யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/3/18

கோடைகால குறிப்புகள் - 2018

காலை எழுந்தவுடன் சாப்பிட வேண்டியவைகள்


பழைய சாத தண்ணீர் ( வாரம் 2 நாட்கள் )

ஊற வைத்த வெந்தயம் ( வாரம் 2 நாட்கள் )

பழங்கள் ( மாதுளை, தர்ப்பூசணி, பன்னீர் திராட்சை, கொய்யா, பப்பாளி - இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது கலந்தும் சாப்பிடலாம் )

( வாரம் 2 - 3 நாட்கள் )

காலை எழுந்தவுடன் தாக உணர்வை கவனித்து, அதற்கேற்ப தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக பெருங்குடலின் நேரமாகிய 5 மணி முதல் 7 மணி வரைஇருக்கும் தாக உணர்வு மிக முக்கியமானது. அப்போது நாம் குடிக்கக்கூடிய தண்ணீர் நமது குடல்களை சுத்தப்படுத்தி நல்ல பசி உணர்வை கொடுக்கும். நல்ல ஜீரணத்துக்கும் உதவிசெய்யும். இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு உடல் உஷ்ணமும் கட்டுக்குள் இருக்கும்.

காலை உணவாக கம்மங்கூழ், பழைய சாதம், கேழ்வரகு கூழ் போன்றவற்றை வாரம் 2 நாட்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். உடன் சிறிய வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும்அதற்கு கொத்தமல்லி மற்றும் புதினா துவையல்களையும் தொட்டுக்கொள்ளலாம்.

பழைய சாதத்தை இரவு மண் பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்துவிட வேண்டும். பழைய சாத தண்ணீர் குடிக்கும் போதோ சாதமாக சாப்பிடும் போதோ, மண்பாத்திரத்தில் ஊற வைக்கப்பட்டிருந்தால் அது சுவையாகவும், குளிர்ச்சி தரும் வகையிலும் அமையும்.

முடிந்தவரை காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே தண்ணீரை தவிர ( முறையான தாகம் இருந்தால் மட்டும் ) எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

மதிய உணவு சாப்பிட போவதற்கு முன்னர் சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டு அதன்பின்னர் 15 நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம். இதன் மூலம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதுஇடையில் தண்ணீர் தேவைப்படுவதை தவிர்க்க முடியும். இது நல்ல தரமான ஜீரணத்தை உறுதி செய்யும்.

மதிய உணவில் நீர்க்காய்கள் நிறைய சேர்த்துக்கொள்ளலாம். ( புடலங்காய், பூசணிக்காய், சுரைக்காய், வாழைத்தண்டு, பீர்க்கங்காய் முக்கியமானவை ). .

மதிய உணவில் வாரம் 3 - 4 நாட்களாவது மோர் சேர்த்துக்கொள்வது நல்லது. மோரை கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி போட்டு ஊறவைத்து பயன்படுத்தலாம். மோரை தாளித்துபயன்படுத்துவது அதன் புளிப்பு தன்மையை குறைப்பதாக அமையும்.

அசைவ உணவுகள் சாப்பிடுவதாக இருந்தால் மதிய வேளைகளில் எடுத்துக்கொள்ளுங்கள். இரவு எடுத்துக்கொள்வதாக இருந்தால் 8 மணிக்கு முன்னதாகவே சாப்பிட்டுமுடித்துவிடுங்கள். அசைவத்தில் காரமும் மசாலாக்களும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது மிக முக்கியம். அசைவ உணவுகளில் ஆட்டு இறைச்சியின் மார்பெலும்பில் சூப் வைத்துகுடிப்பது உடல் உஷ்ணத்தை குறைக்கும் ஒரு அற்புத உணவாகும்.

மாலை வேளைகளில் தேவைப்பட்டால் பழ ரசங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

நாள் முழுக்கவே தாக உணர்வை நன்கு கவனித்து அதற்கேற்ற வகையில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான தண்ணீர் குடிக்க கூடாது என்பதையும்மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தான் இன்றைக்கு நாம் பெரும்பாலும் குடிக்கின்றோம். அந்த தண்ணீரை ஒரு மண் பானையில் ஊற்றி வைத்து அதனோடு வெட்டி வேர் சேர்த்து தண்ணீர்குடிக்கலாம். குறைவான நீரில் முழுமையாக தாகம் நீங்க இது பெரும் உதவியாக இருக்கும். ( 30 லிட்டர் தண்ணீருக்கு 3 வெட்டி வேர்கள் )

எப்போதுமே அமர்ந்த நிலையில் வாய் வைத்து தண்ணீர் குடிப்பதே நல்லது.

ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்துவிட்டு வந்த பின்னரும் சிறிதளவு நீர் குடிக்க வேண்டும். ( தாகம் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை )

குளிர்சாதன அறைகளில் தூங்குபவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். குளிர்சாதன வசதி என்பது நிச்சயமாக நமது உடல் நலனுக்கு உகந்தது அல்ல. அதேநேரத்தில் அதிக சூட்டில் இரவு தூக்கம் வராமலும் கஷ்டப்பட வேண்டாம். எனவே ஏசி யின் பயன்பாட்டு அளவை முடிந்த வரை குறைத்து கொள்ள திட்டமிட வேண்டும்.

உதாரணம்: அதிகாலை 3 மணிக்கு மேல் ஏசி-யை அனைத்து விட வேண்டும். 3 மணிக்கு மேல் நமது நுரையீரலின் பிரத்யேக நேரமாகும். இந்த நேரத்தில் தூய்மையான ஆக்சிஜன்காற்றில் பரவிக்கிடக்கும். எனவே 3 மணிக்கு மேல் ஜன்னல்களை திறந்து விட்டு காற்றோட்டமான சூழலில் உறங்குவது ஏசி யின் பாதிப்புகளில் இருந்து நம்மை ஓரளவு காக்கும்.

பழங்களை பொறுத்தவரை தர்பூசனியும், மாதுளையும், கிர்ணியும் கோடை காலத்தில் நமது உடலின் நீர் சமநிலையை பாதுகாக்க உதவும் முக்கிய பழங்களாகும். எனவே ஒருநாளைக்குஅவற்றில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக சாப்பிட்டு விட வேண்டும்.

தினமும் தலைக்கு குளிப்பதை கட்டாயமாக்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத பட்சத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட தலைக்கு குளித்து நல்லது. மேலும் அதிக நேரம்குளிப்பதும் உடல் உஷ்ணத்தை குறைக்கும் மற்றும் சமநிலையில் வைக்கும்.

அதேபோல, வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்து நல்லது. தலை

குளித்து நல்லது. தலைக்கு தேய்ப்பது மட்டுமல்லாமல் உடல் முழுக்கவே தேய்த்து இளங்காலை வெயிலில் ( 6 முதல் 7.30மணி வரை ) ஒரு 30 முதல் 40 நிமிடங்கள் வரை கண்கள் மூடி அமர்ந்துவிட்டு பின்னர் இதமான நீரில் குளித்து விடுவது நமது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

அவ்வப்போது இளநீர் குடிப்பதும், எலுமிச்சை ஜூஸ் குடிப்பதும், வெள்ளரிக்காய் சாப்பிடுவதும் நமது நீர் சக்தியின் தரத்தை உறுதி செய்யும். ஒவ்வொரு முறை இளநீர் குடிக்கும் போதும்அதன் வழுக்கையையும் சாப்பிட வேண்டும்.

கோடை காலத்தில் இரவு உணவாக தோசை, பரோட்டா, பிரியாணி, ஃபிரைடு ரைஸ் போன்ற உணவுகளை தவிர்த்து விட்டு, ஆவியில் வேக வைத்த உணவுகளையும், களி உள்ளிட்டஉணவுகளையும் சாப்பிடுவதே நல்லது.

கோடை காலத்தில் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல இரவு உறங்க செல்லும் முன் நமது இடுப்பு பகுதிகள் உள்ளிட்டபிறப்புறுப்பு பகுதிகளை நன்கு கழுவிவிட்டு உறங்க செல்வது சுத்த தன்மையை ஏற்படுத்துவதோடு, நமது சிறுநீரக பகுதிகளை குளிர்ச்சிப்படுத்தும் விதமாகவும் அமையும்.

கோடைகாலங்களில் வியர்வை மூலமாக நடைபெறும் கழிவு நீக்கம் முழு அளவில் இருக்கும். எனவே நமது வியர்வை துவாரங்களில் தடையில்லா திறந்த நிலையை நாம் ஏற்படுத்தவேண்டும். எனவே சோப் உபயோகங்களை குறைத்துவிட்டு இயற்கையான குளியல் பொடிகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் சோப்களின் ரசாயனங்கள் நமது வியர்வைதுவாரங்களை அடைக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். பொதுவாகவே அனைத்து காலங்களிலுமே சோப் பயன்படுத்தாமல் குளியல் பொடியை பயன்படுத்துவதே நல்லது. அப்படியேசோப் பயன்படுத்தினாலும் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். சோப் தேய்த்து விட்டு, வெறும் கையாலோ அல்லது நார் போன்ற பொருட்களாலோ நமது வெறும்உடலை தேய்த்துவிடுவதன் மூலம் சோப்களின் ரசாயனங்கள் நமது வியர்வை துவாரங்களை அடிப்பதை தடுக்க முடியும்.

பொதுவாகவே கோடை காலங்களில் அதிகாலை நாம் சீக்கிரம் எழுந்து கொள்ள முடியும். எனவே இரவு உணவை சீக்கிரம் முடித்துவிட்டு சீக்கிரம் தூங்க சென்றுவிடுவது தான் நல்லது.அதுதான் போதுமான தூக்க நேரத்தை உறுதி செய்யும்.

கூடுமானவரை 9 மணிக்கு மேல் மொபைல், டிவி, கணிப்பொறி பயன்பாடுகளை நிறுத்திவிட்டு உறங்க சென்றுவிடுவது மிக மிக நல்ல பலன்களை நமக்கு ஏற்படுத்தும்.

கோடைகாலங்களில் மொட்டை மாடியில் படுக்கும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கும். இதில் எந்தவித பாதகங்களும் இல்லை. இருந்தாலும், உறங்க செல்வதற்கு 4 மணி நேரத்திற்குமுன்பாக அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி குளிர்ச்சிப்படுத்த வேண்டியது மிக முக்கியம்.

ஃபோம் மெத்தைகளில் படுத்து உறங்குவதை தவிர்த்துவிட்டு தரையில் பாய்விரித்து அதன் மீது ஜமுக்காளம் அலல்து போர்வை விரித்து உறங்குவது மிக நல்லது. வெறும் தரையில்படுக்க வேண்டாம்.

வீட்டில் முழுமையான காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதுவே நமது வீட்டினுள் உறையும் உஷ்ணத்தை வெளியேற்றிவிடும்.

ஜீன்ஸ் உள்ளிட்ட மிக இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

IT துறைகளில் பணியாற்றுபவர்கள் நாள் முழுக்கவே ஏசி அறையில் இருக்க வேண்டிய சூழல் இருப்பதால் அவர்கள் இரவு உணவாக பழங்கள் மட்டும் சாப்பிடுவது அவர்களின் உடல்உஷ்ணத்தை குறைக்கும். மேலும் அதுபோன்ற சூழலில் அவர்கள் மாலை சிற்றுண்டியை சற்றே அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது இரவு உணவாக பழங்களே போதுமானதாகஇருக்கும்.

தூய்மையான பசும்பால் கிடைத்தால் இரவு உணவாகவோ அல்லது இரவு உணவுக்கு பின்னரோ சிறிதளவு எடுத்துக்கொள்வது நல்லது. ஜீரண குறைபாடுகள் இருப்பவர்கள் பாலைதவிர்த்து விடுவது நல்லது.

மார்க்கெட்டிங் துறைகளில் பணிபுரிபவர்கள், வியாபாரம் காரணமாக வெயிலில் வெளியில் அலையக்கூடிய சூழலில் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை முகம் கழுவிக்கொள்ளுங்கள். முகம்கழுவும் போது பின் கழுத்தையும், காதுகளின் உட்புறத்தையும், கழுத்து பகுதிகளையும் தண்ணீரால் நனைப்பது மிகவும் முக்கியம்.

பெண்களுக்கு பொதுவாகவே நீரின் தேவை அதிகம் இருக்கும். எனவே குறிப்பாக பெண்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இல்லத்தரசிகளும், பணிபுரியும் பெண்களும்தங்களுக்கு அருகில் கண்டிப்பாக ஒரு தண்ணீர் குவளையை வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தாகம் எடுத்த மறுநொடி நீர் அருந்திவிட்டு தான் அடுத்த வேலையை பார்க்க வேண்டும்.

குழந்தைகள் பொதுவாகவே நீரின் தேவையை உணராதவர்களாகவும் அறியாதவர்களாகவுமே இருப்பார்கள். எனவே அவர்களை அவ்வப்போது தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்.

இவைகளெல்லாம் போக நமது வீட்டில் உள்ள பெரியவர்களின் அனுபவங்கள் சொல்லும் கோடைகால குறிப்புகளையும் கவனத்தில் கொண்டு கடைபிடிக்கலாம்.

கோடை காலம் என்பது நமது இதயமும், சிறுகுடலும் அதிக வேளை பளுவுக்கு ஆளாகக்கூடிய காலமாகும். எனவே அந்த உறுப்புகளை சரியான சக்தி நிலையில் பராமரிக்கவேண்டுமானால் மேற்சொன்ன அனைத்து குறிப்புகளையும் கடைபிடிப்பது நன்மையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பல்வேறு பருவ காலங்களின் தன்மையை சரியாக அறிந்து கொண்டு அதற்கேற்ற சரியான உணவு மற்றும் வாழ்வியல் முறைகளை கடைபிடிக்கும் போது அக்காலமானது சுகமானஅனுபவங்களை தருவதாக அமையும். முக்கியமாக கோடை காலத்தில் நாம் செய்யக்கூடிய இந்த உணவு முறை ஒழுக்கங்கள் அடுத்தடுத்த பருவ காலங்களுக்கு உகந்த உடல் சூழலைஉருவாக்கி தந்து ஒரு முழுமையான ஆரோக்கிய வாழ்வை நமக்கு வழங்கும்.   

                                         குறிப்பு: மேற்சொன்ன குறிப்புகள் அனைத்தும்பொதுவான கோடை கால உணவுக் குறிப்புகளே. இந்தக் ஒன்றோ பலவோ நீங்கள் ஏற்கனவேஎடுத்துக்கொண்டிருக்கும் மற்ற மருத்துவத்துத்துக்கும்அல்லது மருந்துகளுக்கும் முரண்பட்டாலோ அல்லதுசந்தேகங்கள் இருந்தாலோ, அவற்றை உங்களுடையமருத்துவ ஆலோசகரின் அறிவுரைப்படிபின்பற்றிக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.


ஜெ.சிகிச்சை: நிறுத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள்!

                                

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன என்று அப்பல்லோ நிர்வாக இயக்குனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 74நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், டிசம்பர் 5ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ஜெயலலிதா மரண மர்மத்தைக் கண்டறிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் முன்பு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக அப்பல்லோ நிர்வாகம் சார்பில் 2சூட்கேஸ்கள் நிறைய ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று (மார்ச் 22) சென்னையில் அப்பல்லோ நிர்வாகம் சார்பில் சர்வதேச கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பிரதாப் சி ரெட்டி, "அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை வார்டு பாய் முதல் நர்ஸ், தலைமை மருத்துவர் என அனைவரும் சிறப்பாக கவனித்துக் கொண்டோம். அப்பல்லோ மருத்துவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மருத்துவர்களும் அவருக்குச் சிறப்பான சிகிச்சையை அளித்தனர். முழு சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டார்.

மேலும் "ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டன. சம்பந்தமில்லாதவர்கள் சிசிடிவி காட்சியை பார்க்க நேரிடும் என்பதால் எதிர்பாராதவிதமாக அனைத்து கேமராக்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் ஜெயலலிதாவின் தனிமை மற்றும் பாதுகாப்பு கருதி ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றுவந்த பகுதியில் இருந்த மற்ற நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்" என்று கூறிய பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவை யார் யார் பார்க்க வேண்டும் என்பதை அவருடன் இருந்தவரே முடிவு செய்தார். சிகிச்சை தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம்" என்றும் குறிப்பிட்டார்.

22/3/18

TNPSC '- குரூப் - 3ஏ' பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் - 3 ஏ பிரிவில் அடங்கிய பண்டக பொறுப்பாளர் பதவிக்கு, 26, 27ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார், வெளியிட்ட செய்திக்குறிப்பு:'குரூப் - 3 ஏ'பிரிவில் அடங்கிய, பண்டக பொறுப்பாளர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2013 ஆக., 3ல் எழுத்து தேர்வு நடந்தது.இதற்கான முடிவுகள், 14ல் வெளியிடப்பட்டன.

பண்டக பொறுப்பாளர் பதவியில், 20 காலியிடங்களை நிரப்ப, வரும்,26, 27ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதற்கான அழைப்பு கடிதம் பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட நேரத்தில், தவறாமல் பங்கேற்க வேண்டும். இந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, 1:5 என்ற விகிதத்தில், தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ்-1 கணித தேர்வு மிகவும் கடினம் மாணவர்கள் கருத்து

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ்-1 தேர்வு இந்த வருடம் முதல் முதலாக அரசு பொது தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று கணித தேர்வு நடைபெற்றது. 
காப்பி அடித்ததாக கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு மாணவர் பிடிபட்டார்.இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ-மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். எந்த கேள்வியும் புரியாமல் பலர் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தனர். தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. சிலர் கண்ணீருடன் தேர்வு அறையில் இருந்து வந்ததை பார்க்க முடிந்தது.

இது குறித்து அவர்கள் கூறியதாவது.வினாத்தாளை வாங்கி படித்து பார்த்த போது முதலில் அது மாறி வந்துவிட்டதோ என்று எண்ணினோம். காரணம் கேட்கப்பட்ட சில கேள்விகள் மட்டுமே நேரடியாக பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன. மற்ற கேள்விகள் அனைத்தும் மிகவும் கடினம்.சி.பி.எஸ்.இ. தேர்வில் கேட்பது போல கேள்விகள் இருந்தன. இதனால் இந்த தேர்வில் பலர் தேர்ச்சி பெறுவது சந்தேகம்தான். எனவே எங்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேர்வு குறித்து அரசு பள்ளி கணித ஆசிரியர் ஒருவர் கூறியதாவது.கணித ஆசிரியர் என்ற முறையில் பிளஸ்-1 மாணவர்களுக்கு கணிதத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சரிதான். பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நேரடியாக கேள்விகளை கேட்காததால் மாணவர்களுக்கு புரியவில்லை. தமிழக அரசு கணித பாடத்துக்கு ஒரு புத்தகம் கொடுத்துள்ளது. அதைத்தான் நாங்கள் நடத்துகிறோம். புத்தகங்களை படித்து பார்த்து அதை சுயமாக சிந்தித்து எழுத மாணவர்களுக்கு நேரம் கிடையாது. அதே போல கற்பிக்க எங்களுக்கும் நாட்கள் போதாது.சி.பி.எஸ்.இ.க்கு பாடத்திட்டம் குறைவு. ஆழமாக படிப்பார்கள். தமிழக பாடத்திட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் அதை அப்படியே படிக்கின்றனர். மாணவர்களுக்கு 6-ம் வகுப்பில் இருந்தே சிந்திக்கும் ஆற்றல் கொண்ட கேள்விகளை கேட்க வேண்டும். அவ்வாறு படிப்படியாக கேட்பதன் மூலம் பிளஸ்-1 மாணவர்கள் சுயமாகசிந்தித்து தேர்வு எழுதும் திறனை பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ்-1 விலங்கியல் தேர்வும் நேற்று நடைபெற்றது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் கூறுகையில், தேர்வில் பல வினாக்கள் எளிதாக தான் இருந்தன. ஆனால் 5 மதிப்பெண் கேள்விகளில் சில, பாடத்தில் இருந்து நேரடியாக கேட்கப்படவில்லை. இதனால் சற்று கடினமாக இருந்தது என்றனர்.

போர்டபிலிட்டி வழிமுறை மாற்றம்? டிராய் புதுஅறிவிப்பு

தொலைத்தொடர்பு துறையில் ஒரு நெட்வொர்க் வாடிக்கையாளர் மற்ற நெட்வொர்க் நிறுவனத்திற்கு தனது மொபைல் எண்ணை மாற்றுவதற்கு போர்ட் செய்ய வேண்டும் அதற்கு சில வழிமுறைகள் உள்ளது.
இந்த வழிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கு தற்போதுடிராய் முடிவு செய்துள்ளதாம். இது குறித்த ஆலோசனை கடிதம் விரைவில் வழங்கபப்டும் எனவும் தெரிகிறது. இதுகுறித்து தர்போது வெளியாகியுள்ள செய்திகள் பின்வருமாறு... இந்தியாவில் மொபைல் நம்பர் போர்டபிலிட்டிக்கான கால அவகாசம் அதிகமாக உள்ளது, எனவே இதன் நேரம் குறைக்கப்படுவதோடு, வழிமுறைகளும் மாற்றப்படும். இதுவரை மொபைல் நம்பர் போர்டபிலிட்டி செய்வதற்கான கட்டணம் ரூ.19 ஆக இருந்த நிலையில், இவை ரூ.4 என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மொபைல் நம்பர் போர்டபிலிட்டி புதிய வழிமுறைகள் மற்றும் அதிக பாதுக்காப்புடன் மாற்றுவது குறித்து டிராய் விவாதித்து வருகிறது. புதிய வழிமுறைகள் மிகவும் நேர்த்தியாகவும், வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பிழையும் இல்லாதபடி மேற்கொள்வதை உறுதி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்பியல், பொருளியலில் கேள்விகள் கடினம் : பிளஸ் 2 மாணவர்கள், 'சென்டம்' பெற முடியுமா?

பிளஸ் 2 இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வில், ஐந்து கேள்விகளை தவிர, மற்ற கேள்விகள் எளிமையாக இருந்தன என, மாணவர்களும், ஆசிரியர்களும் தெரி வித்தனர். 
அதே நேரம், 'சென்டம்' எண்ணிக்கை பெருமளவு குறையும் என, கூறப்படுகிறது.பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, நேற்று இயற்பியல் தேர்வும், வணிகவியல் மாணவர்களுக்கு பொருளியல் தேர்வும் நடந்தது.

கையேடு : இதில், இயற்பியலில், பாடத்தின் பின்பக்கத்தில் உள்ள உதாரண கேள்விகளே, வினாத்தாளில் அதிகமாக இடம் பெற்று இருந்தன. அதேபோல், தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட, குறைந்தபட்ச கற்றல் கையேடு என்ற புத்தகத்தில் இருந்தும், 65 சதவீத கேள்விகள் இடம் பெற்றிருந்தன. பொருளியல் தேர்வில், பிரிவு, 'அ' வைதவிர, மற்ற அனைத்து பிரிவுகளிலும், எளிமையான வினாக்கள் இருந்தன. பிரிவு, 'அ' வில், ஒரு மதிப்பெண் கேள்விகள், மாணவர்களை நீண்ட நேரம் யோசிக்க வைத்தன. இதனால், அப்பிரிவில், ஐந்து கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க முடியவில்லை என்றனர்.பொருளியல் தேர்வு குறித்து, சென்னையில் உள்ள, ஏ.பி.பரேக் குஜராத்தி வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி, பொருளியல் ஆசிரியர், ஏ.பி.பழனி கூறியதாவது:கல்வித்துறை, 'ப்ளூ பிரின்ட்'டில் இருந்து, மாறாமல் வினாத்தாள் அமைக்கப்பட்டிருந்தது.

சோதனை : ஒன்று, 10, 11, 13 மற்றும், 14வது கேள்விகள், மாணவர்களின் சிந்தனைத் திறனை சோதிக்கும் வகையில் இருந்தன. தேர்வு விதிகளின்படி, விடை திருத்தத்தில், 'சென்டம்' வழங்கும் முன், மாணவர்களின் கல்வித்தரத்தை சோதிக்க, சில சிக்கலான கேள்விகள் இடம் பெறும்.அதேபோல, சில, 'டுவிஸ்ட்' கேள்விகள் இருந்தன. மேலும், பாடத்தின் பின்பக்கத்தில் உள்ள உதாரண கேள்விகளும், அதிகமாக இடம் பெற்றதால், மாணவர்களின் தேர்ச்சிக்கு எந்த பிரச்னையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

முதல் கேள்விக்கு, 'இரண்டு' விடைபொருளியல் தேர்வில், ஒன்றாம் எண்ணில் இடம் பெற்ற, 'பொருளியல் குறிப்பிடுவது...' என்ற, ஒரு மதிப்பெண் கேள்விக்கு, சரியான விடையை கண்டுபிடிக்க, நான்கு குறிப்புகள் தரப்பட்டிருந்தன. அவற்றில், மனித விருப்பமும், நிறைவடைதலும் என்ற குறிப்பும், செல்வத்திற்கும் சேமிப்பிற்கும் உள்ள தொடர்பு என்ற குறிப்பும், சரியான விடையாக இருந்ததாக, ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவித்தனர். எனவே, இந்தஇரண்டில், எந்த பதிலை எழுதினாலும், மதிப்பெண் தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

காப்பியடித்த 44 பேர் சிக்கினர் :

இயற்பியல் மற்றும்பொருளியல் தேர்வில், காப்பி அடித்ததாக, நேற்று மாநிலம் முழுவதும், 44 பேர் சிக்கினர். இதில், மதுரை, 5; கோவை, 3; கிருஷ்ணகிரி, 1; திருச்சி, 4; விழுப்புரம், 8; திருவண்ணாமலையில், 5 பேர் என, 26 பேர் பிடிபட்டனர். வேலுார், 3; திருவண்ணாமலை, 11; விழுப்புரம், 3; மதுரையில், 1 என, 18 தனித்தேர்வர்கள் உட்பட, மொத்தம், 44 பேர் காப்பியடித்து, சிக்கினர். இந்த ஆண்டு, இதுவரை நடந்த தேர்வுகளில், நேற்று தான் அதிக மாணவர்கள் காப்பியடித்து சிக்கியுள்ளனர்.

பிளஸ் 2 இயற்பியலில் 'கிரியேட்டிவ்' கேள்விகளால் குழப்பம் : ஆசிரியர், மாணவர்கள் கருத்து

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் மூன்று கிரியேட்டிவ் ஒரு மதிப்பெண் வினாக்கள் அதிக குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், மற்ற வினாக்கள் மிக எளிமை என ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.
கே.காளீஸ்வரி, ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி: ஒரு மதிப்பெண் வினாக்கள் 30ம் மிக எளிமை, ஒன்றிரண்டு வினாக்கள் சிந்தித்து பதில் அளிப்பதாக இருந்தன. அது குழப்பத்தை ஏற்படுத்தினாலும்சரியான பதில் எழுத முடிந்தது. மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண், 10 மதிப்பெண் வினாக்கள் மிக எளிமையாக கேட்கப்பட்டிருந்தன.

 5 மதிப்பெண் கட்டாய வினாவும் எளிமை. சென்டம் வாய்ப்பு அதிகம்.ஏ.சினேக பிரித்தா, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் வினாக்கள் 30ல் சில கடினமாக இருந்தன. மற்றபடி மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண், பத்து மதிப்பெண் வினாக்கள் எல்லாம் எளிமை தான்.ஒருமதிப்பெண் வினாக்கள் எழுத முடியாத நிலையில், சென்டம் வாய்ப்பு குறையும். ஐந்து மதிப்பெண் கட்டாய வினா எட்டாவது பாடத்தில் இருந்து ஏற்கனவே திட்டமிட்டு படித்தபடியே கேட்கப்பட்டிருந்தது.

எஸ்.நித்தீஷ்குமார், ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் வினாக்களில் மட்டும் சற்று கடினமாக, கணக்கு போட்டு எழுதுவதாக கேட்கப்பட்டிருந்தன.மற்ற வினாக்கள் கடந்தாண்டுகளில் கேட்கப்பட்டது போல், திரும்ப திரும்ப பொதுத் தேர்வில் இடம்பெற்றதாகவே இருந்தன. இதனால், எளிமையாக இருந்தது.

எம்.சேக்அப்துல்லா, இயற்பியல் ஆசிரியர், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி: ஒரு மதிப்பெண் கேள்விகளில், பி டைப்பில் வினா எண் 5, 9, 25 ஆகியவை சற்று கடினம். சிந்தித்து எழுத வேண்டியதாக இருந்தது. இதுவரை கேட்கப்படாத கேள்விகள்.

இருந்தாலும், முந்தைய ஆண்டுகளை விட எளிமை தான். ஒரு மார்க்கில் 15 வினாக்கள் புத்தகத்தின் பின் பகுதியில் இருந்தும், 10 வினாக்கள் பயிற்சியின் மூலம் செய்வதாகவும், 5 வினாக்கள் சிந்தித்து எழுதுவதாகவும் இருந்தன.

பாடத்திட்டம் குறைக்கும் திட்டம் மாநிலங்கள் முடிவு செய்யட்டும்'

மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் வகையில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதை ஏற்பது குறித்து மாநிலங்களே முடிவு செய்யும் என, லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது.லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர், உபேந்திர குஷ்வாஹா அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:திறன் மேம்பாடுதற்போதைய கல்வி முறையானது, மாணவர்களை, தகவல்களை சேகரிப்பவர்களாகவே மாற்றுகிறது. வாழ்க்கைக்கு உகந்த வகையில், அதில் மாற்றம் செய்து, உடற்பயிற்சி கல்வி, திறன் மேம்பாடு, ஒழுக்க நெறி பாடங்கள் போன்றவை சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

மாணவர்களின் கல்விச் சுமையை, 50 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.முடிவுகல்வி என்பது பொது அதிகாரப் பட்டியலில் உள்ளது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாநிலங்களில்உள்ளதால், புதிய பாடத்திட்டங்களை ஏற்பது குறித்து, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யட்டும்.இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.

கே.வி.,க்களுக்கு தரவரிசையா?லோக்சபாவில் மற்றொரு கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறைஇணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, 'பல்கலைகள், கல்லுாரிகளைப் போல, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையும் தரத்தின் அடிப்படையில் பட்டியலிடும் திட்டம் ஏதும் இல்லை' என்றார்.

வருகின்ற (2018-2019) பட்ஜெட்டிலாவது கணினி கல்விக்கும் கணினி ஆசிரியர்களுக்கும் வாய்பப்பு வழங்குமா தமிழக அரசு?




வருகின்ற (2018-2019) பட்ஜெட்டிலாவது கணினி கல்விக்கும் கணினி ஆசிரியர்களுக்கும் வாய்பப்பு வழங்குமா தமிழக அரசு?

40000 பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு (வாழ்வு)கொடுக்குமா தமிழக அரசு!



தமிழக அரசு ஆதாரித்தால் தான் தனியார் பள்ளிகளில் கூட பணி புரியும் வாய்ப்பு கணினி ஆசிரியர்களுக்கு கிடைக்கும் இதற்க்கான

புதிய வரண்முறையும் அரசானையும் தமிழக அரசு விரைவில் உருவாக்கித் தர வேண்டும்..

தனியார் பள்ளிகள் கூட கணினி ஆசிரியர்களை  உரிய கல்வித் தகுதிகள் இருந்தும் புறக்கணிக்கப்படும் அவலம் நிடித்து வருகின்றது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU)மூலம் இதுவரை 40000பேர்.

கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் எங்கும் பணிக்கு செல்ல முடியாத அவல நிலை உள்ளது.
காரணம் தமிழக அரசு நடத்தும் எந்த ஒரு தகுதி தேர்வாக இருந்தாலும் ஆசிரியர்கள் பணிநியமனமாக இருந்தாலும்   கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை பி.எட் படித்த ஆசிரியர்களுக்கு வாயப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன எதனால்.?

இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசுதான் மற்ற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் போன்று கணினி ஆசிரியர்களுக்காக உரிய பணி வரண்முறையை தமிழக அரசு உருவாக்கி தரவில்லை இதனால் அரசுப்பள்ளிகள்,அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளியாக இருந்தாலும் சரி கணினி ஆசிரியர்கள் பணிக்கு செல்ல  முடியாத அவல நிலை
இன்றாளவும் உள்ளது.

அரசே தனியாரே அவை எங்கு இருந்தாலும் அங்கு பணி புரியும் மற்ற தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் பட்டதாரி ஆசரியர்கள் என்றால்  இளங்களை பட்த்துடன் பி.எட் ,பட்டம் கட்டாயம்,முதுகலை ஆசிரியர்கள் என்றால் முதுகலை பட்டத்துடன் பி.எட் அல்லது எம்.எட் பட்டம் கட்டாயம்.

ஆனால் தமிழகத்தில்  பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு  அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடத்திற்கு என முறையான கல்வி தகுதி எங்கும்

பின்பற்ற படுவதில்லை எனவே கணினி அறிவியல் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று உரிய பணிபுரிய வரண்முறையும் அரசானையும் உருவாக்கி தந்தால் தான் 40000 கணினி ஆசிரியர்களுக்கு வாழ்வு .
எங்கும் கணினி எதிலும் கணினி என்று நோக்கி செல்லும் கால கட்டத்தில்

கணினி கல்விக்கும் கணினி ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு தொடர்ந்து மெத்தன போக்குடன் செய்படுவது ஏன்?

இந்தியாவில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் கணினி அறிவியல் பாடம் அரசு பள்ளியில் கட்டாயம் நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும்.

தமிழகத்தில் 2011ம் ஆண்டு 6ம் வகுப்பிலிருந்து 10வகுப்பு வரை
கணினி அறிவியல் பாடபுத்தகம் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கும் வழங்கப்படாத நிலையில் உள்ளது.
தற்போது அதன் நிலை குப்பையில் தொட்டியில் போடப்பட்டது
என RTI தகவல் அளிப்பது வேதனைக்குறியது.


கணினி அறிவியல் பாடம் நடைத்தப்படுவது எதற்க்காக.

அரசு பள்ளியில் பணி புரியும் மற்ற பாட ஆசிரியர்களுக்கு அரசு பல ஆண்டு காலமாக பல கோடி ரூபாயை
செலவு செய்து பயிற்சி கொடுத்தம் பலன் இல்லை காலங்கள் மாறி வரும் போதே அதற்கு ஏற்ப பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட வேண்டும் பாடங்களுக்கு தகுந்து ஆசிரியரகளை நியமிக்க வேண்டும்.

அந்தந்த பாடங்ளுக்கு தனித்தனியாக பி.எட் பட்டம் எதற்க்காக உருவாக்க வேண்டும்.இதற்கு தான் தமிழக அரசு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU)  40000 பிஎட் கணினி அறிவியல் ஆசிரியர்களை வேலையின்றி உருவாக்கியுள்ளது .
எந்த ஒரு பணிக்கும் தாங்கள் கொடுக்கும் பி.எட் பட்டம் செல்லகாசக உள்ளது.தாங்கள் கொடுக்கும் பிஎட் பட்டத்தினால் தனியார் நிறுவனங்களில் கூட  வேலைக்கு செல்ல முடிய நிலை இன்றாளவும் உள்ளது அப்படி பணிக்கு செல்ல நான் படித்த பட்டத்தை மறைத்து பணிக்கு செல்லும்  நிலை ஏன்?

தமிழக அரசு !

இனியாவது  தமிழக பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு  அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் முறையான கல்வி தகுதி பின்பற்ற படவேண்டும்

ஆகவே கணினி அறிவியல் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று பணிபுரிய வரண்முறை உருவாக்கி அதற்க்கான அரசானையை விரைவில் வெளியிட வேண்டும்.

செல்வி நா.ரங்கநாயகி,
மாநில மகளிர் அணி தலைவி,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

தேர்வு நேரம்: தேர்வு நேரத்தில் விளையாடலாமா?

உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டை விளையாடப் போகிறீர்கள். உதாரணத்துக்கு, கால்பந்து என வைத்துக்கொள்வோம். உங்கள் கால்களுக்குப் பந்து கிடைத்துவிட்டது. லாவகமாகப் பலரைத் தாண்டி அதைக் கடத்திச் செல்கிறீர்கள். போட்டியின் முடிவு என்னவாகும் என்று நினைத்து அப்போது பதற்றமடைந்தால் உங்கள் மூளையாலும் உடம்பாலும் முழுத் திறனை வெளிப்படுத்தி பல கால்களைத் தாண்டி அந்தப் பந்தைக் கடத்திச் செல்ல முடியுமா?
யோசிக்க வேண்டாம். ஏனென்றால், அந்தக் கணம் மகிழ்ச்சியில் ஊறித் திளைக்கும்போது மட்டும்தான் உங்கள் முழுத் திறனும் வெளிப்பட முடியும். தேர்வில் இதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
சத்தான உணவைச் சாப்பிடுதல்
காலை உணவு எப்போதும் முக்கியம், அதுவும் தேர்வு நாள் அன்று அது மிக அவசியம். சத்தான அதே நேரம் எளிதில் செரிக்கும் உணவைச் சாப்பிடுங்கள். பொங்கல், தயிர்ச் சோறு, தயிர் வடை போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சாப்பாட்டுக்குப் பிறகு முடிந்தால் ஒன்றிரண்டு பேரீச்சம்பழங்களைச் சாப்பிடலாம்.
காபி, டீ தவிர்த்தல்
காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், அவை பதற்றத்தையும் பயத்தையும் அதிகரிக்கும். தவிர்க்க முடியாத பழக்கமாக இருந்தால், கொஞ்சமாக அவற்றைக் குடிக்கலாம். தேர்வுக்குச் செல்லும் முன் பழச்சாறு அருந்துவதால் சத்தும் சுறுசுறுப்பும் கிடைக்கும்.
அரக்கப் பறக்கச் செல்ல வேண்டாம்
வீட்டிலிருந்து வழக்கமாகக் கிளம்பும் நேரத்துக்கு முன்கூட்டியே கிளம்பிச் செல்லுங்கள். சீக்கிரமாகத் தேர்வறையை அடைவது பதற்றத்தைத் தவிர்க்கும். நேரம் அதிகமாக இருந்தால், தனியாகவோ நெருங்கிய நண்பருடனோ காலாற சிறிது நடைபோடுங்கள். ஆனால், அப்போது தேர்வைப் பற்றிப் பேசுவதைத் தவிருங்கள்.
கேள்வித் தாள் வாசிப்பில் கவனம்
பதிலை எழுத ஆரம்பிக்கும்முன் நிதானமாகக் கேள்வித் தாள்களின் குறிப்புகளைக் கவனமாகப் படியுங்கள். அதன்பின் கேள்விகளைக் கவனமாக வாசியுங்கள். இது தவறாகப் பதில் எழுதுவதைத் தவிர்க்க உதவும்.
பதில் பாதியில் நின்றுவிட்டதா?
தெரியாத கேள்வி இடம்பெற்றாலோ தெரிந்த பதிலை எழுதும்போது பாதியில் மறந்துபோனாலோ ஒருவிதமான பதற்றமும் பயமும் ஏற்படுவது இயல்பு. இந்தச் சூழ்நிலையில், கேள்வித் தாளையும் பதில் எழுதும் தாளையும் மூடிவையுங்கள். ஒரு எட்டு நடந்து கழிவறைக்குச் செல்லுங்கள், பின் சிறிது தண்ணீர் குடியுங்கள். உங்கள் இருக்கையில் அமர்ந்த பிறகு ஆழமாகப் பத்து முறை மூச்சை இழுத்துவிடுங்கள். பின் உங்களுக்கு நன்கு தெரிந்த வேறு கேள்விக்கு விடை எழுத ஆரம்பியுங்கள். பாதியில் நின்ற பதிலை இறுதியில் ஒருகை பாருங்கள்.
கை கால்களுக்கு ஓய்வு
தேர்வு எழுதும்போது கை கால்களை அவ்வப்போது நீட்டிமடக்குவது கொஞ்சம் ஓய்வு தரும். முடிந்தால் அவ்வப்போது எழுந்தும் உட்காருங்கள். கூடுதல் தாளை வாங்கும்போது வாய்ப்பிருந்தால் எழுந்து நின்று வாங்குங்கள்.
மூன்று மணி நேரம்தான்
உங்களின் சராசரி ஆயுட்காலம் 70 வருடங்கள் என்று வைத்துக்கொண்டால், நீங்கள் தோராயமாக ஆறு லட்சம் மணி நேரம் வாழப்போகிறீர்கள். அவற்றை இந்த மூன்று மணி நேரம் தீர்மானிக்கப்போவதாக நினைப்பது நகைச்சுவையாக இல்லையா?
தேர்வு என்பது ஒரு விளையாட்டுதான். அதைப் புன்னகையுடன் எதிர்கொண்டு ரசித்து அனுபவித்து ஜாலியாக விளையாடுங்கள்.

தேர்வில் அதிக மதிப்பெண் பெற கல்வி அமுதுவின் இனிய வாழ்த்துக்கள்..

தமிழகத்தில் 8 உயர் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கியது யூ.ஜி.சி!




தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட, 8 கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது, மத்திய பல்கலைக்கழக மானியக் குழு.
நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தைப் பரிசோதித்து, ஆண்டுதோறும் சிறப்பு அந்தஸ்தை வழங்கிவருகிறது யூ.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு. அதன்படி, இன்று 62 உயர் கல்வி நிறுவனங்களுக்கு முழு சுயாட்சிக்கான அந்தஸ்தை வழங்கியுள்ளது. இதில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், டெரி உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் தரமான கல்வியை வழங்கிவருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
கல்லூரிகளுக்கு வழங்கப்படும் தன்னாட்சி உரிமை விதிகளின்படி, ஐந்து மத்திய பல்கலைக்கழகம், 21 மாநிலப் பல்கலைக்கழகங்கள், 21 தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 10 தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சுயாட்சி அந்தஸ்தை இன்று வழங்கியுள்ளது. இதுகுறித்து இன்று பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், ' பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்வி நிறுவனங்கள், சேர்க்கை நடைமுறைகள், கட்டண விதிகள், ஆராய்ச்சி சார்ந்த படிப்புகள் மற்றும் துறைகள் சார்ந்த புதிய படிப்புகளைத் தொடங்குவது, புதிய துறைகள் நிறுவுவது உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
யூ.ஜி.சி வெளியிட்ட பட்டியலில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், போரூர் ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை அம்ரிதா விஸ்வ வித்யா பீடம், சென்னை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன

Directorate of Government Examinations - NTSE Examination - Nov-2017 - Out of Range Results

DEE -ஆண்டு விழாக்கள் மாலை 6 மணிக்குள் முடிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு!


TAMIL UNIVERSITY DECEMBER-2017 RESULTS PUBLISHED

                                     


www.tamiluniversity.ac.in

21/3/18

குடந்தையில் மார்ச் 24-இல் வேலைவாய்ப்பு முகாம்


கும்பகோணம் அரசு ஆண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 24-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது:

மார்ச் 24-ம் தேதி 

காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி நடைபெறவுள்ள முகாமில் 50-க்கும் அதிகமான தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடுநர்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பை அளிக்க உள்ளனர்.

இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இலவசப் பயிற்சி வகுப்புக்காகப் பதிவுகள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பப் படிவங்கள் வழங்குதல், தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடைபெற்று வரும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கான பதிவுகள், அயல் நாட்டு வேலைவாய்ப்பு பணிக்கான பதிவுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

முகாமில் 18 வயது முதல் 45 வரையிலான (இரு பாலர்) பணி நாடுநர்கள் கலந்து கொள்ளலாம்.

விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் சுய விவரஅறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை (இருப்பின்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம்.


வேலைவாய்ப்புச் செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள இந்த ஆப் பயன் உள்ளதாக இருக்கிறது.
 நீங்களும் பயன்படுத்தி உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள் !https://play.google.com/store/apps/details?id=com.app.tnpscjobs

பள்ளியில் பேரிடர் மேலாண்மை பாடம்- ஆசிரியர் கருத்து!

அரசுப்பள்ளிகளில் 1,400 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!!!

ஆதார் தகவல்களை இணையத்தில் பகிரும்போது கவனமாக இருங்கள்;-ஆணையம் திடீர் எச்சரிக்கை!!!

மாணவர்களின் வருகை குறைவால் துவக்கப்பள்ளியை மூடக்கூடாது!!!

2% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில்!

தலைமைச் செயலக வட்டார செய்தி:



 2% அகவிலைப்படி உயர்வுக்கான கோப்பு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் சில தினங்களில் முதல்வரின் உத்தரவுக்காக வைக்கப்படும் என தகவல்.

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது: விடையளிக்க போதிய நேரம் இருந்ததாகவும் மாணவ - மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இயற்பியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. 
பொறியியல் படிப்புக்கு முக்கியமாக கருதப்படும் கணித தேர்வு சற்று கடினமாக இருந்ததால் இயற்பியல் தேர்வு எப்படி இருக்குமோ? என்ற அச்சம் மாணவ-மாணவிகள் மத்தியில் நிலவியது. இந்நிலையில், இயற்பியல் தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வெழுதிய மாணவிகள் புனிதா, கவிநயா, காயத்ரி, திவ்யா, ஹேமலதா ஆகியோர் இயற்பியல் தேர்வு குறித்து கூறும்போது, “கணித தேர்வில் வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டதால் இயற்பியல் தேர்வு எப்படி இருக்குமோ என்ற பயத்துடன்தான் தேர்வுக்கூடத்துக்குச் சென்றோம். ஆனால், அவற்றுக்கு மாறாக தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. 1, 3, 5, 10 மதிப்பெண் கேள்விகள் அனைத்துப் பிரிவுகளிலும் கேள்விகள் எளிதாக கேட்கப்பட்டிருந்தன. திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட பல வினாக்கள் தேர்வுக்கு வந்திருந்தன. விடையளிப்பதற்கு போதிய நேரம் இருந்தது” என்றனர்.“கணித தேர்வுடன் ஒப்பிடும்போது இயற்பியல் தேர்வில் வினாக்கள் எளிதாக இருந்தது. குறிப்பாக 10 மதிப்பெண் வினாக்கள் மிகவும்எளிதாக இருந்தது” என்று சூளைமேடு கில்டு நகர் டிஏவி மேல்நிலைப்பள்ளி மாணவி கரீனா தெரிவித்தார். பல்வேறு மையங்களில் தேர்வெழுதிய மாணவ-மாணவிகளும் இதே கருத்தை கூறினர். அதேபோல், நேற்று நடந்த பொருளாதார தேர்வும் எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது என்று பெரும்பாலான மாணவ-மாணவிகள் கூறியிருப்பதால் 200-க்கு 200 மதிப்பெண் எடுக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதுபோல, 200-க்கு195-க்கு மேல் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும். இதனால், இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கட் ஆப்மதிப்பெண் உயரலாம்.

பிதாகரஸ் தேற்றமா? அல்லது போதையனார் தேற்றமா?

பிதாகரஸ் தேற்றமா? அல்லது போதையனார் தேற்றமா?
இனி பிதாகரஸ் தேற்றம் என்று சொல்லாதீர்கள்.

கணித தேர்விற்காக பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள் அமிர்தா.


இதை கேட்டபடியே உள்ள வந்து கொண்டிருந்த அமிர்தாவின் பாட்டனார் இரத்தினம், "என்னம்மா பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்கிறாயா?" என்றார்.
"ஆமாம் தாத்தா. ரொம்ப கடினமா இருக்கு, இதை எப்படித்தான் கண்டுபிடிச்சாங்களோ!" என்றாள்.

இரத்தினம் தாத்தா:
"இந்த தேற்றம் கி.மு 500ல் பிதாகரஸ் என்ற கணித அறிஞர் தொகுத்தார், அதனால் "பிதாகரஸ் தேற்றம்" என்று பெயர் வந்தது. ஆனால் அதுக்கும் முந்தியே நம்ம தமிழ் அறிவியலாளர்கள் அதை பாட்டாவே சொல்லிருக்காங்க தெரியுமா"
அமிர்தா: "சும்மா பொய் சொல்லாதீங்க தாத்தா"

இரத்தினம் தாத்தா: "சொல்றேன் கேள்,
இன்றைக்கு நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, *போதையனார்* என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே"
- போதையனார்

விளக்கம்:
இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும்.

இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்க்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.

இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.

போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் அதாவது Square root இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும். ✔
தமிழன் ஒருவேளை கற்றலையும் / கல்வியையும் பொதுவுடமையாக, உலகறியச் செய்து இருந்தால் .... அவர்கள் தரணி எங்கும் அறியப்பட்டு இருப்பார்கள்." என்றார்.

அமிர்தா: "தாத்தா இது ரொம்ப எளிதாக இருக்கு, இதை படிச்சாலே நான் எளிதாக தேர்வில் எழுதி முழு மதிப்பெண்ணும் வாங்கிடுவேன். ரொம்ப நன்றி தாத்தா" என்றாள்.
--------------------------------
இது வெறும் கதை அல்ல.
நிரூபணம்:
நீளம் = 4m, உயரம் = 3m.
எனில் கர்ணம்,
பிதாகரஸ் தேற்றம்:
கர்ணம் = √(4^2 + 3^2) = 5

போதையனார் கோட்பாடு:
கர்ணம் = (4-(4÷8)) + (3÷2) = 5 

School Team Visit - சேலம் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

2014 சிறப்பாசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முன்னுரிமை கோரி மனு

2014 சிறப்பாசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் ஒருங்கிணைப்பாளர் திரு. குமார் அவர்கள் இன்னைறய தினம் பள்ளிகல்விதுறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்களையும்.
மாற்றுதிறனாளி நலவாரிய ஆணையரையும் சந்தித்து முன்னுரிமை கோரி மனு அளித்துள்ளார்.

20/3/18

வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே .! அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”

கவுண்டமணியைப் பார்த்து செந்தில் கேட்பதைப் போல , நேற்று ஒரு நண்பர் என்னைப் பார்த்து கேட்டார் :
.
“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே .! அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”
.
என்ன பதில் சொல்வது இதற்கு..?
.
லாஜிக்படி பார்த்தால் , எல்லா இலைகளையும் போலத்தான் வாழை இலையும் ..!
எனவே நண்பரின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் ,"நீங்களே சொல்லுங்க ..!"என்றேன்.
.
நண்பர் இதற்கு ஒரு சுவையான கதையைச் சொன்னார் :
# "புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் இவ்வளவு பெரிய கோடு கிடையாதாம்..!
இராமாயண காலத்தில் ....
ஒரு முறை ராமன் சாப்பிடும்போது அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம்
இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம்
.
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி
வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு பெரிய கோட்டைக் கிழித்தாராம் ராமன்.
.
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும்
அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம்.
அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம்

# கதை சுவையாகத்தான் இருக்கிறது...!
.
நல்லது... வாழை இலை பற்றி இன்னும் சில விஷயங்கள் :
.
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,சாப்பிடும் முன் ... ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.
.
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..?
இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?
.
சிம்பிள் ..!
.
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
.
ஏன்..?
.
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால்
இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!
.
சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம்
இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?
.
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது
 கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
.
சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் .
அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
.
இல்லை..!
.
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.
.
# அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?
.
ஆனால் ....
இவை எல்லாவற்றையும்
ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலி கொடுத்து விட்டு ,

அந்நிய கலாச்சாரத்திற்கு மாறி , அடிமைகளாகிக் கொண்டிருக்கும் நம்மை , 
இனி யார் வந்து திருத்துவது..?

அரசுஊழியர்களுக்கு சாதகமான அரசானைகள்!!!



1)GO.MS.200 P&AR dt 19.4.96

     உயர்கல்வி பயில அனுமதி
கோரிய அரசு ஊழியரின் விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள்
துறைத்தலைவா் அனுமதிதராவிட்டால்,அனுமதி
அளித்ததாக கருதி மேல்படிப்பை தொடரலாம்.


2)GOVT Leter no 14735/s/10/
dt 08.042010
        தகுதிகான் பருவத்தில் உள்ள அரசுஊழியர் தகுதிகான் பருவத்திற்குரிய
அனைத்துதகுதிகளையும் பெற்றும் துறைதலைவரால் தகுதி பெற்றநாளிலிருந்து
ஆறுமாதத்திற்குள்
தகுதிகான்பருவம் நிறைவு
செய்துஆனைகள் பிறப்பிக்க
பட வில்லை என்றால்,தகுதிகான்பருவம் அதுவாகவே நிறைவடைந்ததாக அவ்அரசுப்பணியாளா் கருதிகொள்ளலாம்.

3)GO.MS.NO1988/Public(service-N)dept dt 04.4.75
             துறைத்தலைவரால்
வழங்கப்பட்டதண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு
அலுவலருக்கு மேல்முறையீடு
செய்த ஒரு அரசுஊழியரின்  விண்ணப்பத்தின் மீது
ஆறு மாதத்திற்குள் மேல்முறையீட்டு
அலுவலா் இறுதி ஆனைபிறப்பிக்கவேண்டும்.

4)GO.MS.112 P&AR
       அசையாசொத்துவாங்க
அனுமதிகோரி விண்ணப்பித்த அரசு ஊழியரின் விண்ணப்பத்தின்மீது ஆறுமாதத்திற்குள் அனுமதி.வழங்க வேண்டும்
அவ்வாரு ஆறுமாதத்திற்குள் துறைத்தலைவா் அனுமதி
அளிக்கவில்லை, என்றால்
அனுமதி அளித்ததாக கருதி
அவ்வரசுப்பணியாளர் அவ்
அசையாசொத்தை வாங்கிக்கொள்ளலாம்.

5)Govt Leter 248 P&AR dt 20.10.97
     தண்டனைகள் நடப்பிலிருப்
பதால் பதவிஉயர்வு நிறுத்தப்
பட்ட அரசுஊழியருக்கு அதே
தண்டனை நடப்பிலிருந்தாலும்
அடுத்தபதவிஉயர்வு வழங்கவேண்டும்.

6)Govt Leter no 35/N/2012-/9
P&AR  N Dept 03.04.2013
  ஒமுங்குநடவடிக்கை நடப்பிலிருப்பவருக்கு ஓய்வு
பெரும் நாள் அன்று Not Permited For Retired ஆனை
வழங்கப்படவில்லை என்றால்
அவா் ஓய்வுபெற்றதாக கருதப்படும்.

7)Tamilnadu Govt Servent Conditions And servuce Act 2016 Rule 44
      அரசுஊழியரிடம்  பதவி
உயர்வுவேண்டி பெறப்பட்டை
மேல்முறையீட்டு விண்ணப்பத்தை துறைத்தலைவர் நாண்கு மாதத்திற்குள் முடிக்கவேண்டும்.

8)Govt Leter No 12516 P&AR 2015
    அரசுஊழியர்களின் கோரிக்கை சாா்ந்த எந்த மனுவாக இருந்தாலும்
அவர்கள் விண்ணப்பிக்கும்
போதே அனைத்து விவரங்கள்
மற்றும் விளக்கங்கள் கேட்டு
பெறவேண்டும் இரண்டாம்
முறை எதுவும் கேட்கக்கூடாது

19/3/18

புதிய அப்டேட்களுடன் வாட்ஸ் அப்!

உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியாக செயல்பட்டு வரும் வாட்ஸ் அப்பில் புதிதாக இரண்டு வசதிகளை ஃபேஸ்புக் நிறுவனம் சேர்த்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததிலிருந்தே இரண்டிற்கும் பொதுவாக பல அப்டேட்களை வெளியிட்டு வந்துள்ளது. அதன்படி இந்த முறை வாட்ஸ்அப் குரூப்பில் அதன் பொதுவான கருத்துக்களைப் பதிவிட, ஒரு குரூப்பின் தன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் அதற்கு சிறு விளக்கத்தை பதிவிடுவதற்கு ஏதுவாக description என்ற வசதியை புதிதாக இணைத்துள்ளனர். இதற்கு முன்னதாக பயனர்கள் ஸ்டேட்டஸ் மூலம் அவர்களின் நிலையை உணர்த்தும் விதத்தில் ஒரு வசதி செயல்பட்டு வருவதைப் போல் இந்த வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு குரூப்பில் உள்ள பயனரை தேடிக் கண்டறியும் வசதி மற்றும் வாய்ஸ் காலின் இடையே அதனை வீடியோ காலாக மாற்றம் செய்து கொள்ளும் வசதியையும் இதனுடன் ஃபேஸ்புக் நிறுவனம் இணைத்துள்ளது. இந்த சோதனையை ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த வருடம் முதல் முயற்சி செய்து வந்துள்ளது. இதன் சோதனை ஓட்டங்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய அப்டேட்டில் இந்த வசதிகள் வெளியாகி உள்ளது. வெர்ஷன் 2.18.54 பயன்படுத்தும் நபர்கள் இந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ள இயலும்.

Blackboard Jungle. | ஆசிரியர் மாணவர் பற்றிய கதை :

நகரின் பின்தங்கிய பகுதியில் ஒரு பள்ளி.
போதை, வன்முறையில் தோய்ந்த வளரிளம்பருவ மாணவர்கள்.
கல்வியில் ஒரு மாற்றமாக பாடங்களுடன் தொழிற்கல்வியும் கற்பிக்கப்பட்ட காலம்.
கற்பித்தலில் ஆர்வமுடன் புதிய ஆசிரியர் வருகிறார். டேடியே என்பது அவர் பெயர்.
மாணவர்களின் ஒழுங்கீனச்செயல்கள் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது‌.
தலைமையாசிரியர் முதல் மூத்த ஆசிரியர்கள் அனைவருமே அவர் கூறுவதை ஏற்காமல் மாணவர்கள் அமைதியானவர்கள் என்று கூறுகின்றனர்.
வகுப்பிற்குப் போ. மாணவர்களைப் பார்த்து நின்று பாடம் நடத்திவிட்டு வந்துவிடு. அவர்களுக்கு உன் முதுகைக் காட்டிவிடாதே. வேறு எதையும் கவனிக்காதே. என்பது மூத்த ஆசிரியரின் அறிவுரை.

ஆசிரியர் மீது எதையாவது எறிவது, அவரின் பொருட்களை உடைத்தெறிந்து, பெண் ஆசிரியரை மானபங்கம் செய்ய முயல்வது என்று மாணவர்களின் செயல்கள் அனைத்துமே வன்முறையின் உச்சம்.

இருந்தாலும் தொடர்ந்த முயற்சியால் மாணவர் மனங்களை மாற்ற முடியும் என்று டேடியே நம்புகிறார்.

ஆசிரியருக்கு வேறு தொடர்பு இருக்கிறது என்று அவர் மனைவிக்குக் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. பார்த்து எழுதக்கூடாது என்று எச்சரிக்கும் போது ஒரு மாணவர் கத்தியைக்காட்டி மிரட்டுகிறார்.
கத்தியைப் பறிக்கும் போராட்டத்தில் ஆசிரியரின் கையில் வெட்டுக்காயம் ஏற்படுகிறது.
சிறிய கண்டிப்புடன் அவனையும் அவனது நண்பரையும் ஆசிரியர் மன்னிக்கிறார்.
மாணவர்களிடையே மாற்றம் மலர்கிறது.

வகுப்பறை ஒரு வித்தியாசமான போர்க்களம். குழந்தைகளின் வயதுக்கேற்ற சேட்டைகளைச் செய்கிறார்கள். ஆசிரியர் தமது பக்குவத்திற்கேற்ப செயல்படவேண்டும். மாற்றம் என்பது நொடியில் மலர்வதல்ல. தொடர்ந்த முயற்சியின் கனி என்பதைச் சொல்லும் படம்
கரும்பலகைக்காடு.

முக்கியக் குறிப்பு.
இந்தப்படம் வெளியான  ஆண்டு 1955.
நாம எவ்வளவு பின்தங்கி இருக்கோம்! நம்ம பசங்க இப்பதானே ஆரம்பிச்சிருக்காங்க!

- கலகல வகுப்பறை சிவா

பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் தமிழக அரசு திரும்பி பார்க்கும் வகையில் மிகப்பெரிய போராட்டம்!!!

கிராம மக்கள் முயற்சியால் அரசு பள்ளியில் 'ஏசி' வகுப்பறை :

நாகப்பட்டினம், நாகையில், அரசு துவக்கப் பள்ளியில், கிராம மக்கள் முயற்சியால், 'ஏசி' வகுப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது.நாகை, அக்கரைப்பேட்டை டாடா நகரில், ஊராட்சி துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம்வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில், மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், தன்னிறைவு திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. கிராம மக்கள் பங்களிப்பாக 1.50 லட்சம் மற்றும் அரசு நிதியாக மூன்று லட்சம் என, 4.50 லட்ச ரூபாய் மதிப்பில், இவை அமைக்கப்பட்டன.மேலும், கிராம மக்கள் சார்பில், 10 லட்ச ரூபாய் செலவில், பள்ளிக்கு தேவையான தளவாடப் பொருட்கள், அனைத்து வகுப்பறைகளுக்கும், 'லேப்டாப்' மற்றும் ஒரு வகுப்பறைக்கு குளிர் சாதன வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் சுரேஷ்குமார் பங்கேற்று, ஸ்மார்ட் வகுப்புகளையும், 'ஏசி' வகுப்பறையையும் துவக்கி வைத்தார். 

புதிதாக 700 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்

வரும் கல்வி ஆண்டில் 200 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் புதிதாக 700 பேருக்கு ஆசிரியர் வேலை கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டில் 100 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால், 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால், 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் உருவாக வாய்ப்புள்ளது.
பதவி உயர்வு, நேரடி நியமனம்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களைப் பொருத்தவரையில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படும். அதன் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் பதவியில் 250 காலியிடங்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 450 காலியிடங்களும் (மொத்தம் 700 காலியிடம்) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்படும்.ஏற்கெனவே, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில்1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

வெயிட்டேஜ் மதிப்பெண்

எனவே, தற்போது அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட இருப்பதால் உருவாகும் காலியிடங்களைச் சேர்த்து கணிசமான இடங்கள் தகுதித்தேர்வு வெயிட் டேஜ் மதிப்பெண் முறையிலும் (பட்டதாரி ஆசிரியர்கள்), ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட் டித் தேர்வு மூலமாகவும் (முதுகலை ஆசிரியர்கள்) நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத் தேர்வு வினாத்தாள் கடினம் - கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன்

10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்தது பற்றி கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். 

2018-2019 ம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெற கல்வி நிலையங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31

உதவித் தொகை
சிறுபான்மையினர் மாணவர்கள் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெற அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் 1 முதல் 12ம் வகுப்பு, வாழ்க்கை தொழிற்கல்வி, ITI, பாலிடெக்னிக், பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல் மற்றும் மருத்துவம், M.Phil ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும் கிறிஸ்தவ, முஸ்லிம், புத்த, சீக்கிய, ஜெயின், பார்லி மதத்தை சேர்ந்த சிறுபான்மை மாணவ மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற அனைத்து கல்வி நிலையங்களும் இணைய தளத்தில் பதிவு செய்து பயனீட்டாளர் குறியீடு பெற்றதை உறுதி செய்ய வேண்டும்.
பதிவு செய்தவர்கள் மட்டுமே 2018 - 2019 ம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற முடியும்.

கல்வி உதவித் தொகை பெற பதிவு செய்ய CLICK HERE

10, 11ஆம் வகுப்பு தேர்வுகளில் வினாத்தாள் கடினம் - கருணை மதிப்பெண் வழங்கப்படுமா? கல்வி அமைச்சர் பதில்

10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்தது பற்றி கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

பிளஸ் 1 தேர்வு எழுத முடியாமல் திணறும் மாணவ, மாணவிகள்!!

பழைய புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு!!!

புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது.
ஆண்டு தோறும் புதிய புத்தகங்கள் அச்சிடுவதால், காகிதத்துக்கு அதிக தேவை
ஏற்படுவதாகவும், அதனால், மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதாகவும், டில்லி பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வில், ஸ்ரீகாந்த் கடே என்பவர், வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளிலும், பழைய புத்தகங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மரங்களின் அழிப்பை குறைக்கும் வகையில், புத்தகங்கள் அச்சிடுவதையும் குறைக்க வேண்டியுள்ளது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும், அடுத்த வகுப்புக்கு மாறும், பழைய மாணவர்களின் புத்தகங்களை சேகரித்து வைத்து, அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக புத்தக வங்கியை துவங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

15/3/18

நாளை 16.03.2018 அன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு

வாழ்த்துக்கள் : 

 வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

* தேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றத்தைத் தவிர்த்திட தேர்வு அறைக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிடவேண்டும்.

*கண்டிப்பாக Mobile எடுத்துசெல்லக்கூடாது.

* நுழைவு சீட்டு உள்ளிட்ட. பேனா,பென்சில் கையோடு எடுத்துச்செல்லுங்கள் .

* விடைத்தாள் வழங்கப்பட்டப் பிறகு உங்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு எண்ணும் புகைப்படமும் சரிபார்த்துக்கொண்டு,
தவறானது என்றால் உடனடியாக அறைக் கண்காணிப்பாளரிடம் தெரிவித்து உரியதைப் பெற்றுக்கொள்ளவும்.

*நம்பிக்கையோடு எழுதுங்கள் அடித்தல்- திருத்தலின்றி எழுதுங்கள் , வெற்றி நிச்சயம்.

*பெற்றோர்கள் தன் குழந்தைகளிடம் வருத்தம் அளிக்கும் வார்த்தைகளை பேசக் கூடாது.

*ஆறுதலான சொற்கள் வழியாகவே குழந்தைகளிடம் அற்புதத்தை அறியமுடியும்.

* திணிக்கும் வார்த்தைகளைவிட தித்திக்கும்  வார்த்தைகளே திருப்தியளிக்கும்.

 வாழ்த்துகள்

சென்னை மெட்ரோ ரயில் நாளை (17/03/2018) நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்​



​குறிப்பு: தயவு செய்து மற்ற Whatsapp Groupku பகிரவும்​

​Click Here​--> https://goo.gl/LRJGrn 
  
​தேவையான கல்வி தகுதி:​  B.Tech/B.E

​சம்பளம் :​ Rs.40,000/-

​மொத்த காலியிடங்கள்:​ 3434+

​நுழைவு கட்டணம்:​  அனுமதி இலவசம்

​தேர்வு முறை:​ Walkin

*நாள்: * 17/03/2018

​இடம் :​ chennai

​நேரம்:​ 8.00AM to 1.00PM.

​Venue Details Click This Link​--> https://goo.gl/LRJGrn

​இது மற்ற பல நண்பர்களுக்கு உதவலாம்​

பள்ளி கல்வித் துறையில் மாற்றம்; அரசு முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு



பள்ளிக் கல்வித் துறை யில், மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள தற்கு, ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு, ஒரு ஆய்வாளர்; அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நிர்வகிக்க, மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி இருப்பர். தொடக்க கல்வியில், மாவட்டத்துக்கு குறைந்தபட்சம், இரண்டு தொடக்க கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், மூன்று வகை நிர்வாகங்களை கலைத்து விட்டு,ஒரே ஒரு முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி பதவியை மட்டும் வைத்திருக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதன்படி, வட்டாரஅளவில், அனைத்து அரசு மற்றும் தனியார் நர்சரி, மெட்ரிக், மேல்நிலை பள்ளி களின் நிர்வாகங்களை, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி அதிகாரி கவனிப்பார். இந்த திட்டத்தால், ஏ.இ.இ.ஓ.,க்கள், தற்போது கவனிக்கும், தொடக்க பள்ளி நிர்வாகத்தை மட்டுமின்றி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் நிர்வாகத்தையும் கவனிக்க வேண்டும்.

அதனால், வேலைப்பளு பல மடங்கு அதிகரிப்பதுடன், நிர்வாக பணிகளை முடிக்க, காலதாமதம் ஏற்படும் என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:தற்போதைய நிலையில், மூன்று இயக்குனரகத்துக்கும் தனியாக, மாவட்ட அளவில் அதிகாரிகள் இருப்பதே தொடர வேண்டும்.


அதிகாரிகள் எண்ணிக்கையை குறைத்து, ஏ.இ.இ.ஓ.,க்களுக்கு மட்டும், முழு அதிகாரத்தை கொடுத்தால், யார் பெரியவர் என்ற, அதிகார பிரச்னையும் அதிகரிக்கும்.ஏ.இ.இ.ஓ., பதவி என்பது, கீழ்நிலையில் உள்ள பதவி. உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஏ.இ.இ.ஓ.,க்களை விட சீனியர்களாக இருப்பதால், முரண்பாடுகள் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

2009 & TET ஆசிரியர்களுக்கு இன்றைய வழக்கு நிலவரம்...



👍👍நமது ஊதிய வழக்கானது இன்று (14/03/2018-புதன்கிழமை) சுமார் 2.15 க்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் முக்கிய வழக்குகளின் இறுதிகட்ட  விசாரணைப்பட்டியலில் இடம்பெற்று முதல் வழக்காக 166 வது பட்டியலில் இடம் பெற்ற வழக்கு 4.10 மணியளவிலும் அதனை தெடர்ந்த பிற வழக்குகளும்  விசாரணைக்கு வந்தது.

 விசாரணைப்பட்டியலில் 171 வது இடம்பெற்றிருந்த நமது வழக்கானது வழக்கறிஞரின் கடும்முயற்சியின் காரணமாக சுமார் 4.40க்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் ஒருநபர் ஊதியக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கான அரசாணையை நீதிமன்றத்தில் அளித்தனர்.

💪🏼💪🏼நமது தரப்பில் எழுந்த  நமது மூத்த வழக்கறிஞர் வழக்கின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார்.சுமார் 9600 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 7 வது  ஊதியக்குழுவின் ஊதியத்தை புறக்கணித்து தொடர்ந்து 6 வது பழைய ஊதியத்திலே தொடர்கிறார்கள் என்ற தகவலை மிக அழுத்தமாக கூறினார்.

🤝🤝 நாங்கள் பல குழுக்களைப் பார்த்துவிட்டோம் அரசு தரப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் ஊதியக்குழுவானது ஏழாவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைவதற்கானது என்றும் நாங்கள் கேட்பது 6 ஆறாவது ஊதியக்குழுவின் பிரச்சினைகள் தொடர்பானது என்ற சிறப்பாக அரசு தரப்பில் பதில் சொல்லமுடியாத அளவிற்கு சிறப்பாக வாதாடினார்.

அரசு தரப்பில் பதில் ஏதும் கூற முடியவில்லை.
அவர்களிடம்  இறுதியாக  இருக்கும் ஒரே ஆயுதம் ஒருநபர் ஊதியக்குழு என்பது தான். அதற்கும் நமது தரப்பில் சரியான பதிலடி கொடுத்துள்ளோம். நீதியரசரும் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டதோடு அரசுதரப்பில் சொல்லப்பட்ட கோரிக்கைகளையும் நிராகரித்தார்.

 *அதனைத்தொடர்ந்து அரசு தரப்பில்
மேலும் ஒரு தேதி கேட்கப்பட்டது. வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பெரிய வழக்குகள் இறுதிகட்ட விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாதநிலையுள்ளதால் அடுத்த வாரம் ஒரு தேதியில் விசாரணையை வைத்துக்கொள்ளலாம் என்று நீதியரசர் கூறியதால

் மீண்டும் வரும் 21.03.2018 புதன் கிழமை2.15 க்கு அடுத்தகட்ட  இறுதி விசாரணைக்கு நமது வழக்கு வருகிறது.

🗣🗣இதற்கு தமது வழக்கறிஞரின் சாமர்த்தியமான வாதம் மற்றும் நாம் தொடர்ந்து பழைய ஊதியத்தை வாங்கி வருவதே  நமது வழக்கை வெற்றிக்கு அழைத்து செல்கிறது.


இதைவிட்டுவிட்டு நாம் அவசரப்பட்டு புதிய ஊதியத்தை வாங்கினால் நம் வழக்கின் வெற்றி சில ஆண்டுகள் கூட  தாமதமாகும். நம் வெற்றி நம்கையிலே!!!

இவண்
2009& TET 
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு : முக்கிய குற்றவாளி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் வெளிநாடு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வினை 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினர். அதில் 2200 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் இந்த தேர்வு முடிவில் முறைகேடு நடந்து இருப்பதாகவும் மேலும் வெளியிடப்பட்ட மதிப்பெண்களில் மோசடி நடந்து இருப்பதாகவும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் உமா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 156 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் அடிப்படையில் மின்வாரிய ஊழியர் சுப்பிரமணியனை தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். 3 மாதங்களாக சுப்பிரமணியன் தலைமறைவாக உள்ள நிலையில் அவர் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர். அதேபோல் டே்ட்டா என்ட்ரி ஊழியர்களுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட ராஜேஷ் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். முக்கிய ஆவணங்களுடன் ராஜேஷ் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. முறைகேடு வழக்கில் 156 பேர் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தரகர்கள், டேட்டா எண்ட்ரி நிறுவன ஊழியர்கள் என இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருவரையும் விரைவில் கைது செய்யவில்லை எனில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

1.36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

இந்தியாவின் முன்னணி 8 துறைகளில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சுமார் 1.36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ள காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையில், ‘இந்தியா முழுவதும் 8 துறைகளில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மொத்தம் 1.36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உற்பத்தித் துறையில் 89,000 வேலைவாய்ப்புகளும், கல்வித் துறையில் 21,000 வேலைவாய்ப்புகளும், போக்குவரத்துத் துறையில் 20,000 வேலைவாய்ப்புகளும், வர்த்தகத் துறையில் 14,000 வேலைவாய்ப்புகளும், சுகாதாரத் துறையில் 11,000 வேலைவாய்ப்புகளும், தங்கும் விடுதி மற்றும் உணவகத் துறையில் 2,000 வேலைவாய்ப்புகளும், ஐடி/பிபிஓ துறையில் 1,000 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

கட்டுமானத் துறையில்தான் பின்னடைவாக 22,000 பணியிழப்புகள் நடந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூலை - செப்டம்பர் காலாண்டில் உருவாக்கப்பட்ட 1.36 லட்சம் வேலைவாய்ப்புகளில் ஆண்கள் 62,000 பேரும், பெண்கள் 74,000 பேரும் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர் என்றும் தொழிலாளர் பணியகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு அங்கமான இந்தத் தொழிலாளர் பணியகம் 2016ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதலே ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த விவரங்களை ஆய்வறிக்கையாக வெளியிட்டு வருகிறது. விவசாயம் தவிர்த்து இதர எட்டு துறைகளை மையமாக வைத்து இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்படுகிறது.

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்

பட்ஜெட் கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர் பாக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவும் திட்ட மிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 15-ம் தேதி தொடங்கும் என்றும் அன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.அதன்படி, நாளை பேரவை கூடுகிறது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அத்துடன் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதால் பட்ஜெட்டில் சில புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கும். அதில் பட்ஜெட் மீது எத்தனை நாள் விவாதம் நடத்துவது, பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக் கப்படும்.


நேரம் ஒதுக்கவில்லை

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்குபடுத்தும் குழு ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக கடந்த பிப்.22-ம் தேதி தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியது. முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் பிரதமரை சந்தித்து மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்காக பிரதமரிடம் நேரம் கோரப்பட்டது. ஆனால், நேரம் ஒதுக்கப்படவில்லை.தமிழக குழுவை பிரதமர் சந்திக்காததற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன.

சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அக்கட்சிகள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றன. எனவே, பட்ஜெட் தாக்கல் முடிந்தும் நாளை மாலை அல்லது 16-ம்தேதி காலை சிறப்புக் கூட்டத்தை கூட்டி, இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட லாம் என்று கூறப்படுகிறது.

சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதையே: ஸ்டீபன் ஹாக்கிங்கின் அந்த பேட்டியை மறக்க முடியுமா?

எளிய மனிதர்களும் அண்டவெளி அறிவியல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்ட ஸ்டீபன் ஹாக்கிங் 'தி கார்டியன்' இதழுக்கு ஒருமுறை அளித்தப் பேட்டி உலகளவில் வாதவிவாதங்களுக்கு வழிவகுத்தது.

எல்லா மதங்களுமே சொர்க்கம், நரகம் குறித்து தத்தம் மக்களுக்கு போதிக்கிறது. ஆனால், எப்போதுமே மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட கருத்துகளை தெரிவித்த ஸ்டீபன் ஹாக்கிங் ஒருமுறை "சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை: எல்லாம் கற்பனைக் கதையே" என்றார்.
இதற்காக அவர் பல்வேறு மதத்தினரின் எதிர்ப்பையும் சம்பாதித்தார் என்பது வேறு கதை.


தி கார்டியனுக்கு அவர் அளித்த பேட்டியில், "மனித மூளையானது ஒரு கணினியைப் போன்றது. ஒரு கணினியின் உபகரணங்கள் பழுதாகி அது இயக்கத்தை நிறுத்திவிட்டால் எப்படி அது எங்கும் செல்வதில்லையோ அப்படித்தான் மனித உயிரும் மூளை தனது கடைசி நிமிட இயக்கத்தை நிறுத்தியவுடன் மனிதன் மரித்துப்போகிறான். அவர் அதன் பின்னர் சொர்க்கத்துக்கும் செல்வதில்லை, நரகத்துக்கும் செல்வதில்லை. இவை எல்லாம் வெறும் கற்பனைக் கதை. இருள் மீது பயம் கொண்ட மக்களுக்காக சொல்லப்பட்ட கதை" என்றார்.

மேலும் அவர் கூறும்போது, "என்னுடைய மரணம் இளம் வயதிலேயே நிகழும் என்று சொல்லப்பட்டபது. ஆனால், அந்த கணிப்பைத் தாண்டியும் 49 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு மரணத்தின் மீது பயமில்லை. அதேவேளையில், மரணிக்க வேண்டிய அவசரத்திலும் இல்லை. நான் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன" என்றார்.
மதகுருமார்களின் எதிர்ப்பை சம்பாதித்த ஸ்டீபன் ஹாக்கிங்.

2010-ம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங் 'தி கிராண்ட் டிஸைன்', (The Grand Design) என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அதில் அண்டம் உருவானவிதத்தையும் அண்டம் ஏன் இருக்கிறது என்பதை விளக்கவும் எந்த படைப்பாளியும் (கடவுளும்) தேவையில்லை எனக் கூறியிருந்தார். இந்தப் புத்தகம் பல்வேறு மத குருமார்களிடமும் எதிர்ப்பை சம்பாதித்தது.
யூத மதகுரு லார்ட் சாக்ஸ் என்பவர், "ஸ்டீபன் ஹாக்கிங் தர்க்கவாதங்களை கட்டுக்கதைகள் என்று உடைத்தெரியும் குற்றத்தை செய்து கொண்டிருக்கிறார்" எனக் குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தகக்து. 

கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையிலான குழு அறிக்கை அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பெற்றோர்-ஆசிரியர்கள் கலந்துரையாடல், பிற திறன்களில் மாணவர்களின் நிலை, கல்விச்சூழலில் சந்திக்கும் சவால் குறித்தும் ஆய்வு செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது

குரூப் 3 தேர்வு முடிவு: 5 ஆண்டுக்கு பின் வெளியீடு :

20 காலி பணியிடங்களுக்கான குரூப் 3 தேர்வு முடிவு 5 ஆண்டுக்கு பின் வெளியிடப்பட்டுள்ளது. 03.08.2013ல் நடைபெற்ற எழுத்துத்தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். 46,797 விண்ணப்பதாரர்களில் 45,802 பேரின் மதிப்பெண், தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. 

நபார்டு வங்கி அதிகாரிகள் பணிக்கு அழைப்பு

அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு தேசிய வங்கியில் 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான 92 உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 92

பணியிடம்: இந்தியா முழுவதும் 

பணி: Assistnat Manager in Grade A (Rural Banking Service) - 92

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. பொது - General - 46 
2. கால்நடை பராமரிப்பு - Animal Husbandry - 05 
3. பட்டய கணக்காளர்  - Chartered Accountant - 05 
4. பொருளாதாரம் - Economics - 09 
5. சுற்றுச்சூழல் பொறியியல் - Environmental Engineering - 02 
6. உணவு பதப்படுத்துதல், உணவு தொழில்நுட்பம் - Food Processing / Food Technology - 04 
7. வனவியல் - Forestry - 04 
8. நில மேம்பாடு (மண் விஞ்ஞானம்) - Land Development (Soil Science) / Agriculture - 08 
9. சிறு நீர்ப்பாசனம் (நீர் வளங்கள்) - Minor Irrigation (Water Resources) - 06 
10. சமூக வேலை - Social Work - 03

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Manager (RDBS) Agriculture - 08 

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

வயதுவரம்பு: 01.03.2018 தேதியின்படி 21 - 30குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.28150-1550(4) -34350-1750(7) - 46600 - EB - 1750(4) - 53600-2000(1)-55600 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க, கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.04.2018

ஆன்லைன் முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி: 12.05.2018

ஆன்லைன் முதன்மை தேர்வு நடைபெறும் தேதி: 06.06.2018

ஆன்லைன் எழுத்து தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டை  27.04.2018 அன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1303180258Advt%202018-Grade%20A-Final-13.03.2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

சொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்க முக்கியமான 8 ஆவணங்கள் :

முதன் முதலாக சொத்து வாங்குவதென்பது ஒரு வித பதட்டத்தையும்,மகிழ்ச்சியையும் சேர்ந்த உணர்வை கொடுக்கும். அப்படி வாங்கப்படும் ஒரு சொத்து நிலையானதாக இருக்கக் கீழ் கண்ட 8 அத்தியாவசிய ஆவணங்களை சரி பார்த்துகொள்ளுங்கள்.


1. டைட்டில் டீட் (Title deed)
ஒரு சொத்தினை வாங்குவதற்கு முன் அதன் அசல் டைட்டில் டீடை வாங்கி வக்கிலை வைத்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அந்தச் சொத்து அடைமானத்திலோ அல்லது எந்த ஒரு தனி நபருக்கு விற்கும் உரிமையையோ கொடுக்கப்பட்டிருக்கக் கூடாது. அதில் விற்பவரின் விவரம் மட்டுமே இருக்க வேண்டும்
2. சோதனைச் சான்றிதழ் (Encumbrance certificate)
பதிவுத் துறை அலுவலகத்திலிருந்து சோதனைச் சான்றிதழை பெற்று அந்த சொத்தின் மீது சட்ட ரீதியாக எந்த ஒரு கடனோ வில்லங்கமோ இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சொத்தை வைத்து நடத்தப்பட்டிருக்கும் பரிவர்த்தனைகள் பற்றி இது சொல்லும்.
3. சர்வே ஸ்கெட்ச் (Survey sketch)
சர்வே துறையிலிருந்து சொத்தின் திட்ட வரைபடத்தை பெற்று, விற்பவர் கூறிய அளவுகள் அதில் கச்சிதமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
4. ரிலீஸ் சான்றிதழ் (Release certificate)
நீங்கள் வாங்கவிருக்கும் சொத்து இதற்கு முன் வங்கி கடனில் இருந்திருந்தால் அந்தப் பணம் முழுவதுமாக திரும்ப செலுத்தப்பட்டு வங்கியிலிருந்து ரிலீஸ் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒருவேளை எதிர்காலத்தில் அந்த சொத்தை அடமானை வைக்க நினைத்தாலும் இந்த சான்றிதழ் உதவும்.
5. வரி ரசீதுகள் (Tax receipts)
நீங்கள் வாங்கவிருக்கும் சொத்தினை விற்பவர் அதுவரை சரியாக வரி செலுத்தியிருக்கிறாரா என  வரி செலுத்திய ரசீதுகளை பெற்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
6. விற்பனை பத்திரம் (Sale deed)
விற்பனை வரைவை வக்கீலை வைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவேண்டும்.
7. தாய் பத்திரம் (Mother deed)
தாய் பத்திரம்தான் ஒரு சொத்தின் உரிமையை பற்றி அதன் ஆரம்பத்தில் இருந்து சொல்லும். அதில் ஏதேனும் தகவல் விடுபட்டிருந்தால் பதிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
8. பவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)
சொத்தினை விற்பவர், அதை விற்கும் உரிமையை வேறு ஒரு தனி நபருக்கு அளித்திருந்தால் இந்த ஆவணம் அவசியம்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ளவை மட்டுமல்லாமல் நீங்கள் வசிக்கும் நகராட்சிக்கு / ஊராட்சிக்கு உட்பட்டு விதிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள். பொதுவாக ஒரு சொத்தை வாங்கும் போது வக்கீலின் வழிகாட்டுதலுடன் வாங்குவது நல்லது. முக்கிய ஆவணங்களை சரிபார்த்து வாங்கி வைக்கும்போது சொத்து வாங்குதல் நல்ல அனுபவமாக இருக்கும்.

05-04-2018 க்குள் CCE சார்பான அனைத்து பதிவேடுகளும் முடிக்கப்பட்ட வேண்டும்- DEEO உத்தரவு - செயல்முறைகள்:

நீட்: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நாளை முதல் அவகாசம்

நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதனை வியாழக்கிழமை (மார்ச் 15) முதல் இணையதளத்தில் மேற்கொள்ளலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ நீட் தேர்வு இயக்குநர் டாக்டர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிபிஎஸ்இ மூலம் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தும், பல மாணவர்கள் விண்ணப்பங்களில் தவறான விவரங்களை அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. தவறான விவரங்கள் அளிப்பதனால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் தர வரிசையில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, 100 சதவீதம் சரியான விவரங்களை உறுதி செய்து கொள்ளும் வகையில், விண்ணப்பங்களில் ஒருமுறை திருத்தம் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 
அதன்படி மார்ச் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இணைதயளத்திலேயே திருத்தங்களை மேற்கொள்ளலாம். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் திருத்தங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில், மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றொரு வாய்ப்பு கண்டிப்பாக வழங்கப்பட மாட்டாது. 
திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு, மாணவர்கள் அந்தத் திருத்தத்துக்கான விவரங்களை நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். திருத்தம் மேற்கொள்வது தொடர்பான அறிவுறுத்தல்களை பெற்றோர் கவனமாகப் படித்து, தங்கள் பிள்ளைகள் திருத்தங்கள் மேற்கொள்ள உதவ வேண்டும்.

சிபிஎஸ்இ பள்ளிகள், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பாடத் திட்டத்தை பின்பற்றுகின்றனவா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சிபிஎஸ்இ பள்ளிகள், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பாடத் திட்டத்தை பின்பற்றுகின்றனவா என்று மத்திய அரசுக்கு சென்னை 
உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஆய்வு செய்ய கூடுதல் நிதி ஒதுக்குவது எப்போது? எவ்வளவு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்பது குறித்து மார்ச் 27-க்குள் பதிலளிக்க உத்தரவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பக்கத்துக்கு பக்கம் சித்திரம், க்யூ.ஆர்., கோடு, சி.பி.எஸ்.இ.,க்கு சவால்விடும் தமிழக பாட புத்தகம்

பக்கத்துக்கு பக்கம் வண்ண படங்கள், சித்திரங்கள் மற்றும், க்யூ.ஆர்., கோடு என, புதுவிதமாக, தமிழக பாடபுத்தகம் தயாராகியுள்ளது. புத்தகத்தில் பாடமாக மட்டுமின்றி, மொபைல் போனில், 'வீடியோ' வாயிலாகவும் படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பக்கத்துக்கு பக்கம் சித்திரம், க்யூ.ஆர்., கோடு: சி.பி.எஸ்.இ.,க்கு சவால்விடும் தமிழக பாட புத்தகம்தமிழகத்தில், 13 ஆண்டு களுக்கு பின், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும், ஏழு ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது.


இந்த ஆண்டு அமல்


புதிய பாடத்திட்டம், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு சவால் விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.ஆந்திரா, கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் பாடத்திட்டத்தையும்,

லண்டன், 'கேம்பிரிட்ஜ்' பாடத்திட்டத்தையும் கலந்து தயாரிக்கப்பட்டு உள்ளது.

புதிய பாடத்திட்டத்துக்கான புத்தகங்கள், பல உயர்கல்வி நிறுவன பேராசிரியர்களின், நேரடி மேற்பார்வையில் உருவாகி வருகின்றன.முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரவுள்ளது.

அதேநேரம், இரண்டு, மூன்று, நான்கு வகுப்புகளுக்கான பாட புத்தகங்களும் தயாராகி உள்ளன. இந்த பாட புத்தகங்களில், வண்ண படங்கள், சித்திரங்கள், பார்கோடு என, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு பக்கத்திலும், பாடங்கள் அருகே, அதற்கான படங்களை வீடியோவாக பார்க்க, டிஜிட்டல் குறியீடு மற்றும் க்யூ.ஆர்., கோடு குறிக்கப்பட்டுள்ளது. இந்த குறியீடுகளை, மொபைல் போன், 'ஆப்' பயன்படுத்தி, ஸ்கேன் செய்து வீடியோவாக பார்க்கலாம்.


செய்முறை


அதேபோல், பாட புத்த கத்தின் முடிவில், 'ஆக்டிவிட்டீஸ்' என்ற, செய்முறை இடம் பெற்றுள்ளது.


இந்த செய்முறையை பயன்படுத்தி, வினாக்களை கேட்கும் முறை நடைமுறைக்கு வருகிறது. பாடங்களில் இடம் பெற்றுள்ள, பெரும்பாலான அம்சங்களில், வண்ண புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ரோபாட்டிக், ரசாயன, வேதியியல், சோலார் பேமிலி என்ற சூரிய குடும்பம் குறித்து, மூன்றாம் வகுப்பில் இருந்தே, பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பின்பற்றக்கூடிய, மத்திய அரசின், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் புத்தகங்களுக்கு சவால் விடுக்கும் வகையில், தமிழகத்தின் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் அமைந்துள்ளன.