யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/12/16

சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளது வர்தா புயல்: சேதம் அதிகமாக இருக்கும் என தகவல்.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதாவும் வட தமிழகத்தில் இதனால் கனமழை பெய்யும் என்றும் தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வர்தா புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 440 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. 
இந்த புயல்  சென்னைக்கு மிகவும் அருகே கரையை கடக்கும் எனவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேதம் அதிகமாக இருக்கும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வர்தா புயல் கரையை கடக்கும் போது  மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

USEFUL HANDBOOKS TO ALL TEACHERS REGARDING RULES & OFFICEPROCEDURES

Admission Notice Joint Entrance Examination (JEE) Main 2017

ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் மார்ச் 2017 க்கு பின்னரும் தொடர வாய்ப்பு.

சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரட்டை பதவி உயர்வு

புதுச்சேரி,: சிறப்பாக பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு இரட்டை பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என, முதல்வர் நாராயணசாமி பேசி னார்.
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட் டம், லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கல்வித் துறை இயக்குனர் குமார் வரவேற்றார்.

அமைச்சர் கமலக்கண்ணன் தலைமைத் தாங்கினார். துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு செயலர் அருண் தேசாய் வாழ்த்தி பேசினர்.முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:அரசு பள்ளிகளில் கல்வித் தரம் சரியில்லை. இது ஆசிரியர் களின் மனசாட்சிக்கும் நன்கு தெரியும்.நம்முடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறோம்.
மற்றவர்களின் பிள்ளைத்தான் அரசு பள்ளிகளில் சேர்க்கிறோம். இதுதான் நிதர்சனமான உண்மை. அரசு பள்ளிகளில் சிறந்த கட்டமைப்பு மற்றும் தரமான வசதிகள் உள்ளன. திறமையான ஆசிரியர்களும் உள்ளனர்.கணிப்பொறி ஆய்வகங்களும் உள்ளன.

ஆனால், அவற்றை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்வதில்லை.வகுப்புக்கு செல்லும்முன் ஆசிரியர்கள் முன் தயாரிப்புடன் பாடம் எடுக்கச் செல்வதில்லை. முன் தயாரிப்புடன் போனால், மாணவர்களும் ஆர்வமுடன் கற்பார்கள். அகில இந்திய அள வில் 24 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரம் உள்ளது. புதுச்சேரியில் 14 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது.கல்வியில் பின்தங்கிய மாநிலங்களான பீகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட் ஆகியவை தரமான கல்வியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.

அங்கெல்லாம் 10 முதல் 15 சதவீதம் வரை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உருவாகி வருகின்றனர். நாமும் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிப்பது முக்கியம்.தேர்வில் 100 சதவீத வெற்றி என்பது சாதனை அல்ல. மாணவர்கள் எதைக் கற்றுக் கொண்டனர் என்பதே முக்கியம். இதுவரை நடந்தவற்றை விட்டுவிட்டு, இனிமேல் கல்வித் தரத்தை மேம்படுத்த பொறுப்புணர்வோடு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினால் விருதுகள், பதக்கங்கள் கொடுக்கிறோம்.

மேலும், சிறப்பாக பணியாற்றினால் இரட்டை பதவி உயர்வு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து கூட்டத் தில் கலந்து கொண்ட ஆசிரியர்களும், 16 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். கல்வித் தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதித்து பரிந்துரை அளித்தனர். அந்த பரிந்துரைகளில் தேவையாவற்றை அரசு நிறைவேற்றும்.இதேபோன்ற கலந்துரையாடல் கூட்டங்கள், அனைத்து பிராந்தியங்களிலும் நடத்தப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளது வர்தா புயல்: சேதம் அதிகமாக இருக்கும் என தகவல்.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதாவும் வட தமிழகத்தில் இதனால் கனமழை பெய்யும் என்றும் தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வர்தா புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 440 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல்  சென்னைக்கு மிகவும் அருகே கரையை கடக்கும் எனவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேதம் அதிகமாக இருக்கும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வர்தா புயல் கரையை கடக்கும் போது  மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'டிஜிட்டல்' பரிவர்த்தனையை ஊக்குவிக்க பரிசு திட்டங்கள்

புதுடில்லி:ரொக்கமின்றி, 'டிஜிட்டல்' முறையில், பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், மக்களுக்கு பரிசுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.


டிஜிட்டல் முறையிலும், எலக்ட்ரானிக் முறை யிலும் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்ப தில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால், கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும் என, அரசு நம்புகிறது.

இந்நிலையில், டிஜிட்டல் முறையில், பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில்,
மக்களுக்கு பரிசுத் திட்டங்கள் தயாரிக்கும்படி, என். பி.சி.ஐ., எனப்படும், இந்திய தேசிய பணம் செலுத்து தல் கழகத்திடம், அரசுக்கு ஆலோசனை சொல்லும் அமைப்பான, 'நிடி ஆயோக்' கேட்டுக்கொண்டுள்ளது.

'நிடி ஆயோக்' அமைப்பு வெளியிட்ட அறிக்கை:


செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்த னைகள் சிறப்பான வகையில் அதிகரித்துள்ளன. அனைத்து தரப்பினரும், டிஜிட்டல் முறை பரிவர்த்தனையை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

மக்களை ஊக்குவிக்கும் வகையில், பரிசுத் திட்டங் களை, அரசு அறிவிக்கும். டிஜிட்டல் முறையில் பரி வர்த்தனை செய்வோருக்கு, இரு கட்டமாக ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும், குலுக் கல் முறையில், பரிசுக்கு உரியோரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மற்றொரு கட்டமாக, காலாண்டுக்கு ஒரு முறை, பெரியளவில் பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.
ஏழைகள், நடுத்தர மற்றும் சிறு வர்த்தகர்களை குறிவைத்து, இந்த திட்டங்கள் தயாரிக்கப்படும்.

பரிசுத் திட்டங்கள் குறித்த விரிவான வழிகாட்டு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். நவ., 8க்கு பின், டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனைகளை பயன்படுத்தும் அனை வருக்கும், பரிசு பெறத் தகுதி உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

வருகிறது 'வர்தா!' :80 கி.மீ., வேகத்தில் இன்று மதியம் சென்னையை கடக்கிறது:

வங்க கடலை மிரட்டும், 'வர்தா' புயல், இன்று சூறாவளியுடன், சென்னை வழியே கரையை கடக்கிறது.

துறைமுகங்கள், அனல் மின் நிலையங்களுக் கும் கடும் ஆபத்து உள்ளது என்றும், 
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, கடலுார், வேலுார் மாவட் டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக் கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில் மழை இப்போது இல்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வங்க கடலில், கடந்த, 7ல், உருவான காற்ற ழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக வலுப் பெற்று புயலாக உருவெடுத்துள்ளது. இதற்கு, பாகிஸ்தானால் வைக்கப்பட்ட, 'ரோஜா மலர்' என்ற பொருளில், 'வர்தா' என, பெயரிடப்பட்டு உள்ளது.

நான்கு நாட்களுக்கு முன், தெற்கு அந்தமானில் பீதியை ஏற்படுத்திய, 'வர்தா' புயல், அந்தமான் தீவுகளில் பலத்த மழையை கொட்டியது. அதனால், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணி கள், கடும் தவிப்புக்கு ஆளாகினர். பின், அங்கி ருந்து நகர்ந்த புயல், ஒடிசாவுக்கும், விசாகப் பட்டினத்துக்கும் இடைப்பட்ட பகுதியை நோக்கி சென்றது.

ஆனால், காற்றின் திசை மாற்றத்தால், ஆந்திரா வின் விசாகப்பட்டினத்திற்கு தெற்கில்,நெல்லுார் - காக்கிநாடாவுக்கு இடைப்பட்ட பகுதியை நோக்கி நகர்ந்தது. பின், வட கிழக்கிலிருந்து
வலுவாக வீசிய காற்று, அனைத்து கணிப்பு களையும் தாண்டி, புயலை மேற்கு நோக்கி திருப்பிவிட்டுள்ளது.

இந்திய வானிலை மைய அதிகாரிகளின் தகவல் படி, நேற்று மாலையில், சென்னைக்கு தெற்கே, 300 கி.மீ., - நெல்லுாருக்கு தெற்கே, 370 கி.மீ., துாரத்தில்,வர்தா புயல் மையம் கொண்டிருந்தது. இது, கரையை நோக்கி, மணிக்கு, 20 கி.மீ., வேகத்தில் நகர்கிறது.அதிகாலை, சென்னை கடற்கரைக்கு, 100 கி.மீ., துாரத்திற்குள் நெருங்கி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறியதாவது:


மிகத் தீவிர புயலாக உருவெடுத்துள்ள வர்தா, கரையை நெருங்கும் போது தீவிரத்தை இழந்து, புயலாக வலுவிழக்கும். கரையை கடக்கும் போது, மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இன்று பகல், நெல்லுாருக்கும், புதுச்சேரிக்கும் இடையே, நேரடியாக சென்னை வழியே, புயல் கரையை கடக்கும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார் உட்பட தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்யும். 10 அடி உயரத்திற்கு மேல் அலைகள் எழும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்; படகுகளை பத்திரப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

வர்தா புயல், சென்னை மற்றும் புறநகர் பகுதிக ளான, மீஞ்சூர், எண்ணுார், திருவொற்றியூர் பகுதிகளை நேரடியாக தாக்கும். துறைமுகங் கள், அனல் மின் நிலையங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு, கடும் ஆபத்து ஏற்பட்டுள் ளதால் முன்னெச்சரிக்கை யாகபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

'கடலுார், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப் புரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு; மற்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பில்லை' என, வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிப்பு என்ன?


மழை மற்றும் காற்றால், குடிசைகள், மண் வீடுகள், தற்காலிக கொட்டகைகள், சேதமாக லாம். நெற்கதிர்கள், வாழைத் தோட்டங்கள், வலுவிழந்த மரங்கள் சாயும். சாலைகளில் மரங்கள் முறிந்து விழுவதால், உயர் மின் கம்பங்கள் மற்றும் கேபிள்கள் அறுந்து விழும்; மின் தடை ஏற்படும். நிலைமையை சமாளிக்க, பொதுமக்கள் முன் கூட்டியே மெழுகுவர்த்தி களை வாங்கி வைப்பது நல்லது.


சென்னை துறைமுகத்தில் 10ம் எண் எச்சரிக்கை கூண்டு


* வர்தா புயலால், சென்னை, எண்ணுார் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில், உச்சபட்ச ஆபத்தை தெரிவிக்கும், 10ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 'புயலால் துறைமுகத்திற்கு கடும் ஆபத்து ஏற்பட உள்ளது' என, இதற்கு அர்த்தம். இதற்கு மேல், எச்சரிக்கை கூண்டு இல்லை
* கடலுார், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில், எட்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு, 'தீவிரமான புயல் கரையை கடக்க வருகிறது; வெளியே வராதீர்கள்' என, அர்த்தம்
* பாம்பன், துாத்துக்குடி துறைமுகங்களுக்கு, இரண்டாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு, 'கடலுக்குள் புயல் நிலை கொண்டுள் ளது; துறைமுகங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்' என, அர்த்தம்.

Flash News : வர்தா புயல் - 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வர்தா புயல் கனமழை காரணமாக கீழ்கண்ட 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (12.12.2016) விடுமுறை அறிவிப்பு.

1.சென்னை  (பள்ளி,கல்லூரிகள்)
2.கடலூர் (பள்ளிகள் மட்டும்)
3.புதுச்சேரி (பள்ளி,கல்லூரிகள்)o
4.காரைக்கால் (பள்ளி,கல்லூரிகள்)
5.காஞ்சிபுரம் (பள்ளிகள் மட்டும்)
6.திருவள்ளூர் (பள்ளி,கல்லூரிகள்)
7.விழுப்புரம் (வானூர்,மரக்காணம் வட்டம்)

மேலும், 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

11/12/16

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிட முடிவு பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்:

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி கூறினார்.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு

பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் பல நாடுகளில் புழக்கத்தில் உள்ளன. இதில் கள்ள நோட்டுகளை அச்சிடுவது சாத்தியமில்லை. இந்த நோட்டுகள் காகித கரன்சிகளை விட தெளிவானதாக இருக்கும். தவிர, பல ஆண்டுகள்(5 வருடங்கள்) புழக்கத்தில் இருக்கும் என்பதாலும் மேற்கத்திய நாடுகள் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டு உள்ளன.
இந்தியாவில் இதுபோல் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கள ஆய்வுக்காக 100 கோடி எண்ணிக்கையில் ரூ.10 மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகளை கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், சிம்லா, புவனேசுவரம் ஆகிய 5 நகரங்களில் அறிமுகம் செய்யும் என அறிவித்தது.

மத்திய அரசு முடிவு

இந்த நிலையில், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு பாராளுமன்றத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய ராஜாங்க நிதி மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்கையில், “பிளாஸ்டிக் அல்லது பாலிமர் ஆகியவற்றினால் ஆன ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. இதற்கான பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன” என்று குறிப்பிட்டார்.

இன்னொரு கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

அதிகாரிகள் மீது நடவடிக்கை

2015-ம் ஆண்டு பாதுகாப்பு இழைக்கோடு இல்லாத 1,000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் சில தங்களுக்கு வந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகள் ஹொசாங்காபாத் பாதுகாப்பு காகித ஆலையில் இருந்து வினியோகிக்கப்பட்டு நாசிக்கில் அச்சிடப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக இலாகாபூர்வ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் மீது சட்டவிதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

எதிர்காலத்தில் குறைபாடு இல்லாத வகையில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்காக கூடுதல் பரிசோதனை நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். 

சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேவை இல்லை - ஈடாக ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி கொடுத்தால் போதும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

TET Compensate by Refresher Course For Minority School Teachers - High court

HC asks minority schools to conduct refresher courses for teachers

The Madras High Court Bench here has reiterated its suggestion togovernment aided as well as
unaided minority schools to take intoconsideration the interest and welfare of students studying in  

 thoseinstitutions and conduct refresher courses as well as interactive sessionsfor their teachers during annual vacations, since the court had in Augustheld that it was not mandatory for them to clear the Teachers EligibilityTest (TET).
Dismissing a batch of writ appeals preferred by the Director of SchoolEducation (DSE) in 2014, Justices M. Sathyanarayanan and J. Nisha Banupointed out that another Division Bench in the Principal Seatof the HighCourt in Chennai had held that teachers of minority institutions need notclear the TET, since the Supreme Court on May 6, 2014 ordered that theRight of Children to Free and Compulsory Education (RTE) Act would not beapplicable to those institutions.

The Division Bench of Justices Huluvadi G. Ramesh and M.V. Muralidaran hadalso said: “However, keeping in mind the larger interest in which theGovernment has issued G.O.s (in 2011 making TET compulsory for teachers ofall schools), this court feels that the minority institutions may considerconducting refresher courses and also some interactive sessions to all theteachers during annual vacation in order to ensure and improve the qualityof teachers.”Since the Division Bench itself had made such a suggestion,the Bench ledby Mr. Justice Sathyanarayanan said that such refresher courses could beconducted for teachers either during annual vacation or other holidays inthe interest of the students pursuing education in the schools.


It pointedout that the DSE had preferred the appeals two years beforechallenginginterim orders passed by a single judge of the High Court in favour ofteachers appointed in Baren Bruck Higher Secondary School, St. John’sHigher Secondary School, Walker Higher Secondary School, Schaffter Higher  Secondary School, C.C.M. Higher Secondary School and Mary Sargent HigherSecondary School in Tirunelveli district.After the filing of the present appeals, much water had flown with theSupreme Court insulating minority institutions from the purview of the RTEAct and a Division Bench of the High Court in August this yearcategorically holding that teachers of those institutions need not clearthe TET.Hence, the appeals pending since 2014 were dismissed in view of thedecision rendered on the issue by the other Division Bench.

BT and PET Pay authorization

அரசு ஊழியருக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக இன்றைய தினமலரில் செய்தி​

CPS திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்று அலைகழிக்கப்பட்ட ஆசிரியரின் கடிதமும் மற்றும் தஞ்சை மாவட்ட CEO அவர்களின் விசாரணை கடிதமும் -




மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினம்

தொடர்புடைய படம்மகாகவிசுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினம் இன்று!
11.12.1882:
சின்னசுவாமிசுப்பிரமணிய பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும்சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரை மக்கள்பாரதியார் என்றும் மகாகவி என்றும்அன்புடன் அழைக்கின்றனர்.

பாரதி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் சின்னசாமிஐயர் - இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர்11, 1882ல்  பிறந்தார். இவரின்

இயற்பெயர்சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று வீட்டில் அழைக்கப்பட்டார்.

தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுதே தனக்கு உள்ள கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். பாரதி1897 ஆம் ஆண்டு தனது 15-ஆம்வயதில் செல்லம்மாளை மணந்தார்.

எட்டப்பநாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனைமெச்சிப் பாரதி என்ற பட்டம்வழங்கினார். தமிழ் கவிதையிலும் உரைநடையிலும்சிறப்பான புலமை கொண்டு, நவீனதமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதிமறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்துகவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாகமக்கள் மனதில் விடுதலை உணர்வைஊட்டியவர்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளமொழி ஆகிய மொழிகளில் புலமைபெற்றவர். அத்துடன் பிற மொழி இலக்கியங்களைமொழி பெயர்க்கவும் செய்துள்ளார். வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும்மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

உடல் நிலை சரியில்லாத நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் செப்டம்பர் 11, 1921 அன்று இயற்கை எய்தினார்.


பாரதியாரின்நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம்ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கிய படைப்புகள் என்பதுபாரதியாருடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

10/12/16

DISTRICT WISE NMMS PASSWORD

பள்ளிக் கல்வித்துறை செயலர் வேறு துறைக்கு மாற்றப்படுவாரா??

High School HM Promotion Case Details

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான
வழக்கு:
--------------------------------------------
உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பானவழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் திரு. சத்தியநாராயணன் அவர்களின்முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இத்துணை நாட்களாகஎடுத்த எடுப்பிலேயே அடுத்த வாரம் என்றஅளவில் குறுகிய கால அளவில்ஒரு தேதியினைக் குறிப்பிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்ப்ட்டுவந்தது.
  

 ஆனால் இன்று நடந்தவிவாதத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிஉயர்வு தொடர்பாக உள்ள பத்துக்கும் மேற்பட்டஅனைத்து வழக்குகளும் ஒன்றாக சேர்த்து இறுதிவிசாரணையாக விசாரிக்கப்படும்.

இறுதி விசாரணை வரை தற்போதுள்ளதடையாணை உள்ளபடியே தொடரும்.

இதற்குப்பெயர் Stay resolution order என்பதாகும்.

இதன் மூலம், புதிதாக தடையாணைஏதும் இவ்வழக்கில் பெற இயலாது.

அதே சமயம், இருக்கின்ற தடையாணையையாராலும் நீக்க முடியாது.

இனி ஒரே ஒரு விசாரணைமட்டும்தான். அது இறுதி விசாரணைமட்டுமே.

ஏற்கனவேஇருந்ததைப் போல் வார வாரம்லிஸ்ட் வராது. மீண்டும் விசாரணைக்குவர சில மாதங்கள் ஆகும்.

இன்னும்சொல்லப் போனால், மார்ச் ஏப்ரல்கூட ஆகிவிடும்.இதுதான் தற்போதைய நிலை.

தங்கள்உண்மையுள்ள,

ப.நடராசன், மாநில தலைமை நிலையச்செயலாளர், பதவி உயர்வு பெற்றபட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்,தருமபுரி மாவட்டம்..

Flash News:NEET - நீட் மருத்துவ பொதுநுழைவுத்தேர்வை தமிழிலும் எழுதலாம் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ்எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் உள்ளஇடங்களில் சேர விரும்பும் மாணவர்கள்அகில இந்திய மருத்துவ, பல்மருத்துவ நுழைவுத் தேர்வை (நீட்) எழுதவேண்டும். தனியார் மருத்துவ,
பல்மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேரவிரும்பும் மாணவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும்.

இந்நிலையில்நீட் மருத்துவ பொதுநுழைவுத்தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று மக்களவையில் சுகாதாரத்துறைஇணை மந்திரி அனுப்பிரியா பட்டேல்தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:
2017-ல்மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுதமிழில் நடத்தப்படும்.அசாமி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி மொழிகளிலும் நீட் தேர்வை எழுதலாம். ஆங்கிலம்,ஹிந்தி தவிர்த்து பிறமாநில மொழிகளிலும் நீட் தேர்வு நடத்தப்படும். மேலும் மருத்துவ இளம், முதுகலை படிப்புகளுக்கானஇடஒதுக்கீட்டை மாநில அரசு முடிவுசெய்யும்.இவ்வாறுஅவர் கூறினார்

திண்டுக்கல் மாவட்ட தொடக்க &நடுநிலை பள்ளிகளில் நடத்தப்படும் இரண்டாம் பருவ தேர்வு மற்றும் SLAS தேர்வு காலஅட்டவனை



2017 வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள். RH list.

தேவையில்லாத புத்தகங்கள் வேண்டாம் : மாணவர்களுக்கு கல்வித்துறை அறிவுரை

தேவையில்லாதபுத்தகங்களை கொண்டு வர வேண்டாம்' என, மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள், ஒவ்வொருநாளும் பள்ளிக்கு செல்லும் போது,
அனைத்து பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், உணவுமற்றும் குடிநீர் போன்றவற்றை சுமந்து செல்கின்றனர். அதனால், சிறு வயது குழந்தைகளின் முதுகுதண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பாட புத்தகங்களின் அளவுகுறைக்கப்பட்டு, அதற்கேற்ப பாட வேளைகள் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளன. இம்முறையை அமல்படுத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகள் மூலம், அனைத்து பள்ளிகளுக்கும்சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 'மாணவர்களுக்கு, தினமும்என்ன பாடம் நடத்த வேண்டும்என, திட்டமிட வேண்டும். அதற்கேற்ப, பாட புத்தகங்கள் மற்றும்நோட்டு புத்தகங்களை, அளவோடு கொண்டு வர, மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியர் விவரங்கள் இல்லை-அரசு ஊழியர் ஆசிரியர்கள் அதிர்ச்சி

டிஜிட்டல்' முறையில் விடை திருத்தம் : சி.பி.எஸ்.இ., புது திட்டம்

மத்தியஇடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பொதுத்தேர்வு விடைத்தாள்கள், 'டிஜிட்டல்' முறையில் திருத்தப்பட உள்ளன. தமிழக பள்ளிக்கல்வித்துறையில், 10ம் வகுப்பு,
பிளஸ்2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்கள், ஆங்காங்கே விடை திருத்தும் மையங்கள்அமைத்து, ஆசிரியர்கள் மூலம் திருத்தப்படுகின்றன. இதில், அவ்வப்போது பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, அதிக மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
தாமதம்: இது போல, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டதேர்வுகளிலும், மையங்களில் தான் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. விடைத்தாள் அனுப்புதல், பிரித்தல், மறு ஆய்வு செய்தல்போன்றவற்றிற்கு, கூடுதல் நாட்கள் தேவைப்படுவதால், தேர்வு முடிவுகளை வெளியிட தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், டிஜிட்டல் முறையில் விடைத்தாள்கள் அனுப்புதல் மற்றும் திருத்தம் நடக்கும்என, சி.பி.எஸ்.இ., வாரிய தலைவர், ஆர்.கே.சதுர்வேதி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வரும் கல்வி ஆண்டில், தேர்வு மையத்திலிருந்து விடைத்தாள்கள், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, ஆன்லைனில்விடை திருத்த ஒருங்கிணைந்த மையத்திற்குஅனுப்பப்படும்.

கணினி குறியீடு : பின், அவற்றில் கணினிகுறியீடு கொண்ட, ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள், கணினிமூலமும், மற்றவை கணினி வழியேபிரித்தும், திருத்த அனுப்பப்படும். இந்த, டிஜிட்டல் திருத்த முறையால், முறைகேடாகதிருத்தும் வகையில், விடைத்தாள்கள், 'லீக்' ஆவது; காணாமல்போவது தடுக்கப்படும். மேலும், 25 நாட்களுக்கு முன், தேர்வு முடிவுகளைவெளியிடலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது

மாணவர்களுக்கு ரொக்கம் இல்லா வரவு-செலவு விழிப்புணர்வு : மத்திய அரசு ஏற்பாடு !!

ரொக்கம்இல்லா வரவுசெலவு பரிவர்த்தனைகளை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசு
ஏற்பாடு

செய்துஉள்ளது.இந்தியா முழுவதும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பணதட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மக்களிடம் பணப்புழக்கம்வெகுவாக குறைந்து உள்ளது. .

இதனை தவிர்க்க மக்கள் தங்களது தேவைகளுக்குரொக்கம் இல்லா வரவுசெலவுகளை மேற்கொள்ளும்படிமத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.இது குறித்து மக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதல் கட்டமாகபல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில்விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசுஏற்பாடு செய்து உள்ளது எனமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துஅவர் கூறியதாவது:நாட்டில் ரொக்கம் இல்லா வரவுசெலவுகளைஅதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் நாடுமுழுவதிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு மத்தியில் ரொக்கம் இல்லா வரவுசெலவுகுறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்ட உள்ளது.டிசம்பர்-12ந்தேதிதொடங்கும் இந்த விழிப்புணர்வு பிரசாரம்ஒரு மாத காலம் நடைபெறும்.இதையொட்டி நேற்று 670 துணை வேந்தர்கள் மற்றும்மூத்த அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம்ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கில் ஆதரவுகருத்துகள் பதிவு செய்யப்பட்டன.

10 பேரைஇணைக்க வேண்டும்

பல்வேறுகல்வி நிறுவனங்களை ஒரு டிஜிட்டல் வளாகத்திற்குள்ஒருங்கிணைக்கும் முயற்சியின் சிறிய தொடக்கம் தான்இது.ஒவ்வொரு மாணவரும் டிஜிட்டல்தளத்தில் சேர்ந்து தனது குடும்பத்தினர் உள்பட10 பேரை ரொக்கம் இல்லா பரிமாற்றத்தில்இணைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

CCE-4th WEEK MATHS KEY

WORK SHEET - 4 TENTATIVE KEY ANSWERS - SOCIAL SCIENCE

WORK SHEET -4 TENTATIVE KEY ANSWERS - SCIENCE

தமிழக முதல்வர்கள் பெயர் மற்றும் பதவிகாலம் பட்டியல் தெரிந்து கொள்வோமா.

 1)ஏ. சுப்பராயலு-
17.12.1920 - 11.07.1921.

2) பனகல்ராஜா
11.07.1921- 3.12.1926.

3) பி. சுப்பராயன்
04 .12.1926- 27.10.1930

4)பி. முனுசுவாமி நாயுடு

27.10.1930 -4.11.1932

5) ராமகிருஷ்ணரங்காராவ்
5.11.1932 -04.04.1936

6)பி. டி. இராஜன்
4.4. 1936- 24.08. 1936

7) ராமகிருஷ்ணரங்காராவ்
24.08.1936 -1.04.1937

8) கூர்மாவெங்கட ரெட்டி நாயுடு
1.04.1937 -14.07.1937

9) இராஜகோபாலாச்சாரி
14 .07.1937- 29.10.1939

10) த. பிரகாசம்
30.04.1946 - 23.03. 1947

11) ஓமந்தூர்ராமசாமி ரெட்டியார்
23.03.1947- 6.04. 1949

12) பூ.ச.குமாரசுவாமி ராஜா
6.4.1949

13)பூ.ச. குமாரசுவாமிராஜா
26.01. 1950 - 9.4. 1952

14) இராஜகோபாலாச்சாரி10.4.1952 -13.4. 1954

15)கே. காமராஜ்
13.4.1954- 31.03. 1957

16) கே. காமராஜ்
13.04.1957 -1.03. 1962

17) கே. காமராஜ்
15.03.1962 -2.10. 1963

18)எம். பக்தவத்சலம்
2.10.1963- 6.03.1967

19) சி. என். அண்ணாத்துரை
6.03. 1967- . .08. 1968

20)சி. என். அண்ணாத்துரை
...08- 1968- 3.02.1969

21) இரா. நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)
3.02.1969 -10.02. 1969

22) மு. கருணாநிதி
10.02.1969- 4.01. 1971

23) மு. கருணாநிதி
15.03. 1971- 31.01. 1976

*குடியரசுத்தலைவராட்சி*
31.01.1976- 30.06.1977

24)எம். ஜி. இராமச்சந்திரன் 30.06.1977- 17.02. 1980
*குடியரசுத்தலைவர் ஆட்சி*
17.02.1980 -9.06.1980

25)எம். ஜி. இராமச்சந்திரன் 9.06.1980- 15.11. 1984

26)எம். ஜி. இராமச்சந்திரன் 10.02.1985 -24.12.1987

27) இரா. நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)
24.12.1987- 7.01. 1988

28)ஜானகிஇராமச்சந்திரன்
7.01.1988- 30.01. 1988

*குடியரசுத்தலைவர்*
30.01. 1988- 27.01. 1989

29)மு. கருணாநிதி
27.01.1989 -30.01. 1991

*குடியரசுத்தலைவர்*
30.01.1991 -24.06.1991

30) ஜெ. ஜெயலலிதா
24.06.1991 -12.05.1996

31) மு. கருணாநிதி
13.05.1996- 13.05. 2001

32)ஜெ. ஜெயலலிதா
14.05.2001- 21.09. 2001

33.ஓ. பன்னீர்செல்வம்
21.09.2001 -01.03. 2002

34)ஜெ. ஜெயலலிதா
2.03.2002 -12.05.2006


35) மு. கருணாநிதி
13.05. 2006- 15.05. 2011

36)ஜெ. ஜெயலலிதா
16.05. 2011- 27.09. 2014

37) ஓ. பன்னீர்செல்வம்
28.09.2014 -23.05. 2015

38) ஜெ. ஜெயலலிதா
23.05. 2015 - 06.12. 2016

39) ஓ. பன்னீர்செல்வம்

6.12. 2016 -

TET ARTICLE :ஆசிரியர் தகுதித்தேர்வு - ஜெயலலிதாவுக்காக காத்திருந்த பள்ளி ஆசிரியர்கள்!

அஇஅதிமுகஆட்சியில் கல்வித்துறையில் நடைபெற்ற நல்ல விஷயங்களில் ஒன்றுஆசிரியர் தகுதித்தேர்வு. ஜெயலலிதா ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுபள்ளி ஆசிரியர் கனவில் இருந்தவர்களுக்கு மகிழ்ச்சியைஏற்படுத்தினார். மூன்று முறை ஆசிரியர்
தகுதித்தேர்வு நடத்தப்பெற்று எழுபதாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பைபெற்றிருக்கிறார்கள்.

ஊழலை ஒழிக்க மொபைல் ஆப்கள் அறிமுகம்!!!

திருவனந்தபுரமஊழலை ஒழிக்கும் வகையிலும், மக்கள் ஊழலுக்கு எதிராகபோராடும் வகையிலும் இரண்டு மொபைல் ஆப்களைகேரள
முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை(09-12-16) அறிமுகம் செய்துவைத்தார்.

சர்வதேசஊழல் எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும்கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருவனந்தபுரத்தில்நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேரளமுதல்வர் பினராயி விஜயன், ஊழலுக்குஎதிரான 2 மொபைல் ஆப்களை அறிமுகம்செய்துவைத்தார்.

ஊழலற்ற, நிலையான வளர்ச்சி

'அரைஸிங்கேரளா' (Arising Kerala), விசில் நவ் (Whistle Now) என்றுபெயரிடப்பட்டுள்ள ஆப்களை அறிமுகம் செய்துவைத்த பினராயி விஜயன், "ஊழலற்றமற்றும் நிலையான வளர்ச்சி என்பதேமாநில அரசின் நோக்கம். ஊழலைஒழிக்க மாநில அரசு பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு, அரசு சாரா நிறுவனங்களில் ஊழலைமுடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.


ஊழலை ஒழிப்பது தொடர்பான பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் கேரள மக்கள் இந்தஆப்கள் மூலம் வழங்கலாம் என்றார்பினராய்விஜயன்.

9/12/16

பருவம் 2 தேர்வு கால அட்டவணை

15.12.2016. தமிழ்
16.12.2016. ஆங்கிலம்
19.12.2017. Slas
20.12.2016. Slas
21.12.2016. கணக்கு
22.12.2016. அறிவியல்
23.12.2016. சமுகஅறிவியல்

Primary
15.12.2016. தமிழ்

16.12.2016. ஆங்கிலம்
19.12.2016. கணக்கு
20.12.2016. அறிவியல்
21.12.2016. Slas
22.12.2016. Slas

23.12.2016. சமுகஅறிவியல்

இண்டர்நெட்டில் உள்ள உங்களது விபரங்களை அழிக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறை!!!

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர்மணிக்கணக்கில் வரிசையில் நின்று முடித்த வேலைகளைதற்போது இண்டர்நெட் மூலம் ஒருசில
நொடிகள்அல்லது நிமிடங்களில் முடித்துவிடுகிறோம்.
இண்டர்நெட்நம் உலகையே சுருக்கிவிட்டது. எத்தனைஆயிரம் கிலோமிட்டர் தூரத்தில் இருந்தாலும் அருகில் இருப்பது போன்றஉணர்வு உள்ளது.

ஆனால் எந்த அளவுக்கு இண்டர்நெட்நமக்கு பாசிட்டிவ் ஆக இருக்கின்றதோ அதேஅளவுக்கு அதனால் நமக்கு ஒருசிலஆபத்தும் உள்ளது. ஹேக்கர்களின் கைவரிசையால்நமது பொருட்களுக்கு இழப்பு ஏற்படுவதோடு நம்முடையபர்சனல் விஷயங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

என்னதான்ஆண்ட்டி வைரஸ் வைத்திருந்தாலும், பாஸ்வேர்டுகளைசிக்கலாக வைத்திருந்தாலும் ஹேக்கர்கள் ஏதாவது ஒரு கேப்பில்உள்ளே புகுந்து நமது டேட்டாக்களை நாசமாக்கிவ்டுகின்றனர்.
இந்நிலையில்தற்போது நமக்கே தெரியாத ஒருசிலஇடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நம்முடையதகவல்களை அழிக்க, தற்போது ஒருசிறந்த வழி கிடைத்துள்ளது.

சுவீடன்நாட்டை சேர்ந்த இரண்டு டெவலப்பர்கள்இதற்கென ஒரு பிரத்யேக இணையதளத்தைஉருவாக்கியுள்ளனர். Deseat.me என்ற இணையதளம் உங்களுடைய தகவல்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை உங்கள்கண்முன் நிறுத்தும்.

அவற்றில்தேவையில்லாத இணையதளங்களில் உங்கள் தகவல் இருப்பதைநீங்கள் அறிந்தால் உடனே அவற்றை டெலிட்செய்துவிடலாம். இதற்கு ஒருசில எளியவழிமுறைகளை கடைபிடித்தாலே போதும். அவை என்னவென்றுதற்போது பார்ப்போம்
இந்த இணையதளத்தை உபயோகிக்க உங்களுக்கு ஒரு கூகுள் அக்கவுண்ட்இருந்தால் போதும். உங்களுடைய கூகுள்அக்கவுண்டில் லாக்-இன் செய்தபின்னர் Deseat.me இணையதளத்தை ஒப்பன் செய்யுங்கள்.
அதில் நீங்கள் பயன்படுத்தும் செயலிமுதல் இணையதளங்கள் வரை திரையில் வரும். அதில் நீங்கள் அடிக்கடி உபயோகிக்காதஅல்லது அறவே உபயோகிக்காத இணையதளங்கள்இருந்தால் அதை உடனே டெலிட்செய்துவிடுங்கள். அந்த இணையதளத்தில் உங்களைபற்றிய தகவல்கள் மறைந்துவிடும்.

தற்போதைக்குஅனைத்து விதமான இணையதளங்களுக்கும் சப்போர்ட்செய்யும் வகையில் இந்த Deseat.me இல்லைஎன்றாலும் ஃபேஸ்புக் போன்ற பெரிய இணையதளங்களுக்குசப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது.

ஆயினும்வரும் காலத்தில் இந்த இணையதளம், சின்னசின்ன இணையதளங்களில் உள்ள நம்முடைய விபரங்களைகண்டுபிடிக்கும் திறன் வாய்ந்ததாக செயல்படவைக்கும் முயற்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1ல் அடங்கியபல்வேறு பதவிகளில் 85 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தேர்வுக்கு விண்ணப்பிக்க
ஒரு மாத காலஅவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக டிசம்பர்8 வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பதாரர்கள்விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரைகாத்திருக்காமல் அதற்கு முன்னரே போதியகால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தபோதிலும் விண்ணப்பதாரர்கள் கடைசிநேரம் வரை விண்ணப்பிக்க முற்பட்டுவருகின்றனர்.
இதைத்தொடர்ந்துபல்வேறுதரப்பினரிடமிருந்துபெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இந்த தொகுதி-1 தேர்விற்குவிண்ணப்பிக்க டிசம்பர் 12 வரை கால நீட்டிப்புவழங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தேர்விற்கான கட்டணம் செலுத்த டிசம்பர்15 வரையும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் முதனிலைத் தேர்விற்கான தேதியில் மாற்றம் இல்லை.

இதற்குமேல் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாதுஎன்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஆகையால் விண்ணப்பதாரர்கள் இந்தவாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரைகாத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிலாது நபி விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வெளியிட்டுள்ள அரசாணையில்கூறப்பட்டு இருப்பதாவது:

இந்த ஆண்டில் டிசம்பர் 12-ந்தேதியன்று மிலாது நபி விடுமுறை
விடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், தமிழக அரசின் தலைமைக்காஜி அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், நவம்பர் 30-ந் தேதி பிறைதெரிந்ததாகவும், எனவே, மிலாது நபிவிழா 13-ந் தேதியன்று கொண்டாடப்படும்என்றும் கூறியிருக்கிறார். மேலும், மிலாது நபிவிழாவுக்கு 12-ந் தேதிக்குப் பதிலாக, 13-ந் தேதி விடுமுறை அளிக்கவேண்டும் என்றும் அவர் அதில்கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதன்படி, மிலாது நபி விடுமுறையைடிசம்பர் 12-ந் தேதிக்குப் பதிலாக, டிசம்பர் 13-ந் தேதியன்று (செவ்வாய்கிழமை) அளிக்க அரசு முடிவுசெய்துள்ளது. அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படுகிறது. அதன்படி, 13-ந் தேதியன்று மிலாதுநபிவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு நாள் 25 மணி நேரமாக மாறுகிறது!

ஒரு நாளில் எனக்கு 24 மணி நேரம் பற்றாக்குறையாக உள்ளது. இன்னும் சில மணி நேரம் இருந்தால் நிறைய வேலைகளைச்
செய்து சாதனை புரிவேன்’ என்று சொல்பவர்களுக்கு எல்லாம் நற்செய்தி காத்துக்கொண்டிருக்கிறது. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் 24 மணி நேரத்திலிருந்து 25 மணி நேரமாக தன்னை நீடித்துக்கொள்ள இருக்கிறது.
  

பூமி ஒவ்வொரு நூற்றாண்டிலும் தன்னைத்தானே சுற்றி வருவதற்கு 2 மில்லி விநாடிகள் அதிகமாக எடுத்துக்கொண்டு வருகிறது என்று அமெரிக்க புவியியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி பூமி சுற்றிவரும் நேரத்தில் ஏற்படும் மாற்றங்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நிகழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். பூமி பல சுற்றுச்சூழல் மாற்றங்களை கண்டுவந்துள்ளது. அவற்றில் முக்கிய மாற்றம் காற்றின் அடர்த்தி கூடியது. தூசுகள், வாயுக்கள் காற்றில் அதிகரித்து வருவதால் காற்றில் அடர்த்தி அதிகரித்து பூமி சுற்றிவரும் நேரத்தின் அளவு அதிகரிக்கும் நிலையை எட்டியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். பூமி சுற்றும் நேரத்தின் அளவு கூடுவது தொடருமானால், இன்னும் 2 மில்லியன் நூற்றாண்டுகளில் பூமியின் சுற்றும் நேரம் 25 மணி நேரத்தை எட்டிவிடும் என்று உறுதியாகக் கூறுகின்றனர். மேலும், இந்த நிகழ்வுக்கு நிலவின் ஈர்ப்பு சக்தியும் காரணமாக இருக்கலாமா என்றும் ஆராய்ந்து வருகின்றனர்.

டி.இ.டி தேர்வு எப்போது ?? தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்

6 மாவட்டங்களில் இரண்டாம் பருவத்தேர்வுக்கான அட்டவணை...




தொலைநிலை கல்வி தேர்வு தள்ளிவைப்பு

சென்னைபல்கலை யின் தொலைநிலை தேர்வுகள், தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.இது குறித்து, சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டுஅதிகாரி,
திருமகன் வெளியிட்ட அறிவிப்பில், 'ஜெயலலிதா மறைவு காரணமாக, தொலைநிலைகல்வி மாணவர்களுக்கு, டிச., 10 மற்றும், 11ம் தேதிகளில் நடக்கவிருந்ததேர்வுகள், தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. 'புதிய தேதி, பின் அறிவிக்கப்படும்' என, கூறப்பட்டு உள்ளது.

எழுத்து தேர்வு ஒத்திவைப்பு

இளநிலைஉதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு, ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.'இளநிலை உதவியாளர்கள் மற்றும்உதவி சேமிப்புக் கிடங்கு
மேலாளர்கள் பணிக்கானஎழுத்துத்தேர்வு, டிச., 11ல், சென்னைவேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடைபெறும்' என, தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு நிறுவனம் அறிவித்திருந்தது.

தற்போது, 'நிர்வாக காரணங்களால், எழுத்துத்தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது; தேர்வுதேதி, பின் வெளியிடப்படும்' என, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு ரொக்கம் இல்லா வரவு-செலவு விழிப்புணர்வு : மத்திய அரசு ஏற்பாடு

ரொக்கம்இல்லா வரவுசெலவு பரிவர்த்தனைகளை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசுஏற்பாடு
செய்து உள்ளது.இந்தியாமுழுவதும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்செல்லாது என்ற அறிவிப்பால் பணதட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மக்களிடம் பணப்புழக்கம்வெகுவாக குறைந்து உள்ளது. .
இதனை தவிர்க்க மக்கள் தங்களது தேவைகளுக்குரொக்கம் இல்லா வரவுசெலவுகளை மேற்கொள்ளும்படிமத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.இது குறித்து மக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதல் கட்டமாகபல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில்விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசுஏற்பாடு செய்து உள்ளது எனமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துஅவர் கூறியதாவது:நாட்டில் ரொக்கம் இல்லா வரவுசெலவுகளைஅதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் நாடுமுழுவதிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு மத்தியில் ரொக்கம் இல்லா வரவுசெலவுகுறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்ட உள்ளது.டிசம்பர்-12ந்தேதிதொடங்கும் இந்த விழிப்புணர்வு பிரசாரம்ஒரு மாத காலம் நடைபெறும்.இதையொட்டி நேற்று 670 துணை வேந்தர்கள் மற்றும்மூத்த அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம்ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கில் ஆதரவுகருத்துகள் பதிவு செய்யப்பட்டன.
10 பேரைஇணைக்க வேண்டும்
பல்வேறுகல்வி நிறுவனங்களை ஒரு டிஜிட்டல் வளாகத்திற்குள்ஒருங்கிணைக்கும் முயற்சியின் சிறிய தொடக்கம் தான்இது.ஒவ்வொரு மாணவரும் டிஜிட்டல்தளத்தில் சேர்ந்து தனது குடும்பத்தினர் உள்பட10 பேரை ரொக்கம் இல்லா பரிமாற்றத்தில்இணைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு காட்டாயமில்லை: மத்திய அரசு அதிரடி

குறைந்தமாதம் ஊதியம் பெறுபவர்களுக்கு இ.பி.எஃப். எனப்படும்தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கட்டாயமில்லைஎன்ற அதிரடியான
உத்தரவை மத்திய அரசுபிறப்பித்துள்ளது.
இதன்படிஅமைப்பு சார்ந்த தொழில் துறைகளில்15,000 ரூபாய்க்கும் குறைவாக மாதம் சம்பளம்பெறுபவர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பதுகட்டாயமில்லை. ஆனால் வேலை அளிக்கும்நிறுவனம் தனது பங்கை செலுத்தவேண்டும் என்பது எந்த மாற்றமும்செய்யப்படவில்லை.

பெரும்பாலானநிறுவனங்கள் தொழிலாளர்களிடம் இருந்தே இதற்கான தொகையைபிடித்தம் செய்வதால் அவற்றிற்கு எந்த பாதிப்பும் இல்லை. மத்திய அரசின் இந்த முடிவால்ஓய்வு பெறும் தொழிலாளர்களின் சேமிப்புகேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன் 60 ஆண்டுகாலஇ.பி.எஃப். முறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளதாகஇந்த முடிவு அமைந்துள்ளது எனதொழிற்சங்க பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


மத்தியஅரசின் முடிவால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி  சட்டபூர்வ அந்தஸ்தை இழக்கிறது. வருங்கால வைப்பு நிதிக்கான குறைந்தபட்சபங்களிப்பை 12 சதவிதத்தில் இருந்து குறைப்பதற்கான சட்டத்திருத்தத்தைமத்திய தொழிலாளர் அமைச்சகம் தயார் செய்து வைத்துள்ளது. ஆனால் அரசியல் எதிர்ப்பு காரணமாகநாடாளுமன்றத்தில் அதை தாக்கல் செய்யமுடியாமல் மோடி அரசு நிலுவையி்ல்வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Directorate of Government Examinations - - ESLC 2017 - Tatkal Date Extension - Information

பொதுத்தேர்வு எழுத முடியுமா? : 11 லட்சம் மாணவர்களுக்கு சிக்கல்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப் படாததால், 11 லட்சம் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதுவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில், 20 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இவர்களில், 55 சதவீதம் பேர், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்.
மத்திய இடை நிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தமிழக பாடத்திட்டத்தில் பயிலும், பிளஸ் 2 மாணவர்களும், தேர்வு எழுத உள்ளனர்.தனியார் பள்ளிகளுக்கு, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்பட்ட அங்கீகாரம், 2011ல், ஆண்டுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டது. இதன்படி, கடந்த ஆண்டில், அங்கீகாரம் முடிந்த, 4,800 பள்ளிகள், மீண்டும் அங்கீகாரம் நீட்டிப்பு கோரி, மெட்ரிக் இயக்குனரகம் மற்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தன.இவற்றில், பெரும்பாலான பள்ளிகளுக்கு, இதுவரை அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து, தனியார் பள்ளி நிர்வாக சங்கத்தினர், முதல்வரின் தனிப்பிரிவு, பள்ளிக்கல்வி செயலகம், மெட்ரிக் இயக்குனரகம் போன்றவற்றுக்கு, பல முறை மனுக்கள் அனுப்பியும் பயன் இல்லை.அரசு தேர்வுத்துறை, மார்ச்சில் நடக்கவுள்ள பொதுத் தேர்வுக்கான மாணவர் விபரங்களை, சேகரிக்க துவங்கியுள்ளது.

தனியார் பள்ளிகள், மாணவர் விபரங்களுடன், அங்கீகார நகல் கடிதத்தையும் வழங்க வேண்டும். ஆனால், அங்கீகாரம் வழங்கப்படாததால், தேர்வுத்துறைக்கு ஆவணங்கள் அனுப்ப முடியாமல், பள்ளிகள் பரிதவிப்பில் உள்ளன.இதுகுறித்து, தனியார் நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர், நந்தகுமார் கூறுகையில், ''அங்கீகாரம் நீட்டிப்பு கோரி, தனியார் பள்ளிகள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தும், இன்னும் அங்கீகாரம்வழங்கப்படவில்லை. அதனால், பொதுத் தேர்வுக்கான மாணவர் விபரங்களை தேர்வுத்துறைக்கு கொடுப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

NMMS-2017 Application Form

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு காட்டாயமில்லை: மத்திய அரசு அதிரடி

குறைந்த மாதம் ஊதியம் பெறுபவர்களுக்கு இ.பி.எஃப். எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கட்டாயமில்லை என்ற அதிரடியான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. 
இதன்படி அமைப்பு சார்ந்த தொழில் துறைகளில் 15,000 ரூபாய்க்கும் குறைவாக மாதம் சம்பளம் பெறுபவர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பது கட்டாயமில்லை. ஆனால் வேலை அளிக்கும் நிறுவனம் தனது பங்கை செலுத்த வேண்டும் என்பது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் இருந்தே இதற்கான தொகையை பிடித்தம் செய்வதால் அவற்றிற்கு எந்த பாதிப்பும் இல்லை. மத்திய அரசின் இந்த முடிவால் ஓய்வு பெறும் தொழிலாளர்களின் சேமிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன் 60 ஆண்டுகால இ.பி.எஃப். முறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளதாக இந்த முடிவு அமைந்துள்ளது என தொழிற்சங்க பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் முடிவால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி  சட்டபூர்வ அந்தஸ்தை இழக்கிறது. வருங்கால வைப்பு நிதிக்கான குறைந்தபட்ச பங்களிப்பை 12 சதவிதத்தில் இருந்து குறைப்பதற்கான சட்டத்திருத்தத்தை மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயார் செய்து வைத்துள்ளது. ஆனால் அரசியல் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்றத்தில் அதை தாக்கல் செய்ய முடியாமல் மோடி அரசு நிலுவையி்ல் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மூன்று நாள் துக்கம் அனுசரித்து பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.


இன்றுடன் மூன்று நாள் நிறைவு பெறுவதையடுத்து நாளை பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில் திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவித்துள்ளது. 

டெபிட், கிரெடிட் கார்டில் பணம் செலுத்தினால் அதிரடி டிஸ்கவுண்ட் சலுகைகள்.. அறிவித்தார் அருண் ஜேட்லி.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
# ரெயில்வே பயணச்சீட்டு மின்னனு முறையில் பதிவு செய்தால் ரூ.10 லட்சம் வரை காப்பீடு

# புறநகர் ரெயில்களில் மின்னணு முறையில் சீசன் டிக்கெட் வாங்கினால் 0.5 % தள்ளுபடி

# கிசான் கிரெடிக் கார்டு வைத்திருப்போருக்கு நபார்டு வங்கி மூலம் ரூபே கார்டு வழங்கப்படும்

# இந்த திட்டங்களுக்கான தள்ளுபடி ஜனவரி 1-ம் தேதி முதல்அமல்படுத்தப்படும்

# பெட்ரோல்,டீசல் நிலையங்களில் மின்னணு முறையில் பரிவர்த்தனை செய்தால் 0.75 % தள்ளுபடி

# பணமில்லா பரிவர்த்தனையே பொருளாதார வளர்ச்சிக்கான முதுகெலும்பு

# டோல்கேட்டில் கார்டு பயன்படுத்தினால் 0.5 % கட்டணச்சலுகை

# ரெயில்வே நிலையங்களில் ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்தால் 5 % சலுகை

# சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 10 % தள்ளுபடி

# எல்.ஐ.சி.காப்பீடுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் 8 % தள்ளுபடி

# மின்னணு முறைக்கு நுகர்வோர்களை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது

# மின்னணு பணப்பரிமாற்றமே பண மதிப்பிழப்பு அறிவிப்பின்இலக்கு

# ரிசர்வ் வங்கி திட்டமிட்டபடி புதிய பண தாள்களை வெளியிட்டு வருகிறது.

# ரெயில்களில் மின்னணு முறையில் டிக்கெட் வாங்கினால் ரூ.10 லட்சத்திற்கு காப்பீடு

# ரெயில்களில் உணவு வாங்க மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 5 % தள்ளுபடி

# கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மின்னணு பரிவர்த்தனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

விரைவில் தள்ளுபடி அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

TNPSC:குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 
''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 85 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக டிசம்பர் 8 வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தபோதிலும் விண்ணப்பதாரர்கள் கடைசிநேரம் வரை விண்ணப்பிக்க முற்பட்டுவருகின்றனர்.இதைத்தொடர்ந்து பல்வேறுதரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இந்த தொகுதி-1 தேர்விற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 12 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தேர்விற்கான கட்டணம் செலுத்த டிசம்பர் 15 வரையும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் முதனிலைத் தேர்விற்கான தேதியில் மாற்றம் இல்லை.இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஆகையால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC:குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 
''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 85 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக டிசம்பர் 8 வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தபோதிலும் விண்ணப்பதாரர்கள் கடைசிநேரம் வரை விண்ணப்பிக்க முற்பட்டுவருகின்றனர்.இதைத்தொடர்ந்து பல்வேறுதரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இந்த தொகுதி-1 தேர்விற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 12 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தேர்விற்கான கட்டணம் செலுத்த டிசம்பர் 15 வரையும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் முதனிலைத் தேர்விற்கான தேதியில் மாற்றம் இல்லை.இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஆகையால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8/12/16

பருவம் 2 தேர்வு கால அட்டவணை


Upper primary
15.12.2016.         தமிழ்
16.12.2016.         ஆங்கிலம்
19.12.2017.         Slas
20.12.2016.         Slas
21.12.2016.         கணக்கு
22.12.2016.          அறிவியல்
23.12.2016.         சமுக அறிவியல்

Primary

15.12.2016.      தமிழ்
16.12.2016.      ஆங்கிலம்
19.12.2016.      கணக்கு
20.12.2016.      அறிவியல்
21.12.2016.       Slas
22.12.2016.       Slas
23.12.2016.       சமுக அறிவியல்

Directorate of Government Examinations- - ESLC 2017 - Tatkal Date Extension to 08/12/16 - Information

13 ஆம் தேதி கொண்டாடப்பட இருந்த மிலாடி நபி- பண்டிகை (விடுமுறை) 12 ம்தேதிக்கு மாற்றம்* *மத்திய அரசு ஆணை

2017-மார்ச் -SSLC தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி தேர்வர்களின் சலுகைகள் கோரும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அறிவுரைகள்

TNTET- ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகுங்க!

பல்வேறுவழக்குகளால் தள்ளிக்கொண்டே போன ஆசிரியர் தகுதித்தேர்வு, விரைவில் வரவிருக்கிறது. இது ஆசிரியப் பட்டம்படித்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி.ஆசிரியர் தகுதித்தேர்வு
நடத்தப்பட்டு முதல் இரண்டு தேர்வுகளும்கடினமாக இருந்ததாகப் பரவலான கருத்து இருந்தபோதும்2013 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில்பலர் தேர்ச்சி பெற்றனர்.

TNPSC:'குரூப் - 1' தேர்வு; விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் கிடைக்குமா?

திடீர்விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால், 'குரூப் - 1' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை இன்றுடன் முடிக்காமல், ஒரு வாரம்
நீட்டிக்கவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில், துணைகலெக்டர், வணிக வரி அதிகாரி, டி.எஸ்.பி., உள்ளிட்ட, 'குரூப் - 1' பதவிகளில், 85 இடங்கள் காலியாக உள்ளன. 

 இவற்றை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., - பிப்., 19ல்தேர்வு நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்றுடன் முடிகிறது.


ஆனால், கடந்த வாரம், வங்க கடலில்உருவான, 'நடா' புயலால் அறிவித்தவிடுமுறை; செல்லா நோட்டு அறிவிப்பால்பணத் தட்டுப்பாடு மற்றும் தமிழக முதல்வராகஇருந்த ஜெயலலிதாவின் மறைவால் விடுமுறை போன்றகாரணங்களால், விண்ணப்பிக்க, தேர்வர்களுக்கு தாமதம் ஏற்பட்டது. இன்றுஒரு நாளில், விண்ணப்பம் பதிவுசெய்வதில், நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், ஒரு வாரம் கூடுதல் அவகாசம்வழங்க, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

CPS NEWS:ஆசிரியர்கள் போராட்டம் _ போலீஸ் தடியடி.ஆசிரியர் மரணம்.

 புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி உத்தரபிரதேசதலைநகர் லக்னோவில் இன்று (07.12.2016) நடைபெற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள்
மீது போலீசார் நடத்தியதடியடியில் ஆசிரியர் ஒருவர் மரணம்.
CPS ரத்துசெய்ய போராடிவீரமரணம் அடைந்த ஆசிரிய சகோதரருக்குவீரவணக்கம்.


நன்றி-தகவல்-திரு-எங்கெல்ஸ்.திண்டுக்கல்

மாவட்ட தொடக்ககல்வி அலுவலகம் - தஞ்சாவூர் இரண்டாம் பருவத்தேர்வுக்கான அட்டவணை...

NMMS ONLINE ENTRY !!

மாணவர்விவரம் mobile no,email, * உள்ள விவரங்கள் இது போன்ற விவரங்களைதயார் செய்து கொண்டு ONLINE ENTRY செய்தால்சுலபமாக
இருக்கும்.

www.tngdc.gov.in* என்றவலைதளத்திற்கு சென்று

*Welcome to ONLINE PORTAL* ஐCLICK செய்தால்
EXAMINATION DETAILS OPEN ஆகும்.
அதில்*NMMS* CLICK செய்தவுடன்*USERNAME & PASSWORD* கேட்கும்.
அதை உரிய இடத்தில் பதிவுசெய்யவேண்டும்.

*NMMS : Vellore District*


User Name : *D30E30* Password : *DEE30P030*

பின்னர்*ONLINE NMMS APPLICATION OPEN* ஆகும்

  அதில் கேட்கப்படும் *Students information* மற்றும் *PARENTS information* ஐ தவறில்லாமல் Type செய்து இறுதியில்*Submit* கொடுத்தால்Application ஏற்றுக்கொள்ளப்படும்.

Techno Club-Competition Marks ,Prize& Expenditure



Flash News:மிலாடி நபி முன்னிட்டு 13.12.2016 ஆம் தேதிஅன்று விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு.



வங்கக்கடலில் மீண்டும் புதிய புயல் சின்னம்.

வங்கக் கடலில் அந்தமான் அருகே, புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. வங்கக் கடலில், நவ., 30ல் உருவான, 'நடா' புயல், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை தாண்டி, அரபிக் கடலுக்கு சென்றது. 
இப்புயல், நேற்று காலை, கடலிலேயே கரைந்தது. இந்நிலையில், வங்கக் கடலில் அந்தமான் அருகே, இரு தினங்களுக்கு முன், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, விசாகப்பட்டினத்தில் இருந்து, 1,260 கி,மீ., ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து, 1,310 கி.மீ., தெற்கு நிகோபாரிலிருந்து, 260 கி.மீ., தொலைவில், நேற்று மாலை மையம் கொண்டிருந்தது.

 இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயல் சின்னமாக உருவாகும்; இன்னும் இரு தினங்களில், விசாகப்பட்டினத்தை நோக்கி நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி வடக்கு கடலோர மாவட்டங்களில், டிச., 9 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழக புதிய அமைச்சரவை விவரம்:

1. ஓ.பன்னீர் செல்வம் - பொது நிர்வாகம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்துறை
2. திண்டுக்கல் சீனிவாசன் - வனத் துறை
3. எடப்பாடி பழனிச்சாமி - பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை துறை
4. செல்லுார் ராஜூ - கூட்டுறவுத் துறை
5. தங்க மணி - மின்சாரம், மதுவிலக்குத் துறை

6.வேலு மணி - நகர வளர்ச்சி துறை
7.ஜெயகுமார் - மீன்வளத் துறை
8.சண்முகம் - சட்டத்துறை
9.அன்பழகன் - உயர்கல்வி துறை
10.சரோஜா - சமூக நலன், சத்துணவுத் துறை
11. எம்.சி. சம்பத் - தொழில் துறை
11. கருப்பணன் - சுற்றுச்சூழல் துறை
12.காமராஜ் - உணவுத் துறை
13. ஓ.எஸ்.மணியன் - கைத்தறித் துறை
15. உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி வாரியத் துறை
16. விஜய பாஸ்கர் - சுகாதாரத் துறை
17. துரைகண்ணு - வேளாண் துறை
18. கடம்பூர் ராஜூ - தகவல் மற்றும் செய்தி தொடர்பு துறை
19. ஆர்.பி. உதயகுமார் - வருவாய் துறை
20. வேலுமணி - நகர வளர்ச்சி துறை
21. வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலா துறை
22. மஃபா பாண்டியராஜன் - பள்ளி கல்வித் துறை
23. ராஜேந்திர பாலாஜி - பால்வளத் துறை
24. பென்ஜமின் - ஊரக வளர்ச்சி துறை
25. விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை
26. நிலோபர் கபில் - தொழிலாளர் நலத் துறை
27. மணிகண்டன் - தகவல் தொடர்பு துறை
28. ராஜலெட்சுமி - ஆதி திராவிடர் நலத் துறை
29. பாஸ்கர் - கதர் துறை
30. வீரமணி - வணிக வரித் துறை
31. சேவூர் ராமச்சந்திரன் - இந்து சமய அறநிலையத் துறை
32. வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை
32. பால கிருஷண ரெட்டி - கால்நடை துறை

NMMS ONLINE ENTRY !!

மாணவர் விவரம் mobile no,email, * உள்ள விவரங்கள் இது போன்ற விவரங்களை தயார் செய்து கொண்டு ONLINE ENTRY செய்தால் சுலபமாக இருக்கும்.


*www.tngdc.gov.in*  என்ற வலைதளத்திற்கு சென்று
*Welcome to ONLINE PORTAL*  ஐ CLICK செய்தால்
EXAMINATION DETAILS OPEN ஆகும்.
அதில் *NMMS* CLICK செய்தவுடன் *USERNAME & PASSWORD* கேட்கும்.
அதை உரிய இடத்தில் பதிவு செய்யவேண்டும்.
 *NMMS : Vellore  District*
---------------------------------------------
 User Name : *D30E30*   Password : *DEE30P030*
------------------------------+++-+-----
பின்னர் *ONLINE NMMS APPLICATION OPEN* ஆகும்
அதில் கேட்கப்படும் *Students information* மற்றும் *PARENTS information* ஐ தவறில்லாமல் Type செய்து
இறுதியில் *Submit* கொடுத்தால் Application ஏற்றுக்கொள்ளப்படும்.

முதல்வர் ஜெயலலிதா மறைவு எதிரொலி : அரையாண்டுதேர்வுகள் ஒத்திவைப்பு.

முதல்வர் ஜெயலலிதா மறைவால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றும்,
6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 9ம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா ேநற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று நடக்க இருந்த அரையாண்டு தேர்வு வருகிற 9ம் தேதியும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Paytm:ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் இனி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யலாம்: எப்படி?

ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான புதிய முறையை பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.     

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை நடத்துவதில் தற்போது பேடிஎம் நிறுவனம் முன்னணி வகிக்கிறது. ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க விவகாரத்திற்கு பிறகு நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இணைய இணைப்பும், ஸ்மார்ட்போனும்  இருப்பவர்கள் மட்டுமே இதில் ஈடுபட முடியும் என்ற நிலை உள்ளதால், நாடு முழுவதும் பெரும்பான்மையாக இருக்கின்ற இதர மக்கள் இந்த வசதியைப் பெற முடியாத நிலைமை இருந்தது. இதனைப்போக்க தற்போது பேடிஎம் நிறுவனம் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன்படி இந்த இணைய இணைப்போ , ஸ்மார்ட்போனோ இல்லாதவர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடலாம். இதற்கென 180018001234 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   இதை பயன்படுத்துவதற்கு என நடைமுறைகளும் வெயிடப்பட்டுள்ளது.

அதன்படி இதனைப் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களோ, வியாபாரிகளோ முதலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தங்களது அலைபேசி எண்னை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் தங்களுக்கு என ஒரு நான்கு இலக்க ரகசிய எண்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் யாருக்கு பணத்தை செலுத்த வேண்டுமோ அவர்களது அலைபேசி எண்னை பதிவு செய்து, செலுத்த வேண்டிய தொகையையம் உள்ளிட வேண்டும். அதன் பின்னர் பரிவர்த்தனையை உறுதி செய்ய தங்களது ரகசிய எண்னை பதிவிட வேண்டும். இதன் முறையின் மூலம் அவர்களும் பணத்தை டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய இயலும். 

இவ்வாறு பேடிஎம் நிறுவனத்தின் துணைத்தலைவர் நிதின் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அங்கீகாரம் புதுப்பிக்காத பள்ளிகளுக்கு 'கிடுக்கிப்பிடி'

EMIS இணையதளத்தில் தேர்வு எண் சேர்ப்பு ; கால அவகாசம் நீட்டிக்க வலியுறுத்தல்

10th Half yearly Exam Dates No Change

அரையாண்டுத்தேர்வுகள் 09.12.2016 முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும்.07.12.2016 மற்றும் 08.12.2016 அன்று நடைபெறவிருந்த தேர்வுகள், நடைபெற வேண்டிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு: ஜனவரிக்கு ஒத்தி வைப்பு.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, அது தொடர்பான அரசாணையை எதிர்த்தும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்தும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வானது, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு புதன்கிழமை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை பொங்கல் விடுமுறைக்கு பின்னர் விசாரிப்பதாக கூறி ஜனவரிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருவள்ளுவர் பல்கலை தேர்வு தேதி அறிவிப்பு.

கடந்த, 6, 7ல் நடக்க இருந்த, வேலுார் திருவள்ளுவர் பல்கலை தேர்வுகள், வரும், 9, 10ல் நடக்க உள்ளது. இது குறித்து, பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: 
வேலுார், திருவள்ளுவர் பல்கலையின் கட்டுப்பாட்டில், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, 130க்கும் மேற்பட்ட கலை கல்லுாரிகள் செயல்படுகின்றன.

முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, வேலுார் திருவள்ளுவர் பல்கலையில், கடந்த, 6, 7ல் நடக்க இருந்த முதல் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கு பதிலாக, 9, 10ல் தேர்வு நடக்க உள்ளன.

வங்க கடலில் 'வார்தா:' கடலோரங்களில் புயல் எச்சரிக்கை.

வங்க கடலில் தீவிரமாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று, 'வார்தா' புயலாக மாறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மீனவர்களுக்கு, புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வங்க கடலின் தென் கிழக்கில், அந்தமான் பகுதியில், மூன்று நாட்களாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இந்த மண்டலம், இன்று அதிகாலை தீவிரமாகி, நாளைக்குள் புயலாக மாறும் என, வானிலை முன் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்த புயலுக்கு, பாகிஸ்தான் அளித்துள்ள, வார்தா என்ற, அரபி மற்றும் உருது மொழி பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த பெயருக்கு, ரோஜா மலர் என, அர்த்தம். இந்த புயல், வட மேற்கு பக்கம் நகர்ந்து, விசாகப்பட்டினம் மற்றும் சென்னைக்கு இடைப்பட்ட பகுதியை நெருங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி, விசாகப்பட்டினத்தில் இருந்து, தென் கிழக்கில், 1,180 கி.மீ., நிகோபார் தீவுக்கு வடமேற்கில், 260 கி.மீ., துாரத்தில், புயல் சின்னம் நிலை கொண்டுள்ளது.

இதையடுத்து, சென்னை, கடலுார், நாகை துறைமுகங்களில், ஐந்தாம் எண் புயல் சின்னம், எண்ணுார், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், துாத்துக்குடி துறைமுகங்களில், முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்றும், நாளையும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடலோர மாவட்டங்களில், சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

TNPSC:'குரூப் - 1' தேர்வு; விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் கிடைக்குமா?

திடீர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால், 'குரூப் - 1' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை இன்றுடன் முடிக்காமல், ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில், துணை கலெக்டர், வணிக வரி அதிகாரி, டி.எஸ்.பி., உள்ளிட்ட, 'குரூப் - 1' பதவிகளில், 85 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., - பிப்., 19ல் தேர்வு நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்றுடன் முடிகிறது.

ஆனால், கடந்த வாரம், வங்க கடலில் உருவான, 'நடா' புயலால் அறிவித்த விடுமுறை; செல்லா நோட்டு அறிவிப்பால் பணத் தட்டுப்பாடு மற்றும் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவால் விடுமுறை போன்ற காரணங்களால், விண்ணப்பிக்க, தேர்வர்களுக்கு தாமதம் ஏற்பட்டது. இன்று ஒரு நாளில், விண்ணப்பம் பதிவு செய்வதில், நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், ஒரு வாரம் கூடுதல் அவகாசம் வழங்க, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNTET- ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகுங்க!

பல்வேறு வழக்குகளால் தள்ளிக்கொண்டே போன ஆசிரியர் தகுதித் தேர்வு, விரைவில் வரவிருக்கிறது. இது ஆசிரியப் பட்டம் படித்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி.ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு முதல் இரண்டு தேர்வுகளும் கடினமாக இருந்ததாகப் பரவலான கருத்து இருந்தபோதும் 2013 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் பலர் தேர்ச்சி பெற்றனர்.

ஜெ., சொத்துக்கள் யாருக்கு சேரும்

ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், அவரது சொத்துக்கள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, வேட்புதாக்கல் செய்த ஜெயலலிதா, தன் சொத்து விபரங்களை குறிப்பிட்டு இருந்தார். அவரது மொத்த சொத்துமதிப்பு 113.73 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில், 41.63 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரநகைகள், 14.7 கோடி ரூபாய் அசையா சொத்து, கொடநாடு எஸ்டேட், சசி எண்டர்பிரைசஸ், ஜெயா பப்ளிகேசன்ஸ் உள்ளிட்ட 27 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மற்றும் 10.63 கோடி ரூபாய் வங்கி டிபாசிட் அடக்கம்.

அவரின் அரசியல் வாரிசு, அநேகமாக முடிவு செய்யப்பட்டு விட்டநிலையில், சொத்துக்களுக்கான வாரிசு யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார், அவர் மகள் தீபா, மகன் தீபக் உள்ளிட்ட உறவினர்கள் உள்ளனர். நேற்றைய இறுதிசடங்குகளை தீபக் தான் செய்தார். 

வங்கக்கடலில் மீண்டும் புதிய புயல் சின்னம்:

வங்கக் கடலில் அந்தமான் அருகே, புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. வங்கக் கடலில், நவ., 30ல் உருவான, 'நடா' புயல், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை தாண்டி, அரபிக் கடலுக்கு சென்றது. இப்புயல், நேற்று காலை, கடலிலேயே கரைந்தது. இந்நிலையில், வங்கக் கடலில் அந்தமான் அருகே, இரு தினங்களுக்கு முன், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, விசாகப்பட்டினத்தில் இருந்து, 1,260 கி,மீ., ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து, 1,310 கி.மீ., தெற்கு நிகோபாரிலிருந்து, 260 கி.மீ., தொலைவில், நேற்று மாலை மையம் கொண்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயல் சின்னமாக உருவாகும்; இன்னும் இரு தினங்களில், விசாகப்பட்டினத்தை நோக்கி நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி வடக்கு கடலோர மாவட்டங்களில், டிச., 9 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. - நமது நிருபர்

HALF YEARLY EXAM POSTPONED | DATE ANNOUNCEMENT SOON:

முதல்வர் ஜெயலலிதா மறைவு எதிரொலி : அரையாண்டுதேர்வுகள் ஒத்திவைப்பு.
முதல்வர் ஜெயலலிதா மறைவால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றும்,
6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 9ம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா ேநற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று நடக்க இருந்த அரையாண்டு தேர்வு வருகிற 9ம் தேதியும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

8th Private Exam Tatkal Application | Last Date:08.12.2016 05:00pm

CEO கடலூர்-அரையாண்டுத்தேர்வுகள் 09.12.2016 முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும். 07.12.2016 மற்றும் 08.12.2016 அன்று நடைபெறவிருந்த தேர்வுகள், நடைபெற வேண்டிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்:

07/12/16 மற்றும் 08/12/16 ஆகிய நாட்களில் நடைபெற வேண்டிய 12 ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர்அறிவிக்கப்படும் - CEO VILLUPUAM :

TNPSC GROUP I EXAM FREE COACHING | SIVAGANGAI DT:

சிவகங்கை: டி.என்.பி.எஸ்.சி, குரூப் 1 தேர்வு 2017 பிப்ரவரியில் நடக்கிறது.
இதற்கான இலவச பயிற்சி வகுப்பு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் நடக்கிறது. பயிற்சி வகுப்பு சனி, ஞாயிறு காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடக்கும். அனுபவ மிக்கவர்கள் மூலம் பாடங்கள் நடத்தப்படும்.
பாடக்குறிப்புகள் வழங்குவதோடு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் என, மாவட்ட வேலைவாய்ப்பக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC EXAM CERTIFICATE VERIFICATION NEWS:

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 290 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு ஆகஸ்ட் 28ம் தேதி அன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றப் பணியில் அடங்கிய கணினி இயக்குபவர், தட்டச்சர், வாசிப்பவர் மற்றும் தேர்வாளர், காசாளர், மற்றும் ஒளிப்படி இயக்குபவர் பதவிகளுக்கு (நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தியது. இதன் தேர்வுமுடிவுகள் 02.11.2016 அன்று வெளியிடப்பட்டது.

இதில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை எண், அவர்களின் இடஒதிக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.
மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு SMS மற்றும் E-mail மூலமும், கலந்தாய்விற்கான அட்டவணை (அழைப்புக் கடிதம்) விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள்: 13.12.2016
கலந்தாய்வு நடைபெறும் நாள்: 14.12.2016 முதல் 16.12.2016 
மேலும் விவரங்களுக்கு: http://tnpsc.gov.in/