யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/12/18

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களின் திறமையை வளர்த்தெடுக்க புதிய திட்டம்: பள்ளிக் கல்வித்துறை அமல் :

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளி களில் மாணவர்களின் திறமையை வளர்த்தெடுக்க புதிய செயல் திட்டத்தை பள்ளி கல்வித்துறை செயல்படுத்தியிருக்கிறது.
தேசிய கலைத்திட்ட வடி வமைப்பு- 2005 கல்வியை தேர்வுச் சுமையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும், அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் கல்வி பரவலாக்கப்பட வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதன் அடிப்படையில் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகளை வகுப் பறையில் மட்டும் அடக்கிவிடாமல், அதன் வேறு பரிமாணங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.குழு மனப்பான்மை, எண்ணங்களை வெளிப்படுத்தும் திறன், சமுதாயத்திலிருந்து தனக்கு வேண்டியதை பெறும் திறன், அறிவியல் பூர்வமாக முடி வெடுக்கும் ஆற்றல், சிந்திக்கும் திறன், வினா எழுப்பும் ஆற்றல், விசாரித்து அறிதல், பகுத்தாய்ந்து முடிவெடுத்தல், பிரச்சினைகளை அறிவு பூர்வ மாக அணுகுதல் போன்ற திறன்களை மாணவர்களிடையே வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி கல்வித்துறை இடைநிலை கல்வியில் பல்வேறு செயல் திட்டங்களை வடி வமைத்துள்ளது.
புதிய திட்டம் வடிவமைப்பு
தற்போது , வகுப்பறை பங்கேற்றலை உயர்த்துதல் (IMPART- Improving Participation) என்ற செயல் திட்டத்தை தமிழ கத்தில் அனைத்து மாவட்டங்க ளிலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் செயல்படுத்தியிருக்கிறது. சுற்றுப்புறம், மக்களின் வாழ்க்கை முறை, நில அமைப்புகள், இயற்கை வளங்கள், பண்பாட்டுச் சின்னங்கள், சமுதாய அமைப்பு கள், மொழி, கலாச்சாரம், வளங்க ளின் பயன்பாட்டு முறைகள் போன்றவற்றை மாணவ, மாணவி யர் கூர்ந்து ஆராய்ந்து அறியும் வண்ணம் கற்பித்தல் முறைகள் உதவும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
எம்.பில், பிஎச்டி போன்ற ஆராய்ச்சி படிப்புகளில் மாண வர்கள் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பிப்பதுபோல், பள்ளிப் பரு வத்திலேயே மாணவர்களை ஆய்வுதளத்தில் ஈடுபடுத்தவும், அவர்களிடம் உள்ள திறமைகளை வளர்த்தெடுக்கவும் வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக் கும் இடைநிலை கல்வி திட்டத்தின் (RMSA) மூலம் கடந்த 2016-2017-ம் கல்வி யாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் முன்னோடி சிறப்பு செயல்திட்டமாக இது செயல்படுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து 2017-18-ம் கல்வியாண்டில் இத்திட்டம் கல்வியில் பின்தங்கிய நாகப்பட்டி னம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இம்மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதையடுத்து நடப்பு கல்வியாண்டில் (2018-19) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த செயல் திட்டம் (IMPART) நடை முறைப்படுத்தப்பட்டி ருக்கிறது.

செயல்வழி திட்ட கற்றல்
செயல் திட்ட வழி கற்றல் எனப்படும் (Project Based Learning) முறையை அடிப்படையாக கொண்ட இத்திட்டத்துக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 பள்ளிகளை தேர்வு செய்துள்ள னர். ஒவ்வொரு பள்ளிக்கும் 5 ஆய்வு கள் வீதம் 500 ஆய்வுகள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் மேற்கொள்ளப்பட வுள்ளன. 9-ம் வகுப்பு மாணவர்கள் இந்த செயல்வழி திட்ட முறை கற்றலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆய்விலும் 4 மாணவர்கள் வீதம் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள். இதற்காக 100 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வழிகாட்டியாக செயல்படுவார்கள்.
மாணவ, மாணவியர் மேற்கொள்ளும் ஆய்வுக்குப்பின் வட்டார அளவில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு செய்யப்பட்டு, அவை மாவட்ட அளவில் சமர்ப்பிக்கப்படும். சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கவும் திட்ட மிடப்பட்டிருக்கிறது.
இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்கும்
மாவட்டத் திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் த.தனசிங் கூறியதாவது:
இத்திட்டம் தொடர்பாக இதுவரை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் 100 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் செயல் திட்டங்களை எவ்வாறு வடிவமைப்பது?, மாணவர் குழுக்களை எவ்வாறு தேர்வு செய்வது?, செயல் திட்டத்தின் படிநிலைகள், செயல் திட்டத்தை செயல்படுத்துதல், தகவல் சேகரிப்பு, பகுப்பாய்வு பிரச்சினைகளை அடையாளம் கண்டு, தீர்வை செயல்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
அடுத்த வாரத்தில் ஒவ்வொரு பாடத்துக்கும் 100 ஆசிரியர்கள் வீதம் 400 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து மாணவர் குழுக்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அனைத்து தரப்பு மாணவர்களையும் கற்றல் நிகழ்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்கச் செய்து, பள்ளிகளில் இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்க இச்செயல் திட்டம் நிச்சயம் ஒரு தூண்டுகோலாக அமையும் என்றார்.
- அ.அருள்தாசன்

ஜாக்டோ ஜியோ போராட்டம் 10ஆம் தேதி மதுரையில் முடிவு :-மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி!

வருவாய் மாவட்ட அளவிலான புதிர் போட்டியில் முதலிடம் பிடித்த எண்ணை ஆதிதிராவிட நல அரசு உயர்நிலைப்பள்ளி அணியினருக்கு பாராட்டு.

வருவாய் மாவட்ட அளவிலான புதிர் போட்டியில் முதலிடம் பிடித்த எண்ணை ஆதிதிராவிட நல அரசு உயர்நிலைப்பள்ளி அணியினருக்கு பாராட்டு.

புதுக்கோட்டை,டிச.4: புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளிக் கூட வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது.

இதில் கல்வி மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அணிகளான செம்பாட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளி,அமரடக்கி அரசு உயர்நிலைப்பள்ளி,எண்ணை ஆதிதிராவின நல அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் அணிகள் கலந்து கொண்டன.அவற்றுள் எண்ணை ஆதிதிராவிட நல அரசு உயர்நிலைப் பள்ளி அணியினர் முதலிடத்தையும்,அமரடக்கி அரசு உயர்நிலைப்பள்ளி அணியினர் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.


போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாமலை ரஞ்சன் வாழ்த்திப் பேசினார்.போட்டியின் நடுவர்களாக கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் சரவணப்பெருமாள்,காயாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.

போட்டிகளை காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜீ ஒருங்கிணைத்தார்..போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு தலைமையில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்ச்செல்வம்,அறந்தாங்கி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

5/12/18

நீதிக்கதை---சிந்தனை கதைகள்,

ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.

“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.


“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.

“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.

அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.

அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.
கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.

“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!”

அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.

“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.

அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.

அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

*நீதி*: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட, ஐந்து பிள்ளைகளால் கைவிடப்பட்டு தனித்து வாழ்ந்த மூதாட்டியைத் தனது தாயாகத் தத்தெடுத்து, நெகிழ வைத்திருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர்

நான்தான் உனக்குப் புள்ள...மாசம் ரூ.2,500 அனுப்புறேன்!"- தவித்த மூதாட்டியைத் தத்தெடுத்து, நெகிழ வைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்

 கஜா புயலால் பாதிக்கப்பட்ட,  ஐந்து  பிள்ளைகளால் கைவிடப்பட்டு தனித்து வாழ்ந்த மூதாட்டியைத் தனது தாயாகத் தத்தெடுத்து, நெகிழ வைத்திருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர், பூபதி. 13 லட்சம் வரை ஸ்பான்ஸர் பிடித்து, தான் பணிபுரியும் அரசுப் பள்ளியைத் தனியார் பள்ளிகளைவிட அதிக வசதிகளைக் கொண்ட பள்ளியாக மாற்றியிருக்கிறார்.

இவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, இவரின் நண்பரானவர் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்துள்ள மருதவனம் கிராமத்தில் ஆசிரியையாகப் பணிபுரியும் அமுதா. சமீபத்தில் இந்தப் பகுதியை கஜா புயல் சிதைத்துப்போட, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நினைத்திருக்கிறார் பூபதி.

அமுதாவிடம் பேசி, 'புயலால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் என்னால் உதவ முடியாது. யாராவது முதியவர் பாதிக்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள், அவருக்கு நிரந்தரமாக உதவுவோம்' என்று சொல்லியிருக்கிறார். அதன்படி, ஆசிரியை அமுதா மருதவனத்தில் தான் பெற்ற ஐந்து பிள்ளைகளால் கைவிடப்பட்டுத் தனித்து வாழ்ந்த பாக்கியம் பாட்டியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

அவர் வசித்துவந்த ஒட்டுக் குடிசையையும் பழைய பாத்திரங்களையும், பழைய நைய்ந்த சேலைகளையும் கஜா புயல் சிதைத்துப் போட, பக்கத்து வீட்டில் தற்காலிகமாக வசித்துவந்திருக்கிறார். அவரது கதையைக் கேட்டு இதயம் கசிந்த பூபதியும், அவரது ஆசிரியை மனைவியான பிருந்தாவும், மளிகை சாமான்கள், 50 புடவைகள், சமையல் செய்யப் பயன்படுத்தும் சாமான்கள் சகிதமாகப் போய் இறங்கி இருக்கிறார். பாக்கியம் பாட்டி கையைப் பிடித்து,'என்னை மகனா நினைத்துக்கொண்டு இத வச்சிக்க.' என்று சொல்ல, கரகரவென கண்ணீர் சிந்தியிருக்கிறார்.

'கொள்ளு விரையாட்டம் அஞ்சு பிள்ளைகளைப் பெத்தேன். ஆனா, ஆளானதும் என்னை அம்போன்னு தவிக்கவிட்டுட்டு, தனியா போய்ட்டாங்க. என்னை சீந்தக்கூட நாதியில்லை. மாட்டுக்கொட்டகையைவிட கேவலமான குடிசையில் உசுரக் கையில புடிச்சுக்கிட்டு வாழ்ந்துகிட்டிருக்கேன். 75 வயசாயிட்டு.

முன்னமாதிரி பொழப்புதழப்புக்கும் போக முடியலை. அரசாங்கம் தர்ற 1000 ரூபா முதியோர் உதவித்தொகையில சீவனம் நடந்துச்சு. இலவச ரேஷன் அரிசி வாங்கி திங்கக்கூட வழியில்லாம ரேஷன் கார்டைகூட பாவி புள்ளைங்க தூக்கிட்டுப் போயிட்டுங்க. இந்த நிலையில புயல் வந்து, என்னோட வீட்டையும், சாமான்களையும் சேதம் பண்ணிட்டு. வாழ்க்கையே இருண்டுகிடக்கு தம்பி' என்று நெக்குருகிச் சொல்லியிருக்கிறார்.

அதைக் கேட்டு கண் கலங்கிய பூபதி, "உன்னை என் தாயா தத்தெடுத்துட்டேன். உன் கடைசி காலம் வரைக்கும் நான்தான் உனக்குப் புள்ள. குடிசைபோட எவ்வளவு செலவாகும்' என்று கேட்டிருக்கிறார். 'ஐயாயிரம் வரை செலவாகும்' என்று சொல்லியிருக்கிறார். 'அதை அமைச்சுத் தர்றேன்' என்றதோடு, கையில் இரண்டாயிரம் பணத்தைக் கொடுத்துவிட்டு, "உன் கடைசி காலம் வரை உனக்கு மாசாமாசம் 2,500 ரூபாய் அனுப்புகிறேன்" என்று சொல்ல, உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் வராமல் பாக்கியம் பாட்டி நா தழுதழுத்திருக்கிறார்.

பூபதியிடமே பேசினோம். "அந்த அம்மாவின் கதையைக் கேட்டதும் மனசு நொறுங்கிப் போயிடுச்சு. கஜா புயலில் மருதவனம் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. ஆனா, தனது அம்மா கதி என்னன்னு ஒரு பிள்ளையும் வந்து அவரை பார்க்கலை. அது புயல் செய்த கொடுமையைவிட அவலம். அதனால், நானும் என் மனைவியும் அந்த மூதாட்டியைத் தாயாகத் தத்தெடுப்பதுனு முடிவுபண்ணி மாசாமாசம் 2,500 ரூபாய் அனுப்புறதா சொல்லியிருக்கிறோம்.

அதோட, மாசம் ஒரு தடவை போய் அவரைப் பார்த்து, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்றதா இருக்கோம்.  அவருக்குப் புயல் பாதித்த அல்லலைவிட, தன் பிள்ளைகள் தன்னை வந்து பார்க்கலையேங்கிற மனக்குமுறல்தான் அதிகம். அந்தக் குறையை நானும் என் மனைவியும் ஆசிரியை அமுதா உதவியோடு போக்கியிருக்கிறோம்" என்றார் அழுத்தமாக

வங்கக்கடலில் உருவாகுது புது புயல்.. இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழைதான்

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில், அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்கிறது. இதற்கெல்லாம் காரணம், காற்றழுத்த தாழ்வு நிலைதான் என்றாலும், இது வலுவடைந்து அடுத்த சில நாட்களில் புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது. காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருவதால், 3 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும், 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்களும் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே, வங்கக்கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு நிலை, 6ம் தேதிவாக்கில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரம் அடைகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய பிறகு அது மேலும் தீவிரம் அடைந்து அடுத்த 4 நாட்களில் அதாவது டிசம்பர் 10ம் தேதி வாக்கில், புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வர்கள் தெரிவித்துள்ளனர்.

சிபில் ஸ்கோர் பற்றிய அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்

கடன் சம்பந்தப்பட்ட விஷயமென்றால் முதலில் நம் காதில் விழுவது: “எல்லாம் ஓகே சார். சிபில் ஸ்கோர்ல ஒரு சின்ன பிரச்னை. பார்த்துக்கலாம் சார்”. சரி, அது என்ன சிபில்? அதன் அடிப்படை விஷயங்களைக் கொஞ்சம் பார்ப்போமா?

*CIBIL என்றால் என்ன?*

Credit Information Bureau (India) Limited. இது, கடன் பெறுவோர் பற்றிய இந்தியாவின் முதல் தகவல் நிறுவனம். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடம் பெறுவோர் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் ( சில வங்கிகள் 60 நாட்களுக்கொரு முறை ) சிபில் நிறுவனத்தில் அப்டேட் செய்யும். சிபில் போன்று மேலும் சில அமைப்புகள் இருந்தாலும், வங்கிகள் சிபில் ரேட்டிங்கிற்கே முக்கியத்துவம் தருகின்றன.

*யாருடைய விவரங்கள் சிபிலில் இருக்கும்?*

க்ரெடிட் கார்ட், பர்சனல் லோன், கார் லோன், வீட்டுக் கடன் அல்லது வேறு எந்த வகைக் கடனாவது வங்கிகளிலிலோ அல்லது வங்கி சாராத தனியார் நிதி நிறுவனங்களிலோ பெற்றுள்ள ஒவ்வொருவர் பற்றியும், சிபில் நிறுவனத்தில் தகவல் இருக்கும்.

*இதனால் என்ன பயன்?*

நீங்கள் க்ரெடிட் கார்ட் அல்லது வேறு வகைக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்கள் விவரங்களை வைத்து சிபில் பதிவுகளை சோதிக்கும். சிபிலில் உங்கள் ஸ்கோர் எவ்வளவு, உங்களின் கடன் விவரங்கள், அவற்றை திருப்பி செலுத்தி இருக்கும் விதம் ஆகியவற்றை பார்த்துவிட்டு உங்களுக்கு க்ரெடிட் கார்ட் அல்லது கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும். இதன் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு கடன் கொடுத்து, அதை வசூலிக்கும் பிரச்சனையை வங்கிகள் தவிர்க்க முடியும்.

*கடன் பெறுவோர் விவரங்களை சிபில் எப்படிப் பெறுகிறது?*

ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெறுவோர் குறித்த விவரங்களை தானாகவே சிபில் நிறுவனத்திற்கு அளிக்கும்.

*என்னென்ன தகவல்கள் இடம் பெறும்?*

க்ரெடிட் கார்ட் அல்லது மற்ற வகைக் கடன் பெறுவோரின் தனிப்பட்ட தகவல்கள், கடன் வகை, கடன் தொகை, கடன் செலுத்த வேண்டிய காலம், ஒவ்வொரு மாதமும் சரியாக கடன் செலுத்தி இருக்கிறார்களா அல்லது எத்தனை நாள் தாமதமாக செலுத்தி இருக்கிறார்கள் ஆகிய விவரங்களுடன் கடனை கட்டி முடித்து விட்டார்களா அல்லது செட்டில்மெண்ட் அல்லது வராக்கடன் ஆகியவை பற்றிய தகவல்களுல் இடம் பெறும்.

*ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும்?*

சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும். பொதுவாக 750க்கும் மேல் சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும். வட்டியும் குறைவாக இருக்கும். 750க்கும் கீழ் ஸ்கோர் இருப்பவர்களுக்கு கடன் கிடைப்பது கடினம். மேலும் அப்படியே கொடுத்தாலும் வட்டி அதிக அளவில் இருக்கும். 

*சிபில் ஸ்கோர் தெரிந்துக் கொள்வது எப்படி?*

இணையதளத்திற்கு சென்று தெரிந்துக் கொள்ளலாம். ஆண்டிற்கு ஒரு முறை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம். மேலும் பார்க்க ஒவ்வொரு முறையும் ரூ.550 செலுத்த வேண்டியிருக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். இதில் உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம். விவரங்கள் சரியாக இருக்கின்றனவா என்றும் பார்த்துக் கொள்ளலாம்.

*தவறான விவரங்கள் இருந்தால் எப்படி சரி செய்வது?*

சிபில் நிறுவனம் உங்கள் விவரங்களில் எந்த மாறுதலையும் செய்யாது. முறையான ஆவணங்களுடன் நீங்கள் கடன் பெற்றிருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை அணுகி சரி செய்துக் கொள்ளலாம். உங்கள் வங்கி, சிபில் ரிப்போர்ட்டில் தவறுகளை சரி செய்துவிடும்.

*சிபில் ஸ்கோர் குறைவதற்கான காரணங்கள் என்ன?*

க்ரெடிட் கார்ட் அல்லது பிற வகைக் கடன்களுக்கான தவணைத் தொகையை சரியான நேரத்தில் முழுமையாக செலுத்தாமல் இருப்பது, கடன் அட்டையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் க்ரெடிட் லிமிட்டில் 50 சதவிகிதத்திற்கும் மேல் பயன்படுத்துவது, வங்கிகளில் கடன் கேட்டு அடிக்கடி விண்ணப்பிப்பது, சரியாக கடனை திருப்பிச் செலுத்தாதவருக்கு ஜாமீன் கையெழுத்துப் போடுவது ஆகியவை உங்கள் சிபில் ஸ்கோரை குறைத்துவிடும்.

*கடன் கேட்டு விண்ணப்பிப்பது கூட ஸ்கோரை குறைக்குமா?*

ஆமாம். நீங்கள் ஒவ்வொருமுறை க்ரெடிட் கார்ட் அல்லது கடனிற்கு விண்ணப்பிக்கும் போதும், சிபிலில் உங்களைப் பற்றிய விவரங்கள் அந்த வங்கியால் பார்க்கப்படும். அப்படி அடிக்கடி பார்க்கப்படுவது எதிர்மறையாக கருதப்படும். ஆண்டிற்கு 2 முறைக்கும் மேல் கடனிற்காக விண்ணப்பிக்க வேண்டாம். ஒவ்வொரு முறை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போதும் அடுத்த வங்கி உங்களுக்கு கடன் கொடுக்க தயங்கும்.

*சிபில் ஸ்கோர் உயர்த்துவது எப்படி?*

இதுவரை கடன் பெறாதவர் என்றால், உங்கள் வருமானத்தின் அடிப்படையில் க்ரெடிட் கார்ட் அல்லது சிறிய தொகையில் கடன் பெற்று அதைச் சரியாக திருப்பிச் செலுத்துங்கள்.

ஏற்கனவே வாங்கிய கடன்களில் நிலுவைத் தொகை இருந்தால் அதை முழுமையாக செலுத்தி விடுங்கள். குறைவான சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கும் சில தனியார் நிதி நிறுவங்கள் சிறிய அளவில் கடன் கொடுக்கின்றன. வட்டி சற்றுக் கூடுதலாகத்தான் இருக்கும். அவர்களிடம் கடன் பெற்று தாமதமில்லாமல் சரியாக மாதத் தவணையைக் கட்ட வேண்டும். நகைக்கடன் போன்றவையும் இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

பெரும்பாலான வங்கிகள், தங்களிடம் பிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு, அதை உத்தரவாதமாக வைத்துக் கொண்டு பிக்சட் டெபாசிட் தொகையில் 70 சதவிகிதம் வரை க்ரெடிட் லிமிட் வைத்து க்ரெடிட்க் கார்டுகளை தருகின்றன. ஒவ்வொரு மாதமும் மிகக் குறைந்த அளவு செலவளித்து அதை சரியாக திருப்பிச் செலுத்துவதன் மூலம் சிபில் ஸ்கோரை உயர்த்தலாம். எந்தக் காரணம் கொண்டும் இதிலும் தாமதமாக மாதத் தவணைக் கட்டக்கூடாது.

அடமானக் கடன் மற்றும் அடமானமற்றக் கடன் என்ற கலவையில் கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்துவதன் மூலமும் சிபில் ஸ்கோரை எளிதில் அதிகரிக்கலாம்.

*நம் சிபில் ஸ்கோரை நாம் அடிக்கடிப் பார்ப்பதால் ஸ்கோர் குறையுமா?*

குறையாது. அவ்வப்போது சிபில் ஸ்கோர் பார்த்துவிடுவது நல்ல பழக்கமே. அப்போதுதான் தவறுகள் ஏதும் இருந்தால் அதை வங்கியில் சொல்லி திருத்திக் கொள்ளலாம். சில நேரங்களில் அடுத்தவர் கடனெல்லாம் நம் கணக்கில் வைத்துவிடுவார்கள். அது, நம் க்ரெடிட் ஸ்கோரை வெகுவாக பாதிக்கலாம்.

சில வங்கிகள், சிபில் ஸ்கோர் அடிப்படையில் வீட்டுக் கடன் போன்ற கடனுக்கான வட்டியை நிர்ணயிக்கின்றன. எனவே உங்கள் சிபில் ஸ்கோர் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடக்கும்போது பகுதி நேர ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்பார்கள்: பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் அறிவிப்பு

தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:. கடந்த 2012ம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் எங்களுக்கு மாத ஊதியம் ₹7700 அரசு வழங்கி வருகிறது.
பகுதி நேர ஆசிரியர்களாகவே பணியாற்றி வரும் நாங்கள்  வாழ்வாதாரத்துக்கு தேவையான ஊதியம் இல்லாமல் முடங்கியுள்ளோம்.

அதனால் அரசை கண்டித்து பல முறை போராட்டங்கள் நடத்தியுள்ளோம். பணி நிரந்தரம் கேட்டும் கோரிக்கை வைத்துவிட்டோம்.கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுவிட்டோம். ஆனால் அரசு எங்கள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ நடத்தும் வேலை நிறுத்தப் போராட்ட காலத்தில்  பள்ளிக்கு சென்று வகுப்பு நடத்த இயலாது. எனவே, எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டு ஜாக்டோ-ஜியோவுடன் இணைந்து தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம், பங்கேற்று பள்ளிகளை புறக்கணித்து  போராட்டத்தில் கலந்து கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

6-8 வகுப்புகளுக்கு ஒரே மாதிரியான பருவத்தேர்வுகள் நடத்துதல் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!! & தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு!!!



பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை!

பயோமெட்ரிக் முறையில், பள்ளிக்குள் மாணவன் நுழைந்ததும், பெற்றோருக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும். பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.

ஈரோடு மாவட்டம், கோபி மற்றும் நம்பியூரில், நான்கு பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பினர், 1,303 பேருக்கு, இலவச சைக்கிள்களை வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:ஜன., மாதம் முதல் வாரத்தில், மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்க வாய்ப்புள்ளது. புதிய ஸ்மார்ட் கார்டு மூலம், நீங்கள் இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும், அதன் மூலம், பள்ளி மாற்று சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். ஸ்மார்ட் கார்டில் உள்ள சிம்கார்டை உபயோகித்தால், மாணவனின் சரித்திரமே, அந்த பள்ளிக்கு தெரிய வரும்.பயோ மெட்ரிக் முறையாக, பள்ளிக்குள் மாணவன் நுழைந்ததும், அதுகுறித்து பெற்றோருக்கு, குறுஞ்செய்தி சென்றுவிடும். பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை. 'உள்ளேன் ஐயா' என்பதே, வகுப்பறையில் இனி தேவைஇல்லை. மாணவன் பள்ளிக்குள் நுழையும் போதே, அனைத்து விபரங்களும் பதிவாகி விடும். எங்களுக்கும், லேப் டாப் வேண்டும் என ஆசிரியர்கள் கேட்கின்றனர்.


இதுகுறித்து, மத்திய அரசிடம் பேசி வருகிறோம். ஆசிரியர்களுக்கும், லேப் டாப் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.ஆறு முதல், எட்டாம் வகுப்பினருக்கு டேப் வழங்கப்படும். இதன் மூலம், இரு மொழிகளில் கற்றுத்தரப்படும். கம்ப்யூட்டர் ஆசிரியர்களில், 7,500 பேரில், 800 பேரை நியமிக்க, அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

பின், நிருபர்களிடம், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:பொதுத்தேர்வுக்கான மையங்கள் குறித்து நாளை அறிவிக்கப்படும். 'கஜா' புயலால் பாதித்த மாவட்டங்களில், நடத்தப்படும் தேர்வை, மாற்றி அமைப்பதில், சிரமம் இருப்பதாக துறையினர் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், அதையும் அரசு பரிசீலித்து வருகிறது. 10 முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, பொதுத்தேர்வு உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆசிரியர் போராட்டம் குறித்து முதல்வரிடம் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பிஎச்.டி.,க்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:யு.ஜி.சி.,யின் அனுமதியுடன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், முழு நேர, பகுதிநேர பிஎச்.டி., ஆய்வு படிப்பு நேரடி முறையில் நடத்தப்படுகிறது.

இதில், 2019க்கான சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.

தமிழ், ஆங்கிலம், மேலாண்மை, கல்வியியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், குற்றவியல், மின்னணு ஊடகவியல், புவியியல், கணினி அறிவியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்பொருளியல் பாடங்களுக்கு வரும் 29க்குள் விண்ணப்பிக்கலாம்.விபரங்களை www.tnou.ac.in ல் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி! மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு இணையான கல்வி!

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தாண்டு நீட் தேர்வுக்கு 26,000 மாணவி-மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிப்பாளையத்தில் மாணவி-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும்போதே அவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் பல்வேறு புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கப்படும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆசிரியர்கள் இடமாற்றத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.  இந்தாண்டு நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறிய அவர், கஜா புயலால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமைச்சர்களின் துறையின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. அனைத்து துறையிகளிலும் ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றதிலிருந்து அவர் பணியை திறம்பட செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

8 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை

சென்னை உட்பட, எட்டு கடலோர மாவட்டங்களுக்கு, இன்று கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பரவலாக மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், துாத்துக்குடி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கன மழை பெய்யலாம்.நாளை, சில இடங்களில், லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யும். நாளை மறுநாள், திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று லேசான மழை பெய்தது. மாலை முதல் அதிகாலை வரை, மலைப்பகுதி மாவட்டங்களில் பனி மூட்டம் காணப்பட்டது.இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு: இந்தாண்டு நடத்தப்படுமா

முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு:
இந்தாண்டு நடத்தப்படுமா
நான்கு ஆண்டுகளாக நடத்தப்படாத முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, இந்தாண்டு நடத்தப்படுமா என, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2 ஆயிரத்து 488 அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு கலை பிரிவை அடிப்படையாக கொண்டு 9 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் மூலம் 50 சதவீமும், நேரடி நியமனத்தில் 50 சதவீதமும் முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படுகிறது.கடந்த 4 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வின் மூலம் வழங்கப்படவில்லை.அரசு சார்பில் 1:3 என்ற விகிதப்படி முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டு வந்த நிலையில், சில ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் விகிதாசாரத்தை மாற்றி அமைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
1:1 விகித முறையில் பணியிடம் நிரப்ப வேண்டும்' என்றார்

அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டவுடன் 40k வாங்கும் அவர்களுக்கு இன்னும் உயர்வா??என துடித்து எழும் நம் தோழர்களுக்கு இந்த பதிவு::-

உங்களுக்கு தெரியுமா? இந்த 40000 அவர்கள் எ ப்படி வாங்கினார்கள் என்று???? சிம்பிள்! ஆண்டாண்டு காலமாக இப்படி அழுது உண்ணாவிரதம் இருந்து சிறைக்கு சென்று ! வேலை நீக்கம் அடைந்து என படி படியாக ஆயிரம் ஐநூறு என சிறுக சிறுக வந்துதான் இன்று உங்கள் கண்களுக்கு விரியும் 40kஆனது! சரி உங்கள் பக்கத்து வீட்டிலோ தெரு விலோ ஒரு பண்ணை வீடு ! லக்சுரி கார் ! விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் என இருப்பவர்கள் யார் என பாருங்கள், அரசியல் வாதியோ தொழிலதிபரோ இருப்பார் ஆசிரியரோ வங்கி ஊழியரோ கிளார்க் கோ இருக்க மாட்டார் வருமான வரியை நாமெல்லாம் எவ்வளவு கட்டவேண்டும் என்று ஆடிட்டருடன் பேசி முடிவு 
செய்வோம் இவர்களுக்கு பிடித்து கொண்டு மீதியை கொடுக்கும் ! இன்று நாம் பாராட்டும் காவல் துறை அதிகாரிக்கு பொன்மாணிக்கவேல் அரசு அலுவலர் தான் டெல்லியில் சிறந்த அரசு அதிகாரி என பரிசு வாங்கிய சகாயம் ஐயா அரசு அதிகாரி தான்! இவர்கள் கேட்கும் ஆயிரம் ஐநூறு உங்கள் பாக்கெட்டுகளில் இருந்து பிடுங்குவது போல கோபமாக எதிர்க்கும் நீஙீகள்...கோடி கணக்கில் நம் வரிப்பணத்தில் கொள்ளையடிக்கும் அரசையோ அரசு காண்ட்ராக்ட்டர்களையோ ஏன் எதற்க்கு என கேட்க முடியாது! சரி இவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுவோம் உங்களில் வேலை இல்லாத நண்பருக்கு அந்த வேலையை தருவோம்! யாராவது அரசுக்கு உதவ தயாரா? சம்பளம் கேட்காத, உயர்வு கேட்காத, விடுமுறை கேட்காத,  லோன் கேட்காத, அந்த நல்லவர்கள் யார் யார்??  அது சரி நாங்கள் வேலை இல்லாமல் இருக்கோம் இவர்களுக்கு சம்பள உயர்வா என கேட்கும் சகோதரர்கள் அரசு வேலைக்கான தரம் அறியும்  தேர்வில் ஏன் வெற்றி பெறவில்லை???  இன்று இவர்கள் ஸ்ட்ரைக் செய்தால் நம்ம தினசரி வாழ்க்கை பாதிக்கும் என நினைக்கும் நாம் அரசு நடத்தவேண்டிய பஞ்சாயத்து எலக்ஷனை நடத்தி ஊருக்கு ஒரு தலைவரை போடலைன்னு கொதிக்கலையே ஏன்? 19தொகுதில  MLAஇல்லையே அதனால் அந்த தொகுதி நல்லது கெட்டத எடுத்து சொல்லி கேட்டு பெற MLA வேண்டும்னு கதறலயே ஏன்? கஜா புயல் சுஜா புயல்னு வந்தா நாமெல்லாம் டிவி ல பார்த்து உச்ச கொட்டும் போது மழையில் மிண் கம்பத்தில் உட்கார்ந்து கொண்டு இறங்கிவந்து உணவருந்த நேரமின்றி கம்பியில் அமர்ந்து உணவருந்தும் மின் ஊழியரை பாராட்டினோம் ஆனால் ஊதிய உயர்வுன்னதும் நம்ம பீரோவில யாரோ கை விடாடார்போல துடிக்கிறமே எப்படி???? கல் குவாரியை தோண்டும் போது இரவாகி விட்டதால் அங்கேயே படுத்து கொண்டிருந்த அரசு அதிகாரியை பாராட்டினோமே இப்ப அவர் ஊதிய உயர்வு கேட்டதும் உட்காற்ற இடத்தில் சூடு வைத்த மாதிரி எரிகிறோமே அது ஏன்? பொண்டாட்டி புள்ளியை சென்னைல விட்டுட்டு போலீஸ் அதிகாரி எவன் வீட்டு நகையையோ பணத்தையோ மீட்க மொழி தெரியாத வட இந்தியாவில் சுடப்பட்டு இறந்தபோது அய்யோ பாவம் என்றோமே! அவரின் சக ஊழியர் ஆயிரம் ரூபாய் உயர்வு கேட்டதும் நம் அப்பா எழுதி வைத்த சொத்து பத்திரத்தை பிடுங்கியது போல பதறுகிறோமே ஏன்? ஒரு ஆக்ஸிடென்ட் கொலை என்றதும் பார்த்துவிட்டு பரிதாபப்பட்டு வீட்டில போய் படுத்துக் கொள்வோம்,  ஆனால் அந்த இடத்திலேயே அன்றைய இரவைக் கழிக்கும் காவலர் ஆகட்டும் தாசில்தார் மருத்துவ ஊழியர்கள் சாலை பணியாளர் போன்ற அனைவரும் அரசு ஊழியர்கள் என்பதை நாம் ஏன் சிந்திக்க மறுக்கிறோம்! 12 மாதங்களில் ஒரு மாதம் பள்ளி விடுமுறை விடுகிறார்கள் அந்த ஒரு மாதம் கூட நாம் நம் குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொள்ளாமல் எங்காவது ஊருக்கு  அனுப்பலாமா விடுமுறை பள்ளியில் சேர்க்கலாமா என்று யோசிக்கிறோம் அந்தப் பதினொரு மாதங்கள் இந்த குழந்தைகளுக்காக வேலை செய்யும் அந்த ஆசிரியர்களை பற்றி நாம் என்றாவது சிந்தித்திருக்கிறோமா?? அவர்கள் ஊதிய உயர்வு கேட்டதும் நம் வீட்டில் பாதியை பிரித்துக்கொடுக்க கேட்டது போல் துடிக்கிறோமே ஏன்? இன்று நமது மாநில அரசும் மத்திய அரசும் உலக வங்கி அந்த வங்கி இந்த வங்கிகளிடம் கடன் வாங்கி நாட்டின் கடன் எத்தனை ஆயிரம் கோடி என்று கூறுகிறார்களே அதில் எத்தனை ஆயிரம் கோடியை இந்த அரசு ஊழியர்களிடம் கொடுத்து விட்டார்கள் என்று என்றாவது நீங்கள் கேட்டதுண்டா? அதனால் நாம் அவர்களுக்கு உதவி  செய்ய தேவை இல்லை அவசியமின்றி அவர்களை உதாசீனப்படுத்த வேண்டாம் என்பது எனது அன்பான வேண்டுகோள் , நம் குடும்பத்திலும் யாரோ ஒரு அரசு ஊழியர் இருப்பார்,  இல்லை நாளை வருவார் என்பதை மனதில் வைத்து நாம் நமது வேலையை பார்ப்போம்! அவர்கள் அவர்கள்  வேலையை பார்க்கட்டும் நன்றி  

District level training schedule for Teachers on new Text Book TNSCERT Proceedings



2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு.

(1) சனவரி****                          -14 திங்கள்-    போகிப் பண்டிகை            21- திங்கள் -தைப்பூசம்         
(2)      பிப்ரவரி- ***            19- செவ்வாய்- மாசி மகம்                    
(3) மார்ச் - ***                    4- திங்கள்- மகாசிவராத்திரி.   6 புதன் -சாம்பல் புதன்                   
(4) ஏப்ரல்-***             3- புதன் -ஷாபே மேராஜ் 14- ஞாயிறு- அம்பேத்கர் பிறந்த நாள்.                    18- வியாழன்- பெரிய வியாழன்             19- வெள்ளி- சித்திரை பௌர்ணமி         20- சனி -ஷாபே பராஅத்                21- ஞாயிறு- ஈஸ்டர்                 
(5) மே - ***                        7- செவ்வாய்- ரம்ஜான் முதல் நாள்                      18- சனி- புத்தர் ஜெயந்தி                  
(6) ஜுன் - ***           1- சனி- ஷாபே காதர்     
(7) ஜூலை ***   விடுப்பு இல்லை.             
(8)  ஆகஸ்ட்-***          3- சனி- ஆடிப்பெருக்கு      9- வெள்ளி- வரலெட்சுமி விரதம்.                 11- ஞாயிறு- அர்ஃபா                15- வியாழன்- ருக்உபகர்மா.      16- வெள்ளி- காயத்ரி ஜபம்    
(9) செப்டம்பர். ***      1- ஞாயிறு- ஹிஜ்ரி வருடம்                    2- திங்கள்- சாம உபகர்மா             11- புதன்- ஓணம் பண்டிகை.           28- சனி- சர்வ மஹாளய அமாவாசை     
(10) அக்டோபர்***    -28 திங்கள்- தீபாவளி நோன்பு
(11)  நவம்பர்.***        2- சனி- கல்லறை திருநாள்              12- செவ்வாய்- குருநானக் ஜெயந்தி.
 (12)  டிசம்பர்***          8- ஞாயிறு- கார்வீன் முகைதீன்           10- செவ்வாய்- கார்த்திகை தீபம் 24- செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ் 31- செவ்வாய்- நியூ இயர் ஈவ்

FLASH NEWS:பெற்றோர் ஆசிரியர்கள் கழகத்தின் வாயிலாக 800 கணினி ஆசிரியர்கள் நியமனம்:மாண்புமிகு கல்வி அமைச்சர்:

பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை: பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன்
பயோமெட்ரிக் முறையில், பள்ளிக்குள் மாணவன் நுழைந்ததும்,பெற்றோருக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும் பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.


                                 


ஈரோடு மாவட்டம், கோபி மற்றும் நம்பியூரில், நான்கு பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பினர் 1,303 பேருக்கு, இலவச சைக்கிள்களை வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது*

ஜன., மாதம் முதல் வாரத்தில், மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்க வாய்ப்புள்ளது. புதிய ஸ்மார்ட் கார்டு மூலம், நீங்கள் இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும், அதன் மூலம், பள்ளி மாற்று சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்

ஸ்மார்ட் கார்டில் உள்ள சிம்கார்டை உபயோகித்தால், மாணவனின் சரித்திரமே, அந்த பள்ளிக்கு தெரிய வரும்.பயோ மெட்ரிக் முறையாக, பள்ளிக்குள் மாணவன் நுழைந்ததும், அதுகுறித்து பெற்றோருக்கு, குறுஞ்செய்தி சென்றுவிடும்

பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை. 'உள்ளேன் ஐயா' என்பதே, வகுப்பறையில் இனி தேவைஇல்லை

மாணவன் பள்ளிக்குள் நுழையும் போதே, அனைத்து விபரங்களும் பதிவாகி விடும். எங்களுக்கும், லேப் டாப் வேண்டும் என ஆசிரியர்கள் கேட்கின்றனர். இதுகுறித்து, மத்திய அரசிடம் பேசி வருகிறோம்
ஆசிரியர்களுக்கும், லேப் டாப் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.ஆறு முதல், எட்டாம் வகுப்பினருக்கு டேப் வழங்கப்படும். இதன் மூலம், இரு மொழிகளில் கற்றுத்தரப்படும்


 கம்ப்யூட்டர் ஆசிரியர்களில்,ரூ  7,500 சம்பளத்தில், 800 பேரை நியமிக்க, அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்


பின், நிருபர்களிடம், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது.


*பொதுத்தேர்வுக்கான மையங்கள் குறித்து நாளை அறிவிக்கப்படும். 'கஜா' புயலால் பாதித்த மாவட்டங்களில், நடத்தப்படும் தேர்வை, மாற்றி அமைப்பதில், சிரமம் இருப்பதாக துறையினர் தெரிவித்துள்ளனர்*


 *இருந்தாலும், அதையும் அரசு பரிசீலித்து வருகிறது. 10 முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, பொதுத்தேர்வு உள்ளது

 *இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆசிரியர் போராட்டம் குறித்து முதல்வரிடம் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்*

SOURCE :DINAMALAR WEBSITE

Flash News : 10th PUBLIC EXAM - NOMINAL ROLL DATE EXTEND UP TO 14/12/2018 :

10-12 -18 முதல் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி :


அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நக்சலைட்டுகளா ? எச்.ராஜா அவர்களின் கருத்திற்கு ஆசிரியர்கள் கண்டனம்

EMIS-10 ஆம் வகுப்பு மாணவர்களின் கூடுதல் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கு கால நீட்டிப்பு வழங்கி உத்தரவு

4/12/18

நீதிக்கதை----சிந்தனை கதைகள்,



காளான்களின் ராணி!

நிறைய பட்டாம்பூச்சிகளும் மின்மினிகளும் இருக்கும் மழையூரில், காளான்களும ் அதிகம். மரங்களின் கீழே, பாதைகளில் என எல்லா இடங்களிலும் காளான்கள். அந்தக் காளான்களுக்கு ராணி, லக்ஸி. அவள், ரொம்ப ரொம்ப அழகு. அவள் பறந்து செல்ல பட்டாம்பூச்சிகள் இறக்கைகளைக் கொடுத்திருந்தன. அவள் கண்கள் பிரகாசிக்க, நட்சத்திரங்கள் ஒளியைத் தந்திருந்தன. காளான்களுக்கு எந்த இடைஞ்சலும் வராமல் பாதுகாத்தாள் லக்ஸி.

ஒரு நாள், அங்கே வந்த ஒருவர்  செடிகளுக்கு மருந்து அடித்துச் சென்றார். உடல் மீது மருந்து பட்டதும் மின்மினிகளும் பட்டாம்பூச்சிகளும் மயங்கி விழுந்தன. இதைப் பார்த்த லக்ஸி, மேக ராஜாவிடம் மழையைக் கேட்டாள். மேகங்கள் கறுத்து, மழை பெய்தது. மழையில் நனைந்த மின்மினிகளும் பட்டாம்பூச்சிகளும் மயக்கம் தெளிந்தன. அவை, முழுமையாகக் குணமாகும் வரை லக்ஸிதான் உணவளித்துப் பாதுகாத்தாள்.

இவ்வளவு நன்மைகள் செய்யும் ராணிக்கு, சிறப்பான பரிசு தர வேண்டும் எனப் பட்டாம்பூச்சிகளும் மின்மினிகளும் காளான்களோடு ஆலோசனை நடத்தின.

‘‘நாம் காட்டின் மறுபுறமும் சென்று, சிறந்த பரிசைத் தேடலாம்’’ என்றது ஒரு பட்டாம்பூச்சி. மற்ற பட்டாம்பூச்சிகளும் ஒப்புக்கொண்டன.

பல இடங்களில் தேடி அலைந்தன. ஓர் ஓடை அருகே, பார்க்கவே வித்தியாசமாக ஒரு வண்டி நின்றிருந்தது. மிகப் பெரிய பரங்கிக்காயைக் குடைந்து, சக்கரங்கள் அமைத்த அழகான வண்டி. இரவுப் பயணத்தில் வெளிச்சம் தருவதற்காக, அந்த வண்டியில் ஒரு விளக்கும் இருந்தது. ஓடைக்கு அருகில் இருந்த தோட்டத்தின் உரிமையாளர்தான் அந்த வண்டிக்கும் சொந்தக்காரர்.

திரும்பி வந்து இந்த வண்டி பற்றிச் சொன்னதும், தங்களைத் தோட்டக்காரரிடம் தந்து, பரங்கி வண்டியை ராணிக்குப் பரிசாக அளிக்கும்படி கேட்டுக்கொண்டன, உணவுக் காளான்கள்.

அதன்படி செய்து, லக்ஸி ராணிக்குப் பரிசு அளிக்க, ‘‘இந்த அன்புதான் என்னை மேலும் மேலும் இங்கே இருக்கச் செய்கிறது” என்று மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டாள்.

அந்த மகிழ்ச்சியில் இன்னும் இன்னும் பல காளான்கள், பட்டாம்பூச்சிகள், மின்மினிகள் மழையூரில் தோன்றின.

CPS-ஐ நீக்கினால் ரூ.12,000/- கோடியை கஜா புயல் நிவாரணத்திற்கு அளிக்க JACTTO-GEO அறிவிப்பு*

CPS நீக்கம் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான *ஜாக்டோ-ஜியோ டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில்* ஈடுபட அறிவித்துள்ளது.


டெல்டா மாவட்டங்களை நிலைகுலையச் செய்துள்ள கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெறும் சூழலில் ஜாக்டோ-ஜியோவின் நடவடிக்கை பொது வெளியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து விளக்கமளித்துள்ள *ஜாக்டோ-ஜியோவின் நிதிக்காப்பாளரான திரு.ச.மோசஸ்,* "பல ஆண்டுகாள தொடர் போராட்டங்களைத் தொடர்ந்தே இத்தகைய நிலைக்குள் ஜாக்டோ-ஜியோ தள்ளப்பட்டுள்ளது.

 நேற்றைய ஜாக்டோ-ஜியோவின்  ஊடகச் சந்திப்பிலேயே  *ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் கஜா புயல் நிவாரணப் பணிகள் துளியளவும் பாதிக்காது.* மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் *பிற மாவட்ட ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்* என்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

 ஆனால் *சில ஊடகங்கள் இதனை மறைத்து வெறும் வேலைநிறுத்தச் செய்தியை மட்டுமே ஒளிபரப்பி வருகின்றன.*

ஜாக்டோ-ஜியோவைப் பொறுத்தவரை புயல் *பாதிப்பிற்குள்ளான மாவட்ட மக்களின் உணர்வுகளையும் எமது உறுப்பினர்களின் உரிமையையும் ஒருங்கே மதித்தே வேலைநிறுத்தப் போராட்ட வடிவத்தைத் திட்டமிட்டுள்ளோம்.*
மேலும், நிவாரணப் பணிகளோடே நின்று விடாது *நிதி உதவி வழங்குவதிலும் ஜாக்டோ-ஜியோவின் உறுப்பு சங்கங்கள் தனித்தனியாகவும் பல இலட்சக்கணக்கான ரூபாய்* மதிப்பிலான பங்களிப்புகளைச் செய்துள்ளதோடே ஜாக்டோ-ஜியோ சார்பாக *ஒரு நாள் ஊதியத்தையும் வழங்க* அறிவிப்பு செய்யப்பட்டு அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

புயல் நிவாரணப் பணிக்காக ரூ.15,000/- கோடியை மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதும் எமது போராட்டக் கோரிக்கைகளில் முதன்மையான தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்துவிட்டு *பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் எமது பிடித்தத்தில் நாளது தேதி வரை அரசு செலுத்தியுள்ள 10% தொகையான ரூ.12,000/- கோடியை கஜா புயல் நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள* ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், CPS திட்டத்தினை இரத்து செய்வதன் வழியாக அரசிற்கு *இந்த டிசம்பர் 1-ம் தேதி முதலே மாதம் தோறும் ரூ.250 கோடி நிதிச் செலவினம் குறையும்."* என்று தெரிவித்துள்ளார்.

இணைப்பு : மோசஸ் அவர்களின் பேட்டி https://youtu.be/yFiZ9TyxtMs

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி! மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு இணையான கல்வி!

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தாண்டு நீட் தேர்வுக்கு 26,000 மாணவி-மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிப்பாளையத்தில் மாணவி-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும்போதே அவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் பல்வேறு புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கப்படும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆசிரியர்கள் இடமாற்றத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.  இந்தாண்டு நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறிய அவர், கஜா புயலால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமைச்சர்களின் துறையின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. அனைத்து துறையிகளிலும் ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றதிலிருந்து அவர் பணியை திறம்பட செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் வகுப்பில் எளிய எந்திரங்கள் என்னும் தலைப்பில் உள்ள பாடப்பொருளை (திறன்), மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்கும் வழி :

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகளுக்கு, வினாத்தாள் பட்டியல் தயாராகி உள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள், இறுதி வினாத்தாள் முடிவு செய்யப்பட உள்ளது.அரசு பாட திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பிளஸ் 1 தேர்வை பொறுத்தவரை, மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் போதும். 10ம் வகுப்பில், அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே, அந்த மதிப்பெண் படி, பிளஸ் 1ல், உரிய பாட பிரிவுகளைப் பெற முடியும். பிளஸ் 2வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், உயர்கல்விக்கு செல்ல முடியும்.நடப்பு கல்வி ஆண்டில், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் விபரங்களை சேகரிக்கும் பணி முடிவுக்கு வந்துள்ளது. இனி, தனி தேர்வர்களுக்கான விண்ணப்ப பதிவுகள் துவங்க உள்ளன. இந்த ஆண்டு முதல், தனி தேர்வர்களுக்கு மார்ச் மற்றும் ஜூனில் மட்டுமே தேர்வு நடத்தப்பட உள்ளது. அக்டோபர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான, வினாத்தாள் பட்டியலை, அரசு தேர்வு துறை தயாரித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் திறமையான ஆசிரியர்கள், பாட வாரியாக வினாத்தாள்களை தயார் செய்து கொடுத்துள்ளனர்.
ஒவ்வொரு பாடத்திற்குள், 10க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள வினாக்களை எடுத்தோ அல்லது ஏதாவது ஒரு வினாத்தாளையோ, தேர்வு துறை இறுதி செய்யும். இன்னும் ஒரு மாதத்திற்குள் இறுதி வினாத்தாள் தயார் செய்யப்பட்டு, அவை, அரசு அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, ரகசியமாக வைக்கப்படும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆண்டு, 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மிக கடினமான கேள்விகள் இன்றி, மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் கேள்விகள் அதிகம் இடம்பெறும் என, தெரிகிறது.மாணவர்களை பொறுத்தவரை, புத்தகத்தில் உள்ள மாதிரி கேள்விகள் மற்றும் பாடத்தின் பின்பக்க கேள்விகளை மட்டுமின்றி, பாடங்களின் அனைத்து அம்சங்களையும் படிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், பாடங்களின் எந்த பகுதியில் இருந்தும், புதிய கேள்விகள் இடம் பெறும் என, தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

திறனாய்வு தேர்வு அறிவிப்பால் குழப்பத்தில் மாணவர்கள்:

அரையாண்டு தேர்வு நேரத்தில் தேசிய திறனாய்வு தேர்வை அறிவித்துள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.எட்டாம் வகுப்பு படிக்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகைக்கான தேசிய திறனாய்வு தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.ஏழாம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஏழாம் வகுப்பு முழு பாடத்திட்டம், எட்டாம் வகுப்பில் காலாண்டு வரையிலான பாடத்திட்டம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலிடத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 வீதம் பிளஸ் 2 வரை உதவித்தொகை வழங்கப்படும்.அரசு தேர்வுகள் இயக்ககம் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.1ல் நடக்க இருந்த திறனாய்வு தேர்வு கஜா புயல் பாதிப்பால் டிச.15ல் நடக்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.அரையாண்டு தேர்வு டிச.10ல் தொடங்கி, 22-ல் முடிகிறது. தேர்வுகளுக்கு இடையில் திறனாய்வு தேர்வை வைத்துள்ளதால், மாணவர்கள் எந்த தேர்வுக்கு படிப்பது என குழம்பியுள்ளனர். எனவே, அரையாண்டு முடிந்த பிறகு விடுமுறை நாளிலோ, அல்லது ஜனவரி மாதத்திலோ இந்த தேர்வை வைக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டிரைக்' ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு, 'செக்:

அரசுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களை, பதவி உயர்வு பட்டியலில் பின்னுக்கு தள்ள, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினரும், அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பினர், ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.கூட்டமைப்பின் நிர்வாகிகளிடம், அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது.பட்டியல்இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் விபரங்களை, போலீஸ் வாயிலாக பட்டியல் எடுக்க, அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுஉள்ளது.
அதேபோல, அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர்கள் உட்பட, பள்ளிக்கு வராமல் போராட்டத்துக்கு செல்லும் ஆசிரியர்களை, ஒவ்வொரு நாளும் பட்டியல் எடுக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது.இந்த பணிகளை, மாவட்ட கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். இந்த பட்டியலின் படி, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை, கறுப்பு பட்டியலில் இடம் பெற செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. கறுப்பு பட்டியலில் இடம் பெறும் ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வின் போது, பணி மூப்பு பட்டியலில் பிந்தைய இடத்துக்கு தள்ளவும், சங்கம் இன்றி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தரவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.அபாயம்இந்த திட்டத்தால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும்; முதுநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாகவும்; தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அதிகாரிகளாகவும் பதவி உயர்வு பெறுவது பாதிக்கப்படும்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னை உட்பட, வடக்கு கடலோர மாவட்டங்களில், நாளை முதல், மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது:

சென்னை : 'வங்கக்கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னை உட்பட, வடக்கு கடலோர மாவட்டங்களில், நாளை முதல், மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குடி தண்ணீருக்கு பற்றாக்குறை வருமோ என்ற அச்சத்தில் உள்ள, வட மாவட்ட மக்கள், இந்த மழையை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழையின் தீவிரம், நவம்பர், 23க்கு பின், குறைந்து காணப்படுகிறது. இதனால், ஒரு வாரத்துக்கும் மேலாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், மழை பெரிய அளவில் பெய்யவில்லை. இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை, 112 சதவீதம் பெய்யும் என, கணிக்கப்பட்ட நிலையில், இதுவரை, 40 சதவீதத்துக்கும் குறைவாகவே பெய்துள்ளது. இதனால், வட மாவட்டங்களில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என, மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


இந்நிலையில், 'நாளை முதல், மூன்று நாட்களுக்கு, வடக்கு கடலோர மாவட்டங்களில், பரவலாக மிதமான மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.



மழை குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் அளித்த பேட்டி: வங்கக்கடலின் தென்கிழக்கில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது, மேற்கு திசையில் நகரும் நிலையில், நாளை முதல், மூன்று நாட்களுக்கு, லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யலாம்.

கன மழை :

நாளை மற்றும் நாளை மறுநாள், சென்னை மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களின் சில இடங்களில்,
கனமழை பெய்யும். மற்ற இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மழை குறைவால், குடிநீருக்கு திண்டாட்டம் வருமோ என்ற, அச்சத்தில் உள்ள, வட மாவட்ட மக்கள், மூன்று நாள் மழையை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

சென்னை வானிலை மையத்தின், மாவட்ட வாரியான முன் கணிப்பின்படி, திருவள்ளூர், விழுப்புரம், கடலுார் மற்றும் புதுச்சேரியில், இன்று அதிக மழை பெய்யும்.
வரும், 5ம் தேதி, எந்த மாவட்டத்துக்கும் கனமழை எச்சரிக்கை இல்லை. 6ம் தேதி, வேலுார், திருவண்ணாமலை, ஈரோடு, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு, மழை முன்னறிவிப்பு விடப்பட்டு உள்ளது.

'திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதை ஒட்டி உள்ள, சென்னையின் சில பகுதிகள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், இடைவெளி விட்டு, இரண்டு நாட்கள் மழை பெய்யும்' என, தனியார் வானிலை யாளர்கள் கணித்துஉள்ளனர்.
வெயில் :

நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் எந்த இடத்திலும், 1 செ.மீ., கூட மழை பதிவாகவில்லை. சென்னை, வேலுார், சேலம், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களில் மிதமாகவும், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகமாகவும் வெயில் கொளுத்தியது. மாலையிலும், அதிகாலையிலும், குளிர்பனி நிலவியது.

இனி தமிழக அரசு பள்ளிகளில்., இட்லி, பூரி, பொங்கல்., களத்தில் இறங்கியது தமிழக அரசு.!!

தமிழக அரசு பள்ளிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜ் அய்யா அவர்களால் கொண்டுவரப்பட்ட மதிய உணவு திட்டத்தை, பின் மறைந்த முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தி, ஏழை மாணவர்களின் பசியை போக்கி, கல்வியை போதித்தனர்.

இந்த திட்டம் இன்றுவரை மென்மேலும் பல நல்ல மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி கொடுப்பதற்கு தமிழக அரசு செயல்படுத்தப்படவுள்ளதாக, தமிழக அமைச்சர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் எம்.மணிகண்டன், ''மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள், மடிக்கணினி, சீருடைகள் என 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக'' தெரிவித்தார்.


மேலும், தற்போது சிறப்பாக மசெயல்பட்டு வரும் சத்துணவு திட்டத்தோடு, கூடிய விரைவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையிலும் சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்

TRB - சிறப்பாசிரியர் பணி நியமனம் - இடஒதுக்கீட்டிலும் முறைகேடு - வழக்கு தொடர தேர்வர்கள் ஆயத்தம்!

ஜாக்டோ ஜியோ போராட்டம்திங்கட்கிழமை வரை போராட்டத்தை ஒத்தி வைக்க இயலுமா என தகவல் பெற்று தெரிவிக்க ஜாக்டோ ஜியோ தரப்பு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!



ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - முழு விவரம் :

மதுரை : ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்படுவதாக மதுரை ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(டிச.,04) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் லோகநாதன் என்பவர் மனுத்தாக்கல் செய்யதிருந்தார். இதில், கஜா புயல் பாதிப்பு, அரையாண்டு தேர்வு சமயத்தில் போராட்டம் நடத்துவது பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கேட்கப்பட்டிருந்தது. கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் இன்று (டிச.,3) பகல் 1 மணிக்கு இந்த அவசர வழக்கை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு வந்த போது, போராட்டத்தை டிச.,10 வரை ஒத்திவைக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன் பகல் 1.30 மணிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதில், கோர்ட் அறிவுறுத்தலை ஏற்று டிச.,10 வரை தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாக்டோ ஜியோ ஊதிய விவகாரம் தொடர்பாக கடந்த முறை பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஒரு நபர் கமிஷனின் பரிந்துரையையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது

போராட்டத்திற்கு தடை இல்லை - தற்காலிகமாகவே ஒத்திவைப்பு - ஜாக்டோ ஜியோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

                         


ராஜஸ்தானில் தமிழ் கற்கும் குழந்தைகள்: மகிழ்ச்சியில் பெற்றோர்கள் :

ராஜஸ்தான் மாநிலத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் குழந்தைகளுக்கு தமிழ் வழிக் கற்றல் பயிற்சியை இளைஞர் ஒருவர் அளித்துவருகிறார். இலவசப் பயிற்சி மூலம் தமிழ் கற்றுக் கொள்ளும் குழந்தைகளின் பேச்சாற்றலைப் பார்த்து அவரது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.உலக அளவில் மூத்ததும் முன்னோடியுமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. உலகம் முழுவதும் போற்றப்படும் தமிழ் மொழியை ராஜஸ்தானில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக கற்றுத் தருகிறார் முருகானந்தம். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று ஒரு திட்டம் தொடர்பாக ராஜஸ்தான் சென்றுள்ளார். தலைநகர் ஜெய்ப்பூரில் வசித்து வரும் முருகானந்தம், அங்குள்ள தமிழர்கள் குடும்பங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தமிழ் வகுப்பை நடத்தி வருகிறார்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்பது என்பது கடினமாக உள்ள சூழலில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை 3 மணிநேரம் வளரும் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்சி அளிக்கிறார் முருகானந்தம்.திருக்குறள், ஆத்திச்சூடி, புறநானூறு மற்றும் பாரதியார் பாடல்களை கற்கும் குழந்தைகள் தமிழை சரளமாக பேசக் கற்றுக்கொண்டுள்ளதாக அவர்களது பெற்றோர்கள் மகிழ்ச்சிபொங்க தெரிவிக்கின்றனர்.மூத்த மொழியான தமிழை கற்பதில் பெருமைகொள்வதாக பயிற்சி பெற்று வரும் குழந்தைகளும் தெரிவிக்கின்றனர். இதேபோன்று உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதன் மூலம், தமிழின் பெருமை பரவிக்கிடக்கும் என்பதில் ஐயமில்லை

கேள்வி கேட்கும் திறனை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை

மேட்டுப்பாளையம்: ஆசிரியா்களிடம் மாணவர்கள் கேள்வி கேட்கும் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும் என பெங்களூரு இஸ்ரே முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மூலத்துறை நடுநிலைப் பள்ளியின் 133-வது ஆண்டு விழாவில், பெங்களூரு இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது:அரசுப் பள்ளியில்தான் எனது படிப்புத் தொடங்கியது. கல்வி கற்கும்போது மாணவா்களுக்குத் தடை ஏதும் இருக்கக் கூடாது. கிடைக்கு சந்தர்ப்பங்களை பள்ளி மாணவா்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவா்களின் எதிர்காலம் ஆசிரியா்களின் கையில்தான் உள்ளது.

இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மாணவர்களின் கல்வி அறிவு அவசியமாக உள்ளது. ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம் கோடிக்குமேல் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு செலவு செய்து வருகிறது. இதை மாணவா்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆசிரியா்களிடம் மாணவா்கள் கேள்வி கேட்கும் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும்.

 திறமையும், தகுதியான பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நிறைய போ் உள்ளனர் என கூறினார்

புயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் ரத்து? - தங்கமணி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக, முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின் சீரமைப்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தேவைக்கு அதிகமாகவே உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீர் செய்யும் பணிகளை அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், கருப்பணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

குழந்தைகளுடன் கேக் வெட்டி மகிழ்ந்த ஆட்சியர் ரோகிணி:

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக நடந்த இந்த விழாவில் மனவளர்ச்சி குன்றிய செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைந்த 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் பங்கேற்றனர். விழாவில் 15 கிலோ எடையுள்ள பெரிய கேக் வெட்டி, குழந்தைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

3/12/18

குழந்தை பிறந்த மூன்றாம் நாள்-----உடல்நலம் மருத்துவம்,


குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை (கடைகளில் விற்கப்படும் எண்ணெய் இல்லை) உள்ளங்கையில் விட்டு, சிறிது தாய்ப்பால் சேர்த்து நன்கு குழைத்து, குழந்தையின் நாக்கில் தடவினால், குழந்தையின் வயிற்றில் உள்ள கறுப்பு மலம் வெளியேறிவிடும்.

குழந்தை பிறந்த ஐந்தாம் நாள் வெற்றிலைச் சாறு, தாயப்பால், கோரோஜனை ஒரு அரிசி எடை அளவு கலந்து புகட்டினால் சளி இருந்தால் வெளியேறிவிடும்.

ஏழாம் நாள் துளசிச்சாறு எடுத்து தாய்ப்பாலில் கலந்து புகட்டினால் சளி கரையும். குழந்தைக்கு தலைக்குக் குளிப்பாட்டும் போது கொடுக்க (11ம் நாள்) சுக்கு, சித்தரத்தை, ஜாதிக் காய், மாசிக்காய் எல்லாவற்றையும் பாலில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். வெந்த சாமான்களை நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளவும். குழந்தையைத் தலைக்குக் குளிப்பாட்டியவுடன் ஒரு சந்தனக் கல்லில் பாலில் வேக வைத்த இந்தச் சாமான்களை ஒரு முறை இழைத்து தாய்ப்பால் சேர்த்து (ஒரு கட்டிப் சுத்தமான பெருங்காயத்தையும் (100கிராம் ருபாய் 1000 முதல் 1400 இருக்கும்) இந்தச் சாமான்களுடன் வைத்துக் கொள்ளவும்.) பெருங்காயத்தையும் ஒரு இழை இழைத்து எல்லாவற்றையும் சேர்த்துப் புகட்டலாம்.

சுக்கு வாயுவைக் கலைக்கும் - சித்தரத்தை சளி பிடிக்காது ஜாதிக்காய் தூக்கம் வரும் மாசிக்காய் பேதி ஆகாது - காயம் வாயுவைக் கலைக்கும்.

குழந்தைக்கு வயிற்று வலி இருந்தால் நாமக் கட்டியை இழைத்து, தொப்புளில் போடலாம்.

வசம்பு வாங்கி வந்து உப்புத் தண்ணீரில் நனைத்து, நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். "குழந்தை வயிற்று வலியால் " அழுதால் சந்தனக் கல்லில் ஒரு இழை இழைத்து தாய்ப்பால் கலந்து ஒரு பாலாடை அளவு புகட்டலாம். சுட்ட வசம்பின் சாம்பலை ஒரு வெற்றிலையில் போட்டு சிறிது தேன் கலந்து, நன்கு குழைத்து குழந்தையின் நாக்கில் தடவினாலும் வயிற்று வலி சரியாகும்.

கொய்யா இலையை நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து கொடுத்தால், பேதி நின்றுவிடும்.(இது பெரியவர்களுக்கும் பொருந்தும்).

வெண் புழுங்கல் அரிசியை ஊற வைத்து, ஓமம், உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்து தேன் குழல் அச்சில் மாவைப் போட்டு, ஒரு துணியில் சிறுசிறு வில்லைகளாகப் பிழிந்து காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வில்லையை எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் 5 நிமிடம் வைத்தால் வெந்து விடும். கீழே இறக்கி வைத்து சிறிது நாட்டு பசும் பால், சுத்தமான நாட்டு சர்க்கரை சேர்த்து ஊட்டினால் குழந்தை புஷ்டியாக வளரும்.

ஆறு மாதக் குழந்தைக்கு, வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து, வடி கட்டிக் கொடுத்தால், வயிற்றில் பூச்சி வராது.
கேழ்வரகு இரண்டு ஸ்பூன் முதல் நாள் ராத்திரி ஊற வைத்து, மறுநாள் காலை மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் சிறிது தண்ணீர் வைத்து அரைத்த கேழ்வரகு விழுதை ஒரு துணியில் போட்டு வடிகட்டி, அந்தப் பாலைப் போட்டு கைவிடாமல் கிளறி (2 நிமிடம்) இறக்கவும். பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம்

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன், ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த, அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால், குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். தேன் தடவுவதால், நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.
தினமும் இரவில் விளகேற்றியவுடன், சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து, குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, பின் சிறிது தொப்புளைச் சுற்றி தடவ வேண்டும். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி, அதை விளக்கில் வாட்டி, பொறுக்கும் சூட்டில், குழந்தையின் தொப்புள் மேல் போட்டால், அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்.
நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் கிடைக்கும். அதை வாங்கி, வேகும் சாதத்தில் போட்டு எடுத்து, உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால், நாக்கில் உள்ள மாவு அகன்று, குழந்தை ருசித்துப் பால் குடிக்கும்.