யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/11/17

திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஆண்டுக்குப்பின் ஆசிரியர் குறைதீர் கூட்டம் ,

கணினி ஆசிரியர்களின் பணிக்காண கல்வித் தகுதி மற்றும் தேர்வு முறையா அ பதிவு மூப்பு என்பது குறித்து அரசின் பரிசீலணையில் உள்ளது..

திருத்திய ஊதிய விகிதத்தில் ஊதியப் பட்டியல் தயார் செய்வது குறித்து சில புதிய தகவல்கள்.

1.நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 ம்சேர்த்து கணக்கிடவும்*

*2, 01.10.2017 முதல் 5% DA கணக்கிடவும்.*

*3. Cps பிடித்தம் செய்ய அடிப்படை ஊதியம், தனி ஊதியம் (ரூ. 2000) மற்றும்
அகவிலைப்படியை சேர்ந்து  கணக்கில் கொள்ள வேண்டும்.

*4.HRA கணக்கிட,  அவரவர் அடிப்படை ஊதியத்துடன் தனிஊதியம் ரூ. 2000 சேர்ந்து  grade I(b) கலத்தில் உள்ளவாறு கணக்கிடவும்.


*5.CCA கணக்கிட,  அவரவர் அடிப்படை ஊதியத்துடன் தனிஊதியம் ரூ. 2000 சேர்ந்து கலம் 4ல்  உள்ளவாறு  கணக்கிடவும்.

11/11/17

TNTET - கலந்தாய்வுக்கு அழைக்காமல் இழுத்தடிப்பது ஏன்? பட்டதாரி ஆசிரியர்கள் மனவேதனை

ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 27.4.2017 அன்று பட்டதாரி ஆசிரியர் காலிப்பணி இடங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் பள்ளிக்கல்வி துறையில் 595 பின்னடைவு காலிப்பணியிடங்களும்,
286 தற்போதைய காலிப்பணி இடங்களும், தொடக்கக்கல்வி துறையில் 28 பின்னடைவு காலிப்பணி இடங் களும், சமூக பாதுகாப்பு துறையில் 3 இடங்களும், அனைவருக் கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் 202 இடங்களும் என மொத்தம் 1,114 இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டன.இதன்படி, தகுதியானவர்களை அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, தற்காலிக தேர்வு பட்டியல் கடந்த ஜூன் 30-ந்தேதி வெளியானது.
இதில் தொடக்கக்கல்விபட்டதாரி ஆசிரியர்கள், சமூக பாதுகாப்பு துறை பட்டதாரிஆசிரியர்கள், அனைவருக்கு இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வுக்கு அழைத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பள்ளிக்கல்வி பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என்று தற்காலிக தேர்வு பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் மனவருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரவி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகாந்த், கிருஷ்ணகிரிமாவட்டத்தை சேர்ந்த வேடியப்பன், கொடைக்கானலை சேர்ந்த கலைச்செல்வி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சியாமளா ஆகியோர் கூறியதாவது:-சான்றிதழ் சரிபாப்பு முடிந்து, தற்காலிக தேர்வு பட்டியல் வெளியானதும், நாங்கள் ஏற்கனவே பணிபுரிந்து வந்த தனியார் பள்ளிகளில் இருந்து பணியில் இருந்து விலக்கிவிட்டார் கள். இந்த பணியை நம்பி கடந்த 4 மாதங்களாக தவமாய் தவம் இருந்து காத்து கொண்டு இருக்கிறோம். எங்களுடன் தேர்வு செய்யப்பட்டவர்களில் சிலர் பணிக்கு சென்று 2 மாதம் சம்பளத்தையும் வாங்கிவிட்டனர்.பள்ளிக்கல்வி பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட எங்களை மட்டும் ஓர வஞ்சனையாக ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள்.

 இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினால் காத்து இருங்கள் என்று சொல்கிறார்கள். எவ்வளவு நாள்? இப்படி காத்து இருப்பது. மன உளைச்சலின் உச்சத்துக்கே சென்றுவிட்டோம். வீட்டில் எவ்வளவு நாள் சும்மா இருக்கமுடியும்? எங்கள் வேதனையை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வுக்கான அழைப்பை உடனடியாக தெரிவிக்க வேண்டும். ஏன் இப்படி இழுத்தடிக்கிறார்கள்? என்பதை அவர்கள் தெரிவித்தால் நிம்மதியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலர், கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என்றால், ‘தற்கொலை செய்து கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை’ என்ற வார்த்தையை மனவேதனையில் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை இயக்குனரை நேரில் சென்று பார்க்க முயற்சித்த போது அவர் சந்திக்கவில்லை.மேலும், செல்போனில் தொடர்பு கொண்ட போதும் அவர் அழைப்பை எடுக்கவில்லை.

குரூப்-4 வினாத்தாள் குழப்பத்தில் மாணவர்கள்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு ஒரே தேர்வு என அறிவித்துள்ளதால் வினாத்தாளில் மாற்றம் கொண்டு வரப்படுமா' என மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப்- 4 மற்றும் வி.ஏ.ஓ., காலிப் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி தகுதியாக உள்ளது. இதனால் 500 காலிப்பணியிடங்கள் அறிவித்தாலும் லட்சக்கணக்கானோர் தேர்வை எழுதுகின்றனர்.

இந்நிலையில் வி.ஏ.ஓ., மற்றும் குரூப்-4
இரண்டையும் ஒரே தேர்வாக நடத்தப்போவதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. பழைய குரூப்-4 தேர்வில் 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம், 100 வினாக்கள் பொதுஅறிவு பாடம் இடம்பெற்றது.

வி.ஏ.ஓ., தேர்வில் 80 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம், 25 வி.ஏ.ஓ., தொடர்பான வினாக்கள், 95 வினாக்கள் பொதுஅறிவு இடம்பெற்றன.

வினாத்தாள் எப்படி இருக்கும்
இந்நிலையில் தற்போது குரூப்-4, வி.ஏ.ஓ., தேர்வை ஒரே தேர்வாக நடத்த திட்டமிட்டுள்ளதால் வினாத்தாள் முறை எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி மற்றும் மாணவர்கள் கூறுகையில், ''புதிய தேர்வில் வினாத்தாளில் மாற்றம் இருக்குமா அல்லது பழைய நிலையே தொடருமா என மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த ஐயத்தை போக்க டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றனர்.

நடுநிலை பள்ளிகளில் தலைமையாசிரியர் B.Ed ஊக்க ஊதியம் வழங்க இயலாது விளக்கம்.!!



2013 TNTET - ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்க TRB - க்கு உயர்நீதி மன்றம் உத்தரவு!!!

அரசு உயர் நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை
நிரப்ப கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தியது. இத்தேர்வில் 107வது கேள்வியாக வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 

அதற்கு வங்க மொழி, உருது, மராத்தி, சமஸ்கிருதம் என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டு, சரியானதை தேர்வு செய்க என்று கூறப்பட்டது.  இதற்கு வங்கமொழி என பதிலளித்த வீரமணி என்ற விண்ணப்பதாரர், பாட புத்தகத்தில் வங்கமொழி என்றே கூறப்பட்டுள்ளதால், அந்த விடையை எழுதிய தனக்கு ஒரு மதிப்பெண்கள் வழங்கவும், ஒரு ஆசிரியர் பணியிடத்தை தனக்கு நிறுத்தி வைக்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

  இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்டு சமஸ்கிருதத்தில் பாடப்படுகிறது என்று தெரியவருகிறது. எனவே, கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர்தகுதி தேர்வில் சரியா பதிலை எழுதிய  மனுதாரர் வீரமணிக்கு ஒரு மதிப்பெண் வழங்கி, அவருக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணையை ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம்  வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், டீக்காராமன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: வந்தே மாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்ய தனி நீதிபதி ஒரு வக்கீல் குழுவையே நியமித்து தகவல்களைத் திரட்டி அதன் அடிப்படையில் முதலில் வங்க மொழியில்தான் எழுதப்பட்டது என்பதையும் பின்னர் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டது என்றும் முடிவுக்கு வந்துள்ளார்.

எனவே, வங்க மொழி அல்லது சமஸ்கிருதம் என்ற 2 பதில்களும் சரிதான் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. வங்க மொழி என்று எழுதியவர்களுக்கு 1 மதிப்பெண் தருவதைப்போல் சமஸ்கிருதம் என்று பதில் எழுதியவர்களுக்கும் ஒரு மதிப்பெண் தரவேண்டும். எனவே, இந்த விஷயத்தில் தனி நீதிபதி 1 மதிப்பெண் மனுதாரருக்கு தரவேணடும் என்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது.

மேலும் கல்வி நிறுவனங்களிலும் அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் வந்தே மாதரம் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த விஷயத்தையும் அரசிடமே இந்த நீதிமன்றம் விட்டுவிடுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

குரூப்-4 வினாத்தாள் குழப்பத்தில் மாணவர்கள்!!!

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ., 
பணியிடங்களுக்கு ஒரே தேர்வு என அறிவித்துள்ளதால் வினாத்தாளில் மாற்றம் கொண்டு வரப்படுமா' என மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப்- 4 மற்றும் வி.ஏ.ஓ., காலிப் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி தகுதியாக உள்ளது. இதனால் 500 காலிப்பணியிடங்கள் அறிவித்தாலும் லட்சக்கணக்கானோர் தேர்வை எழுதுகின்றனர்.

இந்நிலையில் வி.ஏ.ஓ., மற்றும் குரூப்-4
இரண்டையும் ஒரே தேர்வாக நடத்தப்போவதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. பழைய குரூப்-4 தேர்வில் 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம், 100 வினாக்கள் பொதுஅறிவு பாடம் இடம்பெற்றது.

வி.ஏ.ஓ., தேர்வில் 80 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம், 25 வி.ஏ.ஓ., தொடர்பான வினாக்கள், 95 வினாக்கள் பொதுஅறிவு இடம்பெற்றன.

வினாத்தாள் எப்படி இருக்கும்
இந்நிலையில் தற்போது குரூப்-4, வி.ஏ.ஓ., தேர்வை ஒரே தேர்வாக நடத்த திட்டமிட்டுள்ளதால் வினாத்தாள் முறை எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி மற்றும் மாணவர்கள் கூறுகையில், ''புதிய தேர்வில் வினாத்தாளில் மாற்றம் இருக்குமா அல்லது பழைய நிலையே தொடருமா என மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த ஐயத்தை போக்க டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றனர்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் : சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு!!!

அறநிலையத் துறை தேர்வுக்கான சான்றிதழ்சரிபார்ப்பு பட்டியலை, தமிழ்நாடு
அரசுபணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர் மற்றும் தேர்வுகட்டுப்பாட்டு பொறுப்பு அதிகாரி, விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்து அறநிலையத் துறை செயல்அதிகாரிபதவியில், 29 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு,ஜூன், 10ல் தேர்வு நடந்தது. இதில், 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில், தகுதியானவர்களுக்கு, வரும், 20ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

மோட்டார் வாகன பராமரிப்பு துறையில், ஆட்டோமொபைல் இன்ஜினியர் பதவியில், மூன்று இடங்களுக்கு, வரும், 17ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான விபரம் மற்றும் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.inஎன்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு 3 மடங்கு கேஷ்பேக் சலுகை: ரிலையன்ஸ் அறிவிப்பு

                                            
ரூ.399 முதல் அதற்கு அதிகமாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ரீசார்ஜுக்கும் ரூ.2,599 வரை 
கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ
அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அமேசான் பே, ஆக்சிஸ் பே, ஃப்ரீசார்ஜ், மொபிக்விக், பேடிஎம் மற்றும் போன்பே ஆகிய இ-வாலட்டுகள் மூலமாக மேற்கொள்ளப்படும் ரீசார்ஜுகளுக்கு ரூ.300 கேஷ்பேக் சலுகை உடனடியாக வழங்கப்படும்.

இந்த ஜியோ பிரைம் சலுகை நவம்பர் 10 முதல் 25-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வழங்கப்படும்.

இந்த கேஷ்பேக் சலுகையில் 3 பிரிவுகள் இருக்கின்றன.

1. ரூ.400 (ரூ. 50 x 8) மதிப்பிலான ஜியோ கேஷ்பேக் நவம்பர் 15 முதல் மைஜியோ-வில் கிடைக்கப்பெறும்.

2. மேலே குறிப்பிட்ட இ- வேலட்களில், அதற்கான கேஷ்பேக் உடனடியாக வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும்.

3. இ-காமர்ஸ் வவுச்சர்கள் நவம்பர் 20-ம் தேதி முதல் கிடைக்கப்பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜியோ பிரைம் என்பது ஜியோ வாடிக்கையாளர்கள், ஒரு முறை ஆண்டு உறுப்பினருக்கான தொகை (one- time annual membership) ரூ.99-ஐ செலுத்தி ஜியோ பிரைம் உறுப்பினர் ஆவதாகும்.

பி.இ., மாணவர்கள் தேர்வு எழுத சலுகை

சென்னை: அண்ணா பல்கலை கல்லுாரிகள் மற்றும் இணைப்பு கல்லுாரிகளில்
, பி.இ., - பி.டெக்., படிப்பில் சேரும் மாணவர்கள், ஏழு ஆண்டுகளுக்குள், தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை கல்லுாரிகளில், 2000க்கு மேல் படிப்பில் சேர்ந்தவர்கள், 2018 மற்றும், 2019ல் தேர்வுகள் எழுதலாம்.
கூடுதல் விபரங்களை, http://coe1.annauniv.edu/, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

டி.ஆர்.டி.ஓ-வில் பணி: ஐ.டி.ஐ பட்டதாரிகள் விண்ணப்பங்களுக்கு வரவேற்பு!!

                                                 
இந்த ஆய்வகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு 
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  
பணியிடம்: தமிழ்நாடு
பணியின் தன்மை: அப்ரென்டீஸ் ட்ரெய்னீ
பணியிடங்கள்: 146
கல்வித் தகுதி: ஐ.டி.ஐ.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.30/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
கடைசித் தேதி: 26.11.2017 
மேலும் விவரங்களுக்கு https://rac.gov.in/cgibin/2017/advtcvrdeapprentice/public/pdf/advtcvrdeapprentice.pdf?3c50455ecca8f627d24301550ed51407=1 என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

வேலைவாய்ப்பு: பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்!

                                          
                            
பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூகவியல், 
பயோடெக்னாலஜி உட்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள University Research Fellowship பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 24

கல்வித் தகுதி: எம்எஸ்சி, எம்.இ. / எம்.டெக்

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மற்றும் நேர்காணல்

கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.200/- மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசித் தேதி: 20.11.2017.

மேலும் விவரங்களுக்கு http://www.periyaruniversity.ac.in/wp-content/uploads/2017/11/URFAdvt20.11.2017.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் -தேசிய அடைவு ஆய்வு 2017 சார்பாக வழிகாட்டுதல் சார்ந்து முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!!!

கனமழை எச்சரிக்கை!!!

EMIS - STUDENT ID CARD - ONLINE PHOTO UPDATE - STEP BY STEP PROCEDURE

FLASH NEWS : 23.08.2010 பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் TET தேர்ச்சி பெறுதல் குறித்தும் , தகுதிகாண் பருவம் குறித்தும் இயக்குநர் தெளிவுரை!!!



உயர்கல்வி மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு நடத்த புதிய அமைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் உயர்கல்வி மாணவர் சேர்க்கை
நுழைவுத் தேர்வு நடத்த புதிய அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் உருவாக்க ரூ 25 கோடி நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தேசியத் தேர்வு முகமை என்று நிறுவனத்தை தொடங்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை தேசிய முகமை நடத்தும்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் வெற்றியை நோக்கி!!!

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் வெற்றியை நோக்கி*


*மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கவனத்திற்கு. ..*

*இன்று நடைபெற்ற 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஊதியமுரண்பாடுகுறித்த
வழக்கில் 7th pay fixation option form AEEO அலுவலகத்தில் கொடுக்க நிர்பந்தம் செய்ய கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.இதை தாண்டி யாரேனும் வற்புறுத்தினால்   அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  தொடுக்கலாம் என நீதியரசர் உத்தரவிட்டார்.இதுவரை நமது அலுவலகத்தில் கொடுக்காதவர்கள் பற்றி பிரச்சனை ஏதுவும் இல்லை.*


*விருப்ப படிவம் கொடுத்த ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் உள்ள வழக்குபடி  option form தற்போது கொடுக்கவேண்டியதில்லை என்று விபரங்கள் கூறி திரும்ப பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*


*திரும்ப பெறுவதற்கான படிவம் நமது சார்பில் ஞாயிறு 12.11.2017 அன்று மாவட்ட,ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் வழங்கப்படும்*


 *வழக்கு நாம் எதிர்பார்த்ததை விட மிக மிக நல்ல வழியில் சென்று கொண்டிருக்கிறது.*

*வழக்கு குறித்து முழுமையாக தற்போது பதிவு செய்ய இயலவில்லை. வழக்கில்,இரண்டு முறையும்  விசாரணையில் நடந்தது என்ன??*

*வழக்கறிஞர் வழக்கில் எடுத்து வைக்கப்பட்ட வாதம் என்ன ? சமர்ப்பிக்கப்பட்ட முழுமையான ஆவணங்கள் என்ன ?? இறுதியில் நீதியரசர் வழங்கிய ஆணை குறித்தும் விரிவாக ஞாயிறு கூட்டத்தில் விளக்க உள்ளோம்...*

*அதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை (12.11.2017) திருச்சியில் மாநில போராட்டக்குழு தலைமையில் மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...*

*கண்டிப்பாக அனைத்து மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைத்து சந்தேகங்களை தீர்த்து கொள்ள மாநில அமைப்பு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. ..*

*விரைவில் தமிழக ஆசிரியர்கள் இயக்க வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்*


*ஜே.ராபர்ட்*
*மாநில தலைமை 2009&TET போராட்டக்குழு*

10/11/17

இணையதளத்தில் பாலிடெக்னிக் பாடங்களை வீடியோ வடிவில் பார்க்கலாம் : உயர்கல்வித்துறை அமைச்சர் 83 பதிவுகளை வெளியிட்டார்

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் இணையதளம் வழியாக பாலிடெக்னிக் மாணவர்களின் கணக்கு, இயற்பியல்,வேதியியல் உள்ளிட்ட பாடங்களை 720 பகுதிகளாக பிரித்து வீடியோவாக எடுத்து யூடியுப்பில் பதிவேற்றம் செய்ய திட்டமிடப்பட்டது.

அதில் முதல்கட்டமாக 83 வீடியோக்கள் யூடியுப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை மாணவர்கள் பார்க்கும் வசதியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைகழகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் உயரதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர். கே.பி.அன்பழகன் இந்த வீடியோக்களை மாணவர்கள் பார்க்கும் வசதியை தொடங்கி வைத்தார். DOTE, பாலிடெக்னிக் என்று யூடியுப்பில் பதிவு செய்து இந்த வீடியோக்களை மாணவர்கள் பார்க்கலாம்.நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:அண்ணா பல்கலைகழகத்தில் துணைவேந்தரை நியமிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

 புதிய துணைவேந்தர் தேர்வுக்குழு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.1,670 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக அந்த தொகைகல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதற்கான ஆவணங்கள் சரிபார்த்து இனிமேல் தான் வழங்கப்படும். ஏற்கனவேவிண்ணப்பித்த எல்லா மாணவர்களுக்கும் உதவித்தொகைவழங்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அரசு நிகழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். தேனியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கலாம். அதுதொடர்பாக அரசுத்தரப்பில் எந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

 நியாயமான முறையில் எங்களுக்கு வந்து சேர வேண்டியது வந்து சேரும். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிக எண்ணிக்கையில் பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுடன்  உள்ளனர். ஆகவே தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து, சரியான முறையில் தீர்ப்பு வழங்கும்பட்சத்தில் சின்னம் எங்களுக்கு வந்து சேரும் என்று  நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

போட்டி தேர்வு பயிற்சி வகுப்புக்கு 73 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்

சாரண-சாரணியர் இயக்கத்தில் மாவட்ட அளவில் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கான தலைமை பண்புக்கான பயிற்சி,சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-சாரணர் இயக்கம் தன்னலம் கருதாது சேவை செய்து வருகிறது. பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்டு, உலகளவில் 216 நாடுகளில் 4 கோடி பேர் இதில் உள்ளனர். தமிழகத்தில் சாரண-சாரணியர் இயக்கம் பயிற்சி அளிக்க ஆண்டுதோறும் ரூ.12 லட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரிடம் இதுதொடர்பாக பேசி அவர்களுக்கு வைப்பு நிதியாக ரூ.2 கோடி வழங்கப்பட்டு, அதன் மூலம் வரும் ஆண்டுக்கு வட்டித்தொகை ரூ.20 லட்சத்தை கூடுதலாக அவர்கள் பெறுவதற்கான ஆணை பெற்று தந்து இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சில மாணவ-மாணவிகளின் புத்தகங்கள் மழையால் நனைந்து போய் இருக்கின்றன. அவர்களுக்கு மாற்று புத்தகம் வழங்கப்படுமா?

பதில்:- எங்கெங்கு புத்தகம் சேதம் அடைந்து இருக்கிறது என்று சொன்னால், அவர்களுக்கு மாற்று புத்தகங்கள் வழங்கப்படும்.

கேள்வி:- மழைக்காலங்களில் விடுமுறை விடுவதற்கு கல்வித்துறை வசம் இருந்தது. இப்போது அது மாவட்ட கலெக்டர் வசம் சென்றுள்ளது. அதனால் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு வருகிறதே?

பதில்:- இதுதொடர்பாக முதல்-அமைச்சரோடு கலந்து பேசி விரைவில் அறிவிப்போம்.

கேள்வி:- தமிழகம் முழுவதும் அரசு பள்ளிக்கட்டிடங்கள் அதிகளவில் சேதம் அடைந்த நிலையில் இருப்பதாக புகார்கள் வருகிறதே?

பதில்:- அப்படி இல்லை. பயன்படுத்த முடியாத அளவில்சில கட்டிடங்கள் இருக்கிறது. அவை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டி உள்ளது. அதை அப்புறப்படுத்த மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், பொறியாளர் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையில் சேதம் அடைந்த கட்டிடங்கள் என்று சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை.

கேள்வி:- போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புக்கு எவ்வளவு பேர் விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள்?

பதில்:- இதுவரை 73 ஆயிரம் மாணவர்கள் ஆன்-லைனில் விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள். குறிப்பிட்ட நாட்களிலே அது தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு...உரிமையும்... கடமையும்... பள்ளிகளில் விழிப்புணர்வு போட்டி

உடுமலை : ஜனநாயக தேர்தல் நடைமுறை குறித்து, இளையதலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தேர்தல் ஆணையம் சார்பில், பள்ளிகளில், வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன.
தேர்தல் கமிஷன் சார்பில், முழுமையான வாக்காளர் சேர்க்கை, தேர்தல்களில், நுாறு சதவீத ஒட்டுப்பதிவு உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக, விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இருப்பினும், 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளராக சேரவும், சேர்ந்த பிறகு, தேர்தலில் ஓட்டளிக்கவும் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. இதற்காக, கல்லுாரிகளில்,தேர்தல் ஆணையம் சார்பில், மாணவர்கள் பங்களிப்புடன், பேரணி, ஊர்வலம் ஆகியவை நடத்தப்படுகின்றன.
தேர்தல் கமிஷன் உத்தரவுஇது குறித்த விழிப்புணர்வை, பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு வழங்குவது, மாற்றத்தை தரும் என கருதப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில், வாக்காளர்களாக மாற உள்ள மாணவர்கள், நமது நாட்டின் தேர்தல் நடைமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம் என்பதால், தேர்தல் ஆணையம் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்த, உத்தரவிட்டது.அதன்படி, 9 முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரையுள்ள மாணவர்களுக்கு, தேர்தல் நடைமுறைகள் குறித்த, வினாடி-வினா போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தன.தேர்தல் ஆணையத்தின் முறைப்படுத்தப்பட்ட வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல்பங்கேற்பு விழிப்புணர்வு திட்டத்தின் கீழ், இப்போட்டிகள் நடத்தப்பட்டன.மாணவர்கள் குழுவினரிடையே ஓட்டுச்சாவடி நடைமுறைகள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள், இந்திய தேர்தல் ஆணையம், தேசிய வாக்காளர் தினம் உட்பட தேர்தல் நடைமுறைகள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.மாணவர்கள் ஆர்வம்ஆசிரியர்கள் கூறுகையில், 'வினாடி-வினா போட் டியில், முழுமையாக தேர்தல் நடைமுறைகள், விதிகள் குறித்த கேள்விகளே தயார் செய்யப்பட்டிருந்தன. மாணவர்கள், கேள்விகளுக்கு ஆர்வத்துடன் பதில் அளித்து, வாக்காளர்களாக இணைந்து, தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்வது ஜனநாயக கடமை என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதை வெளிப்படுத்தினர்', என்றனர்.

அதிகாரிகள் பார்வை

ஒவ்வொரு பள்ளியில் இருந்தும், இரண்டு பேர் கொண்ட குழுதேர்வு செய்யப்பட்டு, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். திருப்பூர் மாவட்ட அளவிலான சுற்றில்வெற்றி பெறுபவர்கள், மாநில அளவிலான சுற்றுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டிகளை, திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் திருஞானசம்பந்தன், கோட்டாட்சியர் அசோகன், தாசில்தார்தங்கவேல் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் பார்வையிட்டனர்.

வாக்காளர் சேர்ப்பு பணி நவ., 30 வரை நீட்டிப்பு

தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு ஆண்டும், அக்., மாதம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும்.
பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்படும்; சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல், ஜன., 5ல் வெளியிடப்படும். அதன்படி, அக்., 1 - 30 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, 4.60 லட்சம்; நீக்கக் கோரி, 1.58 லட்சம்; முகவரி மாற்றக் கோரி, ஒரு லட்சம்; திருத்தம் செய்யக் கோரி, 51ஆயிரத்து, 84 என, மொத்தம், 7.69 லட்சம் விண்ணப்பங்கள்பெறப்பட்டு உள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை, நவ., 30 வரை நீட்டித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விரும்புவோர், கோட்டாட்சியர் மற்றும் தாலுகா அலுவலகங்களில், விண்ணப்பம் அளிக்கலாம். தேர்தல் கமிஷன் இணையதளத்தில், 'ஆன் - லைன்' வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

அக்., மாதத்தில் நடந்த, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், அதிகபட்சமாக, முதல்வரின் மாவட்டமான, சேலத்தில், 49 ஆயிரத்து, 323 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 42 ஆயிரத்து, 198 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. மிகக் குறைவாக, அரியலுார் மாவட்டத்தில், 5,303 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.

ஒரே ஒரு போன் போட்டு ₹ 50 ஆயிரம் சுருட்டல்!!!

2018 பொதுவிடுமுறை நாட்கள் விபரம்!!!

2018-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து உள்ளது
விடுமுறை நாட்கள்:*👇
*1. ஆங்கில புத்தாண்டு -* *01.01.2018- திங்கள்*
*2. பொங்கல் -* *14.01.2018- ஞாயிறு*
*3. திருவள்ளுவர் தினம் - 15.01.2018 - திங்கள்*
*4. உழவர் திருநாள் - 16.01.2018- செவ்வாய்*
*5. குடியரசு தினம் - 26.01.2018 - வெள்ளி*
*6. தெலுங்கு வருடப் பிறப்பு -18.03.2018-ஞாயிறு*
*7. மகாவீர் ஜெயந்தி - 29.03.2018 - வியாழன்*
*8 புனித வெள்ளி - 30.03.2018- வெள்ளி*
*9. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு*
*வங்கிகள் ) 01.04.2018 - ஞாயிறு*
*10. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - 14.04.2018- சனி*

*11. மே தினம் - 01.05.2018 - செவ்வாய்*
*12. ரம்ஜான் - 15.06.2018- வெள்ளி*
*13. சுதந்திர தினம் - 15.08.2018- புதன்*
*14. பக்ரீத் -22.08.2018- புதன்*
*15. கிருஷ்ண ஜெயந்தி -02.09.2018 ஞாயிறு*
*16. விநாயகர் சதுர்த்தி - 13.09.2018 - வியாழன்*
*17.மொகரம் 21.09.2018- வெள்ளி*
*18. காந்தி ஜெயந்தி - 02.10.2018 - செவ்வாய்*
*19. ஆயுத பூஜை - 18.10.2018- வியாழன்*
*20. விஜயதசமி - 19.10.2018- வெள்ளி*
*21. தீபாவளி- 6.11.2018- செவ்வாய்*
*22. மீலாதுன் நபி -21.11.2018- புதன்கிழமை*
*23. கிறிஸ்துமஸ் -25.12.2018- செவ்வாய்*

தேர்தல் முடிவு: ஜோதிடர்கள் கருத்து வெளியிட தடை!!!

                                         
தேர்தல் முடிவுகள் தொடர்பாக, ஜோதிடர்களின் கருத்துக்களை 
வெளியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

சட்டசபை தேர்தல்:

ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல், இன்று(நவ.,9) நடக்கிறது. குஜராத் மாநிலத்தில், சட்டசபை தேர்தல், டிசம்பரில் நடக்கிறது. இரு மாநிலங்களிலும் ஓட்டு எண்ணிக்கை, டிச., 18ல் நடக்கிறது. குஜராத் மாநிலத்தில் ஓட்டுப்பதிவு முடியும் வரை, கருத்து கணிப்புகள் வெளியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

தடை:

இந்நிலையில், தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் முடிவுகள் தொடர்பாக, ஜோதிடர்களின் கருத்தை வெளியிட கூடாது. இதை, பத்திரிகைகளும், 'டிவி' சேனல்களும், கடைபிடித்து, சுதந்திரமாக தேர்தல் நடக்க, ஒத்துழைக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு: டி.ஆர்.டி.ஓ-வில் பணி!

                                                   
போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் 
(சி.வி.ஆர்.டி.இ), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டி.ஆர்.டி.ஓ) இயங்கும் ஓர் ஆய்வகமாகும். இந்த ஆய்வகத்தில் காலியாக உள்ள அப்ரென்டீஸ் ட்ரெய்னீ பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: தமிழ்நாடு

பணியின் தன்மை: அப்ரென்டீஸ் ட்ரெய்னீ

பணியிடங்கள்: 146

கல்வித் தகுதி: ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.30/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

கடைசித் தேதி: 26.11.2017

மேலும் விவரங்களுக்கு https://rac.gov.in/cgibin/2017/advtcvrdeapprentice/public/pdf/advtcvrdeapprentice.pdf?3c50455ecca8f627d24301550ed51407=1 என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

சம்பள பட்டியல் சாப்ட்வேரில் ARREAR தயாரிப்பதற்கான OPTION வெளியிடப்பட்டு உள்ளது.நவம்பர் மாத சம்பள பட்டியல் உள்ளீடு கொடுத்து அக்டோபர் மாத ARREAR BILL தயார் செய்து கொள்ளலாம்!!!

                                          

நடைமுறைபடுத்த முடியவில்லையெனில் மக்கள் நலத்திட்டம் எதற்கு-உச்சநீதிமன்றம் கேள்வி

NTSE EXAM ON 18.11.2017 - REVISED HALL TICKET DOWNLOAD INSTRUCTIONS-REG

                                              

கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அனேக 
இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.மேலும், தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை முதல் 12 ம் தேதி வரை தமிழகத்திலும், 13ம் தேதி தென் கடலோர ஆந்திராவிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

வக்கீல்களின் பள்ளி சான்றிதழ்களை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு!!

வக்கீல்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை சரிபார்க்க சென்னை ஐகோர்ட் 
உத்தரவிட்டுள்ளது.

வக்கீல்கள் கட்டபஞ்சாயத்து செய்வது தொடர்பான புகார் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: அனைத்து வக்கீல்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அடிப்படை வசதி இல்லமல் இயங்கும் லெட்டர் பேட் சட்ட கல்லூரிகள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளஸ் 2 படிக்காமல், திறந்த நிலை பல்கலை.,யில் படித்தவர்கள் லெட்டர் பேடு கல்லூரிகளில் பணம் கொடுத்து சட்ட பட்டத்தை விலைக்கு வாங்குகின்றனர். போலி வக்கீல்களை நீக்க புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்த பிறகே பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

காற்று மாசு: உ.பி.யில் பள்ளிகளுக்கு விடுமுறை!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காற்று மாசுபாடு காரணமாக 
நாளை (நவம்பர் 10) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு நகரங்களிலும் காற்றின் தரக் குறியீடு அபாயகரமாக மாறியுள்ளது. இது குறித்துப் பேசிய அதிகாரிகள், நொய்டாவில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். காற்றின் தரக் குறியீடு மொரதாபாத்தில் 439, நொய்டாவில் 469, லக்னோவில் 430, ஆக்ராவில் 394, காஸியாபாத்தில் 372 என்ற அளவில் அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஆஸ்துமா, இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலை நடைப் பயிற்சியைத் தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியைப் போல நொய்டாவிலும் நாளை (நவம்பர் 10) எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் காற்று மாசு காரணமாக முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாததால் கடந்த 24 மணி நேரத்தில், உத்தரப் பிரதேசத்தில் 17 பேர் சாலை விபத்துகளில் பலியாகியுள்ளனர். நேற்று (நவம்பர் 8) ஆக்ரா – நொய்டா யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் ஒரே இடத்தில், 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளாயின.

டெல்லியில் கடந்த சில தினங்களாகப் பல்வேறு பகுதிகளில் உள்ள காற்று மாசு கண்காணிப்பு மையங்களில் காற்று தரக் குறியீடு கடுமையாக அதிகரித்துள்ளது (448). காற்று மாசுபாடு அளவு மிக மோசமான நிலையை எட்டிவிட்டதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்திய மருத்துவக் கவுன்சில் டெல்லியில் சுகாதார அவசர நிலையைப் பிறப்பிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியது. இதனால், நவம்பர் 12 வரை வரை டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

டெல்லி மட்டுமின்றி பஞ்சாப், ஹரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தான் பகுதிகளில் 25 மீட்டர் தொலைவில் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் 11ஆம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சாரணர் இயக்க நடவடிக்கைகளுக்கு ரூ.2 கோடி வங்கியில் டெபாசிட் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை : சாரணர் இயக்கத்துக்கு நிர்நதர வைப்புத் தொகையாக ரூ.2 கோடி நிதி
ஒதுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை மற்றும் சாரண, சாரணியர் இயக்கம் ஆகியவை இணைந்து, ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி முகாம் தொடக்க விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடந்தது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ், பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன், தொடக்க கல்வித்துறை இயக்குநர் கார்மேகம் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழகத்தில் சாரணர் அமைப்பு நல்ல முறையில் இயங்கி வருகிறது.

அதற்காக ஆண்டுதோறும் ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி போதாது என்று கோரிக்கை ரூ.2 கோடியில் வைப்புத் தொகை வழங்கி அதிலிருந்து கிடைக்கும் வட்டியையும் சாரணர் இயக்கத்துக்கு பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும். சாரணர் இயக்கத்துக்காக திருவல்லிக்கேணியில் ஒரு இடம் ஒப்பந்த அடிப்படையில் இருந்தது. அந்த ஒப்பந்தம் 1996ம் ஆண்டுக்கு பிறகு புதுப்பிக்கவில்லை. அந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பித்து சாரணர் இயக்கத்துக்கு திரும்பவும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஆலந்தூரில் இந்த இயக்கத்துக்காக 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அதில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அந்த இடம் தற்போது போலீசின் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை மீட்டு மீண்டும் சாரணர் இயக்கத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர,போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்காக இதுவரை 73 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். விரைவில் 412 மையங்களில் பயிற்சி தொடங்கும். பேரிடர் காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவிக்கும் வகையில் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மழையின் போது மாணவ மாணவியரின் புத்தகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஆன்லைனில் பொறியியல் கலந்தாய்வு!

                                        
2018-19 ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு
ஆன்லைனில் நடத்தப்படும் என்று தமிழக அரசு இன்று (நவம்பர் 9) அறிவித்துள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் என 500 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கான சுமார் 2 .77லட்சம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

அனைத்துக் கல்லூரிகளுக்கும் மொத்தமாக மாணவர் சேர்க்கை நடத்துவதால் அதிக பொருட்செலவு, மனிதவளம் தேவைப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது .இதுதவிர மாணவர்கள் பெற்றோர்கள் அலைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற எம்.இ, எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ கலந்தாய்வு ஆன்லைன் முறையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றும் பொறியியல் சேர்க்கை செயலாளராக இருந்த இந்துமதி மாற்றப்பட்டு ரைமண்ட் உதிரியராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் முறைக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாரப் பூர்வ அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இதை உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பால் வெளியிட்டுள்ளார்.

பார் கவுன்சில் தேர்வு :1,025 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்!!!

பார் கவுன்சில் தேர்வு :1,025 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்!
அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் 
வழக்கறிஞர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,025 தமிழக வழக்கறிஞர்களை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நேற்று (நவம்பர் 8) இடைநீக்கம் செய்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜ்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வழக்கறிஞர்களாகப் பதிவு செய்பவர்கள் கண்டிப்பாக அகில இந்திய அளவில் நடைபெறும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2010ஆம் ஆண்டு அகில இந்திய பார் கவுன்சில் விதி 9 முதல் 11 வரை மற்றும் பகுதி 6, பிரிவு 6ன் கீழ் விதிகள் உருவாக்கப்பட்டன. அதன் அடிப்படையில் இதுவரை 10 தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. புதிதாக பதிவு செய்யும் வழக்கறிஞர்கள், 2 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2015 ஜூலை 3ஆம் தேதி அகில இந்திய பார் கவுன்சில் தேர்வில் குறிப்பிட்ட காலத்துக்குள் வெற்றி பெறாதவர்களை உடனடியாக பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் தகுதி தேர்வு தேர்ச்சி குறித்து ஆய்வு செய்தது. ஆனால், 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்த 1,025 பேர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.எனவே இவர்கள் அனைவரும் வழக்கறிஞர்களாக தொழில் செய்யக்கூடாது என இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை மீறி அவர்கள் நீதிமன்றங்களிலோ அல்லது தீர்ப்பாயங்களிலோ வழக்கறிஞர்களாக ஆஜராகினால் எவ்வித முன்னறிவிப்பின்றி நிரந்தரமாக அவர்களது வழக்கறிஞர் பதிவு நீக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 30% வழக்கறிஞர்கள் போலியான சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும். போலி வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இந்திய பார் கவுன்சில் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அனைத்து பார் கவுன்சில்களும் வழக்கறிஞர்களின் சான்றிதழ்களை வரும் டிசம்பர் மாதத்துக்குள் சரிபார்க்க வேண்டும். அதன்பிறகு தான் வாக்காளர் பட்டியல் தயார் செய்து பார் கவுன்சிலுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 50,000 வழக்கறிஞர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு தங்கள் சான்றிதழ்களை அனுப்பினர். சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக 2 மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழுவை அகில இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

9/11/17

எதிர்காலம் கேள்விக்குறி....! கம்ப்யூட்டர் பாடப்பிரிவு தொடங்கிய பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் அரசு மெத்தனம்

அரசு பள்ளி மாணவிகளுக்கு 10 மணி நேர கராத்தே பயிற்சி

அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் பத்துமணி நேரம் கராத்தே பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவிகளுக்கு பாலியல், சமூக விரோதிகளின் தொந்தரவுகள் அதிகரித்துள்ளன.
மாநில குற்றவியல் ஆவண காப்பகத்தின் பதிவேடுகளின் மூலம் பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில், அரசு பள்ளி மாணவிகளில் 18 சதவீதம் பேர், பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பள்ளி மாணவிகளின் தைரியம், மனோதிடத்தை அதிகரிக்கவும் எதிரிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள புதிய அணுகுமுறைகளை கற்றுக்கொடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில் அளிக்கப்பட்டு வந்த கராத்தே பயிற்சியை, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து கற்றுத்தர முடிவு செய்யப்பட்டது.வாரத்திற்கு ஒன்றரை மணி நேரம் என இரு வகுப்புகளும், மாதத்திற்கு தலா 10 மணி நேர பயிற்சிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி கூறியதாவது:அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் வட்டாரத்திற்கு அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 250 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு திறன்மிக்கபயிற்சியாளர்களை வைத்து கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது வளரிளம் மாணவிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை அளிக்கும், என்றார்.

பாழடைந்த பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுப்பு பணி தீவிரம்!!!

கோவை, நவ.8: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
இதையொட்டி பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், மாநில எஸ்எஸ்ஏ உயரதிகாரிகள் அனைத்து மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர். அதில், மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளில் சேதம், பாழடைந்த மற்றும் மழைக்கு தாக்குபிடிக்காமல் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு செய்ய வேண்டும். அந்த கட்டிடங்களை போட்டோ எடுத்தும் அனுப்ப வேண்டும், என கூறப்பட்டது.

கோவை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் உத்தரவின்பேரில் கோவை, திருப்பூர் என 22 ஒன்றியங்களில் வட்டார வளமைய அதிகாரிகள் பாழடைந்த கட்டிடங்களை கணக்கெடுப்பு செய்தும், போட்டோ எடுத்து அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டது.

இத்தகவல் தொடக்க, மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டு, பள்ளி தலைைம ஆசிரியர்கள் மூலம் பாழடைந்த கட்டிடங்கள், அதன் போட்டோ எடுத்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பாழடைந்த பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. பாழடைந்த கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும் என எஸ்எஸ்ஏ அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஆதாருடன் இணைக்காவிட்டல் மொபைல் சேவை துண்டிக்கப்படாது; தொலைத்தொடர்புத் துறை அதிரடி!!!

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் சேவை
துண்டிக்கப்படாது என தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதையடுத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்களது மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது.

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மம்தா உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.


இந்நிலையில் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டல் சேவை துண்டிக்கப்படாது என தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறியதாவது:-

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மொபைல் சேவையை துண்டிப்பது அரசின் நோக்கம் அல்ல என தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

89 பேருக்கு பணிநியம ஆணை!!

                                                      

ட்விட்டர் தந்த எக்ஸ்டிரா மைலேஜ்!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு 
கண்டறியப்பட்ட ட்விட்டர் சமூக வலைதளங்களில் மிக முக்கியமான ஒன்றாகத் திகழ்ந்துவருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு 100 மில்லியன் பயனர்களை அது எட்டியது. மற்ற சமூக வலைதளங்களைப் போல் இல்லாமல் பல்வேறு பிரபலங்களும் இந்த ட்விட்டர் வசதியைப் பயன்படுத்திவருவது இதன் சிறப்பம்சம்.

உதாரணமாக, கடந்த அமெரிக்க தேர்தலின்போது ட்விட்டர் வலைதளத்தில்தான் பல்வேறு கருத்து மோதல்கள் நடைபெற்றன. அதேபோல், அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது கருத்துக்களை டிவிட்டர் பக்கத்தில் அதிகமாகப் பதிவிடுவது வழக்கமாகிவிட்டது.

இந்த அப்ளிகேஷனைப் பொறுத்தவரை 140 எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற ஒரு கட்டுப்பாட்டினை ட்விட்டர் நிறுவனம் வகுத்திருந்தது. அதனால் பல்வேறு தகவல்கள் இதில் பதிவிட முடியவில்லை என்றும் வார்த்தைகளின் அளவினை அதிகரிக்க வேண்டும் என்றும் பல்வேறு பயனர்கள் கருத்து தெரிவித்தனர். அதற்கு செவிசாய்த்துள்ள டிவிட்டர் நிறுவனம் 140 எழுத்துக்களை 280ஆக உயர்த்தியுள்ளது. இது குறித்து டிவிட்டர் நிறுவனத்தின் அதிகாரி அலிஷா ரோஷன் தனது வலைப்பூவில் (Blog) பதிவிட்டுள்ளார்.

ஆனால் இன்னும் ஜப்பான், கொரியா, சைனா போன்ற மொழிகளைக் கொண்டு 140 எழுத்துக்கள் மட்டுமே பதிவிட முடியும் என்றும் அதற்கான புதிய அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் தகவல் தெரிவித்திருந்தார்.

வேலைவாய்ப்பு: தேசிய திட்ட அமலாக்கத்துறையில் பணி!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும்
தேசிய திட்ட அமலாக்கத்துறையில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1,270

பணியின் தன்மை: உதவி பேராசிரியர்

சம்பளம்: ரூ.70,000/-

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.12.2017 முதல் 15.12.2017

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-

கடைசித் தேதி: 19.11.2017

மேலும் விவரங்களுக்கு http://www.npiu.nic.in/PDF/News/Advt.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

புதிய அப்டேட், பழைய ஆப்ஷன்!

பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்திவரும்
நிலையில், போனில் வாய்ஸ் கமான்ட் (வாய்மொழி உத்தரவு) மூலம் செயல்படும் கூகுள் அசிஸ்டன்ட் வசதியைக் கூகுள் நிறுவனம் வழங்கியிருந்தது. முதலில் இது சிறிய தேடல்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இதன் மூலம் பல்வேறு செயல்களைச் செய்யும் வகையில் கூகுள் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டது.

புதிதாக கூகுள் நிறுவனம் வெளியிட்ட அப்டேட்டில் நாம் கேட்கும் பாடல்களின் முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளும் வசதி உள்ளது. 2014ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஷாசம் என்ற அப்ளிகேஷன் மூலம் இந்த வசதியை ஏற்கனவே அறிமுகம் செய்தது. அதேபோல் சோனி நிறுவனத்தின் அனைத்து மாடல்களிலும் டிராக் ஐடி என்ற அப்ளிகேஷன் இந்த வசதிக்காக வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு புதிய வசதிகளை வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம், இந்த வசதியை மிகவும் தாமதமாக வெளியிட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்த பாடலின் சிறு பகுதியை பிளே செய்யும்பொழுது அதனை ஸ்மார்ட் போன் அருகினில் கொண்டு சென்றால் போதுமானது. அந்தப் பாடல் பெயர், அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் முதலான விவரங்களை எளிதில் கண்டறிந்து பயனர்களுக்கு வழங்கும்.

பொறியாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஆப்பிள்!

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் பொறியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களாக 
இந்தியர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், சர்வதேச அளவில் மிக முக்கிய நிறுவனங்கள் சில இந்தியக் கல்லூரிகளுக்கு வந்து நேரடியாகப் பணிகளுக்கு இதுவரையில் ஆட்களைத் தேர்வு செய்ததில்லை.

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான ஆப்பிள் இந்த நிலையை முதன்முறையாகத் திருத்தியமைக்கவுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி) மாணவர்களை நேர்முகத்தேர்வின் மூலம் ஆப்பிள் நிறுவனம் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹைதராபாத் ஐஐடியின் வேலைவாய்ப்புப் பிரிவின் தலைவர் டி.வி.தேவி பிரசாத் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “எந்தவிதமான பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் ஆட்களைத் தேர்வு செய்யப் போகிறது என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. இது மாணவர்கள் தங்களது திறமைகளை மெய்ப்பிக்க உதவும்.

பணிகளுக்கான தேவையைப் பொறுத்தவரையில் வன்பொருள் பொறியாளர் பணிகளுக்கு இந்த ஆண்டு பல்வேறு நிறுவனங்களில் தேவை அதிகமாக உள்ளது. இன்டகிரேடட் சர்க்யூட், டிசைன் வெரிஃபிகேசன் போன்ற துறைகளில் திறமை உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. அதேபோல மொபைல் கம்யூனிகேஷனில் 2டி - 3டி கிராஃபிக்ஸ் சார்ந்த திறமை பெற்றவர்களுக்கும் சிறந்த வாய்ப்புகள் காத்திருக்கின்றன” என்றார்.

ஹைதராபாத் ஐஐடியில் டிசம்பரில் நடக்கவுள்ள வேலைவாய்ப்புத் தேர்வுக்கு அங்கு பயில்கின்ற பி.டெக்., எம்.டெக். மற்றும் எம்.எஸ்ஸி ஆராய்ச்சி மாணவர்கள் சுமார் 350 பேர் பதிவு செய்துள்ளனர். அதேபோல இந்த நேர்முகத் தேர்வில் ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி கூகுள், மைக்ரோசாஃப்ட், பிலிப்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்கின்றன.

அதிக டெபாசிட்: ஒரு லட்சம் நோட்டீசுகள்!!!

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு அதிகளவில் பணத்தை 
டெபாசிட் செய்த சுமார் ஒரு லட்சம் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களின் வரி ரிட்டன்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரமே வருமான வரித் துறை நோட்டீசுகளை வெளியிடவுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் முதற்கட்டமாக, 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வங்கிகளில் செலுத்திவிட்டு, வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்யாத 70,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. இந்த நோட்டீசுகள் அனைத்தும் வருமான வரிச் சட்டம் பிரிவு 142 (1)-ன் கீழ் அனுப்பப்படவுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதே போல, முன்பு சாதாரணமாக பணத்தை டெபாசிட் செய்து, வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்துவிட்டு, பணமதிப்பழிப்புக்குப் பிறகு அதிகமாகப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட சுமார் 30,000 நிறுவனங்களுக்கும் வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பவுள்ளது. இதற்காகப் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட 20,572 வரி ரிட்டன்களை வருமான வரித்துறை மீளாய்வு செய்யவுள்ளது.

இதுபற்றி வருமான வரித் துறையின் உயரதிகாரி ஒருவர் பேசுகையில், “50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை டெபாசிட் செய்தவர்களை எங்கள் நோட்டீசுக்கு பதிலளிக்க நாங்கள் கோருவோம். அவர்கள் ஒத்துழைக்காவிடில் சட்டரீதியான நடவடிக்கையைத் தொடங்குவோம். 25 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகவும், 50 லட்சம் ரூபாய்க்குக் குறைவாகவும் டெபாசிட் செய்தவர்கள் மீதும் இதே நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பாலிடெக்னிக் : விரிவுரையாளர் தேர்வு முடிவுகள்!!!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான, விரிவுரையாளர் பணியிடங்களுக்கான 
தேர்வு முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய கழகம் இன்று (நவம்பர் 7) வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1, 058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என ஜூலை 28 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஜூலை 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, மொத்தம் 1,70,366 பேர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் 1,33,567பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இந்தத் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்காக 4 % இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நவம்பர் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும். தேர்வு முடிவுகளை http://trb.tn.nic.in/POL2017/07112017/msg.htm. என்னும் இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

முன்னதாக விரிவுரையாளர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூன் 16 ஆம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பில் உள்ள கல்வித் தகுதி குறைகளைச் சுட்டிக்காட்டி, பொறியியல் பட்டதாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் விதிகள் அடிப்படையில் விரிவுரையாளர் தேர்வை நடத்த வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, புதிய அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 28ஆம் தேதி வெளியிட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

காருண்யா பல்கலை: பட்டச் சான்றிதழ்கள் செல்லாது!

                                              
கோவை, காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் 
நிறுவனத்தை மூடவேண்டும் என யுஜிசி நேற்று (நவம்பர் 7) உத்தரவிட்டுள்ளது.

யுஜிசியின் சார்புச் செயலர் குண்ட்லா மஹாஜன், காருண்யா பல்கலை பதிவாளர் எலைஜா பிளசிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “யுஜிசி விதிப்படி, அனைத்து நிகர்நிலை பல்கலைகளிலும் ஆய்வு செய்யப்பட்டு, தொடர் அங்கீகாரமும், அனுமதியும் வழங்கப்படுகின்றன. ஆய்வின் போது, தாண்டன் குழுவினர் பரிந்துரையின்படி, குறைகள் தீர்க்கப்பட்டுவருகின்றன. தீர்வு காணாத, 'பி' பிரிவு நிகர்நிலை பல்கலைகளில் புதிய கல்வி மையங்கள் அமைக்கவோ விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவோ அனுமதி அளிப்பதில்லை என அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, கோவையில் 'பி' பிரிவில் உள்ள காருண்யா நிகர்நிலை பல்கலையின் கீழ் செயல்படும், காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தில் புதிய கல்வி மையங்கள், புதிய துறைகள் மற்றும் புதிய பாடத் திட்டங்கள் தொடங்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்க முடியாது. யுஜிசி, குழு ஆய்வு செய்து அக்குழுவினர் விதிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே அனுமதியளிக்க முடியும்.

அதன் அடிப்படையில்தான், காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், 2004 ஜூன் 23ஆம் தேதி முதல் 2007 ஜூன் 22 வரை நிகர்நிலை பல்கலை அந்தஸ்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர், நிகர்நிலை அந்தஸ்தில் தொடர்ந்து செயல்பட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை. எனவே, காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் மற்றும் அதில் தொடங்கப்பட்ட பாடப் பிரிவுகளை மூட அறிவுறுத்தப்படுகிறது. இந்நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட பட்ட சான்றிதழ்களும், பாடப் பிரிவுகளும் செல்லாது . இந்தக் கடிதம் கிடைத்த ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு உயர் கல்வி பல்கலைக் கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் கோவை காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம் 48ஆவது இடத்தைப் பிடித்தது என்பது நினைவுகூரத்தக்கது.

மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் நேரடியாகச் செயல்படும் யுஜிசி அமைப்புதான் உயர் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் அமைப்பில் மிகப் பெரியது. இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வி ஒருங்கிணைப்பு, மேற்பார்வை, தரக்கட்டுப்பாடு ஆகியவை யுஜிசியின் முதன்மைப் பணிகள். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குதல், அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளைச் செய்யவும் யுஜிசி அமைப்புக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. உயர்கல்வி குறித்த முடிவுகளை எடுப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்குவது போன்ற பணியையும் யுஜிசி மேற்கொண்டுவருகிறது.

8/11/17

தொலைதூர பிஎட் படிப்புக்குநவ. 30 வரை விண்ணப்பிக்கலாம்: திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு :

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி பிஎட் படிப்புகளுக்கு (பொது மற்றும் சிறப்பு கல்வி) விண்ணப்பிப் பதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் எஸ். விஜயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

2018-ம் ஆண்டு பிஎட் (பொது), பிஎட் (சிறப்புகல்வி) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பிஎட் (பொது) படிப்பில் ஆசிரியர் பட்டயப் படிப்புடன் (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) இளங்கலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். தற்போது ஆசிரியராக பணிபுரிந்து வர வேண்டும். பிஎட் (சிறப்பு கல்வி) படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய மறுவாழ்வுக் கவுன்சில் விதிமுறைகளின்படி தகுதி பெற்றிருக்க வேண்டும்.மேற்கண்ட இரு படிப்பு களுக்கும் விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவம், விளக்கக் கையேட்டை பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.tnou.ac.in) பதி விறக்கம் செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்கள் அறிய 044-24306600, 24306617 ஆகிய தொலைபேசிஎண்களில் தொடர்புகொள்ளலாம். இணையதளத்திலும் விவரங்கள் அறியலாம்.

முன் அரையாண்டு, பருவ தேர்வு வேண்டாம்: மாணவர்கள் கோரிக்கை!!!

ஒரு வாரத்திற்கு மேல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததால்,
அரசு பள்ளிகளில் முன் அரையாண்டு தேர்வு மற்றும் இடை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இடைத்தேர்வு : தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு கூடுதலாக தேர்வுகள் வைத்து, தயார்படுத்த, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, மாணவர்களுக்கு, இரண்டாம் இடைத்தேர்வு என்ற, 'மிட் டேம்' தேர்வுக்கு பதில், முன் அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 13ம் தேதி, முன் அரையாண்டு தேர்வு துவங்க உள்ளது. இந்நிலையில், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: காலாண்டு தேர்வுக்கு பின் நடத்தப்படும் பாடங்களுக்கு மட்டும், இரண்டாம் இடைத்தேர்வில் வினாத்தாள் இடம் பெறும். ஆனால், முன் அரையாண்டு தேர்வுக்கு, பள்ளி துவங்கியது முதல், இதுவரை நடத்தப்பட்ட அனைத்து பாடங்களையும், மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை உள்ளது.

விடுமுறை : பருவ மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், பள்ளிகளுக்கு, ஒரு வாரத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதனால், பள்ளிக்கல்வி காலண்டர்படி, இதுவரை நடத்த வேண்டிய பாடங்கள், இன்னும் பாக்கி உள்ளது; அதை, நடத்த கூடுதல் நாட்கள் தேவை. எனவே, பள்ளிகள் திறந்தாலும், பாடம் நடத்த போதிய நாட்கள் இல்லாததால், 13ம் தேதி இடை தேர்வை மாணவர்கள் எழுத முடியாத சூழல் உள்ளது.
அதனால், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும், முன் அரையாண்டு மற்றும் இடைத்தேர்வை, ரத்து செய்ய வேண்டும். இந்த தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்ட நாட்களில், கூடுதல் வகுப்புகள் நடத்தி, பாடங்களை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர். மாணவர்களும், இதே கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.

பள்ளி போட்டிகளில் சினிமா பாடலுக்கு தடை

சென்னை: 'பள்ளி கலையருவி திருவிழாவில், சினிமா பாடல்கள் கூடாது' 
என, பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது.

தமிழக பள்ளிகளில், கலையருவி திருவிழா போட்டிகள் துவங்கியுள்ளன. பள்ளி அளவில், நேற்று போட்டிகள் நடத்தப்பட்டன. வட்டார அளவிலும், பின், மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மதிப்பெண், தரம் எண் வழங்கப்படும்.
இதில், நடனம், ஓவியம், கலை, மாறுவேடம், கையெழுத்து, பழமொழி கூறல், பாடல், இசைக் கருவிகள் இசைத்தல், கதை, கட்டுரை எழுதுதல் என, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 'இவற்றில், மாணவர், மாணவியர் மட்டுமே, கட்டாயம் பங்கேற்க வேண்டும். தனியார் இசைக் குழுவினரை அழைக்க கூடாது. திரைப்பட பாடல்கள், எந்த இடத்திலும் இடம்பெறக் கூடாது' என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வாட்ஸ் ஆப்'பில் வதந்தி : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!!!

ஆசிரியைகள், அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்திகளை பரப்பினால், 'சஸ்பெண்ட்' 
செய்யப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளை விமர்சிக்கும் வகையில், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், கார்ட்டூன்கள், படங்கள், கேலி செய்யும் வீடியோக்கள், மீம்ஸ் படங்கள் என, அதிகளவில் பதிவுகள் வருகின்றன. சம்பந்தப்பட்டோர் மீது, மாவட்ட போலீசார் வழியாக நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. போலீசார் விசாரணையில், சமூக வலைதள பதிவுகளை பரப்புவோரில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், 25 சதவீதம் பேர் உள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, போலீசாரும், கல்வி அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இதில், வரம்பு மீறி, வாட்ஸ் ஆப்பில் தகவல்களை பரப்புவோர், ஒழுக்க கேடாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்ய, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
இதன்படி, புகாருக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள், முதற்கட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் காலங்களில், ஒழுக்க கேடான புகார்கள் வந்தால், விளக்கம் கேட்காமல், சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன், போலீசார் வழியாக, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை உடனே நிறைவேற்றுங்க! : அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி செயலர் அறிவுறுத்தல்!!!

நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்'
என, அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், பாடத்திட்டம், பள்ளிகளின் செயல்பாடு, ஆசிரியர்கள் நியமனம், கற்பித்தல் முறை, தொழில்நுட்பம் என, அனைத்தையும் மேம்படுத்த, புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


வழக்கு பதிவு : இதையொட்டி, பல்வேறு வழக்குகளும், உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 'நீட்' தேர்வு பயிற்சி மையங்கள் அமைத்தல், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல், ஆசிரியர்கள் நியமனம், பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு விதிகள் வகுத்தல், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை தொடர்பாக, பல உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதேபோல, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது, மாணவர்கள், ஆசிரியர்களின் ஆதார் விபரங்களை சேகரிப்பது, திட்ட குழுவின் பரிந்துரைப்படி நிதியை பெற்று, அதன் செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்வது என, பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசும் பிறப்பித்துள்ளது.

தாமதம் கூடாது : இதுகுறித்து, தமிழக அரசின் பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் இயக்குனர்களுக்கு, பல்வேறு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், 'நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற வழக்குகளில், நீதிபதிகள் கேட்கும் தகவல்களை விரைந்து வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை, உரிய விதிகளின்படி பின்பற்ற வேண்டும்; தாமதம் கூடாது' என, குறிப்பிட்டு உள்ளார்.

கண் துடைப்பாகும் கல்வி ஆய்வு கூட்டங்கள் : களத்தில் கலெக்டர்கள்!!!

மதுரை: கல்வித்துறை செயல்பாடு குறித்து அத்துறை அதிகாரிகளின் ஆய்வு 
அறிக்கைகளில் திருப்தி அளிக்காததால், கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி அறிக்கை அளிக்க கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

கற்றல், கற்பித்தல் மேம்பாடு, மாணவர் சேர்க்கை, தேர்ச்சி விகிதம், மாணவர்கள் கற்றல் திறன், பள்ளிகளில் அடிப்படை வசதி குறித்து கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள், 14 வகை நலத்திட்டங்கள், அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டங்களில் நடக்கும் கட்டடப் பணிகள், புதிய வகுப்பறை, பள்ளி சுற்றுச்சுவர் பணிகள் மற்றும் 'நபார்டு' திட்டத்தின் கட்டுமான பணிகள் குறித்தும் மாவட்ட கல்வி அதிகாரிகள் சார்பில் அறிக்கை
தயாரித்து, துறை செயலருக்கு அளிக்கப்படுகின்றன.
மேம்போக்காக உள்ள இந்த அறிக்கைகளில் திருப்தி இல்லாததால், கலெக்டர்கள் மூலம் விரிவான ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி கல்வித்துறை செயல்பாடு குறித்து கலெக்டர்கள் ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும்
விரிவான அறிக்கை அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர்களுக்கு, துறை செயலர் பிரதீப் யாதவ்
கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், 'கல்வித் துறையில் ஆர்வம் உள்ள பல கலெக்டர்கள் பள்ளிகளில் ஆய்வு செய்கின்றனர். இது கற்றல் கற்பித்தல் மேம்படவும், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உந்துதலாகவும் உள்ளது.
இது கல்வித்தரம் அதிகரிக்க வழிவகுக்கும். இதுபோல் அனைத்து கலெக்டர்களும் ஆய்வு செய்து முழு அறிக்கை, கல்வி வளர்ச்சிக்கான சிறப்பு ஆலோசனைகள் வழங்க வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளார்.
கண் துடைப்புக்காக பெயரளவில் ஆய்வுகள் நடத்தி அறிக்கை சமர்ப்பித்த கல்வி அதிகாரிகளுக்கு, செயலரின் இந்த உத்தரவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

NMMS தேர்வு - online பதிவு செய்வது எப்படி?

Step:1
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்
"Click to access online portal" பகுதியை Click செய்யவும்

👉Step:2
திரையில் தோன்றும் WELCOME TO ONLINE PORTAL பக்கத்தில் NMMS EXAM NOV 2017 APPLICATION REGISTRATION - ஐ Click செய்யவும்.

👉Step:3
திரையில் தோன்றும் Log in பகுதியில் தங்கள் பள்ளிக்குரிய user id & password கொடுக்கவும். (குறிப்பு User id ல் DE0 என்பதில் 0 என்பது zero ஐ குறிக்கும்)

👉Step:4
தற்போது மீண்டும் ஒரு முறை user id & password கொடுக்கவும்.

👉Step:5
திரையில் முதலாவதாக தோன்றும் NOMINAL ROLL REGISTRATION ஐ Click செய்து மாணவரின் விவரங்களை பதிவு செய்து SUBMIT கொடுக்கவும். (குறிப்பு : அனைத்து விவரங்களும் விடுபடாமல் நிரப்பப்பட வேண்டும் )

👉Step : 6
மாணவனின் புகைப்படத்தை update செய்யவும். புகைப்படம்
25 Kb க்கு குறைவாக இருக்க வேண்டும். மாணவனின் விவரங்களை Online -ல் பதிவேற்றம் செய்வதற்கு முன்னதாக புகைப்படங்களை Resize செய்து 25 Kb க்கு குறைவாக Save செய்து கொள்வது வேலையை சுலபமாக்கும்.

👉Step:7
புகைப்படம் பதிவேற்றம் செய்தவுடன் திரையில் தோன்றும் download ஐ Click செய்து மாணவனின் online registration application ஐ Pdf வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறாக அனைத்து மாணவர்களின் விவரங்களை பதிவு செய்த பின் இறுதியாக...

👉SCHOOL WISE REPORT ஐ Click செய்து School report (Summary report) ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

👉download செய்யப்பட்ட மாணவனின் online registration application - ஐ 2 நகல்கள் எடுத்து அதில் மாணவர் கையொப்பம், பெற்றோர் கையொப்பம், தலைமை ஆசிரியர் கையொப்பம் ( with Seal) இருப்பதை உறுதி செய்யவும்.

👉தவறுதலாக பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை அழிக்கவோ, புகைப்படம் மற்றும் தவறான விவரங்களை INDIVIDUAL REPORT/EDIT/PHOTO UPDATE/DELETE option ஐ பயன்படுத்திதிருத்திக் கொள்ளவோ முடியும்.

👉அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியவை:👇

👉மாணவனின் online registration application - 2 நகல்கள்
👉SCHOOL WISE REPORT - 2 நகல்கள்
👉தேர்வு கட்டணம் .
👉குறிப்பு :
மேற்கண்ட Online பதிவேற்றத்தை கால தாமதமின்றி உடனே முடிப்பது சிறந்தது. இறுதி நேரத்தில் பதிவு செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்படும். மேலும்
AEE0 அலுவலகத்தில் ஒவ்வொரு பள்ளியின் விண்ணப்பத்தையும் தொகுத்து , block wise report தயார் செய்து அனுப்ப சற்று கால அவகாசம் தேவைப்படுவதால் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இறுதி தேதிக்கு (8.11.17) முன்னதாகவே AEEO அலுவலகத்தில் ஒப்படைப்பது சிறந்தது.

தேவையென்றால் பள்ளி நிர்வாகமே விடுமுறை விடலாம் : முதன்மை கல்வி அதிகாரி!!!

சென்னை : வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 
பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த ஒரு வாரமாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல பகுதிகளில் மழைநீர் வடியத்துவங்கியதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சென்னையில் 9 பள்ளிகள், திருவள்ளூரில் 12 பள்ளிகள், காஞ்சிபுரத்தில் 10 பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் இன்று திறக்கப்படுவதாக மாவட்ட கல்வி நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், மழைப்பொழிவை பொறுத்து வேளச்சேரி பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து பள்ளி நிர்வாகமே முடிவு செய்யலாம். தேவைப்பட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை விடலாம் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவித்துள்ளார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய ஓவியப் போட்டி!!!

                                   
சென்னை, நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில், 
'குளோபல் ஆர்ட் இந்தியா' நிறுவனம் சார்பில், நடந்த, தேசிய ஓவியப் போட்டியில், தமிழகம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 1200 மாணவர்கள் பங்கேற்றனர்.

மாணவர்கள் ரயில் மறியல்!

                                                 
கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் ரயில்வே நிலையத்தில்,
ரயிலில் பயணம்

செய்த மாணவர்கள் மற்றும் பொது மக்கள், ரயில்வே நிலைய அதிகாரிகளுக்கு

எதிராக ரயிலை மறித்து போராட்டம் இன்று (நவம்பர்,7) காலை போராட்டம் செய்தனர்.

56873 மயிலாடுதுறை பயணிகள் ரயில், விழுப்புரத்திலிருந்து காலை 5.30 மணிக்குப் புறப்பட்டு, சிதம்பரத்துக்கு 7.50 மணிக்கு தினந்தோறும் வந்துசேரும். இந்த

ரயிலில்தான், அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள், நந்தனார் பச்சையப்ப பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பயணிக்கிறார்கள்.

ரயில் மறியல் பற்றி, ரயிலில் பயணம் செய்த பாலமுருகனிடம் கேட்டோம். இதுப்பற்றி அவர் கூறுகையில், புதுச்சத்திரத்தில் ஐ.எல்.எப்.எஸ். பவர் கம்பெனி

ஆரம்பிக்கப்பட்டத்திலிருந்து பயணிகள் ரயிலை ½ மணிநேரத்துக்கும் மேலாக

நிறுத்தி, காலதாமதமாக அனுப்புகிறார்கள் ரயில்வே நிலைய அதிகாரிகள்.

பவர் கம்பெனிக்கும், பயணிகள் பயணிக்கும் ரயிலுக்கும் என்ன சம்பந்தம்

என்று கேட்டோம். “ பவர் கம்பெனிக்கு தூத்துக்குடியிலிருந்து கூட்ஸ்

மூலமாக ரயில் பாதையில்தான் நிலக்கரி ஏற்றிவருகிறார்கள். கூட்ஸ்பெட்டிகள்

ஒரு கிலோமீட்டர் தூரம் வரையிலிருக்கும். கூட்ஸ் வண்டி எதிரில் வருவதால், மாணவர்கள் பயணிக்கும் பயணிகள் ரயிலைப் புதுச்சத்திரத்தில் நிறுத்தி, கூட்ஸ் வண்டிக்கு வழிவிடுகிறார்கள். கூட்ஸ் வண்டிக்கு என்ன அவசரம், பரங்கிப்பேட்டை, கிள்ளை, ரயில் நிலையத்தில் நிறுத்தி, பயணிகள் ரயிலுக்கு வழிவிடலாமே? இப்போது தேர்வு நேரம், மாணவர்களின் படிப்புப்பற்றி ரயில்வே அதிகாரிகளுக்குத் அக்கறை இல்லையா?

அதனால்தான், ரயிலில் பயணித்த அனைவரும் ஒத்தகருத்துடன் இன்று காலை (நவம்பர், 7) ரயில் மறியல் போராட்டம் செய்தோம். அதன்பிறகு, பயணிகள் பயணிக்கும் ரயிலுக்குத் இனி தடையிருக்காது என்று உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்கள் ரயில்வே நிலைய அதிகாரிகள்.

அடிப்படை உரிமையைக்கூட இங்கு போராடித்தான் பெறவேண்டியதாகயிருக்கு. இந்தியசுதந்திர நாட்டில், இனி போராட்டங்கள் இல்லாமல் பொழுதுகள்

விடியப்போவதில்லை என்பது மட்டும் உணரமுடிகிறது என்று சொன்னார்.

வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்!!!

                                               
பள்ளிக்கூடத்துக்காகக் கட்டப்பட்ட அறைகளில் வட்டார வளர்ச்சி மையம்
செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு பெரியார் வீதியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புவரை உள்ளன. சுமார் 306 மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். பள்ளியில் மொத்தம் 9 வகுப்புகள் உள்ளன. இந்த வகுப்புகள் போதாது, கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என ஏற்கெனவே மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன் பேரில் கூடுதலாக 5 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அப்படிக் கட்டப்பட்ட அறைகளில் வகுப்பறைகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் புதிய அறைகள் கல்வி இயக்கத்தின் வட்டார வளர்ச்சி மைய அலுவலங்களாகச் செயல்பட்டுவருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இன்று (நவம்பர் 07) காலை வழக்கம்போல் பள்ளிக்கூடம் வந்த மாணவ மாணவிகள் திடீரென வகுப்புகளைப் புறக்கணித்து வெளியே வந்து பள்ளிக்கூடத்தின் முன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் புதிய அறைகள் வகுப்பறைகளாகச் செயல்பட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகப் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் கோவிந்தராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதாமணி ஆகியோர் இருந்தனர்.

கட்டணத்தை உயர்த்திய ரயில்வே துறை!!!

                                              
48 ரயில்களை அதிவேக ரயில்களாகத் தரம் உயர்த்தவும்,
அவற்றின் வேகத்தை மணிக்கு 5 கி.மீ. உயர்த்தவும் திட்டமிட்டுள்ள ரயில்வே துறை பயணக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

தற்போதைய நிலையில் ராஜ்தானி, டுரோண்டோ, சதாப்தி உள்ளிட்ட ரயில்கள் மிகவும் தாமதமாகவே இயங்கி வருகின்றன. பனிமூட்டம் காரணமாக வடக்குக் கட்டுப்பாட்டு ரயில்கள் அனைத்தும் பல மணி நேரங்கள் குறைவான அளவிலேயே இயங்குகின்றன. எனவே 48 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை சூப்பர் பாஸ்ட் ரயில்களாகத் தரம் உயர்த்த இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ள ரயில்வே துறை நவம்பர் 1ஆம் தேதி வெளியிட்டுள்ள புதிய பயண அட்டவணையில் ரயில் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரயில்வே துறைக்கு ரூ.70 கோடி வருவாய் கிடைக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய கட்டண முறைப்படி, வழக்கமான கட்டணத்தில், ஸ்லீப்பர் பிரிவுக்கு ரூ.30 கூடுதலாகவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தர ஏ.சி. பெட்டிகளில் ரூ.45 கூடுதலாகவும், முதல் தர ஏ.சி. பிரிவுக்கு ரூ.75 கூடுதலாகவும் பயணிகள் செலுத்த வேண்டியிருக்கும். சூப்பர் பாஸ்ட் ரயில்களாக 48 ரயில்களும் மாற்றப்பட்ட பிறகு, சூப்பர் பாஸ்ட் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 1,072 ஆக உயரும். ரயில்வே துறையிடமுள்ள விவரங்களின்படி, ஜூலை - செப்டம்பர் மாதங்களில் 890 சூப்பர் பாஸ்ட் ரயில்கள் தாமதமாக இயங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஜூலை மாதத்தில் 129 ரயில்களும், ஆகஸ்ட் மாதத்தில் 145 ரயில்களும் செப்டம்பர் மாதத்தில் 183 ரயில்களும் 1 முதல் 3 மணி நேரங்கள் தாமதமாக இயங்கியுள்ளன. இந்நிலையில்தான் ரயில்களின் வேகத்தை மணிக்கு 5 கி.மீ. வேகம் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

EMIS NEWS

EMIS : மாணவர்களின் PHOTO மற்றும் BLOOD GROUP பதிவேற்ற வேண்டும்*


EMIS தகவல்

பள்ளி மாணவர்களின் போட்டோக்கள் மற்றும் குருதி வகை ஆகிய இரண்டு தகவல்கள் அனைவருக்கும் (for all standards) புதியதாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

புகைப்படம் 3 x4 அளவில் 50 KB க்குள் இருக்க வேண்டும்

புகைப்படம் white or blue ,கலர் background ஆக இருக்க வேண்டும்

ஏற்கனவே ஏற்றப்பட்ட புகைப்படங்கள் ,குருதிவகை இரண்டும் நீக்கப்பட்டு விட்டன

 இவை student I'd card தலைப்பில் செலெக்ட் செய்து View Students Data சென்று edit option மூலம் செய்யப்படவேண்டும்

நவமபர் 2017 மாதத்தில் தொடக்க/ உயர் தொடக்க நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியவை

 NAS தேர்வு மாதிரி மற்றும் உண்மையான தேர்வு

👉CRC level science exbition (8-11-17)
👉கலைத்திருவிழா
👉EMIS பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் புதியதாக  எடுக்கப்பட்ட 2x3 அளவுள்ள 50 k b க்குள் உள்ள புகைப்படம் அடையாள அட்டைக்காக பதிவேற்ற வேண்டும்
👉EMIS அனைத்து மாணவர்களுக்கும் blood group பதிவேற்றம் செய்யப்படவேண்டும்
👉EMIS விடுபட்ட பதிவுகள் முடித்தல்.
👉தொடக்க நிலை ஆசிரியர் களுக்கு 4 நாட்கள் கற்றல் விளைவுகள் பயிற்சி,(2 spell)
👉உயர் தொடக்க நிலை ஆசிரியர் களுக்கு 2 நாட்கள் கற்றல் விளைவுகள் பயிற்சி பாட வாரியாக (3  spell)
👉06-11-17 ல் விடப்பட்ட மழை விடுமுறைக்கு  ஈடு செய் வேலைநாள்
👉C& D மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி இம்மாதத்தில் தமிழ் ,கணக்கு பாடத்தில் முழு அடைவை எட்டுதல்
👉 New pay _option கொடுத்து ஊதிய நிர்ணயம் செய்தல்/ சரிபார் த்தல்,
👉டெங்கு விழிப்புணர்வு செயல்பாடுகள்,தினமும் நடைமுறை மற்றும் கண்காணித்து வருதல்
👉school grant,MG போன்றவற்றை முழுமையாக எடுத்து பயன் படுத்துதல்
👉SMC மீட்டிங் நடத்தி டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளல்
👉NMMS மாணவர் பதிவு முடித்து அவர்களை தேர்வுக்கு தாயார் படுத்துத்துதல்
👉மேலும் அறிவிக்கப்பட உள்ளதை செயல்படுத்துதல்

சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் தேர்வு ரத்து!!!

சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் 
தேர்வு ரத்து செய்யப்படுகிறது. சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் அறிவித்துள்ளார்.

தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுள்ளதால் படங்களை நடத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியமில்லா ஊரக வேலைத் திட்டம்!!!

                                       
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 
19 மாநிலங்களில் ஊதிய பாக்கியில் ரூ.3,066 கோடி இன்னும் வழங்கப்படாமல் இருப்பதாக இந்தியா ஸ்பெண்ட் அறிக்கை கூறுகிறது.

பொதுவேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு அரசின் குறைந்த ஊதியத்துடன் ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்குக் கட்டாய சிறப்புத் திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம்தான் ’மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’. ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரையில் ஹரியானா மாநிலத்தில் இத்திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படவில்லை என்று சங்கர்ச் மோர்ச்சா என்ற பொதுநலச் சங்கம் குற்றஞ்சாட்டுகிறது.

இதேபோல, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் செப்டம்பர் 1ஆம் தேதி முதலும், கேரளா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாகவும் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் 19 மாநிலங்களில் ரூ.3,066 கோடி ஊதிய பாக்கி வழங்கப்படவில்லை. இதனால் 9.2 கோடி ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலைக்கான ஊதியமானது 15 நாட்களில் வழங்கப்படும். ஆனால் மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதால் இந்த வேலையை மட்டுமே நம்பியுள்ள மக்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்காமல் தாமதப்படுத்தினால் அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். கடந்த ஆண்டில் ஊதியம் தருவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.689 கோடியாக இருந்ததாக அரசு மதிப்பிட்டுள்ளது.

Flash News : TRB - Polytechnic Exam 2017 - Final Key answers and Individual Candidate Qurey and C.V List Published