பிக்கலாம்?

S வகையினர்

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள், தாங்கள் தோல்வி அடைந்த பாடங்களை தேர்வு செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
அறிவியல் பாடத்தை பொறுத்தவரை செய்முறை (Practical) தேர்வில், தேர்ச்சிப் பெற்று, அறிவியல் கருத்தியல் (Theory) தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்கள் கருத்தியல் தேர்வெழுதவும், செய்முறை தேர்வில் தோல்வியுற்று, கருத்தியல் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வெழுத விண்ணப்பிக்கத் தகுதியானவர்.
SP வகையினர்

14 1/2 வயதும் பூர்த்தி அடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
மெட்ரிக்/ஆங்கிலோ இந்தியப் பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள் தற்போதுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படுவதால் அறிவியல் செய்முறைப் பயிற்சிப் பெற்றவர்கள் மட்டுமே செய்முறைத் தேர்வு உட்பட அனைத்துப் பாடங்களிலும் மீளத் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
செப்டம்பர் 2016 தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடும் முன்பு வரை அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு 80 சதவீதம் வருகையுடன் பயிற்சி பெற்றவர்கள் பயிற்சி பெற்றதற்கான சான்றுடன் அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
செய்முறைத் தேர்வெழுதுவதிலிருந்து விலக்களிப்பு பெற்றவர்களும் அறிவியல் கருத்தியல் தேர்வினை தற்போது எழுத தகுதியுடையவராவர்.


எக்காரணம் கொண்டும் அறிவியல் செய்முறைப் பயிற்சி பெறாதவர்கள் கருத்தியல் தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மொழிப்பாடம்

பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் நேரடி தனித்தேர்வர்கள் (SP வகையினர்) மொழிப்பாடம் பகுதி – Iல் தமிழ் மொழியில் மட்டுமே தேர்வெழுதிட அனுமதிக்கப்படுவர்.

ஏற்கனவே தேர்வெழுதி தோல்வியுற்றவர் (S வகையினர்) பகுதி – Iல் பிற மொழிப்பாடங்களில் (Other Language) தோல்வியுற்றிருப்பின், செப்டம்பர்/அக்டோபர் 2016 தேர்வில் அன்னார் தோல்வியுற்ற பிறமொழியில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

அரசுத் தேர்வு சேவை மையங்கள்

ஆண் தனித்தேர்வர்களும், பெண் தனித்தேர்வர்களும் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்திட கல்வி மாவட்ட வாரியாக தனித்தனியே அரசுத் தேர்வு சேவை மையங்கள் (Government Examinations Service Centres) அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

மேலும், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலர் அலுவலகங்களிலும் இவ்விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

வெளி மாநில மற்றும் வெளிநாடு வாழ் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முறை:

அரசுத் தேர்வு சேவை மையங்களில் (Government Examinations Service Centres) நேரடியாக சென்று விண்ணப்பிக்க இயலாத வெளி மாநில மற்றும் வெளிநாடு வாழ் தனித்தேர்வர்கள், செப்டம்பர்/அக்டோபர் 2016 எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இத்துறையின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் தேர்வரின் குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் மூலம் சென்னை – 6 அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (பணியாளர்) அவர்களை மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் பயின்று தமிழ் நாட்டில் செப்டம்பர்/அக்டோபர் 2016 எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இடப்பெயர்வு சான்றிதழ் (Migration Certificate) மற்றும் இணைச் சான்றிதழ் (Evaluation Certificate) பெற்று அவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அரசுத் தேர்வு சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:

கருத்தியல் தேர்வு (Theory Exams)

தேர்வுக் கட்டணம் ரூ.125/- உடன் கூடுதலாக ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/- ஐ சேர்த்து மொத்தம் ரூ.175/- பணமாக அரசுத் தேர்வு சேவை மையத்தில் செலுத்துதல் வேண்டும்.

தேர்வுக் கட்டண விலக்கு

பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு மேற்குறிப்பிட்ட தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கவிலக்களிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படும் சலுகைகள்:

தேர்வர்கள், தேர்வெழுதும் போது சொல்வதை எழுதுபவர், கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகளை பெற விரும்பினால் உரிய மருத்துவச் சான்றிதழ்களை இணைத்து தனியே ஒரு சலுகை கோரும் கடிதத்தை தமது விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்படி மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த விவரத்தினை பாடத்திட்டம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு மையம்

தனித்தேர்வர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வெழுதிட அனுமதிக்கப்படுவர்.

தேர்வுக்கூட அனுமதி சீட்டு

ஆன்லைனில் விண்ணப்பத்தினைப் பதிவு செய்த பிறகு தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application Number) பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (Admission Certificate) பதிவிறக்கம் செய்ய வேண்டும். எனவே, ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

S வகையினர்

ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுதி தேர்ச்சிப் பெற்ற பாடங்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்.
அறிவியல் பாடத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் அறிவியல் செய்முறைப் பயிற்சி முடித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளித் தலைமையாசியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும்.
SP வகையினர்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி/ஒன்பதாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு படித்தமைக்கான மாற்றுச் சான்றிதழின் சுய சான்றொப்பமிட்ட நகல் (அல்லது)
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினில் தேர்ச்சி பெற்றமைக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்
அறிவியல் பாடத்தில் அறிவியல் செய்முறைப் பயிற்சி ஏற்கனவே முடித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளித் தலைமையாசியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும்.
மெட்ரிக் /ஆங்கிலோ இந்தியன் தேர்வெழுதி தோல்வியுற்ற தேர்வர்கள் அன்னாரின் அனைத்து அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் ஒப்படைத்தல் வேண்டும்.

மேற் குறிப்பிட்டுள்ள இணைப்புகளை சமர்ப்பிக்கும் தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே  ஆன்லைன் பதிவுக்கு ஏற்றுக் கொள்ளப்படும். இணைப்புகளுடன் பெறப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் முன்னறிவிப்புமின்றி கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

சிறப்பு அனுமதி திட்டம்

மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் (Takkal) 16.09.2016 மற்றும் 17.09.2016 ஆகிய இரு தேதிகளில் ஆன்லைனில்  விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது.

10ம் வகுப்பு தனித்தேர்வு நாளை முதல் விண்ணப்ப பதிவு

சென்னை: 'பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, நாளை முதல், செப்., 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அக்., மாதம் நடக்க உள்ள, 10ம் வகுப்பு துணைத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்,
குறிப்பிட்டுள்ள சேவை மையங்களில், நேரடியாக விண்ணப்பிக்கலாம். செப்., 2 முதல், 9 வரை, விண்ணப்பங்கள் பெறப்படும். சிறப்பு அனுமதி திட்டமான, 'தட்கல்' திட்டத்தில், செப்., 16 மற்றும் 17ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்தில் தேர்வு எழுத விரும்புவோருக்கு செய்முறை பயிற்சியும், தேர்வும் அவசியம். மேலும் விபரங்களை, இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தேசிய ஆசிரியர் விருதுகள் அறிவிப்பு : சென்னையில் ஒருவர் கூட இல்லை

தமிழகத்தில், சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சென்னையில் ஒரு அரசு பள்ளி கூட இடம்பெறவில்லை. செப்., 5 ஆசிரியர் தினத்தையொட்டி, மாநில அளவில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள், பணித்திறன் அடிப்படையில், தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படுவர்.

இந்த ஆண்டு, தமிழகத்தில், 23 பேருக்கு, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பஞ்சாயத்து ஒன்றிய துவக்க பள்ளிகளை சேர்ந்த, 10 பேர் இடம்பெற்றுள்ளனர். மேலும், நீலகிரி மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் அரசு பள்ளி ஆசிரியர், அரசு பள்ளிகளை சேர்ந்த நான்கு பேர், தனியார் பள்ளிகளை சேர்ந்த, 10 பேர் என, மொத்தம், 23 பேர், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகையை கொண்ட, சென்னை மற்றும் அதையொட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஒரு அரசு பள்ளி ஆசிரியர் கூட விருதுக்கு தேர்வாகவில்லை. சென்னை மயிலாப்பூர் பி.எஸ்., பள்ளி மற்றும் தாம்பரம் சி.எஸ்.ஐ., கார்லி பள்ளி என, இரண்டு தனியார் பள்ளி ஆசிரியர்கள், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் தமிழகம் நாளை ஸ்தம்பிக்கும்? தொழிற்சங்கங்கள் பங்கேற்பதால் பஸ்கள் ஓடாது?

அகில இந்திய தொழிற்சங்கங்கள், நாளை நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில், தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்பதால், மாநிலம் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து தொழிற்சங்கள் பங்கேற்ப தால், பஸ்கள் இயக்கத்திலும் பாதிப்பு ஏற்படும்.


10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு விரைவில் புதிய தமிழ் 'சாப்ட்வேர்'

சென்னை: ''தமிழில் இலக்கண பிழையின்றி எழுத உதவும், புதிய மென்பொருள், முதல் கட்டமாக, 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும்,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

அசாம் மாநிலம், கவுகாத்தி பல்கலையில், தமிழை விருப்பப் பாடமாக பயிலும், ஆறு மாணவர்களுக்கு, 1.39 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஒன்று, மொரீஷியஸ்; அங்குள்ள தமிழர்களுக்கு, ஆண்டுதோறும், ஏழு லட்சம் ரூபாய் செலவில், தமிழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் நடக்கும் பேச்சு போட்டிகளில், முதல் மற்றும் இரண்டாம் பரிசு வழங்கப்படுகிறது; இனி, மூன்றாவது பரிசாக, 5,000 ரூபாய் வழங்கப்படும்; இதற்கு, 9.6 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும்
கம்ப்யூட்டரில், ஆங்கில மொழியில் பிழை திருத்தும் வசதி இருப்பதைப் போல், தமிழிலும், இலக்கணப் பிழையை சுட்டிக்காட்டி திருத்தும், புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது; 300 ரூபாய் விலையுடைய அது, முதல் கட்டமாக, 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசக் கூடாது: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளி வேலை நேரத்தில் வெளி நபர்கள் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது. தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் யாரும் வேலை நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவோ, பேசவோ, துறையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்கவோ கூடாது என்று திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கோ.லலிதா செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.


துறையின் அனுமதியைப் பெறாமல் பள்ளி தொடர்பாகவோ, துறை தொடர்பாகவோ யாரேனும் பேட்டி அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த உத்தரவு மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும், இந்த உத்தரவைப் பின்பற்றும்படி சம்பந்தப்பட்ட உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், நீலகிரி மாவட்டம், தும்மனட்டி அரசுப் பள்ளி ஆசிரியருமான ராஜ்குமார் என்பவர் கலை, ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

அவர், ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை ஊடகங்கள் மூலமாக வெளியே கொண்டு வந்ததற்காக அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் எதிரொலியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆசிரியர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி மாணவருக்கு தூய தமிழ் அகராதிகள்: பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்குத் தூய தமிழ் அகராதிகள் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு புதன்கிழமை பதிலளித்து அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு Online -ல் நடைபெறாது ஏன் ???ஆசிரியர் சங்கங்கள் கொதிப்பு

பள்ளிக்கல்வித் துறையில் கடந்த இரண்டு வாரமாக பதவியுயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு இணையவழியாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்று வந்தது.பட்டதாரி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆகிய பதவிகளுக்கு 03-09-2016 அன்று மாவட்டத்திற்குள்ளும் 04-09-2016 வெளி மாவட்டத்திற்கும் இணையவழி  


ஆன்லைன் கலந்தாய்வு  நடைபெறவிருந்த நிலையில் திடீரென இன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.043248/சி3/இ1/2016 நாள்:31.8.2016 -ல் குறிப்பிட்டுள்ள ஆணையின் படி ரத்து செய்து இணையம் வழி அல்லாது(Manual) ஆக நேரடியாக
கலந்துகொள்ள ஆணையிட்டதின் மர்மம் என்ன என்பது புதிராக உள்ளது.

ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடந்தால் பல ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் காலிப் பணியிடம் இல்லையென்றாலும் கூட அருகாமை மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடத்தில் தனக்கு மாறுதலைப் பெற்றுக் கொள்வார்.ஆனால் தற்போது Manual ஆக மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றால் அந்த ஆசிரியர்கள் நேரிடையாக கலந்துகொள்ள வேண்டும்.இதனால் தனது சொந்த மாவட்டத்தில் நடைபெறும் மாறுதல் கலந்தாய்வில் மட்டுமே பங்கேற்க முடியும்.

அங்கு காலிப் பணியிடம் இல்லையென்றால் வேறு வழி இல்லாமல் பழைய இடத்திலேயே பணிபுரிய வேண்டும்.இந்த வருடம் அருகாமை மாவட்டத்திற்காவது மாறுதல் பெற்றுவிடலாம் என்ற கொஞ்ச ஆறுதலான கனவும் பறிபோகும்.  காலிப் பணியிடங்களை மறைத்து பணம் பெற்றுக்கொண்டு மாறுதல் வழங்கத்தான்  இப்படி ஒரு அறிவிப்பு கடைசி நேரத்தில் வந்துள்ளது என ஆசிரியர் சங்கங்கள் கொதிக்கின்றன.

பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

செக்கானுாரணி அரசு ஐ.டி.ஐ.,யில் காலியான மின் பணியாளர் பயிற்றுநர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


18-35 வயதிற்குட்பட்ட தொழில்நுட்ப தகுதியுள்ள முன் அனுபவம் உள்ளவர்கள் செப்.,6க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதம் தொகுப்பூதியமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: முதல்வர், அரசு ஐ.டி.ஐ., செக்கானுாரணி- 625 514.

திண்டுக்கல் மாணவர்களின் ’ஹைபிரிட்’ காருக்கு அங்கீகாரம்

திண்டுக்கல், எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி மாணவர்களால் நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார், தேசிய அளவில், ஹைபிரிட் கார் தொழில் நுட்பத்திற்கான, மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.


ஆண்டுதோறும், பொறியியல் கல்லுாரிகளுக்கு இடையிலான நவீன தொழில்நுட்ப தயாரிப்பு போட்டியை இம்பீரியல் சொசைட்டி ஆப் இன்னோவேஷன் இன்ஜினியர்ஸ் என்ற அமைப்பு நடத்துகிறது. இந்தாண்டு முதற்கட்ட போட்டி ஆந்திராவில், இரண்டு வாரங்களுக்கு முன் நடந்தது. 150 முக்கிய பொறியியல் கல்லுாரிகள் பங்கேற்றன. 

அதில் பங்கேற்ற, திண்டுக்கல், எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரியின் மெக்கானிக்கல் துறை மாணவர்கள் தயாரித்த ஹை பிரிட் கார் தேசிய அளவில், மூன்றாம் இடம் பிடித்தது. இந்த கார், பெட்ரோல் மற்றும் மின்சாரம் என்ற, இரண்டு வகையான ஆற்றலில் இயங்கும் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் சிக்கனமாவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறைகிறது.

இன்ஜின் திறன், 208 சி.சி.,யும், 6.2 குதிரை சக்தி திறனும் கொண்டது. 3,600 ஆர்.பி.எம்., மற்றும் 12.9 இழுவைத்திறன் கொண்டது. மணிக்கு, 80 கி.மீ., வேகம் செல்லும். இது பந்தய கார் என்பதால், ஒருவர் மட்டுமே பயணம் செய்யலாம்.லிட்டருக்கு, 35 கி.மீ., துாரம் இயங்கும்.

பாதுகாப்பு அம்சமாக காரில் தீ பிடித்தால் உடனடியாக அணைக்கும், கில் சுவிட்ச் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆபத்தான நேரங்களில் விபத்தை தவிர்க்கலாம். எளிதாக இயக்குவதற்கு, ஆட்டோமேட்டிக் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எளிதாக காரின் வேகத்தை கட்டுப்படுத்தலாம்.

கல்லுாரியின் துறைத்தலைவர் சரவணன், குழு ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன், பிரபாகரன், விக்னேஷ் கூறியதாவது: எங்கள் கண்டுபிடிப்புக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சி. இதன்மூலம் இன்னும் பல்வேறு நவீன தொழில் நுட்பங்களை மாணவர்கள் கண்டறிய ஆர்வம் பிறக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

TNPSC GROUP 4 : 8ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் ஆன்லைன் தேர்வு

அரசு ஊழியர்களின் குறைந்த பட்சஊதியம் 42 சதவீதம் உயர்வு

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி உள்ளது. மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள்,செப்., 2ல், நாடு தழுவியவேலைநிறுத்த போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு,குறைந்தபட்சஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு அறிவித்துள்ளது. தவிர, இரு ஆண்டுகளுக்கு போனஸ் அளிப்பது குறித்தும், அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையடுத்து, வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை, அனைத்து தொழிற்சங்கங்களும் மறுபரிசீலனை செய்யும்படி, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களின் பிரச்னைகள் குறித்து ஆராய, நிதியமைச்சர் அருண் ஜெட்லிதலைமையில், அமைச்சகங்கள் இடையிலான குழு, கடந்தாண்டு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த பரிந்துரைகளின்படி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன

NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு 06.11.2016 ஞாயிற்றுக்கிழமை பதிலாக 05.11.2016 சனிக்கிழமை நடைபெறும்

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் அரசு சலுகைகள்வழங்கப்படுகிறது: காங். புகாருக்கு முதல்வர் பதில்

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேற்று ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. 
இதில், குளச்சல் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் பேசும்போது, ‘‘நாடார் பிரிவினரை மிகவும் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலிலும், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலிலும் சேர்க்க வேண்டும். இந்து தலித்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தலித்களுக்கு வழங்கப்படவில்லை. அதை வழங்க வேண்டும்’’ என்றார்.

அப்போது அவையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா, இதற்கு பதிலளித்து பேசியதாவது:மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக, சமீபத்தில் பிரதமரை சந்தித்தபோது மனு அளிக்கப்பட்டுள்ளது. மதம் மாறியவர்களுக்கு அரசு சலுகைகள் மறுக்கப்படுவதாக கூறப்படுவது தவறானது. அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகின்றன. சுயநிதி கல்வி நிறுவனங்களில் பயிலும் மதம் மாறிய கிறிஸ்தவ மாணவர்கள் கல்லூரிகளுக்கு செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் மற்றும் நிறுவன கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் பதிலளித்தார்.

மலைக் கிராம பள்ளிகளுக்கு சரிவர பணிக்குச் செல்லாத ஆசிரியர்கள்!

மலைக் கிராமங்களில் அமைந்துள்ள பள்ளிக்கு ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் சரிவர செல்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மலைக் கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்களுடைய பிள்ளைகள் கல்வி கற்க நீண்ட தொலைவு செல்ல வேண்டியிருந்த காரணத்தால் அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்பச் செய்த காலம் இருந்தது. ஆனால் அவர்களது நலன் கருதி மலைக் கிராமங்களிலேயே பள்ளிகளை அரசாங்கம் தொடங்கியது. 

தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது டெல்லியில் செப்.5-ல் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.
ஆசிரியர் பணியைப் போற்றும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பதக்கம், பாராட்டுச்சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது.கடந்த 2015-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தொடக்கக்கல்வி பிரிவின் கீழ் 15 ஆசிரியர்களும், மேல்நிலைக் கல்வி பிரிவின் கீழ் 7 பேரும், சிறப்புப்பிரிவின் கீழ் ஒருவரும் என மொத்தம் 23 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

B.Ed முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: செப்டம்பரில் 2-வது கட்ட கலந்தாய்வு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 1,777 பி.எட். இடங்களை நிரப்பு வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் தொடங் கியது. 
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என பாடவாரியாக மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான கல்லூரியை தேர்வுசெய்தனர். அவர்களுக்கு உடனடியாக கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.இந்நிலையில் முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முடிவடைந்தது. மொத்தமுள்ள 1,777 இடங்களில் 1,314 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 463 இடங்கள் காலியாகஉள்ளன.

இக்காலியிடங்களை நிரப்புவதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 15, 16-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான கட் ஆப் மதிப்பெண் மற்றும் காலியிட விவரங்கள் செப்டம்பர் 9-ம் தேதி இணையதளத்தில் (www.ladywillingdoniase.com) வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை எம்.எஸ். தில்லை நாயகி தெரிவித்தார்..

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்கள் அளிக்க மறுத்த முதன்மை கல்வி அலுவலர் (CEO) மீது ஒழுங்கு நடவடிக்கை தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு!!!

பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் மும்பையிஸ் நிரப்பப்பட உள்ள 33 சிறப்பு அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CRPD/SCO-IT/2016-17/08
பணி: Vice President - 03
பணி: Product Development Manager - 03
பணி: Senior Manager - 03
பணி: Manager - 04
பணி: Assistant Vice President (Servicing) - 01
பணி: Assistant Vice President (Customer Experience) -03
பணி: Assistant Vice President (B2c Market place Acquisition) - 12
பணி: Assistant Vice President (B2b Fulfillment) - 02
பணி: Assistant Vice President (B2C Fulfillment) - 02

சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,490

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்குரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரு.100. இதனை இணையதள மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:10.09.2016

மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்

பள்ளி வாகனம் விதிமுறை தளர்வு:தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்

பள்ளி வாகன விதிகளை தளர்த்துவது தொடர்பாக பள்ளிகளின் கருத்து கேட்பு குழுவின் பரிந்துரை மீது முடிவை தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 4 வாரம் அவகாசம் அளித்துள்ளது. 
பள்ளி வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தக்கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

10ம் வகுப்பு துணைத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் செப்டம்பர் 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

வெளியிட்ட செய்தி குறிப்பில்,

தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு (Government Examinations Service Centres) நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

யார் விண்ணப்பிக்கலாம்?

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பள்ளி வேலை நேரத்தில் வெளி நபர்கள் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது. 
தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் யாரும் வேலை நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவோ, பேசவோ, துறையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்கவோ கூடாது என்று திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கோ.லலிதா செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.துறையின் அனுமதியைப் பெறாமல் பள்ளி தொடர்பாகவோ, துறை தொடர்பாகவோ யாரேனும் பேட்டி அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த உத்தரவு மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும், இந்த உத்தரவைப் பின்பற்றும்படி சம்பந்தப்பட்ட உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், நீலகிரி மாவட்டம், தும்மனட்டி அரசுப் பள்ளி ஆசிரியருமான ராஜ்குமார் என்பவர் கலை, ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.அவர், ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை ஊடகங்கள் மூலமாக வெளியே கொண்டு வந்ததற்காக அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் எதிரொலியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆசிரியர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் தொடர் உண்ணாவிரதம்


பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்தும்   தங்களது கோரிக்கையை வலியும் தொடர் உண்ணாவிரதம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு நடத்து வருகிறது. .
சென்னையிலிருந்து நேரடி தகவலுடன்
பி.இராஜலிங்கம் புளியங்குடி 

தமிழக ஆளுனர் மாற்றம்...

தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, பொறுப்பு ஆளுநர் அறிவிக்கப்பட்டுள்ளார்.தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு தமிழக ஆளுநராக ரோசய்ய பதவியேற்றுக்கொண்டார். அதையடுத்து, ரோசய்யாவின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைவதை முன்னிட்டு தமிழக ஆளுநர் பொறுப்பை வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தெலங்கானாவைச் சேர்ந்த வித்யாசாகர் ராவ் மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.இதையடுத்து, தமிழகத்துக்கு புதிய ஆளுநரை மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் நியமிக்கலாம்.பிரதமர் யாரைக் குறிப்பிடுகிறாரோ அவரைத் தான், மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் அறிவிப்பார். அந்த வகையில் குஜராத் மாநில முதல்வராக இருந்த ஆனந்திபென் பட்டேல் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் தமிழக ஆளுநர் பதவிக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவை வெளியிடவும்; அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசுக்கு வலியுறுத்த வரும் செப்டம்பர் 02 பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு


அரியலூர் மாவட்டத்தில் 37 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 37 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இது குறித்து,அரியலூர் கோட்டாட்சியர் மோகனராஜன்,உடையார்பாளையம் கோட்டாட்சியர் டீனாகுமாரி ஆகியோர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:
உடையார்பாளையம் வட்டத்தில் காலியாக உள்ள 22 பணியிடத்துக்கும்,செந்துறை வட்டத்தில் காலியாக உள்ள 5 பணியிடத்துக்கும்,அரியலூர் வட்டத்தில் காலியாக உள்ள 10பணியிடத்துக்கும்,விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறிப்பிட்ட இனத்தவர்கள் மற்றும் அந்தந்த வட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டவராகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்,அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரப்பினர் 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்,தமிழிலில் எழுத,படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒரு திருமணத்திற்கு மேல் திருமணம் செய்திருத்தல் கூடாது,குற்றவியல் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவராக இருத்தல் கூடாது,நேர்காணலுக்கு அழைக்கும் போது, நன்னடத்தைச் சான்று,உடற்தகுதிக்கான அரசு மருத்துவரிடம் பெற்ற சான்று,கல்வித்தகுதிக்கான சான்றுதள்,வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பின் அதற்கான பதிவு அட்டை ஆகியவை சமர்பிக்க வேண்டும்ஒரு வெள்ளைத்தாளில் பெயர்,முகவரி,கல்வித்தகுதி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் போன்ற முழு விபரங்களுடன்பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒட்டப்பட்டு நகல் சான்றிதழ்கலை இணைத்து சுய முகவரியிட்ட ரூ.30-க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையுடன் கூடிய அந்ததந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் செப்டம்பர் 7 ஆம் தேதி மாலை5 மணிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

31/8/16

TET Case Status : Listed on 13/09/2016



PDT GRATUITY - பணிக்கொடை - *DCRG* அறிந்து கொள்ளுங்கள்

பணிக்கொடை(தமிழ்நாடு அரசு)
பணிக்கொடைஎன்பது அரசு/அரசு சார்ந்தஊழியர் அல்லது ஆசிரியர் பணிஓய்வின் போது அல்லது பணியில்இருக்கும் போதே காலமான போதுஅவ்வூழியருக்கு, ஊதியம் வழங்கும் நிறுவனம், ஊழியரின் பணியை
பாராட்டும் விதமாகவழங்கும் ஒரு ஒட்டு மொத்தத்தொகையாகும். பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்றஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது [1].

அரசு& அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடைகணக்கீடு முறை தொகு

பணி ஓய்வின் போது பணிக்கொடைகணக்கீடு செய்யும் போது ஊழியர் இறுதியாகவழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்காலம்ஆகிய இரண்டும் கணக்கீட்டில் எடுத்து கொள்ளப்படுகிறது.[2]

இறுதியாகவழங்கப்பட்ட ஊதியம் (Last Pay Drawn) தொகு
அரசு மற்றும் அரசு சார்ந்தஊழியர்களைப் பொருத்த வரை, அடிப்படைஊதியம் (Basic Pay), தர ஊதியம் (Grade Pay), சிறப்புஊதியம் (Special Pay), தனி ஊதியம் (Personal Pay) மற்றும் அகவிலைப்படி(Dearness Allowance) ஆகியவற்றின்கூட்டுத்தொகையை, இறுதியாக வழங்கப்பட்ட ஊதியமாகக் (Last Pay Drawn) கொண்டு பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.

பணிக்காலம்கணக்கிடுதல் தொகு
ஓய்வு(Retirement) இனங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளும் (அல்லது4 ஆண்டு 9 மாதங்களுக்கு மேலும்) அரசுப் பணியில்இருந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 33 ஆண்டு பணிக்காலம் மட்டுமேபணிகொடை கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளபடுகிறது.

32 ஆண்டுகள்9 மாதங்களுக்கு மேல் பணி செய்திருந்தால்33 ஆண்டு பணிக்காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 32 ஆண்டுகள்5 மாதங்கள் பணி செய்திருந்தால் 32 ஆண்டுகள்மட்டுமே பணிக்காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.

பணிக்கொடைகணக்கீடு தொகு
மொத்தப்பணி செய்த ஆண்டிற்கு அரைமாத ஊதியம் வீதம், குறைந்தபட்சமாக இரண்டரை மாத ஊதியமும், அதிக பட்சமாக பதினாறறை (16 ½) மாதஊதியமும் பணிகொடையாக வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்புரூபாய் 10 இலட்சம்.

பணிக்கொடைவருவாய்க்கு வருமான வரி சட்டம்10 (10)-இன் கீழ் வருமான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்குபணிக்கொடை வழங்கப்பட மாட்டாது.


அரசு மற்றும் அரசு ஒப்புதல்பெற்ற நிறுவனங்களுக்கு ஊழியர் செலுத்த வேண்டியதொகைகள் நிலுவை இருப்பின், அதனைபணிக்கொடைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.

DINDIGUL DISTRICT-1st TERM EXAM TIME TABLE 2016 SEPTEMBER-CLASS-6,7,8,9,&11

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 ஆண்டு போனஸ்: அருண் ஜெட்லி அறிவிப்பு

மத்தியஅரசு ஊழியர்களுக்கு 2 ஆண்டு போனஸ் விரைவில்வழங்கப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்மேலும் குறைந்த பட்ச ஊதியம்அதிகரிக்கப்படும்
என்றும் கூறினார்.

12 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 2-ம்தேதி முதல் (வெள்ளிக்கிழமை) நாடுதழுவிய போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதில் மத்திய அரசு பணியாளர்கள்33 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றுகூறப்பட்டது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர்அருண்ஜெட்லி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்; ‘7வது ஊதிய கமிஷனின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில்உள்ள 2014-15 மற்றும் 2015-2016ம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட2 ஆண்டு போனஸ் வழங்கப்படும்’ என்றார். இதனிடையே அரசு வழங்கும் திருத்தியமைக்கப்பட்டபோனஸ் திட்டத்தால் ஆண்டுக்கு ரூ.1,920 கோடி செலவாகும் என்றுகூறப்படுகிறது.


இதினிடையேவிவசாயம் சாராத தொழிலாளர்கள் குறைந்தபட்ச தினக்கூலியாக ரூ.246 லிருந்து ரூ.350 ஆக உயர்த்த வேண்டும் என்றநிபுணரின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பேசிய ஜெட்லி; ‘விவசாயம்சாராத தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியாகரூ.350 என நிர்ணயம் செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

INSPIRE AWARD 2016 - "ONLINE" - இல் பதிவிடும்முறை - வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

NHIS -2016-ANNEXURE 7 FORM

தேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீர் மாற்றம்

 பத்தாம்வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வுதேதி, தமிழகத்தில், திடீரென மாற்றப்பட்டு உள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களில், திறன்மிக்கவர்களை தேர்வு செய்து, அவர்களுக்குமத்திய அரசு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாதந்தோறும்,
கல்வி உதவி வழங்கி வருகிறது.


இந்த தேர்வு, மாநில மற்றும்தேசிய அளவில் இரண்டு கட்டங்களாகநடக்கிறது. மாநில அளவிலான தேர்வு, நவ., 6ம் தேதி நடக்கும்என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., அறிவித்தது. தமிழகஅரசு தேர்வுத் துறை, இதற்கான அறிவிப்பை, சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது. தற்போது, தமிழகத்தில் தேர்வு தேதி மாற்றப்பட்டுஉள்ளது. 'நவ., 6ம் தேதி, தமிழகத்தில், அரசு பணியாளர் தேர்வாணையத்தின், குரூப் - 4 தேர்வு நடப்பதால், தேசியதிறனாய்வு தேர்வு, நவ., 5ம்தேதி நடத்தப்படும்; இதற்கு, என்.சி.இ.ஆர்.டி., அனுமதி பெறப்பட்டு உள்ளது' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு.பெயர் சேர்க்க ஒரு மாத அவகாசம்

வாக்காளர்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், புதிதாக பெயர் சேர்க்கவும்வரும் 1 ஆம் தேதி விண்ணப்பங்களைஅளிக்கலாம்.        வாக்காளர்பட்டியலில் பெயர் இருக்கிறதா, முகவரிமாறி இருக்கிறதா போன்றவற்றை அறிந்து கொள்ள வசதியாகஇப்போது புழக்கத்தில் உள்ள
வாக்காளர் பட்டியல்பொது மக்களின் பார்வைக்கு வரும் வியாழக்கிழமை (செப். 1) முதல் வைக்கப்படுகிறது.        

  இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரிராஜேஷ் லக்கானி செவ்வாய்க்கிழமை வெளியிட்டஅறிவிப்பு:           அடுத்தஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியன்று18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். வாக்காளர்புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பதால்மட்டும் தேர்தலில் வாக்களிக்க இயலாது. வாக்காளர் பட்டியலிலும்பெயர் இருப்பது அவசியம்.  

எனவே, பட்டியலில் பெயர் சேர்க்கவும், அதில்திருத்தங்களை மேற்கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் வாய்ப்புஅளிக்கப்படுகிறது. இதற்கென இப்போது நடைமுறையில்உள்ள வாக்காளர் பட்டியல் வரைவு வாக்காளர் பட்டியலாகவெளியிடப்படும்.

அதன்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி வரைவுவாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.     சிறப்புமுகாம்கள்: வரைவு வாக்காளர் பட்டியலைதலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில்(www.elections.tn.gov.in) காணலாம். மேலும், செப்டம்பர் 10, 24 ஆகிய தேதிகளில் கிராமசபை, உள்ளாட்சி மன்றம், குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டங்களிலும், பிரிவு வாரியாக படிக்கப்பட்டுபெயர்கள் சரிபார்க்கப்படும்.     

இந்த வாக்காளர் பட்டியல் உதவி வாக்காளர் பதிவுஅதிகாரியின் அலுவலகங்கள், வருவாய்க் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர் ஆகியோரின் அலுவலகங்களிலும், வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் வைக்கப்படும். சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பார்வைக்குவைக்கப்படும்.electoralservicesearch.azurewebsites.net என்ற இணையதள முகவரியிலும் பெயர்கலைத்தேடிக் கண்டுபிடிக்கலாம்.    


வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள உரிய மனுக்களை செப்டம்பர்30 ஆம் தேதி வரை அளிக்கலாம். மேலும் மனுக்களைப் பெற சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் செப்டம்பர் 11, 25 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும்சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது என்று ராஜேஷ் லக்கானிதெரிவித்துள்ளார்.

பேராசிரியர் பணி - 206 பேரின் விண்ணப்பங்கள்நிராகரிக்கப்பு.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ள, உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த, 206 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.பள்ளிக்கல்வித் துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது; 
விண்ணப்பப் பதிவு, ஜூலை, 30ல் முடிந்தது. பரிசீலனையில், 194 பேரின் விண்ணப்பங்கள், தகுதியின்மை காரணமாக நிராகரிக்கப்பட்டு உள்ளன.

இதில், 57 வயது வரையுள்ளோர்விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒருவர், ஓய்வு பெறும், 58 வயதில் விண்ணப்பித்துஉள்ளார். இதேபோல், அரசு இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவிப் பேராசிரியர் பணிக்கு, ஆக., 17 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன; வரும், 7ம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு முடிகிறது. இந்த பதவிக்கு, ஏற்கனவே, 2014ல் முதற்கட்ட அறிவிப்பு வெளியான போது பலர் விண்ணப்பித்தனர். அவர்களில், 12 பேர் உட்பட மொத்தம், 206 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இந்த பட்டியலை, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம்.

பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியை - தொடக்க கல்வி அலுவலகத்தில் தற்கொலை முயற்சி.

சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில், ஆசிரியை, துாக்க மாத்திரை சாப்பிட்டு, மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் டவுனை சேர்ந்தவர் தனலட்சுமி, 42; சேலம், தேர்வீதி அரசு நடுநிலைப் பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்தார். ஆக., 13ம் தேதி, பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, பணி நிரவல் நடந்தது. 
இதில், காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பள்ளிக்கு, தனலட்சுமி பணி மாறுதல் செய்யப்பட்டார். அங்கு செல்ல விருப்பம் இல்லாததால், தன் பணி மாறுதல் உத்தரவை ரத்துசெய்ய கோரி வந்தார்.இந்த நிலையில், நேற்று, சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு வந்து., தன் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தினார். அதற்கு வாய்ப்பு இல்லை என, அதிகாரிகள் கூறிய நிலையில், அங்கேயே, தர்ணா நடத்த முயன்றார்.

போலீசார் சமாதானப்படுத்தி, அவரை அனுப்பி வைத்தனர். பின், கழிப்பறை சென்று வந்த அவர், மாடிப்படிஅருகில், திடீரென மயங்கி விழுந்தார். அவரை, சேலம் அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். அதில், பணி மாறுதலை ரத்து செய்யாததால், துாக்க மாத்திரைகள் சாப்பிட்டதாக, தனலட்சுமி தெரிவித்தார். இது குறித்து,போலீசார் விசாரிக்கின்றனர்.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தங்கராஜ் கூறுகையில், ''பணி நிரவல் பட்டியல், ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்தோம். அதில் குறைபாடு இருப்பின் தெரிவிக்கலாம் என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. 100 சதவீதம், முறையாக பணி நிரவல் நடந்த நிலையில், தற்போது, அதை ரத்து செய்வது சாத்தியமில்லை,'' என்றார்.

தமிழக அரசு நல்லாசிரியர் விருதுக்கு 534 பேர் தேர்வு.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 534 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 1960ம் ஆண்டு முதல் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. 
பின்னர், இந்த விருது 1997ம் ஆண்டு முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த விருதுடன் முன்னதாக ரூ.5 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பதக்கம், பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.இந்நிலையில், இந்த ஆண்டு 534 பேருக்கு மேற்கண்ட விருது வழங்கப்பட  உள்ளது.

 இந்த ஆண்டு விருது பெறுவோருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கத்துக்கு பதிலாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.இந்த ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டியலை பள்ளிக் கல்வித்துறை தயாரித்து வருகிறது.

இன்று அல்லது நாளை இந்த பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது. விருதுகள் செப்டம்பர் 5ம் தேதி சென்னை சாந்தோமில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடக்கும் விழாவில் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இந்த விழாவிற்கான அழைப்பிதழில் பள்ளி கல்வி துறை அமை ச்சர் பென்ஜமின்  பெயர் அச்சி டப்பட்டு இருந்தது நேற்று இத்துறை அமைச்சர்   மாற்றப் பட்டதால் தற்போது மாபா. பாண்டியராஜன் வழங்குவார்.

பணப்பரிமாற்றம் இனி எளிது!

பொதுவாக, யாருக்காவது பணம் அனுப்ப வேண்டியதிருந்தால் நெட்பேங்கிங் மூலமாக அனுப்பலாம். வங்கி கிளைக்கு நேரில்சென்று செல்லானை நிரப்பியும் அனுப்பலாம். ஆனால் தற்போதுபணம் அனுப்புவது இன்னும் சிம்பிள். பணம் அனுப்ப வேண்டியவரின் அக்கவுன்ட் நம்பர் தெரிந்தால் மட்டும் போதும்.
உங்கள் கையில் உள்ள ஸ்மார்ட் போனில் பணம் அனுப்பவேண்டியவரின் வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்து அவரின் கணக்கிலேயே பணத்தை சேர்த்து விடலாம்.

இப்படி ஒரு சுலபமான வசதியை வங்கிகளின் வாடிக்கையாளர்களின் பணப்பரிமாற்றத்திற்காக அறிமுகப்படுத்தியுள்ளது ‘’நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா’’ (என்.பி.சி.ஐ) நிறுவனம். ’’யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இண்டர்பேஸ்’’ யூ.பி.ஐ என்ற மொபைல் ஆப்-ஐ கடந்த ஏப்ரல் மாதம் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் திருப்தி அடைந்த ரிசர்வ் வங்கி, பொதுமக்களுக்கு இவ்வசதியை வழங்க ஐ.டி.பி.ஐ வங்கி, மகிளா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐவங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட 21 வங்கிகள் மூலம் இந்த ஆப்ஸை வழங்க பரிந்துரைத்துள்ளது.கூகுள் பிளே ஸ்டோரில் தற்போது அந்தந்த வங்கிகளுக்கான, இந்த யூ.பி.ஐ ஆப்ஸை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்து அதில் பணம் செலுத்த வேண்டியவரின் வங்கிக் கணக்கு எண்ணை பதிவு செய்தால் போதும். உங்கள் வங்கி கணக்கில் இருந்து அவரது வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றிவிடலாம். நெட்பேங்கிக் முறையில் நிப்ட் போன்ற வகையில் காத்திருக்கும் நிலை, இதில் இல்லை. நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கிக்கான ஆப்ஸை மட்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.அந்தக் கணக்கில் இருந்து பணத்தை இன்னொரு வங்கி கணக்கிற்கு எளிதாக மாற்றிவிடலாம். நிப்ட் முறையில் பணம்செலுத்த வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி எண் ஆகியவை தெரிந்திக்க வேண்டும்.

ஆனால், யூ.பி.எஸ் ஆப் மூலம் பணம் செலுத்த ஐ.எப்.எஸ்.சி எண் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த அப்ளிகேசனை டவுன்லோடு செய்தாலே போதும், எந்த வங்கி கணக்கிற்கும் பணம் அனுப்பலாம். இதன் மூலம் எந்த பொருளையும் ஆன்லைனில் வாங்கலாம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள், இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்து கொள்ள முடியும். பெயர் அல்லது மொபைல் எண் கொண்டதாக முகவரியை பதிவு செய்ய வேண்டும். பல வங்கிகளில் இருந்து பணம் அனுப்புவதும், பெறுவதுமாக இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட முகவரியை தரலாம்.  பணத்தை அனுப்பும் போது பணம் பெறுபவரின் முகவரி, தொகையை தந்ததும், மொபைலுக்கு ’பின்’ நம்பர்  வந்தால் பணம் அனுப்பப்பட்டு விட்டதாக  அர்த்தம். மொபைல், இண்டர்நெட், ஏ.டி.எம் போல இந்த ஆப் மூலம் 24 மணி நேரமும் பணம் செலுத்தவும் பெறவும் முடியும்.

இதில் இன்னும் SBI மற்றும் Bank of baroda இணையவில்லை. ஆனால் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பானது மட்டுமல்ல, ரூபாய் நோட்டுகளின் பணப்பரிமாற்றம் குறைவதால் கள்ள நோட்டு புழக்கமும் குறைய வாய்ப்புள்ளது.இதில் ஒரு லட்சம் வரையில் பணம் அனுப்பலாம். பணப்பரிவர்த்தனையில் இந்த Unified Payment Interfaceமிகச்சிறந்த முயற்சியாக கருதப்படுகிறது

NEW NHIS FORM

+2 COMPUTER SCIENCE TUTORIALS

TET Case Status: Listed on 13/09/2016

SUPREME COURT OF INDIA
Case Status Status : PENDING
Status of : Special Leave Petition (Civil)    29245    OF   2014
V. LAVANYA & ORS.   .Vs.   THE STATE OF TAMIL NADU & ORS.
Pet. Adv. : MR. T. HARISH KUMAR   Res. Adv. : MR. M. YOGESH KANNA
Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT
Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS

Listed 4 times earlier  Likely to be Listed on : 13/09/2016
Last updated on 30-08-2016

உண்மையைத் தேடிய ஆசிரியர் - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் 5: ஆசிரியர் தினம்

உண்மையைத் தேடிய ஆசிரியர்

பேச்சாளர், எழுத்தாளர், தத்துவ அறிஞர், குடியரசுத் தலைவர், நிர்வாகி என்ற பன்முகத் தன்மைகளைத் தாண்டி ஆசிரியர்க்கெல்லாம் ஆசிரியர் என்று மதிக்கப்படுபவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். 
“உண்மையாக வாழ்தல் - எளிமையாக வாழ்தல் - களங்கமற்று இருத்தல் - உள்ளங்கனிந்திருத்தல் -மகிழ்வுடனிருத்தல் - கவலையையும் அபாயத்தையும் எதிர்த்து வாழ்தல் - வாழ்க்கையை நேசித்தல் - இறப்புக்கு அஞ்சாதிருத்தல் - அழகுக்காக உழைத்தல் - இறப்பின் துயர்களால் சூழப்படாதிருத்தல் - உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு இவரைப் போன்று வாழ்ந்தவர்களும் இல்லை. வாழக் கற்றுத் தந்தவர்களும் இல்லை” என்று மகாத்மா காந்தி இவரைப் பற்றிக் கூறினார்.கல்வியையும் அறிவையும் ஞானத்தையும் வெவ்வேறு படிநிலைகளில் விளங்கவைத்த பெருமை ராதாகிருஷ்ணனுக்கு உண்டு. சிறிய அளவில் கடைப்பிடிக்கப்படும் மவுனத்துக்குக் கூட அறிவை அடுத்தகட்ட ஞானத்தை நோக்கி நகர்த்தும் வல்லமை உண்டு என்பதை அவர் வலியுறுத்தினார்.

உண்மையின் தேடல் ஒருபுறம், சமூக மேன்மையை நாடுதல் மறுபுறம் எனக் கல்விக்கு இரண்டு தன்மைகள் இருக்க வேண்டும். மனிதனின் ஆன்மிக ஆற்றலைச் செழுமைப்படுத்தும் பணியையும், தன்னம்பிக்கையுடன் கூடிய ஒத்திசைவையும் கல்வி வழங்கவேண்டும் என்றார். சர்வதேச மேடையில் இந்திய ஆசிரியர் 1908-ல் எம்.ஏ. படிப்புக்காக ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்த ‘தி எதிக்ஸ் ஆஃப் தி வேதாந்தா அண்ட் இட்ஸ் மெட்டாஃபிஸிக்கல் பிரீசபோஸிஷன்ஸ்' (‘The ethics of the Vedanta and its metaphysical presuppositions’) என்கிற ஆய்வேடு அவரது முதல் நூலாக வெளியானது. 1911-ல் சென்னை மாநிலக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் ஆனார். அவர் இந்தியத் தத்துவ வகுப்பெடுக்கும் முறையால் ஈர்க்கப்பட்டுப் பிற கல்லூரி மாணவர்களும் மாநிலக் கல்லூரிக்கு வந்து அவருடைய உரையை ஆர்வத்தோடு கேட்பார்கள். 1918 முதல் 1920 வரை மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1920-ல் கல்கத்தா பல்கலைக் கழகத்துக்குப் பணியாற்றப் புறப்பட்டபோது அவர் அமர்ந்திருந்த குதிரை ரதத்தை அவருடைய மாணவர்களே பிரியத்துடன் இழுத்துச் சென்றனர். 1927-ல் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்திய அவர் 1931-ல் அதன் துணைவேந்தரானார். 1936 முதல் 1938 வரையிலான மூன்று ஆண்டுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கீழ்த்திசைச் சமயங்கள் பிரிவில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1939-ல் வாரணாசிப் பல்கலைக்கழகத் துணைவேந்தரானார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கும் துணைவேந்தராக இருந்துள்ளார். கல்விக்கும் தேசத்துக்கும் வழிகாட்டி ஆசிரியரின் மகத்துவத்தை இந்தியச் சமூகம் உணரவைத்தவர் அவர். சமஸ்கிருத வாக்கியங்கள் விரவப் பெற்ற அவருடைய ஆங்கிலச் சொற்பொழிவுகள் கேட்பவரை ஈர்க்கும் காந்தத் தன்மை வாய்ந்தவை.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அவர் ஆற்றிய உரையான ‘உலக நாகரிகத்தை வளர்த்ததில் தத்துவத்தின் பங்கு',லண்டன் - மான்செஸ்டர் பல்கலைக்கழகங்களில் ஆற்றிய உரைகள் ‘ஓர் இலக்கியவாதியின் பார்வையில் வாழ்க்கை' (An idealist view of life) என்ற தலைப்பில் நூல்களாக வெளிவந்தன. வேறுபாடுகளைத் திறந்த மனப்பான்மையோடு ஏற்றுக்கொள்வதே மக்களாட்சியின் மாண்பாகக் கருதிய அவர், ஜவஹர்லால் நேருவின் கோரிக்கையை ஏற்று இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரானார். இதன் மூலம் அரசியல் சாராத, தத்துவப் பேராசிரியர் ஒருவர் முதன்முறையாக இப்பதவியில் அமர்ந்தார். தனது 21 வயதில் தத்துவப் பிரிவில் ஆசிரியப் பணியைச் சென்னை மாநிலக் கல்லூரியில் தொடங்கிய ராதாகிருஷ்ணனின் ஆசிரியப் பணியானது 40 ஆண்டுகள் நீண்டது. 1909 முதல் 1948 வரை மாணவர்களிடம் சர்வதேச அளவில் உரையாடிக் கொண்டே இருந்தவர். இன்று சர்வ பள்ளிகளிலும் பெருமளவு மறக்கப்பட்ட ஆளுமையான சர்வபள்ளிராதாகிருஷ்ணன் என்கிற அந்த அறிஞரின் பங்களிப்புகளும் செயல்பாடுகளும் இன்றைய இளம்தலைமுறையினருக்கு ஒரு மெய்யான சொர்க்கம்.

ஆசிரியர்களின் குறைகளுக்கு அந்தந்த மாதத்திலேயே தீர்வு காண வலியுறுத்தல்

NSPIRE AWARD 2016 - "ONLINE" - இல் பதிவிடும்முறை - வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

TET Case Status : Listed on 13/09/2016

GRATUITY - பணிக்கொடை - *DCRG* அறிந்து கொள்ளுங்கள்

பணிக்கொடை (தமிழ்நாடு அரசு)
பணிக்கொடை என்பது அரசு/அரசு சார்ந்த ஊழியர் அல்லது ஆசிரியர் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது அவ்வூழியருக்கு, ஊதியம் வழங்கும் நிறுவனம், ஊழியரின் பணியை பாராட்டும் விதமாக வழங்கும் ஒரு ஒட்டு மொத்தத் தொகையாகும்
. பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்ற ஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது [1].

SG.Tr TO BT TAMIL PROMOTION PANEL

மத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார மிஷனில் 2016-ஆம் ஆண்டிற்கான 5550 ஆய்வக உதவியாளர், வார்டு பாய், பிசியோதெரபிஸ்ட், மருத்துவ உதவி, காசாளர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: உத்தர பிரதேசம், தில்லி, ஜம்மூ மற்றும் காஷ்மீர், ஹரியானா மற்றும் பிற

30/8/16

FLASH NEWS : NATIONAL TEACHERS AWARD 2016 - WINNERS LIST FROM TAMILNADU

பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியை - தொடக்க கல்வி அலுவலகத்தில் தற்கொலை முயற்சி

சேலம் மாவட்ட தொடக்க கல்விஅலுவலகத்தில், ஆசிரியை, துாக்க மாத்திரை சாப்பிட்டு, மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் டவுனை சேர்ந்தவர்தனலட்சுமி, 42; சேலம், தேர்வீதி அரசுநடுநிலைப்
பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்தார்.

ஆக., 13ம் தேதி, பள்ளிகளில் மாணவர்எண்ணிக்கை அடிப்படையில், உபரி ஆசிரியர் பணியிடங்கள்கணக்கெடுக்கப்பட்டு, பணி நிரவல் நடந்தது. இதில், காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பள்ளிக்கு, தனலட்சுமிபணி மாறுதல் செய்யப்பட்டார். அங்குசெல்ல விருப்பம் இல்லாததால், தன் பணி மாறுதல்உத்தரவை ரத்து செய்ய கோரிவந்தார்.

இந்த நிலையில், நேற்று, சேலம் மாவட்டதொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு வந்து, தன் உத்தரவை ரத்து செய்யவலியுறுத்தினார். அதற்கு வாய்ப்பு இல்லைஎன, அதிகாரிகள் கூறிய நிலையில், அங்கேயே, தர்ணா நடத்த முயன்றார். போலீசார்சமாதானப்படுத்தி, அவரை அனுப்பி வைத்தனர். பின், கழிப்பறை சென்று வந்த அவர், மாடிப்படி அருகில், திடீரென மயங்கி விழுந்தார். அவரை, சேலம் அரசு மருத்துவமனையில்சேர்த்தனர். அதில், பணி மாறுதலைரத்து செய்யாததால், துாக்க மாத்திரைகள் சாப்பிட்டதாக, தனலட்சுமி தெரிவித்தார். இது குறித்து, போலீசார்விசாரிக்கின்றனர்.


மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர் தங்கராஜ் கூறுகையில், ''பணி நிரவல் பட்டியல், ஏற்கனவேஅனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்தோம். அதில்குறைபாடு இருப்பின் தெரிவிக்கலாம் என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. 100 சதவீதம், முறையாக பணி நிரவல்நடந்த நிலையில், தற்போது, அதை ரத்து செய்வதுசாத்தியமில்லை,'' என்றார்.

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: பள்ளிக் கல்வி அமைச்சராகிறார் மாஃபா பாண்டியராஜன்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாஃபாகே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை(ஆக. 30) நடைபெறும்
நிகழ்ச்சியில் அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் பொறுப்பேற்றுக்கொள்கிறார்.

மேலும்அமைச்சர் சண்முகநாதனிடம் இருந்த பால்வளத் துறைஅமைச்சர் பொறுப்பு கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர்ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று, இந்த மாற்றங்கள்செய்யப்படுவதாக ஆளுநர் கே.ரோசய்யாதெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர்மாளிகை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பால் வளம்-பால் பண்ணைகள்மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தஎஸ்.பி.சண்முகநாதன், அமைச்சரவையில்இருந்து விடுவிக்கப்படுகிறார். ஆவடி சட்டப் பேரவைத்தொகுதி உறுப்பினராக உள்ள கே.பாண்டியராஜன், பள்ளிக் கல்வி-விளையாட்டு-இளைஞர்நலத் துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
இலாகாக்கள்மாற்றம்:
அமைச்சரவையில்இரண்டு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. ஊரக தொழில்கள் துறைஅமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு, பால் வளம்-பால்பண்ணைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், பள்ளிக்கல்வி-விளையாட்டு-இளைஞர் நலத் துறைஅமைச்சராக இருந்த பி.பென்ஜமினுக்குஊரகத் தொழில்கள் துறை பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்புவிழா:
புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள கே.பாண்டியராஜன், ஆளுநர்மாளிகையில் செவ்வாய்க்கிழமை (ஆக. 30) மாலை 4.35 மணிக்குநடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு உறுதிமொழியையும் ஆளுநர் கே.ரோசய்யாசெய்து வைக்கிறார்.
பொறியியல்பட்டதாரி:
புதிய அமைச்சராக பொறுப்பேற்க உள்ள கே.பாண்டியராஜனின்சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம்விளாம்பட்டி ஆகும். 1959- ஆம் ஆண்டு ஏப்ரல்26- இல் பிறந்தார். பொறியியல் பட்டதாரியான அவர், எம்.பி.ஏ., பட்டமும் பெற்றுள்ளார். மனிதவள மேம்பாட்டு நிபுணராக இருக்கும் அவர், கடந்த 2011- 16 ஆம்ஆண்டில் தேமுதிக சார்பில் விருதுநகர்சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்துதேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் பின், அதிமுகவில் இணைந்தஅவர் கடந்த சட்டப் பேரவைத்தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டப் பேரவைத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முதல் முறையாக மாற்றம்:

இரண்டாவதுமுறையாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்த நிலையில், இப்போது முதல் முறையாக அமைச்சரவையில்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, அமைச்சரவைவிரிவாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு நல்லாசிரியர் விருதுக்கு 534 பேர் தேர்வு

தமிழகத்தில்அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் 534 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசுமற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு 1960ம் ஆண்டு முதல்நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.

பின்னர், இந்த விருது 1997ம் ஆண்டு முதல்டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில்வழங்கப்படும் இந்த விருதுடன் முன்னதாகரூ.5 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பதக்கம், பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு 534 பேருக்கு மேற்கண்ட விருது வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு விருது பெறுவோருக்குரூ.5 ஆயிரம் ரொக்கத்துக்கு பதிலாகரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்றுஅரசு அறிவித்துள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில்வரவேற்பு உள்ளது.

இந்த ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள்அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும்பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டியலைபள்ளிக் கல்வித்துறை தயாரித்து வருகிறது.


இன்று அல்லது நாளை இந்தபட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது. விருதுகள்செப்டம்பர் 5ம் தேதி சென்னைசாந்தோமில் உள்ள தனியார் பள்ளிஒன்றில் நடக்கும் விழாவில் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.இந்த விழாவிற்கான அழைப்பிதழில்பள்ளி கல்வி துறை அமைச்சர் பென்ஜமின் பெயர் அச்சி டப்பட்டுஇருந்தது நேற்று இத்துறை அமைச்சர்மாற்றப் பட்டதால் தற்போது மாபா. பாண்டியராஜன்வழங்குவார்.

தொலைதூரக் கல்வி மையங்களுக்கு கடிவாளம் யு.ஜி.சி., புது உத்தரவு!

தொலைதுார கல்வி மையங்களில் முறைகேடுகள் நடக்காத வண்ணம், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில், 14 வகையான தகவல்களை இணையதளத்தில், 15 நாட்களுக்குள் வெளிப்படுத்த பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) கட்டுப்பாட்டில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் பலவற்றில், தொலை துார கல்விமையம் செயல்பாட்டில் உள்ளது. தொலைதுாரகல்வி மைய செயல்பாட்டில் பல்வேறு வரையறைகள் உள்ளன.ஆனால், அனுமதி பெறாத பாடப்பிரிவுகளை நடத்துதல், அங்கீகாரம் புதுப்பிக்காமை, எல்லைகள் கடந்து தேர்வு மையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள், தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன.இதனால், யு.ஜி.சி., கட்டுப்பாட்டில் செயல்படும் பல்கலை, கல்வி நிறுவனங்களின் தொலைதுார கல்வி மையம் சார்ந்த முழுமையான தகவல்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் படி, பாடப்பிரிவுகள், அங்கீகார விபரங்கள், ஒருங்கிணைப்பாளர் விபரம், கல்வி நிறுவனங்களுக்குவரையறுக்கப்பட்டுள்ள எல்லைகள், கிளை மைய முகவரி, தேர்வு மைய விபரங்கள், புரிந்துணர்வு ஒப்பந்த விபரம், மாணவர்கள் சேர்க்கை, அங்கீகார கடித நகல், உள்ளிட்ட, 14 விபரங்களை கட்டாயம் வெளியிடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்களையும், 15 நாட்களுக்குள் கல்வி நிறுவனங்களின் இணைய தளத்தில் பதிவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை:புதிய விதிகள் உருவாக்க 2ம் தேதி கூட்டம்.

தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, புதிய விதிகள் உருவாக்குவதற்கான கூட்டத்தை, வரும், 2ம் தேதி, உயர் கல்வித்துறை நடத்துகிறது.

'நீட்' தேர்வு:
தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர,இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு கட்டாயமாகியுள்ளது. நீட் தேர்வு முடிவு, கடந்த வாரம் வெளியான நிலையில், மாணவர் சேர்க்கை எப்படி, கட்டணம் எவ்வளவு என்ற குழப்பம் நீடித்து வருகிறது. தனியார் நிகர்நிலை பல்கலைகள், மருத்துவ கல்லுாரிகள் மாணவர் சேர்க்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் இணைப்பில் உள்ள, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாணவர்களை எப்படி சேர்ப்பது, அதற்கான விதிகள் என்ன என்பதை முடிவு செய்ய, தமிழகஉயர் கல்வித்துறை மூலமாக, கமிட்டி அமைக்கப்பட்டுஉள்ளது.உத்தரவு:தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை அலுவலக அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள, உயர் கல்வி கட்டண கமிட்டி அலுவலக கட்டடத் தில், மருத்துவ விதிகள் கமிட்டியின் கூட்டம், செப்., 2ம் தேதி, பிற்பகல், 3:00 மணிக்கு நடக்கிறது. இதில், தனியார் மருத்துவ கல்லுாரிகள், சங்கங்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என, தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கட்டாய இடம் மாற்றத்தால் பயனில்லை:மாணவர்களுக்கு மீண்டும் திண்டாட்டம்

அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான கட்டாய இடம் மாற்றம் இன்று முடிகிறது. கூடுதல் ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்படாததால், பல பள்ளிகளில்ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது.அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் விகிதத்தை விட, 2,500 பட்டதாரி ஆசிரியர்களின் அதிகம் இருப்பது தெரிய வந்தது.
இவர்களை, பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு, கட்டாய இடம் மாற்றம் செய்யும் பணி நிரவல் கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது. ஆசிரியர்கள் எதிர்ப்பை சமாளிக்க, மாவட்டத்திற்குள் இடம் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் போன்ற மாவட்டங்களில், அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ளனர்.பற்றாக்குறை உள்ள பள்ளிகள் குறைவாகவே இருந்தன. எனவே, சொற்பமான ஆசிரியர்களே இடம் மாற்றம் செய்யப்பட்டனர். மற்றவர்கள் மீண்டும் அதே பள்ளிகளில், கூடுதல் ஆசிரியர்களாகவே நீடிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.ஆனால், வட மாவட்டங்களானகிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார் போன்ற மாவட்டங்களில், அதிகஎண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேவை உள்ளது.

இந்த மாவட்டங்களுக்கு வர, பிற மாவட்ட ஆசிரியர்கள் தயாராக இல்லாததால், தென் மாவட்டங்களில் கூடுதலாக உள்ள ஆசிரியர்கள், வட மாவட்டங்களுக்கு மாற்றப்படவில்லை. இதுபோன்ற குழப்பங்களால், சில மாவட்டங்களில், மாணவர்கள் எண்ணிக்கையை விட கூடுதலான ஆசிரியர்கள் பணியில் இருக்கும் நிலை தொடர்கிறது. மறுபுறத்தில், பல மாவட்டங்களில் போதிய ஆசிரியர்கள் இன்றி, வகுப்புகள் நடக்காமல் மாணவர்கள் பாதிக்கப்படும்நிலை தொடர்கிறது.

புதிய தலைமுறை ஆசிரியர் விருது.



TNPSC:ஐகோர்ட் பணிக்கு எழுத்து தேர்வு:2 மாதங்களில் முடிவு வெளியீடு

உயர் நீதிமன்ற காலி பணியிடங்களுக்காக, நடந்த எழுத்து தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களில் அறிவிக்கப்பட்டு, கவுன்சிலிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில், நேற்று அவர் அளித்த பேட்டி:உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, இரண்டு நாட்களாக டி.என்.பி.எஸ்.சி., மூலம் எழுத்து தேர்வுகள் நடந்தன. டி.என்.பி.எஸ்.சி., மீது நம்பிக்கை வைத்து, தேர்வை நடத்தி தரும்படி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது, எங்களுக்கு கிடைத்த வெற்றி.நேற்று முன் தினம் நடந்த பதிவாளரின் நேர்முக உதவியாளர் பணிக்கு, 310 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

நேற்று நடந்த தேர்வில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டைப்பிஸ்ட், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, 317 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.இந்த பணிகளுக்கு தமிழகம் முழுவதும், 57 ஆயிரத்து, 512பேர் தேர்வு எழுதி உள்ளனர். தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு, கவுன்சிலிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.தமிழக அரசிடம் இருந்து காலி பணியிடங்களின் எண்ணிக்கை, துறை வாரியாக வந்தால், அதற்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்த தயாராகஉள்ளது. நவம்பர் மாதம் குரூப் - 4 தேர்வு நடத்த உள்ளோம். டி.என்.பி.எஸ்.சி., மூலம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் எந்தவித அரசியல் தலையீடும் இன்றி பணியாளர்கள் தேர்வு நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Minority Scholarship ஐ- online-ல் விண்ணப்பிக்க இணைப்புகளை SCAN செய்து Upload செய்வதிலிருந்து விலக்கு



சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தார்.

சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-பெருகி வரும் நகர்ப்புற மக்கள் தொகைக்கு ஏற்ப, தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 
அந்த வகையில், இந்த ஆண்டு நகர்ப்புறங்களில்செயல்படுத்த உள்ள புதிய திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.தெரு விளக்குகளின் மின் கட்டணத்திற்காக நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் சராசரியாக தங்களது வருவாயில் 25 சதவீதத்தை செலவிடுகின்றன.எனவே, மின் கட்டண செலவை குறைக்கும் வகையில், தெரு விளக்குகள் அனைத்தையும் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றிட எனது தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பள்ளிகளில் கணினி கல்வி பாடத்திட்டம் உருவாக்காததால்,பி.எட் முடித்த, 45ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ,காத்திருப்பு!

பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் கம்ப்யூட்டர் கல்வி.

 தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கணினி கல்வி பாடத்திட்டம் உருவாக்காததால்,பி.எட் முடித்த, 45ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்,வாய்ப்பின்றி,காத்திருக்கின்றனர்.
தமிழகம் தவிர,மற்ற மாநிலங்களில்,ஆறாம் வகுப்பு முதல்,கணினிக்கல்வி பாடத்திட்டம் உள்ளது. இப்பணியிடத்துக்கு,கணினி அறிவியல் பட்டப்படிப்புடன்,பி.எட்.,முடித்திருக்க வேண்டும். தமிழகத்தில்,கணினி அறிவியல் கல்விக்கென,பி.எட்.,படிப்பு, 1996ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் மட்டும், 2,000ம் ஆண்டில் இருந்து, 45ஆயிரம் பேர்,பி.எட் முடித்துள்ளனர். இதுதவிர,காமராஜர்,பாரதியார் பல்கலைகளில் இருந்தும்,பி.எட்.,படித்து காத்திருப்போர்உள்ளனர்.பள்ளிக்கல்வித்துறையில்,அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டும், 55ஆயிரம்,கணினி ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ளது.

இதை நிரப்பாததால்,தொழில்நுட்ப கல்வியில் மாணவர்கள் பின்தங்கும் அபாயம் உள்ளது. மேலும்,நடுநிலைப்பள்ளி வகுப்புகளில் இருந்தே,கணினி கல்வி கட்டாயமாக்கினால்,அரசால் வழங்கப்படும் இலவச லேப்-டாப்களை கல்விசார்பணிகளுக்கு மாணவர்கள் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.பி.எட் கணினி ஆசிரியர் நலசங்க மாநில பொதுச்செயலாளர் பாண்டியன் கூறுகையில்,சமச்சீர் கல்வி அறிமுகமான போது,ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு,கணினி அறிவியல் பாடத்திட்டம் உருவாக்கி,புத்தகங்கள் அச்சிடப்பட்டன.

 பின்,அ.தி.மு.க.,அரசு பொறுப்பேற்றதும்,கணினி கல்வி முடக்கப்பட்டது. இதை மீண்டும் துவங்கினால்,வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பட்டதாரிகள் பலனடைவர்.கல்வி பணி அல்லாமல்,அலுவலகப்பணியிலும் கணினி பட்டதாரிகளை நிரப்பலாம். வேலைவாய்ப்பு அறிவிக்காததால்,பி.எட்.,படிக்கும் கணினி பட்டதாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு,கணினிஆசிரியர் பணியிடத்திற்கு தகுதித்தேர்வு நடத்த அரசு முன்வர வேண்டும்,என்றார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளஅரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்க உத்தரவு: தமிழகத்தில் 4.5 லட்சம் பேர் பயன்பெறுவர்

பழைய ஓய்வூதிய திட்டத்தைப் போன்று புதிய ஓய்வூதிய திட்டத் தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை (கிராஜுவிட்டி) வழங்க மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது.தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேரும் ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படு கின்றனர். மத்திய அரசில் புதிய ஓய்வூதிய திட்டம், 2004 ஜனவரி 1-ம் தேதிக்கு பின்னர் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

ரூ 51 க்கு ஒரு GB, 4G/3G நெட்பேக். ஜியோவுடன் மல்லுக்கட்டுகிறது ஏர்டெல்!

கபாலி பட ரிலீஸ் டென்ஷன் பழசு. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும்  சாலைகளை அடைத்துக்கொண்டு இளசுகள் வரிசைக்கட்டி  நின்றது ஜியோசிம்முக்குகாகத்தான். 
ரிலையன்ஸ்  நிறுவனத்தின் புது 4ஜி சிம்மான ஜியோ,  வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. (ஆனால் குறிப்பிட்ட சில மொபைல்களுக்கு மட்டுமே ஜியோ சிம் பொருந்தும்) ஒரு முறை  ஜியோ சிம் வாங்கிவிட்டால்அடுத்த மூன்று மாதத்துக்கு இலவச 4ஜி இணைப்பு  என ரிலையன்ஸ் அறிவித்திருக்கிறது.  சாதாரணமாக ஒரு ஜி.பி க்கு சுமார் 250 ரூபாய் செலவழிக்க வேண்டிய சூழ்நிலையில் ஜியோவின் இந்த ஆஃபரால்   இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு ரிலையன்ஸ்  ஜியோ சிம்மை வாங்கி வருகிறார்கள்.

ஜியோவின் இந்த அதிரடி ஆஃபரால் கதிகலங்கி போன மற்ற நெட்வொர்க்குகள் நெட்பேக் விலையை குறைத்து வருகின்றன. சில நிறுவனங்கள் அதே விலையில் கூடுதல் டேட்டா தர ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ஏர்டல் நிறுவனத்தின் இந்தியாவுக்கான இயக்குனரான அஜய் பூரி இன்று புது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதன் படி இனி ஒரு GB டேட்டாவை வெறும் ரூபாய்க்கு 51க்கு பெற முடியும். ஆனால் இங்கே  ஒரு டிவிஸ்ட் இருக்கிறது. மெகா டேட்டா சேமிப்பு என்ற பாக்கேஜின் கீழ் வரும் இந்த  ஆஃபரை பெற நீங்கள் முதலில் ரூ1498 என்ற ஸ்பெஷல் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த ரீசார்ஜ் செய்த பிறகு ஒரு வருடத்துக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ருபாய் 51 செலுத்தி ஒரு GB டேட்டாவை பெறலாம். ரூ 748 க்கு ஸ்பெஷல் ரீசார்ஜ் செய்தால் அடுத்த ஆறு மாதத்துக்கு 99 ரூபாய்க்கு ஒரு GB பெறலாம்.  இந்த  இரண்டு ஆஃபர்களும்  இப்போதைக்கு டெல்லிக்கு மட்டும்  தான் பொருந்தும். விரைவில் மற்ற மாநிலங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்என  ஏர்டெல் அறிவித்திருக்கிறது.

சரி இந்த ஆஃபர் லாபமா? நஷ்டமா?

நீங்கள் மாதம் ஒரு ஜிபி 3 ஜி டேட்டா பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். பெரும்பாலான நிறுவனங்கள் இதற்கு ரூ.250 வசூலிக்கிறார்கள். ஒரு வருடத்துக்கு (250*12=3000)  மூவாயிரம் ரூபாய் செலவாகும். தற்போதைய மெகா டேட்டா சேமிப்பு  ஆஃபரில் (1498 + (12*51) = 2110)சுமார் 890 ரூபாய் மிச்சப்படுத்த முடியும் அல்லது  வழக்கமாக செலவழிக்கும் தொகையில் கூடுதலாக ஒரு  வருடத்துக்கு சுமார் 17 ஜி.பி டேட்டா  பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மை இன கல்வி உதவி தொகை பெற படிவங்கள் ஸ்கேன் செய்து upload செய்ய தேவையில்லை. பள்ளியில் உரிய படிவங்கள் இருப்பின் போதுமானது....ஆனால் online ல் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்...



Flash News :மாஃபா. பாண்டியராஜன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமனம்.

ஆபால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.பி.சண்முகநாதன் விடுவிக்கப்பட்டார். சண்முகநாதன் வகித்து வந்த இலாக்கா கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் புதிய அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாஃபா கே. பாண்டியராஜனுக்கு பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.  பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த பென்ஜமினிடம், ராஜேந்திர பாலாஜி வகித்து வந்த ஊரகத் தொழில் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சிநாளை மாலை 04.35 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவை பட்டியல் விவரம்:

01. முதலமைச்சர் - ஜெயலலிதா - பொது நிர்வாகம், இந்திய ஆட்சி பணி, வனப்பணி, மாவட்ட வருவாய் பணி, காவல் மற்றும் உள்துறை
02. நிதி அமைச்சர் - ஓ.பன்னீர்செல்வம்
03. வனத்துறை - திண்டுக்கல் சீனிவாசன்
04. எடப்பாடி பழனிச்சாமி - பொதுப்பணித்துறை
05. செல்லூர் ராஜூ - தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவுத்துறை
06. தங்கமணி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை
07. வேலுமணி - உள்ளாட்சி துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கம்
08. ஜெயக்குமார் - மீன் வளத்துறை,
09. சி.வி. சண்முகம் - சட்டத் துறை
10. கே.பி.அன்பழகன் - உயர் கல்வித் துறை
11. வி.சரோஜா-  சமூக நலத்துறை மற்றும் சத்துணவு
12. கே.வி. கருப்பண்ணன் -  சுற்றுச்சூழல் துறை
13. ஆர்.காமராஜ் - உணவு மற்றும் இந்த சமய அறநிலையத்துறை
14. எம்.சி.சம்பத் - தொழில்துறை
15. ஓ.எஸ். மணியன் - ஜவுளி மற்றும் கைத்தறி துணி நூல் துறை
16. உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
17. விஜயபாஸ்கர் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
18. மாஃபா கே. பாண்டியராஜன் - பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை
19. கடம்பூர் ராஜூ - தகவல் மற்றும் செய்தி விளம்பரத்துறை
20. ராஜேந்திர பாலாஜி - பால்வளத்துறை
21. வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலாத்துறை
22. பெஞ்சமின் - ஊரகத் தொழில் துறை
23. எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை
24. உதயகுமார் - வருவாய் துறை
25. மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பம்
26. ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
27. எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மற்றும்சிறுபான்மையினர்
28. துரைக்கண்ணு - வேளாண்  மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
29. கே.சி. வீரமணி - வணிக வரித்துறை

TNTET : ஆதிதிராவிடர் நலத்துறை இடைநிலை ஆசிரியர் (30%) தேர்வர்களுக்கு SELECTION ORDER கடிதம் வெளியீடு.

திதிராவிடர் நலத்துறை இடைநிலை ஆசிரியர் தேர்வுகடிதம்( SELECTION ORDER )  வெளியீடு

ஆதிதிராவிட நலத்துறை பள்ளியிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மீதமிருந்த 30% பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் இன்று உயர்நீதிமன்ற அறிவுரைப்படி  தேர்வாகியுள்ள அனைவருக்கும் கலந்தாய்வு கடிதம் அனுப்பபட்டு உள்ளது.

கலந்தாய்வு வரும் 07.09.2016 மற்றும் 08.09.2016 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இதற்கு உதவி புரிந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதிராய் அவர்களுடைய முயற்சியாலும் திரு மதுரை ராஜ்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள், நலத்துறை முதன்மை செயலர்கள், தனிச்செயலர்கள், சமூக போராளி கிருஷ்துதாஸ் காந்தி, டி.ஆர்.பி போர்டு, அரசு, உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. .

தகவல்
பி.இராஜலிங்கம் புளியங்குடி