யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/16

நீதிபதிகள் நியமனம்: மத்திய அரசு முடிவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!!!

கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் பட்டியலில் இடம்பெற்ற, 43 பேரின் நியமனத்தை ரத்து செய்த, மத்திய அரசின் நடவடிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
மோதல்:

ஐகோர்ட்களில் காலியாக உள்ள நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஐகோர்ட்களில் நீதிபதிகளாக நியமிக்க 77 பேரது பட்டியலை சுப்ரீம் கோர்ட்டின் கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதில் 34 பேரது பெயரை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, 43 பெயரை திருப்பி அனுப்பியது. இதனை கடந்த 11ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி தாக்கூர் கூறுகையில், 43 நீதிபதிகள் பெயரை நிராகரித்த மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது. அவர்களின் பெயர்களை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறி, இந்த பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக