யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/12/15

மேலும் ஒரு காற்று அழுத்த தாழ்வு

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை மைய இயக்குனர் ரமணன் நேற்று கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கும் வட தமிழகத்துக்கும் இடையே, இரு நாட்களுக்கு முன் நிலை கொண்டிருந்த காற்று அழுத்த தாழ்வு மறைந்து விட்டது.
தற்போது அதே இடத்தில், புதிய காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இதனால், தமிழக டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.நேற்று காலை, 8:30 மணி வரை தமிழகத்தில் அதிகபட்சமாக, கடலுார் - 13; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் - 12; மதுரை மாவட்டம், பெரியாறு - 11; திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் - 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும், 50 செ.மீ., மழை?'சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், அடுத்த இரு நாட்களில், மீண்டும் 50 செ.மீ., மழை பெய்யும்' என தனியார் வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன.ஓய்வு பெற்ற வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஒய்.இ.ஏ.ராஜ் கூறியதாவது:

இரு தினங்களுக்கு முன் தாம்பரத்தில் 49 செ.மீ., மழையும், சென்னை மற்றும் பிற சுற்றுப் பகுதிகளில், 29 - 36 செ.மீ., மழையும் பெய்தது, மிக அதிகபட்சமானது. இதுபோன்ற நிலை எதிர்பாராமல் நடப்பது. மீண்டும் இதேபோல மழை பெய்யுமா என்பதை கணிக்க முடியாது. தற்போது நிலவும் வானிலை நிலவரப்படி, மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு குடிநீர் பாக்கெட் ரூ.10; வாழைப்பழம் ரூ.20

வெள்ளம் பாதித்த பகுதிகளில், மக்கள் நிற்கதியாக தவிக்கும் நிலையில், ஒரு குடிநீர் பாக்கெட், 10 ரூபாய்க்கும், ஒரு வாழைப்பழம், 20 ரூபாய்க்கும் விற்கும் கொடூரம் சென்னையில் நடக்கிறது.
சென்னை, சைதாபேட்டை பகுதியில், நேற்று காலை, வழக்கமாக, ஒரு ரூபாய்க்கும் விற்கும் குடிநீர் பாக்கெட், 10 ரூபாய்; ஒரு வாழைப்பழம், 20 ரூபாய்; 10 ரூபாய் பிஸ்கட் பாக்கெட், 20 ரூபாய்க்கு விற்கப்பட்டன. அங்குள்ள ஓட்டல் மூடப்பட்டு, டோக்கன் கொடுத்து உணவுகள் தரப்பட்டன. இரண்டு இட்லி, 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று முன்தினம் போல், நேற்றும், அரை லிட்டர் பால் பாக்கெட், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. குடிநீர் கேன், 50 - 75 ரூபாய் வரை, அநியாயமாக விலை வைத்து வியாபாரிகள் விற்றனர். விலை உயர்வு கடும் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், பாதிப்பு பகுதி மக்கள், இதுவாவது கிடைக்கிறதே என, வேறு வழியின்றி வாங்கிச் சென்றனர்.
'ஆபத்து நேரத்தில் மக்களுக்கு முடிந்த அளவு உதவி செய்வதை விட்டுவிட்டு, இதுபோன்று கூடுதல் விலை வைத்து விற்பது மனிதாபிமானமற்ற செயல்' என, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


முட்டை, பிரட் தட்டுப்பாடுமெழுகுவர்த்தியும் இல்லை

சென்னை முழுவதும் மின் தடை நீடிப்பதால், மெழுகுவர்த்திக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடைகளில் இருந்த, 'ஸ்டாக்' ஒரு நாளுக்கு கூட போதுமானதாக இல்லை. எமர்ஜென்சி விளக்கு இல்லாத வீடுகள், குடிசைப் பகுதிகளில், சிம்னி விளக்கு ஏற்றக் கூட, கெரசின் கிடைக்கவில்லை. மழை பாதிப்பு பெரிதாக இல்லாத பகுதிகளில், சமையல் எண்ணெய், முட்டை, பிரட் உள்ளிட்ட பொருட்கள் எந்த கடைகளிலும் கிடைக்கவில்லை; நிலைமை சீராக, ஓரிரு நாளாகும் என, வணிகர்கள் தெரிவித்தனர்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய வசதி

சென்னையில், வெள்ளம் பாதித்த பகுதிகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள, தமிழகத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இணைந்து, தகவல் தொடர்பு மையத்தை ஏற்படுத்தி உள்ளனர்.வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியவர்கள், உதவி கோரி தொடர்பு கொள்வதற்காக, பல துறைகள் சார்பில் தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. 

இவற்றைத் தொடர்பு கொள்வதிலும், இங்கு வரும் தகவல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக கிடைப்பதிலும் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்த விவரங்களை, துறை அதிகாரிகள் அறிந்துகொள்ள, தமிழகத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 15 பேர் சேர்ந்து, 24 மணி நேரமும் செயல்படும் வகையில், பிரத்யேக தகவல் தொடர்பு மையத்தை துவக்கியுள்ளனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், திண்டுக்கல் எஸ்.பி., சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் இணைந்து உள்ளனர்.
இந்த மையத்துக்கு தகவல் தெரிவிக்க, 080400 01000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 'வாட்ஸ் ஆப்' வாயிலாக தகவல் தெரிவிக்க, 98806 55555 எண்ணிலும், 'டெலிகிராம்' ஆப் வாயிலாக தொடர்பு கொள்ள, 72597 60333 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

வெள்ளத்தால் வீடு, வாகனங்கள் நாசம் ரூ.1,000 கோடியை தாண்டிய இழப்பீடு


வெள்ளத்தில், வாகனம், வீடுகளை இழந்த பாலிசிதாரர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரி உள்ளனர்.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், நவ., 7 முதல், கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆற்று ஓரங்களில் இருந்த வீடு, தொழிற்சாலைகளில், தண்ணீர் உட்புகுந்துள்ளது. சாலைகளில், நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் மழைநீரில் மூழ்கின.

இதையடுத்து, வாகனம், வீடு உள்ளிட்டவற்றை இன்சூரன்ஸ் செய்த பாலிசிதாரர்கள், இழப்பீடு கோரி அதிகளவில், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரியுள்ளனர்.

இதுகுறித்து, காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:மழையால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களின் வசதிக்கு, சென்னையில் உள்ள அரசு பொது காப்பீட்டு நிறுவன அலுவலகங்களில், தனி பிரிவு துவக்கப்பட்டு உள்ளது. இதற்காக, தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொது மற்றும் தனியார் துறையில் உள்ள, 25 காப்பீட்டு நிறுவனங்களில், நவ., 7 முதல், நேற்று வரை, 2,000 பேர், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரியுள்ளனர். இந்த எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளத்தில் மிதக்கும்அரசு அலுவலகங்கள்

கன மழையால், மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட, அரசு அலுவலகங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.சென்னை, கே.கே.நகரில், மாற்றுத்திறனாளி நலத்துறை இயக்குனரகம்; கிண்டி, திரு.வி.க., தொழிற் பேட்டையில் சமூக நலம், சத்துணவு திட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன.

கன மழையால், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. பல அடி உயரத்திற்கு தேங்கி உள்ள தண்ணீரால், அலுவலகத்தில் இருந்த மருத்துவ உபகரணங்கள் சேதம் அடைந்தன. அடையாறு ஆற்றின் வெள்ள பெருக்கால், சமூக நலத்துறை அலுவலகத்தில் தண்ணீர் புகுந்து, முக்கிய ஆவணங்கள் நனைந்து உள்ளன.

தமிழக அரசு இணையதளம் முடக்கம்

சென்னை :தமிழக அரசு இணையதளம் நேற்று முடங்கியது.சென்னையில் மழை வெள்ளம் காரணமாக, மொபைல் போன் இணைப்புகள் செயல் இழந்துள்ளன. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளமும் நேற்று இயங்கவில்லை. இதனால், அரசு செய்திக்குறிப்புகளை மக்கள் பார்க்க இயலவில்லை. இதேபோல், பெரும்பாலான இணையதளங்களை, மக்கள் நேற்று பார்க்க இயலவில்லை.

நீங்க ஓ.கே.,வா?': 'பேஸ்புக்' அசத்தல்

சமூகவலைத் தளமான, 'பேஸ்புக்,' சென்னைவாசிகளுக்காக பிரத்யேக வசதியை, நேற்று ஏற்படுத்தியிருந்தது.சென்னையில், இரண்டு நாட்களாக, மொபைல்போன் சேவை செயல் இழந்துள்ள நிலையில், 'பேஸ்புக், டுவிட்டர்' போன்றவை மட்டும் வெளியுலக தொடர்பு சாதனமாக இருந்து வருகின்றன.
அதை உணர்ந்த, 'பேஸ்புக்' நிர்வாகம், சென்னையை சேர்ந்த தன் பயன்பாட்டாளர்களுக்கு, 'நீங்கள் ஆபத்தில் இருக்கீங்களா அல்லது பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என்பதை, 'ஆர் யூ ஓ.கே.,?' எனக் கேட்டு தகவல் அனுப்பியது. அதற்கு, 'ஓ.கே.' என்று, 'கிளிக்' செய்தால், உடனே அவர்களின் பெயரை குறிப்பிட்டு, நட்பு வட்டாரங்களுக்கு, தகவல் அனுப்பியது. அதனால், தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தாலும், தங்கள் நேசத்துக்கு உரியோர் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பதை அறிந்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.
தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இந்த வசதியை, 'பேஸ்புக்' ஏற்படுத்தி தருவது குறிப்பிடத்தக்கது

மேலும் ஒரு காற்று அழுத்த தாழ்வு

சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வானிலை மைய இயக்குனர் ரமணன் நேற்று கூறியதாவது: 
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கும் வட தமிழகத்துக்கும் இடையே, இரு நாட்களுக்கு முன் நிலை கொண்டிருந்த காற்று அழுத்த தாழ்வு மறைந்து விட்டது. தற்போது அதே இடத்தில்,
புதிய காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இதனால், தமிழக டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.நேற்று காலை, 8:30 மணி வரை தமிழகத்தில் அதிகபட்சமாக, கடலுார் - 13; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் - 12; மதுரை மாவட்டம், பெரியாறு - 11; திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் - 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும், 50 செ.மீ., மழை?'சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், அடுத்த இரு நாட்களில், மீண்டும் 50 செ.மீ., மழை பெய்யும்' என தனியார் வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன.ஓய்வு பெற்ற வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஒய்.இ.ஏ.ராஜ் கூறியதாவது:

இரு தினங்களுக்கு முன் தாம்பரத்தில் 49 செ.மீ., மழையும், சென்னை மற்றும் பிற சுற்றுப் பகுதிகளில், 29 - 36 செ.மீ., மழையும் பெய்தது, மிக அதிகபட்சமானது. இதுபோன்ற நிலை எதிர்பாராமல் நடப்பது. மீண்டும் இதேபோல மழை பெய்யுமா என்பதை கணிக்க முடியாது. தற்போது நிலவும் வானிலை நிலவரப்படி, மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மது குடித்ததால் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டமாணவியரை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

நாமக்கல்:வகுப்பறையில் மது குடித்து, வாந்தி எடுத்து, மயங்கி விழுந்ததால், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட, நான்குமாணவியரை, மீண்டும் இன்று பள்ளியில் சேர்க்க, கலெக்டர் தட்சிணாமூர்த்திஉத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள், கடந்த, 21ம் தேதி நடந்தது. தேர்வு எழுதி கொண்டிருந்தபோது, பிளஸ் 1 மாணவியர், நான்கு பேர், வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.விசாரணையில், அவர்கள்,
மது அருந்தியது தெரிய வந்தது. மாணவி ஒருவரின் பிறந்த நாள் விழாவுக்காக, மாணவியர் மது அருந்தியது தெரிந்தது.மாணவியரிடம், தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி, 'டிசி' எனப்படும், பள்ளியிலிருந்து வெளியே அனுப்புவதற்கான சான்றிதழை கொடுத்துள்ளார்; மூன்று மாணவியர் பெற்றுக்கொள்ளவில்லை.பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மாணவியரை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என, பல தரப்பில் இருந்தும் கோரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மாணவியருக்கு, 'கவுன்சிலிங்' எனப்படும் நல்லொழுக்க அறிவுரை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, இன்று மீண்டும் அவர்கள் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர்.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:இன்றைய மாணவர்கள் மத்தியில், சினிமா, 'டிவி', மொபைல் போன் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்லது எது, கெட்டது எது என, பிரித்து பார்க்கத் தெரியவில்லை. சினிமா வேறு, நிஜம் வேறு என்பதை மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் தான் புரியவைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு அறிவு மட்டுமின்றி, நற்பண்புகளையும் ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும். மாணவ, மாணவியரை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். வகுப்பறையில் விழா கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும்.

15 இளைஞர்கள் உருவாக்கிய 'கன்ட்ரோல் ரூம்'

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவ, 15 இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, தனி கட்டுப்பாட்டு அறையை உருவாக்கியுள்ளனர். அவர்கள், அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்து, ஏராளமானோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 
சென்னையில் வெள்ளத்தில் சிக்கி, லட்சக்கணக்கான குடும்பங்கள் தவித்து வருகின்றன. 

அவர்களுக்கு உதவ பலர் தயாராக இருந்தும், அவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்பது தெரியாமல் இருந்தனர்.இரு தரப்பினரை இணைப்பதற்காக, சென்னையில் சில மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து, ஒரு சிறிய அறையில், இன்டர்நெட் வசதியுடன் கூடிய, 10 லேப்டாப்கள், 'லேண்ட் லைன்' மற்றும் மொபைல்போன்கள் உதவியுடன், 24 மணிநேர கட்டுப்பாடு அறையை அமைத்துள்ளனர்.

உதவி தேவைப்படுவோரையும், உதவ விரும்புவோரையும் இணைத்து உதவிபுரிந்து வருகின்றனர். அவர்கள், மணிவண்ணன், அலெக்ஸ் பால் மேனன் ஆகிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

'வாட்ஸ் ஆப்' எண் - 98806 55555, 'டெலிகிராம்' எண் - 72597 60333 மற்றும் 12 இணைப்புகள் கொண்ட, 080400 01000 என்ற தொலைபேசி எண் ஆகியவற்றில் தங்களை தொடர்பு கொள்ளலாம்' என, கேட்டுக் கொண்டு உள்ளனர்.

சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலி பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலி பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதி, வயது வரம்பு உள்ளவர்கள் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி மேலாளர், தொழில்நுட்ப அதிகாரி, என பொருளாதாரம், புள்ளியியல், சட்டம், சி.ஏ, சிவில், எலக்ட்ரிகல்ஸ் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுமார் 115 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அனுப்ப வேண்டிய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனினும், டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணபங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை சேர்த்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.600யும், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும், இது குறித்த விரிவான தகவலுக்கு சிண்டிகேட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.

டிசம்பர் 4ல் நடைபெற வேண்டிய அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள்மீண்டும் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகின்றது. இந்நிலையில்,

மாணவர்களின் நலன் கருதி டிசம்பர் 4-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைகழகதுணைவேந்தர் அறிவித்துள்ளார்.தேர்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flash News - கனமழை : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (04/12/2015) விடுமுறை அறிவிப்பு.

*விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவள்ளுர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
*சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை விடுமுறை 
*காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை
*கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*புதுச்சேரி,காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை  

சென்னை மழைக்கு பூமி வெப்பம் அடைந்ததே காரணம்: பாரீஸ் மாநாட்டில் நிபுணர்கள் தகவல்:

சென்னை மழைக்கு பூமி வெப்பம் அடைந்ததே காரணம்: பாரீஸ் மாநாட்டில் நிபுணர்கள் தகவல்:
சென்னையில் கடந்த மாதம் தொடர்ந்து 10 நாட்கள் பலத்த மழை கொட்டியது. கடந்த 2 நாட்களாகவும் இதேபோல் சென்னையில் பலத்த பெய்து வருகிறது.
வரலாறு காணாத இந்த மழைக்கு பூமி வெப்பம் அடைந்து வருவதே காரணம் என்று பாரீசில் நடந்து வரும் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் துணை தலைமை இயக்குனர் சந்திரபூஷண் கூறுகையில், சென்னை நகரில் பெய்து வரும் இடைவிடாத பலத்த மழைக்கு இந்த பூமி வெப்பமயமாகி வருவதுதான் காரணம். இத்தனைக்கும் பூமியில் ஒரு செல்சியசுக்கும் குறைவான அளவு வெப்பமே அதிகரித்து இருக்கிறது. அதற்கே இந்த மழை என்றால் 2 செல்சியஸ் வெப்பம் அதிகரித்தால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்என்றார்.
ஆக்ஷன் எய்ட் அமைப்பின் ஹர்ஜித்சிங் கூறும்போது, “காஷ்மீர் முதல் உத்தரகாண்ட் வரை கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள நிலைமையை பார்க்கும்போது, இது நிச்சயமாக பூமியின் பருவநிலை மாற்றத்தால்தான் ஏற்பட்டது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது என்று குறிப்பிட்டார்.

தமிழக சிறப்பு மருத்துவ இடங்கள் தமிழக மாணவர்களுக்கே வழங்க வேண்டும்: டாக்டர்கள் சங்கம் தீர்மானம்:

தமிழக சிறப்பு மருத்துவ இடங்கள் தமிழக மாணவர்களுக்கே வழங்க வேண்டும்: டாக்டர்கள் சங்கம் தீர்மானம்:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சிறப்பு மருத்துவ இடங்களை தமிழக மருத்துவர்களே வழங்கிடும் முறை தொடர வேண்டும் என சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னையில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:சிறப்பு மருத்துவ இடங்கள் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதில் தமிழகத்தில் உள்ள சிறப்பு மருத்துவ இடங்கள் தமிழக மருத்துவர்களே என்ற நிலையை தமிழக அரசு எடுத்து வைக்க வேண்டும்.
 தமிழகத்துக்கு உள்ள நியாயமான உரிமைகளை காப்பாற்ற வேண்டும்.
 தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டு வழங்கும் முறையை கைவிட வேண்டும். 
 இதற்கென்று தனிச்சட்டம் இயற்ற வேண்டும். அந்தச் சட்டத்தில் நீதிமன்றங்கள் தலையிடாமல் இருப்பதற்கு அரசியல் சட்டப்பிரிவின் அட்டவணையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசுகள் தொடங்கிட வேண்டும். இதற்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். 
 குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை போதிய அளவில் தொடங்கிட வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் இருக்கிறது: தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை:

வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் இருக்கிறது: தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை:
வங்ககடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுநிலை
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல்பகுதியில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.
பின்னர், அந்த காற்றழுத்த தாழ்வுநிலை இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலைகொண்டது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.
இந்த நிலையில், வங்ககடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதே இடத்தில் இருக்கிறது என்றும், இதன் மூலம் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே இடத்தில் நீடிக்கிறது
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இலங்கை மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. வடமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக தாம்பரத்தில் 49 செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 47 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும், ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழையும் பெய்யும்.
5 நாட்களுக்கு மழை
காற்றழுத்த தாழ்வுநிலை மட்டும் அல்லாது, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் தற்போது நிலவியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா பகுதிகள், கோவை, நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
வங்ககடலில் நிலைகொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுநிலையினால், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு, அதாவது டிசம்பர் 7–ந் தேதி வரை மழை இருக்கும். கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை இருக்கும், அதன் பிறகு படிப்படியாக மழை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்லும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
சென்னையை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை வரும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகபட்சமாக தாம்பரத்தில் ஒரே நாளில் 49 செ.மீ. மழை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) பரவலாக நல்ல மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–
*தாம்பரம் – 49 செ.மீ.
*செம்பரம்பாக்கம் – 47 செ.மீ.
*மரக்காணம் – 42 செ.மீ.
*செங்கல்பட்டு, பொன்னேரி – தலா 39 செ.மீ.
ஸ்ரீபெரும்புதூர், செய்யூர் ஆகிய இடங்களில் தலா 38 செ.மீ., சென்னை மீனம்பாக்கம் 35 செ.மீ., மகாபலிபுரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் தலா 34 செ.மீ., செங்குன்றம், அண்ணா பல்கலைக்கழகம் தலா 32 செ.மீ., தரமணி 30 செ.மீ., சோழவரம், நுங்கம்பாக்கம் ஆதலா 29 செ.மீ., தாமரைப்பாக்கம், மதுராந்தகம் தலா 28 செ.மீ., சென்னை டி.ஜி.பி. அலுவலகம் 27 செ.மீ., திருவள்ளூர், புதுச்சேரி 22 செ.மீ., பூண்டி, உத்திரமேரூர் தலா 19 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னைக்கு கனமழைக்கான வாய்ப்பு எப்படி?
வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:–
இலங்கை மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால், கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், இதன் தொடர்ச்சியாக உள்மாவட்டங்களில் நிலவும் மேலடுக்கு சுழற்சியினால் மலைப்பகுதிகளில் மழை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளோம்.
இந்த நிலையில், சென்னையை நோக்கி கிழக்கில் இருந்து நிறைய மேகக்கூட்டங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். கனமழையும் பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் இதுவரை பெற்ற சராசரி மழை அளவு 57 செ.மீ.
தமிழகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் (அக்டோபர்–டிசம்பர்) சராசரியாக 44 செ.மீ. மழை அளவை பெறும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28–ந்தேதி தொடங்கியது.
இதுவரை தமிழகத்தில் பெய்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, சராசரியாக 57 செ.மீ. மழை அளவை பெற்றுள்ளது. இது சராசரி அளவை விட 13 செ.மீ. அதிகம் ஆகும். சென்னையை பொறுத்தவரையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரை சென்னை நுங்கம்பாக்கத்தில் 154 செ.மீ., மீனம்பாக்கத்தில் 175 செ.மீ. மழை பெய்து உள்ளது.
மிக கனமழை, கனமழை பெய்த மாவட்டங்கள் எவை?
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) நல்ல மழை பெய்தது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் படி, நேற்று முன்தினம் முற்பகல் வரை பதிவான மிக கனமழை, கனமழை, மிதமான மழை பெய்த மாவட்டங்களின் விவரம் பின்வருமாறு:–
மிக கனமழை – கடலூர், காஞ்சீபுரம், புதுச்சேரி, விழுப்புரம்.
கனமழை – நாகப்பட்டினம், தஞ்சை, திருவள்ளூர், வேலூர்.
மிதமான மழை – அரியலூர், சென்னை, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, காரைக்கால், கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, விருதுநகர்.
மழை பெய்யாத மாவட்டங்கள் – மதுரை, தேனி.

சென்னையில் 114 வருடங்களுக்கு பிறகு பெய்த அதிக மழை ஒரே நாளில் 27 செ.மீ. கொட்டித் தீர்த்தது:

சென்னையில் 114 வருடங்களுக்கு பிறகு பெய்த அதிக மழை ஒரே நாளில் 27 செ.மீ. கொட்டித் தீர்த்தது:
சென்னையில் நேற்று முன்தினம் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சென்னையில் சராசரியாக 27 செ.மீ. (275 மி.மீ.) மழை பதிவானதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள்
தெரிவித்தனர். தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை காலமான டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிக அளவு மழை இதுவாகும்.
இந்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, கடந்த 1901–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10–ந்தேதி ஒரே நாளில் 26 செ.மீ. (261 மி.மீ.) பெய்த மழை அளவே அதிக மழையாக இருந்தது. தற்போது அந்த மழை அளவை நேற்று முன்தினம் பெய்த மழை அளவு தாண்டி விட்டது.
ஏற்கனவே கடந்த 2005–ம் ஆண்டு டிசம்பர் 3–ந்தேதி ஒரே நாளில் 23 செ.மீ. (234 மி.மீ.) பெய்து இருந்தது. இது 2–வது அதிகபட்சமான மழை அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 114 வருடங்களுக்கு பிறகு பெய்த அதிக மழை ஒரே நாளில் 27 செ.மீ. கொட்டித் தீர்த்தது:

சென்னையில் 114 வருடங்களுக்கு பிறகு பெய்த அதிக மழை ஒரே நாளில் 27 செ.மீ. கொட்டித் தீர்த்தது:
சென்னையில் நேற்று முன்தினம் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சென்னையில் சராசரியாக 27 செ.மீ. (275 மி.மீ.) மழை பதிவானதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள்
தெரிவித்தனர். தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை காலமான டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிக அளவு மழை இதுவாகும்.
இந்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, கடந்த 1901–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10–ந்தேதி ஒரே நாளில் 26 செ.மீ. (261 மி.மீ.) பெய்த மழை அளவே அதிக மழையாக இருந்தது. தற்போது அந்த மழை அளவை நேற்று முன்தினம் பெய்த மழை அளவு தாண்டி விட்டது.
ஏற்கனவே கடந்த 2005–ம் ஆண்டு டிசம்பர் 3–ந்தேதி ஒரே நாளில் 23 செ.மீ. (234 மி.மீ.) பெய்து இருந்தது. இது 2–வது அதிகபட்சமான மழை அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 68–ஆக உயர்வு 2 பெண் உள்பட மேலும் 6 பேர் சாவு:

சென்னையில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 68–ஆக உயர்வு 2 பெண் உள்பட மேலும் 6 பேர் சாவு:
சென்னை நகரின் மழையால் நேற்றும், நேற்று முன்தினம் இரவும் 2 பெண்கள் உள்பட மேலும் 6 பேர் உயிர்ப்பலியானார்கள். இதையொட்டி மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 68–ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளமோ வெள்ளம்
சென்னை நகரில் மழை ஒரு பக்கம் கொட்டோ, கொட்டு என்று கொட்டுகிறது. இன்னொரு பக்கம் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி போன்றவற்றிலிருந்து உபரி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரும் வெள்ளமாக சென்னை நகரின் அனைத்து சாலைகளிலும் ஓடுகிறது.
குறிப்பாக தென்சென்னை பகுதி முழுவதும் சாலைகளில் 10 அடிக்கு மேல் மழை தண்ணீர் வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் நேற்றும் சென்னை நகர சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
68 பேர் பலி
நேற்று முன்தினம் இரவிலும், நேற்று பகலிலும் 2 பெண்கள் உள்பட மழையால் மேலும் 6 பேர் பலி ஆனார்கள் இதனால் சாவு எண்ணிக்கை 68–ஐ தொட்டது.
நேற்று முன்தினம் இரவு ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமலஹாசன் அலுவலகத்தின் அருகே உள்ள எல்டாம்ஸ் சாலையில் ஜான்சன்(வயது 28) என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென்று சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருகிலுள்ள வங்கி அலுவலகத்திற்குள் அவர் நுழைந்தார். அலுவலக வாசலில் உள்ள கிரில் கதவை தொட்டபோது அதில் மின்சாரம் பாய்ந்து ஜான்சன் பரிதாபமாக இறந்து போனார். அந்த வங்கி அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதில் மின்சார கசிவு ஏற்பட்டு கிரில் கதவில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அதைத் தொட்ட ஜான்சன் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துபோனார்.
பெண்கள் பலி
பல்லாவரம் தர்கா ரோட்டை சேர்ந்த கவிதா (33) என்ற பெண் நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். ரவி என்பவர் ஆட்டோவை ஓட்டிச்சென்றார். அந்த பகுதியில் உள்ள வேம்புலி அம்மன் கோவில் தெருவில் செல்லும்போது ஆட்டோ மீது திடீரென்று மரம் ஒன்று விழுந்து விட்டது. அதில் ஆட்டோ நசுங்கி கவிதா பரிதாபமாக இறந்து போனார். ஆட்டோ டிரைவர் ரவி அதிசயமாக உயிர் தப்பினார்.
தாம்பரத்தில் தங்கவேலு (57) என்பவர் வீட்டில் மின்சார விளக்கு சுவிட்ச்சை போட்ட போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் லட்சுமி (65) என்ற மூதாட்டி வீட்டில் நுழைந்த மழைத்தண்ணீருக்குள் சிக்கி உட்கார்ந்த நிலையிலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
நேற்று பகலில் கீழ்ப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் மாண்டு போனதாக தகவல் வெளியானது. அவரது பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. நேப்பியர் பாலம் அருகில் கூவம் ஆற்று வெள்ளத்திலும் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது பெயர் விவரங்களும் தெரியவில்லை.

சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது:

சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது:
சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்து உள்ளது. 
சென்னையில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பலத்த மழையின் காரணமாக சென்னையில் இருந்து விமான போக்குவரத்து அடியோடு முடங்கியது. நாளை காலை 6 மணி வரை சென்னை விமானநிலையத்தில் இருந்து எந்த விமானமும் புறப்பட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதே இடத்தில் இருக்கிறது என்றும், இதன் மூலம் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்து உள்ளது. 

வண்டலூர் பூங்காவில் பாதிப்பு! வன விலங்குகளால் தொடரும் அச்சம்:

வண்டலூர் பூங்காவில் பாதிப்பு! வன விலங்குகளால் தொடரும் அச்சம்:
சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்காவில், உடைந்த சுற்றுச்சுவர்களை சரிசெய்யும் பணி பலத்த மழையால் தடைபட்டுள்ளது. அதனால், பாதுகாப்பு கருதி, வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 
காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலுார், அறிஞர் அண்ணா உயிரியல் 
 அந்த பூங்காவின் அமைப்பிடங்களுக்குள், 2,000க்கும் மேற்பட்ட விலங்குகளும், அதைச் சுற்றியுள்ள காப்புக்காட்டு பகுதியில் மான், நரி போன்ற சுதந்திரமாக சுற்றித் திரியும் உயிரினங்களும் வாழ்வதால், அதிகாரிகள் கலக்கம் அடைந்தனர். இதனால், சென்னையில் இருந்து வனத்துறையின் உயர் அதிகாரிகள், போக்குவரத்து தடைகளையும் மீறி அங்கு விரைந்தனர்.
பூங்காவில், வெள்ள நீரின் அளவு அதிகரித்தபடியே இருந்ததை காரணம் காட்டி, பூங்காவுக்கு, நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி, சுற்றுச்சுவரை சரி செய்ய ஊழியர்கள் முயன்றனர். ஆனால், மழை இடையூறு செய்ததால் அப்பணியை மேற்கொள்ள இயலவில்லை. அதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, உயிரியல் பூங்கா மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில், வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அரையாண்டு தேர்வுகள் ஜனவரிக்கு ஒத்திவைத்து முதலமைச்சர் உத்தரவு:

அரையாண்டு தேர்வுகள் ஜனவரிக்கு ஒத்திவைத்து முதலமைச்சர் உத்தரவு:
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.கன மழை காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. வழக்கமாக பள்ளிகளில் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும்.ஆனால், தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக 3 வாரங்களாக பள்ளிகள் செயல்படாமல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.இதனால், டிசம்பர் 7ம் தேதி முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

3/12/15

அறிவியல் விருது தேதி நீட்டிப்பு

அறிவியல் நகரம் சார்பில், 2014ம் ஆண்டுக்கான, 'தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருது' மற்றும், 'தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது' பெற, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், டிச., 4ம் தேதி வரை, அறிவியல் நகரத்தில் பெறப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.


தற்போது கனமழை காரணமாக, காலக்கெடு, 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவம், விதி மற்றும் விவரம்,அறிவியல் நகரம் இணையதளத்தில் www.sciencecitychennai.in \வெளியிடப்பட்டுள்ளது.

3 நாட்களுக்கு கனமழை தொடரும் BBC கணிப்பு 50 செ.மீ.,

வங்க கடலில், நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும், மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.'தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், (இன்று) புதன்கிழமை, மிக, மிக கனமழை பெய்யும்' என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்டஅறிக்கை:


தென் மேற்கு வங்க கடலில், உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை, இலங்கை அருகே, வட தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே நிலை கொண்டு உள்ளது.இதனால், டிச., 5 வரை 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும்.டிச., 2: தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும்.டிச., 3: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக, மிக கனமழை பெய்யும். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.டிச., 4, 5: தமிழகம், புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும்.சென்னையில் அடுத்த, 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பரவலாக, மிக கனமழை பெய்யும். காற்று மிக பலமாக வீசும். கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8:30 மணி வரை, 4 செ.மீ., மழை பெய்தது. காலை, 8:30 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 14 செ.மீ., மழை பதிவானது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், குறைந்தபட்ச வெப்ப நிலை, 23 டிகிரி செல்சியஸ். சமவெளி பகுதியில், தர்மபுரியில் மிக குறைவான வெப்ப நிலை பதிவானது. அங்கு அதிகபட்ச வெப்பநிலையே, 19 டிகிரி செல்சியஸ் தான். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பி.பி.சி., அறிக்கை:

லண்டன் பி.பி.சி., செய்தி நிறுவனம், சென்னை மழை குறித்து, நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'டிச., 1, 2ல், சென்னையில் கனமழை பெய்யும். இந்த, இரண்டு நாட்களில் மட்டும், 50 செ.மீ., மழை, சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பதிவாகும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்-நினோ ஆபத்தா? 100 ஆண்டுகளுக்கு பிறகு வெளுத்துவாங்குகிறது மழை : மேலும் 4 நாட்களுக்கு கொட்டும்

வட கிழக்கு பருவக் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த நான்கு நாட்களாக நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்ததால் தமிழக கடலோரத்தில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. 


நேற்று முன்தினம் மாலையில் இருந்தே மழை பெய்யத் தொடங்கி படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் இரவில் கொட்டித் தீர்த்தது. நேற்று பகலிலும் கனமழை கொட்டியது.

அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 160 மிமீ மழை பெய்துள்ளது.மரக்காணம் 150 மிமீ, செங்கல்பட்டு, மதுராந்தகம் 130 மிமீ, பொன்னேரி, சோழவரம் 110 மிமீ, சிதம்பரம், செய்யூர், கடலூர் 100 மிமீ, வானூர் 90 மிமீ, தரங்கம்பாடி, நெய்வேலி, சீர்காழி, பள்ளிப்பட்டு 80 மிமீ, அரக்கோணம், திருத்தணி, பண்ருட்டி, திருவள்ளூர், மாமல்லபுரம், மயிலம், தாமரைப்பாக்கம், கலவாய், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, காட்டுமன்னார் கோயில், விழுப்புரம் 70 மிமீ, சென்னை விமான நிலையம், செம்பரம்பாக்கம்,விருத்தாசலம், ஆர்.கே.பேட்டை, திண்டிவனம், கும்பகோணம், கொடவாசல்,பூந்தமல்லி 60 மிமீ, சென்னை அண்ணா பல்கலைக் கழகம், காஞ்சிபுரம், பெரும்புதூர், நன்னிலம், பாபநாசம், சென்னை டிஜிபி அலுவலகம், காவேரிப்பாக்கம், செஞ்சி, செம்பரம்பாக்கம், திருவாலங்காடு 50 மிமீ மழை பெய்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்துள்ளது. இந்நிலையில், வட கிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் 30 நாட்கள் உள்ள நிலையில் பசிபிக் கடல் பரப்பில் வெப்பம் அதிகரித்ததால் (எல்-நினோ) மாற்றம் அடைந்து திடீரென குளிர்காற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது கடல் அலைகள் போல எழுந்தும், தாழ்ந்தும் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் வங்கக் கடல் பகுதியில் வட கிழக்கு பருவக் காற்று சற்று வேகமாக வீசத் தொடங்கியுள்ளது. இந்த காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் காணப்படுகிறது. இதுபோன்ற சூழல் டிசம்பர் 15ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தரைக்காற்று வீசத் தொடங்கும். இரவில் கடுங்குளிர் காற்று வீசும். இந்த நிகழ்வின் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகி, திரள் மேகங்கள் தெற்மேற்கு வங்கக் கடலில் பரவியுள்ளது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டு இருப்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் மழை தொடரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவக் காற்று வேகமாக வீசத் தொடங்கும் பட்சத்தில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்ந்து செல்லும்போது மழை குறையவும் வாய்ப்புள்ளது. 3 மாதத்துக்கான பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பு அளவான 44 செமீ மழை என்பது கடந்த 20 நாட்களில் 53 செமீ அளவுக்கு பெய்துவிட்டது. இது இயல்பு நிலையைவிட கூடுதலானது. கடந்த 100ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழகத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. வரும் நாட்களில் மழையானது தொடருமானால், இந்த ஆண்டில் சராசரியாக 500 மிமீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக வட கிழக்கு பருவமழைக் காலங்களில் புயல் போன்ற நிகழ்வுகள் ஏற்படும் போது காற்றுடன் கூடிய மழை பெய்யும். அது பெய்து கொண்டே சென்றுவிடும். ஆனால், இந்த ஆண்டில் தொடர்ச்சியாக காற்றழுத்தங்கள் ஏற்பட்டு, மெதுவாக நகரும் போக்குள்ளதால் மழை நின்று நிதானமாக பெய்கிறது.நேற்றைய நிலவரப்படி கணினி கணக்கின்படி அடுத்த 72 மணி நேரத்தில் அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் புயல் உருவாகும் வாய்ப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை பொறுத்தவரையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டு மீண்டும் பெரும் பாதிப்புகளை சந்திக்க தொடங்கியுள்ளது.

புறநகர் பகுதிகளில் தாம்பரம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, மேடவாக்கம், பள்ளிக் கரணை, வேளச்சேரி, ஆலந்தூர், நங்கநல்லூர், பல்லாவரம், குரோம்பேட்டை, நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், துரைப்பாக்கம், கொட்டிவாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், எழும்பூர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, வட சென்னை என சென்னையின் அனைத்து பகுதிகளும் மழை நீரில் தத்தளிக்கின்றன. இதற்கிடையே நேற்று இரவு கடல் பகுதியில் இருந்து வீசும் காற்றில்அதிக அளவில் ஈரப்பதம் காணப்பட்டதால் நள்ளிரவில் மாதவரம், அம்பத்தூர், நொளம்பூர், நெற்குன்றம், மதுரவாயல், வளசரவாக்கம், ராமநாதபுரம், நந்தம்பாக்கம், ராமாபுரம், பரங்கிமலை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தவிரவும் புறநகரில் பல இடங்களில்பலத்த மழை பெய்தது. சென்னையின் முக்கிய சாலைகளான வடபழனி 100அடி சாலை, கோயம்பேடு சாலை, ஆற்காடு சாலை, அண்ணாசாலை, சர்தார்பட்டேல் சாலை என அனைத்து முக்கிய சாலைகளிலும் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சில சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டதால் சாதாரண வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை செல்ல முடியாமல் தவித்தன. இதனால் 3 முதல் 5 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

CTET: பிப்., 21ம் தேதிஆசிரியர் தகுதி தேர்வு

மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'சிடெட்' என்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். மாநில பள்ளிகளில் பணியாற்ற, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்தும், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


இதில், மத்திய அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களால், மாநில அரசு பள்ளிகளில் பணியில் சேர முடியும். வரும், 2016க்கான, 'சிடெட்' தேர்வுக்கு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் தேர்வு, பிப்., 21ம் தேதியும், இரண்டாவது தேர்வு, செப்., 18ம் தேதியும் நடக்கிறது. தமிழக அரசின், 'டெட்' தேர்வு, இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. எனவே, மத்திய அரசின் தேர்வில், தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகள், அதிக அளவில் பங்கேற்கலாம் என, தெரியவந்துள்ளது

பொது விடுமுறை நாட்கள் 2016 ல் எவ்வளவு; அரசு அறிவிப்பு


* வங்கிகள் ஆண்டு கணக்கு முடிப்பு விடுமுறை, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் பொருந்தும்.


* தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து அலுவலகங்களுக்கும், அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை.
* அரசு பொது விடுமுறை நாள், நான்கு ஞாயிற்றுக் கிழமையிலும், இரண்டு சனிக்கிழமையிலும் வருகிறது.
* பொங்கல் பண்டிகைக்கு, தொடர்ந்து மூன்று நாள் விடுமுறை
* அக்டோபரில், தொடர்ந்து மூன்று நாட்கள் உட்பட, 5 நாட்கள் விடுமுறை வருகிறது.
* 2015ம் ஆண்டு, 24 நாட்கள் அரசுபொது விடுமுறை நாட்கள்; 2016க்கு, 23 நாட்கள் மட்டுமே. அதிலும், வங்கி கணக்கு முடிப்பு நாள், நான்கு ஞாயிறு, இரண்டு சனிக்கிழமை, ஆகியவற்றை நீக்கினால், 16 நாட்கள் மட்டுமே, பொது விடுமுறை நாட்களாக உள்ளது.

நாடு முழுவதும் மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டவேண்டும்: பிரதமருக்கு 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம்

மும்பை, டிச.2-நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டக்கோரி பிரதமருக்கு மும்பையில் உள்ள காந்தி நினைவு ஆங்கிலஉயர்நிலைப்பள்ளியில் பயிலும் 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதி உள்ளனர். 


அந்த கடிதங்கள் மத்திய மந்திரியிடம் சேர்ப்பிக்கப்பட்டது.ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் பசிப்பிணியை போக்கவும், பள்ளிக்கு மாணவர்களின் வருகை விகிதத்தை அதிகப்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அப்போதைய முதல் அமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.அந்த திட்டம் இன்று பல மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் சிற்சில மாற்றங்களுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிக் குழந்தைகளுக்காகஇந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது பெருமையே ஆனாலும், வெவ்வேறு பெயர்களில் செயல்படுவதை தவிர்த்து இந்த திட்டத்திற்கான முன்னோடி என்றவகையிலும், நாட்டிற்காக உண்மையிலேயே சிந்தித்து உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் பெயர் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்திலும் நாடு முழுவதும் இந்த திட்டத்திற்கு ‘காமராஜர் மதியம் உணவு திட்டம்‘ என பெயரை சூட்டி நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாட்டுங்கா லேபர் கேம்பில் உள்ள காந்தி நினைவு ஆங்கில உயர்நிலைப்பள்ளியின் அரசியல் பிரிவு மாணவர்கள் அந்த கடிதங்களின் வாயிலாக பிரதமருக்கு வலியுறுத்தி உள்ளனர்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) டிசம்பர் 4 முதல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக சி.டி.இ.டி. தேர்வு நடத்தப்படுகிறது.


தேர்வு நடைபெறும் தேதி:
2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-இல் காலை 9.30 முதல் 12 மணி வரையிலும் தாள்-2 தேர்வும், பிற்பகல்2 முதல் 4.30 மணி வரை தாள்-1 தேர்வும் நடத்தப்படும்.

ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புபவர்கள்முதல் தாளையும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். இரண்டு நிலைகளிலும் பாடம் நடத்த விரும்புவோர் இரு தாள்களும் எழுத வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 4 முதல்28-ஆம் தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வறை அனுமதிச் சீட்டு:ஜனவரி 25-ஆம் தேதி சி.டி.இ.டி இணையகளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

கல்வித் தகுதி:5-ஆம் வகுப்பு வரியிலான ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி, 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள்பட்டப்படிப்புடன் 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டய படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது பட்டப் படிப்புடன், பி.எட். படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:ஒரு தாள் மட்டும் எழுதும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, இரு தாள்களையும் எழுதுவோர் ரூ.1000-த்தையும் செலுத்த வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ஒரு தாள் மட்டும் எழுத ரூ. 300-ஐயும், இரண்டு தாள்களையும் எழுத ரூ. 500-ம் செலுத்தினால் போதுமானது.

மேலும் கூடுதல் விவரங்கள் அறியwww.ctet.nic.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

கனமழை எதிரொலி: தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை? - அரசுதலையிட முடியாது என அறிவிப்பு

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் பணிக்கு வரமுடியாமல் சிரமப்படுகின்றனர்.இந்த மழைவெள்ளத்தில் எப்படி பணிக்கு சென்றுவர முடியும் ? இதர அரசு மற்றும் தனியார்நிறுவனங்களுக்கும் விடுமுறைஅறிவிக்கவேண்டும் அவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அரசு உத்தரவிடுமா என கேட்டபோது, தமிழக அரசின் பொதுத்துறை செயலர் யதீந்திரநாத் ஸ்வைன் கூறியதாவது:


''அரசு ஊழியர்களில் அத்தியாவசியத் துறைகளில் பணியாற்றுவோர் தவிர மற்றவர்கள்சூழல் கருதி விடுப்பு எடுத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கான விடுப்பும் அனுமதிக்கப்படுகிறது.தனியார் துறையினர், வங்கி ஊழியர்களுக்கு சூழல் கருதி அந்த நிறுவனங்கள் விடுமுறை அளிக்கலாம். அதில் அரசு தலையிட முடியாது'' என்றார்.

அடுத்த 48 மணிநேரத்திற்கு மிக, அதிக கனமழை பெய்யும் - எம்.எஸ். ரத்தோர் அறிவிப்பு!

*.தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என்றாலும் அடுத்த 48 மணிநேரத்திற்கு மிக, அதிக கனமழை பெய்யும் என இந்திய வானியல் நிலைய இயக்குநர் - எம்.எஸ். ரத்தோர் அறிவிப்பு!
*.கர்நாடகா ரூ.5 கோடி நிதி உதவி
*.இலவச பி.எஸ்.என்.எல் சேவை ஒரு வாரத்திற்கு: -

சென்னையில் மழைவெள்ளம்: வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாரம் இலவச சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ள சென்னையில் அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஒரு வாரத்திற்கு இலவச சேவையை வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைமந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், 


“சென்னையில் வெள்ளம் காரணமாக இன்றில் இருந்து ஒருவார காலம் பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. இதுவரையில் கட்டணம் செலுத்தாமல் இருந்தாலும், அவர்களுக்கான சேவையை துண்டிக்காமல் இருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.சென்னையில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படாது. சென்னையில் உயரமான டவர்கள் மற்றும் தொடர்புகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றார்.இதேபோல் ரிலையன்ஸ், வோடபோன் நிறுவனங்களும் இலவச அழைப்புகளை வழங்கியுள்ளது.

போன் செய்தால் படகு உதவி செய்து தரும் அவசர உதவி எண்கள்

வரலாறு காணாத தொடர் கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.அவர்களுக்கு உதவும் வகையில் அரசு, கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டால் படகு உதவி செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NDRF: 01124363260,9711077372
NTL boat:7708068600
OLA: 04428294121
Army: 9840295100
Navy: 04425394240

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 ரூபாய் ரீசார்ஜ் செய்து விடும் ஏர்டெல்

வரலாறு காணாத கன மழையால் பாதிக்கப்பட்டு ரீசார்ஜ் கடைகளும் இல்லாமல்சரிவர இணைப்பும் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வரும் சென்னை வாசிகளுக்காக முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.இதன்படி, 


சென்னையில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் 30 ரூபாயை மினிமம் பேலன்சாக ரீசார்ஜ் செய்து விடும். (இல்லாத பட்சத்தில் 52141 என்ற எண்ணை அழைக்கலாம்.) இது மட்டுமின்றி இந்த சிறப்பு பேக்கேஜ் மூலம் 10 நிமிடங்கள் (2 நாட்கள் வேலிடிட்டி) ஏர்டெல்-ஏர்டெல் பேசிக்கொள்ளலாம். மேலும் 50 MB இண்டர்நெட் பேக்கும் இதனுடன் தரப்படுகிறது. இந்த 30 ருபாய் பணத்தை ரீசார்ஜ் கடைகள் திறக்கப்பட்ட பின் 10 ரூபாய் கடன் வாங்கும் போது கழிக்கப்படுவது போல் ரீசார்ஜ் செய்த பின்னர் கழிக்கப்படும்.மின்சார வசதி இல்லாததால் ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துவதாகவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு 2 நாள் விடுமுறை அளிக்க தமிழகஅரசு அறிவுறுத்தல்

மழை வெள்ளச் சூழலை கருத்தில் கொண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனங்கள் டிசம்பர் 3, 4 தேதிகளில் பொது விடுமுறை அளிக்கலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை செயலர் அனுப்பிய கடிதத்தில், 


''சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனங்கள் டிசம்பர் 3, 4 தேதிகளில் பொது விடுமுறை அளிக்கலாம்.அல்லது வீட்டிலிருந்தே ஊழியர்களை பணிகளை முடிக்கச் சொல்லலாம்.

வெள்ள சூழலை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, அலுவலகத்தில் பணிபுரிய சென்றவர்கள் இரவில் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல், அலுவலகத்திலேயே தங்கும் சூழலும் ஏற்பட்டது. இன்று காலையில் வசிப்பிடங்களில் இருப்பவர்கள் அலுவலகம் வர முடியாமல் சிரமப்பட்டனர்.இந்நிலையில், தமிழக அரசு தனியார் நிறுவனங்கள் பொது விடுமுறை அளிக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2/12/15

3 நாட்களுக்கு கனமழை தொடரும் BBC கணிப்பு 50 செ.மீ.,

'வங்க கடலில், நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும், மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

'தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், (இன்று) புதன்கிழமை, மிக, மிக கனமழை பெய்யும்' என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட அறிக்கை:தென் மேற்கு வங்க கடலில், உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை, இலங்கை அருகே, வட தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே நிலை கொண்டு உள்ளது.

இதனால், டிச., 5 வரை 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும்.

டிச., 2: தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும்.டிச., 3: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக, மிக கனமழை பெய்யும். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.

டிச., 4, 5: தமிழகம், புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும்.சென்னையில் அடுத்த, 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பரவலாக, மிக கனமழை பெய்யும். காற்று மிக பலமாக வீசும். கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8:30 மணி வரை, 4 செ.மீ., மழை பெய்தது. காலை, 8:30 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 14 செ.மீ., மழை பதிவானது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், குறைந்தபட்ச வெப்ப நிலை, 23 டிகிரி செல்சியஸ். சமவெளி பகுதியில், தர்மபுரியில் மிக குறைவான வெப்ப நிலை பதிவானது. அங்கு அதிகபட்ச வெப்பநிலையே, 19 டிகிரி செல்சியஸ் தான். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பி.பி.சி., அறிக்கை:

லண்டன் பி.பி.சி., செய்தி நிறுவனம், சென்னை மழை குறித்து, நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'டிச., 1, 2ல், சென்னையில் கனமழை பெய்யும். இந்த, இரண்டு நாட்களில் மட்டும், 50 செ.மீ., மழை, சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பதிவாகும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்., 21ம் தேதிஆசிரியர் தகுதி தேர்வு

மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'சிடெட்' என்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். மாநில பள்ளிகளில் பணியாற்ற, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்தும், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், மத்திய அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களால், மாநில அரசு பள்ளிகளில் பணியில் சேர முடியும். 
வரும், 2016க்கான, 'சிடெட்' தேர்வுக்கு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் தேர்வு, பிப்., 21ம் தேதியும், இரண்டாவது தேர்வு, செப்., 18ம் தேதியும் நடக்கிறது. தமிழக அரசின், 'டெட்' தேர்வு, இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. எனவே, மத்திய அரசின் தேர்வில், தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகள், அதிக அளவில் பங்கேற்கலாம் என, தெரியவந்துள்ளது.

பொது விடுமுறை நாட்கள் 2016 ல் எவ்வளவு; அரசு அறிவிப்பு

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு முதல்வர் அறிவிப்பு

சென்னை: 'தமிழக பள்ளிகளுக்கு, பல நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், டிச., 7 முதல் துவங்க இருந்த, அரையாண்டு தேர்வுகள், ஜனவரி, முதல் வாரத்தில் நடத்தப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா அறிக்கை:தொடர் மழையால் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில், காவல் துறை, தீயணைப்பு துறை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை, கடலோர பாதுகாப்புப்படையினர், பாதிக்கப்படும் மக்களை படகுகள் மூலம் மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, தயார் நிலையில் உள்ளனர். அந்த மக்களுக்கு, உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட இதர வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ முகாம்களை, தொடர்ந்து நடத்தவும், நிலவேம்பு குடிநீர் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் நியமனம்
* திருவள்ளூர் மாவட்டம்- அமைச்சர்கள் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, ரமணா, அப்துல் ரஹீம்
* காஞ்சிபுரம் மாவட்டத்தில், குறிப்பாக தாம்பரம், முடிச்சூர் பகுதிகள் - அமைச்சர்கள் பழனியப்பன், வேலுமணி, தங்கமணி, சின்னையா
* சென்னை மாநகராட்சி பகுதி - அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், வளர்மதி, கோகுலஇந்திரா
* கடலுார் மாவட்டம் - அமைச்சர்கள் சம்பத், உதயகுமார், ஆகியோர் நிவார பணிகளை மேற்பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குவர்.
தேர்வு ஒத்திவைப்பு
பல மாவட்டங்களில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே டிச., 7 முதல் நடக்க இருந்த, அரையாண்டு தேர்வுகளை ஒத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஆய்வு
மழை பாதிப்பு மற்றும் நிவாரண நடவடிக்கை குறித்து, தலைமை செயலகத்தில், நேற்று, முதல்வர் ஜெயலலிதா தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதில், எட்டு அமைச்சர்கள், தலைமைச் செயலர் ஞானதேசிகன் மற்றும் பல துறைகளின் அதிகாரிகள், கலந்து கொண்டனர். கூட்டத்தில், வௌ்ள பாதிப்புகளை தவிர்க்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, நிவாரண பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: டிச. 4 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


இவர்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 28 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சான்றிதழ்ஜனவரி 26-ஆம் தேதி வரை மட்டுமே செல்லத்தக்கது ஆகும்.இந்த நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை டிசம்பர் 4 (வெள்ளிக்கிழமை) முதல் 11-ஆம் தேதி வரை மாணவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். பிறகு, சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் இதைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள்: விவரங்களில் பிழை திருத்தும் பணி தீவிரம்

வரும் மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவு எண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாகநடைபெற்று வருகிறது.


பிளஸ்-2 மாணவர்களின்விவரங்களை பிழைகளின்றி நவம்பர் 23-ஆம் தேதிக்குள்இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டது. அதன் பிறகு, 26 வரை நீட்டிக்கப்பட்டது.இந்தப் பணி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இப்போது நடைபெற்று வருகிறது.

அதன்பிறகு, டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் திருத்தப்பட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. அடுத்த 2 வாரங்களில் மாணவர்களுக்கு பதிவெண் வழங்கப்பட உள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு....:இதேபோல், மார்ச்சில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணிகள் டிசம்பர் 10-ஆம் தேதிக்கு பிறகு நடைபெற உள்ளன. இவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களும் இப்போது கோரப்பட்டுள்ளன.சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் விடுமுறையிலும் பள்ளிகளுக்கு வந்து தங்களது விவரங்களை சரிபார்த்துச் செல்வதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த விவரங்களை பதிவேற்றம் செய்வதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி பாஸ்வேர்டுவழங்கப்பட்டுள்ளது.இந்த மாணவர்களுக்கு பதிவு எண் உள்ளிட்டவை இந்த மாதத்துக்குள் வழங்கப்பட்டு விடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.அரையாண்டு தேர்வு மாற்றம்?அதேபோல், மழை விடுமுறை காரணமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தள்ளிவைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே தேர்வுகள் நடைபெறும் என்றும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

5 நாள் கனமழை - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.

வங்கக் கடலில் உருவாகியுள்ள, புதிய காற்று அழுத்த தாழ்வு நிலை, தீவிரமடைந்து வருகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், நேற்று கூறியதாவது: 


இரு நாட்களுக்கு முன், அந்தமான் கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு நிலை, எதிர்பார்த்த அளவு வலுவடைந்து, தமிழகத்தை நோக்கி நகரவில்லை; மறைந்து விட்டது. தற்போது, வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில், இலங்கை அருகே, புதிய காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இது, தென்மேற்காக மேலும் நகர்ந்து, தமிழகம் அருகே நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த நான்கு நாட்களுக்கு விடுக்கப்பட்டுள்ள

மழை எச்சரிக்கை:

டிச., 1, 2, - தமிழக வட மாவட்டங்கள், புதுச்சேரியின் அனேக இடங்களில் மிக கனமழை; தென் மாவட்டங்களில், ஒருசில இடங்களில் கனமழை. டிச., 3, 4 - தமிழகம், புதுச்சேரியில் பரவலாக கனமழை.சென்னையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மழை அல்லது இடியுடன் கூடிய மழை, விட்டு விட்டு பெய்யும்.நேற்று காலை, 8:30 மணிவரை, தமிழகத்தில் அதிகபட்சமாக, தஞ்சை மாவட்டம், குடவாசல் - 12; விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் - 10; சிவகங்கை மாவட்டம், திருபுவனம் - 9 செ.மீ.,மழை பதிவாகி உள்ளது.அதிகம்:இவ்வாறு அவர் கூறினார்.நேற்றுடன் முடிந்த ஒரு வாரத்தில், இயல்பு அளவாக தமிழகத்தில், 3.6 செ.மீ.,மழை பெய்ய வேண்டும். ஆனால், 9.1 செ.மீ., மழை பெய்துள்ளது. இதே கால கட்டத்தில், சென்னையில், 8.2 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 21.7 செ.மீ., மழை பெய்துள்ளது. இதேபோல், 30 மாவட்டங்களில் இயல்பு அளவை விட, கூடுதலாக மழை பெய்துள்ளது. ஈரோடு, கரூர் மாவட்டங்களில், இயல்பு அளவு மழை பதிவாகி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், இயல்பு அளவை விட, குறைவாக மழை பெய்துள்ளது.

மாவட்ட நிர்வாகங்கள் 'உஷார்':

தமிழகத்தில், ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்தால், அதை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, கலெக்டர்கள் உட்பட, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அரசு அறிவுறுத்தி உள்ளது.
* ஏற்கனவே பெய்த தொடர் மழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், துாத்துக்குடி மாவட்டங்கள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன
* கனமழை தொடரும் என்பதால், அனைத்து துறை அதிகாரிகளும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
* தண்ணீர் தேங்கும் பகுதிகளில், உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும்
* நீர்நிலைகளை, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்
*நீர் கசிவைநிறுத்த, மணல் மூட்டைகளை தயார் செய்து வைத்திருக்க வேண்டும்
* நிவாரண முகாம் மற்றும் மருத்துவ குழுக்களை, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அரசு அறிவுறுத்தி உள்ளது.

காமராஜர் பல்கலை. பி.எட். படிப்புக்கு தகுதிப் பட்டியல் வெளியீடு: டிச.8-ல் கலந்தாய்வு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கத்தின் பி.எட். படிப்புக்கான தகுதிப் பட்டியல் பல்கலை. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தொலைதூர கல்வி இயக்ககத்தின் கீழ் வழங்கப்படும் பி.எட் (2015-2016) படிப்பு சேர்க்கைக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விபரம் காமராஜர் பல்கலைக்கழக இணையதளமான வெளியிடப்பட்டுள்ளது.

தகுதி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு டிச.8 முதல் டிச.10 ஆம் தேதி வரை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தொலைதூர கல்வி இயக்ககத்தில் நடைபெறும்.

முதல்வர் கணினித் தமிழ் விருது டிசம்பர் 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு

முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும் என தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 


கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்ததமிழ் மென்பொருள் உருவாக்கு பவர்களை ஊக்குவிக்கும் வகை யில் ‘முதலமைச்சர்கணினித் தமிழ் விருது’ ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படுகிறது. விருது பெறு பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப் படும்.இந்த வகையில் 2015-ம் ஆண்டுக்கு ‘முதல்வர் கணினித் தமிழ் விருது’க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.போட்டிக்குரிய மென் பொருள்கள் 2012,13 மற்றும் 2014-ம் ஆண்டுக்குள் தயாரிக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.இவ்விருதுக்கு விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை ‘www.tamilvalarchithurai.org’ என்ற தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை- 600008 என்ற முகவரிக்கு இம்மாதம் 31-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044- 2819 0412, 2819 0413 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதுடில்லி,:பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 பைசா குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 25 பைசா குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.


இந்தியாவிலேயே தமிழக ஆசிரியர்களே திறமையானவர்கள் : பள்ளி கல்வி இயக்குனர்

சென்னை எழும்பூர் டான்போஸ்கோ பள்ளியில் கற்றலில் குறைபாடு உள்ளவர்களை கண்டறிந்து அக்குழந்தைகளை குறைகளை போக்கு, அவர்களை நல்ல மதிப்பெண்கள் வாங்குவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்தை, பள்ளிக் கல்வி இயக்குனர் டாக்டர் எஸ்.கண்ணப்பன் தொடங்கி வைத்தார்.


பிறகு நிகழ்ச்சியில் பேசிய கண்ணப்பன், “கற்றலில் குறைபாடு என்பது மிகமிக குறைவாகவும், 10 சதவீதத்திற்கு குறைவாக இருக்கக்கூடும். அத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும். அவர்களிடம் உள்ள குறைபாடுகளை களைய ஆசிரியர்கள் கவனமாக கையாள வேண்டும்.அந்த குழந்தைகளிடமோ, பெற்றோர்களிடமோ அதுபற்றி கூறாமல் அவர்களை சரி செய்து மற்ற மாணவர்களை போல உருவாக்க வேண்டும்.இந்த பணிகளை மேற்கொள்வது தான் ஒவ்வொரு ஆசிரியர்களின் கடமையாகும். கற்றலில்குறைபாடு உள்ள மாணவர்களை முதலில் அடையாளம் கண்டு அவர்களுக்கேற்றவாறு பாடங்களை கற்று கொடுக்க வேண்டும். அது தான் இந்த பயிற்சி மையத்தின் நோக்கமாகும்.அந்த வகையில் கற்றல் குறைபாடுகளை போக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கூடிய மையத்தை தொடங்கி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

இதில் பயிற்சி பெற்ற25 ஆசிரியைகளும் மற்ற ஆசிரியர்களுக்கு தங்கள் அனுபவத்தை தெரிவிக்க வேண்டும்.ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர் பணியில் மட்டுமே உள்ளது. உலகிலேயே அதிக மனிதவளம் உள்ள நம் நாட்டில் அதனை உருவாக்கும் சக்தியாக ஆசிரியர் பெருமக்கள் திகழ வேண்டும். அந்த பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் உள்ளது.இந்தியாவிலேயே தகுதியான ஆசிரியர்கள் நியமிப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இங்குள்ள ஆசிரியர்கள் திறமையானவர்கள்” என்று தெரிவித்தார்.

ஆசிரியர்களை பயிற்சிக்கு அழைக்கும் நேரமா இது?

பாடம் நடத்தவும், தேர்வு நடத்தவும், நாளில்லாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்; இந்நிலையில் ஆசிரியர்களை, ஒரு மாதம் பயிற்சிக்கு வருமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் தரப்படுகின்றன.


இதற்கு, மத்திய அரசிடமிருந்து, பல கோடி ரூபாய் நிதி கிடைக்கிறது.கற்றல், கற்பித்தலை தொழில்நுட்ப ரீதியாக வழங்க வேண்டும் என்பது தான், மத்திய அரசின்நோக்கம்.ஆனால் இது, தமிழகத்தில், பலனில்லாத பயிற்சி திட்டங்களாக மாறிவிட்டன.தமிழகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம் ஆகியவற்றுடன், பயிற்சி அளிக்கும் மூன்று இயக்குனரகங்களின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படவில்லை. எனவே, பாடம் நடத்துவதைப் பார்க்க ஒருதுறை; பயிற்சியை நடத்த, வேறொரு துறை என, முரண்பாடாக உள்ளது.

தற்போது இரண்டாம் கல்விப் பருவத்தில், மழைக்கால விடுமுறை, பண்டிகை விடுமுறைகளுக்கு மத்தியில், அரையாண்டுத் தேர்வு நெருங்கியுள்ளது. பாடங்களை எப்படி முடிப்பது என, ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இந்த நேரத்தில், ஒரு மாதம் முழுவதும் ஆசிரியர் பயிற்சிக்கான அட்டவணையை கல்வித்துறை அறிவித்துள்ளது. 
* பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்க, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம், டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சி
* நவ., 30, டிச., 1 மற்றும் 5ம் தேதிகளில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வாசித்தல், எழுதுதலுக்கு பயற்சி 
* நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, டிச., 12ல், குறுவள பயிற்சி, கணித பயிற்சி பெட்டகப் பயிற்சி, கணினி இயக்கம் மற்றும் கற்பித்தல் பயிற்சி. நவ.,30 முதல் டிச., 22ம் தேதி வரை நடக்கும் பயிற்சியில், ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.

மாற்றுத்திறனாளிஅரசு ஊழியர்கள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு DEC 03 அன்று சிறப்பு தற்செயல் விடுப்புஎடுத்துக்கொள்ளலாம்.


பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை: தேர்வுத்துறை இயக்குனர் தகவல்

சென்னை, டிச. 1–வருகிற மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால்பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் முன் கூட்டியே நடத்தப்படும் என்ற தகவல் பரவி வருகிறது. மேலும் தொடர் மழையால் பள்ளிகள் 20 நாட்களாக செயல்படாமல்இருப்பதால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுமா? தேர்தலுக்காக முன் கூட்டியே நடத்தப்படுமா என்பது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம் மாலைமலர் நிருபர் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:–


தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பள்ளிகள் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.வருகிற 7–ந்தேதி பிளஸ்–2 மாணவர்களுக்கும், 9–ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வுதொடங்குவதற்கான அட்டவனை தயாரிக்கப்பட்டு அதற்கான வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன. தீபாவளிக்கு முன்பே வினாத்தாள்கள் பள்ளிக்கல்வி துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.மழையால்அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை தான் முறைசெய்ய வேண்டும். அரசு தேர்வுத்துறை அல்ல.

பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேர்வுத்துறை மூலம் நடத்தப்படுகின்றன. பொதுத்தேர்வுகள் அட்டவணைஇந்த மாதத்திற்குள் வெளியிடப்படும். பிளஸ்–2 தேர்வுகள் 11 நாட்கள் நடைபெறும். மாணவர்கள் படித்து தேர்வு எழுத வசதியாக போதிய கால அவகாசம் கொடுக்கப்படும். சட்டசபை தேர்தலுக்காக பொதுத்தேர்வுகள் முன் கூட்டியே நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது போல மார்ச் முதல் வாரத்தில்பிளஸ்–2 தேர்வு தொடங்கி இறுதியில் முடிவடையும்.பொது தேர்வுக்கான கால அட்டவணைஅரசின் ஒப்புதல் பெறப்பட்டு வெளியிடப்படும். குறுகிய காலத்தில் தேர்வுகளை நடத்தஇயலாது. அதனால் ஒவ்வொரு தேர்விற்கும் போதிய இடைவெளி இருக்கும். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரசின் ஆலோசனைப்படி பொதுத்தேர்வுகள் நடைபெறும்.முன்கூட்டியே தேர்வு நடைபெறும் கால அவகாசம் இல்லை என்று மாணவர்கள் குழப்பம் அடைய தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த கல்வியாண்டில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு

அடுத்த ஆண்டில் கல்வி மேலும் செலவுமிக்கதாக மாற வாய்ப்பிருக்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடும் சேதத்தைச் சந்தித்த தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கனமழையால் பள்ளிக் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால் கட்டண நிர்ணய கமிட்டியிடம் தனியார் பள்ளி நிர்வாகங்கள் முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.


கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூரில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளன. பள்ளிக் கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக பள்ளியின் மின் அமைப்புகள், பைப்லைன்கள், உட்பட பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுகாதாரத்தை பராமரிக்கவும் சில செலவினங்கள் தனியார் பள்ளிகளுக்கு காத்திருக்கிறது.“அவ்வளவாக சேதமில்லாத பெரிய பள்ளிகள் ரூ.5 லட்சம் வரையில் செலவிட்டுள்ளது. எனவே சேதம் அதிகம் ஏற்பட்ட பள்ளிகள் மேலும் அதிக தொகை செலவிட வேண்டி வரும்” என்று பள்ளி முதல்வர் ஒருவர் தெரிவித்தார்.மாநில கல்வி ஆலோசகர் பி.புருஷோத்தமன் இது பற்றி கூறும்போது, “பெரும்பாலான பள்ளிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தவுள்ளன.

சேதத்துக்கு செலவிடப்பட்ட தொகைமற்றும் பரமாரிப்பு உள்ளிட்ட செலவு விவரங்களை பள்ளி நிர்வாகத்திடமிருந்து கேட்டுள்ளோம்” என்றார்.மற்றொரு மூத்த கல்வித்துறை அதிகாரி தெரிவிக்கும் போது, “பைப்லைன், கட்டிட சேத விவரம், மின் இணைப்பு பரமாரிப்பு உள்ளிட்ட செலவு விவரங்களை சமர்ப்பிக்குமாறு பள்ளிகளிடம் கேட்டுள்ளோம். சேதத்தை சரிசெய்ய சராசரியாக பள்ளிகள் ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை கோரியுள்ளன.மாநில அரசு மத்திய அரசுக்கு இந்த விவரங்களை அனுப்ப வேண்டியுள்ளது” என்றார்.

கனமழை காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு

தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் அண்ணா பல்கலைக் கழக மற்றும்சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், குறிப்பாக சென்னையில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்ததோடு, இன்றும் கன மழை நீடித்து வருகிறது. 


இந்நிலையில் மழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதன் காரணமாக அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல்ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதே போல் சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன.திருவள்ளூர் பல்கலைத் தேர்வுகளும் ஒத்திவைக்கப் பட்டன.

FLASH NEWS : அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்து முதலமைச்சர் உத்தரவு

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.கன மழை காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. வழக்கமாக பள்ளிகளில் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும்.


ஆனால், தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக 3 வாரங்களாக பள்ளிகள் செயல்படாமல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.இதனால், டிசம்பர் 7ம் தேதி முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

1/12/15

7-வது ஊதியக் குழுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து விரைவில் நடைமுறைப்படுத்திட வேண்டும்: வாசன் வலியுறுத்தல்

தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’ஏழாவது ஊதியக்குழு 2014 பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. அக்குழு தனது அறிக்கையை 19.11.2015 அன்று
மத்திய நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி மத்திய அரசில் பணிபுரியும் பணியாளர்கள், முப்படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் சுமார் ஒரு கோடி பேர் பயன்பெறுவார்கள். இதனால் குறைந்த பட்சம் 15 சதவீதத்திலிருந்து அதிகபட்சம் 23.55 சதவீதம் வரை ஊதியம் உயரலாம் என்று ஊதியக்குழு அறிவித்துள்ளது.

 கடந்த ஊதிய குழுவின் பரிந்துரைகளின் அளவை விட 7வது ஊதியக்குழு பரிந்துரையின் அளவு குறைவாக உள்ளது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையால் நிதிச்சுமையின் பங்கு 0.56 சதவீதம் மட்டுமே. ஆகவே அரசுப் பொருளாதாரத்தை இவ்வுயர்வு பாதிக்காது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

15-வது தொழிலாளர் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூ.26,000 இருக்க வேண்டும். ஆனால் அது ரூ. 18,000 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கீழ்மட்ட ஊழியர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இது உயர்த்தப்பட வேண்டும்.


அடிப்படைச் சம்பளம் உயர்வு என்ற காரணம் காட்டி, வாடகைப் படி குறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் பண்டிகைக் காலங்களில் வழங்கப்படும் வட்டியில்லா கடன் நிறுத்தப்பட உள்ளது. எனவே அவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு, அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும். மத்திய அரசு, 7-வது ஊதியக் குழுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து விரைவில் நடைமுறைப்படுத்திட வேண்டும்’’என்று கூறியுள்ளார்.

காமராஜர் பல்கலை. பி.எட். படிப்புக்கு தகுதிப் பட்டியல் வெளியீடு: டிச.8-ல் கலந்தாய்வு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகதொலைதூர கல்விஇயக்கத்தின் பி.எட். படிப்புக்கான தகுதிப்பட்டியல் பல்கலை. இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.

தொலைதூர கல்வி இயக்ககத்தின்கீழ் வழங்கப்படும்பி.எட்(2015-2016) படிப்பு சேர்க்கைக்கு தகுதிபெற்ற மாணவர்களின்விபரம் காமராஜர்பல்கலைக்கழக இணையதளமான  வெளியிடப்பட்டுள்ளது.


தகுதி பெற்ற மாணவர்களுக்கானகலந்தாய்வு டிச.8 முதல் டிச.10 ஆம்தேதி வரைபல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தொலைதூர கல்விஇயக்ககத்தில் நடைபெறும்.

5 நாள் கனமழை - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.

வங்கக் கடலில் உருவாகியுள்ள, புதிய காற்று அழுத்த தாழ்வு நிலை, தீவிரமடைந்து வருகிறது. இதனால், தமிழகம் மற்றும்
புதுச்சேரியில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், நேற்று கூறியதாவது:

இரு நாட்களுக்கு முன், அந்தமான் கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு நிலை, எதிர்பார்த்த அளவு வலுவடைந்து, தமிழகத்தை நோக்கி நகரவில்லை; மறைந்து விட்டது. தற்போது, வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில், இலங்கை அருகே, புதிய காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இது, தென்மேற்காக மேலும் நகர்ந்து, தமிழகம் அருகே நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த நான்கு நாட்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மழை எச்சரிக்கை: டிச., 1, 2, - தமிழக வட மாவட்டங்கள், புதுச்சேரியின் அனேக இடங்களில் மிக கனமழை; தென் மாவட்டங்களில், ஒருசில இடங்களில் கனமழை. டிச., 3, 4 - தமிழகம், புதுச்சேரியில் பரவலாக கனமழை.சென்னையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மழை அல்லது இடியுடன் கூடிய மழை, விட்டு விட்டு பெய்யும்.நேற்று காலை, 8:30 மணிவரை, தமிழகத்தில் அதிகபட்சமாக, தஞ்சை மாவட்டம், குடவாசல் - 12; விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் - 10; சிவகங்கை மாவட்டம், திருபுவனம் - 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
அதிகம்:

இவ்வாறு அவர் கூறினார்.
நேற்றுடன் முடிந்த ஒரு வாரத்தில், இயல்பு அளவாக தமிழகத்தில், 3.6 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 9.1 செ.மீ., மழை பெய்துள்ளது. இதே கால கட்டத்தில், சென்னையில், 8.2 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 21.7 செ.மீ., மழை பெய்துள்ளது. இதேபோல், 30 மாவட்டங்களில் இயல்பு அளவை விட, கூடுதலாக மழை பெய்துள்ளது. ஈரோடு, கரூர் மாவட்டங்களில், இயல்பு அளவு மழை பதிவாகி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், இயல்பு அளவை விட, குறைவாக மழை பெய்துள்ளது.
மாவட்ட நிர்வாகங்கள் 'உஷார்':


தமிழகத்தில், ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்தால், அதை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, கலெக்டர்கள் உட்பட, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அரசு அறிவுறுத்தி உள்ளது.* ஏற்கனவே பெய்த தொடர் மழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், துாத்துக்குடி மாவட்டங்கள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன* கனமழை தொடரும் என்பதால், அனைத்து துறை அதிகாரிகளும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்* தண்ணீர் தேங்கும் பகுதிகளில், உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும்* நீர்நிலைகளை, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்*நீர் கசிவை நிறுத்த, மணல் மூட்டைகளை தயார் செய்து வைத்திருக்க வேண்டும்* நிவாரண முகாம் மற்றும் மருத்துவ குழுக்களை, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அரசு அறிவுறுத்தி உள்ளது.

இளங்கலை பட்டம் முடித்தவர்கள் ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டங்களைப் படிக்க முடியாது- தொடக்கக்கல்வித் துறையின் RTI Letter.

RTI-யின் பதில் ஏற்படுத்திய நம்பிக்கையின்மை:

இளங்கலை பட்டம் பெற்றவர்கள்

ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டங்களை, வெவ்வேறு 
பல்கலைக்கழகங்களில் ,வெவ்வேறு தேர்வு கால அட்டவணையில் 

(நேரத்தில்) தேர்வு எழுதி முடித்திருந்தால் அதை பணிப்பதிவேட்டில் 
பதிவு செய்து, பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் 
பள்ளிக்கல்வித்துறை பலருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 
மூலம் பதில் அளித்துள்ளது..

ஆனால்,தொடக்கக்கல்வித் துறையோஒரே கல்வியாண்டில் இரண்டு
பட்டங்களை படிக்க முடியாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 
மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது..

ஏன் இந்த முரண்பாடு..?
இது RTI-ல் கொடுக்கப்பட்ட தவறான தகவலினால் ஏற்பட்ட முரண்பாடா...?

இல்லை,இரு துறையிலும் உள்ள வேறுபட்ட விதிமுறையினால் ஏற்பட்ட
முரண்பாடா..?

எது உண்மை...தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த இந்த 
முரண்பாடான தகவலினால் RTI-ல் வழங்கப்படும் தகவல்களின் மீதும் 
ஆசிரியர்களின் மத்தியில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது..

இதில் நமக்கு ஒரு தெளிவு பிறக்க நாம் நீதிமன்றத்தை நாடவேண்டிய
கட்டாயத்திற்க்குத் தள்ளப்பட்டுள்ளோம் தோழர்களே..

தோழமையுடன்,தேவராஐன், தஞ்சாவூர் 

பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள்: விவரங்களில் பிழை திருத்தும் பணி தீவிரம்

வரும் மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவு எண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களை பிழைகளின்றி நவம்பர் 23-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டது. அதன் பிறகு, 26 வரை நீட்டிக்கப்பட்டது.
 இந்தப் பணி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இப்போது நடைபெற்று வருகிறது. அதன்பிறகு, டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் திருத்தப்பட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. அடுத்த 2 வாரங்களில் மாணவர்களுக்கு பதிவெண் வழங்கப்பட உள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு....: இதேபோல், மார்ச்சில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணிகள் டிசம்பர் 10-ஆம் தேதிக்கு பிறகு நடைபெற உள்ளன. இவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களும் இப்போது கோரப்பட்டுள்ளன.
 சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் விடுமுறையிலும் பள்ளிகளுக்கு வந்து தங்களது விவரங்களை சரிபார்த்துச் செல்வதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த விவரங்களை பதிவேற்றம் செய்வதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது.
 இந்த மாணவர்களுக்கு பதிவு எண் உள்ளிட்டவை இந்த மாதத்துக்குள் வழங்கப்பட்டு விடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
 அரையாண்டு தேர்வு மாற்றம்? அதேபோல், மழை விடுமுறை காரணமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தள்ளிவைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே தேர்வுகள் நடைபெறும் என்றும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 இவர்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 28 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சான்றிதழ் ஜனவரி 26-ஆம் தேதி வரை மட்டுமே செல்லத்தக்கது ஆகும்.
 இந்த நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை டிசம்பர் 4 (வெள்ளிக்கிழமை) முதல் 11-ஆம் தேதி வரை மாணவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். பிறகு, சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் இதைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்

நேற்று(30.11.2015 கேள்வி நேரத்தின்போது பல்வேறு கேள்விகளுக்கு மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி: நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்களின் சுருக்கம்:  புதிய கல்விக் கொள்கை  மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி:  அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்துறை சார்ந்த ஆலோசனைகளுக்குப் பின் புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. மத்திய பாடத்திட்டத்துக்கும், மாநில அரசுகளின் பாடத்திட்டத்திட்டுக்கும் சிறந்த ஒத்துழைப்பை அடுத்த ஆண்டு முதல் காண முடியும். மத்திய பாடத்திட்டத்திலும், மாநில பாடத்திட்டங்களிலும் வெவ்வேறு பாடத்திட்ட முறைகள் பின்பற்றப்படுவது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. 

பாடம் நடத்தவும், தேர்வு நடத்தவும், நாளில்லாமல் ஆசிரியர்கள் திணறி வரும் நிலையில் ஆசிரியர்களை, பயிற்சிக்கு வருமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

பாடம் நடத்தவும், தேர்வு நடத்தவும், நாளில்லாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்; இந்நிலையில் ஆசிரியர்களை, ஒரு மாதம் பயிற்சிக்கு வருமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 
பள்ளிக்கல்வித் துறையில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் தரப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசிடமிருந்து, பல கோடி ரூபாய் நிதி கிடைக்கிறது.கற்றல், கற்பித்தலை தொழில்நுட்ப ரீதியாக வழங்க வேண்டும் என்பது தான், மத்திய அரசின் நோக்கம். ஆனால் இது, தமிழகத்தில், பலனில்லாத பயிற்சி திட்டங்களாக மாறிவிட்டன.தமிழகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம் ஆகியவற்றுடன், பயிற்சி அளிக்கும் மூன்று இயக்குனரகங்களின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படவில்லை. எனவே, பாடம் நடத்துவதைப் பார்க்க ஒரு துறை; பயிற்சியை நடத்த, வேறொரு துறை என, முரண்பாடாக உள்ளது.
தற்போது இரண்டாம் கல்விப் பருவத்தில், மழைக்கால விடுமுறை, பண்டிகை விடுமுறைகளுக்கு மத்தியில், அரையாண்டுத் தேர்வு நெருங்கியுள்ளது. பாடங்களை எப்படி முடிப்பது என, ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இந்த நேரத்தில், ஒரு மாதம் முழுவதும் ஆசிரியர் பயிற்சிக்கான அட்டவணையை கல்வித்துறை அறிவித்துள்ளது. 
* பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்க, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம், டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சி
* நவ., 30, டிச., 1 மற்றும் 5ம் தேதிகளில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வாசித்தல், எழுதுதலுக்கு பயற்சி 
* நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, டிச., 12ல், குறுவள பயிற்சி, கணித பயிற்சி பெட்டகப் பயிற்சி, கணினி இயக்கம் மற்றும் கற்பித்தல் பயிற்சி. நவ., 30 முதல் டிச., 22ம் தேதி வரை நடக்கும் பயிற்சியில், ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.- நமது நிருபர் -

கேட்' தேர்வு: பி.இ.,க்கள் ஆர்வம்

மத்திய அரசின், உயர் கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான 'கேட்' தேர்வில், சென்னையில் மட்டும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இவர்களில், பி.இ., எனப்படும், இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் அதிகம்.


300 மையங்களில்...:வரும் கல்வி ஆண்டில், எம்.பி.ஏ., படிப்பதற்கான, கேட் எனப்படும், பொது மாணவர் சேர்க்கை தேர்வு,நாடு முழுவதும், 300 மையங் களில் நேற்று நடந்தது. 2.19 லட்சம் பேர் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர். மூன்று தாள்கள், தலா ஒரு மணி நேர, 'ஆன்லைன்' தேர்வு நடந்தது.

தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நாமக்கல், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில், 30 தேர்வு மையங்களில், இந்த தேர்வு நடந்தது. சென்னையில், 10 ஆயிரம் பேர் உட்பட, தமிழகத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

80 சதவீதம்இவர்களில், 80 சதவீதம் பேர், பி.இ., இறுதி ஆண்டில் படிக்கும் அல்லது கடந்த ஆண்டு, பி.இ., முடித்தவர்கள்.அதிகமானோர் எழுத காரணம்இந்த தேர்வு, 2007ல் துவங்கிய போது, 2.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். பின், படிப்படியாகக் குறைந்தது. 2014ல், 1.96 லட்சம் பேர் பங்கேற்றனர்; இந்த ஆண்டு, 2.19 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

இதுகுறித்து, ஐ.எம்.எஸ்., எனப்படும், முன்னணி தனியார் பயிற்சி மையம் ஒன்றின், சென்னை மைய இயக்குனர் டோனி சேவியர் கூறுகையில், ''ஐ.ஐ.எம்., எண்ணிக்கை, 19 ஆக அதிகரித்துள்ளதால், இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது; தேர்வும் கொஞ்சம் எளிதாகியுள்ளது. இன்ஜி., மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் வருவதால், எம்.பி.ஏ., படிக்க விரும்புகின்றனர். இந்த விழிப்புணர்வு சமீப காலமாக அதிகரித்துள்ளது,'' என்றார்.

வணிகவியல் படிப்புக்குஇன்ஜினியர்கள் ஆசை:எம்.பி.ஏ., எனப்படும் மேலாண் நிர்வாக படிப்பு, வெறும் வணிகவியல் தொடர்பான படிப்பாக இருந்த நிலை மாறி, தற்போது அனைத்து பட்டதாரிகளுக்கும் தேவையான படிப்பாக மாறி விட்டது. பி.இ., - பி.டெக்., மாணவர்கள், எம்.பி.ஏ., படிக்க அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

அதிலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் படிக்க, இன்ஜி., பட்டதாரிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.எம்.பி.ஏ., படித்தால் தனியார் நிறுவனங்களில், ஆரம்பத்திலேயே அதிக சம்பளத்துடன் வேலை கிடைப்பதோடு, பதவி உயர்வுக்கும் வாய்ப்புகள் உள்ளதே காரணம்.

5 நாட்கள் பணி 10 ஆயிரம் சம்பளம் பகுதி நேர ஆசிரியர்கோரிக்கை.

வாரத்தில் ஐந்து முழு நாட்கள் வேலை, ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், என பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் 2012 மார்ச்சில் 16,549 பகுதி நேர கலை, ஓவியம், உடற்பயிற்சி, தையல், இசை ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணி, மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. 


கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரூ.2ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. மூன்று நாட்கள் பணி என்பதை ஐந்து நாட்கள் முழுநேர பணி, மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கவேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பகுதிநேர ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது: வாரத்தில் 5 நாட்கள் வேலைக்கு வருகிறோம். ரூ.10 ஆயிரம் சம்பளம் தாருங்கள் என அரசிடம் கேட்டுள்ளோம். ஒரு சில வாரங்களில் இதற்கான முடிவு எட்டப்படும், என அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர். சமீபத்தில் ஜாக்டோ சார்பில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரம் பணியாற்றினர். அரசுக்கு ஆதரவாக, எந்த நிலையிலும் வேலை பார்க்க தயார் என அறிவித்தோம். ஆனால், அரசு எங்களுக்கு சம்பள உயர்வு அளிக்க தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. பகுதி நேர ஆசிரியர்களுக்குரிய சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என கூறப்பட்டது. பழைய முறையில், தலைமை ஆசிரியர் மூலமே வழங்கப்படுகிறது. தற்போது பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.

இதில் பெண் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கியதால், ஆண்கள் ஏற்கனவே பணியாற்றிய இடத்திலிருந்து கூடுதலாக100 கி.மீ., அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே பொதுப்பிரிவு கவுன்சிலிங்கை மறுபடியும் வைக்க வேண்டும், என்றார்.

பயமுறுத்தும் பருவ நிலை மாற்றங்கள்: கடும் வரட்சியும்,அதிதீவிர புயலும் தாக்க வாய்ப்பு

ஒழுங்கற்ற பருவ நிலை, பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பல்வேறு மாற்றங்கள் உலகிற்கு பெரும் சவாலாக மாறிவருகின்றன.இவற்றை சமாளிப்பதற்காக சர்வதேச அளவிலான மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் பருவ நிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றால் மனித குலம் எதிர்கொள்ளும் பாதிப்புகள்என்ன என்பது குறித்து இப்போது பார்ப்போம்புவி வெப்ப மயமாதலால் கடுமையான வறட்சி பல பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் ஒரு நிகழ்வாக மாறும்.


இதனால் குடிநீர், உணவு பிரச்னைகள் ஏற்படும். குடிநீருக்காகவும் உணவுக்காகவும் மோதல்கள் அதிகரிக்கும். புவிவெப்பமயமாதலால் புயல்கள் உருவாவதும் அடிக்கடி ஏற்படும் நிகழ்வாக மாறும்.இந்த புயல்கள் அதிதீவிரமானதாக இருக்கும் என்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். கடுமையான புயல் மழையால் விவசாயம் பெரும் இழப்புகளை சந்திக்கும் என்பது சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளின் எச்சரிக்கையாக உள்ளது.இது தவிர வெப்பம் அதிகரித்து அது தொடர்பான நோய்களும் இறப்புகளும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

ஏற்கனவே அதீத வெப்ப அலைகளால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.நேரடியாக வெப்பத்தின் தாக்கம் தவிர தொற்று நோய்களும் பரவலாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியிடும் நச்சு வாயுக்களின் அளவை கட்டுப்படுத்த தவறினால் பூமிப்பந்தின் சராசரி வெப்ப நிலை 3 முதல் 10 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரும் விபரீதம் இந்த நூற்றாண்டு இறுதியில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.வெப்ப மயமாதல் அதிகரிப்பால் துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகுவதாகவும் இதனால் கடல் நீர் மட்டம் கடுமையாக அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.கடந்த 100 ஆண்டுகளில் கடல் நீர் மட்டம் 4 முதல் 8 அங்குலம் அதிகரித்த நிலையில் அடுத்த 100 ஆண்டுகளில் இந்த உயர்வு 4 முதல் 36 அங்குலம் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சிறிய தீவுகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வேறு இடங்களில் தஞ்சம் அடைய வேண்டி வரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் தற்போதுள்ள உயிரினங்களில் நான்கில் ஒரு பகுதி இன்னும் 25 ஆண்டுகளில் இல்லாமல் போகும் ஆபத்து உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வறட்சி, வெயில், வெள்ளம், நீர் மட்டம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கோடிக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து செல்லவேண்டி வரும் என்றும் கூறப்படுகிறது.பருவ நிலை மாற்ற பிரச்னைகளால் மட்டும் கடந்த 2 ஆயிரமாவது ஆண்டு ஒன்றரை லட்சம் பேர் மரணமடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது

CPS: பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு...

*பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு.
* 2013 மார்ச் மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை உள்ள கணக்கீட்டுத்தாள்(Account slip) மாநிலப் புள்ளி விபர மையத்தால் (Govt Data centre) வெளியிடப்பட்டுள்ளது.


*இதில் உங்கள் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் பிடிக்கப்படும்(10%) தொகை , அகவிலைப்படி நிலுவை ,ஊக்க ஊதியஉயர்வு நிலுவை ஆகியன வரவு வைக்கப்படுகின்றது.
* அவ்வாறு வரவு வைப்பதில் ஏதேனும் விடுபட்டு இருந்தால் அதை Missing credit என்றும், அதற்கு உரிய Token Number & dateVoucher Number & date.Bill cross & Net amount,Total Cps Amount.இதனுடன் விடுபட்ட தொகையினையும் சேர்த்தால் தான் உங்கள் கணக்கில்சேரும்.கணக்கு விபரங்களை ஓப்பிட்டு பிழைகள் மற்றும் விடுபட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட PDO (Pay drawing officer ) யை தொடர்பு கொள்ளலாம்.

விடுமுறை .'' நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும், பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்...

மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான,எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக்கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பலபகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


வாரத்துக்கு மூன்று வகுப்புகள் பாடம் எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் பள்ளிகளில், முழு நேர ஆசிரியர்களாகவே பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், பணிபுரியும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம்வழங்கப்படும்.மே மாத விடுமுறை காலத்தில் மாத சம்பளம் கிடையாது. தற்போது மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டது.''இந்த நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும். அவ்வாறு பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்,''என, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

PAY ORDER: 7979 BT POST NOV MONTH PAY ORDER

PAY ORDER: 7979 BT POST NOV MONTH PAY ORDER

Tamil Nadu Open University:DECEMBER 2015 Hall Ticket.

படிப்பை கைவிட்ட குழந்தைகள் விவரம் சேகரிக்கும் கல்வித்துறை

பள்ளிக்கு நீண்ட நாட்களாக வராத குழந்தைகள், படிப்பை பாதியில் கைவிட்ட குழந்தைகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,), 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பது முக்கிய நோக்கமாக உள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கல்வி கற்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. 


பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல், படிப்பை கைவிட்ட குழந்தைகளுக்குமீண்டும் கல்வி வாய்ப்பு அளித்தல், எஸ்.எஸ்.ஏ., முக்கிய பணி.தற்போது, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விவரம், தற்போது படிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, படிப்பை கைவிட்ட குழந்தைகள், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத குழந்தைகள், அதற்கான காரணங்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அனுப்ப, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. வகுப்பு ஆசிரியர் மூலம், இவ்விவரங்கள் சேகரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, எஸ்.எஸ்.ஏ., அலுவலர் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் வீதி வீதியாக சென்று, படிப்பை கைவிட்ட குழந்தைகள், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.