யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/16

பள்ளிகளில் தினந்தோறும் தேர்வு நடத்த உத்தரவு செலவு அதிகரிப்பால் ஆசிரியர்கள் அவதி

பள்ளிகளில்தினந்தோறும் தேர்வு நடத்த உத்தரவு: செலவு அதிகரிப்பால் ஆசிரியர்கள் அவதி.தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை உத்தரவுப்படி, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தினந்தோறும் தேர்வுகளை
நடத்த ஆகும் நிதிச்செலவுகளை யார் ஏற்பது என்பதில்ஆசிரியர்களிடையே குழப்பம் அதிகரித்து வருகிறது.


அனைத்துதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும்1 முதல் எட்டாம் வகுப்பு வரைமாணவர்களுக்கு தினந்தோறும் ஒரு பாடத்துக்கு தேர்வுநடத்த வேண்டும் எனவும், இதற்கான வினாத்தாள்தமிழகம் முழுமைக்கும் சேர்த்து சென்னையில் தயாரிக்கப்பட்டு உதவி தொடக்கக் கல்விஅலுவலகங்கள், குறுவள மையங்கள் மூலமாகபள்ளிகளுக்கு அனுப்பப்படும் எனவும் அண்மையில் தமிழகபள்ளிக் கல்வித் துறையில் அறிவித்துள்ளது.


இந்தத்தேர்வுகள் நவம்பர் 14 முதல் நடத்தப்பட வேண்டும், மாணவர்களுக்கு இத்தேர்வுகளை நடத்தி, அதன் நகலைஉயர் அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்யும்போதுகாண்பிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதைத் தொடர்ந்து அந்தந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர்அலுவலகங்களில் அனைத்து தொடக்க மற்றும்நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்கூட்டம் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்டது.அதில், அனைத்து குறுவளமையப் பொறுப்பாளர்களுக்கும் அந்த வாரத்துக்கான வினாத்தாள்கள், ஒரு குறுவள மையத்துக்கு ஒன்றுவழங்கப்பட்டு அவற்றை நகல் எடுத்துஅவர்களுக்குக் கீழ் உள்ள பள்ளிகளுக்குஅளித்து மாணவர்களுக்கு தனித்தனியாக தேர்வுகளை நடத்த வேண்டும்என அறிவுறுத்தப்பட்டது.


குறுவளமையங்களின் கீழ், பத்துக்கும் மேற்பட்டபள்ளிகள் உள்ள நிலையில், அதன்பொறுப்பாளர்களிடம் வினாத் தாள்களைப் பெற்றுக்கொண்ட தலைமை ஆசிரியர்கள் அதைநகலெடுத்து மாணவர்களுக்கு வழங்க பள்ளியில் 50 மாணவர்கள்எனும் நிலையில் தினமும் இரு பக்கம்கொண்ட அந்த வினாத்தாளை நகலெடுத்துவழங்க ஆகும் செலவை யார்ஏற்பது எனக் கேட்கின்றனர்.


இதுகுறித்துஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பள்ளியின் கரும்பலகையில் எழுதித் தேர்வுகளை நடத்துங்கள்என கல்வித் துறை அலுவலர்கள்தெரிவித்துள்ளனர்.ஆனால் ஒரு பள்ளியில்ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ள நிலையில், இருஆசிரியர்கள் பள்ளிகளில் இரு கரும் பலகைகளில்ஐந்து வகுப்புகளுக்கான வினாக்களை எழுதித் தேர்வு நடத்துவதுஎப்படி எனக் கேட்கின்றனர். ஒருசில பள்ளிகளில் ஒரே வகுப்பில் படிக்கும்மாணவர்களை குழுவாக அமரச் செய்துஒருவரிடம் வினாத்தாளை அளித்து, அதை மற்ற மாணவர்கள்பார்த்து எழுதிக் கொள்ளச் செய்கின்றனர்.இதனால் பள்ளிகளில் உள்ளமாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசே வினாத்தாள்களைதயாரித்து வாரந்தோறும் பள்ளிகளுக்கு வழங்கினால் ஆசிரியர்கள், தேர்வுகளை நடத்த எளிதாகும் என்கின்றனர்.


இதுகுறித்துபெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், இத்திட்டம் அருமையானத் திட்டம் எனவும், தனியார்பள்ளிகளில் நடைபெறும் இதுபோன்ற கற்றல் கற்பித்தல் முறைகளைஅரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்தும் தமிழக அரசின் இத்திட்டம்பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்தனர்.எனவேஅரசு உயர் அதிகாரிகள் உடனடிநடவடிக்கை எடுத்து ஆசிரியர்களுக்கான பொருளாதாரசுமையைக் குறைத்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள்வலியுறுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக