யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/16

போர்க்கால அடிப்படையில் ஏடிஎம்கள் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது - அருண் ஜெட்லி பேட்டி !!

புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை வழங்கும் விதமாக ஏடிஎம்களை மறுசீரமைப்பு செய்யும் பணியானது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறிஉள்ளார். நிதிமந்திரி அருண் ஜெட்லி பேசுகையில்,புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கும் விதமாக ஏடிஎம்களை

மறுசீரமைப்பு செய்யும் பணியானது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.கடந்த சிலநாட்களாக நாங்கள் புகார்களை பெற்றுவந்தோம், ஆனால் இப்போது புகார்களின் எண்ணிக்கையானது குறைந்து உள்ளது. ஏனென்றால் நாங்கள் எந்தஒரு இடையூறும் ஏற்பட கூடாது என்று உள்ளோம்.கடந்த 7 நாட்களில் கோடிக்கணக்கான பழைய நோட்டுகளை தீர்க்கப்பட்டதில் வங்கி ஊழியர்களின் பாராட்டத்தக்க பணிக்காக அவர்களை பாராட்ட விரும்புகின்றேன். கடந்த 7 நாட்களில் வங்கிகள் கூட்டத்தை குறைத்து உள்ளன. இதில் பீதியடைய எதுவும் தேவையில்லை. இதில் சிலர் சிரமத்தை எதிர்க்கொண்டது மிகவும் துரதிஷ்டவசமானது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம், இது நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். பெரும்பாலான மாநில முதல்-மந்திரிகள் இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர், அவர்களுடைய ஒத்துழைப்பிற்கு நன்றி, அவர்களை நான் பாராட்டுகின்றேன். இருப்பினும் சில முதல்-மந்திரிகள் பீதியை ஏற்படுத்துகின்றனர். ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விவாதத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் ஓடுகின்றன என்று நான் நினைக்கின்றேன். தேசிய கட்சியான காங்கிரஸ் இந்நகர்விற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும், மாறாக அவர்கள் தடை ஏற்படுத்துகின்றனர், பயங்கரவாத தாக்குதலுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். கருப்பு பணம் ஒழிப்பு மற்றும் பயங்கரவாத நிதியை ஒழிக்கும் நடவடிக்கையை எதிர்ப்பதில் காங்கிரஸ் கட்சிக்கான நன்மை என்ன?. விவாதத்திற்கு யார் பதிலளிக்க வேண்டும் என்பது அரசை சார்ந்தது. 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதை திரும்பப்பெறும் கேள்விக்கே இடம் கிடையாது என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக