யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/12/16

ஜனவரி 1 முதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அவசியம்

ஜனவரி 1ம் தேதிமுதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அட்டைஅவசியமாகிறது.  2017 ஜூன்30ம் தேதிக்குள் ஆதார் வழி
பரிவர்த்தனைக்குஏற்பாடு செய்ய கால அவகாசம்தரப்பட்டுள்ளதாக  ரிசர்வ்வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் வழிபண பரிவர்த்தனையை அமல்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி  இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டெபிட்,கிரெடிட் கார்ட்களில் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் வழி மட்டுமேபணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்றும்  பரிவர்த்தனைக்குஎலக்ட்ரானிக் சிப் அட்டை, ரகசியஎண், பயோ மெட்ரிக் அடையாளம்ஆகியவை கட்டாயமாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாளங்களை உறுதிசெய்யும் கருவிகளை வைத்து  இருக்கவும்வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஆதார் வழி பணப் பரிவர்த்தனையைஎப்பொழுது அமல்படுத்துவது என்பது குறித்து பின்னர்அறிவிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கிதெரிவித்துள்ளது.

கணித திறன் தேர்வு டிச., 18க்கு மாற்றம்

பள்ளி மாணவர்களுக்கு, நாளை நடக்கவிருந்த, கணிததிறன் தேர்வு, வரும், 18க்குமாற்றப்பட்டு உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையசெயல் இயக்குனர், அய்யம் பெருமாள்
வெளியிட்டுள்ளஅறிவிப்பில்,

'பெரியார்அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், பள்ளி மாணவர்களுக்கு, நாளைகாலை, 11:00 மணிக்கு நடக்கவிருந்த கணிததிறன் தேர்வு, மோசமான வானிலைகாரணமாக, வரும், 18க்கு மாற்றப்பட்டு உள்ளது' என, கூறப்பட்டு உள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வுக்கு டிசம்பர் 8-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப்1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதிகடைசி என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,)
அறிவித்துள்ளது.
குரூப்1 தொகுதியில் 85 காலியிடங்களை நிரப்புவற்கான தேர்வு அடுத்த ஆண்டுபிப்ரவரி 19-இல் நடைபெறுகிறது.
தேர்வுக்குவிண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதிகடைசியாகும். வங்கி-அஞ்சலகத்தில் தேர்வுக்கட்டணம் செலுத்த டிசம்பர் 10 கடைசியாகும். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்படமாட்டாது. எனவே விண்ணப்பதாரர்கள் தேர்வுக்குவிண்ணப்பிக்க கடைசி நாள் வரைகாத்திருக்காமல் அதற்கு முன்னரே விண்ணப்பிக்கவேண்டும்.
கவனமாகபதிவு செய்ய வேண்டும். விண்ணப்பம்சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களைவிண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது.
எனவே இணையவழி விண்ணப்பத்தினை பூர்த்திசெய்து சமர்ப்பிக்கும் முன்னர் தாங்கள் அளித்துள்ளவிவரங்கள் சரியானதுதான் என்பதை உறுதி செய்துசமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விண்ணப்ப விவரங்களைமாற்றக் கோரி பெறப்படும் கோரிக்கைகள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.

உண்மையைமறைத்து தேர்வுக் கட்டணச் சலுகையை பயன்படுத்திதேர்வுக் கட்டணம் செலுத்தாமல் இருக்கும்விண்ணப்பதாரர்களின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

பள்ளிகளில் சத்துணவு மையங்கள் தூய்மையாக செயல்படுவது குறித்து -வழிகாட்டும் நெறிமுறைகள்

எட்டாம் வகுப்பு-தனிதேர்வர்களுக்கான தக்கல் திட்டம்.விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு 7.12.2016 -கடைசி

CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 4 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்.

SSA - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் NON - RESIDENTIAL TRAINING - இயக்குனர் செயல்முறைகள்












பாடத்திட்ட தரத்தை மேம்படுத்தக்கோரி வழக்கு:

பள்ளிக்கல்வி, உள்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழகத்தில்1 முதல் 10-ம் வகுப்பு வரையிலானபாடத்திட்டத்தின் தரத்தை மேம்படுத்தக்கோரிய வழக்கில்உள்துறை, பள்ளிக்கல்வித்துறை பதில்
மனுத் தாக்கல்செய்த தலைமை நீதிபதி அமர்வுஉத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில்கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில்கல்வி மற்றும் கல்விக்கான வசதிகள்முழுமையாக வழங்கப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கால மாற்றத்துக்கு ஏற்பபாடத்திட்டங்களில் உரிய மாற்றம் கொண்டுவரவேண்டும் என அண்மையில் ஊடகங்களில்செய்தி வெளியானது.இந்த செய்தியின் அடிப்படையில்உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர்(ஜூடிசியல்) பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல்செய்தார். அதில் தமிழகத்தில் 1 முதல்10-ம் வகுப்பு வரையில்அறிமுகம் செய்யப்பட்டுள்ளஒரே மாதிரியான பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தவும், முறைப்படுத்தவும்தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதிஎஸ்.கே.கவுல், நீதிபதிஎஸ்.நாகமுத்து அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்குவந்தது.மனுவை விசாரணைக்கு ஏற்றஅமர்வு, உள்துறை, கல்வித்துறை முதன்மை செயலர்கள், தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வி துணைச் செயலர்கள், பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி இயக்குனர்கள் ஆகியோர்4 வாரத்தில் பதில் மனுத் தாக்கல்செய்ய உத்தரவிட்டது.

'வாட்ஸ் ஆப்' வேணுமா போனை மாத்துங்க!

தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படும், 'வாட்ஸ் ஆப்'பை, பழைய மென்பொருட்களில் இயங்கும் மொபைல் போன்களில் பயன்படுத்த
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
'வாட்ஸ்ஆப்' அறிமுகமாகி, ஏழு ஆண்டுகளுக்குள், உலகெங்கும், 100 கோடி பேர் இதில் இணைந்துள்ளனர். இது, புதிய தொழில்நுட்பத்துக்கு மாறஉள்ளது. இதனால், பழைய மென்பொருட்களில்இயங்கும் மொபைல் போன்களில், இனி, வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது.முதல்கட்டமாக, பழைய விண்டோஸ், ஆண்ட்ராய், ஆப்பிள் மென்பொருட்களில் செயல்படும் போன்களில், வாட்ஸ் ஆப்பை இந்தஆண்டு இறுதி வரை மட்டுமேபயன்படுத்த முடியும்.

அடுத்தஆண்டு, ஜூன் வரை, பிளாக்பெரி, நோக்கியா ஏ - 40, நோக்கியா சிம்பியான்எஸ் - 60 மென்பொருள் உடைய போன்களில், வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும். தொடர்ந்து, வாட்ஸ் ஆப் பயன்படுத்தவேண்டுமானால், மொபைல் போனை மாற்றுவதைதவிர வேறு வழி இல்லை.

2/12/16

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் சம்பளம் எடுக்க கட்டுப்பாடு.!!!

THANJAI TAMIL UNIVERSITY B.ED (2017 -2019) APPLICATION SUBMISSION LAST DATE EXTENDED

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) - SEP 2016

CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 4 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்.

TRB: 1,260 கலையாசிரியர் பணியிடம் விரைவில் நிரப்ப அரசு திட்டம்'

ஆசிரியர்தேர்வு வாரியத்தால், 1,260 கலையாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும்,''
என, பள்ளிக் கல்வித்துறைஇயக்குனர், கண்ணப்பன் தெரிவித்தார்.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், தையல், இசைஉள்ளிட்ட, கலைப் பாடப் பிரிவுகளுக்கு, 1,260 பணியிடங்கள் காலியாக உள்ளன; நீண்டநாட்களாக நிரப்பப்படாமல் உள்ளன. பள்ளிக் கல்வித்துறைஇயக்குனர் கண்ணப்பன் கூறுகையில்,''அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, கலைஆசிரியர் பணியிடத்தை நிரப்ப, ஆசிரியர் சான்றிதழ்பயிற்சி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அரசுஉயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,260 கலையாசிரியர்பணியிடங்களை நிரப்ப, இம்மாத இறுதிக்குள்அறிவிப்பு வெளியாகும். இத்தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்,'' என்றார்.

SSA - 6 - 8 ஆம் வகுப்பு களில் Techno Club ஏற்படுத்துதல் மற்றும், சிறந்த கணினி இயக்கம் அறிந்த மாணவர்களுக்கு ஒன்றிய அளவிலும் மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்துதல் சார்ந்த செயல்முறைகள்

CCE- FOURTH WEEK WORKSHEET - ALL SUBJECT FOR ALL CLASS IN SINGLE PDF FILE

வங்கிகளை காப்பாற்றிய 'நடா' புயல் : மாத சம்பளம் பெறுவோர் வர தயக்கம்

நடா' புயலால், மாத சம்பளம் பெறுவோரின் முற்றுகையிலிருந்து, சென்னை மற்றும் கடலோர மாவட்ட வங்கிகள் தப்பின. செல்லாத நோட்டு அறிவிப்பால், பணப் புழக்கம் குறைந்து, சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் பணம் எடுக்க, உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களும், அரசு ஊழியர்களும் சம்பள பணத்தை முழுமையாக எடுக்க முடியுமா என பயந்தனர். நவ., 28க்குப் பின், வங்கியில் டிபாசிட் செய்யப்படும் செல்லத்தக்க ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்கான உச்சவரம்பை ரிசர்வ் வங்கி நீக்கியதால், நிம்மதி அடைந்தனர். நேற்று முன்தினம் பணத்தை எடுக்க, அரசு ஊழியர்கள் குவிந்தனர். வங்கிகளில், போலீஸ் பாதுகாப்பு போடும் நிலை ஏற்பட்டது. நேற்று, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்தது. அரசு ஊழியர்களோடு, தனியார் நிறுவன ஊழியர்களும் குவிந்தால் எப்படி சமாளிப்பது என, வங்கி அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர். 'நடா' புயல் அறிவிப்பால் நேற்று, சென்னை மட்டுமின்றி கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. பெரும்பாலானோர், வங்கிகளுக்கு செல்வதை தவிர்த்தனர். வங்கிகளில் கூட்டம் குறைவாகவே இருந்ததால், வங்கி மேலாளர்கள் நிம்மதி அடைந்தனர். பல வங்கிகள், முற்பகலிலேயே மூடிக் கிடந்தன. ஏ.டி.எம்.,களிலும் பெரிய அளவில் கூட்டம் இல்லை.
இதுகுறித்து, பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ஒருவர் கூறுகையில், 'வங்கிகளில், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் தர, போதிய பணம் கையிருப்பு இல்லை; அதனால், பயந்தோம். நல்ல வேளை, மழை காப்பாற்றி விட்டது. அடுத்த நாளை எப்படியாவது சமாளிப்போம்' என்றார். 

தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல் : ஏப்ரலில் நடத்த ஏற்பாடு

மதுரை: ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சி தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.'தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12 ஆயிரத்து 254 ஊராட்சிகளுக்கான தேர்தல் அக்., 17, 19ல் நடக்கும்' என செப்., 25ல் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால், தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதுகுறித்த வழக்கு ஜன., 3க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தல்களை நடத்த ஏதுவாக, துணை கலெக்டர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பதவி காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை என தெரிவிக்கப்பட்டது. டிச., 31ல் இவர்கள் பதவி காலம் முடிகிறது. இவர்களது பதவி காலத்தை நீடிப்பது குறித்து, அரசு இதுவரை எந்த முடிவும் செய்யவில்லை.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அருந்ததியினருக்கான இடஒதுக்கீடு பணிகள் துவங்கவில்லை. இடஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டு, உயர்நீதிமன்றத்திற்கு அரசு தெரிவிக்க வேண்டும்.
'ஜனவரியில் பொங்கல், மார்ச்சில் அரசு பொது தேர்வுகள் வருவதால், ஏப்ரலுக்கு உள்ளாட்சி தேர்தல் தள்ளி போகும் வாய்ப்பு உள்ளது' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகளில் 'டெக்னோ கிளப்'

தேனி: மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், அறிவியல் அறிவை வளர்க்க பள்ளிகளில் 'டெக்னோ கிளப்' துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், அறிவியல் அறிவை வளர்க்கும் வகையில் தொழில் நுட்ப கழகம் எனும் 'டெக்னோ கிளப்' துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அறிவியல், கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களில் ஆர்வம் உள்ள மாணவர்கள் ஐந்து பேர் உறுப்பினர்களாகவும், எட்டாம் வகுப்பு மாணவர் கிளப் தலைவராகவும் நியமிக்கப்படுவார். கிளப்பை வழி நடத்துபவர்களாக கம்ப்யூட்டர் ஆசிரியர் அல்லது அறிவியல் ஆசிரியர் நியமிக்கப்படுவர்.
போட்டி : சிறப்பாக செயல்படும் 'டெக்னோ கிளப்'களுக்கு இடையே தேர்வு போட்டி நடத்தப்படும். போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வட்டாரம், மாவட்டம், மாநில போட்டிகளில் பங்கேற்பர்.

கட்டாய கல்வி உரிமை--- சட்டம் : மாணவர்களுக்கு போட்டிகள்

'ராமநாதபுரம்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பெண் கல்வி, கட்டாய கல்வி உரிமை சட்டம், சுகாதாரம் குறித்து எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை போட்டிகளும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகளும் நடத்தப்படுகிறது.
போட்டிகள் பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் என, மூன்று கட்டமாக நடக்கிறது. பள்ளி அளவில் முதல் மூன்று இடம் பேறுவோருக்கு சான்றிதழ் மட்டும் வழங்கப்படும். வட்டாரம், மாவட்ட அளவில் போட்டிகளில் வெல்பர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. டிச., இறுதிக்குள் போட்டிகளை நடத்தி முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

NMMS - INSTRUCTIONS -APPLICATION FORMS - MATERIALS

SLAS - MATERIAL - 9 & 10 STD...

இன்று 02 .11.2016 நடைபெறும் தேர்வுக்கான CCE WORKSHEET - III MODEL QUESTION PAPER -SOCIAL SCIENCE TAMIL MEDIUM / ENGLISH MEDIUM QUESTION PAPERS AVL 3 TO 10 STD

CCE WORK SHEET - IV WEEK QUESTION PAPER SINGLE PAGE LINKS

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

 அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். 
🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். 
🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும். கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும். 
🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்
. 🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும். 
அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
 🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும். பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
 பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும். 
பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும். 
🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
 🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
 🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும். 
🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும். முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும். புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
 🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும். 
🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும். 
🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.  
🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும். 🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும். 
🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
 🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும். 
🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
 🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும். 🌿முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
 🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும். 
🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும். 
🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும். 🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.
 🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.
 🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
 🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
 🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும். 🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும். 
🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்
. 🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும். 
🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும். 🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!



தீராத விக்கலை நிறுத்த...
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxigen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது...
நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்...
அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன்
திகழ்வீர்கள்!

6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு
சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும்
வாய் துர்நாற்றம் நீங்கும்.

7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,
முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி
சிறிது சுண்ணாம்பு கலந்து
கட்டி மீது தடவி வர அது உடையும்.

9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
*முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்

10. * மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.

11. * நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

12. * சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

13. * சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

14* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

15. * மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

16. * சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

17. * பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

19. * சீரக தண்ணீர்

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

* சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

* சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

* சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

* எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை. 

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

* தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

* சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு. 

நம்புங்கள் நல்லதே நடக்கும்

சிந்தனை கதைகள்

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது.
அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.
அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது.
சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.
சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை.
இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது.
இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது.
இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது.
சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.
உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது.
அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது.
குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார்.
நீ என் முதுகில் ஏறி கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.
இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு,
"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது.
இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.
இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எரிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.
---
நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம்,
அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள்.
"கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்". --

தமிழ்நாட்டில் சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்

  1. சாதி சான்றிதழ்
  2. வருமான சான்றிதழ்
  3. பிறப்பிடச் சான்றிதழ்
  4. இருப்பிடச் சான்றிதழ்
  5. வேளாண் சேவை இணைப்பு படிவம்
  6. விற்பகர் சான்றிதழ் - உரங்கள் (படிவம் அ)
  7. புதுப்பித்தல் சான்றிதழ் - உரங்கள் (படிவம்)
  8. பூச்சிக்கொல்லி பதிவு செய்வதற்கான சான்றிதழ்
  9. பூச்சிக் கொல்லி தயாரிப்புக்கான உரிமத்தை புதிப்பிக்கும் சான்றிதழ்
  10. பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல்  உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
  11. பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல்   புதுப்பித்தல்கான விண்ணப்படிவம்
  12. தமிழ்நாட்டில் குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
  13. சமூக நலம்

1/12/16

பள்ளிக்கல்வி துறைக்கு ரூ24,129 கோடி ஒதுக்கீடு, இயக்குனர் கண்ணப்பன் பேச்சு

டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம்

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவுமுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசுதெரிவித்துள்ளது. கடந்த 8-ம் தேதிரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன்று
அறிவித்தது மத்திய அரசு. இதையடுத்துநெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது ரத்துசெய்யப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து மீண்டும்டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவுமுதல் வசூலிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நிலைமைசீரடைந்து விட்டதாக கூறி சுங்கக்கட்டணம் வசூலைநெடுஞ்சாலைதுறை தொடங்குகிறது. டிசம்பர் 15-ம் தேதி வரைசுங்கச்சாவடிகளில் பழைய ரூ.500 மற்றும்1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் நடவடிக்கை தீவிரம்

வேலூர்மாவட்டத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பாரதஸ்டேட் வங்கி மூலம் மாதஊதியம் பெறுவதால், அவர்களுக்கான தொகையை விடுவிக்கும் நோக்கில்போதுமான ரூபாய் நோட்டுகள் கையிருப்பில்
வைக்கப்பட்டிருப்பதுடன், 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
புழக்கத்தில்இருந்த ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதோடு, புதியரூ. 2,000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. மத்திய அரசின் இந்தஅறிவிப்பைத் தொடர்ந்து வஙகி ஏடிஎம் மையங்களில்இருந்து பணம் எடுக்க அதிகளவில்மக்கள் வருவதால் பெரும்பாலான மையங்கள் பணம் இல்லாமல் தொடர்ந்துமூடப்பட்டு கிடக்கிறது.
இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களில் 90 சதவீத்துக்கு அதிகமானவர்கள் பாரத ஸ்டேட் வங்கிமூலம் ஊதியம் பெறுவதால் சம்பளநாளான புதன், வியாழக்கிழமைகளில் (டிச. 1) சேமிப்புக் கணக்கு புத்தகம் மூலம்பணம் எடுக்க வருவோருக்கு தடையின்றிபணம் கொடுக்கும் வகையில் 500 ரூபாய் நோட்டுகள் விநியோகப்பட்டுசமாளிக்கப்படுகிறது.
இதுதவிரஒரு சில தனியார் வங்கிகளுக்குகுறைவான அளவில் 500 ரூபாய் நோட்டுகள் வரப்பெற்றுள்ளன.
இதுகுறித்துமாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தாமோதரன்கூறுகையில், அரசு ஊழியர்களுக்கு மாதஊதியம் வழங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கிக்கு500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் வந்துள்ளன.

ஏடிஎம்மையங்களில் நிலவும் பணத்தட்டுப்பாடு ஒருவாரத்தில் சீரடையும் என்றார்.

வங்கிகளில் திரண்ட அரசு ஊழியர்கள்-ஓய்வூதியதாரர்கள்

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம்அவர்களது வங்கிக் கணக்கில் புதன்கிழமைசெலுத்தப்பட்டன. இதனை எடுப்பதற்காக வங்கிக்கிளைகளில் காலையில் இருந்தே அரசு
ஊழியர்கள்நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பல வங்கிக் கிளைகளில் 5 ஆயிரம்முதல் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமேவழங்கப்பட்டதால், அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சென்னைதலைமைச் செயலகம், எழிலகம் உள்பட பலமுக்கிய அரசு அலுவலகங்களில் மாதஊதியத்தை வங்கிக் கணக்கில் இருந்துஎடுப்பதற்காக அரசு ஊழியர்கள் காலை9 மணியில் இருந்தே காத்திருந்தனர்.
வழக்கமாகபணிக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்துக்குமுன்பே அரசு அலுவலகங்களுக்குச் சென்றஅவர்கள், நேராக வங்கிக் கிளைகளில்ஏற்கெனவே காத்திருந்த வாடிக்கையாளர்களின் வரிசைகளில் இணைந்து கொண்டனர். இதனால், பல வங்கிக் கிளைகளில் சாலைகள்வரை வாடிக்கையாளர்களின் வரிசை நீண்டிருந்தது.
ரொக்கத்துக்குகட்டுப்பாடு: அரசு ஊழியர்கள் பலருக்கும்ரூ.40 ஆயிரம் வரை மாதஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், இதனை எடுப்பதற்குஅவர்களால் புதன்கிழமை முடியவில்லை. ஒவ்வொரு வங்கிக் கிளையிலும்இலக்கு வைத்தே ரொக்கமாக பணம்வழங்கப்பட்டது.
சென்னைதலைமைச் செயலகத்தில் உள்ள சிண்டிகேட், இந்தியன்ஓவர்சீஸ் ஆகிய இரண்டு வங்கிக்கிளைகளிலும் ரூ. 9 ஆயிரம் முதல்ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. ஆனால், பிற இடங்களில் இதைவிடகுறைவாகவே ரூ.5 ஆயிரம் அளவுக்குமட்டுமே ரொக்கமாக பணம் அளிக்கப்பட்டது.
கூட்டம்ஓயாது: வங்கிக் கிளைகளில் மாதஊதியத்தை எடுப்பதற்கான அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின்வரிசை இன்னும் ஒரு வாரத்துக்குத்தொடரும் என வங்கித் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலக சங்கத்தின்தலைவர் ஜெ.கணேசன் கூறியதாவது:-
அரசு ஊழியர்களின் ரொக்கப் பணத்துக்கு கட்டுப்பாடுகள்வைத்து வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 13 லட்சம் அரசு ஊழியர்களும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு மாதத்துக்கு 1,300 கோடி ரூபாய் அளவுக்குஊதியமும், ஓய்வூதியமும் அளிக்கப்படுகிறது. இது மாநில அரசுஊழியர்களுக்கான பணம் மட்டுமே. இந்தப்பணத்தை ஒவ்வொரு ஊழியரும் அவரவர்வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்றார்.
போக்குவரத்துதொழிலாளர்கள்: தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்துத்தொழிலாளர்களுக்கும் மாத ஊதியத்தில் இருந்துரொக்கமாக ரூ.3 ஆயிரம் புதன்கிழமைவழங்கப்பட்டது. அனைத்து பணிமனைகளிலும் காலையில்இருந்தே இதற்கான பணிகள் நடைபெற்றது. இதனால், பணிக்கு வந்த அனைத்துநடத்துநர், ஓட்டுநர்கள் தங்களுக்கான ரொக்கப் பணத்தை வரிசைகள்ஏதும் இல்லாமல் வாங்கிச் சென்றனர்.

ரொக்கப்பணம் வழங்கும் பணி மாலை வரைநடைபெற்றதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன

மழை விடுமுறை விழித்துக்கொண்ட கல்வித்துறை...!!

புயல் காரணமாக மழை பெய்யப்போகிறதுஎன்ற முன்னெச்சரிக்கையே விவசாயிகள், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரையும்
மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இன்னொருபுறம் பள்ளிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி விடுமுறைஅறிவிக்கப்பட்டது மாணவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வழக்கமாக கனமழை பெய்யும் போதுதான், மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லமுடியாது என்பதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறைஅளிக்கப்படும். கடந்த ஆண்டு சென்னைமழையின்போது கூட கனமழை பெய்தபோதும் விடுமுறை அறிவிப்பதற்கு தாமதம் ஏற்பட்டது என்றுசர்ச்சை கிளம்பியது. யார் விடுமுறை அறிவிப்பதுஎன்பதிலும் குழப்பம் நிலவியது.
மாவட்டஆட்சியரா அல்லது தலைமைச் செயலகத்தில்கல்வித்துறையா என்பதில் சர்ச்சை இருந்தது.
ஆனால், இப்போது நாடா புயல் 2-ம்தேதி காலை கரையைக் கடக்கும்என்று அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களில்கல்வித்துறை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை மாவட்டங்கள் மாவட்டத்தில்சில பகுதிகளுக்கு என முன்கூட்டியே பள்ளிகளுக்குவிடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இன்னொருபுறம் "இவனுகளை வீட்டில் வைத்துக்கொண்டுஎப்படி சமாளிப்பது" என்று பெற்றோர் புலம்புவதையும்கேட்கமுடிகிறது.

2015-ம்ஆண்டு மழை, வெள்ளத்தின் போதுநவம்பர் மாத த்தில் தீபாவளிவிடுமுறைக்குப் பின்னர் மழை காரணமாகபள்ளிகள் செயல்படவில்லை. டிசம்பர் மாதத்திலும் பல நாட்கள் விடுமுறைஅறிவிக்கப்பட்டிருந்தது. அரையாண்டு தேர்வுகளும் நடைபெறவில்லை.

நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே பணம் அச்சிடப்படும் பணி தொடங்கப்பட்டிருந்தாலும் தேவையான அளவு 500 ரூபாய்த் தாள்களை அச்சடித்து முடிக்க 2017 ஏப்ரல் இறுதியாகும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இவ்வமைப்பின்தமிழ்நாட்டுப் பொதுச்செயலர் சி.பி.கிருஷ்ணன்இது பற்றி வெளியிட்ட அறிக்கையிலிருந்து…
ரிசர்வ்வங்கிக்குச் சொந்தமான பாரதிய ரிசர்வ் பாங்க்நோட் முத்ரன்
பிரைவேட் லிமிடெட்என்ற நிறுவனம், கர்நாடக
மாநிலத்தில்மைசூரிலும், மேற்குவங்க மாநிலத்தில் சல்போனியிலும் உள்ள ரூபாய் நோட்டுஅச்சடிக்கும் இரண்டு அச்சகங்களை நிர்வகிக்கிறது. இந்த இரண்டு அச்சகங்களும் தற்போதுநடைமுறையில் உள்ளது போல ஒருநாளைக்கு இரண்டு ஷிப்ட் அடிப்படையில்வருடத்திற்கு ரூபாய்த் தாள்களாக எண்ணிக்கையில் 1600 கோடி அளவிற்கு அச்சடிக்கும்திறமை வாய்ந்தவை. இவையல்லாமல் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும்இரண்டு அச்சகங்கள் நாசிக் (மகாராஷ்டிரா) மற்றும்தேவாஸ் (மத்தியபிரதேசம்) ஆகிய இடங்களில் உள்ளன.
இவை இரண்டும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்டு மின்ட்டிங் கார்ப்பரேஷன்ஆப் இந்தியா லிமிடெட் மூலமாகமுழுமையாக மத்திய
அரசாங்கத்திற்குசொந்தமானவை. நிதியமைச்சகத்தின் சமீபத்திய வருடாந்திர அறிக்கையின்படி இந்த இரண்டு அச்சகங்களும்மொத்த ரூபாய்த்தாள் தேவையில் 40 சதவீதம்வரை அச்சடிக்கத் தகுதி வாய்ந்தவை. மைசூரிலும், சல்மோனியிலும் உள்ள இரண்டு அச்சகங்கள்60 சதவீதம்வரை அச்சடிக்கும் திறன் படைத்தவை.
ஆக நான்கு அச்சகங்களும் இணைந்துமொத்தமாக தற்போதுள்ள நடைமுறைப்படி இரண்டு ஷிப்டுகளில் பணிபுரிந்தால்ரூபாய்த்தாள்களாக எண்ணிக்கையில் வருடத்திற்கு 2,666 கோடி அளவிற்கு அச்சடிக்கும்திறன் படைத்தவை.
புழக்கத்தில்இருந்த ரூபாய் நோட்டுக்கள்
மத்தியஅரசாங்கம் வழங்கும் புள்ளி விவரப்படி 2016 நவம்பர்8ஆம் தேதி புழக்கத்தில் இருந்தரூபாய் தாள்களின் மதிப்பு 17,54,000 கோடி ரூபாய். இதில்45 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்கள். இதன்மதிப்பு ரூ. 7,89,000 கோடி. இது எண்ணிக்கையில்1,578 கோடி தாள்கள். மேலும், 39 சதவீதம் 1000 ரூபாய் நோட்டுக்கள். இதன்மதிப்பு ரூ. 6,84,000 கோடி. இது எண்ணிக்கையில்684 கோடி தாள்கள். 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் 342 கோடிதாள்கள் அச்சடித்தாலே போதுமானது. மத்திய அரசாங்கம் புதிய2000 ரூபாய் தாள்கள் அச்சடிக்கும் பணியைசெப்டம்பர் மாதமே துவங்கிவிட்டதாக கூறுகிறது. அதன்படி ஏறக்குறைய இரண்டு மாத காலத்தில்அப்பணி நிறைவடைந்திருக்கும்.
எவ்வளவுகாலமாகும்?
500 ரூபாய்நோட்டுக்கள் அச்சடிக்க எவ்வளவு காலமாகும்? நான்குஅச்சகங்களின் திறன் வருடத்திற்கு 2666 கோடிதாள்கள். மூன்று ஷிப்டுகளில் பணிபுரிந்தால்இதன் திறன் 4000 கோடி தாள்களாக உயரும். இதில் 20 சதவீத திறன் 10 ரூபாயிலிருந்து100 ரூபாய் நோட்டுக்கள் வரை அச்சடிக்க பயன்படுத்தப்படும். மீதமுள்ள 80 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதற்காகபயன்படுத்துவதாக எடுத்துக் கொண்டால், இதனை அச்சடிப்பதற்கான திறன்வருடத்திற்கு 3200 கோடி தாள்களாகும்.
புழக்கத்திலிருந்துசெல்லாததாக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை1,578 கோடி தாள்கள். சுமார் 20 சதவீதம் வரை கருப்புப்பணமாக இருக்கும் என்றும், அந்தப் பணம் வங்கிகளுக்குவராது என்றும் கூறப்படுகிறது. அதைஅப்படியே ஏற்றுக் கொண்டால் அந்தஅளவிற்கு புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதைகுறைத்துக் கொள்ளலாம். இதன்படி செல்லாததாக்கப்பட்ட 500 ரூபாய்த் தாள்களான1,578 கோடி தாள்களில் 20 சதவீதத்தை கழித்தால் மீதமுள்ள 80 சதவீதமான 1,262 கோடி தாள்கள் அச்சடிக்கப்படவேண்டும்.
ஆனால், 1000 ரூபாய் நோட்டுக்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டதால் குறைந்தபட்சம் அதில் 25 சதமாவது புதிய 500 ரூபாய்நோட்டுக்களாக புழக்கத்தில் வந்தால்தான் நிலைமை சகஜமாகும் என்றும்ஒரு கணிப்பு உள்ளது. அவ்வாறெனில்செல்லாததாக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுக்களின் மொத்தமதிப்பில் 25 சதவீதம் கூடுதலாக 500 ரூபாய்த்தாள்கள், அதாவது கூடுதலாக 342 கோடிதாள்கள் அச்சடிக்கப்பட வேண்டும். இதன்படி மொத்தத் தேவையாக1,262 கோடி + 342 கோடி = 1,604 கோடி எண்ணிக்கையில் 500 ரூபாய்நோட்டுக்கள் அச்சடிக்கப்பட வேண்டும்.
50 நாட்களில்தட்டுப்பாடு தீராது
3,200 கோடிதாள்கள் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கஒரு வருட காலமாகும். அப்படியானால்தற்போதைய தேவையான 1,604 கோடி தாள்களை அச்சடிக்க6 மாத காலமாகும். நவம்பர் மாதம் முதல்வாரத்திலேயே இப்பணி தொடங்கப்பட்டிருந்தாலும் தேவையான அளவு500 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து முடிக்க 2017 ஏப்ரல் இறுதியாகும்.
மத்தியஅரசும் ரிசர்வ் வங்கியும் சொல்வதுபோல50 நாட்களில் ரூபாய் தட்டுப்பாடு தீர்வதற்கானவாய்ப்பில்லை. எனவே, மத்திய அரசுமுதலில் மக்களுக்கு உண்மையைச்

சொல்ல வேண்டும். மேலும் ரூபாய்த் தட்டுப்பாட்டைத்தீர்க்க விரைந்து மாற்று ஏற்பாடுகள் செய்யவேண்டும்என்று கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் 'டிபாசிட்' : வருமான வரி 'நோட்டீஸ்'

தமிழகத்தில், வங்கிக் கணக்குகளில், அதிக பணம், 'டிபாசிட்' செய்தவர்களுக்கு, வருமான வரித் துறை, 'நோட்டீஸ்' அனுப்ப
துவங்கியுள்ளது,'' என, வருமான வரித் துறை முதன்மைதலைமை ஆணையர், ஏ.கே.ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

தமிழகத்தில், வங்கிக் கணக்குகளை நேரடியாக கண்காணிக்க, எங்களுக்கு வசதி இல்லை என்றபோதிலும், அதன் விபரங்களை பெறுவதற்கான, பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதன்அடிப்படையில், வங்கிகளில், திடீரென அதிகமாக பணம் டிபாசிட்செய்யப்பட்டுள்ள, சேமிப்புக் கணக்கு எண்களை பெறதுவங்கி உள்ளோம். அவற்றை ஆய்வு செய்து, 'நோட்டீஸ்' அனுப்ப துவங்கி இருக்கிறோம்.

எத்தனை பேருக்கு, நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது என, இப்போதைக்கு கூறமுடியாது. ஆனால், நடவடிக்கை துவங்கப்பட்டிருப்பதுஉறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடா' புயல் எச்சரிக்கை: தமிழக அரசின் 15 அறிவுறுத்தல்கள்

நாடா' புயல் வருவதனை முன்னிட்டுபுயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டியநடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த்துறை 15 அம்ச
அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


15 அறிவுறுத்தல்கள்

1. ரேடியோமற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளைஅறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும்.

2. ரேடியோமற்றும் தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகாரபூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும்.


3. புயல்காற்றுகதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்தவாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடிவைக்கவும்.

4. கடற்கரைமற்றும் நீர் சூழ வாய்ப்புள்ளபகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாகவெளியேறவும். நீர் சூழ்வதற்கு முன்னரேபாதுகாப்பான பகுதிக்கு சென்று விடவும்.

5. தங்கள்குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால்பாதிக்கப்படாதுயெனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும் அதிகாரபூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால்உடன் வெளியேறவும்.

6. நீர்நிலைகள்மற்றும் ஆற்றின் கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள்கன மழை காரணமாக நீர்சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்கவும்.

7. சமைக்காமல்உண்ணக்கூடிய உணவுகள் (பிரட், பிஸ்கட், பழங்கள்) தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான குடிநீர் பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.


  8. நீர் சூழ்வதால் வெளியேறவேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களைதவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களைவீட்டில் உயரமான பகுதியில் வைத்துபாதுகாக்கவும்.

9. குழந்தைகள்மற்றும் சிறப்பு உணவு தேவைப்படும்முதியோருக்கு தேவையான உணவுப் பொருளைஇருப்பு வைக்கவும்.

10. மழைநீரில்செல்வதாயின், கையில் கொம்பு ஒன்றினைவைத்துக் கொள்ளவும். பாம்பு, பூச்சிகள் கடிக்கவாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

11. மின்வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்புஉள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்கவும்.

12. அமைதியாகசூழ்நிலையை புரிந்து கொள்ளவும். ஆபத்து நேரத்தினை அமைதியாகஎதிர் கொள்ளும் உங்களது திறன் மற்றவர்களுக்கும்பயன்படலாம்.

13. அதிகாரபூர்வமாகஅறிவிக்கும் வரை புயல் பாதுகாப்புமையங்களிலிருந்து வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டாம்.

14. மின்கம்பங்களிலிருந்துதளர்வான / அறுந்த மின்கம்பிகளை கவனமாகதவிர்க்கவும்.

15. பேரிடரால்பாதுகாப்பிற்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல்வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். உங்களது உதவி தேவைப்படும் எனில்மட்டுமே செல்லவும்.

இவ்வாறுவருவாய்த் துறை தெரிவித்துள்ளது.

500 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணி இரட்டிப்பு: புரளியை நம்ப வேண்டாம்: ஆர்பிஐ

 500 ரூபாய்நோட்டுகள் கடந்த ஒரு சிலநாட்களாகத்தான் புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால்டிசம்பர் மாதத் துவக்கத்தில்
கடுமையானபணத் தட்டுப்பாடு ஏற்படும் என்று புரளி பரவுகிறது. ஆனால், 500 ரூபாய் நோட்டுகள் போதுமானஅளவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்னும்சொல்லப்போனால், 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும்பணி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. எனவே, புரளிகளை நம்பவேண்டாம் என்று ரிசர்வ் பேங்க்ஆப் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன்ற அறிவிப்பினால், 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம்முற்றிலுமாக நின்றது. இதனால், மக்களின் பணப்பரிமாற்றம், பொருட்களை வாங்குதல் போன்றவை பெரிய அளவில்பாதிக்கப்பட்டது. 2000 ரூபாய்க்கு சில்லறை கிடைப்பது பெரும்சிரமமாக இருந்தது.

ரூபாய்நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகுசுமார் 20 நாட்களுக்குப் பின், ஒரு சிலஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், அவையும் போதிய அளவில்இல்லை.

அதே சமயம் சில 500 ரூபாய்நோட்டுகள் சரியாக பிரிண்ட் ஆகாததாலும்மக்களுக்கு பீதி ஏற்பட்டது.

இந்த நிலையில்தான், ஆர்பியை விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்தியாவில் சுமார் 1,660 கோடி மதிப்பிலான 500 ரூபாய்நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாகவும், இந்தியாவில் தற்போது ரூ.8.3 லட்சம்கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில்இருப்பதாகவும் கூறியுள்ளது.

தற்போது2000 ரூபாய் நோட்டுக்குப் பதிலாக 500 ரூபாய் நோட்டுகளே வங்கிகளுக்குஅதிகம் வந்து கொண்டிருப்பதாகவும் வங்கிஅதிகாரிகளும் கூறியுள்ளனர்.

சம்பளத்தில் வருமான வரி பிடித்தமா? : நிறுத்த புதிய வசதி அறிமுகம்

வருமானவரி பிடித்தம் செய்யும், டி.டி.எஸ்., திட்டத்தில், புதிய சேவையை, வருமானவரித் துறை அறிமுகம் செய்துள்ளது. சென்னை, தலைமை அலுவலகத்தில் நடந்தநிகழ்ச்சியில், தமிழகம், புதுச்சேரி பிராந்திய
வருமான வரி முதன்மைதலைமை ஆணையர், ஏ.கே.ஸ்ரீவஸ்தவா, நேற்று, இந்த சேவையைதுவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது: ஊழியர்களிடம், அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களிலேயே, டி.டி.எஸ்., என்றமுறையில், வருமானத்திற்கு தக்கபடி, மாத சம்பளத்தில் வரிப்பிடித்தம் செய்யப்படுகிறது.

படிவம்- 13 : அது தேவையில்லை என, ஊழியர்கள் விரும்பினால், வருமான வரித் துறைக்கும், அலுவலகத்திற்கும்தகவல் தெரிவித்து, படிவம் - 13ஐ நிரப்பி தரலாம். அந்த வசதியை, இனி தமிழகத்தில், 'ஆன்லைனில்' பெறலாம். 

  அதற்காக, www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில், சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில், 'tds (for197)' என்ற பகுதியினுள் நுழைந்து, சம்பளதாரர்கள், தங்களது முந்தைய, இருஆண்டு கணக்குகளைபதிவு செய்தால் போதும். அலுவலகத்தில் வரிப்பிடித்தம் செய்வது நிறுத்தப்படும் அல்லதுதேவைக்கேற்ப குறைக்கப்படும். இவ்வசதி அறிமுகம் செய்யப்படும், மூன்றாவது மாநிலம், தமிழகம். இந்தியாவை, 'டிஜிட்டல்' மயமாக்க வேண்டும் என, மத்திய அரசு முனைப்பாக செயல்படுகிறது. அந்த வேகத்திற்கு, வருமான வரித் துறையும்ஈடுகொடுத்து வருகிறது. அதற்கு,இப்புதிய சேவையேஉதாரணம். கணினிமயமாக்கல் காரணமாக, வரி செலுத்தாத நிறுவனங்களைஎளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மூன்றில்ஒரு பங்கு : வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரல், முரளிகுமார் பேசுகையில், ''வருமான வரித் துறைக்கு கிடைக்கும்வருவாயில், மூன்றில் ஒரு பங்கு, டி.டி.எஸ்., மூலமாகவேகிடைக்கிறது,'' என்றார். மேலும், டி.டி.எஸ்., பிரிவு ஆணையர், சேகர், முதன்மை ஆணையர், ஹர்லால்நாயக் ஆகியோரும் பேசினர்.

Central Teacher Eligibility Test - CTET Sep 2016 Answer Key Published

CCE -THIRD WEEK MATHS TENTATIVE ANSWER KEY - 1 to 8th Std

CCE-WORKSHEET -SCIENCE KEY ANSWER

ஜியோ சிம் இலவச சேவை வரும் மார்ச் 31 வரை நீடிப்பு..?

ரிலையன்ஸ்ஜியோ-வின் 4 ஜி ஆஃபர்மார்ச் 2017- வரை நீட்டிக்கப்படு இருப்பதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிலையன்ஸ்நிறுவனம்ஜியோ சிம்மின் 4 ஜி அறிமுகச் சலுகைஆஃபரை
டிசம்பர் மூன்றாம் தேதி வரை அறிவித்திருந்தது. இதன்படி அளவற்ற டேட்டா மற்றும்
அளவற்றஅழைப்புகளை ஜியோ 4ஜி சிம்பயனர்கள் இலவசமாக பெறுகிறார்கள். இந்நிலையில்100 மில்லியன் பயனாளர்களை அடைவதற்காக இந்த சலுகையினை மார்ச்2017 வரை நீட்டிக்க ரிலையன்ஸ் ஜியோ திட்ட மிட்டுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன. ஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபிஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் என்றுகூறப்படுகிறது.

இந்நிலையில்தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையமான ட்ராயின் விதிகளின்படி, ஜியோ உள்பட எந்ததொலை தொடர்பு நிறுவனமும் தாங்கள்வழங்கும் சலுகையை 90 நாட்களுக்கு நீட்டிக்கக் கூடாது.

அதனால்ஜியோ வின் இந்த ஆஃபர்நடைமுறைபடுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால்ஜியோ ‘வெல்கம் ஆஃபர் ’ எனபெயரை மாற்றி இந்த சலுகைகளைமீண்டும் வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது

IAS தேர்வு என்றால் என்ன?

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

அன்னை தெரேசாவின் வரிகள்

அறிவியல்

இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள்

இந்து மதத்தில் காகத்திற்கு உணவிடுவது ஏன்

இரத்தம் பற்றிய அறிய பயனுள்ள தகவல்கள்

உங்கள் பெயரின் முதல் எழுத்து உங்களை அடையாளம் காட்டுகிறதா

உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும்

உண்மையா?

உமிழ்நீர்