யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/16

ரூபாய் நோட்டை மாற்ற கட்டுப்பாடு ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!!

பழைய ரூபாய் நோட்டை மாற்ற, புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

என்ன பிரச்னை?

அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், கோர்ட் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை. இதேநிலை தொடர்ந்தால், தெருக்களில்கலவரம் தான் நடக்கும்.

தற்போது பிரச்னை தீவிரமாக உள்ளது. ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை தான் மத்திய அரசு வாபஸ் பெற்றது. ஆனால் ரூ.100 நோட்டுக்களுக்கு என்ன ஆனது? கடந்த முறை வழக்கு விசாரணையின் போது, மக்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், தற்போது பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றும் அளவு ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன பிரச்னை நிலவுகிறது. பணம் அச்சிடுவதில் பிரச்னை உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

நிவாரணம்:

இதற்கு பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர், பணம் அச்சிடுவதில் மட்டும் பிரச்னை இல்லை. இந்தியா முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான வங்கிக்கிளைகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது. ஏ.டி.எம்., மையங்கள் மறு சீரமைக்கப்பட வேண்டியுள்ளது. விவசாயிகள், வர்த்தகர்கள், திருமணம் ஏற்பாடு செய்துள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக