யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/9/16

ஆசிரியர்களை ஏணிப்படிகள் என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள் மட்டுமல்லர்; அவர்கள் கோபுர கலசங்களாகவும் உயர்ந்திட முடியும்-கலைஞர்

ஆசிரியர்களைஏணிப்படிகள் என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள் மட்டுமல்லர்; அவர்கள் கோபுர கலசங்களாகவும்உயர்ந்திட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர்டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன். அவர்ஆசிரியப் பணிபுரிந்து, அறிவாற்றலால் உயர்ந்து, தம் சான்றாண்மைக் குணங்களால்சிறந்து, குடியரசுத் தலைவராக விளங்கிப்
புகழ்படைத்தவர்! அவர் பிறந்த நாள்- செப்டம்பர் 5ஆம் நாள், “ஆசிரியர்தினம்” என ஆண்டுதோறும் எழுச்சியுடன்கொண்டாடப்படுகிறது.
இந்நன்னாளில்வருங்காலத் தலைமுறை மக்களை அறிவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டுத் திறனிலும், சீரிய பண்பாட்டு உணர்விலும்சிறந்தவர்களாக உருவாக்கிடும் திருப்பணியில் வாழ்நாள் முழுதும் தொண்டுகளாற்றிடு
ம் பெருமைக்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தப
்படுகிறது.
ஆசிரியர்சமுதாயம் மகிழும் வகையில், “நல்லாசிரியர்விருது” என வழங்கப்பட்ட அந்தவிருதின் பெயரை, 1997இல், “டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் விருது” எனப் பெயர்மாற்றம் செய்து வழங்கிட வகைசெய்தது தி.மு.க. அரசு!
அத்துடன், ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்வு கருதி உயர்கல்விக்கு ஊக்கஊதியம்; ஈட்டிய விடுப்பு நாட்களைச்சரண் செய்திடும் ஆசிரியர்களுக்கு அந்நாட்களுக்கான ஊதியம்; 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வுநிலை ஊதியம்;
20 ஆண்டுகள்பணி முடித்தால் சிறப்பு நிலை ஊதியம்; தமிழாசிரியர்களிடையே இருநிலை நீக்கம்; தமிழாசிரியர்களின்‘புலவர்’ பட்டயம் ‘பி.லிட்’ பட்டமாகமாற்றம்; தமிழாசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு; ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு மத்தியஅரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்கள்; அகவிலைப்படிகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப்பணிப் பாதுகாப்பு; நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களாக்கியது; பதிவுமூப்பு அடிப்படையிலேயே பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்தது; தொகுப்பூதியஆசிரியர் நியமன முறையை அடியோடுரத்து செய்தது என எண்ணற்றசலுகைகளை ஆசிரியர்களுக்கு வழங்கியது தி.மு.க. அரசு!
இவைமட்டுமல்லாமல், 19 ஆண்டுகால தி.மு.க. ஆட்சிக் காலங்களில் நான்கு முறை ஊதியக்குழுக்களை அமைத்து; ஆசிரியர் சமுதாயமும், அரசு ஊழியர்களும் உயர்ந்தஊதியங்களைப் பெற்று மகிழ்ந்திடவும் ஆசிரியர்-அரசு ஊழியர் குடும்பங்களின்வாழ்க்கைத் தரம் உயர்ந்திடவும் வழிவகைசெய்ததும் தி.மு.க. அரசே என்பதனை இந்நாளில் நினைவுபடுத்திடவிரும்புகிறேன்.
ஓர் ஆசிரியருக்கு வேலை கொடுத்தால் அவர்குடும்பம் உயரும்; அவரைச் சுற்றியுள்ளஉறவினர்கள் மகிழ்வர்; அவர்கள் குடும்பத்தில் வறுமைவிரட்டப்படும்; சமுதாயம் முன்னேற்றம் காணும் என்ற அடிப்படையில்திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும்காலங்களில் எல்லாம் அதிக அளவில்ஆசிரியர் நியமனங்களைச் செய்துள்ளது.
ஆனால், ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் கழகஆட்சியில் அளிக்கப்பட்ட சலுகைகளையெல்லாம் பறித்ததுடன்; அந்தச் சலுகைகளைகளை மீண்டும்வழங்கிடக் கோரிப் போராடிய ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் நள்ளிரவு நேரத்திலும், பெண்கள் என்று பாராமலும், வீடு புகுந்து கைது செய்தும், ஏறத்தாழ1 லட்சத்து 71 ஆயிரம் ஆசிரியர்-அரசுஊழியர்களை வேலை நீக்கம் செய்தும்கொடுமை புரிந்தது இந்தியாவிலேயே அ.தி.மு.க. அரசு ஒன்றுதான்என்பதையும் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.
அத்துடன், அண்மைச் சில ஆண்டுகளாக, ‘தகுதித்தேர்வு’ என்ற ஒன்றைப் புகுத்தி, அதையும் ஆண்டுதோறும் நடத்திடாமல், ஆசிரியர் பயிற்சி பெற்ற பலர்வேலை கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் நிலையைஇன்றைய அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆசிரியர் சமுதாயம் அடைந்திடும் இன்னல்களை எண்ணி வேதனைப்படாமல் இருந்திடமுடியவில்லை.

இந்நிலையில்ஆசிரியர் சமுதாயத்திற்கு எந்த நாளிலும் அரணாகவிளங்கிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்சார்பில் தமிழக ஆசிரியர் அனைவர்க்கும்எனது ‘ஆசிரியர் தின’ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துமகிழ்கிறேன்.

CPS - திட்டத்தில் மரணம் / ஓய்வு பெற்றவர்களுக்கு 537 க்கு மட்டுமே கட்டிய பணம் திரும்ப வழங்கியுள்ளதாக கருவூலக கணக்கு இயக்குனரகம் அறிவிப்பு

நாடு முழுவதும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகள் மீதான தடையை நீக்கியது யுஜிசி

நாடு முழுவதிலும் உள்ள திறந்த நிலைப்பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும்பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளுக்குவிதிக்கப்பட்டிருந்த தடையை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) நீக்கியுள்ளது.


வரும் கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளைமீண்டும் தொடங்க
அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக நாட்டின் 15 திறந்தநிலை பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி கடந்த வாரம்ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் கடந்த 2009 முதல்திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புக்குவிதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாகக்கூறியுள்ளது. என்றாலும் இந்த ஆய்வுப் படிப்புகளில் மற்ற முழுநேரப் பல்கலைக்கழகங்கள் கடைபிடிக்கும் விதி முறைகளில் சிலவற்றைப்பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.
உதாரணமாக, இந்த ஆய்வுப் படிப்புகளுக்குத் திறந்தநிலைப்பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைத்தேர்வு செய்யவேண்டும். இது வன்றி, மாணவர்கள்ஆய்வு செய் யும் பாடங்களைஒட்டி மூன்று யூனிட் அளவிலாகபாட வகுப்பு களும் அவர்களுக்குநடத்தப்பட வேண்டும். இதில் தேர்வு நடத்திஅதில் வெற்றி பின்னரே ஆய்வுகளை தொடர அனுமதிக்க வேண்டும்எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பிடெக், எம்டெக்படித்த மாணவர் களுக்கான ஆய்வுமற்றும் தொழில் வகுப்புகள் கொண்டபாடங்களில் மாணவர் சேர்க்கை கூடாதுஎன்றும் உறுதியாகக் கூறியுள்ளது.
இந்த உத்தரவால், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகளில் அடுத்தஆண்டு முதல், மொழிப் பாடங்கள்மற்றும் வரலாறு, புவியியல், அரசியல்அறிவியல், உளவியல், சமூகவியல் உள்ளிட்ட இதர பாடங் களில்மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் உள்ள 15 திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பல்வேறு பாடப்பிரிவு களில்பட்டம் மற்றும் பட்டமேற் படிப்புகள்உள்ளன. இதில் எம்.பில்மற்றும் பிஎச்.டி ஆய்வுப்படிப்புகளில் பல்வேறு சிக்கல்கள் எழுவதாகவும், இதனால் அதில் தவறுகள் நடப்பதாகவும்மத்திய அரசுக்குப் புகார்கள் வந்தன.
அப்போதுதிறந்தநிலை பல் கலைக்கழகங்களை மத்தியதொலைதூரக் கல்வி கவுன்சில் நிர்வகித்துவந்தது. இந்தப் புகார் களைஆராய்ந்த கவுன்சில் திறந்தநிலை பல்கலைக்கழகங் களில் ஆய்வுப் படிப்புகளுக்கு2009-ம் ஆண்டு தடை விதித்தது. எனினும், மத்திய அரசின் இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகம் மட்டும் ஆய்வுப்படிப்புகளை நடத்தி வந்தது. 2012-ல்திறந்தநிலை பல்கலைக்கழகங்களும் யுஜிசி வழிகாட்டுதலின் கீழ்கொண்டு வரப்பட்ட பின் இது முழுமையாகநிறுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில்திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மற்ற முழுநேரப் பல்கலைக்கழகங்களின்கல்விச் சட்டப்படியே தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருவதாகவும், இதனால் முன்புபோல் ஆய்வுப்படிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும்என்ற கோரிக்கை எழுந்தது. இது தற்போது ஏற்கப்பட்டுஆய்வுப் படிப்புகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

770 அரசு மேல்நிலை பள்ளிகளில் தொடுதிரை கற்றல் வகுப்பறைகள்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம்கற்பிக்கும் வகையில், 'விர்சுவல் கிளாஸ் ரூம்' என்றதொடுதிரை கற்றல் வகுப்பறை அமைக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில், 770 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதற்கட்டமாக, 8.93 கோடி ரூபாயில் இத்திட்டம்செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக
மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது. அதில், 'தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில்கம்ப்யூட்டர், ஹார்டுவேர்ஸ், கேமரா, புரொஜக்டர், ஸ்பீக்கர், மைக் சிஸ்டம் பொருத்தும் பணிகளைஅவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தொடுதிரை வகுப்பறைக்கு என, பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளஇணையதள வசதியை அதற்கு மட்டுமேபயன்படுத்த வேண்டும்.
பிற அலுவலக பணிக்கு பயன்படுத்தவோ, மின்னஞ்சல் பார்க்கவோ, பதிவிறக்கம் செய்யவோ கூடாது' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேனி முதன்மை கல்விஅலுவலர் வாசு கூறியதாவது: தேனிமாவட்டத்தில், ஆண்டிபட்டி, கெங்குவார்பட்டி, சிலமலை, கொடுவிலார்பட்டி, தெப்பம்பட்டி, லட்சுமிபுரம் உட்பட, 22 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொடுதிரை கற்றல்வகுப்பறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையானகம்ப்யூட்டர் உள்ளிட்ட தளவாட பொருட்களை பொருத்தும்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம்தோறும் தலா, 1,000 ரூபாய் வீதம் இணையதளபயன்பாட்டிற்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
மாணவர்கள்பாடத்தை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில், 'சிடி' மூலம் வகுப்பறையில்பாடம் நடத்த சம்பந்தப்பட்ட பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர், முதல் வாரத்தில் பணிகள்நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

மாநில நல்லாசிரியர் விருதுக்கு சேலம் மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் தேர்வு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருதுக்குத்தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2015-16 ஆம்ஆண்டுக்கான உயரிய டாக்டர் ராதாகிருஷ்ணன்விருதுக்கு, சேலம் மாவட்டத்தில் உள்ள13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநிலநல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள்விவரம்:
1. ந.பாஸ்கரன், தலைமை ஆசிரியர், ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளி, இருசனாம்பட்டி, வீரபாண்டி. 2. யா. ஜான் லூர்தாஸ், தலைமைஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, கொண்டலாம்பட்டி, பனமரத்துப்பட்டி. 3. பி.ஸ்ரீவித்யா, தலைமைஆசிரியர், மாநகராட்சி தொடக்கப் பள்ளி, அம்மாப்பேட்டை.
4. கை.சண்முகவள்ளி,தலைமை ஆசிரியர், ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி, சாமிநாயக்கன்பட்டி, ஓமலூர்.
5. மு.செல்வி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கோணங்கியூர், கொங்கணாபுரம். 6. க.மேகலா, தலைமைஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, எம்.பழக்காரனூர், மேச்சேரி.
7. இரா.ஜெயந்தி, தலைமை ஆசிரியர், நகரவைமகளிர் மேல்நிலைப் பள்ளி, அம்மாப்பேட்டை. 8. பெ. சுசீந்திரன், தலைமை ஆசிரியர், நகரவைஉயர்நிலைப் பள்ளி,
புதுத்தெரு, கிச்சிப்பாளையம். 9. பெ.சுமதி, தலைமைஆசிரியர், அரசினர் மேல்நிலைப் பள்ளி, நட்டுவம்பாளையம், சேலம். 10. எ.மரியமெர்லின், தலைமைஆசிரியர், அரசினர் (ம) மேல்நிலைப் பள்ளி, ஜலகண்டாபுரம்.
11. இரா.செல்லதுரை, முதல்வர், சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுப்பாளையம்.

12. சு.பியூலா ஞானபூஷனம், முதுகலைஆசிரியர், குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம். 13. க.கண்ணகி, முதுநிலைவிரிவுரையாளர், மாவட்ட ஆசிரியர் கல்விமற்றும் பயிற்சி நிறுவனம், உத்தமசோழபுரம். இந்த விருதுகள் சென்னை சாந்தோம் செயின்ட்பீட்ஸ் பள்ளி வளாகத்தில் செப்டம்பர்5 ஆம் தேதி மாலை 4 மணிக்குநடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது என மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி தெரிவித்துள்ளார்.

‘ஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. எந்த நாளிலும் அரணாக விளங்கிடும்’ கருணாநிதி – ஆசிரியர் தின வாழ்த்து.

 ஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. எந்த நாளிலும் அரணாக விளங்கிடும் எனகருணாநிதி தனது ஆசிரியர் தினவாழ்த்து செய்தியில் கூறி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில்கூறியிருப்பதாவது:–


 ஆசிரியர்களுக்கு விருது ஆசிரியர்களை ஏணிப்படிகள்என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள் மட்டுமல்லர்; அவர்கள் கோபுர
கலசங்களாகவும்உயர்ந்திட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர்டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். அவர்ஆசிரியப் பணிபுரிந்து, அறிவாற்றலால் உயர்ந்து, தம் சான்றாண்மைக் குணங்களால்சிறந்து, குடியரசுத் தலைவராக விளங்கிப் புகழ்படைத்தவர்! அவர் பிறந்த நாளானசெப்டம்பர் 5–ம் நாள், ‘‘ஆசிரியர்தினம்’’ என ஆண்டுதோறும் எழுச்சியுடன்கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் வருங்காலத் தலைமுறை மக்களை அறிவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டுத் திறனிலும், சீரிய பண்பாட்டு உணர்விலும்சிறந்தவர்களாக உருவாக்கிடும் திருப்பணியில் வாழ்நாள் முழுவதும் தொண்டுகளாற்றிடும் பெருமைக்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்படுகிறது. எண்ணற்ற சலுகைகள் ஆசிரியர் சமுதாயம் மகிழும் வகையில், ‘‘நல்லாசிரியர்விருது’’ என வழங்கப்பட்ட அந்தவிருதின் பெயரை, 1997–ல், “டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் விருது“ எனப் பெயர்மாற்றம் செய்து வழங்கிட வகைசெய்தது தி.மு.க. அரசு. அத்துடன், ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்வு கருதி உயர்கல்விக்கு ஊக்கஊதியம்; ஈட்டிய விடுப்பு நாட்களைச்சரண் செய்திடும் ஆசிரியர்களுக்கு அந்நாட்களுக்கான ஊதியம்; 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வுநிலை ஊதியம்; 20 ஆண்டுகள் பணி முடித்தால் சிறப்புநிலை ஊதியம்; தமிழாசிரியர்களிடையே இருநிலைநீக்கம்; தமிழாசிரியர்களின் ‘புலவர்’ பட்டயம் ‘பி.லிட்’ பட்டமாக மாற்றம்; தமிழ் ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு; ஆசிரியர்–அரசு ஊழியர்களுக்கு மத்தியஅரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்கள்; அகவிலைப்படிகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப்பணிப் பாதுகாப்பு; நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களாக்கியது; பதிவுமூப்பு அடிப்படையிலேயே பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்தது; தொகுப்பூதியஆசிரியர் நியமன முறையை அடியோடுரத்து செய்தது என எண்ணற்றசலுகைகளை ஆசிரியர்களுக்கு வழங்கியது தி.மு.க. அரசு.  ‘ஆசிரியர்தின’ நல்வாழ்த்துகள் இவைமட்டுமல்லாமல், 19 ஆண்டுகால தி.மு.க. ஆட்சிக் காலங்களில் நான்கு முறை ஊதியக்குழுக்களை அமைத்து; ஆசிரியர் சமுதாயமும், அரசு ஊழியர்களும் உயர்ந்தஊதியங்களைப் பெற்று மகிழ்ந்திடவும் ஆசிரியர்–அரசு ஊழியர் குடும்பங்களின்வாழ்க்கைத் தரம் உயர்ந்திடவும் வழிவகைசெய்ததும் தி.மு.க. அரசே என்பதனை இந்நாளில் நினைவுபடுத்திடவிரும்புகிறேன். ஓர் ஆசிரியருக்கு வேலைகொடுத்தால் அவர் குடும்பம் உயரும்; அவரைச் சுற்றியுள்ள உறவினர்கள் மகிழ்வர்; அவர்கள் குடும்பத்தில் வறுமைவிரட்டப்படும்; சமுதாயம் முன்னேற்றம் காணும் என்ற அடிப்படையில்தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்கும் காலங்களில் எல்லாம் அதிக அளவில்ஆசிரியர் நியமனங்களைச் செய்துள்ளது. இவ்வாறு ஆசிரியர் சமுதாயத்திற்குஎந்த நாளிலும் அரணாக விளங்கிடும் தி.மு.க.வின்சார்பில் தமிழக ஆசிரியர் அனைவருக்கும்எனது ‘ஆசிரியர் தின’ நல்வாழ்த்துகளை தெரிவித்துமகிழ்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3/9/16

பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் சட்டசபையில் மசோதா தாக்கல்

அரசுப் பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் கொண்ட சட்டமசோதாவை நிதி, பணியாளர் மற்றும்நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார்.

அதன் விவரம் வருமாறு:

அரசுப் பணிகள் மற்றும் பதவிகளுக்கு பணியமர்த்தப்படும் நபர் களின் நியமனம் மற்றும் பணி வரன்முறை ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன. தற்போது சட்டமன்றத்தின் சட்டம் ஒன்றினால் அத்தகைய பணிகள் மற்றும் பதவிகளுக்கு பணியமர்த்தப்படும் நபர் களின் நியமனம், பணி வரன்முறையை ஒழுங்குமுறைப்படுத்தும் வகைமுறை களைச் செய்வது என்று அரசு முடிவு செய்திருக்கிறது. அதனுடன் செயல்படும் வகையில் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகள் விதிகளின் பகுதி-1, பகுதி-2 ன் வகைமுறைகளை உள்ளடக்கும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் அரசால் வகுத்துரைக்கப் பட்டுள்ள சுழற்சி முறையிலான தெரிவுக்கிணங்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது பிற நியமன முகமைகள் அல்லது பதவி யமர்த்தும் அதிகார அமைப்புகளால் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பணிமூப்புக்காக வகை செய்யும் பொருட்டு, ஒரு பணியில் பதவியமர்த்தம் செய்யப்பட்டதற்கான நபர்களின் பணிமூப்புக்கென தனியாக சட்டம் கொண்டு வருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.பிரிவு அல்லது இனம் அல்லது தரம் ஒதுக்கீட்டின் விதி மற்றும் சுழற்சிமுறை ஆணைப்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது பிற நியமன முகமைகள் அல்லதுபதவியமர்த்தும் அதிகார அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட பட்டியலில் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வரிசையிடத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண் டும் என்று சட்டமசோதாவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை நடைபெறும் பள்ளி தேர்வுகளை நடத்தும் பொறுப்பு மேல்நிலை உதவி தலைமையாசிரியரே - தகவல் அறியும் உரிமைச் சட்ட தகவல்

ஆசிரியர் கவுன்சிலிங் விதிமுறையில் மாற்றம்

தமிழகத்தில், இன்று துவங்கும் பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சிலிங்கில் சில மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இன்று மாவட்டத்திற்குள் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. நாளை, மாவட்டங்களுக்கு இடையே நடக்கிறது. 


இரு கவுன்சிலிங்குகளும் கடந்த ஆண்டு வரை, 'ஆன்லைன்' மூலம் நடத்தப்பட்டன. மாவட்டத்திற்குள் இடமாறுதல் கவுன்சிலிங்கை, 'ஆன்லைனில்' நடத்துவதால், 'சீனியர்' ஆசிரியர்கள் முன்னுரிமை அடிப்படையில் இடங்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. 'ஜூனியர்' ஆசிரியர்களே அதிக பலன் அடைந்தனர். இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து மாவட்டத்திற்குள் இடமாறுதல் கவுன்சிலிங்கை, 'ஆன்லைனில்' இல்லாமலும், மாவட்டங்களுக்கு இடையே, 'ஆன்லைனிலும்' நடத்த பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜூ கூறுகையில், “ புதிய நடைமுறையால் சீனியர் ஆசிரியர்கள் இடங்களை தேர்வு செய்வதில் சிக்கல் இருக்காது.

அதேபோல் மாவட்டங்களுக்கு இடையே, 'ஆன்லைனில்' நடத்தும்போது, ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு அலைவது தவிர்க்கப்படும்,” என்றார்.

புதிய ஓய்வூதியத் திட்டம் : அரசு ஊழியர் வலியுறுத்தல்

முதல்வர் ஜெ., 110 விதியின் கீழ் அறிவித்தபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்' என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியது.



மதுரையில் சங்க மாநில செயலாளர் செல்வம் கூறியதாவது: நேற்று நடந்த வேலை நிறுத்தத்தில், அரசு ஊழியர்கள் நான்கு லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ் இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக முதல்வர் கடந்த பிப்., 19ல் சட்டசபையில் அறிவித்தார்.


அந்த அறிவிப்பு இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள் என நான்கு லட்சம் ஊழியர்கள் தொகுப்பூதியம் பெறுகின்றனர். அவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் நலனை கருதி மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும். எட்டாவது சம்பளக்குழுவை அமைக்க வேண்டும், என்றார்.

ஆசிரியர் கற்பித்தல் பயிற்சியில் : கல்வித்துறை உத்தரவால் குழப்பம்

தொலைதுார கல்வி மூலம் பி.எட்., படிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் பயிற்சி பெறும் விஷயத்தில், கல்வித் துறையின் முரண்பட்ட உத்தரவால் குழப்பம் அடைந்துள்ளனர்.


பி.எட்., படிக்கும் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள் விடுப்பு எடுத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கற்பித்தல் பயிற்சி பெற்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இதையடுத்து விடுப்பு எடுக்காமலேயே, அவரவர் பணி புரியும் நடுநிலை பள்ளிகளிலேயே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள, 2015 மார்ச், 13 ல் பள்ளிக் கல்வி செயலர் உத்தரவிட்டார். இதே நிலை தான் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் உள்ளன.


கடந்த ஆக., 11 ல் தொடக்க கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில், 'அவரவர் பணிபுரியும் பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுத்தாலும் விடுப்பு எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி செயலர் விடுப்பு எடுக்க தேவையில்லை எனவும்; தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் விடுப்பு எடுக்க வேண்டும் எனவும் கூறியிருப்பது ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜன் கூறியதாவது:

கல்வித்துறையின் முரண்பட்ட உத்தரவால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தற்போது தொலைதுார கல்வியில் கற்பித்தல் பயிற்சியை, 90 நாட்களாக பல்கலைகள் அதிகரித்துள்ளன. அதிக நாட்கள் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போது மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே, பள்ளி கல்வி செயலரின் உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்

இடைநிற்றல் குழந்தைகளை கண்காணிக்க புதிய 'சாப்ட்வேர்'

சிவகங்கை: பள்ளியில் சேர்க்கப்பட்ட இடைநிற்றல் குழந்தைகளை கண்காணிக்க புதிய 'சாப்ட்வேர்' செயல்படுத்தப்பட உள்ளது. ஆறு முதல் 14 வயதுடைய இடைநிற்றல் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி செல்லாத அல்லது இடைநிற்றல் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
2011--12 ல் 63,178 இடைநிற்றல் குழந்தைகள் இருந்தன. 2015--16 ல் 43,455 ஆக குறைந்துள்ளது. இதில் 42,443 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகளை கண்காணிக்க அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் புதிய 'சாப்ட்வேர்' செயல்படுத்தப்பட உள்ளது. இதில் இடைநிற்றல் குழந்தைகளின் முழு விபரம், தொடர் மதிப்பீடு, அதிகாரிகளின் ஆய்வு போன்றவை பதிவு செய்யப்பட உள்ளன. இதன் மூலம் அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய முடியும். படிப்பை கைவிட்டாலும், அவர்களை எளிதில் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

"மாணவர்கள் அறிவு தேடலில் இருந்தால் அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளிவரும்

மாணவ, மாணவிகள் அறிவு தேடலில் இருந்தால் மட்டுமே பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரமுடியும் என, தமிழ்நாடு கடலோரக் காவல் படை கூடுதல் இயக்குநர் சி. சைலேந்திர பாபு அறிவுறுத்தினார்.


விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சைலேந்திர பாபு மேலும் பேசியதாவது:

பிளஸ் 2 தேர்வில் 6 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்தாலும், சுமார் 2 லட்சம் பேர் மட்டுமே உயர் கல்வி கற்கும் வாய்ப்பை பெறுகின்றனர். மாணவர்கள் அறிவு தேடலில் ஆர்வம் காட்டினால், அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர முடியும். இந்தியா வல்லரசாக வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். ஒவ்வொருவரும் அவரவர் கடமையைச் செய்தாலே இந்தியா வல்லரசாகி விடும். ஆசிரியர்கள் அதிக புத்தகங்கள் வாசித்தால் மட்டுமே மாணவர்களின் திறனுக்கேற்ற அறிவு தேடலை கொடுக்கமுடியும்.

மாணவ, மாணவியர் வீட்டில் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால், மகிழ்ச்சி, உழைப்பு, வெற்றி என்ற தாரக மந்திரத்தை மனதில் வைத்து கடினமாக உழைக்க வேண்டும். இந்திய ஆட்சிப் பணி, குடியுரிமை தேர்வுகளுக்கு இலவசமாக ஆலோசனை மற்றும் உதவிகள் செய்து வருகிறேன். எனவே, என்னை இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

பின்னர், மாணவ, மாணவிகள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறை தலைவர் கதிர்வளவன் வரவேற்றார். முடிவில், சுயநிதிப் பாட பிரிவு இயக்குநர் அசோக்குமார் நன்றி கூறினார்.

"ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் முதல்வர் பரிசு தொகைக்கு விண்ணப்பிக்கலாம்'

பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதி திராவிட, பழங்குடியின மாணவ, மாணவியர் முதல்வர் பரிசுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, அத்துறை அலுவலர் தனலிங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று, தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பயின்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இனத்தைச் சோóந்த தலா 1000 மாணவ, மாணவியருக்கு முதல்வர் பரிசுத் தொகை ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதன்படி, 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் 1073 மதிப்பெண் களுக்கு மேல் எடுத்த மாணவர்கள், 1,101-க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, மாணவ, மாணவியர் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் சாதிச் சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் தங்களது கல்லூரி மூலம் முதல்வர் பரிசுத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

21 லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினிகள்: தணிக்கை அறிக்கையில் தகவல்

தமிழகத்தில் 2011-15 காலக்கட்டத்தில் ரூ.3,231 கோடியில் 21,29,196 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிதி, வருவாய், பொது-சமூகப் பிரிவு என தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கணக்காய்வு, தணிக்கை குறித்த அறிக்கை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. பொது-சமூகப் பிரிவு கணக்காய்வு, தணிக்கை அறிக்கையில் மடிக் கணினி விநியோகம் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் விவரம்:-

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ""விலையில்லா மடிக் கணினிகள் வழங்குதல்'' எனும் திட்டத்தை ஜூன் 2011-இல் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டதா, மடிக் கணினிகளைப் பயன்படுத்த போதுமான ஆதரவு சேவைகள் அளிக்கப்பட்டனவா என்பதை மதிப்பீடு செய்ய கடந்த ஆண்டு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், 21,90,683 மடிக்கணினிகளில் 21,69,196 மடிக்கணினிகள் விநியோகம் செய்யப்பட்டதுபோக, 21,487 மடிக்கணினிகள் மாவட்டங்களின் வசம் உள்ளன.

கல்வி ஆண்டு முடிந்த பின்னர்...தமிழ்நாடு மின்னணு நிறுவனத்துக்கு ("எல்காட்') நிதிகள் தாமதமாக விடுவிக்கப்பட்டதால், மாணவர்களுக்கு மடிக் கணினிகள் கல்வி ஆண்டு முடிந்த பின்னரே விநியோகிக்கப்பட்டன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுயநிதி படிப்புப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும், அவர்கள் திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்களாக இருந்தும் மடிக் கணினிகள் வழங்கப்பட்டன.

பள்ளிகள், கல்லூரிகளில் நடந்த மடிக் கணினிகள் திருட்டு காரணமாக ஏற்பட்ட இழப்பு, மடிக்கணினிகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் இருந்த குறைபாட்டை சுட்டிக்காட்டுகிறது என்று இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

பணி நிரவலில் முறைகேடு: அதிருப்தியில் ஆசிரியர்கள்

திருவள்ளூர் மவாட்டத்தில், கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த பணி நிரவல் கலந்தாய்வில் பல்வேறு விதிமீறல்கள், முறைகேடுகள் நடைபெற்றதாக பட்டதாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கடந்த மாதம் 27, 28 }ஆம் தேதிகளில் நடைபெற்றது.


திருவள்ளூரில் முகமது அலி தெருவில் உள்ள தனியார் பள்ளியில் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிலையில், பல்வேறு குழப்பங்களுடன் கலந்தாய்வு நடந்து முடிந்ததாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:

சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்குமாறு 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. அன்று மாலை 4.30 மணி வரை தகவல் தெரிவிக்கப்படாததால், சிலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். சிலருக்கு செல்லிடப்பேசியில் தொடர்பு கிடைக்காததால், தகவல் தெரிவிக்க முடியவில்லை.

இதற்கான கடிதமும் முறைப்படி வழங்கப்படவில்லை. இருப்பினும், தகவலறிந்த ஆசிரியர்கள் சனிக்கிழமை காலை அங்கு வந்தனர்.

இதில், பாட வாரியாக கலந்தாய்வில், ஒரு பாடத்துக்கு அரை மணி நேரம் வீதம் ஒதுக்கப்பட்டு காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

பள்ளிகள் அமைந்திருக்கும் இடம், பல ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து அறிந்து கொள்ளவும், கலந்தாலோசிக்கவும் நேரம் வழங்கப்படவில்லை.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அளித்திருந்த புள்ளிவிவரங்கள் பெரும்பாலானவை தவறாக இருந்தன.

பணியில் சேர்ந்த தேதி, தற்போது பணிபுரியும் பள்ளியில் சேர்ந்த தேதி வெவ்வேறாக இருந்தும், பணியில் சேர்ந்த தேதியை தற்போது பள்ளியில் சேர்ந்த தேதியாக தவறுதலாக தலைமை ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர். மாற்றுத் திறனாளிகள் குறித்த விவரங்களையும் தலைமை ஆசிரியர்கள் குறிப்பிடவில்லை.

இந்த பணி நிரவலில் வெளியகரம், வெள்ளியூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, போரூர், திருமுல்லைவாயல், பொதட்டூர்பேட்டை, திருவாலங்காடு, பாண்டேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், செல்வாக்குள்ள சில ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணைகளை ரத்து செய்துகொண்டு, தேவையான பள்ளிக்கு மாற்றுவதற்கான ஆணையை திங்கள்கிழமை வாங்கிச் சென்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, கல்வித் துறை அதிகாரிகள் இக்கலந்தாய்வு குறித்து உரிய விசாரணை நடத்தி மீண்டும் பணி நிரவலை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேந்திரீய வித்யாலயா பள்ளி: விதிகளைத் தளர்த்த மத்திய அரசு முடிவு

கேந்திரீய வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான விதிமுறைகளை தளர்த்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இப்பள்ளிகளை அமைக்க போதிய அளவில் நிலம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இப்போது கிராமப் பகுதிகளில் கேந்திரீய வித்யாலயா பள்ளி தொடங்க 10 ஏக்கர் நிலமும், நகர்ப்புறங்களில் 8 ஏக்கர் நிலமும், பெருநகரங்களில் 4 ஏக்கர் நிலமும் தேவை என்று விதி உள்ளது. இந்த நில அளவை குறைத்துக் கொள்வது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. ஏனெனில், பள்ளிகளை அமைக்க போதிய அளவு நிலம் ஒரே இடத்தில் கிடைப்பதில் தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது.

நாட்டில் இப்போது ஆயிரத்துக்கும் அதிகமான கேந்திரீய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இப்பள்ளிகளைத் திறந்து வருகிறது

ஆசிரியையின் ஏடிஎம் அட்டையை மாற்றி ரூ.1.20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஆசிரியை உள்பட பலரிடன் ஏடிஎம் அட்டையை நூதன முறையில் பறித்து பணமோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் மதுரையைச் சேர்ந்த ஆசிரியை மகாலட்சுமி (35) பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மார்ச் 1-ஆம் தேதி செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசிய வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்தார். அவர் பணம் எடுத்த போது ரசீது மட்டுமே வந்துள்ளது.


இதைப் பார்த்த இளைஞர் ஒருவர் தன்னை காவலர் என்று கூறிக் கொண்டு, செல்லிடப்பேசியில் பேசியபடியே மகாலட்சுமிக்கு பணம் எடுக்க உதவினார்.

அப்போது, ரூ.5 ஆயிரத்தை எடுத்து மகாலட்சுமியிடம் கொடுத்துவிட்டு, அவரது ஏடிஎம் அட்டைக்கு பதிலாக மற்றொரு ஏடிஎம் அட்டையை அந்த இளைஞர் கொடுத்துள்ளார். இதைக் கவனிக்காமல் அந்த ஏடிஎம் அட்டையை வாங்கிக்கொண்டு மகாலட்சும் வீட்டுக்குச் சென்றார்.

அந்த இளைஞர் ஆசிரியையின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி செங்கம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம் மையங்களில் ரூ.1.20 லட்சத்தை எடுத்துள்ளார்.

இதுகுறித்த குறுஞ்செய்தி செல்லிடப்பேசிக்கு வந்ததைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மகாலட்சுமி, செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் வழக்குப் பதிந்து, ஏடிஎம் மையத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான அந்த இளைஞரின் புகைப்படத்துடன் கடந்த 6 மாதங்களாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், செங்கம் பேருந்து நிலையத்தில் வியாக்கிழமை மாலை சந்தேகத்தின்பேரில், இளைஞர் ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர்.

அவர் முன்னுக்குபின் முரணான தகவல் தெரிவித்ததை அடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர், செங்கம் அருகே உள்ள மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (32) என்பதும், ஆசிரியை மகாலட்சுமியிடம் ஏடிஎம் அட்டையை மாற்றி ரூ.1.20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதுடம் தெரிய வந்தது.

மேலும், இறையூர் கிராமத்தில் ஒருவரிடம் ரூ.12 ஆயிரம் உள்பட பலரிடம் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, சங்கர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கையொப்பமிட எந்த மையினைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான அரசின் கடிதம்.

சவாலை சந்திப்பாரா புதிய பள்ளி கல்வி அமைச்சர்?


பள்ளி கல்வித்துறைக்கு, புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட நாட்களாக சவாலாக இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா என, ஆசிரியர் சங்கங்களும், பெற்றோரும் எதிர்பார்த்துள்ளனர். பள்ளிக்கல்வி அமைச்சராக, பெஞ்சமின் இருந்தபோது, ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில், முறைகேடுகள் ஓரளவு களையப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் பாராட்டு தெரிவித்தன. தற்போது, புதிய அமைச்சராக மாபா பாண்டியராஜன் பதவியேற்றுள்ளார். இவரும், ஒரு கல்வியாளர் என்பதால், பள்ளிக் கல்வியில், மாற்றங்கள் ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. கல்வித்துறை உயர் அதிகாரிகள், அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்களின் நெருக்கடிகளை தாண்டி, அமைச்சரால் மாற்றத்தை கொண்டு வரமுடியுமா என்ற கேள்வி எழுகிறது.




சவால்கள் என்ன? : 




● ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை உள்ள, 10 ஆண்டு கால பழமையான பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்

'பயோ மெட்ரிக்' திட்டத்தை முறையாக அமலுக்கு கொண்டு வந்து, 'ஓபி' அடிக்கும் ஆசிரியர்கள் மீது, தைரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆசிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான, புதிய பங்களிப்பு திட்டம் ரத்து செய்வது குறித்து, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும்

தொடக்க பள்ளிகளில், ஒற்றை இலக்க மாணவர் சேர்க்கையை, அதிகரிக்க வேண்டும்

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண்ணை உயர்த்த வேண்டும்

பொதுத் தேர்வுகளில், முறைகேடுகளை கட்டுப்படுத்த, தேர்வுமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இணையாக, நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளில், அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற, திட்டம் வேண்டும்

அரசு பள்ளி ஆசிரியர்கள், அடிக்கடி இடம் மாறுவதையும், அரசு நிகழ்ச்சிகள், அலுவலக பணிகளில் ஈடுபடுவதை தடுத்து, கற்றல் முறையை கண்காணிக்கும் திட்டம் கொண்டு வரவேண்டும்

நலத்திட்டங்களை செயல்படுத்துதல், அதற்கான பொருட்களை கொள்முதல் செய்தலுக்கான, டெண்டர் போன்றவற்றில், வெளிப்படைத்தன்மை வேண்டும்

திறமையான அதிகாரிகளை ஊக்குவிப்பதுடன், பதவி உயர்வில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இப்படி, ஏராளமான பணிகள், புதிய அமைச்சர் முன் காத்திருக்கின்றன. புதிய அமைச்சர், சிறந்த கல்வியாளர் என்பதால், அவரே நேரடியாக, 'பைல்கள்' பார்த்து, முடிவெடுப்பார் என, ஆசிரியர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

2/9/16

அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை 9 மாதமாக உயர்த்தப்படும் - முதல்வர் அறிவிப்பு

CPS - திட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்

CPS -பற்றிவிளக்கும் சிறு புத்தகம் தயாரிக்கப்பட்டுவருகிறது. புதிய ஓய்வூதிய திட்டத்தின்பாதிப்புகள் ,வடிவம்  ஓய்வூதியவரலாறு தற்போதைய நிலை, பத்திரிகை செய்திகள், CPS திட்டம் பற்றிய கேள்விகள் , பழையமற்றும் புதிய ஓய்வூதிய திட்டவேறுபாடுகள்  உள்ளிட்டவை  இடம்பெற்றுள்ளது. இப் புத்தகம் வேண்டுவோர்தொடர் கொள்க.
தொடர்புக்கு:

திரு-பிரெடெரிக் எங்கெல்ஸ் - 96299-27400
C.கார்த்திக்-98654-45689

CPS ACCOUNT SLIP-2015-2016

TRB appointment BT(Maths) Regularisation

துப்புரவு பணியாளர் ஊதியம் CM Cell Letter

DSE:புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது மின்னணு மேலாண்மை மூலம் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக..



Cps பிடித்த தொகையில் missing credit வருகிறது எனில் விடுபட்ட தொகையை சரி செய்ய வேண்டும் எனில் கீழ்கண்ட Missing credit form - ஐ பூர்த்தி செய்து Aeeo அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். CPS MISSING CREDITS

முக்கிய அறிவிப்பு :பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செல்வோர் கவனத்திற்கு...

அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி  பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 04.09.2016 அன்று   மாறுதல் கோரியுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 

விண்ணப்பம் சமர்ப்பித்துள்ள ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவலரிடம் 2 மாறுதல் விண்ணப்பங்களில் 02.09.2016 மாலைக்குள்  கையொப்பம்  பெற்று மாறுதல் கோரியுள்ள மாவட்டத்தில்  04.09.2016 அன்று  கலந்தாய்வில்  கலந்துகொள்ள வேண்டும் .

தமிழகத்தில் 250 அரசுப் பள்ளிகளில் மனித உரிமை மாணவர் மன்றம்: பள்ளிக் கல்வித்துறை புதிய ஏற்பாடு.

மாணவர்கள், குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைத் தெரிந்துகொள்ளும் நோக்கில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உள்ள 250 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மனித உரிமை மாணவர் மன்றங்கள் அமைக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.

குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைக் கலாச் சாரமாக வளர்த்தெடுக்கும் நோக்கில், தமிழக அரசும், மனித உரிமைக் கல்வி நிறுவனமும் இணைந்து கடந்த ஆண்டு 6 மாவட்டங்களில் உள்ள 120 அரசுப் பள்ளிகளில் முதற்கட்டமாக மனித உரிமை மாணவர் மன்றங்களைப் பரிசோதனை முறையில் தொடங்கி இருந்தன.தற்போது 2015-16 கல்வியாண்டில் 15 மாவட்டங்களில் கூடுதலாக 250 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்மனித உரிமைக் கல்வி மற்றும் மனித உரிமை மாணவர் மன்றங்களைத் தொடங்க பள்ளிக்கல்வி இயக்குநர் அனுமதி வழங்கி உள்ளார்.

இதுகுறித்து மனித உரிமைக் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் கூறியதாவது: நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்றால் மனித உரிமை கல்வி அவசியம். வசதியானவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அதனால், தற்போது பரம ஏழைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தரமானவர்கள். அவர்கள் வழங்கும் கல்வியும் தரமானதே. ஏதாவது ஒரு கல்வியாளர், கல்வியில் நிபுணத்துவம் பெற்றவர்கள், தனியார் பள்ளிகள் நடத்துவோர் ஒரு காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள், ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்களாகவே உள்ளனர்.தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சரியான கல்வி கொடுத்து, அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதும், மாணவர்களைத் தக்கவைப்பதும் ஆசிரியர்களுக்குச் சவாலாகவேஇருக்கிறது. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலம், அறிவியல், கணிதம் சார்ந்த கல்விகள், தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மாணவர்கள் ஓய்வில்லாமல் பெற்றோர், ஆசிரியர்கள் ஆசையை நிறைவேற்றும் இயந்திரமாக மாறிவிட்டனர். அதனால், குழந்தைகளின் கனவுகள் நிறைவேறும் இடமாக தற்போது பள்ளிகள் இல்லை. நேசிக்க வேண்டிய ஆசிரியர்களையே மாணவர்கள் எதிரிகளாகப் பார்க்கும் நிலை உள்ளது.

இப்பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து மாணவர்கள்,ஆசிரியர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தி கல்வி, ஒழுக்கத்தில் மாணவர்களைச் சிறந்தவர்களாக் கவும், அவர்களுக்கான மனித உரிமைகளை அறிந்துகொள்ளவும் இந்த மனித உரிமை மாணவர் மன்றம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சமத்துவம், தங்கள் உரிமைகளை அறிதல், மற்றவர்களை அறிதல், ஒற்றுமை, பாலினம் போன்றவற்றை அறியும் வாய்ப்பை பெறுகின்றனர் என்றார்.சமத்துவம், தங்கள் உரிமைகளை அறிதல், மற்றவர்களை அறிதல், ஒற்றுமை, பாலினம் போன்றவற்றை அறியும் வாய்ப்பை பெறுகின்றனர்.

TNPSC:குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் ஆறரை லட்சம் பேர் விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்.8 கடைசி நாள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண் ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

5,451 காலியிடங்கள்

தமிழக அரசின் பல்வேறு துறை களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டிருந்தது.
இதற்கான ஆன்லைன் விண்ணப் பம் கடந்த ஆகஸ்டு 9-ம் தேதி தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி, 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரி வித்தார்.ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும். இன்னும் 8 நாள்கள் காலஅவகாசம் இருப்பதால் சுமார் 11 லட்சம் பேர் விண்ணப்பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வுக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணச் சலுகை

குரூப்-4 தேர்வுக்கு கட்டணமாக ரூ.75 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிரந்தரப் பதிவுக்கென ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தைப் பொருத்த வரையில், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் தேர்வுக் கட்டணம்ஏதும் செலுத்தத் தேவையில்லை. பிசி, பிசி (முஸ்லிம்) எம்பிசி, டிஎன்சி வகுப்பினர் பட்டதாரியாக இருப்பின் 3 முறை மட்டும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

நவம்பர் 6-ம் தேதி

3 முறை தேர்வுக் கட்டணச் சலுகையை அனுபவித்தவர்கள் அதன்பிறகு கண்டிப்பாக தேர்வுக் கட்டணம் செலுத்தித்தான்தேர் வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 3 முறை என்ற நிபந்தனையைத் தாண்டி தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பித்து ஒருவேளை பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அத்தகைய விண்ணப்பதாரர்கள் பிரச்சி னையை எதிர்கொள்ள நேரிடும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். எனவே, கட்டணச்சலுகை வாய்ப்பு பெற்றிருப்பவர்கள், எத்தனை முறை கட்டணச்சலுகையை பயன் படுத்தியுள்ளோம் என்பதை உறுதி செய்துவிட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது

Directorate of Government Examinations SSLC Supplementary Examinations, September / October 2016 Time Table

ஆசிய பல்கலை., பட்டியலில் இந்தியாவின் நிலை

ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உயர்கல்வி வழங்குவதில் முன்னணியில் இருப்பது ஐ.ஐ.டி., எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம். தற்போது நாடு முழுவதும் 23 ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. 


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அடுத்ததாக உயர்கல்வியில் இன்ஜினியரிங் படிப்பை ஐ.ஐ.டி., யில் படிக்க வேண்டும் என்பது தான் பலரின் ஆசை மற்றும் இலக்காக உள்ளது. நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் சேரலாம். அதுபோல பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.,) கல்வி நிறுவனமும் புகழ் பெற்றது. 

இவ்வளவு பெருமை மிக்க நமது ஐ.ஐ.எஸ்சி., மற்றும் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் ஆசிய 

நாடுகளின் சிறந்த பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

பிரிட்டனின் முன்னணி செய்தி நிறுவனமான 'ராய்ட்டர்ஸ்' ஆசியாவின் சிறந்த பல்கலைக்
கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 75 கல்வி 
நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தியா எத்தனை:

இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து 2 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஐ.ஐ.டி., 72வது இடத்தையும், பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி., (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்) 73வது இடமும் பெற்றுள்ளது.

என்ன காரணம்

இந்தியாவின் சிறந்த ஐ.ஐ.டி.,களான மும்பை மற்றும் டில்லி ஆகியவை இந்த பட்டியலில் உயர்ந்த இடத்தை பெற்றிருக்க முடியும். ஆனால் பல்கலைக்கழகங்கள் என்று கணக்கிடும் போது, இந்தியாவில் அனைத்து ஐ.ஐ.டி., களையும் இணைத்து ஒரே பல்கலைக்கழகமாக வைத்து ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் டில்லி, மும்பை ஐ.ஐ.டி.,களுடன் புதிதாக துவக்கப்பட்ட ஐ.ஐ.டி.,களையும் சேர்க்கும் போது, சராசரி குறைந்து கடைசி இடமே 
கிடைத்துள்ளது.

23: இந்த 75 சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் அதிகபட்சமாக சீனாவின் 23 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் தலா 20, ஆஸ்திரேலியாவில் 6, இந்தியா, சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து தலா 2, நியூசிலாந்து 1 என இடம்பெற்றுள்ளன.

டாப் - 10 பல்கலைக்கழகம்

சிறந்த பல்கலைக்கழகங்களில் முதல் 20 இடங்களில் ஜப்பான் மற்றும் தென்கொரியாவை சேர்ந்த 17 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
1) கே.ஏ.ஐ.எஸ்.டி., பல்கலைக்கழகம், தென் கொரியா
2) டோக்கியோ பல்கலைக்கழகம், ஜப்பான்
3) சியோல் தேசிய பல்கலைக்கழகம், தென் கொரியா
4) ஒசாகா பல்கலைக்கழகம், ஜப்பான்
5) போஹங் பல்கலைக்கழகம், தென் கொரியா
6) டேஹோகு பல்கலைக்கழகம், ஜப்பான்
7) கியோட்டோ பல்கலைக்கழகம், ஜப்பான்
8) சுங்யிங்வான் பல்கலைக்கழகம், தென் கொரியா
9) யோன்சி பல்கலைக்கழகம், தென் கொரியா
10) கியோ பல்கலைக்கழகம், ஜப்பான்

எட்டாம் வகுப்பு 'ரிசல்ட்'

சென்னை: எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள், வரும், 6ல் வெளியாகிறது.
எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, ஏப்., மாதம், பொதுத் தேர்வு நடந்தது. இதன் முடிவு, வரும், 6ல் வெளியாகிறது. ''தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, செப்., 6 முதல், 10 வரை,

அவரவர் தேர்வு எழுதிய மையங்களில், பெற்றுக் கொள்ளலாம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.

ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி : அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும் என்று துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:


ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஓட்டுநர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றிடவும், திறன்களை வளர்த்துக் கொள்ளவும், உரிமம் பெற்றுள்ள 960 ஓட்டுநர்களுக்கு மோட்டார் வாகனப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக தாட்கோ சிறப்பு மையத் திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ரூ.1.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியினர் பாரம்பரிய வேளாண்மை தொழிலைத் தொடரும் வகையில், அங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலையைப் பதப்படுத்த, கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள கோழித்துறையில் பசுந்தேயிலை தயாரிக்கும் இயந்திர அலகு அமைக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.80 லட்சம் ஒதுக்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் தங்களை தகுதிப்படுத்திக் கொள்வதற்காக, 10,299 மாணவர்களுக்கு 11 மாதங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இந்தத் திட்டத்துக்காக, மத்திய சிறப்புத் திட்ட நிதியிலிருந்து ரூ.34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் அவர்.

பள்ளி மாணவருக்கு தூய தமிழ் அகராதிகள்: பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு.

பள்ளி மாணவர்களுக்குத் தூய தமிழ் அகராதிகள் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிவித்தார்.சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு புதன்கிழமை பதிலளித்து அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:
மாணவர்களின் மனதில் நல்ல தமிழ்ச் சொற்களைப் பதிய வைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக வழக்கிழந்து வரும் தூய தமிழ்ச் சொற்களைப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதற்கு உதவிட நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, பட விளக்கத்துடன் கூடிய அகராதியைத் தொகுத்து வகுப்பு வாரியாக கல்வித துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

கலைக் கழகம்:

 தமிழ்மொழியை காக்கும் நோக்கில் அன்றாடம் பயன்பாட்டுக்கு வரும் பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைத் தரப்படுத்தி ஊடகங்களுக்கும், அறிவியாளர்களுக்கும், மொழியியலாளர்களுக்கும் வழங்கும் நோக்கில் அகர முதலி இயக்ககத்தில் தமிழ் கலைக் கழகம் ஏற்படுத்தப்படும்.தமிழ்ச் சொற்களைப் பகுத்தறிந்து அறிவியல் நோக்கில் ஆய்வு செய்து, புதிய கலைச் சொற்களை உருவாக்க விரும்புவோருக்கு உதவிடவும், தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளின் தமிழ்ப் பாடத் தேர்வர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் வகையிலும் தமிழ்ச் சொற்களின் சரியான வேர்ச் சொற்களைத் தொகுதித்து வேர்ச் சொல் சுவடி எனும் நூல் அச்சிட்டு வெளியிடப்படும்.

தமிழாய்வு அரங்கம்:

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் அயல்நாட்டறிஞர் அழைக்கப்பட்டு தமிழாய்வு அரங்கம் நடத்தப் பெறும். இந்த அரங்கம் நடத்தப்படுவதால் தமிழுக்கு புதிய ஆய்வு நூல் கிடைப்பதோடு தமிழாய்வு மேலும் செம்மையுறும்.தமிழியல் ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில், தமிழ் இலக்கியம் தடம் பதித்த 116 ஆண்டுகள் என்ற தலைப்பின் கீழ், 1900 முதல் 2016 வரை வெளிவந்த இலக்கிய நூல்களின் விவர அட்டவணை தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிடப்படும்.கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு நூலகம் சீராக்கி பராமரிக்கப்படும். மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் புதிதாக மூன்றாம் பரிசு வழங்கப்படும். இந்தப் பரிசு ரூ.5 ஆயிரம் கொண்டதாக இருக்கும்.

மென்தமிழ்ச் சொல்லாளர் மென்பொருள்:

 கணினியில் ஆங்கிலமொழிக்கென சொல் திருத்தம் செய்யும் வசதி இருக்கிறது.இதே போன்று தமிழில் ஒற்றுப்பிழை, சந்தி, மயங்கொலி உள்ளிட்ட இலக்கணப் பிழைகள் ஏதுமின்றி எழுதத்தக்க வகையிலும், தவறுகளைத் தானே சுட்டிக் காட்டித் திருத்திக் கொள்ளும் வகையிலும் ரூ.300 மதிப்பில்"அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்' மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் முதல் கட்டமாக 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்குப் பெற்று வழங்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார்.குவாஹாட்டி பல்கலை.யில் தமிழ் பயில உதவித்தொகைஅசாம் மாநிலம் குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் தமிழை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:அசாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் தமிழை விருப்பப் பாடமாகப் பயிலும் 6 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.1.39 லட்சம் வழங்கப்படும். மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை அளிக்கப்படும்.21-ஆம் நூற்றாண்டில் அயலகத் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் 5 அயலக நாடுகள் ஒவ்வொன்றில் இருந்தும் தகுதி வாய்ந்த 5 தமிழ்ப் படைப்பாளர்களிடம் இருந்து கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை போன்ற தரமான படைப்புகளைப் பெற்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நூல்களாக வெளியிடப்படும்.

மோரீஷஸில் தமிழ்:

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஒன்றான மோரீஷஸ் நாட்டில் தமிழர்களுக்குத் தமிழ் மொழியை எழுதவும், பேசவும் பயிற்சி அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று ராமச்சந்திரன் அறிவித்தார்.

இந்த மாதம் தொழில் வரி !

ஆறுமாத வருமான அடிப்படையில் இந்த தொழில் வரி ஏப்ரல் முதல்  செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல்  மார்ச் வரை மாநில அரசுக்கு செலுத்தப்படுகிறது. இது மத்திய 
அரசுக்கு செலுத்தும் வருமான வரியில் கழித்தம் செய்யப்படும். இவ்வரியினை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் செலுத்த வேண்டியதில்லை ( அரசாணை 2726/(நிதி) நாள் 01.11.1994: தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியிடு நாள் :25.06.1992.).

உண்மைத்தன்மை சான்றிதழுக்கு இழுத்தடிக்கும் காமராஜ் பல்கலை : விரக்தியில் ஆசிரியர்கள்

மதுரை காமராஜ் பல்கலையில், கல்லுாரி ஆசிரியர்கள் பட்டச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை (ஜெனுானஸ்) சான்று வழங்குவதில் இழுத்தடிக்கப்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு கல்லுாரிகளில் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், தங்கள் கல்வித் தகுதிக்கான பட்டச் சான்றுகளை கல்லுரிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இதன்பின், சம்பந்தப்பட்ட பல்கலைக்கு அச்சான்றுகள் அனுப்பி வைக்கப்பட்டு, அவற்றின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்படும்.சான்றிதழ்களை அனுப்பி வைக்கும்போது, சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வர் சார்பில் அதற்கான கட்டணமும் காசோலையாக அனுப்பி வைக்கப்படும். அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் உண்மைத்தன்மைக்கான சான்று சம்பந்தப்பட்ட கல்லுாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் மதுரை காமராஜ் பல்கலையில், இப்பணிகள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என கல்லுாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து சிவகங்கை அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:இக்கல்லுாரியில் பணியாற்றும் 43 பேரின் இளங்கலை, முதுகலை, எம்.பில்., பி.எச்டி., பட்டச் சான்றுகள் உண்மை தன்மைக்காக காமராஜ் பல்கலைக்கு 30.9.2015ல் அனுப்பி வைக்கப்பட்டது. உடன் 64,500 ரூபாய்க்கான காசோலையும் இணைக்கப்பட்டது. ஆனால் இதுவரை யாருக்கும் சான்றிதழ் அனுப்பி வைக்கவில்லை.

ஆனால் இதே கல்லுாரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, பாரதிதாசன் போன்ற பல்கலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடன் அதற்கான உண்மை தன்மை சான்று கிடைத்து விட்டது.ஆனால் காமராஜ் பல்கலையில் மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை. சான்றிதழ் பிரிவில் கேட்டால் 'அதுபோன்ற சான்றிதழ்களே வரவில்லை,' என பதில் கூறுகின்றனர். ஆனால்அரசியல், அதிகாரிகள் சிபாரிசில் சில ஆசிரியர்களுக்கு மட்டும் உண்மை தன்மை சான்று அளிக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம். பல்கலை பதிவாளர் இப்பிரச்னை குறித்து விசாரித்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

TNPSC:குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் ஆறரை லட்சம் பேர் விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்.8 கடைசி நாள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண் ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

5,451 காலியிடங்கள்

தமிழக அரசின் பல்வேறு துறை களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டிருந்தது. இதற்கான ஆன்லைன் விண்ணப் பம் கடந்த ஆகஸ்டு 9-ம் தேதி தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி, 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரி வித்தார்.ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும். இன்னும் 8 நாள்கள் காலஅவகாசம் இருப்பதால் சுமார் 11 லட்சம் பேர் விண்ணப்பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வுக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணச் சலுகை

குரூப்-4 தேர்வுக்கு கட்டணமாக ரூ.75 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிரந்தரப் பதிவுக்கென ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தைப் பொருத்த வரையில், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் தேர்வுக் கட்டணம்ஏதும் செலுத்தத் தேவையில்லை. பிசி, பிசி (முஸ்லிம்) எம்பிசி, டிஎன்சி வகுப்பினர் பட்டதாரியாக இருப்பின் 3 முறை மட்டும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

நவம்பர் 6-ம் தேதி

3 முறை தேர்வுக் கட்டணச் சலுகையை அனுபவித்தவர்கள் அதன்பிறகு கண்டிப்பாக தேர்வுக் கட்டணம் செலுத்தித்தான்தேர் வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 3 முறை என்ற நிபந்தனையைத் தாண்டி தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பித்து ஒருவேளை பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அத்தகைய விண்ணப்பதாரர்கள் பிரச்சி னையை எதிர்கொள்ள நேரிடும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். எனவே, கட்டணச்சலுகை வாய்ப்பு பெற்றிருப்பவர்கள், எத்தனை முறை கட்டணச்சலுகையை பயன் படுத்தியுள்ளோம் என்பதை உறுதி செய்துவிட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.

அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் தொந்தரவு: மாறுதல் கேட்டு ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மனு.

சேலம், ராமிரெட்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தொந்தரவு கொடுப்பதால், தங்களை பணிமாறுதல் செய்யும்படி, அங்கு பணிபுரியும் ஒட்டுமொத்த ஆசிரியர்கள், கோரிக்கை மனு அளித்துள்ளனர்.சேலம், ராமிரெட்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன். 
அந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு பணிபுரியும், ஒன்பது பட்டதாரி ஆசிரியர்கள், தங்களை வேறுபள்ளிக்கு மாறுதல் செய்யும்படி, மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலரை சந்தித்து, புகார் மனு அளித்தனர்.இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: ராமிரெட்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். அவருக்கு பிடிக்கவில்லை எனில், அவர்களை பள்ளியை விட்டு, அனுப்பும் வரை ஓய்வதில்லை. அதற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, மாணவியரிடம்எழுதி வாங்கி வைத்துக்கொண்டு, மிரட்டல் விடுக்கிறார்.

ஊரில் உள்ள, சில அரசியல்வாதிகளையும், பெற்றோர் ஆசிரியர்கழகம் என்ற பெயரில், பள்ளிக்கு வரவழைத்து, ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுக்கிறார். மேலும், 'அடித்து கொன்றுவிடுவோம்' என, மிரட்டல், பாலியல் அச்சுறுத்தல், ஆசிரியர்களை, நாளுக்கு நாள் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. ஏற்கனவே, அவரது மிரட்டலுக்கு பயந்து, வேறு ஊருக்கு, பலர், மாறுதல் பெற்று சென்றுவிட்டனர். இதனால், இந்த பள்ளியில் இருந்து, வேறு பள்ளிக்கு மாறுதல் கேட்டு, ஒன்பது ஆசிரியர்கள் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் 250 அரசுப் பள்ளிகளில் மனித உரிமைமாணவர் மன்றம்: பள்ளிக் கல்வித்துறை புதிய ஏற்பாடு.

மாணவர்கள், குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைத் தெரிந்துகொள்ளும் நோக்கில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உள்ள 250 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மனித உரிமை மாணவர் மன்றங்கள் அமைக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.
குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைக் கலாச் சாரமாக வளர்த்தெடுக்கும் நோக்கில், தமிழக அரசும், மனித உரிமைக் கல்வி நிறுவனமும் இணைந்து கடந்த ஆண்டு 6 மாவட்டங்களில் உள்ள 120 அரசுப் பள்ளிகளில் முதற்கட்டமாக மனித உரிமை மாணவர் மன்றங்களைப் பரிசோதனை முறையில் தொடங்கி இருந்தன.தற்போது 2015-16 கல்வியாண்டில் 15 மாவட்டங்களில் கூடுதலாக 250 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்மனித உரிமைக் கல்வி மற்றும் மனித உரிமை மாணவர் மன்றங்களைத் தொடங்க பள்ளிக்கல்வி இயக்குநர் அனுமதி வழங்கி உள்ளார்.

இதுகுறித்து மனித உரிமைக் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் கூறியதாவது: நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்றால் மனித உரிமை கல்வி அவசியம். வசதியானவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அதனால், தற்போது பரம ஏழைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தரமானவர்கள். அவர்கள் வழங்கும் கல்வியும் தரமானதே. ஏதாவது ஒரு கல்வியாளர், கல்வியில் நிபுணத்துவம் பெற்றவர்கள், தனியார் பள்ளிகள் நடத்துவோர் ஒரு காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள், ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்களாகவே உள்ளனர்.தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சரியான கல்வி கொடுத்து, அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதும், மாணவர்களைத் தக்கவைப்பதும் ஆசிரியர்களுக்குச் சவாலாகவேஇருக்கிறது. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலம், அறிவியல், கணிதம் சார்ந்த கல்விகள், தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மாணவர்கள் ஓய்வில்லாமல் பெற்றோர், ஆசிரியர்கள் ஆசையை நிறைவேற்றும் இயந்திரமாக மாறிவிட்டனர். அதனால், குழந்தைகளின் கனவுகள் நிறைவேறும் இடமாக தற்போது பள்ளிகள் இல்லை. நேசிக்க வேண்டிய ஆசிரியர்களையே மாணவர்கள் எதிரிகளாகப் பார்க்கும் நிலை உள்ளது.

இப்பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து மாணவர்கள்,ஆசிரியர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தி கல்வி, ஒழுக்கத்தில் மாணவர்களைச் சிறந்தவர்களாக் கவும், அவர்களுக்கான மனித உரிமைகளை அறிந்துகொள்ளவும் இந்த மனித உரிமை மாணவர் மன்றம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சமத்துவம், தங்கள் உரிமைகளை அறிதல், மற்றவர்களை அறிதல், ஒற்றுமை, பாலினம் போன்றவற்றை அறியும் வாய்ப்பை பெறுகின்றனர் என்றார்.சமத்துவம், தங்கள் உரிமைகளை அறிதல், மற்றவர்களை அறிதல், ஒற்றுமை, பாலினம் போன்றவற்றை அறியும் வாய்ப்பை பெறுகின்றனர்.

முக்கிய அறிவிப்பு :பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செல்வோர் கவனத்திற்கு...

அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி  பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 04.09.2016 அன்று   மாறுதல் கோரியுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 
விண்ணப்பம் சமர்ப்பித்துள்ள ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவலரிடம் 2 மாறுதல் விண்ணப்பங்களில் 02.09.2016 மாலைக்குள்  கையொப்பம்  பெற்று மாறுதல் கோரியுள்ள மாவட்டத்தில்  04.09.2016 அன்று  கலந்தாய்வில்  கலந்துகொள்ள வேண்டும் .

Directorate of Government Examinations SSLC Supplementary Examinations, September / October 2016 Time Table

மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக உயர்வு- செய்தி அறிக்கை

1/9/16

B.Ed முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: செப்டம்பரில் 2-வது கட்ட கலந்தாய்வு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 1,777 பி.எட். இடங்களை நிரப்பு வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் தொடங் கியது.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என பாடவாரியாக மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான கல்லூரியை தேர்வுசெய்தனர். அவர்களுக்கு உடனடியாக கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.இந்நிலையில் முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முடிவடைந்தது. மொத்தமுள்ள 1,777 இடங்களில் 1,314 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 463 இடங்கள் காலியாகஉள்ளன.

இக்காலியிடங்களை நிரப்புவதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 15, 16-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான கட் ஆப் மதிப்பெண் மற்றும் காலியிட விவரங்கள் செப்டம்பர் 9-ம் தேதி இணையதளத்தில் (www.ladywillingdoniase.com) வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை எம்.எஸ். தில்லை நாயகி தெரிவித்தார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

செய்தியாளர்களிடம் பேசக் கூடாது: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பள்ளி வேலை நேரத்தில் வெளி நபர்கள் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது. 

தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் யாரும் வேலை நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவோ, பேசவோ, துறையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்கவோ கூடாது என்று திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கோ.லலிதா செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.துறையின் அனுமதியைப் பெறாமல் பள்ளி தொடர்பாகவோ, துறை தொடர்பாகவோ யாரேனும் பேட்டி அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த உத்தரவு மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும், இந்த உத்தரவைப் பின்பற்றும்படி சம்பந்தப்பட்ட உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், நீலகிரி மாவட்டம், தும்மனட்டி அரசுப் பள்ளி ஆசிரியருமான ராஜ்குமார் என்பவர் கலை, ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.அவர், ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை ஊடகங்கள் மூலமாக வெளியே கொண்டு வந்ததற்காக அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் எதிரொலியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆசிரியர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.
முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் மும்பையிஸ் நிரப்பப்பட உள்ள 33 சிறப்பு அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CRPD/SCO-IT/2016-17/08
பணி: Vice President - 03
பணி: Product Development Manager - 03
பணி: Senior Manager - 03
பணி: Manager - 04
பணி: Assistant Vice President (Servicing) - 01

பணி: Assistant Vice President (Customer Experience) -03
பணி: Assistant Vice President (B2c Market place Acquisition) - 12
பணி: Assistant Vice President (B2b Fulfillment) - 02
பணி: Assistant Vice President (B2C Fulfillment) - 02

சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,490

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்குரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரு.100. இதனை இணையதள மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:10.09.2016

மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பள்ளி வாகனம் விதிமுறை தளர்வு:தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்

பள்ளி வாகன விதிகளை தளர்த்துவது தொடர்பாக பள்ளிகளின் கருத்து கேட்பு குழுவின் பரிந்துரை மீது முடிவை தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 4 வாரம் அவகாசம் அளித்துள்ளது. 

பள்ளி வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தக்கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

10ம் வகுப்பு துணைத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் செப்டம்பர் 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

வெளியிட்ட செய்தி குறிப்பில்,

தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு (Government Examinations Service Centres) நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.


யார் விண்ணப்பிக்கலாம்?

S வகையினர்

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள், தாங்கள் தோல்வி அடைந்த பாடங்களை தேர்வு செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
அறிவியல் பாடத்தை பொறுத்தவரை செய்முறை (Practical) தேர்வில், தேர்ச்சிப் பெற்று, அறிவியல் கருத்தியல் (Theory) தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்கள் கருத்தியல் தேர்வெழுதவும், செய்முறை தேர்வில் தோல்வியுற்று, கருத்தியல் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வெழுத விண்ணப்பிக்கத் தகுதியானவர்.
SP வகையினர்

14 1/2 வயதும் பூர்த்தி அடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
மெட்ரிக்/ஆங்கிலோ இந்தியப் பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள் தற்போதுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படுவதால் அறிவியல் செய்முறைப் பயிற்சிப் பெற்றவர்கள் மட்டுமே செய்முறைத் தேர்வு உட்பட அனைத்துப் பாடங்களிலும் மீளத் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
செப்டம்பர் 2016 தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடும் முன்பு வரை அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு 80 சதவீதம் வருகையுடன் பயிற்சி பெற்றவர்கள் பயிற்சி பெற்றதற்கான சான்றுடன் அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
செய்முறைத் தேர்வெழுதுவதிலிருந்து விலக்களிப்பு பெற்றவர்களும் அறிவியல் கருத்தியல் தேர்வினை தற்போது எழுத தகுதியுடையவராவர்.


எக்காரணம் கொண்டும் அறிவியல் செய்முறைப் பயிற்சி பெறாதவர்கள் கருத்தியல் தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மொழிப்பாடம்

பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் நேரடி தனித்தேர்வர்கள் (SP வகையினர்) மொழிப்பாடம் பகுதி – Iல் தமிழ் மொழியில் மட்டுமே தேர்வெழுதிட அனுமதிக்கப்படுவர்.

ஏற்கனவே தேர்வெழுதி தோல்வியுற்றவர் (S வகையினர்) பகுதி – Iல் பிற மொழிப்பாடங்களில் (Other Language) தோல்வியுற்றிருப்பின், செப்டம்பர்/அக்டோபர் 2016 தேர்வில் அன்னார் தோல்வியுற்ற பிறமொழியில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

அரசுத் தேர்வு சேவை மையங்கள்

ஆண் தனித்தேர்வர்களும், பெண் தனித்தேர்வர்களும் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்திட கல்வி மாவட்ட வாரியாக தனித்தனியே அரசுத் தேர்வு சேவை மையங்கள் (Government Examinations Service Centres) அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

மேலும், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலர் அலுவலகங்களிலும் இவ்விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

வெளி மாநில மற்றும் வெளிநாடு வாழ் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முறை:

அரசுத் தேர்வு சேவை மையங்களில் (Government Examinations Service Centres) நேரடியாக சென்று விண்ணப்பிக்க இயலாத வெளி மாநில மற்றும் வெளிநாடு வாழ் தனித்தேர்வர்கள், செப்டம்பர்/அக்டோபர் 2016 எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இத்துறையின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் தேர்வரின் குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் மூலம் சென்னை – 6 அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (பணியாளர்) அவர்களை மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் பயின்று தமிழ் நாட்டில் செப்டம்பர்/அக்டோபர் 2016 எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இடப்பெயர்வு சான்றிதழ் (Migration Certificate) மற்றும் இணைச் சான்றிதழ் (Evaluation Certificate) பெற்று அவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அரசுத் தேர்வு சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:

கருத்தியல் தேர்வு (Theory Exams)

தேர்வுக் கட்டணம் ரூ.125/- உடன் கூடுதலாக ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/- ஐ சேர்த்து மொத்தம் ரூ.175/- பணமாக அரசுத் தேர்வு சேவை மையத்தில் செலுத்துதல் வேண்டும்.

தேர்வுக் கட்டண விலக்கு

பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு மேற்குறிப்பிட்ட தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கவிலக்களிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படும் சலுகைகள்:

தேர்வர்கள், தேர்வெழுதும் போது சொல்வதை எழுதுபவர், கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகளை பெற விரும்பினால் உரிய மருத்துவச் சான்றிதழ்களை இணைத்து தனியே ஒரு சலுகை கோரும் கடிதத்தை தமது விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்படி மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த விவரத்தினை பாடத்திட்டம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு மையம்

தனித்தேர்வர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வெழுதிட அனுமதிக்கப்படுவர்.

தேர்வுக்கூட அனுமதி சீட்டு

ஆன்லைனில் விண்ணப்பத்தினைப் பதிவு செய்த பிறகு தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application Number) பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (Admission Certificate) பதிவிறக்கம் செய்ய வேண்டும். எனவே, ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

S வகையினர்

ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுதி தேர்ச்சிப் பெற்ற பாடங்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்.
அறிவியல் பாடத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் அறிவியல் செய்முறைப் பயிற்சி முடித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளித் தலைமையாசியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும்.
SP வகையினர்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி/ஒன்பதாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு படித்தமைக்கான மாற்றுச் சான்றிதழின் சுய சான்றொப்பமிட்ட நகல் (அல்லது)
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினில் தேர்ச்சி பெற்றமைக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்
அறிவியல் பாடத்தில் அறிவியல் செய்முறைப் பயிற்சி ஏற்கனவே முடித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளித் தலைமையாசியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும்.
மெட்ரிக் /ஆங்கிலோ இந்தியன் தேர்வெழுதி தோல்வியுற்ற தேர்வர்கள் அன்னாரின் அனைத்து அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் ஒப்படைத்தல் வேண்டும்.

மேற் குறிப்பிட்டுள்ள இணைப்புகளை சமர்ப்பிக்கும் தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே  ஆன்லைன் பதிவுக்கு ஏற்றுக் கொள்ளப்படும். இணைப்புகளுடன் பெறப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் முன்னறிவிப்புமின்றி கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

சிறப்பு அனுமதி திட்டம்

மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் (Takkal) 16.09.2016 மற்றும் 17.09.2016 ஆகிய இரு தேதிகளில் ஆன்லைனில்  விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது.

10ம் வகுப்பு தனித்தேர்வு நாளை முதல் விண்ணப்ப பதிவு

சென்னை: 'பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, நாளை முதல், செப்., 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அக்., மாதம் நடக்க உள்ள, 10ம் வகுப்பு துணைத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்,
குறிப்பிட்டுள்ள சேவை மையங்களில், நேரடியாக விண்ணப்பிக்கலாம். செப்., 2 முதல், 9 வரை, விண்ணப்பங்கள் பெறப்படும். சிறப்பு அனுமதி திட்டமான, 'தட்கல்' திட்டத்தில், செப்., 16 மற்றும் 17ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்தில் தேர்வு எழுத விரும்புவோருக்கு செய்முறை பயிற்சியும், தேர்வும் அவசியம். மேலும் விபரங்களை, இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தேசிய ஆசிரியர் விருதுகள் அறிவிப்பு : சென்னையில் ஒருவர் கூட இல்லை

தமிழகத்தில், சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சென்னையில் ஒரு அரசு பள்ளி கூட இடம்பெறவில்லை. செப்., 5 ஆசிரியர் தினத்தையொட்டி, மாநில அளவில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள், பணித்திறன் அடிப்படையில், தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படுவர்.

இந்த ஆண்டு, தமிழகத்தில், 23 பேருக்கு, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பஞ்சாயத்து ஒன்றிய துவக்க பள்ளிகளை சேர்ந்த, 10 பேர் இடம்பெற்றுள்ளனர். மேலும், நீலகிரி மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் அரசு பள்ளி ஆசிரியர், அரசு பள்ளிகளை சேர்ந்த நான்கு பேர், தனியார் பள்ளிகளை சேர்ந்த, 10 பேர் என, மொத்தம், 23 பேர், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகையை கொண்ட, சென்னை மற்றும் அதையொட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஒரு அரசு பள்ளி ஆசிரியர் கூட விருதுக்கு தேர்வாகவில்லை. சென்னை மயிலாப்பூர் பி.எஸ்., பள்ளி மற்றும் தாம்பரம் சி.எஸ்.ஐ., கார்லி பள்ளி என, இரண்டு தனியார் பள்ளி ஆசிரியர்கள், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் தமிழகம் நாளை ஸ்தம்பிக்கும்? தொழிற்சங்கங்கள் பங்கேற்பதால் பஸ்கள் ஓடாது?

அகில இந்திய தொழிற்சங்கங்கள், நாளை நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில், தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்பதால், மாநிலம் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து தொழிற்சங்கள் பங்கேற்ப தால், பஸ்கள் இயக்கத்திலும் பாதிப்பு ஏற்படும்.


10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு விரைவில் புதிய தமிழ் 'சாப்ட்வேர்'

சென்னை: ''தமிழில் இலக்கண பிழையின்றி எழுத உதவும், புதிய மென்பொருள், முதல் கட்டமாக, 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும்,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

அசாம் மாநிலம், கவுகாத்தி பல்கலையில், தமிழை விருப்பப் பாடமாக பயிலும், ஆறு மாணவர்களுக்கு, 1.39 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஒன்று, மொரீஷியஸ்; அங்குள்ள தமிழர்களுக்கு, ஆண்டுதோறும், ஏழு லட்சம் ரூபாய் செலவில், தமிழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் நடக்கும் பேச்சு போட்டிகளில், முதல் மற்றும் இரண்டாம் பரிசு வழங்கப்படுகிறது; இனி, மூன்றாவது பரிசாக, 5,000 ரூபாய் வழங்கப்படும்; இதற்கு, 9.6 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும்
கம்ப்யூட்டரில், ஆங்கில மொழியில் பிழை திருத்தும் வசதி இருப்பதைப் போல், தமிழிலும், இலக்கணப் பிழையை சுட்டிக்காட்டி திருத்தும், புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது; 300 ரூபாய் விலையுடைய அது, முதல் கட்டமாக, 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசக் கூடாது: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளி வேலை நேரத்தில் வெளி நபர்கள் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது. தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் யாரும் வேலை நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவோ, பேசவோ, துறையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்கவோ கூடாது என்று திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கோ.லலிதா செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.


துறையின் அனுமதியைப் பெறாமல் பள்ளி தொடர்பாகவோ, துறை தொடர்பாகவோ யாரேனும் பேட்டி அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த உத்தரவு மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும், இந்த உத்தரவைப் பின்பற்றும்படி சம்பந்தப்பட்ட உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், நீலகிரி மாவட்டம், தும்மனட்டி அரசுப் பள்ளி ஆசிரியருமான ராஜ்குமார் என்பவர் கலை, ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

அவர், ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை ஊடகங்கள் மூலமாக வெளியே கொண்டு வந்ததற்காக அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் எதிரொலியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆசிரியர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி மாணவருக்கு தூய தமிழ் அகராதிகள்: பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்குத் தூய தமிழ் அகராதிகள் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு புதன்கிழமை பதிலளித்து அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு Online -ல் நடைபெறாது ஏன் ???ஆசிரியர் சங்கங்கள் கொதிப்பு

பள்ளிக்கல்வித் துறையில் கடந்த இரண்டு வாரமாக பதவியுயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு இணையவழியாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்று வந்தது.பட்டதாரி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆகிய பதவிகளுக்கு 03-09-2016 அன்று மாவட்டத்திற்குள்ளும் 04-09-2016 வெளி மாவட்டத்திற்கும் இணையவழி  


ஆன்லைன் கலந்தாய்வு  நடைபெறவிருந்த நிலையில் திடீரென இன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.043248/சி3/இ1/2016 நாள்:31.8.2016 -ல் குறிப்பிட்டுள்ள ஆணையின் படி ரத்து செய்து இணையம் வழி அல்லாது(Manual) ஆக நேரடியாக
கலந்துகொள்ள ஆணையிட்டதின் மர்மம் என்ன என்பது புதிராக உள்ளது.

ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடந்தால் பல ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் காலிப் பணியிடம் இல்லையென்றாலும் கூட அருகாமை மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடத்தில் தனக்கு மாறுதலைப் பெற்றுக் கொள்வார்.ஆனால் தற்போது Manual ஆக மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றால் அந்த ஆசிரியர்கள் நேரிடையாக கலந்துகொள்ள வேண்டும்.இதனால் தனது சொந்த மாவட்டத்தில் நடைபெறும் மாறுதல் கலந்தாய்வில் மட்டுமே பங்கேற்க முடியும்.

அங்கு காலிப் பணியிடம் இல்லையென்றால் வேறு வழி இல்லாமல் பழைய இடத்திலேயே பணிபுரிய வேண்டும்.இந்த வருடம் அருகாமை மாவட்டத்திற்காவது மாறுதல் பெற்றுவிடலாம் என்ற கொஞ்ச ஆறுதலான கனவும் பறிபோகும்.  காலிப் பணியிடங்களை மறைத்து பணம் பெற்றுக்கொண்டு மாறுதல் வழங்கத்தான்  இப்படி ஒரு அறிவிப்பு கடைசி நேரத்தில் வந்துள்ளது என ஆசிரியர் சங்கங்கள் கொதிக்கின்றன.

பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

செக்கானுாரணி அரசு ஐ.டி.ஐ.,யில் காலியான மின் பணியாளர் பயிற்றுநர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


18-35 வயதிற்குட்பட்ட தொழில்நுட்ப தகுதியுள்ள முன் அனுபவம் உள்ளவர்கள் செப்.,6க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதம் தொகுப்பூதியமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: முதல்வர், அரசு ஐ.டி.ஐ., செக்கானுாரணி- 625 514.

திண்டுக்கல் மாணவர்களின் ’ஹைபிரிட்’ காருக்கு அங்கீகாரம்

திண்டுக்கல், எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி மாணவர்களால் நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார், தேசிய அளவில், ஹைபிரிட் கார் தொழில் நுட்பத்திற்கான, மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.


ஆண்டுதோறும், பொறியியல் கல்லுாரிகளுக்கு இடையிலான நவீன தொழில்நுட்ப தயாரிப்பு போட்டியை இம்பீரியல் சொசைட்டி ஆப் இன்னோவேஷன் இன்ஜினியர்ஸ் என்ற அமைப்பு நடத்துகிறது. இந்தாண்டு முதற்கட்ட போட்டி ஆந்திராவில், இரண்டு வாரங்களுக்கு முன் நடந்தது. 150 முக்கிய பொறியியல் கல்லுாரிகள் பங்கேற்றன. 

அதில் பங்கேற்ற, திண்டுக்கல், எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரியின் மெக்கானிக்கல் துறை மாணவர்கள் தயாரித்த ஹை பிரிட் கார் தேசிய அளவில், மூன்றாம் இடம் பிடித்தது. இந்த கார், பெட்ரோல் மற்றும் மின்சாரம் என்ற, இரண்டு வகையான ஆற்றலில் இயங்கும் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் சிக்கனமாவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறைகிறது.

இன்ஜின் திறன், 208 சி.சி.,யும், 6.2 குதிரை சக்தி திறனும் கொண்டது. 3,600 ஆர்.பி.எம்., மற்றும் 12.9 இழுவைத்திறன் கொண்டது. மணிக்கு, 80 கி.மீ., வேகம் செல்லும். இது பந்தய கார் என்பதால், ஒருவர் மட்டுமே பயணம் செய்யலாம்.லிட்டருக்கு, 35 கி.மீ., துாரம் இயங்கும்.

பாதுகாப்பு அம்சமாக காரில் தீ பிடித்தால் உடனடியாக அணைக்கும், கில் சுவிட்ச் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆபத்தான நேரங்களில் விபத்தை தவிர்க்கலாம். எளிதாக இயக்குவதற்கு, ஆட்டோமேட்டிக் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எளிதாக காரின் வேகத்தை கட்டுப்படுத்தலாம்.

கல்லுாரியின் துறைத்தலைவர் சரவணன், குழு ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன், பிரபாகரன், விக்னேஷ் கூறியதாவது: எங்கள் கண்டுபிடிப்புக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சி. இதன்மூலம் இன்னும் பல்வேறு நவீன தொழில் நுட்பங்களை மாணவர்கள் கண்டறிய ஆர்வம் பிறக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

TNPSC GROUP 4 : 8ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் ஆன்லைன் தேர்வு

அரசு ஊழியர்களின் குறைந்த பட்சஊதியம் 42 சதவீதம் உயர்வு

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி உள்ளது. மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள்,செப்., 2ல், நாடு தழுவியவேலைநிறுத்த போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு,குறைந்தபட்சஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு அறிவித்துள்ளது. தவிர, இரு ஆண்டுகளுக்கு போனஸ் அளிப்பது குறித்தும், அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையடுத்து, வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை, அனைத்து தொழிற்சங்கங்களும் மறுபரிசீலனை செய்யும்படி, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களின் பிரச்னைகள் குறித்து ஆராய, நிதியமைச்சர் அருண் ஜெட்லிதலைமையில், அமைச்சகங்கள் இடையிலான குழு, கடந்தாண்டு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த பரிந்துரைகளின்படி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன

NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு 06.11.2016 ஞாயிற்றுக்கிழமை பதிலாக 05.11.2016 சனிக்கிழமை நடைபெறும்

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் அரசு சலுகைகள்வழங்கப்படுகிறது: காங். புகாருக்கு முதல்வர் பதில்

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேற்று ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. 
இதில், குளச்சல் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் பேசும்போது, ‘‘நாடார் பிரிவினரை மிகவும் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலிலும், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலிலும் சேர்க்க வேண்டும். இந்து தலித்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தலித்களுக்கு வழங்கப்படவில்லை. அதை வழங்க வேண்டும்’’ என்றார்.

அப்போது அவையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா, இதற்கு பதிலளித்து பேசியதாவது:மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக, சமீபத்தில் பிரதமரை சந்தித்தபோது மனு அளிக்கப்பட்டுள்ளது. மதம் மாறியவர்களுக்கு அரசு சலுகைகள் மறுக்கப்படுவதாக கூறப்படுவது தவறானது. அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகின்றன. சுயநிதி கல்வி நிறுவனங்களில் பயிலும் மதம் மாறிய கிறிஸ்தவ மாணவர்கள் கல்லூரிகளுக்கு செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் மற்றும் நிறுவன கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் பதிலளித்தார்.

மலைக் கிராம பள்ளிகளுக்கு சரிவர பணிக்குச் செல்லாத ஆசிரியர்கள்!

மலைக் கிராமங்களில் அமைந்துள்ள பள்ளிக்கு ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் சரிவர செல்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மலைக் கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்களுடைய பிள்ளைகள் கல்வி கற்க நீண்ட தொலைவு செல்ல வேண்டியிருந்த காரணத்தால் அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்பச் செய்த காலம் இருந்தது. ஆனால் அவர்களது நலன் கருதி மலைக் கிராமங்களிலேயே பள்ளிகளை அரசாங்கம் தொடங்கியது. 

தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது டெல்லியில் செப்.5-ல் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.
ஆசிரியர் பணியைப் போற்றும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பதக்கம், பாராட்டுச்சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது.கடந்த 2015-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தொடக்கக்கல்வி பிரிவின் கீழ் 15 ஆசிரியர்களும், மேல்நிலைக் கல்வி பிரிவின் கீழ் 7 பேரும், சிறப்புப்பிரிவின் கீழ் ஒருவரும் என மொத்தம் 23 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

B.Ed முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: செப்டம்பரில் 2-வது கட்ட கலந்தாய்வு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 1,777 பி.எட். இடங்களை நிரப்பு வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் தொடங் கியது. 
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என பாடவாரியாக மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான கல்லூரியை தேர்வுசெய்தனர். அவர்களுக்கு உடனடியாக கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.இந்நிலையில் முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முடிவடைந்தது. மொத்தமுள்ள 1,777 இடங்களில் 1,314 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 463 இடங்கள் காலியாகஉள்ளன.

இக்காலியிடங்களை நிரப்புவதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 15, 16-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான கட் ஆப் மதிப்பெண் மற்றும் காலியிட விவரங்கள் செப்டம்பர் 9-ம் தேதி இணையதளத்தில் (www.ladywillingdoniase.com) வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை எம்.எஸ். தில்லை நாயகி தெரிவித்தார்..

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்கள் அளிக்க மறுத்த முதன்மை கல்வி அலுவலர் (CEO) மீது ஒழுங்கு நடவடிக்கை தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு!!!