யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/12/16

RTI - தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாணை இல்லை.

THANKS: MR.A.JAYAPRAKASH
  தமிழகத்தின் அரசுஅலுவலகங்களில் CPSல் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு
மாதாந்திர ஓய்வூதியம், வழங்குவது தொடர்பாக தமிழகஅரசிடம் அரசாணைஇல்லையென நிதித்துறை பதில்
வழங்கி உள்ளது. அதன்விவரம் பின்வருமாறு
பழைய ஓய்வூதிய திட்டத்தில், தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வுபெறும், அரசுஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு மாதாந்திர (அகவை முதிர்வு) ஓய்வூதியம், பணிபுரியும் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மரணமடைந்தால், அந்த ஊழியர்களின்கணவன் (அ) மனைவிக்கு
மாதந்தோறும் குடும்ப ‌ஓய்வூதியம், விருப்ப ஓய்வூதியம், இயலாமை
ஓய்வூதியம், ஈடுகட்டும்(அ)இழப்பீட்டு ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம்,
மற்றும் இரக்க ஓய்வூதியம்என்னும் ஓய்வுபெறும் தன்மைக்குஏற்ப 7 வகையான ஓய்வூதியம் நடைமுறையில் தமிழகஅரசால் வழங்கப்பட்டுவருகிறது.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்ததிரு.ஜெயப்பிரகாஷ்என்பவர் CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மாதந்தோறும் வழங்க வேண்டுமென, தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளஅரசாணை எண்(ம) நாளைகுறிப்பிடவும்,
மேலும் இந்த அரசாணையின்நகலை வழங்கவும். என்று தமிழகஅரசின் நிதித் துறைக்கு 26.09.2016 நாளிட்ட மனுவில்வரிசை எண்1 முதல் 6 வரையான தகவல்களை கோரி RTI 2005இன்கீழ் கடிதம்அனுப்பினார். நிதித் துறையின் கடித எண்.53857/நிதி(PGC-1)/2016 நாள்:24.10.2016. என்ற கடிதத்தில்மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்குஅரசாணை இல்லைஎன பதில் வழங்கப்பட்டுள்ளது.

CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தில், தமிழகத்தின் அரசு
அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ள/ஓய்வுபெறும், அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திரஓய்வூதியம், குடும்ப ‌ஓய்வூதியம்,விருப்ப ஓய்வூதியம், இயலாமைஓய்வூதியம் ஈடுகட்டும்(அ)இழப்பீட்டு ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம்மற்றும் இரக்கஓய்வூதியம் என்னும் 7 வகையான ஓய்வூதியம் வழங்குவதுதொடர்பாக தமிழகஅரசிடம் அரசாணைஇல்லை.

அரசாணை இல்லையென்பதை விட, இன்னும் அரசால்அரசாணை பிறப்பிக்கப்படவில்லை
என்பதே உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக