யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/11/17

சுகாதாரமற்ற கழிப்பிட பயன்பாட்டில் இந்தியா... முதலிடம்!!!

                                        
கொச்சி:நாடு முழுவதும், 73 கோடி பேர், சுகாதாரமற்ற
இடங்களில், இயற்கை உபாதைகள் கழிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால், 35 கோடி பெண்கள், பாதுகாப்பற்ற இடங்களில் இயற்கை உபாதைகளை கழிப்பதாகவும், ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'வாட்டர் எய்டு' எனப்படும், சர்வதேச தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:தனிநபர் சுகாதாரம் மற்றும் கழிப்பறை பயன்பாடு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பல தகவல்கள் கிடைத்துள்ளன.உலக மக்கள் தொகையில், இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவோர் அதிகம் உள்ளனர்.

சுகாதாரமற்ற இடங்களில் இயற்கை உபாதைகளை கழிப்போர் எண்ணிக்கையில், உலக அளவில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில், 73 கோடி பேர், சுகாதாரமற்ற இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். 35 கோடி பெண்கள், திறந்தவெளியில், சுகாதாரமற்ற முறையில், இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இந்தியர்களில் பெரும்பாலானோர், முறையான கழிப்பறைகளை பயன்படுத்துவதில்லை.

உலக மக்கள் தொகையில், முதலிடம் வகிக்கும் சீனா, சுகாதாரமற்ற கழிப்பறை பயன்பாட்டில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்த நாட்டில், 34 கோடி பேர், சுகாதாரமற்ற கழிப்பிடங்களை பயன்படுத்துகின்றனர். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா, இந்த பட்டியலில், மூன்றாம் இடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும், 110 கோடி பேர், சுகாதாரமற்ற கழிப்பிடங்களை பயன்படுத்துகின்றனர். நீர் பற்றாக்குறை, குறைவான இட வசதி, மக்கள் நெருக்கடி போன்ற பல காரணங்களால் இந்த அவலம் நீடிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஐந்து கோடி கழிப்பறை

உலக அளவில், சுகாதாரமற்ற கழிப்பறைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில், இந்தியா முதலிடம் வகிக்கும் நிலையில், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளின் பட்டியலிலும், இந்தியா முன்னிலை வகிக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், அக்., 2014 முதல், நவ., 2017 வரை, 5.2 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், பல கிராமங்கள், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக மாறியுள்ளன. மிக விரைவில், நாடு முழுவதும் இந்த நிலையை ஏற்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சசி கும்பலின் தில்லாலங்கடிகளை போட்டுக் கொடுத்தது...'ஸ்லீப்பர் செல் '!

சசி கும்பலின் தில்லாலங்கடி வேலைகளை, 'ஸ்லீப்பர் செல்'கள்,
'போட்டு'க் கொடுத்ததால் தான், ஜெயலலிதா வசித்த, போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது' என்ற, பகீர் தகவலை, வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர். கோடிக்கணக்கில் குவித்த சொத்துகளின், அசல் ஆவணங்கள் அங்கு இருந்ததால், சோதனை என்ற தகவல் பரவியதும், பின்னங்கால் பிடரியில் பட, இளவரசியின் மகன் விவேக், அங்கு ஓடி வந்துள்ளார். ஜெயலலிதாவின் அறை உட்பட, சில அறைகளில் சோதனை நடத்தக் கூடாது என, அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், வருமான வரித்துறையினர் அடுத்து எங்கு, சோதனை நடத்தப் போகின்றனரோ என்ற கலக்கத்தில், சசிகலாவின் மன்னார்குடி உறவுகள் உள்ளன.
சசிகலா கும்பலைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என, 215 இடங்களில் நவம்பர், 9ல், வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ஐந்து நாட்கள் தொடர்ந்த சோதனையின் முடிவில், முதற்கட்டமாக, 1,430 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு நடந்தது கண்டறியப்பட்டது.

ஆதாரங்கள் சிக்கின

மேலும், பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், பினாமி சொத்துகள்
மற்றும் போலி நிறுவன பரிவர்த்தனைகள் குறித்த ஆதாரங்களும் சிக்கின.தொடர்ந்து, ஜெ.,
உதவியாளர் பூங்குன்றன், இளவரசி மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா உள்ளிட்ட பலரிடம், வரித்துறை விசாரணை நடத்தியது.

ஜெ., மறைவுக்குப்பின், அமைச்சர் விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி ஆகியோர், வரித்துறை சோதனையில் சிக்கியதை பார்த்து பீதியடைந்த சசிகலா கும்பல், 25 ஆண்டுகளாக குவித்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான
சொத்து ஆவணங்களை, நம்பிக்கையான இடங்களில் பதுக்கி, 'அப்பாடா...' என, நிம்மதி
பெருமூச்சு விட்டிருந்தது.ஆனால், வரி துறையோ, பாகிஸ்தான் மீது இந்திய ராணுவத்தின், துல்லிய தாக்குதல் போல் குறி வைத்து, 215 இடங்களில் சோதனை நடத்தியது. இதில், தங்கள் கும்பலின், 'ஜாதகமே' அவர்களிடம் சிக்கியதை அறிந்து, மன்னார்குடி கும்பல் ஆடிப்போனது.இதைத் தொடர்ந்து, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், போயஸ் கார்டனில், நேற்று முன் தினம் இரவு, வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

சசிகலா மற்றும் விவேக் ஆகியோரின் அறைகளில், இந்த சோதனை நடந்தது. இரவு, 9:00 மணிக்கு துவங்கிய சோதனை,நள்ளிரவு, 1:30 மணிக்கு முடிந்தது. அதில், சசிகலா கும்பல்
வாங்கிக் குவித்த பல சொத்துகளின் அசல் ஆவணங்கள் மற்றும் போலி நிறுவனங்களில் செய்யப்பட்ட, பல கோடி ரூபாய் முதலீடுகள் குறித்த விபரங்கள் சிக்கியுள்ளன.

கடத்த திட்டம்

போயஸ் கார்டனில் நடந்த சோதனைக்கு, வரித்துறையினர் பல மாதங்களாக சேகரித்த தகவல்கள் ஆதாரமாக இருந்தாலும், சசிகலா கும்பலைச் சேர்ந்த சிலர், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, 'ஸ்லீப்பர் செல்'களாக செயல்பட்டு, பல விஷயங்களை, 'போட்டு'க் கொடுத்ததும், முக்கிய காரணமாகும்.அந்த, 'ஸ்லீப்பர் செல்'கள் வாயிலாகத்தான், போயஸ் கார்டனில் பதுக்கியுள்ள ஆவணங்களை, வேறு இடங்களுக்கு, சசி சொந்தங்கள் கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

அதனால் தான், வருமான வரித்துறையினர், அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதை வருமான வரித்துறை வட்டாரங்கள் சிலவும், உறுதி செய்துள்ளன.வழக்கமாக, சசி கும்பலைச் சேர்ந்த தினகரன் பேட்டி அளிக்கும் போது, 'பழனிசாமி அணியில்,எங்களின், 'ஸ்லீப்பர் செல்'கள் பதுங்கி உள்ளனர். தகுந்த சமயத்தில், அவர்கள் செயல்படுவர்' என, கூறி வந்தார்.
ஆனால், அவரது கும்பலிலேயே, 'ஸ்லீப்பர் செல்'கள் இருப்பதை கண்டு பிடிக்க தவறி விட்டார்.போயஸ் கார்டன் இல்லத்தில், சோதனை நடந்தபோது, பின்னங்கால் பிடரியில் பட, விவேக் அங்கு ஓடி வந்தார். அதற்கு காரணம், 'மிக பாதுகாப்பான இடம்' என, அங்கு பல முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததே காரணம்.

215 இடங்கள்:

அதனால் தான், ஒப்பாரி
வைக்காத குறையாக, 'அது ஜெ., வாழ்ந்த கோவில்' எனக்கூறி, தினகரன் ஆதரவாளர்கள், திசை திருப்ப பார்த்தனர். ஆனால், முக்கிய ஆவணங்கள், இச்சோதனையில் வசமாக சிக்கிவிட்டன. வருமான வரித்துறையினர், ஒரே நாளில், 215 இடங்களில் சோதனை நடத்தி யதைத் தொடர்ந்து, ஜெ., வாழ்ந்த போயஸ் கார்டனிலும் சோதனை நடந்துள்ளது. அதனால், அடுத்த சோதனை எங்கு நடக்குமோ என, மன்னார்குடி உறவுகள் கலக்கம் அடைந்து உள்ளன.

சொத்து ஆவணங்கள் பறிமுதல்

வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

போயஸ் கார்டனில், சசிகலா கும்பல், ஏராள மான சொத்துகளின், அசல் ஆவணங்களை பதுக்கி வைத்திருந்தது. அதன் வாயிலாக, சொத்துகள் தொடர்பாக தெளிவான புரிதல் கிடைத்துள்ளது. அதேபோல, போலி கம்பெனி களின், பல முக்கிய பரிவர்த்தனைகள் தொடர் பான ஆவணங்கள், மின்னணு சாதனங்களில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.

அத்துடன், சில கடிதங்களும் சிக்கி
உள்ளன. மேலும், சோதனையில் சிக்கிய, 'டேப்லெட், லேப்-டாப்' மற்றும் நான்கு, 'பென் - டிரைவ்'களில், குவிந்துள்ள தகவல்களை, அலசி, ஆராய்ந்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஐகோர்ட் அனுமதியா?

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நிர்வகிப்பது தொடர்பாக, ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வீட்டை அரசுடைமை யாக்க, மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், வருமான வரித்துறையினர் அங்கு சோதனை நடத்தியது, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. அவர்கள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுடன் தான், அங்கு நுழைந்ததாக தகவல் வெளியானது.

ஆனால், வரித்துறையினர் கூறுகையில், 'இது சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடந்த
சோதனையின் தொடர்ச்சி என்பதால், யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை. அதுதவிர, தேவைப்படும் இடத்தில், சோதனை நடத்த எங்களுக்கு அதிகாரம் உள்ளது' என்றனர்.

வேலைவாய்ப்பு: கனரா வங்கியில் பணி!

                                                   
கனரா வங்கியின் கீழ் செயல்பட்டுவரும் கேன்ஃபின் ஹோம்ஸ்
நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 25

பணியின் தன்மை: மேலாளர், முதுநிலை மேலாளர் - 20

சம்பளம்: மேலாளர் பணிக்கு மாதம் ரூ.28,000 - 43,450/- முதுநிலை மேலாளர் பணிக்கு ரூ.33,300 - 47,700/-

வயது வரம்பு: 28 - 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-

கடைசித் தேதி: 23.11.2017

மேலும் விவரங்களுக்கு www.canfinhomes.com என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

இடைநிலை ஆசிரியகளின் ஊதிய முரண்பாடு மனுவுக்கு பதிலளிக்க ஊத்தரவு!!



ஏழாவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும் ஆசிரியர் பேரவை!!!

கறம்பக்குடி ஒன்றியத்தில் மட்டும் 70க்கும் மேற்பட்டோர் 7வது ஊதியக்குழு ஊதிய நிர்ணய விருப்ப படிவத்தை திரும்ப பெற உதவி தொ.க.அலுவலகத்தில் மனு!!!

அலுவலகங்களில் நடைபெறும் பணிகளை மேற்கொள்ள அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாமா?தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்

விபத்தில் உயிரை காப்பாற்றுபவர்களுக்கு பரிசு!!!

                                       
விபத்தில் சிக்கியவர்களை வேடிக்கை பார்க்காமல் காப்பாற்றினால்
ரூ.2000 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

சாலை விபத்துகளில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பதைக் காட்டிலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ முன் வராததால் ஏற்படும் கால தாமதம் காரணமாக பலர் உயிரிழக்கின்றனர்.இதனால் மனித நேய அடிப்படையில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற டெல்லி அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று (நவம்பர் 18) நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின், “ டெல்லியில் சாலை விபத்தில் பலியாவோர் எண்ணிக்கையைக் குறைக்க மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் மாநில அரசு புதிய திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது.

அதன்படி சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களை மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு டெல்லி அரசு சார்பில் ரூ. 2 ஆயிரம் பணம் பரிசாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் விபத்தில் சிக்கியவர்களை தயங்காமல் காப்பாற்றுவார்கள். அதன்மூலம் பலி எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெளிமாநிலத்தவருக்குப் பணி: வைகோ கண்டனம்!

                                              
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் பிற மாநிலத்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்புக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (நவம்பர் 19) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 9351 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு பிப்ரவரி 11ல் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டித் தேர்வுக்கு மற்ற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு விதிகளைத் திருத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் 80 லட்சம் பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு வெளி மாநிலத்தவருக்கும் விண்ணப்பிக்க அனுமதி அளித்துள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது. குஜராத், கர்நாடகம், மராட்டிய மாநிலங்கள் எல்லாம் அம்மாநில மக்களுக்குத் தான் முன்னுரிமை அளிக்கின்றன. தமிழ்நாடு மட்டும் இந்த விதிகளில் திருத்தம் செய்திருப்பது முற்றிலும் நியாயமற்றது. கண்டனத்துக்குரியது. இந்த விதிகளை உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும்" என்றார்.

அரசாணை விபரமும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளும்!!!

TET: வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது!!!

                                              
தமிழகத்தின் பாடத்திட்ட மாற்றத்தை நாளை முதல்வர் பழனிசாமி
தொடங்கி வைக்க உள்ளதாகவும் மேலும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது என்றும்,வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பணியில் சேர முடியாதவர்களுக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் 11 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ள சிறப்பாசிரியர் பாடத்திட்டம்

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்களை வெளிக்கொண்டுவர
கடந்த 1972ம் ஆண்டு சிறப்பாசிரியர் பணியிடம் உருவாக்கப்பட்டது. இதில், ஓவியம், தையல், இசை உள்ளிட்ட பாடம் கற்பிக்கப்படுகிறது.
1972ம் ஆண்டு முதல் தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியின்படியே ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிறப்பு பாடங்கள் கற்பித்துவருகின்றனர்.இந்நிலையில், கடந்த 1987ம் ஆண்டு சிறப்பு ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்தபாடத்திட்டம் 2006ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. பின்னர், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு சென்ைனயில் பணிமனை அமைக்கப்பட்டது. 2வது கட்ட பணிக்குபின், பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டது.

இந்த பாடதிட்டத்தில், 6ம் வகுப்புக்குபுள்ளி, கோடு, வடிவம் குறித்த பாடத்திட்டம், 7 மற்றும் 8ம் வகுப்புக்கு கற்பனை ஓவியங்கள் வரையும் பயிற்சி பாடத்திட்டம், 9ம் வகுப்புக்கு காகிதம் கொண்டு வெட்டி ஒட்டுதல் (கொலேஜ் வர்க்), சோப்பு கட்டிங் தயாரித்தல் பாடத்திட்டம், 10ம் வகுப்புக்கு வரலாற்று சின்னங்கள், குகை ஓவியங்கள், நாகரிக உடைகள் என்ற முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டது.ஒரு கல்வியாண்டில் மாணவர்களுக்கு 30 பாடங்களில், 20 பாடங்கள் வகுப்பு வேளைகளிலும், 10 பாடங்கள் வீட்டு பாடங்களாகவும் வரைந்து முடிக்கும் வகையில் இப்புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டது.

இப்புதிய பாடத்திட்டங்களுக்கு மதிப்பெண் வழங்கவும் கல்வித்துறை முடிவு செய்தது. ஆனால், இப்பாடத்திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டது. 2006ம் ஆண்டு முதல் இதுவரை கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். நீண்ட இழுபறிக்கு பிறகு சிறப்பாக தயாரிக்கப்பட்ட இப்பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து சிறப்பாசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

உங்க வங்கி கணக்கில் 10000 ரூபாய் இருக்க அப்ப நீங்க வறுமை கோட்டிற்கு கீழ் இருக்க தகுதியில்லை!!

ஒரு கோடி மதிப்புள்ள இடம் அரசுப்பள்ளிக்கு தானமாக வழங்கிய மாமனிதர்!!!

செல்போனில் சாதி பெயரைச் சொன்னாலும் சிறை!!!

பொது இடங்களில் செல்பேசியில் தாழ்த்தப்பட்டவர்க
ளை சாதி ரீதியில் திட்டினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சாதிரீதியாக போன் மூலம் மோசமாகப் பேசியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் முதல் தகவலறிக்கைப் பதிவுசெய்யப்பட்டது. அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மனுத் தாக்கல் செய்தார்.

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி,அலகாபாத் உயர் நீதிமன்றம் முதல் தகவலறிக்கையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. அந்த நபர் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜே செலமேஸ்வர் மற்றும் எஸ் அப்துல் நாசர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான விவேக் விஷ்னோய் என்ற வழக்கறிஞர், சம்பவ நடந்தபோது புகார் அளித்த பெண்ணும், தனது கட்சிக்காரரும் வெவ்வேறு இடங்களில் இருந்ததாகவும், செல்பேசி மூலமே பேசிக்கொண்டதாகவும் அதனால், அவர் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவலறிக்கையை ரத்து செய்யவேண்டும் என்றும் வாதாடினார். ஆனால், அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்தனர். மேலும், சாதிரீதியாக மோசமான கருத்துகளை செல்பேசி மூலம் தெரிவித்தாலும் குற்றம் என்றும் என்று உத்தரவிட்டனர்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை குறிவைத்து, சாதி ரீதியாக விமர்சிப்பதும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆட்சேபமான கருத்துகளை பதிவிடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் எச்சரிக்கை விடுத்தது நினைவுகூரத்தக்கது.

செல்போனில் சாதி பெயரைச் சொன்னாலும் சிறை!!!

பொது இடங்களில் செல்பேசியில் தாழ்த்தப்பட்டவர்க
ளை சாதி ரீதியில் திட்டினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சாதிரீதியாக போன் மூலம் மோசமாகப் பேசியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் முதல் தகவலறிக்கைப் பதிவுசெய்யப்பட்டது. அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மனுத் தாக்கல் செய்தார்.

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி,அலகாபாத் உயர் நீதிமன்றம் முதல் தகவலறிக்கையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. அந்த நபர் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜே செலமேஸ்வர் மற்றும் எஸ் அப்துல் நாசர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான விவேக் விஷ்னோய் என்ற வழக்கறிஞர், சம்பவ நடந்தபோது புகார் அளித்த பெண்ணும், தனது கட்சிக்காரரும் வெவ்வேறு இடங்களில் இருந்ததாகவும், செல்பேசி மூலமே பேசிக்கொண்டதாகவும் அதனால், அவர் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவலறிக்கையை ரத்து செய்யவேண்டும் என்றும் வாதாடினார். ஆனால், அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்தனர். மேலும், சாதிரீதியாக மோசமான கருத்துகளை செல்பேசி மூலம் தெரிவித்தாலும் குற்றம் என்றும் என்று உத்தரவிட்டனர்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை குறிவைத்து, சாதி ரீதியாக விமர்சிப்பதும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆட்சேபமான கருத்துகளை பதிவிடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் எச்சரிக்கை விடுத்தது நினைவுகூரத்தக்கது.

19/11/17

தமிழகம் முழுவதும் 36 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கணினி அறை அறிவியல் ஆய்வு கூட வசதி!!!

தமிழகம் முழுவதும் 36 உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள்,
அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட உள்ளது. தற்போது, இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் 6 மாதத்திற்குள் இப்பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், கணினி அறை, அறிவியல் ஆய்வு கூடங்கள், நூலக அறை, கழிவறை 39 ேகாடி செலவில் கட்டப்படும் என்று சட்டசபை கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 பள்ளிகள், வேலூரில் 2, தர்மபுரி 1, திருவண்ணாமலை 3, விழுப்புரம் 4, சேலம் 1, கோவை 2, திண்டுக்கல் 1, திருச்சி 2, பெரம்பலூர் 1, கடலூர் 3, திருவாரூர் 4, தஞ்சாவூர் 1, புதுக்கோட்டை 5, மதுரை 1, தூத்துக்குடி 1, திருநெல்வேலி 1, கிருஷ்ணகிரி 1 உள்பட தமிழகம் முழுவதும் 36 பள்ளிகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சுமார் 39 கோடி செலவில் இப்பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது.

பொதுப்பணித்துறையின் மூலம் இதற்கான பணிகளுக்கு தற்போதுடெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இப் பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் 15 கோடி செலவில் 137 கூடுதல் வகுப்பறைகள், 3 கோடி செலவில் அறிவியல் ஆய்வகம்,1.71 கோடி செலவில் கணினி அறை, 3.73 கோடி செலவில் கலை மற்றும் ஓவிய அறை, 5.34 கோடி செலவில் நூலக அறை கட்டப்படுகிறது.

 இந்த பணி முடிந்த பிறகு கணினி, ஆய்வக தளவாட பொருட்கள் வாங்கப்படுகிறது. இதற்காகவும், தனியாக டெண்டர் விடப்பட உள்ளது. 6 மாதத்திற்குள் முழுவதுமாக இப்பணிகளை முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

NTSE Exam 2017 - Exam Instruction Regarding...



DSE PROCEEDINGS-தமிழக மாணவர்களை அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் மற்றும் திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு பயிற்சி மையங்கள் அமைத்தது-2 வாரங்களுக்கான பயிற்சி வகுப்புகள் -விவரம் அனுப்புதல் சார்பு!!!

11 லட்சம் போலி வாக்காளர்கள்; தேர்தல் கமிஷன் நீக்க முடிவு!!!

                                              
தமிழகம் முழுவதும், 11 லட்சம் போலி வாக்காளர்களின் பெயர்களை, 
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது; ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும், 30 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், ஆண்டு தோறும், அக்டோபர் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடத்தப்பட்டு, ஜனவரி, 5ல், இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்படும்.

சிறப்பு முகாம்

அதன்படி, இந்தாண்டு அக்டோபரில், தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி துவங்கியது. இரண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன; ஆன் - லைனிலும் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.


0:00

இதன்படி, ஒரு மாதத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, 4.60 லட்சம்; நீக்கக்கோரி, 1.58 லட்சம்; முகவரி மாற்றக் கோரி, ஒரு லட்சம்; திருத்தம் கோரி, 51 ஆயிரத்து, 84 என, மொத்தம், 7.69 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவம்பர், 30 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர், ஆர்.டி.ஓ., மற்றும் தாலுகா அலுவலகங்களில், விண்ணப்பம் அளிக்கலாம். தேர்தல் கமிஷன் இணையதளத்தில், ஆன் - லைன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில், 'சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள, 40 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்' என, தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில், மனு அளிக்கப்பட்டது. இது குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், 30 ஆயிரத்து, 495 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்; தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது.

விசாரணை:

தமிழகம் முழுவதும், ஒன்றுக்கும் மேற்பட்டஇடங்களில் உள்ள பெயர்கள், இடம் மாறிசென்றவர்கள், இறந்தவர்கள் என, 9.45 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அக்டோபரில், பெயர் நீக்கக் கோரி, 1.58 லட்சம் விண்ணப்பங்கள் பெறபட்டுள்ளன. இவற்றையும் சேர்ந்து, மொத்தம், 11.03 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட உள்ளன.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி கூறுகையில், ''11.03 லட்சம் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று, அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர். நீக்க வேண்டியவை என, உறுதி செய்து, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்,'' என்றார்.

2100 க்குள் சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம் !!!

அடுத்த வாரம் 2 புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிறது... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

வி.ஏ.ஓ.க்கள் நூதன போராட்டம் அறிவிப்பு!!!

இலவச 'லேப் டாப் 'கள் பழையது மாணவர்கள் முற்றுகை!!!

முடிந்துபோன பணிக்கு டெண்டர் அதிகாரிகள் துணையோடு முறைகேடு!!!

தேசிய திறனாய்வு தேர்வு 1.59 லட்ச மாணவர்கள் எழுதுகின்றனர்!!!

மாணவர்களுக்கு ஸ்டேஷனில் பாடம்!!!

குரூப் 4 தேர்வு: இலவச பயிற்சி!!!

தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு SABL - LESSON PLAN எழுத தேவை இல்லை - DATE : 06/07/2015

1-4 வகுப்பு ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய பதிவேடுகள் குறித்து அரசாணைகள் உள்ளதா??? RTI பதில்

*அரசாணை அறிவோம் : 34 தொடக்கக்கல்வி - M.Phil., P.hd மேற்படிப்புகளுக்கு உதவித் தொடக்கக் கல்வி/கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரே அனுமதி அளிக்கலாம். தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் : 023458 / இ1 / 2014

7வது ஊதிய கமிசனில் பாரபட்சம் ஊதிய நிர்ணய விருப்ப கடிதத்தை திரும்ப பெறும் இடைநிலை ஆசிரியர்கள்!!!

நம் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் !

1.ஆசிரியர் வருகைப் பதிவேடு

2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்

6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு

8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு

11.பள்ளி விவரப் பதிவேடு (school profile )
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேடு
15.தேக்கப் பட்டியல்

16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேடு
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்

21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு

26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு

31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்விக்குழு பதிவேடு

36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை

41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )

46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு

52.நலத்திட்டப் பதிவேடுகள்

செல்போன் டவரில் ஏறி போராட்டம்!

                                               
மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அண்ணா சாலையில்
உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கடலூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற இளைஞர் சென்னை அண்ணா சாலையில் உள்ள செல்போன் டவரில் ஏறி இன்று (நவம்பர் 18) காலை போராட்டம் நடத்தியுள்ளார். சுமார் 100 அடி உயரத்தில் இருந்து கொண்டு மேலே இருந்து கீழே குதிக்கப்போவதாக மிரட்டியுள்ளார். இதைகண்ட சிலர் காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் இளைஞரைக் கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். இதனை மறுத்த ரவிச்சந்திரன் மேலே இருந்து சில துண்டு பிரசுரங்களை கீழே போட்டுள்ளார். அதில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பா.ஜக தலைவர் டாக்டர் தமிழிசை ஆகியோர் பதவி விலக வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். ரேசன் கடைகளில் அனைவருக்கும் ரூ.10 விலையில் சர்க்கரை வழங்க வேண்டும். எழும்பூர் கவின் கல்லூரி மாணவர் பிரகாஷ், மாணவி அனிதா ஆகியோர் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும், விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தது தெரியவந்தது.


இதனிடையே செல்போன் டவரில் ஏறிய தீயணைப்புத் துறை வீரர் ஒருவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரவிச்சந்திரனிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரைக் கீழே அழைத்து வந்துள்ளார்.

செல்போன் டவரில் இருந்து இறங்கியதும் அவரைக் கைது செய்து தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இவர் இதற்கு முன்னதாக நான்கு முறை செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களிடம் வசூல் வேட்டை அரசு உத்தரவை மீறுவதாக புகார்!!!

DA Rates For Employee From 01.01.2006 To Till Date

DA Rates For Employee From 01.01.2006 To Till Date

*1.1.2006=0%*
*1.7.2006=2%*
*1.1.2007=6%*
*1.7.2007=9%*
*1.1.2008=12%*
*1.7.2008=16%*
*1.1.2009=22%*
*1.7.2009=27%*
*1.1.2010=35%*
*1.7.2010=45%*
*1.1.2011=51%*
*1.7.2011=58%*
*1.1.2012=65%*
*1.7.2012=72%*
*1.1.2013=80%*
*1.7.2013=90%*
*1.1.2014=100%*
*1.7.2014=107%*
*1.1.2015=113%*
*1.7.2015=119%*
*1.1.2016=125%*
*1.7.2016=132%*
*1.1.2017=136%*
*1.7.2017=139%*

18/11/17

SSA- தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கற்றல் விளைவுகள் "சார்ந்த பயிற்சி -நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன ,பயிற்சிக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்ட பின் பயிற்சிகள் நடைபெறும்

G.O and Express Pay Order for Newly Upgraded High School- Released

FLASH NEWS-அரசாணை -224-நாள் 04.11.2017- -பொது நிகழ்ச்சிகள் ,RALLIES ,கண்காட்சிகளுக்கு மற்றும் பல வெளி நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லுதல் குறித்து -சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டலின் படி பள்ளிக்கல்வி துறைக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு -

தமிழ் மெல்லக் கற்பவருக்கான கற்றல் அட்டைகள்


 No automatic alt text available.
Image may contain: 1 person
No automatic alt text available.
No automatic alt text available.
No automatic alt text available.
Image may contain: 1 person, text
Image may contain: 1 person, smiling
No automatic alt text available.

Phonetic Sound Cards with Picture - Primary Student Study Materials

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் அறிவித்தனர்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வந்தனர்.
நீதிமன்ற தலையீட்டால் போராட்டம் நிறுத்தப்பட்டது.பின்னர் கடந்த அக்டோபர் மாதம், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. இந்தப் பரிந்துரை அடிப்படையில் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அது தொடர்பான எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை.இந்நிலையில் நேற்று ஜாக்டோ-ஜியோ சார்பில் நடந்தக் கூட்டத்தில், 21 மாத நிலுவைத் தொகையை தர வேண்டும். நீதிபதியை விமர்சித்ததாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவ.24-ம் தேதி தாலுகாதோறும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், வரும் 22-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடக்கும் வழக்கு விசாரணை முடிவு அடிப்படையில், அடுத்தகட்ட போராட்டத்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதேபோல் ஜாக்டோ -ஜியோ கிரெப் சார்பில் நடந்த மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில், நவ.18-ம் தேதி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடத்துவது என்றும், டிசம்பர் 2-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை விளக்ககூட்டம், டிச.7-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அடையாள உண்ணாவிரதம், ஜனவரி 6-ம் தேதி சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

SSA - SCHOOL TEAM VISIT - REG DHARMAPURI | SSA CEO - PROCEEDINGS...



SG PAY - JACTTO GEO வழக்கில் Affidavit தாக்கல்


தோழமையுடன்,_
*செ.பாலசந்தர்,*
_பொதுச் செயலாளர்,_*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*

பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு அபராதம்

டெங்கு தடுப்பு குழு சார்பில் இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தும் போது பள்ளி வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தால் அபராதம் விதிக்கவும் இத்தொகையை உரிய தலைமை ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தும்
செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது


தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் பல்வேறு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக பள்ளிகளில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பராமரிப்பில் பின் தங்கிய பள்ளிகளை தேர்வு செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்ய கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.


இந்தஇரண்டாம் கட்ட ஆய்வில் முறையாக பரமரிக்கபடாத பள்ளி வளாகங்கள் கண்டறியப்பட்டால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி தெரிவித்து உள்ளார். அபராதம் விதிக்கப்படும் பட்சத்தில் உரிய தலைமை ஆசிரியரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு எகிறும் சம்பளம் : கூடுதல் பொறுப்பு வழங்க அரசு திட்டம்

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், 1.25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற உள்ளனர். அதனால், அவர்களுக்கு கூடுதல் பணி வழங்க, தமிழக அரசு ஆலோசித்து
வருகிறது.

 தமிழகத்தில், 57 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 1.30 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில், 5.58 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆறு லட்சம் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை கணக்கிடும் போது, அதிகபட்சமாக, 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் உயர்ந்துள்ளது. இதைக் கண்டு, அதிகாரிகளே அதிர்ச்சியில் உள்ளனர். இத்துறையின் அதிகாரிகளுக்கே, அதிகபட்சம், 90 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கிடைக்கும் நிலையில், தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுவது, பள்ளிக்கல்வி, நிதித்துறை அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தசம்பள உயர்வால், அரசுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கலாம் என, ஆலோசனை நடந்து வருகிறது.

நகர, ஊரக பகுதிகளில், மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, கூடுதலாக சில பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் இணைத்து வழங்கலாமா அல்லது கல்வி அலுவலக பொறுப்புகளை பகிர்ந்தளிக்கலாமா என, ஆலோசனை நடந்துள்ளது.


அதேபோல், மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கும், கூடுதல் பாட வகுப்புகள் மற்றும் சிறப்பு பயிற்சி பணிகள் வழங்குவது குறித்து, அதிகாரிகள் பரிசீலினை செய்வதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசுப்பள்ளியில் காவல்துறை புகார்பெட்டி!!

17/11/17

பிளஸ் 1 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு




பிளஸ் 1 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு முதல்முறையாக மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பாடங்களுக்கான மதிப்பெண் 100 ஆக குறைப்பு, அக மதிப்பீடு, வருகைப்பதிவுக்கு மதிப்பெண் என பல்வேறு புதிய நடைமுறைகளும் 11-ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

 அதில் அவர் கூறியிருப்பதாவது:-பிளஸ் 1 வகுப்புக்கு முதல் முறையாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

 புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வினாத்தாள் அமைப்பின்படி, மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். மாதிரி வினாத்தாளின்படி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டம் வகுத்து பயிற்சி அளிக்க வேண்டும். 


அனைத்து மாணவர்களும் வெற்றிபெற்று 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் உட்பட அனைத்து முயற்சிகளையும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு

புதுடில்லி: மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, 3 புதிய வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம், 2018, பிப்., 6 வரை வழங்கப்பட்டுள்ளது. மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதில் மக்களுக்கு உள்ள சிரமங்களை போக்கும் வகையில் மாற்று திட்டங்களை அறிவிக்கும்படி, மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. மொபைல் நிறுவனங்களின் புதிய வசதிகளுக்கு, ஆதார் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது: மொபைல் போன் சந்தாதாரர்கள் தங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, புதிய வசதிகளை அறிமுகம் செய்ய மொபைல் போன் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. ஆதாருடன் இணைந்த, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பாஸ்வேர்டு அளிக்கும் முறை, புதிய மொபைல் ஆப் மற்றும், ஐ.வி.ஆர்.எஸ்., எனப்படும் தொலைபேசி மூலம் தானியங்கி சேவை வழங்கும் முறை ஆகிய மூன்று புதிய வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்தே ஆதார் எண்ணை இணைக்க முடியும். இந்த வசதிகள், டிச., 1 முதல் அமலுக்கு வருகின்றன. செல்போன் நிறுவனங்களின் முகவர்களிடம் நேரில் பதிவு செய்யும் முறையும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

குரூப்- 4 தேர்வுக்கு பாட புத்தகம் தட்டுப்பாடு : பாடநூல் கழகம் தீர்வு தருமா?

அரசு துறைகளில், 9,351 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள, ‘குரூப் – 4’ தேர்வுக்கான பாடப் புத்தகங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 4 தேர்வை அறிவித்துள்ளது. இத்தேர்வு, 2018 பிப்., 11ல் நடக்க உள்ளது. இதற்கான, ‘ஆன்-லைன்’ பதிவு, நவ., 14ல் துவங்கியது; டிச., 13ல் முடிகிறது. இதுவரை, கிராம நிர்வாக அதிகாரியான, வி.ஏ.ஓ., பதவிக்கு, தனியாக தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை, குரூப் – 4 தேர்வில், வி.ஏ.ஓ., பதவியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு, அடிப்படை கல்வித் தகுதியாக, 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்; தேர்வுக்கான பாடத்திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 10ம் வகுப்பு அளவில், சமூக அறிவியல், ஆங்கிலம், வரலாறு, பொது அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து, வினாக்கள் இடம் பெறும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், குரூப் – 4 தேர்வு எழுத விரும்பும், 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, 10ம் வகுப்பு பாட புத்தகங்கள் தேவை.

அவர்கள் பள்ளிக்கல்வித் துறையின் பாடநுால் கழக விற்பனை மையங்களில், புத்தகம் வாங்க சென்றால், அங்கு புத்தகம் இருப்பு இல்லை என, திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
ஆனால், தமிழக பாடநுால் கழகத்தில், சொற்ப எண்ணிக்கையில் புத்தகம் இருப்பு உள்ளதாகவும், அதையும் மாணவர்களுக்கே வழங்க உள்ளதாகவும், பாடநுால் கழகத்தினர் தெரிவித்துஉள்ளனர். 
தமிழக பாடத்திட்ட புத்தகங்கள், தனியார் கடைகளில் விற்பனை செய்யப் படாததால், குரூப் – 4 தேர்வர்களால், தனியாரிடமும், புத்தகம் வாங்க வழியில்லை. அதனால், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், புத்தகம் வாங்குவது எப்படி என்ற தவிப்பில் உள்ளனர். சிலர், பழைய புத்தக கடையில் சென்று, 10ம் வகுப்பு புத்தகங்களை தேடி வருகின்றனர். எனவே, குரூப் – 4 தேர்வுக்கு, போதிய பாடப் புத்தகம் வழங்கும்படி, பாடநுால் கழகத்தை, டி.என்.பி.எஸ்.சி.,யும், அரசும் அறிவுறுத்தும்படி, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

பல்கலை என்ற பெயரை பயன்படுத்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தடை!!!

சென்னை: ‘நிகர்நிலை பல்கலைகள் இனி, பல்கலை என்ற பெயரை, கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது’ என, பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.
தனியார் கல்லுாரிகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில், பல்கலைகளுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தங்கள் பெயருடன், ‘பல்கலை’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றன. இது குறித்து, பல்வேறு புகார்கள் எழுந்ததால், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு: யு.ஜி.சி., விதிகளின்படி, தனியார் உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கு இணையான அந்தஸ்து பெற்று, தங்களை பல்கலைகளாக பிரபலப்படுத்துகின்றன. இது, விதிகளுக்கு முரணானது. எதிர்காலத்தில், அரசு நிறுவனங்களை தவிர, வேறு எந்த கல்லுாரியும் பல்கலை என, தங்களை பிரபலப்படுத்தக் கூடாது. பல்கலை என்ற பெயரை, உடனே நீக்க வேண்டும். இது குறித்து, டிச., 3க்குள், செயல்படுத்திய அறிக்கையை, யு.ஜி.சி., தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைத்து மாநில உயர் கல்வித் துறைக்கும், பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., செயலர், பி.கே.தாகூர் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை: உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும், யு.ஜி.சி., விதிகளின்படி, எந்த தனியார் கல்வி நிறுவனமும், தங்கள் பெயருடன் பல்கலை என, கூறக்கூடாது. ஆனால், அடைப்புக் குறிக்குள், ‘பல்கலைக்கு இணையாக கருதப்படும்’ என்ற, வார்த்தையை பயன்படுத்தலாம். எதிர்காலத்தில், எந்த விதமான வார்த்தையை பயன்படுத்தலாம் என, நிகர்நிலை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள், யு.ஜி.சி.,க்கு கருத்து தெரிவிக்கலாம்.
அதன்பின், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஒருமித்த முடிவு எடுத்து, ஒரு வார்த்தையை அறிவிக்கும். பல்கலை என்ற வார்த்தையை நீக்கி, அதற் கான ஆதாரத்துடன், 26க்குள், யு.ஜி.சி.,க்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

சிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு பரிசீலனை!!!

புதுடில்லி: சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளில் மாற்றம் செய்ய பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக நடத்தப்படும், சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என, பல படிநிலைகளில் வெற்றி பெறும் தேர்வாளர்களுக்கு, அதன் பின், பயிற்சி அளிக்கப்பட்டு, பணியமர்த்தப்படுகின்றனர்.
இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் மாற்றம் செய்யவும், தேர்வர்களின் வயது வரம்பில் மாற்றம் செய்யவும், பஸ்வான் கமிட்டி, ஆக., 2016ல், யு.பி.எஸ்.சி.,க்கு பரிந்துரைத்தது. இந்த அறிக்கையை ஆராய்ந்த, யு.பி.எஸ்.சி., மார்ச்சில், தன் தரப்பு பரிந்துரை அறிக்கையை, அரசுக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், பஸ்வான் கமிட்டி, யு.பி.எஸ்.சி., அறிக்கைகளின் அடிப்படையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகள் மற்றும் தேர்வர்களின் வயது வரம்பில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி வழக்கு : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி வழக்கு : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்குமாறு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு  நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த இடைநிலை பணிமூப்பு ஆசிரியர்கள்  சங்கத்தின் சார்பில் தாக்கல் ெசய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

">ஆசிரியர் தகுதித் தேர்வு உத்தரவிற்குப் பிறகு கடந்த 2012 நவம்பர் 12ம் தேதி  பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு தரப்படும் ஊதியத்திற்கும் 2009 ஜூன் 1ம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த இடை நிலை  ஆசிரியர்களுக்கான ஊதியத்திற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. 
இந்த முரண்பாடுகளை நீக்குமாறு தமிழக அரசுக்கு மனு கொடுத்தோம். எங்கள் மனு ஏற்கப்படவில்லை. எனவே, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய  முரண்பாடுகளை களையுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 
இந்த மனு நீதிபதி டி.ராஜா  முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் தருமாறு உத்தரவிட்டு  வழக்கு விசாரணையை டிசம்பர் 2வது வாரத்திற்கு தள்ளிவைத்தார்

1994-ம் ஆண்டு முதல் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சியில் தேர்வானவர்களின் 1 கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயம்: உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது எளிதாகியது

தமிழகத்தில் கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரை எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்த சுமார் ஒரு கோடி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அரசு தேர்வுத்துறை டிஜிட்டல்மயமாக்கி இருக்கிறது.
இதன்மூலம் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆன்லைன் மூலமாக ஒரு நொடியில் ஆய்வுசெய்துவிட முடியும்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் மதிப்பெண்சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை (Genuineness) ஆய்வு செய்யும் பணியை அரசுதேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது.
அரசு பணியில் சேரும் ஆசிரியர்களும், ஊழியர்களும்மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை கண்டறியப்பட்ட பின்னரே அவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிப்பது, பணிவரையறை செய்வது உள்ளிட்ட பணிகள் இறுதி செய்யப்படும்.இதுவரையில், அரசு பணியில் சேருவோரின் 10-ம்வகுப்பு மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது கல்வித்துறை அலுவலர்கள் மூலமாக தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள பணியாளர்கள் பழைய ஆவணங்களை தேடிப்பிடித்து சான்றிதழ் மற்றும் மதிப்பெண் விவரங்களை சரிபார்ப்பார்கள். அதன் பின்னரே மதிப்பெண் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை சான்று அளிக்கப்படும்.

அண்மைக் கால சான்றிதழ்களை தேர்வுத்துறையினர் விரைவில் கண்டறிய முடியும். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்களாக இருப்பின் பழைய ஆவணங்களை தேடிப்பிடிப்பதே மிகப்பெரிய பணியாக இருக்கும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்மைத்தன்மை சான்று கிடைக்க காலதாமதமாகும். இதன் காரணமாக, அவர்கள் தகுதிகாண் பருவம் முடிப்பதும், பணிவரன்முறைபெறுவதிலும் தாமதம் ஏற்படும். இதனால், அவர்கள் பல்வேறு பலன்கள் பெறுவதும் பாதிக்கப்படலாம்.

காலதாமதத்துக்கு முற்றுப்புள்ளி

இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தேர்வுத்துறை மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல்மயமாக்கிஉள்ளது. அதன்படி, கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரையில் ஒரு கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அந்த அதிகாரி மேலும் கூறும்போது,"டிஜிட்டல்மயமாக்கப்பட்ட சான்றிதழ்களை ஆன்லைனில் தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அரசுத் துறைகளுக்கும், காவல் துறைக்கும் பிரத்யேக யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு (ரகசிய எண்) வழங்கப்பட்டுள்ளது.அதன்மூலம் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆன்லைனிலையே ஒருநொடியில் ஆய்வு செய்துவிட முடியும். மேலும், இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 முடித்தமாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல் லாக்கர் மூலம் ஆன்லைனில் எப்போதுவேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்" என்றார்

SECONDARY GRA:DE TEACHERS APPROCH HIGH COURT DEMANDING EQUAL PAY, BENEFITS :

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - தமிழக அரசிற்கு உத்தரவு!!!


2009 & TET இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி SSTA அமைப்பு சார்பில்  உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு பற்றி செய்தி பெரும்பாலான தொலைக்காட்சி சேனல்களில் தற்போது வெளிவந்திருக்கின்றன. ஒரு சில சேனல்களில் சில தவறுகளோடு செய்திகள் வந்ததை  மாநில ஒருங்கிணைப்பாளர் அந்தந்த தொலைக்காட்சியின் பொறுப்பாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளதால் அந்த பிழைகளை சரிசெய்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

JACTTO GEO போராட்டம் - நீதிபதி கிருபாகரனை விமர்சனம் செய்த ஆசிரியர்கள் 25 பேர் பணியிடை நீக்கம்

STATE LEVEL SCHOOL TEAM VISIT - பள்ளி குழு பார்வையின் போது கடைபிடிக்க வேண்டியவை - SSA அறிவுரைகள்.