யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/11/16

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல் தினமும் பரீட்சை: பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு

குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:  


பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் அறிவியல் மற்றும் கணித பெட்டகம் (Science Kit, Maths Kit) வழங்கப்படும்.  மேலும், இன்றிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த 1 முதல் 9ம் வகுப்பு வரையில் பயிற்சித் தாள்(Work Sheet) பள்ளிகளுக்கு தினமும் இணைய தளம் மூலம் அனுப்பப்படும்.

அதன் மூலம் அந்த மாணவர்களின் கற்றல் திறன் சோதிக்கப்படும். இந்த பயிற்சித் தாளில் 10 கேள்விகள் இடம் பெறும். இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. 

தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 1 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி(All Pass) என்பது தொடரும். 

டெட்' தேர்வுக்கு புது வினாத்தாள் பல்கலைகளை ஈடுபடுத்த திட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில், பி.எட்., கல்லுாரிகள் மூலம் புதிய வினாத்தாள் தயாரிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு, 2013க்கு பின் நடக்கவில்லை. தேர்வுக்கு பின், தேர்ச்சி மதிப்பெண்ணில் மாற்றம் கொண்டு வந்ததும், சாதி, மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வந்ததும் சிக்கலை ஏற்படுத்தியது.
தேர்வு எழுதியோர், உச்ச நீதிமன்றம் வரை சென்றதால், மூன்று ஆண்டுகளாக, 'டெட்' தேர்வு நடத்தப்படவில்லை.இந்நிலையில், 'டெட்' தேர்வு வழக்கு, கடந்த வாரம் முடிவுக்கு வந்தது.
தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும், 'வெயிட்டேஜ்' முறை செல்லும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் விரைவில், 'டெட்' தேர்வை, எவ்வித குழப்பமுமின்றி நடத்த, தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல் மற்றும் மாணவர்களுக்கு அவற்றை சரளமாக பேச சொல்லித் தருவதில் சிக்கல் உள்ளது. எனவே, இனி வரும் காலங்களில், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, இந்த சிக்கல் இருக்கக் கூடாது; தனியார் பள்ளி ஆசிரியர்கள் போல் இருக்க வேண்டும் என, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, புதிய தரமான வினாத்தாள் தயாரிப்புக்காக, பி.எட்., கல்லுாரிகள் மற்றும் பல்கலை மூலம் கமிட்டி அமைக்க, கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. 

2000 ரூபாய் நோட்டை பிச்சைகாரன் கூட வாங்கமாட்டான்! பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு

2000 ரூபாய் நோட்டை பிச்சைகாரன் கூட வாங்கமாட்டான்! பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு



பிரதமர் நரேந்திர மோடி மக்களை பிச்சைகாரர்களாக ஆக்கிவிட்டார் என்றும் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பிச்சைகாரன் கூட வாங்கமாட்டான் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது, கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் இரவோடு இரவாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்ததிலிருந்தே மக்கள் சில்லறைக்காக பிச்சைகாரர்கள் போல அலைந்து வருகிறார்கள்
தற்போது வெளியாகியிருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் சாயம் வெளுத்து போன மாதிரி இருக்கிறது.

இந்த நோட்டை மடித்து பாக்கெட்டில் நான்கு முறை வைத்தால் கிழிந்துவிடும்
மேலும், இந்த நோட்டுகளை பிச்சைக்காரனிடம் போட்டால் கூட அதை அவன் வாங்க மாட்டான் என அவர் கூறியுள்ளார்.


இவரின் இந்த பேச்சானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது8.

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் தண்ணி தொட்டு தேய்த்தால் சாயம் போகிறது பகிர் தகவல் : டி.வி. சேனலில்

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் தண்ணி தொட்டு தேய்த்தால் சாயம் போகிறது பகிர் தகவல் : டி.வி. சேனலில்



பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். 
மேலும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என கூறினார்.

இதையடுத்து பொதுமக்கள் கடந்த 10–ந் தேதி முதல் வங்கிகளின் முன் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்துநின்று புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கினர்.

அவர்கள் மகிழ்ச்சியாக புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களிலும் பரவவிட்டனர்.
புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பல சிறப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்தநிலையில் நேற்று பிரபல தனியார் மராத்தி டி.வி. செய்தி சேனல் ஒன்றில் புதிய 2 ஆயிரம் நோட்டில் சாயம் போவதாக செய்தி ஒளிபரப்பப்பட்டது.

அந்த செய்தியில், ஒருவர் ஈரமான வெள்ளை துணியை வைத்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் தேய்க்கிறார்.

அப்போது, அந்த நோட்டில் உள்ள ‘பிங்க்’ கலர் துணியில் படிகிறது. தனியார் டி.வி. சேனலில் வெளியான இந்த செய்தியால் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த செய்தியை பார்த்த பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் ஈரத்துணியை தொட்டு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டில் சாயம் போகிறதா? என சோதனை செய்துபார்த்தனர்.

அப்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் சாயம் போவதாக மும்பையை சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் தெரிவித்தார்.

கூட்டுறவு கடன் சங்கங்கள் இன்று முதல் செயல்படாது'

தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்கள், இன்று முதல், போதியநிதி வசதி அளிக்கும் வரைசெயல்படாது' என,
அறிவிக்கப்பட்டுள்ளது.

      நிறுத்தி வைப்பு: தமிழ்நாடு மாநிலதொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள்சங்க கவுரவ பொதுச் செயலர்குப்புசாமி, மாநில தலைவர் மேசப்பன், பொது செயலர் முத்துபாண்டியன் கூட்டாகவிடுத்துள்ள அறிக்கை:ரிசர்வ் வங்கி, சமீபத்தில் அனுப்பிய சுற்றறிக்கைப்படி, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொடக்க வேளாண்மைகூட்டுறவு கடன் சங்கங்களில், வரவு- செலவு, வாய்மொழியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

        தமிழகத்தில், 4,654 தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்களும், உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித சேவையும்செய்ய இயலாமல் பாதித்துள்ளது. சேமிப்புகணக்கில் இருந்து, உறுப்பினர்களுக்கு பணம் வழங்க இயலவில்லை. அடகு நகைகளை, சுப காரியங்களுக்குமீட்க வரும் வாடிக்கையாளர்களுக்கு தர முடியவில்லை.
இயலாத நிலை
உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள் சேவைகளை பூர்த்தி செய்யஇயலாத நிலையில், சங்கங்களை திறந்து வைத்து பணியாற்றுவதுமிகுந்த சிரமம். விவசாய பணிகளுக்குஉரம் வழங்க இயலாத நிலைஏற்பட்டு உள்ளது.இன்று, அந்தந்தமாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு, ஒட்டு மொத்த பணியாளர்கள் நேரில்சென்று, நிதியுதவி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதி வசதி செய்து தரும்வரை, சங்கங்கள் செயல்படாது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

ஐ.ஏ.எஸ்., நுழைவு தேர்வு; ஒப்புகை சீட்டு கிடையாது

ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட நுழைவுத் தேர்வு எழுதுவோருக்கு, இனி காகித வடிவில், ஒப்புகை சீட்டு வழங்கப்படாது' என, மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., தேர்வுகள்:
இது குறித்து, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர்தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:காகிதத்தின் பயன்பாட்டை குறைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்டவற்றுக்கு, முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, ஐ.ஏ.எஸ்., தேர்வுகள், வரும், 3 முதல், 9ம் தேதி வரை நடக்க உள்ளன.

காகித வடிவத்தில் வழங்கப்படாது:

இந்த ஆண்டுக்கான, ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட தேர்வுகள் நடத்தும்போது, அதற்கான ஒப்புகை சீட்டு, இனி காகித வடிவத்தில் வழங்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த ஒப்புகை சீட்டுகள், இணையதளத்தில் பதிவிடப்படும். அதை தேர்வு எழுதுவோர் பதிவிறக்கம் செய்து, தேர்வு எழுதும்போது எடுத்து வர வேண்டும்.

அடையாள அட்டை:

புகைப்படம் தெளிவாக இல்லாமல் இருந்தால், விண்ணப்பித்தபோது கொடுத்த புகைப்படத்தை கையில் எடுத்து வர வேண்டும். மேலும், ஆதார் உள்ளிட்ட, ஏதாவது ஒரு அடையாள அட்டையும் எடுத்து வர வேண்டும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின் பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின் பட்டமளிப்பு விழா, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, பல்கலை பதிவாளர் விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'பல்கலையின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, வரும், 24ல், சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்க இருந்தது.
இந்நிகழ்ச்சி, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை: தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியான இலங்கை, தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவி வருவதால், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை, தமிழகம் ஒட்டியுள்ள பகுதிகள், வட தமிழக கடற்கரை வரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது.இதன் காரணமாக, அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக் கூடும். இதேபோல், தமிழக உள்மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.தென்தமிழக கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதேசமயம் நகரில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.

சென்னையில் மழை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 முதல் 7 மணி வரையில் லேசான மழை பெய்தது. இதையடுத்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.அண்ணா நகர், அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல் கொரட்டூர், தாம்பரம், பல்லாவரம், கிண்டி, பரங்கிமலை, ஆலந்தூர் ஆகிய இடங்களில் அதிகாலையில் மழை லேசாக தூறியது. இந்தப் பகுதிகளில் காலை 7 மணிக்கு இடி மின்னலுடன் அரை மணிநேரம் கனமழை பெய்தது.மழை அளவு: இதில், அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் 80 மி.மீ. மழை பதிவானது.இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை, திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி, சென்னை, கன்னியாகுமரியில் தலா 30 மி.மீ என மழை அளவு பதிவாகிள்ளது.

காரைக்கால், மரக்காணம், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, காஞ்சிபுரம் மாவட்டம் கோலப்பாக்கம், தரமணி, திருவாரூர், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தலா 20 மி.மீட்டரும், நாகர்கோவில், மயிலாடி,காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுக்குப்பம், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், பூதாப்பாண்டி (கன்னியாகுமரி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிதம்பரம், ஆர்.எஸ்.மங்களம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 10 மி.மீட்டர் அளவும் மழை பதிவாகியுள்ளது.

நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ.16 கடைசி நாள்

கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்தில் கலைப்பிரிவு பாடங் களில் (தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், பொருளாதாரம், வணிக வியல், சமூகவியல், உளவியல், மேலாண்மை போன்றவை) உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும்.
நெட் தகுதித்தேர்வு ஆண்டுக்கு 2 தடவை (ஜுன், டிசம்பர்) நடத்தப் படுகிறது. 2016-ம் ஆண்டுக்கான 2-வது நெட் தேர்வு காலதாமதமாக அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு (www.cbsenet.nic.in) கடந்த அக்டோபர் 17-ம் தேதி தொடங்கியது. ஏற்கெனவே சிபிஎஸ்இ அறிவித்திருந்தபடி, இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 16-ம் தேதி (புதன்கிழமை) முடிவடைகிறது.

கலைமற்றும் இலக்கியம் சம்பந்தப் பட்ட பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் நெட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம்.தற்போது முதுகலை இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருப் பவர்களும், இறுதி ஆண்டு தேர்வு முடிவை எதிர்நோக்கியிருப்பவர் களும் நெட் தேர்வுக்கு விண்ணப் பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரம் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கல்வியோடு நல்லொழுக்கம் பள்ளி மாணவர்களுக்கு கல்வியுடன் நல்லொழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
அதன்படி அனைத்து வகுப்புகளிலும் ஆசிரியர்கள் நீதிபோதனைவகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 6, 7, 8-ம் வகுப்புகளில் மாணவ-மாணவிகளுக்கு நீதிபோதனை வகுப்புகள் எடுக்க ஆசிரியர்களுக்கு தனியாக புத்தகம் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான நீதிபோதனை புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

மனிதநேயம், திறன்வளர்த்தல் அந்த புத்தகங்களில் பொதுஉடமை, மனதிடம், தேசிய உணர்வு, திறன் வளர்த்தல், சேவை மனப்பான்மை, உடல்நலம் பேணுதல், மனிதநேயம், சாலை விதிகளை மதித்தல், பொதுசொத்துகளை பாதுகாத்தல், கடமை உணர்வு, போதை இல்லா வாழ்வு, புகைபிடிப்பதால் புற்றுநோய் ஆபத்து, வெற்றி தோல்விகளை சமமாக பாவித்தல், பெற்றோரை மதித்தல், மதநல்லிணக்கம், சகிப்புதன்மை, பெண்ணின் பெருமை உள்பட பல்வேறு தலைப்புகளில் விளக்கத்துடன் கூறப்பட்டுள்ளன.

மேலும் 9, மற்றும் 10-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இந்த நீதிபோதனை வகுப்புகளை எப்படி நடத்துவது என்பது குறித்து விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் செய்து வருகிறார்.

ஆசிரியர் பணி: தவிப்பில் கணினி அறிவியல் பட்டதாரிகள்.

மாணவர்கள் கணினி அறிவைப் பெறும் வகையில், மடிக்கணினியை வழங்கிய தமிழக அரசு, கணினி வழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்புகின்றனர் பி.எட். முடித்து வேலையில்லாமல் இருக்கும் கணினி அறிவியல் பட்டதாரிகள்.
அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், 2011-ஆம் ஆண்டில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட போது, கணினி அறிவியல் பாடமும் அமல்படுத்தப்பட்டது. 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டு படிப்பு கற்றுத் தரப்பட்ட நிலையில், அதற்கு அடுத்தாண்டில் பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை. சமச்சீர் கல்வி முறையில் வழங்கப்பட்ட பாடப் புத்தகங்களும் திரும்பப் பெறப்பட்டன.பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலம்... மாணவ, மாணவிகளுக்கு கணினி அறிவியல் பாடப் பிரிவைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற நோக்கில், அந்தந்தப் பள்ளிகளின் பெற்றோர்- ஆசிரியர் கழகங்கள் மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகளை பல பள்ளிகள் நடத்தி வருகின்றன.கடந்த 2005-ஆம் ஆண்டில் மாதம் ரூ. 4000 ஊதியத்தில் பகுதி நேரமாக நியமிக்கப்பட்ட 682 கணினி ஆசிரியர்களுக்குப் பிறகு நியமனம் கிடையாது. ஏற்கெனவே குறைந்த ஊதியத்தில் பணியில் நியமிக்கப்பட்டவர்கள் பலபள்ளிகளுக்கும் சென்று பணியாற்ற வேண்டிய நிலைதான் உள்ளது.தொடர்ந்து நீதிமன்ற வழக்கு, பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை போன்றகாரணங்களால் பாதிப்புக்குள்ளாகினர் பி.எட். முடித்த கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள்.வாழ்வாதாரமே இல்லை: ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது கணினி அறிவியலில் பி.எட். படிப்பு. மற்றப் பாடங்களைத் தேர்வு செய்து படித்தவர்கள் எல்லாம் ஆசிரியர் தகுதித் தேர்வு, டிஆர்பி தேர்வுகளில் பங்கேற்க முடியும். ஆனால், கணினி அறிவியலில் பி.எட். படித்தவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.மாநிலம் முழுவதும் சுமார் 39,019 பேர் பி.எட். கணினி அறிவியல் படிப்பை முடித்து தற்போது வரை வேலையில்லாமல் உள்ளனர்.

இதுபோல, எம்.எஸ்ஸி. பி.எட். முடித்தவர்கள்எண்ணிக்கை 20,000-த்துக்கு மேல் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த நிலையே உள்ளது.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி, அவர்களின் அறிவை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தமிழக அரசு, பள்ளிகளில் கணினிப் படிப்புகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்கிறார் தமிழ்நாடு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில துணை அமைப்பாளர் ஏ. முத்துவடிவேல்.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கணினிக் கல்வி இல்லை: 2006-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமனம் இல்லை. ஏன், கடந்தாண்டுகூட 407 பள்ளிகள் மாநிலம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்டதாகக் கூறினாலும், ஒரு பள்ளியில்கூட கணினிக் கல்வியைக் கற்பிக்க ஆசிரியர் பணியிடம் இல்லை.பி.எட். படிப்பில் கணினி அறிவியல் படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலை பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. பி.எட். முடித்து வேலையில்லாமல் இருக்கும் 39,019 பேரில் ஏறத்தாழ 27,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றார் இந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் குமரேசன்.

"மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், சென்னையில் போராட்டம் எனப் பல்வேறு நிலைகளில் எங்களது கோரிக்கைகளை முன்னெடுத்துச் சென்றாலும் இதுவரையில் தீர்வு எட்டப்படவில்லை. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்கள் இருப்பதாகக் கூறி, அதுகுறித்த கண்கெடுப்பை அரசு மேற்கொள்கிறது. இந்த நிலையில், பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் இருந்தும், அதற்கான இடங்களில் ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது புதிராகத்தான் இருக்கிறது. பள்ளிக்கு ஓர் ஆசிரியரை நியமித்திருந்தால்கூட பாதிப்பேர் வேலை பெற்றிருப்பார்கள்' என்கின்றனர் வேலையில்லாகணினி அறிவியல் பி.எட். பட்டதாரி ஆசிரியர்கள்.

ஏடிஎம்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்: சக்திகாந்த் தாஸ் தகவல்

ஏடிஎம்களில் வாடிக்கையாளர் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார். 
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ், ரூபாய் நோட்டுகள் மாற்றம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, மக்களுக்கு எளிதில் பணம் கிடைக்க அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒருவர் ஏடிஎம்மில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. இனி ஒருவர் ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்.

 நம் நாட்டில் அதிகப்படியான வங்கிகள் கிராமப்புற, புறநகர் பகுதிகளில் உள்ளன. எனவே கிராம மக்களை அதிகம் சிரமத்துக்கு உள்ளாக்காமல் பணம் எடுக்க வகை செய்வது குறித்து ஆலோசித்தோம். தபால் நிலையங்களில் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை எடுக்கும் வகையில் தொழில்நுட்பத்தை மாற்றியுள்ளோம். இது இன்று முதல் நடைமுறைக்கு வரும். ஓரிரு நாட்களில் அனைத்து ஏடிகம்களில் இருந்தும் 2000 ரூபாயை எடுக்கலாம். அனைத்து வங்கி ஊழியர்களும் இரவு வரை கடுமையாக பணியாற்றி வருகிறார்கள். இணையதள வழி பணப்பரிமாற்றங்களுக்கான கட்டணங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

 நவம்பர் 24ம் தேதி வரை மருந்தகங்களில் மருந்துகள் வாங்க பழைய நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதே நேரம் மருத்துவமனைகளில் முன்பணம் செலுத்த பழையே நோட்டுகளை பயன்படுத்த முடியாது. வணிகர்கள் மற்றும் நடப்புக் கணக்கு வைத்திருப்போம் வங்கி கணக்குகளில் இருந்து வாரத்துக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு பணப் பரிவர்த்தனையை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவ.24 நள்ளிரவு வரை 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகும்: மத்திய அரசு அறிவிப்பு.

வரும் 24-ஆம் தேதி வரை பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அரசு மருத்துவமனை, சுங்கச்சாவடிகள், பெட்ரோல் பங்குகளில்  பெற்றுக் கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் நவம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு 12 மணியோடு செல்லுபடியாகாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். அதே நேரம், கடந்த வெள்ளிக்கிழமை வரை பெட்ரோல் பங்குகள், அரசு மருத்துவமனைகள், சுங்கச்சாவடிகளில் அவை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது. பிறகு இது இன்று இரவு (நவம்பர் 14) நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் மத்தியில் இன்னமும் பணப் புழக்கம் அதிகரிக்காததால், இம்மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு வரை அரசு மருத்துவமனை, சுங்கச்சாவடிகள், பெட்ரோல் பங்குகளில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த் தாஸ் இன்று காலை தில்லியில் அறிவித்தார்.

நாட்டில் நிலவும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்னை குறித்து மத்திய ‌அமைச்சர்கள்‌ மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். நேற்று நள்ளிரவு நடத்தப்பட்ட அவசர ஆலோசனையின்போது, இந்த முடிவு எட்டப்பட்தாக தெரிகிறது.

அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், சுங்கச்சாவடிகளில் பழைய ‌‌ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதற்‌‌கான அறிவிப்பு இன்று இரவுடன் காலாவதியாக‌ இருந்‌த நிலையில் அது மேலும் 10 நாட்களுக்கு (நவ 24) நீட்டிக்கப்படுவதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

இதன் மூலம் மின்சார கட்டணம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரிகள் உள்ளிட்டவற்றை பழைய 500, 1000 ரூபாய் ஆக செலுத்தவும் 10 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி தொடர்பாளர்களின் பணக் கையிருப்பு வரம்பு 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு பணம் கிடைப்பது எளிதாகும் என்று கூறினார். நடப்புக் கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ரூபாயை வங்கியில் இருந்து எடுக்கவும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு

'இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐபீபிஎஸ் என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.  

இந்த நிலையில், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் ஐபீபிஎஸ் நிறுவனம் 2016 -ஆம் ஆண்டிற்கான 4122 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. 

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 4,122
பணி - காலியிடங்கள் விவரம்:  
பணி: I.T. Officer (Scale-I) - 335
பணி: Agricultural Field Officer (Scale I) - 2580
பணி: Rajbhasha Adhikari (Scale I) - 65
பணி: Law Officer (Scale I) - 115
பணி: HR/Personnel Officer (Scale I) - 81
பணி: Marketing Officer (Scale I) - 946

வயதுவரம்பு: இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 01.11.2016 தேதியின்படி 20 வயதுக்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி: குறைந்தபட்ச கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை 16.11.2016 முதல் 02.12.2016 தேதிக்குள் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ibps.in/wp-content/uploads/Detail_Advt_CWE_SPL_VI_2016.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து படித்து அறிந்து கொள்ளலாம்.

No TET Pass? - No Salary

டெட்' தேர்ச்சி பெறாத  ஆசிரியர்களுக்கு, இம்மாதத்துக்கான ஊதிய பட்டியலை, தனியாக தயாரித்து அளிக்கும்படி, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
ஆசிரியர்களுக்கான வருமான வரியை, இம்மாத ஊதியத்தில், கட்டாயம் பிடித்தம் செய்ய வேண்டும். வருமான வரிக்கு உட்படாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், தோராய மதிப்பீட்டு படிவத்தில், விபரங்களை குறிப்பிட்டு முன்னிலைப்படுத்த வேண்டும்.ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) எழுதாமல், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, வரும், 15ம் தேதியுடன், கால அவகாசம் முடிகிறது.

காலநீட்டிப்பு வழங்குவது தொடர்பாக, அரசாணை வெளியிடவில்லை. எனவே, 'டெட்' தேர்வு எழுதாத ஆசிரியர்களுக்கு, தனி ஊதிய பட்டியல் தயாரிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'வருமான வரி பிடித்தம் தொடர்பாக, வழக்கமாக வெளியிடப்படும் உத்தரவு தான் இது. 'டெட்' தேர்வு எழுதாதவர்களுக்கு கால அவகாசம் முடிவதால், வருகைப்பதிவேடு விபரங்கள் அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது' என்றனர்.

2017-ம் ஆண்டில் 22 நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு

அடுத்து வரும் 2017-ம்ஆண்டுக்கு 22 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 6 அரசு விடுமுறை தினங்கள் திங்கட்கிழமைகளில் வருகின்றன.மத்திய அரசின் செலாவணி முறிச்சட்டத்தின் படி, ஆண்டு தோறும் அரசு விடுமுறை தினங்களை, தமிழக அரசு அறிவிக்கிறது. 
இதன்படி இந்தாண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் தொடர்பான அரசாணை திங்கட்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் சிஎச். வித்யாசாகர் ராவின் ஒப்புதல் பெற்று, தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.இதில் கூறியிருப்பதாவது: செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் வரும் 2017-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதன் படி, ஏப்ரல் 1-ம் தேதி முழு ஆண்டு வங்கிக்கணக்கு முடிவு நீங்கலாக, அனைத்து சனிக்கிழமைக்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அறிவிக்கப்பட்ட பாது விடுமுறை தினங்களில்அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலங்களும் மூடப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வரும் 2017-ம் ஆண்டை பொறுத்தவரை, மேதினம் உள்ளிட்ட 6 விடுமுறை தினங்கள் திங்கட்கிழமைகளில் வருகின்றன. இதன் மூலம், சனி, ஞாயிறு, திங்கள் என தொடர் விடுமுறை 6 முறை வருகிறது.தமிழ்ப்புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, மிலாடிநபி ஆகியவை வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. அடுத்தடுத்த நாட்களும் விடுமுறை என்பதால், தொடர் விடுமுறை வருகிறது. இது தவிர, ஜனவரி மாதம் 14,15,16, செப்டம்பரில்29,30 மற்றும் அக்டோபர் 1,2 தேதிகள் தொடர் விடுமுறையாக வருகின்றன. இவை தவிர, 8 அரசு விடுமுறைகள், வழக்கமான விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.

14/11/16

CRC level science exhibition topics :

1. உடல்நலம்
2. தொழில்துறை
3. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
4. நிலையான சுற்றுச்சூழலுக்கான புதுப்பிக்கத் தக்க வளங்களைக் கண்டுபிடித்தல்
5. உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பில் புதுமைகள்
6.அன்றாட வாழ்வில் கணிதம் அடிப்படையிலான தீர்வுகள்
Primary level - 2 models or 2 projects
Upper primary level -2 models or 2 projects.
CRC level prizes.
1st prize - 400
2 nd prize- 300
3 rd prize - 200
Best school performance - 500 

அச்சப்பட தேவையில்லை : அருண் ஜெட்லி விளக்கம்:

அச்சப்பட தேவையில்லை : அருண் ஜெட்லி விளக்கம்:
தங்கள் கையிருப்பில் உள்ள ரொக்கத்தை, பொதுமக்கள் தைரியமாக வங்கிகளில் வரவு வைக்கலாம். 2.5 லட்சம் வரையிலான தொகையை, 'டிபாசிட்' செய்யும் நபர்கள், வருமான வரி குறித்து அச்சப்படத் தேவையில்லை,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி கூறியதாவது: நாட்டில், கறுப்பு பண பதுக்கல் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவே, பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து, பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். மக்கள், தங்கள் கைவசம் உள்ள அனைத்து நோட்டுகளையும், வங்கிக் கணக்கில் செலுத்தி வரவு வைத்துக் கொள்ளலாம். கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகள் மட்டுமே இந்த அறிவிப்பால் பீதி அடைய வேண்டும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நேர்மையாக பணம் சம்பாதிப்போருக்கு, இது வரப்பிரசாதமே. தவிர, 2.5 லட்சம் ரூபாய் வரையிலான டிபாசிட்டுகள் குறித்து, வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கப்படாது. அதுகுறித்து, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தவும் மாட்டார்கள். உங்கள் பணம் உங்களுடையதே; பொதுமக்கள் அச்சப்பட தேவைஇல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

லைசென்ஸ்' எடுத்து செல்ல தேவையில்லை : 'ஆதார்' போதும்; வருகிறது புதிய நடைமுறை:

ஆதார்' இருந்தால், ஓட்டுனர் உரிமத்தை கொண்டு செல்ல மறந்தாலும், போலீசில் சிக்கி விடுவோமா என்ற பயமின்றி, வாகனத்தில் செல்லலாம். புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. வாகனத்தில் செல்வோர், பல நேரங்களில், ஓட்டுனர் உரிமத்தை எடுத்துச் செல்ல மறந்து விடுவதுண்டு. இவர்கள், யாரேனும் சிக்குவரா என, போலீசார் வலை விரித்து காத்திருக்கும் நிலையில், அவர்களிடம் சிக்காமல் தப்பித்து, உரிய இடத்தை சென்றடைவது பெரிய விஷயம். அது போன்றவர்களுக்கு, ஆறுதல் தரும் வகையில், மத்திய அரசு, புதிய நடைமுறையை கொண்டு வர உள்ளது. புதிய திட்டத்தை, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகங்கள் இணைந்து வடிவமைத்து உள்ளன. 'டிஜி லாக்கர்' என்ற அத்திட்டத்தில், கோடிக் கணக்கான ஆவணங்களை, இணையத்தில் பொதுமக்கள் சேமித்து வைக்க முடியும். 

அதில், முதற்கட்டமாக, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன சான்றுகளை சேமித்து வைக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. இதில் பயன் பெற, ஆதார் அட்டை அவசியம். ஆதார் எண்ணை, மொபைல் போன் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் மையங்களில், அதை செய்யலாம். இணைக்கப்பட்ட இந்த விபரங்கள், 'டிஜி லாக்கர்' உடன் ஒருங்கிணைக்கப்படும். பிரத்யேக, 'மொபைல் ஆப்'பை, போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் வழியாக, 'டிஜி லாக்கர்' உள்ளே நுழைந்து, வாகனம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம். அதன்பின், உரிமத்தை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றாலும் பரவாயில்லை. போக்குவரத்து போலீசார் பிடித்தால், மொபைல் போன் வழியாக அந்த, 'ஆப்'பில் உள்ள விபரங்களை, அவருக்கு காட்டலாம். அதை சரி பார்க்க, போலீசாருக்கு, பிரத்யேக, 'ஆப்' தயாரிக்கப்பட்டு உள்ளது. அதை வைத்து அவர் சரிபார்ப்பர். எனவே, ஓட்டுனர் உரிமத்தை மறந்தாலும், இனி, கவலையின்றி பயணத்தை தொடரலாம். 
- நமது நிருபர் -

3 வாரங்களில் எல்லாம் சரியாகி விடும்!' : நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை

3 வாரங்களில் எல்லாம் சரியாகி விடும்!' : நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை
பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் சிரமங்களை அனுபவித்து வரும் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், ''மூன்று வாரங்களில் பிரச்னைகள் அனைத்தும் சரியாகி விடும். இந்த திட்டத்தால் நாம் அடையப்போகும் லாபங்கள் ஏராளம்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:வங்கிகளில் பணம் மாற்றும் பொதுமக்களுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள் தரப்படுவதால், ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம். இருப்பினும், அரசின் இத்திட்டம் நீண்ட காலப் பயன்களை அளிக்க வல்லது. எனவே, பொதுமக்கள் பொறுமையாக இருந்து அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம். நாடு முழுவதும் உள்ள, இரண்டு லட்சம், ஏ.டி.எம்., இயந்திரங்கள் வழக்கமான முறையில் செயல்பட, இன்னும், மூன்று வாரங்கள் ஆகலாம். மாற்றங்கள்புதிய, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்பவும், தற்போது புழக்கத்தில் உள்ள, மற்ற நோட்டுகளுக்கு ஏற்பவும், ஒவ்வொரு ஏ.டி.எம்., இயந்திரத்திலும், மாற்றங்கள் செய்யப்பட வேண்டி உள்ளது. ரகசியம் காக்கப்பட வேண்டிய அவசியம் இருந்ததால், ஏ.டி.எம்.,களை முன்கூட்டியே மாற்றியமைக்க முடியாமல் போனது. இவற்றை மாற்றியமைக்க, குறைந்தபட்சம், மூன்றுவாரங்களாவது தேவை. அரசால் செல்லாதென அறிவிக்கப்பட்ட, 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டு கள் போதிய அளவுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பிரம்மாண்டமான முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தை, அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. நிலைமையை சமாளிக்க, வாரக் கடைசி நாட்களிலும் வங்கிகளை திறந்து வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும், வங்கிகளுக்கும் புதிய நோட்டுகள் முழுமையாக சென்றடைந்த பின், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும். இதனால், நம் பொருளாதாரத்தில் பெரியளவில் மாற்றம் இருக்கும். அரசியல் கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள், ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து, பொறுப்பற்ற முறையில் பேசி வருகின்றனர்.சமூக வலைத்தளங்கள் சமூக வலைத் தளங்களி லும், இதுகுறித்து வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
அரசு கண்காணிப்பு : 'ஜன்தன்' திட்டம் மூலம் துவக்கப்பட்ட வங்கி கணக்குகளில், திடீரென ஏராளமான பணம், 'டிபாசிட்' செய்யப்படுவது குறித்து அரசு கண்காணித்து வருகிறது.
அருண் ஜெட்லி, நிதியமைச்சர் 

தபால் நிலையங்களில் ரூ.435 கோடி பழைய நோட்டுகள் மாற்றம்:

மும்பை: மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தபால் நிலையங்களில், இரண்டு நாட்களில், 435 கோடி ரூபாய் அளவிற்கு, பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்பட்டுள்ளன.நாட்டில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், வங்கிகள் முடங்கி, செலவு செய்ய பணம் இல்லாமல், மக்கள் தவித்து வருகின்றனர். இதையடுத்து, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள், பழைய ரூபாய் நோட்டிற்கு பதிலாக, புதிய நோட்டுகளை மாற்றி தருகின்றன. மஹாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களில் உள்ள, தபால் நிலையங்களில், மட்டும், கடந்த இரண்டு நாட்களில், 435 கோடி ரூபாய் அளவிற்கு, செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள், பொதுமக்களுக்கு மாற்றி தரப்பட்டுள்ளன.

டிக்கெட் ரத்து: பணம் வாபஸ் இல்லை:

சில்லரை தட்டுப்பாடு காரணமாக, ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் பயணிகளுக்கு, பணம் திருப்பி கொடுப்பதை, ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. ரயில்வே முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யும்போது, அதற்குரிய பணத்தை டிக்கெட் கவுன்டர்களில், நேரடியாக பெற முடியும். இந்நிலையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என, அறிவிக்கப்பட்டதால், ரயில்வே கவுன்டர்களில், 100, 50 உள்ளிட்ட ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.இதனால், டிக்கெட்டை ரத்து செய்யும் பயணிகளுக்கு, ரயில்வே அலுவலர்களால், உடனடியாக, பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை; உடனடியாக பணத்தை திருப்பி கொடுப்பதை, ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.
அதற்கு பதிலாக, ரசீது வழங்கப்படுகிறது.அதை பயன்படுத்தி, பயணிகள், பின், பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். அதேசமயம், டிக்கெட் ரத்து செய்யும்போது, பயணிகளுக்கு தர வேண்டிய தொகை, 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால், அதை, பயணிகளின் வங்கி கணக்கில், ரயில்வே நிர்வாகம் நேரடியாக செலுத்தி வருகிறது.

வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு !

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐ.பி.பி.எஸ். என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் ஐபீபிஎஸ் நிறுவனம் 2016 -ஆம் ஆண்டிற்கான 4122 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 4,122       http://madurainanpan.blogspot.in/  

புதுசா வர்ற ரூபாய் நோட்கள்ல காந்தி படத்துக்கு இணையாக,எதற்காக மங்கள்யான் விண்கலத்தின் படத்தை வைக்க வேண்டும்?அப்படி என்ன சாதனை செஞ்சது மங்கள்யான்?


புதுசா வர்ற ரூபாய் நோட்கள்ல காந்தி படத்துக்கு இணையாக,எதற்காக மங்கள்யான் விண்கலத்தின் படத்தை வைக்க வேண்டும்?அப்படி என்ன சாதனை செஞ்சது மங்கள்யான்?
சுருக்கமாக நான்கு காரணங்கள்.
1.Escape Velocity-பூமியின் புவியீர்ப்பு விசையை சமாளித்து,பூமியின் வளிமண்டலப் பரப்பை விட்டு வெளியேற ஒரு பொருள் பயணிக்க வேண்டிய வேகத்தின் அளவு.தமிழில் விடுபடு திசைவேகம்.இது 11.2 கி.மீ/செகன்ட் என இருக்க வேண்டும்.இந்த அளவை விட அதிகமான வேகத்தில் ஒரு பொருள் பூமியை விட்டு வெளியே பயணித்தால் அது காற்றின் உராய்வினால் தீப்பற்றி எரிந்து விடும்.குறைவான வேகமாக இருந்தால் பூமியைத் தாண்டவே முடியாது.பூவியீர்ப்பு விசை கீழே பிடித்து இழுத்துவிடும்.இறந்த பின் எஸ்கேப் வேலிசிட்டி வேகத்தை அடைய முடியாத ஆன்மாக்கள் தான் பூமியை விட்டு வெளியேற முடியாமல் பேய்-பிசாசுகளாக முருங்கை மரத்திலோ-புளியமரத்திலோ திரியும்ன்னு கூட சொல்லலாம்.
ஆனால் மங்களயான் எஸ்கேப் வேலாசிட்டி வேகத்தில் அனாயசமாக கடந்து சென்றது.இது வரை அனுப்பப்பட்ட செயற்கைகோள்களும்,ராக்கெட்களும் இதைக் கடந்து தானே சென்றன? 

ஆம்.இதுவரையில் அனுப்பப்பட்ட அத்தனை செயற்கைகோள்கள் மற்றும ராக்கெட்களின் எடைகள் எல்லாம் பல நூறு கிலோக்களுக்கு மேல் இருந்தன.ஆனால் மங்கள்யானின் எடை வெறும் 15 கிலோ மட்டுமே.இவ்வளவு எடைக்குறைவான ஒன்றை பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி அனுப்புவது சாதாரண வேலை அல்ல.திறமையான டிசைன் வேண்டும்.உச்சபட்ச தொழில் நுட்பம் வேண்டும்.நம் விஞ்ஞானிகள் இதைச் செய்தார்கள்.

2.செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பதென்றால் ஒரு ராக்கெட்டை எடுத்து வான்வெளியில் செவ்வாய் கிரகம்  இருக்கும் திசையைப் பார்த்து அனுப்புவதல்ல.அதற்கு ஏகப்பட்ட கணக்கீடுகளைச் செய்ய வேண்டும்.

சூரியக்குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும்-ஒவ்வொரு வேகத்தில்,ஒரு நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வரும்.செவ்வாயின் வேகம் வேறு.பூமியின் வேகம் வேறு.நீள்வட்டப்பாதையிலேயே ஒவ்வொரு கோளும் சுற்றுவதால் ஒரு ஒவ்வொரு கோளும்-தன் பக்கத்திலுள்ள கோளுக்கு-ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மிக அருகே வரும்.அந்தப் புள்ளியை Perigee என்பார்கள்.அப்படி செவ்வாய்க்கும்-பூமிக்குமிடையிலான அந்த Perigee க்கணக்கிட்டு,அந்தப் புள்ளியில் ராக்கெட்டை அனுப்ப வேண்டும்.இல்லாவிட்டால் செவ்வாயின் தூரம் கூடும்.செலவும் எகிறும்.அதோடு செவ்வாயின் சுற்று வேகத்தில் கொண்டு சென்று நிறுத்த வேண்டும்.

நம் ஆனால் நம் விஞ்ஞானிகள் Perigee யை துல்லியமாகக் கணக்கிட்டு மங்கள்யானை கொண்டு சென்றார்கள்.செவ்வாயின் சுற்று வேகத்தில் அதன் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யானைச் சுற்றச் செய்தார்கள்.

3.அப்படி செவ்வாயைச் சுற்றச் செய்யும் போது-மங்கள்யானின் கிரையோஜனிக் என்ஜின்களை பூமியிலிருந்து தான் இயக்க வேண்டும்.இங்கே தான் ஒரு சவால்.பூமியில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் மங்கள்யானைச் சென்றடைய 12 நிமிடங்களாகும்.மங்கள்யானிடமிருந்து பதில்கள் வரவும் இதே 12 நிமிடங்கள் தேவைப்படும்.ஆக அடுத்த 12 நிமிடங்கள் கழித்து மங்கள்யான் எப்படி இயங்க வேண்டும் என்பதை இப்போதே தீர்மானிக்க வேண்டும்.ஒரு கட்டளையைப் பூமியில் இருந்து அனுப்பினால்,அது 12 நிமிடங்களுக்குப் பிறகு என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்று இந்தக் கணத்திலேயே தீர்மானிக்க வேண்டும். அது எவ்வளவு சவாலான பணி!!அதையும் நம் விஞ்ஞானிகள் செய்து முடித்தார்கள்.

4.இந்த துல்லியப் பணிகளை எல்லாம் நம் விஞ்ஞானிகள் தங்களது எத்தனையாவது முயற்சிகளில் செய்தார்கள் தெரியுமா? 

முதல் முயற்சியில்...

ஆம் முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்தார்கள்.

ஆனானப்பட்ட அமெரிக்காவே செவ்வாய் பயணத்தை 51 முறைகள் முயற்சி செய்து அதில் 21 முறைகளே வெற்றியடைந்தது.இந்தியா தன் முதல் முயற்சியிலேயே-சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து-அடித்த அந்த பந்து ஸ்டேடியத்தைத் தாண்டியது.ஆம்.அப்படிப்பட்ட நெத்தியடியாக அமைந்தது,"மங்கள்யானின்" பயணம்.

5.இவற்றிக்கெல்லாம் மேலாக இருந்தது மங்கள்யான் திட்டத்மிற்கான செலவு தான்.அமெரிக்கா செவ்வாய் பயணத்திற்குச் செய்த செலவை வைத்து இந்தியாவின் பொது பட்ஜெட்டையே முடித்து விடலாம்.ஆனால் மங்கள்யான் திட்ட செலவு எவ்வளவு தெரியுமா? 

வெறும் 454 கோடிகளில்!!!!

இந்தியா என்றாலே பாம்புகளும்,கொசுக்களும் நிறைந்த நாடென்றும்,அழுக்கான,சாலை விதிகளைப் பின்பற்றாத நாடென்றும்,You can piss in public,But you can't kiss in public in India-என்றும் எள்ளி நகையாடியவர்களின் நெற்றியில் 4 இஞ்ச் ஆணியை இறக்கியது "மங்கள்யானின்" வெற்றி.

அமெரிக்கா,ரஷ்யா,இங்கிலாந்து,ஐரோப்பா என உலகத்தின் வல்லரசு நாடுகளின் மத்தியில் இந்தியப் பொறியாளர்களின் வல்லமையை உயரத்தில் தூக்கி வைத்தது மங்கள்யான்.அதனால் தான் மங்கள்யானுக்கு ரூபாய் நோட்டில் இடம்.

மங்கள்யான் நம் திறமையின் வெளிப்பாடு

கறுப்பு பண ஒழிப்பில் உயிரையும் தியாகம் செய்ய தயார்; மோடி கண்ணீர் பேச்சு:

பானாஜி : நான் பிரதமர் ஆவதற்காக பிறக்கவில்லை. நான் எதையும் மறைக்கவும் இல்லை, நாட்டை இருளில் தள்ளவும் இல்லை என கோவா விழாவில் உணர்ச்சி பொங்க பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இது பற்றி நான் கவலைப்படவில்லை. உயிரையும் தியாகம் செய்ய தயார் என மோடி கண்ணீர் விழ உணர்ச்சி பொங்கிட பேசினார். கோவா விழாவில் ரூ.500, 1000 வாபஸ் பெறப்பட்டது குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக பேசியதாவது: கறுப்பு பணத்திற்கு எதிராக போராடுவேன் என்ற எனது வாக்குறுதியை காத்து வருகிறேன். காங்., அரசு ஊழலுக்கு எதிராக போராடவில்லை. அதனால் தான் இப்போது நான் அதை செய்கிறேன். நான் எதையும் மறைக்கவும் இல்லை, நாட்டில் இருளில் தள்ளவும் இல்லை.
கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான முக்கிய நடவடிக்கை இது. ஆனால் சிலர் இதை புரிந்து கொள்ளவில்லை. இந்திய பணம் ஏதாவது கொள்ளயைடிக்கப்பட்டிருந்தால் அதை இந்தியர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதே எங்களின் நோக்கம். அதனை கண்டறிவதும் எங்களின் கடமை.

நவம்பர் 8 ம் தேதி நிறைய மக்கள் இந்தியாவில் அமைதியாக தூங்கினர். சில இடங்களில் சிலர் மட்டுமே இப்போது வரை உறக்கமின்றி அலைகின்றனர். கறுப்பு பணத்தால் நேர்மையான மக்கள் பாதிக்கப்படுவதில் இருந்து காப்பதற்கே இந்த முக்கிய நடவடிக்கை.மக்கள் இந்த அரசை தேர்வு செய்துள்ளனர். அவர்கள் எங்களின் இருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள்.

ஊழலில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக 2014 ல் நிறைய மக்கள் ஓட்டளித்தனர். நிறைய எம்.பி.,க்கள் நகை வாங்குவதற்கு பான் எண் அவசியம் என்ற கட்டுப்பாட்டை நீக்குங்கள் என என்னிடம் கூறினர். இது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம்.பிரதமர் நாற்காலியில் அமருவதற்காக நான் பிறக்கவில்லை. எனது குடும்பம், வீடு என அனைத்தையம் நாட்டிற்கான துறந்தேன்.

பினாமி பெயர்களில் இருக்கும் சொத்துக்கள் மீத நடவடிக்கை எடுக்கப்படும். கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய நடவடிக்கை இது. நீங்கள் கேட்கலாம் கறுப்பு பணத்திற்கு மீட்பு என்ன ஆயிற்று என்று. நான் செய்ய மாட்டேன் என எப்படி சொல்ல முடியும்.

போராட்டம் இப்போது தான் துவங்கி உள்ளது. இந்தியாவில் கறுப்பு பணம், ஊழலால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை. 70 ஆண்டுகால நோய்: என்னை எல்லோரும் எதிர்ப்பார்கள் என எனக்கு தெரியும். ஏனெனில் 70 ஆண்டுகளாக கொள்ளையடித்தே வாழ்ந்து விட்டனர்.

இவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் நான் எதற்கும் தயாராக இருக்கின்றேன். 70 ஆண்டுகளாக இருந்த கறுப்பு பண நோய் 17 மாதத்தில் தீர்ந்து விட்டது. மக்கள் கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தனர்.

இதனால் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம். இன்று 2 ஜி ஊழல் புரிந்தவர்கள் எல்லாம் உங்களை மோற்ற உங்களுடன் ஏ.டி.எம்.,மில் வரிசையில் நிற்கின்றனர். மக்களுக்கு சிரமத்தை தரும் என்று தெரியும். இருந்தும் இது இக்கட்டான தருணம்.

எனவே மக்கள் அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அடுத்து பினாமி சொத்துக்கள் மீது நடவடிக்கை தொடரும். நாட்டின் வளர்ச்சி வேகம் விரைவில் இருக்கும். நான் பிரதமர் நாற்காலிக்காக வரவில்லை.

இந்த நாட்டிற்காக வந்துள்ளேன். இந்த நாட்டிற்காக எனது குடும்பத்தினரை இழந்தேன். டிச. 30 க்கு பின் இன்னும் அதிரடி காத்திருக்கிறது.

ஏடிஎம்.,களில் வரிசையில் நிற்கும் மக்கள் மத்திய அரசிற்கு எதிரான நிலைப்பாட்டிற்காக நிற்கவில்லை. நாட்டை காக்க வேண்டும் என்பதற்காக, கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக நிற்கிறார்கள். கறுப்பு பணம் பதுக்குபவர்கள் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் மக்கள் ஆதரிக்கிறார்கள்.

கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வரும் மிகப் பெரிய பணிக்காகவே ரகசியம் காக்கப்பட்டது. நேர்மையான மக்களுக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றோம். கறுப்பு பணத்தை ஒழிக்கும் போராட்டத்தில் என்னுடன் இணைய வாருங்கள்.50 தினங்களுக்கு ஒத்துழைப்பு: இந்த நடவடிக்கையால் பணத்தை இழந்து, பாதிக்கப்பட்டவர்களே வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். அவர்கள் எனக்கு எதிராக நடவடிக்கைகளை செய்வார்கள், என்னை அழிக்க நினைக்கலாம்.

எதற்கும் நான் தயாராக உள்ளேன். நாட்டில் முதல் முறையாக ரூ.4.76 ஆயிரம் கோடி வங்கிகளில் டிபாசிட் ஆகி உள்ளது. இன்னும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் அத்தனையும் வெளியே வரும். கள்ள சந்தையில் நடக்கும் ஊழல்களை இத்துடன் இணைக்க வேண்டாம்.

அதுற்கான நடவடிக்கை விரைவில் துவங்கப்படும். ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே எனது திட்டம். இதற்காக திட்டம் தயாராக உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே எனது திட்டம். இதற்காக திட்டம் தயாராக உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற மக்களாகிய நீங்கள் இன்னும் ஒரு 50 தினங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்என பேசினா

புது 2000 ரூபாய் நோட்டில் போலியை கண்டுபிடிப்பது எப்படி? 2000 ரூபாய் தாளின் அம்சங்கள் யாவை?


நாட்டிற்குள்ளேயேசுற்றித் திரியும் குள்ள நரிக் கூட்டம்கள்ள நோட்டு அடித்து இந்தியப்பொருளாதாரத்தை சீர்குழைப்பதற்கென்றே இருக்கிறது. அந்த ஈனர்களின் சூழ்ச்சியில்சிக்காமல் இருக்கவே இந்த பதிவு:
1. வெளிச்சத்தில்வைத்துப்பார்த்தால் 2000 என்று அச்சு செய்யப்
பட்டிருக்கும்.
2. உள்ளுறைப்படுமமாக 2000 என்று பொறிக்கப் பட்டிருக்கும்.
3. இந்தியமொழியில் தெளிவாக 2000 என்று பொறிக்கப் பட்டிருக்கும்.
4. காந்தியின்புகைப்படம் நடுவில் இருக்கும்.
5. காந்திக்குஇடது புரம் “RBI 2000" என்று நுண்ணிய எழுத்துக்களால்பொறிக்கப் பட்டிருக்கும்.
6. நிறம்மாறும் பாதுகாப்பு இளை (பச்சையில் இருந்துநீலமாக) ரூபாயின் நடுவில் கோர்க்கப்பட்டிருக்கும். அந்த பாதுகாப்புஇளையில் Bharath(hindi) RBI and 2000 என்று நுண்ணிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும். நோட்டை மேலும் கீழுமாகஅசைக்கும் போது பாதுகாப்பி இளைபச்சையில் இருந்து நீலமாக மாறும்.
7. RBIயின்சத்திய பிரமானமும் RBI ஆளுனரின் கையொப்பமும் இடம் பெற்றிருக்கும்.
8. இந்தியரூபாயின் குறியீடுடன் சேர்ந்து 2000 என்று பொறிக்கப் பட்டிருக்கும்இதுவும் நிறம் மாறுபவையாக இருக்கும்(பச்சையில் இருந்து நீலமாக).
9. அசோகச்சின்ன குறியீடு, காந்தியின் தனியுருவப்படம் மற்றும் 2000 நீரோட்டக் குறியாக இடம் பெற்றிருக்கும்.
10. நோட்டின்எண் இடப் பக்கதில் இருந்துவலப்பக்கமாக சிறிதாக ஆரம்பித்து பெரிதாகிக்கொண்டே போகும்.
11. அசோகச்சின்னமும், காந்தியின் தனி உருவப்படமும் உருசெதுக்கலாகஅமைந்திருக்கும் அதாவது மிகவும் நுண்ணியஎழுத்தாக....
12. செவ்வகத்தில்2000 என்று அச்சிடப் பட்டிருக்கும்.
13. 7 கோணவடிவு கோடுகள் இடம் பெற்றிருக்கும்.
14. இடதுபக்கம் எந்த வருடம்(2016) இந்தநோட்டு அச்சிடப்பட்டது என்ற விபரம் இருக்கும்.
15. தூய்மைஇந்தியா குறியீடு அமையப் பெற்றிருக்கும்.
16. இந்தியஅரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் இடம் பெற்றிருக்கும்.
17. மங்கல்யான்புகைப் படம் பொறிக்கப் பட்டிருக்கும்.

TNPSC GROUP IV EXPECTED CUT OFF MARKS-EXAM DATE 06.11.2016:

tnpsc Gruop IV cutoff ( குருப் 4 கட்ஆப் துல்லியம்)

நண்பர்களுக்கு வணக்கம் தற்போது நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வரியத்தின் மூலம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான கட்ஆப் நிலவரம் மிக துல்லியமாக ஆரயபட்டதன் மூலம் இந்த தகவல் வெளியிடப்படுகிறது.
தற்போது தேர்ந்தெடுக்கவுள்ள பணியிடங்கள்
 VAO -800
 Group 2A-1500 மேல்
 Gruop 2(interview)=2000க்குள்
chennai high court = 350
Gruop 1= 100 க்குள் (பழைய அனைத்து பணியிடங்கள்)
EB = 2000 க்கும் மேல்
ஆய்வக உதவியளார் மற்றும் ஆசிரியர் தகுதித்தேர்வு(நடைபெற உள்ளது மற்றும் பழைய பணியிடம்) , SSC. Bank etc..... இவர்கள் Gruop 4 வேலையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு குறைவு.
மேலும் ஏற்கனவே வேலை பார்க்கும் அரசு ஊழியர் (மறக்காமல் இருக்க எழுதுபவர்கள்) மற்றும் சென்றால் Gruop 2 க்கு மேல் தான் செல்வேன் (IAS உட்பட)   பலர் இந்த குரூப் 4 தேர்வில் எழுதியுள்ளனர் இவர்களை எல்லாம் பார்த்தால் அனைவரும் 170 மேல் தான் கேள்வி சரியாக எழுதியுள்ளார்கள்

இவர்களில் TNPSC VAO மற்றும் Gruop 2A போன்ற பணியிடங்களுக்கு மிக மிக விரைவில் பணியிடங்கள் நிரப்பபட உள்ளது எனவே இதனால் மட்டுமே 2400 பணியிடங்கள் + EB (2000) குரூப் 4 ரிசல்ட் வருவதற்குள் நிரப்படும் எனவே கட் ஆப் மேல் கூறியவற்றை விட குறைவாக வர வாய்ப்பு உள்ளது இரண்டாவது கவுன்சிலிங் நடைபெற்றால் இட ஒதுக்கீட்டு பிரிவினர்களுக்கு 165 கேள்வி வரை வர வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. நான் ஆதரங்களுடன் கூறி உள்ளேன் ஆனால் பணியிடங்கள் தோரயமானது கூடலாம் குறையலாம் இவை ஒரு சாம்பிள் தான் எனவே பலர் குழப்பும் குழப்பங்களை விட்டு கண்டிப்பாக கிடைக்கும் எனும் மனநிலையுடன் அடுத்த தேர்வுகளுக்கு படியுங்கள்

170க்கு மேல் பெற்றவர்கள் 5000 ரேங்க்குள் வருவார்கள் அவர்களை முதல் சாண்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கலாம் 2500 பணியிடம் உள்ளது இதில் தட்டச்சர் 1700 இவர்களும் ஓவர் ஆல் ரேங்க்குள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது எனவே 7000 ரேங் வரை அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை இங்கு அளிக்கப்படும் கட்ஆப் ஒரு தோரயமானதே இவை மாறுதலுக்கு உட்பட்டது

இந்த கட்ஆப்விட குறையலாம் அதிகரிக்கலாம் இவை மாறுதலுக்கு உட்பட்டது இதற்கு இந்த வலைதளம் பொறுப்பல்ல
நன்றி


13/11/16

இல்லந்தோறும் இணையம்' விண்ணப்பிக்க அவகாசம்

இல்லந்தோறும் இணையம்' திட்டத்தில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், 'இல்லந்தோறும் இணையம்' திட்டத்தில், மார்ச், 1 முதல், மாவட்ட தலைநகரங்களில், அகண்ட அலைவரிசை இணைய சேவைகளை வழங்கி வருகிறது. 
இரண்டாம் கட்டமாக, அனைத்து நகராட்சி பகுதிகளுக்கும், திட்டத்தை விரிவுப்படுத்த உள்ளது. இதில் சேர்ந்து, இணைய சேவை வழங்க விரும்புவோர், நிறுவனத்தின் இணைய தளத்தில் இருந்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்; வரும், 15க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இதுவரை, 7,317 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் பலர், கால அவகாசத்தை நீட்டிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும்,www.tactv.inஎன்ற இணையதளத்தில், 14ம்தேதி முதல் தெரிந்து கொள்ளலாம். ஏதாவது சந்தேகம் இருந்தால், 1800 425 2911 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

TN திறந்த நிலை பல்கலையில் 24ல் பட்டமளிப்பு விழா.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, வரும், 24ல் நடக்கிறது.இது தொடர்பாக, பதிவாளர், எஸ்.விஜயன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, வரும், 24, காலை, 11:00 மணிக்கு, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது. 
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர், டாக்டர் சாந்தா பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் ஆண்டறிக்கை சமர்ப்பிக்கிறார்.

விழாவில், 3,397 முதுநிலை, 7,520 இளநிலை, 2,719 டிப்ளமோ மற்றும், 152 முதுநிலை டிப்ளமோ மாணவர்கள் என, 13 ஆயிரத்து, 788 பேர், பட்டம் மற்றும் சான்றிதழ் பெறுகின்றனர். பல்கலை அளவில் முதலிடம் பெற்ற, 142 பேர் தங்கப் பதக்கமும், 256 பேர் இரண்டு, மூன்றாம் இடம் பெற்றதற்கான சான்றிதழும் பெறுகின்றனர். இளநிலை மாணவி முத்துவுக்கு, கனடா காமன்வெல்த் கல்வி கழகத்தின், பாராட்டு சான்றிதழும், 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கணக்குக்கு இனி இல்லை பிணக்கு!:அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்.

பூஜ்ஜியத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு மதிப்புண்டு என, உலகத்திற்கு உரக்க சொன்னவர்கள் தான் நம் முன்னோர்கள்.ஆனால் இன்று, சிறுவண்டுகளுக்கு சின்ன வாய்ப்பாட்டில் கூட, எக்கச்சக்க திணறல். 3*2 என்றால் கூட, விரல் விட்டு எண்ணி, பதில் சொல்றாங்க.இப்படியிருக்கும் நிலையில், 'கணக்கு பார்முலா வர்றதுக்கு, ஸ்பெஷல் மில்க் ரிடிங்ஸ் எல்லாம் குடிக்கதேவையில்ல. 
எளிய முறையில், அடிப்படை தகவல்களை சொல்லி கொடுத்தாலே போதும். சதம் அடிப்பது எளிது' என, அசால்ட்டாய் சொல்கிறார்,கோவை தீத்திப்பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ரகோத்தமன். வகுப்பறைக்குள் நுழைந்ததும், தலையை குனிந்தபடி, ஏதோ போர்டுக்குள் மூழ்கியிருந்தனர் மாணவர்கள். கூட்டல், கழித்தலில், எவ்வளவு பெரிய எண்களை கூறினாலும், கண் இமைக்கும் நேரத்தில், கோரஷாக பதில் வந்தது. ஆச்சரியத்துடன் பார்த்த போது, கணித ஆசிரியர் ரகோத்தம்மன் கூறியதாவது:தொடக்கப் பள்ளிகளில் இருந்தே, கணிதம் சார்ந்த புரிதல்ஏற்படுத்துவது அவசியம். ஏனெனில், கணிதம் இல்லாமல், அன்றாட பிழைப்பை நகர்த்துவது கடினம். படிக்காத பாட்டிகூட, கூட்டல், கழித்தல் தெரிந்து வைத்திருப்பார். ஏனெனில், கணிதம் வாழ்க்கை கல்விக்கு தொடர்புடையது.இதை எளிமையாக, மாணவர்களுக்கு புரியும் விதத்தில் சொல்லி கொடுக்க, 'பெக் மேட்' என்ற, செயல்வழி கணித போர்ட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதைப் பயன்படுத்தி, ஒற்றை எண், இரட்டை எண் வேறுபாடு, பகு எண், பகா எண், காரணிகள், மீ.பொ.வ., - மீ.சி.ம., என, பல்வேறு அடிப்படை விசயங்களை அறியலாம்.

 பத்து நாணயங்கள் கொடுத்து, வேறுபாடுகளை அறிய சொன்னால், எளிதில் விளங்கிவிடும். இதேபோல், கூட்டல், கழித்தலை போர்டிலே செய்யலாம்.வட்டம், சதுரம், செவ்வகம் என, வடிவங்கள், அதன் தன்மை, அளவுகளை சொல்லி கொடுக்க லாம். என்னதான் கரும்பலகையில்வரைந்து சொல்லி கொடுத்தாலும், ரப்பர் பேண்டு கொண்டு, மாணவர்களே போர்ட்டில், வடிவங்கள் உருவாக்கும் போது, நிறைய கற்றுக் கொள்வர்.நான்கு புறமும் சமமாக இருந்தால் சதுரம் என, நீளமாக நீட்டி முழக்கி, சொல்லி கொடுப்பதற்கு பதில், செய்ய பழக்கினால், மனதில் பதிந்துவிடும்.

இதுமட்டுமல்ல, பத்தாம் வகுப்பு வரை,தேற்றங்கள், வரையறை என, கணிதம் சார்ந்த அனைத்து பார்முலாக்களுக்கும், கற்பித்தல்கருவிகள் உள்ளன.மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், கணித கற்பித்தல் உபகரணங்களை, அனைவருக்கும்இடைநிலை கல்வி திட்டம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இது, மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளதால், மற்ற பள்ளிகளுக்கும் வளங்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

HSE : OCTOBER 2016 EXAM ANSWER SCRIPT SCAN COPY DOWNLOAD INSTRUCTIONS














சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு டிசம்பர் 3–ந்தேதி முதல் 9–ந்தேதி வரை நடக்கிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான அகில இந்திய பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டு தோறும் நடத்துகிறது.
இந்த வருடம் 1,079 பணிகளுக்கு முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு முடிவு கடந்த செப்டம்பர் மாதம் 16–ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் இருந்து 9 லட்சம் பேர் எழுதினார்கள். தமிழகத்தில் இருந்து 17 ஆயிரம் பேர் மட்டுமே எழுதினார்கள். இந்த தேர்வில் 15 ஆயிரத்து 445 பேர் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வை எழுத தகுதி பெற்றனர். மெயின் தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர் ) 3–ந்தேதி தொடங்குகிறது. அந்த தேர்வு டிசம்பர் 9–ந்தேதி வரை நடக்கிறது. ஹால் டிக்கெட் இணையதளத்தில் (www.upsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளுக்கு வர்த்தக பிரிவுக்கான மின் கட்டணம் வசூலிப்பதா?- உயர் நீதிமன்றம் கண்டனம்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் தாக்கல் செய்த பதில் மனு மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மாநில அரசு சுகாதாரம், கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை. கழிப்பறை இருந்தால் அது பயன்பாட்டில் இல்லை. மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறைகளை பூட்டி வைத்து ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகி ன்றனர்.

அரசு பள்ளிகளில்கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுக்கு மத்திய அரசு 60 சதவீத நிதி வழங்குகிறது. மாநில அரசு 40 சதவீத நிதி வழங்காவிட்டால் எந்தப் பணியும் நடைபெறாது. கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஏதாவது செய்தால் அரசை பாராட்டலாம். எதுவும் செய்யாமல் இருந்தால் எப்படி பாராட்டுவது?துப்புரவுப் பணியாளர்களைப் பெற்றோர்-ஆசிரியர்கள் கழகம் நியமனம் செய்கின்றனர் என அரசு சொல்கிறது. பெற்றோர்-ஆசிரியர் கழகத்துக்கு எங்கிருந்து நிதி வருகிறது. துப்புரவுப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.750 முதல் ரூ.1500 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்திற்கு இந்த காலத்தில் யார் வேலைக்கு வருவர்.மின்சார கட்டணம் செலுத்த ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.1500வழங்குவதாக அரசு கூறுகிறது.

கட்டணம் அதிகமாக வந்தால் தலைமை ஆசிரியர் சரி செய்து கொள்வார் என்கின்றனர். தலைமை ஆசிரியர் பணத்துக்கு எங்கு போவார். ஒவ்வொரு பள்ளிக்கும் இரு மாதத்துக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் வருகிறது. அரசு பள்ளிகளுக்கு வர்த்தகப் பிரிவில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. பள்ளி என்ன தொழிற்சாலையா? பள்ளிகளுக்கு வீட்டுக்கான மின் கட்டணம் நிர்ணயம் செய்தால் என்ன ஆகி விடும்.வழக்கறிஞர்கள் குழு பள்ளிக ளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி நாப்கின் வழங்கும் இயந்திரம் செயல்படவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் பதில் மனுவில் நாப்கின் இயந்திரம் செயல்படுகிறது எனக் கூறப் பட்டுள்ளது. இது நம்பும்படியாக இருக்கிறதா? என்றனர்.

அப்போது கூடுதல் அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, பள்ளிகளில் படிப்படியாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் நாப்கின் இயந் திரத்தை பயன்படுத்த மாண விகள் தயங்குகின்றனர்.இதனால் அந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்றார்.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து குறைபாடுகளும் களையப்பட வேண்டும் என்றனர். பின்னர் விசாரணையை நவ.18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

DIGITAL SR : டிஜிட்டல் பணிக்கு செல்லும் முன் நம் பணிப்பதிவேட்டில் நாம் சரிபார்க்கப்பட வேண்டியவை.

1) நம் சுய விவரம் மற்றும் புகைப்படம்
2)பணிநியமன ஆணையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட விவரம்
3)பணி வரன்முறை
4)தகுதிகாண் பருவம்
5)அனைத்து கல்வி விவரங்கள்
6)கல்வித்தகுதிகளின் உண்மைத் தன்மை

7)துறைத்தேர்வு தேர்ச்சி விவரங்கள்
8)FBF
9)SPF
10)GPF/CPS
11)பணிக்காலம் சரிபார்ப்பு
12)உயர் கல்வி பயில முன் அனுமதி
13)பதவி உயர்வு சார்பான பதிவுகள்
14)பணியிட மாறுதல் சார்பான விவரம்
15)ஊதிய நிர்ணயம் மற்றும் கால முறை ஊதிய நிர்ணயம் பற்றிய விவரம்
16)ஊக்க ஊதியம்/உண்மைதன்மை பெற்றதன் விவரம்
17)தேர்வு நிலை விவரம்
18)சிறப்பு நிலை விவரம்
19)சரண் விடுப்பு விவரம்
20)ஈட்டா விடுப்பு விவரம்
21)மருத்துவ விடுப்பு விவரம்
22)மகப்பேறு விடுப்பு விவரம்
23)கருச்சிதைவு விடுப்பு விவரம்
24)ஈட்டிய விடுப்பு இருப்பு விவரம்
25)ஈட்டா விடுப்பு இருப்பு விவரம்
26)அசாதாரணவிடுப்பு விவரம்
27)குடும்ப விவரங்கள்
28)SPF, FBF,GPF/CPS, DCRG, போன்றவற்றிற்கு வாரிசு நியமிக்கப்பட்ட விவரம்.

டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறையில்லை: சென்னை மண்டல ரிசர்வ் வங்கி.

வரும் டிசம்பர் மாதம் 30ம்  தேதி வரை வங்கிகள் விடுமுறையின்றி செயல்படும் என்று சென்னை மண்டல ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வசதியாக, மக்களின் வசதிக்காக அனைத்து வங்கிகளும் விடுமுறை இன்றி இயங்கும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 30ம் தேதி வரை விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களும் வங்கிகள் செயல்படும் என்று சென்னை ரிசர்வ் வங்கியின் மண்டல மேலாளர் சதகத்துல்லா தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மக்கள் சிரமமின்றி, வங்கிகளுக்கு வந்து பணத்தை மாற்றிக் கொள்ள வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

விடுமுறையின்றி வேலை செய்ய முடியாது என வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின்,தன்னிச்சையான முடிவைஏற்க முடியாது என வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.


குரூப்-1 தேர்வு: அதிரடி நிபந்தனைகள்!!!

தமிழகத்தில் காலியாகவுள்ள 85 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று தெரிவித்துள்ளது.துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், பல்வேறு துறைகளில் உள்ள உதவி ஆணையர்கள் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 
அதன்படி விண்ணப்பிக்க விரும்புவோர் நேற்றிலிருந்து டிசம்பர் 8ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி இதற்கான தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து தேர்வெழுதுவோருக்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.‘தேர்வர்கள் யாரும் சிபாரிசுக்காக தேர்வாணைய தலைவர், செயலர், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரைச் சந்திக்கக்கூடாது.

சந்திக்க முயற்சித்தால், அவர்கள் தேர்வு எழுத தடை. விடைத்தாளில் பெயர், பதிவெண் போன்றவற்றை நேரடியாகவோ, குறிப்பாகவோ தேவையற்ற இடங்களில் எழுதினால் எதிர்காலத்தில் தேர்வு எழுத தடை.அனுமதிக்கப்பட்ட பேனாவை தவிர, பென்சில், வண்ண பென்சில், வண்ண பேனா கிரயான்கள், ஒயிட்னர், ஸ்கெட்ச் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது. வினாத்தாள் மற்றும் விடைத்தாளில், பொது அறிவுரையில் குறிப்பிட்டபெயர், சுருக்கொப்பம், முகவரி தவிர மற்ற பெயர், கையொப்பம், சுருக்கொப்பம், தொலைபேசி, மொபைல் போன் எண்,முகவரி மற்றும் மதம் சார்ந்த குறியீடு இடுதல் கூடாது.விடைத்தாளில், பரிவு தேடும் விதத்தில் கெஞ்சி கேட்டு எழுதுவது கூடாது. கேள்விக்கு தொடர்பில்லாத பாடம், பதில்கள் மற்றும் தன் அடையாளத்தை வெளியிடும் வகையில்எழுதக்கூடாது. கறுப்பு அல்லது நீலம் இரண்டு வகை பேனாவில், ஏதாவது ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இரண்டிலும், மாற்றி மாற்றி எழுதினால் அந்த விடைத்தாள் தகுதி நீக்கம் செய்யப்படும். தேர்வர்கள் மின்னணு தகவல்கள் அடங்கிய ஸ்மார்ட் வாட்ச், மோதிரம், கம்யூனிகேஷன் சிப், மொபைல்போன், பல விவரங்கள் உடைய கால்குலேட்டர்களை தேர்வில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்வர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உடையவராக இருத்தல் கூடாது. விண்ணப்பதாரர் பெண்ணாக இருந்தால், ஏற்கனவே மனைவியுடன் வாழும் ஒருவரை திருமணம் செய்திருக்கக் கூடாது’ என்று டிஎன்பிஎஸ்சி அதிரடியாக பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

இந்த நிபந்தனைகளை கடைபிடிக்காதவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.

TNPSC:பிப்., 19ல் 'குரூப் - 1' தேர்வு

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், 85 இடங்களுக்கான, 'குரூப் - 1' தேர்வு, பிப்., 19ல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழக அரசுத்துறையில், 29 துணை கலெக்டர்கள், 39 முதல் நிலை, டி.எஸ்.பி.,க்கள், எட்டு வணிக வரித்துறை உதவி கமிஷனர்கள், ஒரு மாவட்ட பதிவாளர், ஐந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் எட்டு மாவட்டங்களில், தீயணைப்பு அதிகாரி என, குரூப் - 1 பதவிகளில், 85 காலியிடங்களுக்கு, பிப்., 19ல், முதல் நிலை தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், ஆன்லைன் பதிவு துவங்கியுள்ளது; டிச., 12ல் முடிகிறது. விண்ணப்ப கட்டணத்தை, கிரடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம், ஆன்லைன் வங்கி கணக்கு மூலமும் செலுத்தலாம்.

 கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாளில், அதிகம் பேர் விண்ணப்பிக்கும் போது, ஆன்லைனில், தொழில்நுட்ப பிரச்னைகள் எழலாம். இதனால், விண்ணப்பங்களை கடைசி நாளில், சமர்ப்பிக்க முடியாமல் போனால், அதற்கு தேர்வாணையம் பொறுப்பாகாது.

இதற்கான தகுதி உட்பட, மேலும் விபரங்களை, 044 - 2533 2855, 2533 2833 மற்றும் 1800 425 1002 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

மறுப்பு செய்தி: வங்கிகளுக்கு அடுத்த மாதம் வரை விடுமுறை இல்லை என்று வெளியான செய்தி ரிசர்வ் வங்கி மறுப்பு

வங்கிகளுக்கு அடுத்த மாதம் வரை விடுமுறை இல்லை என்று வெளியான செய்திக்கு ரிசர்வ் வங்கி மறுப்புத் தெரிவித்துள்ளது.

விடுமுறை தினங்களில் வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு சனி (நவ.12), ஞாயிறு (நவ.13) ஆகிய இரண்டு தினங்களுக்கு மட்டுமே பொருந்தும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


செல்லாத 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள டிசம்பர் மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அதுவரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி செயல்படும் என்று ஊடகங்களில் சனிக்கிழமை மாலை செய்தி வெளியானது.

இந்தச் செய்தியைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகப் பொறுப்பாளர் வி.ஜி.வெங்கடாசலபதி வெளியிட்ட செய்தியில், விடுமுறை நாள்களில் வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

எனவே, டிசம்பர் மாதம் வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என்ற செய்தியை பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளின் செயல்பாடு என்பது தேவைக்கேற்ப முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மறுப்பு செய்தி: வங்கிகளுக்கு அடுத்த மாதம் வரை விடுமுறை இல்லை என்று வெளியான செய்தி ரிசர்வ் வங்கி மறுப்பு

வங்கிகளுக்கு அடுத்த மாதம் வரை விடுமுறை இல்லை என்று வெளியான செய்திக்கு ரிசர்வ் வங்கி மறுப்புத் தெரிவித்துள்ளது.

விடுமுறை தினங்களில் வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு சனி (நவ.12), ஞாயிறு (நவ.13) ஆகிய இரண்டு தினங்களுக்கு மட்டுமே பொருந்தும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


செல்லாத 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள டிசம்பர் மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அதுவரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி செயல்படும் என்று ஊடகங்களில் சனிக்கிழமை மாலை செய்தி வெளியானது.

இந்தச் செய்தியைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகப் பொறுப்பாளர் வி.ஜி.வெங்கடாசலபதி வெளியிட்ட செய்தியில், விடுமுறை நாள்களில் வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

எனவே, டிசம்பர் மாதம் வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என்ற செய்தியை பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளின் செயல்பாடு என்பது தேவைக்கேற்ப முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

12/11/16

பள்ளிகளில் கழிப்பறை வசதி எப்படி : விரிவான அறிக்கை கேட்கும் ஐகோர்ட்

தமிழக பள்ளிகளில் கழிப்பறை வசதி எப்படி உள்ளது, என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல்செய்யும்படி, தமிழக பள்ளி கல்வித்துறை
செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  இந்தவழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:

பள்ளிகளில்கழிப்பறை வசதி எப்படி உள்ளதுஎன்பது குறித்து, ப்ள்ளி கல்வித்துறை செயலர்தாககல் செய்த அறிக்கை போதியஅளவில் இல்லை. 44 லட்சம் மாணவர்களுக்கு 42 ஆயிரம்கழிப்பறைகள் எப்படி போதுமானதாக இருக்கும். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக, பள்ளி கல்வி செயலர் விரிவானஅறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வரும், 18ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடக்கக் கல்வி - பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு - பேரிடர் மேலாண்மைக் குழு அமைப்பு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்ந்த செயல்முறைகள்


 

7 லட்சம் மாணவர்களை தொழிலதிபர்களாக்க இலக்கு; மத்திய அரசு புதிய திட்டம்!

மத்தியஅரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 7 லட்சம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து, தொழிலதிபர்களாக உருவாக்கும் நோக்கில், ‘பிரதான் மந்திரி யுவயோஜனா’ என்ற புதிய திட்டத்தைஅறிமுகப்படுத்தி
உள்ளது. டில்லியில், நேற்றுமுன்தினம், திறன் மேம்பாடு மற்றும்தொழில் முனைவு துறை அமைச்சர்ராஜீவ் பிரதாப் ரூடி தலைமையில், ‘தரமான ஆற்றல்’ என்ற தலைப்பில், மாநாடு நடைபெற்றது.


பெரும்பான்மைமாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்றஇந்த மாநாட்டில், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோருக்கான தொழில் முனைவோர் பயிற்சித்திட்டத்தை, ராஜீவ் பிரதாப் ரூடிஅறிவித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:

இளைஞர்களுக்குதொழில் முனைவோர் பயிற்சி அளிக்கும் புதியதிட்டத்தின் கீழ், அடுத்த ஐந்துஆண்டுகளில், 7 லட்சம் மாணவர்களுக்கு, தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, 499.94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாநில அரசுகளுடன் இணைந்து, 3,050 கல்வி மையங்களில், இந்தபயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக, என்.ஐ.இ.எஸ்.பி.யு.டி., மற்றும் ஐ.ஐ.இ., பயற்சி மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இவை, 125 நாடுகளைச் சேர்ந்த, 2,600 பேர் உட்பட, 7 லட்சத்திற்கும்அதிகமானோருக்கு, தொழில் முனைவோர் பயிற்சியைவெற்றிகரமாக வழங்கியுள்ளன.

இதையொட்டி, உள்நாட்டில் இளைஞர்களுக்கு, மேலும் அதிக வேலைவாய்ப்புகளைஉருவாக்கும் நோக்கில், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தின்கீழ், 2,200 கல்லுாரிகள், பல்கலைகள், 300 பள்ளிகள், 500 இந்திய தொழிற்கல்வி மையங்கள், 50 தொழில்முனைவோர் மேம்பாட்டு மையங்கள் ஆகியவற்றின் மாணவர்களுக்கு, வலைதளம் வாயிலாக தொழில்முனைவோர் பயிற்சி வழங்கப்படும்.

அத்துடன், தொழில் விபரங்கள், தொழில் முன்னோடிகளின் ஆலோசனைகள்உட்பட, தொழில் துவங்குவதற்கான அனைத்துஉதவிகளையும், இளைஞர்கள் பெறலாம். தேசிய மற்றும் சர்வதேசதரத்திலான தொழில் முனைவோர் கல்விப்பயிற்சி, இளைஞர்களுக்கு வழங்கப்படும்.

அமைச்சகம், 2020க்குள், ஒரு கோடி பேருக்குதிறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க இலக்குநிர்ணயித்துள்ளது. இதற்காக, பிரதமர் திறன் மேம்பாட்டுதிட்ட நிதியில் இருந்து, 3,000 கோடி ரூபாய், மாநிலஅரசுகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, மாநிலங்களில் அமைக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிமையங்கள், ஆய்வுக்கூடங்கள் மற்றும் பயிற்சி சாதனங்களின்தரம் உள்ளிட்டவை தொடர்பான வழி­காட்டு நெறிமுறைகள், தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. மத்திய அரசின்திட்டங்கள், அதகளவில், முதல் தலைமுறை தொழில்முனைவோரை உருவாக்க உதவும். இவ்வாறு அவர்கூறினார்.

முதல் தலைமுறையினர்:

சிறப்பாகசெயல்படும், 30 வயதிற்கு உட்பட்ட, முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு, 2017 ஜன., 16ல், மத்தியஅரசின் தொழில்முனைவோர் விரு­துகள் வழங்கப்படும்என, மத்திய திறன் மேம்பாட்டுஅமைச்சகம் அறிவித்துள்ளது.

பணியில் உள்ள ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு கேட்டு மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சரைச் சந்தித்து மனு.

23/08/2010  க்குப் பிறகு அரசுமற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளிகளில்முறையான கல்வித் தகுதிகளுடன் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் கட்டாயக்கல்வி உரிமை சட்ட
அடிப்படையில்TET நிபந்தனைகளை கூறி பணியை தொடரஅனுமதிக்கப்பட்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒருசில பணப் பயன் மறுக்கப்பட்டநிலையில்  பணியில்உள்ள இந்த ஆசிரியர்கள் பணிநிபந்தனை காலம் வரும் நவம்பர்15 ஆம்  தேதியுடன்முடிகின்றது.

ஆசிரியர்தகுதித் தேர்வில் இவர்களுக்கு முழுவதும் விலக்கு கொடுக்கும் பட்சத்தில்  சுமார்மூவாயிரம் ஆசிரியக் குடும்பங்களின் வாழ்வாதாரம் தமிழக அரசால் பாதுகாக்கப்படும்.


இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று மதுரையில் மாண்புமிகுதமிழக கல்வித்துறை அமைச்சரை TET நிபந்தனைகளுடன் பணி புரியும் ஆசிரியர்களின்மாநிலம் தழுவிய பிரதிநிதிகள் சந்தித்துமனு கொடுத்து  உள்ளனர்.


இந்த சந்திப்பின் போது தமிழக தொழிற்கல்விஆசிரியர்கள் சங்க ஆசிரியர்களும் அவர்களின்ஊதிய முரண்பாடு தொடர்பான மனுவைக் கொடுத்தனர்


மிகவும்பொறுமையாக இவர்களில் பிரச்சினைகளைக் கேட்டு மனுவை பெற்றுக்கொண்டதாகவும் அவ்வாசிரியர்கள் கூறினர்.


மாண்புமிகுதமிழக முதல்வர் அம்மாவின் கவனத்தில் இந்த மனு கொண்டுசெல்லப் பட்டு விரைவில் பணியில்உள்ள ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதும் விலக்கு என்ற நல்லதீர்வு கிடைக்கும் என இந்த பாதிக்கப்பட்டஆசிரியர்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

TNPSC : Group 1 syllabus

200% PENALTY என்பது எவ்வளவு : வங்கிகளில் ரொக்கமாக பணம் செலுத்தும்போது எவ்வளவு தொகைக்கு எவ்வளவு வரி பிடித்தம் செய்வார்கள் ..???

SR verification form for digitalization of SR

TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் இனி எப்படி தேர்ந்தெடுக்க போகிறார்கள்?

ஆசிரியர்தகுதித்தேர்வு குறித்த பல சந்தேகங்களும்பலவிதமான கட்டுரைகளும் இணையம் செய்தித்தாள்களில் உலவிவருகின்றன இதனால் ஆசிரியர்கள் பலரும்குழப்பம் அடைந்துள்ளனர். எனவே
தற்போதைய உண்மைநிலை என்ன என்பதை பற்றிஎடுத்துரைக்க இந்த கட்டுரையை நண்பர்களுக்குவெளியிடுகிறோம்.

ஆசிரியர்தகுதித்தேர்வு என்பது இந்திய அரசின்மூலம் இயற்றபட்ட கட்டாய கல்விச்சட்டப்படி இத்தேர்வுஎழுதுவது ஆசிரியர்களுக்கு கட்டாயம்.

இதனை தமிழக அரசு நேரடியாககொண்டுவரவில்லை ஒரு சில மாநிலங்களைதவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் இவைநடைமுறையில் உள்ளது. எனவே NCERT விதிகள்படி ஆசிரியர் தகுத்தேர்வு நடைபெறுகிறது. இருப்பினும் ஒரு சில மாநிலங்கள்வெயிட்டேஜ் மற்றும் மதிப்பெண் தளர்வுபோன்றவற்றை அறிவித்துள்ளது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது என்பதைநீங்கள் ஆந்திரா போன்ற மாநிலங்களுடன்ஒப்பிட்டால் தெரியும்.
தமிழகத்தில்ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர் இனிதேர்ந்தெடுக்கும் முறை தமிழகத்தில்ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்து வந்த பாதைஅனைவரும் அறிந்ததே வெயிட்டேஜ் முறை மற்றும் மதிப்பெண்தளர்வு குறித்த இரு வேறுவழக்கில் மதுரை கிளை மற்றும்சென்னை உயர்நீதிமன்றம் வேறு வேறு திர்ப்பைவழங்கியதால் உச்ச நீதிமன்றத்திற்கு இந்தவழக்கு சென்றது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிந்து தீர்ப்புவெளியிடப்பட்டுள்ளது, அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வில்வெயிட்டேஜ் முறை உண்டு மற்றும்5% மதிப்பெண் தளர்வு உண்டு அதாவது82 மதிப்பெண் மேல் பெற்றவர்கள் தேர்ச்சிபெற்றவர்கள் என்று தமிழக அரசுஅறிவித்த GO Ms. 71 மற்றும் GO Ms. 25 ஆகிய அரசாணைகள் செல்லும்இதன் மூலம் 2013 ல் நடைபெற்ற ஆசிரியர்தகுதித்தேர்வில் 55% மதிப்பெண் பெற்றால் போதும் என்று உச்சநீதிமன்றம்மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது. தமிழகஅரசு எடுக்கும் முடிவே இறுதி எனவும்உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது,
குழப்பம்
தற்போதுவிகடன் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் கடந்த தேர்வில் 60% மதிப்பெண்பெற்றவர்கள் மூலம் ஆசிரியர் தேர்வுசெய்யவுள்ளதாக செய்தி வெளியிட்டது. இந்தபேட்டி அளித்தவரை தொடர்பு கொண்டபோது எனசெய்தி வெளியிட்டுள்ளனர். எனவே இவை ஆசிரியர்தேர்வு வாரியம் அனைத்து பத்திரிக்கைகளுக்கும்அளித்த பேட்டி இல்லை மேலும்இவை அதிகாரபூர்வ தகவல் இல்லை அதாவது55% மதிப்பெண் தளர்வு கொண்ட GO Ms.25 அரசாணைதற்போது நடைமுறையில் உள்ளது வேறு எந்தபுதிய அரசாணையும் இல்லை இது குறித்துஅதிகாரபூர்வ வலைதளத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லைஎனவே குழப்பம் தேவையில்லை 82 மதிப்பெண் மேல் 2013 ல் பெற்றவர்கள் தேர்ச்சிபெற்றவர்களே என்பதில் எந்த சந்தேகமும் குழப்பமும்தேவையில்லை... இனி வரும் தேர்வுக்கும்55% மதிப்பெண் போதும்.
விரைவில்ஆசிரியர் தகுதித்தேர்வு
இன்னும்ஒரு வாரம் அல்லது இந்தமாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து அறிவிப்பு வரும் அதில் 55% (82) மதிப்பெண்பெற்றால் போதும் என்றே அறிவிப்புவரும் என்பதை எதிர்பார்க்கலாம் மேலும்வெயிட்டேஜ் உண்டு இவை நீதிமண்றங்களின்உத்தரவுப்படி வெளியிட்டுள்ளதால் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்த குளறுபடியும் இல்லை. நவம்பர் மாதத்துடன் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் என்பதால் விரைவில் அறிவிக்கபடலாம் கேள்வித்தாள் மிக எளிமையாக அமையவாய்ப்பு உள்ளதால் அதிக மதிப்பெண் பெறமுயற்சிக்கவும். தற்போது இருந்தே படிக்கவும்.
இப்படிக்கு

கார்த்திக்பரமக்குடி

SCERT - 1 முதல் 10ம் வகுப்பு வரை, திங்கள் முதல் வெள்ளி முடிய நடத்தவேண்டிய தேர்வுகளின் வினாத்தாள்...இயக்குநர் செயல்முறைகள்.

ரத்தாகப் போகிறது புதிய பென்ஷன் திட்டம் ..அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி -காவிரிக்கதிர் பத்திரிக்கை செய்தி

சொத்து பத்திரங்களில் 'ஆதார்' எண்: அடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்

கறுப்புபணம், கள்ள நோட்டு பிரச்னைக்குதீர்வாக, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தடைசெய்த மத்திய அரசு, அடுத்தஅதிரடியாக, சொத்து
பத்திரங்களில், 'ஆதார்' எண் இணைப் பதற்கான வழிமுறைகளைஆராய துவங்கி உள்ளது.


கறுப்புபணம், கள்ள நோட்டு புழக்கத்தைகட்டுப்படுத்தும் வகையில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன, மத்திய அரசு அறிவித்துஉள்ளது. அடுத்தகட்டமாக, தங்க நகை விற்பனை, சொத்து பரிமாற்றத்திலும் அதிரடி கட்டுப்பாடுகள் வரலாம்என கூறப்படுகிறது.


சொத்துபத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பதைகட்டாயமாக்கி, யார் பெயரில் எவ்வளவுஅசையா சொத்து உள்ளது என்பதைகண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக


கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் சட்ட அமலாக்கத்துக்காக உருவாக்கப்பட்ட, வரைவு விற்பனை பத்திரநகலில், விற்பவர், வாங்குபவர் இருவரும், ஆதார் மற்றும் பான்எண்களை குறிப்பிடுவது கட்டாயமாக் கப்பட்டு உள்ளது.


பரிமாற்றத்துக்குவரும் சொத்துக்கள், யார் பெயரில் இருந்துயார் பெயருக்கு செல்கிறது என்பது, இதனால் வெளிச்சத்துக்குவந்துவிடும்.


இதேபோலபரிமாற்றத்துக்கு வராமல், ஒரே நபர்பெயரில் நீண்ட காலமாக இருக்கும்சொத்துக்களின் பத்திரங்களி லும், ஆதார் எண்களைசேர்ப்பதற்கான கட்டுப்பாடு களை விதிக்க, மத்தியஅரசு தயாராகி வருகிறது.


விற்பவர், வாங்குபவரின் நிலவரத்தை ஆதார் எண்ணை பயன்படுத்திகண்காணிக்க இது உதவ லாம். மேலும் விற்பனைக்கு வராத சொத்துக்களை, கணக்கில்கொண்டுவரும் முயற்சியாக, அதிலும் ஆதார் எண்சேர்ப்பதை கட்டாயமாக்க போவதாக தெரிகிறது.


இதுகுறித்து, சட்ட வல்லுனரும், கேரள அரசின் ஆலோசகருமானஷியாம் சுந்தர் கூறியதாவது:


சொத்துபத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பதில்,சில நடைமுறை சிக்கல்கள்இருக்கின்றன. ஆனாலும்,


ஒவ்வொருசொத்துக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்குவது, அரசின் நோக்கத்தை நிறைவேற்றும். சார் பதிவாளர் அலுவலகம், கிராமம், பகுதி, பதிவு செய்யப்பட்ட ஆண்டு ஆகியவற்றை உள்ளடக்கியதாக, பிரத்யேக எண் இருக்க வேண்டும்.



கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில், இத்திட்ட பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஆர்வம் காட்டாதது, முறைகேடுகளுக்குவழிவகுப்ப தாக உள்ளது. இவ்வாறுஅவர் கூறினார்.

EMIS' இணையதளத்தில் ஏகப்பட்ட தகவல் 'மிஸ்'

EMIS' இணையதளத்தை முறையாக பராமரிக்காமல், மாணவர்களின்தகவல்களை அடிக்கடி அனுப்புமாறு உத்தரவிடுவதால், ஆசிரியர்கள்
அதிருப்தி அடைந்துள்ளனர்.

பொதுத்தேர்வுநடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர, ஆதார்எண் சேகரிக்குமாறு, அரசுத் தேர்வுத் துறைஉத்தரவிட்டுள்ளது. இதை, இம்மாத இறுதிக்குள்சேகரித்து, தகவல் பதிவு செய்யஅறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவால், ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகபுலம்புகின்றனர். மேலும், பள்ளிக்கல்வி தகவல்மேலாண்மை மையம் (எமிஸ்) என்றதிட்டம், கடந்த, 2012ல் துவங்கப்பட்டது.இதில், அரசுப்பள்ளி மாணவர்களின் பெயர், வயது, ரத்தவகை, ஆதார் எண் உள்ளிட்டஅனைத்து தகவல்களும் பதிவேற்ற உத்தரவிடப்பட்டது.

இதற்கு, பள்ளி வாரியாக பிரத்யேக, பயனர்பெயர், கடவுச்சொல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்களை, கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமே, ஒருங்கிணைத்து பார்வையிட முடியும். ஆனால், ஆன்லைன் பதிவேற்றம்செய்வதில் உள்ள குளறுபடிகளால், மாணவர்களின்தகவல்கள் முழுமையாக திரட்டுவதில் சிக்கல் நீடிக்கிறது.இதனால், அனைத்து கல்வி சார் செயல்பாடுகளுக்கும், மாணவர்களின் தகவல்களை அளிக்குமாறு, அடிக்கடி கல்வித்துறை சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. இதை திரட்டி அனுப்ப, ஆசிரியர்கள் படாதபாடு படுகின்றனர்.
தற்போது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும்14ம் தேதி, முன் அரையாண்டுதேர்வுகள் துவங்கவுள்ளன. இதற்கு பின், டிச., 7ம் தேதி, அரையாண்டு தேர்வுநடக்கிறது.தேர்வுப்பணி, விடைத்தாள் திருத்துதல் என, ஆசிரியர்கள் 'படுபிசி'யாக சுழன்று கொண்டிருப்பர். இந்நேரத்தில், ஆதார் எண் சேகரிக்குமாறுஉத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.இதுகுறித்து, அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்சிலர் கூறியதாவது:மாணவர்களின் ஆதார் எண், எமிஸ்இணையதளத்தில் உள்ளது. இதை, கல்வித்துறைஅதிகாரிகள் முறையாக, 'அப்டேட்' செய்யாததால், பள்ளிகளில் இருந்து அடிக்கடி தகவல்அளிக்க உத்தரவிடுகின்றனர்.

தேர்வுநேரத்தில், ஆதார் எண் சேகரித்தல், அட்டை இல்லாத மாணவர்களுக்கு முகாம்நடத்துதல் என, புதிய உத்தரவுகளைபிறப்பித்துள்ளனர்.இணைய வசதியில்லாத பள்ளிகளில், தனியார் பிரவுசிங் சென்டர்களை தேடி சென்று, தகவல்களைபதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதுபோன்றதகவல் சேகரிப்பு பணிகளை, கல்வியாண்டு துவங்கும்போதே, முறையாக திட்டமிடாமல், அவசரகதியில்குறுகிய கால அவகாசத்தில் செய்வதால், பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இனிவரும்காலங்களிலாவது, ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத பணிகளை திணிக்காமல்இருக்க, நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பள்ளிகளில் 4,000 -க்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணி நியமனம் எப்போது?

அரசுப்பள்ளிகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஆய்வக உதவியாளர்பணியிடங்கள், 34 முதன்மை கல்வி அலுவலர்பணியிடங்கள், 30 மாவட்ட
கல்வி அலுவலர்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்றஎதிர்பார்ப்பு பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளிடையேஎழுந்துள்ளது.
இதுகுறித்துதமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கமாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்திகூறியது:
பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழக முதல்வரின் ஒப்புதல்கிடைத்தவுடன் விரைவில் புதியப் பாடத் திட்டம்கொண்டுவரப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
இதைத் தலைமையாசிரியர்கள் சங்கம் வரவேற்கிறது. மாற்றியமைக்கப்படும்புதியப் பாடத் திட்டம் அகிலஇந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு(நீட்) போன்ற போட்டித் தேர்வுகளைதமிழக மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில்அமையும் என நம்புகிறோம்.

இதுபோல், பள்ளிகளில் நிர்வாகப் பணிகளும், கல்விப் பணிகளும் தொய்வின்றிநடைபெற ஏதுவாக அனைத்து காலிப்பணியிடங்களையும் விரைவாக நிரப்ப பள்ளிக்கல்வித் துறை முன்வரவேண்டும். பள்ளிகளில்4,265 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 34 முதன்மை கல்வி அலுவலர்பணியிடங்கள், 30க்கும் மேற்பட்ட மாவட்டகல்வி அலுவலர் காலிப் பணியிடங்கள்ஆகியவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை மற்றும் அகவிலைப்படி வழங்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? "விஜயகாந்த் கேள்வி

ரூ.2.50 லட்சம் வரையிலான டெபாசிட் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படாது: மத்திய நிதி அமைச்சகம் உறுதி?

500, 1000 ரூபாய்நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய அச்சப்பட வேண்டாம், ரூ.2.50 லட்சம் வரையிலான டெபாசிட், வருமான வரித்
துறைக்கு தெரிவிக்கப்படாதுஎன்று மத்திய நிதி அமைச்சகம்உறுதி அளித்துள்ளது.
பொதுமக்கள்வதந்திகளை நம்பவேண்டாம். மேலும் அறிமுகம் இல்லாதநபர்களின் பணத்தை தங்கள் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யவோ, மோசடியில் சிக்கிக்கொள்ளவோ வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், “விவசாய வருமானத்துக்கு அளிக்கப்படும் வரிவிலக்கு தொடரும். சிறு வணிகர்கள், குடும்பத்தலைவிகள், கைவினைக் கலைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் எவ்வித அச்சமும்இன்றி தங்கள் வங்கிக் கணக்கில்பணத்தை டெபாசிட் செய்யலாம்” என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்துநாளேடுகளில் நிதி அமைச்சகம் நேற்றுவெளியிட்டுள்ள விளம்பரத்தில், “ரூ.2.50 லட்சம் வரையிலானடெபாசிட், வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படாது. விசாரணையோ அச்சுறுத்தலோ இருக்காது. நேர்மையான அனைத்து குடிமகன்களும் அச்சமடையத்தேவையில்லை. விவசாயிகளின் வருமானத்துக்கு வரி கிடையாது. இதைஎளிதாக வங்கியில் டெபாசிட் செய்யலாம்” என்று கூறியுள்ளது.
உரிய கணக்கு இல்லாமல் வங்கியில்ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால்அபராதம்?
வருவாய்த்துறைச்செயலர் ஹஷ்முக் ஆதியா தகவல்
வங்கிகளில்ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும்பணத்துக்கு உரிய கணக்கு காட்டாவிட்டால், வரி மற்றும் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும்என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வருவாய்த் துறைசெயலர் ஹஷ்முக் ஆதியா நேற்றிரவுகூறியதாவது:
நேற்றுமுதல் டிசம்பர் 30-ம் தேதி வரையிலான50 நாட்களில் வங்கி கணக்கில் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்களின்விவரங்கள் பெறப்படும். பணத்துக்கு முறையான கணக்கு இல்லைஎன்றால் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
வங்கிகளில்ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யும்வாடிக்கையாளர்களின் வருமான வரி கணக்குகளை, வருமான வரித் துறையினர் ஒப்பிட்டுபார்ப்பார்கள். அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாடிக்கையாளர் தெரிவித்துள்ள வருமான வரி கணக்குகள்சரியாக இல்லை என்றால், வரிஏய்ப்பு செய்தவராக கருதப்படுவார்.
சிறு வணிகர்கள், வீட்டுப் பெண்கள், தொழிலாளர்கள் தங்கள் சேமிப்பு பணத்தைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் ரூ.1.5 லட்சம்முதல் ரூ.2 லட்சம் வரைவங்கியில் டெபாசிட் செய்யலாம். இந்தத் தொகை வரிவருவாயை விட குறைவாக இருப்பதால்வருமான வரித் துறையினரால் அவர்களுக்குதொந்தரவு இருக்காது.
தங்க நகை வாங்குபவர்களிடம், ‘பான்’ எண் வாங்காமல் விற்பனை செய்யும் நகைக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என்று கூறப்பட்டுள்ளது.
நவம்பர்10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரைடெபாசிட் செய்யப்படும் அனைத்து தொகை கள்பற்றிய அறிக்கைகள் வருமான வரித்துறையிடம் இருக்கும். ஒரு வங்கிக் கணக்குக்கு 2.5 லட்சம்மட்டுமே உச்சவரம்பு. வருமான வரித் தாக்கல்செய்துள்ளதற்கும் டெபா சிட் செய்துள்ளதற்குமானவித்தியா சம் ஒப்பிட்டு பார்க்கப்படும். ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாளை முதல் ரூ.100, ரூ.50
இன்று முதல் ஏடிஎம் இயந்திரங்களில் 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய்நோட்டுகள் மட்டுமே கிடைக்கும். இதன்மூலம் பொதுமக்கள் மிகக் குறைந்த பணத்தைஏடிஎம் இயந்திரங்களில் இருந்து எடுத்துக் கொள்ளமுடியும். பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பணம்எடுப்பதற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல்இலவச சேவையை வழங்குமாறு வங்கிகளுக்குரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஏடிஎம்களில்உடனடியாக ரூ. 2 ஆயிரம் நோட்டுகள்கிடைக்காது
கருப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500, 1,000 ரூபாய்நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசுஅறிவித்தது. தற்போது புதிய 2,000, 500 ரூபாய்நோட்டுகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளைவங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில்கொடுத்து மாற்றிவருகின்றனர்.
உடனடியாக2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில்கிடைக்காது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின்அமைப்புக்கு ஏற்ப ஏடிஎம் இயந்திரங்களில்மாற்றம் செய்ய வேண்டும். அதன்பிறகே ஏடிஎம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகிடைக்கும். எனவே பொதுமக்கள் அதற்குஏற்ப முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று பொருளாதார விவகாரங்களுக்கானசெயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும்இன்னும் சில மாதங்களில் புதிய1,000, 100, 50 ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தஇருப்பதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சக்திகாந்ததாஸ் கூறுகையில் ``புதிய வடிவத்தில் புதியவண்ணத்தில் இன்னும் சில மாதங்களில்ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும். அனைத்து ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பையும்இனி தேவைக்கு ஏற்ப மாற்ற திட்டமிட்டுள்ளோம். எனவே இன்னும் சில மாதங்களில்புதிய வடிவங்களில் ரூபாய் நோட்டுகளை காணலாம். புதிதாக இன்று வெளியிடப்பட்டுள்ள 2 ஆயிரம்ரூபாய் நோட்டுகள் பயன்பாடு எப்படி உள்ளது என்பதுதொடர்ந்து கண்காணிக்கப்படும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டைமக்கள் பயன்படுத்தி ஆதரவு கொடுப்பதற்கு ஏற்பஅரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மற்றவர்கள் கணக்கில் பணம் செலுத்த தடை

வங்கி வாடிக்கையாளர்கள், தங்களதுகணக்கில் நேரடியாக பணம் எடுப்பது, செலுத்துஉள்ளிட்ட பணிகள் துவங்கின. ஆனால், ஒருவரது
வங்கி கணக்கில், மற்றவர்கள்பணம் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ள   மத்திய அரசின் செல்லாதநோட்டு அறிவிப்பால், நவ., 9ல், வங்கிகள்இயங்கவில்லை. நேற்று முன்தினம், பழையநோட்டுகளை மாற்றும் பணி துவங்கியது. நேற்றுமுதல், அவரவர் வங்கி கணக்கில்பணம் செலுத்துதல், எடுத்தல் போன்ற பரிவர்த்தனைகள் ஆரம்பித்தன. பணம் செலுத்துவோர், தங்களது வங்கி கணக்கில்எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால், வங்கியில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல்செலுத்துவோர், 'பான்' கார்டு நகல்அல்லது கணக்கு எண்ணை குறிப்பிடவேண்டும்; ஆதார் எண்ணும் கட்டாயம். வங்கி கணக்கு வைத்திருப்போர் மட்டுமேநேரடியாக பணம் செலுத்த முடியும். ஒருவரது கணக்கில் மற்றவர்கள் பணம் செலுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், மிகவும் இயலாதவர்களாக இருந்தால்பணம் செலுத்தும் சீட்டில், அவர்களின் கையெழுத்தை சோதனை செய்து பணம்பெறப்படுகிறது. வணிக நிறுவனங்களின் கணக்குக்கு, உரிமையாளர் கையெழுத்து மற்றும் நிறுவன முத்திரையுடன்பணம் பெறப்படுகிறது.வங்கி கணக்கிலிருந்து, வங்கிகவுன்டர்கள் மூலம் நேரடியாக பணம்வழங்கும் முறையும் நேற்று துவங்கியது. ஒருநாளைக்கு, 10 ஆயிரம் ரூபாயும், ஒருவாரத்தில், 20 ஆயிரம் ரூபாய் மட்டுமேஎடுக்க முடியும். இக்கட்டுப்பாட்டால், மற்றவர்களின் வங்கி கணக்கில், வெளியூர்களிலிருந்து, சி.பி.எஸ்., என்றஒருங்கிணைந்த, ஆன்லைன் முறையில் பணம்செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பணம் மாற்ற தடையில்லை : ஒருவங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு, ஆன்லைன்முறையில் பணம் மாற்ற எந்தகட்டுப்பாடும் இல்லை. தபால் நிலையங்களில்பணம் எடுக்கவும், பெறவும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் செயல்படும் அதிகாரப்பூர்வ பணம் மாற்றும் சேவைமையங்கள், டாடா நிறுவனத்தின், 'இன்டிகேஷ், இந்தியா ஒன்' போன்ற, அங்கீகாரம்பெற்ற தனியார், ஏ.டி.எம்., மையங்களுக்கு, வங்கிகள் பணம் வழங்கும் முறைக்குகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.