யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/16

CCE 1 TO 10 STD 2 WEEK WORKSHEET MATHS QUESTION DOWNLOAD !!!

CCE 1 TO 10  STD 2 WEEK WORKSHEET MATHS QUESTION DOWNLOAD....https://app.box.com/s/8t83v0lj8p19e9ygfopzpqigbwp0yqbe

யுபிஎஸ்சி (UPSC) பணியில் உள்ள 463 காலியிடங்களுக்கான தேதி அறிப்பு !!

யுபிஎஸ்சி (UPSC) பணியில் உள்ள 463 காலியிடங்களுக்கான தேதி அறிப்பு.இந்த அரிய வாய்ப்பினை மிஸ் பண்ணிடாதிங்க.

*Employment Type:* Central Govt Jobs

*Click here:* https://www.yoyojobs.com/upsc-recruitment-2016-463-combined-defence-services-examination-cds-2017-posts-apply-online/


*கல்வி தகுதி:* Degree

*காலியிடங்கள்:* 463

*தேர்வு செய்யப்படும் முறை:* Written examination,Interview

*Application Form:* https://goo.gl/15rks9

*கடைசி தேதி:* 02-12-2016

*இந்த தகவல் உங்களுக்கு பயன்படவிட்டலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் கண்டிபாக SHARE செய்யுங்கள்.*

ரூபாய் நோட்டை மாற்ற கட்டுப்பாடு ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!!

பழைய ரூபாய் நோட்டை மாற்ற, புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

என்ன பிரச்னை?

அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், கோர்ட் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை. இதேநிலை தொடர்ந்தால், தெருக்களில்கலவரம் தான் நடக்கும்.

தற்போது பிரச்னை தீவிரமாக உள்ளது. ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை தான் மத்திய அரசு வாபஸ் பெற்றது. ஆனால் ரூ.100 நோட்டுக்களுக்கு என்ன ஆனது? கடந்த முறை வழக்கு விசாரணையின் போது, மக்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், தற்போது பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றும் அளவு ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன பிரச்னை நிலவுகிறது. பணம் அச்சிடுவதில் பிரச்னை உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

நிவாரணம்:

இதற்கு பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர், பணம் அச்சிடுவதில் மட்டும் பிரச்னை இல்லை. இந்தியா முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான வங்கிக்கிளைகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது. ஏ.டி.எம்., மையங்கள் மறு சீரமைக்கப்பட வேண்டியுள்ளது. விவசாயிகள், வர்த்தகர்கள், திருமணம் ஏற்பாடு செய்துள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

நீதிபதிகள் நியமனம்: மத்திய அரசு முடிவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!!!

கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் பட்டியலில் இடம்பெற்ற, 43 பேரின் நியமனத்தை ரத்து செய்த, மத்திய அரசின் நடவடிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
மோதல்:

ஐகோர்ட்களில் காலியாக உள்ள நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஐகோர்ட்களில் நீதிபதிகளாக நியமிக்க 77 பேரது பட்டியலை சுப்ரீம் கோர்ட்டின் கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதில் 34 பேரது பெயரை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, 43 பெயரை திருப்பி அனுப்பியது. இதனை கடந்த 11ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி தாக்கூர் கூறுகையில், 43 நீதிபதிகள் பெயரை நிராகரித்த மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது. அவர்களின் பெயர்களை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறி, இந்த பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

பணபரிவர்த்தனைக்கு கறும்புள்ளி வேண்டாம்: தேர்தல் ஆணையம் கடிதம்!

செல்லாத நோட்டாக அறிவிக்கப்பட்ட பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றும்போது மீண்டும் மீண்டும் நோட்டுகளை மாற்ற வருகிறவர்களுக்கு கையில் கறும்புள்ளி வைக்கும் முடிவை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையம் மத்திய நிதி அமைச்சகத்துக்குக் கடிதம்

எழுதியுள்ளது. கடந்த புதன்கிழமை (16-11-2016) அன்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ், வங்கிகளில் ரூபாய் 500, 1000 நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு விரலில் கறும்புள்ளி வைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். சிலர் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் நோக்கோடு, அப்பாவி மக்களை குழுக்களாக ஒருங்கிணைத்து, வங்கியின் ஒரு கிளையிலிருந்து மற்ற கிளைக்கு அனுப்பி கொண்டிருக்கின்றனர் என அமைச்சகத்து புகார்கள் வருகின்றன. இதனால், சில மக்களால் மட்டுமே பணத்தை மாற்ற முடிந்தது. இதன் காரணமாகவே, ‘கறும்புள்ளி’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு இடது கையில்தான் மை வைக்கப்படுகிறது, ஆனால், வங்கியில், வலது கையில்தான் கறும்புள்ளி வைக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இந்த நடவடிக்கையை பலரும் வன்மையாக விமர்சித்து இருக்கின்றனர். மேற்கு வங்காள முதலமைச்சர் மமதா பானர்ஜி, ட்விட்டரில் தன் கண்டனத்தை தெரிவித்திருந்தார். ‘அரசு தன் சொந்த மக்களையே நம்பாதது தான் இதிலிருந்து தெரிகிறது’ என்று கூறியிருந்தார். அதே நேரத்தில், தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இவ்வாறு விரலில் கறும்புள்ளி வைப்பது குறித்து, தேர்தல் ஆணையத்தின் கருத்து என்னவாக இருக்கும் என்பது பற்றியும், மம்தா பானர்ஜி எச்சரித்து இருந்தார். நவம்பர் 19ஆம் தேதி, அருணாச்சலப்பிரதேசம், அச்ஸாம், திரிபுரா, மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தேர்தல்கள் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் கைகளில் கறும்புள்ளி வைக்கும் முடிவு தேர்தல் நடக்கும் மாநிலங்களில் இடைஞ்சலை உருவாக்கும். ஆகவே கைகளில் அழியாத மை வைக்க வேண்டாம் என்று நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

காவல் நிலையங்களில் பதிவாகும் FIR. இனி பதிவிறக்கம் செய்யலாம். ADGP சீமா அகர்வால் அறிக்கை...!!!

அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் !!

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி தரத்தை மேம்படுத்த அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியால்

இணையதளம் கற்றல் மற்றும் கற்பித்தலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலக்கட்டத்துக்கு அவசியமானதாகவும், தவிர்க்க இயலாததாகவும் இணைய வழி கல்வி இருக்கிறது. 2017 - 2018ஆம் ஆண்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இணைய வழி கல்வி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள 3,354 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வகுப்பறைகளை நேற்று அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் கடியம் ஸ்ரீஹரி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தரக ராம ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பஞ்சாரா மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இந்த தொடக்க விழா நடைபெற்றது. அப்போது பேசிய கடியம் ஸ்ரீஹரி, “தெலங்கானா அரசு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்றல் திறனை மேம்படுத்தவுள்ளது. எனவே வரும் காலங்களில் அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விழாவில் கலந்து கொண்ட பெகா சிஸ்டம்ஸ் நிறுவன இயக்குநர், "இத்திட்டம் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு தொடக்கமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் வகுப்பறைகள் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். இதன் மூலம் கற்பித்தல் மற்றும் கற்றல் முறை எளிமையாகும்.

கடந்த மாதம், தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் நடுநிலை பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், அதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பணமதிப்பிழப்பு: ஒரு பயனும் இல்லை - முன்னாள் ரிசர்வ் வங்கி துணை கவர்னர்!

'மத்திய அரசு பழைய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்ததன் மூலம் நமது பொருளாதாரத்துக்கு எந்த நன்மையையும் இல்லை' என்று முன்னாள் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி. சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக சக்ரவர்த்தி கடந்த 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பொறுப்பு வகித்தார் என்பது

குறிப்பிடத்தக்கது. 'தி இந்து' ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய பேட்டியின் தமிழாக்கம்…

மத்திய அரசு பழைய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்திருப்பதை பற்றி உங்கள் கருத்து?

மத்திய அரசின் இந்த முடிவால் நமது பொருளாதாரத்துக்கு எந்த நன்மையையும் இல்லை.

ஆனால், கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதே?

கறுப்புப் பணம் என்றால் என்ன? எந்த ரூபாய் நோட்டுகளும் கறுப்பல்ல. எல்லா ரூபாய் நோட்டுகளும் வெள்ளை தான். நமது அமைப்புதான் கறுப்புப் பணத்தை உருவாக்குகிறது. ஒருவர் தனது வருமான வரியை தாக்கல் செய்யாதபோதே அதே கறுப்புப் பணமாக மாறுகிறது. தற்போது மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு என்பது வரி செலுத்தாதவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது. மாறாக ரூபாய் நோட்டுகளை மட்டுமே ஒழிக்க உதவும்.

ஆனால், மத்திய அரசு கள்ள நோட்டுகளைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளதே..

நீங்கள் ஒரு கிலோ அரிசி வாங்கினால் அதில் ஒரு சில சிறிய கற்கள் இருக்கும். இப்போது நீங்கள் அதில் உள்ள கற்களை மட்டுமே எடுக்க வேண்டுமே தவிர, மொத்த அரிசியையும் தூக்கி வீசி விடக்கூடாது. அதேபோல தான், கள்ள நோட்டுகளை அடையாளம் கண்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான வருமான வரி அமைப்பு இல்லாதது போதுமானம் சட்ட நடவடிக்கைகள் இல்லாத காரணத்தினாலும் தற்போது பொது மக்கள் தங்களது சொந்தப் பணத்தை எடுக்க நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

புழக்கத்தில் உள்ள ரூபாய் 500, 1000 நோட்டுகளில் 90 சதவிகித ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளே என்ற தகவலா அவர்களுக்கு கிடைத்தது? என்னிடம் இது குறித்தான எந்த தகவல்களும் இல்லை. ஒருவேளை அவர்களிடம் இதுகுறித்து ஏதேனும் தகவல்கள் இருந்தால் அவர்கள் உடனடியாக பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு 10 லட்சம் ரூபாய் 1000 நோட்டுகளில் எத்தனை கள்ள நோட்டுகள் உள்ளது என்ற விவரத்தை அவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்தபோது நீங்கள் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்துள்ளீர்கள். அப்போது மத்திய அரசிடம் இருந்து ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏதேனும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதா?

ஆம். ரூபாய் நோட்டுகளை தடை விதிக்க வேண்டும் என்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பரிந்துரைத்தது. ஆனால், நாங்கள் அந்த பரிந்துரையை ஆலோசித்த பிறகு நாங்கள் இந்த முடிவை எடுக்கக்கூடாது என்று தெரிவித்து விட்டோம்.

அந்த பரிந்துரை முறையாக முன்வைக்கப்பட்டதா? அந்த பரிந்துரையை அமல்படுத்த மறுத்ததற்கான காரணம் என்ன?

அரசிடம் இருந்து வந்த பரிந்துரை அதிகாரப்பூர்வமாக வந்ததா அல்லது தொலைபேசி மூலமாக வந்ததா என்பது இங்கு பிரச்னை இல்லை. ஆனால் மத்திய அரசிடம் இருந்து அந்த பரிந்துரை வந்தது என்பது உண்மைதான். மத்திய அரசின் அந்த பரிந்துரையால் நமக்கு எந்தவிதமான விளைவுகளும் கிடைப்பதாக தெரியவில்லை. மேலும், அதனை அமல்படுத்த நாம் கொடுக்க வேண்டிய விலைதான் அதிகமாக இருக்குமே தவிர, அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் மிக மிக குறைவாக இருக்கும் என்பதை அறிந்ததால் நாங்கள் அந்த பரிந்துரையை அமல்படுத்த மறுத்துவிட்டோம்.

நனறி : தி இந்து

வேலைவாய்ப்பு: ஐடிபிஐ வங்கியில் பணியிடங்கள்!

ஐடிபிஐ (IDBI) வங்கியில் காலியாக உள்ள எக்ஸிக்யூடிவ் ஆபீசர் காலியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 500


பணியின் தன்மை: எக்ஸிக்யூடிவ் ஆபீசர்

கல்வி தகுதி: பட்டப்படிப்பு

சம்பளம்: Rs.17,000/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

கடைசி தேதி: 30.11.2016

மேலும் விவரங்களுக்கு என்ற http://careerpower.in/wp-content/uploads/2016/11/Detailed-Advertisement-for-post-of-Executive-2016.pdf இணையத்தள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கணினி தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

தமிழக அரசு பணியில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியில் சேர வேண்டுமானால் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கணினி சான்றிதழ் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், கணினி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு, இந்த சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒருவேளை பணிக்குத் தேர்வு செய்யப்பட்டால் தகுதிகாண் பருவத்துக்குள் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கணினி சான்றிதழ் தேர்வை தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தி வருகிறது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டிய சான்றிதழ் தேர்வு, 2017ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் www.tndote.org என்னும் இணையதள முகவரியில் நவம்பர் 11ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு நவம்பர் 18ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் ரூபாய் 530க்கான டிமாண்ட் டிராப்டுடன் சமர்ப்பிக்க நவம்பர் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ராஜேந்திர ரத்னு தெரிவித்துள்ளார்.

18/11/16

CCE -WORK SHEET தேர்வு வரும் வாரங்களில் எப்போது நடைபெறும்?எவ்வாறு மதிப்பீடு செய்வது?

TIME TABLE
🌻14.11.16 to 18.11.16-முதல் வாரத் தேர்வு.
🌻 21.11.16 to 25.11.16- இரண்டாம் வாரத்தேர்வு.

🌻 28.11.16 to 02.12.16 - மூன்றாம் வாரத்தேர்வு

🌻 05.12.16 to 08.12.16 - நான்காம் வாரத்தேர்வு.

ஒவ்வொருவாரமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொருபாடத்தில் தேர்வு
வினாத்தாட்களைஒவ்வொரு வாரத்திற்கும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்

தேர்வுநேரம்: பி.ப.3.00 to 4.00

தொடக்க கல்வி - பணிப்பதிவேட்டில் உடனுக்குடன் பதிவு செய்தல் அறிவுரை வழங்குதல் - இயக்குநர் செயல்முறைகள்..

SSA-CRC மையம் மூலமாக இரண்டு கட்டமாக அறிவியல் கண்காட்சி 23.11.2016. & 24.11.2016- ல் நடைபெற உள்ளது. தொடக்கப் பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்ய வேண்டும்.

தங்கள்பள்ளி எந்த நாட்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை உங்கள் BRT அவர்களிடம்கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

தொடக்கப்பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்யவேண்டும்.

நடுநிலைப்பள்ளிகள் நான்கு மாடல் செய்யவேண்டும். 1 - 5. (2)  6 - 8. (2).

மாடல்கள்மாணவர்கள் செய்ய வேண்டும். செய்ததைகண்காட்சி அன்று மாணவர்கள் செய்துகாட்டு விளக்குதல் வேண்டும்.

ஒரு மையத்துக்கு 10 பள்ளிகள் வீதம் கலந்து கொள்வார்கள்.

சிறப்பாகசெய்த மாணவர்க்கு பரிசு உண்டு. பள்ளிக்கும்கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்வழங்கப்படும்.

ஒரு மாடலுக்கு ரூபாய் 180. லிருந்து  300. வரைமைய தலைமை ஆசிரியர் வழங்குவார்.

P.F முன்பணம் 2013-14 AEEO அலுவலகத்தில் தணிக்கைச் செய்து உறுதி செய்யப்பட்ட AlC Slip வைத்து போடலாம் என்பதன் அரசு கடிதம்



TNOU-B.Ed -2017

ஆதார் அட்டை ஒரு முறைக்கு மேல் கொண்டு வந்தால் பணம் கிடையாது’

சென்னையில்பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைமாற்ற, ஆதார் அட்டையை ஒருமுறைக்கு மேல்கொண்டு வந்தவர்கள் திருப்பி
அனுப்பப்பட்டனர்.

பணம் செல்லாது அறிவிப்பு

புழக்கத்தில்உள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்செல்லாது என்று மத்திய அரசுஅறிவித்தது. இதனால் அதை மாற்றவங்கிகள் முன்பு பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்து கிடக்கின்றனர். இவர்கள்தங்களுடைய ஆதார் அட்டை நகலில்கையெழுத்திட்டு, வங்கிகளில் செலுத்தி பணத்தை மாற்றி செல்கின்றனர்.

முதலில்ரூ.4 ஆயிரம் மதிப்பில் மட்டும்பணமாற்றம் செய்யப்பட்டது. இதனை ரூ.4 ஆயிரத்து500 ஆக மாற்றி மத்திய அரசுஅறிவித்தது. ஒரு வாரத்தில் சகஜநிலைஏற்படும் என்று கருதிய வங்கிஅதிகாரிகளுக்கு, நாளுக்கு நாள் வங்கிகளின் முன்புநிற்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வது அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.

விரலில்மை

இதனை கட்டுப்படுத்த பணம் மாற்ற வருபவர்களின்கை விரலில் மை வைக்கமுடிவு செய்யப்பட்டது. இந்த தகவலால் நேற்றுகாலையில் வங்கிகள் முன்பு கூட்டம் சற்றுகுறைவாக காணப்பட்டது. பெரும்பாலான வங்கி கிளைகளுக்கு மைவந்து கிடைக்காததால், வழக்கம் போல் மைவைக்காமல் பணமாற்றம் செய்யும் பணி நடந்தது.

இதனால்நேற்று பிற்பகலில் வங்கிகள் முன்பு மீண்டும் நீண்டவரிசை காணப்பட்டது. ஸ்டேட் வங்கி தவிரபெரும்பாலான வங்கிகளில் மாற்றித்தருவதற்கு போதிய பணம் இல்லாததால்வங்கிகளில் வழக்கம் போல் டெபாசிட்பெறுவது, காசோலை பரிமாற்ற பணிகள்மட்டுமே நடந்தன. தபால் அலுவலகங்களைபொறுத்தவரையில் போதிய பணம் இல்லாததால்வெறிச்சோடியே காணப்பட்டன.

ஆதார் அட்டை பதிவு

இதுகுறித்துஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

பொதுமக்களின்வங்கி கணக்கில் உள்ள பணம் பாதுகாப்பாகஇருக்கும். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்என்று ரிசர்வ் வங்கி அறிவித்துஉள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் பணம் மாற்றவருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. எதாவதுஒரு அடையாள அட்டையின் நகலில்கையெழுத்திட்டு கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி85 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை நகல்மூலம் பணம் மாற்றித்தரப்பட்டது. அவ்வாறுகொண்டு வரப்படும் ஆதார் அட்டை எண்கள்கணினியில் பதிவு செய்யப்படுகிறது. மீண்டும்அதே ஆதார் அட்டைகளை கொண்டுவந்தால் கணினி அதனை ஏற்பதில்லை. அவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் மாற்று அடையாளஅட்டைகளை பொதுமக்கள் கொண்டு வந்து பணத்தைமாற்றி செல்கின்றனர்.

கண்காணிப்பு

குறிப்பாககுடிசை பகுதிகளில் இருப்பவர்கள் அதிகளவு வந்து பணத்தைமாற்றுவதால் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் கமிஷன் வாங்கிகொண்டு வேறு நபர்களின் பணத்தைமாற்றுவது ஒரு சிலர் மூலம்தெரியவந்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கிபணம் மாற்ற வருபவர்களின் கைவிரல்களில்மை வைக்க அறிவுறுத்தி உள்ளது. மைசூருவில் உள்ள ரிசர்வ் வங்கிஅச்சகத்தில் இருந்து பெரும்பாலான கிளைகளுக்குமை வந்து சேரவில்லை. நாளை(இன்று) கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கிடைத்தஉடன் மை வைக்கும் பணியைதொடருவோம். அதுவரை வழக்கம் போல்பணம் மாற்றி தரும் பணியில்ஈடுபட்டு உள்ளோம்.

வங்கிகளில்பழைய பணத்தை சேகரிக்க தனிப்படைஅமைக்கப்பட்டு செல்லாத பணம் சேகரிக்கப்பட்டுவருகிறது. ‘ஜன்தன்’ கணக்கில் அளவுக்குஅதிகமாக பணத்தை டெபாசிட் செய்பவர்களும், கருப்பு பணத்தை டெபாசிட் செய்யவருபவர்களும் கண்காணிக்கப்படுகின்றனர். புதிய கரன்சி நோட்டுகளைவைக்கும் வகையில் ஏ.டி.எம். எந்திரங்களும் மறுசீரமைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறுஅதிகாரிகள் கூறினர்.

'கட்' அடிக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்' : பிள்ளையார் சுழி போட்ட பெண் அதிகாரி

இரண்டுஆசிரியர்கள் உள்ள தொடக்க பள்ளிகளில், பெரும்பாலும் மாணவர்கள் எண்ணிக்கை, குறைவாகவே உள்ளது. எனவே, ஒருவருக்குமூன்று நாள், இன்னொருவருக்கு இரண்டுநாள் வேலை என,
ஆசிரியர்கள்பிரித்துக் கொள்கின்றனர். ஆனால், வருகை பதிவேட்டில், அனைத்து நாட்களுக்கும் கையெழுத்து போட்டு விடுகின்றனர். இதற்குமுற்றுப்புள்ளி வைக்க, அதிகாரிகள் முயன்றால், சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கின்றன. அதைப் பற்றி கவலைப்படாமல், கோவை மாவட்ட தொடக்க கல்விஅதிகாரி காந்திமதி, சில நடவடிக்கைகளை மேற்கொண்டுஉள்ளார்.
திடீர்ஆய்வு : தினமும் குறைந்தபட்சம், இரண்டுபள்ளிகளுக்கு, காலையில் அதிரடியாக ஆய்வுக்கு செல்கிறார். உரிய நேரத்தில் வராதஆசிரியர்களை பிடித்து, அவர்களிடம் விளக்கம் கேட்கிறார்.காலை, 9:00 மணிக்கு பள்ளி துவங்கும். தலைமை ஆசிரியர், 8:45க்கும், ஆசிரியர்கள், 9:00 மணிக்கும்வர வேண்டும். பல பள்ளிகளில், 10:00 மணிக்குமேல் தான் ஆசிரியர்கள் வருகின்றனர். அதிலும், சில ஆசிரியர்கள் வாரத்திற்குஇரண்டு, மூன்று நாள் மட்டுமேபணிக்கு வருகின்றனர்; பாதியில், 'கட்' அடித்து செல்கின்றனர். இதையெல்லாம், திடீர் ஆய்வில் காந்திமதிகண்டுபிடித்தார். அதனால், அவரே பள்ளிக்குசென்று பாடம் நடத்துகிறார். ஆசிரியர்கள்என்ன பாடம் நடத்தினர் என்பதை, மாணவர்களிடம் விசாரிக்கிறார். பின், அந்த பாடத்திற்கு, உடனடி தேர்வு வைக்கிறார்; அதன்மூலம், ஆசிரியர்களின் பாடம் நடத்தும் திறனைஅறிந்து கொள்கிறார்; அதில், பின்தங்கிய ஆசிரியர்களுக்குஅறிவுரை வழங்குகிறார்.
வரவேற்பு: இப்படி, கோவை மாவட்டத்தில் உள்ள, 1,100 தொடக்க பள்ளிகளில், 50 சதவீத பள்ளிகளில், இதுவரைநேரடி ஆய்வு நடத்தியுள்ளார். துணிச்சலானஇவரது நடவடிக்கைக்கு, பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இவரை பார்த்து, மற்றமாவட்டங்களிலும் இதேபோல் அதிரடி ஆய்வுநடத்த, தொடக்க கல்வி இயக்குனரகம்முடிவு செய்துள்ளது. அதனால், 'கட்' அடித்து விட்டு, ஊர் சுற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர் வாழ்நாள் சான்று தவறாமல் சமர்ப்பிக்க வலியுறுத்தல்

தங்களின்வாழ்நாள் சான்றிதழை, ஓய்வூதியதாரர்கள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்' என, சென்னை மண்டல தொழிலாளர்வருங்கால வைப்பு நிதி அமைப்பின்முதன்மை ஆணையர், சலீம் சங்கர்
தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் விடுத்த அறிக்கை: வருங்காலவைப்பு நிதி சட்டம் உள்ளடக்கிய, தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் மற்றும் குடும்பஓய்வூதிய திட்டத்தின் மூலம், ஓய்வூதியம் பெறும்ஒவ்வொரு பயனாளியும், தாங்கள் தொடர்ந்து ஓய்வூதியம்பெறும் பொருட்டு, ஆண்டுதோறும், நவம்பரில், தாங்கள் உயிரோடு இருப்பதற்கானவாழ்நாள் சான்றிதழ், மனைவியை இழந்தோர் மறுமணம்செய்யவில்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல், இந்த ஆண்டும் நவம்பரில், ஓய்வூதியதாரர்கள், மேற்படி சான்றிதழ்களை, தாங்கள் ஓய்வூதியம் பெறும்வங்கிகளில் தவறாமல் சமர்ப்பிக்கும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இந்த வாழ்நாள் சான்றிதழை, தற்போது, இணையம் மூலமாக, 'ஜீவன்பிரமான் போர்ட்டலிலும்' பதிவேற்றம் செய்யலாம்; அல்லது, 'ஜீவன் பிரமான் பதாபுரோகிராம்' பொது சேவை மையங்களைஅணுகியும் சமர்ப்பிக்கலாம். தற்போது, இந்தியாவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானபொது சேவை மையங்கள் உள்ளன. எனவே, ஓய்வூதியதாரர்கள், தங்களது வங்கி, ஜீவன்பிரமான் மையம், பொது சேவைமையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அணுகி, சான்றிதழை பதிவேற்றம் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை, இந்தியாவில் உள்ள எந்த ஒருஜீவன் பிரமான் போர்ட்டல் மூலமாகவும்பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்பு.

2017-ம்ஆண்டு இந்தியாவில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளதுஎன்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 2016-ம் ஆண்டின்மூன்றாவது காலாண்டு சம்பள பட்ஜெட் திட்டத்தைவில்லிஸ் டவர்ஸ்
வாட்சன் நிறுவனம்வெளியிட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்துசேலரீஸ் இன் இந்தியா (salaries in india) நிறுவனம் இந்தியாவில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளதுஎன்று கூறியுள்ளது. கடந்த ஆண்டும் 10.8% உயரும்என்று கூறியிருந்தது. ஆனால் உண்மையாக 10% மட்டுமேசம்பள உயர்வு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேசஅளவில் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும்இந்தியா சம்பள உயர்வில் முன்னணியில் உள்ளது. இந்த ஆய்வில், இந்தோனேசியாவில் 9% சம்பளம் உயர்வு இருக்கும்என்றும் இலங்கையில் 8.9 சதவீதம் சம்பள உயர்வுஇருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சீனாவில்7 சதவீதம் சம்பள உயர்வு இருக்கும்என்று கூறப்பட்டுள்ளது.   மேலும் இந்தியாவில்சம்பளத்திற்காக ஒதுக்கப்படும் பட்ஜெட்டில் நன்கு பணிபுரியும் ஊழியர்களின்சம்பள உயர்வுக் காக 38% ஒதுக்கப்படும் என்றும்சராசரிக்கு கொஞ்சம் அதிகமாக பணிபுரியும்ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 34 சதவீதம்ஒதுக்கப்படும் என்று இந்த ஆய்வுகூறுகிறது. மேலும் சராசரியாக பணிபுரியக்கூடிய ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 28 சதவீதம்மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

``அனைத்துஊழியர்களுக்கும் சம்பளம் உயர்வு வழங்குவதைக்காட்டிலும் நன்கு பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்குசரியான சம்பள உயர்வு வழங்கவேண்டும் என்று இந்த ஆய்வுகள்தெளிவாக்கு கின்றன. எந்தவொரு வேறுபாடுஇல்லாமல் சம்பள உயர்வு இருக்கும்என்றால் நிறுவனங்கள் நல்ல திறமையுடைய ஊழியர்களைதக்கவைப்பது சிரமமாக இருக்கும். அதிலும்குறிப்பாக ஊழியர்கள் தேவை இருக்கும் துறைகளில்இன்னும் சிரமமாக இருக்கும்’’ என்றுவில்லிஸ் டவர்ஸ் வாட்ஸன் நிறுவனத்தின்ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் தகவல்சேவை பிராக்டீஸ் தலைவர் சம்பவ் ரக்யான்தெரிவித்துள்ளார். வளர்ந்த நாடுகளான அமெரிக்காமற்றும் இங்கிலாந்தில் 2017-ம் ஆண்டில் 3 சதவீதம்மட்டுமே சம்பள உயர்வு இருக்கும்என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மற்ற துறைகளை காட்டிலும் பார்மச்சூடிகல்ஸ்துறையில் சம்பள உயர்வு அதிகமாகஇருக்கிறது. நிதி சார்ந்த துறைகளில்சம்பள உயர்வு சராசரிக்கும் கீழே8.5 சதவீதமாக இருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு 3 மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க கோரிக்கை.

தமிழ்நாடுதலைமைச் செயலக சங்கம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு: 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றி வருகின்றனர்.

இதில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள்
விதிவிலக்கல்ல. அரசு ஊழியர்கள் வங்கிகளில்தவம் கிடப்பதால் பணியும் பாதிக்கப்படுகிறது. வருங்காலவைப்பு நிதி முன்பணம், கல்வி, குடும்ப தேவைக்காக பெற்ற கடன் தொகைக்காகபணம் எடுக்க சிரமப்படுகின்றனர்.  சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும்அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் ஊதியத்தில் 25 சதவீதத்தை வாடகையாக செலுத்துகி்ன்றனர். இதை தவிர மாதம்தோறும் குழந்தைகள் கல்விக்கட்டணம், மருத்துவச் செலவு உள்ளிட்ட செலவுகளைதற்போதைய வங்கி கட்டுப்பாட்டினால் மேற்கொள்ளமுடியாமல் உள்ளனர். வருமான வரித்துறைக்கு கணக்குகளைமுறையாக சமர்ப்பிக்கும் ஊழியர்கள் தங்கள் பண இருப்பைபெற முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களுக்கானஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை அவர்கள்வங்கிக்கணக்கில் செலுத்தாமல் ரொக்கமாக வழங்க முதல்வர் நடவடிக்கைஎடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.