யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/9/16

உடல் வெப்பத்தை தணிக்கும் 12 உணவுகள்

உடல் நலம் சார்ந்த குறிப்புகள்

இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்கள்

இந்திய பிரதமர்களின் பங்குகள் அவர்கள் ஆற்றிய சேவைகள் பற்றிய சில தகவல்கள்

இந்திய தேசியப் பெருமைகள்!

இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள்

ஆறுதல் சொல்வது எப்படி?

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்

பப்பாளியின் பயன்கள்

படித்த போதே என்னை கண்கலங்க வைத்த

நிறுத்தற்குறிகள் அறிவோம்

தேசியக்கொடி சில துளிகள்

தென் இந்தியா சிறப்புகள் சில தகவல்கள்

தூங்குவது எப்படி?

தூக்கம்

தும்பை இலையும் மருத்துவகுணமும்

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள1

தனிமங்கள் லத்தீன் பெயர்கள்

தமிழ்நாட்டில் உள்ள அணைகள்

தமிழ் கவிஞர்கள் ஊர1

தமிழனின் சாதனை பட்டியல்கள்

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்

சொத்துப் பத்திரத்தின் அசல்

சுகர் எப்படி வருது சூப்பர் கட்டுரை கண்டிப்பா படிங்க

சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு

தினம் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்

நல்ல குடிநீர் என்பதற்கும்

நான் நல்லவன் என்பதற்கு சாட்சி

பிரிட்ஜ்

புதிய கல்விக்கொள்கையின் பாதிப்பு என்ன?

பிரபலங்கள் அவர்களின் இயற்பெயர்

16/9/16

CPS வல்லுநர் குழு-ஆசிரியர் இயக்கங்கள் சந்திப்பு நடந்தது என்ன?

CPS நண்பர்களுக்கு

வல்லுநர்குழு _ சந்திப்பு குறித்த பதிவு.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் அரசு சார்பில் திருமதி. சாந்தா ஷீலா நாயர், திரு. கிருஷ்ணன். திரு. சண்முகம், திரு. முத்து  ஆகியோர்பங்கு
பெற்றனர்.

பிரிஜேஸ்புரோகித் கலந்து கொள்ளவில்லை.

குழுவின்கேள்விகள் அனைத்தும் cps ஐ நியாயப்படுத்தும் விதமாகஇருந்தது.

என்ன காரணத்திற்காக குழு அமைக்கப்பட்டது என்றசந்தேகம் எழுகிறது.


Cps ஒழியஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே தீர்வு.

திண்டுக்கல் எங்கெல்ஸ்..

ஊராட்சி பதவிகளுக்கு வண்ண ஓட்டுச்சீட்டு

ஊராட்சிதேர்தலில், நான்கு பதவிகளுக்கு, வண்ணஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்பட உள்ளது.ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சிஒன்றிய குழு உறுப்பினர், மாவட்டஊராட்சி குழு உறுப்பினர் 
ஆகியபதவிகளுக்கான தேர்தலில், ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படஉள்ளது. 


கிராம ஊராட்சிகளில் வசிக்கும் வாக்காளர்கள், நான்கு ஓட்டு போடவேண்டும்.கடந்த உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி தலைவர் பதவிக்கு, 'பிங்க்' நிறம்; ஊராட்சி வார்டு உறுப்பினர்பதவிக்கு, வெள்ளை அல்லது நீலம்; ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்பதவிக்கு, பச்சை; மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் பதவிக்கு, மஞ்சள் நிறத்தில் ஓட்டுச்சீட்டுகள்அச்சிடப்பட்டன. இந்த உள்ளாட்சி தேர்தலிலும், வண்ண ஓட்டுச்சீட்டுகளை அச்சிட, மாநில தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது

SSLC:செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

பத்தாம்வகுப்பு துணைத் தேர்வு எழுதவிண்ணப்பித்தவர்களுக்கான, அறிவியல் செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர்வெளியிட்டசெய்திக் குறிப்பில்,

அக்டோபரில்நடக்கவுள்ள, 10ம் வகுப்பு துணைதேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், செப்., 23, 24 மற்றும், 26 ஆகிய நாட்களில் நடக்கும்செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

+2 பாடங்கள் டிசம்பருக்குள் முடிக்க 'கெடு

பிளஸ் 2 பாடங்களை டிசம்பருக்குள் முடிக்க, அரசு பள்ளிகளுக்கு, கல்வித் துறை அதிகாரிகள், 'கெடு' விதித்துள்ளனர். பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு,காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. வரும்,
24ம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.


தற்போதைய நிலையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, முக்கிய பாடப்பிரிவின், முதலாம் பாக பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளன. காலாண்டு தேர்வு முடிந்ததும், அரசு பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இரண்டாம் பாக பாடங்களையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


டிசம்பர் மாதத்திற்குள், இந்த இலக்கை அடைந்து விட்டால், அரையாண்டு தேர்வுக்கு பின், பொதுத் தேர்வு வரும் வரை, தினசரி திருப்புதல் தேர்வுகள்வைத்து, மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் செய்ய முடியும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பிலேயே, பிளஸ் 2 பாடங்களை நடத்துவதால், அனைத்து பாடங்களும் முடியும் நிலையில் உள்ளன. காலாண்டு தேர்வு முடிந்ததும், பிளஸ் 2 பாடங்களை மீண்டும் ஒரு முறை நடத்த, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

1-வது, 2-வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சுற்றறிக்கை.

சி.பி.எஸ்.இ. 1-வது மற்றும் 2-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்றும், புத்தகப்பை கொண்டுவரக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்இ. கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


அதில் கூறியிருப்பதாவது:-
சுமையினால் வளர்ச்சி பாதிக்கும்சி.பி.எஸ்.இ. படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை அதிக சுமையாக உள்ளது. இதனால் முதுகு வலி, தசை வலி, தோள்பட்டை வலி ஆகியவை அந்த மாணவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் அந்த மாணவர்களின் வளர்ச்சி பாதிக்கிறது. ஆரோக்கியம் கெட்டுப்போகிறது.மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் விஷயத்தில் பள்ளிகள் முக்கிய பங்குவகிக்கின்றன.மாணவர்கள் தினசரி வகுப்புக்கு தேவையான பாடப்புத்தகங்களை மட்டும் கொண்டுவருகிறார்களா? என்றுஆசிரியர்கள் திடீர் என்று மாணவர்களின் பைகளை சோதனை செய்யவேண்டும். தேவை இல்லாத வீட்டுப்பாட நோட்டுகள், தேவை இல்லாத பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்களை மாணவர்கள் கொண்டுவரலாம். அவ்வாறு மாணவர்களிடம் கொண்டுவரக்கூடாது என்று ஆசிரியர்கள்கூறவேண்டும்.

எடை குறைவான பைகள்

அதிக எடை இன்றி புத்தகப்பைகள் கொண்டு வருகிறார்களா? என்று தினமும் ஆசிரியர்கள் பரிசோதனை செய்யவேண்டும்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடை குறைவான புத்தகப்பைகளை வாங்கிக்கொடுக்கவேண்டும். பள்ளிக்கூட மாணவர்களின் புத்தகங்களின் எடையை குறைக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறு துணையாக இருக்கவேண்டும்.பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தினமும் எந்த எந்த புத்தகங்கள், நோட்டுகள் கொண்டு வரவேண்டும் என்ற கால அட்டவணையை முன்கூட்டியே மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும்.மாணவர்களுக்கு பள்ளிக்கூட நேரங்களில் மட்டும் புராஜெக்ட் கொடுக்கவேண்டும். அதை குழுவாக மாணவர்கள் செய்யவேண்டும். அந்த புராஜெக்டை பள்ளிக்கூட நேரம் தவிர வீட்டுக்கு கொண்டுசெல்லக்கூடாது.

பெற்றோருக்கு வேண்டுகோள்

மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு படிப்பு தொடர்பாக கொண்டு வரும் எந்த ஒரு பொருளும் எடை குறைவாக இருக்கவேண்டும்.தொடக்கப்பள்ளி வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர், புத்தகப்பையை தினமும் கண்காணிக்கவேண்டும். தங்கள் குழந்தைகள் கால அட்டவணை படி கொண்டுசெல்கிறார்களா? என்பதை உறுதி செய்யவேண்டும்.

புத்தகப்பை, வீட்டுப்பாடம்

குறிப்பாக 1-வது மற்றும் 2-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் கட்டாயம் கொடுக்கக்கூடாது. அவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது.மாணவர்கள் அதிக எடையுடன் குடிநீர் பாட்டில் கொண்டுவருகிறார்கள். இதை தவிர்க்கவேண்டும். எனவே பள்ளிகள் குடிநீரை வைத்திருக்கவேண்டும். அந்த தண்ணீரை பள்ளிக்கூட முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் குடிக்கவேண்டும். மாணவர்கள் கூடுதலாக விளையாட்டு காலணிகளை கொண்டு வரக்கூடாது.இவ்வாறு சி.பி.எஸ்.இ. வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

 தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது, அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
புதியதாக குழு: தமிழக அரசு அமைத்துள்ள குழுவின் தலைவராக, முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சென்னை பொருளாதார பள்ளியின் பேராசிரியர்கள் கே.வி.பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோரும், குழுவின் உறுப்பினர் செயலாளராக திட்டம்-வளர்ச்சி-சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணனும் நியமிக்கப்பட்டிருந்தனர். 
இந்த நிலையில், பேராசிரியர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோர் குழுவில் தாங்கள் தொடர முடியாது என அரசுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை பொருளாதார பள்ளியின் மற்றொரு பேராசிரியரான டாக்டர் பிரிஜேஷ் சி.புரோகித் நியமிக்கப்பட்டார். 
முதல் கூட்டம்: தமிழக அரசின் வல்லுநர் குழு புதிதாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அந்தக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (செப். 15) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
இதுதொடர்பாக, வல்லுநர் குழுவின் உறுப்பினர் செயலாளரும், முதன்மைச் செயலாளருமான எஸ்.கிருஷ்ணன் சார்பில் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 
வல்லுநர் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தங்களது கருத்துகளை அரசு ஊழியர்கள் சங்கங்கள் தெரிவிக்கலாம். இதற்காக, சங்கத்தின் 3 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மேலும், கருத்துக் கேட்பு கூட்டத்தின் போது நேரத்தை சிறப்பான முறையிலும், உரிய வகையிலும் பயன்படுத்த ஏதுவாக எழுத்துப்பூர்வமாகவும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தனது கடிதத்தில் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பாடங்கள் டிசம்பருக்குள் முடிக்க 'கெடு'

பிளஸ் 2 பாடங்களை டிசம்பருக்குள் முடிக்க, அரசு பள்ளிகளுக்கு, கல்வித் துறை அதிகாரிகள், 'கெடு' விதித்துள்ளனர். பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. வரும், 24ம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தற்போதைய நிலையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, முக்கிய பாடப்பிரிவின், முதலாம் பாக பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளன.
காலாண்டு தேர்வு முடிந்ததும், அரசு பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இரண்டாம் பாக பாடங்களையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள், இந்த இலக்கை அடைந்து விட்டால், அரையாண்டு தேர்வுக்கு பின், பொதுத் தேர்வு வரும் வரை, தினசரி திருப்புதல் தேர்வுகள் வைத்து, மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் செய்ய முடியும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பிலேயே, பிளஸ் 2 பாடங்களை நடத்துவதால், அனைத்து பாடங்களும் முடியும் நிலையில் உள்ளன. காலாண்டு தேர்வு முடிந்ததும், பிளஸ் 2 பாடங்களை மீண்டும் ஒரு முறை நடத்த, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

பி.எட்., 'அட்மிஷன்' நிறுத்த திடீர் உத்தரவு

பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி கொள்ளுமாறு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வி தொடர்பான, பி.எட்., - பி.பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு, 670 தனியார் கல்லுாரிகளிலும், 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளிலும், கடந்த மாதம் இறுதி வாரத்தில் மாணவர் சேர்க்கை நடந்தது.
அரசின் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், நிரம்பாத காலி இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நேற்று துவங்கியது; இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், அனைத்து தனியார், பி.எட்., கல்லுாரிகளிலும், இன்றுடன் மாணவர் சேர்க்கையை நிறுத்துமாறு, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை, நேற்று மாலை, திடீர் அறிவிப்பை வெளியி ட்டுள்ளது; இதனால், தனியார் கல்லுாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. 'எந்த முன்னறிவிப்புமின்றி, திடீரென மாணவர் சேர்க்கையை நிறுத்த உத்தரவிட்டால், கல்லுாரிகளை எப்படி நடத்துவது; மாணவர் சேர்க்கைக்கு, மேலும், இரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும்' என, தனியார் கல்லுாரிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

பள்ளி, கல்லூரிகள் இயங்குமா?

கடையடைப்பு போராட்டம் காரணமாக, பள்ளி, கல்லுாரிகள் இன்று இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பிரின்ஸ்பாபு கூறியதாவது: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, காலாண்டு தேர்வு, அரசின் பொது வினாத்தாளுடன், இன்று நடத்தப்படுகிறது. அரசு விடுமுறை அறிவிக்காததால், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும். ஆசிரியர், மாணவர்கள், 'கறுப்பு பேட்ஜ்' அணிந்து வருவர்.


தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலைப் பள்ளி நிர்வாகங்களின் சங்க தலைவர் எம்.ஜே.மார்ட்டின் கென்னடி: எங்கள் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும். பெற்றோர், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, முடிவு செய்து கொள்ளலாம்.

தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன்: மாணவர்கள் பாதுகாப்பு கருதி, இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கலாம் என, முடிவு செய்துள்ளோம். இன்று நடக்கவிருந்த தேர்வுக்கான மாற்று தேதி, பின்னர் அறிவிக்கப்படும். எனினும், பள்ளிகள் விடுமுறை அளிப்பது தொடர்பாக, அந்தந்த மாவட்ட சூழ்நிலைக்கு ஏற்ப, பள்ளி நிர்வாகங்களே முடிவு எடுத்து கொள்ளலாம்.

நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார்: பள்ளி வாகனங்கள் இயங்காது என்பதால், எங்கள் சங்கத்தில்உள்ள பள்ளிகள் செயல்படாது; சனிக்கிழமை பள்ளிகளை இயக்குவோம்.

அரசு நிலை என்ன? : பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பனிடம் கேட்டபோது, 'பள்ளிகளுக்கு, அரசு விடுமுறை அறிவிக்கவில்லை' என்றார். தனியார் கல்லுாரிகள் நிலவரம் குறித்து, எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

கோட்டையில் ஆலோசனை : 'பந்த்'தால், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று மாலை, 6:00 மணிக்கு, தலைமைச் செயலர் ராமமோகன ராவ் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், உள்துறை செயலர் அபூர்வ வர்மா, போலீஸ் டி.ஜி.பி., ராஜேந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரயில்களில் பாதுகாப்பு : 'பந்த்'தையொட்டி, ரயில் மறியல் செய்யவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், கிண்டி, தாம்பரம் உட்பட, தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 'ரயில் போக்குவரத்தில், எந்த பாதிப்பும் இருக்காது' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிய ஓட்டல்கள் பங்கேற்பு : கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதால், தமிழகம் முழுவதும் உள்ள, மூன்று லட்சம் கடைகள் மூடப்படும் என, தமிழ்நாடு சிறு டிபன் கடைகள், உணவு விடுதிகள், பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டால், சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பெட்ரோல் 'பங்க்' இயங்கும் : பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று, 'பங்க்'குகளை மூடுவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம், பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நடத்தும், 197 பெட்ரோல், 'பங்க்'குகள், மாநிலம் முழுவதும், இன்று செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ., ஆதரவு : தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:தமிழர்களின் உரிமையை, எந்த விதத்திலும் விட்டுத் தரக்கூடாது என்பதால், தமிழக பா.ஜ., முழு ஆதரவை தெரிவிக்கிறது. அதேநேரத்தில், சாலை மறியல், மத்திய அரசு அலுவலகங்களுக்கு அருகில் போராட்டம் போன்ற வன்முறையை துாண்டும் அறிவிப்புகளை, சிலர் உள்நோக்கத்தோடு
வெளியிட்டு இருப்பதை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
நகை கடைகள்
இன்று அடைப்பு
சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
தமிழகத்தில், 35 ஆயிரம் தங்க நகை கடைகள் உள்ளன. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, கர்நாடகாவில், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் இன்று, 'பந்த்'
நடக்கிறது. அதற்கு ஆதரவாக, அனைத்து நகை கடைகளும் மூடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய ஓய்வூதிய திட்ட கருத்து கேட்பு : குழுவிடம் அரசு ஊழியர் சங்கத்தினர் மனு

பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்' என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகி கள், அரசு குழுவிடம் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். தமிழக அரசு பணியாளர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்., 1ல் அமல்படுத்தப்பட்டது; இதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசுப் பணியாளர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் அவர்களின் பணிக் காலத்திற்கு பின் பாதுகாப்பு அரணாக இருந்தது; அதில், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில், குடும்ப ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதில், பணியாளரின் ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதிய நிதிக்கு மாற்றப்படும். இதற்கு சமமானத் தொகையை, மாநில அரசு, தன் பங்காக, அளிக்கும். இத்தொகை, அரசால் நியமிக்கப்படும், நிதி மேலாளர் வசம் ஒப்படைக்கப்படும்; இத்தொகையை, பங்கு சந்தை யில் முதலீடு செய்வர். அந்த முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருவாயில், பணியாளர் ஓய்வு பெறும் போது, அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் உள்ள பங்குகளின் நிதி நிலைமைக்கேற்ப ஓய்வூதியம் வழங்கப் படும். இதன் காரணமாக, எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை உறுதியாக கூற இயலாது; பிடித்தம் செய்த தொகையை, பாதியில் பெற இயலாது என, பல்வேறு பாதகமான விஷயங்கள் உள்ளன.
எனவே, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. சட்டசபை தேர்தலின் போது, 'அ.தி.மு.க., வெற்றி பெற்றால், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது; இக்குழு, சென்னையில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. தலைமைச் செயலக ஊழியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம், அரசு அலுவலர் ஒன்றியம், அரசுப் பணியாளர் சங்கம், அனைத்து ஆசிரியர் சங்கம், அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, 'ஜேக்டோ, டேக்டோ' மற்றும் அரசு அலுவலர் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
குழு தலைவர் சாந்தா ஷீலா நாயர், உறுப்பினர்களிடம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும்படி, மனுக்கள் அளித்தனர். 

செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான, அறிவியல் செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'அக்டோபரில் நடக்கவுள்ள, 10ம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், செப்., 23, 24 மற்றும், 26 ஆகிய நாட்களில் நடக்கும் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிறது ?

செட்’ தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர நிபந்தனை!

செட் தேர்வை, 2002க்கு பின் முடித்தோர், அந்தந்த மாநில கல்லுாரிகளில் மட்டுமே பணியாற்ற முடியும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.


கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக சேரவும், மத்திய அரசின் உதவித்தொகை பெற்று, இளநிலை ஆராய்ச்சி மாணவராக படிக்கவும், மத்திய அரசின், நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் இத்தேர்வு நடக்கும். மாநில மொழிகளில் எழுதுவோருக்கு, மாநில அளவில், செட் என்ற தகுதித்தேர்வு நடந்தப்படுகிறது.

செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், பிற மாநிலங்களில் பணியாற்ற விண்ணப்பித்து வரும் நிலையில், சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பு: பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற, உதவி பேராசிரியர் பணிக்கான, செட் தேர்வில், 2002 ஜூன், 1ம் தேதிக்கு முன், தேர்ச்சி பெற்றோர், நாடு முழுவதும், அனைத்து பல்கலை, கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு செல்லலாம்; நெட் தேர்வு தேர்ச்சி அவசியம் இல்லை.

அதன்பின் நடந்த, செட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர், செட் தேர்வை நடத்திய, மாநில அரசு களின் பல்கலை மற்றும் கல்லுாரிகளில் மட்டுமே உதவி பேராசிரியர்களாக பணியாற்ற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு கூடியது; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் நேற்று பிற்பகல் சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது. குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சாந்தா ஷீலா நாயர் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம், சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

15/9/16

ஆதார் எண்ணுடன் மாணவர் சான்றிதழ் பதிவு : பல்கலைகளுக்கு மத்திய அரசு புது உத்தரவு.

ஆதார் எண்ணுடன் மாணவர் சான்றிதழ் பதிவு : பல்கலைகளுக்கு மத்திய அரசு புது உத்தரவு.

அனைத்து பல்கலைகளும், கல்லுாரிகளும், மாணவர்களின் பட்ட சான்றிதழ்களை, ஆதார் எண்ணுடன், மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், மாநில பல்கலை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், சமீபத்தில், டில்லியில் நடந்தது.
இதில், தமிழகம் உட்பட அனைத்து மாநில பல்கலைகளுக்கும், மத்திய அரசு கட்டாய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அனைத்து பல்கலைகள், கல்லுாரிகள், மாணவர்களின் பட்ட சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்களை, மத்திய அரசின், 'தேசிய அகாடமிக் டெபாசிட்டரி' அமைப்பின், இணையதளத்தில், பதிய வேண்டும். மாணவர்களின் ஆதார் எண்ணும் அதில் இடம்பெற வேண்டும். சான்றிதழ்களிலும், ஆதார் எண்ணை குறிப்பிட முயற்சிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவு செய்யும் பல்கலைகள், கல்லுாரிகள் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியே, ஒருங்கிணைந்த பதிவு எண் வழங்கப்பட உள்ளது. இந்த எண்ணை பயன்படுத்தி, மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும், டிஜிட்டல் சான்றிதழ் பெறலாம். இந்த முயற்சியால், வேலைவாய்ப்பு நிறுவனங்கள், போட்டி தேர்வு நடத்தும் அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சான்றிதழ்களை, ஆன்லைனில் சரிபார்க்க முடியும். போலி சான்றிதழ் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்கள் : சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எச்சரிக்கை

பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்கள் : சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எச்சரிக்கை

'பாடத் திட்டத்தில் இடம் பெறாத புத்தகங்களை வாங்க, மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.சி.பி.எஸ்.இ., சுற்றறிக்கை: அதிக சுமை கொண்ட புத்தக பையை சுமப்பதால், மாணவர்களுக்கு, உடல்நல பிரச்னைகள் ஏற்படும்.
கூடுதல் புத்தகங்களை, மாணவர்கள் சுமக்காமல்இருக்க, சரியான திட்டமிடலுடன், பாட அட்டவணை தயாரித்து, அதற்கேற்ப புத்தகங்களை கொண்டு வர, அறிவுறுத்த வேண்டும். வகுப்புகளுக்குதேவையில்லாத புத்தகம், நோட்டு மற்றும் விளையாட்டு பொருட்கள் கொண்டு வராமல் பார்த்து கொள்ள வேண்டும். வீட்டுப் பாடங்கள் அதிகம் கொடுத்தால், புத்தக பையின் சுமை ஏறும். தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகம் தவிர, கூடுதல் புத்தகங்களை பயன்படுத்தக் கூடாது; மீறும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

செட்' தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர நிபந்தனை

செட்' தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர நிபந்தனை

செட் தேர்வை, 2002க்கு பின் முடித்தோர், அந்தந்த மாநில கல்லுாரிகளில் மட்டுமே பணியாற்ற முடியும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக சேரவும், மத்திய அரசின் உதவித்தொகை பெற்று, இளநிலை ஆராய்ச்சி மாணவராக படிக்கவும், மத்திய அரசின், 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் இத்தேர்வு நடக்கும். மாநில மொழிகளில் எழுதுவோருக்கு, மாநில அளவில், 'செட்' என்ற தகுதித்தேர்வு நடந்தப்படுகிறது.'செட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், பிற மாநிலங்களில்பணியாற்ற விண்ணப்பித்து வரும் நிலையில், சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பு: பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற, உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வில், 2002 ஜூன், 1ம் தேதிக்கு முன், தேர்ச்சி பெற்றோர், நாடு முழுவதும், அனைத்து பல்கலை, கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு செல்லலாம்; 'நெட்' தேர்வு தேர்ச்சி அவசியம் இல்லை.அதன்பின் நடந்த, 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற்றோர், 'செட்' தேர்வை நடத்திய, மாநில அரசு களின் பல்கலை மற்றும் கல்லுாரிகளில் மட்டுமே உதவி பேராசிரியர்களாகபணியாற்ற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள, பெட்ரோல் 'பங்க்'குகள் நாளைமூடல்

தமிழகத்தில் உள்ள, பெட்ரோல் 'பங்க்'குகள் நாளைமூடல்

தமிழகத்தில் உள்ள, பெட்ரோல், 'பங்க்'குகள், நாளை மூடப்படுகின்றன.தமிழ்நாடு பெட்ரோலிய பொருட்கள் டீலர்கள் கூட்டமைப்புதலைவர், முரளி கூறியதாவது:தமிழகத்தில், 4,600 பெட்ரோல், 'பங்க்'குகள் உள்ளன. கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது, தாக்கு தல் நடத்தப்படுகிறது.
இதை கண்டித்து, நாளை காலை, 6:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 'பங்க்'குகள் மூடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

12 லட்சம் பேர் விண்ணப்பம் Gr4 : ஒரு பதவிக்கு 234 பேர் போட்டி

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு மூலம் 5,451 இளநிலைப்பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது.

இதற்காக www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும் என்றும் விண்ணப்பிக்க எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தால் போதும் என்றும் அறிவித்து இருந்தது. அதுபோல இணையதளத்தில் ஏராளமானவர்கள் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
விண்ணப்பிக்க கடந்த 8-ந்தேதி கடைசி என்று இருந்தது. ஆனால் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் விண்ணப்பிக்க விரும்பினார்கள். ஆனால் சர்வர் வேலை செய்யவில்லை. எனவே விண்ணப்பிக்கும் தேதியை தள்ளிவைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவர்கள் கோரிக்கை விடுத்தது போல 14-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் அதன் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்தார். மேலும் தேர்விற்கான கட்டணம் செலுத்த 16-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதையொட்டி விண்ணப்பிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்க எளிதில் இணையதளம் கிடைத்தது.

விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். மொத்தம் 12¾ லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அதாவது ஒரு காலிப்பணியிடத்திற்கு 234 பேர் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள்.

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் ஒன்றாக இணைப்பு: அடுத்த மாதம் 4–ந்தேதி இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!!

ஆசிரியர்நியமன தகுதி தேர்வு விவகாரத்தில்தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாகஇணைத்து அடுத்த மாதம்(அக்டோபர்)4–ந் தேதி இறுதிவிசாரணை நடைபெறும் என்று சுப்ரீம்
கோர்ட்டுநேற்று உத்தரவு பிறப்பித்தது.

வழக்குதாக்கல்
தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டஅரசாணை எண் 25–ல் ஆசிரியர்தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையானஇட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்குஅளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாணை 71–ல் வெயிட்டேஜ் முறையும்பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சிமற்றும் எஸ்.டி பிரிவினருக்குமட்டுமே வழங்க வேண்டும் எனவிதிகள் இருக்கும்போது, அனைவருக்கும் வழங்குவது சரியல்ல, வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்குமுன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்புஏற்படும் எனக்கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன்மதுரை கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இருவேறுதீர்ப்பு
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டவழக்கில், தமிழக அரசின் அரசாணையில்அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவுபிறப்பிக்கப்பட்டது.
ஆனால் இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில்தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, கோர்ட்டுதமிழக அரசின் முடிவு தேர்வுஎழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும் அரசாணைக்குதடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.

ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னைஐகோர்ட்டு, அதன் மதுரை கிளைஆகிய இருவேறு அமர்வுகளின் கருத்துவேறுபாடு அச்சத்தைத் தருவதாக இருப்பதாகவும், எனவே, இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகிதமதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ்முறையை ரத்து செய்ய உத்தரவுபிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்ததேர்வில் கலந்து கொண்ட லாவண்யாஉள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அக்.4–ல் இறுதி விசாரணை
இந்த மனுவின் மீதான விசாரணைநேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதிஆகியோர் அடங்கிய அமர்வு முன்புவிசாரணைக்கு வந்தது. மனுதாரர் லாவண்யாதரப்பில் மூத்த வக்கீல் நளினிசிதம்பரம், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபாலமுருகன் தமிழகஅரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர்ஆஜரானார்கள்.
விசாரணைதொடங்கியதும், இரு தரப்பினரும் விரிவானஇறுதி விசாரணைக்காக தேதி குறிப்பிட்டு வழக்கைதள்ளி வைக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்ஏற்கனவே இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும்மேலும் சில மனுதாரர்கள் தாக்கல்செய்த மனுக்களையும் ஒன்றாக இணைத்து அடுத்தமாதம் (அக்டோபர்) 4–ந்தேதி இறுதி விசாரணைக்குஎடுத்து கொள்வதாக உத்தரவு பிறப்பித்தனர்.


இந்த வழக்கு தொடர்பாக மதுரைஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டுமனுவையும் மதுரை ஐகோர்ட்டின் உத்தரவுசரி என்றும் அதனை உறுதிப்படுத்தவேண்டும் என்று வின்சென்ட், கே.கே.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர்தாக்கல் செய்த மனுக்களையும் சுப்ரீம்கோர்ட்டு ஏற்கனவே விசாரித்து வருவதுகுறிப்பிடத்தக்கது. தற்போது அனைத்து மனுக்களையும்ஒன்றாக இணைத்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு நேற்று தெரிவித்தது.

தமிழகத்தில் நாளை 'பந்த்' போராட்டம் விவசாயிகள் முயற்சிக்கு பெருகும் ஆதரவு-ஆசிரியர் சங்கத்தினர் இன்று முடிவு?-விவசாயிகள் நாளை அறிவித்துள்ள, 'பந்த்' போராட்டத்திற்கு, அரசியல் கட்சிகள், வணிகர் கள் என பல தரப்பிலும், ஆதரவு பெருகி வருகிறது.

காவிரிபிரச்னையில், கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில், தமிழர்கள் தாக்கப்பட்டனர்; அவர்களது உடமைகள் சேதப்படுத்தப்பட்டன.இதற்குகண்டனம் தெரிவித்து, தமிழகத்தில், நாளை,
'பந்த்' போராட்டத்திற்கு, விவசாயிகள் அழைப்பு

விடுத்துள்ளனர்.
இதற்கு, தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்டபிரதான அரசியல் கட்சிகள் பலவும்ஆதரவு அளித்துள் ளன. தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கமும் போராட்டத்தில்பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

இதனால், மாநிலம் முழுவதும் மளிகை கடைகள் உள்ளிட்டவணிக நிறுவனங்கள் நாளை இயங்குவது சந்தேகம். தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள்நல சங்கமும்,போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், பால்விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை,கோயம்பேடு காய்கறி மற்றும் பழங்கள்மொத்த விற்பனை மார்க்கெட் வியாபாரிகளும், 'பந்த்' போராட்டத்தில் பங்கேற்கின்றனர். ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வும், மறைமுகமாக ஆதரவளிக்கும் என்பதால், முழு அள வில்தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடக்கும் என, விவசாய சங்கங்கள்கூறின.

ஆசிரியர்கள்இன்று முடிவு: ஆசிரியர் சங்கத்தினர்இன்று சென்னையில் கூடி, விவசாயிகள் நடத்தும்வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து, முடிவு எடுக்க உள்ளனர்.

புதுச்சேரியிலும்'பந்த்'
தமிழகத்தைப்போலவே, புதுச்சேரியிலும் நாளை, முழு அடைப்புக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'பந்த் நாளில், புதுச்சேரியில்பஸ்கள் ஓடாது; அனைத்து கடைகளும்மூடி இருக்கும்' என, புதுச் சேரிவணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஓரணியில்திரள வேண்டும்!

கர்நாடகஅரசைக் கண்டித்து, தமிழகத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்புநடத்தும் முழு அடைப்பில், கொங்குஜனநாயக கட்சி பங்கேற்கும்.தி.மு.க., 'பந்த்'திற்கு ஆதரவளித் துள்ளநிலையில், அ.தி.மு.க.,வும் பங்கேற்கவேண்டும். அனைத்து தமிழக கட்சிகளும்ஓரணியில் திரள வேண்டும்.

நாகராஜ்நிறுவன தலைவர், கொங்குநாடு ஜனநாயககட்சி
ரயில் மறியல் போராட்டம்!
கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிரான வன் முறைவெறியாட்டத்திற்கு, மத்திய அரசே பொறுப்பு. ஏதோ தமிழகத்திற்கும், கர்நாடகாவிற் கும் இடையிலான தனிப்பட்டபிரச்னைஎன்பதை போல், மத்திய அரசுவேடிக்கை பார்க்கிறது. இந்த மெத்தனப் போக்கைகண்டித்து, நாளை, சென்னை யில்என் தலைமையில் ரயில் மறியல் போராட்டம்நடக்கிறது.தி.மு.க., - அ.தி.மு.க., மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒருமித்தகருத்தோடு காவிரி பிரச்னையை அணுகிஇருக்க வேண்டும். தமிழக முதல்வர், அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டி, பிரதமரு க்குஅழுத்தம் கொடுக்க வேண்டும்.

திருமாவளவன்தலைவர், விடுதலை சிறுத்தைகள்
ஓட்டல்கள்பங்கேற்காது!கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபடுவது, தமிழக அரசின் சட்டரீதியிலான முயற்சிகளை வலுவிழக்கச் செய்து விடும். கடையடைப்புபோராட்டத்தில் ஓட்டல்கள் சங்கம் பங்கேற் காது.
வெங்கடசுப்பு, சீனிவாசன், கே.எல்.குமார்நிர்வாகிகள், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம்

மருந்துகடைகள் திறப்பு
கடையடைப்புபோராட்டத்துக்கு, தமிழக மருந்து வணிகர்கள்சங்கம் ஆதரவு தெரிவிக் கிறது. அதே நேரத்தில், உயிர் காக்கும் மருந்துகளை விற்பனை செய்வதால், நோயாளிகளின்நலன் கருதி, நாளை ஒருநாள் மட்டும் காலை, 11:00 மணிக்குமேல், மருந்து கடைகள் திறக்கப்படும்.

செல்வம்செயலர், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம்

1வது 2வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ நிர்வாகம் சுற்றறிக்கை

சி.பி.எஸ்.இ. 1-வது மற்றும் 2-வது வகுப்பு படிக்கும்மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்றும், புத்தகப்பை கொண்டுவரக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்இ. கல்விவாரியம்
சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில்கூறியிருப்பதாவது:-சுமையினால் வளர்ச்சி பாதிக்கும்

சி.பி.எஸ்.இ. படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பைஅதிக சுமையாக உள்ளது. இதனால்முதுகு வலி, தசை வலி, தோள்பட்டை வலி ஆகியவை அந்தமாணவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் அந்த மாணவர்களின்வளர்ச்சி பாதிக்கிறது. ஆரோக்கியம் கெட்டுப்போகிறது.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் விஷயத்தில் பள்ளிகள்முக்கிய பங்குவகிக்கின்றன.

மாணவர்கள்தினசரி வகுப்புக்கு தேவையான பாடப்புத்தகங்களை மட்டும்கொண்டுவருகிறார்களா? என்று ஆசிரியர்கள் திடீர்என்று மாணவர்களின் பைகளை சோதனை செய்யவேண்டும். தேவை இல்லாத வீட்டுப்பாட நோட்டுகள், தேவை இல்லாத பாடப்புத்தகங்கள் உள்ளிட்டபல பொருட்களை மாணவர்கள் கொண்டுவரலாம். அவ்வாறு மாணவர்களிடம் கொண்டுவரக்கூடாதுஎன்று ஆசிரியர்கள் கூறவேண்டும்.

எடை குறைவான பைகள்
அதிக எடை இன்றி புத்தகப்பைகள்கொண்டு வருகிறார்களா? என்று தினமும் ஆசிரியர்கள்பரிசோதனை செய்யவேண்டும்.
பெற்றோர்கள்தங்கள் குழந்தைகளுக்கு எடை குறைவான புத்தகப்பைகளைவாங்கிக்கொடுக்கவேண்டும். பள்ளிக்கூட மாணவர்களின் புத்தகங்களின் எடையை குறைக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறு துணையாக இருக்கவேண்டும்.
பள்ளிக்கூடங்களில்மாணவர்கள் தினமும் எந்த எந்தபுத்தகங்கள், நோட்டுகள் கொண்டு வரவேண்டும் என்றகால அட்டவணையை முன்கூட்டியே மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும்.
மாணவர்களுக்குபள்ளிக்கூட நேரங்களில் மட்டும் புராஜெக்ட் கொடுக்கவேண்டும். அதை குழுவாக மாணவர்கள் செய்யவேண்டும். அந்த புராஜெக்டை பள்ளிக்கூட நேரம் தவிர வீட்டுக்குகொண்டுசெல்லக்கூடாது.

பெற்றோருக்குவேண்டுகோள்
மாணவர்கள்பள்ளிக்கூடத்திற்கு படிப்பு தொடர்பாக கொண்டுவரும் எந்த ஒரு பொருளும்எடை குறைவாக இருக்கவேண்டும்.
தொடக்கப்பள்ளிவரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர், புத்தகப்பையை தினமும் கண்காணிக்கவேண்டும். தங்கள்குழந்தைகள் கால அட்டவணை படிகொண்டுசெல்கிறார்களா? என்பதை உறுதி செய்யவேண்டும்.புத்தகப்பை, வீட்டுப்பாடம்
குறிப்பாக1-வது மற்றும் 2-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் கட்டாயம் கொடுக்கக்கூடாது. அவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது.

மாணவர்கள்அதிக எடையுடன் குடிநீர் பாட்டில் கொண்டுவருகிறார்கள். இதை தவிர்க்கவேண்டும். எனவேபள்ளிகள் குடிநீரை வைத்திருக்கவேண்டும். அந்த தண்ணீரை பள்ளிக்கூடமுதல்வர் மற்றும் ஆசிரியர்கள் குடிக்கவேண்டும். மாணவர்கள் கூடுதலாக விளையாட்டு காலணிகளை கொண்டு வரக்கூடாது.

இவ்வாறுசி.பி.எஸ்.இ. வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையைஅனுப்பி உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையேநடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டவல்லுநர் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமைநடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் பிற்பகல்3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறுஅரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். கடந்த சட்டப் பேரவைத்தேர்தலின் போது,
அதிமுக சார்பில்வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பழையஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழுஅமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கைபெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமேதொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதியதாககுழு: தமிழக அரசு அமைத்துள்ளகுழுவின் தலைவராக, முதல்வர் அலுவலக சிறப்புப் பணிஅலுவலர் சாந்தா ஷீலா நாயர்நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல்தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சென்னைபொருளாதார பள்ளியின் பேராசிரியர்கள் கே.வி.பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோரும், குழுவின் உறுப்பினர் செயலாளராக திட்டம்-வளர்ச்சி-சிறப்புமுயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணனும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், பேராசிரியர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோர்குழுவில் தாங்கள் தொடர முடியாதுஎன அரசுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை பொருளாதார பள்ளியின்மற்றொரு பேராசிரியரான டாக்டர் பிரிஜேஷ் சி.புரோகித் நியமிக்கப்பட்டார்.
முதல் கூட்டம்: தமிழக அரசின் வல்லுநர்குழு புதிதாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அந்தக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச்செயலகத்தில் வியாழக்கிழமை (செப். 15) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இதுதொடர்பாக, வல்லுநர் குழுவின் உறுப்பினர் செயலாளரும், முதன்மைச் செயலாளருமான எஸ்.கிருஷ்ணன் சார்பில்அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வல்லுநர் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தின்பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இந்தக்கூட்டத்தில் தங்களது கருத்துகளை அரசுஊழியர்கள் சங்கங்கள் தெரிவிக்கலாம். இதற்காக, சங்கத்தின் 3 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும். மேலும், கருத்துக் கேட்புகூட்டத்தின் போது நேரத்தை சிறப்பானமுறையிலும், உரிய வகையிலும் பயன்படுத்தஏதுவாக எழுத்துப்பூர்வமாகவும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தனது கடிதத்தில்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற முடிவு

புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும்பாதிப்பு குறித்து மக்கள் அறிந்து கொள்ளும்வகையில், கையெழுத்து இயக்கம் நடத்த தமிழ்நாடுகல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்புமுடிவு செய்துள்ளது.
இக்கூட்டமைப்பின்மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமைநடைபெற்றது. அமைப்பாளர் செல்வராசன் தலைமை
வகித்தார். மாவட்டநிதிக் காப்பாளர் பழனிவேலு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழக மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்: புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காகமத்திய அரசு வெளியிட்டுள்ள முன்மொழிவுகளின்மீது பொதுமக்கள் கருத்து கூறுவதற்கு டிசம்பர்மாதம் வரை கால அவகாசம்அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள்நாடு முழுவதும் விரிவான அளவில் புதியகல்விக் கொள்கையின் மீது கருத்துக் கேட்புகூட்டங்களை நடத்த வேண்டும்.
கல்வியைமத்திய அரசின் பொதுப் பட்டியலில்இருந்து மாநில அரசுகளின் பட்டியலுக்குமாற்றிடும் வகையில் உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய அரசு தேசியமொத்த உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதம் நிதி ஒதுக்கீடுசெய்ய வேண்டும். தமிழக அரசு மாநிலவரவு, செலவு அறிக்கையில் கல்விக்கு30 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.

புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும்ஆபத்துகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் வரும்18-ஆம் தேதி முதல் 28-ஆம்தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில்50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறும்நோக்கில் கையெழுத்து இயக்கம் நடத்துவது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய மாணவர் சங்கமாவட்டச் செயலர் ஜோதிபாசு நன்றிகூறினார்.

ஆதார்' எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு

ஆதார் எண் இல்லாவிட்டாலும், மாணவர்களுக்குகல்வி உதவித்தொகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாணவர்களுக்குஉதவித்தொகை திட்டங்கள், பல அரசு துறைகள்மூலம் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளிகள் மூலம், கல்வி
உதவித்தொகையும்வழங்கப்பட்டு வருகிறது.


இதில், முறைகேடுகளை தடுக்கவும், போலி ஆவணங்கள் பெயரில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதை தவிர்க்கவும், மாணவர்களின் ஆதார் எண்ணை பதியும்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆதார்எண்ணை பதிந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை கிடைக்கும்என, மத்திய அரசு அறிவித்தது.

அனைத்துமாணவர்களுக்கும், இன்னும் ஆதார் எண்வழங்கப்படாததால், பல லட்சம் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, ஆதார் அட்டை இல்லாவிட்டாலும், கல்விஉதவித்தொகை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கல்லுாரிகளுக்குஅனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'ஆதார்எண் இல்லை என, மாணவர்களுக்கானகல்வி உதவித்தொகையை மறுக்கக்கூடாது.

'ஆதார்எண் இல்லா தோர், முகவரிஅடையாள சான்றுடன், வங்கிக் கணக்கு எண்ணைபதிவு செய்தால், சம்பந்தப்பட்ட துறைகள் உதவித்தொகை வழங்கும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், தங்கள் ஓய்வூதியம் பற்றிய நிலையை அறிந்து கொள்ள புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் எஸ்எம்எஸ் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மத்தியஅரசின் ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக, புதிய இணையதளத்தை, மத்தியநிதியமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில்இன்று தொடங்கி வைத்தார். ‘www.cpao.in’ என்ற முகவரியில் ஓய்வூதியதாரர்கள்தங்கள் ஓய்வூதியம் பற்றிய நிலையை அறிந்துகொள்ளலாம். அத்துடன் குறைகள் தொடர்பான புகார்களில்
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், எஸ்எம்எஸ் மூலம்ஓய்வூதியம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
மொபைல்போன் மூலமாகவே புகார்களை அனுப்பலாம். அதன் மீது உடனடியாகநடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் பதில் தகவலும்அனுப்பப்படும். இதன்மூலம் 11.61 லட்சம் மத்திய அரசுஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், சுதந்திரப்போராட்ட தியாகிகள் பலன் அடைவார்கள் என்றுஅருண் ஜேட்லி கூறினார்.
புதிய இணையதளம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளால்தேவையில்லாமல் ஓய்வூதியதாரர்கள் அலைக்கழிக்கப்படுவது, மனவேதனை அடைவது தடுக்கப்படும். இனிமேல் ஓய்வூதியதாரர்கள் எந்த துன்பமும் படக்கூடாது. ஏனெனில், அவர்கள் நமது நாட்டின்மூத்த குடிமக்கள். அவர்களுக்கு ஓய்வூதியம் மிக முக்கியம். அதைசார்ந்துதான் அவர்கள் இருக்கின்றனர் என்றுஜேட்லி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில்கணக்கு தணிக்கைத் துறை தலைவர் எம்.ஜே.ஜோசப் பேசும்போது, ‘‘இந்த புதிய இணையதளம் ஓய்வூதியதாரர்களின்குறைகளை தீர்த்து வைப்பதில் வெளிப்படை தன்மை மற்றும் நம்பிக்கையைஏற்படுத்துவதாக இருக்கும்’’ என்றார்.

ஜே.இ.இ., தேர்வு முறையில் மாற்றம்

 உயர் கல்வி தொழில்நுட்பநிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை, இந்த ஆண்டு, சென்னை ஐ.ஐ.டி., நடத்தஉள்ளது.

 உயர் கல்வி தொழில்நுட்பநிறுவனமான, என்.ஐ.டி., - ஐ.ஐ.டி., - சி.எப்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, ஜே.இ.இ.,
தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும். ஜே.இ.இ., மெயின், அட்வான்ஸ்ட் என, இரு கட்டங்களாகஇந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதுவரை, ஜே.இ.இ., தேர்வில்பெறும் மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக கணக்கிடப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு முதல், இந்தவெயிட்டேஜ் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வில், 75 சதவீதத்திற்கு மேல், மதிப்பெண் பெற்றால்மட்டுமே, ஜே.இ.இ., தேர்வில் பங்கேற்க முடியும். இந்த தேர்வில் பெறும்மதிப்பெண் அடிப்படையில் தான், மாணவர் சேர்க்கைநடக்கும்; தரவரிசை பட்டியல் தயாரிக்க, பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடப்படாது. புதிய மாற்றத்துடன் கூடிய, ஜே.இ.இ., தேர்வின்முதன்மை தேர்வை, மத்திய இடைநிலைகல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்த உள்ளது. அடுத்தகட்ட, அட்வான்ஸ்ட் தேர்வை, சென்னை ஐ.ஐ.டி., நடத்தஉள்ளது. வினாத்தாள் தயாரிப்பு, விடைத்தாள் திருத்தம், முடிவு வெளியிடுதல் போன்றபணிகளை, சென்னை ஐ.ஐ.டி., மேற்கொள்ளும்.

புதிய வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பில்லை

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம்இல்லாததால், உள்ளாட்சித் தேர்தலில் புதிய வாக்காளர்களை சேர்க்கவாய்ப்பில்லை என, ஊரக வளர்ச்சித்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.


உள்ளாட்சித்தேர்தல் அக்டோபருக்குள் நடத்தி முடிக்க மாநிலதேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. சட்டசபைத்தேர்தல் வாக்காளர்கள்
அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியல்தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் ஓரிருநாட்களில் வெளியிடப்பட உள்ளது. புதிதாக வாக்காளர்களைஇந்திய தேர்தல் ஆணையம் மூலமேசேர்க்க முடியும்.

அவற்றிற்குகால அவகாசம் இல்லாததால் வாக்காளர்பட்டியலில் விடுபட்ட பெயர், திருத்தம், முகவரிமாற்றம் மட்டும் மேற்கொள்ள முடியும்வாய்ப்புள்ளது. ஊரகவளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில்வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப்பணி செப்., 1 முதல் செப்., 30 வரைநடக்கிறது. இதில் பெயர் சேர்க்க2017 ஜன., 1 ல் 18 வயது நிரம்பினால்போதும். உள்ளாட்சித் தேர்தலில், ஏற்கனவே 18 வயது பூர்த்தி அடைந்திருந்தால்மட்டுமே வாக்கு அளிக்க முடியும். இதனால் தற்போது பெறப்படும் விண்ணப்பங்களைவயது அடிப்படையில் பிரித்து சேர்ப்பதில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். மேலும் விண்ணப்பங்களை ஆய்வுசெய்து பெயர் சேர்த்தலுக்கு காலஅவகாசமும்இல்லை. இதனால் சட்டசபைத் தேர்தலில்பெயர் இருந்து உள்ளாட்சி தேர்தல்வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் சரிசெய்ய வாய்ப்பு தரப்படும். அதேபோல் திருத்தம், முகவரிமாற்றம் மேற்கொள்ளலாம். வேட்பாளர்களாக இருந்தால் பெயர் சேர்க்கப்படும், என்றார்.

10ம் வகுப்பு தனி தேர்வு 'தத்கல்' விண்ணப்பம்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, 'தத்கல்' திட்டத்தில், நாளை முதல், இரண்டுநாட்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர்வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு, அடுத்த மாதம் நடக்கஉள்ளது. இதற்கு குறித்த நாட்களில்விண்ணப்பிக்க தவறியோர், செப்., 16, 17ம் தேதிகளில், தத்கல்திட்டத்தில்
விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வு சேவைமையங்கள் மூலம், ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.

தத்கலில்விண்ணப்பிக்கும், தனித்தேர்வர்களுக்கு, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, வேலுார், கடலுார் மற்றும் சென்னைஆகிய மண்டல அலுவலகங்களின் தலைமையிடத்தில்மட்டுமே, தேர்வு மையங்கள் அமைக்கப்படும். அரசுத் தேர்வு சேவை மையங்கள்விபரத்தை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

Flash News-முழு அடைப்பு எதிரொலி:நாளை தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு.

காவிரி நீர் பிரச்னையையொட்டி தமிழகத்தில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக தனியார் பள்ளிகள்  சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும்  உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தனியார் பள்ளி உரிமையாளர் சங்கத் தலைவர் நந்த குமார் இன்று தெரிவித்துள்ளார். நாளைக்கு பதில் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

Election duty Remuneration

14/9/16

பல்கலைகளில் பேராசிரியர் தேர்வு : திடீர் ரத்தால் பட்டதாரிகள் அதிர்ச்சி.

பல்கலைகளில் பேராசிரியர் தேர்வு : திடீர் ரத்தால் பட்டதாரிகள் அதிர்ச்சி.

கோவை பாரதியார், நெல்லை மனோன்மணியம் பல்கலைகளில், நேற்று நடக்க இருந்த பேராசிரியர் நியமன தேர்வு, திடீரென ரத்து செய்யப்பட்டதால், பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நேர்முகத் தேர்வு :
கோவை பாரதியார் பல்கலையில் காலியாக உள்ள, 72 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் இடங்களையும், 20 ஆசிரியர் இல்லாத பணி இடங்களையும் நிரப்ப, ஆக., மாதம் அறிவிப்பு வெளியானது.நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையிலும், 54 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பும் அறிவிப்பும் வெளியானது. இந்த பணிகளுக்கு, 'நெட், செட்' தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற, பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

நேற்று, நேர்முகத் தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆயிரம் பேர், இரண்டு பல்கலைகளுக்கும் விரைந்தனர்; நேர்முகத்தேர்வு நடக்காததால், கடும் அதிருப்தி அடைந்தனர். இரண்டு பல்கலைகளும், 'தவிர்க்க இயலாத காரணங்களால் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது; புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என, விண்ணப்பதார்களுக்கு, நேற்று முன்தினம் இரவு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பின.நெல்லை மனோன்மணியம் பல்கலையில், நேர்முகத் தேர்வு குழுவில் இடம்பெற்ற உறுப்பினர் வர முடியாததாலும்; நேர்முகத் தேர்வுக்கான அரசு தரப்பு உறுப்பினர் நியமிக்காததானாலும், பாரதியார் பல்கலையில், தேர்வு ரத்து செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.

பிரச்னை வராமல் : இந்த பதவிகளுக்கு, இடைத்தரகர்கள் நடத்திய பேரம் காரணமாகவே, நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாக, உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயர் கல்வியில், பல பதவிகள் நியமனத்தில் ஏற்கனவே பிரச்னை உள்ள நிலையில், மீண்டும்பிரச்னை வராமல் இருக்கவே நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழக மின் வாரியத்தில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

தமிழக மின் வாரியத்தில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

தமிழக மின் வாரியத்தில், 'ஹெல்பர், போர்மேன்' உதவிபொறியாளர் என, 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, பொறியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
துாத்துக்குடியில், தமிழக மின் பொறியாளர்கள் குழுமத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார்.செயலாளர் கந்தகுமார் வரவேற்றார். பொருளாளர் அனந்தநாராயணன் அறிக்கை சமர்ப்பித்தார். மாநில பொதுச்செயலாளர் ராஜ்குமார் பேசியதாவது: தமிழகத்தில், சீரான மின் உற்பத்தி, சீரான மின் வினியோகத்திற்கு மின் வாரிய பணியாளர்கள் திறம்படபணியாற்றி வருகின்றனர். அத்தியாவசிய தேவையான மின்சாரம் மக்களுக்கு கிடைக்க அக்கறையுடன் பணியாற்றுகின்றனர். மின் வாரிய பணியாளர்கள் தங்களுக்கான சலுகைகள், உரிமைகளுக்காக கோர்ட்டில் போராடி போராடி பெற வேண்டிய நிலை உள்ளது. தமிழக மின் வாரியத்தில், 'ஹெல்பர், போர்மேன்' உதவி பொறியாளர் உட்பட, 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன.இவற்றை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாநில துணைத்தலைவர்கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.--

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை உலக மொழிகள் மற்றும் இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழுக்காகப் பாடுபடும் அறிஞர்களுக்கும், சான்றோர்களுக்கும் எண்ணற்ற நலத்திட்டங்களையும், உதவிகளையும், சிறப்புகளையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.கடந்த 5 ஆண்டுகளில் தமிழுக்காகப் பாடுபடும் சான்றோர்களுக்கும், அறிஞர்களுக்கும், சிறப்பு செய்யும் வகையில் 55 விருதுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தமிழ் மொழியின் பெருமையை பிற நாட்டவரும் அறியும் வண்ணம், உலகப் பொதுமறையாம் திருக்குறள், சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு என் தலைமையிலான அரசால் வெளியிடப்பட்டுள்ளது.மேலும், திருக்குறள் கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் நிலையில் உள்ளது.அதே போன்று பாரதியார் பாடல்களும், பாரதிதாசன் பாடல்களும், சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

அதிமுகவின்தேர்தல் அறிக்கையில், பண்டை தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும் என்ற வாக்குறுதிஅளிக்கப்பட்டுள்ளது.இதனை செயல்படுத்தும் வகையில், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட நூல்கள், உலக மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மனி மொழிகளிலும், இந்திய மொழிகளான மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படும்.

இப்பணிகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.இதன் மூலம், தமிழ் மொழியின் வளம் பற்றி உலக மக்கள் அறிவதற்கு மேலும் வழிவகை ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்

கால்நடை பல்கலைக்கழகத்தில் நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்

கால்நடை பல்கலைக்கழகத்தில் நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், இளநிலை பட்டப்படிப்பு வகுப்பில் சேருவதற்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நாளை நடைபெறுகிறது.இப்பல்கலையில், இளநிலை முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஜூலையில் நடந்தது; முடிவில், சில இடங்கள் காலியாக இருந்தன.

இப்பல்கலையுடன் இணைக்கப்பட்டகல்லுாரிகளில், இளநிலை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவம், 19; கோழியின உற்பத்தி மேலாண்மை, 10; உணவுத் தொழில்நுட்பம், ஆறு; பால்வள தொழில், ஒன்பது என, 44 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான கவுன்சிலிங், சென்னை, வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவக் கல்லுாரியில், நாளை காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக பி.எஸ்.என்.எல் - வோடபோன் கைகோர்ப்பு.

ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக பி.எஸ்.என்.எல் - வோடபோன் கைகோர்ப்பு.

ரிலையன்ஸ் நிறுவனம் அண்மையில் குறைந்த விலையிலான ஜியோ 4G சேவையை அறிவித்தது. போட்டியை சமாளிக்க சில நிறுவனங்கள் தற்போது கைகோர்த்துள்ளன.

அண்மையில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ 4G சேவையை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு, தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் டேடா, விலையில்லா போன் அழைப்பு, ரோமிங் செலவு இல்லை என பல்வேறு திட்டத்தை அறிமுகம் செய்தார். இதனால் சந்தையில் உள்ள போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா,பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனங்கள் மிகவும் தொய்வை சந்தித்துள்ளது.

தங்களது வாடிக்கையாளர்களை இழக்காமல் இருப்பதற்காக தற்போது பி.எஸ்.என்.எல் - வோடபோன் ஆகிய நிறுவனங்கள் கைக்கோர்த்துள்ளது. இரு நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு நெரிசலுக்கு தீர்வு- சென்னையில் 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு

தீபாவளிக்கு நெரிசலுக்கு தீர்வு- சென்னையில் 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு

சென்னை: தீபாவளி பண்டிகையின்போது சென்னையின் முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வெளியூர் பேருந்துகளை வெவ்வேறு இடங்களில் இருந்து பிரித்து இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்தெந்த இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 29ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி படிக்கும், வேலை செய்யும் லட்சக்கணக்கான மக்கள், பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்கின்றனர். 3 அல்லது 4 தினங்கள் தொடர்ந்து விடுமுறை வந்தாலே இப்போது சொந்த ஊர் செல்வதை ஏராளமானோர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசலில் திணறிப் போகிறது சென்னை மாநகரம்.
கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து வடபழனி வழியாக வந்து தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியைக் கடக்கவே பல மணிநேரங்கள் ஆகிவிடும். எனவே தீபாவளி பண்டிகை தினத்தில் இதுபோன்ற போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, சென்னை மாநகரத்தை மையமாக கொண்டு தெற்கு, வடக்கு, மேற்கு என பிரித்து 3 இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் பகுதியாகவும் கோயம்பேடு உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில் இப்பகுதியில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன.
  
போக்குவரத்து நெரிசல்
கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மாநகரின் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மணிக்கணக்கில் சாலைகளில் காத்திருந்து உடல் சோர்வுடன், மனஉளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு போக்கு வரத்துக் கழகங்கள் சார்பில் தினமும் 1,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்களில் சுமார் 4 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படும்.
  
ஆலோசனைக்கூட்டம்
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்களில் இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிடும். எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளைப் பல்வேறு இடங்களில் இருந்து பிரித்து இயக்குமாறு பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முதல்முறையாக, தீபாவளி பண்டிகைக்குச் சென்னையில் 3 முக்கிய இடங்களில் இருந்து வெளியூருக்குப் பேருந்துகள் இயக்குவதாக அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  
தென்மாவட்ட பேருந்துகள்
தென்மாவட்டங்களுக்குச் செல்லும் 40 சதவீத பேருந்துகளை வண்டலூர் அல்லது கூடுவாஞ்சேரியில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை பகுதி மற்றும் மாதவரத்தில் இருந்தும் பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும்.
  
நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை
பண்டிகை நாட்களின்போது சென்னை, புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வெளியூர் செல்பவர்கள் மட்டுமின்றி, பணி முடிந்து வீடு திரும்புபவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். வரும் தீபாவளி பண்டிகையின் போது, இவ்வாறு நேராமல் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், சென்னை மாநகரத்தை மையமாக கொண்டு தெற்கு, வடக்கு, மேற்கு என பிரித்து 3 இடங்களில் இருந்து பேருந்து களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பித்த 4 நாளில் பாஸ்போர்ட் : சென்னை மண்டல அதிகாரி அறிவிப்பு

மத்தியஅரசு அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின் கீழ்விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று சென்னை மண்டலபாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை
மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியதாவது:
பாஸ்போர்ட்கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான்கார்டு ஆகியவற்றைவிண்ணப்பத்துடன் இணைத்துக் கொடுத்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட்கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைத்ததும் போலீஸ் துறையின் சான்றாய்வுசெய்யப்படும் என்ற திட்டத்தை மத்தியவெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம்செய்துள்ளது. தட்கல் என்னும் துரிதபாஸ்போர்ட் திட்டத்தில் இருந்து இது முற்றிலும்மாறுபட்டது. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்குபோலீசார் விரைவாக சான்றாய்வு பெறவசதியாக மொபைல் ‘போலீஸ்-ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில்3 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகம்செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் அறிமுகம்செய்ய மாநில அரசு ஒப்புதல்வழங்கியுள்ளது. போலீஸ் ஆப் மூலம்போலீஸ் சான்றொப்பம் கிடைப்பதற்கான நேரம் வெகுவாக குறையும். இந்த திட்டத்தை சென்னை, விழுப்புரம், கடலூர்ஆகிய மாவட்டங்களில் ஒரு மாதத்தில் சோதனைஅடிப்படையில் அறிமுகம் செய்ய உள்ளோம். தமிழகத்தில்உள்ள 280 இ-சேவா மையங்களில்இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

கிராமங்களில்வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட்பெற இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறவிரும்புவோர் ரூ.155 செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சென்னை மண்டலபாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம்பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை3 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட்வழங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் கேட்டு வி்ண்ணப்பிக்கும் நபர்களின்சான்றிதழ் சரிபார்ப்புக்கான கால அளவு 19 நாளில்இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் கொடுத்த மறுநாளே அவர்கள்சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு மண்டல அதிகாரிபாலமுருகன் தெரிவித்தார். 

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு -பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம்

கடைகளில் விற்பனை செய்யும் இட்லி தோசை மாவு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!

கடந்த10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவைவிலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டேபோகிறது. இட்லி, தோசை மாவுவிற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின்வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாகமாவு விற்பனை நடைபெறுகிறது.மேலும்சிறிய மளிகைக்கடை முதல் பெரிய
ஷாப்பிங்மால் வரை இட்லி, தோசைமாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.

இந்த மாவு ஒரு உயிர்கொல்லி– ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோபலருக்கும் தெரிவதில்லை.இதன் பின் விளைவுகளைசற்று அலசிப் பார்த்தால் நம்உதிரமும் உறைந்து போகும் அளவிற்குஅதிபயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது!

1. 6 நாட்கள்வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க,நம் உடலில் ஏற்படும்காயத்திற்கும்,புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாடபயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்துவிற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

2. அதாவதுஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்கவேண்டிய கிரைண்டர்கள், 12- 18 மணி நேரம் தொடர்ந்துஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம்கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. இதனால் சிறு நீரகத்தில் கல்உண்டாகும் அபாயம் இருக்கின்றது.

3. என்னதான்நல்ல அரிசி உளுந்து போட்டாலும்நல்ல தண்ணீரை ஊற்றி தான்மாவு அரைக்க வேண்டும். ஆனால்பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர்மற்றும் உப்பு தண்ணிரே பயன்படுத்தப்படுகின்றது.

4. நம்முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒருகை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம்ஒரு இயற்கையான நோய் நிவாரணி( ஆண்டிபயாடிக்) இது, உடம்பு உஷ்னம், வாய் நாற்றம், குடல் புண்(அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.கடைமாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை!
மேலும், பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது,( – 24 )மைனஸ் 24 டிகிரிக்குகீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும்அவ்வகை பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன்ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்குஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக்கொல்லும் அபாயமும் உள்ளது.
எனவே தாம் சென்னை மாநகராட்சிகடைகள்,மற்றும் மாவுஅரைக்கும் இடங்களில்பரவலாக சோதனை (ரெய்டு) நடத்திதரம் குன்றிய மாவுகளைக் கைப்பற்றி,அபராதமும் விதித்து வருகின்றது.

எனவே,நமக்கு நன்கு தெரிந்தகலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்துவிற்பனை செய்யும் இட்லி,தோசை மாவுகளைமட்டும் வாங்குவதோடு,முன்,பின் தெரியாதவர்கள்தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பதுநலம்!

Flash News:TNTET- ஆசிரியர் தகுதித்தேர்வுவழக்குகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் இன்று (14.09.2016 ) கோர்ட் எண்.13 யில் வழக்கு எண். 9 ஆவதாக நீதிபதிகள் திரு. சிவா கீர்த்தி சிங் மற்றும் திருமதி. பானுமதி அவர்களின் முன்பு விசாரணைக்கு வந்தது.

 ஆசிரியர் தகுதித்தேர்வுவழக்குகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

பல்கலைகளில் பேராசிரியர் தேர்வு : திடீர் ரத்தால் பட்டதாரிகள் அதிர்ச்சி.

கோவை பாரதியார், நெல்லை மனோன்மணியம் பல்கலைகளில், நேற்று நடக்க இருந்த பேராசிரியர் நியமன தேர்வு, திடீரென ரத்து செய்யப்பட்டதால், பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நேர்முகத் தேர்வு : 
கோவை பாரதியார் பல்கலையில் காலியாக உள்ள, 72 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் இடங்களையும், 20 ஆசிரியர் இல்லாத பணி இடங்களையும் நிரப்ப, ஆக., மாதம் அறிவிப்பு வெளியானது.நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையிலும், 54 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பும் அறிவிப்பும் வெளியானது. இந்த பணிகளுக்கு, 'நெட், செட்' தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற, பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

நேற்று, நேர்முகத் தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆயிரம் பேர், இரண்டு பல்கலைகளுக்கும் விரைந்தனர்; நேர்முகத்தேர்வு நடக்காததால், கடும் அதிருப்தி அடைந்தனர். இரண்டு பல்கலைகளும், 'தவிர்க்க இயலாத காரணங்களால் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது; புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என, விண்ணப்பதார்களுக்கு, நேற்று முன்தினம் இரவு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பின.நெல்லை மனோன்மணியம் பல்கலையில், நேர்முகத் தேர்வு குழுவில் இடம்பெற்ற உறுப்பினர் வர முடியாததாலும்; நேர்முகத் தேர்வுக்கான அரசு தரப்பு உறுப்பினர் நியமிக்காததானாலும், பாரதியார் பல்கலையில், தேர்வு ரத்து செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.

பிரச்னை வராமல் : இந்த பதவிகளுக்கு, இடைத்தரகர்கள் நடத்திய பேரம் காரணமாகவே, நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாக, உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயர் கல்வியில், பல பதவிகள் நியமனத்தில் ஏற்கனவே பிரச்னை உள்ள நிலையில், மீண்டும்பிரச்னை வராமல் இருக்கவே நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது

சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை : அரசாணை மட்டும் உண்டு.

சத்துணவு ஊழியர்களுக்கு அரசாணை இருந்தும், பல மாவட்டங்களில், ஆண்டு ஊதிய உயர்வு, கூடுதல் படி வழங்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், 43 ஆயிரம் சத்துணவு மையங்களில், 42 ஆயிரத்து, 423 அமைப்பாளர்; 42 ஆயிரத்து , 855 சமையலர்; ஒரு லட்சத்து, 28 ஆயிரத்து, 130 உதவியாளர் பணியிடங்கள் உள்ளன.
இதில் பல ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு அமைப்பாளர் இரண்டுக்கும் மேற்பட்டமையங்களை கவனிக்கிறார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில், ஒரு அமைப்பாளர், ஏழு மையங்களை கவனிக்கிறார். பல மையங்களில், ஒரு சமையலர் அல்லது உதவியாளர் மட்டுமே உள்ளனர்.

கூடுதல் மையங்களை கவனிக்கும் அமைப்பாளர்களுக்கு தினமும் கூடுதல் படியாக, 20 ரூபாய் வழங்க வேண்டும். அதேபோல், ஆண்டு ஊதிய உயர்வு, 3 சதவீதம் வழங்க வேண்டும்.இதற்கான அரசாணை இருந்தும் பல ஒன்றியங்களில் வழங்கவில்லை. சிவகங்கை நகராட்சியில், பொங்கல் போனஸ் கூட இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் சத்துணவு ஊழியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.

சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ' எங்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளும் பல இடங்களில் மறுக்கப்பட்டுள்ளன. கலெக்டர்கள் வேளை பளுவால் எங்கள் பிரச்னையை கண்டுகொள்வதில்லை. தனியாக துறை அதிகாரிகளை நியமித்தால் தான் எங்கள் பிரச்னை தீரும்' என்றார்.

தமிழக மின் வாரியத்தில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

தமிழக மின் வாரியத்தில், 'ஹெல்பர், போர்மேன்' உதவிபொறியாளர் என, 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, பொறியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
துாத்துக்குடியில், தமிழக மின் பொறியாளர்கள் குழுமத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார்.செயலாளர் கந்தகுமார் வரவேற்றார். பொருளாளர் அனந்தநாராயணன் அறிக்கை சமர்ப்பித்தார். மாநில பொதுச்செயலாளர் ராஜ்குமார் பேசியதாவது: தமிழகத்தில், சீரான மின் உற்பத்தி, சீரான மின் வினியோகத்திற்கு மின் வாரிய பணியாளர்கள் திறம்படபணியாற்றி வருகின்றனர். அத்தியாவசிய தேவையான மின்சாரம் மக்களுக்கு கிடைக்க அக்கறையுடன் பணியாற்றுகின்றனர். மின் வாரிய பணியாளர்கள் தங்களுக்கான சலுகைகள், உரிமைகளுக்காக கோர்ட்டில் போராடி போராடி பெற வேண்டிய நிலை உள்ளது. தமிழக மின் வாரியத்தில், 'ஹெல்பர், போர்மேன்' உதவி பொறியாளர் உட்பட, 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன.இவற்றை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாநில துணைத்தலைவர்கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.--

கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: பள்ளிகளில் திடீர் ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவு.

மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளி களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள கண்காணிப்புக் குழுக்களை அமைக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிக ளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது:
ஊராட்சி ஒன்றியம் மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் பள்ளிகளில் ஆண்டு ஆய்வு மேற்கொள்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, பள்ளிகளை முன்ன றிவிப்பின்றி திடீர் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், தங்கள் மாவட்டத்தில்உள்ள உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோரை குழுக்களாக ஒருங்கி ணைக்க வேண்டும். ஒரு குழு வுக்கு 2 பேர் வீதம் குழுக்களை பிரித்துக்கொண்டு எவ்விதமுன்ன றிவிப்பும் இன்றி பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ மாணாக்கரின் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி

உங்கள் பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கிறார்களா? அவர்களது படிப்பை விட, ப்ராஜெக்ட்டுகளுக்காக ஏராளமான பணம் செலவழித்து சோர்ந்து விட்டீர்களா? ஆம் எனில் இனி நீங்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம்.


அதாவது, பள்ளி மாணாக்கருக்கு, வீட்டில் செய்து கொண்டு வர வேண்டும் என்று எந்த ப்ராஜெக்டுகளையும் இனி கொடுக்கக் கூடாது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

அதற்கு பதிலாக, பள்ளிகளிலேயே, வகுப்பு நேரத்திலேயே ப்ராஜெக்ட்டுகளை செய்ய வைப்பதால், மாணவர்களுக்கும் அதன் மீது ஆர்வம் ஏற்படும், அதோடு, பெற்றோர் ஏற்கனவே தயாரித்து விற்பனைக்கு வைக்கும் ப்ராஜெக்டுகளை வாங்கி பள்ளிக்கு எடுத்து வரும் நடைமுறையும் தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ இயக்குநர் கே.கே. சௌத்ரி இது குறித்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இனி ப்ராஜெக்ட்டுகள் அனைத்தும் பள்ளி வகுப்பு நேரத்தில் மாணவர்கள் குழுவாக சேர்ந்து செய்யும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உதவி தேவைப்படும் தமிழர்கள் கீழ்கண்ட கர்நாடக வாழ் தமிழ் சங்கத்தினர் எண்களை தொடர்புகொள்ள அறிவுறுத்தல்

வதந்திகளை பரப்பவேண்டாம் என வேண்டுகோள்

மைசூர் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர்.
கு.புகழேந்தி.
94480 54831.
94489 05831.
0821 2343426.
பெங்களூர் தமிழ்ச் சங்கம்.

லேண்ட் லைன் - 080 25510062.
தலைவர், கோ.தாமோதரன் - 98450 33166.
தி.கோ.தாமோதரன் - 94494 85903. 
சிக்கமகளூர் தமிழ்ச்சங்கம்.
தலைவர், ஆறுமுகம் - 90364 74224.
துணைத் தலைவர், குமார் - 99643 58993.
ஹாசன் தமிழ்ச் சங்கம்.
தேவசேனாதிபதி - 94488 45681.
அனூர் தமிழ்ச் சங்கம்.
தலைவர், அரசப்பன் - 99720 42935.
கொள்ளேகால் தமிழ்ச் சங்கம்.
நல்லசாமி - 98869 18029.
சதாசிவம் - 97319 35325.
கந்தசாமி - 96636 77655.
குண்டல் பேட்டைத் தமிழ்ச் சங்கம்.
வீ.பாலகிருஷ்ணன் - 94801 69132.
கண்ணன்.[வேலுச்சாமி] 94491 77151.
சாமராஜ நகர் தாலுக்கா தமிழ்ச்சங்கம்.
சின்னசாமி - 94485 95956.
ஜெகதீஷ் - 94491 61772.
ஆனந்த் - 90363 94238
தங்கவேல்- 94488 71818
உன்சூர் தமிழ்ச் சங்கம்.
சின்னசாமி - 99450 46727.
வேலு - 96204 84120.
முருகன் - 94487 37069.
மணி- 94499 93229.
ஹெக்கட தேவன கோட்டை (ஹெச்டி கோட்) தமிழ்ச் சங்கம்.
நகுல்சாமி - 94495 32255.
தேவராஜன் - 94490 02205.
பழனிச்சாமி - 97410 63117.
பெரியசாமி - 99863 30781.
நஞ்சன்கூடு தமிழ்ச் சங்கம்.
தலைவர், சீனிவாசன் - 81055 17263.

13/9/16

முதுநிலை உளவியல் படிப்பு: செப்.16-இல் நுழைவுத்தேர்வு



சென்னை: சென்னை அரசு மனநல மருத்துவ நிறுவனத்தில் 2 ஆண்டு முதுநிலை மருத்துவ உளவியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்.16) நடைபெறவுள்ளது.
சென்னை அரசு மனநல மருத்துவ நிறுவனத்தில் 2016-17 கல்வியாண்டுக்கான மருத்துவ உளவியல் பாடப்பிரிவில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil Clinical Psychology)படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இது இரண்டாண்டு படிப்பாகும்.
இந்தப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு வரும் 16-ஆம் தேதி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவ நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வில் பங்கேற்கத் தகுதியானவர்களின் பட்டியல் தமிழக சுகாதாரத் துறையின் 
www.tnhealth.org திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த 4 நாளில் பாஸ்போர்ட் : சென்னை மண்டல அதிகாரி அறிவிப்பு



மத்திய அரசு  அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியதாவது: 

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான்கார்டு ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்துக்  கொடுத்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைத்ததும் போலீஸ் துறையின் சான்றாய்வு செய்யப்படும் என்ற திட்டத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. தட்கல் என்னும்  துரித பாஸ்போர்ட் திட்டத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு போலீசார் விரைவாக சான்றாய்வு பெற வசதியாக மொபைல் ‘போலீஸ்-ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 3 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் அறிமுகம் செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. போலீஸ் ஆப் மூலம்  போலீஸ் சான்றொப்பம் கிடைப்பதற்கான நேரம் வெகுவாக குறையும். இந்த திட்டத்தை சென்னை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு மாதத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய உள்ளோம். தமிழகத்தில் உள்ள 280 இ-சேவா மையங்களில் இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

கிராமங்களில் வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெற இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் ரூ.155 செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 3 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் கேட்டு வி்ண்ணப்பிக்கும் நபர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கான கால அளவு 19 நாளில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் கொடுத்த மறுநாளே அவர்கள் சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு மண்டல அதிகாரி பாலமுருகன் தெரிவித்தார். 

'குரூப் - 4' தேர்வு விண்ணப்பம் விண்ணப்பிக்க நாளை கடைசி



அரசுத் துறையில், 5,451 காலியிடங்களுக்கான, 'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். தமிழக அரசுத் துறையில், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் போன்ற, ஏழு வகையான, 'குரூப் - 4' பதவிகளுக்கு, 5,451 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, செப்., 8 கடைசி நாளாக, அறிவிக்கப்பட்டு இருந்தது. கடைசி இரண்டு நாட்களில், இணையதளத்தில் பிரச்னை ஏற்பட்டதால், விண்ணப்ப பதிவுக்கான காலக்கெடு, செப்., 14 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலக்கெடு, நாளை முடிகிறது. விண்ணப்பதாரர்கள், கடைசி நேரம் வரை காத்திருக்காமல், விரைந்து விண்ணப்பிக்குமாறு, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Related Posts Widget

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்



அக்டோபரில் நடக்கும், பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு, வரும், 15, 16ம் தேதிகளில், தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

'அக்டோபரில் நடக்க உள்ள, பிளஸ் 2 துணைத்தேர்வில் பங்கேற்க, சிறப்பு அனுமதியுள்ள, தத்கல் திட்டத்தில், செப்., 14, 15ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டது. 14ம் தேதி, ஓணம் பண்டிகைக்காக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், செப்., 15, 16ம் தேதிகளில், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்; மாவட்டந்தோறும் உள்ள, அரசு தேர்வுகள் சேவை மையத்திற்கு, நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

கிராம வங்கிகளில் 16615 அதிகாரி பணி: ஐபீபிஎஸ் பொது தேர்வு அறிவிப்பு.



கிராம வங்கிகளில் 16,651 அலுவலக உதவியாளர், அதிகாரி பணிக்கான பொது எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை ஐபீபிஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகள் மற்றும் கிராமிய வங்கிகளுக்கான கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வை ஐபீபிஎஸ் என அழைக்கப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் அமைப்பு. 

தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கிறது. அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த தேர்வை அனுமதிக்கும் வங்கிகளின் பணியிடங்களில் பணி நியமனம் பெறலாம்.

மொத்த காலியிடங்கள்: 16,615

பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Office Assistant (Multipurpose) - 8824
சம்பளம்: மாதம் ரூ.7,200 - 19,300

பணி: Officer Scale- I - 5539
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,700

பணி: Officer Scale- II (General Banking Officer/Specialist Officers) - 521
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றறு இரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,400 - 28,100
பணி: Officer Scale- III - 198

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.14,500 - 25,700

வயதுவரம்பு: 01.09.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: பொது ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: சென்னை, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பிக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600
மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.
விண்ணப்பிப்பிக்க தொடங்கும் தேதி: 14.09.2016

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_for_Recruitment_of_CWE_RRBs_V.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பிஎஃப் கணக்கில் இருப்புத்தொகை அறிய 5 வழிகள்

பிரபலங்கள் அவர்களின் இயற்பெயர்

புதிய கல்விக்கொள்கையின் பாதிப்பு என்ன?

புலவர்கள் பற்றிய சில தகவல்கள்

பெண்ககள் மற்றும் ஆண்களின் ஏழு பருவங்கள்

பெண்களை மதித்த வீர சிவாஜி அந்தப்புரத்தில் செய்த செயல்

பெண்கள் ஏன் குங்கும பொட்டு வைக்க வேண்டும்

மகாவீரர் பற்றிய சில தகவல்கள்

மகாவீரர் பிறப்பு

மனக்குரங்கு

மனதிற்கான மருந்துகள்-மனவளக் கட்டுரை..

மனம் கலங்காதிருக்க

முதல் உதவி பெட்டி

முப்படைகளும் தலைமையகங்கள்

மெல்ல கொல்லும் குடிநீர்

மொபைலுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகளையும், SMS களையும் தடுக்க ஒரு வசதி..