யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/6/17

மாணவர்கள் சேராததால் 11 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் மூடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது !!

தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல்கள் போல பெருகிவிட்டன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் படித்து வெளியேறுகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் பொறியியல் படிப்பில் நுணுக்கம் பெற்றவர்களாக இருக்கிறார்களா என்பது தெரியாது.


நடப்பாண்டு ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் கலை, அறிவியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். பி காம், பிஎஸ்சி இயற்பியல், பிஎஸ்சி வேதியியல் உள்ளிட்ட படிப்புகளை தேடி படிக்கின்றனர்.


கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் படுமோசமாக இருந்தது. அந்த கல்லூரிகளின் பட்டியல் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.


கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளில் பெரும்பாலும் அரசு கல்லூரிகளையே தேர்வு செய்து படிக்கின்றனர். குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள்தான் தனியார் கல்லூரிகளில் அதிகம் பணம் செலவு செய்து படிக்கின்றனர்.


தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் இவற்றில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் அடிப்படை வசதியில்லை. இவற்றில் படித்து வெளியேறும் மாணவர்களுக்கு எந்தவித அடிப்படை அறிவோ இன்றிதான் இருக்கின்றனர். இவற்றை அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு செய்து வருகிறது. கல்லூரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதனிடையே மாணவர்கள் சேராததால் வருமானம் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, தாங்கள் நடத்தி வந்த கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலையில் கல்லூரிகளை மூடுவதற்கும் அனுமதி கேட்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பின.


சென்னையில் மேக்னா பொறியியல் கல்லூரி, ஸ்ரீரங்கம்பாள் கட்டட வடிவமைப்பு கல்லூரி மூடப்படுகின்றன. கோவையில் விவேகானந்தா பெண்கள் பொறியியல் கல்லூரி, சசி பிஸினஸ் ஸ்கூல் மூடப்படுகின்றன. மேலும் மகாராஜா பிரித்வி பொறியியல் கல்லூரியும் மூடப்படுகின்றன.


திருச்சியில் பாவேந்தர் பாரதிதாசன் கல்லூரி, ஆர்.வி.எஸ்- கே.வி.கே நிர்வாக கல்லூரி, திருச்சியில் சுவாமி விவேகானந்தா நிர்வாகவியல் கல்லூரியும் மூடப்படுகிறது. மதுரை சி.ஆர் பொறியியல் கல்லூரி, மைக்கேல் மேலாண்மை கல்லூரி மூடப்படுகிறது. நெல்லையில் ஜோ சுரேஷ் பொறியியல் கல்லூரியும் மூடப்படுவதாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டிலுள்ள தனியார் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன. இதன் அடிப்படையில் இந்திய மருத்துவக் கல்வி கவுன்சில் உறுப்பினர்கள், மருத்துவ கல்லூரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். ஆய்வின் முடிவில், தண்டலம் மாதா மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் அன்னை மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி மருத்துவ அறிவியல் ஆய்வு மையம், பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவக் கல்லூரிகள் இரண்டு ஆண்டுகள் செயல்படுவதற்கு மத்திய சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றக்கிளை நோட்டிஸ் !!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றக்கிளை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலர், எய்ம்ஸ் 
இயக்குனர், தமிழக தலைமை, சுகாதாரத்துறைச் செயலர் ஆகியோர் ஜூலை 12 க்குள் பதிலளிக்க  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

செல்போன் பேசியபடி வாகனம் இயக்கினால் ஓட்டுநர்உரிமம் நிரந்தரமாக ரத்து: தமிழக அரசு முடிவு !!

செல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாம் என்று தமிழக அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஹெல்மெட் அணியாவிட்டால் விழிப்புணர்வு பயிற்சியுடன் அபராதம் வசூலிக்க வேண்டும்என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். 
ஹெல்மெட் அணியாமல் சென்றால் உரிய அபராதத்தை வசூலிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலோ, சிவப்பு விளக்கை தாண்டினாலோ, அதிவேகமாக வாகனத்தை இயக்கினாலோ ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யலாம்.செல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாம் என்று தமிழக அரசு அதரடி முடிவெடுத்துள்ளது. சோதனை அலுவலர்கள் ஆய்வின் போது அசல் உரிமத்தை வாகன ஓட்டிகள் காண்பிக்க வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மறு மதிப்பீடு 'ரிசல்ட்' வெளியீடு!!!

ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் !!

ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்ப்போம்.

பொதுவான அரசாணைகள்

(அ) ஆண்டுதோறும் வழக்கம்போல் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. (அடிப்படை விதி 24) (FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)


(ஆ) ஒரு ஊழியர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலும் கூட ஊதிய உயர்வு வழங்கலாம். (அடிப்படை விதி 24-ன் துணை விதி (8) அரசு கடித.எண் 41533/பணி என்37-9, பணியாளர், நாள் 8.4.1988)

(இ) ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியில் ஊதிய உயர்வு வழங்கப்படும். FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

 (ஈ) புதியதாக பணி ஏற்கின்ற அல்லது பதவி உயர்வில் பணி ஏற்கின்ற ஒருவருக்கும் முதல் ஊதிய உயர்வு, இணையான காலாண்டின் துவக்கத்தில் வழங்கப்படும். இவர்கள் விஷயத்தில் ஓராண்டு பணி முடிக்க வேண்டிய அவசியமில்லை. (G.O.Ms.No.41 Finance Dept, Dated 11.1.1977 மற்றும் Govt Letter No.171550அவி173 Finance Dept, Dated 1.10,1991)

(உ) ஊதிய உயர்வு நிலுவை இருப்பின், அதற்கான சான்று கையொப்பமிட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வழங்கப்பட வேண்டும். தவறின், அடுத்த உயர் அலுவலரின் முன் தணிக்கை பெற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலும் நிலுவையாக உள்ள இனங்களுக்குத் துறைத் தலைவரின் அனுமதி தேவை. (G.O Ms No.1285, Finance department Dated 11.10.1973 மற்றும் G.O Ms No.349, Finance department, Dated 21.5.1981)

(ஊ) தேர்வுகள் தேர்ச்சி பெறுவதற்காக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டியிருப்பின், தேர்வுகள் நடந்த கடைசி நாளுக்கு (பிரிவுகளாக நடந்திருப்பின், பிரிவுத் தேர்வு நடந்த கடைசி நாளுக்கு) மறுநாள் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் (அடிப்படை விதி 26(எ)ன் துணை விதி (2)

தற்காலிக மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு ஊதிய உயர்வு

(அ) தற்காலிக ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால், அவர் வசிக்கும் பதவியில் தகுதிகாண் பருவக்காலத்தில் தேர்வுகள் ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும். இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும். (அரசாணை எண். 1087, நிர்வாகத்துறை, நாள் 10.11.1982 அரசாணை எண். 231, P&AR,சி.16383 மற்றும் அரசு க.எண் 35068DOFIP&AR,நாள் 1.1.1994) தற்காலிகமாக பதவி உயர்வு பெற்றவருக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter. No. 15285/FR.1746, Finance dated. 16.8.1975)

(ஆ) தகுதிகாண் பருவத்தினருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். தகுதிகாண் பருவக் காலத்தில் தேர்வுகள் வரையறை செய்யப்பட்ட பதவிகளுக்கு இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் வழங்கப்படும். தகுதிகாண் பருவம் முடிந்து ஆணை வழங்கிய பின்னர் தான் இரண்டாவது ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் என்பது இனி இல்லை (G.O Ms No. 618, P&A.R., Dated 6.7.1987)

பணி அமர்த்தப்பட்டால், முந்தையப் பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு சேராது. இருப்பினும் அதே பதவியில் அதே துறையிலோ வேறு துறையிலோ பணி அமர்த்தப்பட்டால் அதே ஊதியம் வழங்குவதுடன் முந்தைய பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (Govt. Letter. No.76362874, P&AR Dated 27.7.1988)

முன் ஊதிய உயர்வு

(அ) ஒரு குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றால் முன் ஊதிய உயர்வு வழங்கலாம் என குறிப்பான அரசாணை உள்ள பதவிகளுக்கு மட்டுமே, முன் ஊதிய உயர்வு வழங்கலாம்.

(ஆ) பணிக்கு வருவதற்கு முன்னரே குறிப்பிட் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (G.O Ms No.245, P&A.R., Dated 16.3.1985)

(இ) தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு ஒரு முன் ஊதிய உயர்வும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றால் இரண்டு ஊதிய உயர்வுகளும் கிடைக்கும் (G.O Ms No.1755, P&A.R., Dated 22.11.1988) மேற்படி ஊதிய உயர்வு போட்டி நடைபெற்ற மறுநாள் முதல் கிடைக்கும். மொத்த பணிக்காலத்தில் இதுபோன்ற காரணத்திற்கு மூன்று ஊதிய உயர்வுகளுக்கு மேல் கிடைக்காது. இருப்பினும் மேற்படி ஊதிய உயர்வு பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயத்திற்குச் சேராது.

(ஈ) சார்நிலை ஊழியர்களுக்கான கணக்குத் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Number Gazette பதிவுகளைக் கொண்டு முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter.No. 52011 iii/873 P&A.R., Dated 13.8.1987)

(உ) உதவியாளர் பதவி உயர்வை துறக்கின்ற தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோருக்கு முன் ஊதிய உயர்வு கிடைக்காது. (G.O Ms No.10302 அ.வி. 285-2, P&A.R., Dated 4.9.1985)

(ஊ) தண்டனையாக ஊதிய உயர்வு தள்ளிப் போகின்ற நிகழ்வில் ஒருவருக்கு Advance Increment பெறுவதற்கான தகுதி கிடைத்தால் அதுவும் வழங்கப்பட வேண்டும். (Govt. Letter No. 28857 FR.177-1, P&A.R. dated 29.4.77)

பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்றால் ஊதிய உயர்வு

ஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்று விடுப்பு முடிந்து மீண்டும் அதே பதவியில் சேர்ந்தால் விடுப்புக்காலம் உயர் பதவியின் ஆண்டு ஊதிய உயர்வுக்கு சேரும் (24.3.1988 வரை விடுப்புக்காலம் பதவி உயர்வுக்கு சேராது என்று விதிகள் இருந்தன) (G.O Ms No.212, P&A.R., Dated 25.3.1988)

குற்றமாக கருதப்பட்ட தற்காலிகப் பணிநீக்க காலம்

 கீழ்நிலைப் பதவியில் பணிபுரிந்த காலம் உயர் பதவிக்கு சேராது

தண்டனைக் காலம் விடுப்புகளை சேர்த்தோ அல்லது நீங்கலாகவோ என தண்டனை வழங்கப்படும் ஆணையில் குறிப்பிட வேண்டும். இருப்பினும், With Cumulative effect-ஆக தள்ளப்படும் ஊதிய உயர்வு எப்போதுமே விடுப்புக்காலம் சேர்த்துதான் இருக்கும். (விதி 24 & அதன் அறிவுரை 2 (b))

தண்டனையாக ஊதிய உயர்வைத் தள்ளிப் போடுதல்

ஊதிய உயர்வை தண்டனையாக கருதி குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளிப்போடலாம். With Cumulative effect and Without Cumulative effect என இரு வகைகள் உள்ளன.

Without cumulative effect-ல் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு தண்டனைக்காலம் முடிவுற்றதும் நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வு வழங்கப்படும்.

With Cumulative effect-ல் தண்டனையாக நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வின் இழப்பு பணிக்காலம் முழுவதும் இருக்கும். தண்டனையாக நிறுத்தப்பட்டது மீண்டும் கிடைக்காது.

இதுவன்றி ஊதிய உயர்வு தள்ளிப் போகும் காலத்தில் விடுப்பு அனுபவித்தால் இணையான காலத்திற்கு ஊதிய உயர்வு தள்ளிப் போகும்.

ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையிலிருப்பினும், ஊதிய உயர்வு வழங்கலாம். (Rule.6 under FR) ஆணை வழங்குதலை எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்கக் கூடாது. ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிப் போகும் ஆணை வழங்கப்பட்டால், ஆனைக்குப் பின்னர் எதிர்வருகின்ற முதல் ஊதிய உயர்வு தள்ளிப் போகும். ஆணை வழங்கப்பட இருக்கின்றது என எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்க முடியாது. (அடிப்படை விதி 24)

ஊதிய உயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பிலிருந்தால்

ஊதிய உயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பில் இருந்தால் (LLP Without M.C. தவிர) ஊதிய உயர்வின் நிதிப்பயன் விடுப்பு முடிந்து பணியேற்ற உடன் வழக்கமான ஊதிய நாள் முதல் கிடைக்கும். நிதிப்பயன் தள்ளிப் போகாது. விடுப்பு என்பது எல்லா விடுப்பும் சேரும், LLP Without MC-ல் இருந்தால் விடுப்பு முடிந்து சேர்ந்த பிறகுதான் அனுமதிக்க முடியும். (Govt Letter No.48747/FRDOI/93-9, dated 30.5.1994) (G.O.Ms.No 90 P&AR, Dated 28.3.95)

பணிநீக்கப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால் ஊதிய உயர்வு

(அ) தகுதிகாண் பருவம் முடித்தவர் பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால், அவர் பணிநீக்கத்திற்கு முன்னர் பெற்று வந்த ஊதியமே பெறலாம். அத்துடன் முந்தைய பணிக்காலமும், ஊதிய உயர்வுக்குக் கணக்கிடப்படும் (G.O.Ms.No.400 P&AR, Dated 7.4.1988) இதனை சாதாரணமாக ஊதியம் நிர்ணயம் செய்யும் அலுவலரே வழங்கலாம் - (Govt Letter no.44316/86-4. P&AR, Dated 29.8.1986)

(ஆ) இடைப்பட்ட பணி நீக்கக் காலம் Condone செய்யப்பட வேண்டிய தேவையில்லை (Govet Letter No.44318/86-4, Finance Department, Dated 29.8.1986)

(இ) தகுதிகாண் பருவக் காலத்தில் ஒருவருக்கு 1.4.1988 அன்று ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட தேர்வு தேறாத காரணத்தால் 1.4.1988 ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. 1.4.1989 மற்றும் 1.4.1990 ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. இவர் 18.9.1990 அன்று நடைபெற்ற தேர்வில்தான் தேர்ச்சி பெறுகின்றார். இவருக்கு 1988, 1989, 1990 ஆகிய மூன்று ஊதிய உயர்வுகளும் சேர்ந்து 17.9.1990 அன்று ஒரு சேர வழங்கப்படும் என்று Rule of 28 of State and Subordinate Service Rules கூறுகிறது. இதனால் இவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக Cumulative நிதி இழப்பு ஏற்படவில்லை.

(ஈ) தகுதிகாண் பருவக்காலத்தில் பயிற்சி முடிக்கவேண்டிய இளநிலை உதவியாளர்களுக்கு இரண்டாவது ஊதிய உயர்வு அப்பயிற்சி முடிந்த பின்னர் தான் வழங்கப்பட வேண்டும். அலுவலக நடைமுறை காரணமாக பயிற்சிக்கு அனுப்புவது தாமதப்பட்டால், அரசின் ஆணை பெற்று விதிகளைத் தளர்த்தி வழக்கமான நாளிலேயே ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt Letter No.6888/90-3, P&AR Dated 18.4.1990 மற்றும் G.O.Ms No. 71720 பணி-பி/92-1, P&AR Dated, 2.12.1992)

(உ) ஒரு பதவிக்கு பணி அமர்வு செய்வதற்கான தகுதிகள் அனைத்தும் ஒருவர் பெற்றிருக்கவேண்டும். ஏதேனும் ஒரு தகுதி குறைவாக இருந்தாலும் அவருக்கு ஊதிய உயர்வே கிடைக்காது. (Govt Letter No.16599A/FRI/74-3 Finance Dept, dated 21.3.1975 & G.O.Ms No.41, Finance Dept, Dated 11.1.1977)

(ஊ) பணி இறக்கம் பெறுவதைத் தொடர்ந்து ஒருவர் விடுப்பில் செல்வதால் விடுப்பு முடிந்து மீண்டும் பதவி உயர்வு பெற்று அதே உயர் பதவியில் சேர்ந்தால் விடுப்புக் காலத்திற்கும் ஊதிய உயர்வு கிடைக்கும். அதாவது தள்ளிப் போகாது (Effective from 25.388) G.O.Ms.No.212, P&A.R., dated 25.388)

தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர்கள்

முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கலாம். இரண்டாம் உதிய உயர்வு தமிழ் தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும்.

ஊதிய விகிதத்தில் அதிகபட்சம் பெற்றவருக்கு ஊதிய உயர்வு

1.1.96 முதல் (நிதிப்பயன்1.9.1998) ஒரு ஊதிய வீதத்தில் அதிக பட்சம் பெற்றுவிட்ட ஒருவருக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறைதான் ஊதிய உயர்வு கிடைக்கும் (GO.Ms No. 483, Finance (Pay commission) Dated 8.9.1998)

ஊதிய உயர்வுக்கு சேரும் காலம் –

பணியேற்பிடைக்காலம் FR 26(d)
அயல் பணி FR-26(d)
உயர்நிலைப் பதவியின் பணிபுரிந்த காலம் கீழ்நிலைப் பகுதிக்கு சேரும் FR26(e))
பயிற்சிக்கு சென்ற காலம் - (GO.Ms.No.370, P&ARdL26689)– அனைத்து விடுப்புகள்-(FR2660)
மருத்துவச் சான்றின் பேரில் ஊதியமில்லா விடுப்பு - (FR 26 (bb)


 ஊதிய உயர்வுக்கு சேராத காலம்

மருத்துவச் சான்று அல்லாத ஊதியமில்லாத விடுப்புFR26(bb)
அனுமதித்ததற்கும் அதிகமாக எடுக்கப்பட்ட வரன்முறை செய்யாத விடுப்புக்காலம்
C.P. சரவணன், வழக்கறிஞர்.  9840052475
www.sstaweb.com

SSLC Examination June /July - 2017 Hall Ticket download !!
Posted: 21 Jun 2017 07:30 AM PDT
Directorate of Government Examinations -SSLC Examination June /July - 2017 Hall Ticket download
http:http://210.212.62.109/dge/tndge/examprvht/prvappsht.aspx?C=INSTANT_SSLC
dge/tndge/examprvht/prvappsht.aspx?C=INSTANT_SSLC

20/6/17

இன்றைய (19.06.2017) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட கல்விச்சார்ந்த அறிவிப்புகள் !!

பள்ளிக்கல்வித் துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் தமிழக முதல்வர்"


110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி, பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புக்களை இன்று சட்டசபையில் வெளியிட்டார்.

அவை,

* உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.. இதற்காக ரூ.437 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி இயக்ககத்திற்கு ரூ.33 கோடி மதிப்பில் எம்.ஜி.ஆர்., பெயரில் கட்டடம்.

* எம்ஜிஆர் பெயரில் பள்ளிகளில் தனிக்கட்டடங்கள்* கிராமப்புற தொடக்க மற்றும் நடுத்தர 3090 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.

* 43 அரசு கல்லூரிகளில் எம்.ஜிஆர் பெயரில் கட்டடங்கள் கட்ட ரூ.210 கோடி ஒதுக்கீடு

* பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.39 கோடி ஒதுக்கீடு

* 2017- 2018ம் கல்வியாண்டில் 268 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.இதற்காக 660 பேராசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

* 7 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 3 பல்கலை., உறுப்பு கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும்.

* காஞ்சிபுரத்தில் ரூ.15 கோடியில் விளையாட்டு அரங்கு அமைக்கப்படும்.

* நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் நீச்சல்குளம் அமைக்கப்படும்.

பிறதுறை அறிவிப்புக்கள் :

* மாதவரத்தில் ரூ.25 கோடியில் புதிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.

* வனத்துறை பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் இழப்பீடு தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.


* கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிகக் கடன் ரூ.10,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.

தமிழகத்தில் 3,090 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

தமிழகத்தில் 3,090 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். 43 அரசு கல்லூரிகளில் எம்ஜிஆர் பெயரில்
கட்டிடங்கள் கட்ட ரூ.105 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 

 புதிதாக 7 அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் பேசுகையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்  

Flash News:பள்ளிகளில் வை-பை வசதி: சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில்
அளித்துள்ளார்.

 11,12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

SSA - 'INSPIRE AWARD' பதிவு செய்ய 30.06.2017 அன்று கடைசி நாளாகும் - இயக்குனர் செயல்முறைகள்

M.Phil Admission ( Part Time ) Notification | 2017 - 18

கோடை விடுமுறை மாணவர்களுக்கு ஒரு மாதம்... ஆசிரியர்களுக்கு லீவு இருக்கா இல்லையா?

சென்னை : பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் மாணவர்களுக்கான விடுமுறையை பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. ஆனால்
ஆசிரியர்களின் விடுமுறைபற்றி விளக்கம் தர வேண்டும் என ஆசிரியர்கள் சங்க நிர்வாகி கூறியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பள்ளிகளுக்கான ஆண்டு செயல்திட்டத்தில் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும், விடுமுறை எப்போது ஆரம்பிக்கும்? என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை மாணவர்களுக்கு மே மாதம் 1ந் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை என்பது கேள்விக்குறியாகவே பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால், மே மாதம் 7, 8, 9, 10, 11, 21 ,22, 24, 25, 26, 28 ஆகிய தேதிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்றால், அதில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? அப்படி கலந்து கொண்டால் ஆசிரியர்களுக்கு கோடைவிடுமுறை என்பது இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது.


இதுகுறித்து ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் கேட்ட போது, பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் தலைமை ஆசிரியர் கலந்து கொள்ள வேண்டுமா? அல்லது ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை. இது குறித்து பள்ளி கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கோடை விடுமுறையை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்க நிர்வாகி தெரிவித்துள்ளார்.

நில ஆவணத்தில் "ஆதார்" எண்ணை இணைக்காவிடில் "பினாமி" சட்டத்தின் கீழ் நடவடிக்கை!! - மத்திய அரசு!

CRC - PRIMARY & UPPER PRIMARY CRC- REG PROCEEDINGS.

UPPER PRIMARY CRC ON 01.07.2017& PRIMARY CRC ON 24.06.2017- திண்டுக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

TRANSFER COUNSELLING FOR "BRTE" SOON

வட்டார வளமைய ஆசிரியர்களுக்கு விரைவில் கந்தாய்வு நடைபெறும் - ARGTA

🌺 *இன்று (19.06.2017) நமது அனைத்து வளமைய பட்டடதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்  ( ARGTA for BRTEs )* சார்பில்

✳ *தலைவர்  மா.ராஜ்குமார்*

✳ *மாநில பொதுச் செயலாளர் தா.வாசுதேவன்*

✳ *மாநில பொருளாளர் நவநீதக்கிருஷ்ணன்*



ஆகியோர் தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலருடன் இணைந்து நமது

✳ *மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் (அ.க.இ) அய்யா*

✳ *மதிப்பிற்குரிய இயக்குநர் (ப.க.து) அய்யா*

✳ *மதிப்பிற்குரிய இணை இயக்குநர் ( மே.நி.க) அம்மா*

ஆகியோரை சந்தித்து 10 அம்ச கோரிக்கைகளை அளித்தோம்.


✅  *SPD அய்யா* அவர்கள் அனைத்து கோரிக்கைகளையும் முழுமையாக படித்து நீண்ட நேரம்  கந்துரையாடல் மேற்கொண்டார். அதிவிரைவில் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தார். மாவட்ட ARGTA நிர்வாகிகள் தங்களை சந்திக்க விருப்பப்படுவதை மாநில நிர்வாகிகள் அன்புடன் கேட்டுக்கொண்டோம். இதனை ஏற்று CONFERENCE HALL இல் அனைவரையும் பார்த்து கந்துரையாடினார். மேலும் CONVERSION &COUNSELING குறித்து 90 % பணிகள் நடைபெற்று வருவதாகவும், இவை முடிந்ததும் அதிவிரைவில் அனைத்தும் நடைபெறும் என உறுதியளித்த
*மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் அய்யா* அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

✳ *மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அய்யா* அவர்களும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக கூறியமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

✅ *மதிப்பிற்குரிய இணை இயக்குநர் (மே.நி.க) அம்மா* அவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்க இரண்டாவதாக பெயர் பட்டியல் பாடவாரியாக தாயார் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் கந்தாய்வு நடைபெறும் என உறுதியளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

✳இன்று நிதி உதவி வழங்கிய மாவட்டங்கள்

✅ *திண்டுக்கள்       ₹53,500*
✅ *கரூர் ₹53,500*
✅ *வேலூர் ₹43,900*
✅ *தர்மபுரி ₹22,500*
✅ *இராமநாதபுரம் ₹20,000*
✅ *புதுக்கோட்டை ₹18,500*
✅ *விழுப்புரம் ₹11,500*
✅ *நீலகிரி ₹5,000*
✅ *பெரம்பலூர் ₹3,400*

✳ *இன்று சென்னைக்கு வருகைபுரிந்த ஒவ்வொரு மாநில,மாவட்ட நிர்வாகிகளுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்*🙏🙏🙏🙏

🗣🗣🗣 *குறிப்பு புதியதாக தரம் உயர்த்தப்படும் உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்ட சில தினங்களுக்குள்ளோ /முன்னறோ நமது எண்ணம் நிறைவேறும்*🙏🙏🙏🙏


🙏 *STATE & DISTRICT  LEAVEL BEARERS,ARGTA.

சர்வதேச நாடுகள் பிரமிக்கும் வகையில் விண்வெளியில் ஒரு புதிய நாடு !!

சர்வதேச நாடுகள் பிரமிக்கும் வகையில் விண்வெளியில் ஒரு புதிய நாடு உருவாக்கி அதில் லட்சகணக்கானவர்களை குடியேற உள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு அதிரடியாக அறிவித்துள்ளது.
ஜூன் 16, 2017

நாம் வசிக்கும் இந்த பூமியில் 196 நாடுகள் உள்ளன, தற்போது இன்னொரு நாடு உதயமாக உள்ளது.

ஆனால் பூமியில் இல்லை, பூமிக்கு வெளியே விண்வெளியில் இந்த புதிய நாடு உருவாக உள்ளது.


ரஷியாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானியும், ஏரோஸ்பேஷ் இன்டர்நேஷனல் ஆய்வு மைய தலைவருமான டாக்டர் இகோர் அசுர்பெய்லி விண்வெளியில் ஒரு நாட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு ‘அஸ்கார்சியா’ என பெயரிடப்பட்டுள்ளது.

விண்வெளியில் உருவாகும் புதிய நாடு குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி பாரீசில் அறிவித்தார். அதில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து சர்வதேச அளவில் 200 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். அறிவிப்பு வெளியிட்ட 20 நாளில் இவ்வளவு பேர் மனு செய்து இருந்தனர்.
அவர்களில் 2 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிதாக உருவாகும் விண்வெளி காலனியில் குடியேற அனுமதி சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விண்வெளி நாடு உருவாக்க கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான அடிக்கல் அகார்சியா-1 என்ற மைக்ரோ செயற்கை கோள் மூலம் வருகிற செப்டம்பரில் அனுப்பபட உள்ளது. அது ஒரு ரொட்டி போன்ற அமைப்பில் 20 செ.மீ. நீளம் இருக்கும். 2.3 கிலோ எடை இருக்கும்.

தற்போது இந்த புதிய நாடு உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்த புதிய நாடு விண்வெளியில் செலுத்தப்பட்டு பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திடுக--வாசன் !!

பகுதிநேர ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்றி, பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பை நடைபெறுகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்றுதமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சர்வ சிக்ஷா அபியான் (SSA) - அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 
2012 ஆம் ஆண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக்கூடங்களில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 16,549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இதில் 5,904பணியிடங்கள் - தொழிற்கல்விக்கும் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், தையல், தோட்டக்கலை, வாழ்க்கைக் கல்வி, கட்டிடப் பணி), 5,392 பணியிடங்கள் உடற்கல்விக்கும், 5,253 பணியிடங்கள் ஓவியப் பாடத்திற்கும் (கலை கல்வி) ஒதுக்கப்பட்டது.இவ்வாறு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் வாரத்தில் 3 அரை நாட்கள் பணி என்ற நியமனத்தில் மாதம் 12 நாட்கள் பணிபுரியும்போது மாதச் சம்பளமாக ரூபாய் 5 ஆயிரம் கொடுக்கப்பட்டது.

பிறகு 2014 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தி 7 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது.பகுதிநேர ஆசிரியர்கள் பகுதிநேரம் மட்டுமே பள்ளிக்குச் செல்வதால் சம்பளம் போதுமானதல்ல என்ற நிலையில் கூடுதலாக வேறு பணிக்கு செல்ல முயற்சிக்கும் போது அதுவும் கிடைக்கவில்லை. மிக குறைவான சம்பளம் அவர்களுக்கே பற்றாக்குறையாக இருக்கும்போது அவர்களின் குடும்ப செலவிற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.இச்சூழலில் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பள்ளி கல்வித்துறைக்கு மாற்றி பணிநிரந்தரம் செய்யக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக மனுக்கள் கொடுத்தும், பல கட்டங்களில் பல ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர். ஆனால் இதனையெல்லாம் தமிழக அரசு முக்கியப் பிரச்சினையாக கருதவில்லை என்பது வேதனைக்குரியது.

மாணவ, மாணவிகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பணி மிகவும் போற்றுதலுக்குரியது. அப்பேற்பட்டவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போதிய ஊதியம் கிடைக்காமல் இருக்கும் போது, அவர்களின் நியாயமானகோரிக்கைகளை ஆளும் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளாமல், நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக கல்வித்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தியபோது, 700 ரூபாய் ஊதிய உயர்வும், பணியிட மாறுதலும் வழங்குவதற்கு கையொப்பம் போட்டுவிட்டேன் என்று தெரிவித்தார்.ஆனால் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சட்டப்பேரவைகூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது பகுதிநேர ஆசிரியர்கள் குறித்த அறிவிப்பு வரவில்லை.

இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. மேலும் மத்திய அரசு பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்த தொகையை இதுவரை தமிழக அரசு வழங்கவில்லை. இதனை முழுமையாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே தமிழக அரசு பகுதிநேர ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறைக்கு மாற்றி, பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பை நடைபெறுகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

இன்ஜி., கவுன்சிலிங் 'ரேண்டம்' எண் நாளை(ஜூன்,20) வெளியீடு !!

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, மே, 1 முதல், 31 வரை விண்ணப்ப பதிவு நடந்தது.

இதில், 1.68 லட்சம் பேர், ஆன்லைனில் பதிவு செய்தனர். அவர்களில், 1.40 லட்சம் பேர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பல்கலைக்கு அனுப்பி உள்ளனர். இவர்களுக்கான, தரவரிசையை முடிவு செய்வதற்கான, 'ரேண்டம்' எண், நாளை வெளியாகிறது. ஒவ்வொரு மாணவருக்கும், 'ரேண்டம்' எண் உருவாக்கப்படும். அதை, இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம்.

ஒரே மாதிரியாக, 'கட் ஆப்' பெறும் மாணவர்களில், யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து, 'ரேண்டம்' எண் மூலம் முடிவு செய்யப்படும்.

67,000 அரசு ஊழியர்களின் பணி ஆவணங்கள் சோதனை அதிரடி!

சிறப்பாக பணியாற்றாதவர்களை கண்டறியும் நோக்கில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 67 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களின் சேவை குறித்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியை, அரசு துவக்கி உள்ளது.


மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான அரசு அமைந்தது முதல், அரசு ஊழியர் களின் சேவைத் திறனை அதிகரிப்பதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசு அலுவலகங்களுக்கு குறித்த நேரத்தில் ஊழியர்கள் வந்து பணியாற்ற வேண்டும்; தங்களுக்கு இடப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது.

அரசு தீவிரம்

இந்நிலையில், நாடு முழுவதும், மத்திய அரசு பணியில் உள்ள, 67 ஆயிரம் பேரின் சேவை தொடர்பான ஆவணக் குறிப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி, நடவடிக்கை எடுப்பதில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மத்திய அரசு ஊழியர்களில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் அடக்கம்.

இது குறித்து, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மூத்த அதிகாரி ஒருவர், நிருபர்களி டம் கூறியதாவது:மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்களில், சேவையில் மெத்தனம் காட்டுபவர் களை கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கடும் நடவடிக்கை

குறித்த நேரத்துக்கு அலுவலகத்துக்கு வராமை, தங்கள் பணிகளை குறித்த நேரத்தில்முடிக்காமல் காலந்தாழ்த்துதல் உள்ளிட்ட பல்வேறு ஒழுங்கீனங் கள் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசில் பணியாற்றி வரும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள் உட்பட, 67 ஆயிரம் ஊழியர்களின் பணி ஆவணங்கள் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

நேர்மைக்கு ஊக்கம்!

மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர் கள் உச்சபட்ச திறனை வெளிப்படுத்த வேண்டும் என, அரசு விரும்புகிறது. ஊழியர்கள் ஊழல் செய் வதை மத்திய அரசு,துளிகூட பொறுத்து கொள்ளாது. அதேசமயம், நேர்மையான அதிகாரிகள், சுதந்திரமாக பணியாற்றும் சூழலை ஏற்படுத்தித் தருவதற்கு, அரசு முன்னுரிமை அளிக்கிறது.

இதனால், அரசு ஊழியர்களின் பணித்திறன், அவ்வப் போது கடுமையான ஆய்வு களுக்கு உட்படுத்தப் படுகிறது. நேர்மையான ஊழியர்கள் ஊக்குவிக்கப் பட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வரும் ஆட்சியில், பணியிட மாற்றக் கொள்கை, சுற்றுலா செல்வ தற்கான சலுகைகள் உள்ளிட்ட
விஷயங்களில், விதிகள் கணிசமாக தளர்த்தப் பட்டுள்ளன.
அதேசமயம், ஊழியர்களின் பணித் திறனை ஆய்வு செய்து அறிந்து கொள்வதற் கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், பதவி உயர்வுக்கான, ஊழியர் களின் தகுதியையும் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஜிதேந்திரா சிங் கூறினார்.

கட்டாய ஓய்வு!

கடந்த ஒரு ஆண்டில், பணியில் மெத்தனமாக இருந்த, திறன் குறைவான, மத்திய அரசு ஊழியர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 129 பேருக்கு, கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள விதிப்படி, ஒரு ஊழியரின் பணித்திறன், அவரது சேவைக் காலத்தில், இரு முறை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

பணியில் சேர்ந்து, 15 ஆண்டுக்கு பின் ஒரு முறையும், 25 ஆண்டுக்கு பின், மற்றொரு முறையும், ஊழியரின் சேவைத் திறன் சோதிக்கப்படுகிறது.நாடு முழுவதும், 48.85 லட்சம் பேர் மத்திய அரசுப் பணிகளில் இருப்பதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கின்றது.

இந்தியர்களின் கறுப்பு பணம் குறைந்தது: சுவிஸ் வங்கி அறிவிப்பு!

சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளை விட, சுவிஸ் வங்கிகளில், இந்தியர்கள், குறைந்தளவே கணக்குகள் வைத்திருப்பதாக, சுவிஸ் நாட்டை சேர்ந்த, தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத் துள்ள கறுப்புப்பணத்தை மீட்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கணக்கு வைத்துள்ளது குறித்த
விபரங்களை அளிப்பதற்கான ஒப்பந்தம், அந்நாட்டு அரசுடன் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்த முடிவை, சுவிஸ் அரசு, சமீபத்தில் உறுதிப்படுத்தியது. வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள கணக்குவிபரங்களை அளிப்பதற்கு, அவற்றின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கட்டுப் பாடு உள்ளது.
இந்நிலையில், சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள, சுவிஸ் தனியார் வங்கிக ளின் கூட்டமைப்பு கூறியுள்ளதாவது:

சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளை ஒப்பிடுகையில், சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகள் மிகக்குறைவு.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு துவக்குவதை விட, ஆசியாவில் நிதி மையங்களாக திகழும் நாடுகளில், இந்தியர்கள் வங்கிக் கணக்கு துவக்குவது சுலபம்.

சமீப காலமாக, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடுகள் கணிசமாக குறைந்து வருகின்றன. 2015ம் ஆண்டு, இறுதி நிலவரப் படி, சுவிஸ் வங்கிகளில், 8,392 கோடி ரூபாய் மட்டுமே, இந்தியர்களின் முதலீடாக உள்ளது. இருப்பினும், பிற நாடுகளில், இந்தியர்கள் செய்துள்ள முதலீடுகள் தொடர்பாக, அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இவ்வாறு அந்த கூட்டமைப்பு கூறியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வெவ்வேறு நிற சீட்டு!!!

ஜனாதிபதி தேர்தலில், எம்.பி.,க்க ளுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் வெவ்வேறு நிற ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்படும்' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான 
தேர்தல், அடுத்த மாதம், 17ல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. 28ம் தேதியுடன், மனு தாக்கல் முடிகிறது.

இந்த தேர்தலில், எம்.பி.,க்கள் மற்றும் அனைத்து மாநில, எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப் போட உள்ளனர். ஓட்டுச் சீட்டு முறையில்தான் தேர்தல் நடத்தப்பட உள்ளது. எம்.பி.,க்களுக் கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும், வெவ்வேறு நிறத்தில் ஓட்டுச் சீட்டு வழங்கப்பட உள்ளன.

இது பற்றி தேர்தல் கமிஷன் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், 28ல் முடிகிறது. தே.ஜ., கூட்டணியும், எதிர்க் கட்சிகளும் தனித்தனி வேட்பாளர்களை நிறுத்தி, மனுவை யாரும் வாபஸ் பெற வில்லை என்றால், ஜனாதிபதி தேர்தல் நடத்து வதற்கான பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கும். எம்.பி.,க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.,க் களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்படும்.
அருணாச்சல், பீஹார், சத்தீஸ்கர், ஹரியானா, ஹிமாச்சல், ஜார்க்கண்ட், ம. பி., ராஜஸ்தான், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், டில்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கான ஓட்டுச் சீட்டுகளில், வேட்பாளர்களின் பெயர் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

ஆந்திரா, அசாம், கோவா, குஜராத், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழகம், தெலுங்கானா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், ஹிந்திக்கு பதில், தங்கள் மாநில மொழியில் அச்சடிக்க கோரிக்கை விடுத்துள்ளன. அதனால், இந்த ஓட்டுச்சீட்டுகள் மட்டும், அந்தந்த மாநில மொழிகளில் அச்சடிக்கப்படும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஹரியானாவில், 'இங்க்' பிரச்னை ஏற்பட்டது. அதனால், இம்முறை, 'சிறப்பு பேனா'க்கள் வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. ஓட்டளிக்க செல்லும் போது, ஓட்டுச்சாவடியில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களிடம் இந்தப் பேனா வழங்கப்படும். இந்தப் பேனாவை பயன்படுத்தி தான் ஓட்டளிக்க வேண்டும்.

எம்.பி., யின் ஓட்டு மதிப்பு, 708 ஆக இருக்கும். ஆனால், எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு, மாநிலத்துக்கு மாநிலம், மக்கள் தொகைக்கு ஏற்ப மாறும். லோக்சபாவின், 543 எம்.பி.,க்கள், ராஜ்ய சபாவின், 233எம்.பி.,க்கள், அனைத்து மாநிலங் களிலும் உள்ள, 4,120 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட உள்ளனர்.

அந்தந்த மாநில தலைமை செயலகங்கள் மற்றும் பார்லிமென்ட் வளாகத்தில், ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு நடக்கும். ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும், டில்லிக்கு எடுத்து வரப் பட்டு, அடுத்த மாதம், 20ல், ஓட்டு எண்ணிக்கை நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ரொக்க மாகவே செலுத்த வேண்டும்:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், டிஜிட்டல் மூலம் பண பரிவர்த்தனை செய் வதைமத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புப வர்கள், டிபாசிட் தொகையைான, 15 ஆயிரம் ரூபாயை, ரொக்கமாகவே செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது பற்றி தேர்தல் கமிஷன் அதிகாரி கூறியதாவது:

ஜனாதிபதி தேர்தல் விதிப்படி, வேட்பு மனுதாக் கல் செய்பவர்கள், தேர்தல் அதிகாரியிடம், மனு தாக்கல் செய்யும் போதே, டிபாசிட் தொகையை ரொக்கமாக செலுத்த வேண்டும். தேர்தல் அதிகாரியுடன், வங்கி அதிகாரி ஒருவரும் இருப்பார்.
அவர், பணத்தை வாங்கி, எண்ணி சரிபார்ப்பார். ரிசர்வ் வங்கியில் பணத்தை செலுத்திவிட்டு, அதன் ரசீதை, தேர்தல் அதிகா ரியிடம் வேட்பாளர்கள் வழங்க லாம். ஆனால், மின்னணு முறையிலோ, காசோலையாகவோ டிபாசிட் தொகையை செலுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்..

சர்வதேச யோகா தினத்தில் 92,000 கைதிகள் பயிற்சி!!!

சர்வதேச யோகா தினமான, 21ல், உ.பி., மாநில சிறைகளில் கைதிகளாக உள்ள, 92 ஆயிரம் பேர், யோகா பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

சர்வதேச யோகா தினம், உலகம் முழுவதும், 21ல் கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சிகளை நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, 
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடக்கும், உ.பி.,யில் உள்ள சிறைகளில், 92 ஆயிரம் கைதிகள் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி, சிறைக் கைதிகளுக்கு, யோகா பயிற்சிகள் அளிக்கும் வகுப்புகள் துவங்கி நடந்து வருகின்றன.

இது குறித்து, உ.பி., மாநில சிறைத்துறை இணையமைச்சர் ஜெய்குமார் சிங் ஜெய்கி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

சர்வதேச யோகா தினத்தன்று, உ.பி., முழுவதும் உள்ள சிறைகளின் வளாகங்களில், 92 ஆயிரம் கைதிகள் பல்வேறு யோகா பயிற்சிகளில் ஈடுபடுவர். யோகா பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுத்துவதன் மூலம், சிறைக் கைதிகளை மனதளவிலும், உடலளவிலும் சிறந்தவர்களாக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.யோகா பயிற்சி செய்வதால், கைதிகளின் கவன சக்தி படிப்படியாக அதிகரிக்கும்; தற்கொலை எண்ணம் மறையும். யோகா நிபுணர் மேற்பார்வையில், கைதிகள், யோகா பயிற்சிகளில் ஈடுபடுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, மாநிலம் முழுவதும், சைக்கிள் யாத்திரை நடத்தி, சர்வதேச யோகா தினத்தை கொண்டாட, சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளது

அமைச்சரின் அறிவிப்பில் பள்ளிக்கல்விக்கும், ஆசிரியர்களுக்கும் பெரிய அளவில் ஏதுவும் செய்யவில்லை !!

சட்டசபையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 37 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் குறித்து கல்வியாளர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். "அமைச்சரின் அறிவிப்பில் பள்ளிக்கல்விக்கும், ஆசிரியர்களுக்கும் பெரிய அளவில் ஏதுவும் செய்யவில்லை" என்கிறார் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அமைப்பாளர் .

"மாணவர்களுக்குக் கல்விகடன் முகாம்கள், புத்தகக் கண்காட்சிகள், கலைத்திருவிழாக்கள், கிராமப்புற மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சிகள் போன்றவற்றை நடத்த முன்வந்திருப்பதைப் பாராட்டுகிறோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பல அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.

பல நூறு தொடக்கப் பள்ளிகள் மூடி வரும் நிலையில் 30 தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும் என்ற அறிவிப்பு பெருத்த ஏமாற்றமே. வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்பது குறித்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் ஆசிரியர்களை நியமித்திட வேண்டும். அதுகுறித்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆரம்பப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளி வரை 10,000-க்கும் மேற்பட்ட தேவைப்பணி இடங்களும், 5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணி இடங்களும் இருக்கின்றன. ஆனால் 4,084 காலிப்பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்து இருக்கிறார் அமைச்சர். இதைப்போலவே, 60,000-க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகப் பணியாளர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்குத் தொடர் நீட்டிப்பு வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் 17,000 பணியிடங்கள் நிரந்தரப்பணியிடங்களாக மாற்றப்படும் என்ற அறிவித்து இருக்கிறார்கள். இது நல்ல விஷயம் என்றாலும், இன்னும் 43,000க்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியிடங்களையும் நிரந்தரப்பணியிடங்களாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்குச் செயல்வழிக்கற்றல் அட்டைகளுக்கு 31.82 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இதுவரை அரசால் சமச்சீர் கல்வியைத் தனியார் பள்ளிகளில் அமல்படுத்த முடியவில்லை. இதைப்போலவே, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு வழங்குவது போல் செயல்வழிக்கற்றல் அட்டைகளை சுயநிதிப்பள்ளிகளிலும் வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கமுடியவில்லை என்றால் பொதுக்கல்வியைப் பாதுகாக்க முடியாது.

பகுதி நேரக் கணினி ஆசிரியர், ஓவிய ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அரசு கண்டு கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது. அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணினிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறும் அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்வோம் என்ற அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.  விளையாட்டுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பும் இல்லை.


பென்சன் திட்டம் குறித்த அறிவிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்து இருந்தார். பென்சன் திட்டம் குறித்த ஆலோசனை குழு அறிக்கை தயாரித்து ஆலோசனைகளை ஏற்கெனவே வழங்கி விட்டது. இந்த நிலையில் பென்சன் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருந்தோம். அதுவும் வெளியாகவில்லை. மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களில் புதிய பென்சன் திட்டம் முற்றிலும் ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறார்கள். இதைப்போலவே, தமிழ்நாட்டிலும் அமுல்படுத்துவார்கள் என்ற அறிவிப்பு எதிர்நோக்கி இருந்த ஊழியர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

ஊதியக்குழு கால தாமதம் ஆவதைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அதுவும் அறிவிக்கப்படவில்லை. மாணவர்களின் நலனில் அக்கறை காட்டிய அமைச்சர் ஆசிரியர்களின் நலன்கள் மீதும் அக்கறை காட்டி அறிவிப்புகள் வெளியிட்டு இருந்தால் பலத்த கரவேஷங்களோடு வரவேற்பு இருப்போம்" என்கிறார் .

பள்ளிகளில் இலவச வை-ஃபை !!

தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் இலவசமாக வை-ஃபை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் 
தெரிவித்துள்ளார். இந்த  வை-ஃபை வசதியை 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் கல்வித் தரத்தை மேம்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார்.

அலைபேசியில் மின் கட்டணம் செலுத்தும் வசதி: அமைச்சர் தங்கமணி தகவல் !!

அலைபேசியில் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் மின்துறை  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும் ரூ.10 கோடி மதிப்பில் அலுவலக 
குடியிருப்பு அமைக்கப்படும் என்றும் சூரிய மின் சக்தி நீர் பம்புகள் மானியத்துடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தங்கமணி கூறியுள்ளார்

தமிழக சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றம்

*ஜிஎஸ்டி வரியால் வணிகர்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நிவர்த்தி செய்யப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்.

*ஜிஎஸ்டி மசோதாவை பொறுப்புக்குழுவிற்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும்: ஸ்டாலின்.


*ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு.

*ஜி.எஸ்.டி. மசோதா தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு !!

                                                          
பீகார் மாநில ஆளுநராக இருக்கிறார் ராம்நாத் கோவிந்த்.


*தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு.

யார் இந்த ராம்நாத் கோவிந்த்?

*பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா செய்தியாளர்களிடம் முறைப்படி அறிவித்தார். குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் அமித் ஷா தெரிவித்தார்.


பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அத்வானி அல்லது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரில் யாரேனும் ஒருவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. இதற்கு சாத்தியங்கள் குறைவாக உள்ளது தெரிந்த நிலையில், சுஷ்மா ஸ்வராஜ் பெயர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 71 வயதான ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிறந்த ராம்நாத் கோவிந்த், வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ்-இல் தீவிரமாக இயங்கிய அவர், இருமுறை ராஜ்ய சபா எம்.பியாகவும், பாஜகவின் எஸ்.சி பிரிவான தலித் மோர்ச்சாவின் தலைவராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் பீகார் ஆளுநராக ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வருகிறார்.

பழங்குடியின மக்கள் அதிகமுள்ள மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அதனை கருத்தில் கொண்டு இந்த முடிவை பாஜக எடுத்துள்ளது என்றும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்ததன் மூலம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அறிவிக்கப்பட்ட கல்விச்சார்ந்த அறிவிப்புகள் !!

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்; சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.


 *மேல்நிலை பள்ளிகளுக்கு தலா 20கணினிகள் வழங்கப்படும்; உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு அறிவியல் ஆய்வகம் & இதர பணிகள் ரூ.39 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.



 *தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்.


*7 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 பல்கலை உறுப்பு கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும்- முதலமைச்சர்.


*எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் பெயரில் ரூ.33 கோடியில் பள்ளிக் கல்வி இயக்குநரகத்திற்கு புதிய கட்டடம்.


 *268 புதிய பாடப்பிரிவுகள் 2017-2018 ம் ஆண்டு தொடங்கப்படும்; இதற்காக  660 பேராசிரியர் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.


 *நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் நீச்சல் குளம் கட்டப்படும் - முதலமைச்சர்.


 *உயர் கல்வித்துறை அறிவிப்புகள் : 40 கலை & அறிவியல் கல்லூரிகளில் ரூ.210 கோடி செலவில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப் படும்.


 *3090 கிராமப்புற தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் SmartClass ஏற்படுத்தப்படும்.


*தமிழகத்தில் உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


*அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் ரூ.40 கோடி செலவில் விரல் ரேகை அச்சுப்பொறி வழங்கப்படும்.


 *கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் சிறு வணிகக்கடன் உச்சவரம்பு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.

உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு !! Posted: 19 Jun 2017 06:58 AM PDT ஜனவரி* 01 - ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம். 05 - உலக டீசல் எந்திர தினம் 06 - உலக வாக்காளர் தினம் 08 - உலக நாய்கள் தினம் 09 - உலக இரும்பு தினம் 12-தேசிய இளைஞர் தினம் 15-இராணுவ தினம் 26-இந்திய குடியரசு தினம் 26- உலக சுங்க தினம் 27 - World Fuckers Day 30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம் 30 -தியாகிகள் தினம் *பிப்ரவரி* 01 - உலக கைப்பேசி தினம் 03 - உலக வங்கிகள் தினம் 14 - உலக காதலர் தினம் 15 - உலக யானைக்கால் நோய் தினம் 19 - உலக தலைக்கவச தினம் 24 - தேசிய காலால் வரி தினம் 25 - உலக வேலையற்றோர் தினம் 26 - உலக மதுபான தினம் 28- தேசிய அறிவியல் தினம் *மார்ச்* 08 - உலக பெண்கள் தினம் 15 - உலக நுகர்வோர் தினம் 20 - உலக ஊனமுற்றோர் தினம் 21 - உலக வன தினம் 22 - உலக நீர் தினம் 23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் 24 - உலக காசநோய் தினம் 28 - உலக கால்நடை மருத்துவ தினம் 29 - உலக கப்பல் தினம் *ஏப்ரல்* 01 - உலக முட்டாள்கள் தினம் 02 - உலக ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம் 05 - உலக கடல் தினம் 05 - தேசிய கடற்படை தினம் 07 - உலக சுகாதார தினம் 12 - உலக வான் பயண தினம் 15 - உலக பசும்பால் தினம் 18 - உலக பரம்பரை தினம் 22 - உலக பூமி தினம் 30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம் *மே* 01 - உலக தொழிலாளர் தினம் 03 - உலக சக்தி தினம் 08 - உலக செஞ்சிலுவை தினம் 09 - உலக கணிப்பொறி தினம் 11 தேசிய தொழில் நுட்ப தினம் 12 - உலக செவிலியர் தினம் 14 - உலக அன்னையர் தினம் 15 - உலக குடும்ப தினம் 16 - உலக தொலைக்காட்சி தினம் 18 - உலக டெலஸ்கோப் தினம் 24 - உலக காமன்வெல்த் தினம் 27 - உலக சகோதரர்கள் தினம் 29 - உலக தம்பதியர் தினம் 30 - உலக முதிர்கன்னிகள் தினம் 31 - உலக புகையிலை ஒழிப்பு தினம் *ஜீன்* 01 - உலக டயலசிஸ் தினம் 02 - உலக ஆப்பிள் தினம் (Apple Sys)🛏🛏🛏 04 - உலக இளம் குழந்தைகள் தினம் 05 - உலக சுற்றுப்புற தினம் 10 - உலக அலிகள் தினம் 18 - உலக தந்தையர் தினம் 23 - உலக இறை வணக்க தினம் 25 - உலக புகையிலை தினம் 26 - உலக போதை ஒழிப்பு தினம் 27 - உலக நீரழிவாளர் தினம் 28 - உலக ஏழைகள் தினம் *ஜீலை* 01 - உலக மருத்துவர்கள் தினம் 08 - உலக யானைகள் தினம் 10 - உலக வானூர்தி தினம் 11 - உலக மக்கள் தொகை தினம் 14 - உலக மஞ்சள் தினம் (Turmeric) 16 - உலக தக்காளி தினம் (பிரான்சில் தக்காளித் திருவிழை) *ஆகஸ்ட்* 01 - உலக தாய்ப்பால் தினம் 03 - உலக நண்பர்கள் தினம் 06 - உலக ஹிரோஷிமா தினம் 09 -வெள்ளையனே வெளியேறு தினம் 09 - உலக நாகசாகி தினம் 18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம் 19 - உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம் 29 - உலக தேசிய விளையாட்டு தினம் 30 - மாநில விளையாட்டு தினம் *செப்டம்பர்* 05 - ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம் 06 - ஹிந்தி தினம் 07 - பெங்காளி தினம் ( இந்திய தேசியகீதம் எழுதப்பட்ட பெங்காளிய மொழி) 08 - உலக எழுத்தறிவு தினம் 10 - உலக பேனா தினம் 12 - உலக மின்சார தினம் 13 - உலக மாலைக்கண் நோய் தினம் 16 - உலக ஓசோன் தினம் 18 - உலக அறிவாளர் தினம் 20 - உலக எழுத்தாளர்கள் தினம் 21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம் 25 - உலக எரிசக்தி தினம் 26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம் 27 - உலக சுற்றுலா தினம் 28 - உலக எரிமலை தினம் 29 - உலக குதிரைகள் தினம் *அக்டோபர்* 01 - உலக மூத்தோர் தினம் 02 - உலக சைவ உணவாளர் தினம் 04 - உலக விலங்குகள் தினம் 05 - உலக இயற்கைச் சூழல் தினம் 08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம் 08 இந்திய விமானப்படை தினம் 09 - உலக தபால் தினம் 16 - உலக உணவு தினம் 17 - உலக வறுமை ஒழிப்பு தினம் 24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம் 30 - உலக சிந்தனை தினம் *நவம்பர்*🛏 14-குழந்தைகள் தினம் 18 - உலக மனநோயாளிகள் தினம் 19 - உலக குடியுரிமையாளர்கள் தினம் 26 - உலக சட்ட தினம் 27 - உலக காவலர்கள் தினம் 28 - உலக நீதித்துறை தினம் *டிசம்பர்*🛏🛏 01 - உலக எய்ட்ஸ் தினம் 02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம் 10 - உலக மனித உரிமைகள் தினம் 14 - உலக ஆற்றல் தினம் 15 - உலக சைக்கிள் தினம் 23 - விவசாயிகள் தினம் 25 - திருச்சபை தினம் www.sstaweb.com அனைத்து தலைமையாசிரியர்களும், மதிய உணவு உண்ணும் மாணவர்கள் எண்ணிக்கையை குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி ?

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் எனில்  உணவு உண்ணும் மாணவர் 32 எனில்

MDM A32 B00 C00
(MDMspaceA32spaceB00spaceC00)
 என்று பதிவிட்டபின்
155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்..

நடுநிலைப்பள்ளியெனில்
1-5. 20 மாணவர்கள்
6-8. 36 மாணவர்கள் என்றால்

MDM A20 B36 C00
(MDMspaceA20spaceB36spaceC00)
என்று பதிவிட்டபின்
155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி
நாள்தோறும் அனுப்புதல் வேண்டும்.
 குறுஞ்செய்தி இலவசம்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புகள் ஏமாற்றமே..! என்ன சொல்கிறார்கள் ஆசிரியர்கள்?

சட்டசபையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 37 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் குறித்து கல்வியாளர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். "அமைச்சரின் அறிவிப்பில் பள்ளிக்கல்விக்கும், ஆசிரியர்களுக்கும் பெரிய அளவில் ஏதுவும் செய்யவில்லை" என்கிறார் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அமைப்பாளர் பாலசந்தர்.
"மாணவர்களுக்குக் கல்விக்கடன் முகாம்கள், புத்தகக் கண்காட்சிகள், கலைத்திருவிழாக்கள், கிராமப்புற மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சிகள் போன்றவற்றை நடத்த முன்வந்திருப்பதைப் பாராட்டுகிறோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பல அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.

பி.இ. சேர்க்கை: நாளை சமவாய்ப்பு எண் வெளியீடு

பி.இ. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு (ரேண்டம்) எண் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (ஜூன் 22) தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும்.
தமிழகம் முழுவதும் உள்ள 523 பொறியியல் கல்லூரிகளில் 2.7 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் உள்ளன. இதில் அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள பி.இ. இடங்கள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் வரும் 27 -ஆம் தேதி தொடங்க உள்ளது.

கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியாகுமா?

இன்ஜி., மற்றும் பி.ஆர்க்., கல்லுாரிகளில் சேர, அண்ணா பல்கலை மூலம், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கில், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு, அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கப்படும். இந்நிலையில், கவுன்சிலிங் தாமதத்தாலும், விரும்பிய கல்லுாரியில், விரும்பிய பாடப்பிரிவு கிடைக்குமா என்ற சந்தேகம் காரணமாகவும், பல மாணவர்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்து வருகின்றனர் . ஆனால், அவர்களால், சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.அதற்கு காரணம், இந்த ஆண்டு, இன்னும் கல்லுாரிகளின் தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிடவில்லை. இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டியும், பல்கலை தேர்வுத் துறையும் இணைந்து, இந்த பட்டியலை வெளியிட வேண்டும்.

ஆனால், பல்கலை தரப்பில் கால தாமதம் செய்வதாக, புகார் எழுந்துள்ளது. அதனால், சரியான கல்லுாரிகளை தேர்வு செய்ய முடியாமல், மாணவர்கள் தவிக்கின்றனர்

11TH BLUE PRINT REGARDING: பிளஸ் 1 மாணவர்களுக்கு பழைய 'புளூ பிரின்ட்'



பிளஸ் 1 தேர்வு மதிப்பெண், 100 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், 200 மதிப்பெண்களுக்கு, 'புளூ பிரின்ட்' வழங்கப்பட்டு உள்ளதால், மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.இது தொடர்பாக, ஆசிரியர்கள் கூறியதாவது: இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்கு முன், ஒரு பாடத்துக்கு, 200 மதிப்பெண் என, மொத்தம், 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. புதிய அறிவிப்பின்படி, ஒவ்வொரு பாடத்துக்கும், 100 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு, 600 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடக்கும். ஆனால், தற்போது பள்ளிகளில் சேர்ந்த, பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண்களுக்கான, வினா பட்டியல் அடங்கிய புளூ பிரின்ட் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவியரின் சீருடை நீக்கப்பட்ட கொடூரம்:

பள்ளி கட்டணத்தை செலுத்தாத மாணவியரின் சீருடைகளை கழற்றி, அவர்களை ஆசிரியை வெளியே அனுப்பிய சம்பவம், பீஹாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளின், கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தை சேர்ந்தவர், சுன்சுன் சாஹ். இவருக்கு, 7 மற்றும் 6 வயதில், இரண்டு மகள்கள். இருவரும் அருகிலுள்ள தனியார் பள்ளியில், இரண்டு மற்றும் ஒன்றாம் வகுப்பு படிக்கின்றனர்.கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, இரண்டு குழந்தைகளுக்கும், பள்ளி நிர்வாகமே, சீருடை வழங்கியது. அதற்கான தொகையை உடன் செலுத்தும்படி, குழந்தைகளின் தந்தை, சுன்சுன் சாஹிடம், பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
அவரால், குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தை செலுத்த முடியவில்லை. இந்நிலையில், சமீபத்தில், இரண்டு குழந்தைகளும், வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர். மாலையில், பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வர, சுன்சுன் சென்றார். அப்போது, சீருடைக்கான பணத்தை செலுத்தும்படி, சுன்சுன் சாஹிடம், ஆசிரியை ஒருவர் கூறினார்.

'என்னிடம் இப்போது பணமில்லை. சில நாட்கள் அவகாசம் கொடுங்கள்; பணத்தை செலுத்தி விடுகிறேன்' என, சுன்சுன் கெஞ்சினார். இதற்கு, ஆசிரியை மறுப்பு தெரிவித்தார். மேலும், பலர் முன்னிலையில், மாணவியர் இருவரும் அணிந்திருந்த சீருடையை கழற்றிய ஆசிரியை, அவர்களை, பள்ளியிலிருந்து அழைத்து செல்லும்படி கூறினார்.
அதிர்ச்சியடைந்த சுன்சுன் சாஹ், இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பள்ளியின் முதல்வர் மற்றும் சீருடையை கழற்றிய ஆசிரியையை கைது செய்தனர்.இந்த சம்பவம் குறித்து, மாநில கல்வித்துறை அமைச்சர் அசோக் சவுத்ரி கூறுகையில், ''நடந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் ஜி.எஸ்.டி., பற்றி கேள்வி

சிவில் சர்வீஸ் முதல் கட்ட தேர்வில், ஜி.எஸ்.டி., பற்றியும், மோடி அரசின் திட்டங்கள் பற்றியும், கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீஸ் தேர்வுகளை, ஆண்டுதோறும் மூன்று பிரிவாக நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான முதல் கட்ட தேர்வு, நேற்று நடந்தது. இந்த தேர்வை எத்தனை பேர் எழுதினர் என்ற விபரத்தை யு.பி.எஸ்.சி., தெரிவிக்கவில்லை. இந்த தேர்வில், ஜூலை முதல் அமல்படுத்தப்பட உள்ள ஜி.எஸ்.டி., குறித்தும், மத்திய மோடி அரசின் திட்டங்கள் குறித்தும், கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்துவதால் ஏற்படுத்தும் பலன்கள் என்ன என கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

மேலும், மோடி அரசின் பினாமி சட்டம், வித்யாஞ்சலி யோஜனா உட்பட பல திட்டங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

நவ.19-ல் 'நெட்' தகுதித்தேர்வு: ஜூலை 24-ல் விரிவான அறிவிப்பு வெளியாகும்:

இலக்கியம் மற்றும் கலைப்பிரிவு பாடங்களுக்கான 'நெட்' தகுதித்தேர்வை யுஜிசி சார்பில் சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் என 2 தடவை நெட் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட வேண்டிய 'நெட்' தேர்வு நடைபெறவில்லை.இந்த நிலையில் 'நெட்' மற்றும் ஜெஆர்எப் தகுதித்தேர்வு நவம்பர் 19-ந் தேதி நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 'நெட்' தேர்வு தொடர்பான விரிவான அறிவிப்பு ஜூலை மாதம் 24-ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் ஆகஸ்டு 1 முதல் 30-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

CBSC 12TH EXAM RELATED NEWS:

CBSE 12 ஆம் வகுப்பு தேர்வில் 'பெரும் குளறுபடி' - மாணவ மாணவிகள் 'கடும் அதிர்ச்சி'!!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.-யின் 12-ம் வகுப்பு தேர்வில் விடைத்தாள் மதிப்பெண் கூட்டலில் மிகப்பெரிய குளறுபடிகள் நடந்துள்ளன. இதனால், தேர்வு எழுதி மாணவ, மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
12-ம் வகுப்பு
 சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 28-ந் தேதி நாடுமுழுவதும் வௌியாகின. தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்வு முடிவுகள்வந்துவுடன் மறுகூட்டல் மற்றும் மறு மதிபீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், சி.பி.எஸ்.இ. தேர்வு முறையில் மறுகூட்டல் மட்டுமே செய்ய முடியும், மறுமதிப்பீடு என்பது நீதிமன்றத்தின் உத்தரவு பெற்றபின் செய்யலாம்..

18/6/17

மத்திய அரசு துறைகளில் 5134 கிளார்க் வேலை: 28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அரசுதுறைகளில் 5134 கிளார்க் வேலை: விண்ணப்பிக்க 28 கடைசி
மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்தாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பை மே 27 ஆம் தேதி அறிவித்தது எஸ்எஸ்சி. இதற்கு தகுதியானவர்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து
பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம்: Staff Selection Commission CHSL (SSC CHSL)
காலியிடங்கள்: 5,134
பணி: Stenographer, Clerk
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி
வயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.1,900
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Regional Director (NR),
Staff Selection Commission,
Block No. 12, CGO Complex, Lodhi Road, New Delhi-10003

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2017

எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 30.07.2017


ஜூன் 21-ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 கலந்தாய்வு : தேர்வாணையம் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பணியாளர் தேர்வுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஜூன்
21-ல் நடக்கிறது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது . அழைப்பாணை கிடைக்காதவர்கள்

www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்றுதெரிவித்துள்ளது.

21-ந்தேதி பி.எட். பட்டப்படிப்பு விண்ணப்பம் வினியோகம்

தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகளும் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு 1,777
இடங்கள் உள்ளன.
இந்தபடிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் சென்னை விலிங்டன் பி.எட். கல்லூரி, சைதாப்பேட்டை பி.எட். கல்லூரி உள்பட 13 பி.எட். கல்லூரிகளில் 21-ந்தேதி காலை 10 மணி முதல் வழங்கப்படுகின்றன. 30-ந்தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும், விலை ரூ.500. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 3-ந்தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2017-2018, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5 என்ற முகவரிக்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்கவேண்டும். இந்த தகவலை கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

(B.Ed) பி.எட். மாணவர் சேர்க்கை: 21 -இல் விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில்2017-18 -ஆம் கல்வியாண்டில் பி.எட்.,
இரண்டாண்டு படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 21 -ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் உள்பட 13 இடங்களில் மட்டுமே விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.

இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2017-18 -ஆம் கல்வியாண்டில், இரு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 21 -ஆம் தேதி முதல் ஜூன்30 -ஆம் தேதி வரை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கீழ்க்கண்ட 13 கல்வியியல் கல்லூரிகளில் மட்டும் விற்பனை செய்யப்படும்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள்: கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை -சென்னை, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், திருவல்லிக்கேணி -சென்னை, அரசு கல்வியியல் கல்லூரி - குமாரபாளையம், அரசு கல்வியியல் கல்லூரி -ஒரத்தநாடு, அரசு கல்வியியல் கல்லூரி -புதுக்கோட்டை, அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி -கோவை, அரசு கல்வியியல் கல்லூரி, காந்திநகர் -வேலூர், லட்சுமி கல்வியியல் கல்லூரி, காந்திகிராம் -திண்டுக்கல் மாவட்டம், ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி, பேர்லாண்ட்ஸ் -சேலம், தியாகராசர் பர்செப்டார் கல்லூரி -மதுரை, வ.உ.சிதம்பரனார் கல்லூரி -தூத்துக்குடி, செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி -பாளையங்கோட்டை, என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி -ஆத்தூர், திருவட்டாறு ஆகிய கல்லூரிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.
விண்ணப்பத்தின் விலை ரூ.500. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள், சுய சான்றொப்பமிட்ட ஜாதிச்சான்றிதழின் நகலை அளித்து ரூ.250 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத் தொகையை பணமாக அல்லதுThe Secretary, Tamil Nadu B.Ed. Admission, Chennai  600005 என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கேட்பு வரைவோலையாக (Demand Draft Payable At Chennai)  நேரில் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம்விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 3 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் செயலர், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2017-2018, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பி.எட். சேர்க்கைக்கான வழிகாட்டி நெறிமுறைகள் www.ladywillingdoniase.com   என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

PGTRB : தமிழ் வழியில் ஆங்கிலம் குழப்புது TRB.,

தமிழ் வழியில் எம்.ஏ., ஆங்கிலம் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை' என்ற
மாநில ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதில், 'தமிழ் வழியில் எம்.ஏ., (முதுகலை) ஆங்கில இலக்கியம் படித்த விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்' எனபட்டியலில் தெரிவித்துள்ளனர்.இதன்படி 88 பணியிடங்களில் 21 பணியிடங்களுக்கு இவ்வகையில் நியமனம் செய்ய உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கவனமின்மைக்கு இது ஒரு சான்று. தமிழ் வழியில் எம்.ஏ., ஆங்கிலம் இலக்கியம் படிக்க முடியாது என எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்த அறிவிப்பில் தமிழ் வழியில் இளங்கலை படித்தோருக்கு முன்னுரிமை என வழிகாட்டியின் 2வது பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆங்கில பாடத்தை எப்படி தமிழில் படிக்க இயலும். இதேபோல கடந்தாண்டில் முதுகலை தமிழ் ஆசிரியருக்கு எம்.ஏ., தமிழ் தகுதி எனக்கூறி, பின் பி.எட்., படிப்பும் தேவை என திருத்தம் வெளியிட்டனர், என்றார்.

இன்னும் ஒரு வருடத்தில் அனைவரும் அரசு பள்ளிகளை நாடி வருவர் - அமைச்சர் செங்கோட்டையன்.

இன்னும் ஒரு வருடத்தில் அனைவரும் அரசு பள்ளிகளை நாடி வருவர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
அதிகரித்துள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் கலைக் கல்லூரியில் நடைபெற்ற தியானப் பயிற்சி விழாவில், செங்கோட்டையன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர், தற்காலிக ஆசிரியர்களுக்கு, மற்ற ஆசிரியர்களைப் போல, மாதம் தோறும் ஊதியம் வழங்கப்படும் என்றார். அங்கன்வாடிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார்.

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை!

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஆறுஆண்டுகளாக பணிநிரந்தரம் செய்திட வேண்டி பல்வேறு வடிவில் கோரிக்கைகளை முன்வைத்து காத்துவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு, இந்த சட்டசபை கூட்டத்தொடரின் கல்விமாணிய
கோரிக்கை தினத்தில் கல்வி அமைச்சரின் அறிவிப்புகள் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது, வேதனைஅளிக்கிறது.
தற்போதைய முதல்வரிடம் பணிநிரந்தரம் கேட்டு நேரில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து மே 2-ல் நடந்த கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி செயலர், பள்ளிக்கல்வி இயக்குநர், அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்டஇயக்குநர் மற்றும் கல்வி அதிகாரிகள் முன்னிலையில் ஆசிரியர் சங்கங்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டத்திலும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தப்பட்டது. அன்றைய தின கலந்துரையாடல் கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வும், அருகிலுள்ள பள்ளிகளில் பணிபுரிய ஏதுவாக பணிமாறுதலும் மட்டுமே அரசால் தற்போது வழங்கப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். கல்விஅமைச்சர் சொன்னபடி எதுவும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. பணிநிரந்தரம் செய்யக்கேட்டால் நிதி இல்லை என்று அரசும், அமைச்சரும் சொல்லி நீதி இல்லாமல் நடந்து வருவது படித்துவிட்டு நிரந்தரஅரசு வேலைக்காக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
நிதிநிலைக்கேற்ப பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என கல்வி அமைச்சரின் பேட்டியாக ஒருநாள் செய்தி வெளியாகிறது. பிறகு ஒருநாள் ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்படும் என கல்வி அமைச்சரின் பேட்டியாக செய்தி வெளியாகிறது. பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என கல்வி அமைச்சரின் பேட்டியாக ஒருநாள் செய்தி வெளியாகிறது. ஏழாவது ஊதியக் கமிஷன் கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜீன் 15-ல் சட்டசபையில் புவனகிரி சட்டமன்ற (திமுக) உறுப்பினர் சரவணன் கல்வி மானிய கோரிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய கோரியபோது கூட கல்வி அமைச்சர் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருவதாக பத்திரிகை செய்தி வெளிவந்துள்ளது. ஆனால், எதுவும் நடந்தபாடில்லை என பகுதிநேர ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர். எனவே, பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிமித்தமாக அரசின் நிலைப்பாட்டை உறுதியாக அறிவிக்க வேண்டும்.
அமரர் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட 16,549 பகுதிநேர ஆசிரியர்களை இன்றுவரை தொகுப்பூதிய நிலையில் இருந்து மாற்றாமல் அரசு மவுனம் காத்துவருவது பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.
ஏப்ரல் 2014-ல் ஒருமுறை ரூ.2000 ஊதிய உயர்வைத் தவிர ஆண்டு வாரியாக இப்போதுவரை ஊதியம் உயர்த்தி வழங்கவில்லை. ஆறு ஆண்டுகளாக மே மாதங்களின் ஊதியமான ரூ.62 கோடியே 88 இலட்சத்து 62 ஆயிரத்தை வழங்காமல் 16,549 பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பொருளாதார சிக்கலில் தவிக்கிறது. மே மாதம் ஊதியம் இல்லாமல் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்ப வாழ்க்கையை எப்படி சமாளிப்பது என அரசு கவனம் செலுத்தி, இனியாவது ஒவ்வொரு பகுதிநேர ஆசிரியருக்கும் சேர வேண்டிய மே-மாத நிலுவைத்தொகையான ரூ.38ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
அரசுப்பணி என நம்பிபணியில் சேர்ந்தவர்களில் இறந்தவர்களுக்கு இந்த அரசு இதுவரை எதுவும் வழங்கவில்லை. 58 வயதை பூர்த்திசெய்து பணி ஓய்வுபெற்றவர்களுக்கும் இந்தஅரசு இதுவரை எதுவும் வழங்கவில்லை. எனவே, அரசு முதலமைச்சர் நிவாரணநிதியில் இருந்து அவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்சநிதியை உடனடியாக வழங்க வேண்டும்.
ஜாக்டோ போராட்டங்களின்போது அரசுப்பள்ளிகளை இயக்கமுழுமையாக பயன்படுத்தப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்யவேண்டும்.
இந்தஆறு ஆண்டுகளில் பகுதிநேரமாக பணிபுரிந்த உடற்கல்வி, ஓவிய, கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி பாட ஆசிரியர்கள் படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்பட்டிருந்தால் இந்நேரம் தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்கள் முறையை அரசு ஒழித்திருக்கலாம். ஆனால், அரசு நிரந்தரப் பணியிடங்களையும் நிரப்பாமல், பகுதிநேர ஆசிரியர்களையும் பணிநிரந்தரம் செய்யாமலும் காலம்கடத்துவது சரியான நடைமுறையல்ல.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

'நீட்' தேர்வு 'ரிசல்ட்:' 26ல் வெளியீடு

நீட்' தேர்வு முடிவு, வரும், 26ல், வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, மே, 7ல் நடந்தது. தேர்வு தொடர்பாக பல
சர்ச்சைகள் எழுந்தன.

உச்சநீதி மன்றம் மற்றும் பல உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கலானதால், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், 'நீட் தேர்வு குறித்த வழக்குகளை விசாரிக்க வேண்டாம்' என, உயர்நீதிமன்றங்களுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது; அத்துடன், தேர்வு முடிவை வெளியிடவும், சி.பி.எஸ்.இ.,க்கு அறிவுறுத்தியது.

இதனால், 'நீட்' தேர்வுக்கான, 29 வகை வினாத்தாளின் விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு, கருத்து கோரப்பட்டுள்ளது. விடைகளை இறுதி செய்யும் பணி, நேற்று முன்தினம்

துவங்கியது. அடுத்து, மதிப்பெண் கள் பட்டியலிடப்பட்டு, ஜூன், 26ல், தேர்வு முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

'நீட்' தேர்வு 'ரிசல்ட்:' 26ல் வெளியீடு

நீட்' தேர்வு முடிவு, வரும், 26ல், வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, மே, 7ல் நடந்தது. தேர்வு தொடர்பாக பல
சர்ச்சைகள் எழுந்தன.

உச்சநீதி மன்றம் மற்றும் பல உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கலானதால், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், 'நீட் தேர்வு குறித்த வழக்குகளை விசாரிக்க வேண்டாம்' என, உயர்நீதிமன்றங்களுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது; அத்துடன், தேர்வு முடிவை வெளியிடவும், சி.பி.எஸ்.இ.,க்கு அறிவுறுத்தியது.

இதனால், 'நீட்' தேர்வுக்கான, 29 வகை வினாத்தாளின் விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு, கருத்து கோரப்பட்டுள்ளது. விடைகளை இறுதி செய்யும் பணி, நேற்று முன்தினம்

துவங்கியது. அடுத்து, மதிப்பெண் கள் பட்டியலிடப்பட்டு, ஜூன், 26ல், தேர்வு முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

210 நாட்கள் பள்ளிகள் இயங்கும் பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டம் வெளியீடு

பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் நடப்பு
கல்வி ஆண்டில் 210 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கான நடப்பு ஆண்டு செயல் திட்டத்தை (2017-2018) தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

கடந்த 7-ந் தேதி பள்ளிகள் திறந்தது முதல் கல்வி ஆண்டு முடியும் வரை எத்தனை நாட்கள் பள்ளிகள் இயங்கும்? என்னென்ன நாட்களில் விடுமுறை?, தேர்வு எப்போது?, அந்தந்த மாதங்களில் பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன? ஆகியவை குறித்து அதில் இடம்பெற்றுள்ளது.

அதேபோல், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு எந்தெந்த தேதியில் தேர்வுகள் நடைபெறும்? என்பது அடங்கிய தேர்வு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

ஆதார் இணைக்காத 1 லட்சம் பேருக்கு பென்ஷன் நிறுத்தம் : பிஎப் அதிகாரிகள் தகவல்

தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்களுக்கு உயிர்வாழ் சான்றுடன் ஆதார் எண் இணைக்காத 1
லட்சம் பேருக்கு மே மாதம் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

காஸ்மானியம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கான தொகையை வங்கி கணக்கு மூலம் நேரடியாக வழங்கும் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு அனைவருக்கும் வங்கிக்கணக்கை இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட ஜன்தன் திட்டத்தை பயன்படுத்திக் கொண்டது. இதுதவிர மத்திய அரசின் 19 அமைச்சகங்களின் 92 திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 நூறு நாள் வேலை உறுதி திட்டம், உணவு மானியம், பள்ளிகளில் இலவச மதிய உணவு, விவசாயிகள் பயிர்க்காப்பீடு மற்றும் இழப்பீடு தொகையை பெறுவதற்கு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சமையல் காஸ் பெறுதல், அரசின் மானிய உதவிகளை பெறுதல், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான மத்திய அரசின் பீம் ஆப்பில் வங்கிக் கணக்கை இணைத்து பணம் அனுப்புதல் போன்றவை ஆதார் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 இதுதவிர வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், அடையாளச்சான்று, முகவரிச்சான்று என எண்ணற்ற வகையில் ஆதார் பயன்பாடு உள்ளது. ஜூலை 1க்கு பிறகு புதிய பான் கார்டு விண்ணப்பிக்கவும், ஆதார் வைத்திருப்பவர்கள் பான் அட்டையுடன் இணைத்து ரிட்டர்ன் தாக்கல் செய்யவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திட்ட பயன்கள் உரியவருக்கு சென்று சேர வேண்டும், போலி பயனாளிகளை ஒழிக்க வேண்டும், மானியச்சுமையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே ஆதாரை கட்டாயப்படுத்தி வருகிறது மத்திய அரசு.

 இதே வரிசையில், ஓய்வூதியர்கள் ஆதார் மூலம் உயிர்ச்சான்று சமர்ப்பிக்கலாம். ஜீவன் பிரமாண் இணையதளம் மூலம் அல்லது பொது சேவை மையங்களில் சம்பந்தப்பட்ட வங்கி, கருவூலத்துக்கு செல்லாமலேயே இருந்த இடத்தில் இருந்தே எளிதாக உயிர்ச்சான்று சமர்ப்பிக்க ஜீவன் பிரமாண் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோல் அரசு ஓய்வூதிய தாரர்கள் மட்டுமின்றி, பிஎப் ஓய்வூதியம் பெறுவோரும் ஆதாரை இணைக்க வேண்டும். பி.எப் திட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் மத்திய அரசாங்கத்திடம் இருந்து மானியம் பெறும் தகுதி படைத்தவர்கள். இதில், ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் எண் கட்டாயமாகிறது. ஆதாரை கட்டாயமாக்குவதை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

 ஓய்வூதியம் பெறுவோர் ஆதார் எண் மற்றும் தங்களது டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழினை (டிஜிட்டல் ஜீவன் பிரமாண் பத்திரம்) சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதுவரை உயிர்வாழ் சான்றிதழை அதற்குரிய படிவத்தில் வங்கியில் சமர்ப்பித்த ஓய்வூதியதாரர்களும் இந்த ஆதார் முகாமில் பதிவு செய்து கொள்ளலாம். அங்கு ஆதார் எண் மற்றும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறலாம்.

ஏப்ரல் 17ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டபோது அந்தந்த பி.எப் அலுவலகங்கள் மற்றும் இ-சேவை மையங்களில் இணைக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் ஆதார் எண் இணைக்க தவறியவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 தமிழகத்தில் சுமார் 1 லட்சம் பேருக்கு ேம மாதம் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் உடனடியாக அருகில் உள்ள பிஎப் அலுவலகத்துக்கு சென்று உயிர்வாழ் சான்றிதழுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசின் 19 அமைச்சகங்களின் 92 திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு  முதல் வங்கி கணக்கு வரை ஆதார் முக்கியமாகி விட்டது.

ஆதார் இணைக்காவிட்டால் வங்கி கணக்கு ரத்தாகும்

காஸ்மானியம் உட்பட பல்வேறு மானியங்கள் பெற ஆதார் வேண்டும்.

பிஎப் பென்ஷனுக்கு ஆதார் எண் இணைக்க அவகாசம் முடிந்து விட்டது.


ஆதார் இணைக்காவிட்டால் பென்ஷன் நின்று விடும் ஆபத்து உள்ளது.

மாணவனை வெளியே தள்ளிய விவகாரம் - நடுநிலைப் பள்ளி ஆசிரியைகள் 3 பேர் இடமாற்றம்: கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை பூந்தமல்லி அடுத்த அகரம்மேல் கிராம ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 200 பேர் படித்து வருகின்றனர்.  மேலும் மேப்பூர்தாங்கல் உள்பட
பல்வேறு கிராமங்களில் இருந்து பல்வேறு தரப்பினர் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 15ம் தேதி  வழக்கம்போல் பள்ளிக்கு வந்த அன்பு (5) என்ற 1ம் வகுப்பு மாணவனை எக்காரணமும் கூறாமல் வகுப்பு ஆசிரியை உமா மகேஸ்வரி வகுப்பறையை  விட்டு வெளியேற்றி, வராண்டாவில் உட்கார வைத்துள்ளார்.

தலைமை ஆசிரியை மீதான முன்விரோதம் காரணமாக, 1ம் வகுப்பு மாணவனை வராண்டாவில் தள்ளியதாக உமா மகேஸ்வரி உள்பட 4 ஆசிரியைகள்  மீது புகார் கூறப்பட்டது. மேலும், பல்வேறு முறைகேடான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தொடர்ந்து,  தலைமை ஆசிரியை சாந்தி சம்பந்தப்பட்ட ஆசிரியைகளை கூப்பிட்டு கண்டித்துள்ளார். இதனால் தலைமையாசிரியை மீதான முன்விரோதத்தில் பள்ளி  மாணவர்களிடம் ஆசிரியைகள் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையே 1ம் வகுப்பு மாணவனை வெளியேற்றி வராண்டாவில் அமர வைத்த தகவல் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்த  ஆசிரியையை கண்டித்து, பள்ளி முன் பெற்றோரும் பொதுமக்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர்  மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விசாரிக்க வந்தனர். பிரச்னைக்கு காரணமான  ஆசிரியைகள்,  தலைமையாசிரியை மற்றும் மாணவர்களிடம் விசாரித்தனர்.

விசாரணைக்கு பிறகு பிரச்னையில் ஈடுபட்டதாக 3 ஆசிரியைகளை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். அதன்படி உமா 

மகேஸ்வரியை குத்தம்பாக்கம் கிராமத்தில் உள்ள பள்ளிக்கும், மகாலட்சுமியை நசரத்பேட்டையிலுள்ள பள்ளிக்கும், ராஜேஸ்வரியை  கம்மார்பாளையத்தில் உள்ள பள்ளிக்கும் தற்காலிகமாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். இதற்கிடையே ஆசிரியை சபீதா மீதும் நடவடிக்கை எடுக்க  பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வகுப்பறைகள் இல்லாத பள்ளி மாணவ, மாணவியர் பரிதாபம்

நெல்லை அருகே, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அடிப்படை வசதியின்றி, போதுமான
வகுப்பறைகள் இன்றி செயல்பட்டு வருகிறது.திருநெல்வேலியில் உள்ள அனைத்து கிராமங்களிலும், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் உள்ளன. இருப்பினும், அரசு அவற்றிற்கு போதிய கவனம் செலுத்தாததால் மாணவ, மாணவியர் அவதியுறுகின்றனர். நெல்லை, தருவையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், கடந்த ஆண்டு, 250 மாணவ, மாணவியர் பயின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் இரு வகுப்புகளுடன், தமிழ் மற்றும் ஆங்கில வகுப்புகள் செயல்படுகின்றன.

இந்தஆண்டில் கூடுதலாக, 66 மாணவர்கள் சேர்க்கைக்கு பின், மாணவர்களின் எண்ணிக்கை, 316 ஆக உயர்ந்துள்ளது. இரு வகுப்புகள் கட்டடம் இல்லாமல் மரத்தடியிலும், 1964ல், பள்ளி துவக்கப்பட்ட போது கட்டப்பட்ட உடைந்த ஓட்டுக் கட்டடத்திலும் செயல்படுகிறது. அதே வளாகத்தில் செயல்படும் உயர்நிலைப் பள்ளிக்கு சொந்தமான, இரு வகுப்பு அறைகள் தற்போது பயன்படாமல் உள்ளன.


அவற்றை உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தர மறுப்பதால், துவக்கப் பள்ளி மாணவ, மாணவியர் அவதியுறுகின்றனர். எனவே, கல்வித் துறை அதிகாரிகள், இது குறித்து நடவடிக்கை எடுக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

prithika Vijay TV junior super singer - பிரித்திகாவின் வெற்றிக்கு பின்னால் இருந்து பாடுபட்ட அரசு பள்ளி ஆசிரியைகள்

Image may contain: 1 person, smiling
Image may contain: 5 people, people smiling, people standingபிரித்திகாவின் வெற்றிக்கு பின்னால் இருந்து பாடுபட்ட பிரித்திகா பள்ளி ஆசிரியை 
 AxciJohn மற்றும் சமூக வலைதளங்களில் ஓட்டுக்களை பெற உழைத்த ஆசிரியை   Yogapriya Vembaiyan க்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்....

SMS-ல் பறக்குது வீட்டுப்பாடம் -சாதனை படைக்கிறது அரசு பள்ளிக்கூடம்

Image may contain: 2 people

பாடம் நடத்துவதில் புதிய புதிய உத்திகள்: அசத்துகிறது சோழிங்கநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளி - நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் ‘அப்டேட்’ செய்யும் ஆசிரியர்கள்

எட்டாம் வகுப்பில் நுழைந்தால் அறிவியல் பாடம் கற்பிக்க மாணவனே உருவாக்கிய பவர் பாய்ண்ட் பிரசண்டேசன்; மூன்றாம் வகுப்புக்கு சென்றால் கூட்டல், கழித்தல் கணக்குகளை புரிந்து கொள்ள கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்; ஆறாம் வகுப்பில் ஆங்கில சொற்களை சரியாக உச்சரிக்க வழிகாட்டும் கரடிபாத் நிறுவனத்தின்
வீடியோ படங்கள்; ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைக்கு சென்றால் எங்கோ இருக்கும் காவனூர் புதுச்சேரி நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் வீடியோ கான்ஃபரசிங் மூலம் உரையாடல். இவ்வாறு எந்த வகுப்புக்குச் சென்றாலும் நவீன தொழில்நுட்பங்களை சாதாரணமாக கையாளும் ஆசிரியர்கள்; மாணவர்கள்.பல வண்ண உபகரணங்களைப் பயன்படுத்தி கணக்கு பாடத்தை விளையாட்டு வழியில் மாணவர்களுக்கு விளக்கும் ஆசிரியை. | படங்கள்: க.ஸ்ரீபரத்

பல வண்ண உபகரணங்களைப் பயன்படுத்தி கணக்கு பாடத்தை விளையாட்டு வழியில் மாணவர்களுக்கு விளக்கும் ஆசிரியை. | படங்கள்: க.ஸ்ரீபரத் 
 பல வண்ண உபகரணங்களைப் பயன்படுத்தி கணக்கு பாடத்தை விளையாட்டு வழியில் மாணவர்களுக்கு விளக்கும் ஆசிரியை. | படங்கள்: க.ஸ்ரீபரத்

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்றால் இத்தனை காட்சிகளையும் காணலாம். தமிழ் தவிர ஆங்கில மீடிய வகுப்புகளும் உள்ளன. திரும்பிய பக்கமெல்லாம் ஐ.டி. நிறுவனங்கள் நிறைந்த சோழிங்கநல்லூரில், மிகப் பெரும் தனியார் பள்ளிகள் ஏராளம். எனினும் எத்தனைப் பள்ளிகள் இருந்தாலும் இந்த அரசுப் பள்ளியில் மாணவர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை 596 மாணவர்கள்; 17 ஆசிரியர்கள்; 3 சிறப்பாசிரியர்கள் உள்ளனர். வேறு பள்ளிகளிலிருந்து வரும் புதிய மாணவர்களின் சேர்க்கை நடந்து கொண்டேயிருக்கிறது. விரை வில் மாணவர்களின் எண்ணிக்கை 700-ஐ எட்டக் கூடும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


பாடம் போதிப்பதில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் சோழிங்கநல்லூரில உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.

பாடம் போதிப்பதில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் சோழிங்கநல்லூரில உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.

“எப்ப பார்த்தாலும் என் பையன் செல்போனி லேயே விளையாடிட்டு இருக்கான்…” எல்லா ஊரிலும் கேட்கும் பெற்றோர்களின் புலம்பல் இது.

“பரவாயில்லை. பசங்கள விளையாட விடுங்க”. இப்படிச் சொல்கிறார்கள் சோழிங்கநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்.

“செல்போன் என்பது இன்று பெரியவர் கள், குழந்தைகள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோராலும் சகஜமாகப் பயன்படுத்தப்படு கிறது. சிறுவர்கள் இவ்வாறு பயன்படுத்துவதை தடுக்க முடியாது. ஆனால் பயனுள்ள வழிகளில் அவர்கள் பயன்படுத்துவதை நம்மால் உறுதிப்படுத்த முடியும்” என்கிறார் இந்தப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் சு.பத்மாவதி.

பாடப்புத்தகங்களில் அன்றாடம் மாணவர்கள் படிக்கும் அத்தனை பாடங்களையும் விளையாட்டுகளாக விளையாட முடியும். இதற்கான ஆயிரக்கணக்கான செயலிகள் (App) கிடைக்கின்றன. அத்தகைய செயலிகளை நாங்கள் டவுன்லோடு செய்து வைத்திருக்கிறோம். எங்கள் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளில் மாணவர்கள் உற்சாகமாக பாடம் கற்க இந்த செயலிகள் பெரிதும் பயன்படுகின்றன. மாணவர்கள் மெமரி கார்டு கொண்டு வந்தால், இந்த செயலிகளை பதிவு செய்து கொடுக்கிறோம். தங்கள் வீட்டில் உள்ள செல்போனில் அந்த கார்டை செருகி மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். வகுப்பில் நடத்தும் பாடங்களை மீண்டும் வீடுகளில் கேட்க வசதியாக எனது வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் ஐ பேட் வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்” என்கிறார் பத்மாவதி.

அனிமேஷன் படங்கள்

அறிவியல் பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள வசதியாக ஏராளமான அனி மேஷன் படங்களை ஆசிரியர் சு.சக்திவேல் முருகன் உருவாக்கியுள்ளார். இந்த அனி மேஷன் படங்களை தனது பள்ளியில் மட்டும் இவர் பயன்படுத்தவில்லை. மற்ற பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் சமூக ஊடகங்கள் மூலம் சக ஆசிரியர்களுக்கு அனுப்பி வருகிறார். இவர்கள் இருவரும் உதாரணங்கள் மட்டுமே. இவர்களைப் போலவே இந்தப் பள்ளியின் அத்தனை ஆசிரியர்களும் பலவித திறன்களைக் கொண்டிருக்கிறார்கள்.

காவனூர் புதுச்சேரியில் உள்ள நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் வீடியோ கான்ஃபரசிங் மூலம் உரையாடும் சோழிங்கநல்லூர் பள்ளி மாணவர்கள்.

காவனூர்புதுச்சேரியில் உள்ள நடுநிலைப் பள்ளிமாணவர்களுடன் வீடியோ கான்ஃபரசிங் மூலம்உரையாடும் சோழிங்கநல்லூர் பள்ளி மாணவர்கள்.

பிரிட்டிஷ் கவுன்சில் விருது

இந்தப் பள்ளிக்கு இன்னும் பல பெருமிதங்கள் உள்ளன. இந்தியாவின் மிகப்பெரும் கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐ.ஐ.டி. சார்பில் இந்தப் பள்ளியின் 4 மாணவர்கள் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டனர். கற்றல், கற்பித் தல் உத்திகள் பற்றி ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் அளித்த பயிலரங்கில் அவர்கள் பங்கேற்றனர். “பள் ளிக்கு திரும்பிய அந்த மாணவர்கள், நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மிகச் சிறப்பாக வகுப் பெடுத்தனர்” என ஆசிரியர் சரஸ்வதி கூறுகிறார்.

சர்வதேச அளவில் சிறந்த பள்ளிகளுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் வழங்கப்படும் விருதை 2013-ம் ஆண்டு இந்த அரசுப் பள்ளியும் பெற்றுள்ளது. தரமான கல்வி, மிகச் சிறந்த ஆசிரியர்கள், அறிவார்ந்த மாணவர்களைக் கண்டு அருகேயுள்ள பல தொழில் நிறுவனங்கள் இந்தப் பள்ளிக்கு ஆர்வமாக பல உதவிகளை செய்து வருகின்றன. ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம் சார்பில் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்நிறுவனத்தின் ஊதியத்தில் ஒரு ஊழியரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்னொரு நிறு வனம் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க உடற்கல்வி ஆசி ரியரை நியமித்துள்ளது. மற்றொரு நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சம் மதிப் பில் புதிய வகுப்பறைக் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கற்பித்தல் உபகரணங்களை வேறு சில நிறுவனங்கள் வழங்கியுள்ளன. அனை வருக்கும் கல்வி இயக்கம் மூலம் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

எதிர்கால இலக்கு

“இவ்வளவு சிறப்பம்சங்கள் நிறைந்த இந்தப் பள்ளியில் பணியாற்றுவதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்” என்கிறார் தலைமையாசிரியர் அ.கா.ஹமிதா பானு. அவர் மேலும் கூறும் போது, “இந்தப் பள்ளியை மேலும் மேம் படுத்த எங்களுக்கு இன்னும் பல கனவு கள் உள்ளன. பள்ளிக்கென ஒரு ஆடிட் டோரியம், நூலகத்துக்கென தனிக் கட்டிடம், ஆடியோ, விசுவல் வசதிகள் கொண்ட கம்ப்யூட்டர் லேப் போன்ற வசதிகளை உருவாக்க வேண்டும். இன் னொரு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை தேவைப்படுகிறது. இந்த வசதிகளை உருவாக்க நன்கொடையாளர்களின் ஆதரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவை எல்லாவற்றையும்விட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை 1000-ஆக உயர்த்துவதே எங்கள் பிரதான இலக்கு” என்றார்.


இவர்களது இலக்கு பெரியதுதான். எனினும் இந்த இலக்கை விரைவிலேயே இவர்களால் எட்டி விட முடியும். அதற்கான எல்லா தகுதிகளும் இந்தப் பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ளன.


தங்கள் பள்ளியை எப்படியெல்லாமோ மேம்படுத்த வேண்டும் என்ற கனவுகளை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர் சுமந்து திரிகிறார்கள். ஆனால் அந்த கனவுப் பள்ளியை எவ்வாறு உருவாக்குவது என்ற வழிமுறையை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இன்னொரு பக்கம், ‘அரசுப் பள்ளியில் இவ்வளவுதான் முடியும்; இதுக்கு மேலே எதுவும் செய்ய முடியாது’ என்று சொல்லும் ஆசிரியர்களும் பலர் உள்ளனர். இத்தகைய ஆசிரியர்கள் அனைவரும் சோழிங்கநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஒருமுறையேனும் அவசியம் சென்று வர வேண்டும்.