யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/7/17

2030-ஆம் ஆண்டுக்கும் ஏற்ற பாடத்திட்டம் வடிவமைக்கப்படும்: மு.ஆனந்தகிருஷ்ணன்

வரும் 2030-ஆம்ஆண்டு வரையிலான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்படும் என கலைத்திட்ட
வடிவமைப்புக்குழுவின் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் கூறினார். சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய கருத்தரங்கில் அவர் பேசியது:
தமிழகத்தில் 58,000 பள்ளிகளில் 5.7 லட்சம் ஆசிரியர்களும் 1.30 கோடி மாணவர்களும் உள்ளனர். அடுத்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் வரும் 2030-இல் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்வார்கள். அந்த நேரத்தில் மாணவர்கள் தொழில்நுட்ப ரீதியாகவும், வேலைவாய்ப்பு பெறுவதிலும் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரிடும். அந்தச் சவால்களை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத் திட்டம் அமையும். இனி வரும் காலங்களில் தேவைப்படும் போதெல்லாம் மாற்றங்களைச் செய்ய வேண்டும். படங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் ஒவ்வொரு பாடமும் மாணவர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கேற்ப ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுவது அவசியம்.
பாடப்புத்தகங்கள், நூல்நிலைய புத்தகங்களை மட்டும் படிக்காமல் இதர தொழில்நுட்பக் கருவிகள், சேவைகளையும் பயன்படுத்த மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். அடுத்து வரப்போகும் தேர்வு முறை மாணவர்களை அச்சுறுத்துவதாக இல்லாமல், மகிழ்ச்சியுடன் எழுதும் வகையில் இருக்க வேண்டும். இந்தப் பாடத்திட்டம் மூன்று கட்டங்களாக வடிவமைக்கப்படவுள்ளது.
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலர் வெ.இறையன்பு: தற்போதுள்ள தலைமுறை இரண்டு விஷயங்களால் பாதிக்கப்படுகின்றனர். ஒன்று கவனச் சிதறல். மற்றொன்று எந்த விஷயமும் எளிதாகக் கிடைக்கப் பெறுதல். இதனால் மாணவர்களின் சிந்தனைத் திறனும், போராட்டக் குணமும் குறைந்து விடுகிறது. இதில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியமான ஒன்றாகும். மனப்பாடத்தை மாபெரும் அறிவு என நாம் கொண்டாடும் வரை கல்விக்கு உய்வு இல்லை. அவர்களை ஒரே முறையில் சிந்திக்க நாம் பழக்கி விட்டோம். இதுதான் இப்போது சிறந்த வளர்ப்பு முறையாகக் கருதப்படுகிறது. மாணவர்களைப் பல வகைகளில் சிந்திப்பதற்கான சாளத்தை கல்வி உருவாக்கிக் கொடுக்குமேயானால் அந்தக் குழந்தை தனது உண்மையான ஆற்றலை ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படுத்த உதவியாக இருக்கும். அந்த வகையில் கல்வியை மாணவர்கள் நேசிக்கும்படி செய்து விட்டால் 50 சதவீதம் தானாக கல்வி நிறைவு பெறும்.
ஒவ்வொரு பாடத்தையும் வடிவமைக்கும்போது அதை வாழ்க்கையோடு எப்படி தொடர்புபடுத்தி அந்தக் குழந்தை புரிந்துகொள்கிறது என்பது முக்கியம். எந்த மாற்றத்தையும் எதிர்கொள்ளவும் நாம் மனரீதியாக தயாராக இருந்தால்தான் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். சுவாரஸ்யமாகவும், சுவையாகவும் இருக்கக்கூடிய பாடத்திட்டம் அமையும்பட்சத்தில் கல்வி கற்கண்டாக மாறும். கற்பது அனுபவமாக மாறும். இஸ்ரேல் நாட்டில் ஒருவர் கல்வியில் இடை நின்றவர் எனக் குறிப்பிட்டால் அவர் பி.ஹெச்டி முடிக்கவில்லை என்று அர்த்தம். அந்த அளவுக்கு அங்கு படித்தவர்கள் உள்ளனர். நமது கல்வி முறையில் மிகச் சரியான மாற்றங்களைச் செய்வதன் மூலம் அறிவின் சிகரமாக தேசத்தை மாற்ற முடியும் என்றார்.

பள்ளிக் கல்வித்துறை செயலர் த.உதயச்சந்திரன்: வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அனைத்து பாடப் புத்தகங்களும் இணையதளங்களில் கிடைக்கும். மாணவர்கள் ஒரு நாள் பள்ளிக்கு வராவிட்டால் அன்று நடத்தப்பட்ட பாடங்கள் பெற்றோருக்கு செல்லிடப்பேசியில் அனுப்பி வைக்கப்படும். புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க ஆசிரியர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும். மாணவர்களின் தரம் உயரும்போது ஆசிரியர்களின் பெருமை மேலோங்கும்.

பி.எட்., கல்லூரிகளுக்கு தரவரிசை : என்.சி.டி.இ., புது அறிவிப்பு

ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் நான்கு வகையாக தர வரிசை செய்யப்படும்' என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ.,
அறிவித்துள்ளது. பி.எட்., கல்லுாரிகளை புதிய தரவரிசைக்குள் கொண்டு வர, வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை என்.சி.டி.இ.,யின் ncte-india.orgஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்கட்டமைப்பு, கல்வியின் தரம், மாணவர்களின் தேர்ச்சி, ஆசிரியர்களின் திறன் அடிப்படையில், கல்லுாரிகள் தரவரிசை செய்யப்படும்; 'ஏ, பி, சி, டி' என, நான்கு வகைகளில், கல்லுாரிகள் பிரிக்கப்படும். அதில், 'டி' பிரிவில் இடம் பெறும் கல்லுாரிகள் மூடப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தர வரிசைக்காக கல்லுாரிகள் ஆய்வு செய்யப்படும்
பி.எட்., கல்லூரிகளுக்கு தரவரிசை : என்.சி.டி.இ., புது அறிவிப்பு

ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் நான்கு வகையாக தர வரிசை செய்யப்படும்' என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., அறிவித்துள்ளது. பி.எட்., கல்லுாரிகளை புதிய தரவரிசைக்குள் கொண்டு வர, வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை என்.சி.டி.இ.,யின் ncte-india.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்கட்டமைப்பு, கல்வியின் தரம், மாணவர்களின் தேர்ச்சி, ஆசிரியர்களின் திறன் அடிப்படையில், கல்லுாரிகள் தரவரிசை செய்யப்படும்; 'ஏ, பி, சி, டி' என, நான்கு வகைகளில், கல்லுாரிகள் பிரிக்கப்படும். அதில், 'டி' பிரிவில் இடம் பெறும் கல்லுாரிகள் மூடப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தர வரிசைக்காக கல்லுாரிகள் ஆய்வு செய்யப்படும்

தேர்வு, மதிப்பீடு முறையில் மாற்றம் தேவை : கருத்தரங்கில் கல்வியாளர்கள் வலியுறுத்தல்

மாணவர்களுக்கு என்ன தெரிகிறது என்ற வகையில், தேர்வு மற்றும் மதிப்பீடு
முறையை மாற்ற வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசின் புதிய பாடத்திட்ட கருத்தரங்கில், கல்வியாளர்கள் பலர் பங்கேற்று கருத்து தெரிவித்தனர். அவர்கள் பேசியதாவது: அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன்:
இந்தஆண்டு, முதல் வகுப்பு படிக்கும் மாணவர், 2030ல், பிளஸ் 2 முடிப்பார்; அப்போது, தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார அளவிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இதை சமாளிக்கும் வகையில், மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.பாடத்தில் உள்ளதை மட்டுமே தேர்வில் மதிப்பிடும், தேர்வு முறையை மாற்ற வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.
ஜெர்மன் துணை துாதர், அஷிம் பேபிக்: கல்வியாளர்களின் கருத்தை கேட்டு, பாடத்திட்டத்தை மாற்றுவது தான், நல்ல அடித்தளம். அடுத்த, 12 ஆண்டுகளில் ஏற்பட போகும் மாற்றங்களுக்கு ஏற்ப, பாடத்திட்டத்தை வகுக்க வேண்டும். ஒரு நாடு, மாநிலம் என, குறுகிய வட்டத்தில் இல்லாமல், சர்வதேச அளவில், அனைத்து நாடுகள், மக்களுடன் பழகும் வகையில் மாணவர்கள் தயாராக வேண்டும். அதற்கேற்ற, சுயமாக நிர்ணயிக்கும், தன்னாட்சி முறை பாடத்திட்டம் தேவை.இங்கிலாந்து, பின்லாந்து, ஜெர்மன் என, பல நாடுகளில், தன்னாட்சி பாடத்திட்ட முறை உள்ளது. சமூக அறிவியல், மனோதத்துவவியல், சூழ்நிலையியல் போன்றவற்றில், அதிக முக்கியத்துவம் தேவை. மாணவர்கள் தாமாக சிந்தித்து, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள, பாடத்திட்டம் உதவ வேண்டும்.
இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை: தமிழகத்தில், அரசு பள்ளியில், தமிழில் தான் படித்து, இந்த நிலைக்கு, நான் வந்துள்ளேன். இஸ்ரோவில், இன்னும் பல விஞ்ஞானிகள், தமிழகத்தை சேர்ந்தவர்களாக பணியாற்றுகின்றனர். தாய்மொழி கல்வியை, தவறாக நினைக்கக்கூடாது. ஆனால், பாடப்புத்தகத்தை கடந்து, படிக்க வேண்டும். மாணவர்களுக்கு என்ன தெரியவில்லை என, அளவிடும் தேர்வு முறை மாறி, அவர்களுக்கு என்ன தெரியும் என்ற தேர்வு முறைக்கு வர வேண்டும். தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ருஷிகேஷ் சேனாபதி: என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், 2005ல், தேசிய பாடத்திட்ட விதிகள் வகுக்கப்பட்டன. இதில், தற்போதைய மாணவர்களுக்கு தேவையான, அனைத்து பாடத்திட்ட முறைகளும் உள்ளன. ஆனால், எத்தனை பாடத்திட்டம் கொண்டு வந்தாலும், ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் முறை, மாற வேண்டும்.
புத்தகங்களில் உள்ளதை அப்படியே கற்பிப்பது மட்டுமின்றி, அதை, வெளிப்புற அனுபவங்களின் படி, கற்றுத்தர வேண்டும். வகுப்பை விட்டு, பாடப்புத்தகத்தை கடந்து, கற்று தர வேண்டும். வெறும் மதிப்பெண்ணை மட்டும் பார்க்காமல், தனித்திறன் வளர்க்க வேண்டும். தேர்வில், சுயமாக சிந்தித்து பதில் அளிக்கும் சிக்கலான வினாக்களுக்கு, மாணவர்கள் தயாராக வேண்டும்.

பாடத்திட்ட குழு உறுப்பினர், சுல்தான் அகமது இஸ்மாயில்: இந்தியாவில், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. கல்லுாரி, பல்கலைகளில் மதிப்பெண்ணுக்கே முக்கியத்துவம் கிடைக்கிறது. பாடத்திட்டத்தை தயாரிக்கும், தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனமோ, பள்ளிக்கல்வித்துறையோ, மதிப்பெண் அடிப்படையில் தான் வேலை தருகிறது. அதனால், மாணவர்கள் மதிப்பெண்ணுக்காக படிக்கும் சூழல் உள்ளது. இதை கொள்கை அளவில் மாற்றுங்கள். திறமைக்கு மட்டுமே மதிப்பு என்றால், அதற்கேற்ப, மாணவர்களும், ஆசிரியர்களும் உடனே மாற தயாராக உள்ளனர்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

தெலுங்கானா அரசு மாணவர்களுக்கு அறிவித்துள்ள அசத்தல் அறிவுப்புகள்

ஐதராபாத்: பள்ளி மாணவர்களின் புத்தக சுமைக்கு, எடை கட்டுப்பாடு விதித்துள்ளதுடன், 'ஐந்தாம் வகுப்பு வரை, 'ஹோம் ஒர்க்' கிடையாது' என்றும், தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது. 
மாணவர்கள் அதிக புத்தக சுமையை சுமந்து செல்வதால், உடல்நல பாதிப்புடன், மனநல பாதிப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், புதிய அறிவிப்புகளை, தெலுங்கானா அரசு நேற்று வெளியிட்டு உள்ளது.அதில் கூறியுள்ளதாவது:மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், ஆரம்பப் பள்ளி மாணவர்கள், 6 - 12 கிலோ வரையிலும், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், 17 கிலோ வரையிலும், புத்தக சுமையை துாக்கிச் செல்லும் நிலை உள்ளது. இதனால், அவர்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன; மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

மாணவர்களுக்கான புத்தக சுமைக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது; அதன்படி, முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் அதிகபட்சம், 1.5 கிலோ புத்தகத்தை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், 3 கிலோ; ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்கள், 4 கிலோ புத்தகத்தை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.

எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், 4.5 கிலோ; 10ம் வகுப்புக்கு, அதிகபட்சம், 5 கிலோ எடையுள்ளதாகவே புத்தக சுமை இருக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 'ஹோம் ஒர்க்' எனப்படும், வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது. இவற்றுக்கான அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

வி.ஏ.ஓ., தேர்வு தள்ளிவைப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், கிராம நிர்வாக அலுவலருக்கான, 
வி.ஏ.ஓ., தேர்வு, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, பல்வேறு வகை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி இடங்களில், டி.என்.பி.எஸ்.சி., மூலம், புதியவர்கள் நியமிக்கப்படுகின்றனர். 
இதற்காக, போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் மற்றும் துறை ரீதியான புதிய நியமனம் குறித்து, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஆண்டு தேர்வு திட்ட அறிக்கை வெளியிடப்
படுகிறது.இந்த ஆண்டுக்கான திட்ட அறிக்கைப்படி, வருவாய் துறையில், வி.ஏ.ஓ., பதவிக்கான, 494 காலி இடங்களை நிரப்ப, செப்., 17ல், எழுத்துத் தேர்வு நடத்த வேண்டும்.
இந்த தேர்வுக்கான, அதிகாரபூர்வ அறிவிக்கை, ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஜூலை மூன்றாம் வாரமாகியும், இன்னும் 
அறிவிக்கை வெளியாகவில்லை.இது குறித்து, தேர்வர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யை அணுகிய போது, 'வி.ஏ.ஓ., தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது' என, அதிகாரிகள் 
தெரிவித்து உள்ளனர்.அதாவது, மாநிலம் முழுவதும், 32 மாவட்டங்களிலும், வி.ஏ.ஓ., காலியிட விபரங்கள் இன்னும், தமிழக அரசிடமிருந்து, டி.என்.பி.எஸ்.சி.,க்கு வரவில்லை.
காலியிட விபரம் மற்றும் புதிய நியமனத்துக்கான அனுமதி கடிதம், அரசிடமிருந்து வந்ததும் தேர்வு அறிவிக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
'தற்போதைய நிலவரப்படி, ஆகஸ்டில் தேர்வுக்கான அறிவிக்கை வெளியாகவும், அக்., இறுதி வாரத்தில் தேர்வு நடக்கவும் வாய்ப்புள்ளது' என, அதிகாரிகள் கூறிஉள்ளனர்.

பிளஸ் 2 சான்றிதழில் தமிழ் பிழை திருத்தம் தேர்வு துறை அறிவிப்பு

பிளஸ் 2 சான்றிதழ்களில், தமிழ் பெயர்களில் திருத்தம் செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில், இந்த ஆண்டு முதல், ஆங்கிலத்துடன், தமிழிலும் மாணவர் பெயர் இடம் பெற்றுள்ளது. இதில், பல மாணவர்களுக்கு, தமிழில் பிழைகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. 
இதையடுத்து, சான்றிதழை திருத்தம் செய்ய, தேர்வுத் துறை அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் உத்தரவிட்டார். அதனால், பெயர் திருத்தம் செய்ய, வரும், 24 வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், இதற்கான கடிதத்தை வழங்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை, இணையதளம் மூலம் அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பி, தலைமை ஆசிரியர்கள் திருத்தம் செய்யலாம். திருத்தப்பட்ட புதிய மதிப்பெண் சான்றிதழ்களை, வரும், 31 முதல், பள்ளிகளில் பெறலாம். அப்போது, பழைய அசல் மதிப்பெண் சான்றிதழை, பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனரகம் 
அறிவித்துள்ளது.

332 இடங்களுக்கான கால்நடை மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு தொடங்கியது

கால்நடை மருத்துவ படிப்புகளில் 332 இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2017–2018–ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றும்(வியாழக்கிழமை), தொழில்நுட்ப பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு நாளையும்(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
பொதுப்பிரிவில் (பி.வி.எஸ்.சி., ஏ.எச்.) 320 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அதன்படி 48 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 272 இடங்களுக்கும், அதேபோல் தொழில்நுட்ப பிரிவில் 60 இடங்கள் என மொத்தம் 332 இடங்களுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.
இதில் பொதுக்கல்வி பிரிவில் (பி.வி.எஸ்.சி., ஏ.எச்.) மாற்றுத்திறனாளிகளுக்கு(சிறப்பு பிரிவு) 16 இடங்களும், விளையாட்டுப்பிரிவு மாணவர்களுக்கு 5 இடங்களும் (ஆண்–3, பெண்–2), முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு 2 இடங்களும், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு 16 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நேற்று கலந்தாய்வு நடைபெற்றது.
இதுபோக, மீதமுள்ள 233 இடங்களுக்கு இன்று பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த இடங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 115 பேர் கலந்தாய்வுக்காக அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதேபோல், தொழில்நுட்ப பாடப்பிரிவுகளான உணவு தொழில் நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் ஆகியவற்றில் உள்ள 80 இடங்களுக்கான கலந்தாய்வும் இன்று நடைபெறுகிறது. இந்த இடங்களை பொறுத்தவரையில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியவர்களுக்கு ஒதுக்கீடு கிடையாது.
அந்தவகையில், உணவு தொழில்நுட்பத்தில் உள்ள 20 இடங்களுக்கு 396 பேரையும், கோழியின தொழில்நுட்பத்தில் உள்ள 20 இடங்களுக்கு 364 பேரையும், பால்வள தொழில்நுட்பத்தில் உள்ள 20 இடங்களுக்கு 520 பேரையும் கலந்தாய்வுக்காக அழைத்துள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்குழு தலைவரும், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலருமான சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

19/7/17

மாண்புமிகு கல்வித்துறை செயலரின் வழிகாட்டுதலின் படி போட்டித் தேர்வுகளிக்கு பயிற்சி அளிக்கவும் போட்டித்தேர்வுகளுக்கான கட்டகங்கள் தயார்செய்யவும் விரும்பும் ஆசிரியர்கள் நிரப்பவும்.

TNTET: சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த10 சந்தேகங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அவர்களுக்கு உள்ள சந்தேகங்கள்

1) Identification Cettificate ல் subject code இரண்டு கட்டம் உள்ளது
எவ்வாறு நிரப்புவது ( உதரணம் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் )

2)Identification Cettificate ல் பெயர் தமிழ் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா



 3)Identification Cettificate ல் கையெப்பம் தமிழ் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா

4)சுய விவர படிவத்தில் அனைத்தும் பெயர் உட்பட தமிழ் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா

5)+2 இவற்றில் முக்கிய பாடம் என்ற கட்டத்தில் வரலாறு , கணிதம் , இப்படி படித்த முக்கிய பாடம் எழுத வேண்டுமா

6) D.T.Ed ல் முக்கிய பாடம் இல்லை அதில் எழுவும் எழுத வேண்டுமா  அதை நடத்தும் தேர்வு வாரியம் எது ( B.Lit with D.TEd=  B.Ed  தேர்வர்கள் மட்டும்)

7) பட்டப்படிப்பில் முக்கிய பாடம் எழுத வேண்டுமா அதில் எதுவும் துணைப்பாடம் எழுத வேண்டுமா

8) இடம் தேதி என்ற இடத்தில் நமது ஊர் எழுத வேண்டுமா அல்லது சான்றிதழ் சரிபார்க்கும் ஊர் அன்றைய தேதி எழுத வேண்டுமா

9) சுய விவர படிவத்தில் போட்டோவில் அரசிதழ் பெற்ற அலுவலரிடம் இரண்டு நகல்களில் கையெப்பாம் வாங்க வேண்டுமா(Identification Cettificate கண்டிப்பாக வாங்க வேண்டும்)


10) தேர்ச்சி பெற்ற மாதம் வருடம் என்ற கட்டத்தில் மேல் உள்ள தேர்வு எழுதிய மாதம் ஆண்டு எழுத வேண்டுமா அல்லது கீழ் உள்ள ரிசல்ட் தேதி மாதம் எழுத வேண்டுமா

மாண்புமிகு கல்வித்துறை செயலரின் வழிகாட்டுதலின் படி போட்டித் தேர்வுகளிக்கு பயிற்சி அளிக்கவும் போட்டித்தேர்வுகளுக்கான கட்டகங்கள் தயார்செய்யவும் விரும்பும் ஆசிரியர்கள் நிரப்பவும்.

Welfare of Differently Abled Persons Department –Early Intervention Centre for children with Autism in Siragugal Special School, Thanjavur District-Sanction of Grant- Orders- Issued.

பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு

தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கி ணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு
உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் என, தனியார் பள்ளிகளாக, தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்தபள்ளிகளில், மாநிலம் முழுவதும், 5.60 லட்சம் பேர் படிக்கின்றனர். பல்வேறு விதிகள் அரசு பள்ளிகளை பொறுத்த வரை, அரசின் பல்வேறு துறைகள் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது. அதாவது, பள்ளிக்கல்வித் துறை, நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்துகளுக்கான ஊரக வளர்ச்சித் துறை, கள்ளர் மறுசீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, வனத்துறை, சமூகநலத் துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் கன்டோன்மென்ட் என, பல்வேறு துறைகளின் நிர்வாகத்தில் செயல்படுகின்றன. மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பள்ளி நிர்வாகம்போன்றவற்றில், பல்வேறு விதிகள் தனித்தனியாக வகுக்கப்படுகின்றன. குளறுபடிகள் கண்டறிந்துள்ளது.

அதனால், பள்ளிகளின் திட்டங்களை வகுப்பதிலும், ஒழுங்குமுறை செய்வதிலும், பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வியின் ஆண்டறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு, குளறுபடிகளை கண்டறிந்துள்ளது. இதை தொடர்ந்து, அனைத்து நிர்வாகங்களையும், ஒரே குடையின் கீழ் வரும் வகையில் ஒன்றிணைக்க வேண்டும். இதில், தாமதம் ஏற்படக் கூடாது என, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆசிரியர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது - 'துக்ளக்' கட்டுரை

ஆசிரியர்கள் பற்றி 'துக்ளக்'கில் (12.7.2017) வெளி வந்த கட்டுரையின் சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. ஆசிரியர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது என்கிற அளவுக்கு 'துக்ளக்'கில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர்கள்
கவனித்தார்களா என்று தெரியவில்லை, 'துக்ளக்' எழுதியுள்ளவை இதோ!)*

உண்மையான அக்கறை திருவாளர் அமைச்சர் பெருமகனுக்கோ, அவரது துறை அதிகாரிகளுக்கோ இருந்திருந்தால், எங்கெங்கோ பட்டி, தொட்டிகளில் 'பள்ளிக்கூடம்' என்ற பேரில் நின்று கொண்டிருக்கிற, எப்போது இடிந்து விழுவோம் என்று தெரியாத கட்டிடங்களைப் பற்றியோ, அதில் படிக்கிற ஏழை மாணவர்கள், அங்கு வேலை பார்க்கிற ஆசிரியர்கள் என்கிற பிழைப்புவாதிகளைப் பற்றியோ அமைச்சரின் அறிக்கை, பேட்டிகளில் வெறும் தகவல்களாவது வந்து விழுந்திருக்கும்.*

*அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கிற ஆசிரியர்களின் கல்வித் தரம் ஒழுங்காக இருந்தால் அல்லவா மாணவர்களின் கல்வியில் தரம் வரும். பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கே வருவதில்லை.*

*லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து, படித்து ஆசிரியர் வேலையில் சேருகிறவருக்கு, மாணவர்களின் படிப்பைப் பற்றி என்ன கவலை? மாணவர்கள் படித்தாலென்ன, கழுதை மேய்க்கப் போனாலென்ன? அவர்களுக்கு என்ன வந்தது? ரியல் எஸ்டேட், வட்டிக்குப் பணம் விடுவது, கடை கண்ணியைத் திறந்து வியாபாரம் செய்வது என்று சகல பிஸினஸ்களிலும் இறங்கி விட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கூடத்துப் பக்கம் ஒதுங்கக் கூட நேரமில்லை.*

*ஆசிரியர்கள் ஒழுங்காக வேலைக்கு வருகிறார்களா, வேலைக்கு வந்தால் முழு வேலை நேரத்தையும் பள்ளிகளில்தான் செலவிடுகிறார்களா என்பதைக் கண்காணிக்க எந்த வழியுமில்லை. இதையெல்லாம்தான் நீதிபதி கிருபாகரன் தனது உத்திரவில் குறிப்பிட்டிருக்கிறார்.*

*இவ்வளவு மோசமான நிலையில், கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க தமிழர்களுக்கு என்ன பைத்தியமா பிடித் திருக்கிறது?*

ஆசிரியர்களே 'துக்ளக்'கை தெரிந்து கொள்வீர்!*

RTI - சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை..!

சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை எனத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட
கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
 
இந்தியாவில் உள்ள தேசிய நெடுங்சாலைகளில் பயணம் செய்யும்போது கட்டாயம் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் கார், லாரி என வாகனத்திற்கு வாகனம் மாறுபடும்

இந்தகட்டண விவகாரத்தை வைத்து, பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரி ஓம் ஜிண்டால் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் கேட்டிருந்தார். அதற்கு விளக்கமளித்த அரசு, சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு வரி இல்லை என்றும் மாறாக அது சேவை கட்டணமாகவே வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சுங்கச்சாவடியில் மூன்று நிமிடங்களுக்கு மேல் வாகனத்தில் காத்திருந்தால் அவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுங்கச்சாவடிகளில் மிக நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருக்கும் வாகனங்கள் 3 நிமிடங்களுக்கு மேல் நின்றால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று தெரிய வந்துள்ளது.

நம் மாணவர்களைத் தமிழக அரசும் கைவிடலாமா? - HINDU தலையங்கம்

பொதுமருத்துவம், பல் மருத்துவம் ஆகிய பட்டப் படிப்புகளுக்காக ‘நீட்’
தேர்வு எழுதியவர்களில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடங்களை ஒதுக்கித் தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்துசெய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் தமிழக மாணவர்களுக்குக் கொஞ்சநஞ்சம் இருந்த நம்பிக்கையும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருக்கிறது.
ஆக, இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையாக இருக்காது என்றும், தமிழக சட்ட மன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்துவிடும் என்றும் மாணவர்களை நம்ப வைத்துத் தமிழக அரசு ஏமாற்றியிருக்கிறது என்றுதான் கல்வியாளர்கள் பலரும் கருதுகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான சமுக நீதியையும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான வாய்ப்புகளையும் ‘நீட்’ தேர்வும், உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பும் ஒரேயடியாகத் துடைத்துப்போட்டிருக்கின்றன. இதுகுறித்து மத்திய அரசுக்கு எந்தக் கவலையும் இல்லையென்றால், மாநில அரசும் அப்படியே இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

‘நீட்’ தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் 72% மத்திய கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கே சென்றுவிடும். தமிழ்நாட்டில் மருத்துவ சேவை சிறப்பாக நடப்பதற்கு முக்கிய காரணம், மருத்துவக் கல்வியின் முதுநிலை படிப்புகளுக்கு, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்குத் தரும் முன்னுரிமைதான் என்பதை மறந்துவிட வேண்டாம்.

மருத்துவக் கல்வி என்பது முழுக்க முழுக்க இப்போது வணிகமயமாகிவிட்டதால், பொதுத் தகுதித் தேர்வு நடத்துவது தகுதியுள்ள மாணவர்களை அடையாளம் காண உதவுகிறது என்று கூறக்கூடும். ஆனால் அது அரசின் சமூக, பொருளாதார லட்சியங்களுக்கு முரணாக இருந்துவிடக் கூடாது. வெவ்வேறு வகையிலான பிராந்தியங்கள், பொருளாதாரப் பின்னணிகள், மொழிகள் உள்ள நாட்டில் எல்லோரும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்திலேயே படிக்க வேண்டும், ஒரே மாதிரியே தேர்வுகளை எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது.


இவ்விஷயத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து மத்திய அரசு ஒரு முடிவெடுக்க வேண்டும். அதற்குத் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியம். நாடாளுமன்ற இரு அவைகளையும் சேர்த்து 48 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அதிமுகவுக்கு நம் மாணவர்கள்மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமென்றால், இந்த பலத்தைக் கொண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையேல், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகள் நசுக்கப்பட்டதற்கு ஆளும் அதிமுகவும் ஒரு காரணம் என்ற அவப்பெயரை வரலாறு என்றென்றும் சொல்லிக்கொண்டிருக்கும்!

ஓய்வுபெறும் நாளில் ஓய்வூதிய பலன் : பி.எப்., ஆணையர் தகவல்

வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்தஊழியர்கள், தற்போது, பணி ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதிய பலன்களை பெறலாம்,'' என, தமிழகம்
மற்றும் புதுச்சேரி மாநிலங்களின், கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர், பி.டி.சின்ஹா தெரிவித்தார்.

பழைய பென்ஷன் திட்டம் வந்தால் தான் -ஜெ.ஆன்மா சாந்தியடையும் அடித்து சொல்கிறது -ஜாக்டோ -ஜியோ

7ஆவது ஊதிய குழு குறித்து தமிழக நிதியமைச்சர் தகவல்

சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி

சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி
சென்னை:

சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்து பெண்
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். ‘தனது மகள் கல்வியில் சிறந்த நிலையை நிச்சயம் அடைவாள்’, என்று உறுதியுடன் அவர் கூறுகிறார்.

“அரசுப் பள்ளிகளில் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் சேர்க்கக்கூடாது?”, என்று சமீபத்தில் ஒரு வழக்கு விசாரணையின்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி எழுப்பினார். இந்தநிலையில் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது ஒரே மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்த்து எல்லோருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.

அவரது பெயர் லலிதா, பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை கமிஷனர் பதவி வகிப்பவர். கல்வித்துறையையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இவரது ஒரே மகள் தருணிகா. பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான லலிதா தனது மகள் தருணிகாவை, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் நேற்று சேர்த்தார்.

பொதுவாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட அரசின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது. பெரிய டாக்டராகவோ, என்ஜினீயராகவோ, ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ ஆக்கி பார்க்கவேண்டும் என்ற ஆசையில் நகரில் உள்ள பெரிய பள்ளிகள் சேர்ப்பார்கள்.

ஆனால் அரசு அதிகாரியாக இருந்தபோதிலும் எப்படி தன் மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் உதித்தது? என்பது குறித்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா, ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

‘ஏதாவது மாற்றத்தை கொண்டு வர விரும்பினால், நீ அதை உண்டாக்கி காட்டு’, என்ற பழமொழி உண்டு. என்னை பொறுத்தவரை சமுதாயத்திலும் ஒரு மாற்றம் வரவேண்டும். அதை நான் பின்பற்றியிருப்பதாலேயே எனது மகளை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்து இருக்கிறேன். இதுதான் எனது ஆசையாகவும் இருந்தது.

மாநகராட்சி பள்ளிகள் தற்போது நல்ல நிலையில் செயல்பட்டு வருகின்றன. தகுதியான, திறமையான ஆசிரியர்கள் இங்கு உள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் தரம் வாய்ந்ததாகவே மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இன்றைய தினம் என் பிள்ளையை மாநகராட்சி பள்ளியில் சேர்த்து இருக்கிறேன். அவள் நிச்சயம் இங்கு கல்வி கற்று சிறந்த நிலையை அடைவாள் என்பதில் உயரிய நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னை பின்பற்றி மற்றவர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கவேண்டும். மாநகராட்சி பள்ளிகளின் தரமும் உயரவேண்டும் என்பது தான் என் விருப்பம்.

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை துணை கமிஷனராக கடந்த 2013 முதல் 2014-ம் ஆண்டு வரை பணியாற்றி இருக்கிறேன். அப்போதே ‘என் வயிற்றில் வளரும் குழந்தையை நிச்சயம் மாநகராட்சி பள்ளியில் சேர்க்க வேண்டும்’, என்று நினைத்தேன். இப்போது மாநகராட்சி வருவாய் மற்றும் நிதித்துறை கமிஷனராக இருக்கும்போதே நினைத்ததை செயல்படுத்தி உள்ளேன்.

எனதுகணவர் சுமந்த் மற்றும் எனது பெற்றோர் ராஜேந்திரன்-தமிழரசி ஆகியோர் நான் எடுத்த முடிவு சரிதான் என்று அதனை வரவேற்று, எல்லா விதத்திலும் ஊக்கம் அளித்தனர். எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுணையாகவும் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா பெருமிதத்துடன் கூறினார்.


தனதுஒரே மகளை மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் சேர்த்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா, சைதை துரைசாமி நடத்தும் மனித நேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

14/7/17

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்த குழு: செங்கோட்டையன் அறிவிப்பு.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

செங்கோட்டையன் அறிவித்துள் ளார்.சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய திமுக உறுப்பினர் க.பொன்முடி,
‘‘கடந்த 2012-ல் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு முதலில் ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. தங்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் கொடுத்தால்கூட போதும். ஆனால், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.

இதனைவலியுறுத்தி சென்னையில் இன்று (ஜூலை 12) போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்’என்றார்.அவருக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘‘ஊதிய உயர்வு உள்ளிட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்க குழு அமைத்து தீர்வு காணப்படும்’’ என்றார்.

CPS-புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அரசு நியமித்த நிபுணர் குழுவின் நிலை என்ன? : தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி:*

புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அரசு நியமித்த நிபுணர் குழுவின் நிலை குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆய்வுகள் பற்றிய
அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறப்பு திட்ட செயலாக்க துறை முதன்மை செயலாளர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

11-ம் வகுப்பில் பொதுத்தேர்வு வேண்டாம்'... உயர் நீதிமன்றத்தில் மனு!

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அமைச்சர் செங்கோட்டையன் பல மாற்றங்களைத் தற்போது கொண்டுவந்துள்ளார். 'எதிர்வரும் காலங்களில்
பள்ளி கல்வியில் புதிய மாற்றங்கள் எதிர்பார்க்கலாம், எல்லா வகுப்புகளிலும் பாடத்திட்டங்கள் மாறலாம்' எனவும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் 11-ம் வகுப்பையும், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளைப்போல் அரசு பொதுத்தேர்வாக மாற்றியுள்ளார். சுமார் 37 ஆண்டுகளுக்குப் பின், 11-ம் வகுப்பு தேர்வு அரசு தேர்வாக மாறியுள்ளது. அதற்கு முன் 12-ம் வகுப்பு என்பதே இல்லாத சூழ்நிலையில்தான் இருந்துவந்துள்ளது. தற்போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்குப் பின், 11-ம் வகுப்பு தேர்வும் அரசுத் தேர்வாக மாறியுள்ளது.

இதற்கு எதிராக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், "தமிழக அரசு கடந்த மே மாதம் 22-ம் தேதி 11-ம் வகுப்புத் தேர்வும் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என அரசாணையை வெளியிட்டுள்ளது. இது அவசியமற்றது, 10-ம் வகுப்பில் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவதற்காக மாணவர்கள் உறக்கமின்றி கடினமாக உழைக்கின்றனர். அதற்காகத் தனியே டியூசனுக்கும் ஸ்பெஷல் கிளாசுக்கும் செல்கின்றனர். இதே போலவே 12-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண்களைப் பெற இரவு பகலாக கண் விழித்து உழைக்கின்றனர்.

இந்நிலையில், 11-ம் வகுப்பும் பொதுத்தேர்வு என்ற அரசாணையால் மாணவர்களும் அவரது பெற்றோர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவர். 10, 11, 12 ஆகிய 3 ஆண்டுகளும் பொதுத்தேர்வுகளுக்காக தூக்கமின்றி, கடினமாக உழைக்க வேண்டியிருப்பதால், மாணவர்கள் அதிக மன உளைச்சலுக்கும், விரக்தி நிலைக்கும் ஆளாவர். எனவே 11-ம் வகுப்பு தேர்வையும் பொதுத்தேர்வாக நடத்த வழிவகுக்கும் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.


இந்தமனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போட்டிச்சூழல் அதிகமிருக்கும் நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக 11-ம் வகுப்பிலேயே 12-ம் வகுப்பு பாடத்தைத் படித்து மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் 11-ம் வகுப்பு பாடத்தையே படிக்காமல் கடந்து வருகின்றர். இதனால் அதிக மதிப்பெண்களைப் பெற்றபோதிலும் உயர்கல்வி சென்றபின் மாணவர்கள், முதலாம் ஆண்டில் கஷ்டப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல தரப்பு வல்லுநர்களும் தெரிவித்தனர். அதனடிப்படையில், வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஆலோசித்து அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை ஜூலை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

PGTRB :முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விரைவில் 'கீ ஆன்சர்' வாரியதலைவர் தகவல்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்
ஜெகநாதன் தெரிவித்தார்.
அரசுமேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணிகளில் 1,663 காலியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நேரடியாக நிரப்பும் வகை யில் ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளி யிட்டிருந்தது. இத்தேர்வுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 591 பேர் விண்ணப்பித்தனர். எழுத்துத் தேர்வு ஜூலை 2-ம் தேதி நடை பெற இருந்த நிலையில், தேர் வுக்கு 2 நாட்களுக்கு முன்பாக கூடுதலாக 1,712 காலியிடங்கள் சேர்க்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து காலியிடங்களின் எண்ணிக்கை 3,375 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, கடந்த 2-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடந்தது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் தேர் வெழுதினர். தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக பெரும்பாலான தேர்வர்கள் கவலை தெரிவித்தனர். தேர்வு முடிந்த அன்றைய தினமே தனியார் பயிற்சி மையங்கள் இணை யதளத்தில் உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) வெளியிட்டன. ஒருசில கேள்விகளுக்கான விடைகள் சரியாக தெரியாததால் அவற்றுக்கு விடைகள் குறிப் பிடப்படவில்லை. தனியார் பயிற்சி மையங்கள் கீ ஆன்சர் வெளி யிட்டாலும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் கீ ஆன்சர் தான் அதிகாரப்பூர்வமாக ஏற்கப் படும்.

வாரியத் தலைவர் விளக்கம் எனவே, தேர்வெழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் எப்போது கீ ஆன்சரை வெளியிடும்? என்ற ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவருமான (பொறுப்பு) ஜெகநாதனிடம் கேட்டபோது, "முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான கீ ஆன்சரை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு வாரத்தில் கீ ஆன்சர் வெளியிடப்படும்" என்றார்.

JACTO-GEO குழுவில் மேற்கொண்ட முடிவுகள் - பத்திரிக்கை அறிக்கை வெளியீடு



RTE படி ஆசிரியர் மாணவர் விகிதம்



826 அரசு பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் - கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

தமிழகத்தில், 826 அரசு பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால்,
அவற்றில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


அரசு தொடக்க பள்ளிகளில், சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. சில மாவட்டங்களில், மாணவர், ஆசிரியர் விகிதம் குறைவாகவும், சில மாவட்டங்களில், அதிகமாகவும் உள்ளது. இந்த பிரச்னையால், தொடக்கப் பள்ளிகளின் கல்வித் தரம் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், தமிழக பள்ளிகள் செயல்பாட்டை, மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது. இதில், பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டுள்ளன. முக்கியமாக, தமிழகத்தில், 817 தொடக்க பள்ளிகளிலும், ஒன்பது நடுநிலை பள்ளிகளிலும், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுவது தெரிய வந்துள்ளது. இந்த ஒரு ஆசிரியரும், விடுப்பு எடுத்தாலோ அல்லது கல்வித்துறையின் வேறு பணிகளுக்கு சென்றாலோ, பாடம் நடத்த ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.


இதுதொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு, மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், 'ஓர் ஆசிரியர் பள்ளியே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.


ஆனால், தமிழகத்தில் மட்டும், ஓர் ஆசிரியர் பள்ளிகள் இயங்குகின்றன. அங்கு, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை, பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு மாற்றி, கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது

இனி பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் குறை தீர் முறை

GRIEVANCE DAY IN DSE, DEE DIRECTOR OFFICE,DPI CAMPUS"
பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில், குறை தீர் முறை அறிமுகமாகி உள்ளதை, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் வரவேற்று உள்ளனர். சென்னை,
நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர், மெட்ரிக் இயக்குனர் என, பல இயக்குனர்களுக்கு தனியாக அலுவலகங்கள் உள்ளன. 


 அனைத்துக்கும் தலைமை அலுவலகமாக, பள்ளிக்கல்வி இயக்குனரகம் செயல்படுகிறது. மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், இடமாறுதல், ஓய்வூதிய பிரச்னை, பள்ளிகளின் அங்கீகாரம், நலத்திட்ட உதவிகள் என, அனைத்து நடவடிக்கைகளுக்கும், தலைமை அதிகாரியாக, பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்படுகிறார்.

கோரிக்கை : இதனால், ஆசிரியர்கள், ஊழியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆகியோர், பல்வேறு பிரச்னைகளுக்காக, இயக்குனரை சந்தித்து மனு கொடுக்க வருகின்றனர். பின், கோரிக்கை மனு நிலை குறித்து தெரிந்து கொள்ளவும், மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தவும், பல முறை அலையும் நிலை இருந்தது. இதற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் முற்றுப்புள்ளி வைத்து, புதிய முறையை அறிமுகம் செய்துள்ளார்.

இயக்குனர் அலு வலகத்திற்கு வருவோரின், பெயர், முகவரி மற்றும் மொபைல்போன் எண்களும், அவர்களின் கோரிக்கை விபரங்களும், பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு தனி அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.பின், பார்வையாளர் களின் காத்திருப்பு அறைக்கே, இயக்குனர் வந்து குறைகளை கேட்கிறார். மனுவை, உடனே சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி, பதில் அனுப்பும்படி உத்தரவிடுகிறார். கோரிக்கையின் நிலை, அது, சட்டத்துக்கு உட்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பன போன்ற விபரங்களை, மனுதாரர்களுக்கு மொபைல் போனில் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மனு கொடுத்த ஒரு வாரத்திற்குள், மனுதாரர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரக ஊழியர்களே, போனில் தகவல் அளிக்கின்றனர்.


அலைச்சல் குறைவு : கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், அவர்கள் எந்த துறை அதிகாரியை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்து, ஆசிரியர்களும், தனியார் பள்ளி நிர்வாகிகளும் கூறுகையில், 'இயக்குனரகத்தின் புதிய முறை, எங்களின் அலைச்சலை குறைத்துள்ளது. 'எங்களின் கோரிக்கையின் நிலை என்ன; அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதையும், தெரிந்து கொள்ள முடிகிறது' என்றனர்.

CPS : புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் : அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை, அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடும்,'' என, மாநிலத் தலைவர் சுப்பிரமணியன்
தெரிவித்தார்.


 மதுரையில் அவர் கூறியதாவது: ஏழாவது சம்பளக் கமிஷனை அமைக்க வேண்டும். இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, ஜாக்டோ ஜியோ சார்பில் ஜூலை 18 ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆக., 5 ம் தேதி சென்னையில் பேரணி நடக்கிறது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்பர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை 2003 ல் அமல்படுத்தியது முதல் 4.44 லட்சம் ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பிடித்தம் செய்த தொகை மற்றும் அரசு பங்களிப்பு 14 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது என தெரியவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது எனில் மத்திய அரசின் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினராக வேண்டும். ஆனால் இதுவரை மாநில அரசு அதில் இணையவில்லை. ஏற்கனவே இத்திட்டம் சாத்தியப்படாது என கைவிடப்பட்டது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட்ட ஆயிரம் ஊழியர்கள் இறந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே புதிய

ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை, அரசு ஊழியர்கள் போராட்டம் தொடரும், என்றார்.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிக்க சலுகை: அமைச்சர்

கடந்த, 2011 முதல், 2015 வரை, வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தவற விட்டவர்கள், மீண்டும் அதை புதுப்பிக்க சலுகை வழங்கப்படும்,'' என,
தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.


 சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:ராணுவ ஆள் சேர்ப்புக்கான தேர்வுகளில் பங்கேற்பதற்கான பயிற்சி, 2,000 இளைஞர்களுக்கு, இரண்டு கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள, 385 ஊராட்சி ஒன்றியங்களிலும், ஆண்டுக்கு இரண்டு முறை திறன் பயிற்சிக்கான முகாம்கள் நடத்தப்படும்; இதற்காக, 77 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள், திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்கும் நிறுவனங்கள் குறித்த விபரங்களை, இளைஞர்கள் அறிந்து கொள்வதற்காக, நான்கு லட்சம் ரூபாயில், 'மொபைல் ஆப்' உருவாக்கப்படும்.

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின், சமூக பாதுகாப்பு திட்ட பயன்களை, வெளி மாநில தொழிலாளர்களும் பெறுவதை உறுதி செய்யும் வகையில், 26 லட்சம் ரூபாய் செலவில், 254 கள அலுவலர்களை பயன்படுத்தி, அவர்கள் பணிபுரியும் இடங்களில் பதிவு மேற்கொள்ளப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2011 முதல், 2015 வரை, பதிவினை புதுப்பிக்க தவறிய, இரண்டு லட்சம் பேருக்கு, சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர்

தெரிவித்தார்.

சாதனை மாணவர் விருது விண்ணப்பம் வரவேற்பு

மதுரை பாரதி யுவ கேந்திரா நிறுவனர் நெல்லை பாலு தெரிவித்துள்ளதாவது:
இவ்வமைப்பு சார்பில் இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூகப் பணி, பரதநாட்டியம், பேச்சு, கவிதை உட்பட அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும்
எல்.கே.ஜி., -- பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு 'யுவஸ்ரீ கலா பாரதி' விருதும், கல்லுாரி மாணவர்களுக்கு 'சுவாமி விவேகானந்தர்' விருதும் மாவட்டம் தோறும் வழங்கப்படுகின்றன. 

பரிசு பெற்றதற்கான ஆவணங்களுடன் வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் 15 நாட்களுக்குள், 'நிறுவனர், பாரதி யுவ கேந்திரா, ஜி102, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை, 625 016' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். விபரங்களுக்கு 94426 30815 எண்ணில் தொடர்புகொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் தயாரிக்கும் உத்தரவால் ஆசிரியர்கள்அதிருப்தி! பிளஸ் 1 மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

நடப்பாண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், 22ம் தேதி முதல், இடைத்தேர்வு துவங்க உள்ளது. ஆனால், இடைத்தேர்வுக்கான வினாத்தாள்கள், மாவட்ட கல்விக் குழுவால்
தயாரிக்காமல், பள்ளிகளிலேயே தயாரிக்க உத்தரவிட்டு உள்ளதால், ஆசிரியர்கள் அதிருப்தியடைந்து உள்ளனர்.


 தமிழகத்தில், ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு, வேகமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்கள் நடப்பாண்டில் ஏற்பட்டுள்ளன.குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுடன், பிளஸ் 1 மாணவ, மாணவி யருக்கும், நடப்பாண்டு முதல், பொதுத் தேர்வு நடைபெற உள்ளதாக, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

முன்னெப்போதும் இல் லாத நடைமுறை, நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், பிளஸ் 1 வகுப்பு பாடங்களை, மிகுந்த கவனத்துடன் ஆசிரியர்கள் நடத்துகின்றனர்.இந்நிலையில், பொதுத் தேர்வுக்கு தயாராகும், பத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, ஜூலை 22 - 31 வரை, முதல் இடைத்தேர்வு நடைபெற உள்ளதாக, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்து உள்ளது.

முதல் இடைத்தேர்வு அறிவிப்பு குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், பிளஸ் 1 வகுப்பிற்கு, அந்தந்த பள்ளிகளிலேயே இடைத்தேர்வுக்கான வினாத்தாள்களை தயார் செய்ய வேண்டும் என, தெரிவித்து உள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள்கள், தலைமைஆசிரியர் தலைமையிலான கல்விக் குழு தயாரிக்க உள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சுற்றறிக்கை வந்ததில் இருந்து, ஆசிரியர்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சீரான கேள்வி

கடந்த ஆண்டு போல இல்லாமல், பிளஸ் 1 வகுப்பிற்கும் நடப்பாண்டு முதல் பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், பள்ளிகளிலேயே வினாத்தாள் தயாரிப்பது சரியாக இருக்குமா என, ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.'நீட்' தேர்வு இனி வரும் காலங்களில் தொடர்ந்து நடைபெறும் சூழலில், அதற்கேற்றாற் போல, மாணவர்களை தயார் செய்ய வேண்டும். அதற்காக, சீரான, ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தேவைப்படுகின்றன என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

வேறுபாடுகள்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள்கள், மாவட்ட கல்விக் குழு தயாரிப்பதும், பிளஸ் 1 வினாத்தாள் பள்ளிகளிலேயே தயாரிப்பதும், மாணவர்களின் கல்வியை பாதிக்க செய்யும் என, அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.மற்ற வகுப்புகளுக்கு தயார் செய்வது போல், பிளஸ் 1 வகுப்பிற்கும், மாவட்ட கல்விக் குழுவே வினாத்தாள்களை தயார் செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பள்ளி திறந்தது முதல், இன்று வரை நடைபெற்ற பாடங்களிடையே, ஒவ்வொரு பள்ளிக்கும் வேறுபாடுகள் உள்ளன. அவை, மாணவர்களின் இடைத்தேர்வில் எதிரொலிக்கும். சில பள்ளிகள் கூடுதல் எண்ணிக்கையில் பாடம் நடத்தியிருப்பர்; சில பள்ளிகளில் இடைத்தேர்வுக்கு தேவையான பாடங்களை மட்டும் நடத்தியிருப்பர்.எனவே, பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, பள்ளிகளிலேயே வினாத்தாள்கள் தயாரிக்கும் முடிவை மாற்றி, இயக்குனகரத்திலிருந்து கேள்வித்தாள் வடிவமைப்பை, முதன்மை கல்வி அலுவலகம் பெற வேண்டும் என, அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


'புளூ பிரின்ட்' முறை தற்போது இல்லை. மேலும், கேள்வித்தாள் அமைப்பு இன்னும் எங்களுக்கு வரவில்லை. 10 மற்றும் பிளஸ் 2க்கு ஏற்கனவே வினாத்தாள் அமைப்பு உள்ளது. அது போல, ஜூலை வரை, பிளஸ் 1 வகுப்பிற்கு சேர்க்கை நடைபெறும்.மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் நடத்தியிருக்கும் பாடங்களின் எண்ணிக்கை மாறுபடும். எனவே, பள்ளிகளிலேயே வினாத்தாள் தயாரிக்க கூறியுள்ளோம். இதில் எந்த தவறுமில்லை.திருவளர்ச்செல்விமுதன்மை கல்வி அலுவலர், காஞ்சிபுரம்

பாலிடெக்னிக் ஆசிரியர் பணி தேர்வு நடக்குமா? : டி.ஆர்.பி., மவுனத்தால் பட்டதாரிகள் குழப்பம்

அரசுபாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பதவிக்கான அரசாணையை,
சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த தேர்வு நடக்குமா என, பட்டதாரிகள் குழப்பம்
அடைந்துள்ளனர்.
'அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், ௧,௦௫௮ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, ஆக., ௧௩ல் எழுத்து தேர்வு நடக்கும்' என, டி.ஆர்.பி., அறிவித்திருந்தது. தேர்வுக்கு, ஜூன், ௧௭ முதல் விண்ணப்பமும் பெறப்பட்டது. ஆனால், தேர்வு நடத்துவதற்கான அரசாணையில் குழப்பம் உள்ளதாக, பட்டதாரிகள் சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், 'பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிப்படி, முதுநிலை பட்டதாரிகளையே நியமிக்க வேண்டும்.
'டி.ஆர்.பி., அறிவித்த தேர்வுக்கு, பி.இ., என்ற இளநிலை இன்ஜினியரிங் முடித்தவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்' என, கூறப்பட்டுள்ளது.இதை ஏற்று, தமிழக அரசின் அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதன்பின், டி.ஆர்.பி., எந்த தகவலையும்
வெளியிடவில்லை. அரசாணை ரத்தால், எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டதா; புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டு, தேர்வு நடத்தப்படுமா; அரசு மேல்முறையீடு செய்துள்ளதா என, தெரியாமல், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், 'மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., - தமிழக அரசின், டி.என்.பி.எஸ்.சி., அமைப்பும், போட்டி தேர்வு நடத்துவதில், வெளிப்படையான முறைகளை கையாள்கின்றன. 'அதே போல, டி.ஆர்.பி.,யும், விண்ணப்பதாரர்களுக்கு உரிய தகவல்களை, இணையதளத்திலாவது, தாமதமின்றி வெளியிட வேண்டும். தேர்வர்களை குழப்பத்தில் தள்ளக்கூடாது' என்றனர்.

அரசு பள்ளிகளுக்கு புதிய டைம் டேபிள்

ஓய்வூதியத் திட்ட வல்லுநர் குழு செயல்பாடு -அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு





12/7/17

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை... சாம்சங் நிறுவனத்துடன் கைகோத்த எடப்பாடி அரசு!-- அஷ்வினி சிவலிங்கம்

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் பள்ளிக் கல்வித்
துறை திட்டங்களைப் பற்றிய அறிவிப்பை ஜூன் மாதம் சட்டப்பேரவையில் வெளியிட்டார். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (HitechLabs) ஏற்படுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தில் அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் அறிவிப்பைத் தொடர்ந்து அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சாம்சங் நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது. முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி 20 மேல்நிலை பள்ளிகள் மற்றும் 8 நடுநிலை பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், வேலுமணி, சம்பத் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தில் முதன்முறையாக யோகா ஆசிரியர் தகுதித் தேர்வு-ஆகஸ்ட் 26ம் தேதி நடைபெறுகிறது.

உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு

ஜாக்டோ ஜியோவிற்கு இடைநிலை ஆசிரியர்களின் வேண்டுதல்:



அரசு ஊழியர்களும்ஆசிரியர்களும்ஒன்றிணைந்திருக்கும்இம்மாபெரும் வரலாற்றைநாங்கள் மெய்சிலிர்ப்போடுபார்க்கிறோம்.

மிக நம்பிக்கையாகஉணர்கிறோம்.


அரசின் கவனம் இப்போதே ஜாக்டோ ஜியோ-  வைநோக்கி திரும்பி இருக்கிறது.



அரசு இதையும் அலட்சியம்காட்டினால்

தமிழ்நாட்டின் அரசுஅலுவல்கள்ஒட்டுமொத்தமாய்முடங்கிப்போய் தமிழ்நாடேஅல்லோலகல்லோலப்படவிருக்கிறது.

இதுவெல்லாம் ஜாக்டோஜியோ- வின் கடந்த காலசாதனைகளை வைத்துநிச்சயம் நடக்கும் எனநம்பலாம். இம்மாபெரும் அமைப்பான.

ஜாக்டோ ஜியோமுத்தாய்ப்பான மூன்றுகோரிக்கைகளை முன்வைக்கிறது.


1) பழைய பென்ஷனைஅமல்படுத்த வேண்டும்.


2) உடனடியாக ஏழாவதுஊதிய குழுவைஅமல்படுத்துவது

( தமிழ்கத்தில் எட்டாவது)


3) 20 சதவீதம் இடைக்காலநிவாரணம்


அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களின் அடிப்படைவாழ்வாதாரத் தேவைகளாககருதி

இம்மூன்றுகோரிக்கைகளையும் மிக கவனமாக தேர்ந்தெடுத்துமுன் வைத்திருக்கிறது.

இந்த முத்தாய்ப்புகோரிக்கைகளுக்கு மிகப்பெரிய சலியூட்டை
 ஜாக்டோ- ஜியோ விற்கு ஆசிரியர்கள் சார்பாகவைக்கிறோம்.

இன்னுமொருகோரிக்கையை மிக சங்கடத்தோடு  மன்றாடிகெஞ்சி ஜாக்டோஜியோவிடம் கேட்கிறோம்.


இம்மூன்று கோரிக்கைகளை அரசு உறுதி செய்தி விட்டால்தயவுசெய்து

இடைநிலை ஆசிரியர்கள் 8ஆண்டுகளாக புலம்பிக்கொண்டிருக்கும் ஒரேகோரிக்கையான ஊதியமுரண்பாடு கலைதல் ( 2006 பிறகான இடைநிலைஆசிரியர்களுக்கு மாதம் 13000 இழப்பு)

என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்..


* ஆசிரியர்கள் என்றும் நன்றி மறவாமல் இருப்போம்..*




நம்பிக்கையோடும்ஏக்கத்தோடும் இடைநிலைஆசிரியர்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சலுகை தொகை ரத்து: மத்திய அரசு அதிரடி!!!

புதுடெல்லி: குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு வழங்கப்படும்

சலுகைப்படியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய நிதி ஆணையத்தின் 7வது ஊதிய அறிக்கையை ஆய்வு செய்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை திருத்தி அமைப்பதற்காக நிதித்துறை செயலாளர் அசோக் லவசா தலைமையில் சலுகைகள் கமிட்டியை (சிஓஏ) அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. மேற்படி  கமிட்டியினர், 196 சலுகைகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 27ல் அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதில், மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த ‘அளவான, குடும்பம், திட்டமிட்ட குடும்பம்’ எனும் மத்திய அரசின் கொள்கை நிறைவேறி இருப்பதால், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகையை ரத்து செய்து விடலாம் எனவும் சிஓஏ பரிந்துரை செய்திருந்தது. சிஓஏ பரிந்துரைகள் மீது விவாதங்கள் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஜூன் மாதம் 28ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. 6ம் தேதி அன்று அரசு முறைப்படியான அறிவிக்கை வெளியானது. அறிவிக்கைப்படி, குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு, பணி அந்தஸ்துக்கு ஏற்றபடி வழங்கப்பட்டு வந்த ரூ.210 முதல் ரூ.1,000 வரையிலான சலுகை ரத்து செய்யப்படுகிறது.

கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் புதிய நடைமுறை!!!

தற்போதைய நடைமுறையில் மாநிலங்கள் ஒவ்வொன்றும் கீழ்க்கோர்ட்டு
களுக்கான நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டுகளுக்கு அளித்து உள்ளன.

இந்த நிலையில் மத்திய நீதித்துறை கடந்த ஏப்ரல் 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், கீழ்க்கோர்ட்டுகளுக்கு மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை என்ற புதிய நடைமுறை மூலம் நீதிபதிகளை நியமிப்பது பற்றி உத்தேசித்து வருவதாக கடிதம் அனுப்பியது.

இந்த கடிதம் கிடைத்ததும் சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து, இதை ஒரு வழக்காக பதிவு செய்து, இது குறித்து விசாரிப்பதற்கு 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வை நியமித்தது.
கடந்த மே 9–ந்தேதியன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின் போது, இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு கோரி அனைத்து மாநில அரசுகள் மற்றும் ஐகோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இதுவரை 3 மாநிலங்கள் மட்டுமே பதில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், 21 ஐகோர்ட்டுகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து இருப்பதாகவும் கூறினார்.
காஷ்மீர், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டுகள் சிறிது கால அவகாசம் கோரி உள்ளதாக தெரிவித்த அவர், குஜராத், கேரளா, ஆந்திர பிரதேச ஐகோர்ட்டுகள் இந்த யோசனைக்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பதாகவும் கூறினார். இந்த ஐகோர்ட்டுகளின் பதிவாளர்கள் இது தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், மையப்படுத்தப்பட்ட இந்த புதிய நடைமுறையை அறிமுகம் செய்யும் நோக்கில் மட்டுமே முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும், கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மாநிலங்களில் தற்போது உள்ள வழிமுறைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது என்றும், இட ஒதுக்கீடு தொடர்பான கொள்கையிலும் தற்போது உள்ள நடைமுறையே பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார்கள்.
வருங்காலங்களில் கீழ்க்கோர்ட்டுகளில் நீதிபதிகளின் நியமனம் சீரான முறையில் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கே மையப்படுத்தப்பட்ட தேர்வு நடைமுறையை அமல்படுத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்றும் அப்போது அவர்கள் கூறினார்கள்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 28–ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்

மத்திய அரசு ஊழியர்களின் சிறப்பு படி ரத்தாகிறது!!!

மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தேவையற்ற
சிறப்பு படிகளை ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. படிகள் தொடர்பான மத்திய குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று, இந்த நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இது குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரையில், அவர்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு படிகள் குறித்தும் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. இதில், படிகள் தொடர்பான மத்திய குழு அளித்த பரிந்துரைகளில் சில ஏற்கப்பட்டுள்ளன; சில நிராகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கேபினட் செயலர் மற்றும் அதற்கு இணையான அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும், 10 ஆயிரம் ரூபாய் கேளிக்கை படியை நிறுத்தவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், அரசு ஊழியர்களுக்கு தற்போது சிறப்பு படி வழங்கப்படுகிறது; இதை ரத்து செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. குறிப்பிட்ட துறை ஊழியர்களுக்கு மட்டும், முடி திருத்தம் செய்வதற்கான படி நீட்டிக்கப்படும். அதே போல், அரசின் முக்கிய ரகசிய ஆவணங்களை கையாளும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு படி, இனி வழங்கப்படாது. ரயில்வே மற்றும் தபால் ஊழியர்களுக்கு, மாதம், 90 ரூபாய் சைக்கிள் படி வழங்கப்படுகிறது. இதை நிறுத்த பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அதை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. அந்த படி, இனி, மாதம், 180 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இது போல், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும், 196 படிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் சில நீக்கப்பட்டுள்ளன; சில படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இது குறித்த, அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்

இலவச சாப்பாட்டுக்கு ஆசைப்பட்ட மாணவனுக்கு ஏற்பட்ட சோதனை

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்ற பழமொழிக்கு ஏற்ப, இலவச உணவுக்கு ஆசைப்ப
ட்டு, பர்கர் சாப்பிடும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டதுடன், திரவ உணவை மட்டும் எடுத்துக் கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். டில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இங்கு, ராஜோரி கார்டன் பகுதியில் உள்ள ஒரு உணவகம், 'சில்லி பர்கர்' எனப்படும், மிளகாய் பர்கரை சாப்பிடும் போட்டியை நடத்தியது. போட்டியில் வெற்றி பெறுபவருக்கு, அடுத்த ஒரு மாதத்திற்கு இலவச உணவு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.இந்தப் போட்டியில், டில்லி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் கவுரவ் குப்தா, அதிக பர்கர்களை சாப்பிட்டு வெற்றி பெற்றார். அடுத்த நாள், கவுரவ், ரத்த வாந்தி எடுத்ததால், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோதித்த டாக்டர் தீப் கோயல், அதிக காரம் காரணமாக, வயிற்றின் உட்புறச் சுவர் கிழிந்து இருப்பதாகவும், கிழிந்த பகுதியை உடனே அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து, கவுரவின் வயிற்றில் கிழிந்த பகுதிகள் அகற்றப்பட்டன. தொடர் சிகிச்சையுடன், திரவ உணவு மட்டும் எடுத்துக் கொள்ளும்படி டாக்டர் அறிவுறுத்தினார்

ஆர்.டி.ஐ.,யில் தவறான தகவல் : 5 கிலோ 'பேப்பர் வேஸ்ட்

தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காமல்,


தவறான ஆவணங்களை அனுப்பி, ஐந்து கிலோ பேப்பரை, உணவு பாதுகாப்புத்துறை வீணாக்கி உள்ளது. சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் காசிமயன். இவர், 2016 ஜூலையில், உணவு பாதுகாப்பு துறையில், ஏழு தகவல்கள் கேட்டிருந்தார். அவர் அனுப்பிய கடிதம், பல்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டு, சமீபத்தில் அவருக்கு பதில் வந்துள்ளது. அதில், மூன்று கேள்விகளுக்கு மட்டுமே பதில் தரப்பட்டுள்ளது. மற்ற நான்கு கேள்விகளுக்கு, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, துறைகளுக்கிடையில் நடந்த கடித பரிமாற்றங்களின் நகல்களை அனுப்பி உள்ளனர். நகல்களின் எடை, ஐந்து கிலோ. மனுதாரரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை, ஐந்து கிலோ பேப்பரை வீணடித்ததுடன், பொது மக்களின் பணத்தையும் விரயம் செய்துள்ளது. உணவு பாதுகாப்பு துறையின் இந்த அலட்சிய போக்கு, ஆர்.டி.ஐ., ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது

கொசு மருந்து அடிச்சு வெகு நாளாச்சு... எங்கெங்கு காணினும் டெங்கு; யாருக்கு பெரும் பங்கு? கோவையில் பலி எண்ணிக்கை ஏழாச்சு

கோவையில் 'டெங்கு' வேகமாகப் பரவி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை 
மேற்கொள்வதில், அரசுத்துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பதே, முக்கியக் காரணமாகவுள்ளது. பொறுப்புகளை அதிகாரிகள் தட்டிக் கழிப்பதால், மாவட்டத்தில் 'டெங்கு' பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.பருவமழைக் காலங்களில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், நோய்கள் பாதிப்பு வருவது வழக்கம்; கடந்த சில ஆண்டுகளாக, தென்மேற்கு பருவமழை காலத்தில், 'டெங்கு' பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்த ஆண்டில், ஜூன் 3ல் பருவமழை துவங்கியது. கோவை மாவட்டத்தில், நகர்ப்பகுதியில் பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லாவிட்டாலும், புறநகரில் ஆங்காங்கே விட்டு, விட்டுப் பெய்கிறது.காலங்காத்தாலே கடி!மாநகரம் முழுவதும், காலை மற்றும் மாலை நேரங்களில், குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. இரவில் குளிர் வாட்டுகிறது. பகல் நேரங்களில் சீரான வெப்பநிலை பதிவாகிறது. மாறுபட்ட பருவநிலை காணப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், உடல் நல பாதிப்புக்கு உள்ளாவது அதிகரித்துள்ளது. அதையும் விட, இந்த சீதோஷ்ண நிலையால், கொசுக்கள் உற்பத்தி, பல மடங்கு பெருகியுள்ளது.குறிப்பாக, 'டெங்கு' பரப்பும் 'டைகர்' கொசுக்கள், நகரில் லட்சக்கணக்கில் உற்பத்தியாகியுள்ளன. முன்பெல்லாம், காலை 11:00 மணியிலிருந்து மாலை 3:00 மணிக்குள் மட்டுமே, வலம் வரும் இந்த கொசுக்கள், சமீபகாலமாக காலையிலேயே வீடுகளுக்குள் படையெடுத்து விடுகின்றன. கலெக்டர் பங்களாவும், சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகமும் உள்ள பந்தயச்சாலையில், கொசுத்தொல்லை அதிகம்.குடிநீர் வினியோகம், மாதமிருமுறை, மூன்று முறை என குறைந்துள்ளதால், பெரும்பாலான வீடுகளில் குடிநீரை தொட்டிகளில் சேமித்து வைத்து, பயன்படுத்துகின்றனர். இதுவே, கொசுக்கள் உற்பத்தியாக, முக்கிய காரணமாகி உள்ளது. மாவட்டத்தில், இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், 'டெங்கு' காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்; இப்போதும் ஏராளமானோர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.நடப்பாண்டில் இதுவரை, ஏழு பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர, வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி, ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். கொசு மருந்து அடிப்பது, விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்வதில், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களுக்கு இடையிலும் ஒருங்கிணைப்பு இல்லை; சுகாதாரத் துறை சுத்தமாக முடங்கிக் கிடப்பதாகத் தெரிகிறது. நகரில், கொசு மருந்து அடித்தே, பல மாதங்களாகி விட்டது.களப்பணியே அவசியம்!'டெங்கு' பாதிப்பு, மிகவும் அதிகரித்து வரும் நிலையில், இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது; கமிஷனர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். துணை கமிஷனர் காந்திமதி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தனர். மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.கொசுப்புழு ஒழிப்பு, மருந்து அடிப்பது, தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பழைய பொருட்களை அகற்றுவது போன்ற பணிகளுடன், டெங்கு பாதித்த இடங்களில் கல்லுாரி மாணவ, மாணவியரை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; பள்ளி, கல்லுாரிகள், அலுவலகங்கள், வணிக, வளாகங்கள், குடியிருப்புகளில், கொசு உற்பத்தி காரணிகள் இருக்கிறதா என தொடர்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.தொட்டிகளில் தண்ணீரை அகற்றி, 'பிளீச்சிங்' பவுடரால் சுத்தம் செய்ய வேண்டும். அதிகமான தண்ணீர் இருந்தால், ஆயில் பால் அல்லது மீன் குஞ்சு விட வேண்டும். கொசுப்புழு உருவாகாமல் தடுக்க, 'அபேட்' மருந்து ஊற்ற வேண்டும். கொசுப்புகை மருந்து அடிக்க வேண்டும். பணிகளில் சுணக்கம் காட்டினாலோ அல்லது டெங்கு பாதிப்பு இருந்தாலோ, சம்பந்தப்பட்ட வார்டு சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டது.'டெங்கு' ஒழிப்பு பற்றி, மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்ததுடன், களம் இறங்கிப்பணியாற்றினால் பாராட்டலாம்; இதேபோல, மாவட்ட நிர்வாகம், மற்ற உள்ளாட்சி அமைப்புகளையும், சுகாதாரத்துறையையும் ஒருங்கிணைத்து, 'டெங்கு' தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது அவசியம். இதைச் செய்யாதபட்சத்தில், இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அதிகாரிகள் பொறுப்பு ஏற்காமல் இருக்கலாம்; அரசு பொறுப்பேற்றே தீர வேண்டும்

நம்பிக்கை ஓட்டெடுப்பு வழக்கு: ஆக.,9க்கு ஒத்திவைப்பு

புதுடில்லி:முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு வழக்கு ஆகஸ்ட் 
9க்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், சுப்ரீம் கோர்ட்டிற்கு சட்ட உதவி செய்ய மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த மாபா.பாண்டியராஜன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சட்ட உதவி வழங்குமாறு அட்டர்னி ஜெனரலை சுப்ரீம் கோர்ட் கேட்டு கொண்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியலமைப்பு சட்டத்தின், 212வது பிரிவின் கீழ், சட்டசபை தொடர்பான விவகாரத்தில் கோர்ட் தலையிடக்கூடாது என மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதாடினார். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டிற்கு சட்ட உதவி செய்ய மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் நியமிக்கப்பட்டார். அவர் கால அவகாசம் கோரியதை தொடர்ந்து, வழக்கு ஆகஸ்ட் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

மூவாயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் !

தமிழக அரசு இயந்திரமே ஸ்தம்பித்து கிடக்கிறது. எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படாம
,துரு பிடிச்சு கிடக்கு" என்ற விமர்சனம் அனைத்து கட்சிகளாலும் முன் வைக்கப்படுகிறது. ஆனால்,அவர்களே கூட மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு தமிழக அரசின் ஒரே ஒரு துறை மட்டும் சிறப்பாக செயல்படுகிறது. அது பள்ளிக் கல்வித்துறை. பல்வேறு அதிரடி,முன்மாதிரி திட்டங்களை தொடர்ச்சியாக அறிவித்து, பள்ளிக் கல்வித்துறை வண்டியை முன்னேற்ற பாதையில் உருள வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம்,அந்த துறையின் அமைச்சர் செங்கோட்டையனும்,அந்த துறையின் செயலாளர் ப.உதயச்சந்திரனும்தான்.
உதயச்சந்திரனின் அட்ராசக்கை ரக திட்டங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பேதும் சொல்லாமல்,ஒ.கே சொல்ல, அந்த துறையில் பல அதிரடி மாற்றங்கள் கடைப்பரப்பப்படுகிறது.
இதோ, அடுத்ததாக தமிழக அளவில் உள்ள மூவாயிரம் அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்ரூம்கள் அமைக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, தன்னார்வத்தில் தமிழகம் முழுக்க ஸ்பான்ஸ்கர்கள் மூலமாக நிதி திரட்டி அத்தகைய ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும், 25 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை நேற்று தலைமைச் செயலகத்திற்கு அழைத்த ப,உதயச்சந்திரனை வைத்து தமிழ்நாடு முழுக்க மூவாயிரம் அரசு பள்ளிகளை ரெஃபர் பண்ண சொல்லி அறிவுறுத்தி, அனுப்பி இருக்கிறார்.
'ப.உதயசந்திரன், தலைமை ஆசிரியர்கள்' சந்திப்பு நிகழ்ச்சிக்கு சென்று வந்த நமக்கு தெரிந்த தலைமை ஆசிரியர் ஒருவரிடம் பேசினோம்.
"கடந்த வாரமே தமிழ்நாடு முழுக்க தன்னார்வத்தில் தங்கள் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களை சிறப்பாக செய்து வரும் 25 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை 8 ம் தேதி சென்னைக்கு வர சொல்லி சர்க்குலர் வந்தது. நாங்களும் ஆர்வமா நேற்று போனோம். அப்போது, எங்க ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து,பாராட்டிய ப,உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்,'உங்க செயல்பாடுகள் உண்மையில் போற்றத்தக்கது. அரசு செய்ய வேண்டிய பணிகளை நீங்களே செய்வதற்கு,உங்களுக்கு இயல்பிலேயே பெரிய அர்ப்பணிப்பு திறன் இருக்க வேண்டும். அந்தத் திறன் உங்களுக்கு அமைந்ததை நான் மனதாரப் பாராட்டுகிறேன். நீங்கள் தனிபட்ட முறையில் உங்கள் பள்ளிகளில் செயல்படுத்திய ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் ஏற்பாட்டை இப்போது அரசே செய்யப் போகிறது. தமிழகம் முழுக்க மூவாயிரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் முதல்கட்டமா அமைக்க போறோம். ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு லட்ச ரூபாய் செலவில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்கப்பட இருக்கு. உங்களை அழைத்ததற்கு காரணம், உங்க மூலமாகதான் அந்த மூவாயிரம் பள்ளிகளை செலக்ட் செய்ய போறோம்.
அதாவது, அரசு இவ்வளவு செலவு பண்ணி ஸ்மார்ட் கிளாஸ்ரூம்கள் அமைத்து கொடுத்தாலும், அதை பயன்படுத்தாமல் பல பள்ளிகளில் வீணடித்துவிட கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அதோடு, பல பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்கும் அளவிற்கு அடிப்படை கட்டமைப்பும் இருக்காது. நாங்களே தமிழகம் முழுக்க போய் மூவாயிரம் பள்ளிகளை தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்படகூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. அதோடு,எங்கள் துறையில் கீழ்நிலையில் உள்ளவர்கள் பள்ளிகள் தேர்வு செய்யும் விசயத்தில் விருப்பு வெறுப்போடு செயல்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அதனால், உண்மையான அக்கறையோடு கல்வி போதிக்கும் விசயத்தில் செயல்படும் உங்க மூலமா அந்த பள்ளிகளை தேர்ந்தெடுக்க நினைக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் உங்க மாவட்டங்களில் சிறப்பாக செயல்படும், கல்வி போதிப்பதில் அர்ப்பணிப்போடு செயல்படும், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அற்ற மூவாயிரம் பள்ளிகளை தேர்ந்தெடுத்து பதினைந்து நாள்களுக்குள் எனக்கு தெரிவியுங்கள். அரசு பள்ளிகளை நாம் அனைவரும் சேர்ந்து அடுத்த லெவலுக்கு கொண்டு போவோம்'ன்னு சொல்ல,எங்களுக்கு மகிழ்ச்சி தாங்கலை. 'கண்டிப்பா தேர்ந்தெடுத்து சொல்றோம் சார். எங்களுக்கு ஸ்பான்ஸர்ஸ் கிடைச்சதால, எங்களால் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்க முடிஞ்சது. ஆனால், எங்களை போலவே ஆர்வமா செயல்பட மனமிருந்தும் நிதியுதவி கிடைக்காமல் பல பள்ளி ஆசிரியர்கள் தமிழகம் முழுக்க கைகளை பிசைஞ்சுகிட்டு நிற்கிறாங்க சார். அவங்களுக்கு இப்படி அரசே ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைச்சு கொடுத்தா, தங்கள் பள்ளியை சிறப்பாக்குவாங்க சார். தகுதியான பள்ளிகளை தேர்ந்தெடுத்து சொல்றோம் சார்' என்று சொல்லிவிட்டு வந்தோம்" என்றார்கள்.
இதுசம்மந்தமான, பிராசஸ் நடந்த திட்ட அப்ரூவலுக்காக அரசின் பார்வைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். அவர்கள் ஒ.கே செய்தால், தமிழகம் முழுக்க மூவாயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்கப்பட்ட

உலகின் மிகச்சிறிய குட்டி நாடு - மக்கள் தொகை 11 பேர்

உலகிலேயே மிகச் சிறிய ராஜியம் எது? அதன் அரசர் யார் என்று தெரியுமா? உலகின் சிறிய


ராஜியத்தின் மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். இந்த ராஜா ஓர் உணவு விடுதியை நடத்துகிறார். சாதாரண கால்சட்டை அணிந்து, ரப்பர் செருப்பணிந்து வாழ்ந்துவரும் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டது தவோலாரா.

இத்தாலியின் சர்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைகடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா. இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவே ஐந்து சதுர கிலோமீட்டர்தான்.

ராஜாவின் பெயர் எந்தோனியோ பர்த்லியோனி. தவோலாராக்கு சென்றால் அரசரை பார்க்க அரசவைக்குச் செல்லவேண்டாம். எந்தவித முன்னனுமதியும் இன்றி அரசரை சுலபமாகவே பார்த்துவிடலாம். ஆடம்பரமில்லாமல் இயல்பாக தோற்றமளிக்கும் அரசரே தீவில் உள்ள ஒரேயொரு உணவு விடுதிக்கும் உரிமையாளர். சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச் சவாரி ஓட்டுபவரும் அவரே.

180வது நிறுவன தினத்தை கொண்டாடும் தவோலாரா ராஜ்ஜியம் மிகச் சிறிய தீவாக இருப்பதால் அதை நாடு என்று சொல்வது வேடிக்கையானதாக தோன்றலாம். ஆனால், அரசர் அந்தோனியோ பர்த்லியோனி தனது ராஜ்ஜியத்தைப் பற்றி பெருமைப்படுகிறார்.

19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் மகாராணி விக்டோரியா, உலக அரசர்கள் அனைவரின் புகைப்படங்களையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக உலகம் முழுவதும் பயணித்த கப்பல், தாவோலாராவிற்கும் சென்று அரசரின் புகைப்படத்தை பெற்றது. அன்றுமுதல் இன்றுவரை இங்கிலாந்தின் பக்கிம்ஹாம் அரண்மனையை அலங்கரிக்கும் புகைப்படங்களில் தவோலாரா அரசரின் புகைப்படமும் ஒன்று.

உலகின் எந்தவொரு நாடும் தவோலாராவை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. தவோலாராவின் அரசர் அந்தோனியோவும் அவரது குடும்பத்தினரும் இத்தாலியில் இருந்து இந்த தீவுக்கு படகு சேவைகளை வழங்குகின்றனர். உலகில் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் தனிச்சிறப்புத்தன்மை கொண்ட ஆடுகளையும், அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு கழுகு இனத்தையும் பார்க்க பெருமளவிலான மக்கள் இங்கு ஆவலுடன் சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றனர்.

தவலோராவின் அரசர் கேட்கிறார் "சிறிய நாடாக இருந்தாலும், எங்கள் முன் விரிந்திருக்கும் மிகப்பெரிய கடல் சாம்ராஜ்ஜியத்தின் கோட்டையாக தவோலாரா திகழ்கிறது. இதைவிடப் பெரிய பேறு வேறென்ன இருக்கமுடியும்?"

''படிப்பது 4 பேர்; பணியாற்றுவதோ 5 பேர்'

தமிழக அரசு கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் இக்காலத்தில்


அரசு தொடக்கப் பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பதால் அரசு நிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரக்கோணம் நகரில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் 4 மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலையில் அவர்களுக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர் என இருவர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என மூவர் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழக அரசு தற்போது கல்வித் துறையில் மிகப் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறது.
மேலும், அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகளவில் இருக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அரக்கோணம் வட்டாரத்தில் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது. மேலும், பல பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கையே இல்லாத நிலையும் காணப்படுகிறது.
அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையில் எம்எல்ஏ அலுவலகத்துக்கு பின்புறம் நகராட்சித் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த காலங்களில் ஆலமரப் பள்ளி என அப்பகுதி பொதுமக்களால் அழைக்கப்பட்ட இப்பள்ளியில் அதிகபட்சமாக 250 மாணவர்கள் படித்த காலமும் உண்டு. 36, 35, 34 ஆகிய வார்டுகள், வெங்கடேசபுரம், சாயிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொடக்க நிலை மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், இப்பள்ளியில் தற்போது 4 மாணவர்கள் மட்டுமே படிக்கும் அவலநிலை உள்ளது.
இப்பள்ளிக்கென இரு வகுப்பறைகள் கொண்ட மூன்று கட்டடங்கள் இருந்தன. தற்போது தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்காக இரு கட்டடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள ஒரு கட்டடத்தின் ஒரு வகுப்பறையில் நகராட்சித் தொடக்கப் பள்ளியும் மற்றொரு அறையில் நகராட்சி உருது பள்ளியும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நகராட்சித் தொடக்கப் பள்ளியில் வருகை பதிவேட்டில் 1 முதல் 5 வரை 10 மாணவர்கள் படிப்பதாகத் தெரிவித்திருந்தாலும் பள்ளிக்கு தினமும் வருவது 4 மாணவர்கள் மட்டுமே. இவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என இரு ஆசிரியர்களும், சத்துணவு மையத்தில் சத்துணவு அமைப்பாளர், சத்துணவு சமையலர், சமையல் உதவியாளர் என மூன்று பேரும் என 5 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பள்ளியில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நலத் துறை நடுநிலைப் பள்ளியில் நூற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதே பள்ளியில் 1 முதல் 8- ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை 50- க்கு மேல் உள்ளது. ஆனால் நகராட்சி தொடக்கப் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுவது ஏன்? என்ற சந்தேகம் உள்ளது.
இதுகுறித்து நகராட்சித் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வராஜிடம் கேட்டபோது, இப்பள்ளிக்கென 34, 35, 36 என 3 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் இருக்கும் பெற்றோர் தங்களது பிள்ளைகளை இதே வார்டில் உள்ள பள்ளியில் மட்டுமே சேர்க்க வேண்டும் என அரசாணையே உள்ளது. ஆனால், அதையும் மீறி மற்ற வார்டுகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த 3 வார்டுகளில் மாணவர்கள் இருந்தும் இப்பள்ளியில் சேராமல் இருப்பதற்கு நாங்கள் காரணமல்ல என்றார்.
இதுகுறித்து அரக்கோணம் வட்டார உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பால்ராஜிடம் கேட்டபோது, அரக்கோணம் வட்டாரத்தில் கடந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5,327 மாணவர்கள் படித்து வந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 5,071 மாணவர்களே உள்ளனர்.
மாணவர் எண்ணிக்கை மற்றும் மாணவர் சேர்க்கை தற்போது பல பள்ளிகளில் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் ஆராயப்படுகின்றன. மேலும் பல ஆங்கிலப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன.
குறிப்பிட்ட அரசு நகராட்சி பள்ளிக்கு அருகிலேயே ஆதிதிராவிடர் நலத் துறை நடுநிலைப் பள்ளி இருப்பதால் மாணவர்கள் இரு இடத்தில் சேர்க்கப்படுகின்றனர். இதனாலேயே நகராட்சித் தொடக்கப் பள்ளியில் சேர்க்கை குறைவாக இருக்கிறது. சேர்க்கை முடிய இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
அருகருகே இரு பள்ளிகள் இருப்பதே சேர்க்கை குறைவுக்கு காரணம் என கல்வி அலுவலர் தெரிவிக்கையில், கல்வித் துறை உடனடி நடவடிக்கை எடுத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

தண் தணா தண் பேக் நிறைவுற்றதும் வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைகளை தொடர என்ன செய்ய வேண்டும் !!

ரிலையன்ஸ் ஜியோ தண் தணா தண் சலுகை இம்மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து ஜியோ தண் தணா தண் சலுகைகளை மாற்றியமைத்து புதிய விலையை ஜியோ அறிவித்துள்ளது*

ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த சம்மர் சர்ப்ரைஸ் சலுகைகள் டிராய் அறிவுறுத்தலின் படி ஜியோ திரும்பப் பெற்றது. எனினும் வாடிக்கையாளர்களுக்கு தண் தணா தண் எனும் சலுகையை அறிவித்தது. தண் தணா தண் சலுகையின் கீழ் வழங்கப்பட்ட 84 நாள் வேலிடிட்டி இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது.


ஏப்ரல் மாதம் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட தண் தணா தண் சலுகைகள் ரூ.309-க்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தண் தணா தண் பேக் நிறைவுற்றதும் வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைகளை தொடர மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

அதன்படி ரூ.309 விலையில் தண் தணா தண் சலுகையில் 84-நாள் வேலிடிட்டி வழங்கப்பட்டது, இதன் வேலிடிட்டி 56-நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் 84 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தின் விலை ரூ.399-ஆக மாற்றப்பட்டுள்ளது.


தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ ரூ.509 திட்டத்தின் வேலிடிட்டி 84-நாட்களில் இருந்து 56-நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. பழைய ரூ.999, ரூ.1999, ரூ.4999 மற்றும் ரூ.9999 திட்டங்களின் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டு அதிக டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோல் ரூ.149 மற்றும் இதர துவக்க திட்டங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

போஸ்ட்பெயிட் திட்டங்களிலும் வேலிடிட்டி மற்றும் டேட்டா நீட்டிக்கப்பட்டுள்ளது.

 ரூ.399 திட்டத்தில் மூன்று மாதங்கள் வேலிடிட்டி மற்றும் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

 இவை அனைத்திற்கும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
நன்றி..மாலைமலா்

பள்ளி முதல்வர் அறையாக மாறிய கழிப்பறை!!!

ம.பி., மாநிலத்தில், அரசு உயர்நிலை பள்ளி கழிப்பறையில், பள்ளி முதல்வர் 
அறை செயல்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

300 பேர் படிக்கும் பள்ளி

ம.பி., மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. சியோனி மாவட்டம், கான்சோர் தாலுகா, பஹாரி கிராமத்தில், அரசு உயர் நிலை பள்ளி உள்ளது. இங்கு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியர் 300 பேர் படிக்கின்றனர். இந்த பள்ளியின் மாணவர்கள் கழிப்பறையில் தான் பள்ளி முதல்வர் அறை செயல்படுகிறது. மாணவர்கள் சிறுநீர் கழிக்க, பள்ளிக்கு வெளியே சென்று திறந்த வெளி பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். சியோன் மாவட்டம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை இணை அமைச்சர் பாகன் சிங் குலஸ்தேவின் மாண்ட்லா லோக்சபா தொகுதிக்குள் உள்ளது.

பள்ளி முதல்வர் பேட்டி

இதுகுறித்து பள்ளி முதல்வர் மணிஷ் மிஸ்ரா கூறியதாவது:ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புக்கு தலா இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. ஆனால், மூன்று வகுப்பறைகள் தான் உள்ளன. எனவே, பள்ளி முதல்வர் அறையை வகுப்பறையாக மாற்றி விட்டோம். அத்துடன் ஆய்வு கூடத்தில் தான் நூலகமும், ஆசிரியர்கள் ஓய்வறையும் செயல்படுகின்றன. போதிய இட வசதி இல்லாததால் தான் மாணவர்கள் கழிப்பறையை எனது அறையாக பயன்படுத்தி வருகிறேன். எனினும், மாணவியருக்கு தனி கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. இவ்வாறு பள்ளி முதல்வர் கூறினார்.

மத்திய அமைச்சர் கோபம்

இப்பிரச்னை குறித்து மத்திய இணை அமைச்சர் குலஸ்தேயிடம் கேட்ட போது,'' பள்ளி முதல்வர் தான் இப்பிரச்னையை முறையாக கையாண்டு இருக்க வேண்டும். அவர் ஒரு முட்டாள் நபர். அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்

இன்ஜி., கல்லூரிகளில் யோகா கட்டாய

நாடு முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், யோகா
, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தான் பட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்.எஸ்.எஸ்., - என்.சி.சி.,

இன்ஜினியரிங் கல்லூரிகளில் முன்பு, என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., மற்றும் கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களுடன் பழகும் உன்னத் பாரத் அபியான்

போன்ற செயல்பாடுகள் அமலில் இருந்தன. ஆனால், பட்டம் பெறுவதற்கு இவை கட்டாயம் என்ற நிலை இல்லை. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ.,யின் கட்டுப்பாட்டின் கீழ் 10 ஆயிரம் இன்ஜி கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 18 லட்சம் மாணவ,மாணவியர் படிக்கின்றனர். இவர்கள் இனி, யோகா, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

வேற்றுகிரகவாசிகள் நடமாட்டம் அச்சம் காரணமாக கிராம மக்கள் வீட்டில் முடக்கம்!!

கர்நாடக மாநிலம் அன்டுர் கிராமத்தில்  ஒரு விவசாயப் பண்ணைக்கு
அருகே திறந்தவெளியில், சுமார் 20-30 பெரிய கால் தடங்கள் இருந்ததைப் பார்த்த கிராமத்தினர் ஆச்சரியம் அடைந்தனர். இதுவரை இதுபோன்ற கால்தடத்தைப் பார்த்ததில்லை என்றும், எந்த விலங்கின் கால் தடத்தோடும் இது ஒத்துப்போகவில்லை என்றும் கூறினர். அது வேற்றுகிரகவாசிகளின் காலதடங்களாக இருக்கலாம் என அச்சம் அடைந்து உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில், ஏதோ ஒரு உயிரினம் மூச்சு விடுவது போன்ற மிகப் பயங்கர சத்தத்தைக் கேட்டதாகவும் சிலர் கூற, அந்த சமயத்தில் கிராமத்தில் இருந்த நாய்கள் குரைத்ததாகவும், பிறகு எல்லாமே ஒன்று போல அமைதியாக இருந்துவிட்டதாகவும் சிலர் தெரிவித்தனர்.

இது பற்றி செய்தி பரவியதால், பல சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த கால்தடங்களைப் பார்த்துச் செல்கின்றனர்.

கிராமத்தினரின் அச்சத்தைப் போக்க, அப்பகுதியில் வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம், இந்த கால்தடங்கள் எந்த உயிரினத்தின் கால்தடங்கள் என்பதை கணிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்

இதுபோன்ற பீதி பரவுவது இந்த குடகு மாவட்டத்தில் இது முதல் முறையல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தில் “நாளே பா” என்ற பீதி எழுந்தது. அப்போது மோகினி பேய் அச்சம் காரணமாக, ஏராளமான கிராமத்தினர் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கினர். பிறகுதான், அப்பகுதியில் மாபியாக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதும், அவர்கள்தான் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க இதுபோன்ற பீதியைக் கிளப்பியதும் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம்: அமெரிக்க நிறுவனம் ஒப்புதல்

இந்திய
, 2011ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு வரை, 6.7 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததை, அமெரிக்க நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இப்பிரச்னை குறித்து விசாரிக்கப்படும் என நகாய் அறிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையமான, 'நகாய்' அதிகாரிகளுக்கு

கோவா மாநில பணிகள்

அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில், சி.டி.எம்., ஸ்மித் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், கோவா மாநிலத்தில், 2011ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு வரை, நெடுஞ்சாலை அமைப்பு, ஆய்வு பணி மேற்கொள்வது, குடிநீர் திட்டம் மேற்கொள்வது உள்ளிட்ட ஒப்பந்தங்களை பெற, நகாய் அதிகாரிக்கு 6.7 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க நிதித்துறையின் குற்ற புலனாய்வு பிரிவு விசாரித்தது. அப்போது லஞ்சம் கொடுத்ததை சி.டி.எம்., ஸ்மித் நிறுவனம் ஒப்புக் கொண்டது. மேலும், இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகளில் முறைகேடாக ஒப்பந்தங்கள் பெற்று லாபம் ஈட்டியதில், 25 கோடி ரூபாயை அமெரிக்க கருவூலத்தில் செலுத்தவும் அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க நிதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இந்த பிரச்னை குறித்து விசாரித்து, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகாய் தெரிவித்துள்ளது

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடு விற்பனை செய்யலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு பி
றப்பித்த அறிவிப்புக்கு, தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய, உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

கால்நடைச் சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து கடந்த மே 23 ஆம் தேதி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினரும், பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் கால்நடைகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த எஸ்.செல்வகோமதி மற்றும் பி.ஆஷிக் இலாஹி பாவா ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இரு வேறு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இதே போல இறைச்சிக் கூடங்களின் உரிமையாளர்கள்  உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும்  மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவானது இன்று தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேஹர்  தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், மனுதாரர்கள் சார்பில் காங்கிரஸின் பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் ஆஜராகினர்  

அப்பொழுது வேணுகோபால் நீதிமன்றத்தில், 'மத்திய அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஏற்கனவே தடை விதித்த விட்டது. எனவே புதிதாக எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களுக்கு ஏற்ப இந்த அறிவிப்பில் நிறைய மாறுதல்களை செய்து, புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட மத்திய அரசு ஆலோசித்து வருகிறது' என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த வாதத்தினை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தலைமையிலான் அமர்வானது, உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, வழக்கினை முடித்து வைத்தும் உத்தரவிட்டது

மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு நிறுத்திவைப்பு!!!

ஜூலை 17 ல் நடைபெறவிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நிறுத்தி வைக்க 
சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம்; சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு, 15 சதவீதம் ஒதுக்கப்படுவதாக, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், 'மருத்துவப் படிப்பில், மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு, தனி ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது' என, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
தொடர்ந்து, ஜூலை 17 ல் மருத்துவ கலந்தாய்வு நடத்த கூடாது. தர வரிசை பட்டியல் வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கையில் தற்பாதைய நிலையே தொடர வேண்டும் எனக்கூறி, வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது

வேலை உங்களுக்குதான்... மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 7,042 ஆசிரியர் வேலை

எஸ்எஸ்ஏ என்ற சர்வசிக்க்ஷா அபியான் திட்டம் அனைவருக்கும் கல்வி என்ற 
கொள்கையின் கீழ் ஆரம்பிக்கபட்ட பள்ளிகளில் லோயர் பிரைமரி ஸ்கூல், அப்பர் பிரைமரி ஸ்கூல் பிரைமரி டீச்சர்கள் பணியிடங்கள் என 7 ஆயிரத்து 42 துணை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: ஆசிரியர்

தகுதி: எஸ்எஸ்ஏ திட்டதின் கீழ் ஆசிரியப்பணி பெற உயர்நிலை வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், இளநிலை பட்டம், கணிதம் மற்றும் அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 43க்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூபாய் 200. மற்ற பிரிவினருக்கு ரூபாய் 150 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் முழுமையான முழுமையான விவரங்கள் அறிய http://www.ssaassam.gov.in/AdvertisementAsstteacherJuly2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

அரசை அசைக்க ஜாக்டோ ,ஜீயோ போராட்ட அறிவிப்பு ,அரசு செவிமடுக்கவில்லையென்றால் காலவரையற்ற போராட்டம் !!

முத்தான மூன்று கோரிக்கை..*
                                      

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுக..
ஏழாவது ஊதியக்குழுவை அமூல்படுத்து..
இடைக்கால நிவாரணம் 20%வழங்கிடுக..

*13ம்தேதி மாவட்டத்தில் ஆலோசனை கூட்டம்..*


*18ஆம் தேதி மாவட்ட தலைநகரில் ஆர்பாட்டம்..*

*ஆகஸ்ட் 5ல் கோட்டை நோக்கி பேரணி..*

*ஜாக்டோ-ஜியோ கூட்டறிக்கை...

பள்ளிப் பைகளின் எடையைக் குறைக்க புதிய திட்டம் - ஜாவடேகர்!!

அடுத்த கல்வி ஆண்டிலிருந்து புதிய மென்பொருள் ஒன்றுடன் ஒரு திரையிடல் கருவி
மற்றும் டிஜிட்டல் பலகை ஒன்றையும் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கும் திட்டம் அமலாகும்; இதன் மூலம் பள்ளி மாணவர்களின் புத்தகப்பைகளின் சுமையும் குறையும் என்றார்.

மத்திய பிரதேசத்தில் 20 ஹை-டெக் பள்ளிகளை திறந்து வைத்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

”நாடு முழுதும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 15 லட்சம் பள்ளிகளில் 26 கோடி மாணவர்களுக்கு 70 லட்சம் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். இம்மாணவர்களில் 10 கோடி பேர் மதிய உணவு திட்டத்தில் இணைந்துள்ளனர்” என்றார் அமைச்சர்

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்.. சாம்சங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது தமிழக அரசு!!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பது தொடர்பாக 
சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்தப்படும் என்று சமீபத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்தார்.

இந்நிலையில் அரசு மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்க சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, சம்பத் ஆகியோர் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
தமிழக அரசும், சாம்சங் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி முதல்கட்டமாக சென்னையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் 20 மேல்நிலைப்பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது