யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/16

ஆசிரியர்களை தக்க வைக்க பள்ளிகளில் வட மாநில சிறுவர்கள்

அரசு மற்றும் உதவி பெறும்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவருகிறது. ஆங்கில வழி கல்விஆரம்பித்ததை தொடர்ந்து, அரசு பள்ளிகள் ஓரளவுமாணவர்களை தக்க வைத்து கொண்டன. உதவி பெறும்
பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி சுய நிதிபிரிவாகத்தான் செயல்பட முடியும் என்பதால், இப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனால் மாணவர்கள் குறைவால், உபரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.

மாணவர்கள்எண்ணிக்கை குறையும் பட்சத்தில், உபரி ஆசிரியர்கள் வேறுபள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட வேண்டும். மாணவர்களின் வருகையை அதிகரிக்கவும், ஆசிரியர்களைதக்க வைக்கவும், பள்ளி நிர்வாகங்கள் பல்வேறுநடைமுறைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில்உள்ளன.



இந்நிலையில்தேவகோட்டையில் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்வதற்காக 14 பீகார் மாநில சிறுவர்கள், காரைக்குடி ரயில் நிலையத்திற்கு வந்துஇறங்கினர். அவர்களை அழைத்து செல்லபள்ளி நிர்வாக தரப்பில் யாரும்வராததால், போலீசார் அவர்களை மீட்டு விசாரணைநடத்தினர்.

போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: தேவகோட்டையில் உள்ள பள்ளியில் ஏற்கனவேபீகார் மாநிலத்தை சேர்ந்த சில மாணவர்கள்படிக்கின்றனர். இவர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திகொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுதி அமைக்கஎவ்வித அனுமதியும் இல்லை. அவ்வாறு தான்இவர்களையும் பள்ளியில் சேர்க்க அழைத்து வந்துள்ளனர்.

ஆனால் பள்ளி நிர்வாகம் தரப்பில், நாங்கள் யாரையும் அழைத்து வர சொல்லவில்லைஎன்கின்றனர். இந்த மாணவர்களை அழைத்துவந்தது அவர்களது பெற்றோருக்கு தெரியப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. பெற்றோரைதொடர்பு கொள்ள

முயற்சித்துவருகிறோம், என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக