யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/8/16

கட்டாய கல்வி சட்டத்தில் ரூ.1,019 கோடி கூடுதல் செலவு

கட்டாய கல்வி உரிமை சட்ட மாணவர் சேர்க்கையில், மத்திய அரசு வழங்கியதை விட, தமிழக அரசுக்கு, இரண்டு ஆண்டுகளில், 1,019 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும். தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், எல்.கே.ஜி.,யில் மட்டுமே மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்படுகின்றனர். இதனால், தமிழகத்தில் இந்த சட்டத்தில்
சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசிடமிருந்து முழுமையாக பெற முடியவில்லை. இதன்படி, 2014 - 15 மற்றும் 2015 - 16ம் நிதி ஆண்டுகளில், 2,179 கோடி ரூபாய் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இந்த நிதியுடன், தமிழக அரசு, 1,019 கோடி ரூபாய் கூடுதலாக சேர்த்து, இதுவரை இலவச கல்வி சட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கு வழங்கி உள்ளது. எனவே, வருங்காலத்தில், மத்திய அரசு நிதியை முழுமையாக பெறும் வகையில், கட்டாய கல்வி சட்டத்தை செயல்படுத்துமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, தமிழக நிதித்துறை அறிவுறுத்தியுள்ளது.

வேலையில்லா பட்டதாரிகள் , ஆசிரியர்கள்18 லட்சம் பேர்! தமிழக அரசு விழிக்க வேண்டிய நேரமிது

தமிழகத்தில் கலை, அறிவியல் பட்டம் பெற்ற, 14 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்; அதேபோல், நான்கு லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

ஒரு பக்கத்தில், தொழில்களின் எண்ணிக்கை பெருகும் அளவுக்கு, மறு பக்கத்தில், வேலை யில்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருவதால், தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.


வேலைவாய்ப்பு இல்லாதவர்களில், பட்டதாரி களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிக ரித்து வருகிறது. அரசுத் துறை பணிகள், தனி யாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கு வதால், வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. கடந்த, 2015 ஜூன் நிலவரப்படி,வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 83 லட்சத்து, 35 ஆயிரம் பேர் வேலையின்றி காத்திருந்தனர். இந்த ஆண்டு, ஜூன், 30 நிலவரப்படி, 83.33 லட்சம் பேர், அரசு மற்றும் தனியார் வேலைக் காக, பதிவு செய்து காத்திருப்பதாக, வேலை வாய்ப்பு அலுவலக புள்ளி விபரங்கள் தெரிவிக் கின்றன.

இவர்களில், பி.ஏ., போன்ற கலை பட்ட படிப் பில், 4.50 லட்சம்பேர்; அறிவியலில், 6.14 லட்சம்; வணிகவியலில், 3.40 லட்சம் பேர், என, 14 லட்சம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பை எதிர் பார்த்துள்ளனர். பள்ளிகளில், பட்டதாரி ஆசிரி யராக பணிபுரிய, 3.82 லட்சம் பேர் காத்திருக் கின்றனர். மேலும், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், 2.15 லட்சம் பேரும் வேலை தேடுகின்றனர்.

வேலை இல்லாதவர்கள் பட்டியலில், வேளாண்மை பட்டதாரிகள் மிகக்குறைவாக, 641 மட்டுமே உள்ளனர். கல்லுாரி பேராசிரியர் பணியை எதிர்பார்த்து, 2.69 லட்சம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருப்பதாகவும், அந்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங் களும், தமிழகத்தில்அதிகரித்து வரும் நிலையில்,வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதே அளவுக்கு உயர்ந்து வருவது, கல்வி யாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த எண்ணிக்கையை குறைக்க, தமிழக அரசு இப்போதே விழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது:அரசுத் துறைகள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் பதவி உயர்வு, பணி ஓய்வு மற்றும் இறப்பால் ஏற்படும் காலியிடங்களை, உடனடியாக அரசு நிரப்ப வேண்டும். நீண்ட நாட்களாக காலியாக உள்ள இடங்களில், பட்டதாரிகள், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

தனியார் மெட்ரிக் பள்ளிகள், கல்லுாரிகள் போன்றவற்றில், தகுதியானவர்களை பதிவு மூப்பு மற்றும் கல்வித் தகுதியின் படி, பணி நியமனம் செய்ய வேண்டும். தொழில் நிறுவனங்களில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அரசே பணி அமர்த்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 

பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கிலப் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு.

பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் ஆங்கில மொழிப் பயிற்சி வரும் செப்டம்பர் 11-ம் தேதி தொடங்க வுள்ளது. இதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன.பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில மொழி மையம் தேவைக்கேற்ப பயிற்சிகளை வழங்கி வருகிறது. 
பயிற்சியில் சேருபவர்களின் தற் போதைய மொழித் திறனை அறிந்து பயிற்சி அளிக்க ஏதுவாக தகுதி நிலை சோதனை நடத்தி அதற்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும். தொடக்க காலத்தில் விண்ணப் பிப்பவர்களுக்கு தேர்வு செய்த பயிற்சி மற்றும் விரும்பிய நேரம் கிடைக்கும்.பொது ஆங்கிலம், ஆங்கில உரையாடல், வணிக ஆங்கிலம், IELTS தேர்வுக்கான ஆயத்தப் பயிற்சி, ஆசிரியர்களுக்கான பயிற்சிஆகியவற்றில் 16 வய துக்கு மேற்பட்டோர் சேரலாம். அதேபோல குழந்தை களுக்கான பயிற்சியும் தொடங் கப்பட்டுள்ளது. இளம் சாதனையாளர்கள் பயிற்சி 7 முதல் 15 வயது வரை உள்ள சிறார்களுக்கும், பேசுதல் மற்றும் சரியாக எழுதும் பயிற்சி 11 முதல் 15 வயது வரை உள்ள சிறார்களுக்கும் வழங்கப்படும்.

முன்பதிவுக்கு 01204569000/ 01206684353 ஆகிய எண்களிலோ, winya.suzanna@in.britishcouncil.org என்ற இ-மெயில் மூலமே தொடர்பு கொள்ளலாம். Engish என டைப் செய்து 567678 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்யலாம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி, நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு: 2 கட்டமாக நடந்த தேர்வை 10 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப் படுகின்றன. 

தேசிய இளைஞர் விருதுக்கு 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய இளைஞர் விருதுக்கு இளைஞர்கள், தன்னார்வத் தொண்டுநிறுவனங்கள் வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ராஜேந்திரகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் தேசிய இளைஞர் விழாவில், சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக செய்யும் இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகளுக்கு மத்திய அரசு தேசிய இளைஞர் விருது வழங்குகிறது. 25 இளைஞர்களுக்கு ரூ.40 ஆயிரம் ரொக்கம், பதக்கம் வழங்கப்படுகின்றன. சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் ரொக்கம், பட்டயம், பதக்கம் வழங்கப்படும்.1-4-2015 முதல் 31-3-2016 வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இளைஞர் நலப்பணிகளுக்கான விருதுகள் இந்த நிதி ஆண்டில் வழங்கப்பட உள்ளன. தனிநபர் பிரிவுக்கான விருதுக்கு வயது 15 முதல் 29-க்குள் இருக்க வேண்டும். தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறப்படாமல் தொண்டாற்றியிருக்க வேண்டும்.ஏற்கெனவே விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள், இதர அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. தொண்டு நிறுவன பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதுக்கு, தொண்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். எந்தவித லாப நோக்கத்துடனும் தொண்டு ஆற்றியிருக்கக் கூடாது.

குறிப்பிட்ட சாதி, மதம் அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் விண்ணப்பிக்க இயலாது.விருதுக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெற்று பூர்த்திசெய்து வரும் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவால் பரிசீலிக்கப்பட்டு மாநில அளவிலான குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும். அவ்வாறு பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்கள் மாநில குழுவால் பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை: கணினி அறிவியல் பாடம் கொண்டுவரப்படுமா? - 39 ஆயிரம் கணினி பட்டதாரிகள் எதிர்பார்ப்பு.

சமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடம் அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை மீண்டும் கொண்டுவரப்படுமா? என பிஎட் முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் 39 ஆயிரம் கணினி பட்டதாரிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

உதவி பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர் பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன.இதற்கான எழுத்துத்தேர்வு அக்டோபர் 22-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது.
இதற்கான விண்ணப்பப் படிவங் கள் இன்று (புதன்கிழமை) முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் வழங்கப் படுகின்றன. விண்ணப்பப் படிவத் தின் விலை ரூ.100. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை செப்டம்பர் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.பொறியியல் பாட உதவி பேராசிரியர் பணிக்கு எம்இ., எம்டெக் பட்டதாரிகள் விண்ணப் பிக்கலாம். இளங்கலை அல்லது முதுகலைஏதேனும் ஒன்றில் முதல் வகுப்பு பெற்றிருக்க வேண்டும்.

TNPSC:குரூப்-2 மெயின் தேர்வுக்கு ஆன்லைனில் நுழைவுச்சீட்டு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர் (கிரேடு-2), சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர்,வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1,241 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. 
இத்தேர்வை 6 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த மே 21-ம் தேதி அன்று வெளியிடப்பட்டன.இந்தநிலையில், அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வு ஆகஸ்டு 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)நடைபெறவுள்ளது. இதற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைனில் நுழைவுச்சீட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தங்கள் விண்ணப்ப எண் அல்லது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 27 ஆயிரம் முதுகலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக பாடவாரியாக திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் அப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி ஆகஸ்டு 17 (இன்று) முதல் 23-ம் தேதி வரை ஈரோடு, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.இதில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மாவட்டத்துக்கு தலா 3 பேர் வீதமும், வணிகவியல், கணக்குப்பதிவியல் ஆகிய 2 பாடங்களுக்கும் சேர்த்து 3 பேர் என்ற வீதமும் கலந்துகொள்வர். முதன்மை கருத்தாளர் பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பின்னர் மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். இவ்வாறு 27 ஆயிரம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகம்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றை பூர்த்தி செய்து பிடிஓக்களிடம் சமர்ப்பிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் வழக்கம்போல் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் தேர்தல் பணியில் பங்கேற்க வசதியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. அவற்றை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் பெற்று பூர்த்தி செய்து தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.அவற்றை தலைமையாசிரியர் சரிபார்த்து ஆசிரியர் பெயர், வசிக்கும் இடம் உள்ளிட்ட பிற விவரங்களை இணைத்து அந்தந்தபிடிஓ அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மேலும் விவரங்களை முதன்மை கல்வி அலுவலக வெப்சைட்டில் பார்க்கலாம்.

தொடக்கக்கல்வி : 20,21 தேதிகளில் நடைபெறும் இடைநிலை/பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு - கடைபிடிக்க வேண்டியவைகள் - அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள் Posted: 17 Aug 2016 04:23 AM PDT பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)-பதவிஉயர்வு அளிக்க தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தோர் பெயர் பட்டியல்.

புதிய கல்விக் கொள்கை: ஓர் அறிமுகம் - தி இந்து

- http://m.tamil.thehindu.com/opinion/columns/புதிய-கல்விக்-கொள்கை-ஓர்-அறிமுகம்/article8990798.ece
[5:01 PM, 8/15/2016] Trs.Tiruchy: இதன் முக்கிய அம்சங்கள்
1. பொருத்தமில்லாத பாடப் பொருள் மற்றும் ஊக்கமற்ற கற்பித்தல் முறை, நம் கல்வியில் முன்பிருந்த தரம் போய்விட்டது என்று சொல்லும் புதிய கல்விக் கொள்கை, இதைச் சரிசெய்ய இரண்டு வழிகளை முன்வைக்கிறது. முதலாவதாக, பழையபடி மத்தியப் பட்டியலுக்குக் கல்வி வரவேண்டும் என்கிறது. ஆனால், இது மாநிலங்களின் உரிமையைப் பறித்துவிடும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன.
அடுத்து, நான்காம் வகுப்பின் முடிவிலிருந்தே தேர்ச்சி / தோல்வி என மாணவர்களைச் சலித்தெடுக்க வேண்டும் என்கிறது. இது பழையபடி பள்ளியிலிருந்து பல மாணவர்கள் வெளியேறுவதற்குத்தான் வழிவகுக்கும்.
2. திறன்களை, குறிப்பாக வேலைவாய்ப்புத் திறன்களை வளர்க்க நமது கல்வி தவறிவிட்டது; வேலைக்குத் தகுதியற்ற படித்தவர்களை உருவாக்கி வீணடித்துவிட்டது என்று சொல்லும் புதிய கொள்கை, இதைச் சரிசெய்ய திறன் மேம்பாட்டு ஆணையம் அமைத்து, பள்ளிக்கூடங்களில் தொழில்துறை தேவைகளை மனதில் வைத்து, மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க வேண்டும் என்கிறது. மேலும், கல்வி முழுமை பெறும் முன்னமே வேலைத் தகுதிச் சான்றிதழ் மூலம் (மாணவர்கள் விரும்பினால்) ஒன்பதாம் வகுப்போடு தொழில் துறையில் இணையலாம் என்கிறது. இது குலக் கல்விமுறையை நினைவுபடுத்துவதாகக் கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
3. இந்திய அளவிலான கல்வியின் தரத்தை மேம்படுத்த, கல்வி அமைப்புகள், பள்ளிகளுக்கான தரப்பட்டியல் தயாரிக்க கல்லூரி அளவிலான தரமேம்பாட்டுக் குழு போல ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். தேசிய அளவிலான பள்ளிக் கல்வி தரச்சான்று ஆணையம் என அது அழைக்கப்படும் என்கிறது இந்த அறிக்கை. இது அரசுப் பள்ளிகளை முற்றிலும் முடங்கச் செய்துவிடும் எனும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
4. ஆசிரியர்களின் தரம் - தலைமை ஆசிரியரின் தகுதி இவற்றில் எந்த சமரசத்தையும் மோடி அரசு ஏற்றுக்கொள்ளாது. இதற்காகவே திறன் சோதனைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள் என்று சொல்லும் இந்த அறிக்கை, குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தரச்சான்றுத் தேர்வுகளை ஆசிரியர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்கிறது. ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சிப் பட்டப் படிப்புகளுக்கு சேர ஆள் இல்லை என்பது வேறு விஷயம்.
5. மதிய உணவுத் திட்டத்திலிருந்து ஆசிரியர்களை விடுவிக்கிறது இந்தப் புதிய கொள்கை. அதேசமயம், பள்ளிகளுக்கு அரசு நேரடியாக உணவு தராது. அதற்குப் பதிலாக அவற்றைத் தர்ம அமைப்புகளிடம் (தனியார்) ஒப்படைத்துவிடும். அரசின் நலத்திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி இது.
6. ‘இந்திய கலாச்சாரக் கூறுகளை இன்றைய கல்வி முற்றிலும் கைவிட்டு விட்டது. இதைச் சரிசெய்ய வகுப்பில் மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதம் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சம்ஸ்கிருத ஆசிரியர் நியமிக்கப்படுவார்’ என்று இக்கொள்கை முன்வைக்கும் திட்டம் அப்பட்டமான காவி மயம் என்று விமர்சிக்கப்படுகிறது.

நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...!

நல்ல பயனுள்ள செய்திகளின் தொகுப்பு.

நாம் வாங்கும் நிலத்தை பத்திரப் பதிவுத் துறையின் மூலம் பதிவு செய்யும்போதே

நீங்கள் எல்லாம் எப்ப சிந்தித்து திருந்துவீங்க

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டு பிடித்துவிட முடியும் தெரியுமா

நீங்கள் வாங்குவது ஆர்கானிக் தானா

நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பனிரெண்டா?

பள்ளிக்கூடம் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியுமா

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்

பிரச்சினைகள் தீர

பிரண்டைதுளசி தூதுவேளை நாட்டு வைத்தியம்

புதியதாக மொபைல் போன்

பூண்டுல இவ்ளோ இருக்கா

பெண்களின் பருவ மாற்றங்களும்

பொன்மொழிகள்

17/8/16

மாணவர் சேர்க்கையில் தில்லுமுல்லுவை தவிர்க்க குறைதீர் நடுவர்

கல்லூரி மற்றும் பல்கலைகளில் மாணவர் சேர்க்கையில், தில்லுமுல்லு நடப்பதை தவிர்க்க, குறைதீர் நடுவரை நியமிக்க வேண்டும்’ என, பல்கலைகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.


கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் மாணவர் சேர்க்கைக்கு பல விதிமுறைகள் உள்ளன. இளநிலைக்கு, பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வு, ’கட் ஆப்’ அடிப்படையிலும், முதுநிலை பட்டப்படிப்புக்கு, இளநிலை மதிப்பெண் அடிப்படையிலும், மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையும் பின்பற்றப்பட வேண்டும்.

பெரும்பாலான கல்லூரி மற்றும் பல்கலைகளில், இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. மாறாக, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சிபாரிசுகள், பேராசிரியர்கள், சங்கங்களின் சிபாரிசு கடிதங்களுக்கு முக்கியத்துவம் அளித்தும், ’செனட், சிண்டிகேட்’ உறுப்பினர்களுக்கான மறைமுக இட ஒதுக்கீட்டிலும், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இந்த முறைகேடுகள் குறித்து, மத்திய அரசுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, அனைத்து பல்கலைகளிலும், ’ஓம்புட்ஸ் மேன்’ எனப்படும், குறை தீர் நடுவரை நியமித்து, மாணவர்களின் குறைகளை தீர்க்கவும், சேர்க்கை தில்லுமுல்லுவுக்கு முடிவு கட்டவும், யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.

சுவாரசியம் நிறைந்த ‘ஸ்பேஸ் சயின்ஸ்’!

தொழில்நுட்ப வளர்ச்சியில், தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் துறை ‘ஸ்பேஸ் சயின்ஸ்’!

விண்ணில் தோன்றும் நட்சத்திரங்களை கணக்கிடுவது என்பது சாத்தியமற்றது. ஆனால், விண்வெளியில் உள்ள கோல்கள், அதன் வடிவங்கள், சுற்று வட்ட பாதைகள் உள்ளிட்ட எண்ணிலடங்காத அறிவியல் தகவல்களை கண்டறிந்து கணக்கிடுவது சாத்தியமான ஒன்று!


புதிய சட்டக்கல்லூரி கட்டடங்களுக்கு நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

புதிய சட்டக் கல்லூரிகளுக்கான கட்டடங்களுக்கு, நிதி ஒதுக்குவதற்கான அரசாணையை பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

NEET (UG) - 2016 RESULTS | மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் (நீட்) வெளியிடப்பட்டன.

மருத்துவப்படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட தேசியதகுதிகாண் பொது நுழைவுத் தேர்வுமுடிவுகள் (நீட்) வெளியிடப்பட்டன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களைதேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வுமூலம்
நிரப்ப, மே 1-இல்முதல்கட்டமாகவும், ஜூலை 24-இல் தேர்வை2-ஆம் கட்டமாகவும் தேர்வு நடத்த வேண்டும்என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

      

அதன்படி, மே 1-இல் மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்திய முதல்கட்டத்தேர்வை நாடு முழுவதும் 6 லட்சம்பேர் எழுதினர்.  இந்தநிலையில், தேர்வுக்கு தாற்காலிக தடை விதித்து மத்தியஅரசு அவசரச் சட்டம் பிறப்பித்ததால்தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு விலக்குஅளிக்கப்பட்டது. ஆனால், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டுஇடங்கள் அனைத்தையும் "நீட்' தேர்வின் மூலம்மட்டுமே நிரப்ப வேண்டும் என்றுஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், 2-ஆம்கட்ட "நீட்' தேர்வை நாடுமுழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் சுமார் 13 ஆயிரம் பேர் இந்தத்தேர்வை எழுதினர். இத்தேர்வுக்கான முடிவுகள்http://cbseresults.nic.in/neet/neet_2016.htm என்றஇணையதளத்தில் இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

INSPIRE Award Nominations for the year 2016-17 are now open- Last date -30.09.2016

ரத்தாகிறது சமூக அறிவியல் பணியிடம் : வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு

உபரி ஆசிரியர்கள் பெயரில் சமூகஅறிவியல் பணியிடங்களைரத்து செய்வதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.
கட்டாயகல்வி உரிமைச் சட்டப்படி ஒவ்வொருஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களைநிர்ணயிக்க வேண்டும். அதன்படி உபரி ஆசிரியர்களைகணக்கிட்டு பணிநிரவல் செய்ய
வேண்டும். இந்தஆண்டு பெரும்பாலான அரசு உயர்நிலை,  மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள்உபரியாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன. இதில் சமூகஅறிவியல்ஆசிரியர் பணியிடங்களை கல்வித்துறை உபரியாக கணக்கிட்டுள்ளது. அவர்கள்ஆக., 27 முதல் 29 வரை நடக்கும் கவுன்சிலிங்மூலம் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இதற்கு வரலாறு ஆசிரியர்கள்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு.

தொடக்கக்கல்வி ஆசிரியர்களில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல்பெற்றவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வில் மாற்றம்கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு,

பி.எட். படிப்புக்கான கட்-ஆப் பட்டியல் ஆகஸ்டு 17-ம் தேதி (புதன்கிழமை) வெளியிடப் படுகிறது.

பி.எட். படிப்புக்கான கட்-ஆப் பட்டியல் ஆகஸ்டு17-ம் தேதி (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு 22-ம் தேதி தொடங்கி30 வரை சென்னையில் நடைபெற உள்ளது.அரசுமற்றும் அரசு உதவி பெறும்கல்வியியல் கல்லூரிக ளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் 1,777
பி.எட். இடங்கள்கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

வற்றிப் போகும் வாத்தியார்

10 கோடி பெண் தொழிலாளர்களுக்கு பேறு காலத்தில் உதவும் புதிய திட்டம்.

பீஹார் மாநிலத்தில் அடுத்தடுத்து அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வரும், முதல்வர் நிதிஷ் குமார்,உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'கிரெடிட் கார்டு' வழங்கும் திட்டத்தை நேற்று அறிவித்தார்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடக்கிறது. 
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஐந்து ஆண்டுகளுக்கான தொலைநோக்கு ஆவணத்தை, நிதிஷ் குமார் வெளியிட்டார்.'பூரண மது விலக்கு, அரசு வேலையில், 35 சதவீதம் மகளிருக்குஒதுக்கீடு' என, பல வாக்குறுதிகளை அவர், அப்போது தெரிவித்தார். அதன்படி, ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, அதிரடி திட்டங்களை அவர் அறிவித்து வருகிறார். முதல் கட்டமாக, ஏப்ரலில், பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டது; எனினும், அரசியல்வாதிகள் உட்பட பலர், மது குடித்து கையும் களவுமாக பிடிபட்டனர்.

எம்.இ., - எம்.டெக்., 15 ஆயிரம் இடங்கள் காலி

அண்ணா பல்கலையின், எம்.இ., - எம்.டெக்., கவுன்சிலிங் முடிந்து விட்ட நிலையில், 15 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அண்ணாபல்கலை இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., முதுநிலை இன்ஜினியரிங் படிப்புக்கு, தமிழ்நாடு பொது நுழைவு தேர்வான, 'டான்செட்' நடத்தப்படு கிறது. 
இந்த ஆண்டு, இத்தேர்வுக்கு, 39 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்; இவர்களில், 17 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுக்கு பின், அண்ணா பல்கலையில், தமிழ்நாடு பொது மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்தது. இதற்கு விண்ணப்பித்த, 7,000 பேரில், 6,676 பேர் மட்டும் தகுதி பெற்று, கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். இதில், 4,764 பேர்மட்டுமே இடங்களை தேர்வு செய்தனர். 1,687 பேர் கவுன்சிலிங்குக்கு வரவில்லை. மற்றவர்கள் இடம் கிடைத்தும் ஒதுக்கீடு பெறாததால், 15 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.

வேளாண் 'டிப்ளமோ' படிப்பு: இன்று முதல் விண்ணப்பம்

கோவை வேளாண் பல்கலையில், 'டிப்ளமோ' படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், இன்றுதுவங்குகிறது. செப்., 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கோவை வேளாண் பல்கலையின் இணைப்பில் உள்ள,மூன்று அரசு கல்லுாரிகள் மற்றும் ஐந்து இணைப்பு கல்லுாரிகளில், வேளாண் மற்றும் தோட்டக்கலையில், இரண்டு டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல், கல்லுாரிகளில்வினியோ- நமது நிருபர் - கிக்கப்படுகின்றன.பிளஸ் 2 தேர்வில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றோர், இந்த படிப்பில் சேரலாம்.

பூர்த்தி செய்தவிண்ணப்பங்களை, செப்., 2ம்தேதிக்குள் அனுப்ப வேண்டும். செப்., 14 மற்றும் 15ம் தேதிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடக்கும். செப்., 19 முதல் வகுப்புகள் துவங்கும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிவித்துள்ளது.

TNPSC:குரூப்-4 தேர்வில் பத்தாம் வகுப்பு தகுதி:வயது சலுகை கோரிக்கை.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில் பத்தாம்வகுப்பு வரை மட்டும் படித்தவர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குரூப்-4 பிரிவில் இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களை நிரப்ப நவ.,6ல் எழுத்துதேர்வு நடைபெற உள்ளது. இதில் பத்தாம்வகுப்பு வரை மட்டும் தேர்ச்சிபெற்றவர்கள் பொதுப்பிரிவினர் 30ம், எஸ்.சி., எஸ்.டி., 35ம், பி.சி.,எம்.பி.சி., பி.சி.எம்., 32 வயது வரை விண்ணப்பிக்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனால் பத்தாம்வகுப்புவரை படித்து தேர்வு எழுத ஆர்வம் உள்ள 35வயதிற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தேர்வு எழுதும் வகையில் வயது வரம்பில் குறைந்தபட்சம் 40வயது வரையாவது உயர்த்தி ஆணை வெளியிடவேண்டும். அதற்கு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிப்பு.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது. 
இந்த ஆண்டு, 1,777 இடங்களில் சேர, 4,002 பேர் விண்ணப்பம் பெற்றனர்;அவர்களில், 3,736 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில், 154 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள். மாணவர் சேர்க்கை செயலர் தில்லைநாயகி வெளியிட்ட அறிவிப்பு: பி.எட்., கவுன்சிலிங், வரும், 22 முதல், 30 வரை நடக்க உள்ளது. முதல் நாளில், மாற்று திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கவுன்சிலிங் நடக்கும். விண்ணப்பதாரர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் வரும், 17ம் தேதி, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி இணையதளத்தில், (www.ladywillingdoniase.com) வெளியாகும்.

விண்ணப்பதாரர்களுக்கு, தபால் மூலமும், மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., மூலமும், அழைப்பு தகவல் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

NEET (UG) - 2016 RESULTS | மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட தேசிய தகுதிகாண்பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் (நீட்) வெளியீடு.

மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் (நீட்) வெளியிடப்பட்டன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களை தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு மூலம் நிரப்ப, மே 1-இல் முதல்கட்டமாகவும், ஜூலை 24-இல் தேர்வை 2-ஆம்கட்டமாகவும் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, மே 1-இல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்திய முதல்கட்டத் தேர்வை நாடு முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர்.  இந்த நிலையில், தேர்வுக்கு தாற்காலிக தடை விதித்து மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்ததால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தையும் "நீட்' தேர்வின் மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம்உத்தரவிட்டது.

இந்த நிலையில், 2-ஆம் கட்ட "நீட்' தேர்வை நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் சுமார் 13 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். இத்தேர்வுக்கானமுடிவுகள் http://cbseresults.nic.in/neet/neet_2016.htm என்ற இணையதளத்தில் இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

புதிய தலைமுறை வார இதழ்-பெண்களுக்கு உதவும் எண்கள்

பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்

வளர்த்து விட்ட விடுதலை

சர்வதேச தினங்கள்

சர்வதேச தினங்கள்
================
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO) உலகில் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் சில நாட்களை சிறப்பு தினங்களாக அறிவித்துள்ளது. அத்தகைய சிறப்புவாய்ந்த தினங்களை பலமூலங்களில் இருந்து சேகரித்து இங்கு மாதவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
ஜனவரி
• 26 - உலக சுங்கத்துறை தினம்
• 30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரி
• 02 - உலக சதுப்பு நில தினம்
• 21 - உலக தாய்மொழிகள் தினம்

மார்ச்
• 06 - உலக புத்தகங்கள் தினம்
• 08 - உலக பெண்கள்கள் தினம்
• 13 - உலக சிறுநீரகநோய்
விழிப்புணர்வு தினம்
• 15 - உலக நுகர்வோர் தினம்
• 21 - உலக வன தினம்
• 21- உலக கவிதைகள் தினம்
• 22 - உலக தண்ணீர் தினம்
• 23 - உலக தட்பவெட்பநிலை தினம்
• 24 - உலக காசநோய் தினம்
ஏப்ரல்
• 02 - உலக சிறுவர்நூல் தினம்
• 07 - உலக சுகாதார தினம்
• 15 - உலக நூலகர்கள் தினம்
• 18 - உலக நினைவுச்சின்னங்கள் தினம்
• 22 - உலக புவி தினம்
• 23 - உலக புத்தகம் மற்றும்
பதிப்புரிமை தினம்
மே
• 01 - உலகத் தொழிலாளர் தினம்
• 03 - உலக சூரிய தினம்
• 03 - உலக ஊடக விடுதலை தினம்
• 04 - உலக தீயணைக்கும் படையினர்
தினம்
• 08 - உலக செஞ்சிலுவை நாள்
• 12 - உலக செவிலியர் நாள்
• 15 - உலக குடும்ப தினம்
• 18 - உலக அருங்காட்சிய தினம்
• 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
ஜீன்
• 05 - உலக சுற்றுச்சூழல் தினம்
• 08 - உலகக் கடல் தினம்
• 12 - உலக குழந்தை தொழிலார்
ஒழிப்பு தினம்
• 14 - உலக இரத்த தான தினம்
• 14 - உலக வலைப்பதிவர்கள் தினம்
• 20 - உலக அகதிகள் தினம்
• 27 - உலக நீரிழிவுநோய்
எதிர்ப்பு தினம்
ஜீலை
• 11 - உலக மக்கள்தொகை தினம்
• 20 - சதுங்க தினம்
ஆகஸ்ட்
• 01- உலக சாரணர் தினம்
• 12 - உலக இளைஞர் தினம்
செப்டம்பர்
• 08 - உலக எழுத்தறிவு தினம்
• 15 - உலக மக்களாட்சி தினம்
• 21 - உலக அமைதி நாள்
• 27 - உலக சுற்றுலா தினம்
அக்டோபர்
• 01 - சர்வதேச முதியோர் தினம்
• 02 - உலக அகிம்சை தினம்
• 04 - உலக வனவிலங்குகள் தினம்
• 05 - உலக ஆசிரியர்கள் தினம்
• 09 - உலக தபால்கள் தினம்
• 10 - உலக மனநல தினம்
• 16 - உலக உணவு தினம்
• 17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
• 24 - ஐ.நா தினம்
நவம்பர்
• 17 - உலக மாணவர்கள் தினம்
• 20 - உலக குழந்தைகள் தினம்
• 21 - உலக தொலைக்காட்சி தினம்
டிசம்பர்
• 01 - உலக எயிட்ஸ் தினம்
• 02 - உலக அடிமை ஒழிப்பு தினம்
• 03 - உலக ஊனமுற்றோர் தினம்
• 09 - உலக ஊழல் ஒழிப்பு தினம்
• 10 - உலக மனித உரிமைகள் தினம்.
திரு. சீனிவாசன், ப.ஆ., கிருட்டிணகிரி மாவட்டம்

I.A.Sஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகள்---பொதுஅறிவு

கண் தானம் செய்வது எப்படி?---தகவல் துளிகள்

நவம்பர் 14. குழந்தைகள் தினம்!

இந்தியா விடுதலைப்பெற்ற பின் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவ.ம்பர் 14 ம் தேதி நம் நாட்டில் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதீத அன்பும், பாசமும் கொண்டிருந்தார். அதே போல் குழந்தைகளும் நேருவின் மீது பற்று வைத்திருந்தனர். குழந்தைகளால் அவர் நேரு மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார்.
பண்டிட் ஜவஹர்லால் நேரு 1889ம் ஆண்டு உ.பி.,யிலுள்ள அலகாபாத்தில் பிறந்தார் பிறகு இங்கிலாந்தில் உயர் கல்வியை முடித்துவிட்டு சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் துணை நின்றார் இந்தியா சுதந்திரம் பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். அவர் குழந்தைகள் மீதும், ரோஜா மலர்கள் மீதும் நேரு அளவு கடந்த பற்றுதலை கொண்டிருந்தார். நேருவின் ஆட்சியில் இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்கள் இவரது ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டன. மேலும் தொழிற்நுட்ப கல்லூரிகளும் எய்ம்ஸ் போன்ற சர்வதேச தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் துவக்கப் பட்டன. தனது அலுவலக பணிகளுக்கு மத்தியிலும் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் முக்கியமான அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே என்பதை யாராலும் மறுக்க முடியாது சிறு வயதில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களை பொறுத்தே அவர்கள் பெரியவர்களானதும் அதன் விளைவுகள் தெரியவரும். எனவே சிறு வயது முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறையவே உண்டு. முக்கியமாக பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை மற்றும் அன்பு செலுத்துதல், சகிப்புத்தனமை மற்றும் பொறுமை போன்ற பல நல்ல பழக்கங்களை தங்களது குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தின் போது அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் ஆனால் அச்சமயத்தில் ஆதரவற்ற அனாதை குழந்தைகளை எவரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலை மாறி இந்த குழந்தைகள் அனைவரையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்கு இத்தினத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி இனிப்புகள் வழங்கி அவர்களை மகிழ்விக்க வேண்டும். இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்து கொண்டாடப்படும் கொண்டாட்டம்தான் நேரு நினைத்த உண்மையான குழந்தைகள் தின கொண்டாட்டமாக இருக்க முடியும்.

கட்டுரைகள் தாய்மொழி பற்று நான் விரும்பும் பாரதியார்

சகோதரர்களே இந்த செய்தியை அதிகம் அதிகம் ஷேர் செய்யுங்க சமையல் எரிவாயு

சுதந்திரதின விழா கவிதைகள்

16/8/16

நம் கல்வி... நம் உரிமை!

ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான கல்வியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள் வெளியாகவிருக்கின்றன. இன்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கி நவீன இந்தியாவில் முன்வைக்கப்பட்ட கல்விக் கொள்கைகள், அவற்றின் நோக்கங்கள், தாக்கங்களின் வரலாற்றுப் பின்னணியில் புதிய கல்விக் கொள்கையின் சுருக்கமான அறிமுகம்.

புதிய கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கை எனும் பெயரில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் 43 பக்கக் கொள்கைப் பிரகடனம், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது. பலரும் சுட்டிக்காட்டும் சம்ஸ்கிருதத் திணிப்பு என்பதையும் தாண்டி, பல்வேறு அபாயங்களை மோடி அரசின் கல்விக் கொள்கை கொண்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை அலசும் முன்னர், இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட முக்கியமான கல்விக் குழுக்களைப் பார்த்துவிடலாம்.

மெக்காலேவுக்கு முன்னும் பின்னும்

1813-ல் முதன்முறையாக இந்திய மக்களுக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பைத் தனது பணியாக ஏற்பதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. கல்வி சாசனம் எனும் ஆவணத்தையும் வெளியிட்டது. அதற்காக அன்று உடனடியாக ரூ. 1 லட்சம் ஒதுக்கப்பட்டதும், அது கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டதும் வரலாறு. ஆங்கிலக் கல்வியே தனது கல்வி என இந்த ஆவணம் பகிரங்கமாக அறிவித்தது. கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்க்க, இந்திய மக்களுக்குச் சாதி, மதம் உள்ளிட்ட தகுதி தேவையில்லை. பிரிட்டிஷ் கல்வி நிறுவனக் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும் என அதன் இரண்டாம் ஷரத்து குறிப்பிடுகிறது.

1834-ல் மெக்காலே இந்தியா வந்தார். அவருடன் ஆலோசனை நடத்திய கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு, இந்தியக் கல்விக்கு - பொதுக் கற்பித்தல் முறை எனப் பெயரிட்டு, அவரையே அதன் தலைவராக்கினார். எண்ணத்திலும் அறிவாற்றலிலும் கலாச்சாரத்திலும் ஆங்கிலேயராகவும் ஆனால், ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் இருக்கும் ஒருவரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என அறிவித்த மெக்காலே, 267 பக்கம் கொண்ட கல்விக் கருத்துருவை அரசுக்குச் சமர்ப்பித்தார்.

ஆங்கிலக் கல்வியை முழுதும் வேலையாள் தகுதி பெறும் கல்வியாக மாற்றினார். பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவதைக்கூடத் தடை செய்தார். “வியாபார, நிர்வாக மொழியாய் ஆங்கிலம்; அதற்காக பிரிட்டிஷ் அரசுக்குத் தேவைப்படும் லட்சக்கணக்கான - கணக்காளர், எழுத்தர் வேலைக்கான கல்வி ஆகியவை போதுமானவை. பெரிய மேதாவிகள், தத்துவ அறிஞர்கள் எல்லாம் நமக்கு எதற்கு?” என அவர் பகிரங்கமாக அறிவித்தார். 1835-ல் வில்லியம் பெண்டிங் பிரபு, மெக்காலே குறிப்புகளை ஏற்று முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டார். பிற்காலத்தில், ‘வேலை… கும்பேனி அரசு வேலை, தனியார் ஆலை வேலை எனும் ஈர்ப்பே கல்வியின் அடிநாதமாக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி தரும் சான்றிதழ், வேலை பெறும் ஒரு அடையாளச் சீட்டாகப் பயனாகிறது’ என்று காந்தி விமர்சித்தது குறிப்பிடத் தக்கது.
[11:24 AM, 8/15/2016] +91 99437 90308: 1853-ல் இங்கிலாந்தின் கல்விக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் தலைவராக இருந்த சார்லஸ் வுட் தலைமையில் ஒரு கல்விக் குழு இந்தியா வந்தது. 1854-ல் கர்சன் பிரபுவின் காலத்தில் இதன் அறிக்கை முன்வைக்கப்பட்டது. நமது கல்வி முறையில் இருக்கும் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு என்பதெல்லாம் இக்குழுவின் கைங்கர்யம்தான். பள்ளிக்கான சீருடை, ஒரு பாடமாகப் பிராந்திய மொழி போன்றவற்றை 1882-ல் வில்லியம் ஹண்டர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய கல்வி கமிஷன் கொண்டுவந்தது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு

நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே, பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை ஆராய, அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்விக் குழுவை நியமித்தார் பிரதமர் நேரு. பிரதான பிரச்சினை பல்கலைக்கழகக் கல்வியல்ல; அனைவருக்குமான ஆரம்பக் கல்விதான் என அம்பேத்கர், மேகநாத் சாஹா, அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் அப்போதே கருத்துத் தெரிவித்தனர். ஆனால், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவைத் தோற்றுவித்தது உட்பட, உயர் கல்வியை நிறுவனமயமாக்கி, தனியார் கல்லூரிகளை உள்ளூர்க் குழுமங்கள் உருவாக்கி, மானியக் குழுவிடம் பண உதவிபெறலாம் என்றெல்லாம் முன்மொழிந்தது டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்விக் குழு.

டாக்டர் லட்சுமணசாமி குழு

1952-ல் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் லட்சுமணசாமி முதலியார் தலைமையில் ஒரு கல்விக் குழு அமைக்கப்பட்டது. இதில் தந்தை பெரியார், ஜி.டி.நாயுடு உட்பட பலர் நேரில் ஆஜராகி, கல்வி குறித்து விவாதித்தனர். பெண் கல்வி மேம்பட பெண்களுக்கான கல்வி நிலையங்களைத் தொடங்குதல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளைப் பயிற்று மொழியாக்குதல் என இரண்டு முக்கிய மாற்றங்களை இக்குழு முன் மொழிந்தது.

கோத்தாரி கல்விக் குழு

டாக்டர் டி.எஸ்.கோத்தாரி தலைமையில் நேரு உருவாக்கிய இந்தக் குழுவின் அமைப்பே வித்தியாசமாக இருந்தது. பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், கல்வியாளர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். 1964 அக்டோபர் 2-ல் தனது பணியைத் தொடங்கிய இக்குழு, 9,000 பேரிடம் கருத்தறிந்து, 2,400 பக்க அறிக்கையை 1966-ல் வழங்கியது. இந்தியக் கல்விக் குழுக்களிலேயே நமது மண்ணின் ஆதாரக் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகச் சரியாக முன்வைத்தது கோத்தாரி கல்விக் குழுதான்.

அரசு தனது ஒட்டுமொத்த உற்பத்தியில் 6%ஐக் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என அக்குழு பரிந்துரை செய்தது (தற்போது மோடி அரசு கல்விக்கு ஒதுக்கியிருப்பது 3.47% மட்டுமே). பொதுப் பள்ளிகளை அக்குழுதான் அறிமுகம் செய்தது. ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளி, 2 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி, 3 கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப் பள்ளி என கல்விச் சாலைகளைக் கட்டமைத்தது. தறிப் பயிற்சி, தோட்டக் கலை, குடிமைப் பயிற்சி ஆகியவற்றை அறிமுகம் செய்தது. விளையாட்டு, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இக்குழுவின் சாதனைகள். இக்கல்விக் குழுவின் பரிந்துரைகளை அரசுகள் முழுமையாக அமல்படுத்தவில்லை.

தில்லுமுல்லுக்கு இடமின்றி ஆசிரியர் கவுன்சிலிங்:போராட்டம் இல்லாததால் அதிகாரிகள்நிம்மதி:

சிபாரிசுக்கு இடமின்றி, காலியிடங்களை மறைக்காமல் ஆசிரியர் கவுன்சிலிங் நடந்து வருகிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம் இல்லாததால், அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், ஆக., 3ல் துவங்கி நடந்து வருகிறது.
தொடக்கக் கல்வித்துறைக்கு தனியாகவும், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பள்ளிக் கல்வித்துறைக்கு தனியாகவும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தில்லுமுல்லு, சிபாரிசு கடிதமின்றி கவுன்சிலிங் நடத்துவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.'அமைச்சர் அலுவலகம் துவங்கி, கீழ் நிலையில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் என, எவ்வித சிபாரிசுக்கும் இடமில்லை; சங்கங்களோ, அதிகாரிகளோ தலையிட்டு, காலியிடங்களை மறைத்து வைத்து, வேண்டியவர்களுக்கு ஒதுக்கக் கூடாது. புகார் வந்தால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித்துறை உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கவுன்சிலிங் நடைமுறையில் குழப்பங்கள் இல்லாததால், கடந்த ஆண்டை போல, கல்வித்துறை மாவட்ட அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம், முற்றுகை, தர்ணா போன்ற போராட்டங்கள் இல்லாததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங்கில், காலி இடங்கள் முழுமையாக காட்டப்பட்டுள்ளன. இதேபோல், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் இடங்களையும் வெளிப்படையாக நிரப்ப வேண்டும்.சாமி.சத்தியமூர்த்தி, மாநில தலைவர், தமிழ்நாடுஉயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்.

10. பி.எப்., பணத்தை அடகு வைத்து வீடு வாங்கும் திட்டம் விரைவில்...

தொழிலாளர்கள், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதியை அடகு வைத்து, குறைந்த விலையில் வீடுகள் வாங்கும் திட்டத்தை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம்அறிமுகம் செய்ய உள்ளது.
இத் திட்டத் தால், நான்கு கோடி, பி.எப்., சந்தாதாரர்கள் பயன்பெறுவர்.நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின், சொந்த வீடு கனவை நனவாக்கும் திட்டம் குறித்து, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பண்டாரு தத்தாத்ரேயா, சமீபத்தில் லோக்சபாவில் அறிவித்தார்.அப்போது, 'பி.எப்., சந்தாதாரர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்த விலை வீடு பெற்று தருவதற்கானசாத்தியக்கூறுகள்குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது' என்றார்; தற்போது, அந்த திட்டம் அமலாகும் சூழல் உருவாகி உள்ளது.முன்பணம்:

இதுகுறித்து, மத்திய தொழிலாளர் துறை செயலர் சங்கர் அகர்வால், நேற்று கூறியதாவது:பி.எப்., திட்டத்தில் சேர்ந்துள்ள தொழிலாளர் களுக்கு, வீட்டு வசதித் திட்டத்தை உருவாக்கி வருகிறோம். இத்திட்டப்படி, தொழிலாளர்கள் குறைந்த விலையில் வீடு வாங்க, பி.எப்., கணக்கிலிருந்து முன்பணம் பெறலாம்.மேலும், வருங்காலத்தில், தங்கள் பி.எப்., கணக் கில் சேரப்போகும் தொகையை, வங்கிகளுக்கு செலுத்தப்போகும் மாதத் தவணை களாக அடகு வைத்து,குறைந்த விலை வீடுகளை வாங்கலாம். இதன்படி, பி.எப்., சந்தாதாரர், வங்கி மற்றும் இ.பி.எப்.ஓ., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் ஆகிய மூவர் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
தலையிடாது:
சந்தாதாரர் கணக்கில், வருங்காலத்தில் மாதந் தோறும் சேரும் தொகை, வீடு வாங்குவதற்கு, வங்கிக் கடனாக அளிக்கும் பணத்துக்கு, மாதத்தவணையாகச்செலுத்தப்படும். பி.எப்.,சந்தாதாரர் வாங்கும் வீடு, கடன் செலுத்தி முடியும் வரை, வங்கியிடம் அடமானமாக இருக்கும்.இந்த திட்டம், அடுத்த மாதம் நடக்கும், இ.பி.எப்.ஓ.,வின் சி.பி.டி., எனப்படும், மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் முன்வைக்கப்படும்; இதில், ஒப்புதல் பெறப்பட்ட பின், நடைமுறைக்கு வரும். தொழிலாளர்கள், தாங்கள் விரும்பும் குறைந்த விலை வீடுகளை, அவர்களே வாங்கலாம்; இதில், இ.பி.எப்.ஓ., தலையிடாது. இவ்வாறு அவர் கூறினார்.
யாருக்காக இது?
தங்கள் சம்பளத்தில், வாழ் நாள் முழுவதும் வீடு வாங்க முடியாத, குறைந்த வருவாய் உள்ள தொழிலாளர்களுக்கென இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.தொழிலாளர்களின் வருங்கால, பி.எப்., பணத்தில், எந்த அளவுக்கு கடனாக பெறலாம் என்பது குறித்தும், குறைந்த விலை வீடு என்றால் என்ன என்பது குறித்தும், இன்னும் வரையறை செய்யப்படவில்லை. இது பற்றிய விபரங்கள், சி.பி.டி., எனப்படும், மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் இறுதி செய்யப்படும்.

THANEE DISTRICT PG ASSISTANT VACANT LIST 2016:

தேனி மாவட்ட P.G.Vacancies list.
தேனி மாவட்ட P.G.Vacancies list.பொருளியல்
அரசு, மே. நி லைப்பள்ளி  ரெங்கசமுத்திரம்.
உயிரியல்
அரசு மேனிலைப்பள்ளி, தாமரைக்குளம்.
பண்ணைப்புரம்.
 வணிகவியல்
 காமயகவுண்டன் பட்டி.
வேதியியல்
வடுகபட்டி,
இயற்பியல்
பூதிப்புரம்
அல்லிநகரம்
 பெரியகுளம் boys,
 விலங்கியல்
பெரியகுளம் ஆண்கள்.

உத்தமபாளையம்.
சில்லமரத்துப்பட்டி.
கணிதம்
கண்டமனூர்.
புவியியல்
வடுகபட்டி.

MADURAI DISTRICT PG ASSISTANT VACANT LIST 2016:

மதுரை மாவட்டமுதுகலை ஆசிரியர்காலிப்பணியிடங்கள்
TAM
திருமங்கலம் (பெ)
சமயநல்லூர்

ENG
பாலமேடு
பரவை
CHE
கருங்காலகுடி(ஆ)
சோழவந்தான்(பெ)
BIO
பாண்டியராஜபுரம்
ZOO
ம.சத்திரப்பட்டி
திருமங்கலம் (ஆ)
திருவாதவூர்
MAT
திருமங்கலம் (பெ)
அலங்காநல்லூர் (ஆ)

ECO
அம்மாப்பட்டி
சமயநல்லூர்
பாலமேடு
வாடிப்பட்டி (பெ)
GEO
ம.சத்திரப்பட்டி
மேலூர் (ஆ)
HIS
தும்பைப்பட்டி

NAMAKKAL DISTRICT PG ASSISTANT VACANT LIST 2016:

*கோழிக்கால்நத்தம்
*அத்தனூர்ஆங்கிலம்
***********
கந்தம்பாளையம்
நாமக்கல் மகளிர்
(இரண்டு பணியிடம்)
இறைய மங்கலம்
நாமகிரிபேட்டை ஆண்கள்.
கணிதம்
*********
அரியூர் பதுவளவு

இயற்பியல்
************
ஜேடர்பாளையம்
அணியாபுரம்
TNHSPGTA NKL
*****************!
வேதியியல்
*************
இறையமங்கலம்
R.புதுப்பாளையம்
உயிரியல்
***********
பரமத்தி பெண்கள்
வெண்ணந்தூர் பெண்கள்
விலங்கியல்
**************
நாமகிரிபேட்டை ஆண்கள்.
வரலாறு
*********
உலகப்பம்பாளையம்
எளச்சிபாளையம்
எருமைப்பட்டி ஆண்கள்
நாமகிரிபேட்டை ஆண்கள்
பொருளியல்
***************
உடையார்பாளையம்
பரமத்தி ஆண்கள்
வணிகவியல்
**************
ஜேடர்பாளையம்
TNHSPGTA- NAMAKAL

சுதந்திர தினம்.. ---பொதுஅறிவுகட்டுரை,

1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம். நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! 

தியாகிகள் ஓய்வூதியம் ரூ.12,000 ஆக உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு.

70-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியேற்றி முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார்.சுதந்திர போராட்ட வீரர்களை நினைத்துப் பார்க்கும் இந்த வேளையில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 11,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாகவும், அவர்களின்வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும், குடும்ப ஓய்வூதியம் 5,500 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.

LIST OF DISTRICT NO SGT VACANT:

இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலி இல்லாத மாவட்டங்கள் !
*மதுரை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை*விருதுநகர் மாவட்டம், இடைநிலைஆசிரியர் காலிப் பணிஇடம இல்லை
*திருநெல்வேலி இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை.
*தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை
*கோவை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை.

TN TET PAPER – II SOCIAL SCIENCE ANSWER KEY (REVISED) - TENTATIVE - VIDIYAL CENTRE -VELLORE

TN TET PAPER – II MATHS & SCIENCE ANSWER KEY (REVISED) - TENTATIVE-VIDIYAL CENTRE -VELLORE

Success Acadamy Coaching centre-keys Modified TNTET Paper I , Paper II (MS) & (SS) Question and Answer

Vidiyal vellore-TRB TET PAPER - I ANSWER KEYS (REVISED) - TENTATIVE

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

TET WEIGHTAGE Click here
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும்.


இடைநிலை ஆசிரியர்நியமனத்தைப்
பொருத்தவரையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும்.

தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். பிளஸ்–2, டிகிரி, பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:–

12–ம் வகுப்பு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 5 மதிப்பெண்50 சதவீதம் முதல்
60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்

பட்டப் படிப்பு

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்
50 சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண்

பி.எட். படிப்பு

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்

தகுதித்தேர்வு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண்

TNTET:Tamil Nadu Teacher Eligibility Test 2013 - to know your Roll Number-Again Now published TRB.

TNTET - WEIGHTAGE - IN DETAIL

TNPSC TET வாக்கிய வகைகள்---TNPSC, TET

TET Online Model TEST (Free) - Key Answer - Click Here

TNPSC Group 2 & Group 4 & VAO Exam Study Materials

tnpsc group-II & VAO Study Materials

பள்ளி கட்டுரைகள் ----பொதுஅறிவுகட்டுரை,

கட்டுரைகள் தாய்மொழி பற்று நான் விரும்பும் பாரதியார்---பொதுஅறிவுகட்டுரை,

பகத் சிங்கின் இறுதி நாள்...

லாகூர் மத்திய சிறைச்சாலையில் மற்ற நாட்களை போல சாதாரணமாகவே விடிந்தது 23, மார்ச், 1931. வழக்கம்போல காலை வேளையில் அரசியல் கைதிகள் தங்களது சிறைக்கூடங்களிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்கள். சாதாரணமாக, அவர்கள் பகற்பொழுதுகளில் வெளியே இருப்பார்கள். சூரியன் மறைந்த பிறகு மீண்டும் சிறையறைகளில் அடைக்கப்படுவார்கள். அதனால் அன்று மாலை நான்கு மணிக்கே வார்டன் சரத் சிங் அவர்களிடம் வந்து சிறையறைகளுக்குத் திரும்பச் செல்லும்படி சொன்னபோது, ஆச்சரியப்பட்டார்கள்.

தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்! சமீபத்தில் இப்படி ஒரு விமர்சனத்தை எதிர்கொண்டேன். 'அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை!" என்பதே அந்த விமர்சனத்தின் சாரம்.

THIRUKURAL

மாணவர்களின் கடமைகள்---பொதுஅறிவுகட்டுரை,

யாதும் ஊரே;யாவரும் கேளிர்---பொதுஅறிவுகட்டுரை,

15/8/16

நீட்' தேர்வு 'ரிசல்ட்' எப்போது?

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், அடுத்த வாரம் வெளியாகும் என தெரிகிறது.எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், மருத்துவ படிப்பில் சேரவும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் அரசு கல்லுாரிகளில் சேரவும், இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


மற்ற மாநிலங்களில், அரசு மற்றும் தனியார் என அனைத்து கல்லுாரிகளில் சேரவும், மருத்துவ படிப்பில் சேரவும் நீட் தேர்வு கட்டாயம். மே, 1ல் முதற்கட்டமாகவும்; ஜூலை, 24ல் இரண்டாம் கட்டமாகவும் நீட் தேர்வு நடந்தது. இதில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
தேர்வுக்கான விடைத்தாள் நகல்கள், இரு தினங்களுக்கு முன், ஆன்லைனில் வெளியிடப்பட்டன. ஒரு வாரத்திற்குள், நீட் தேர்வு முடிவு வெளியாகலாம் என தெரிகிறது

ரூ.5 கோடிக்கு மருந்து பெட்டி

அங்கன்வாடி மையங்களுக்கு, மருந்து பெட்டிகள் வழங்க, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில், எளிதான முறையில் கையாளக்கூடிய, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தோல் தொற்று போன்ற பொதுவான நோய்களுக்கான மருந்துகள் இருக்கும்.

நடப்பாண்டு, அனைத்து அங்கன்வாடி களுக்கும், மருத்துவ சேவைக் கழகம் மூலம் மருந்து பெட்டிகள் வழங்க, ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.-

கல்வி கொள்கை கருத்து தெரிவிக்கசெப்., 15 வரை அவகாசம் நீட்டிப்பு

புதிய கல்விக் கொள்கை அறிக்கை, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கருத்துகளை அனுப்ப, கூடுதலாக ஒரு மாத அவகாசம் தரப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான புதிய கல்விக் கொள்கையை, மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த கொள்கையின், வரைவு அறிக்கை மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் இணையதளத்தில், ஜூலையில் வெளியிடப்பட்டது.


பொதுமக்கள், கல்வியாளர்கள் தங்களின் கருத்துகளை, ஜூலை, 31 வரை தெரிவிக்கலாம் என, அவகாசம் வழங்கப்பட்டது. பின், கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஆக., 16 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தி, தமிழ், உருது, மலையாளம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட, 12 பிராந்திய மொழிகளில், கல்விக் கொள்கை அறிக்கை மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், கல்விக் கொள்கை குறித்த கருத்துகளை தெரிவிக்க,
செப்., 15 வரை கூடுதல் அவகாசம் தரப்பட்டு உள்ளது

பி.எப்., பணத்தை அடகு வைத்து வீடு வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகம்; நான்கு கோடி சந்தாதாரர்கள் நலன் காக்க மத்திய அரசு புது முயற்சி

புதுடில்லி:தொழிலாளர்கள், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதியை அடகு வைத்து, குறைந்த விலையில் வீடுகள் வாங்கும் திட்டத்தை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் அறிமுகம் செய்ய உள்ளது. இத் திட்டத் தால், நான்கு கோடி, பி.எப்., சந்தாதாரர்கள் பயன்பெறுவர். 



நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின், சொந்த வீடு கனவை நனவாக்கும் திட்டம் குறித்து, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பண்டாரு தத்தாத்ரேயா, சமீபத்தில் லோக்சபாவில் அறிவித்தார். 

அப்போது, 'பி.எப்., சந்தாதாரர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்த விலை வீடு பெற்று தருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது' என்றார்; தற்போது, அந்த திட்டம் அமலாகும் சூழல் உருவாகி உள்ளது.

முன்பணம்:

இதுகுறித்து, மத்திய தொழிலாளர் துறை செயலர் சங்கர் அகர்வால், நேற்று கூறியதாவது:
பி.எப்., திட்டத்தில் சேர்ந்துள்ள தொழிலாளர் களுக்கு, வீட்டு வசதித் திட்டத்தை உருவாக்கி வருகிறோம். இத்திட்டப்படி, தொழிலாளர்கள் குறைந்த விலையில் வீடு வாங்க, பி.எப்., கணக்கிலிருந்து முன்பணம் பெறலாம். 

மேலும், வருங்காலத்தில், தங்கள் பி.எப்., கணக் கில் சேரப்போகும் தொகையை, வங்கிகளுக்கு செலுத்தப்போகும் மாதத் தவணை களாக அடகு வைத்து,குறைந்த விலை வீடுகளை வாங்க லாம். இதன்படி, பி.எப்., சந்தாதாரர், வங்கி மற்றும் இ.பி.எப்.ஓ., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் ஆகிய மூவர் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். 

தலையிடாது:

சந்தாதாரர் கணக்கில், வருங்காலத்தில் மாதந் தோறும் சேரும் தொகை, வீடு வாங்குவதற்கு, வங்கிக் கடனாக அளிக்கும் பணத்துக்கு, மாதத்தவணையாகச்செலுத்தப்படும். பி.எப்., 
சந்தாதாரர் வாங்கும் வீடு, கடன் செலுத்தி முடியும் வரை, வங்கியிடம் அடமானமாக இருக்கும். 

இந்த திட்டம், அடுத்த மாதம் நடக்கும், இ.பி.எப்.ஓ.,வின் சி.பி.டி., எனப்படும், மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் முன்வைக்கப்படும்; இதில், ஒப்புதல் பெறப்பட்ட பின், நடைமுறைக்கு வரும். தொழிலாளர்கள், தாங்கள் விரும்பும் குறைந்த விலை வீடுகளை, அவர்களே வாங்கலாம்; இதில், இ.பி.எப்.ஓ., தலையிடாது. இவ்வாறு அவர் கூறினார்.

யாருக்காக இது? 

தங்கள் சம்பளத்தில், வாழ் நாள் முழுவதும் வீடு வாங்க முடியாத, குறைந்த வருவாய் உள்ள தொழிலாளர்களுக்கென இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. 

தொழிலாளர்களின் வருங்கால, பி.எப்., பணத்தில், எந்த அளவுக்கு கடனாக பெறலாம் என்பது குறித்தும், குறைந்த விலை வீடு என்றால் என்ன என்பது குறித்தும், இன்னும் வரையறை செய்யப்படவில்லை. இது பற்றிய விபரங்கள், சி.பி.டி., எனப்படும், மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் 

தில்லுமுல்லுக்கு இடமின்றி ஆசிரியர் கவுன்சிலிங்:போராட்டம் இல்லாததால் அதிகாரிகள் நிம்மதி

சிபாரிசுக்கு இடமின்றி, காலியிடங்களை மறைக்காமல் ஆசிரியர் கவுன்சிலிங் நடந்து வருகிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம் இல்லாததால், அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், ஆக., 3ல் துவங்கி நடந்து வருகிறது. தொடக்கக் கல்வித்துறைக்கு தனியாகவும், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பள்ளிக் கல்வித்துறைக்கு தனியாகவும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தில்லுமுல்லு, சிபாரிசு கடிதமின்றி கவுன்சிலிங் நடத்துவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

'அமைச்சர் அலுவலகம் துவங்கி, கீழ் நிலையில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் என, எவ்வித சிபாரிசுக்கும் இடமில்லை; சங்கங்களோ, அதிகாரிகளோ தலையிட்டு, காலியிடங்களை மறைத்து வைத்து, வேண்டியவர்களுக்கு ஒதுக்கக் கூடாது. புகார் வந்தால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித்துறை உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கவுன்சிலிங் நடைமுறையில் குழப்பங்கள் இல்லாததால், கடந்த ஆண்டை போல, கல்வித்துறை மாவட்ட அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம், முற்றுகை, தர்ணா போன்ற போராட்டங்கள் இல்லாததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங்கில், காலி இடங்கள் முழுமையாக காட்டப்பட்டுள்ளன. இதேபோல், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் இடங்களையும் வெளிப்படையாக நிரப்ப வேண்டும்.சாமி.சத்தியமூர்த்தி, மாநில தலைவர், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்.

ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயற்சி:2 ஆசிரியர்கள் உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை:பெண் ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தில், இரண்டு ஆசிரியர்கள் உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுனை சேர்ந்தவர் சித்ரா, 40; அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை. இவரது வீட்டுக்குள், கடந்த மாதம், 25ம் தேதி, திடீரென ஒருவன் நுழைந்து, மயக்க மருந்து கைக்குட்டையை முகத்தில் வைத்து அழுத்தினான். இதில், சித்ரா மயங்கினார்.


சிறிது நேரத்தில், அவருக்கு மயக்கம் தெளிந்தது. அப்போது, எதிர் வீட்டில் வசிக்கும் அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியர் சாண்டில்யன், 41, நின்றிருந்தான். அவனிடம் கேட்ட போது, 'உங்கள் வீட்டில் திருடன் நுழைந்தான். சத்தம் கேட்டு உள்ளே வந்தேன்; என்னை உங்கள் மீது தள்ளிவிட்டு ஓடிவிட்டான்' என, கூறியுள்ளான்.

சாண்டில்யன் மீது சித்ராவுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், கடந்த, 1ம் தேதி, செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார், சாண்டில்யனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்த சாண்டில்யனை போலீசார் கைது செய்தனர். அவன் அளித்த வாக்குமூலம்:ஆசிரியை சித்ராவை அடைய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதை, தனியார் பள்ளி ஆசிரியரான மணி என்ற நண்பரிடம் கூறினேன். அவன், 'குளோரோபார்ம்' எடுத்து வந்தான்.

அதை ஆட்டோ ஓட்டுனர் மோத்தியிடம் கொடுத்து, சித்ராவை மயக்கமடைய செய்யுமாறு கூறினேன்; அவனும் அவ்வாறு செய்தான். பின், சித்ராவை பலாத்காரம் செய்ய வீட்டினுள் நுழைந்த போது மயக்கம் தெளிந்து கூச்சலிட்டார். வெளியே காத்திருந்த மணி, மோத்தி தப்பியோடினர்; நானும் ஓடிவிட்டேன்.இவ்வாறு அவன் தெரிவித்தான்.
இதையடுத்து, சாண்டில்யன், மணி, மோத்தி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கலந்தாய்வில் தகராறு ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த கலந்தாய்வில் உயரதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியரை தொடக்கக்கல்வி இயக்குனரகம் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் நேற்று இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடந்தது. பழநி காவலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் குணசேகரன், ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கான கலந்தாய்வில் பங்கேற்றார். அவர் விரும்பிய இடம் கிடைக்காததால் ஆவேச மடைந்தார்.

கலந்தாய்வு பணியில் ஈடுபட்டுள்ள உதவி தொடக்ககக்கல்வி அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டார். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாண்டியராஜா அறிவுறுத்தியும் கேட்கவில்லை.
இதையடுத்து இணை இயக்குனர் சுகன்யா பரிந்துரையில் தொடக்கக்கல்வி இயக்குனரகம் ஆசிரியர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது

பணிநிரவல் பெற்ற ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்

கோவை : தொடக்கக்கல்வி துறை சார்பில் நடந்த, பணிநிரவல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள், உரிய பணியிடத்தில் சேராமல், மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்தால், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில் வெளியிட்ட அறிக்கை:
தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான, பணிநிரவல் கலந்தாய்வு, நேற்று முன் தினம் நடந்தது. இதில், ஒன்றியத்துக்குள், வேறு ஒன்றியத்துக்கு நிரவல் பெற்ற, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள், பணியில் சேராமல் இருந்தால், பொது மாறுதலில் பங்கேற்கலாம். இதற்கு, பொது மாறுதல் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, ஏற்கனவே முறையாக, விண்ணப்பித்திருக்க வேண்டும்.
இத்தகவலை, பணிநிரவல் பெற்ற ஆசிரியர்களுக்கு, சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தெரியப்படுத்துவது அவசியம்.இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புதுமை கற்பித்தல் முறை

தேவகோட்டை: ஆசிரியர்களின் கற்பித்தலில் புதுமை செய்வது பற்றி, வித்தியாசமான முறைகளில் கற்பிக்கும் முறை, எளிமையாக புரியும்படி கற்பித்தல் தொடர்பான செய்திப்படத்தை எஸ்சிஇஆர்டி நிறுவனம் தயாரித்தது.

இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கம் வாசகம் நடுநிலைப்பள்ளியில் அனுபவம் புதுமை என்ற பெயரில் சம்பந்தப்பட்ட துறையினர் படம் பிடித்தனர். இது போன்ற பல பள்ளிகளில் திரட்டிய ஆவணப்படத்தை அரசு சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. பள்ளிகளுக்கு விரைவில் சிடி வழங்க உள்ளனர். இந்நிலையில் யூடியூபில் வெளியிட்டனர். யூடியூபில் வெளியிட்ட படத்தை சேர்மன் மாணிக்கம் வாசகம் பள்ளியில் தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலையில் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

ஆசியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு அதிகாரிகளிடம் வாக்குவாதம்

சிவகங்கை: சிவகங்கையில் நடந்த இடமாறுதல் கலந்தாய்வு ஆசிரியர்கள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. துணை இயக்குனர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பார்த்தசாரதி பங்கேற்றனர். காளையார்கோவில் ஒன்றியம் செவல்புஞ்சை ஆசிரியர் ஜோசப், தனது மனைவி 35 கி.மீ., ல் உள்ள கீழக்கோட்டையில் பணிபுரிவதால் கவுன்சிலிங்கில் முன்னுரிமை தர வேண்டுமென, கேட்டார்.
இதற்கு ஆதாரமாக நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளரின் சான்றை சமர்ப்பித்தார். இதனை அதிகாரிகள் ஏற்று கொண்டனர்.
சான்றில் தவறான துாரத்தை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு முன்னுரிமை அளிக்க கூடாது என கூறி ஆசிரியர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் அதிகாரிகள் 'கூகுள் மேப்பை' பயன்படுத்தி துாரத்தை கணக்கிட்டனர். அதில் செவல்புஞ்சை, கீழக்கோட்டை இடையே 29 கி.மீ., என, காட்டியது. இதையடுத்து ஜோசப்பிற்கு முன்னுரிமை மறுக்கப்பட்டது. இதையடுத்து ஜோசப் 'தனக்கு இடமாறுதல் வழங்க மறுப்பதற்கான காரணத்தை எழுத்து பூர்வமாக தர வேண்டும்,' என அதிகாரிகளிடம் கேட்டார். அதிகாரிகள் தர மறுத்ததால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பின் மற்றவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரே ஒன்றியத்திற்குள் கணவர், மனைவி 30 கி.மீ.,க்கு அப்பால் பணிபுரிந்தால் கவுன்சிலிங்கில் முன்னுரிமை தரப்படும். கூகுள் மேப்பில் 29 கி.மீ., கட்டியதால் முன்னுரிமை வழங்கவில்லை,” என்றார்.

இளந்தலைமுறையை நல்வழிப்படுத்த புதிய கல்விக் கொள்கை அவசியம்: கலந்துரையாடலில் பேராசிரியர் கருத்து

இளந்தலைமுறையினரை நல்வழிப்படுத்துவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் என மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் பேராசிரியர்கள் வலியுறுத்தினர்.

மதுரையில் அகில பாரதீய வித்தியார்த்தி பரிஷத் (தேசிய மாணவர் இயக்கம்) மாநில கல்விக்குழு சார்பில் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை மேம்பாட்டை நோக்கி எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது.


மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி (ஆண்டிப்பட்டி) பேராசிரியர் ஏ.கதலி நரசிங்கப்பெருமாள் தலைமை வகித்துப் பேசியது: தரமிக்க கல்வி, தேசப்பற்று, தேச முன்னேற்றம், அனைவருக்கும் சமமான கல்வி என பல சிறப்பு அம்சங்களுடன் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இன்றைய தலைமுறைக்கு கல்வியுடன், தர்மங்களையும், மனிதநேயத்தையும் கற்பிப்பது அவசியம். ஆகவே புதிய கல்வியானது நேயத்தையும், அன்பையும் இளந்தலைமுறையினரிடையே ற்படுத்தும் என்றார்.

 கலந்துரையாடலை தொடங்கிவைத்து திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி முதல்வர் பி.ராமமூர்த்தி பேசியது: தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு தேச பக்தியை ஏற்படுத்துவது அவசியம். அறிவும், ஆற்றலும், அன்பும் சேர்ந்த கல்வியே இன்றைய காலகட்டத்துக்குத் தேவையானது.

 சுவாமி விவேகானந்தர் விரும்பிய பாரதத்தை நாம் காணவேண்டும் எனில் இளைஞர்களின் சக்தியை நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையிலே புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது.

 நாலந்தா போன்ற பழம் பெருமை மிக்க பல்கலைக்கழகம் இருந்த நமது தேசத்தின் பெருமையை இளைஞர்கள் உணரும் வகையில் புதிய கல்வி அமையும் என்றார்.

 சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர். ஸ்ரீநிவாசன்: கல்வி கற்கும் குழந்தைகள் இடை நிற்றலை புதிய கல்விக் கொள்கையால் தடுக்கலாம். பெண் கல்வியை உறுதிப்படுத்தும். அறிவுப் பூர்வமான, ஆக்கப்பூர்வமான தலைமுறையை உருவாக்கும் வகையிலே புதிய கல்விக் கொள்கை அமையும்.

கலந்துரையாடலில் சமூக ஆர்வலர் சந்திரன், விவேகானந்தர் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் ஜெயபால், தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் நிர்வாகி டி.செந்தமிழ்அரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

"கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்'

கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளை ஓவியம், விளையாட்டு, இசை உள்ளிட்ட துறைகளில் சாதனை படைக்க ஊக்கவிக்க வேண்டும் என மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் (எம்டிஏ) தலைவர் சந்திரசேகர் வலியுறுத்தினார்.


"மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் சார்பில் கற்றலில் குறைபாடு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதன் முதல் நாளில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கற்றல் திறனில் குறைபாடுள்ள மாணவர்கள் பங்கேற்று தங்களது படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தினர். இதில் சங்கத்தின் தலைவர் டி.சந்திரசேகர் பேசுகையில், கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகள் வாசித்தல், எழுதுதல், கணிதம் போன்றவற்றில் பின்தங்கி இருந்தாலும் பிற துறைகளில் அவர்கள் கற்பனைத் திறன் மிகுந்தவர்கள்.

இந்தக் குழந்தைகளால் ஓவியம், இசை, விளையாட்டு போன்ற துறைகளில் சாதனை படைக்க இயலும். அதற்காக அவர்களை ஊக்குவித்து உறுதுணையாக இருப்பது அவசியம். கூட்டு செயல்பாடுகளிலும் உளவியல் திறனிலும் இந்தக் குழந்தைகள் அபார ஆற்றலை வெளிப்படுத்துவர் என்றார் அவர்.

முன்னதாக நிகழ்ச்சியை தென் சென்னை ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆஷா மெரீனா தொடக்கி வைத்தார். எம்டிஏ ஒருங்கிணைப்பாளர் வான்கடே ரேஷ்மி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடக்கக் கல்வித்துறை அலுவலர்களுடன் தகராறு: இடைநிலை ஆசிரியர் பணியிடை நீக்கம்

பணி மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வந்த இடைநிலை ஆசிரியர், தொடக்கக் கல்வித்துறை அலுவலர்களுடன் தகராறில் ஈடுபட்டதால் ஞாயிற்றுக்கிழமை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கூ.பாண்டியராஜா தலைமையில்,
முற்பகலில் ஒன்றியத்திற்குள்ளும், பிற்பகலில் ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

 இதில் ஒன்றியத்திற்குள் 43 பேர், ஒன்றியம் விட்டு ஒன்றியம் 24 பேர் என மொத்தம் 67 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது.

தகராறு செய்த ஆசிரியர் பணியிடை நீக்கம்: திண்டுக்கல் மாவட்டம், பழனி புறநகர் ஒன்றியத்திற்குள்பட்ட காவலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் த.குணசேகரன், கலந்தாய்வில் பங்கேற்றார். அப்போது, கலந்தாய்வு பணியில் ஈடுபட்டிருந்த தொடக்கக் கல்வித்துறை அலுவலர்களுடன் தகராறு செய்ததாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்தது. 

இதனை அடுத்து, விதிமுறைகளை மீறி கலந்தாய்வு மையத்தில் தகராறு செய்த ஆசிரியர் த.குணசேகரனை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கூ.பாண்டியராஜா உத்தரவிட்டுள்ளார்.

கோட்டையில் இன்று சுதந்திர தின விழா: தேசிய கொடியேற்றி முதல்வர் ஜெயலலிதா உரை

சுதந்திரத் தினத்தையொட்டி, சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தேசிய கொடியேற்றி வைத்து, சிறப்புரையாற்றுகிறார்.


தமிழக அரசின் சார்பில் சார்பில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக, தனது போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா காலை 9.10 மணிக்குப் புறப்படுகிறார். காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்துக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அங்கிருந்து போலீஸாரின் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்புடன் கோட்டைக்கு வரும் முதல்வரை தலைமைச் செயலர் ராமமோகன ராவ் மலர்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.

பின்னர், திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸாரின் அணிவகுப்பை முதல்வர் பார்வையிட்டு, கோட்டை கொத்தளத்தில் 9.30 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, கொடி வணக்கம் செய்கிறார். பின்னர், சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.

விருதுகள் அளிப்பு: இதையடுத்து, அப்துல் கலாம், கல்பனா சாவ்லா ஆகியோர் பெயரிலான விருதுகளும், காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றியோருக்கும், சிறந்த மின் ஆளுமைக்கான அரசு ஊழியர் - அரசுத் துறையினருக்கும் விருதுகளும், மாற்றுத்திறனாளிகள், மகளிர் நலன் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பணி செய்தவர்களுக்கும் விருதுகளும் வழங்கப்படுகின்றன. விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

5 அடுக்குப் பாதுகாப்பு: விழாவில் கோட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் 5 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Pudukkottai Dist PG vacany (07.08.2016)



TAMIL :Karampakudi(B),Karur, Kottaipatinam,Athani ,Vettanvituthi,Perumarutoor,Sillatur,Ampalavanental,Gopalapattinam, Malaiyur, Manamelgudi(B), Subiramaniyapuram(B),Valogam,Mandaiyoor,Bragathamnal.
ENGLISH :Kaliyarayanvituthi,Merpanaikadu,Memisal, Kothamangalam(B), Keelakkurichi ,Alangudi(G).

MATHS:Sadayampatti, Kerramangalam(B).

PHYSICS :Perrungalur,Avoor,Keeramagalan(G),Bragathambal, Ranees,Keeranur(B).

CHEMISTRY:Melathaniyam, Kothamangalam(B),Memisal, Ponputhupatti, Andakkulam,Kattumavadi,Kottaipattinam,Manamelgudi(G),Aranthangi(B),Aranthangi (G), Ampalavanental, Vayalogam, Citamparavituthi,Gantharvakottai Boys&Girls,L.N Puram.

BOTANY:Alangudi (G),Model.

ZOOLOGY:Kothamangalam(B),Thirukkokarnam, Kerramangalam(G),

 COMMERCE : Mannavelampatti,Arimalam(G) ,Melasivapuri:          

 POLITICAL SCIENCE: Alangudi(B).     

PG Vacancies in Kanchipuram dist.


Tamil
----------
Otteri,
Peerkankaranai,
Nanganallur(B)&G,
Chengalpet(G)
Pullalur,
Thenneri,
Neyyadupakkam,
Thiruppukuzhi,
Uthiramerur(G)

English
--------------
Madampakkam,
Chrompet(B)&G,
Orathi,
Seyyur(G),
Govindavadi

Commerce
-------------------
Puzhithivakkam,
Tambaram(G),
Selaiur mpl,
Chengalpet mpl,
Sathurangapattinan,
Orathi

Economics
------------------
Semmancheri,
Kelampakkam,
Otteti,
Satras,
Vennangupattu,
Polampakkam,
Seyyur(B),
Koovathur,
Kadapakkam,
Nandhivaram kooduvancheri(G),
Uthiramerur(G)

History
------------
Otteti,
Salavakkam,
Maduramangalam,
Maduranthagam(G),
Uthiramerur(B)

Geography
-------------------
Chinnakanchipuram

Biology
---------------
Maraimalai nager,
Singaperumal kovil,
Paranthur,
Seyyur(G),
Zaminpallavaram

Zoology
-----------
Perunagar,
Seyyir(B),
Uthiramerur(B)

Botany
------------
Nandhivaram
Kooduvancheri(G)

நாமக்கல் மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்



தமிழ்
******
*கோழிக்கால்நத்தம்
*அத்தனூர்

ஆங்கிலம்
***********
கந்தம்பாளையம்
நாமக்கல் மகளிர்
(இரண்டு பணியிடம்)
இறைய மங்கலம்
நாமகிரிபேட்டை ஆண்கள்.


கணிதம்
*********
அரியூர் பதுவளவு

இயற்பியல்
************

ஜேடர்பாளையம்
அணியாபுரம்

TNHSPGTA NKL
*****************!

வேதியியல்
*************

இறையமங்கலம்
R.புதுப்பாளையம்

உயிரியல்
***********
பரமத்தி பெண்கள்
வெண்ணந்தூர் பெண்கள்

விலங்கியல்
**************
நாமகிரிபேட்டை ஆண்கள்.

வரலாறு
*********
உலகப்பம்பாளையம்
எளச்சிபாளையம்
எருமைப்பட்டி ஆண்கள்
நாமகிரிபேட்டை ஆண்கள்

பொருளியல்
***************
உடையார்பாளையம்
பரமத்தி ஆண்கள்

வணிகவியல்
**************
ஜேடர்பாளையம்

தேனி மாவட்ட P.G.Vacancies list.


பொருளியல்
அரசு, மே. நி லைப்பள்ளி  ரெங்கசமுத்திரம்.

உயிரியல்
அரசு மேனிலைப்பள்ளி, தாமரைக்குளம்.
பண்ணைப்புரம்.


 வணிகவியல்
 காமயகவுண்டன் பட்டி.

வேதியியல்
வடுகபட்டி,

இயற்பியல்
பூதிப்புரம்
அல்லிநகரம்
 பெரியகுளம் boys,

 விலங்கியல்
பெரியகுளம் ஆண்கள்.
உத்தமபாளையம்.
சில்லமரத்துப்பட்டி.

கணிதம்
கண்டமனூர்.

புவியியல்
வடுகபட்டி.

மதுரை மாவட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் as on 31.05.2016

மதுரை மாவட்ட
முதுகலை ஆசிரியர்
காலிப்பணியிடங்கள்

TAM
திருமங்கலம் (பெ)
சமயநல்லூர்

ENG
பாலமேடு
பரவை
CHE
கருங்காலகுடி(ஆ)
சோழவந்தான்(பெ)
BIO
பாண்டியராஜபுரம்
ZOO
ம.சத்திரப்பட்டி
திருமங்கலம் (ஆ)
திருவாதவூர்
MAT
திருமங்கலம் (பெ)
அலங்காநல்லூர் (ஆ)
ECO
அம்மாப்பட்டி
சமயநல்லூர்
பாலமேடு
வாடிப்பட்டி (பெ)
GEO
ம.சத்திரப்பட்டி
மேலூர் (ஆ)
HIS
தும்பைப்பட்டி