யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/3/17

கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

பொதுத்துறை வங்கிகளில் பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கனரா வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளது.
நவீன வங்கிச் சேவை, நாடு தழுவிய கிளைகள் என்று பிரசித்தி பெற்ற கனரா வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 101 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் பெயர்கள்:

சர்டிபைடு எதிகல் ஹாக்கர்ஸ் பிரிவில் 2,சைபர் பாரன்சிக் அனலிஸ்டில் 2,அப்ளிகேஷன் செக்யூரிடி டிஸ்டம்சில் 4,மேனேஜர் (சி.ஏ.,)வில் 27,மேனேஜர் (பினான்ஸ்) பிரிவில் 5,டேடா அனலிடிக்ஸ் மேனேஜரில் 4,பினான்ஸ் அனலிஸ்டில் 3,எகனாமிஸ்டில் 2,அப்ளிகேஷன்/வெப் செக்யூரிடி பெர்சானல் இன்பர்மேஷன் செக்யூரிடி அட்மினிஸ்ட்ரேடரில் தலா 1,பிஸினஸ் அனலிஸ்ட் டேடா வேர்ஹவுஸ் ஸ்பெஷலிஸ்டில் இ.டி.எல்., ஸ்பெஷலிஸ்ட்பி.ஐ., ஸ்பெஷலிஸ்டில் டேடா மைனிங் எக்ஸ்பர்டில் 2,செக்யூரிடி மேனேஜரில் 19,மேனேஜர் (பினான்ஸ்) பிரிவில் 11,சீனியர் மேனேஜர் (பினான்ஸ்)-2 

கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மற்றும் அனுபவம் தேவை. விபரங்களை அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.


தேர்வுசெய்யும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.


விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என்ற இரண்டு முறைகளிலும் சமர்ப்பிக்கலாம்.


 விண்ணபிக்க  கடைசி நாள்: 05.04.2017


மேலூம் கூடுதல் விபரங்களுக்கு   https://www.canarabank.in/ என்ற இணையதள முகவரி பார்த்து தெரிந்து கொள்ளவும்.

எஞ்சினீயரிங் பட்டதாரிகளுக்கு INDBANK-ல் பணி



இந்தியன் வங்கியின் துணை வங்கியான இந்த் வங்கி சென்னைக்கு நிரப்பப்பட உள்ள பொறியியல் செயலக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: சென்னை

காலியிடங்கள்: 12

பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Secretarial Officer - 11

பணி: Dealer - 01
தகுதி: 01.01.2017 தேதியின்படி பொறியியல் துறையில் பட்டம் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு 2.63 லட்சம்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://corporate.indbankonline.com/Advertisement%20for%20recruitment%20of%20System%20Engineer%20and%20Dealer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
1.தமிழச்சி'- என்ற நூலை எழுதியவர்? வாணிதாசன்
2.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்
3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்
4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்
5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
6.வாஸ்கோடகாமா எங்கு தரை இறங்கினார்? கள்ளிக்கோட்டை
7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்
8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர்
9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்
10.முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை
11.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்
12.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
13.வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
14.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை
15.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை


16.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு
17.இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம்
18.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
19.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்
20.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971
21.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது? 65 வயது
22.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்
23.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்
24.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்
25.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா
26.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன்

Psychology Question and Answer for Teachers Exam..!! ஆசிரியர் தேர்வுக்கான உளவியல் வினா - விடைகள்

கற்றலும் அறிவும் 



1. தேசியக் கல்வி கொள்கை கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1986

2. குழந்தை மையப்படுத்திய கல்வி முறையின் தந்தை எனப்படுபவர; - ரூஸோ

3. கற்றல் என்பது ........ ஆகும் - செயலுறு நிலை

4. திறந்தவெளிப் பல்கலைக்கழகம் செயல்படும் தத்துவம் - வாழ்நாள் முழுவதும் கல்வி

5. வாய்மொழி இலக்கியத்தை கற்பதனால் வளரும் திறன் எது? - புரிதல் திறன்

6. யுடிளவசயஉவ வாiமெiபெ என்பது - கருத்தியல் சிந்தனை

7. குருகுலக் கல்வி முறையில் கல்வி பயின்றோர் - அரசர்

8. தேசிய கலைத்திட்ட கல்வி பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு எது? - 2005

9. ஆயத்த நிலை .......... எனப்படுகிறது - பழுத்த நிலை 

10. கற்றலைத் தீர்மானிக்கும் காரணி எது? - மகிழ்ச்சியான வகுப்பறைச் சு+ழல்

11. அறிவு வளர்ச்சிக்கு உதவும் திறன் - புலன்காட்சித் திறன், மொழித் திறன், நினைவாற்றல்

12. வாய்மொழி இலக்கியத்தை கற்பதனால் வளரும் திறன் எது? - புரிதல் திறன் 

13. இந்தியாவின் முதல் கல்வி மந்திரியாக இருந்தவர் - அபுல் கலாம் ஆசாத் 

14. கோத்தாரிக் கல்விக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த ஆண்டு - 1966

15. இந்திராகாந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1985

கற்றலும், அறிவும் பற்றிய சில குறிப்புகள் :

கற்றல் மாற்றம் (அ) பயிற்சி மாற்றம் :

🌟 முன்பு கற்ற ஒன்று தற்போது ஒன்றினில் மாற்றத்தை ஏற்படுத்துவது கற்றல் மாற்றம் எனப்படும்.

🌟 முன்பு கற்றலைத் தற்போது கற்றுக் கொள்வதிலும், தற்போது கற்கின்ற ஒன்று முன்பு கற்றதிலும் சில விளைவுகளை ஏற்படுத்துவது கற்றல் விளைவு எனப்படும்.

🌟 ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அறிவு, செயல்திறன், பழக்க வழக்கங்கள், மனப்பான்மை போன்ற எந்த அளவைக் கூறும் வேறொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவதே கற்றல் மாற்றம் எனப்படும்.
1.வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ்
2.. புவியலின் தந்தை? தாலமி
3..இயற்பியலின் தந்தை? நியூட்டன்
4..வேதியியலின் தந்தை? இராபர்ட் பாயில்
5..கணிப்பொறியின் தந்தை?சார்லஸ் பேபேஜ்
6..தாவரவியலின் தந்தை? தியோபிராச்டஸ்
7..விலங்கியலின் தந்தை? அரிஸ்டாட்டில்
8..பொருளாதாரத்தின் தந்தை?ஆடம் ஸ்மித்
9..சமூகவியலின் தந்தை? அகஸ்டஸ் காம்தே
10..அரசியல் அறிவியலின் தந்தை? அரிஸ்டாட்டில்
11..அரசியல் தத்துவத்தின் தந்தை?பிளேட்டோ
12..மரபியலின் தந்தை? கிரிகர் கோகன் மெண்டல்
13..நவீன மரபியலின் தந்தை? T .H . மார்கன்
14..வகைப்பாட்டியலின் தந்தை? கார்ல் லின்னேயஸ்
15..மருத்துவத்தின் தந்தை? ஹிப்போகிறேட்டஸ்
16..ஹோமியோபதியின் தந்தை?சாமுவேல் ஹானிமன்
17..ஆயுர்வேதத்தின் தந்தை?தன்வந்திரி
18..சட்டத்துறையின் தந்தை?ஜெராமி பென்தம்
19..ஜியோமிதியின் தந்தை? யூக்லிட்
20..நோய் தடுப்பியலின் தந்தை? எட்வர்ட் ஜென்னர்
21..தொல் உயரியியலின் தந்தை?சார்லஸ் குவியர்
22..சுற்றுச் சூழலியலின் தந்தை? எர்னஸ்ட் ஹேக்கல்
23..நுண் உயரியியலின் தந்தை? ஆண்டன் வான் லூவன் ஹாக்
24..அணுக்கரு இயற்பியலின் தந்தை? எர்னஸ்ட் ரூதர்போர்ட்
25..நவீன வேதியியலின் தந்தை? லாவாயசியர்
26..நவீன இயற்பியலின் தந்தை? ஐன்ஸ்டீன்
27..செல்போனின் தந்தை? மார்டின் கூப்பர்
28..ரயில்வேயின் தந்தை? ஜார்ஜ் ஸ்டீவன்சன்
29..தொலைபேசியின் தந்தை?கிரகாம்ப்பெல்
30..நகைச்சுவையின் தந்தை?அறிச்டோபேனஸ்
31..துப்பறியும் நாவல்களின் தந்தை? எட்கர் ஆலன்போ
32..இந்திய சினிமாவின் தந்தை? தாத்தா சாகேப் பால்கே
33..இந்திய அணுக்கருவியலின் தந்தை? ஹோமி பாபா
34..இந்திய விண்வெளியின் தந்தை? விக்ரம் சாராபாய்
35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை? டாட்டா
36..இந்திய ஏவுகணையின் தந்தை? அப்துல் கலாம்
36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை? வர்க்கீஸ் குரியன்
37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை? சுவாமிநாதன்
38..இந்திய பட்ஜெட்டின் தந்தை? ஜேம்ஸ் வில்சன்
39..இந்திய திட்டவியலின் தந்தை? விச்வேச்வரைய்யா
40..இந்திய புள்ளியியலின் தந்தை? மகலனோபிஸ்
41..இந்திய தொழில்துறையின் தந்தை? டாட்டா
42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை? தாதாபாய் நௌரோஜி
43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை? ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை? ராஜாராம் மோகன்ராய்
45..இந்திய கூட்டுறவின் தந்தை? பிரடெரிக் நிக்கல்சன்
46..இந்திய ஓவியத்தின் தந்தை? நந்தலால் போஸ்
47..இந்திய கல்வெட்டியலின் தந்தை? ஜேம்ஸ் பிரின்சப்
48..இந்தியவியலின் தந்தை? வில்லியம் ஜான்ஸ்
49..இந்திய பறவையியலின் தந்தை? எ.ஒ.ஹியூம்
50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை? ரிப்பன் பிரபு
51..இந்திய ரயில்வேயின் தந்தை? டல்ஹௌசி பிரபு
52..இந்திய சர்க்கஸின் தந்தை? கீலெரி குஞ்சிக் கண்ணன்
53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை? கே.எம் முன்ஷி
54..ஜனநாயகத்தின் தந்தை?பெரிக்ளிஸ்
55..அட்சுக்கூடத்தின் தந்தை? கூடன்பர்க்
56..சுற்றுலாவின் தந்தை? தாமஸ் குக்
57..ஆசிய விளையாட்டின் தந்தை? குருதத் சுவாதி
58..இன்டர்நெட்டின் தந்தை? விண்டேன் சர்ப்
59..மின் அஞ்சலின் தந்தை?ரே டொமில்சன்
60..அறுவை சிகிச்சையின் தந்தை? சுஸ்ருதர்
61..தத்துவ சிந்தனையின் தந்தை? சாக்ரடிஸ்
62..கணித அறிவியலின் தந்தை? பிதாகரஸ்
63..மனோதத்துவத்தின் தந்தை?சிக்மண்ட் பிரைடு
64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?இராபர்ட் ஓவன்
65..குளோனிங்கின் தந்தை?இயான் வில்முட்
66..பசுமைப்புரட்சியின் தந்தை? நார்மன் போர்லாக்
67..உருது இலக்கியத்தின் தந்தை? அமீர் குஸ்ரு
68..ஆங்கிலக் கவிதையின் தந்தை? ஜியாப்ரி சாசர்
69..அறிவியல் நாவல்களின் தந்தை? வெர்னே
70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை? அவினாசி மகாலிங்கம்

  நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்
1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?
7வது இடம்
2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
23 வது இடம்
3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
16வது இடம்
4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
15வது இடம்
5 ) இந்தியாவின்
கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
14வது இடம்
6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?
மதுரை
7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2004
8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?
72993
9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?
சென்னை
10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?
1076 கி.மீ
11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது
1986
12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?
கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?
சென்னை (23,23,454)
14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
சென்னை (46,81,087)
15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
68.45 ஆண்டுகள்
16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?
13 மாவட்டங்கள்
17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
234
18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?
1
19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?
12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன
20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?
சென்னை
21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
71.54 ஆண்டுகள்
22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
15979
23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
561
24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
146
25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
18
26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
39
27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி (64.71 சதவீதம்)
28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
பெரம்பலூர் 5,64,511
29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?
சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?
நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி
32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?
32
33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?
அரியலூர்
34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?
திருப்பூர்
35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்
80.33 சதவீதம்
36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?
17.58 சதவீதம்
37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?
வரையாடு
38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை 
2. கோவை 
3. மதுரை 
4. திருச்சி 
5 தூத்துக்குடி 
6 சேலம்
41 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?
999பெண்கள்(1000 ஆண்கள்)
42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. நீலகிரி 
2. சேலம் 
3. வேலூர் 
4. கன்னியாக்குமாரி
43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. திருவாரூர் 
2. இராமநாதபுரம் 
3. தூத்துக்குடி 
4. கடலூர்
44 ) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?
www.tn.gov.in
46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
சென்னை
47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?
ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
48 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?
திருவில்லிபுத்தூர் கோபுரம்
49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?
நீராடும் கடலுடுத்த
51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?
பரத நாட்டியம்
52 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
மரகதப்புறா
53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனைமரம்
54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
செங்காந்தர் மலா்
55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?
கபடி
56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?
1,30,058 ச.கி.மீ
57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?
7,21,38,958 
ஆண் 36158871 
பெண் 35980087

Psychology - TET Exam ! ஆசிரியர் தேர்வுக்கான உளவியல் வினா - விடைகள்

1. அடைவு ஊக்கி (யுஉhநைஎநஅநவெ அழவiஎந) பற்றி ஆய்வு செய்த அறிஞர் யார்? - அட்கின்சன்

2. 'எல்லா கற்றல்களிலும் ஏதேனும் ஒருவகை ஊக்கி இருத்தல் அவசியம்" என்று கூறுபவர் - ஜார்ஜ் கெல்லி

3. வலிவு+ட்டல் என்பது ஒரு - தூண்டுகோல் 

4. ஊக்கிகளை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்? - 3

5. அடைவு+க்கம் மிக்கவரிடம் காணப்படுவது? - உயர் அவாவு நிலை

6. மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - சிக்மண்ட் பிராய்ட்

7. யுஉhநைஎiபெ ளுழஉநைவல எனும் நு}லை எழுதியவர் - டேவிட் மெக்லிலெண்டு

8. ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் - பெற்றோர்

9. தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்லோவ்

10. ஒரு திறமையான ஆசிரியர் தனது மாணவர்கட்கு கல்வியின் நோக்கம் என எதைக் காட்டுவார்? - வெற்றி

11. மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடையை நோக்கி குவிந்து செல்வது ......... எனப்படும் - குவி சிந்தனை

12. ஆக்கத்திறனுடன் தொடர்புடையது எது? - விரி சிந்தனை

13. ஆக்கத்திறனைக் கண்டறியும் புதுமை பயன் சோதனையைக் கண்டறிந்தவர் யார்? - மால்ட்ஸ்மேன்

14. கனவுகள் ஆய்வு என்ற நு}லை எழுதியவர் - சிக்மண்ட் பிராய்ட்

15. அடைவு ஊக்கிக்கு ஆதாரமாக அமைவது - தன் மதிப்பு

Question and Answer for Teachers Exam..!! ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

1. அ, இ, உ மூன்றும் ....... எழுத்துக்கள் - சுட்டு எழுத்துக்கள்

2. தமிழின் மெய்யெழுத்துக்கள் மொத்தம் எத்தனை? - 18

3. தனித்து இயங்கி, முதன்மை பெற்று வழங்கும் எழுத்துக்கள் யாவை? - முதலெழுத்துக்கள்

4. முதலெழுத்துகள் மொத்தம் எத்தனை? - 30

5. சார்பெழுத்துகள் மொத்தம் எத்தனை? - 10

6. ஐகாரக்குறுக்கம், ஒளகார குறுக்கம் என்பது ....... சார்பெழுத்துகள்

7. உயிர்மெய் (நெடில்) எழுத்து பெறும் மாத்திரை? - 2 மாத்திரை

8. ஆசிரியர் வந்ததும் கேள்வி கேட்பார் என்பது எந்த காலத்தைக் குறிக்கும்? - எதிர்காலம்

9. தமிழ் இலக்கணத்தில் திணை என்னும் சொல் தரும் பொருள் - பிரிவு

10. கண் சிமிட்டும் நேரம் அல்லது விரல் சொடுக்கும் நேரம் என்பது ....... ஆகும் - மாத்திரை

11. தமிழ் மொழியில் பால் எத்தனை வகைப்படும்? - 5

12. 'வண்டு" என்பது எந்த வகை குற்றியலுகரம்? - மென்தொடர் குற்றியலுகரம்

13. 'அஃது" என்பது ......... குற்றியலுகரம் - ஆய்தத்தொடர்

14. குறுகிய ஓசையுடைய இகரம் எது? - குற்றியலிகரம்

15. புறத்திணைப் பிரிவுகள் எத்தனை வகைப்படும்? - 7

Tamil Questions Only for You !! சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர்கள்

1. தமிழ் முனிவன் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - அகத்தியர்

2. ஐந்திரம் நிறைந்தவன் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - தொல்காப்பியர்

3. தெய்வ மொழிப்பாவலர் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - திருவள்ளுவர்

4. குறிஞ்சிக்கவி என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - கபிலர்

5. வரலாற்றுப் புலவர் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - பரணர்

6. அருந்தமிழ்ச் செல்வி என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - ஒளவையார்

7. தண்டமிழ் ஆசான் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - சீத்தலைச்சாத்தனார்

8. ஆளுடையப்பிள்ளை என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - திருஞானசம்மந்தர்

9. புனிதவதியார் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - காரைக்கால் அம்மையார்

10. மருள்நீக்கியார் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - திருநாவுக்கரசர்

11. வன்தொண்டர் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - சுந்தரர்

12. தென்னவன் பிரம்மராயன் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - மாணிக்கவாசகர்

13. தொண்டர்சீர் பரவுவார் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - சேக்கிழார்

14. சு+டிக்கொடுத்த நாச்சியார் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - ஆண்டாள்

15. தமிழ்வியாசர் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;?- நம்பியாண்டார் நம்பி

General Tamil Questions with Answers !! செய்யுள் நு}ல்களைப் பற்றிய சிறப்பான தகவல்கள் !!

1. விருத்தம் என்னும் வெண்பாவில் புகழ்பெற்றவர்? - கம்பர்

2. கற்றோரால் புலவரேறு என்று சிறப்பிக்கப் பெற்றவர்? - வரதநஞ்சையப்பிள்ளை

3. உமாமகேசுவரனார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வரதநஞ்சையப்பிள்ளை இயற்றிய நு}ல்? - தமிழரசி குறவஞ்சி

4. அகமும் புறமும் பற்றிய நு}ல்? - பரிபாடல்

5. புறம், புறப்பாட்டு என வழங்கப்பெறுவது? - புறநானு}று

6. புறநானு}ற்றிலுள்ள திணைகளின் எண்ணிக்கை? - 4

7. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளை கருவு+லமாக கொண்டு விளங்கும் நு}ல்? - புறநானு}று

8. முனிவர் கண்ட பொருள் இது என்று உணர்த்துவது? - பொருண்மொழிக்காஞ்சி

9. அகநானு}ற்றைத் தொகுத்தவர்? - மதுரை உப்பு+ரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மனார்

10. எட்டுத்தொகை நு}ல்களுள் முதலாவதாக அமையப் பெற்றது? - நற்றிணை

11. குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர்? - கபிலர்

12. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு? - காதை

13. நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என்று கூறியவர்? - இளங்கோவடிகள்

14. கம்பராமாயணம் எத்தகைய நு}ல்? - வழிநு}ல்

15. தேம்பாவணியில் இடம் பெற்றுள்ள காண்டங்கள்? - மூன்று





தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 

Tamil Questions Only for You !! செய்யுள் நு}ல் பற்றிய செய்திகள் !!

1. உமறுப்புலவர் எழுதிய மற்றொரு நு}ல்? - முதுமொழிமாலை

2. சின்னச்சீறா என்ற நு}லை எழுதியவர்? - பனு அகமது மரைக்காயர்

3. கிறித்துவக் கம்பர்? - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

4. இரட்சணிய யாத்திரிகத்துள் இடையிடையே அமைந்த இசைப்பாடல்களின் பெயர்? - தேவாரம்

5. தம்பிரான் தோழர் என்பவர்? - சுந்தரர்

6. தமிழ்ப் பல்கலைகழகத்தின் தமிழன்னை விருது பெற்றவர்? - அப்துல் ரகுமான்

7. பாக்களிலே பல சொல்லாய்வுகளுக்கு வித்திட்ட உவமைக் கவிஞர்? - சுரதா

8. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் செவாலியர் விருதினை பெற்றவர்? - வாணிதாசன்

9. சிந்தும் விருத்தமும் பரவி வர பாடப்பெறுவது? - பள்ளு

10. முப்பெரும் பாடல்களுள் ஒன்று? - பாஞ்சாலி சபதம்

11. மேக சந்தேசம் என்ற உலகப் புகழ்பெற்ற நு}லை இயற்றியவர்? - காளிதாசர்

12. அஷ்டபிரபந்தம் இயற்றியவர்? - பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

13. சொற்றொடர் நிலை எனப்படுவது? - அந்தாதி

14. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம்? - நந்திக்கலம்பகம்

15. பிரபந்தம் தொண்ணு}ற்றாறு என்று கூறிப் பெயர்களை வகைப்படுத்தியவர்? - வீரமாமுனிவர்





தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 

About Scholars and Inventions !! பொது அறிவு - அறிவியல் கண்டுபிடிப்புகளும் மற்றும் அறிஞர;களும்

1. எக்ஸ்-ரே - ராண்ட்ஜன்

2. புரோட்டான் - ரூதர்போர்டு

3. நியு+ட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்

4. தெர்மா மீட்டர் - கேப்ரியல் பாரன்ஹீட்

5. ரேடியோ - மார்க்கோனி

6. பெட்ரோல் கார் - கார்ல் பென்ஸ்

7. குளிர் சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹhரிசன்

8. அணுகுண்டு - ஆட்டோஹhன்

9. லாகரிதம் - ஜான் நேப்பியர்

10. பந்துமுனை பேனா - ஜான் ஜே. லவுட்

11. சைக்கிள் - கே. மெக் மிலன்

12. காம்பஸ் - எல்மர் ஸ்பேரி

13. சைக்கிள் டயர் - டன்லப்

14. செல்போன் - பிரண்டன் பெர்ஜர்

15. சிமெண்ட் - ஜோசப் ஆஸ்ப்தீன்

16. டீசல் - என்ஜின் ருடால்ப் டீசல்

17. மின்காந்தம் - வில்லியம் ஸ்டார்ஜியன்

18. ஜெனரேட்டர் - பிசியன்ட்டி

19. கண்ணாடி - ஆகஸ்பெர்க்

20. ரிவால்வர் - சாமுவேல் கோல்ட்





தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 

Psychology Question and Answer for Teachers Exam..!! ஆசிரியர் தேர்வுக்கான உளவியல் வினா - விடைகள்

1. கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவர்ச்சி

2. கற்றலுக்கு உதவாத காரணி - குழுக் காரணி

3. பிறருடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் நம்மை அறியாமலேயே ஏற்றுக் கொள்ளுதல் - கருத்தோற்றம்

4. மனவளம் குன்றிய குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு - 80க்கும் கீழ்

5. குற்றம் புரியும் பண்பும், பாரம்பரியம் என்ற ஆய்வு செய்த உளவியல் வல்லுநர் - கார்ல்பியர்சன்

6. புதுமைப்பயன் சோதனையை அறிமுகப்படுத்தியவர் - மால்ட்ஸ் மேன்

7. புதியவனவற்றைக் கண்டு பிடிப்பதற்கான ஆக்கச் சிந்தனையில் நான்கு படிகள் இருப்பதாக கூறியவர் - கிரகாம் வாலஸ்

8. திருடுதல் என்பது - நெறிபிறழ் நடத்தை

9. சி.எஸ். மையர்ஸ் வலியுறுத்துவது - நளமுறை உளவியல்

10. செயல் தொடர் ஆராய்ச்சியினை முதன் முதலில் வலியுறுத்தியவர் - ஸ்டீபன் எம். கோரி

11. அக நோக்கு முறையைப் பற்றி விவரித்தவர் - இ.பி. டிட்சனர்

12. குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக்

13. ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர்? - மெண்டல்

14. தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்

15. மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது என்று கூறியவர் - ஹேட்பீல்டு

உளவியல் கோட்பாடு மற்றும் கொள்கைகளை ஆய்வு செய்தவர;கள் :

👉 மறத்தல் சோதனை - எபிங்காஸ் 

👉 மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

👉 அடைவு+க்கம் - டேவிட் மெக்லிலெண்ட்

👉 படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே

👉 களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை - குர்த் லெவின்

👉 அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ

👉 முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

👉 நவீன உளவியலின் தந்தை - பிராய்டு

👉 குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹhல்

👉 கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யு+��

General Social Science Question and Answer for Teachers Exam..!! பொது அறிவு - 6 ஆம் வகுப்பு : முதல் பருவம் - சமூக அறிவியல்

1. 2004 இல் ஒரே இடத்தில் ------------------- க்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன? - 160

2. மனிதன் முதலில் பழக்கிய விலங்கு எது? - நாய்

3. ஹரப்பா நாகரிகம் -------------- - நகர நாகரிகம்

4. அறிஞர் அண்ணா அவர்களால் தமிழ்நாடு என்று பெயர் சு+ட்டப்பட்ட ஆண்டு எது? - 1967

5. தென்மதுரை மூழ்கியதால் எதனைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய அரசு நடைபெற்றது? - கபாடபுரம்

6. மனித இனம் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் இடம் எது? - லெமூரியா

7. புதன், வெள்ளி, பு+மி, செவ்வாய் ஆகிய நான்கும் -------------- ஆகும் - திடக்கோள்கள்

8. செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே, புள+ட்டோ முதலியன எந்த ஆண்டு புதிதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன? - 2006

9. இந்தியாவின் வானவியல் அறிஞர்? - வைணுபாப்பு

10. வியாழனைச் சுற்றும் துணைக்கோள்களின் எண்ணிக்கை யாது? - 63

11. சனி, சு+ரியனைச் சுழன்றவாறு சுற்றி வரும் காலம் எது? - 29 ஆண்டுகள் 5 மாதங்கள்

12. சந்திரனின் மறுபக்கத்தை முதன் முதலில் புகைப்படம் எடுத்த செயற்கைக்கோள் எது? - லு}னா

13. சமுதாயத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படை முதலீடு எது? - கல்வி

14. சமுதாயத்தின் பொறுப்பிலிருந்த யாருடைய வருகைக்குப் பின் படிப்படியாக அரசின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டது? - ஆங்கிலேயர்கள்

15. சு+ரியனிடமிருந்து பு+மியின் தொலைவு யாது? - 15 கோடி கி.மீ



தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 


நல்ல பயிற்சி பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கும், பயிற்சி செய்ய போதுமான வசதி இல்லையே என்று ஏங்குபவர்களுக்கும் தரமான தகவல்கள் காத்திருக்கிறது புதிய வுNPளுஊ வுயஅடை அப்ளிகேசனில் !

General Tamil Question and Answer for Teachers Exam..!! ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

பாரதிதாசன் 


1. பாரதிதாசன் பிறந்த தினம் - ஏப்ரல் 29, 1891 

2. பாரதிதாசனின் புனைப்பெயர் - புரட்சிக் கவிஞர், பாவேந்தர் 

3. பாரதிதாசனின் ஊர் - புதுச்சேரி 

4. பாரதிதாசனின் இயற்பெயர் - கனக சுப்பு இரத்தினம் 

5. பாரதிதாசன் ----------- எனும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார் - குயில் 

6. புரட்சிக்கவி என்று பாரதிதாசனை பாராட்டியவர் யார்? - அறிஞர் அண்ணா 

7. பிசிராந்தையார் என்ற நு}லுக்கு 1969-ல் ---------------- விருது கிடைத்தது - சாகித்ய அகாதமி

8. பாரதிதாசனின் பெற்றோர் - கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள் 

9. புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக பாரதிதாசன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1954 

10. பாரதிதாசனின் படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் ------------ இல் பொது உடைமையாக்கப்பட்டன. - 1990 

11. அகத்தியன் விட்ட புதுக்கரடி என்ற நு}லின் ஆசிரியர் - பாரதிதாசன் 

12. பாரதிதாசன் ----------- ஆம் ஆண்டு பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார் - 1920 

13. கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், நாடோடி என்ற புனைப்பெயர்களைக் கொண்டவர் - பாரதிதாசன் 

14. எந்த ஆண்டு புதுவையில் கவிஞரின் நினைவு மண்டபம் புதுவை நகரசபையால் கட்டப்பட்டது - 1965 

15. பாரதிதாசன் இறந்த தினம் - ஏப்ரல் 21, 1964 (அகவை 72) 


பாரதிதாசன் பெற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் :

📃 பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், 'புரட்சி கவிஞர்" என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, புரட்சிக்கவி என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு பாரதிதாசன் விருதினை வழங்கி வருகிறது மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.

📃 1946 - அவரது 'அமைதி-ஊமை" என்ற நாடகத்திற்காக அவர் தங்கக் கிளி பரிசு வென்றார்

Current Affairs Question and Answers...!! நடப்பு நிகழ்வுகள்

1. 7 அணிகள் பங்குபெற்ற ஆசிய ரக்பி செவன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற அணி - இந்திய மகளிர் அணி 

2. இந்து திருமண சட்ட மசோதா 2017 சமீபத்தில் எந்த நாட்டில் நிறைவேற்றப்பட்டது - பாகிஸ்தான்

3. கிராமபோனின் காப்புரிமையை தாமஸ் ஆல்வா எடிசன் பெற்ற தினம் - பிப்ரவரி 19, 1878

4. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் - டிசிஏ. ரங்கநாதன்

5. சத்திரபதி சிவாஜி பிறந்த வருடம் - பிப்ரவரி 19, 1627

6. ஆர்.பி.ஷா என்பவர் எந்த துறையில் பொது மேலாளராக பதவி வகித்தார் - இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 

7. ஆசிய ரக்பி செவன் போட்டியில் இந்திய மகளிர் அணி கடைசி ஆட்டத்தில் யாரிடம் தோற்று தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது - தென் கொரியா

8. தொக்யோ பெகானா என அழைக்கப்படும் சீன முட்டை கோசை விண்வெளியில் பயிரிட்டவர் யார் - அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன்

9. விண்வெளியில் பயிரிடப்பட்டுள்ள 5-வது பயிர் எது - சீன முட்டை கோஸ்

10. பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் - சுனில் மேத்தா

11. தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஜயர் பிறந்த ஆண்டு - 1855, பிப்ரவரி 19

12. இந்திய அரசு யாருடைய நினைவாக பிப்ரவரி 18, 2006-ம் ஆண்டில் அஞ்சல் தலை வெளியிட்டது - உ.வே. சாமிநாத ஜயர்

13. அணுக்கள் மூலம் முதற்தடவையாக மின்சாரம் தயாரிக்கப்பட்ட நாள் - டிசம்பர; 20, 1951

14. சென்னை பெசன்ட் நகரில் டாக்டர் உ.வே.சா நு}ல் நிலையம் அமைக்கப்பட்ட வருடம் - 1942

15. மத்திய ஆயுஷ் அமைச்சகம் கிராமங்களில் சுகாதார மற்றும் சுகாதார கல்வியை ஊக்குவிக்க எந்த திட்டத்தை தொடங்கியுள்ளது - ளுறயளவாலய சுயமளாய Pசழபசயஅஅந




தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 

ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

பாரதியார் 




1. பாரதியார் பிறந்த நாள் - 11.12.1882 

2. பாரதியார் பிறந்த ஊர் - திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம் 

3. பாரதியாரின் பெற்றோர் - சின்னசாமி அய்யர் - இலட்சுமி அம்மாள் 

4. தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு என பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியவர் - பாரதியார் 

5. பாரதியாரின் சிறப்புப் பெயர்கள் - மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன் 

6. பாரதியாரின் கவித்திறனை மெச்சி எட்டப்ப நாயக்கர் மன்னர் பாரதியாருக்கு வழங்கிய பட்டம் - பாரதி 

7. பாரதி தன்னை ---------- என அழைத்துக்கொண்டார் - ஷெல்லிதாசன்

8. பாரதி என்பதன் பொருள் - கலைமகள் 

9. பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள் - பாஞ்சாலிசபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு 

10. பாரதியார் ----------- பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், ----------- பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார் - சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி 

11. பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி (1904) 

12. பாரதியார் ---------------- என்ற பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் - இந்தியா என்ற வாரப் பத்திரிக்கை 

13. பாரதியாருக்கு எட்டையபுரத்தில் உள்ள ஏழு அடி உயர திருவுருவச்சிலை யாரால் திறந்து வைக்கப்பட்டது - பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் 

14. பாரதியாரின் இயற்பெயர் - சுப்பையா (எ) சுப்பிரமணியன் 

15. பொன் வால் நரி, ஆறில் ஒரு பங்கு ஆகிய படைப்புகளின் ஆசிரியர் - பாரதியார் 


பாரதியாரின் இலக்கியப் பணிகள் :

📃 பாரதியார் தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர்.

📃 பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார்.

ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

நு}ல்களும், அதனைப் படைத்த ஆசிரியர்களும் 



1. 'இன்னா நாற்பது" நு}லின் ஆசிரியர; - கபிலர;

2. 'டென் லிட்டில் பிங்கர்ஸ்" நு}லை எழுதியவர் - அரவிந்த் குப்தா

3. 'என் சரிதம்" நு}லை எழுதியவர் - உ.வே.சாமிநாத அய்யர்

4. 'மனுமுறை கண்ட வாசகம்" நு}லைப் படைத்தவர் யார்? - இராமலிங்க அடிகள்

5. 'தேம்பாவணி" பாடலைப் பாடியவர் - வீரமா முனிவர் 

6. 'காந்திபுராணம்" எனும் நு}லை எழுதியவர் - அசலாம்பிகை அம்மையார் 

7. 'நளவெண்பா" பாடலைப் பாடியவர் - புகழேந்திப் புலவர்

8. 'விழுதும் வேரும்" கவிதையை எழுதியவர் - பாரதிதாசன்

9. 'திரிகடுகம்" பாடலைப் பாடியவர் - நல்லாதனார்

10. 'வழித்துணை" புதுக்கவிதையைப் பாடியவர் - ந. பிச்சமூர்த்தி

11. 'இன்ப இலக்கியம்" கவிதையை எழுதியவர் - பாரதிதாசன்

12. 'பு+ங்கொடி" காவியம் பாடியவர் யார்? - முடியரசன்

13. 'அம்மானை" எனும் விளையாட்டுப் பாடலைப் பாடியவர் - சுவாமிநாத தேசிகர் 

14. 'மெய்ப் பொருள் கல்வி" பாடலைப் பாடியவர் - வாணிதாசன் 

15. 'இது எங்கள் கிழக்கு" எனும் பாடலைப் பாடியவர் - தாரா பாரதி

இளமை மரபுச் சொற்கள் :

விலங்குகள் - இளமை மரபு 

குருவி - குருவிக்குஞ்சு 

கழுதை - கழுதைக்குட்டி

நாய் - நாய்க்குட்டி

சிங்கம் - சிங்கக்குருளை 

கோழி - கோழிக்குஞ்சு 

குரங்கு - குரங்குக்குட்டி 

யானை - யானைக்கன்று 

கீரி - கீரிப்பிள்ளை 

புலி - புலிப்பறழ்

மான் - மான்கன்று 




தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 


நல்ல பயிற்சி பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கும், பயிற்சி செய்ய போதுமான வசதி இல்லையே என்று ஏங்குபவர்களுக்கும் தரமான தகவல்கள் காத்திருக்கிறது புதிய வுNPளுஊ வுயஅடை அப்ளிகேசனில் !

ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

சிறப்பான பாடலடிகளைப் பாடியவர்கள் 



1. 'புண்ணியனார் மண்சுமந்தார் என்றுருகுவார்" என்று பாடிய புலவர் - குமரகுருபரர்

2. 'கேடில் விழுச்செல்வம் கல்வி" என்று கூறியவர் - திருவள்ளுவர்

3. 'குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே" என்று கூறுபவர் - பு+தஞ்சேந்தனார்

4. 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்" என்று பாடியவர் - திருமூலர்

5. 'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு" என்று பாடியவர் - ஒளவையார்

6. 'முகநக நட்பது நட்பன்று" என்று உரைத்தவர் - திருவள்ளுவர்

7. 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்" என்று பாடியவர் - திருமூலர்

8. 'சு+ழ்ந்து மாமயிலாடி நாடகம் துளக் குறுத்தனவே" என்றவர் - திருத்தக்கதேவர் 

9. 'ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை" என்றவர் - மதுரைக் கூடலு}ர்க் கிழார் 

10. 'மழையே மழையே வா - நல்ல வானப் புயலே வா வா" என்று பாடியவர் - பாவேந்தர் பாரதிதாசன்

11. 'மலையின் மகள்கண் மணியே அனைய மதலை வருக வருகவே" என்று பாடுபவர் - குமரகுருபரர் 

12. 'ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லை" என்று பாடியவர் - மருதகாசி

13. 'அன்பின் வழியது உயர்நிலை" என்று கூறியவர் - திருவள்ளுவர்

14. 'தமிழ்வெல்க வெல்க என்றே தினம் பாடு" என்றவர் - பாரதிதாசன்

15. 'ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்" என்று பாடியவர் - மகாகவிபாரதி

சொற்பொருள் :

1. பண் - இசை

2. வண்மை - கொடைதன்மை

3. பந்தயம் - போட்டி 

4. பயக்கும் - தரும்

5. சுடும் - வருத்தம்

6. அகம் - உள்ளம் 

7. தானை - படை 

8. மேதை - அறிவு நுட்பம்

9. நெறி - வழி 

10. வனப்பு - அழகு 




தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 


நல்ல பயிற்சி பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கும், பயிற்சி செய்ய போதுமான வசதி இல்லையே என்று ஏங்குபவர்களுக்கும் தரமான தகவல்கள் காத்திருக்கிறது ப

27/3/17

செல்போன் சந்தாதாரர் அனைவரிடமும் ஆதார் எண்ணை கட்டாயம் பெற உத்தரவு

நடப்பு செல்போன் சந்தாதாரர் அனைவரிடமும் ஆதார் எண்ணை கட்டாயம் கேட்டுப்பெற வேண்டும் என்று செல்போன் சேவை
வழங்கும் நிறுவனங்களுக்கு தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள், அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போலிகள் அடையாளம் காணப்பட்டு, ஒழிக்கப்படுகின்றன. ஊழலும் தடுக்கப்படுகிறது.

இந்தநிலையில் நாடு முழுவதும் உள்ள நடப்பு செல்போன் சந்தாதாரர்களிடம் அவர்களது ஆதார் எண்களை கேட்டுப்பெற வேண்டும், அதன் அடிப்படையில் அவர்களை சரிபார்க்க வேண்டும் என்று தொலைதொடர்புத்துறை, செல்போன் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்த ஒரு உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தொலைதொடர்புத்துறை கூறுகிறது.

ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு நடைமுறை படுத்தப் பட்டால், காலை ஒன்பது மணிக்கு முன்னர் தங்கள் ரேகையை இயந்திரத்தில் பதிவு செய்து செய்து வருகையை உறுதி செய்ய வேண்டும் .

+1 வகுப்பில் புதிய பாடம் அடுத்த ஆண்டு அமல்!!

நீட் தேர்வு மையத்தை மாற்ற இன்று கடைசி நாள்

நாடுமுழுவதும் நீட் தேர்வு நடத்துவதற்கு கூடுதலாக 23 நகரங்கள்
தேர்வு செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் இன்று நள்ளிரவுக்குள் தங்களின் தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ளலாம்.நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக, தமிழக அரசு பிப்ரவரி 1ம் தேதி மசோதா நிறைவேற்றியது. ஆனால் இதுவரை அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்காக கடந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 80 மையங்களில் (தமிழகத்தில் 5 மையங்கள்) கடந்த ஆண்டு நீட் தேர்வு நடந்தது. இந்த ஆண்டு கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதால், நாடு முழுவதும் புதிதாக 23 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அந்தநகரங்களின் பட்டியல் http://cbseneet.nic.in இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் தங்களின் பதிவு எண், பாஸ்வேர்டு அளித்து இன்று நள்ளிரவு 12 மணிக்குள் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ளலாம். தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மையங்களில் மாற்றிக் கொள்ளலாம்

ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க வேண்டும்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி !!

ஜூலை1 முதல் வருமான வரி தாக்கல் செய்யக் கட்டாயம்ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதார் அட்டையை உடன்நிரந்தரக்கணக்கு எண்ணான பான் எண்ணையும் இணைக்க வேண்டும். இல்லை என்றால் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு உங்கள் பான்கார்டு செல்லாது.
நிதி மசோதா திருத்தங்களின் படி வரி செலுத்துனர்கள் பான்கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம்ஆக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் பான் எண்ணை ஆதார்எண்ணுடன் இணைக்கவில்லையோ அவர்களது பான் கார்டுகள்காலக்கெடு முடிந்த பிறகு செல்லாது.

 பான் கார்டு வரி செலுத்தும்அனைவருக்கும் பான் கட்டாயம், வரி செலுத்தும் வரம்பில்இல்லாதவர்களும் பான் கார்டை அடையாள அட்டையாகப்பயன்படுத்தலாம்.மானியம் என்றாலே ஆதார் கட்டாயம் கடந்த சில ஆண்டுகளாகமத்திய அரசு அனைத்துத் திட்டங்களுக்கும் அதார் எண் தேவைஎன்பதைக் கொண்டு வருகின்றது, முக்கியமாக மானியம் பெறும்அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

பள்ளி சத்துணவு சாப்பாட்டிற்கும் ஆதார் அன்மையில் மனித வளமேம்பாட்டு அமைச்சகம் பள்ளிக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும்மதிய உணவிற்கும் ஆதார்எண் கட்டாயம் என்று கூறியுள்ளது.ரயில்வே பாஸ் மத்திய அரசைப் பொருத்த வரை இன்னும்ரயில்வே ஊழியர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும்பாஸ்களுக்கு அதார் எண் கட்டாயம் ஆக்கப்படவில்லை.

இந்தியர்களின் வருமானத்தைக் கண்டறிவது எளிது ஆதார்கார்டு, பாண் கார்டு மற்றும் வங்கி கணக்குகளுடன்இணைக்கப்படுவதினால் கோடி கணக்கான இந்தியர்களின்வருமானம் மற்றும் செலுத்த வேண்டிய வரி விவரங்களைவருமான வரித்துறையினரால் எளிதாகக் கண்டறியமுடியும்.

மாற்று அடையாள அட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லிவருங்காலத்தில் பான் கார்டு, வாக்காளர் அடையாளஅட்டைபோன்ற அனைத்து அடையாள அட்டைகளுக்கும் ஆதார் அட்டைமாற்றாக இருக்கும் என்று வருமான வரிக்கு ஆதார் எண்கண்டிப்பாகத் தேவை என்று அறிவிக்கும் போது கூறினார்.

எதனால் பான் கார்டுக்கு ஆதார் கட்டாயம் மேலும் ஆதார்அட்டையைப் பான் கார்டுன் இணைக்கும் போது ஒன்றுக்குமேற்பட்ட பான் கார்டு வைத்துள்ள விவரங்கள் கிடைக்கும் என்றும்அதன் மூலம் வருமான வரிச் செலுத்துவதில் ஏற்படும்முறைகேடுகளைக் குறைக்கலாம் என்றும் அருன் ஜெட்லிதெரிவித்தார் .

மொபைல் போன் சேவைக்கு ஆதார் எண்

தற்போது பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கடந்த பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட், மொபைல்போன் வைத்திருப்பவர் அனைவரிடமும் ஆதார் எண் மற்றும் கே.ஓய்.சி., படிவத்தை ஒராண்டிற்குள் வாங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம், யுஐடிஏஐ, டிராய் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போதுசுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.தொடர்ந்து மத்திய அரசு தொலைதொடர்பு துறை அலுவலகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், புதிய மொபைல் போன் இணைப்பு மற்றும் டெலிபோன் இணைப்பு வழங்கப்படும்போது, அடையாளம் காண ஆதார் எண் வாங்கப்படுவது வெற்றியடைந்துள்ளது. இதே முறையை அடுத்த ஓரு வருடத்திற்குள் தற்போது பயன்பாட்டில் உள்ள போன் எண்களுக்கும் பயன்படுத்த வேண்டும். மொபைல் போன் எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது பயன்பாட்டில் உள்ள பிரிபெய்டு, போஸ்ட் பெய்டு எண்கள் வைத்திருப்பவர்கள் ஆதார் எண்களை 2018 பிப்ரவரிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு வழங்காத பட்சத்தில் 2018 பிப்ரவரி 6க்கு பின் மொபைல் போன் இணைப்பு துண்டிக்கப்படும்.

ஏப்.1-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது.

ஏப்1-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 
2016-17-ம் ஆண்டிற்காக நிதியாண்டு கணக்கு நிறைவடைவதையொட்டி வங்கிகளுக்கு நாளை (மார்ச் 26-ம் தேதி) முதல் ஏப். 1-ம் தேதி வரையில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் 2018 - ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கு இலவச பயிற்சி: நுழைவுத்தேர்வுக்கு ஏப்.21-க்குள் விண்ணப்பிக்கலாம்.

மனிதநேயம் ஐஏஎஸ் கட்டண மில்லா கல்வியகத்தின் இயக்குநர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மனிதநேயம் அறக்கட்டளை யால் நடத்தப்படும் சைதை துரை சாமியின் கட்டணமில்லா ஐஏஎஸ் கல்வியகத்தில் 2018-ம் ஆண்டுக் கான ஐஏஎஸ் முதல்நிலைத் தேர் வுக்கு இலவச பயிற்சி வகுப்பு கள் நடத்தப்பட உள்ளன. இப் பயிற்சிக்கு தகுதியான நபர்களை தேர்வுசெய்ய ஏப்ரல் 30-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நுழை வுத்தேர்வு நடைபெறும். இத்தேர் வுக்கான வினாக்கள் பொது அறிவு சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

இலவச பயிற்சிக்கான மாணவர் தேர்வில் மாவட்ட வாரியாக ஒதுக் கீடு உண்டு. எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வில் 80 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமலேயே இடம் வழங்கப்படும். ஆனால், அந்த மாணவர்களும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டியது கட்டாயமாகும்.இலவச பயிற்சிக்கான நுழை வுத்தேர்வு எழுத விரும்புவோர் www.saidais.com என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே ஆன்லைன் பயிற்சிக்கு விண்ணப் பித்தவர்கள் நுழைவுத்தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண் டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 21-ம் தேதி ஆகும். நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டை மேற்கண்ட இணையதளத்தில் ஏப்ரல் 22 முதல்பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அந்த அனுமதிச்சீட்டில் பாஸ் போர்ட் அளவுள்ள புகைப்படத்தை ஒட்டி, அதில் அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற வேண்டும். அவ்வாறு சான்றொப்பம் பெற முடியாதவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அனுமதிச்சீட்டுடன் கொண்டுவர வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு 044-24358373 என்ற தொலைபேசி எண்ணிலோ, 98401-06162 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

DEE: 2016 - 17 Teacher's Transfer Application Form




வரும் அக்டோபர் முதல் டிரைவிங் லைசென்சு எடுக்கணும்னா ஆதார் கண்டிப்பா வேணும் .

போலி பதிவுகள் மற்றும் மோசடியை தடுக்கும் வகையில் வரும் அக்டோபர் முதல் டிரைவிங் லைசென்சு எடுப்பதற்கு ஆதார் கார்டு அவசியம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுக்களின் பல்வேறு வகையான நலதிட்டங்களை பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. இவ்வரிசையில் புதிதாக ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) பெறுவதற்கும் தற்போது ஆதார் எண் அவசியமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இருசக்கர மற்றும நான்கு சக்கர, கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான லைசென்சு பெறும் முறையில் மாற்றம் கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி புதிய டிரைவிங் லைசென்சு மட்டுமின்றி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள லைசென்சுகளை புதுப்பிப்பதற்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது.

இதன்மூலம் போலி லைசென்சு பயன்படுத்துவதை தடுப்பது மட்டுமின்றி போக்குவரத்து குற்றங்களையும் தடுக்க முடியும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுவோர் மீது எளிதாக நடவடிக்கை எடுக்க இது உதவும்.

நாடு முழுவதும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டால் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் ஒரு வாகனமானது எந்த மாநில வாகனமாக இருந்தாலும் இதனை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

அத்துடன் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறுவிதமான லைசென்சு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் உள்ள குறைகளை களைய ஆதார் எண் அவசியமாக்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீரான முறையில் டிரைவிங் லைசென்ஸ் வழங்க முடியும்.

மேலும் ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட டிரைவிங் லைசென்சு பெற்று மோசடியில் ஈடுபடுவதை தடுக்கவும், இத்திட்டம் பயன் உள்ளதாக இருக்கும் இத்திட்டம் அக்டோபர் மாதம் அமலுக்கு வரும்

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களின் போராட்ட ஆலோசனைக் கூட்ட தீர்மானங்கள்.நாள் - 26.03.2017

26.03.2017 இன்று நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் போராட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பல முறை மாநில அரசை அனுகியும், போராட்டம் நடத்தியும் பணிநிரந்தரம் குறித்து வாய் திறக்கவில்லை.

எனவே மத்திய அரசை நேரில் சென்று அனுக மே மாதத்தில் 2000 பேர்முதல்கட்டமாக டெல்லி  சென்று நேரில் மத்திய மணிதவள மேம்பாடுத்துறை அமைச்சர் மாண்புமிகு.திரு. பிரகாஷ் ஜவடேகர் அவர்களை அனுகி நம் நிலையினை எடுத்து கூறி மனு அளித்து தமிழக அரசை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்துவது என்றும்,அகில இந்திய திட்ட அலுவலக செயலாளரை முற்றுகையிட்டு மனு அளிப்பது என்றும், திருவண்ணாமலை மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது, டெல்லி வர உள்ளவர்கள் ஒன்றியநிர்வாகிகளிடம் ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆதார் நகல் அளித்து பெயரை முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் பிற மாவட்ட நிர்வாகிகள் திரு.என்.வெங்கடேசன் அவர்களை கலந்து ஆலோசிக்கவும் தடுமாறும் தலைமைகளை தவிர்த்து நமக்கு நாமே செயல்திட்டம் வகுத்து செயல்படுவோம்.

*என்.வெங்கடேசன்
*திருவண்ணாமலை
*பகுதிநேர ஆசிரியர்கள் டெல்லி போராட்டக் குழு

JIPMER ADMISSION 2017-2018

JIPMER - PUDHUCHERRY அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு...விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2017 நுழைவுத்தேர்வு நாள்: 04.06.2017


It is informed that JIPMER being an Institute of national importance (Act of Parliament) under theMinistry of Health and Family Welfare, Government of India have been EXEMPTED from NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (UG) (NEET-UG) for admission to MBBS Course inJIPMER, Puducherry The prospectus has been uploaded in the JIPMER website (www.jipmer.edu.in) which contains detailed information of important dates, test, syllabus, eligibility criteria to appear/admission, reservation, examination fee, cities of examination, Age etc. (Kindly click the following link to see the MBBS Prospectus – MBBS Prospectus 2017) Details of Online Application User Interface with screen shot will be hosted in the website separately on 27.03.2017 at 11:00 AM. Students and Parents are, therefore, advised to regularly visit the website for updates.www.jipmer.edu.in

Click here NOTIFICATION 2017...

26/3/17

ALAGAPPA UNIVERSITY DDE - December 2016 Results Published

பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்காக நடத்தப்பட்ட, எழுத்துத் தேர்வு முடிவுகள், நேற்று இணையதளத்தில்
வெளியிடப்பட்டன.
அதன்அடிப்படையில், காலியிடங்களுக்கேற்ப,1 : 5 விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரி பார்ப்புக்கான பட்டியல், முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும்.

இப்பட்டியல், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்; நடைமுறையில் உள்ள இன சுழற்சி; விண்ணப்பதாரர்கள் அளித்த விபரம் ஆகியவற்றின் அடிப்படையில், தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்கிறது!

தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து 549 பேர், பகுதி நேர ஆசிரியர்களாக, 2012ல் நியமிக்கப்பட்டனர். தோட்டக்கலை,
கணினி அறிவியல், தையல், ஓவியம், உடற்கல்வி, யோகா, இசை உள்ளிட்ட பாடங்களை, இந்த ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். வாரத்துக்கு, இரு அரை நாட்கள் வகுப்பு எடுக்கும் வகையில், பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மாதம், 7,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.
விடுமுறை நாட்கள் மற்றும் தேர்வு விடுமுறை காலங்களில், சம்பளம் கிடையாது. இந்நிலையில், பணி நிரந்தரம், சம்பள உயர்வு கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், இரு வாரங்களுக்கு முன் போராட்டம் நடத்தினர். அப்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த, சீனிவாசன் என்ற ஆசிரியர் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பினர், சமீபத்தில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் மற்றும் செயலர் உதயசந்திரன் ஆகியோருடன் பேச்சு நடத்தினர்.

அப்போது, பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்; ஆண்டுக்கு ஒருமுறை பொது மாறுதல் வழங்கப்படும் என, அரசு உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அனைத்து மாவட்டங்களிலும், தொகுப்பூதிய ஆசிரியர்களின் சுய விபரங்களை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பின், ஊதிய உயர்வுக்கான ஆசிரியர் பட்டியல் தயாரிக்கப்படும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு

பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், பள்ளி களில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 'பயோ மெட்ரிக்'
வருகைப் பதிவேட்டை அறிமுகப்படுத்த, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை கையாள்வதில், தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி, புதிய தொழில்நுட்ப உத்தி அடிப்படையில், பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்படும்.


இதற்கு, 45.57 கோடிரூபாய் செலவு ஏற்படும் என, சட்டசபையில், 2016 ஆக., 23ல், 110 விதியின் கீழ், முதல்வர் அறிவித்தார். அதன்படி திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு சார்பில், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

TNTET - 2017 Special Tips: ஒரே மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் படித்து வெற்றி பெறுவது எப்படி?

One Month Schedule to get Success in TNTET - 2017

30 நாட்களில் வெற்றி பெறுவது எப்படி? வெற்றி க்கான டிப்ஸ்..

ஆசிரிய நண்பர்களே நீங்கள் இனி தான் TNTET தேர்விற்கு ஆயத்தம்
செய்ய உள்ளீர்களா..

வேலைபார்த்து கொண்டே படிக்க வேண்டுமா?

இதோஉங்களுக்காக டிப்ஸ் மற்றும் காலஅட்டவணை

நீங்கள் செய்ய வேண்டியவைகள் இதோ....

லஞ்சம் வாங்கினால் பணி நீக்கம்; கேரள அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி

திருவனந்தபுரம் : 'லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவர்' என, கேரள
அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. அரசு துறைகளில், லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு உள்ளதாக, அம் மாநில உள்துறை அமைச்சர் ஜலீல் கூறினார்.

அவர்கூறியதாவது: மக்களுக்கு இலவச சேவை செய்வதாக, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கருதுகின்றனர். மக்கள் அளிக்கும் வரிப் பணத்தில், சம்பளம் பெறுபவர்கள் தான் அவர்கள் என்பதை மறந்து விடுகின்றனர்.

அதனால் தான், வேலை பார்ப்பதற்கு லஞ்சம் கேட்கின்றனர்; இதை ஒழிப்பது தான் அரசின் லட்சியம். லஞ்ச ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்து கண்துடைப்பு ஏற்படுத்தும் முறை மீது நம்பிக்கை இல்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால், உடனே பணியில் இருந்து நீக்கிவிட முடிவு செய்துள்ளோம்.


அரசுஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, ஜாதி மற்றும் மதம் தடையாக இருக்காது. இதை எல்லாம் முன்வைத்து, குற்றவாளிகளை காப்பாற்ற நினைத்தால், அது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு...விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.4.2017

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு சைதை
துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது | ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வை, சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது. இதுகுறித்து மனிதநேய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இலவச பயிற்சி சைதை துரைசாமியை தலைவராகக் கொண்டு இயங்கும் மனிதநேய பயிற்சி மையம், மத்திய-மாநில அரசு பணிகளுக்காக நடக்கும் பல்வேறு தேர்வுகளில் கலந்துகொள்வதற்காக மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. இவ்வாறு அளிக்கப்பட்ட இலவச பயிற்சிகளில் கலந்துகொண்டு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகள் முதல் பல்வேறு வகையான பணிகளில் 2,838 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டிலும் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். தற்போது இந்த மையம் 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளின் முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை உடனடியாக தொடங்கி 2018-ம் ஆண்டு மே மாதம் வரை நடத்த இருக்கிறது. நுழைவுத்தேர்வு இந்த பயிற்சிக்கான தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக, மனிதநேயம் தமிழகத்திலுள்ள 32 மாவட்டத்தின் தலைநகரங்களில் நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி நடைபெறும். நுழைவுத் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படும். இந்த தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் எல்லாதரப்பு மாணவர்களும் எழுதும் வகையில், அடிப்படை பொதுஅறிவு சார்ந்தவையாகவே இருக்கும். இந்த வினாக்களுக்கு விடையளிப்பதற்கு அதிகபட்ச கூடுதல் திறமை தேவையில்லை. மாணவர் தேர்ந்தெடுப்பில் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு உண்டு. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கு நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமலே இடம் வழங்கப்படும். ஆனால், அந்த மாணவ-மாணவியர்களும் நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம். கடைசி தேதி இந்த பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், www.sai-d-ais.com என்கிற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையதளப் பயிற்சிக்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.4.2017 ஆகும். 22.4.2017 முதல் அனைத்து மாணவர்களும், நுழைவுத் தேர்வுக்கான தங்களின் அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) மேற்கண்ட இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் தங்களது சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெறவேண்டும். அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெற முடியாதவர்கள், தங்களது புகைப்படம் உள்ள அடையாள அட்டையை அனுமதி சீட்டுடன் கொண்டுவர வேண்டும். இதுவே அனுமதிச் சீட்டாகும். தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 2435 8373, 9840106162. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கோடை விடுமுறையில் TET நடத்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை.

ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும்,
ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது.
இத்தேர்வைஎழுத காத்திருக்கும் பலர், தற்போது, தனியார் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

  தேர்வு காலம் என்பதால், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவதிலும் மும்முரமாக உள்ளனர். இதனால், இவர்களால் மாலை வெகு நேரத்திற்கு பின்பே, வீடு திரும்ப முடிகிறது; தேர்வுக்கு தயாராக நேரம் கிடைப்பதில்லை.

குறிப்பாக, பெண் விண்ணப்பதாரர்கள், வீட்டு வேலையிலும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், தினமும் ஒரு மணி நேரம் கூட, தேர்வுக்கு தயாராக முடிவதில்லை. அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் சிலருக்கோ, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், வேலையில் தொடர முடியும் என்ற நிலை.இதனால், முழு நேர பயிற்சியில் ஈடுபட்டுள்ள, பிற தேர்வர்களுடன் போட்டியிட முடியாமல் தவிக்கும் பெண் ஆசிரியர்கள், தேர்வை கோடை விடுமுறைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உள்ளனர்.


மேலும், 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, தேர்வர்கள் வரிசையில் காத்து நின்றும், 'ஜெராக்ஸ்' எடுக்க அலைந்தும் நேரத்தை வீணடிக்க வேண்டியதாயிற்று.இதை தவிர்க்க, 'டி.என்.பி.எஸ்.சி., போல், ஆன்லைன் வாயிலாகவிண்ணப்பிக்கும் நடைமுறையை, அடுத்தாண்டு முதலாவது அமல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

CPS- புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மற்றும் 6-வது ஊதிய குழு பாதிப்பில் உள்ள ஆசிரியர்களே -குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களே தயவு செய்து இந்த கட்டுரையை படிக்கவேண்டாம்

சிறுகணல்
1.       ரூ. 5200 + 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கும்,

2.       1.86 பெருக்கத்துடன் ரூ.2800/- பெறும் இடைநிலை
ஆசிரியர்களுக்கும்,

3.       CPS வேண்டாம்; OPS வாழ்வூதியம் மட்டுமே எங்களுக்கு உயிர்நாடியாய் வேண்டுமென்று உறுதியாய் நிற்கும் அனைத்துவகை சுமார் 55 ஆயிரம் ஆசிரியர்களுக்கும்,

                                                - “இயக்கங்கள் கடந்து, கூட்டு நடவடிக்கைக் குழுக்கள் கடந்து, முகம் & முகவரி கடந்து; ஏன் அனைத்து மாச்சரியங்களும் கடந்து” – மிகவும் ஆக்கப்பூர்வமாக பாதிக்கப்பட்ட நீங்கள் மட்டும் ஓர் அணியில் இணைந்து நின்று வெற்றிவாகை சூடிட
மனதார வாழ்த்தி வணங்குகிறேன்.
  - உங்கள் வாய்மை வழிகாட்டி,
 ம. சேவியர் ஜோசப் கென்னடி,
 துணைப் பொதுச் செயலாளர்,
  தமிழக ஆசிரியர் மன்றம்.
                                                                                

                                    உங்களுடைய வலியும், வேதனையும், சகல சௌகரிய ஓய்வூதியத் தலைவர்களுக்கோ (அல்லது) உங்கள் பிரதானமாய் முன்னிறுத்தி உங்களை வைத்துப் போராடி உங்களுக்கு ரூ.750/- ம், தங்களுக்கு ரூ.1100/- முதல் ரூ.1300/- (அதாவது GP ரூ.5400/- மற்றும் ரூ.5700/-) பெற்றுக் கொண்ட தலைவர்களுக்கோ ஒருவேலை புரிந்தாலும்கூட,
·         அவர்களின் ஈகோ மட்டும், ஒருநாளும் அவர்களை விட்டுப் போகப்போவதும் இல்லை.

·         அனைவரும் ஒரு குடையின்கீழ் நின்று பிரச்சனை தீரும்வரை, தொடர்ந்து போராடி வெல்லப்போவதும் இல்லை. இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அரசா காரணம்?

·         உங்கள் வலியும், வேதனையும் நீங்கப் போவதும் இல்லை.
·         இதனால் அவர்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லை, நஷ்டமும் இல்லை. மாறாக இலாபமே !

·         இந்த நிதர்சனத்தை நீங்கள் அறிவார்த்தமாய் உணரச் செய்யவே இம்மடல் என்று எண்ண வேண்டாம். அதையும் தாண்டி சரியான வழிகாட்டும் செயலேயாகும் !

“பாதிக்கப்பட்ட மூன்று பிரிவு ஆசிரியர்களையும் பார்த்து நான் மிகவும் வெளிப்படையாக சிலவற்றைக் கேட்டாக வேண்டும்.”

1.     மாநில அரசின் அனைத்து வகை ஊதிய விகித நிலையினருக்கும் (ஏன் இன்னும் சிலருக்கு உயர்த்திக்கூட வழங்கிய நிலையில்) மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய விகிதம் வழங்கிவிட்டு உங்களுக்கு மட்டும் வழங்காதது;
                                      i.        சமூக நீதிக்கு எதிரானது
                                     ii.        நியாயமற்ற செயல்
- என்று உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா?

2.  அப்படியானால், செய் அல்லது செத்துமடி என்னும் தத்துவத்தின் அடிப்படையில் நான் எனக்கெதிரான இந்த அநீதியைக் களையாமல் ஓயமாட்டேன் என்று மிகவும் வாய்மையாய் உறுதியேற்கிறீர்களா?

3. பாராளுமன்றமும், சட்டமன்றமும் தங்களுக்கு OPS வைத்துக் கொண்டு எங்களுக்கு CPS-ஐ கொடுக்காமல் இரத்து செய்வது,
                                      i.        தவறு
                                     ii.        அநீதி
                                    iii.        எந்த விதியின் கீழும் நியாயப்படுத்த முடியாது.
                                    iv.        OPS என்பது எனது வாழ்வுரிமை,
                                     v.        அது கொடுபடா ஊதியம்,அதை அடையாமல் நான் ஓயமாட்டேன்
-       என்று உறுதியாய் சபதம் ஏற்கிறீர்களா?

4.காலத்தே, அறவழி போராடி, குறைந்தபட்சம் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் தேர்தல் அறிக்கையில்,

                          i.   மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாட்டைச் சரிசெய்வோம்,

                                                   ii.        CPS – ஐ இரத்து செய்து, OPS-ஐ அமல்படுத்துவோம்- என்ற வாக்குறுதி இடம்பெறவில்லையெனில் நாம் ஆட்சி அமைப்பது கடினம்.- என்ற நிலையை ஏற்படுத்தாமல் விடமாட்டேன் என்று உறுதி கொண்ட நெஞ்சினராய் இருக்கிறீர்களா? அப்படியானால், இந்த வாய்மை வழிகாட்டி சொல்வதை மனதில் போட்டு வீருநடை போடத் தவறாதீர்கள். ஆம், முதலில் “Rescue Equality Justice” – என்ற சமூக வலைதளக் குழுவை உருவாக்குங்கள்.

5.     அதில் பாதிக்கப்பட்ட மேற்சொன்ன மூன்று பிரிவினர் சுமார் 55000 பேரை மட்டும் ஒன்றிணையுங்கள். நான் உட்பட, பாதிக்கப்படாத எவரையும் கட்டாயம் உள்ளே சேர்க்காது விலக்கி வையுங்கள்.வேண்டுமானால், வெளியில் இருந்து வழிகாட்ட மட்டும் சொல்லுங்கள்.

6. முழு ஆண்டு விடுமுறையைப் போராட்ட நாளாகத் தேர்ந்தெடுங்கள். முற்றுகை, மறியல், வேலைநிறுத்தம் என்று யாருக்கும் இடையூறு செய்யாது அரசு உள்ளிட்ட அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஓரிடத்தில் 55000 பேரையும் தொடர்ச்சியாகப் பல நாட்கள் கூட்டுவது மட்டுமே இலக்காக இருக்கட்டும்.

7.     இடம், சென்னைக் கடற்கரையை மக்கள் கடற்கரையாக மாற்றுவதாகவோ அல்லது  திண்டுக்கல் மலைக் கோட்டையை மக்கள் கோட்டையாக மாற்றுவதாகவோ அல்லது சிறை நிரப்புவதற்குப் பதிலாக ஸ்டேடியத்தை நிரப்புவதாகவோ இருக்கட்டும்.

8.     அங்கே, வாயில் கருப்புத்துணி கட்டியபடி பதாகைகளை ஏந்தி ஒரு மவுனப் புரட்சியை மட்டும் நிகழ்த்துவதாக அமையட்டும்.

9.     அரசு உட்பட, யார் யாரெல்லாம் இந்தக் வேள்வியின் நியாயத்தை உணர்கிறார்களோ அவர்கள் யாவரும் வாழ்த்துரை வாருங்கள் என்று பொது அழைப்பு மட்டும் விடுங்கள்.

10. 
                      i.        இப்போராட்டத்தால், மாணவர்கிளின் கல்வி பாதிக்கப் போவதில்லை.
                     ii.        அரசு எந்திரம் முடங்கப் போவது இல்லை.
                    iii.        பொதுமக்களுக்கு இடையூறு இல்லை.

ஆகவே, இப்போராட்டம் அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும் ! நிச்சயம் வெற்றிபெறும் !!

Ø  செய்வீர்களா ? அல்லது
Ø  அறுப்பவன் பின்னால் செல்லும் ஆடுபோல் இருப்பீர்களா ? அல்லது
Ø  “Satisfied with what you have” என்று வசனம் பேசப் போகிறீர்களா ?
சிந்திப்பீர் ! செயல்படுவீர் !!
                        - இவ்வாறு எழுதுவது விரக்தியின் விளிம்பிநின்று என எண்ண வேண்டாம். நம்பிக்கை ஒளிக்கீற்றிநின்றேயாம் !!
நன்றி !
                                                                                                                                                                 இவண்,
                                      ம. சேவியர் ஜோசப் கென்னடி.
                                      துணைப் பொதுச் செயலாளர்,
                                 தமிழக ஆசிரியர் மன்றம்.திண்டுக்கல்