யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/11/15

ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா கூறினார்.குழந்தைகள் தின விழா, டாக்டர்எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமைநடைபெற்றது. 


இதில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சிறந்த நூலகர்களுக்கான எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதுகளையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.விழாவில் தலைமை வகித்து, டி.சபிதா பேசியது:பள்ளி மாணவர்களுக்கான 14 வகையான நலத்திட்டங்களுக்காக தமிழக அரசு இதுவரை ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.தரமான கல்வியை வழங்க எத்தகைய கட்டமைப்பு வசதிகள் தேவை என்பதை அறிந்து அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள், சுற்றுச்சுவர்கள், கழிப்பறைகள் என உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மட்டும் ரூ.3 ஆயிரம் கோடியை தமிழக அரசு வழங்கியது. இதனால், நல்ல உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.குக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களையும் பள்ளிகளுக்கு அழைத்து வருவதற்காக போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனால் பள்ளிகளுக்கு வராமல் இருந்த 57 ஆயிரம் மாணவர்களில் 48 ஆயிரம் பேர் பள்ளிகளுக்கு வந்துள்ளனர்.மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ்2010-11-ஆம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 344 உயர்நிலைப் பள்ளிகளுக்கான கட்டடங்களைக் கட்ட ரூ.380 கோடியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தப் பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.இந்தத் திட்டத்தின்படி, தரம் உயர்த்தப்பட்ட மேலும் 810 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்காக மொத்தம் ரூ.1,268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்றார் அவர்.அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி: பாடப் புத்தகங்களை படிப்பதோடு நின்றுவிடக் கூடாது. நிறையப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளைக் கொண்டாடும் அதேவேளையில், நம்முள் உள்ள குழந்தைத் தன்மையையும் கொண்டாட வேண்டும் என்றார்.

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மைதிலி ராஜேந்திரன், பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர்க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், மெட்ரிக். பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உள்ளிட்டோரும் பேசினர்.

RTI Letter:ஒரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ பட்டம் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300, தர ஊதியம் ரூ.4200 வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவிப்பு...RTI--அரசு கடித எண் ;41541/சி.எம்.பி.சி./2013.நாள்.20.8.2013.



10-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அறிவிப்பு

காலியிடங்களை நிரப்பாவிட்டால் வேலைநிறுத்த போராட்டம்: கூட்டுறவு ஊழியர் சங்க நிர்வாகி தகவல்

தமிழக கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை வரும் 40 நாட்களுக்குள் நிரப்பாவிட்டால், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய கூட்டுறவு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் 6-வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க வந்த பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 6,000 பணியிடங்களை நிரப்பிட அரசுக்கு பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அறிவிப்பை வரும் 40 நாட்களுக்குள் வெளி யிடாவிட்டால், தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட உள் ளோம். குறிப்பாக வேலைநிறுத்தத் துக்கு தயாராக உள்ளோம்.

கூட்டுறவு வங்கிகளில் பணிபுரி யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிடவேண்டும். இதற்காக அரசின் நிதியை செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.மாறாக வங்கிகளின் லாபத்தில் இருந்து 10 சதவீதம் கொடுத்தாலே போதுமானது என்றார்.முதல் நாள் மாநாட்டில் ‘நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்திடவேண்டும். கூட்டுறவு வங்கிகளில் தொழில் நுட்ப சேவையை விரிவு படுத்த வேண்டும். நஷ்டத்தில் இயங்கும் கூட்டுறவு வங்கிகளுக்கு மாநில அரசு நிதி வழங்கிட வேண்டும். கூட்டுறவு வங்கி பணியாளர்களின் ஓய்வு வயதை 60 வயதாக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

11,000 மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது

மதுரை சர்வேயர் காலனியில் உள்ள மகாத்மா மாண்டிச்சோரி பள்ளியில் குழந்தைகள்தின விழாவையொட்டி மகாத்மா பள்ளிகள், பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சார்பில் ஆந்திர மாநிலத்தின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ‘கலாம்காரி’ஓவியம் வரையும் போட்டி நேற்று நடைபெற்றது. இதற்கு மதுரை பாத்திமா கல்லூரி முதல்வர் பாத்திமா மேரி, உயர் நீதிமன்ற நோட்டரி வழக்கறிஞர் திரவிய நாதன் நடுவர்களாக இருந்தனர்.


இதில் மதுரையில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 11,156 மாணவ, மாணவியர் ஒரே இடத்தில் அமர்ந்து கலாம்காரி ஓவியம் வரைந்தனர்.இதற்கு முன் இவ்வளவு அதிகமான குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து இந்த குறிப்பிட்ட ஓவியத்தை வரைந்ததில்லை. அதனால், இந்த ஓவிய நிகழ்ச்சி லிம்கா சாதனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இது குறித்து இந்த ஓவியப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் பள்ளிகளுடைய சூப்பர் டீச்சர் சியாமளா தேவி கூறுகையில், “தமிழ்நாட்டுக்கு தஞ்சை ஓவியம் எவ்வளவு முக்கியவம் வாய்ந்ததோ அதுபோல், ஆந்திரத்துக்கு கலாம்காரி ஓவியம் கலாச்சார முக்கியம் வாய்ந்தது.

ஆண்டுதோறும் எங்கள் நிர்வாகம் ஒவ்வொரு மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடு சார்ந்த ஓவியங்களை குழந்தைகள் தெரிந்து கொள்ள அவர்களுக்கு இந்த ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதற்கு முன் பிகார், ராஜஸ்தான், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுடைய ஓவியங்கள், கிளாசிக் பெயிண்டிங் உள்ளிட்டவை குறித்து 9 முறை ஓவியப்போட்டிகள் நடந்துள்ளன. இந்த 9 ஓவிய நிகழ்ச்சிகளும் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்றார்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ஆம் தேதியும் தொடங்குகின்றன. மாநிலம் முழுவதும் பொதுவாக நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 வகுப்புக்கான கால அட்டவணை விவரம்:-

*.டிசம்பர் 7 - திங்கள்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்
*.டிசம்பர் 8 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
*.டிசம்பர் 9 - புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
*.டிசம்பர் 10 - வியாழக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள
*.டிசம்பர் 12 - சனிக்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்
*.டிசம்பர் 14 - திங்கள்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், விவசாயம், அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில் கல்வி), நர்சிங் (பொது), கணக்குப் பதிவியல், கணக்குத் தணிக்கை
*.டிசம்பர் 16 - புதன்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரவியல், எலெக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராப்ட்ஸ்மென் சிவில், எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை
*.டிசம்பர் 18 - வெள்ளிக்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல், பொது இயந்திரவியல் தாள்-2, எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் தாள் 2, தொழில்கல்வி மற்றும் தணிக்கை
*.டிசம்பர் 21 - திங்கள்கிழமை - உயிரியல், தாவரவயில், வரலாறு, வணிகக் கணிதம்
*.டிசம்பர் 22 -செவ்வாய்க்கிழமை - கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்), புள்ளியியல், கணக்குப் பதிவியல்மற்றும் கணக்குத் தணிக்கை, செய்முறைத் தேர்வு, தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்)
*.தேர்வுகள் காலை 10 முதல் 1.15 வரை நடைபெறும். இதில் முதல் 10 நிமிஷங்கள்வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணை:

*.டிசம்பர் 9 - புதன்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்
*.டிசம்பர் 10 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
*.டிசம்பர் 12 - சனிக்கிழமை - ஆங்கிலம்முதல் தாள்
*.டிசம்பர் 14 - திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
*.டிசம்பர் 16 - புதன்கிழமை - அறிவியல்
*.டிசம்பர் 18 - வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல்
*.டிசம்பர் 21 - திங்கள்கிழமை - கணிதம்

தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும். முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

Flash News:தமிழகத்தில் கனமழை காரணமாக 24 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (16.11.2015)விடுமுறை

*ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*புதுக்கோட்டை  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*கன்னியாகுமரி  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*தர்மபுரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*நாமக்கல் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் மாவட்டபள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*வேலூர் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவண்ணாமலை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
*ராமநாதபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை
*திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
*அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
*கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை 
*சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

TNPSC : குரூப்-4 பதவிக்கான கலந்தாய்வு நாளை திட்டமிட்டப்படி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4 பதவிகளுக்கு நேரடி நியமனத்துக்கான முதல் கட்ட கலந்தாய்வு நவம்பர் 16 ஆம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சிஅறிவித்துள்ளது.குரூப்-4 பதவிகளுக்கு நேரடி நியமனத்துக்கான முதல் கட்ட கலந்தாய்வு நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்த உள்ளது.


இந்தப் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 2014 டிசம்பர் 21 ஆம் தேித நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து பணியாளர் தேர்வுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நாளை 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது.இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல் மூலமும், மின்னஞ்சல், குருந்தகவல் மூலமும் தகுதியானவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.கலந்தாய்வுக்கு வரத் தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் கனமழை; பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகம் மற்றும் பதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. 


சென்னையிலிருந்து 300 கிலோமீட்டருக்கு தொலைவில், இலங்கைக்கு அருகே நிலைகொண்டுள்ள இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணிநேரத்திற்குள், தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 25 செ.மீ. அளவிற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்குள் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று மண்டல ஆய்வு வானிலை மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்:

தென்மேற்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுநிலையின் காரணமாக அடுத்த 24 மணி நேரங்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தில் மழையளவு 35 சதவீதமாக உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.சென்னையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு:தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. சென்னை உட்பட மாநிலத்தின் பலபகுதிகளில் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு பகுதிகளில் மீட்புபணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. இதற்காக, ஆந்திராவிலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் 140 பேர் சென்னை வந்துள்ளனர். இவர்கள், சென்னை, விழுப்புரம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளில் ஈடுபட உள்ளனர்.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:
கனமழை காரணமாக
01.திருச்சி
02.நாமக்கல்
03.விழுப்புரம்
04.திருவண்ணாமலை
05.கடலூர்
06.நாகப்பட்டினம
்07.காஞ்சிபுரம
்08.கன்னியாகுமரி
09. வேலூர
்10.சென்னை11. திருவள்ளூர
்12.திருவாரூர
்13. புதுக்கோட்டைமாவட்டங்களில் நாளை (16ம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம்மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

01.தர்மபுரி
02.பெரம்பலூர்
03.கரூர்
04.அரியலூர
்05.தஞ்சாவூர
்06.நீலகிரி
07.கிருஷ்ணகிரி
08.சேலம்
09. ஈரோடு
10. திருப்பூர்
மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் 34 நிவாரண மையங்கள்:

தென் மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள புயல் காரணமாக , ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருகிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கு 34 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு, அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் விஜயகுமார் தெரிவித்தார் . இந்த முகாம்களை அமைச்சர் சுந்தர்ராஜன் பார்வையிட்டார்.

விமான சேவை பாதிப்பு:

சென்னையில் பெய்து வரும் மழையால் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கிருந்து கோவை வரும் விமானம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே போல் கோவை - சென்னை விமானமும் பறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் நாளை விடுமுறை:

வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. இதன்காரணமாக, மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (16ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

ரூ.80க்கு 'செக்' மாணவர்கள் 'ஷாக்'

சேலம்:அனைவருக்கும் கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளில் பெண்கல்வி முக்கியத்துவம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. அதற்கான பரிசுத்தொகை, 100 ரூபாய் மற்றும், 80 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டதால், பெற்றோர், மாணவ, மாணவியர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஒன்று முதல், ௮ம் வகுப்பு வரையிலான, மாணவ, மாணவியரிடையே, பெண்கல்வி முக்கியத்துவம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டி, பள்ளி அளவில், நடத்தப்பட்டது.


இதில், ஒன்று முதல், 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஓவியப்போட்டியும், 4 மற்றும் 5ம் வகுப்புக்கு பேச்சுப்போட்டியும், 6 முதல், 8ம் வகுப்பு வரை, கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது.ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை, நடத்தப்பட்ட போட்டிகளில், முதல் பரிசாக, 100 ரூபாயும், இரண்டாம் பரிசாக, 80 ரூபாயும் வழங்கப்பட்டது. 6ம் வகுப்பு முதல், ௮ம் வகுப்பு வரை, முதல் பரிசாக, 150 ரூபாயும், இரண்டாம் பரிசாக, 100 ரூபாயும் வழங்கப்பட்டது.பரிசுத்தொகை, வங்கியில் செலுத்தி மாற்றத்தக்க வகையிலான, 'செக்'காக மட்டுமே வழங்கப்பட வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, 80 ரூபாய்க்கான, 'செக்,' பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு, மாணவன் பெயரில் வங்கிக்கணக்கு துவக்க வேண்டும். அதற்கு குறைந்தது, 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை கட்ட வேண்டும். இதனால், பரிசுத்
தொகையாக வழங்கப்பட்ட, 'செக்' கை, பல பெற்றோர் பணமாக மாற்ற முயற்சிக்கவில்லை.

மழை விடுமுறையை ஈடுகட்ட அரையாண்டு தேர்வு லீவு ரத்து?

14 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (16.11.15) விடுமுறை

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், 
திருச்சி, நாகை, இராமநாதபுரம், திருவாரூர், சேலம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும்,

கரூர், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு  மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் (16.11.2015) - திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

15/11/15

வடதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பெரும் மழையை பெய்விக்கும் என்று வானிலை இலாகா இன்று பகல் அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து ஒரு உத்தரவு வெளியானது. அதன்படி, மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார் ஜெயலலிதா.

இந்த அதிகாரிகள் மேற்பார்வையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள அதிகாரிகளுடன் இந்த அதிகாரிகளும் இணைந்து, ஒருங்கிணைந்து, சேதம் ஏற்படாமல் தடுக்க வேண்டும், அவ்வாறு ஏற்பட்டாலும், அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உத்தரவு.


இதன்படி, வேலூர் மாவட்டத்திற்கு சபீதா, விழுப்புரம்-உதய சந்திரன், நாகப்பட்டினம்-சிவ்தாஸ் மீனா, ராமநாதபுரம்-விஜயகுமார், திருவாரூர் மற்றும் தஞ்சை-சத்ய கோபால், புதுக்கோட்டை-சமயமூர்த்தி, தூத்துக்குடி-குமார் ஜெயந்த், திருநெல்வேலி-செந்தில்குமார், கன்னியாகுமரி-அதுல் ஆனந்த், கடலூர்-ககன்தீப் பேடி, காஞ்சிபுரம்-பிரபாகர், திருவண்ணாமலை-பிரதீப் , திருவள்ளூர்-பிரபாகர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி-ராஜேஸ் லக்கானி, காஞ்சீபுரம்-ராஜாராமன் ஆகியோர் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அமைச்சர்கள் அனைவரும் தங்களது மாவட்டங்களிலேயே இருக்க வேண்டும் என்றும், முன்னெச்சரிக்கை மற்றும் சேத தடுப்பு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 2 தனி தேர்வர்: 16 முதல் விண்ணப்பம்

சென்னை:'மார்ச்சில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், 16 முதல், 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.ஏற்கனவே தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களும், 10ம் வகுப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில்,
நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுதுவோரும் விண்ணப்பிக்கலாம். இதற்காக, கல்வி மாவட்ட வாரியாக, சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான விவரங்களை அங்கே பெறலாம். சேவை மைய முகவரி, http://www.tndge.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

'மழை சேதத்தை கணக்கிடுங்கள்':அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு

சென்னை:மழை சேதங்களை கணக்கிடும்படி, அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை காரணமாக, பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளன. சாலைகள், பாலங்கள், அரசு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. கால்நடைகள் உயிரிழந்துள்ளன. பலர் வீடுகளை இழந்துள்ளனர்.

எனவே, அனைத்து மாவட்டங்களிலும், மழையால் ஏற்பட்டுள்ள சேதத்தை கணக்கிட்டு, உடனுக்குடன் தெரிவிக்கும்படி, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மழை சேதத்தை கணக்கிட, தாலுகா வாரியாக, அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மண்டல வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைமையிடத்தில் தங்கி இருக்க வேண்டும்:மழையால் கல்வி அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி

தொடர் மழை எதிரொலியாக, பள்ளி மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தலைமையிடத்தில் தங்கியிருக்க வேண்டும்' என, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, மாநில தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் பலத்த சேதம் அடைந்த நிலையில், பள்ளி மாணவரின் நலன் தொடர்பாக, முன்னேற்பாடு குறித்து, அனைத்து தொடக்க கல்வி அலுவலர்களுக்கும், மாநில தொடக்க கல்வி இயக்குனர், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
பள்ளிகளின் மேற்கூரையில், மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டால், உடனடியாக அதை சரி செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகள் இருந்தால், அதன் அருகில் மாணவ, மாணவியர் செல்லாத வகையில் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். உணவு இடைவேளை, காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவியரின் வருகை எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும். பள்ளி வளாகத்தில் மின் கசிவு ஏற்பாடாத வகையில் பராமரிக்க வேண்டும். பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டி, கழிப்பறை ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில், குடிநீரை காய்ச்சி குடிக்க வலியுறுத்தல் வேண்டும். பருவ மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், அவர்களின் தலைமை
யிடத்தில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் பட்டியல் தயாரிக்க உத்தரவு

தேனி:பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, நவ., 16 க்குள் தயாரிக்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 2016 மார்ச்சில், பொது தேர்வு நடத்த தேர்வு துறை ஆயத்தமாகி வருகிறது. இதற்காக தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்து ஆன்-லைனில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதில் மாணவரின் பெயர், போட்டோ, பிறந்த தேதி, தந்தை, தாய் பெயர், ஜாதி, மதம், ஆதார் எண் போன்ற விவரங்கள் இடம்பெறுகின்றன. அந்த பெயர் பட்டி யலை மாணவர்கள் சரிபார்த்த பின், வகுப்பு ஆசிரியர் ஒப்புதல் வழங்குகின்றனர்.


தவறு இல்லாத மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்காக மிக கவனமாக நடந்து வரும் இப்பணியை வரும் நவ., 16 க்குள் முடித்து தேர்வு துறைக்கு அனுப்ப வேண்டும்.
இதேபோல் ஏப்ரலில், ௧௦ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பட்டியலையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என அனைத்து மேல்நிலை, மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு பள்ளி கல்வித்தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.

ரூ.80க்கு 'செக்' மாணவர்கள் 'ஷாக்'

சேலம்:அனைவருக்கும் கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளில் பெண்கல்வி முக்கியத்துவம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. அதற்கான பரிசுத்தொகை, 100 ரூபாய் மற்றும், 80 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டதால், பெற்றோர், மாணவ, மாணவியர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஒன்று முதல், ௮ம் வகுப்பு வரையிலான, மாணவ, மாணவியரிடையே, பெண்கல்வி முக்கியத்துவம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டி, பள்ளி அளவில், நடத்தப்பட்டது.


இதில், ஒன்று முதல், 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஓவியப்போட்டியும், 4 மற்றும் 5ம் வகுப்புக்கு பேச்சுப்போட்டியும், 6 முதல், 8ம் வகுப்பு வரை, கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது.ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை, நடத்தப்பட்ட போட்டிகளில், முதல் பரிசாக, 100 ரூபாயும், இரண்டாம் பரிசாக, 80 ரூபாயும் வழங்கப்பட்டது. 6ம் வகுப்பு முதல், ௮ம் வகுப்பு வரை, முதல் பரிசாக, 150 ரூபாயும், இரண்டாம் பரிசாக, 100 ரூபாயும் வழங்கப்பட்டது.பரிசுத்தொகை, வங்கியில் செலுத்தி மாற்றத்தக்க வகையிலான, 'செக்'காக மட்டுமே வழங்கப்பட வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, 80 ரூபாய்க்கான, 'செக்,' பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு, மாணவன் பெயரில் வங்கிக்கணக்கு துவக்க வேண்டும். அதற்கு குறைந்தது, 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை கட்ட வேண்டும். இதனால், பரிசுத்
தொகையாக வழங்கப்பட்ட, 'செக்' கை, பல பெற்றோர் பணமாக மாற்ற முயற்சிக்கவில்லை

தேர்வுக்கு விண்ணப்பிக்க'இ - சேவை' மையம்

சென்னை:தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், 339 இடங்களில், இ - சேவை மையங்கள் துவக்கப்பட்டு உள்ளன. இங்கு, டி.என்.பி.எஸ்.சி., மூலம் வழங்கப்படும், இணைய வழி விண்ணப்ப சேவைகள் துவக்கப்பட்டு உள்ளன. நிரந்தர பதிவுக்கு, 50; தேர்வுக்கு விண்ணப்பிக்க, 30; விண்ணப்பத்தில் மாறுதல் செய்ய, ஐந்து;
விண்ணப்ப நகல் பெற, 20 ரூபாய், சேவை கட்டணமாக வசூலிக்கப்படும்.மேலும், டி.என்.பி.எஸ்.சி.,க்கு செலுத்த வேண்டிய நிரந்தர பதிவு கட்டணமான, 50 ரூபாய் மற்றும் நிர்ணயம் செய்யப்பட்ட தேர்வு கட்டணத்தையும், இந்த மையங்களில் செலுத்தலாம் என, அரசு கேபிள், 'டிவி' நிறுவன மேலாண் இயக்குனர் குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.

பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.86 ஆயிரம் கோடி

சென்னை:''நாட்டிலேயே முதலிடம் வகிக்கும், தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு, ஐந்து ஆண்டுகளில், 86 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபீதா தெரிவித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், குழந்தைகள் தின விழா, எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா, சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ - இந்தியன் பள்ளியில், நேற்று நடந்தது. துறை இயக்குனர் கண்ணப்பன் வரவேற்றார்.


விழாவிற்கு தலைமை தாங்கிய, துறையின் முதன்மை செயலர் சபீதா பேசியதாவது:
தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு, ஐந்து ஆண்டுகளில், 86 ஆயிரம் கோடி ரூபாயை, முதல்வர்
ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். தேசிய விதிமுறைப்படி தொடக்கப் பள்ளியில், 30 மாணவர்; நடுநிலைப் பள்ளியில், 35; உயர்நிலைப் பள்ளியில், 40; மேல்நிலைப் பள்ளியில், 45 பேருக்கு, ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால், 22 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலை ஏற்பட்டுஉள்ளது. பள்ளிக்கல்வித் துறையில், தமிழகம் முதலிடத்தில் இருக்க இதுவே காரணம்.போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டதால், பள்ளிக்கு செல்லாமல் இருந்த, 57 ஆயிரம் குழந்தைகளில், 48 ஆயிரம் பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு
உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

துறை அமைச்சர் வீரமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சிறந்த நுாலகர்களுக்கு எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கி பேசினார். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ஆம் தேதியும் தொடங்குகின்றன.

மாநிலம் முழுவதும் பொதுவாக நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.


பிளஸ் 2 வகுப்புக்கான கால அட்டவணை விவரம்:-

டிசம்பர் 7 - திங்கள்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்

டிசம்பர் 8 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்

டிசம்பர் 9 - புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 10 - வியாழக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 12 - சனிக்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்

டிசம்பர் 14 - திங்கள்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், விவசாயம், அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில் கல்வி), நர்சிங் (பொது), கணக்குப் பதிவியல், கணக்குத் தணிக்கை

டிசம்பர் 16 - புதன்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரவியல், எலெக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராப்ட்ஸ்மென் சிவில், எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை

டிசம்பர் 18 - வெள்ளிக்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல், பொது இயந்திரவியல் தாள்-2, எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் தாள் 2, தொழில்கல்வி மற்றும் தணிக்கை

டிசம்பர் 21 - திங்கள்கிழமை - உயிரியல், தாவரவயில், வரலாறு, வணிகக் கணிதம்

டிசம்பர் 22 - செவ்வாய்க்கிழமை - கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்), புள்ளியியல், கணக்குப் பதிவியல் மற்றும் கணக்குத் தணிக்கை, செய்முறைத் தேர்வு, தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்)

தேர்வுகள் காலை 10 முதல் 1.15 வரை நடைபெறும். இதில் முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணை:

டிசம்பர் 9 - புதன்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்

டிசம்பர் 10 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்

டிசம்பர் 12 - சனிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 14 - திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 16 - புதன்கிழமை - அறிவியல்

டிசம்பர் 18 - வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல்

டிசம்பர் 21 - திங்கள்கிழமை - கணிதம்

தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும். முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா.

.தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா கூறினார்.

குழந்தைகள் தின விழா, டாக்டர்

எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சிறந்த நூலகர்களுக்கான எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதுகளையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.


விழாவில் தலைமை வகித்து, டி.சபிதா பேசியது:

பள்ளி மாணவர்களுக்கான 14 வகையான நலத்திட்டங்களுக்காக தமிழக அரசு இதுவரை ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

தரமான கல்வியை வழங்க எத்தகைய கட்டமைப்பு வசதிகள் தேவை என்பதை அறிந்து அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.

அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள், சுற்றுச்சுவர்கள், கழிப்பறைகள் என உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மட்டும் ரூ.3 ஆயிரம் கோடியை தமிழக அரசு வழங்கியது. இதனால், நல்ல உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

குக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களையும் பள்ளிகளுக்கு அழைத்து வருவதற்காக போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகளுக்கு வராமல் இருந்த 57 ஆயிரம் மாணவர்களில் 48 ஆயிரம் பேர் பள்ளிகளுக்கு வந்துள்ளனர்.

மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 2010-11-ஆம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 344 உயர்நிலைப் பள்ளிகளுக்கான கட்டடங்களைக் கட்ட ரூ.380 கோடியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தப் பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தின்படி, தரம் உயர்த்தப்பட்ட மேலும் 810 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்காக மொத்தம் ரூ.1,268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்றார் அவர்.

அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி: பாடப் புத்தகங்களை படிப்பதோடு நின்றுவிடக் கூடாது. நிறையப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளைக் கொண்டாடும் அதேவேளையில், நம்முள் உள்ள குழந்தைத் தன்மையையும் கொண்டாட வேண்டும் என்றார்.

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மைதிலி ராஜேந்திரன், பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மெட்ரிக். பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உள்ளிட்டோரும் பேசினர்

TNPSC : 813 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு பிப்ரவரி 14-ல் போட்டித்தேர்வு: தமிழ்வழி படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு

கிராம நிர்வாக அதிகாரி(வி.ஏ.ஓ.) பதவியில்813 காலியிடங்களை நிரப்புவதற்காக பிப்ரவரி14-ம் தேதிபோட்டித் தேர்வுநடத்தப்படும்என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழக அரசின்பல்வேறு துறைகளுக்கு
தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர் களும் டிஎன்பிஎஸ்சிபோட்டித் தேர்வுமூலமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள்.
நேர்முகத் தேர்வு இல்லாதபணிகளில் 1,934 காலியிடங்களுக்காக குரூப்-2ஏ தேர்வுக்குஆன் லைனில்விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்ககடைசி தேதிநவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுஇருக்கிறது.இந்த நிலையில், 813 விஏஓ காலியிடங்களைநிரப்பு வதற்குஅடுத்த ஆண்டுபிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வுநடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில்நேற்று அறிவிப்புவெளியிட்டுள்ளது.
அதன்படி, விஏஓ பணிக்குஎஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் ஆன் லைனில்(www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல்30-க்குள் இருக்கவேண்டும். பொதுப்பிரிவினர் நீங்கலாகஇதர இடஒதுக் கீட்டுப்பிரிவினருக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்வழியில் படித்தவர்களுக்குதமிழ்வழியில் படித்தவர் களுக்குஅரசுப் பணியில்20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்தஉத்தரவு விஏஓபணிக்கும் பொருந்தும் என்பதால்மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சிமுடித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதேஇதுகுறித்து குறிப்பிட வேண்டும்.
எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம்நடை பெறும். நேர்முகத் தேர்வுஎதுவும் கிடையாதுஎன்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில்பொது அறிவு, திறனறிவு, கிராமநிர்வாக நடைமுறைகள், பொது தமிழ்அல்லதுபொது ஆங்கிலம்ஆகிய பகுதிகளில்இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 300. எழுத்துத்தேர்வுக் கானபாடத்திட்ட விவரங் கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றாலேபணி உறுதி. தகுதியுள்ள விண் ணப்பதாரர்கள் டிசம்பர் 14-ம்தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றுடிஎன்பிஎஸ்சி அறிவித் துள்ளது.

விஏஓ பணியில் சேருவோருக்கு சம்பளம்ஏறத்தாழ ரூ.17 ஆயிரம் அளவுக்குகிடைக்கும். 7-வது ஊதியக்குழுபரிந்துரை அமல்படுத்தப்படும்பட்சத்தில் சம்பளம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. 6 ஆண்டு பணியைமுடித்தவர்கள் துறைத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால்வருவாய்த் துறையில்உதவியாளர் ஆகலாம். அதன்பின்பு அவர்கள் வருவாய் ஆய்வாளர், துணைவட்டாட்சியர், வட்டாட்சியர் என படிப்படியாக பதவிஉயர்வு பெறலாம்என்பதுகுறிப்பிடத்தக்கது

2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு

ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதிசெய்ய தொடக்ககல்வித் துறைஅதிரடி
உத்தரவிட்டுள்ளது.தொடக்க கல்விஇயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில்பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள்அந்தந்த ஒன்றியத்தின்உதவி, கூடுதல்உதவி தொடக்ககல்வி அலுவலகத்தில்பராமரிக்கப்பட்டு வருகிறது.



இந்த பணி பதிவேடுகளில்ஆசிரியர்களின் விடுப்பு தொடர்பான பதிவுகள் உரியகாலத்தில் மேற்கொள்ளப்படாமல்இருப்பதாக தொடக்ககல்வி இயக்குநருக்குபுகார்கள் சென்றன. அதன் அடிப்படையில்தமிழக தொடக்ககல்வித் துறைஇயக்குநர்பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:உதவி, கூடுதல்உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள்தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப்பதிவேடு களைஉரிய காலத்தில்முறையாக பதிவுசெய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

2 மாதங்களுக்கு ஒரு முறைஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு

உதவி, கூடுதல் உதவிதொடக்கக் கல்விஅலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின்பணிப் பதிவேடுகளை உரியகாலத்தில் முறையாகபதிவு செய்யப்பட்டுள்ளதைஉறுதி செய்துகொள்ள வேண்டும்.ஆசிரியர்களின் பணிபதிவேட்டில் அவர்கள் பயின்ற உயர்கல்வி விவரங்களைபதிவு செய்யும்முன்பு உயர்கல்விபயில்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும்,சான்றிதழ்கள்தற்காலிகமா? நிரந்தரமானதா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.ஒவ்வொரு ஆண்டிலும்டிச.31ம்தேதி ஒவ்வொருஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல், பதவி உயர்விற்கானதேர்ந்தோர் பட்டியல் ஆகியவை பணி பதிவேட்டில்உள்ள பதிவேடுகளின்அடிப்படையில் தான் தயாரிக்கப்படுகிறது. எனவே, சரியானசான்றிதழ்கள் அடிப்படையில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும். ஏதேனும் தவறுகள்நடந்தது தெரியவந்தால்சம்பந்தப்பட்ட அலு வலர் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும்.ஆசிரியர்களின் வளர்ஊதியம், பதவிஉயர்வு, ஊதியம்நிர்ணயம் மற்றும்ஓய்வூதியம் ஆகிய அனைத் தும் பணிபதிவேட்டில் உள்ள பதிவுகளின் அடிப்படையில்அனுமதிக்கப்படுகிறது.

எனவே ஒவ் வொருஉதவி, கூடுதல்உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள்தங்கள் கீழ்பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிபதிவேடுகளில் விவரங்கள் விடுபட்டிருந்தால்15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். 2 மாதங்களுக்குஒரு முறைஅனைத்து பணிபதிவேடுகளும் அலுவலகத்தில் உள்ளது என்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும்.உதவி, கூடுதல் உதவிதொடக்க கல்விஅலுவலர் பணிமாறுதல் மூலம்வேறு ஒன்றியங்களுக்குமாறுதல் பெற்றுசெல் லும்போது அனைத்துஆசிரியர்களின் பணி பதிவேட்டில் ஆசிரியர் எடுத்தவிடுப்புகள் மற்றும் பணி சரிபார்ப்புகள் அனைத்தையும்பதிவு செய்துவிட்டுத் தான்செல்ல வேண்டும்.உதவிதொடக்க கல்விஅலுவலகங்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள்ஆய்வு செய்யும் போதுஇந்த விவரங்களைசரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.


இவ்வாறு அந்த உத்தரவில்கூறப்பட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறை லீவு ரத்து ?

மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம்!!! (100% அகவிலைப்படியை இணைக்க வேண்டும், 2014 முதல் 7வது ஊதியக்குழுவை அமுல்படுத்த வேண்டும்)

Observance of All India protest day on 19th November 2015 – NJCA
NJCA
National Joint Council of Action
4, State Entry Road, New Delhi – 110055
No. NJCA/2015

November 10, 2015
All Members of NJCA
Sub:- Observance of All India protest day on 19th November 2015
Dear Comrade,
All of you may recall that the NJCA in its meeting held on 30th September 2015 in Delhi after considering the delay in submission of the report of the 7th CPC as also broadly taking stock the speculating and detail deliberations, unanimously decided to defer the proposed Indefinite General Strike of the Central Government Employees till next Budget Session and symmetrically it was also resolve to observe 19th November 2015 as Joint Nation wise protest day to all the country to press upon the Government of India to resolve the long pending legitimate demands of all the Government Employees.
All of you are therefore accordingly requested to take all necessary steps to jointly observe protest day on 19th November 2015. As per decision taken by the NJCA in the said meeting the member of the NJCA shall stage one day Dharna at Jantar Mantar in New Delhi on the said day.
Charter of Demands
1. Effect wage revision of Central Government employees from 1.12014 accepting the memorandum of the staff side JCM; ensure 5-year wage revision in future; grant interim relief and merger of 100% of DA. Ensure submission of the 7th CPC report with the stipulated time frame of 18 months; include Grameen Dak Sewaks within the ambit of the 7th CPC. Settle all anomalies of the 6th CPC.
2. No privatisation, PPP or FDI in Railways and Defence Establishments and no corporatisation of postal services;
3. No Ban on recruitment/creation of post.
4. Scrap PFRDA Act and re-introduce the defined benefit statutory pension scheme.
5. No outsourcing; contractorisation, privatization of governmental functions; withdraw the proposed move to close down the Printing Presses; the publication, form store and stationery departments and Medical Stores Depots; regularise the existing daily rated/casual and contract workers and absorption of trained apprentices;
6. Revive the JCM functioning at all levels as an effective negotiating forum for settlement of the demands of the CGEs.
7. Remove the arbitrary ceiling on compassionate appointments.
8. No labour reforms which are inimical to the interest of the workers.
9. Remove the Bonus ceiling;
10. Ensure five promotions in the service career.
Report of the protest may be forwarded to this office accordingly.

With best wishes for Diwali, Chat, Bhai Duj and Guru Parv.

நடையால் ஆரோக்கியமா? ஆரோக்கியத்தால் நடையா!" ----தகவல் துளிகள்,

நீங்க சாப்பிடும் இட்லி, தோசையில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது ? ---தகவல் துளிகள்

பழந்தமிழரின் அளவை முறைகள் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த----தகவல் துளிகள்,

பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள்....

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை...

விளையாடும் பொழுது மற்றும் வகுப்பறை முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்? முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது

வீட்டில் தொந்தரவு தரும் எலி, பல்லி, கரப்பான் பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்!!!

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:

>தகுதிகாண்பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும்.

>பணியில்சேர்ந்து ஒருவருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம். ஆண், பெண்இருவரும். தகுதிகாண்
பருவம்முடிக்கும்முன்பு (பணியில் சேர்ந்து2வருடங்களுக்குள்)மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கானEL -ஐஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன்சேர்த்துக்கொள்ளப்படும்.(உதாரணமாக - அவரதுகணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறுவிடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10=170) மீதம் உள்ள170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.எனவே மகப்பேறுவிடுப்பு எடுக்கும்முன்பே கணக்கில்உள்ள EL-ஐஎடுத்துவிடுவது பயனளிக்கும்)

>வருடத்திற்கு17 நாட்கள் EL.அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.

>மீதமுள்ள2 நாட்கள்சேர்ந்துகொண்டே வரும்அதை ஓய்வுபெறும்பொழுதுஒப்படைத்து பணமாகப்பெறலாம்.

>21 நாட்கள்ML எடுத்தால்ஒரு நாள் EL கழிக்கப்படும்.

>வருடத்திற்கு மொத்தம் 365நாட்கள்.இதை17ஆல் (EL)வகுத்தால்365/17=21.

>எனவே21 நாட்கள் MLஎடுத்தால் ஒரு நாள் EL என்றகணக்கில்கழிக்கப்படுகிறது.

>மகப்பேறுவிடுப்பு எடுத்தவருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது, மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும்ML எடுத்த நாட்கள்தவிர்த்து மீதம்வேலை செய்தநாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும்.ML & EL எடுத்தது போகமீதம் உள்ளவேலை செய்தநாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)

>ஒருநாள் மட்டும்ELதேவைப்படின்எடுத்துக்கொள்ளலாம்.

>அரசுஊழியர்களுக்கு மட்டும்வருடத்திற்கு 30 நாட்கள்EL(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்மட்டுமே). அதில் 15நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம்உள்ள 15 நாட்கள்சேர்ந்துகொண்டேவரும்..அதிகபட்சமாக240 நாட்களைச்சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.அதற்கு மேல்சேருபவைஎந்தவிதத்திலும்பயனில்லை.

மாறுதல் / பதவி உயர்வு/⚡பணியிறக்கம்/ நிரவல் போன்றநிகழ்வுகளின்போது பழையஇடத்திற்கும்புதியஇடத்திற்குமிடையே குறைந்தது 8கி.மீ (ரேடியஸ்) இருந்தால்அனுபவிக்காதபணியேற்பிடைக்காலம்ELகணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு30நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில்சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5நாட்கள். 160 கி.மீக்கு மேற்படின்அட்டவணைப்படிநாட்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்)

>ஒருமுறைசரண்டர் செய்தஅதேதேதியில் தான்ஆண்டுதோறும்செய்யவேண்டும் என்ற கட்டாயம்இல்லை.கணக்கீட்டிற்கு வசதியாகஇருக்கவும்Pay Rollல் விவரம்குறிக்க எளிமையாகஅமையவும்ஒரே தேதியில்ஆண்டுதோறும்அல்லதுஇரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்செய்வதுசிறந்தது.
எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்புநாளுக்கும்அடுத்தஒப்படைப்பு நாளுக்குமிடையே 15நாட்கள் ஒப்படைப்பெனில்ஓராண்டு/ 30 நாட்கள்ஒப்படைப்பெனில்இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.

>ஒப்படைப்புநாள் தான்முக்கியமேதவிரவிண்ணப்பிக்கும்தேதியோ,அலுவலர் சேங்க்ஷன்செய்யும்தேதியோ, ECS ஆகும்தேதியோ அடுத்தமுறைஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்படவேண்டியதில்லை.

>EL ஒப்படைப்புநாளின்போது குறைந்தஅளவு அகவிலைப்படியும்பின்னர்முன்தேதியிட்டு DAஉயர்த்தப்படும்போது ஒப்படைப்புநாளில்அதிக அகவிலைப்படியும்இருந்தால் DA நிலுவையுடன்சரண்டருக்குரியநிலுவையையும்சேர்த்துசுதந்தரித்துக்கொள்ளலாம். ஊக்க ஊதியம்முன்தேதியிட்டுப்பெற்றாலும்நிலுவைக் கணக்கீட்டுக்காலத்தில்ஒப்படைப்பு தேதி வந்தால்சரண்டர்நிலுவையும் பெறத்தகுதியுண்டு.

>பணிநிறைவு/ இறப்பின்போது இருப்பிலுள்ள ELநாட்களுக்குரிய(அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம்மற்றும்அகவிலைப்படிவீதத்தில்கணக்கிடப்பட்டு திரள்தொகையாகஒப்பளிக்கப்படும்.


>அதிகபட்சம்தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்துமருத்துவ விடுப்புஎடுக்கலாம்.180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்குவீட்டுவாடகைப்படி கிடைக்காது

பொது அறிவு கேள்வி பதில்கள்(1-100)

பொது அறிவு கேள்வி பதில்கள்(1-100)
1.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
2.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்
3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்
4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்
5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
6.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர்
7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்
8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர்
9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்
10.முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை 
11.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்
12.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்
13.வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
14.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை
15.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை
16.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு
17.இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம்
18.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
19.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்
20.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971
21.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது? 65 வயது
22.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்
23.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்
24.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்
25.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா
26.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன்
27.மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்
28.நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் பி.டி.ராஜன்
29.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949
30.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20
31.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள்
32.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்
33.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்
34.தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949
35.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை
36.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்
37.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்
38.ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்தர்
39.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்
40.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்
41.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா
42.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்
43.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா
44.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்
45.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
46.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916
47.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்
48.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857
49.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்
50.உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?கையறுநிலை
51.குந்தித் தின்றால் குன்றும் மாளும்-இவ்வுவமை விளக்கும் கருத்தைத் தேர்க? சோம்பல்
52.இளமையில் கல்- எவ்வகை வாக்கியம்? கட்டளை வாக்கியம்
53.மாண்பு பெயர்ச் சொல்லின் வகை அறிக? பண்புப்பெயர்
54.வாழ்க இலக்கணக்குறிப்பு?வியங்கோள் வினைமுற்று
55.தடந்தோள் இலக்கணக்குறிப்பு?உரிச்சொற்றொ
டர்
56.ஆடு கொடி இலக்கணக்குறிப்பு காண்க? வினைத்தொகை
57.முடைந்தவர் இலக்கணக்குறிப்பு? வினையாலணையும் பெயர்
58.வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக்கூறியவர் பாரதிதாசன்
59.பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப் பாடப்படும் நூல் கலம்பகம்
60.தொண்டர் சீர் பரவுவார் எனப் பாராட்டப்படும் சான்றோர்? சேக்கிழார்
61.தமிழ்மறை என அழைக்கப்படும் நூல் திருக்குறள்
62.இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் போபால்
63.மேட்டூர் அணையின் வேறு பெயர் ஸ்டான்லி அணை
64.சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர் திருமதி சரோஜினி நாயுடு
65.ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது? ஒய்-குரோமோசோம்
66.டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்? சமூக அமைப்பின் கூறுகள்
67.ஆற்காடு நவாபுகளுள் யார் வாலாஜா என அழைக்கப்பட்டார்? தோஸ்த் அலி
68.200 நாட்களுக்கு பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்? மக்காச் சோளம்
69.உலகின் பரந்த மீன் பிடிக்கும் பகுதி? வடமேற்கு அட்லாண்டிக்
70.பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1982
71.எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது? இரண்டாவது
72.காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு 1915
73.இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு 1957
74.தி.மு.கவை நிறுவியவர் யார்? அண்ணாதுரை
75.தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர் சர் தாமஸ் மன்றோ
76.சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் புதுமைப்பித்தன்
77.கண்ணதாசன் வெளியிட்ட இதழ்களுள் ஒன்று வானம்பாடி
78.தண்ணீர் தண்ணீர் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்? கோமல் சுவாமிநாதன்
79.ஆனந்த விகடன் வெள்ளிவிழா பரிசு பெற்ற சிறுகதை எது? குளத்தங்கரை அரச மரம்
80.குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெற்ற நூல் சிலப்பதிகாரம்
81.தாய்சேய் இலக்கணக்குறிப்பறிக? உம்மைத் தொகை
82.மலர்க்காரம் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு? உவமைத் தொகை
83.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தொடரைக் கூறியவர்? அறிஞர் அண்ணா
84.பரம்பிற் கோமான் என்று அழைக்கப்பெற்றவர் பாரி
85.நல்வழி இலக்கணக்குறிப்பு- பண்புத்தொகை
86.சூரியனின் வெப்பநிலை காண உதவும் விதி ஸ்டீஃபனின் நான்மடி விதி
87.தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது இரத்தத்தின் பாகுநிலையால்
88.எக்ஸ்-கதிர்கள் செல்லும் திசைவேகம் எதற்குச் சமம்? ஒளி
89.அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல்
90.நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம் யூரியா
91.பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து எது? வைட்டமின்கள்
92.தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள் சிவப்பு பாஸ்பரஸ்
93.பெனிசிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?அலெக்சாண்டர் ஃப்ளெமிங்
94.பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம் பேபேஸி
95.மலேரியா நோயை உண்டாக்குபவை புரோட்டோசோவா
96.அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது முன்கழுத்துக் கழலை
97.புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள் நிகோட்டின்
98.சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள் கிரியேடின்
99.பாக்டீரியோபேஜ் என்பது பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கும் ஒரு வைரஸ்
100.கௌதம புத்தர் முதன்முதலில் போதித்த இடம் சாரநாத்

14/11/15

பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்
      பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர் 16 (திங்கள்கிழமை) முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
     கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில், தனித்தேர்வர்கள் நேரில் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் கட்டணமாக ரூ.187, மறுமுறை தேர்வு எழுதுவோர் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, இதரக் கட்டணமாக ரூ.35 செலுத்த வேண்டும். அதோடு இணையதளப் பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தைப் பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய இயலும். எனவே, இதைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
சேவை மையங்களின் விவரங்கள், தேர்வர்களுக்கான அறிவுரைகள் ஆகியவற்றை www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
மதிப்பெண், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களின் நகல்கள், பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை தேர்வர்கள் சேவை மையத்துக்கு எடுத்து வர வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

151 பள்ளி கட்டடம் இடிக்க வேலூர் கலெக்டர் உத்தரவு

151 பள்ளி கட்டடம் இடிக்க வேலூர் கலெக்டர் உத்தரவு
           வேலுார் மாவட்டத்தில், பயன்பாட்டில் இல்லாத, 151 பள்ளி கட்டடங்களை இடிக்க, கலெக்டர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார். வேலுார் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழும் நிலையிலும், பாழடைந்தும் காணப்படுகின்றன. கட்டடங்களின் மேற்கூரைகள் இடிந்து பல மாணவர்கள் காயமடைந்தனர். எனவே, பழுதடைந்த கட்டடங்களை அடையாளம் காணும் பணி நடந்தது.

           வேலுார் மாவட்டத்தில், 743 பஞ்சாயத்துகளில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயன்பாட்டிற்கு இல்லாத, 151 பாழடைந்த பள்ளி கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பள்ளி கட்டடங்களை இடிக்க, ஊரக வளர்ச்சி துறையினர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். பரிந்துரையை ஏற்ற கலெக்டர் நந்தகோபால், அரசின் அனுமதி பெற்று, பாழடைந்த பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டார்

கல்வியியல் கல்லூரி பல இருந்தும் திறமையான ஆசிரியர் இல்லையே: NCERT மண்டல இயக்குனர் வேதனை

கல்வியியல் கல்லூரி பல இருந்தும் திறமையான ஆசிரியர் இல்லையே: NCERT மண்டல இயக்குனர் வேதனை
       'தமிழகத்தில் கல்வியியல் கல்லுாரிகள் பல இருந்தும் திறமையான ஆசிரியர்கள் உருவாவதில்லையே' என, என்.சி.இ.ஆர்.டி., மண்டல இயக்குனர் வேதனை தெரிவித்தார்.காந்தி கிராம பல்கலை கல்வியியல்துறை, தேசிய தேர்வு சேவை மையம் இணைந்து நடத்திய 'தேர்வு முறையில் சீர்திருத்தங்கள்' என்ற தேசிய கருத்தரங்கு நேற்று துவங்கியது.
         தேசிய தேர்வு சேவை மைய தலைவர் பாலகுமார் முன்னிலை வகித்தார். பல்கலை பதிவாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில், “கற்றல் திறன் குறைபாடுகளால் ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் 4.6 சதவீதமே படிக்கின்றனர். ஆந்திரா, உ.பி., ம.பி., பீஹார் மாநிலத்தவர் அதிகம் படிக்கின்றனர். தமிழக மாணவர்கள் நுழைவதற்கு மனப்பாட முறையே தடையாக உள்ளது”, என்றார்.
திரும்ப திரும்ப தேர்வுதேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (என்.சி.இ.ஆர்.டி.,) மைசூர் மண்டல இயக்குனர் ராவ் பேசியதாவது: பாடத்திட்டம், கற்பித்தல், தேர்வு முறைகள், மதிப்பிடுதல் தொடர்பாக ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த தேர்வு முறைகள் உருவாக்கப்பட வேண்டும். பாடம் குறித்த புரிதல் ஏற்படும் வரை திரும்ப திரும்ப மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவியல் சோதனை முறைகள், ஆய்வுக்கூடங்களில் கற்றுத்தரப்படுவது இல்லை. இது எதிர்காலத்தில் மாணவர்களின் கண்டுபிடிப்புத் திறனை பாதிக்கும்.
இசை, நடனம், ஓவியம், நடிப்பு சார்ந்த தனித்திறன்களை மதிப்பிடப்பட வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்களுக்கு கற்றலில் உற்சாகம் பிறக்கும். தமிழகத்தில் ஆசிரியர்களை உருவாக்கும் கல்வியியல் கல்லுாரிகள் நிறைந்துள்ளன. ஆனால் அங்கிருந்து திறமையான ஆசிரியர்கள் வெளியேறுவது இல்லை. ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் முறைகளே தேர்ந்த மாணவர்களை உருவாக்கும், என்றார். கருத்தரங்க ஏற்பாடுகளை துறைத்தலைவர் ஜாகிதாபேகம், உதவிப் பேராசிரியர் முருகன் செய்திருந்தனர்.

10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்பாடம் கட்டாயம் - கூட்டுத்தொகையிலும் மாற்றம்

10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்பாடம் கட்டாயம் - கூட்டுத்தொகையிலும் மாற்றம்
           இக்கல்வி ஆண்டு முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பகுதி- 1ல் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், பிறமொழிப்பாடங்களின் மதிப்பெண், கூட்டுத்தொகையில் சேர்க்கப்படாது.தமிழகத்தில் தமிழ் கற்பிக்கும் சட்டம் 2006ல் அமலுக்கு வந்தது. 2006-- 07 கல்வி ஆண்டில் ௧ம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ் முதல் மொழிப்பாடமாக கற்பிக்கப்பட்டது. 
         பின் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.தமிழ் கட்டாயம்அதன்படி, இக்கல்வி ஆண்டில் (2015-16) பத்தாம் வகுப்புக்கு கட்டாயம் ஆக்கப்பட்டது. மார்ச்சில் நடக்க உள்ள பொதுத்தேர்வில் பகுதி-1ல் முதல் மொழிப்பாடமாக தமிழை எழுத வேண்டும்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த கல்வி ஆண்டு வரை பத்தாம் வகுப்பில் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் இந்தி, உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், பிரஞ்சு ஆகிய மொழிப்பாடங்களை பகுதி-1ல் மாணவர்கள் எழுதிவந்தனர். ஆனால் இக்கல்வி ஆண்டில் பகுதி-1ல் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 
கூட்டுத்தொகைபகுதி- 2ல் ஆங்கிலம், பகுதி- 3ல் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்குப்பின், பகுதி- 4ல் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு எழுத உள்ளனர். அவர்களின் மதிப்பெண் பட்டியலில் மொழிப்பாடங்களுக்கான மதிப்பெண் இருக்கும். ஆனால் கூட்டுத்தொகையில் சேர்க்கப்படாது. இக்கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்திலும் ௧ம் வகுப்பில் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது, என்றார்.

டீ குடிப்பது கேன்சரை தடுக்கும்; இந்திய தேயிலை சங்க கருத்தரங்கில் அமெரிக்க ஆராய்ச்சியாளர் தகவல்:

டீ குடிப்பது கேன்சரை தடுக்கும்; இந்திய தேயிலை சங்க கருத்தரங்கில் அமெரிக்க ஆராய்ச்சியாளர் தகவல்:
கருப்பு மற்றும் கிரீன் டீயை அருந்துவதால் புற்றுநோய் அபாயத்தை தடுக்கலாம் என அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஹசன் முக்தார் தெரிவித்தார்.
இந்திய தேயிலை சங்கம் சார்பில் கொல்கத்தாவில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து வெளியிட்ட பயனுள்ள தகவல்கள் பின்வருமாறு:-
டீ உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அற்புதமான உற்சாக பானம். டீயில் பல மருத்துவ பயன்கள் இருக்கின்றன. கேன்சர் வராமல் தடுக்கும் பல எதிர்ப்பு சக்திகள் டீயில் இருக்கிறது. நீரழிவு மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்களையும் வராமல் தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் டீயில் அதிகம் உள்ளன. வழக்கமாக டீ குடிக்கும் பழக்கமுள்ளவர்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் அவர்களுக்கு மற்றவர்களை விட கேன்சர் வரும் அபாயம் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கேன்சரை ஊக்குவிக்கும் செல்கள் உற்பத்தியாவதை டீ தடுக்கிறது. இதனால், தோல், கல்லீரல், புராஸ்டேட், நுரையீரல் மற்றும் மார்பகங்களில் கேன்சர் உருவாவது தடுக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளை விட அதிக அளவில் டீ அருந்தும் பழக்கம் ஜப்பான், சீனா நாடுகளில் உண்டு. மருத்துவ பயன்கள் அதிகம் கொண்ட ஒரே உற்சாக பானம் டீ மட்டுமே என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். நிறுவனங்கள் பிரம்மாண்ட அளவில் விளம்பரம் செய்து டீயின் மருத்துவ பயன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர்16 (திங்கள்கிழமை) முதல் 27 வரைவிண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம்அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம்வெள்ளிக்கிழமை
வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
கல்வி மாவட்டம் வாரியாகஅமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில், தனித்தேர்வர்கள் நேரில்தங்களது விண்ணப்பத்தைப்பதிவு செய்யவேண்டும். நேரடித்தனித்தேர்வர்கள் கட்டணமாக ரூ.187, மறுமுறை தேர்வுஎழுதுவோர் ஒவ்வொருபாடத்துக்கும் ரூ.50, இதரக்கட்டணமாக ரூ.35 செலுத்தவேண்டும். அதோடுஇணையதளப் பதிவுக்கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்துவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பத்தைப் பதிவுசெய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டுவழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்பஎண்ணைப் பயன்படுத்தியேதேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யஇயலும். எனவே, இதைப் பாதுகாப்பாகவைத்திருக்கவேண்டும்.

சேவை மையங்களின் விவரங்கள், தேர்வர்களுக்கான அறிவுரைகள் ஆகியவற்றைwww.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.மதிப்பெண், பள்ளிமாற்றுச் சான்றிதழ்களின்நகல்கள், பத்தாம்வகுப்பு அல்லதுஅதற்குச் சமமானதேர்வில் தேர்ச்சிபெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றைதேர்வர்கள் சேவை மையத்துக்கு எடுத்து வரவேண்டும் எனசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் 188 காலி பணியிடங்கள் : சம்பளம்: ரூ.9,300 - 34,800 - 4200

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 188 இளநிலை வரை தொழில் அலுவலர் (Junior Draughting Officer) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
Junior Draughting Officer:
188 இடங்கள்.
சம்பளம்:
ரூ.9,300 - 34,800.
வயது வரம்பு:
1.7.2015 தேதிப்படி 18 முதல் 30க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி மற்றும் எம்பிசியினருக்கு 2 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி:
சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி. நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பத்தை www.tnhighways.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும். ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, வயது, ஜாதி உள்ளிட்ட சான்றிதழ்களின் நகல்களை கையெழுத்திட்டு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
இணை இயக்குநர் (நிர்வாகம்),
முதன்மை இயக்குநர் அலுவலகம் (நெடுஞ்சாலைத் துறை),
பொதுப் பணித்துறை வளாகம், சேப்பாக்கம்,
சென்னை- 600005.
விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி தேதி: 18.11.2015.

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.


TNPSC : 813 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு பிப்ரவரி 14-ல் போட்டித்தேர்வு: தமிழ்வழி படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்காக பிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும்என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர் களும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாக தேர்வுசெய் யப்படுகிறார்கள். 


நேர்முகத் தேர்வு இல்லாத பணிகளில் 1,934 காலியிடங்களுக்காக குரூப்-2ஏ தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.இந்த நிலையில், 813 விஏஓ காலியிடங்களை நிரப்பு வதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விஏஓ பணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் ஆன் லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் நீங்கலாக இதர இட ஒதுக் கீட்டுப் பிரிவினருக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்வழியில் படித்தவர்களுக்குதமிழ்வழியில் படித்தவர் களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. இந்த உத்தரவு விஏஓ பணிக்கும் பொருந் தும் என்பதால் மொத்த காலி யிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இதுகுறித்து குறிப்பிட வேண்டும்.எழுத்துத் தேர்வு அடிப்படை யில் பணிநியமனம் நடை பெறும். நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் பொது அறிவு, திறனறிவு, கிராம நிர்வாக நடைமுறைகள், பொது தமிழ்அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப் பெண் 300. எழுத்துத் தேர்வுக் கான பாடத்திட்ட விவரங் கள் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியிடப்பட் டுள்ளன. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே பணி உறுதி. தகுதியுள்ள விண் ணப்பதாரர்கள் டிசம்பர் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித் துள்ளது.

விஏஓ பணியில் சேரு வோருக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.17 ஆயிரம் அளவுக்குகிடைக்கும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் பட்சத்தில் சம்பளம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. 6 ஆண்டு பணியை முடித்தவர்கள் துறைத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால் வருவாய்த் துறையில் உதவியாளர் ஆகலாம். அதன்பின்பு அவர்கள் வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி, கல்லூரிகளுக்கு எல்லை பிரச்னை:மழை விடுமுறை அறிவிப்பில் குழப்பம்

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு மழைக்கால விடுமுறை அறிவிப்பதில், எல்லைப் பிரச்னையால், பல குளறுபடிகள் ஏற்படுகின்றன.
சென்னையில், மாநகராட்சி கட்டுப்பாட்டுப் பகுதிகள், கலெக்டர் கட்டுப்பாட்டு பகுதிகள் என, இரு விதமான எல்லைகள் உள்ளன. 


பலபள்ளிகள், சென்னை முகவரியில் இருந்தாலும், அவை திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் வருவாய் மாவட்டக் கட்டுப்பாட்டில் வருகின்றன.உதாரணமாக, அம்பத்துார், சென்னையின் முக்கிய பகுதி. இது, திருவள்ளூர்மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டில் வருகிறது. சென்னையில் விடுமுறை என,அறிவித்தாலும், திருவள்ளூர்கலெக்டர் அறிவிக்காவிட்டால், அம்பத்துார் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைப்பதில்லை.இதே அம்பத்துார், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ளது. எனவே, திருவள்ளூர் கலெக்டர் விடுமுறை அளித்தாலும், மாநகராட்சி அறிவிக்க மறுத்தால்விடுமுறை இல்லை.தென் சென்னையில், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழையமகாபலிபுரம் சாலையில் உள்ள பல பகுதிகள், சென்னை மாநகராட்சி எல்லையில் இருக்கின்றன; ஆனால், மாவட்டம் என, வரும்போது, காஞ்சிபுரம்கலெக்டர் கட்டுப்பாட்டுக்கு போய் விடுகின்றன. எனவே, இங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதிலும், நிர்வாக குழப்பம் உள்ளது.இதேபோல், கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிப்பதிலும், பிரச்னைகள் ஏற்படுகின்றன.சென்னையில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரிகள், சென்னை பல்கலை இணைப்பில் உள்ளன. விடுமுறை விஷயத்தில், சில கல்லுாரிகள், கலெக்டர் அறிவிப்பையும், மற்ற கல்லுாரிகள் பல்கலை அறிவிப்பையும் பின்பற்றுகின்றன. அதனால், பெற்றோரும், மாணவர்களும் குழப்பம் அடைகின்றனர்.

இது குறித்து, சமூக ஆர்வலர் சடகோபன் கூறும்போது, ''எல்லை பிரச்னைகள்தீர்க்கப்படாததால், மழைக்கால விடுமுறை அறிவிப்பு மட்டுமின்றி, வழக்கமான பணி நடைமுறையிலும் குளறுபடி ஏற்படுகிறது. இது பற்றி அரசோ, அதிகாரிகளோ கவலைப்படுவதில்லை; மக்கள் தான் அவதிப்படுகின்றனர்,'' என்றார்.

பங்களிப்பு ஓய்வூதிய நிதி கிடைக்குமா?? குளறுபடி தகவலால் புது குழப்பம்

அண்ணா பல்கலை. தேர்வுகள் மேலும் 2 நாள் ஒத்திவைப்பு

தொடர் மழை பெய்ததன் காரணமாக மேலும் இரண்டு நாள்கள் நடைபெற இருந்தத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்தி வைத்துள்ளது.

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.


இந்த பாதிப்பு காரணமாக, வியாழக்கிழமையன்று நடைபெற இருந்தத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், வெள்ள பாதிப்பு அடைந்த பகுதிகள் முழுமையாக சீரடைந்து மாணவர்கள் எந்தவித சிரமுமின்றி தேர்வெழுத வரும் வகையில் மேலும் இரண்டு நாள் தேர்வுகளை பல்கலைக்கழகம் இப்போது ஒத்தி வைத்துள்ளது.

அதாவது நவம்பர் 12, 13, 14 ஆகிய மூன்று நாள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகள் பல்கலைக்கழகத் துறைகளில் (கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டடவியல் பள்ளி) படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளன.

இதுபோல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நவம்பர் 12-இல் நடைபெற இருந்த தேர்வு டிசம்பர் 21 ஆம் தேதியும், நவம்பர் 13 இல் நடைபெற இருந்த தேர்வு டிசம்பர் 22 ஆம் தேதியும், நவம்பர் 14 இல் நடத்தப்பட இருந்த தேர்வு டிசம்பர் 24 ஆம் தேதியும் நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை பார்க்கவும்.

மாணவியருக்கு தொல்லை கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

மாணவ, மாணவியர் இடையே பாலின பாகுபாடு மற்றும் பாலியல் பிரச்னைகளை தீர்க்க, கமிட்டி அமைக்காத கல்லுாரிகளுக்கு, மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவ, மாணவியர் இடையே, பாலின ரீதியான வேறுபாடுகளை போக்கவும், பாலியல் பிரச்னைகளை தீர்க்கவும், தனி கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும்; புகார் பெட்டிகள் வைக்க வேண்டும் என, இரு மாதங்களுக்கு முன், யு.ஜி.சி., உத்தரவிட்டிருந்தது.

இதுவரை, தமிழகம் உட்பட பெரும்பாலான மாநில கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில், கமிட்டிகள் அமைக்கவில்லை. கல்லுாரி வளாகங்களில், பாலியல் பிரச்னை குறித்து புகார் தெரிவிக்க, பதிவேடுகளும் வைக்கப்படவில்லை; விசாரணை அதிகாரியும் நியமிக்கவில்லை.
இது தொடர்பாக, யு.ஜி.சி.,க்கு புகார் சென்றதை அடுத்து, அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, 'கமிட்டி அமைக்கப்படாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன

மத்திய அரசு விதிமுறைகளுக்குசத்துணவு பணியாளர்கள் எதிர்ப்பு

குழந்தைகள் பள்ளி செல்வதை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கவும், தமிழகத்தில், 1982ல், சத்துணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 43 ஆயிரம் சத்துணவு மையங்களில், 55 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது.ஒரு மாணவருக்கு, 5ம் வகுப்பு வரை, தலா, 100 கிராம் அரிசியும்; 6 முதல், 10 வரை, 150 கிராம் அரிசியும் ஒதுக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை மத்திய அரசும்; 9 மற்றும், 10ம் வகுப்புக்கு, மாநில அரசும், அரிசி செலவை ஏற்கின்றன. மளிகை பொருட்கள்

உள்ளிட்ட மற்ற செலவுகளில், 75 சதவீதத்தை மத்திய அரசும், 25 சதவீதத்தை தமிழக அரசும் வழங்குகின்றன. முட்டை செலவை, தமிழக அரசே ஏற்கிறது.

இந்நிலையில், உணவு பாதுகாப்பு சட்டப்படி, புதிய விதிமுறைகளை, மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:உணவு தானியம், எரிபொருள், சமையல் பணியாளர் இல்லை போன்ற காரணத்தால், ஏதாவது ஒரு நாள் மதிய உணவு வழங்கப்படாவிட்டால், அடுத்த மாதம், 15ம் தேதிக்குள், அதற்கான தொகையை, குறிப்பிட்ட பள்ளிக்கு மாநில அரசு வழங்க வேண்டும்

தரத்தை உறுதிப்படுத்த, சத்துணவை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்; இதற்காக, மாதம் ஒரு பள்ளியை தேர்வு செய்ய வேண்டும்

ஒவ்வொரு பள்ளியிலும், சுகாதாரமான சமையல் அறை வசதி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இந்த விதிமுறைகளை அமல்படுத்த, சத்துணவு அமைப்
பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது குறித்து, சத்துணவு அமைப்பாளர் சங்க தலைவர்
பழனிச்சாமி கூறியதாவது:மதிய உணவு வழங்காத நாளில், அதற்கான செலவு தொகையை, பள்ளிக்கு ஒதுக்க வேண்டும்; அந்த தொகையை, மாணவர்களுக்கு செலவிட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தொகையை, பள்ளிக்கு வழங்குவதில், ஊழல் நடக்கிறது; ஊழல் செய்வதற்காகவே, வேண்டுமென்றே சமையல் செய்யாமலிருக்க வாய்ப்பு உள்ளது. இதனால், சத்துணவு திட்டம் பாதிக்கப்படும். மேலும், பணம் கொடுக்கப்பட்டதா, இல்லையா என்பதை மாணவர்களால் தெரிந்து கொள்ள முடியாது. அதிகாரிகளும், ஆசிரியர்களும் சேர்ந்து, ஊழல் செய்ய வாய்ப்பு அதிகம். எனவே, மத்திய அரசின் புதிய விதிமுறைகள், நடை
முறைக்கு சாத்தியமில்லை.இவ்வாறு அவர் கூறினார்

தொடர் மழை காரணமாக நாளை(14.11.15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

1.சென்னை (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)
2.திருவள்ளுர் (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)

3.காஞ்சிபுரம் (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை!!!

தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழையால் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்டத் தொடக்க, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை 
அனுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் மின்னஞ்சலில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


பலத்த மழை காரணமாக பள்ளியின் மேற்கூரையில் தண்ணீர் தேங்காமல் வைத்திருக்க வேண்டும். மேற்கூரையில் பழுது ஏற்பட்டால், அதை உடனடியாக சரி செய்திட வேண்டும். பள்ளி வளாகத்தினுள் மழைநீர் தேங்கியிருந்தால், அதை உடனடியாக மின் மோட்டார் மூலம் அகற்ற வேண்டும்.மழைக் காலங்களில் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் நீர் நிரம்பியிருக்கும் என்பதால், அங்கு மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு நீர்ப் பிடிப்புப் பகுதிகளுக்குச் செல்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் அறிவுறுத்திட வேண்டும்.உணவு இடைவேளை, காலை, மாலை இடைவேளைகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், கீழ்நிலை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு அருகில் மாணவர்களை அனுப்பாமல் இருத்தல், காய்ச்சி வடிகட்டிய நீரைப் பருக அறிவுறுத்தல், மின் கசிவு இல்லாமல் பாதுகாப்புடன் மின் சாதனங்கள் உள்ளனவா என்பதை உறுதி செய்தல்.மேலும், இடி, மின்னல் போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல், மழைக்கு மரங்களுக்கு அடியில் நிற்கக் கூடாது என்று மாணவர்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.இன்னும் சில தினங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்பதால், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களும், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும் அவரவர் தலைமையிடத்தில் இருந்து, சூழ்நிலைக்கேற்றவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் அரசுக்கு எதிராக இயங்குபவரா-???

உலகில் உள்ள பல்வேறு நாடுகள், முகநூலில் (பேஸ்புக்) தங்களுக்கு எதிராக இயங்குபவர்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என பேஸ்புக் நிர்வாகம் கூறியுள்ளது.

இந்தியாவில் மட்டும், சட்டத்துக்குப் புறம்பான கருத்துகளை வெளியிட்டதாக இந்த ஆண்டில் 15,155 பேரின் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.பேஸ்புக் நிறுவனத்தில் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படும் ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.உலகில் உள்ள அரசாங்கங்கள் கேட்கும் தகவல்கள் கடந்த ஆறு மாதத்தைவிட தற்போது 18 மடங்கு அதிகரித்துள்ளது. 2014 ஆண்டு பிந்தைய ஆறுமாதங்களில் 35,051 பேரின் தகவல்கள் கேட்கப்பட்ட நிலையில், நிகழ் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 41,214 பேரின் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.அரசுகளின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை, 20,568 ஆட்சபேகரமான கருத்துகள் பேஸ்புக் பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது கடந்த 6 மாதத்தைவிட இரு மடங்காகும்.மேலும் அரசுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்யும் நபர்களின் அடிப்படை தகவல்கள், அவர்கள் பயன்படுத்தும் கணினி, மொபைல் போன்கள்குறித்த தகவல்கள் (IP address), அவர்கள் பதிவிடும் தகவல்களை தர வேண்டும் என்பது உலக அரசுகளின் முக்கிய கோரிக்கையாகஉள்ளது.பேஸ்புக் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.55 மி்ல்லியனை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஐக்கிய அரசாங்கத்திடமிருந்துதான்,தனிநபர்கள் குறித்த தகவல்கள் கேட்டு அதிகமான கோரிக்கைகள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளிலிருந்து அதிக கோரிக்கைகள் வந்துள்ளன.உள்ளூர் சட்ட விதிகளை மீறியதாகவும், தகவல்களை நீக்க வலியுறுத்தி இந்தியா மற்றும் துருக்கி நாடுகளிலிருந்து அதிக வேண்டுகோள்கள் வந்துள்ளன. 190 மில்லியன் இந்திய வாடிக்கையாளர்கள் பேஸ்புக்கில் உள்ள நிலையில், இந்த ஆண்டு மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 15,155 பேரின் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.


இது கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாகும்.அரசாங்கங்கள் விடுக்கும் கோரிக்கையை தட்டிகழிக்க இயலாமல், தனிநபர் விவரங்கள் பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி, அவர்கள் குறித்த விவரங்களை அரசுகளுக்கு வழங்கி வருகிறது பேஸ்புக்.எனினும், தனது வாடிக்கையாளர் விவரங்களை எந்த அரசும் நேரிடையாக பயன்படுத்திகொள்வதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று அறிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம்

முன்பணம், 5,000 ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது....

பணியின் போது இறக்கும், அரசு ஊழியர் குடும்பத்தின் உடனடி தேவைக்காக வழங்கப்படும் முன்பணம், 5,000 ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.அரசு ஊழியர்கள், பணியில் இருக்கும் போது இறந்தால், அவர்கள் குடும்பத்தின் உடனடித் தேவைக்காக, குடும்ப 
பாதுகாப்பு நிதியில் இருந்து, 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.


'இத்தொகை, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்' என, செப்., 29ல், சட்டசபையில், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன்படி, முன்பணத்தை உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.

பள்ளிகளில் 4 முறை வருகைப்பதிவு!!!

தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன், பள்ளிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:
மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தினமும், நான்கு வேளையும், மாணவர்களின் வருகையை 
உறுதிபடுத்த வேண்டும். காலையில் வகுப்பு துவங்கியதும், இடைவேளை முடிந்து, மாணவர்கள் மீண்டும் வகுப்புக்கு வந்ததும், வருகை பதிவேடு சரிபார்க்கப்பட வேண்டும்; தொடர்ந்து, மதிய உணவு முடிந்து, வகுப்பு துவங்கும் போதும்; மாலைஇடைவேளைக்கு பிறகும் சரிபார்க்கப்பட வேண்டும்.

813 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு பிப்ரவரி 14-ல் போட்டித்தேர்வு!

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்காக பிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும்என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு 
தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர் களும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாக தேர்வுசெய் யப்படுகிறார்கள்.


நேர்முகத் தேர்வு இல்லாத பணிகளில் 1,934 காலியிடங்களுக்காக குரூப்-2ஏ தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.இந்த நிலையில், 813 விஏஓ காலியிடங்களை நிரப்பு வதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விஏஓ பணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் ஆன் லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் நீங்கலாக இதர இட ஒதுக் கீட்டுப் பிரிவினருக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தமிழ்வழியில் படித்தவர்களுக்குதமிழ்வழியில் படித்தவர் களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. இந்த உத்தரவு விஏஓ பணிக்கும் பொருந் தும் என்பதால் மொத்த காலி யிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இதுகுறித்து குறிப்பிட வேண்டும்.எழுத்துத் தேர்வு அடிப்படை யில் பணிநியமனம் நடை பெறும். நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் பொது அறிவு, திறனறிவு, கிராம நிர்வாக நடைமுறைகள், பொது தமிழ்அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப் பெண் 300. எழுத்துத் தேர்வுக் கான பாடத்திட்ட விவரங் கள் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியிடப்பட் டுள்ளன. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே பணி உறுதி. தகுதியுள்ள விண் ணப்பதாரர்கள் டிசம்பர் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித் துள்ளது.


விஏஓ பணியில் சேரு வோருக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.17 ஆயிரம் அளவுக்குகிடைக்கும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் பட்சத்தில் சம்பளம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. 6 ஆண்டு பணியை முடித்தவர்கள் துறைத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால் வருவாய்த் துறையில் உதவியாளர் ஆகலாம். அதன்பின்பு அவர்கள் வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்என்பது குறிப்பிடத்தக்கது.

2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை- ஆதங்க்கத்தில் ஆசிரியர்கள்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் பி.எட். பட்டதாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 
பள்ளிகளில்ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரைக்குமான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், நவோதயா பள்ளிகள் போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


இத்தேர்வை சிபிஎஸ்இ நடத்துகிறது.தமிழகத்தில் தகுதித் தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 3 தகுதித்தேர்வு மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. முதல் தகுதித் தேர்வு 2012 ஜூன் மாதமும், அடுத்த சிறப்பு தேர்வு அக்டோபர் மாதமும் கடைசி யாக 2013 ஆகஸ்ட் மாதமும் நடத் தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக் கான சிறப்பு தகுதித் தேர்வு கடந்த ஆண்டு மே மாதத்தில் நடந்தது.ஆசிரியர் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் (90 மதிப்பெண்) ஆகும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு (82 மதிப் பெண்) அளிக்கப்பட்டது. ஆசிரியர்தகுதித் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும் என்பது விதிமுறை.


இந்த விதிமுறையை சிபிஎஸ்இ சரியாக கடைபிடித்து வருகிறது. இந்த ஆண்டின்முதல் சி-டெட் தேர்வு பிப்ரவரியிலும், 2-வது தேர்வு கடந்த செப்டம்பரிலும் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. அடுத்த ஆண்டுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.ஆனால், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இத னால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும்பி.எட். பட்டதாரி களும் பணியில் சேர முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளிக் கப்பட்டதையும், வெயிட்டேஜ் மதிப் பெண் முறையில் (பிளஸ்-2, ஆசிரி யர் பயிற்சி, பட்டப் படிப்பு, பிஎட் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட மதிப் பெண் அளித்து தேர்வு செய்யும் முறை)ஆசிரியர்களை தேர்வு செய் வதையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


தகுதித்தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘டெட் தேர்வு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இப்போது ஒன்றும் சொல்ல இயலாது’’ என்று தெரி வித்தனர்.

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வரும் 14ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும்,வட மாவட்டங்களில் சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கடலோர மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் எனவும் அது தெரிவித்துள்ளது.


கேரளாவில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி தெற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது