யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/12/16

ஆல் பாஸ்' முறையில் திருத்தம் : விரைவில் வருகிறது மசோதா

எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி என்ற, 'ஆல் பாஸ்'
முறையில் மாற்றம்கொண்டு வரும்வகையில், கல்விஉரிமை சட்டத்தில்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது,'' என, மத்தியமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர்தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:

எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கும் முறை தற்போதுஉள்ளது. இந்தகொள்கையில் மாற்றம் செய்யும அதிகாரம், மாநிலங்களுக்குஅளிக்கப்பட உள்ளது. இதற்காக, கல்வி உரிமைசட்டம், திருத்தம்செய்யப்பட உள்ளது.மத்திய அமைச்சரவைகூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, பின், மசோதா தாக்கல்செய்யப்படும். ஒரு மாணவனுக்கு, ஓராண்டு காலம்வீணாகக் கூடாது. அதனால், ஆண்டுதேர்வில் தோல்விஅடையும் மாணவனுக்குஇடைப்பட்ட காலத்தில்மறுவாய்ப்பு அளித்து, கல்வியைத் தொடர வாய்ப்புஅளிக்க வேண்டும்.


சி.பி.எஸ்.இ., எனப்படும்மத்திய கல்விவாரியத்தின் கீழ் படிக்கும், 10ம் வகுப்புமாணவர்களுக்கு, மீண்டும் பொதுத் தேர்வு கொண்டுவருவது குறித்து, இம்மாத இறுதியில்நடக்கும் சி.பி.எஸ்.இ., கூட்டத்தில்முடிவு செய்யப்படும். அடுத்த கல்வியாண்டுமுதல், சி.பி.எஸ்.இ., 10ம்வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக